மனைவிக்கு ‘பெர்Fயூம்’ (செண்ட்) வாங்குவது எப்படி? (Post No 2624)

dog

Written by london swaminathan

 

Date: 12 March 2016

 

Post No. 2624

 

Time uploaded in London :–  13-36

 

( Thanks for the Pictures; they are taken from various sources)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

dog in wedding

இது அமெரிக்காவில் உண்மையில் நடந்தது. ஒருவனுடைய காதலிக்குப் பரிசாக வாசனைத் திரவியம் (Perfume பெர்Fயூம்) வாங்குவது என்று காதலன் முடிவு செய்தார். ஆனால் அவள் வாங்கும் ‘பெர்Fயூம்’ எது என்று தெரியாது. அவள் வசிப்பதோ அவளுடைய அம்மா வீட்டில். அவளிடம் கேட்டால் ‘சர்ப்ரைஸ் (surprise)’ போய்விடும். ஆகவே கேட்கவும் தயக்கம். அவள் எப்போது வந்தாலும் அவளுடைய செல்லமான (pet dog) நாய்க்குட்டியைத் துணைக்கு அழைத்துவருவாள். அவளை மறுமுறை சந்தித்தபோது, உன்னுடைய நாயை ஒரு ‘வாக்கிங் (walking)’ கூட்டிக்கொண்டு போய்விட்டு மாலையில் உன் வீட்டில் கொண்டுவந்து விடுகிறேன் என்றான். அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

 

காதலன் நாயைக் கூட்டிக்கொண்டு நேரடியாக கடைக்குப் போனான். பெர்Fயூம் விற்கும் பிரிவிலுள்ள பெண்களிடம் பல வகையான பெண்கள் வசனைத் திரையங்களின் மாதிரி (Sample சாம்பிள்) கேட்டான். பொதுவாக அவைகளைக் சின்னக் கார்டில் “ஸ்ப்ரே” (spray) செய்து (தெளித்து) முகர்ந்து பார்க்கக் கொடுப்பார்கள்.

 

நமது காதலனோ அந்த அட்டைகளை நாயின் மூக்கிற்கு நேரே காட்டச் செய்தான். அந்தப் பிரிவிலுள்ள பெண்களுக்கு ஒரே வியப்பு; புரியவுமில்லை. ஒரு குறிப்பிட்ட பெர்Fயூமை, நாயிடம் காட்டியபோது அது ஆநந்தமாக எம்பிக் குதித்தது. அதுதான் மனைவி, பயன்படுத்தும் பெர்Fயூம் என்பது தெளிவாகியது. அதை மகிழ்ச்சியாக வாங்கிச் சென்றான். அவளுக்கும் மகிழ்ச்சி. தனது கணவனுக்குத் தான் பயன்படுத்தும் பெர்Fயூம் முதற்கொண்டு எல்லாம் தெரிந்திருக்கிறதே! என்று அன்பும் அதிகரித்தது. (ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

 

Xxx

 

poison

நீ என் மனைவியாக இருந்தால்……………….

பெண்களுக்கு ஓட்டுரிமை கோரி இங்கிலாந்தில் பெரிய போராட்டம் (suffragette)  நடந்தது. அவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாதென்று லாய்ட் ஜார்ஜ் (Lloyd George) என்பவர் சொற்பொழி வாற்றினார். அந்தக் கூட்டத்து வந்த ஒரு பெண்மணிக்கு அதிபயங்கர கோபம். கண்களில் கனல் தெரிக்க எழுந்தார். எல்லோர் முன்னிலையிலும், “அன்பரே, நீவிர் மட்டும் எனது கணவராக இருந்திருந்தால் உமக்கு விஷம் கொடுத்துக் கொன்றிருப்பேன்” என்றார். அவர் உடனே “நீர் மட்டும் எனது மனைவியாக இருந்திருந்தால், கட்டாயம் அதை வாங்கிக் குடித்திருப்பேன்!” என்றார்.

 

xxx

 

நான் என்ன முட்டாளா? அவ்வளவு ஆரஞ்சுப் பழத்தையும் ஒரு நிமிடத்தில் விற்க!

 

Happy-Orange-Vendor-

 

மெக்ஸிகோ நாட்டில் ஒரு பிரமுகர், பழம் விற்கும் ஒரு கூடைக்காரியிடம் தினமும் இரண்டு ஆரஞ்சுப் பழம் வழங்குவார். ஒரு நாள் அவர் வீட்டில் ஒரு பெரிய பார்ட்டி/விருந்து ஏற்பாடாகியிருந்தது. அவர் நினைத்தால், மொத்த விற்பனைக் கடைக்குச் சென்று சகாயமான விலையில் ஒரு கூடை, 2 கூடை ஆரஞ்சுப் பழம் வாங்கியிருக்கலாம். ஆனால் கூடைக்கார கிழவியிடம் வாங்கினால், அவள் சந்தோஷப்படுவாள் என்று எண்ணி, அவளிடம் போய் நின்றார்.

 

வழக்கமான வாடிக்கையாளர் என்பதால், அவர் வாய் திறக்கும் முன்னரே, அந்தப் பெண்மணி, “இந்தாருங்கள் உங்களுடைய இரண்டு ஆரஞ்சுகள்” என்று சொல்லி கையில் திணித்தாள்.

அவர் சொன்னார், “ அம்மா! இன்று உன் கூடையிலுள்ள எல்லா ஆரஞ்சுப் பழங்களும் எனக்கு விலைக்கு வேண்டும். என் வீட்டுக்கு விருந்தாளிகள் வருகின்றனர்” –என்றார்.

அவளுக்கு வந்ததே பார்க்க வேண்டும் – கோபம்! “என்ன நினைத்தீர்கள் என்னை? உங்களுக்கு முழுக்கூடையையும் ஒரு நிமிடத்தில் விற்றுவிட்டால், நாள் முழுவதும் நான் என்ன செய்வது?” – என்று ஒரு முறை,முறைத்தாள்.

அந்தப் பிரமுகருக்கு, சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

(ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம்—லண்டன் சுவாமிநாதன்)

Xxx

 

திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)

aazhi-ther

திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)

Article written by london swaminathan

Date:  8 March, 2016

 

Post No. 2610

 

Time uploaded in London :–  20-11

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; 

 

 

பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த திருவாரூர் ருத்ர கணிகை கொண்டியம்மாளின் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-

 

கதைச் சுருக்கம்:

திருவாரூர் ருத்ர கணிகை (கோவிலில் ஆடும் தேவதாசி) பரம பக்தை; ஒரு முறை பங்குனி உத்திரத்தின் போது தேர் நகர மறுத்தது. எவ்வளவோ பேர் வந்து இழுத்தும் தேர் நகர வில்லை. பின்னர் சோழ ராஜாவின் கனவில் சிவபெருமான் தோன்றி கொண்டியம்மாள் தேரில் ஏறி சாமரம் வீசினால் தேர் நகரும் என்று கூறினார். மறு நாள் கொண்டியம்மாளை தக்க மரியாதையுடன் அழைத்து வந்து சாமரம் வீசச் செய்யவே தேர் புறப்பட்டு, பவனி வந்து நிலையை அடைந்தது.

 

ஆனால் தேரில் ஏறுமுன் , கொண்டியம்மாள் ஒரு நிபந்தனை போட்டார். தனது செயல் வெற்றி பெற்றால், தான் இறந்த பின்னர் தன் சடலத்தைக் காவேரிக் கரையில் தகனம் செய்யவேண்டும் என்றும் திருவாரூரில் ஒரு மைலுக்கு ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். மன்னர் அதை ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் கொண்டியம்மாள் இறந்த பின்னர் அப்படியே செய்தான். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதைய பிள்ளையார் கோவில்கள் இன்றும் உள்ளன.

 

kondi7

 

 

 

kondi9

 

kondi missing

kondi10

 

kondi11

 

kondi12

 

kondi13

 

kondi14

kondi15

–subham

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு! (Post No 2579)

caligula

Compiled  by London swaminathan

 

Date: 27 February 2016

 

Post No. 2579

 

Time uploaded in London :– 6-01  AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

 

ரோமானிய சக்ரவர்த்தியின் ‘வில்லன்’ சிரிப்பு!

ரோமானிய அரசன் காலிகுலா, ஒரு விருந்து கொடுத்தான். நிறைய அதிகரிகளும், அமமைச்சர்களும் அரச குலத்தினரும் அமர்ந்திருந்தனர். திடீரென்று காலிகுலா வெடிச் சிரிப்பு சிரித்தார். அது வில்லன் சிரிப்பாக மாறியது. நிற்கவே இல்லை. எல்லோரும் சேர்ந்து சிரித்தனர். எதற்காக? சிரிக்காவிட்டால் அவர்கள் தலையே போய்விடும். அப்பேற்பட்ட ஹிரண்யகசிபு அவன்!

 

கொஞ்ச நேரம் ஆயிற்று, சிரித்து சிரித்துக் களைப்பானவுடன் சிம்மாசனத்தில் ‘அப்பாடா’ என்று சாய்ந்தார். அருகிலுள்ள, ஒருவர் மட்டும் பய பக்தியுடன் மன்னர் சிரித்ததன் காரணத்தை வினவினார்.

 

“ஒன்றுமில்லை, நான் மட்டும் தலை அசைத்திருந்தால், உங்கள் குரல்வளைகளெல்லாம் வெட்டப்பட்டு நீங்கள் அனைவரும் ரத்த வெள்ளத்தில் மிதந்திருப்பீர்கள்” – என்று தன்னுடைய பருத்த கையினால் அங்கு வந்திருந்த அத்தனை பேரையும் சுட்டிக்காட்டினான். கேட்டவருக்கு ரத்தமே உறைந்து போயிருக்கும்.

 

இதை பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதிவைத்துள்ளனர்!

 

Xxxx

 

george 5

குழந்தாய்! என்ன படிக்கிறாய்?

இங்கிலாந்தின் ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், ஒரு நாள் அரண்மனைக்குள் சுற்றிவரும்போது, பேரப்பிள்ளை மிகவும் உன்னிப்பாக, கவனமாக எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

மன்னர், அவனிடம் போனார். அன்பாக தலையை வருடினார். அது என்ன? இவ்வளவு ஆர்வத்தோடு படிக்கிறாயே! என்ன விஷயம் என்று உசாவினார்.

பேரன் சொன்னான்:

“ஒன்றுமில்லை, தாத்தா! பீட்டர் வார்பெக் பற்றிப் படித்தேன்.

 

மன்னர் கேட்டார், “ பீட்டர்…. வார்பெக்……… அது யாரு எனக்கே தெரியாதே!

பேரன் சொன்னான்,

“தாத்தா, அவன் ஒரு மன்னரின் மகன் போல நடித்தான். ஆனால் உண்மையில் அவன் அப்படிப்பட்ட பேர்வழி இல்லை; மிகவும் நல்ல ஒரு குடும்பத்தில் பிறந்தவன்!”

 

மன்னருக்கு ஏண்டா கேட்டோம் என்று ஆகிவிட்டது!

 

Xxx

red-clock

இரண்டு கடிகாரம்!

 

ஐந்தாம் சார்லஸ் மன்னன், அரச பதவியைத் துறந்து ஒரு கிறிஸ்தவ மடாலயத்தில் அமைதியாகக் காலம் கழித்து வந்தார். ஆனால் பொழுது போவதற்காக கடிகாரங்களைச் சேகரிப்பது, சுத்தம் செய்வது, அவைகளைச் செப்பனிடுவது ஆகியவற்றைச் செய்துவந்தார். ஒரு முறை இரண்டு சரியாக ஓடாத கடிகாரங்களைச் செப்பனிட்டு, இரண்டிலும் சரியான நேரத்தைக் காட்ட முயன்றார். ஆனால் இரண்டு கடிகாரங்களும் ஒத்துழைக்க மறுத்தன.

இரண்டு கடிகாரங்கள் ஒரே மாதிரி நேரம் காட்டாது – என்ற ஆங்கிலப் பொன்மொழிக்கேற்ப அவை இரண்டும் தனக்கு இஷ்டப்பட்ட நேரங்களைக் காட்டின.

 

உடனே அருகில் நின்ற உதவியாளரிடம், மன்னர் சொன்னார், “ என்ன மடமை! இரண்டு கடிகாரங்களைக்கூட ஒன்றாக ஓடச் செய்யமுடியாத நான், ஆட்சி செய்த காலத்தில் ஆயிரக் கணக்கானோரை ஒரே மாதிரி நினைக்கவும், செயல்படவும் வேண்டுமென்று  எதிர்பார்த்தேனே!” – என்றார்.

 

Xxx

 

disraeli stamp

மஹாராணியை மயக்கிய பிரதமர்

பிரிட்டிஷ் பிரதமராக இருந்த டிஸ்ரேலி என்பவர், விக்டோரியா மஹாராணியின் நன்மதிப்பை பெற்றிருந்தார். எல்லோருக்கும் வியப்பு. எப்படி ஒரு பிரதமர், ஒரு மஹாராணியிடம் இவ்வளவு நெருக்கமாக இருக்கிறார் என்று. அவரிடமே இதற்கான காரணத்தையும் கேட்டுவிட்டனர்.

அவர் சொன்னார், “ அட, மற்ற அரசியல்வாதிகள் எல்லாம், அவரை மஹாராணியாக நினைத்து, பயபக்தியுடன், அரசு செயல்பாடுபற்றி மட்டும், இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு வந்து விடுவர். நான் அவரும் ஒரு பெண்மணிதானே என்று கருதி பெண்களுக்குப் பிடித்தமான விஷயங்களைப் பேசுவேன்; அது மட்டுமல்ல அவர் என்ன சொன்னாலும் ஆமாம்சாமி போடுவேன், எதையும் மறுத்துரைக்க மாட்டேன். அவர் பேசும் விஷயங்களை மறந்துகூட விடுவேன்” – என்றார். (ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: லண்டன் சுவாமிநாதன்)

-சுபம்-

மூன்றாம் கடிதம்:மாமிகளின் துயரமும் மருமக்களின் கொண்டாட்டமும் (Post No. 2570)

ATTU URAL

Compiled  by London swaminathan

 

Date: 24 February 2016

 

Post No. 2570

 

Time uploaded in London :–8-25 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 
(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி  என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்றும், அதற்கு முந்திய நாளும் 2 மாமிகளின் கடிதங்கள் வெளியானது. இது மூன்றாவது கடிதம்)

 

 

என்னருமைக் குமாரத்தியே,

 

நான் இக்கடிதம் எழுதும்போது என் மனம் என்னை விட்டுச் சென்று எங்கெங்கோ அலைகின்றது. இவ்விடத்தில் நான்படும் துயரங்களையெல்லாம் கடிதத்தின் மூலம் எப்படித் தெரிவிக்க முடியும்? ஆயினும் யானடைந்திருக்கும் துன்பங்களைப் பிறரிடம் கூறினால் என் மனது சற்றே தேறுதலடையுமென்றே இச்சிறு கடிதத்தை வரையலானேன்.

 

என்னுடன் பிறந்த அண்ணனுக்கு நான் தேடிவைத்த தேவியால் நான் அடைந்த துன்பம் போதும். அதை நினைக்க நினைக்க என் மனம் பகீர் பகீரென்று திடுக்கிடுகின்றது.

 

கல்யாணமாகுமுன் நீங்கள் எனக்குச் சொன்ன நற்புத்திகளெல்லாம் துற்புத்திகளாகத் தோன்றின. பட்டபின் புத்தி வந்துவிட்டது,.ஐயோ என் தலைவிதியை என் சொல்வேன்? நமது பந்துக்களில் ஒரு பெண்ணைக் கட்டியிருந்தால் அவள் மாமியார் என்னும் பக்தி விசுவாசத்தை வைத்து சற்று கீழ்ப்படிந்து  நடந்து எனக்கு வேண்டிய உபசரணைகளைச் செய்திருப்பாள். அல்லது நாட்டுப் புறங்களிலிருந்து ஒரு பெண்ணைக் கொண்டுவந்திருந்தால் அவள் கள்ளம்,கபடின்றி இருந்திருப்பாள். உன் அண்ணன் நாட்டுப்புறங்கள் எல்லாம் உதவாது, ‘நான்சென்ஸ்’ என்று சொல்லிவிட்டபடியால், பட்டினத்தில் பெண்ணைக்கொள்ள வேண்டியதாயிற்று.

 

அவள் யாதொரு வீட்டு வேலையும் செய்கிறது கிடையாது .எல்லாம் நானே செய்துதீர வேண்டும். அதிகாலையில் எழுந்து மற்ற பெண்களைப்போல அலுவலைப் பார்க்காமல், , அவள் நன்றாகப் பொழுது விடிந்த பின், சுமார் எட்டு மணிக்கு எழுந்து, பள்ளியறையை விட்டு வெளியே வந்து பல் துலக்கிக்கொண்டு, ஒழுங்காகத் தலையைச் சீவி மினுக்கி, தளுக்குப் பொட்டிட்டுக்கொண்டு, அண்டை அயலார் பெர்ரியோர், சிறியோர் என்ற மரியாதையை கிஞ்சிற்றேனும் கவனியாமல் உன் அண்ணன் எதிரே நின்று கொஞ்சிக் குலாவி வார்த்தையாடிய பின், பலகாரம் சாப்பிட வருவாள்.

 

இதற்குள்ளாக நான் அதிகாலையில் எழுந்திருந்து, வீடு பெருக்கி, பாத்திரம் சுத்தம் செய்து, காப்பி போட்டு, ஏதேனும் பலகாரம் செய்து வைத்திருக்க வேண்டும். ஒரு நாள் உடம்பு சரியில்லாததால், அதிகாலையில் எழுந்து காப்பிபோடாவிட்டாலும், என்னை முகத்தால் சுட்டு, ஜாடை மாடையாகத் திட்ட ஆரம்பிப்பாள். இதென்ன இழவு, தின்கிறதற்கு ஆட்கள் இருக்கிறார்களேயொழிய, வேலை செய்வதற்கு ஆட்கள் கிடையாதா? ஒருதரம் சொன்னால் உரைக்காதா? எந்நேரமும் இந்த வீட்டில் பெரிய ரோதனயாய்விட்டது. படுக்கையிலிருந்து எழுந்தவுடன் காப்பி சாப்பிட்டோம், சந்தோஷமாக இருந்தோம் என்பதே இல்லை. இங்கே நாங்கள் என்ன லட்சாதிபதிகளா? கையால் உழைத்தால் தானே கூலி கிடைக்கும். காலை நீட்டிக்கொண்டு, கணக்கு வழக்குப் பார்க்காமல் உனக்கென்ன, எனக்கென்ன, கணக்கென்ன, வழக்கென்ன என்று இப்படி இருந்தால் குடும்பம் எப்படி நடக்கும்? என்று சரமாரியாகப் பொழிவாள். இன்னும் சொல்லொணாத வார்த்தைகளையும் பொழிவாள். நானவற்றையெல்லாம் கேட்டுக்கொண்டு, “பகவானே! என் தலைவிதி இப்படியாயிற்றே,மருமகள், மருமகளென்று மகிழ்ந்தேனே. இப்போது என் மகிழ்ச்சியெல்லாம் இகழ்ச்சி ஆய்விட்டதே. சர்வ ஜீவ தயாபரனே! என்னை இரட்சித்தல் வேண்டும்” என்று வேண்டி காலத்தைக் கழித்து வருகிறேன்.

bags on back of women

அதிகாலையிலெழுந்து யான் காப்பி, பலகாரம் தயாராக வைத்திருந்தால், அவள் அதை எடுத்துக்கொண்டு அன்ன நடை நடந்து, அலங்காரமாகத் தன் பள்ளியறைக்குச் சென்று மேஜை மீது வைத்துவிட்டு, எதிர் எதிராக உன் அண்ணனுடன் உட்கார்ந்து ஆனந்தமகத் தின்று தாம்பூலமருந்தியபின், இருவரும் அவ்வறையைவிட்டு வெளியே வருவார்கள். யான் வேலைக்காரியைப் போல, அவ்வறைக்குள் போய் சுத்தம் செய்யவேண்டும்.பிறகு சமையல் வேலை.

 

உன் அண்ணன், என்னைத் தாயார் என்று சற்றேனும் யோசியாமல், வேலையாளை நியமிக்காமல், துரை போலத் தன் மனைவியுடன் ஆனந்தமாகக் காலம் கழித்துவருகிறான். ஈசன், இறுதி நாளில் எனக்கு இந்தக் கஷ்டத்தை வைத்தான். மாமியார் என்ற பட்டம் எனக்குக் கிடையவே கிடையாது. ஏதாவது நற்புத்தி கூறப்புகின், உனக்கென்ன பெரியதனம்? மூலையில் நாரிக்கிட, இதற்காகவா உன்னை அழைத்தது? என்று உன் அண்ணன் சொல்லி விடுகிறான். அப்புறம் அச்சிறுக்கி என்னை எப்படி மதிப்பாள்? அவளும் என்னை அலட்சியம் செய்கிறாள்.

 

அந்தச் சிறுக்கியோ பட்டினத்துப் பெண்ணாகையால் தினமும் தவறாமல் ஒழுங்காக ஸோப் பூசிக்கொண்டு குளித்துவிட்டு நைஸாக உடையை உடுத்திக்கொண்டு சல்லா முந்தாணியைப் பின்புறம் சொருகாமல் தாசிகளைப்போல

தொங்க விட்டுக்கொண்டு, முழங்கைக்குக் கீழ் குச்சி ரவிக்கையை அணிந்து மேனா மினுக்கியைப்போல காலம் கழிக்கிறாள். நான் புழுக்கைச் சிறுக்கியைப்போல கரித்துணியைக் கட்டிக்கொண்டு அடுப்பண்டையி லிருக்கவேண்டியதுதான். எனக்குத் துணிமணி இருக்கிறதா என்று கவனிப்பதேயில்லை. யானே அச்சிறுக்கிக்குத் தெரியாமல் உன் அண்ணனிடம் என் மனக்கவலையைச் சொன்னாலும் “டுஷ், டாம், கூஸ், அதெல்லாம் என் காதில் போடாதே. உனக்கிஷ்டமிருந்தால் இங்கேயிரு. இப்படி வீண் கதையை வளர்த்துக்கொண்டு என் மானத்தை வாங்குவதாயிருந்தால் வீட்டை விட்டு ஒருவரிடமும் சொல்லாமல் வெளியே போய்விடு” என்கிறான். என் பிள்ளையே எனக்கு சத்ருவாக இருந்தால் என்னை யார் காப்பாற்றுவார்கள்? யான் இவ்விடத்தில் இருக்கும் துன்பங்களையொழித்துவிட்டு, உன்னிடம் வந்து, இருக்கும் பணக்காசுடன் வாழலாமென்றாலோ பிள்ளையைப் பிரிந்திருக்க மனம் வரவில்லை. ஒரே பிள்ளை யென்று யான் சீராட்டி பாலூட்டி வளர்த்த பெருமை எனக்குத் தெரியுமேயொழிய வேறு யாரறிவார்கள்? அவந்தான் அவள் மாய்கையில் மூழ்கி தாய் என்ற விசுவாசம் இல்லாமலிருந்தால் யான் அப்படியிருக்க என் மனம் சகிக்கவில்லையே. பிறரை நோவானேன்? அவரவர் வினையை அவரவர் அனுபவிக்க வேண்டு மாகையால் யானிதைப்பற்றி வருத்தப்படுவதால் என்ன பயன்?

a aa i ii

 

அழுதாற் பயனென்ன, நொந்தால் பயனென்ன வாவதில்லை 

தொழுதாற் பயனென்ன நின்னையொருவர் சுடவுரைத்த

பழுதாற் பயனென்ன நன்மையும் தீமையும் பங்கயத்தோ

னெழுதாப்படி வருமோ சலியாதிரு யென்னேழை நெஞ்சே!

 

என்றன்றோ ஆன்றோர் கூறியிருக்கின்றனர். என்றைக்கு என் துன்பமொழியுமோ, என்னைக் கடவுள் ரட்சிப்பாரோ? யானறியேன். என் பிள்ளையைப் பற்றி பலரிடம் இகழ்ச்சியாகக் கூறினால் எனக்கே அவமானம். ஆகையால் ஒருவரிடமும் சொல்லாமலும், இவ்விடத்தைவிட்டு நீங்காமலுமிருக்கின்றேன்.

 

உன் அன்புள்ள தாயார்

மாணிக்கவல்லி

 

–சுபம்–

 

இரண்டாவது மாமியின் கடிதம்! (Post No 2567)

beauty with muram

Compiled  by London swaminathan

 

Date: 23 February 2016

 

Post No. 2567

 

Time uploaded in London :– 8-43 AM

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

(குறைந்தது 75 ஆண்டு பழமையான விநோத விகட சிந்தாமணி – என்ற நூலிலிருந்து தொகுத்தது; நேற்று முதல் மாமி கடிதம் வெளியானது)

 

எனதருமை அக்காள்,

இதுவரை எனது ஆயுள் பரியந்தம் யான் எங்கும் காணாத அதிசயங்களை யெல்லாம் கண்டிருப்பதால், அவற்றையெல்லாம் உனக்குத் தெரிவிக்க வெண்ணியே இக்கடிதத்தை எழுதலானேன். இதை நீ வாசிக்க ஆரம்பிக்கும்போதே அதிசயப்படாதே. முழுதும் வாசித்த பின், மறுபடியும் வாசித்துப் பார்த்து ஆச்சரியப்படு. அஃதென்னவென்றால், அம்மாள் சுமார் ஒரு மாதத்திற்குமுன்பு, பெங்களூருக்கு அண்ணாத்தையைக் காணச் சென்றிருந்து நேற்றையதினம்தான் வந்தார்கள்.

 

அண்ணியைக்கொண்ட பிறகு அம்மாள் அங்குச் சென்றது இதுதான் முதல் தடவை. அம்மாள் இங்குக் காலை ஏழு மணி பெங்களூர் பாசஞ்சர் வண்டியேறி, மாலை சுமார் ஆறு மணிக்கு பெங்களூர் தண்டு ஸ்டேஷனில் இறங்கினார்களாம்.

(தண்டு =கண்டோன்மெண்ட்)

 

முன்னதாகவே கடிதமெழுதியிருந்ததால் அண்ணாத்தை ஆபீஸிலிருந்து நேராக ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருந்து அம்மாளை இட்டுக்கொண்டு சுமார் ஏழு மணிக்கு வீடு போய்ச் சேர்ந்தார்களாம். அப்போது அண்ணி, மேஜையின் மீது ஒரு ஹார்மோனியப்பெட்டியை வைத்து ஒரு நாற்காலியின்மீது உட்கார்ந்து கூடத்தில் பாடிக்கொண்டிருந்ததாம். அம்மாள் வந்ததைப் பார்த்தும், அண்ணி நாற்காலியைவிட்டு எழுந்திருக்காமல், அப்படியே அசட்டையாய் பாடிக்கொண்டிருந்ததாம்.

IMG_4425

அம்மாளை, எப்போது வந்தீர்கள்? காப்பி சாப்பிடுகிறீர்களா? உடம்பு சௌக்கியமா? என்று ஒரு பேச்சுக்குக்கூட கேட்க வில்லையாம். அம்மாள், வேடிக்கையை யெல்லாம் பார்த்துக்கொண்டே கூடத்தில் உட்கார்ந்தார்களாம். பிறகு இரவு ஒன்பது மணியானதும் அண்ணி, தன் முத்தான வாயைத் திறந்து, ‘அடீ, வேதவல்லி, என்ன சந்தடியே காணோம். சாப்பாடு தயாராய் விட்டதா? மணியென்ன தெரியவில்லையா?’ என்று வேலைக்காரியைக் கேட்டதாம்.

 

உடனே அவள் இரண்டு பாத்திரங்களில் வெந்நீர் கொண்டு வைத்தபின், கைகாலலம்பிக்கொண்டு, ‘என்னாங்கோ! கைகாலலம்பிக்கொண்டு சாப்பிட வங்கோ என்றதும், அண்ணாத்தை மறுபாத்திர ஜலத்தில் கையை மட்டுமலம்பிக்கொண்டு மீதி ஜலத்தை அம்மாளிடம் கொடுத்ததாம். அம்மாள், இந்த ஆச்சரியத்தையெல்லாம் உள்ளேயடக்கிக்கொண்டு, கைகாலலம்பிக்கொண்டபின் சாப்பிட உட்கார்ந்தார்களாம். அண்ணியும், அண்ணாத்தையும் மேஜயின்மீது ஒரு பெரிய வெள்ளிக் கிண்ணியில் அன்னம் போட்டுக்கொண்டு நாற்காலியிலுட்கார்ந்து சாப்பிட்டார்களாம். அம்மாள் கீழே உடகார்ந்து, ஒரு இலையில் வேலைக்காரியிட்ட அன்னத்தை சாப்பிட்டார்களாம். பிறகு அண்ணியும், அண்ணாத்தையும் ஊஞ்சலின் மீதுட்கார்ந்து தாம்பூலமருந்தி இரவு பத்து மணிக்கு சயனித்தார்களாம்.

(சயனி = படு)

 

மறுநாள், அண்ணி நம்மைபோல் அதிகாலையில் எழுந்திருக்கவில்லையாம். காலை எட்டு மணிக்கு எழுந்திருந்து முகம் கழுவி, வேலைக்காரி கொண்டுவந்த பலகாரத்தைச் சாப்பிட்டுவிட்டு, ஒரு நாவலை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்ததாம். இதையெல்லாம் கேட்கக்கேட்க எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது. இவற்றை அண்ணாத்தை கவனித்தும் மௌனமாயிருக்கிறதாம். அது என்ன காரணமோ அறியேன். நிற்க.

 

அம்மாள், அங்கு இருந்த ஒரு மாதமும், அண்ணி படுத்தியபாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்லமுடியாது. வேலைக்காரியுடன், அம்மாள் அருகிலிருந்து வேலை செய்யவேண்டுமாம்.

IMG_3322

இல்லாவிடில், “ஆ! இதென்ன, என்னைப்போல ஒன்றுமறியாத மொட்டைப் பெண்ணா, எல்லாம் தெரிந்து போன, பேத்தியெடுத்து நரைத்த கிழவிக்கு எப்படி வேலை செய்யாமலிருக்க மனம் சகிக்கிறது? வேலை என்றால் மாட்டேன், சோறு என்றால் தின்பேன் என்ற கணக்காயிருக்கிறதே இம்மாதிரி மாமியார் இருந்தால், மருமகளுக்கு குறைவேயில்லைதான்! வயதாய்விட்டால் மட்டும் போதுமா? அதற்கேற்ற குணமும் மனமும் வேண்டாமா? என்று ‘பாரதம்’ படி முடிக்குமாம்.

 

அம்மாள்  பதில் பேச பயந்து சும்மாய் இருந்துவிடுவார்களாம். ஒருநாள், மனம் தாளாமல், “ என்னடீ! மாமியார் ஆச்சுதே என்கிற மட்டுமரியாதை இல்லாமல்  என்னை வேலை செய்யும்படி அதிகாரம் செய்கிறாயே. இதற்குத் தானா நான் உன்னைக் கொண்டது? புழுக்கைச் சிறுக்கி! அவ்வளவு தூரம் என்னிடம் வாலாட்டாதே. நீ பணக்காரன் வீட்டுப் பெண்ணாயிருந்தால் எனக்கென்ன?” என்றார்களாம்.

 

உடனே அண்ணி, அம்மாளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து, “ நாக்கை உள்ளே வைத்துப் பேசு. என்னையா அடீ, புழுக்கைச் சிறுக்கியென்று ஏசுகிறாய்? என் தகப்பனிடம் சொன்னால் உன் உடம்பிலுள்ள எலும்பைப் பொறுக்கிவிட்டுப் பல்லைத்தட்டிவிடுவார். ஜாக்கிரதை. என்ன, மாமியார் என்றால் இரண்டு கொம்பு முளைத்திருக்கிறதா? அந்த வெங்காய அதிகாரம் எல்லாம் இங்கே செல்லாது” – என்று வாயில் வந்தபடியெல்லாம் பேசி முடித்ததாம்.

அம்மாள், இதைக்கேட்டு நடுநடுங்கிப் போய், பேயிடம் அகபட்டுக் கொண்டது போல திகிலடைந்து, தலை மயிரை விடுவித்துக் கொண்டு ஒரு மூலையில் போய் படுத்துக்கொண்டார்களாம்.மற்றவைகளைப் பிறகு எழுதுகிறேன்.”

 

உன் அன்புள்ள சகோதரி

கமலா

 

மாமியின் துயரம்! (Post No 2564)

aythal

Compiled  by London swaminathan

 

Date: 22 February 2016

 

Post No. 2564

 

Time uploaded in London :–17-22

 

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Please go to swamiindology.blogspot.com

OR

tamilandvedas.com

 

என் அருமைத் தங்கையே!

உன் கடிதம் கிடைத்தது. என் க்ஷேமத்தைப்(நலம்) பற்றி நீ எழுதச் சொன்னாய். நான் என்னுடைய க்ஷேமத்தை (நலம்) என்னவென்று எழுதப்போகிறேன் இன்னும் என் குமாரனுக்கு விவாகம் (திருமணம்) நடந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் என் மருமகள் என்னிடத்தில் கொஞ்சமும் மரியாதையின்றி நடக்க ஆரம்பித்து விட்டாள். நான் ஒன்று சொன்னால் அவள் ஒன்பது சொல்கின்றாள்.

 

என் குமாரன் (மகன்) மனைவியின் மாய்கையில் மூழ்கினவனாய், நான் ஒன்று சொன்னால், தன் மனைவியைக் கீழே விடாமல் தாங்கிப் பேசுகிறான். அதனால் அவள் என்னைக் கொஞ்சமும் மதிப்பதேயில்லை.

 

அவள் படுக்கையை விட்டு தினமும் காலையில் எட்டு மணிக்கு எழுந்து வருகிறாள். அதற்குள் வீட்டிலுள்ள வேலைக்காரியைக் கொண்டு நான் எல்லா வேலைகளையும் தயாராய் செய்து வைக்கவேண்டும். இல்லாவிட்டால் அவள் கடுகடுத்த முகத்துடன் பாத்திரங்களை தடதடவென்று உருட்டுகிறதும், ஜாடை பேசித் திட்டுகிறதுமாக என்னைத் துன்பப்படுத்துகிறாள். அவள் எழுந்திருக்கும் போது வெந்நீர் என்கிறாள். வேலைக்காரி கொண்டுபோய் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் வேலைக்காரியின் பாடு அன்றைய தினம் திண்டாட்டம்தான். வெந்நீரைக்கொண்டு என் மருமகள், காலைக் கடனை முடித்துக்கொள்கிறாள்.

 

அதற்குப் பின் தயாராய் இருக்கும் பலகாரத்தைத் தின்று பின்னர் தானே எல்லா வேலைகளையும் செய்தது போல காப்பியையும் பலகாரத்தையும் கோப்பையிலும் தட்டிலும் எடுத்துக்கொண்டுபோய் கணவனை எழுப்புகிறாள். கணவனை வெந்நீரைக் கொண்டு பல்விளக்கும்படி உபசரிக்கிறாள். இத்தகைய தளுக்கால் என் மூட மகன் அவளிடத்தில் மயங்கிக் கிடக்கிறான்.

 

அவள் ஒரு வேலையும் செய்வதே இல்லை. வேலைக்காரி இருந்தால் தானென்ன? அவளைப்போல ஒரு சோம்பேறியை நான் உலகில் பார்த்ததேயில்லை. பகலில் புருஷன் சாப்பிட உட்கார்ந்தால், சாதம் முதலியவைகளை தானே கஷ்டப்பட்டு சமைத்தவைகளைப் போல எடுத்துக்கொண்டுபோய் வட்டித்து அவனுக்கு விசிறுகிறாள். அம்மம்மா! அவள் தந்திரமும் சாமர்த்தியமும் யாருக்கு வரும்? இப்படியெல்லாம் அவள் செய்வதால் அவள் வார்த்தைக்கு குறுக்கு பேசாமல் என் மகன், ‘பெண்டாட்டி தாயே, பெரிய தாயே’ – என்று அவளைக் கொஞ்சுகிறான். என் பாடு பெரும்பாடாயிருக்கிறது.

 

உனக்குத் தெரியும் அவள் பெயர் ஜானகி என்று. நானோ அவள் செய்யும் ஜாலங்களையெல்லாம் மனதிற்கொண்டு அவள் பெயரை ஜாலகி என்று மாற்றிவிட்டேன். ஆனால் வெளியே சொல்ல பயம். மனதிற்குள் சொல்லிக்கொள்வேன்.

 

இப்படிக்கு அன்புள்ள

அம்மாக்கண்ணு

லேடி இல்லாதவன் பேடி!! நாடகத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி!!! (Post No. 2399)

IMG_2814

Compiled by London swaminathan

Date: 17 December 2015

 

Post No. 2399

 

Time uploaded in London :– 8-20 AM

( Thanks for the Pictures  ) 

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

பழைய கால நகைச் சுவை நூலான  பக்கத்திற்கிருமுறை கெக்கெக்கெவென்று சிரிக்க வைக்கும் விகடக் கற்கண்டென்னும் “விநோத விகட சிந்தாமணி” என்னும் நூலிலிருந்து எடுத்த கதை.

 

 

நூல் கொடுத்துதவியவர்- சந்தானம் சீனிவாசன், சென்னை

 

 

நூறு ஆண்டு பழமையான ‘ஜோக்’குகள்

garland making

விகடன்:மை டியர் சூத்ரதாரர்! தாசிகளால் சுகமில்லை என்ற தங்கள் கருத்தை நான் ஏற்கமுடியாது. ஏனெனில் உலகத்தில் தாய்மானவர், தந்தையுமானவர், தம்பியுமானவர் முதலிய மகான்களெல்லாம், தெரியாமல், அறியாமல், வெறும் பாடல்களை எழுதி நம்மை ஏமாற்றியிருகிறார்கள் என்பது என் சித்தாந்தம். உண்மையில் எட்டாத கொம்பிலுள்ள தேனுக்குக் கொட்டாவி விடுவதுபோல அவர்களுக்குக் கிடைக்காத தோஷம் அப்படி பாடியிருப்பதாகத் தெரிகிறது. ஒருவருக்கு ஆயிரம் தாரமிருப்பினும் ஒரு தாசிக்கு நிகராகார்கள். இதற்காகவே முன்னோர்கள், “லேடியில்லாதவன் பேடி” என்றும், “கிளிபோற் பெண்சாதி யிருந்தாலும் குரங்குபோலொரு கூத்தியாள் வேண்டும்” என்றுங் கூறியிருக்கிறார்கள். தவிரவும்,

 

 

 

நான் என் வாலிபத்தில், “மனோ உல்லாச, மரகத விசுவாச, பிரகாச, அதிநேச, கோலாகல, குஞ்சித ரஞ்சித பாலாமிர்த, நீலாமரகத பூஷணி!” என்ற தாசியை வைத்திருந்தேன்.ஒரு போலீஸ் உத்தியோகஸ்தருக்கு அவள்மீது திருஷ்டி ஏற்பட்டது.மெள்ள மெள்ள வருத்துப் போக்காயிருந்தார் அதனால் எங்களிருவருக்கும் லடாய் உண்டாயிற்று. இப்படியிருக்க ஓர் நாள் போலீஸ்லயன் வழியே போய்க்கொண்டிருந்த நான் கீழே விழுந்துகிடந்த ஒரு பொன்னாபரணத்தை எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்க, என் பின்னாலென்னை யறியாமல்  ஒளிந்து வந்த போலீஸ் ஜெவான் திருட்டுச் சொத்தை வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி க் கன்னத்தில் தவடை சுத்திசெய்து ஸ்டேஷனுக்கு இட்டுப் போய் என் விரோதியான போலீஸ் ஜவானிடம் நிறுத்தினான்.  அவன் என்னயேறவிறங்கப் பார்த்து, பின்பு, ‘பூஜை இன்னும் நடக்கட்டும்’ என்றான்.

 

 

வண்ணான் கூட அப்படி வெளுக்கமாட்டான். தகுந்தபடி எனக்குச் சாத்துபடி செய்தான். இது சங்கதி என் தாயார் கேள்விப்பட்டு ஸ்டேஷனுக்கு ஓடிவந்து மாரடித்துக்கொண்டாள். என் மனைவி ஓர் மூலையிலிருந்து “காள் காள்” என்று சத்தம் போட்டுக்கொண்டி ருந்தாள். என் தகப்பனோ நாலுகை போட்ட பாரிஸ்டரைத் தருவித்துப் போடுகிறேன், என்ன கேள்விமுறையில்லையா என்று தடபுடல் பண்ணினார்.

 

IMG_3318

இங்கனமிது நிற்க இச்செய்தியறிந்த  என்

 

 

மனோன்மணி

மல்லிகையரும்பு

மதுரைக்கரும்பு

கற்பகத்தரு

களங்கமில்லாத கிளி

கோதிலாவொளி

அன்பின் குன்று

இன்பக்கடலாகிய என்னருமை வைப்பாட்டி! கேள்விப்பட்டு ஓடிவந்து போலீஸ் ஜவானை கண்வலையில் மாட்டி மயக்கம்பூட்டி என்னை விட்டு விடும்படி ஜாடை காட்டினாள்.

 

ஆகா இதல்லவோ ஆச்சரியம்! உடனே விடுதலையாகி வந்து விட்டேன்

 

தாயாரழுது பயனென்ன? மனைவியழுது மலையாய்க் குவித்தென்ன? தகப்பன் பாரிஸ்டரைக் கொண்டு வருகிறேனென்றதினாலானதென்ன? ஆகையால் தாசிகளால் சுகமில்லை  என்று தாம் சொல்வது ஒப்போதப்போ? தாங்களே அறிய வேண்டியது

 

சூத்ரதாரர்:- மித்ரா! உன் அனுபவம் விசித்திரமாகத்தானிருக்கிறது. இன்னும் மற்றுமுள்ள கதைகளைக் கூறுவாயாக.

 

விகடன்: – இதோ கூறுகின்றேன்.

To be continued…………………………………………………………….

அடியே! சொன்னதைச் செய்யடி!!

IMG_4372

Don’t Reblog it at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2135

Time uploaded in London: – 5-31 AM

இது ஒரு கிராமப்புற கதை! ஒரூ ஊரில் படிக்காத ஒரு பட்டிக்காட்டான் இருந்தான்; சரியான முரடன். தினமும் மனைவியைக் காரணமில்லாமல் அடிப்பான். அவளும் பொறுத்துப் பார்த்தாள். ஒரு நாள் சிந்தித்தாள்; “இந்த ஆளுக்கு எப்படி நல்ல புத்தி புகட்டுவது? சரி! அவரையே கேட்டுவிடுவோம். நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி தினமும் அடிக்கிறீர்கள்” என்று.

ஒரு நாள் நல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். “ஏங்க! நான் ஒரு தப்பும் செய்யாத போதும் ஏன் இப்படி என்னை தினமும் அடிக்கிறீங்க? என்று கேள்வி கேட்டாள்.

அவன் சொன்னான், “அடியே! நான் சொன்னதை நீ செய்வதில்லை. அதனால்தான் உன்னை அடிக்கிறேன். அடியாத மாடு படியாது” – என்றான்.

அவள் சொன்னாள்: “சரி, இனிமேல் நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன். என்னைத் தொடக் கூடாது. சத்தியம் செய்யுங்கள்” என்றான். அவனும் அவள் தலை மேல் அடித்து சத்தியம் செய்துவிட்டான்.

அவளோ அடிபட்ட பாம்பு போலப் பழிவாங்கக் காத்திருந்தாள். அவன் வழக்கம்போல, “அடீ! நான் சாப்பிட வந்துவிட்டேன்” என்றான்.

அவள் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு, போட்டாள் ஒரு போடு, அவன் தலையில்!

“ஏய், ஏய், ஏன் என்னை அடித்தாய்?” என்றான்.

நீங்கள் ‘அடி’என்று சொன்னீர்களே என்றாள்.

மறுநாள் அவன் சாப்பிட வந்த போது தலையில் நிறைய ‘உமி’ யைத்தூவிக் கொண்டு வந்து சாப்பாடு போட்டாள். “அட, தலை எல்லாம் உமி!” என்றான்.

அவள் அவன் தலை முழுதும் ‘தூ தூ’ என்று துப்பித் தீர்த்தாள். “அடீ, ஏன் இப்படி துப்புகிறாய்?” – என்றான்.

கம்பால் போட்டாள் ஒரு போடு! அவன் காரணத்தைக் கேட்கும் முன்னர் அவளே சொல்லிவிடாள்: “முதலில் தலையில் உமி(ழ்) என்றீர்கள்; பின்னர் அடீ என்றீர்கள் – இரண்டையும் உடனே செய்துவிட்டேன்”.

அந்த சத்தியம் தவறாத ‘உத்தமன்’ பேசாமல் போய்விட்டான். மறு நாளைக்கு அவன் முதலாளியிடம் கூலி வாங்கிவந்தான். வழக்கத்தை விடக் கூடுதலாகப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், “அடீ, இதைக் கொண்டு போய் வை”  – என்றான்.

போட்டால் ஒரு போடு அவன் மீது கம்பால்! “முட்டாள் பய கொண்டுவந்த பணம், மடப்பய கொண்டுவந்த பணம், எந்த நாய் இந்தப் பணத்தைக் கொடுத்ததோ” – என்று வையத் துவங்கினாள்.

“ஏய், ஏய், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? ஏன் இப்படி வைகிறாய்?” – என்றான்.

“என்னங்க! முதலில் அடி என்றீர்கள் அடித்தேன். அப்புறம் பணத்தைக் கொண்ட்போய் “வை” என்றீர்கள். நன்றாக வைது தீர்த்துவிட்டேன். நீங்கள் சொன்னதை நான் மறுக்கலாமா?” என்றாள்.

பட்டிக்காட்டனுக்கு சங்கதி புரிந்தது. இவள் சரியான ஏட்டிக்குப் பூட்டியான பெண்; இனிமேல் நாம் ஒழுங்காக இல்லாவிட்டால் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்டான். மனைவியிடம் போய், இனிமேல் நான் உன்னை அடிக்கமாட்டேன். சரியான காரணமே இல்லாமல் உன்னைத் தண்டித்தேன். நீயும் என்னை அதே போல சரியான காரணமே இல்லாமல் தண்டித்து பாடம் புகட்டிவிட்டாய் – இனிமேல் அடிதடி இல்லாமல் வாழ்வோம்” என்றான். அவளுக்கும் மெத்த மகிழ்ச்சி!

கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிடாலும், வயல்காட்டிலும், மரத்தடியிலும், வீட்டுத் திண்ணையிலும் இப்படிப் பல கதைகள் சொல்லி, அரிய, பெரிய கருத்துக்களை கல்மேலிட்ட எழுத்துபோல மனதில் பதித்தனர்.

 —-xxxxx—–

பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு!

jhansi

Research Article No.1744; Date:- 23  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-40

பாட்டிமார்களிடம் பழங்கதைகள் கேட்டவர்களுக்கும் பழைய கால சிறுவர் கதைப் புத்தகங்கள், பத்திரிக்கைகள் (அம்புலிமாமா, கண்ணன், கோகுலம்) ஆகியன படித்தவர்களுக்கும் மிகவும் பிரபலமான வாசகம் “56 தேச ராஜாக்கள்”. அதாவது பட்டபிஷேகம், ராஜா வீட்டுக் கல்யாணம், ஸ்வயம்வரம் எதுவானாலும் அக்காலத்தில் 56 தேச ராஜாக்களும் வந்திருந்ததாகச் சொல்லி கதையைத் துவக்குவர். இந்தியா இப்பொழுது மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் எப்படிப் பிரிக்கப்பட்டதோ அப்படியே அக்காலத்தில் 56 தேசங்களாகப் பிரிக்கட்டிருந்தது.

ஒரு சக்ரவர்த்தி வந்து, பல தேசங்களை வென்று, தமது பேரரசுக்குள் சேர்த்திருந் தாலும் அந்நாட்டு ராஜாக்கள் கப்பம் கட்டி விட்டு தனது ராஜா பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். 56 தேசங்களின் பட்டியல் அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் உள்ளது.

மஹாபாரதத்தில் குறைந்து 29 நாடுகளின் பெயர்கள் வருகின்றன. புத்தர் காலத்தில் 16 பெரிய பிரிவுகள் (மஹாஜனபத) இருந்தன. தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியருக்கும் கீழே பல சிறிய அரசர்கள் இருந்ததுபோல பல சிற்றரசர் நாடுகளும் இருந்தன.

Rani-Lakshmi-Bai

லெட்சுமி பாய்

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்ற நூலிலும், வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரத்திலும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று ஒரு நாட்டைக் குறிப்பிடுகின்றனர். இது ஒரு வியப்பான விஷயமாகும். அதவது பெண்கள் ராஜ்யம் என்று பெயர். கிரேக்க நாட்டில் இப்படி ஒரு கதை உண்டு. ஆனால் அங்கே அவர்களை நல்லபடி சித்தரிக்கவில்லை. நமது நாட்டில் பெண்கள் போர்ப் பயிற்சி பற்றி புகழ்ச்சியாகவே சொல்லியுள்ளனர். நம் நாட்டுக்கு வந்த, அல்லது நம் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரேக்க ஆசிரியர்கள் நம் வீராங்கனைகளைப் புகழ்ந்து எழுதியுள்ளனர்.

கி.பி.600 வாக்கில் இந்நட்டுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் பெண்கள் நாடு இருப்பது பற்றி எழுதியுள்ளார்.

மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு ராணி ஆள்வதாக எழுதியுள்ளார். ஒருவேளை இது அன்னை மீனாட்சியைக் குறிப்பதாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுவர்.

மௌர்ய சந்திரகுப்தன் பல்லக்கைச் சுற்றி பெண் வீராங்கணைகள் செல்லும் காட்சியை வேறு ஒரு கிரேக்க ஆசிரியர் எழுதி வைத்துள்ளார். ராமாயணக் கதைக்கு உயிரே கைகேயி பெற்ற இரண்டு வரங்கள் தான் என்பதை நாம் அறிவோம். யுத்த களத்தில் கைகேயி திறம்பட தேரைச் செலுத்தி தசரதனுக்குக்கு வெற்றி தேடித் தந்த செய்தியையும் நாம் அறிவோம்.

chennamma

கௌடில்யர் அர்த்தசாஸ்திர நூலிலும் பெண்கள் படை பற்றி எழுதியுள்ளார். ஆக, 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் போர்ப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கைகேயி யுத்த்களத்தில் தசரதனுக்கு சாரதியாக (டிரைவர்) போய் இருக்கமாட்டாள்.

பெண்கள் நாடு எங்கே இருந்தது?

இது இருந்த இடம் பற்றி நாம் ஊகிக்கவே முடிகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இது வடமேற்கு இந்தியாவில் இருந்ததாக வராஹமிகிரர் எழுதியுள்ளார். இது இமயமலை சட்லெJ நதிப் பிரதேசம் என்று யுவாங் சுவாங் சொல்கிறார். பிரம்மபுத்ரா நதிக்கு வடகே இமய மலையில் இருந்ததாக டே என்பவர் குறிப்பிடுவதால் இது குமாவூன், கார்வால் பகுதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கிழக்கு திபெத்தில், நுவாங் என்ற மலைஜாதி மக்களிடையே பிஞ்சு என்ற ராணி ஒருத்தி இருந்ததாகவும் அவரைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களே ஆட்சி புரிந்ததாகவும் ஆட்கின்ஸன் என்பவர் எழுதுகிறார். வாத்ஸ்யாயனரின் காமசூத்ரத்துக்கு உரை எழுதிய யசோதரர் என்பவர் இது வங்க தேசத்துக்கு மேற்கே இருந்த நாடு என்பார். ஆக இமய மலைப் பகுதியில் இது இருந்தது உறுதியாகிறது.

Anushka-Rudramadevi

ராணி ருத்ரமா தேவி

வராஹமிகிரர் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடுகளின் பட்டியலைத் தருகிறார். ( ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க). ஒரு குறிப்பிட்ட ஜாதி, இன மக்கள் குழுவின் பெயரில்தான் நாடுகள் பெயர் இடப்பட்டன. காம்போஜர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பகுதியை காம்போஜர் என்றனர். ஆனால் இவர்களே காலப் போக்கில் பல இடங்களுக்குச் சென்று காலனிகளை அமைத்தபோது அதையும் காம்போஜம் என்றனர். இதனால் ஒரே பெயர் மேலும் சில இடங்களில் கானப்படும். சிலநேரங்களில் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டால், பூகோளப் படத்தில் அந்த நாட்டின் பெயரே வேறு இடத்தில் இருக்கும். அதாவது எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

RD parade rehearsal

அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் என்ற நாடு காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பெயர்களுக்குப் பின்னர், திராவிடம் என்ற நாடும் உள்ளதால் தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்த பகுதியை அப்படி அழைத்தனர் என்பது தெரிகிறது. திராவிட பாஷைகளுக்கு எல்லாம் தமிழே தலைமை என்பதால் பின்னர் அது தமிழுக்கும் உரித்தானது.

திராவிட = த்ரமிள = தமிழ் என்று ஆனதாகவும் தமிழ்= த்ரமிள- த்ராவிட என்று ஆனதாகவும் வாதிப்போர் தங்கள் கொள்கைக்க்கு ஏற்றவாறு இதை மாற்றிக் கொள்வர். திராவிட என்பது வெள்ளைக்கார்கள் பயன்படுத்திய இனப் பெயராக இல்லாமல், தெற்கு என்ற திசைப் பெயராகவே முற்காலத்தில் விளங்கிற்று.

புலி மூஞ்சி, குதிரை மூஞ்சி, மூன்று கண் மனிதர்கள்!

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 14-ஆவது அத்தியாயத்தில் திசை வாரியாக நாடுகளைக் குறிப்பிடுகிறார். இதில் உள்ள சில சுவையான செய்திகளை மட்டும் காண்போம்.

மிலேச்சர்கள் பற்றி இவர் இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது அங்கே யவனர்களைக் குறித்த சொல் ஆகும். அல்பெரூனி காலத்தில் இது அராபியர்களைக் குறித்தது. தமிழிலும் இதே கதை என்பதை எனது முந்தைய கட்டுரையில் தந்துள்ளேன்.

புலி முக மனிதர்கள், குதிரை முக மனிதர்கள், பாம்புக் கழுத்து மனிதர்கள், நீண்ட கழுத்து மனிதர்கள், நாய் முக மனிதர்கள், கோரைப் பல் மனிதர்கள், சப்பை மூக்கு மனிதர்கள், தழை உடை மனிதர்கள், சபரர்கள், நிஷாதர்கள், உயர்ந்த கழுத்து மனிதர்கள், தாடிவாலாக்கள், முடி நிறைந்த தேகம் உடையோர், முக்கண்ணர்கள், ஒற்றைக் காலர்கள் என்று பலவகையான மக்கள் இனங்களையும் அவர்கள் ஆளுமிடங்களையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். ஒவ்வொரு இனமக்களும் தங்களை அடையாளம் காட்ட ஒவ்வொரு சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொண்டனர். அதனால் அவர்கள் அப்பெயர்களில் அழைக்கப்பட்டனர். சிக்கிம், பூடான் போன்ற நாடுகளில் இன்றும் கூட முகமூடி அணிந்து நடனம் ஆடுவர். பூதம் போல முகமூடிகளை அணிவதால் அந்நாட்டுக்கு பூதஸ்தான் (பூட்டான்) என்று பெயர். இது போன்ற வழக்கங்கள் அக்காலத்தில் பெருவாரியாக இருந்திருக்க வேண்டும்.

indian women

ராமாயணத்தில் வரும் குரங்குகள் (ஹனுமார்), கரடிகள் (ஜாம்பவான்), கழுகுகள் (ஜடாயு) ஆகியவர்கள் மிருகங்கள் அல்ல. அவர்கள் உடலில் வரைந்த ஒவியங்கள் (பச்சைக் குத்தல்) அல்லது அவர்கள் சில நேரங்களில் அணியும் முகமூடிகளைப் பொருத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டதால், அனுமார் என்றால், குரங்குகள் என்பது போலக் கதை சொல்லத் துவங்கிவிட்டனர்.

பத்து தலை ராவணன் என்றால், பத்து தலைகள் என்பது பொருளல்ல. ஒருவனுக்குப் பத்து திசைகளிலும் பார்த்து, எதிரிகளை வெல்லும் திறமை இருந்தால் இப்படி அழைப்பர். தசரதன் என்றால் அவனுக்கு பத்து தேர்கள் மட்டுமே இருந்தன என்பது பொருளல்ல. அவன் பத்து திசைகளிலும் உள்ள எதிரிகளை தேரில் சென்று, ஒடுக்கியவன் என்பது பொருள். உலகில் எல்லோருக்கும் எட்டு திசைகள் மட்டுமே தெரியும். இந்துக்களுக்கு மட்டும் பத்து திசைகள். அதாவது தசரதன், ராவணன் போன்ற வீரர்கள் மேல் உலகம், கீழ் (பாதாள) உலகம் உள்பட எல்லா இடங்களிலும் ஆட்சிச் சக்கரத்தைப் பரப்பினார்கள்.

ஆக பழங்கால இலக்கியங்களில் உள்ள முக்கண் மக்கள். ஒற்றைக் கால் மக்கள், புலி-நாய்-குதிரை முக மக்கள் என்பனவற்றை ஆராய்வது பலனளிக்கும் முயற்சியாகும்.

brooklyn museum

நியூயார்க் ப்ரூக்ளின் மியூசிய சிலை

வாழ்க வராஹமிகிரர்! படிக்க பிருஹத் சம்ஹிதா!!!