ஜனவரி  2018 காலண்டர், சதபதப் பிராமணப் பொன்மொழிகள் (Post No.4544)

Nataraja Picture posted by Veda

 

முக்கியப் பண்டிகைகள்: ஜனவரி 1- புத்தாண்டு தினம், 2-ஆருத்ரா தரிஸனம்,  13- போகிப் பண்டிகை, 14- மகர ஸங்கராந்தி, பொங்கல், 15- மாட்டுப் பொங்கல், திருவள்ளுவர் தினம், 24-ரத ஸப்தமி 26- குடியரசு தினம், 30- காந்திஜி நினைவு நாள், 31-தைப்பூஸம்

 

அமாவாசை- 16

பௌர்ணமி- 2, 31 சந்திர கிரஹணம்,

ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள்- 12, 27/28


Compiled by London Swaminathan 

 

Date: 25 DECEMBER 2017 

 

Time uploaded in London- 9-04 am

 

 

Post No. 4544

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

2018 ஜனவரி  நற்சிந்தனைக் (ஹே விளம்பி மார்கழி/தை) காலண்டர்

ஜனவரி 1 திங்கட் கிழமை

திவம் எனப்படும் ஆகாயத்திலே நுழையும்  பொழுது

சிருஷ்டிக்கப்பட்டவர்களுக்கே தேவர்களெனப்  பெயர் 11-1-6-7

 

ஜனவரி 2 செவ்வாய்க் கிழமை

சுவாசத்தை மித்திரன் என்பார்கள்; ஏனெனில் அவன் எல்லாருடைய நண்பனாகும் (நண்பன்= மித்திரன்)- சதபத பிராமணம் -4

 

ஜனவரி 3 புதன் கிழமை

வருஷத்திற்கு துரிதம் என்று பெயர்; ஏனெனனில் அவனே அனைத்தையும் துரிதமாக்குவான் 8-4-1-4  துரிதம்= சீக்கிரம்

 

ஜனவரி 4 வியாழக் கிழமை

தேவர்கள் சிருஷ்டிக் காலத்தில் பகல் ஒளி போல் மின்னியபடியால் அவ்வொளிக்கே தேவர்கள் எனப் பெயர்- 10-1-1-67

 

ஜனவரி 5 வெள்ளிக் கிழமை

சந்திரனிடமிருந்து அவன் ஒளியை எடுத்துக்கொண்டபடியால் (ஆ-தா) சூரியனுக்கு ஆதித்யன் என்று பெயர் (திதிகள் ஏற்படுவதைக் குறிக்கிறது)

ஜனவரி 6 சனிக் கிழமை

எது உலகத்தை எல்லாம் சுற்றி வளைத்திருக்கிறதோ (ஆப்த) அதற்கு ஆபம் அல்லது ஜலம் எனப் பெயர் 2-1-1-4

 

ஜனவரி 7 ஞாயிற்றுக் கிழமை

சிக்கிமுக்கி அடிக்கட்டை மேல் கட்டைக்கே ஊர்வசி- புரூருவன் எனப்பெயர். நெய்ப் பாண்டமே ஆயு என்னும் அவர்கள் பிள்ளையாகும்-3-4-1-22

ஜனவரி 8 திங்கட் கிழமை

புவியிலுள்ள எல்லா பொருள்களிலும் வீசி அவைகளை எல்லாம் எதையும் செய்யச் செய்வதால் வாயுவிற்கு விசுவ கர்மன் எனப் பெயர் -8-1-17

ஜனவரி 9 செவ்வாய்க் கிழமை

செவி எல்லாப் புறமும் செவியுறுவதால் அதற்கு எல்லாத் திசையின் சிநேகிதன் (மித்திரன்) எனப் பெயர்; இதனால் செவியை விசுவாமித்ரன் என்பர் 8-1-2-6

ஜனவரி 10 புதன் கிழமை

தேவர்களுக்கு மர்மமாய் மொழிவதிலேயே பிரியமுண்டு -6

ஜனவரி 11 வியாழக் கிழமை

ஒருவன் விரதமுடன், பட்டினி கிடந்தால   அ க்கினி முதலிய தேவர்கள் அவன் மனத்தால் அனைத்தையும் பார்த்து அங்கு வசிப்பதால் அப்படி இருப்பதற்கு உப வாசம் எனப் பெயர் 1- 1- 1 -7

 

ஜனவரி 12 வெள்ளிக் கிழமை

அசுரர்கள் ரோஹிணி என்னும் நெருப்பால் சுவர்க்கம் செல்லலாம் என நினைத்தார்கள். இந்த ரோஹிணி நெருப்பிற்கே ரோஹிணி நட்சத்திரம்  என ஜனங்கள் சொல்லுவார்கள். அற்புதமாயுள்ள நெருப்பிற்கே கிருத்திகை எனப் பெயர் 2-1-2-16

 

 

ஜனவரி 13 சனிக் கிழமை

சிரஸ் என்பது சிறந்ததைக் காண்பிப்பதாகும். தலையே சிறந்தது. ஆதலால் அதையும் குறிக்கும். இதனாலேயே சமூகத்தில் சிறந்தவனாய் உள்ளவனையும் சிரேஷ்டன் என அழைப்பது 1-4-5-5

 

ஜனவரி 14 ஞாயிற்றுக் கிழமை

விருத்திரன் கொல்லப்பட்டவுடன் துர்க்கந்தம் வீசி சலத்தில் நுழைந்தான். சலத்திற்கு இது பிடிக்கவில்லை; அதனால் விருத்திரன் எழுச்சியாகி புதரானபடியால் இதுவே தர்ப்பை என்னும் புல்லாயிற்று 7-2-3-2

 

ஜனவரி 15 திங்கட் கிழமை

நேர்வழியை சுவர்கம் என்று சொல்லுவார்கள் 13-12-15

ஜனவரி 16 செவ்வாய்க் கிழமை

பக்தி என்றால் தியாகத்திற்குப் பெயர் 7-2-2-4

 

ஜனவரி 17 புதன் கிழமை

புளித்த தயிரும் தேனும் சிறந்த உணவாகும் 5

 

ஜனவரி 18 வியாழக் கிழமை

சத்தியக்ஞர் சொல்லுவதாவது இப்புவி முழுவதும் எந்த இடமும் தெய்வீகமாகும் 3-1-1-4

 

ஜனவரி 19 வெள்ளிக் கிழமை

சுவர்க்கம் என்பது பூமியின் பொய் வடிவமாகும்

 

ஜனவரி 20 சனிக் கிழமை

தேசத்திலே தலைமைப் பதவி ஒருவனுக்கே அளிக்க வேண்டும் 8-3-2-7

ஜனவரி 21  ஞாயிற்றுக் கிழமை

சோமபான ரசம் பிழிவதென்பது அசுரர்களை அறைத்துக் கொல்லுவதாகும் 3-9-4-2

 

ஜனவரி 22 திங்கட் கிழமை

தாமரை இலை ஜலத்தில் மிதப்பது போல பூமி ஜலத்திலே மிதக்கின்றது

 

ஜனவரி 23 செவ்வாய்க் கிழமை

தேகத்திற்கு அவசியமான உணவு திருப்தியை அளிக்கும்; அதிகமான உணவு தீமையை அளிக்கும் 10-4-1-4

 

ஜனவரி 24 புதன் கிழமை

வெண்மை ஆகாச வடிவம்; கருப்பு பூமி வடிவம்; சிவப்பு வான வடிவம் 3-2-1-3

ஜனவரி 25 வியாழக் கிழமை

 

ஆதியிலே எத்தனை தேவர்கள் உண்டோ அத்தனை தேவர்கள் இப்பொழுதும் உண்டு 8-7-1-9

ஜனவரி 26 வெள்ளிக் கிழமை

தேகத்திலுள்ள அழுக்கே பொய் எனப்படும் 3-1-2-10

ஜனவரி 27 சனிக் கிழமை

அக்கினி பிராமணன் ஆகையால் அவனுக்கு பிராமணன் என்று பெயர்.அவன் பிராணன் ஆகிப் பிரஜகளைப் பாது காப்பதால் அவனுக்கு பரதன் எனப் பெயர். அவனுக்கே ஆதி புரோஹிதன் ஹோத்திரம் எனப் பெயர். அவன் ரதத்தைப்போல்   எதையும் எடுத்துச் செல்வதால் அவனூக்கு ரதி என்றும் பெயர் 1-4-2

 

ஜனவரி 28 ஞாயிற்றுக் கிழமை

ஆட்சி புரிவது புகழாகும்- 6-7-3-7

 

ஜனவரி 29 திங்கட் கிழமை

சூரியன் என்னும் கொக்கியில் ஜகமெல்லாம் தொங்கும்

 

ஜனவரி 30 செவ்வாய்க் கிழமை

நிலத்தில் உழத் தெரிந்தவனே அறிஞனாகும்  7-2-2-9

ஜனவரி 31 புதன் கிழமை

ஸ்திரீ ஒருவருக்கும் தீங்குமை புரிவதில்லை 6-1-3-2

xxxxxx

உதவிய நூல்: யஜூர் வேதக் கதைகள், எம்.ஆர்.ஜம்புநாதன், கலா சம்ரக்ஷண சங்கம், தஞ்சாவூர், 2004

 

–subham–

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

சங்கீத சாம்ராஜ்யம்: காசு கொடுத்து ரஸிகர் கூட்டம் சேர்த்த பாகவதர்! (Post No.4488)

 

 

Written by London Swaminathan 

 

Date: 13 DECEMBER 2017 

 

Time uploaded in London-  8-51 am

 

 

Post No. 4488

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

புகழ்பெற்ற வயலின் வித்வான் ப்ரிட்ஸ் க்ரைச்ட்லர் (FRITZ KREISTLER) தனது நண்பருடன்  கடைத் தெருவில் நடந்து சென்றார். அங்கே ஒரு மீன் விற்கும் கடை இருந்தது. அதில் வரிசையாக காட் வகை (CODFISH) மீன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மீனும் வாயைப் பிளந்து கொண்டு இமைக்காத கண்களுடன் பார்த்துக்கொன்டிருந்தன.

திடீரென்று க்ரைட்ஸ்லர் தனது நண்பரின் கைகளைப் பிடித்தார். அடடா! நான் கச்சேரி வாசிக்கப் போக வேண்டும் என்பது நினைவுக்கு வந்துவிட்டது! என்றார்.

 

(அவரது ரசிகர்கள் வாயைப் பிளந்து கொண்டு, கண்கொட்டாமல் இசையை ரசிப்பராம்!)

XXXXX

 

மயக்கமா? தயக்கமா?

பிரான்ஸ் லிட்ஸ் (FRANZ LITSZ) என்ற புகழ் பெற்ற பியானோ வாத்தியக் கலைஞர் காசுகொடுத்து ரஸிகர்களை ‘செட் அப்’ பண்ணுவாராம். நல்ல அழகான பெண்களைக் கூட்டிவந்து, இந்தோ பாரு  உனக்கு 25 பிராங்க் (FRANKS) பணம் தருவேன். நான் இந்தப் பாட்டு வாசிக்கும்போது நீ மயக்கம் போட்டு விழுவதாக நடிக்க வேண்டும்; நான் உன்னைக் காப்பாற்றுவதாக நடிப்பேன். ஆனால் யாருக்கும் விஷயத்தை வெளியே சொல்லக்கூடாது. சரியா? — என்று சொல்லி அழைத்துவருவார்.

 

அவருக்கு மிகவும் புகழ் ஈட்டித் தந்த கிருதியை வாசிக்கும்போது, பணம் வாங்கிய பெண்மணி தடாலென்ற சப்தத்துடன் மயக்கம் போட்டு விழுவாள்; உடனே மேடையில் இருக்கும்  பிரான்ஸ், திடீரென்று தனது பியானோ ஆசனத்திலிருந்து கீழே குதிப்பார். அந்தப் பெண்மணியை அலாக்காகத் தூக்கிச் சென்று மேடைக்குப்பின் சென்றுவிட்டு வருவார்.

 

உடனே ரஸிகர் அனைவரும் அடடா! என்ன வாசிப்பு! என்ன ரசனை; மயக்கமே போட்டுவிட்டாளே! என்று பேசிக்கொள்வர்.

 

ஒருமுறை இவரது கணக்கு, தப்புக் கணக்காகிவிட்டது; காசு வாங்கிய பெண் மயக்கம்போட்டு விழ மறந்து விட்டாள்! அதை எதிர்பார்த்துக் காத்திருந்த பிரான்ஸ், என்ன செய்வதென்று திகைத்து அவரே மயக்கம்போட்டு விழுந்துவிட்டார்!

XXXX

லண்டன் பெட்டிகோட் லேன் மார்க்கெட் (PETTICOAT LANE MARKET)

(இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் லண்டனில் ஞாயிறு தோறும் நடக்கும் ஒரு ஏமாற்று வேலை நினைவுக்கு வருகிறது. லண்டனில் நுற்றாண்டுக் கணக்கில் நடக்கும் சாலை ஓரக் கடைகள் இன்றும் உண்டு. அவர்கள் ஞாயிறுதோறும் ரோட்டில் கடை விரிப்பர். இதில் மிகவும் புகழ்பெற்றது பெட்டிகோட் லேன் எனப்படும், லிவர்பூல் ஸ்ட்ரீட் (LIVERPOOL STREET) மர்க்கெட்டாகும். நான் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர் வருகையில் அவர்களை அழைத்துச் சென்று காட்டுவேன்; கூட வருபவரிடம் இந்த வேடிக்கை பற்றிச் சொல்லிவிட்டு ஒரு மூலையில் நின்று ஓரக் கண்களால் இதைப் பாருங்கள் என்பேன்.

 

அங்கே ஒருவன் திடீரென்று வந்து துண்டை விரிப்பான். நிறைய பெர்fயூம் பாட்டில்களை (PERFUME BOTTLES) வெளியே அடுக்கிவைப்பான். எல்லாம் பிரபல பிராண்ட் நேம்ஸ் (BRAND NAMES) உடைய சென்ட்கள். ஓடி வாருங்கள், ஓடி வாருங்கள்! போனால் வாராது; பொழுது விடிஞ்சா கிடைக்காது;  மூடப்பட்ட ஒரு கடையிலிருந்து வந்த  STOCK ஸ்டாக் இவை! இதோ இதைக் கடையில் வாங்கினால் 40 பவுன்; நான் தருகிறேன் 20 பவுனுக்கு; இதைப் பாருங்கள்!! இதைப் போய் கடையில் வாங்கினால் இதன் விலை 30 பவுன்; நான் உங்களுக்கு 15 பவுனுக்கு தருகிறேன் ; இதோ இதைப் பாருங்கள். நீங்கள் AIRPORT DUTY FREE SHOP ஏர்போர்ட் ட்யூட்டி ப்ரீ ஷாப்பில் வாங்குவதில் கால் பங்கு விலைக்குத் தருகிறேன்; போய்விடாதீர்கள்; இனித்தான் முக்கிய ரஹஸியத்தைச் சொல்லப் போகிறேன்; இன்று ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் SPECIAL DISCOUNT ONLY TODAY; அத்தனைக்கும் சேர்த்து 25 பவுன் கொடுங்கள் போதும் என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அங்கு கூடியிருக்கும் பெருங்க் கூட்டத்தில் இருந்து நாலு ஐந்து இளம் வெள்ளைக்கார அழகிகள் ஓ, வாவ்! எனக்கு இரண்டு வேண்டும் என்று 50 பவுன்களை எண்ணிக் கொடுப்பர்; அதற்குள் இன்னொரு பெண்மணி எனக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்; மூன்றாவது அழகியோ அனைவரையும் விலக்கித் தள்ளிவிட்டு பிரமாதம் எனக்கும் என் நண்பிக்கும் வேண்டும் என்று காசு கொடுப்பாள்.

 

அந்த பெட்டிகோட் லேன் மார்க்கெட்டுக்கு வருவோர் பெரும்பாலும் லண்டனில் ஒரு சில நாட்களே தங்கும் டூரிஸ்டுகள்; அவர்களும் முண்டியடித்துக் கொண்டு முன்னால் போய் ஆளுக்கு ஒன்று வாங்குவர்.

 

ஏற்கனவே வாங்கிய பெண்கள் அனைவரும் ஒரு மூலையில் சென்று ஒளிந்து கொண்டு இருந்துவிட்டு திரும்பிவந்து அவனிடம் பெர்fயூம் பாட்டில்களைத் திருப்பிக் கொடுப்பர். அடுத்த பத்து நிமிடத்தில் மீண்டும் இதே காட்சி துவங்கும்; இவர்கள் கூலிக்கு மாரடிக்கும் அழகிகள்! ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றுவோரும் இருப்பர்!)

 

XXX

 

 

ஒரு பாகவதரின் சோகம்!

 

உலகப் புகழ்பெற்ற பியானோ கலைஞர் படெரெவ்ஸ்கி (PADEREWSKI) ஒரு நாள் கச்சேரி முடிந்தவுடன் ஸோகம்  ததும்பிய முகத்துடன், மேடைக்குப் பின்னால் போய் அமர்ந்தார். அவருடைய உதவியாளருக்கு மனக் கவலை.

ஐயன்மீர்! உடல்நலம் சரியில்லையா? ஏன் இப்படி முகத்தை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்கள்? என்று வினவினார்.

உடனே படெரெவ்ஸ்கி பதில் கொடுத்தார்?

எனது முக்கிய ரஸிகர்கள் இருவர் இன்று வரவில்லை; அதான் ஒரே கவலை.

அட, இந்த ஊரில் உங்களுக்கு நண்பர்கள் வேறு இருக்கிறார்களா? உங்களுடன் நான் அவர்களை என்றும் பார்த்ததே இல்லை யே என்றார் உதவியாளர்.

 

இது அமெரிக்காவின் தொலைதூர ஒரு ஊரில் நடந்தது.

ஆமாம் எனக்கு இங்கே ரஸிக நண்பர்கள் உண்டு; ஆனால் நானும் அவர்களைச் சந்தித்ததே இல்லையே என்றார்.

உதவியாளருக்கு ஒன்றும் விளங்கவில்லை. நீங்கள் சொல்லுவது ஒன்றும் புரியவில்லையே என்றார்.

உடனே படரெவ்ஸ்கி தொடர்ந்தார்:-

 

20 ஆண்டுக் காலமாக நான் இந்த ஊரில் வந்து வாசிக்கிறேன். ஒவ்வொரு முறையும் நான் வசிக்கும்போது இரண்டாவது வரிசையில் அமர்ந்து நரைத்த தலை முடிய ஒரு  தம்பதியினர் என் வாசிப்பை ரஸிப்பர்; அவர்கள் ரஸிக்கும் விதத்தைப் பார்த்து நான் கூட வாசிப்பேன். அவர்கள் உண்மையான ரஸிகர்கள்; இன்று வரவில்லிலையே! ஏதேனும் எசகு பிஸகாக ஆகியிருக்குமோ என்று சொல்லிவிட்டு  பேசாமடந்தையாகிவிட்டார்

 

மேலும் உணர்ச்சிவசப்பட்டு விட்டார்.

 

(ஒரு பாகவதருக்கு ரஸிகர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பது இதிலிருந்து புரியும்; நான் லண்டனில் நான்கு சங்கங்கள் நடத்திக் கொண்டிருந்த காலத்தில் பிரபல வித்துவான் டி.வி.கோபால கிருஷ்ணனின் (SRI T.V.G) இன்னிசையை ஏற்பாடு செய்திருந்தேன்; திடீரென்று ஏற்பாடு செய்ததால் ஒரு 75 பேருக்கும் குறைவாக ரஸிகர் இருந்தனர். கச்சேரி முடிந்தவுடன் எனக்கோ கவலை; கூட்டம் குறைந்ததற்கு ஏதேனும் சப்பைக்கட்டு காரணம், நொண்டிச் சாக்கு சொல்லுவோம் என்று அவரை மெதுவாக அணுகினேன்.

 

நான் பேசுவதற்கு முன் “எனக்கு இன்று ரொம்ப த்ருப்தி; இப்படிப்பட்ட ஆடியன்ஸுக்கு வாசிப்பதுதான் எனக்குப் பிடிக்கும்” என்றார். மேலும் தொடர்ந்து “இது போல அடிக்கடி ஏற்பாடு செய்யுங்கள்; எனக்கு பணம் முக்கியமில்லை; இப்படிப்பட்ட ரஸிகர்கள்தான் வேண்டும்” என்றார்.

 

எனக்கு வியப்பும் சந்தோஷமும் மேலிட்டாலும் இதன் பின்னனி நன்கு விளங்கியது.  லண்டனில் பல அரங்கேற்றங்கள், கச்சேரிகள் நடக்கும். அதில் வரும் பாதிக் கூட்டத்துக்கு சங்கீத ம் என்றால் அரைக் கிலோ என்ன விலை? என்று கேட்பர். அரங்கேற்றம் செய்யும் மாணவ மாணவியரும் மிலிட்டரி ட்றில் MILITARY DRILL போல அந்த ஆறு பாட்டை மட்டும் உருப்போட்டு வைத்திருப்பர்.

 

 

ஏனைய பாட்டுகளுக்கு பொருள் கேட்டாலோ, ‘ராகம் வராகம், தாளம் வேதாளம், க்ருதி ப்ரக்ருதி’ என்பர்; பெற்றோர்களோவெனில் 10,000 பவுண்ட் கடன் வாங்கி அரங்கேற்றம் நடத்திவிட்டு அதன் பொருள் விளங்காப் புதிராக — குதிராக – நிற்பர்.

 

ஆயினும் எனக்கு சந்தோஷமே; அந்த வீட்டுக் குழந்தைகள் காபரே, கூபரே என்று கிளப்புகளுக்கும் பாப் மியூஸிக் கச்சேரிகளுக்கும் போகாமல்,  ஏதோ இரண்டு தியாகராஜ கிருதிகளையும் புரந்தரதாஸர் கீர்த்தனைகளையும் பாடுகிறதே என்று மகிழ்வேன்.

 

‘ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழி போல இங்கு யார் வேண்டுமானாலும் எந்த ஸ்கூல் வேண்டுமானாலும் நடத்தலாம். யோகா கற்பிக்கும் முக்கால் வாசிப்பேர் வெள்ளைக்காரர்கள்; ஒரு புத்தர் சிலையோ நடராஜர் சிலையோ வீட்டில் வைத்திருப்பர்!

அவர்களும் வாழ்க!

 

TAGS:- சங்கீத விநோதங்கள், ரஸிகர், காசு, படரெவ்ஸ்கி, மயக்கம் போட்ட, பாடகர் பாகவதர்

 

–SUBHAM–

என்னுடைய புத்தாண்டு சபதம்! FACEBOOK LIKES! பேஸ்புக் லைக்ஸ்!

WRITTEN by London Swaminathan 

 

Date: 9 DECEMBER 2017 

 

Time uploaded in London-  7–19 am

 

 

Post No. 4473

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சபதம் ( NEW YEAR RESOLUTION) எடுக்கிறேன்; அது ஜனவரி இரண்டாம் தேதியே காற்றில் பறந்துவிடுகிறது. ஏன் தெரியுமா? நடக்க முடியாத விஷயங்களை நினைப்பதால்தான்! ‘கோபமே வரக்கூடாது; யாரையும் சபிக்கக்கூடாது’ என்று சபதம் எடுத்தேன். நான் வேலை பார்த்த இடத்தில் காரணமே இல்லாமல் எனக்கு எதிராகச் சதி செய்தவர்களைச் சபிப்பதும் வெறுப்பதும் இன்று வரை மனதை விட்டு அகலவில்லை. கோபத்தையும் வெறுப்பையும் வெல்லுவது அப்படி என்ன கிள்ளுக் கீரையா?

அப்படி கோபத்தையும் வெறுப்பையும் வென்று விட்டால் அப்புறம் சங்கராச்சார்யார், பாபா ஆகியோர் படங்களுடன் என் படமும் சுவரில் தொங்குமே! அது நடக்கக் கூடிய காரியம் இல்லை!!!

என் தந்தையைக் காண தினமும் நிறைய பேர் வருவார்கள்; அவர் பத்திரிக்கை ஆசிரியராக இருந்தார். அவர் பெயர் வெ. சந்தானம். மதுரையில் தினமணி பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டிற்கு வந்து செய்திகளைக் கொடுத்து ‘ஸார்! கட்டாயம் நாளைக்கே, கொட்டை எழுத்துக்களில் பெரிய செய்தியாகப் போட்டு விடுங்கள்’ என்பார்கள். என் தந்தை ஒரு புன்சிரிப்பை மட்டும் உதிர்ப்பார். யெஸ் YES என்றோ நோ NO என்றோ சொல்ல மாட்டார்.

 

சில நேரங்களில் நானும் அதை வாங்கிப் பார்ப்பேன், படிப்பேன்; அவருடைய புன் சிரிப்பின் காரணத்தை அறிய! ஒரு முறை அந்தச் செய்தியைப் படித்தவுடன் எனக்கு புன்சிரிப்புக்குப் பதிலாகக் குபீர் சிரிப்பு வந்தது வாய்விட்டுப் பெரிதாகச் சிரித்தேன். என் அப்பாவின் முன்னிலையில் ஒரு காமெண்ட் (COMMENT) டும் அடித்தேன்.

 

“சரியான முட்டாள் பயல்! கங்கை நதி -வைகை நதி  இணைப்பு  சங்கக் கூட்டம்! இது என்ன பைத்தியக்காரத்தனம்? கங்கை நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி ஆகிய நதிகளையே இணைக்க முடியாது. இடையில் பெரிய தக்காண பீடபூமி இருக்கிறது. பூகோளமே தெரியாத பயல் எல்லாம் சங்கம் நடத்துகிறான்” என்றேன்

 

பொதுவாக எங்களிடம் அதிகமாகப் பொது விஷயங்களைக் கதைக்காத என் தந்தை கதைத்தார். சிரித்துக்கொண்டே சொன்னார். அவன் பெயர் குலாம்பாய்; 7 சங்கங்களுக்கு தலைவன்; நல்லவன்; காஷ்மீர் நமதே சங்கம், நடைபாதைக்காரர் கள் சங்கம், சைக்கிள் சவாரி செய்வோர் சங்கம் போன்ற சங்கங்களுடன் கங்கை- வைகை நதி இணைப்பு சங்கமும் வைத்திருக்கிறான். எது நடக்க முடியாதோ அதை லட்சியமாக வைத்து நடத்துவதே அவன் தொழில்; நடக்கக்கூடிய ஒரு லட்சியம் வைத்து இருந்தால் சங்கத்தின் முடிவு நெருங்கிவிடும். கங்கை- வைகை இணைப்பு நடக்க 100 ஆண்டுகள் ஆகலாம்; நடக்காமலும் போகலாம். இதனால் சங்கம் ஆண்டுதோறும் கூடி, ஒரு தீர்மானமாவது நிறை வேற்றலாம் என்று தொடர்ந்தார். என் சிரிப்பு அடங்கியது. மேலும் ஒரு பாடம், தந்தையிடமிருந்து, கற்றேன்.

 

இது போல நடக்கமுடியாத பிரமாண்டமான லட்சியங்களை வைக்கக்கூடாதென்று நினைத்து இந்த ஆண்டு, நடக்கக்கூடிய(?!?!?!) ஒரு ரெஸல்யூஷன் – தீர்மானம் நிறைவேற்றப் போகிறேன்.

புதிய, நடக்கக்கூடிய ஒரு புத்தாண்டு சபதம் எடுக்கப்போகிறேன். அது என்ன? தயவு செய்து யாரும் போட்டிக்கு வராதீர்கள்!

 

பேஸ்புக்கில் FACEBOOK நிறைய பேருக்கு LIKE லைக் போட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதே என் லட்சியம்! ஆனால் எனக்கு நானே ஒரு கட்டுப்பாடு, நிபந்தனையும் போட்டுக்கொள்வேன். கண்ட கண்ட, தோழான் துருத்திக்கெல்லாம்,(TOM DICK AND HARRY)  சகட்டுமேனிக்கு லைக் போட மாட்டேன். அடி மனதின் ஆழத்திலிருந்து, இந்த விஷயம் புதிய விஷயம், இது உன்னத கருத்து, இது உண்மையிலேயே அழகானது என்று என் மனதில் படும்போது மட்டுமே லைக் போடுவேன்.

பொம்பளை படத்துக்கு அதிக லைக்ஸ்!

ஏன் இந்த திடீர் ஆசை? அற்ப ஆசை! என்று கேட்கிறீர்களா? ஷேக்ஸ்பியர் பொன்மொழிகளைப் படித்துக் கொண்டிருந்த போது ஒரு அழகான பொன்மொழி கண்களில் பட்டது.

 

‘சீ! நன்றி சொல்லுவதில்கூட நான் பிச்சைக்காரன்!’ என்று ஹாம்லெட் நாடகத்தில் ஒரு வசனம் வருகிறது.

BEGGAR THAT I AM, I AM EVEN POOR IN THANKS (HAMLET).

 

பேஸ்புக்கில் பலர் LIKE லைக் போடுவதில்கூட பிச்சைக்காரகளாக இருக்கிறார்களே! என்ற நினைப்பு உடனே பளிச்சிட்டது. ஆனால் அவர்கள் தவறாமல், பெண்கள் படங்களுக்கு, அதாவது பெண்கள் (நண்பிகள்) UPLOAD அப்லோட் செய்யும் படத்துத்துக்கு

தவறாமல் லைக் போடுவதையும் பார்க்கிறேன்.

இது என்னடா? புதிய வியாதி!

 

ஆனால் இதைச் சொன்னவுடன் என் போஸ்டு POST களுக்கு எல்லாம் லைக் போட வேண்டும் என்று நான் நினைப்பதாக நீங்கள் நினைத்துவிட மாட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன் (குழப்புகிறேனோ?)

லைக் போடுவதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள் எனக்கும் புரிகிறது. யாராவது ஒருவருக்கு லைக் போட்டால் அந்த ஆள் போடும் வேண்டாத போஸ்டுகளும் நம் கண் முன் தோன்றி நம் கழுத்தை அறுக்கும். வேண்டாத சனியனை விலை கொடுத்து வாங்கிய கதை ஆகிவிடும். வேலியிலே போன ஓணானை ……………………. (UNPARLIAMENTARY WORDS!) விட்டுக்கொண்டு குடையுதே குடையுதே என்று கத்திய கதை ஆகிவிடும்.

 

 

நான் சொல்ல வந்த விஷயங்கள் இரண்டே!

 

  1. புத்தாண்டில் 2018-ல், நான் அதிகம் பேருக்கு லைக் போட்டு பேஸ்புக்கில் முதலிடம் பிடிக்க வேண்டும் (நடைமுறை வாழ்க்கையிலும் இதைச் செய்யலாம்)
  2. நீங்களும் எல்லாருடைய ஒரிஜினல் போஸ்டுகளுக்கும் லைக் போட்டு அவர்களை ஆதரியுங்கள்.

 

  1. பெண்களின் போஸ்டுகளுக்கும், பெண்களின் படங்களுக்கும் லைக் போடுவதை நான் தடுக்கவா முடியும்?

கட்டுரையை முடிப்பதற்கு முன்பாக

ஷேக்ஸ்பியர் உதிர்த்த மேலும் இரண்டு நன்றிப் பொன்மொழிகளை மொழிவேன்.

 

வள்ளுவன் சொன்ன செய்நன்றி அறிதல் பற்றிய பத்துக் குறட்களும் தான் நமக்கு அத்துபடியாயிற்றே! நான் அரைத்த மாவையே அரைக்க விரும்புவதில்லை!

 

இதோ ஷேக்ஸ்பியர்:–

 

சீ நன்றிகெட்ட ஒரு மகன், விஷப்பாம்பின் பல்லை விடக் கொடுமையானவன்! –(கிங் லியர்)

HOW SHARPER THAN A SERPENT’S TOTH IT IS TO HAVE A THANKLESS CHILD (KING LEAR).

 

நான் உன் குரலுக்கு நன்றி சொல்லுகிறேன், நன்றி, என்ன இனிமையான குரல்! – (கொரியோலேனஸ்)

 

I THANK YOU FOR YOUR VOICES, THANK YOU, YOUR MOST SWEET VOICES (CORIOLANUS)

 

பேஸ்புக் வாழ்க! லைக்ஸ் வாழ்க! வாழ்க!!

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை, தோல்வியும் இல்லை-வால்மீகி (Post No.4437)


Written by London Swaminathan 

 

Date: 27 NOVEMBER 2017 

 

Time uploaded in London- 11-55 AM

 

 

Post No. 4437

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

டிசம்பர் மாத (ஹேவிளம்பி- கார்த்திகை/மார்கழி) காலண்டர், 2017

இந்த மாதக் காலண்டரில், 31 அபூர்வ ராமன் இருக்கும் இடத்தில் இடம்  பெறுகின்றன.

 

முக்கிய நாட்கள்:  – டிசம்பர் 2 -கார்த்திகை தீபம்; 3- ஸர்வாலய தீபம், வைகானஸ தீபம், பாஞ்சராத்ர தீபம்; 11-பாரதியார் பிறந்த நாள்; 16- மார்கழி/ தனுர் மாத துவக்கம்; 25-கிறிஸ்துமஸ்; 29-வைகுண்டஏகாதசி;

அமாவாசை – 17; ஏகாதசி – 13, 29; பௌர்ணமி—  3

முகூர்த்த நாட்கள்: 7, 13

 

XXXXXXXXXXXX

டிசம்பர் 1 வெள்ளிக்கிழமை

யத்ர ராமோபயம் நாத்ர நாஸ்தி தத்ர பராபவஹ — வால்மீகீ ராமாயணம் 4-49-15

ராமன் இருக்கும் இடத்தில் பயமும் இல்லை; தோல்வியும் இல்லை

XXXXXX

 

டிசம்பர் 2 சனிக்கிழமை

அமோகோ தேவதானாஞ்ச ப்ரஸாதஹ கிம் ந சாதயேத்?

கடவுளின் கருணை இருந்தால் எது சாத்யமில்லை? –கதாசரித் சாஹரம்

 

XXXXXXX

டிசம்பர் 3 ஞாயிற்றுக்கிழமை

அசிந்தனீயோ மஹிமா பரேசிதுஹு –கஹாவத்ரத்னாகர்

கடவுளின் மஹிமை அளபற்கரியது

XXXXXX

 

டிசம்பர் 4 திங்கட்கிழமை

லோகோ ஹி சர் வோ விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

டிசம்பர் 5 செவ்வாய்க்கிழமை

 

ஈஸ்வராணாம் ஹி விநோதரஸிகம் மனஹ  — கிராதர்ஜுனீய

கடவுளரின் மனது விநோதரசனையில் திளைக்கிறது.

XXXXXX

டிசம்பர் 6 புதன்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 7 வியாழக்கிழமை

ஈஸ்வரார்ப்பித சர்வஸ்வஹ சுகீ சர்வத்ர ஜாயதே

இறைவனிடத்தில் அனைத்தையும் அர்ப்பணிப்பவன் எங்கும் மகிழ்ச்சியுடன் இருப்பான்.

XXXXXX

 

டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை

ந ஹி ஈஸ்வரவ்யாஹ்ருதயஹ கதசித்புஷ்னந்தி லோகே விபரீதமர்தம் – — குமார சம்பவம் 3-63

இந்த உலகில் இறைவனின் சொற்கள் பொய்த்ததில்லை

XXXXXX

 

டிசம்பர் 9 சனிக்கிழமை

தாதுஹு கிம் நாம துர்கதம் –ப்ருஹத்கதாமஞ்சரி

படைத்தவனுக்கு இயலாதது என்ன?

XXXXXX

 

டிசம்பர் 10 ஞாயிற்றுக்கிழமை

ந சந்தி யாதார்த்யவிதஹ பிநாகினஹ –குமார சம்பவம் 5-77

சிவனின் உண்மை நிலையை அறிந்தவர் எவருமிலர்

XXXXXX

டிசம்பர் 11 திங்கட்கிழமை

மதுரவிதுரமிஸ்ராஹா ஸ்ருஷ்டயஹ சம்விதாதுஹு –பிரஸன்ன ராகவ `

இனிப்பையும் கசப்பையும் கலந்தளிப்பவன் இறைவன்

XXXXXX

 

டிசம்பர் 12 செவ்வாய்க்கிழமை

லோகோ ஹி சர்வே விஹிதோ விதாத்ரா –வால்மீகீ ராமாயணம் 4-24-41

பிரம்மா செய்த அச்சுதான் இந்த உலகம்

XXXXXX

 

 

டிசம்பர் 13 புதன்கிழமை

த்வந்த்வாத்மகோஅயம் சம்சாரஹ விதினா நிர்மிதோ அத்புதஹ

பிரம்மாவின் படைப்பில்தான் எத்தனை முரண்பாடுகள்? –கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 14 வியாழக்கிழமை

ந சக்யம் லோகஸ்யாதிஷ்டானபூதம் க்ருதாந்தம் வஞ்சயிதும்— பாலசரித

மரணதேவனை ஏமாற்ற எவராலும் முடியாது. உலகின் ஆதாரமே அவன்தான்

XXXXXX

 

டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை

நாராயணபராஹா  சர்வே ந குதஞ்சன பிப்யதி — பாகவதபுராண 6-17-28

நாராயண பக்தர்கள் அஞ்சுவது யாதொன்றுமில

XXXXXX

டிசம்பர் 16 சனிக்கிழமை

ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்காஸ் ஸுகினோ பவந்து- விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

நாராயணன் என்ற நாமம் கேட்ட உடனே துக்கங்கள் பறந்தோடும்

XXXXXX

டிசம்பர் 17 ஞாயிற்றுக்கிழமை

ப்ரஜாபதேர் விசித்ரோ ஹி ப்ராணிசர்கோ அதிகாதிகஹ——– கதாசரித் சாஹரம்

பிரம்மாவின் படைப்புகள் அற்புதம், அதி அற்புதம்!

XXXXXX

 

டிசம்பர் 18 திங்கட்கிழமை

நித்யம்ப்ரயதமனானாம் சஹாயஹ பரமேஸ்வரஹ

கடமையைச் செய்பவனின் வலதுகை ஆண்டவன்

XXXXXX

டிசம்பர் 19 செவ்வாய்க்கிழமை

பதஹ ச்ருதேர்தர்ஸயிதார ஈஸ்வரா மலீமசாமாத்ததேந பத்ததீம்

 

குறுக்கு புத்தி கொண்டவர்களின் சதிகளை இறைவன் மூடிமறைப்பதில்லை அவர்களே,  வேதம் சொல்லும் அறவழிப்பாதையில் செல்லக் கட்டளையிடுபவர்கள் –காளிதாஸரின்  ரகுவம்சம் 3-46

 

XXXXXX

டிசம்பர் 20 புதன்கிழமை

 

ப்ராஜானாம் தைவதம் ராஜா பிதரௌ தைவதம் சதாம்-

ராமாயண மஞ்சரி

மக்களுக்கு தெய்வம் போன்றவர் ராஜா;  நல்லோருக்கு தெய்வம் போன்றவர் அவரவர் பெற்றோர்.

XXXXXX

டிசம்பர் 21 வியாழக்கிழமை

 

ப்ரசன்னே ஹி கிம் ப்ராப்யமஸ்தீஹ பரமேஸ்வரே

ஆண்டவன் மகிழ்ந்தால், நாம் அடைய முடியாததுதான் என்ன? —–கதாசரித் சாஹரம்

XXXXXX

 

டிசம்பர் 22 வெள்ளிக்கிழமை

விஷமப்யம்ருதம்கஸ்சித்பவேதம்ருதம் வாவிஷ்மீஸ்வரேச்சயா– காளிதாஸரின்  ரகுவம்சம் 8-46

ஆண்டவன் நினைத்தால் விஷம் அமுதமாக மாறும்; அமுதம், விஷமாக மாறும்

XXXXXX

டிசம்பர் 23 சனிக்கிழமை

அஹம் த்யாகி ஹரிம் லபேத்

அஹம்காரத்தை விட்டவன் கடவுளை அடைவான் -கஹாவத்ரத்னாகர்

XXXXXX

 

டிசம்பர் 24 ஞாயிற்றுக்கிழமை

வ்யாதிஸ்யதே பூதரதாமவேக்ஷ்ய க்ருஷ்ணேன தேஹோத்தரணாய சேஷஹ —-குமார சம்பவம்  3-13

ஆதி சேஷன் எனும் பாம்பு பூமியையே தாங்குவதைப் பார்த்த கிருஷ்ணன், அதைத் தனக்கு மெத்தையாகப் போட்டுக்கொண்டான்

XXXXXX

 

டிசம்பர் 25 திங்கட்கிழமை

சுதுஷ்கரமபி கார்யம் ஸித்யத்யனுக்ரஹவதீஷ்விஹ தேவதாசு -கதாசரித் சாஹரம்

ஆண்டவன் அருள் இருந்தால் நடக்கமுடியாத செயல்களும் நடந்துவிடும்

XXXXXX

 

டிசம்பர் 26 செவ்வாய்க்கிழமை

சுசிகாமா ஹி தேவதாஹா—– பாரதமஞ்சரி 3-32

சுத்தம் விஷயத்தில் தெய்வங்கள் மிகவும் அலட்டிக்கொள்ளும்

XXXXXX

 

 

டிசம்பர் 27 புதன்கிழமை

ஸ்வல்பகாரணமாஸ்ரித்ய விராட் கர்ம க்ருதம் மஹத் – கஹாவத்ரத்னாகர்

சொல்பத்தைக் கொண்டு மஹத்தானவைகளைப் படைத்துவிட்டார் பிரம்மா

XXXXXX

 

டிசம்பர் 28 வியாழக்கிழமை

தேவோ துர்பலதாதகஹ —– சுபாஷித ரத்ன பாண்டாகார 3-136

பலவீனமானவருக்கு இறைவன் உதவமாட்டான்

XXXXXX

 

டிசம்பர் 29 வெள்ளிக்கிழமை

 

கோ தேவதா ரஹஸ்யானி தர்கயிஷ்யதி

இறைவனின் லீலைகளை அறிபவர் யார் ?—— விக்ரமோர்வஸீயம்

XXXXXX

 

டிசம்பர் 30 சனிக்கிழமை

சர்வதா சத்ருசயோகேஷு நிபுணஹ கலு ப்ரஜாபதிஹி – பாததாதிதக 115-2

ஒருமித்த கருத்துடையோரை ஒன்று சேர்ப்பதில் இறைவன் திறமைசாலி

XXXXXX

டிசம்பர் 31  ஞாயிற்றுக்கிழமை

ஸர்வதேவ நமஸ்காரஹ கேசவம் ப்ரதிகச்சதி

நாம் செய்யும் எல்லா நமஸ்காரங்களும் கேசவனை அடைகிறது

 

First January MONDAY 2018,  Happy New Year

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விதுரர் கூறும் விதுர நீதி – 6 (Post No.4346)

Written by S.NAGARAJAN

 

 

Date: 29 October 2017

 

Time uploaded in London- 4-51 am

 

 

Post No. 4346

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

மஹாபாரதச் செல்வம்

விதுரர் கூறும் விதுர நீதி – 6

 

ச.நாகராஜன்

இதுவரை எண்கள் ரீதியாக நீதிகளைச் சொல்லி வந்த விதுரர் திருதராஷ்டிரனுக்கு இதர நீதிகளையும் கூறுகிறார்.

அவற்றில் சில:

சுகமாக இருப்பவன்

எவன் ஒருவன் வீட்டை விட்டுப் பயனில்லாமல் அயல் தேசம் செல்வதையும், பாவிகளுடைய சேர்க்கையையும்,பிறர் மனைவியைச் சேர்தலையும்,டம்பத்தையும், திருட்டையும், கோள் சொல்லுவதையும், மதுபானத்தையும் செய்யவில்லையோ அவன் எப்பொழுதும் சுகியாக இருப்பான்.

 

மூடனில்லாதவன் யார்?

 

மூடனில்லாதவன் தர்மார்த்தகாமங்களைப் படபடப்பாக ஆரம்பிக்க மாட்டான்.

அழைத்துக் கேட்கப்பட்டால் உண்மையையே சொல்லுவான்.

நண்பன் விஷயத்தில் விவாதத்தை விரும்பமாட்டான்.

பூஜிக்கப்படாவிட்டாலும் கோபிக்கமாட்டான்.

 

எங்கும் புகழ்ச்சியை அடைபவன் யார்?

 

எவன் பொறாமைப் படுவதில்லையோ,

எவன் தயை செய்கிறானோ,

பலமில்லாமல் இருக்கும் போது விரோதத்தைச் செய்வதில்லையோ,

ஒன்றையும் அதிகமாகச் சொல்லுவதில்லையோ,

விவாதத்தைப் பொறுத்துக் கொள்கிறானோ,

அப்படிப்பட்டவன் எப்பொழுதும் புகழ்ச்சியை அடைகிறான்.

 

எவன் ஒருவன் அனைவருக்கும் பிரியமானவனாகிறான்?

 

எவன் ஒரு பொழுதும் கர்வத்தைக் காட்டும் வேஷத்தைச் செய்து கொள்ளுகிறதில்லையோ,

ஆண்தன்மையால் (பௌருஷத்தால்) பிறரிடம் தற்புகழ்ச்சி செய்துகொள்கிறதில்லையோ.

மிஞ்சினவனாகச் சிறிதும் கடுமையாக வார்த்தைகளைப் பேசுகிறதில்லையோ,

அவனை மற்ற மனிதன் எப்பொழுதும் பிரியமானவனாகச் செய்கிறான், அல்லவா!

 

ஆரியர்களின் சுபாவம் என்ன?

சமாதானம் அடைந்த சண்டையை மீண்டும் கிளப்பமாட்டான்.

கர்வத்தை அடையான்.

எப்பொழுதும் பொறுமையாக இருப்பான்.

வறுமையை அடைந்து ஏழையாகி விட்ட காரணத்தால் செய்யத் தகாததைச் செய்யமாட்டான்.

தனக்கு சுகம் ஏற்பட்டாலும் அதிகமாக மகிழ்ச்சி அடைய மாட்டான்.

பிறருக்கு துக்கம் ஏற்பட்டபொழுதும்  மகிழ்ச்சி அடைய மாட்டான்.

கொடுத்து விட்டுப் பின்பு வருத்தப்பட மாட்டான்.

இவனே நல்ல மனிதன். இவனே புகழத் தக்க ஒழுக்கமுடையவன்.

இதுவே ஆரியர்களின் சுபாவம்.

 

முன்னுக்கு வருபவன் யார்?

தேசாசாரங்களையும், அங்குள்ள கொள்கைகளையும், ஜாதிகளின் தர்மங்களையும் அறிந்தவனும்,

ஏற்றத்தாழ்வை அறிந்தவனுமாக இருப்பவன் முன்னுக்கு வருகிறான். அவன் எங்கே போனாலும் சென்ற இடத்தில் உள்ள மக்களால் ஏற்கப்பட்டவனாகி அந்த மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாகிறான்.

 

சிறந்தவன் யார்?

டம்பத்தையும், மோகத்தையும், பொறாமையையும், பாவச் செயலையும், ராஜ த்வேஷத்தையும், கோள் சொல்லுவதையும், மக்கள் கூட்டத்தோடு பகைத்தலையும், மதங்கொண்டவர்கள், பித்தர்கள், தீயமக்கள் ஆகியோருடன் பேச்சையும் தள்ளுகிறானோ அந்தப் பேரறிவாளனே சிறந்தவன்.

 

தேவதைகள் யாருக்கு அனுக்ரஹம் செய்கிறார்கள்?

எவன் அடக்கம், சுத்தி,  தெய்வ கர்மம். மங்கள காரியங்கள், பிராயச்சித்தங்கள், பலவிதமான உலக வியவகாரங்கள்  ஆகிய இவற்றைத் தினமும் செய்கிறானோ அவனுக்குத் தேவதைகள் மென்மேலும் வளத்தை (விருத்தியை) தருகிறார்கள்.

வித்வானுடைய நீதி எப்போது நன்றாகச் செய்யப்பட்டதாகிறது?

சமமானவர்களுடன் விவாஹம் செய்கிறவன்

இழிவானவர்களுடன் விவாஹத்தைச் செய்யாதவன்

சமமாக உள்ளவர்களுடன் நட்பு கொண்டு, உணவு, உரையாடல் ஆகியவற்றைச் செய்கிறவன்,

குணங்களால் சிறந்தவர்களைக் கௌரவிக்கிறவன்

ஆகிய இந்த வித்வானுடைய நீதிகள் நன்றாகச் செய்யப்பட்டதாகிறது.

 

அனர்த்தங்கள் யாரை விட்டு விலகுகின்றன?

தன்னை அண்டி வருவோர்க்கு பகுத்துக் கொடுத்து விட்டு மிதமாக உண்ணுபவனும்,

அளவற்ற காரியத்தைச் செய்து விட்டு மிதமாக உறங்குபவனும்,

யாசிக்கப்படாமல் பகைவர்களுக்குத் தானம் செய்பவனும்,

நல்ல மனம் உடையவனாயிருப்பவனை விட்டு

அனர்த்தங்கள் விலகுகின்றன.

 

தேஜஸில் சூரியன் போல விளங்குபவன் யார்?

எவனுடைய செய்ய விருப்பப்பட்ட காரியத்தையும்,

மாறாகச் செய்யப்பட்ட காரியத்தையும் இதர மக்கள் சிறிதும் அறிகிறதில்லையோ அவனுடைய ஆலோசனை ரகசியமாகவும் நன்றாக அனுஷ்டிக்கப்பட்டதாகவும் இருந்தால் அவனுக்கு ஒரு காரியமும் நழுவுவதில்லை.

எல்லாப் பிராணிகள் விஷயத்திலும் அமைதியில் செல்பவனும், உண்மையுள்ளவனும், மிருதுவான சுபாவம் உள்ளவனும், தக்கவர்களை நன்கு மதிப்பவனும் சுத்தமான் எண்ணமும் உடையவனுமாயிருக்கிறவனும் ஆன இவன்

ஞாதிகளின் நடுவில், நல்ல ஜாதியில் உண்டானதும் தெளிவுள்ளதுமான பெரிய ரத்தினம் போல அதிகமாக அறியப்படுகிறான்.

எந்த மனிதன் தானாகவே செய்யக் கூடாத காரியங்களில் லஜ்ஜை (வெட்கம்) அடைகிறானோ அவன் எல்லா உலகத்திற்கும் குருவாக ஆகிறான்.

தவிரவும் அளவற்ற தேஜஸுடையவனும் நல்ல மனமுடையவனும் சித்தம் நிலை பெற்றவனுமாகிறான்.

அவன் தேஜஸினால் சூரியன் போல விளங்குகிறான்.

 

இப்படி விரிவாக நீதி தர்மத்தை விளக்கிய விதுரர் திருதராஷ்டிரனிடம்  பாண்டவர்களுக்கு உரிய ராஜ்யத்தை வழங்கி விடுமாறு அறிவுரை கூறுகிறார்.

இத்துடன் உத்யோக பர்வத்தில் உப பர்வமாக விளங்கும் ப்ரஜாகர பர்வத்தில் முப்பத்துமூன்றாவது அத்தியாயம் முடிகிறது.

இதைத் தொடர்ந்து விதுரர் தனது உரையாடலில் மேற்கொண்டு பல நீதிகளையும் விளக்குகிறார்.

அவற்றை மஹாபாரதத்தில் படித்து மகிழலாம்; கடைப்பிடித்து வாழலாம்; மேன்மையுற்றுச் சிறக்கலாம்; தேவதைகளின் அனுக்ரஹத்தையும் பெறலாம்.

இந்தத் தொடர் இத்துடன் முற்றும்

***

 

விதுரர் கூறும் விதுர நீதி – 5

Written by S.NAGARAJAN

 

 

Date:16 October 2017

 

Time uploaded in London- 7–29 am

 

 

Post No. 4305

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

 

மஹாபாரதச் செல்வம்

விதுரர் கூறும் விதுர நீதி – 5

 

ச.நாகராஜன்

 

7

பெண்களிடம் அதிக மோகம்

சூதாட்டம்

வேட்டையாடுதல்

குடி

கடுஞ்சொல்

கொடிய தண்டனை

வீண் செலவு

இந்த ஏழையும் அரசன் விலக்க வேண்டும்.

(மற்றவர்களும் இதை விலக்க வேண்டும் என்பது உள்ளடங்கிய பொருள்)

8
வலியச் சென்று பிராமணர்களைத் திட்டுதல்,வெறுத்தல்

பிராமணர்களால் விரோதிக்கப்படுதல்

பிராமணர்களின் பொருளைக் கவர்தல்

பிராமணர்களைக் கொல்ல விரும்புதல்

பிராமணர்களைத் திட்டுவதில் மகிழ்ச்சி அடைதல்

பிராமணர்களைப் புகழும் போது துக்கமடைதல்

செய்ய வேண்டிய காரியங்களில் அவர்களை நினைக்காமல் இருத்தல்

அவர்கள் யாசிக்கும் போது பொறாமை அடைதல்

ஆகிய் எட்டும் ஒரு மனிதன் அடையும் நரகத்திற்கு முன் அறிகுறிகள்.

அறிவுடைய மனிதன் இந்த எட்டு வித தோஷங்களையும் நீக்க வேண்டும்.

*

 

நண்பர்களுடைய சேர்க்கை

அதிகமான பண வரவு

தனது பிள்ளை தன்னைத் தழுவிக் கொள்ளுதல்

தம்பதிகள் ஒற்றுமையுடன் இன்பம் அனுபவித்தல்

சரியான சமயத்தில் பிரியமான சல்லாபம்

தன்னுடைய கூட்டத்தார்களுடைய மேன்மை

நினைத்த பொருளை அடைதல்

ஜன சமூகத்தில் மரியாதை

இந்த எட்டும் மகிழ்ச்சிக்கு வெண்ணெய் போன்றவனவாகக் காணப்படுகின்றன.

*

அறிவு

நற்குடிப் பிறப்பு

அடக்கம்

கல்வி

பாராக்கிரமம்

மிதமான வார்த்தை

சக்திக்குத் தக்கபடி தானம்

செய்ந்நன்றி அறிதல்

ஆகிய எட்டும் குணங்களும் மனிதனை பிரகாசிக்கச் செய்கின்றன.

 

9

 

ஒன்பது துவாரங்களை உடையதும்

வாதம், பித்தம், கபம் என்ற மூன்றையும் தூணாக உடையதும்

சப்தம் முதலிய ஐந்து சாட்சிகளுடன் கூடியதும்

ஜீவன் வசிக்கின்றதுமான இந்த உடல் ஆகிய வீட்டின் தத்துவத்தை எவன் ஒருவன் அறிகிறானோ

அவனே சிறந்த அறிவாளி.

 

10

 

பத்துப் பேர்கள் தர்மத்தை அறிகிறதில்லை.

ஓ! திருதாக்ஷ்டிரனே! அவர்கள் யார் என்பதைத் தெர்நிது கொள்ளும்.

கள் குடித்தவன்

அஜாக்கிரதை உடையவன்

பைத்தியம் பிடித்தவன்

களைப்புற்றவன்

கோபக்காரன்

பசியுள்ளவன்

அவசரப்படுகின்றவன்

கஞ்சன்

பயங்கொண்டவன்

காமவெறி பிடித்தவன்

ஆகிய பத்து பேரும் தர்மத்தை அறியார். ஆகையால் பண்டிதனானவன் இந்த விஷயங்களில் விழக் கூடாது.

 

****

விதுரர் கூறும் விதுர நீதி – 2 (Post No.4225)

Written by S.NAGARAJAN

 

Date: 19 September 2017

 

Time uploaded in London- 5-13 am

 

Post No. 4225

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

விதுரர் கூறும் விதுர நீதி – 2

 

ச.நாகராஜன்

 

திருதராஷ்டிர மன்னனுக்கு விதுரர் கூறும் நீதிகள் உலகம் முழுமைக்கும் பொதுவானவை.

ஒன்று ஒன்றாகவும் இரண்டு இரண்டாகவும்  மூன்று மூன்றாகவும் இப்படி எண்ணிக்கை அடிப்படையில் சுலபமாக நினைவில் இருக்கும்படியாக ஒழுக்க விதிகளை அவர் தருவது வியக்கத்தக்க விதத்தில் அமைந்துள்ளது.

ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில் வரும் நீதிகளை மட்டும் கீழே காண்லாம்.

(விதுர நீதி முழுவதையும் உத்யோக பர்வம், ப்ரஜாகர உப பர்வம்,முப்பத்துமூன்றாவது அத்தியாயம் (ம.வீ. ராமானுஜாசாரியார் பதிப்பில் படித்து மகிழலாம்.)

1

ருசியான பதார்த்தத்தை ஒருவனாகப் புசிக்கக் கூடாது.

 

தனி ஒருவனாக ஒருவன் விஷயங்களை ஆலோசிக்கக் கூடாது.

 

தனி ஒருவனாக வழி போகக் கூடாது.

 

தூங்குகிறவர்களின் நடுவில் ஒருவனாக விழித்திருக்கக் கூடாது.

 

சத்தியமானது சமுத்திரத்திற்கு ஓடம் போல சுவர்க்கத்திற்குப் படியாக இருக்கிறது.

 

பொறுமையானது பெரிய பலம். சக்தியற்றவர்களுக்கு பொறுமையானது குணமாகின்றது. சக்தி படைத்தவர்களுக்கோ அது அலங்காரம்.

 

தர்மம் ஒன்றே சிறந்ததான நன்மை.

 

பொறுமை ஒன்றே உத்தமமான சாந்தி.

 

வித்தை ஒன்றே மேலான திருப்தி.

 

அஹிம்சை ஒன்றே சுகத்தைக் கொடுக்கிறது.

 

 

2

எதிரிகளிடம் விரோதம் காட்டாத அரசன்,

தீர்த்த யாத்திரை போகாத அந்தணன்

இவ்விருவர்களையும் பாம்பானது எலிகளைத் தின்பது போல

பூமியானது தின்று விடுகிறது.

 

கடுமையாக ஒரு வார்த்தையையும் பேசாமல் இருத்தல்

துஷ்டர்களைக் கொண்டாடாமல் இருத்தல்

இவ்விரண்டையும் செய்பவன் உலகில் நன்கு விளங்குவான்.

 

பணமில்லாதவனின் ஆசையும்

சக்தியில்லாதவனுடைய கோபமும்

கூர்மையான சரீரத்தைத் துன்புறுத்தும் இரு முள்கள்.

 

செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் இல்லறத்தான்,

எப்பொழுதும் பல காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் சந்யாசி

ஆகிய இருவரும் இப்படிப்பட்ட விபரீதமான மாறுபட்ட செய்கைகளைச் செய்வதால் விளக்கம் அடைய மாட்டார்கள்.

 

ச்க்தி உடையவனாக இருந்தும் பொறுமையாக இருப்பவன்

தரித்திரனாக இருந்தாலும் தானம் செய்பவன்

ஆகிய இருவரும் சுவர்க்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள்.

 

நியாயமாக சம்பாதிக்கப்பட்ட பொருளைத் த்குதியல்லாதவனுக்குக் கொடுப்பதும்,

நல்லவனுக்குக் கொடுக்காமல் இருப்பதும் அடாத செயல்களாகும்.

 

தானம் செய்யாத தனவானும்

தவம் புரியாத ஏழையும் ஆகிய இவ்விருவரையும்

கழுத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் ஆழ்த்த வேண்டும்.

 

 

3

பிறர் பொருளைக் கவர்தல்

பிறர் மனைவியை நேசித்தல்

நல்ல எண்ணம் கொண்ட நண்பர்களைத் துறத்தல்

ஆகிய மூன்ரும் நாசத்தைத் தரும்.

 

நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள்.

அவை தான் காமம், குரோதம், லோபம் என்பன.

இவை ஆன்ம நாசத்திற்குக் காரணமானவை.விலக்கப்பட வேண்டியவை.

விதுர நீதி தொடரும்

***

ஆராய்ச்சி என்றால் என்ன? பல்கலைக்கழக அறிஞர் விளக்கம் (Post No.4075)

Written by London Swaminathan
Date: 12 July 2017
Time uploaded in London- 19-22
Post No. 4075

 
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

அமெரிக்காவில் உள்ளது கொலம்பியா பல்கலைக் கழகம். இதன் தலைவராக நிகலஸ் மர்ரே பட்லர் (Nicholas Murray Butler) இருந்தார். அவர் பெரிய அறிஞர்; நோபல் பரிசு வென்றவர். கல்வியாளர்.

 

அவரும் , அதே பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பிராண்டர் மாத்யூவும் (Brander Mathews) பேசிக்கொண்டிருந்தனர். இருவரும் இலக்கியக் கொள்ளை (Plagiarism) என்றால் என்ன என்று விவாதித்தனர். பிராண்டர், தான் எழுதிய கட்டுரையை மேற்கோள்காட்டி விளக்கினார்.

 

யாராவது ஒருவர் ஒரு விஷயத்தை முதல் தடவை சொன்னால் அதுதான் ஒரிஜினல் (originality);

அதுதான் ஆதி; சுயமான சிந்தனை.

அதையே ஒருவர் இரண்டாவது தடவை சொன்னால் அது இலக்கியக் கொள்ளை- Plagiarism

(பேஸ்புக்கில் பலரும் செய்வது)

மூன்றாவது முறை அதையே ஒருவர் சொன்னால் அவருக்கு சுயமாக சிந்திக்கும் ஆற்றலே இல்லை (Lack of Originality) என்று பொருள்.

அதையே நாலாவது முறை யாராவது சொன்னால், அது ஏதோ ஒரே மூலத்திலிருந்து (drawing from a common source) தோன்றியது என்று பொருள்.

 

இப்படி அவர் சொல்லிக் கொண்டே இருக்கையில் பட்லர் குறுக்கிட்டார், “அதையே யாரவது ஐந்தாவது முறை சொன்னால் அதன் பெயர் ஆராய்ச்சி! (Research)

 

எவ்வளவு உண்மை!

xxx

 

சொல் கஞ்சன்!

 

அமெரிக்க ஜனாதிபதி கூலிட்ஜ் (President Coolidge)பயங்கரமான கஞ்சன்; அதாவது சொல் கஞ்சன்; பெரிய சந்திப்புகளிலும், பொது விருந்துகளிலும் பேசா மடந்தையாக இருப்பார். அப்படியே பேசினாலும் இரண்டு, மூன்று சொற்களே வாயிலிருந்து வரும்; அதுவும் பெரிய அறிவாளி பேசுவது போல இருக்காது!

 

அமெரிக்காவின் புகழ்மிகு பெண் கவிஞர் எமிலி டிக்கின்ஸன் (Emily Dickinson). அவருடைய வீடு ஆமெர்ஸ்ட்(Amherst) எனும் இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தை ஒரு கண்காட்சியாக மாற்றி அவருடைய ஒரிஜினல் படைப்புகள், நினைவுப் பொருட்களை வைத்துள்ளனர். அதற்கு கூலிட்ஜ் விஜயம் செய்தார். ஒரு நாட்டின் ஜனாதிபதியே வருகிறார் என்பதால், பொது மக்கள் தொட முடியத பொருட்களை எல்லாம் தொட்டுப் பார்க்க அவரை அனுமதித்தனர்.

 

யாருக்கும் காட்டாத புலவருடைய நினைவுப் பொருட்களை எல்லாம் காட்டினர் கண்காட்சி அதிகாரிகள்.

 

அவரும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்தார். வாயே திறக்காமல்!

 

இவருடைய ஆர்வத்தைக் கண்ட அதிகாரிகள் ஒரு அரிய பொக்கிஷப் பெட்டியைத் திறந்து இவைதான் அவர் கைப்பட எழுதிய கவிதைகள் என்று காட்டினர். அவருடைய கண்கள் அகல விரிந்தன. புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

கடைசியில் இரண்டே சொற்கள் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அவர் சொன்னது என்ன தெரியுமா?

“பேனாவால் எழுதினாரா, ஹூம்; நான் டிக்டேட் செய்வேன்” (சொல்லச் சொல்ல வேறு ஒருவர் எழுதுவது டிக்டேசன்)

 

சொல் தச்சர்கள் தமிழிலும் சஸ்கிருதத்திலும் உண்டு; நல்ல வேளை, சொல் கஞ்சர்கள் கிடையாது!

–சுபம்–

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்! (Post No.4067)

Written by S NAGARAJAN

 

Date: 10 July 2017

 

Time uploaded in London:- 5-22 am

 

 

Post No.4067

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

 

பிராத்தனை இரகசியம்

அருணகிரிநாதரும் மகாத்மா காந்திஜியும்!

ச.நாகராஜன்

 

பிரார்த்தனையில் மகான்களும் ரிஷிகளும் வேண்டுகின்ற பான்மையே தனி. ஆகவே தான் அவர்களுடைய பிரார்த்தனையையே நாம் சொல்லி உய்ய வழி தேடுகிறோம். புதிதாகச் சொற்களைக் கோர்த்து நாம் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியமே இல்லை.

 

அருணகிரிநாதரின் திருப்புகழ் இந்த வகையில் ஒரு தனித் தன்மை கொண்டதாக இலங்குகிறது.

எடுத்துக்காட்டாக இரு இடங்களில் வரும் இரண்டிரண்டான பிரார்த்தனை வேண்டுகோளை இங்கு பார்க்கலாம்.

 

 “மதியால் வித்தகனாகி

மனதால் உத்தமனாகி” (கருவூரில் பாடியது – மதியால் வித்தகனாகி எனத் தொடங்கும் பாடல்)

 

இருக்க வரம் வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

மதியால் ஒருவன் வித்தகன். ஆனால் அவன் உத்தமன் இல்லை. மகா புத்திசாலித்தனத்தை ஊரை ஏய்ப்பதில் பயன்படுத்தி என்ன பிரயோஜனம்?

 

மனதால் ஒருவன் உத்தமன். ஆனால் சாமர்த்தியசாலி இல்லை. ஊரார் எல்லோரும் அவன் மேல் “குதிரை ஏற”த்தானே செய்வர்.

 

ஆகவே மனதால் உத்தமனாக இருக்கும் ஒருவன் மதியால் வித்தகனாக இருந்தால் தான் அவனும் செழிப்பான். ஊரும் செழிக்கும்.

 

அற்புதமான இந்த இரட்டை வேண்டுகோளை அருணகிரிநாதர் முன் வைக்கிறார்.

 

நானும் வாழ வேண்டும்; நான் சார்ந்திருக்கும்ச் சமுதாயமும் வாழ வேண்டும் என்ற அற்புதமான இந்தக் கொள்கையை என்ன ‘இஸம்’ என்று பிராண்ட் செய்வது.

 

கம்யூனிஸம். சோஷலிஸம் என்று பல இஸங்களைச் சொன்னாலும் அருணகிரிநாதரிஸம் முன்னால் எடுபடுமா, என்ன?

இன்னொரு இடத்தைப் பார்ப்போம்.

“அறிவால் அறிந்து உன்

இரு தாள் இறைஞ்சும்”

அடியார் இடைஞ்சல் களைவோனே

என இப்படி முருகனின் அருள் திறத்தைப் பாடுகிறார். (திருச்செந்தூரில் பாடியது – விறல்மாரனைந்து எனத் தொடங்கும் பாடல்)

 

அறிவால் அறிந்து முருகன் இருதாள் இறைஞ்சும் படியான வாழ்க்கை தர வரம் வேண்டுகிறார் அவர்.

 

ஒருவன் மிகப் பெரிய விஞ்ஞானி. அவன் அறிவால் ஆராயாத விஷயமே இல்லை. ஆனால் அவனுக்கு இறைவன் என்ற மஹாசக்தியின் மீது நம்பிக்கை இல்லை. அவன் இருந்து என்ன பிரயோஜனம். அவன் இருந்தும் இறந்தவனே!

 

 

இன்னொருவன் சதா இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கிறான். ஒரு நாள் நிச்சயம் அவன் இறைவன் அருளால் உய்வைப் பெறுவான். ஆனால் மஹாசக்தியின் உண்மையை அவன் அறிந்து கொண்டால், அந்த அறிவின் அடிப்படையில் தன் பிரார்த்தனையை அவன் புரிந்தால் அவனுக்கு ‘இன்ஸ்டண்ட்  அருள்’ அல்லவா கிடைக்கும்?!

இதைத் தான் அருணகிரிநாதர் விரும்புகிறார்.

இறைவன் தந்த அறிவு அவனை அறிவதற்கே.

 

 

கற்றதனால் ஆய பயன் என்கொல்?

வாலறிவன் நற்றாள் தொழார் எனின் (வள்ளுவரின் குறள்)

 

 

இப்படி இரண்டிரண்டாக அவர் வேண்டுவதைத் திருப்புகழ் நெடுகக் காணலாம்.

 

ஆகவே தான் அந்த அருளாளரின் திருப்புகழைப் பாடினால் அனைத்தும் நமக்குச் சேரும் என்று பெரியோர்கள் சொன்னார்கள்.

 

மகாத்மா காந்திஜி கூட மிக மோசமான பாவங்களைப் பட்டியலிட்ட போது இப்படி இரு விஷயங்களை இணைத்தே பட்டியலிட்டார்.

அந்த ஏழு பாவங்கள்:

 

உழைக்காமல் வரும் ஊதியம்

Wealth without Work

மனசாட்சி இல்லாத இன்பம்

Pleasure without Conscience

ஒழுக்கம் இல்லாத அறிவு

Knowledge without Character

அறப்பண்பு இல்லாத வாணிபம்

Commerce without Morality

 

மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞானம் Science without Humanity

தியாகம் இல்லாத மதம்

Religion without Sacrifice

கொள்கை இல்லாத அரசியல்

Politics without Principle

 

இந்த ஏழு பாவங்களை விலக்கிய சமுதாயம் மேன்மையுறும்.

 

பெரியோர்கள், அருளாளர்கள், மகான்களின் வாக்குகளில் எவ்வளவு ஆழமான பொருள் பொதிந்திருக்கிறது என்பதை எண்ணும் போது மனம் உவகையுறுகிறது.

அவர்கள் கூறிய தேவார, திருவாசக, நாலாயிர திவ்யபிரபந்தங்களே, வேத மந்திரங்களே, உபநிடதங்களே நமக்குப் போதும். புதிதாக ஒன்றையும் புனைந்து பிரார்த்தனை செய்ய அவசியமில்லை என்று ஆகிறது.

 

 

ஆயிரக்கணக்கான நாமாவளிகள், பாடல்கள், தோத்திரங்கள், மந்திரங்கள் உள்ளன.

நமக்கு உகந்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அறிவையும் பக்தியையும் இணைத்தவர்களாக ஆவோம்!

அவர்களின் பிரார்த்தனைகளை வாயால் ஓதி மனதால் இருத்தி முன்னேறுவோமாக!

***

 

 

டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகள் (Post No.4052)

Written by S NAGARAJAN

 

Date: 5 July 2017

 

Time uploaded in London:-  4-37 am

 

 

Post No.4052

 

 

Pictures are taken from different sources such as Face book, Wikipedia, Newspapers etc; thanks. 

 

 

தெயவ தேசம்

 

க்ராண்ட் கான்யான் அனுபவமும் டாக்ஸி டிரைவர் தந்த வைர நகைகளும்!

 

ச.நாகராஜன்

சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து குடும்பத்தினர் அனைவரும் விமானம், ரெயில், கார் ஆகியவற்றின் மூலம் நீண்ட ஒரு நெடும் பயணம் மேற்கொண்டோம்.

 

நியூயார்க், நியூஜெர்ஸி, அரிஜோனா, வாஷிங்டன் என்று கலக்கலான ஒரு பயணம்

 

அதில் க்ராண்ட் கான்யானும் ஒன்று. எது எப்படியோ போகட்டும், ஐஸ்வர்யா ராய் க்ராண்ட் கான்யான் பாறையில் ஆடியதை நினைவு கூர்ந்து அந்தப் பாறையைப் பார்த்து ஜென்ம சாபல்யம் பெற்றனர் குடும்பத்தினர்.

 

வியூ பாயிண்ட் என்று ஆங்காங்கே காட்சிகளைப் பார்ப்பதற்கு உரிய இடத்தைத் தேர்ந்தெடுத்து போர்டு மாட்டி வைப்பது அமெரிக்காவில் ஒரு நல்ல பழக்கம்.

 

ஒரு வியூ பாயிண்டில் க்ராண்ட் கான்யான் தரிசனத்தை முடித்துக் கொண்டோம். ஏராளமான போட்டோக்கள் எடுக்கப்பட்டன. மகன், மருமகள், மனைவி என்று ஆளுக்கொரு கேமரா. ஒரு மொபைல் போன். அமெரிக்காவில் வாங்கிய விலை மதிப்புள்ள ஒரு அதி நவீன வீடியோ கேமரா.

இவை அனைத்திலும் போட்டோக்கள்- போட்டோக்கள்- போட்டோக்கள்.

 

வியூ பாயிண்டில் ஏராளமான கூட்டம். ஆளாளுக்கு போட்டோ எடுத்துக் கொண்டே இருந்ததால் சமயம் பார்த்துத் தான் போட்டோக்களை எடுக்க முடிந்தது. இங்கும் அங்குமாக ஓடி ஓடி ஷூட்டிங் ஒரு வழியாக முடிந்தது.

 

நேரத்தில் குறியாக இருந்த நான் போதும் போகலாம் என்ற எச்சரிக்கை குரலை Nth  டைமாகக் கொடுத்து அனைவரையும் நகர்த்தி காரில் அமர்த்தினேன்.

 

கார் புறப்பட்டது. ஒரு அரை மணி நேரம் ஆகி இருக்கும். எல்லோருடைய கேமராக்கள்,மொபைல் போன்கள், வீடியோ கேமரா எல்லாம் பத்திரமாக காருக்கு வந்ததா என்று கேட்டேன்.

ஷாக்!

 

வீடியோ கேமராவைத் தவிர அனைத்தும் வந்து இருந்தன.

வீடியோவைக் காணோம். காரை நிறுத்தினோம். சரி பார்த்தோம். ஹூம், வீடியோ கேமராவைக் காணோம்.

 

என் மருமகள் அனைவரது மொபைல் போன்கள், கேமராக்களை வாங்கி டிஜிடல் மயமாக இருந்த போட்டோக்களைப் பார்த்து திடீரென்று கூவினாள்.

 

“இதோ இருக்கிறது. இந்த பெஞ்சின் மீது வைத்து விட்டு வந்து விட்டோம்”

 

கேமரா ‘ஙே’ என்று அங்கு பெஞ்சில் அமர்ந்திருந்தது.

இப்போது என்ன செய்வது. இன்னும் அங்கு போக ஒரு அரை மணி நேரம் ஆகும்.

 

ஆக ஒன்றரை மணி நேரத்தில் அதை யார் எடுத்துக் கொண்டு போனார்களோ?

 

சரி, ஒரு முயற்சி தான்!

 

வண்டியைத் திருப்பினோம்.

 

வியூ பாயிண்ட் வந்தது.

 

மனம் பக் பக் என்று இருந்தது.அனைவரும் பெஞ்சை நோக்கி ஓடினோம்.

 

அங்கு அந்த கேமரா அப்படியே இருந்தது. ‘ஙே’ என்று அசையாமல் குலுங்காமல் அப்படியே இருந்தது.

முன்பை விட இப்போது இன்னும் அதிகக் கூட்டம்.

எங்கள் காமராவை சரி பார்த்து எடுத்துக் கொண்டோம்.

அனைவரும் சொன்ன வார்த்தை: அமெரிக்கா அமெரிக்கா தான்!

ஆம், யாரும் ஆசைப்பட்டு அதை எடுக்க முயலவில்லை.

அமெரிக்காவில் பெற்ற பல நல்ல அனுபவங்களில் இது குறிப்பிடத்தகுந்த ஒன்று.

அவரவர் தம் தம் வேலையைப் பார்ப்பது அமெரிக்கர்களின் பழக்கம்.அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பது அவர்களின் பரம்பரைக் குணம். வாழ்க அமெரிக்கா; வளர்க அமெரிக்கர்களின் நற்பண்பு.

 

சரி, தெய்வ தேசத்திற்கு வருவோம்.

 

இப்போது எங்கு பார்த்தாலும் சுரண்டல்.லஞ்சம். பேராசை. வேலை பார்க்காமல் அதிக சம்பளம் எதிர்பார்க்கும் குணம்.

போக வேண்டிய பாரதம் இது.

 

வருகின்ற பாரதம் பாரதி பாடியது போல அமைய வேண்டும்.

தெய்வ தேசத்தில் பழைய நாட்களில் இருந்த நற்பண்புகளைக் காணோம்.

அறவே காணோமா?

 

அப்படிச் சொல்ல முடியாது.

 

ஆங்காங்கே அற்புதமான நல்லவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

ஒரு சம்பவம்.

 

3-7-2014 டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் வெளியானது இது.

 

59 வயதான காமேஷ்வர் கிரி ஒரு டாக்ஸி டிரைவர். கொல்கொத்தாவில் சுமார் 40 ஆண்டுகளாக டாக்ஸியை ஓட்டி வருபவர்.

 

ஒரு புதன் கிழமை அவரது வண்டியில் ஒரு குடும்பம் ஏறியது. அவர்களை வீட்டில் இறக்கி விட்ட காமேஷவர் கிரி திரும்பினார்.

சற்று நேரம் கழித்து டிக்கியைப் பார்க்கையில் அங்கு ஒரு பெரிய பெட்டி இருநதது.

 

அந்தக் குடும்பத்தினர் அதை மட்டும் விட்டு விட்டனர் – எடுக்க் மறந்து போய்!

 

பெட்டியை அவர் திறந்தார். உள்ளே ஜொலிக்கும் வைர நகைகள்.ஏராளம் இருந்தன. ஒரு கல்யாணத்திற்குத் தேவையான தங்க நகைகள்!

 

இங்கு நிமாய் சந்திர தாஸ்  நியூ அலிபூர் ரோடில் ராஜஸ்தான் பவனில் ஒரு டாக்ஸியைப் பிடித்து ஏறியவர் தனது மகளின் திருமணத்திற்கு உரிய நகைகளை வாங்கிய சந்தோஷத்துடன் வீட்டில் குடும்பத்தினருடன் இறங்கினார். நடக்கவிருக்கும் விழாவைப் பற்றிய யோசனையில் இருந்தவர் டாக்ஸியை விட்டு அவசரம் அவசரமாக இறங்கி விட்டார்.

 

நகைப் பெட்டியை டிக்கியில் அப்படியே விட்டு விட்டார்.

வீட்டினுள் நுழைந்தவுடன் தான் தெரிந்தது – பெட்டி இல்லை என்பது!

 

உடனடியாக டாக்ஸி ஸ்டாண்டை நோக்கி ஓடினார். ராஜஸ்தான் ஸ்வீட் கடையின் அருகில் இருந்த டாக்ஸி டிரைவர்களிடம் தான் வந்த வண்டியைப் பற்றி விசாரித்தார்.

அங்குள்ள டிரைவர்கள் கிரி ஏற்கனவே அவர் வீட்டிற்குத் தான் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனடியாக அவரை போனில் தொடர்பு கொண்டார். அவர் வீட்டில் வாசலில் தான் நின்று கொண்டிருப்பதாக கிரி கூறினார்.

 

வீட்டிற்குச் சென்ற நிமாய் தனது பெட்டியை கிரியிடம் பெற்றுக் கொண்ட போது அவர் கண்களில் நீர் துளிர்த்தது.

கிரிக்கு அவர் பரிசாக அளித்த தொகையை அவர் பெற மறுத்து விட்டார்.

 

ஏன்? அவர் தந்தை சொன்ன சொற்கள் அவர் நினைவுக்கு வந்ததாம்.

 

There is enough to meet a man’s needs, but never his greed.

 

இது தான் அவரது தந்தையின் மந்திர வாசகம்!

 

வற்புறுத்திய பின்னர் அவர் 44 ரூபாய்களைப் பெற்றுக் கொண்டார். நகைகளைத் திருப்பிக் கொண்டுவந்ததின் வண்டிச் சத்தம் அது.

 

அனைவரும் அவரைப் பாராட்டி வற்புறுத்திய பின்னர் நூறு ரூபாயை அவர் ஏற்றுக் கொண்டார்.

என் தந்தை கூறிய வாசகத்தை மறவேன்.

 

ஒவ்வொருவருக்கும் தேவையானது போதுமான அளவில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவரது பேராசைக்கு ஈடுகட்ட தான் போதுமான அளவு இல்லை என்பது தந்தையின் வாக்கு!

 

அவருக்கு இரு ஆசைகள்.

இன்னும் ஐந்து வருடம் ஓட்டினால் அவரது டாக்ஸி கடனாக நிலுவையில் இருக்கும் எண்பதினாயிரம் ரூபாயை அடைத்து விடலாம்.

 

இன்னொன்று, இப்போது பி.காம் படிக்கும் தன் பையன் ஒரு சார்டர்ட் அக்கவுண்ட் ஆக விரும்புகிறான். அவன் அப்படி ஆகி விட வேண்டும்!

 

அவரை அனைவரும் வாழ்த்தினர். ஒரு நல்லவரின் ஆசைகள் நிறைவேறட்டும்.

தெய்வ தேசத்தின் பிரதிநிதி காமேஷ்வர் கிரி.

 

 

மாத்ருவத் பரதாரேஷு பரத்ரவ்யேஷு லோஷ்டத்ரவத்!

பர தாரம் – பர திரவியம் – அடுத்தவர் தாரம், அடுத்தவர் செல்வம் மீது கண் கூட வைக்காதே என்பது தெயவ தேச அறநூல்களின் அறிவுரை.

 

இதன்படி ஒரு காலத்தில் அனைவரும் பாரதத்தில் வாழ்ந்தனர்.

இன்று புரையோடிப் போன வாழ்க்கை முறையில் லஞ்ச லாவண்யத்தைத் தான் காண முடிகிறது.

 

ஆனால் சிலரேனும் தர்ம காவலர்களாக இருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

 

காமேஷவர் கிரி போன்றவர்களின் எண்ணிக்கை பெருகும் போது நமது தேசம் மீண்டும் தெய்வ தேசப் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கும்!

***