புஸ்தக ஆசிரியர் படுகொலை (Post No.4578)

Written by London Swaminathan 

 

Date: 3 JANUARY 2018

 

Time uploaded in London- 8-23 am

 

 

Post No. 4578

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மொகலய சாம்ராஜ்யத்தில் பஞ்சம் இல்லாத பொருள்– படுகொலைகள். அப்பன் மகனைக் கொல்வதும், மகன் தந்தையைக் கொல்வதும், சஹோ தரர்கள் ஒருவருக்கு ஒருவரைத் தீர்த்துக் கட்டுவதும் சர்வ சாதாரணம்– அன்றாட நிகழ்ச்சிகள். அக்பரின் மகன் சலீம் — அதாவது மொகலாயப் பேரரசன் ஜஹாங்கீர்- நடத்திய ஒரு படுகொலை, வரலாற்றில் ஆதாரத்தோடு பதிவாகிவிட்டது.

அபுல் பாசல் என்பவர் புகழ்பெற்ற எழுத்தாளர். அவர் பாரசீக மொழியில் அக்பர்நாமா என்ற ஒரு புத்தகத்தில் அக்பரின் முழு வரலாற்றையும் தந்துள்ளார்; அதன் ஒரு பகுதி அயினி அக்பரி ஆகும். அக்பரின் நெருங்கிய நண்பர்; அவரது சபையில் இருந்த நவ ரத்னங்களில் ஒருவர்.

 

அக்பர் தனது மகன் சலீமை அலஹாபாத் பகுதிக்கு அதிகாரியாக- ஆட்சிப் பிரதிநிதியாக நியமித்தார். அங்கே பணம் வெள்ளம் போல பெருகியது. வரி வசூல் மிகப் பிரமாதமாக இருந்தது. பணம் இருக்கும் இடத்தில் குணம் இருக்குமா? இருக்காதே!

 

சலீம் தன்னை சுதந்திர ஆட்சியாளராகப் பிரகடனம் செய்து கொண்டார்.  அது மட்டும் அல்ல. பணத் திமிரில் தங்கக் காசுகளையும், தாமிரக் காசுகளையும் அடித்து — அச்சடித்து– அவைகளை அக்பரின் பார்வைக்கு அனுப்பினார்.

 

அக்பர் அதைப் பார்த்தார்; ஆஹாசத்துக்கும் பூமிக்கும் குதித்தார்; கோபக் கனல் பொங்கியது; கூப்பிட்டார் ஆப்த நண்பர் அபுல் பாஸலை; என் மகன் சலீமுக்கு நல்ல புத்திமதி சொல்லி வாருங்கள்; இப்படி ஊதாரியாகவும் தான் தோன்றியாகவும் இருக்கிறானே! என்றார்.

 

அக்பரின் மகன் சலீம், பிற்காலத்தில் ஜஹாங்கீர் என்ற பெயருடன் ஆட்சியைப் பிடித்தவர். அவருக்கு அபுல் பாஸல் புறப்படும் திட்டமும் அவரது நோக்கமும் உளவாளிகள் மூலம் தெரிய வந்தது. நல்ல சதித் திட்டம் போட்டார்.

 

அந்தக் காலத்தில் மத்தியப் பிரதேச காடுமலைகள் அடங்கிய ஓர்ச்சா (Orcha) பிரதேசத்தை வீர சிம்ஹ தேவன் (பீர்சிங்தேவ்) ஆண்டு வந்தான்; மாபெரும் வீரன் அவனை சலீம் அழைத்தார். அன் பரே! அபுல் பாஸலைத் தீர்த்துக்கட்டும் என்றார்.

பீர் சிங் தேவ் 500 வீரர்களுடன் காட்டில் மறைந்திருந்தார். அபுல் பாஸலுக்கு ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பது பராபரியாகத் தெரியும்; ஆயினும் அக்பரின் மகன் குட்டிப் பயல் — சலீம் கொலை செய்யும் அளவுக்கு கிராதகன் — மாபதகன் — என்பது அவரது அறிவுக்கு எட்ட வில்லை. அக்பர் சும்மாவா ஆளை அனுப்புவார்? அவரும் படை வீரர்களின் பாதுகாவலோடுதான் பாசலை அனுப்பினார். ஆயினும் வீர சிங்க தேவனின் 500 வீரர்களுக்கு அவர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை. அபுல் பாஸலை ‘பைசல்’ செய்தனர்; ஆள் காலி; தலை பூமியில் உருண்டது; அதை ஜாக்கிரதையாக எடுத்து அந்தப் பொக்கிஷத்தை ஜஹாங்கீருக்கு அனுப்பியும் வைத்தார்.

 

 

ஜாஹாங்கீருக்கு ஏக குஷி! பிற்காலத்தில் ஜஹாங்கீர் இது பற்றி தமது நினைவலைகளில் — ஞாபகார்த்தக் குறிப்புகளில் எழுதினார்:-

 

அபுல் பாஸலை ஒரு  சண்டையில் வீர சிங்க தேவன் கொன்றார். அவருடைய தலையையும் எனக்கு அனுப்பி வைத்தார்.

 

அபுல் பாஸல் தனக்கு எதிராகச் சதி செய்ததாகவும், தனக்கும் தன் தந்தை அக்பருக்கும் இடையே சமரஸம் நிலவாதபடித் தடுத்ததாகவும் ஜஹாங்கீர் குற்றமும் சாட்டினார். எப்படி இருக்கிறது கதை!

 

சலீம், ஜஹாங்கீர் என்ற பெயரில் பட்டம் ஏற்றவுடன் வீர் சிங்க தேவனுக்கு பதவி உயர்வு கொடுத் து அவர் ஒர்ச்சா பிரதேசத்தின் தனிப்பெரும் தலைவர் என்ற அங்கீகாரத்தையும் அளித்தார்.

 

வீர சிங்க தேவன், பண்டேல் கண்ட் பிரதேசத்தில் தெய்வ நிலை எட்டிய மா புருடன்; அவரைத் தெய்வமாகவே அந்தப் பிரதேச மக்கள் வழிபாடுகின்றனர்.

 

இதற்கு இன்னும் ஒரு காரணமும் உண்டு. அவர் வீரர் மட்டுமல்ல; கோவில் குளங்களையும் அரண்  மனைளையும் கோட்டை கொத்தளங்களையும் கட்டிய ஒரு அரசனும் ஆவார். ஜோதிடர்களைக் கலந்தாலோசித்து ஒரு முஹூர்த்தத்தில் 52 கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அவர் கட்டிய கோவில்கள் கோட்டைகளை இன்றும் காணலாம். டிக்கம் கார் என்னும் இடத்தில் அபுல் பாஸலைக் கொலை செய்த கத்தி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது அவரது சமாதியும் பேட்வா (Betwa)வில் உள்ளது

 

வீர சிம்ஹ தேவின் புகழும் அவரது மகன் ஹர்தாள் (ஹரி தயாள் ) லாலாவின் புகழும் கொடிகட்டிப் பறக்கிறது. மகன் ஹர்தாள் லாலாவுக்கு (Datia) டாடியா என்னும் இடத்தில் கோவிலும் உள்ளது. ஏன் தெரியுமா? ஹரி தயாளுவை அவரது சஹோதரர் குற்றம் சாட்டிக் கொன்று விட்டார். என் மனைவியுடன் நீ கள்ளக் காதல் கொண்டாய், ஆகவே ஊமத்தை செடியின் விஷ விதைகளைச் சாப்பீட்டுச் செத்துப் போ! என்று சொல்ல அவரும் அப்படியே செய்தார்; செத்தார்; பூத உடல்போயிற்று ; புகழ் உடம்பு வந்து சேர்ந்தது. கல்யாணம், கார்த்திகை என்றால் அவருக்கு ஆராதனை; பூஜை. அது மட்டும் அல்ல அவர் காலரா நோயைத் தீர்த்துவைக்கும் தெய்வம் என்ற புதுப் பட்டமும் கிடைத்தது.

இதெல்லாம் நடந்து 400 ஆண்டுகள் ஆகிவிட்டன.  அம்மக்கள் பிற்காலத்தில் போரிட்டபோதெல்லாம் ஹர்தயாள், வீர சிந்தேவ் ஆகியோர் ஆவி ரூபத்தில் வந்து உதவியதாகவும் கதைகள் உண்டு.

 

–சுபம்- சுபம்–

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

Image of Roman Wine

 

Research Article Written by London Swaminathan 

 

Date: 30 DECEMBER 2017 

 

Time uploaded in London- 7-54 am

 

 

Post No. 4564

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

யவனர்களைத் தமிழர்களும் சாணக்கியனும் தாக்கியது ஏன்? (Post No.4564)

 

 

யவனர்கள் யார்?, மிலேச்சர்கள் யார்? என்று மூன்று ஆண்டுகளாகச் சில ஆராய்ச்சிக்  கட்டுரைகளை எழுதிவிட்டேன். இப்பொழுது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் போலவே சாணக்கியன் காலத்திலும் ‘யவன வெறுப்பு’ இருந்ததைக் காட்டும் பாடல் கிடைத்துள்ளது அதையும் பார்ப்போம். காளிதாசன் கவிதைகளைக் கண்ட போது ஒரு புதிய எண்ணமும் மனதில் உதித்தது. அதையும் சொல்லுவேன்.

 

எனது துணிபு

 

யவனர் என்பது கிரேக்க, ரோமானிய, பாரசீக, அராபிய இனங்களைக் குறித்தது.

 

யவனர் மீது இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் காலம் வரை இருந்த வெறுப்பு பின்னர் சிறிது சிறிதாகத் தணிந்தது.

 

யவனர்களை கடும் சொல் பேசுவோர், அவர்கள் காவல் வேலைக்கு உகந்தோர், அந்நாட்டு அழகிகள் அந்தப்புரத்தைக் காக்க உதவுவர்; நம் மொழி தெரியாததால் அரசு ரஹஸியங்களைப் பாதுகாக்க அவர்களை அரசனுக்குக் காவலாக வைக்கலாம், மதுபானம் கொடுத்து உபசரிக்க அந்த அழகிகளை அருகில் வைத்துக் கொள்ளலாம் என்ற தகவல்கள் தமிழ் , ஸம்ஸ்க்ருத நூல்களில் இருந்து தெரிகின்றன.

Image of Persian Wine

முதலில் சாணக்கியன் சொல்லும் செய்தியைக் காண்போம்:-

 

சாண்டாலானாம் ஸஹஸ்ரைஸ்ச ஸூரிபிஸ்தத்வதர்சிபிஹி

ஏகோ ஹி யவனஹ ப்ரோக்தோ ந நீ சோ யவனாத் பரஹ

 

 

 

 

“உண்மை நிலையை உணர்ந்த அறிஞர்கள் செப்பியது என்ன? ஒரு யவனன் ஆயிரம் சண்டாளர்களுக்குச் சமமானவன். யவனனை விடத் தாழ்ந்தது உலகில் எதுவுமே இல்லை”.

 

சாணக்கிய நீதி, அத்தியாயம் 8, ஸ்லோகம் 5

 

ஏன் இந்த வெறுப்பு? சாணக்கிய நீதி நூலை மொழி பெயர்த்த ஸத்ய வ்ரத சாஸ்திரி பகர்வது யாதெனில், இவர்கள் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்கள். மேலும் வெறுக்கத் தக்க பழக்க வழக்கங்களை உடையவர்கள் என்பதாகும்.

 

உண்மைதான் இந்துக்கள் வெறுக்கும் பசு மாமிசத்தைப் புசித்திருப்பர். அலெக்ஸாண்டர் இறந்தவுடன் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, வடமேற்கு இந்தியாவில் இந்திய-கிரேக்க வம்ஸத்தினரின் ஆட்சி நிலவியது. அவர்கள் படை எடுப்பும் ஒரு காரணமாக இருக்கலாம்.

 

மேலும் அவர்கள் படுத்துக் கொண்டே உணவு உண்பார்கள் என்பதும் ஸம்ஸ்க்ருத ஸ்லோகங்களில் உள்ளது; ‘’சயானா முஞ்சதே யவனாஹா’’ என்று ஸ்லோகம் உள்ளதால் அவர்களுக்கு ‘’துர்யவனம்’’ என்ற அடைமொழி (கெட்ட யவனன்) கொடுக்கப்பட்டது. மேலும் இந்த ‘’துர் யவனம்’’ என்பதை ஸம்ஸ்க்ருத வியாகரணத்தில் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை விளக்க எப்போதும் பயன்படுத்தினர். ஆக பழக்க வழக்கங்களாலும் கடும் சொற்களாலும் (மிலேச்ச பாஷை பேசியதாலும்) இவர்கள் தீண்டத் தகாதவர்கள் (சண்டாளர்) ஆனார்கள்.

 

நான்     இன்னும் ஒரு கருத்தையும் சேர்ப்பேன். ஆரம்ப காலத்தில் இவர்கள் மேலைக் கடற்கரையில் சென்ற நமது வணிகக் கப்பல்களைத் தாக்கிக் கொள்ளை அடித்திருப்பர். சந்திர குப்த மௌர்யன், அவனுக்குப் பின்னால் இமய வரம்பன் நெடுஞ் சேரலாதன் ஆகியோர் இவர்களை அடக்கி ஒடுக்கி வழிக்குக் கொண்டுவந்த பின்னர் கடுமை குறந்து இருக்கும்.

 

பாரஸிக மதுபானம்

என்னுடைய இன்னும் ஒரு ஆராய்ச்சி தமிழகத்துக்குப் பாரஸிக மதுபானம் வந்த செய்தியாகும். யவன அழகிகள் தமிழ் மன்னர்களுக்கு தங்கக் கிண்ணங்களில் மது பானம் வழங்கிய செய்தி சங்க இலக்கியத்தில் உள்ளது (கீழே எனது பழைய ஆய்வுக் கட்டுரைகளுக்கான லின்க் LINK உள்ளது. அவைகளில் சங்க இலக்கியம் பற்றிய விரிவான செய்திகள் காணக் கிடைக்கும்.

 

காளிதாசன் அவனது நாடகங்களான சாகுந்தலம், மாளவிகா அக்னிமித்ரம், விக்ரம ஊர்வஸீயம் ஆகியவற்றிலும் ரகு வம்ஸத்திலும் யவனர் பற்றிய பல காட்சிகளைத் தருகிறான்:

 

 

ரகுவம்ஸ ஸ்லோகம் இதோ:–

 

யவனீ முக பத்மானாம் ஸேஹே மதுமதம் ந ஸஹ

பாலாமிவாப்ஜானாம் அகால ஜலதோதுயஹ

ரகுவம்ஸம், அத்யாயம் 4, ஸ்லோகம் 61

 

 

பொருள்:

காலை வேளையில் சூரியன் உதயமானவுடன் தாமரை மலர்கின்றது. முன்பே செந்நிறம் பெற்றுள்ள தாமரை மலர்கள், சூரியனது இளம் வெய்யில் படும் பொழுது மேலும் அழகு பெறும். ஆயினும் மேகக் கூட்டம் வந்து ஒளியைத் தடுத்தால் அவை ஒளி குறைந்து காணப்படும் பாரஸீகப் பெண்களின் முகம் செக்கச் செவே என்று தாமரை போல உள்ளன. அந்த அழகிகள் மதுபானம் செய்து மேலும் அழகு பெற்றனர். ஆயினும் ரகு மன்னன், பாரஸீகம் (ஈரான் நாடு) மீது படை எடுத்து வருகிறான் என்ற செய்தியைக் கேட்டவுடன் வாடினர். ஏனெனில் மது பானம் செய்வதைத் தவிர்த்தனர்.

 

யவன என்பதற்கு வியாக்கியானம் செய்தவர்கள் கொடுக்கும் பொருள் பாரஸீகம்

 

இந்த பாரஸீக மதுதான் சங்கத் தமிழ் நூல்களிலும் பயிலப்பட்டது என்பது எனது துணிபு.

Yavana in Barhut Sculpture; 2300 year old.

ஸாகுந்தலம் என்னும் உலகப் புகழ் பெற்ற நாடகத்தில், இரண்டாம் காட்சியிலும் ஆறாம் காட்சியிலும் யவன ஸ்த்ரீகள் நடமாடுகின்றனர். மாமன்னன் துஷ்யந்தனின் படைகளுடன் வந்த பரிவாரத்தில் யவன அழகிகளும் இருந்தனராம் (இதைத் தமிழிலும் காண்கிறோம்). மன்னன் எங்கு எங்கெல்லாம் சென்றானோ அங்கெல்லாம் யவன மாது ‘வில்’லை எடுத்து வந்தாளாம்.

 

முற்கால மன்னர்களின் சபைகளிலும், அரண்மனைகளிலும் யவன மகளிருக்கு வேலைக்காரி வேலை கொடுக்கப்பட் டத்தை ஏனைய நாடகங்கள் காட்டுகின்றன. இதைத் தில் இலக்கியத்திலும் காண்கிறோம்.

 

ஆக யவனர்கள் என்பது கீழ் மட்ட வேலைக்காரர் அல்லது வேலைக் காரி என்ற பொருளிலேயே சாணக்கியனும் தமிழரும் பயின்றனர்.

 

 

காளிதாசனின் 200-க்கும் மேலான உவமைகள் சங்கத் தமிழ் நூல்களில் உபயோகிக்கப்பட்டதால் காளிதாசன், சங்க காலத்துக்கு முந்தையவன் என்பதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் காட்டினேன். இந்த பாரஸீக மது, யவன வேலைக்காரிகள் என்பதை இன்னும் ஒரு சான்றாகக் கொள்க!

 

 

Persia (Iran)

 

யவனர்கள் யார் | Tamil and Vedas

https://tamilandvedas.com/tag/யவனர்கள்-யார்/

 

ஆராய்ச்சிக் கட்டுரை வரைபவர்: லண்டன் சுவாமிநாதன் கட்டுரை எண்.:–1207; தேதி:- ஆகஸ்ட் 1, 2014. சங்க இலக்கியத்திலும் பிற்காலத்தில் எழுந்த சிலப்பதிகாரத்திலும்யவனர்கள் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. இவை பெரும் புதிராக உள்ளன. யார் இந்த யவனர்? எப்போது இந்த சம்பவங்கள் நடந்தன …

சங்க இலக்கியத்தில் யவனர் மர்மம்! | Swami’s …

swamiindology.blogspot.com/2014/08/blog-post.html

1 Aug 2014 – சேரர்கள் – யவனர் மோதல் மர்மம் நீடிக்கிறது. சேர மன்னர் ஆண்ட யவனர் நாடோ, கைகளைப் பின்னால் கட்டி தலையில் நெய் ஊற்றப்பட்ட யவனர்கள் யார் என்பதோ தெரியவில்லை.இதே போல புராணங்களும் சகர மன்னன், யவனர்களைப் பிடித்து மொட்டை அடிக்கச் செய்தான் என்று …

“மிலேச்ச” என்றால் என்ன? | Tamil and Vedas

https://tamilandvedas.com/2012/…/மிலேச்ச-என்றால…

  1. 6 Sep 2012 – பலுச்சிஎன்பது மிலேச்ச என்று மாறியது என்று சில மொழி இயல் அறிஞர்கள் வாதிடுவர். கிரேக்கர்களும் கூட தங்கள் இனத்தைச் சேராதோரை ‘பார்பேரியன்ஸ்’ என்று அழைத்தனர்.

மிலேச்சர்களை அழிக்கும் கல்கி …

https://tamilandvedas.com/…/மிலேச்சர்களை-அழி…

21 Mar 2015 – … ‘மிலேச்ச பாஷை’யும் அல்ல என்பது இக்கட்டுரையின் துணிபு. முந்தைய கட்டுரைகள்:–. MLECHA: Most Misunderstood Word (Posted on 3 September,2012). “மிலேச்சஎன்றால் என்ன? (Posted on 6 September,2012) …

 

சுபம்–

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

Written by London Swaminathan 

 

Date: 27 DECEMBER 2017 

 

Time uploaded in London- 8-09 am

 

 

Post No. 4553

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

மன்னன் சிரித்தான், ஒரு பெண்ணும் சிரித்தாள்; ஏன்? ஏன்? ஏன்? (Post No.4553)

சாணக்கியன் சம்பந்தப்பட்ட கதைகளில் இன்னும் ஒரு சுவையான கதையைப் பார்ப்போம் ஏற்கனவே மெகஸ்தனீஸ்- சாணக்கியன் சந்திப்பு பற்றியும், அவலட்சண சாணக்கியனை மன்னன், பந்தியிலிருந்து தர தரவென இழுத்துவெளியேற்றியதையும், ஐயர் அன்று அவிழ்த்த குடுமியை மஹத சாம் ராஜ்யம் ஸ்தாபிக்கும் வரையும் முடியவில்லை என்பதையும் சொன்னேன்.

இதோ இன்னும் ஒரு கதை:

நந்தனின் அமைச்சர்களில் ஒருவன் சகதாரன். நவ நந்தர்கள் கொடூரமானவர்கள். ஏதோ ஒரு கோபத்தின் பேரில் சகதாரனையும் அவன் மனைவி, மகன் ஆகியோரையும் சிறையில் அடைத்தான். தினமும் ஊன்று பேருக்கும் சேர்த்து ஒரு கோப்பை பார்லி மாவு மட்டும் சாப்பிடக் கொடுத்தான். மனைவியும், மகனும் நாளடைவில் இறந்துவிட்டனர். காரணம் அவர்கள் உணவையும் சகதாரனுக்குக் கொடுத்ததே.

 

இது ஒரு புறம் இருக்க, ஒரு நாள் மன்னன் மஹாபத்ம நந்தன் உலாவச் சென்றான். அப்போது அவன் எதையோ பார்த்துச் சிரித்தான். எதிரே அரண்மனையில் பணிபுரியும் பெண் வந்தாள்;. மன்னன் சிரித்ததைக் கண்டு அந்த மாதுவும் சிரித்தாள்.

 

ஏன் சிரித்தாய் மகளே? ஏன் சிரித்தாய்? என்று வினவினான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அப்புறம் சொல்கிறேனே என்று சொல்லிவிட்டு,     பயந்து ஓடிவிட்டாள். பலரையும் கேட்டாள் பதில் கிடைக்க வில்லை.

 

அவள் சிறைச் சாலைக்கும் செல்வதுண்டு. சிறையில் கிடக்கும் அமைச்சனுக்கே பதில் தெரியும் என்று அவனிடம் கேட்டாள்.

சகதாரன் உதவி செய்ய முன்வந்தான்

பெண்ணே! அரசன் சிரித்தபோது எதைப் பார்த்துக் கொண்டிருந்தான்?

பெண்:- ஒரு கால்வாய் அருகில் வந்தபோது மன்னன் சிரித்தான்.

அரசன் சிரித்தபோது அவனருகில் என்ன இருந்தது?

ஒரு பெரிய மரம் இருந்தது.

 

ஓஹோ! அந்தக் காலவாயில் ஒரு சிறிய விதை மிதந்து கொண்டிருந்தது. அது, அந்தப் பெரியமரத்தின் விதை. இந்தச் சின்ன விதையில் இருந்து இவ்வளவு பெரிய மரமா? என்று வியந்து சிரித்தான் நந்தன் என்றான் சகதாரன்.

மறுநாள் அரசனைச் சந்தித்த மாது, இதை அப்படியே சொன்னாள். இது ஒரு பணிப்பெண் சொல்லக்கூடிய விடை அன்று. யாரோ இவளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என்று அரசன் எண்ணினான்.

 

அவளை அனுப்பிவிட்டு ஒற்றர்களை அழைத்து இப் பணிப்பெண் எங்கெங்கு சென்றாள் என்று விசாரித்ததில் சகதாரந்தான் இதைச் சொன்னான் என்று தெரிந்தது.

 

இவ்வளவு பெரிய அறிவாளியை சிறையில் அடைத்தோமே ஏன்று வருந்தி அவரை விடுதலை செய்தான்.

விடுதலையானபோதும் சகதாரனுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. சின்னக் காரணத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டு அதனால் மனைவியையும் மகனையும் பறி கொடுத்தோமே என்று  வருந்தினான்.

 

ஒருநாள் சகதாரன் சாலையில் போய்க்கொண்டிருந்த போது ஒரு உச்சிக் குடுமி பார்ப்பான் ஒரு புல்லின் மீது மோரை ஊற்றிக் கொண்டிருந்தான். அட! இது என்னடா அதிசயம் என்று வியந்து அவரிடமே காரணமும் கேட்டான். இந்தப் புல் தன்னை தடுக்கி விட்டதாகவும் அதை வேருடன் அழிக்க புளித்த மோரை விட்டதாகவும் சொன்னான். திட உறுதி உடைய இந்தப் பார்ப்பனன் தனது திட்டத்துக்கு உதவுவான் என்று எண்ணி அவனை பாடலிபுத்திரத்துக்கு அழைத்து வந்தான்.

 

சிறையிலிருந்து விடுதலையான சகதாரனுக்கு சடங்குகள் செய்யும் துறைக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு கிடைத்து இருந்தது. ஒரு ‘திதி’யின்போது உணவு உண்ண தான் அழைத்து வந்த பார்ப்பனனையும் அழைத்து இருந்தான். அவர்தான் சாணக்கியன். அழகு இல்லாத அவலட்சணமானவர். மன்னன் மஹாபத்ம நந்தன் மண்டபத்துக்குள் வந்தவுடன் அவலட்சணத் தோற்றம் உடைய சாணக்கியனைப் பார்த்து ஆத்திரம் அடைந்தான். முதல் வரிசையில் அவர் இருப்பதைப் பார்த்து அவரை இழுத்து வெளியே தள்ளினான். அன்றைய தினம் குடுமியை அவிழ்த்துப் போட்டு, நந்த வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியை முடிய மாட்டேன் என்று சபதம் செய்து அப்படியே அந்த வம்ஸத்தை பூண்டோடு அறுத்து ஒழித்தான்.

 

 

இதை அவர் எப்படிச் செய்தார் என்று இன்னு ம் ஒரு கதை உண்டு. திமிர் பிடித்த மஹா பத்ம நந்தனுக்கு முறையான மஹா ராணி மூலம் எட்டுப் புதல்வர்களும் அரண்மனைப் பணிப்பெண் மூராவின் மூலம் ஒரு மகனும் உண்டு; மூரா மகன் மௌரிய சந்திர குப்தன் ஆவான். அவன் மீது எல்லோருக்கும் பொறாமை இருந்தது. சகதாரன் அவனையே மன்னன் ஆக்க எண்ணினான். ஒரு பணிப் பெண் மூலம் விஷ உணவைச் சமைத்து பரிமாறச் செய்தான் இதனால் மஹபத்மனும் எட்டு மகன்களும் இறந்தனர்.

 

நாட்டிலுள்ள குழப்ப நிலையில் அருகிலுள்ளோர் படை எடுக்கத் தயாராயினர்.

பர்வதக என்னும் மன்னனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாகச் சொல்லி மஹதப் பேரரசு மீது படை எடுக்க வைத்தான் சகதாரன். அவன் தன் மகன் மலைய கேதுவோடு படை எடுத்து வந்தான். நவ நந்தர்கள் இறந்ததில் வருத்தமுற்ற அமைச்சன் ராக்ஷசனும் பர்வதகனுக்குப் பாதி ராஜ்யம் தருவதாக வாக்களித்தான். ஆயினும் சாணக்கியன் அடுத்த சதியில் இறங்கினார்.  பர்வதனுக்கும் விஷ உணவு படைக்க வைத்தான் அவன் இறந்தவுடன்  மலைய கேது தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான். மாபெரும் மகத சாம்ராஜ்யத்தின் மன்னனாக மௌர்ய சந்திர குப்தன் பதவி ஏற்றான்.

 

இவை எல்லாம் செவி வழிச் செய்திகளும் நாடகம் மூலம் வந்த கதைகளும் ஆகும்.

 

எல்லாவற்றிலும் இழையோடிச் செல்லும்கருத்து சாணக்கியன் பெரிய ராஜ தந்திரி. நவ நந்தர்கள் க்ஷத்ரிய வம்ஸத்தவர் அல்ல; பிராமணர்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்தனர். அகந்தையின் உறைவிடமாக உலவினர். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும் என்னும் கொள்கைகொண்ட சாணக்கியன் ராஜ தந்திரம் மூலம் வென்றான்.

பாரத நாட்டுக்கு இதனால் கிடைத்த பரிசு– அர்த்த சாஸ்திரம் என்னும் உலகின்  முதல் பொருளாதார நூல்; மற்றும் பல நீதி சாஸ்திர நூல்கள். அலெக்ஸாண்டரையும் பயப்பட்டுத் திரும்பிப் போக வைத்த பிரம்மாண்டமான மகதப் பேரரசின் படை பலம்.  அதில் உதித்தவனே        மாமன்னன் அசோகன்.

–சுபம்–

 

அண்ணன் தலையைக் கண்டு ஆனந்தம் அடைந்த அவுரங்கசீப் (Post No.4540)

Image of Shah jahan

Written by London Swaminathan 

 

Date: 24 DECEMBER 2017 

 

Time uploaded in London- 12-42

 

 

Post No. 4540

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks

 

 

மொகலாயர் வரலாறு கொலைகார வரலாறு; அப்பாவை மகன் கொல்வது பரம்பரையாக நடந்தது; சஹோதர்களை சஹோதரர்கள் தீர்த்துக்கட்டுவதும் தொடர்ந்து நடந்தது.

 

நிக்கலோ மனூச்சி (Nicolao Manucci  1638- 1717) என்பவர் இதாலிய பயணி; அவர் இந்தியாவுக்கு வந்து மொகலாய மன்னர்களிடம் வேலை பார்த்தார். தாரா சிகோஹ், ஷா ஆலம், ராஜா ஜெய் சிங், கிராட் சிங் ஆக்யோர் சபைகளில் வேலை பார்த்தார். அவர் நிறைய சுவையான — சோகமான- விஷயங்களை எழுதிவைத்துள்ளார். இதோ ஒரு சோகக் கதை.

Image of Aurangazeb

ஷாஜஹானின் மகன் தாரா சிகோஹ்; அவருடைய தம்பி மதவெறி பிடித்த அவுரங்கசீப்.

 

மொகலாய மன்னன் ஷாஜஹானுக்கு பல புதல்வர், புதல்வியர் உண்டு. அவருக்கு அடுத்தாற்போல அரசு கட்டிலைப் பிடிப்பது யார் என்பதில் அவருடைய புதல்வர் தாரா ஷிகோஹுக்கும் அவுரங்கசீப்புக்கும் இடையே பெரிய போட்டி நடந்தது போட்டி அல்ல; யுத்தமே நடந்தது. ஷாஜஹானைச் சிறைப்பிடித்து ஆக்ரா  சிறையில் வைத்தனர். இங்கிருந்தவாறே தாஜ் மஹலைப் பார்த்துக்கொண்டு செத்துப்போ என்று விட்டனர்.

 

 

தாரா சுகோஹ், தோற்கடிக்கப்பட்ட செய்தியை ஒரு தூதன் அவுரங்கசீப்பிடம் தெரிவித்தான். ஆனால் தோற்றுப்போன தாரா ஓடிவிட்டதாகவும் சொன்னான். உடனே அவுரங்கசீப் ஒரு சபதம் செய்தான். அண்ணனைச் சிறைப்பிடித்து தலையை வெட்டி அவர்களுடைய தந்தையான ஷாஜஹானுக்கு அனுப்பிவைப்பேன் என்று வீர சபதம் எடுத்தான். இதை இதாலிய பயணி மனூச்சி அப்படியே எழுதி வைத்துள்ளான்.

அவுரங்க சீப்பின் துஷ்ட ஆசையும் நிறைவேறியது. தாராவின் தலையை அவன் முன்னால் கொண்டு வந்தனர். ஒரு கத்தியை எடுத்து மூன்று வெட்டு வெட்டினான் . இதை கண் முன் காட்டாமல் தூக்கிக்கொண்டு போங்கள் என்று கட்டளையிட்டான்.

 

அவுரங்கசீப்பின் சஹோதரி (தாராவுக்கும் சஹோதரிதான்) ரோஷநாரா பேஹம் இந்தத் தலையை நமது தந்தை ஷாஜஹானிடம் கொண்டு காட்ட வேண்டும் என்று அவுரங்கசீப்பைத் தூண்டிவிட்டாள். அவள் அன்று மாலையே ஆக்ரா கோட்டையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்தாள்; தாரவைக் கொன்றதற்காக.

 

 

தலை வந்தபோது சிறைச் சாலையில் ஷாஜஹான் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தான். தாரவின் தலையைப் பார்த்தவுடன்  ‘ஓ’ என்று கதறி ‘டின்னர் டேபிள்’ மீதே மயக்கம் போட்டு விழுந்தான்.

 

அவுரங்க சீப் அந்த தலையை மூன்றுமுறை வெட்டியபோது அந்தத் தலை ஹா, ஹா, ஹா என்று சிரித்ததாகவும் சொல்லுவர்.

 

ஆக்ராவில் தாஜ்மஹல் உள்ளேயுள்ள கல்லறையில் அந்தத் தலையைப் புதைக்குமாறு அவுரங்கசீப் கட்டளை இட்டதாக மனூச்சி எழுதியுள்ளார்.

அதே காலத்தில் இந்தியாவுக்கு வந்த பெர்னியர் என்ற மேல்நாட்டு யாத்ரீகரும் இதே சம்பவம் பற்றி எழுதிவைத்துள்ளார்.

 

 

தாராவின் மரண தண்டனையை நிறைவேற்றிய அவுரங்க சீப்பின் ஆட்கள், அவன் தலையை அவுரங்க சீப்பிடம் கொண்டுபோனபொது அதை ஹுஆமாயூன் கல்லறையில் புதைக்கச் சொன்னானாம்.

 

தாராவின் புகழைப் பாடும் பல பாடல்களை மக்கள் நாட்டுப் புறக் கதைப் பாடலாக பாடியதாகவும் அதைத் தடுக்க அவுரங்கசீப் முயன்றும் முடியவில்லை என்றும் அக்கால வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர்.

 

தாராவின் தலையை ஒரு அழகான பெட்டியில் வைத்து உங்கள் மகன் உங்களுக்கு அனுப்பிய பரிசு என்று படைவீரர்களிடம் சொல்லச் சொன்னானாம். அவர்கள் அப்படிச் சொன்னபோது ‘அட, என் மகன் என்னை ஞாபகமாவது வைத்துக் கொண்டிருக்கிறானே என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்தானாம். தாராவின் தலை ரத்தவெள்ளத்தில் இருந்ததைக் கண்டு மூர்ச்சை அடைந்தானாம்.

 

தாராவின் தலையை சீவுவதற்கு முன்னர் அவனை விலங்கு மாட்டி யானை மீது வைத்து ஊர்வலமும் விட்டானாம் அவுரங்கசீப்.

 

தாராவின் மரணம் இந்துக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. அவன் ஏழாவது சீக்கிய குருவின் நண்பன். இந்து மத உபநிஷத்துகளை பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவன்

 

–சுபம்–

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10 (Post No.4538)

Date: 24  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-20 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4538

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

நண்பரா, கைக்கூலியா!

மாக்ஸ்முல்லர் மர்மம் – 4 : கட்டுரை எண் 4269 – வெளியான தேதி 4-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 5 : கட்டுரை எண் 4327 – வெளியான தேதி 23-10-2017 ; மாக்ஸ்முல்லர் மர்மம் – 6 -கட்டுரை எண் 4355 – வெளியான தேதி 1-11-2017; மாக்ஸ்முல்லர் மர்மம் -7 கட்டுரை எண் 4385 – வெளியான தேதி  11-11-17; மாக்ஸ்முல்லர் மர்மம்-8 கட்டுரை எண் 4451 – வெளியான தேதி 2-12-17; மாக்ஸ்முல்லர் மர்மம் – 9 கட்டுரை எண் 4501 – வெளியான தேதி 16-12-17

இதனுடைய தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியாகிறது.

 

மாக்ஸ்முல்லர் மர்மம்! – 10

 

ச.நாகராஜன்

18

மாக்ஸ் முல்லர் இந்தியா பற்றிய தனது பிரமாதமான புகழுரைகளை “India : What it Can Teach Us” நூலில் தெரிவித்துள்ளார்.

மிக அருமையான மேற்கோளான “If I were asked under what sky” என்று ஆரம்பிக்கும் மேற்கோளை முதல் அத்தியாயத்தில் பார்த்தோம்.ஆகவே அதை இங்கு மீண்டும் தரவில்லை.

இது தவிர குறிப்பிடத்தகுந்ததாக இலங்கும் மூன்று  மேற்கோள்கள் கீழே தரப்படுகின்றன:

“The true history of the world must always be the history of the few; and as we measure the Himalaya by the height of Mount Everest, we must take the true measure of India from the poets of the Veda, the sages of the Upanishads, the founders of the Vedanta and Sankhya philosophies, and the authors of the oldest law-books, and not from the millions who are born and die in their villages, and who have never for one moment been roused out of their drowsy dream of life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

*

“Whatever sphere of the human mind you may select for your special study, whether it be language, or religion, or mythology, or philosophy, whether it be laws or customs, primitive art or primitive science, everywhere, you have to go to India, whether you like it or not, because some of the most valuable and most instructive materials in the history of man are treasured up in India, and in India only.”
― Friedrich Max MüllerIndia: What Can it Teach Us? A Course of Lectures Delivered before the University of Cambridge

*

“Now let us look to the ancient inhabitants of India. With them, first of all, religion was not only one interest by the side of many. It was the all-absorbing interest; it embraced not only worship and prayer, but what we call philosophy, morality, law, and government, —all was pervaded by religion. Their whole life was to them a religion—everything else was, as it were, a mere concession made to the ephemeral requirements of this life.”
― Friedrich Max MüllerIndia: What it Can Teach Us

 

*

சுருக்கமாகச் சொல்லப் போனால் உலகின் வரலாறையே வேதத்திலிருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் மாக்ஸ்முல்லர்.

எதை எடுத்துக் கொண்டாலும் சரி, மதம், மொழி, பழைய வரலாறைச் சொல்லும் புராணம், தத்துவம், பழக்க வழக்கங்கள், சட்டம் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சரி, நீங்கள் இந்தியாவிற்குத் தான் போக வேண்டும். ஏனெனில் இந்தியாவில், இந்தியாவில் மட்டும் தான் அந்த அறிவு பொக்கிஷமாகக் காக்கப்பட்டு வந்திருக்கிறது.

இந்தியாவில் மதம் என்பது ஒரு அம்சம் மட்டும் என்பதல்ல; அது வழிபாடு, பிரார்த்தனை என்பது மட்டுமல்ல; தத்துவம், நீதி, சட்டம், அரசு ஆகிய அனைத்தும் மதத்தில் பரவி இருக்கிறது. அவர்களுக்கு வாழ்க்கை முழுவதும் மதம் தான்.

 

இப்படி இந்தியாவை ஓங்கிப் புகழ்ந்து ஹிந்து மதத்திற்குப் புகழாரம் சூட்டி விட்டார் மாக்ஸ்முல்லர்.

*

அறுபதாவது வயதில் இப்படி இந்தியாவை மாக்ஸ்முல்லர் புகழ்ந்த போது விவேகானந்தருக்கு வயது 20.

அவர் நரேந்திரன் என்ற பழைய பெயரிலிருந்து விவேகானந்தராக மாறி சிகாகோ கலைக் கழகத்தில்  சர்வ மத மகாசபையில் உலகம் வியக்கும் சொற்பொழிவை ஆற்றிய ஆண்டு 1893.

அப்போது விவேகானந்தரின் வயது 30.

மூன்று வருடங்கள் கழித்து 1896ஆம் ஆண்டில் 28-5-1896 அன்று விவேகானந்தரை மாக்ஸ்முல்லர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு பற்றியும் மாக்ஸ்முல்லர் பற்றியும் விவேகானந்தர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார்.

அதை அடுத்துப் பார்ப்போம்.

பிறகு ஒட்டுமொத்தமாக அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாக அலசிப் பார்த்தால் மாக்ஸ்முல்லர் மர்மம் விடுபடும், இல்லையா?!

****               தொடரும்

 

 

 

நகைச்சுவை மன்னன் மஹேந்திர பல்லவன் (Post No.4434)

Written by London Swaminathan 

 

Date: 26 NOVEMBER 2017

 

Time uploaded in London- 9-09 am

 

 

Post No. 4434

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

அப்பர் என்னும் திருநாவுக்கரசரைப் படாதபாடு படுத்திய மன்னன் மஹேந்திரபல்லவன். சைவ சமயத்திலிருந்து சமணத்துக்குத் தாவி மீண்டும் சைவத்துக்கே திரும்பிய கட்சி மாறி; இக்கால ஆயாராம், கயாரம் கட்சிமாறிகளுக்கு முன்னோடி.

அப்பர் காலம் வரை நிலவிய அழியும் கோவில்களை அகற்றி முதலில் குகைக் கோவில்களை நிறுவியவன். திருச்சி வரை ஆட்சியை விஸ்தரித்து திருச்சி அருகில் பல கோட்டைகளை நிறுவியவன். மாபெரும் சம்ஸ்கிருத பண்டிதன்; பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுவின் மகன். வாதாபி கொண்ட நரசிம்ம பல்லவனுக்குத் தந்தை.

 

ஷேக்ஸ்பியருக்கும் முன்னால் காமெடி (Comedy) எழுதி புகழ்பெற்றவன்.

பாஷா, சூத்ரகன், காளிதாசன் முதலானோர் எழுதிய நாடகங்களில் நகைச்சுவை (comedy) நடிகர்கள் (விதூஷகன்) உண்டு. ஆயினும் முழுக்க முழுக்க முதல் காமெடி நாடகம் எழுதியவன் இவனாகத்தான் இருக்க வேண்டும்.

இவன் எழுதிய நகைச் சுவை நாடகத்தின் பெயர் மத்த விலாசப் பிரஹசனம்.

 

காவியக் கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை விற்பன்னன். 1400 ஆண்டுகளுக்கு முன்னர் பல் கலை வித்தகன், ஒரு மாபெரும் மன்னனாக விளங்கமுடியும் என்பதற்கு இவன் ஒரு சான்று. வடக்கில் ஒரு போஜ மன்னன் என்றால் தெற்கில் ஒரு மஹேந்திர பல்லவன்.

 

மஹேந்திர பல்லவன் சகல கலா வல்லவன். இதோ அவனது பட்டப் பெயர்களையும் விருதுகளையும் பாருங்கள்:-

 

மத்தவிலாஸன்= ஆனந்த ஆட்டக்காரன்

குணபரன்= நற்குண நாயகன்

அவநிபாஜனன்= பூமியாகிய பாத்திரத்தில் தன் புகழை நிரப்பியவன்

சத்ரு மல்லன்= பகைவரை புறங்காட்டச் செய்த மாவீரன்

லளிதாங்குரன்= பல்லவ குல மரத்தின் இளம் தளிர்

விசித்திரசித்தன்= புதுமைகளைப் படைப்போன், சிந்திப்போன்

ஸங்கீர்ணஜாதி=பல நறுமணம் கமழும்ஜாதி மலர் போன்றவன்

சேதக்காரி= நினைத்தை முடிப்பவன்

பிரஹசனம் என்பது நகைச்சுவை நாடகம்; இதில் மூன்று வகை உண்டு:சுத்தம், விகிர்தம், சங்கீர்ணம்; அவைகளில், மத்தவிலாசப் பிரஹசனம் , சுத்தப் பிரஹசனம் வகையினது.

 

கதைச் சுருக்கம் பின்வருமாறு:-

காபாலி ஒருவனும், பாசுபதன் ஒருவனும், ஒரு பௌத்த பிக்ஷுவும், பைத்தியக்காரனும், சூத்திரதாரனும், காபலிகனுடைய காதலியும் ஆகிய அறுவர் இதில் நடிப்பவர்கள் ஆவர். அவர்கள் நகைச்சுவை வசனம் மொழிந்து அனைவரையும் மகிழ்விப்பர்.

 

நாடக சூத்திரதாரி முன்னுரை வழங்கிய பின்னர், காபாலியும் அவனது காதலியும் காஞ்சீபுர வீதிகளில் உலா வருவதுடன் காட்சி துவங்குகிறது.

 

முதல் காட்சியில் காபாலிகன் அவன் காதலி தேவசோமையுடன் வாதாடுகிறான். தனது பிக்ஷை ஏற்கும் கபாலத்தைக் காணவில்லை என்று சொல்கிறான். அதைத் தேட முயற்சி செய்கின்றனர்.

 

இரண்டாவது காட்சி:-மதுக்கடை வருணனை

மூன்றாம் காட்சி:- அவ்வழியே வந்த சாக்கிய (பௌத்த) பிஷுவிடம் இருந்த கப்பரை (கபாலம்) தன்னுடையது என்று பிடுங்க, அந்தப் பக்கம் வந்த பாசுபதனிடம் இருவரும் தங்கள் வழக்கை முறையிடுகின்றனர்

நாலாம் காட்சி:பைத்தியக்காரன் ஒருவன், ஒரு வெறி நாயிடமிருந்து பிடுங்கிய

கப்பரையுடன் வருகிறான்; அ தைக் கண்ட காபாலிகன் மகிழ்கிறான்.

பின்னர் அனைவரும் சமாதானமாகச் செல்கின்றனர். இது சம்ஸ்கிருத மொழியில் அமைந்த நாடகம். நாடகத்தில் மஹேந்திரனின் பட்டப்பெயர்கள், விருதுகள் அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. குடிகாரன் பேச்சு,பைத்தியக்காரன் பேச்சு ஆகியவற்றில் நகைச்சுவை ததும்புகிறது.

TAGS:– மத்தவிலாசப் பிரகசனம், மகேந்திர, பல்லவன், மஹேந்திர,

நகைச்சுவை, நாடகம், மன்னன்

 

–Subham–

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

பிராமணன் ராவணன், ராவணன் பிராமணன்–கம்பர், அப்பர் செப்பல் (Post No.4393)

 

 Written by London Swaminathan 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 18-21

 

 

Post No. 4393

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

பூணூல் அணிந்த ராவணனை, “இரா+வண்ணன்= இருட்டு போலக் கருப்பு நிறத்தன்” என்று சொல்லி அவனுக்கு திராவிட முத்திரை குத்தும் அறிவிலிகள் உலகில் உண்டு! இப்படிப் பிரித்தாளும் சூட்சி உடையோர் தமிழ் நாட்டில் காலடி எடுத்து வைப்பர் என்று முன் உணர்வால் அறிந்து இராவணனுக்கு பிராமணன் என்று ‘அக்மார்க்’ முத்திரை வைத்துவிட்டனர் அப்பரும் கம்பரும். ஒருவர் சுமார் 1500 ஆண்டுகளுக்கும் மற்றொருவர் 1000 . ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தவர்.

 

 

அப்பர் நாலாம் திருமுறையில் ராவணன் பற்றிச் சொல்லுகையில் அவனுடைய பூணூலையும் சேர்த்துப் பாடுகிறார்.

 

அசுரர்கள் ராக்ஷசர்கள் தேவர்கள், நாகர்கள் முதலியோர் , ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று நம் வேத, இதிஹாச புராணங்கள் பேசும்; ஆனால் வேற்றுமை பாராட்டி இந்துக்களைப் பிரிக்க விரும்பும் அரசியல்வாதிகளும், பிற மதத்தினரும் ஒரு சாராரை திராவிடர்கள் என்றும், பழங்குடி மக்கள் என்றும் சொல்லிப் பிரித்தாளுவர்.

 

எல்லாக் கதைகளிலும் சிவனிடமோ, பிரம்மாவிடமோ அசுரர்களும் வரம் வாங்கினர். அவர்களும் ஒரே கடவுளை வணங்கினர்; அந்தக் கடவுளரும் பாரபட்சமின்றி வரம் ஈந்தனர். ஆனால் உலக விதி, ‘அறம் வெல்லும், பாவம் தோற்கும்’ என்பதாகும். இதனால் வரம் பெற்றும் கூடத் தீயோர் வெல்ல முடியாது. ராவணனும் பல வரங்களைப் பெற்றும், செய்த தவற்றினால் உயிர் இழந்தான். ராவணன் பூணூல் பற்றி அப்பர் தரும்  தகவல் இதோ:

 

மாலினா ணங்கையஞ்ச மதிலிலங் கைக்குமன்னன்

வேலினான் வெகுண்டெடுக்கக் காண்டலும் வேத நாவன்

நூலினா  னோக்கிநக்கு நொடிப்பதோ ரளவில்வீழக்

காலினா  லூன்றியிட்டார் கழிப்பாலைச் சேர்ப்பனாரே

பொருள்:-

பெருமையுடைய உமா தேவியார் அஞ்சுமாறு, முப்புரிநூல் அணிந்த திரு மார்பினரும், வேதம் ஓதும் திரு நாவினை உடையவருமான இராவணன், கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க,  ஈசன் ஒரு நொடிப்பொழுதில் அவ்வரக்கன் அஞ்சுமாறு திருப்பாத விரலால் அமுக்கியவர். அந்த ஈசன் உறையும் இடமே கழிப்பாலை என்னும் திருத்தலம்

 

 

வேத நாவர்- மறை ஓதும் நாவினை உடையோர்

நூலினான் – நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன்

 

இரண்டும் இராவணனைக் குறித்தன எனக் கொண்டு, சாம வேத கானம் பாடியவன், நூல்களை உணர்ந்தவன், பூணூல் அணிந்தவன் என்றுரைத்தல் பொருத்தம் உடைத்து என்று தருமபுர ஆதீனப் புலவரின் தேவார உரை கூறும்.

 

இதி வேதம் ஓதுதலையும், முப்புரி நூல் அணிவதையும் சிலர் சிவன் மீது ஏற்றிச் சொல்லுவர். அப்படிச் சொல்லும் வழக்கம் அரிது. அப்படிச் சொன்னாலும் அதை பிரம்மனுக்கே ஏற்றிச் சொல்லுவர்.

 

பூணூலும் வேத நாவும் ராவணனையே குறிக்கும் என்பதற்கு கம்ப ராமாயணம் துணை புரியும்; இதோ கம்பன் கூற்று:–

வையம் தந்த நான்முகன் மைந்தன் மகன் மைந்தன்

ஐயன் வேதம் ஆயிரம் வல்லோன் — என்று சுந்தர காண்ட நிந்தனைப் படலத்தில் ராவணனை வருணிக்கிறான் கம்பன்; இதன் பொருள்:-உலகைப் படைத்தவன் பிரம்மன்; அவன் மகன் புலஸ்தியன்; அவன் மகன் விசிரவசு; அவன் மகன் ராவணன்; ஆயிரம் கிளைகளை உடைய சாம வேதத்தில் வல்லவன்.

பிரம்மாவை வேதியன், பிராமணன் என்றே இலக்கியங்கள் போற்றும்

அக்க குமாரன் வதைப் படலத்தில் கம்பன் சொல்லுவான்:

அயன் மகன் மகன் மகன் அடியில் வீழ்ந்தனள்

மயன்மகள் வயிறு அலைத்து  அலறி மாழ்கினாள் என்று. இதன் பொருளாவது– மயனுடைய மகளான மண்டோதரி தன் கணவனான ராவணனிடம் சென்று வயிற்றில் அடித்துக்கொண்டு அலறினாள்– சீதையை விட்டுவிடு என்று. ராவணனுக்குக் கம்பன் கொடுக்கும் அடை மொழி– பிரம்மனின் மகனான, புலஸ்தியன் மகனான, விசிரவசுவின் மகனான ராவணன்  என்பதாகும்.

அதே சுந்தர காண்டத்தில் பிணிவீட்டு படலத்தில்,

அந்தணன் உலகம் மூன்றும் ஆதியின் அறத்தின் ஆற்றல்

தந்தவன் அன்புக்கு ஆன்ற தவநெறி உணர்ந்த தக்கோய்” என்று சொல்லுவான்; உலகங்கள் மூன்றையும் ஆதிகாலத்தில் படைத்த அந்தணன் பிரம்மாவின் வழி வந்தவனே! என்று  ராவணனை போற்றும் வரிகள் இவை. ஆக கம்பராமாயணம் முழுதும் ராவணன் ஒரு பிராமணன் என்று அடிக் கோடிட்டுக் கொண்டே செல்வான் கம்பன். இதன் காரணமாகவே தேவாரத்துக்கு உரை எழுதிய பெரியாரும் பூணுல் அணிந்ததையும் வேத பாராயணம் செய்ததையும் அப்பர் பாட்டில் ராவணனுக்கு உரித்தானதாகச் சொல்கி றார். நாம் அதை ஏற்பதில் தயக்கம் ஏதுமில்லை.

 

சுபம் –

 

ஒரு கிராமத்தின் சோகக் கதை! (Post No.4391)

Written by S.NAGARAJAN

 

 

Date: 13 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-35 am

 

 

Post No. 4391

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures are not related to the story.

 

 

 

ஜிஹாதி கொடுமை

 

ஒரு கிராமத்தின் சோகக் கதை!

 

ச.நாகராஜன்

 

ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் வி.எஸ். கர்னிக் கூறுகின்ற சோகக் கதை இது.

ஒரு கிராமத்தில் பிராமணர்கள், ராஜபுத்திரர்கள், பனியா, தேலி மற்றும் ஹரிஜன்கள் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட மிகவும் சந்தோஷமாகவும் அன்யோன்யமாகவும் வாழ்ந்து வந்தனர்.

 

ஒரு நாள் ஒரு முல்லா முஸ்லீம் தனது மனைவியுடனும் எட்டுப் பிள்ளைகளுடனும் அந்த கிராமத்திற்கு வந்தார். கிராம அதிகாரியிடம் அவர்கள் சென்றனர். அவர் ஒரு ராஜபுத்திரர். அந்தக் கிராமத்தில் தங்களை வசிக்க அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சினர்.

 

தேலி மற்றும் ஹரிஜன சமூகங்கள் இதற்கு எதிர்ப்பைத் தெரிவித்தனர். மற்ற அனைவரும் முஸ்லீம் குடும்பத்தைத்  அனுமதிக்கலாம் என்றனர்.

 

சில வருடங்கள் கழிந்தன. எட்டுப் பிள்ளைகளும் கல்யாண வயதை அடைந்தனர். முஸ்லீம் முல்லா கிராமத் தலைவரை அணுகினார். “ஹூஸூர், பிள்ளைகளுக்குத் திருமணம் செய்ய வேண்டியிருக்கிறது.எனக்கு ஒரே ஒரு வீடு தான் இருக்கிறது.” என்றார்.

 

ராஜபுத்திர தலைவர் தரிசாகக் கிடந்த நிலப்பகுதியை அவருக்குத் தந்து, கூறினார்: “இதில் ஒரு வீட்டைக் கட்டிக் கொள்ளுங்கள்.”

பனியாவிடன் சென்ற முல்லா அவரிடம் பணத்தைக் கட்னாகப் பெற்றுக் கொண்டார்.

 

காலம் கழிந்தது. எட்டுப் பிள்ளைக்ளுக்கு 72 பிள்ளைகள் பிறந்தன. 30 வருடங்களுக்கு அந்த கிராமத்தின் ஜனத்தொகையில் 40 சதவிகிதம் முஸ்லீமாக இருந்தது.

 

இப்போது முஸ்லீம் இளைஞர்கள் அவர்களது கலாசாரத்தின்படி ஹிந்து இளைஞர்களுடன் சண்டை போடத் துவங்கினர். ஹிந்து பெண்களுக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

மெல்ல மெல்ல பிராமணர்களும் பனியாக்களும் அந்த கிராமத்தை விட்டுச் சென்றனர்.

 

ஒரு நாள் முல்லா அந்த கிராமத்தின் பிரதான கோவிலை இடித்தார். உடனே ராஜபுத்திரர்கள் இதற்கு வெகுவாக் ஆட்சேபணை தெரிவித்தனர்.

 

30 ஆண்டுகளுக்கு முன்னர் ஒண்டிப் புக்லிடம் கேட்க வந்த முஸ்லீம்கள், “ அல்லாவின் பணியை எதிர்க்கும் எவரும் துண்டு துண்டாக வெட்டப்படுவர்” என்றனர்.

 

ராஜபுத்திரர்களும் கிராமத்தை விட்டு அகன்றனர். அவர்கல் தேலி மற்றும் ஹரிஜன்களை நோக்கி, “உங்களின் பேச்சை அன்றே கேட்டிருந்தால் இந்த நிலைக்கு வந்திருக்க மாட்டோம். இந்த கிராமத்தின் பெயர் இப்போது பஞ்ச்வடி என்ற பெயரிலிருந்து ரஹிமாபாத் என்று ஆகி விட்டது.” என்றனர்.

 

இந்த கிராமம் மஹ்ராஷ்டிர மாநிலத்தில் அமராவதி மாவட்டத்தில் உள்ளது.

இது ஒரு உண்மைச் சம்பவம்.

 

இதே போன்ற பல சம்பவங்கள் அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய  ப்ங்களாதேஷின் எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் நடந்துள்ளன.

 

முஸ்லீம் ஜனத்தொகை அதிகமாக் உள்ள் உத்தர பிரதேசம், கேரளா மற்றும் இதர் மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் இது சர்வ சகஜம்.

 

பிரிவினைக்குப் பிறகு காஷ்மீர் பண்டிட்களுக்கு இந்த நிலை ஏற்பட்டது.

ரோஹிங்யா முஸ்லீம்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதித்தால் இந்த வேலை இன்னும் தீவிரமாக நடக்கும்.

தாராள் மனமுடையவர்களும், போலி செகுல்ரிஸ்டுகளும் மனித உரிமைக் கழகப் போராளிகளும்  இந்திய நீதித் துறையும் ரோஹிங்யாக்களுக்கு ஆதரவு தந்தால் . அடடா, பாராட்டுக்கள்,பாராட்டுக்கள்!

 

கொஞ்ச காலம் பொறுத்திருங்கள், ஐஎஸ ஐ எஸ் உங்களைத் துரத்தி விடுவார்கள்.பாரதத்தில் வசிப்போருக்கு பொறுமைக்கான் நோபல் பரிசு கிடைத்து விடும்.

*

மனம் நொந்து எழுதியுள்ள ஒரு உண்மைச் சமபவம் நம் கண்களைத் திறக்கட்டும். 11-9-2017 அன்று தனது பிளாக்கில இதை எழுதியுஅ வி.எஸ்.கர்னிக் நிர்வாகத் துறையில் பி.ஹெச் டி பட்டம் பெற்றவர்.

 

தனது கண்களால் கண்ட சொந்த அனுப்வத்தை இப்படி எழுதியுள்ளார்.

 

இதன் ஆங்கில மூலத்தைக் கீழே தருகிறோம்:

*

A (Retired) Major General’s observation : The True Story worth studying/ analyzing and ensuring this does not happen in future: Major General V S karnik (Retired) PhD ( Management) writes on 2017-09-11:

 

In one village, Brahamans, Rajputs, Baniyaas, Teli, and Harijan, all from different castes, were happily and peacefully staying. One day, one Muslim (Mulla) with his wife and their eight children came to that village.

 

They went to village pramukh, a Rajput man, and begged him that they be allowed to stay in that village. Except Teli and Harijan community, all agreed to allow the Muslim family to stay there.

 

After some years the eight children grown up and were of marriageable age. The Muslim man first went to Rajput and requested that “Huzoor,Baccho ki shadi hone wali hai. I have only one house.” The Rajput gave him some uncultivated land, and said that you build a house on it. Then the Muslim went to Baniya, and borrowed money.

 

After some time, his eight children had 72 children and after about 30 years the Muslim population of that village was 40 % of total population.

 

Now the Muslim youths, as per their culture, started having fights with Hindu youths and harassing Hindu girls. Slowly Brahmins and Baniyas left the village. One day Mulla started destroying the main temple of Hindus. To this, Rajputs of the village objected. The Muslim, who came 30 years ago, said that anyone objecting about the work for Allah, will be cut into pieces. The Rajputs also left the house.

 

While leaving the village, they said to Harijan and Telis, if we had listened to your advice and not trusted the Mulla, we would have not come to this stage of leaving the village. This village name is, now, changed from Panchvati to Rahimabad. This village is in Maharashtra, in Amvravti district. This is a true story.

 

(Similar experiences are not scarce but of common occurrence in Assam, West Bengal, districts bordering Bangladesh and many other districts with large Muslim population in UP, Kerala and other states). It happened after partition. It happened with Kashmiri Pundits. It is happening, now, in W. Bengal. Get Rohingyas Muslims in India and this process will speed up. Congratulations to liberals, secularists, Human right protectionists and Judiciary of India, for supporting the cause of Rohingyas. You all wait for some time, when you all will be driven out by ISIS. Bharatvasis should get “Noble Prize” for tolerance.

 

 

THANKS TO TRUTH 27-10-2017 ISSUE

***

 

 

ஆஷ் கொலை வழக்கு: பாரதியார் நூல்கள் – PART 42 (Post No.4364)

Written by S.NAGARAJAN

 

 

Date: 4 NOVEMBER 2017

 

Time uploaded in London- 6-18

 

 

Post No. 4364

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

பாரதி இயல்

 

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42

ஆஷ் கொலை வழக்கு – ரகமி எழுதியுள்ள ஆய்வுத் தொடர்

 

ச.நாகராஜன்

 

 

மஹாகவி பாரதியாரின் வாழ்க்கை பன்முகப் பரிமாணம் கொண்ட ஒன்று. சிறு வயதிலேயே அவர் மறைந்தார் எனினும் அவர் வாழ்க்கையில் அவர் சகோதரி நிவேதிதா, பால கங்காதர திலகர், மஹாத்மா காந்திஜி, அரவிந்தர், வ.உ.சி., வ.வே.சு. ஐயர் போன்ற ஏராளமான சரித்திரம் படைத்த பல பெரியோர்களைச் சந்தித்தார்.

சுதந்திரம் அடையத் தீவிரமாக உழைத்த புரட்சிவாதிகளிலிருந்து அஹிம்சை போதித்த காந்தி மகான் வரை அவரது வாழ்க்கை அனைவரையும் கண்டது. ஆனால் எதிலும் ஒரு சமச்சீர் தன்மையைக் கொண்டிருந்தார் அவர். அது தான் அவர் வாழ்க்கையில் நாம் காணும் ஒரு அற்புதம்.

இந்த வகையில் ஆஷ் கொலை வழக்கில் அவரும் சம்பந்தப்படுத்தப்பட்டார் என்பது சரித்திரம் தரும் தகவல்.

 

 

பழம் பெரும் எழுத்தாளரான ரகமி (முழுப்பெயர் ரங்கஸ்வாமி) தன் நேரம் உழைப்பு ஆகியவற்றை அர்ப்பணித்து ஆஷ் கொலை வழக்கு பற்றி முழுதும் ஆராய்ந்தார்.

 

 

அதன் அடிப்படையில் தினமணி கதிர் வார இதழில் 3-6-1984 தொடங்கி ஒரு நெடுந்தொடரை எழுதினார். இந்தத் தொடர் புத்தக வடிவில் வெளியிடப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

(கதிர் வார இதழிலிருந்து தொகுத்து வைத்துள்ள கட்டுரைகள் என்னிடம் பத்திரமாக உள்ளன.)

*

அந்த நூலிலிருந்து பாரதியார் பற்றிய சில முக்கியப் பகுதிகளை  மட்டும் இங்கு தருகிறேன்.

 

1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதியன்று கலெக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சி ஐயர் மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொலை செய்தார்.

 

1911, செப்டம்பர் 11ஆம் தேதி, சனிக்கிழமையன்று (இது பின்னால் பார்க்கும் போது – செப்டம்பர் 11 – பாரதி மறைவு நாளாக அமைகிறது!) ஆஷ் கொலை சதி வழக்கு கேஸின் முதல் நாள் விசாரணை துவங்கியது.

 

14 பேர்கள் குற்றம் சாட்டப்பட்டு நிறுத்தப்பட்டனர். அனைவரும் தங்கள் மீது சாட்டப்பட்ட குற்றத்தை மறுத்தனர்.

 

பப்ளிக் பிராசிக்யூடர் நேபியர் தனது வாதத்தை முன் வைத்துக் கூறுகையில், “ திருநெல்வேலி கலெக்டர் ஆஷின் கொலைக்கு சதித் திட்டங்கள் புதுவையிலிருந்து ஆரம்பமாகியது என்று சொல்வதற்கு ஏற்றாற் போல, முதல் குற்றவாளி நீலகண்டன் புதுவையில் கவி பாரதியார் நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையில் சம்பந்தப்பட்ட பின் ‘விஜயா’ மற்றும் ‘சூரியோதயம்’ பத்திரிகைகளில் வேலை செய்த போது, அவைகள் சர்க்காரால் தடுக்கப்படவே, பின்னர் அவர், ‘கர்மயோகி’, ‘பால பாரதா’, தர்மா’ பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தார்.

 

 

புதுவையிலிருந்த தீவிரவாதிகளுடன் நீலகண்டனும், கொலையாளி வாஞ்சியும் நெருங்கிப் பழகினர். இதில் வி.வி.எஸ் ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீனிவாசாச்சாரி, நாகசாமி இவர்கள் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டிற்கு விரோதமான அபிப்ராயங்கள் கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் விலாசங்களுக்கு வரும் கடிதங்கள் வெளிநாட்டுப் பிரசுரங்களைப் பரிசீலனை செய்த பிறகே அவர்களிடம் பட்டுவாடா செய்யும்படி புதுவை போஸ்ட்மாஸ்டர் எம்.கே.ஸ்ரீநிவாசய்யங்காருக்கு, கிரிமினல் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகள் உத்திரவு செய்திருந்தனர். இதன்படியே எல்லாக் கடிதங்களும் பரிசீலனை செய்தே அவர்களிடம் டெலிவரியும் செய்யப்பட்டு வந்தது. சில சமயங்களில் சுப்ரமண்ய பாரதியாரே தன் பெயருக்கு வரும் தபால்களை வாங்குவதற்காக தபாலாபீசுக்கு வந்து விடுவார். அவர் சற்று முன் கோபக்காரர். தபால்கள் பரிசீலனை செய்து சற்று தாமதமாகப் பட்டுவாடா செய்வதையும் பொறுக்காமல் கோபித்துக் கொண்டு, “சீ.. சீ..! கேவலம் நாயும் கூட இந்தப் பிழைப்புப் பிழைக்குமே” என்று சொல்வதுண்டு.

 

 

இந்தச் சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்துப் புதுவைக் கடற்கரையில் வி.வி.எஸ். ஐயர், சுப்பிரமணிய பாரதி, மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரி, வாஞ்சி இவர்கள் கும்பலாகப் பேசிக் கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாகத் திடீரென இவர்களைச் சந்தித்த போஸ்ட்மாஸ்டர் ஸ்ரீநிவாசய்யங்காரிடம் வி.வி.எஸ் ஐயர் தங்கள் பெயருக்கும் வரும் நிருபங்களைத் தாமதிக்காமல் உடனுக்குடன் டெலிவரி செய்ய வேண்டுமென்று சாதாரணமாகக் கூறினார். பக்கத்திலிருந்த வாஞ்சி, “எதற்காக நாம் போஸ்ட்மாஸ்டரிடம் கெஞ்சிக் கேடக வேண்டும்? அவர் ஒழுங்காகத் தபால்களைத் தாமதிக்காமல் தந்தால் அவருக்குத் தான் நல்லது. இத்தனையும் மீறி அவர் தாமதித்தால், நாம் அவரையே இந்த ஊரிலேயே தீர்த்துக் கட்டி விட்டால் போச்சு!” என மிக்க ஆத்திரத்தோடு சொன்னான்.”

 

நேபியரின் வாதம் இப்படி நீள்கிறது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

பின்னால் நீலகண்ட பிரம்மசாரி என்று  அழைக்கப்பட்ட நீலகண்டன் (முதல் குற்றவாளி) தன் வாழ்க்கையில் வெறுப்புற்றதைக் குறிப்பிட்டு தன் ஸ்டேட்மெண்டில் கூறியது:

“கடைசியில் புதுவைக்குச் சென்று அங்கு நான் பழகிய தீவிரவாதி நண்பர்களிடமெல்லாம் என் நிலைமையைக் கூறினேன். எனக்குத் தகுந்த ஆதரவு இல்லை. மன விரக்தியடைந்த நான் சிலகாலம் ஹரித்துவாரத்திற்குச் சென்று  சிவனேயென அமைதியாக இருக்க எண்ணி என்னுடன் கூட வரும்படி கவி சுப்ரமணிய பாரதியாரைக் கூப்பிட்டேன். அவரும் என்னுடைய நிலைமையில் இருப்பதாகக் கூறினதும் நான் அவரையே என்னுடன் வட நாட்டிற்கு வந்து விடு என்றழைத்தேன். அதற்கு அவர் தன் பேரில் சென்னையில் ஏதேனும் புது வாரண்டுகள் பிறந்து அவைகள் பெண்டிங்கிலிருக்கிறதா என்ற விவரமறிந்து பின்னர் முடிவு கூறுவதாகச் சொல்லி, சென்னை போலீஸ் கமிஷனருக்கே பகிரங்கமாகக் கடிதம் எழுதிக் கேட்டார்.

 

 

போலீஸ் கமிஷனரிடமிருந்து வந்த பதிலில் வாரண்டுகள் ஒன்றும் புதிதாகப் பிறப்பிக்கப்படவில்லை என்று வந்ததும், அவருடைய குடும்ப நிலையின் காரணமாகத் என்னுடன் வட இந்தியாவுக்கு வரவில்லை.” (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 3)

 

*

 

கொலைவழக்கின் தொடர்ச்சியாக பிராசிகியூஷன் சாட்சியாக முன்சீப் பரமேஸ்வரய்யர் விசாரிக்கப்பட்டார். அவர் கூறியது:

“ போன வருஷம் ஜூலையில் நான் செங்கோட்டையில் மாஜிஸ்டிரேட்டாக இருந்தேன். கலெக்டர் ஆஷ் கொலை விஷயமாகப் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரய்யரும், மதுரை இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து வாஞ்சியின் வீட்டைச் சோதனையிட்டபோது கூட இருந்தவன். துண்டுப் பிரசுரங்களைக் கைப்பற்றினோம்.

 

 

கிடைத்த அக்கடிதங்கள் மூலம் செங்கோட்டையிலுள்ள ‘சாவடி’ அருணாசலம் பிள்ளையின் வீட்டையும் சோதனையிட்டோம்.அங்கு ‘ஜென்ம பூமி’ புத்தகங்களும், சில பாடல்கள் அச்சடித்திருந்த நோட்டீஸ்களும் அகப்பட்டன. அப்பாடல்களில் கலெக்டர் விஞ்சை வெறி பிடித்தவன் போல சுதேசி மக்களை மதிப்பின்றிப் பேசுவதாக வெளியிட்டிருந்தது. சுதந்திரம் கேட்கும் பாரதவாசிக்கு ஆங்கிலேயன் கேட்கும் முறையில் கலெக்டர் விஞ்ச், வ.உ.சிதம்பரம் பிள்ளையைக் கேட்பது போல எழுதப்பட்டிருந்தது. நந்தன் சரித்திரத்தில் நந்தனுடைய சிதம்பர வாஞ்சையைப் பற்றி மற்றவர்கள் வந்து சொல்லக் கேட்டு, வேதியர் மகா கோபங்கொண்டு நதந்னை நோக்கிச் சொல்கிறார்: “சேரி முற்றுஞ் சிவபக்தி பண்ணும்படி வீட்டையாம் அடியிட்டையாம்” என்பது முதலான வார்த்தைகள் கூறிப் பயமுறுத்துகிறார். இதன் குறிப்பைத் தழுவி திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்ச், சிதம்பரம் பிள்ளைக்குக் கூறும் வரி இது

 

 

“நாட்டிலெங்கும் சுதந்திர வாஞ்சையை நாட்டினாய் -கனல்

மூட்டினாய்”

 

பயமுறுத்திக் கேட்கும் கண்ணிகள் எழுதப்பட்டிருந்தன. இதற்குப் பதில் கூறுவது போல் கலெக்டர் விஞ்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை கூறும் மறுமொழியாக உள்ளது: “சொந்த நாட்டிற் பரர்க்கடிமை செய்தே துஞ்சிடோம் – இனி -அஞ்சிடோம்”  என்று கூறியிருந்தது.

மூன்றாவதாக  சுயராஜ்யம் கேட்கும் பாரதவாசிக்கு  ஆங்கிலேய உத்தியோகஸ்தன்  சொல்கிறான்.

 

 

நந்தனார் சரித்திரத்திலுள்ள , :மாடு தின்னும் புலையா – உனக்கு

மார்கழித் திருநாளா?” என்று வரும் வர்ண மெட்டில் உள்ளது.

‘தொண்டு செய்யுமடிமை  – உனக்கு

சுதந்திர நினைவோடா?” என்னும் பாடலையும் சேர்த்து இம்மூன்று பாடல்களுக்கும் எக்ஸிபிட் நம்பர் கொடுத்து கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது” என்றார்.

 

 

அச்சமயம் சீஃப் ஜஸ்டிஸ் அம்மூன்று பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கம் கேட்டார். அம்மூன்று பாடல்களும் ஏற்கனவே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பதைப் பப்ளிக் பிராசிகியூடர் நேப்பியர் கோர்ட்டில் எடுத்துக் காட்டினார். அதனை பப்ளிக் கோர்ட்டில் படிக்கும்படி உத்தரவிட இரண்டு பேர்கள் படித்தனர்.

 

ஒருவர் தமிழில் ஒரு வரியைப் படிக்க, இதற்குச் சரியான மொழிபெயர்ப்புடன், விளக்கத்தையும் மற்றொருவர்  ஆங்கிலத்தில் கூறினார்.

 

இம்மூன்று பாடல்களையும் படித்து முடிக்க  சுமார் ஒன்றரை மணி நேரமாயிற்று. கோர்ட்டு முடிவதற்கும் மாலை மணி 5 ஆவதற்கும் சரியாக இருந்தது. இத்துடன் கோர்ட்டு கலைந்தது. (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 7)

 

*

 

 

நீலகண்ட பிரம்மச்சாரி மாடசாமி பற்றிக் கூறும் தகவல்கள் சுவையானவை. மாடசாமி தப்பிப் போனவர் போனவரே. அவரைப் பற்றி இன்று வரை ஒரு தகவலும் யாருக்கும் தெரியாது!

 

நீலகண்ட பிரம்மச்சாரி தனது வாக்குமூலத்தில், :நான் மறுபையும் புதுவைக்குச் சென்று நான் எழுதிய கட்டுரைகளை கவி சுப்பிரமணிய பாரதியிடம் காட்டினேன். அவர் அவைகளை அப்படியே பிரசுரிக்க வேண்டாமென்று சொல்லி அதில் சிலவற்றைத் திருத்தித் தந்ததை புதுவையிலிருந்து வரும் பேப்பர்களுக்குக் கொடுத்து விட்டு மிகுதி கட்டுரைகளை புத்தகமாக வெளியிடச் சென்னையில் “கார்டியன்” பிரஸ்ஸில் கொடுத்தேன்’ என்கிறார் (ஆஷ் கொலை வழக்கு -அத்தியாயம் 9)

*

இப்படி ஆஷ் கொலை வழக்கு முழுவதும் சுவைபட நூலில் கூறப்பட்டிருக்கிறது.

 

அனைத்து ஆவணங்களையும் முறைப்படி ஆராய்ந்து அதை சுவை மிகுந்த சரித்திர நூலாக்கித் தருகிறார் ரகமி.

பாரதியார் பற்றிய பல விவரங்களை இதில் காண முடிகிறது.

ஆனால் கோர்ட் சாட்சியங்கள் என்பதால் இவற்றைப் பல்வேறு இதர பாரதி பற்றிய நூல்களுடன் ஒப்பிட்டு கொள்வன கொண்டு நீக்குவன நீக்கலாம்.

 

நூலை எழுதி பாரதி இயலுக்கு ஒரு அரிய சேவையை செய்துள்ள ரகமியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

சுதந்திரப் போரில் தென்னக எழுச்சியையும் உச்சத்தையும் தொட்டுக் காட்டும் நூலாகவும் இது அமைகிறது.

 

பாரதி அன்பர்களுக்குச் சுவை பயக்கும் நூலாக இது இருப்பதால், உடனடியாக இதைத் தங்கள் பட்டியலில் இதை இணைக்க வேண்டுவது அவசியமான ஒன்று.

****

 

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் எங்கே? (Post No.4308)

 

 
Written by S.NAGARAJAN

 

 

Date:17 October 2017

 

Time uploaded in London- 7–47 am

 

 

Post No. 4308

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

 

ஞானபூமி பாரதம்

 

காலத்தை வென்ற நூறு கோடி கவிதைகள் – எங்கே?

 

ச.நாகராஜன்

 

1

நல்ல கவிதை சாகா வரம் பெற்றது.

காலத்தை வென்றது தான் கவிதை.

 

அனவஹித: கிமஷக்தோ

விபுதைரம்யர்தித: கிமதிரஸிக: I

சர்வகஷோபி காலம்

கிரயதி சூக்தானி ந கவீனாம் II

 

வல்லபதேவர் என்ற கவிஞரால் ஆர்யா சந்தத்தில் இயற்றப்பட்ட கவிதை இது.

பெரிய உண்மையைக் கூறும் இந்தக் கவிதையின் பொருள் இது தான்:

 

 

காலம் தன் கவனக்குறைவினால் வலிமை இழந்து விட்டதோ!
அல்லது நேர்த்தியானவற்றைப் மிகவும் போற்றுவதனால், அறிஞர்களால் அதற்கு வேண்டுகோள் விடப்பட்டதா?

அனைத்தையும் அழிப்பது தான் காலம் என்றாலும் கூட, அது கவிஞர்களின் நல்ல கவிதைகளைத் திரை போட்டு மறைப்பதில்லை (ஒளித்து விடுவதில்லை)

 

இதன் ஆங்கில் மொழியாக்கம்:

 

Is Time powerless by oversight? Is it, as a very good appreciator of excellencea, he has been requested by the wise? Time, though a destroyer of every thing, does not screen (conceal) the good sayings of poets.

Translation by A.A.Ramanathan

 

உண்மை தான்; நல்ல கவிதைகளை காலம் திரை போட்டு மறைப்பதில்லை.நல்ல கவிதைகளை காலம் சிரஞ்சீவித்வம் கொண்டதாக ஆக்கி விடுகிறது.

காலமே, உனக்கு நமஸ்காரம்!

 

2

இப்போது ஒரு கேள்வி எழுகிறது.

காலம் அழிக்கவில்லை என்றால் நமது நாட்டில் தோன்றிய கவிதைகள் எங்கே?

முதலில் எவ்வளவு கவிதைகள் தோன்றியிருக்கலாம் என்பதை ஒரு உத்தேச மதிப்பீடு செய்து பார்க்கலாம்.

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முறபட்டது வேதகாலம்.

(ஸ்வாமி விவேகானந்தரின் கூற்று இது : ஞான தீபம் மூன்றாம் பாகம்)

 

எட்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வேதத்தில் மன்னரின் கதைகள் பல உண்டு.

 

ஆக மன்னர் காலம் அப்போதிலிருந்தே தொடங்கி விட்டது.

ஒரு தலைமுறை என்பது சுமாராக முப்பது வருடம் என்று வைத்துக் கொண்டு, ஒரு மன்னரின் அரசாட்சி காலம் உத்தேசமாக முப்பது வருடங்கள் என்று வைத்துக் கொண்டு கணக்கிட்டால் எட்டாயிரம் ஆண்டுகளில் சுமார் 266 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வேண்டும்.

 

பாரதத்தில் 56 தேசங்கள் உண்டு.

 

ஆக 56 தேசங்களில் 56 X 266  = 12896 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்க வெண்டும்.

 

ஒரு மன்னனின் அரசவையில் முப்பதாண்டு காலத்தில் பத்து கவிஞர்கள் இருந்தனர் என்று வைத்துக் கொண்டால் 1,28,960 கவிஞர்கள் இருந்திருக்க வேண்டும்.

 

இவர்கள் ஒவ்வொருவரும் முப்பதாண்டு காலத்தில் வெறும் பத்து கவிதைகளே புனைந்திருந்தனர் என்று வைத்துக் கொண்டால் வரும் எண்ணிக்கை 12, 89,600.

 

பத்து தானா, சே, மோசமான மதிப்பீடு, ஆயிரக்கணக்கில் கவிதைகள் இயற்றியுள்ள புலவர்களை நமக்குத் தெரியாதா என்று கேட்டு இதை நூறு கவிதைகள் என்று வைத்துக் கொண்டால் வருவது 1,28,96,000.

 

பத்தாயிரம் ஸ்லோகங்கள் கொண்ட வால்மீகி ராமாயணம், ஒரு லட்சம் ஸ்லோகங்கள் கொண்ட் மஹா பாரதம், 18 புராணங்கள், 18 உப புராணங்கள், காளிதாஸன், பவபூதி, தண்டி, ஹர்ஷன் போன்றோர் இயற்றிய காவியங்கள் என்ற நீண்ட பட்டியலை கணக்கில் எடுத்துப் பார்த்தால் சுலபமாக ஒரு பில்லியன், அதாவது நூறு கோடி என்ற எண்ணிக்கையை நமது கவிதைகள் தாண்டி விடுகின்றன!

 

நூறு கோடி அற்புதமான கவிதைகள்!

 

ஒரு கவிதையிலேயே உயிரைக் கொடுத்து எழுத்துக்கு அக்ஷர லட்சம் பொன் கொடுத்த நாட்டில் ஒரு பில்லியன் – நூறு கோடிக் கவிதைகள் என்றால், அடடா உள்ளம் பூரிக்கிறது.

 

என்ன ஒரு அறிவு!

என்ன ஒரு அழகு!

என்ன ஒரு சொல்வளம்!

என்ன ஒரு கருத்து வளம்!

என்ன ஒரு கலை வளம்!

 

 

 

3

அந்த நூறு கோடிக் கவிதைகள் எங்கே?

காலம் அவற்றை ஒளிக்காது, மறைக்காது,அழிக்காது என்றால் இன்று அவை எங்கே?

முகமதியரின் முட்டாள்தனமான, கொடூரமான, அழிவுக் கலாசாரத்தினால் பல நூல்கள் அழிந்து பட்டன. ஒப்புக் கொள்கிறோம். ஆனால் அந்த நூல்கள் பல நாடுகளுக்கும் பரவி இருந்தன. ஆகவே அவற்றில் அழிந்தது போக பலவும் மீதம் இருக்க வேண்டுமல்லவா?

 

அவை எங்கே?

 

இருக்கின்றன! அவை இருக்கின்றன!

இதில் அந்தக் கால மொழியாகப் பரவி இருந்த சம்ஸ்கிருத நூல்களை மட்டும் பட்டியலிடப் புகுந்து தன் வாழ்நாளிம் பெரும் பகுதியை அர்ப்பணித்த டாக்டர் வி.ராகவன் நூல்களின் பட்டியல் அடங்கிய ஒரு கலைக்களஞ்சிய தொகுதியையே வெளியிட்டுள்ளார்.

 

அவருக்கு நமது உளங்கனிந்த நமஸ்காரம்.

நான்கு லட்சம் சுவடிகள் பிரிக்கப்படாமல் ஆங்காங்கு உள்ளன.

அச்சிடப்படாமல் கையெழுத்துப் பிரதிகளாக பல ஆயிர்ம் நூல்கள் உள்ளன.

 

சரஸ்வதி மஹால், புனே பண்டார்கர் நிலையம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான நிலையங்கள் பணமின்றித் தவித்து இவற்றை அரும்பாடு பட்டுப் பாதுகாத்து வருகின்றன.

 

நூறு கோடிக் கவிதைகள் என்றால் உலகின் மொத்த அறிவுக் களஞ்சியம் என்று பொருள்.

 

வளமார்ந்த ஒரு உலக சமுதாயத்தின் உன்னதமான எண்ணங்களைக் கொண்ட கவிதைத் தொகுப்புகளின்

எண்ணிக்கை என்று பொருள்.

 

எண்ணவும் (TO COUNT) இனிக்கிறது.

எண்ணவும் (TO THINK) இருக்கிறது.

பாரத அறிவுச் செல்வத்தில் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு திருக்கூட்டமாக மாறி ஏதேனும் செய்ய வேண்டாமா?

செய்ய வேண்டும்.

 

 

4

ஒரு சில கவிதைகளைப் படித்து மகிழ்ந்து சில கட்டுரைகளைப் படைத்த எனக்கே இப்படி ஒரு ஆதங்கம் என்றால் அறிஞர்களுக்கும் என்னைப் போன்ற இதர ஆர்வலர்களுக்கும் என்ன ஒரு உத்வேகம் எழ வேண்டும்.

இருக்கின்றவற்றைப் பாதுகாப்போம்.

 

இருப்பதைப் பரப்புவோம்.

 

இல்லாததைத் தேடுவோம்.

 

தேடிக் கண்டனவற்றைப் பதிப்பிப்போம்.

 

பதிக்க முன்வருவோருக்கு உதவி செய்வோம்.

 

எந்த மொழியில் இருந்தாலும் நமது கவிஞர்களின் கவிதைகளை – நூற்றொரு கோடியாக இருந்தாலும் அனைத்தையும் -மீட்டெடுப்போம்.

 

 

புவன ச்ரேஷ்டம் பாரதம்; நல்லறிவின் தலைமையகம் பாரதம்.

புனர் நிர்மாணம் செய்து பழைய தலைமையை அனைத்துத் துறைகளிலும் நிலை நாட்டுவோம்!

***