அரிய பஞ்சமுக வாத்யம்!

പഞ്ചമുഖമിഴാവ്൧

Written by London swaminathan

Research article no.1885,

Date: 24 May 2015; London Time: 7-44 am

((படங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன;நன்றி))

பஞ்சமுக வாத்யம் என்னும் தோல் கருவி ஒரு அரிய இசைக் அருவி. இது தேவாரத்தில் “குடமுழா” என்று குறிப்பிடப் படுவதிலிருந்து ஒரு காலத்தில், சோழநாட்டில் பெருவாரியாக பயன்படுத்தப்பட்டது தெரிகிறது.

இது பஞ்ச உலோகத்தால் ஆகியது. அதன் அடிப்பகுதி கடம் என்னும் வாத்தியம் போல பெரிய பானை வடிவத்தில் இருக்கும். அதற்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் வட்ட வடிவில் இருப்பதால் அதை வட்டத் தட்டு என்பர். இதைப் பசுத்தோல் போற்றி மூடி இருப்பர். ஒவ்வொரு முகத்தின் – வட்டத் தட்டின் – மீதும் மூடப்பட்டதோலின் கனமும் வேவ்வேறு அளவில் இருப்பதால் இது வெவ்வேறு ஒலியை எழுப்பும். அதாவது ஐந்து முகங்களும் ஐந்து விதமான ஓசையை எழுப்பும்.

இதை சிவன், தாண்டவம் ஆடும் போது, நந்திகேசுரர் வாசிப்பார்.

மயிலை.வேங்கடசாமி எழுதிய ஒரு பழைய கட்டுரையில் கொடுத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறேன்:

இது அதிக கனமான கருவி. ஆகையால் மரச் சட்டத்தின் மீது அதை வைத்து, சட்டத்தின் கீழ் சக்கரங்களைப் பொருத்தி இருக்கிறார்கள். இதனால் இதை எங்கேயும் எளிதில் வண்டி போல உருட்டிச் சென்றுவிடலாம்.

சிவனுக்கு ஐந்து முகங்கள் உண்டு. அவை ஐந்து வகையான தொழில்களைப் புரிகின்றன என்று சைவ ஆகமங்கள் சொல்லும். இந்த ஐந்து முக, ஐந்து தத்துவ விஷயங்களை விளக்குவதே பஞ்ச முக வாத்யம் ஆகும்.

IMG_3721 (2)

அதாவது சிவனுடைய பஞ்ச க்ருத்யங்களை – ஐந்து தொழில்களை—ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் — என்னும் ஐந்து செயல்களை விளக்க நடராஜப் பெருமான் ஐந்து வகை நடனங்களை ஆடினார். ஒவ்வொன்றுக்கும் வேறுவேறு ஒலிகள் தேவைப் பட்டதால் ஐந்து முகங்களிலும் தோலின் மென்மையும், பருமையும் அதற்குத் தக அமைக்கப்படது.

ஐந்து முகங்களுக்கும் நான்கு திசைகளின் பெயர்களையும், நடுவில் உள்ள முகத்தை ஆகாய திசை என்றும் சொல்லுவர்.

கீழேயுள்ள பட்டியலைப் பார்த்தால்  இது விளங்கும்:

ஆக்கல் – சதியோஜாதம்- மேற்கு

காத்தல் – வாமதேவம்- வடக்கு

அழித்தல் – அகோரம் – தெற்கு

மறைத்தல் – தத்புருஷம் – கிழக்கு

அருளல்- ஈசானம் – வானம்

சில பஞ்சமுக வாத்யங்களில் பாம்பு, மலர்கள் போன்ற சித்திர வேலைப் பாடுகளும் உள.

எனது கருத்து:

நம்முடைய இசைக் கருவிகள் இந்து மத தத்துவங்களை விளக்க வந்தவை என்பது மிகவும் வியப்பான விஷயம். இப்படி ஒவ்வொரு இசைக் கருவியையும் ஆராய்ந்தால் புதிய விஷயங்கள் புலப்படலாம். இதை எழுதுவதற்க்குக் காரணம், மஹா பாரதப் போர் துவங்கும்போது வாசித்த ஆறு சங்குகளின் பெயர்களை பகவத் கீதையில் காணலாம். அதில் கிருஷ்ணன் ஊதிய சங்கின் பெயர் பாஞ்சஜன்யம் (கீதை -15). இதிலும் ஐந்து ஒலிகள் பற்றிய குறிப்பு உளது.கிருஷ்ணனின் புல்லாங்குழலிலும், சரஸ்வதியின் வீணையிலும் பல தத்துவங்கள் இருகின்றன.

“தவம் செய்த தவம்” என்ற அருமையான நூலில், தொல் பொருட் துறை அறிஞரும் வரலாற்றுப் பேரறிஞருமான டாக்டர் இரா.நாகசாமி கீழ்கண்ட தவலை எழுதியுள்ளார்: இன்றும் கூட கேரளத்திலும் தமிழ்நாட்டில் திருவாரூர், திருத்துறைப் பூண்டி ஆகிய இடங்களிலும் இந்த வாத்தியம் பூஜை நேரத்தில் வாசிக்கப்படுவதை அற்கிறோம்:

“நந்திகேசுவரர் சிறந்த நாட்டியசார்யராக மட்டும் இல்லாமல் சிறந்த இசை ஆசிரியராகவும் திகழ்ந்திருக்கிறார். அம்பலத்தரசர் ஆடுகின்ற போது நந்தி மத்தளம் வாசிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தமிழ்நாட்டில் பல சிற்பங்களும் ஓவியங்களும் இக்காட்சியைச் சித்தரிக்கின்றன. “குடமுழா நந்தீசனை வாயில் காப்பாகக் கொண்டார்” என்பது தேவாரம். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் பிற இடங்களிலும் உள்ள சிற்பங்களில் சிவன் ஆடும்போது நந்திகேசுவரர் பஞ்சமுக வாத்யம் என்னும் குடமுழா வாத்தியத்தை வாசிப்பதாக உள்ளதைக் காணலாம். திருவாரூர், திருத்துறைபூண்டி ஆகிய தலங்களில் இன்றும் பஞ்சமுக வாத்தியம் வாசிக்கப்படுகிறது. இதை பாரசவர் என்ற குலத்தோர் வாசிக்கின்றனர். அண்மையில் கிடைத்த “பஞ்சமுக வாத்தியலக்ஷணம்” என்னும் சுவடியில் இது நந்திகேசுவரரால் இசைக்கப்பட்டது என்றும், ஆதலின் இதை இசைக்கும் முன்னர் நந்திகேசுவரருக்குச் சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது. ஆதலின் வாத்ய சாஸ்திரங்களிலும் நந்திகேசுவரர் சிறந்தவர் என்பது தெரியவருகிறது”.

(தவம் செய்த தவம் — என்ற நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நூலில் காஞ்சி மஹா பெரியவர் பற்றி உள்ள பல அரிய தகவல்களை அரிய டாக்டர் நாகசாமியின் http://www.tamilartsaademy.com வெப்சைட்டுக்குச் செல்லவும்.)

-சுபம்-

IMG_3722 (2)

நந்திகேஸ்வரர், பஞ்சமுக வாத்யம் வாசிக்கும் காட்சி.

உலகின் மிகப் பழைய நகரம் – காசி/வாரணாசி!

26abc-festival-at-varanasi

Written by London swaminathan

Research Article No.1866; Dated 15 May 2015.

Uploaded in London at 10-21

உலகின் மிகப் பழைய நகரம் எது?

காசி என்றும் வாரணாசி என்றும் அழைக்கப்படும் இந்துக்களின் புனித நகரமே உலகின் மிகப் பழைய நகரம் ஆகும். இதுவரை கிடைத்த தொல் பொருட் துறை கி.மு.900 வரையே இந்த நகரின் பழமையைக் காட்டும். ஆனால் கங்கைச் சமவெளியில் கி.மு 1200 வரை பழமையான பானை ஓடுகள் கிடைத்துள்ளன. சிலர் இதை 1400 வரை கொண்டு செல்வர். ஆயினும் இலக்கியச் சான்றுகள் இதுதான் உலகின் மிகப் பழைய நகரம் என்று காட்டும்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் கேதார்நாத் கோவில் சேதமானதையும், நேபாள பூகம்பத்தில் முக்திநாத் கோவில் சேதமானதையும் கண்டோம். தனுஷ்கோடி கோவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் போகவே, எங்கு கரை இருக்கிறதோ அதை தனுஷ்கோடி என்று சொல்லுகிறோம். இந்தியாவின் பருவக்காற்றும், வெய்யிலும் மாறி மாறி அடிப்பதால் கட்டிடச் சின்னங்கள் அழிந்துவிட்டன. முஸ்லீம்படை எடுப்பாளர்கள் அவர்களால் முடிந்த மட்டும் அழித்துவிட்டுச் சென்றனர். இதற்குப் பின் எஞ்சியுள்ள சின்னங்களையே நாம் இன்று காண்கிறோம்.

1).இந்துக்கள் நம்பிக்கை

மஹாபாரத யுத்தம் முடிந்த பின்னர் கலியுகம் துவங்கியதாக (கி.மு.3102) இந்துக்கள் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக நம்பிவருவதை பஞ்சாங்கங்களும் கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன. அந்த மஹாபாரத காலத்தில் பீஷ்மர் என்னும் நித்திய பிரம்மச்சாரி, பாண்டவர் குலம் தழைக்க பெண்களைத் தேடிக்கொண்டிருந்தார். காசி மகாராஜன் அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று புதல்விகளுக்கும் ஸ்வயம்வரம் ஏற்பாடு செய்தான். அதில் பீஷ்மர் தோன்றி, மூன்று பெண்களையும் கடத்தி வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அப்போதே காசி சாம்ராஜ்யம் மிகவும் புகழ் பெற்றிருந்தது.

கலியுகத்தை நம்பாதவர்கள் கூட மஹாபாரத யுத்தம் கி.மு.1500 வாக்கில் நடந்திருக்கும் என்று ஒப்புக் கொள்வர். கல்ஹணரோ மாபாரத காலத்தை கி.மு.2500 வாக்கில் வைக்கிறார். எப்படியாகிலும் காசியின் பழைய வரலாறு உறுதியாகிறது.

bcc3e-varanasi-ganga-ghat2

2).பௌத்தர்களும் சமணர்களும் கூறுவது என்ன?

பௌத்தர்களும் சமணர்களும்கூட காசியே பழைய நகரம் என்பதை எழுதி வைத்துள்ளனர். நேபாளத்தில் உள்ள கபிலவஸ்துவில் பிறந்து பீஹாரில் உள்ள புத்த கயாவில் ஞானோதயம் அடைந்த புத்தர், ஏன் உத்தரப்பிரதேசத்தில் உள்ள காசிக்கு வந்து முதல் சொற்பொழிவை நடத்தினார்? அவர் உபதேசம் செய்த சாரநாத், காசியின் புறநகர்ப் பகுதியாகும். ஏன் என்றால் காசிதான் நாட்டின் புனித, பழைய தலம்.

அந்தக் காலத்தில் யாரேனும் புதிய தத்துவம்/கொள்கை கண்டு பிடித்தால் அதை காசிக்குச் சென்று நிரூபிக்கவேண்டும். அங்கே தெரு மூலைகளில் அறிஞர்கள் நிற்பார்கள். அவர்கள் எல்லோரையும் வாதத்துக்கு அழைப்பார்கள். அதில் வென்றால் அவர்கள் சித்தாந்தம் அங்கீகாரம் பெறும். அதாவது அந்த நகரமே ஒரு பல்கலைக் கழகம்!

3.வேத இலக்கியங்களிலும் காசியின் பெயர் உள்ளது. காசி என்பது பன்மைப் பொருளில் அதர்வண வேதத்தில் பயிலப்படுகிறது. ஆதிகாலத்தில் அந்தந்த குழுக்களின் பெயரே அந்த தேசத்தின் பெயராகக் கொள்ளப்பட்டது. சோழர் வாழ்ந்த இடம் சோழநாடு. தமிழர் இருப்பிடம் தமிழ்நாடு; ஆங்கிலோ-சாக்ஸன் இனம் இருந்த இடம் ஆங்கிலாந்து (இங்கிலாந்து). இந்த காசி இனத்தாலேயே காசி என்றழைக்கப்பட்டது.

வருண, அஸ்ஸி என்ற கங்கையின் இரண்டு உபநதிகளுக்கு இடைப் பட்ட நகரம் என்பதால் வாரணாசி என்று பெயர் பெற்றது. உலகம் முழுதும் உள்ள பெயர்களை உருக்குலைக்கும் ஐரோப்பிய இனத்தால் வாரணாசி என்னும் பெயர், பனாரஸ் என்று உருமாறிப்போனது.

4.பாபிலோனியாவில் காசி இன மக்கள்

4காசி இனமக்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவினர். பாபிலோனியாவில் கி.மு.1800 முதல் காசைட் இன மக்கள் காணப்படுகின்றனர். இவர்களை அடுத்து கி.மு.1400 முதல் மிடன்னிய இனம் துருக்கி-சிரியாவில்,   ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் தூய சம்ஸ்கிருதப் பெயர்களுடன் ரிக்வேத மந்திரத்தின் மேல் சத்தியம் செய்து உடன் படிக்கை செய்த கி.மு.1400 கல்வெட்டும் கிடைத்திருக்கிறது. காசைட் இன மக்களும் சம்ஸ்க்ருதம் தொடர்பான மொழையையே பேசினர். இவ்வளவையும் ஒப்புக் கொள்ளும் வெள்ளைக்காரகள் இன்றுவரை அவர்களுடைய “ஆரிஜின்” (மூலம்) தெரியவில்லை என்று புத்தகம் எழுதி மழுப்பி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கங்கைச் சமவெளியில் இருந்து வெற்றி விஜயம் மேற்கொண்ட இந்துக்களாவர்.

சௌராஷ்டிரர் என்பவர் (ஜொராஸ்தர்) ஈரான் வரை சென்று வேதத்துக்கு ஏட்டிக்குப் பூட்டியாக ஒரு மதம் தாபித்தார்.அவர் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிர பிரதேசத்தில் இருந்து சென்றவர். அதை ஈரானியர்கள் “ஜொராஸ்தர்” என்று எழுதிவிட்டனர். இதை காஞ்சிப் பெரியவர் (1894-1994) தனது உபந்யாசங்களில் கூறியுள்ளார். அதே குஜராத்தில் உள்ள கிருஷ்ணரின் துவாரகை கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்டதும், கிருஷ்ணர் மறைந்த பின்னர் அது கடலில் மூழ்கியதை  பாகவத புராணம் உறுதி செய்வதும் கலியுகத்தையும் மஹாபாரத காலத்தையும் உண்மையாக்குகின்றன.

34dfa-pilgrimage-map

6.பௌத்ததில் காசி

புத்த மதத்தினர் ஜாதகக் கதைகள் என்ற பெயரில் பாலி மொழியில் நிறைய பழைய கதைகளைத் தொகுத்து வைத்துள்ளனர். இது எழுதப்பட்டது 2300 ஆண்டுகளுக்கு முன். அதில் புத்தரின் பூர்வ ஜன்ம அவதாரங்களைப் பற்றிப் பேசுகையில் “முன்னொரு காலத்தில் காசியில் பிரம்மதத்தன் அரசாளுகையில், போதிசத்துவர் …………….” என்று எழுதுகின்னர். 2300 ஆண்டுகளுக்கு முன் கதை எழுதியவர்கள் “முன் ஒரு காலத்தில் “என்று சொன்னால் அதற்கும் முன்னர் ஒரு ஆயிரம் ஆண்டுகளாவது ஆகியிருத்தல் வேண்டும்.

7.சமணத்தில் காசி

சமணமதத்தைச் சேர்ந்த 24 தீர்த்தங்கரர்களில் கடைசி தீர்த்தங்கரரான மாஹாவீரர், புத்தருக்கும் சிறிது முந்தையவர். அவர்களில் ஏழாவது தீர்த்தங்கரர் பிறந்தது காசியில்! 23ஆவது தீர்த்தங்கரரான பார்ஸ்வநாதர், கிருஷ்ணர் காலத்தில் வசித்தவர். இதையெல்லாம் கணக்கில் சேர்த்தால் ஏழாவது தீர்த்தங்கரர் மஹாவீரருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசித்திருக்க வேண்டும்!! காசியின் கதையும் அவருடன் பின்னால் போகும்!

8.வேதத்தில் காசி

பௌத்த, சமண மத இலக்கியங்களுக்கு எல்லாம் முந்தையது வேத கால இலக்கியம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை. அதர்வண வேதத்தில் (5-22-14) காசி மக்கள் இடம் பெறுகின்றனர். வருணாவதி என்னும் ஆறும் (4-7-1) இடம்பெறுகிறது. இதுவே பின்ன வருண+ அஸ்ஸி= வாரணாசி ஆயிற்று. சதபத பிராமணத்திலும் உபநிஷதங்களிலும் காசியை ஆண்ட தார்தராஷ்ட்ர, அஜாத சத்ரு போன்ற பழங்கால மன்னர்கள் பெயர் இடம் பெறுகின்றன.

9.காசி-கௌசல்ய, காசி- விதேக முதலிய சொற்றொடர்கள் பிராமணங்களில் இடம் பெற்றுள்ளன. அக்காலத்தில் சாம் ராஜ்யங்களுக்கு இடையில் நிலவிய நட்புறவுக்கு இவை சான்று தரும். கௌசல்ய என்பது கோசல நாட்டின் அடியாகப் பிறந்த உரிச்சொல். கோசலத்தின் தலைநகரான அயோத்தியில், முதல் சமண மத தீர்த்தங்கரர் பிறந்ததும், ராமனுக்கு எல்லாம் மூத்த இக்ஷ்வாகு வம்சத்தினர் ஆண்டதும் அயோத்தியின் பழமையையும் பறை சாற்றும்

10.கபல என்னும் பானை ஓடுகள் பற்றி ஆஸ்வலாயன கிருஹ்ய சூத்திரம் ( 4-3-5) முதலிய வேத கால இலக்கியங்களில் வருகின்றன. இதை இறந்தோர் சடங்குகளில் பயன்படுத்துவர். மஸ்கி என்னும் கங்கைச் சமவெளி ஊரில் ஒரு குழந்தையின் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இந்துக்கள் குழந்தைகள் இறந்தால் எரிக்க மாட்டார்கள். அந்தக் குழந்தையின் சடலத்தின் மீது ஒரு கபல பானை ஓடு இருந்தது. இது அந்தக் குழந்தையின் விளையாட்டுச் சாமான் என்று ஆங்கிலம் படித்த “அறிஞர்கள்” எழுதினர். பின்னர் வேதம் படித்த அறிஞர் இது விளையாட்டுச் சொப்பு அல்ல, கபல என்னும் ஈம ஓடு என்று எடுத்துக் காட்டினர். நமது கலாசாரமே தெரியாமல் ஆங்கிலத்தில் கட்டுரை எழுதுவோர் என்ன என்ன கேடுகளை விளைவிக்க முடியும் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக் காட்டு!!

காசி வாழ்க! வாரணாசியின் புகழ் வளர்க!

பைபிள் தோன்றியது எப்போது?

பழைய பைபிள்- கோடெக்ஸ் சைனடிகஸ்

தொகுத்தவர்- லண்டன் சுவாமிநாதன்

கட்டுரை எண்- 1863; தேதி 13 மே 2015

லண்டன் நேரம்: 19-55 

இப்பொழுது கிறிஸ்தவ மதத்தினர் போற்றிவரும் பைபிள் எனும் கிறிஸ்தவ வேதப் புத்தகம் இன்றைய நிலையில் உருவாக்கப்பெற்றது கிறிஸ்து இறந்து 633 ஆண்டுகளுக்குப் பின்னர்தான்! டோலிடோ என்னும் இடத்தில் கி.பி.633-ல் நடந்த கூட்டத்தில் இது இறுதி வடிவம் பெற்றது. அதற்கு முன் பலவிதமான கதைகளும், ஏசுவின் வாழ்வு பற்றி பல வாக்குவாதங்களும் நடந்திருக்கின்றன.

பழைய ஏற்பாட்டைக் குறித்து 2048 பாதிரிமார்களும், புதிய ஏற்பாட்டைக் குறித்து 50 சுவிசேஷங்களும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத முறையில் தர்க்கமிட்டுக் கொண்டிருந்ததை அறிந்து கான்ஸ்டன்டைன் மன்னர் கி.பி.335-ஆம் ஆண்டில் நைஸ் என்னும் இடத்தில் ஒரு மாபெரும் மகாநாட்டினைக் கூட்டி அதில் 1730 பாதிரிமார்களின் கூற்றுகளையும், 46 பாதிரிமார்கள் வைத்திருந்த சுவிசேஷங்களையும் நெருப்பிலிடும்படி ஆணையிட்டார். பாக்கியிருந்தவற்றில் அந்த மன்னர் ஒப்புகொள்ளும் விஷயங்களை மட்டும் அங்கீகாரம் செய்து அதைக் கடவுளின் வாக்கியம் என்றும் அனைவரும் பின்பற்றவேண்டும் என்றும் கட்டளையிட்டார். இது கிறிஸ்தவ வேதப் புத்தகம் பற்றிய சரித்திரச் சான்றுகள் அடிப்படையில் எழுதப்பட்ட உண்மையாகும். இதன் முழு விவரத்தை ஹெரால்டு ஷெர்மன் எழுதிய நீ இறந்த பின் வாழ்கிறாய் (You Live After Death) என்ற புத்தகத்தில் 104ஆம் பக்கம் முதல் 115ஆம் பக்கம் வரை காண்க—திருஞான சம்பந்தர் மடத்தின் ஆதீன கர்த்தர் வெளியிட்ட பிரசுரம், 1-9-1966

கி.மு.1700-இல் ஒரு பெண் எம்.பி.! இந்திய அதிசயம்!!

025c5-parliament

Written by London swaminathan

Research Article No.1860; Dated 12 May 2015.

Uploaded in London at 16-42

உலகின் மிகப் பழைய நூல் ரிக் வேதம். இதை இந்து மதத்தைக் குறைகூறுவதையே வாடிக்கையாகக் கொண்ட அமெரிக்க “அறிஞர்களும்” கி.மு.1700 என்று தேதி குறித்துள்ளனர். இதில் சபா, சமிதி என்ற இரண்டு ஜனநாயக அமைப்புகள் பற்றி நிறைய துதிகளில் பாடப்படுகிறது. இதில் உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெண்களும் உண்டு!! உலகில் பெரும்பாலான நாடுகளில் நாகரீகம் என்பதே தெரியாமல் இருந்த காலத்தில்—அப்படியே நாகரீகம் இருந்த இடத்திலும் பெண்களுக்கு உரிமை தரப்படாத காலத்தில் – பெண்களும் உறுப்பினர் என்றும் அவர்கள் சிறந்த பேச்சாளர்கள் என்றும் ரிக் வேதம் கூறுவது எல்லா இந்தியர்களும் பெருமைப்பட்வேண்டிய விஷயம்.

இது உண்மை-வெறும் புகழ்ச்சி அல்ல- என்பதற்கு “உலகிலேயே மிகவும் புத்திசாலியான பெண்” என்ற கட்டுரையில் வேறு ஒரு உதாரணத்தையும் முன்னரே தந்தேன். 2850 ஆண்டுகளுக்கு முன்னர் மாபெரும் அகில இந்திய தத்துவ மாநாட்டை ஜனக மாமன்னன் கூட்டினான். அதில் யாக்ஞவல்கியர் என்பவர் ஆயிரம் பொற்காசுகள் பரிசை எடுத்துச் செல்ல முயல்கையில் செல்வி கார்க்கி வாசக்னவி என்ற பெண் தடுத்து நிறுத்தி தத்துவ விஷயங்களை அலசியதை முன்னரே நீங்கள் அறிவீர்கள். ஆக ரிக்வேதம் சொல்லுவது மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல.

8dbc0-tn2bassembly

சபை, சமிதி என்ற சொற்கள் இன்று இமயம் முதல் குமரி வரை, தமிழ், ஆங்கிலம் உள்பட பல மொழிகளில் அப்படியே பயன்படுத்தப் படுகின்றன. தொல்காப்பியர் ச- என்னும் எழுத்தைத் தமிழர்கள் முதல் எழுத்தாகப் பயன்படுத்தக் கூடாது என்று தடை போட்டு விட்டதால் நாம் “சபை” என்ற சொல்லை “அவை” என்று மாற்றிக் கொண்டோம். மற்ற மாநிலங்களில் விதான் சபா என்பர் ; நாம் சட்டப் பேரவை (சபை=அவை) என்போம். சமிதி என்ற சொல் கமிட்டீ (சமிட்டி=சமிதி=கமிட்டி) என்ற ஆங்கிலச் சொல்லாக மருவி உலகம் முழுதும் நிலவுகிறது.

நூற்றுக் கணக்கான ரிக் வேதச் சொற்களை இந்தியர்கள் தினமும் அன்றாடப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம் அதில் இந்த சபையும் சமிதியும் அடக்கம்.

இவை இரண்டும் அர்த்தம் மாறாமல் இன்றும் லோக் சபை, ராஜ்ய சபை, விதான் சபை என்ற சொற்களில் பயன்படுகின்றன. அதர்வ வேதமானது இவ்விரு சபைகளையும் பிரஜாபதியின் இரண்டு மகள்கள் என்று வருணிக்கும்.

e225f-bihar2bvidhan

பீஹார் சட்ட சபை

சபை சமிதி சம்பந்தமாகப் புழங்கும் சொற்களைப் பட்டியலிட்டால் இன்றைய தினம் போலவே அன்றும் சபாநாயகர், சபைத் தலைவர், பெண் அங்கத்தினர், சட்டம் இயற்றல், மக்களைக் கலந்தாலோசித்தல் முதலியன இருந்தது புலனாகிறது.

சபையை விடச் சமிதிக்கு குறைவான அதிகாரங்கள் இருந்தன. ஆனால் சமிதி என்பது போர்க்கால கவுன்சில் என்று சாயனர் பாஷ்யம் சொல்லும்.சபைக்கும் சமிதிக்கும் ராஜாவும் வந்தை வேதம் குறிப்பிடும்.

இன்றும் கூட பிரிட்டன் முதலிய நாடுகளில் அரசின் கொள்கைகளை அறிவிக்கவும், பார்லிமெண்டைத் துவக்கிவைக்கவும் ராணி அல்லது ராஜா வருகிறார். இதெல்லாம் அக்கால வழக்கை ஒட்டியதே.

ராஜாவே தனது மகனை அடுத்த ராஜாவாக நியமிக்கும் அதிகாரம் இருந்தபோதிலும் மக்களில் முக்கியமான தரப்பினரை அழைத்து ஒப்புதல் பெறுவது வழக்கம். தசரதனும் தனது முடிவை நாட்டு மக்களுக்கு அறிவிப்பதற்கு முன்னர் முக்கியப் பிரமுகர்களை அழைத்து ஆலோசித்த பின்னரே ராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்வதாகப் படிக்கிறோம். விஜயன் என்பவன் செய்த கெட்ட செயல்களால் நாடு கடத்தப்பட்டு இலங்கையில் ஒரு புதிய அரசை நிறுவியதை மஹாவம்சம் மூலம் நாம் அறிவோம். மனு ஸ்மிருதியும் தீய செயல்களால் பதவி இழந்த மன்னர்களின் பட்டியலைத் தருகிறது.

276ca-rajasthan_vidhansabha

ராஜஸ்தான் சட்ட சபை

இனி வேதத்தில் இருந்து சில குறிப்புகள்:

1.சபையின் பெண் உறுப்பினர்கள் சபாவதி என்று அழைக்கப்பட்டனர் (RV 1-167-3) அவர்கள் சபையில் உரிய சொற்களையே பேசுவர். சட்டத்தைப் பாதுகாக்கும் பெண் மூன்று முறை சபைக்கு வருவார் என்றும் ஒரு மந்திரம் (RV 3-56-5) சொல்லும். இன்று நாம் இதன் முழுப் பொருளையும் உணரமுடியாது.

2.சபையில் முக்கிய உறுப்பினர்கள் சந்தித்து, முக்கிய விஷயங்களை விவாதித்தனர். அதை ஏற்பாடு செய்பவர் சபாஸ்தாணு (அவையின் தூண்) என்று அழைக்கப்பட்டார் (RV.6-28-6; 8-4-9; 10-34-6; 7-12-1; 8-10-5; 12-1-56; 19-55-6 etc). சபையில் சண்டை, சச்சரவுகளும் தீர்த்துவைக்கப்பட்டதாக மஹீந்தரா என்பவர் வாஜசனேயி சம்ஹிதை உரையில் சொல்லுகிறார். கிராம சபை கூடும் இடம் என்றும், செல்வந்தர்கள் அங்கம் வகித்ததாகவும் குறிப்புகள் உள (பிரிட்டனில் இப்பொழுதும் செல்வந்தர்கள், பிரபுக்கள் இடம்பெறும் ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் உள்ளது!)

3.முக்கியப் பங்காற்றியவர்கள் ‘சபேயர்கள்’ என்று அழைக்கப்பட்டனர்.சபையில் தரமான உயர்ந்த சொற்கள் பேசுவதை ஒரு மந்திரம் குறிப்பிடுகிறது (RV 2-24-13; AV 20-12-8; VS 22-22)

a179a-tn2bseats

4.சமிதி, சபைக்கு ராஜா வருவது பற்றியும் மந்திரங்கள் உள்ளன. அவர்களுடைய கருத்துக்களை ராஜா கேட்டறிந்தார். பிற்கால தமிழ், சம்ஸ்கிருத இலக்கியங்களில் இது பற்றிய குறிப்புகள் மற்றும் எண்பேராயம் (எட்டு பேர் அமைச்சரவை), ஐம்பெருங்குழு ( ஐந்து பேர் ஆலோசனைக் குழு), அஷ்ட திக் கஜங்கள், நவரத்னங்கள் முதலிய பல அமைச்சர்/அறிஞர் குழுக்கள் பற்றியும் தகவல்கள் கிடைக்கின்றன.

5.வேதத்தில் சபை, சமிதி பற்றி வரும் குறிப்புகளையும், அது தொடர்பாக உண்டாக்கப்பட்ட சொற்றொடர்களையும் பார்க்கையில் கி.மு.1700-க்கும் நீண்ட நெடுங்காலத்துக்கு முன்னரே சபையும் சமிதியும் உண்டாகி இருக்கும் என்பதை ஊகிப்பது கடினமில்லை. சுமேரிய, எகிப்திய, மினோவன், மைசீனிய, கிரேக்க சாம்ராஜ்யங்களில் கி.மு 1700ஐ ஒட்டி இத்தகைய அமைப்புகள் எதுவுமில்லை. ஆகவே உலகின் முதல் ஜனநாயக நாடு இந்தியாதான். பெண்களையும் உறுப்பினர் ஆக்கும் மனப்பக்குவம் உலகில் வேறு எங்கும் காணக்கிடைக்காதது! அரசன் மனைவியோ, மகளோ அதிகாரம் பெறுவதில் வியப்பில்லை. அது குல முறைப்படி அல்லது ராஜா வகித்த பதவி வழியாகக் கிடைக்கக்கூடியது. செல்வி வாசக்னவி, மைத்ரேயி போன்ற தனிநபர் ஒரு சபைக்குச் செல்வது அறிவு முதிர்ச்சியின் உச்சம் ஆகும்!

கீழே மக்களவையின் படம் (லோக் சபா)

சிந்து சமவெளியில் ராமாயண முத்திரை!!

Written by London swaminathan

Research Article No.1849; Date: 6 May 2015

Uploaded at London time: 21-25

வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த

பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினை போக்கி

நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்

சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப

–அயோத்தியா காண்டம், மந்திரப் படலம்

பொருள்: அரண்மனையை அடைந்த தசரதன், வெற்றி வேந்தர்களை இங்கே வாருங்கள் என்று அழைக்கும் பொன்னால் அமைந்த ஓலைகளை, கருடன் திகழும் முத்திரையை இட்டு அனுப்பினான். இன்பு வசிட்டனை நோக்கி, உத்தமரே, நீர் சென்று, சித்திர வேலைப்பாடு அமைந்த பெருமை பொருந்திய மகுடத்தைச் செம்மையாக ராமனுக்குச் சூட்டுவதற்கு வேண்டிய செயல்களை முறைப்படி கவனிப்பீர்களாக என்று கூறினான்.

சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகளில் பல கருட முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. வேத கால, புராண கால , இதிஹாச கால இலக்கியங்கள் முழுவதிலும் பருந்து, கருடன், கழுகு உருவங்களே அதிகம் காணப்படுகின்றன.

வேதத்தில் சொன்னது போல கரிகால் சோழன் பருந்துவடிவ யாகம் செய்ததை சங்க இலக்கியப் பாடலில் முன்னரே கண்டோம். கிரேக்க அரசன் வடமேற்கு இந்தியாவில் வைத்த கருட ஸ்தம்பம் (கருடன் தாங்கிய தூண்) பற்றியும் அவன் தன்னை பரம பாகவதன் (பகவான் விஷ்ணுவின் மஹா பக்தன்) என்று அழைத்துக் கொண்டது பற்றியும் முன்னரே எழுதி விட்டேன். விஷ்ணுவின் வாஹனம் கருடன் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ராமாயணத்துக்கும் சிந்து சமவெளிக்கும் உள்ள பல தொடர்புகளையும் எழுதிவிட்டேன். கந்தர்வர்கள் சிந்து சமவெளியை ஆண்ட பொழுது ராமனின் மகன்களும், சகோதரர்களும் அப்பகுதியில் அவர்களுடன் சண்டையிட்டு வென்றதை ராமாயணம் பகர, கந்தர்வர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த சண்டையை மஹாபாரதம் செப்புகிறது. சிந்து சமவெளியை ஆண்ட ஜயத்ரதன், அம்பரீசன் ஆகிய மன்னர்கள் பெயர்களையும் சம்ஸ்கிருத இலக்கியங்கள் நுவலும்.

சங்க இலக்கியத்தில் சிந்து நதி பற்றியோ அந்தச் சமவெளிப் பகுதி பற்றியோ குறிப்புகள் எதுவும் இல. ஆனால் சம்ஸ்கிருத இலக்கியத்திலோ ஏராளமான குறிப்புகள் உள.

இந்தப் பின்னணியில் கருட முத்திரைகள் சிந்து வெளியில் கிடைத்திருப்பதும் அதை ராமாயணம் உரைப்பதும் எனது ஊகங்கள உறுதிப்படுத்துகின்றன.

நான் கூறுவது:–

சிந்து சமவெளி நாகரீகம் வேத கால இந்துக்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையது. அது இன்றைய இந்துமதம் போலவே பலதரப்பட்ட இந்துக்களை உடைத்தாயிருந்தது. அதில் கந்தர்வர்கள் உள்பட பலர் ஆட்சி செய்த்ருக்க வாய்ப்பு இருந்தது. நமக்குக் கிடைத்த இதிஹாசம் அதை அதிகமாக கந்தர்வர்களுடன் தொடர்பு படுத்துகிறது. 18 கணங்களில் ஒரு பிரிவினரே கந்தர்வர். அவர்களைத் தவிர மேலும் 17 பிரிவுகள் இருந்ததை புராணங்களும் சங்கத் தமிழ் புறநானூற்று உரையும் உறுதிப்படுத்துகிறது.

சிந்து வெளி முத்திரைகளில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம வடிகட்டி, சோமரஸ வடிகட்டி என்பதை பல ஆராய்ச்சியாளர் ஒப்புக் கொள்ளத் துவங்கிவிட்டனர். ஆரிய—திராவிட இனவெறி வாதம் பேசி பகச் சொல்லி கேளிர் பிரிக்கும் பறங்கித்தலையன் (வெள்ளைக் காரர்) மனப்பான்மையால் சிந்து சமவெளி ஆய்வு தடம்புரண்டு போனது. இப்பொழுது அதை மேலும் தண்டவாளத்தில் ஏற்றிவைக்க கருடன் முத்திரை – ராமாயணத் தொடர்பு உதவும்!

வேதத்தில் கருடன்

வேதத்தில் அதிகமாகப் புகழப்படும் பறவை பருந்து,கருடன்,கழுகு வகைப் பறவைகளே.சுபர்ண, ஸ்யேன, க்ருத்ர, பலாக முதலிய பறவைகள் ஏராளாமான இடங்அளில் வருகின்றன. பருந்து வடிவ யாக குண்டம், சோம லதையை (சோமக் கொடி வகைத் தாவரம்) கருடன் கொண்டுவந்தது முதலிய இடங்களில் அதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப் படுகிறது. ராமாயணத்தில் ஜடாயு-சம்பாதி என்ற கருட இன மக்கள் குறிப்பிடப்படுவது போலவே ரிக்வேதத்தில் கருடன்  -சோமக் கொடி சம்பவமும் கருடன் இன மக்களைக் குறிப்பதாகவே நான் எண்ணுகிறேன்.

வாழ்க ரகுகுல கருட முத்திரை! வளர்க சிந்துவெளி ஆய்வு!! தகர்க ஆரிய-திராவிட இனவெளியாளர்; மலர்க ஏக பாரதம்!

சிந்து/ சரஸ்வதி சமவெளி பற்றிய எனது முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், ஆங்கிலக் கட்டுரைகளில் இதுவரை எவரும் சொல்லாத பல புதிய கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். படிக்க! சிந்திக்க!

முதலில் வந்தது ராமாயணமா? மஹாபாரதமா? பெரிய குழப்பம்!!!

Written by London swaminathan

Research Article No.1846; Date: 5 May 2015

Uploaded at London time: 8-55 am

(கர்நாடகத்திலலுள்ள கோவில்களில் காணப்படும் ராமாயண , மாபாரத சிற்பங்களின் படங்கள்–   ஒரு ஆங்கிலேயர்  எழுதிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை;நன்றி)

பரசுராமன் குழப்படி!

பரசுராமன், அனுமன் போன்ற சில கதா பாத்திரங்கள் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிஹாசங்களிலும் வருவதால் ராமன் கதையும் கிருஷ்ணன் கதையும் ஏக காலத்தில் அல்லது அடுத்தடுத்து நிகழ்ந்தது போலத் தோன்றுகிறது. பல அர்ஜுனன்கள், பல பரசுராமன்கள் இருந்ததால் இந்தக் குழப்பம். பரசுராமன் வென்றது கார்த்தவீர்ய அர்ஜுனன். மஹாபாரத அர்ஜுனனோ சுமார் 400 ஆண்டுகள் பின்னால் வாழ்ந்தவர். ஆகவே ராமாயண—மஹாபாரத இடைவெளி குறைந்தது 500 ஆண்டுகளாவது இருக்க வேண்டும். இந்துக்களின் யுகக் கணக்குப்படி பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். ஆக பலரும் பரசுராமன் போல க்ஷத்ரிய எதிரியாக இருந்ததால் அவரை பரசுராமன் என்று அழைக்கத் துவங்கிவிட்டனர் என்று கொள்வதே பொருத்தம்.

உண்மையில் ராமாயணம் முதலில் நிகழ்ந்தது மட்டுமல்ல. முதலில் எழுதப்பட்டதும் ராமாயணமே! இதோ இதற்கான ஆதாரங்கள்.

1.மஹாபாரதத்தில் சுருக்கமாக ராமாயணம் உள்ளது. ஆனால் ராமாயணத்தில் மஹாபாரதத்தின் சுவடே கிடையாது. ஆகையால் வால்மீகி எழுதிய பின்னர், அதைச் சுருக்கமாக மஹாபாரதத்தில் சேர்த்தாரென்பதே நமது முடிவு.

2.ராமாயணத்தில் ராமனை சீதை, “ஆரிய” (மதிப்பிற்குரிய ஐய) என்றும் ராவணனை அரண்மனைக் காவலர்கள் “ஆரிய” என்று அழைப்பதும் ராமாயணத்தின் பழமையைக் காட்டும்.

3.ராமாயணத்தில் குரங்கு மனிதர்கள் (அனுமன்), கரடி மனிதர்கள் (ஜாம்பவான்), கழுகு மனிதர்கள் (ஜடாயு) ஆகியோர் வருகின்றனர். இவை மஹாபாரதத்தில் இல்லை. உண்மையில் குரங்கு, கழுகு, கரடி என்பன அவர்கள் அணிந்த முகமூடி அல்லது பச்சை குத்திக் கொண்ட சின்னத்தையே குறிக்கும். ஆனால் அது நடந்து மிகவும் அதிக காலம் உருண்டோடிவிட்டதால், முதலில் வாய் மொழியாக ராமாயணத்தைப் பரப்பிய  பௌராணிகர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை மிகைப்படுத்தி பிராணிகளும் உதவி செய்ததாகச் சொல்லிவிட்டனர். எப்படியாகிலும் இத்தகைய சின்னங்களை அணிந்தோர்  மாஹாபாரத காலத்தில் இல்லை! மாபாரத  காலத்தில் நாகரீகம் வெகுவாக முன்னேறிவிட்டது.

3.லங்காதேவி, லங்கிணி, மைநாக பர்வதம் போன்ற குறுக்கீடுகளும் ராமாயணத்தின் பழமையைக் காட்டும். இது போன்றவை மஹாபாரதக் கதைகைளில் இரா.

  1. ராமாயணத்தில் அடிக்கடி 60,000 மனைவியர், 60,000 ஆண்டு தசரதர் ஆட்சி என்ற மரபுத் தொடர்கள் (Idioms and Phrases) இவை மஹாபாரதக் கதைகைளில் இரா.

“வனம் கண்ட வால்மீகி”, “ரணம் கண்ட வியாசர்”

5.ராமாயணத்தை எழுதியது “வனம் கண்ட வால்மீகி”, மாபாரதத்தை எழுதியது “ரணம் கண்ட வியாசர்” (ரணம்=போர்). அதாவது ராமாயணம் என்பது பொதுவாக இற்கையோடு இயைந்த வாழ்வு. மாபாரத காலமோ போட்டி, பொறாமை மிகுந்த நகர வாழ்வு.

6.ராம-ராவண யுத்தத்தில் வியூஹம் போன்ற ராணுவ முன்னேற்றங்களைக் (Military Formations) காண முடியாது. மாபாரதத்தில் சக்கர, பத்ம வியூஹம், பட்டாளத்தை எண்ணிக்கை வாரியாகப் (divisions of Army) பிரிக்கும் (7 அக்ஷௌகிணி, 11 அக்ஷௌகிணி) முன்னேறிய உத்திகளைக் காணலாம். இப்படி மாறுவதற்கு இரண்டுக்கும் இடையே மிக அதிக காலம் ஆகி இருக்க வேண்டும். முப்பதுக்கும் மேலான தலைமுறை வித்தியாசம் இருப்பதாக புராணங்கள் பகரும்.

“பாடியது” (ballads) ராமாயணம், “எழுதியது” மாபாரதம்

7.குசனும் லவனும் “பாடியது” (ballads) ராமாயணம்; அவர்களுக்கு தனது ஆஸ்ரமத்தில் பாடக் கற்பித்தவர் குயில் எனப் புகழப்படும் வால்மீகி முனிவர் ஆவார் (“வந்தே வால்மீகி கோகிலம்”).

வியாசர் “எழுதியது” மாபாரதம். கி.மு.800 வாக்கில் எழுந்த ஹோமரின் இலியட், ஆடிஸிக்கு முன் பாடல் வடிவில் இருந்த கதைகளையே ஹோமர் (Homer) என்பவர் கிரேக்க மொழியில் முதல் நூலாக எழுதினார். அதற்கு முன்னரே நூறுக்கணக்கான நூல்களைப் பெற்றிருந்தது சம்ஸ்கிருதம்!! ஆகவே பாடல் வடிவ ராமாயணம் அதற்கும் முந்தையது! மாபாரதம் என்பது, அக்காலத்தில் வழங்கிய பல்வேறு விஷயங்கள் அழிந்து போய்விடக் கூடாதென்பதற்காக வியாசரால் (compiled) தொகுக்கப்பட்டது. வியாசர் என்றால் கட்டுரை (Essayist, Compiler) எழுதுபவர் என்று பொருள்.

8.வால்மீகி ராமாயணத்தில் சாதாரண தர்மத்தைக் காண்கிறோம். மாபாரதத்தில் பெரிய தத்துவ (கீதை) போதனைகளைக் காண்கிறோம். உபநிஷத காலத்தை ஒட்டி எழுந்த ராமாயணத்தில் இதைச் சொல்லத் தேவ எழவில்லை. திரேதா யுகத்தில் 50 சதவிகிதம் நல்லது இருந்தது. கலியுகத்துக்குச் சற்று முன்னர் இருந்த மாபாரத காலத்தில் அதர்மம் ஓங்கவே உபதேசம், தத்துவ போதனைகளைச் சொல்ல வேண்டி இருந்தது.

  1. ராமாயணத்தில் 24,000 ஸ்லோகங்களைக் காண்கிறோம் மாபாரதமோ உலகிலேயே பெரிய இதிஹாசம்; அதில் ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உள. “எழுதாமல்” இவ்வளவு பெரிய விடயங்கள் நீடித்திருக்க வாய்ப்பில்லை.

10.மாபாரதத்தில் தெளிவாக 29 நாடுகள் பிரிக்கப்பட்டிரு  ப்பதைக் காண்கிறோம். மன்னர்களின் பெயர்களும் உள. ஆனால் ராமாயணத்தில் இப்படி இல்லை. இரண்டுக்கும் இடையே பெருத்த வேறுபாடு உள்ளது.

11.பூகோள ரீதியில் கிஷ்கிந்தா போன்ற இடங்களும், பின்னர் இந்திய சரித்திரத்தில் அல்லது புவியியலில் இல்லை. ஆனால் மாபாரதம் குறிப்பிடும் இடங்கள் தொடர்ச்சியாகப் பேசப்படுகின்றன.

12.ராமாயணம் அளிக்கும் செய்தி எளிமையானது: “சத்தியத்தைக் கடைப்பிடி, அடுத்தவன் மனைவி மீது கைவைக்காதே”. மாபாரதத்தில் ஏராளமான மோதல்கள், போட்டி, பொறாமைகள், சூழ்ச்சிகள் முதலியவற்றைக் காண்கிறோம் அதாவது தர்மம் மிகவும் கீழ் நோக்கிச் செல்வதைக் காண்கிறோம்.

13.மாபாரதத்தில் பழமையான சொற்கள் இருப்பதைக் கொண்டும், ராமாயணத்தில் எளிமையான சொற்கள் இருப்பதைக் கொண்டும் சிலர் மாபாரதமே பழையது என்பர். உண்மையில் வியாசர் வேதத்தைக் கரைத்துக் குடித்தவர். அதைத் தொகுத்தவர்; நான்காகப் பகுத்தவர். ஆகையால் வேத காலச் சொற்கள் அவர் நாவில் நடமாடியதில் வியப்பதற்கொன்றும்  இல்லை. மேலும் பழைய காலத்தில் இருந்த பல விஷயங்கள் அழியக் கூடாதென்பதற்காக அவர் காலத்தில் நிலவிய அத்தனை விடயங்களையும் மாபரதக் கதையில் பின்னிப் பிணைந்தவர் வியாசர். ஆகையால் பழமையையும் புதுமையையும் ஒருங்கே காணலாம்.

14.மாபாரதத்தில் ஆக்கியானம், உபாக்கியானம் எனப் பிரிவுகள் உண்டு. ராமோபாக்கியானமும் அதில் ஒன்று. இது போல ஏராளமான கதைகள் சொருகப்பட்டுள்ளன. ஆனால் ராமாயனத்திலோ உப கதைகள்— வேறு கதைகள்– சொருகப்படவில்லை. காண்டம், சர்கம் என்று பிரித்து சொல்லவந்த ஒரே காவியத்தை மட்டும் வரைந்தார் வால்மீகி.

  1. மாபாரதத்தில் ஜோதிஷம், வைத்தியம்,வானசாத்திரம், தனுர்வேதம் முதலியன வளர்ச்சி அடைந்த நிலையில் காணப்படுகின்றன.. இது தவிர பல நுணுக்கமான விஷயங்கள் உள்ளன. அவைகளை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

பெண்கள் மட்டுமே ஆண்ட அதிசய நாடு!

jhansi

Research Article No.1744; Date:- 23  March, 2015

Written by London swaminathan

Uploaded at London time  காலை 9-40

பாட்டிமார்களிடம் பழங்கதைகள் கேட்டவர்களுக்கும் பழைய கால சிறுவர் கதைப் புத்தகங்கள், பத்திரிக்கைகள் (அம்புலிமாமா, கண்ணன், கோகுலம்) ஆகியன படித்தவர்களுக்கும் மிகவும் பிரபலமான வாசகம் “56 தேச ராஜாக்கள்”. அதாவது பட்டபிஷேகம், ராஜா வீட்டுக் கல்யாணம், ஸ்வயம்வரம் எதுவானாலும் அக்காலத்தில் 56 தேச ராஜாக்களும் வந்திருந்ததாகச் சொல்லி கதையைத் துவக்குவர். இந்தியா இப்பொழுது மாநிலங்களாகவும் யூனியன் பிரதேசங்களாகவும் எப்படிப் பிரிக்கப்பட்டதோ அப்படியே அக்காலத்தில் 56 தேசங்களாகப் பிரிக்கட்டிருந்தது.

ஒரு சக்ரவர்த்தி வந்து, பல தேசங்களை வென்று, தமது பேரரசுக்குள் சேர்த்திருந் தாலும் அந்நாட்டு ராஜாக்கள் கப்பம் கட்டி விட்டு தனது ராஜா பதவியைத் தக்க வைத்துக் கொள்வார். 56 தேசங்களின் பட்டியல் அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் உள்ளது.

மஹாபாரதத்தில் குறைந்து 29 நாடுகளின் பெயர்கள் வருகின்றன. புத்தர் காலத்தில் 16 பெரிய பிரிவுகள் (மஹாஜனபத) இருந்தன. தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டியருக்கும் கீழே பல சிறிய அரசர்கள் இருந்ததுபோல பல சிற்றரசர் நாடுகளும் இருந்தன.

Rani-Lakshmi-Bai

லெட்சுமி பாய்

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்ற நூலிலும், வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்ரத்திலும் ஸ்த்ரீ ராஜ்யம் என்று ஒரு நாட்டைக் குறிப்பிடுகின்றனர். இது ஒரு வியப்பான விஷயமாகும். அதவது பெண்கள் ராஜ்யம் என்று பெயர். கிரேக்க நாட்டில் இப்படி ஒரு கதை உண்டு. ஆனால் அங்கே அவர்களை நல்லபடி சித்தரிக்கவில்லை. நமது நாட்டில் பெண்கள் போர்ப் பயிற்சி பற்றி புகழ்ச்சியாகவே சொல்லியுள்ளனர். நம் நாட்டுக்கு வந்த, அல்லது நம் நாட்டைப் பற்றிக் கேள்விப்பட்ட கிரேக்க ஆசிரியர்கள் நம் வீராங்கனைகளைப் புகழ்ந்து எழுதியுள்ளனர்.

கி.பி.600 வாக்கில் இந்நட்டுக்கு வந்த சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் பெண்கள் நாடு இருப்பது பற்றி எழுதியுள்ளார்.

மெகஸ்தனீஸ் எழுதிய இண்டிகா என்னும் நூலில் பாண்டிய நாட்டில் ஒரு ராணி ஆள்வதாக எழுதியுள்ளார். ஒருவேளை இது அன்னை மீனாட்சியைக் குறிப்பதாக இருக்கும் என்று அறிஞர்கள் கூறுவர்.

மௌர்ய சந்திரகுப்தன் பல்லக்கைச் சுற்றி பெண் வீராங்கணைகள் செல்லும் காட்சியை வேறு ஒரு கிரேக்க ஆசிரியர் எழுதி வைத்துள்ளார். ராமாயணக் கதைக்கு உயிரே கைகேயி பெற்ற இரண்டு வரங்கள் தான் என்பதை நாம் அறிவோம். யுத்த களத்தில் கைகேயி திறம்பட தேரைச் செலுத்தி தசரதனுக்குக்கு வெற்றி தேடித் தந்த செய்தியையும் நாம் அறிவோம்.

chennamma

கௌடில்யர் அர்த்தசாஸ்திர நூலிலும் பெண்கள் படை பற்றி எழுதியுள்ளார். ஆக, 2300 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் போர்ப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது கைகேயி யுத்த்களத்தில் தசரதனுக்கு சாரதியாக (டிரைவர்) போய் இருக்கமாட்டாள்.

பெண்கள் நாடு எங்கே இருந்தது?

இது இருந்த இடம் பற்றி நாம் ஊகிக்கவே முடிகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் இது வடமேற்கு இந்தியாவில் இருந்ததாக வராஹமிகிரர் எழுதியுள்ளார். இது இமயமலை சட்லெJ நதிப் பிரதேசம் என்று யுவாங் சுவாங் சொல்கிறார். பிரம்மபுத்ரா நதிக்கு வடகே இமய மலையில் இருந்ததாக டே என்பவர் குறிப்பிடுவதால் இது குமாவூன், கார்வால் பகுதியாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. கிழக்கு திபெத்தில், நுவாங் என்ற மலைஜாதி மக்களிடையே பிஞ்சு என்ற ராணி ஒருத்தி இருந்ததாகவும் அவரைத் தொடர்ந்து அந்நாட்டில் பெண்களே ஆட்சி புரிந்ததாகவும் ஆட்கின்ஸன் என்பவர் எழுதுகிறார். வாத்ஸ்யாயனரின் காமசூத்ரத்துக்கு உரை எழுதிய யசோதரர் என்பவர் இது வங்க தேசத்துக்கு மேற்கே இருந்த நாடு என்பார். ஆக இமய மலைப் பகுதியில் இது இருந்தது உறுதியாகிறது.

Anushka-Rudramadevi

ராணி ருத்ரமா தேவி

வராஹமிகிரர் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நாடுகளின் பட்டியலைத் தருகிறார். ( ஆங்கிலக் கட்டுரையில் முழு விவரம் காண்க). ஒரு குறிப்பிட்ட ஜாதி, இன மக்கள் குழுவின் பெயரில்தான் நாடுகள் பெயர் இடப்பட்டன. காம்போஜர்கள் பெரும்பாலும் வாழ்ந்த பகுதியை காம்போஜர் என்றனர். ஆனால் இவர்களே காலப் போக்கில் பல இடங்களுக்குச் சென்று காலனிகளை அமைத்தபோது அதையும் காம்போஜம் என்றனர். இதனால் ஒரே பெயர் மேலும் சில இடங்களில் கானப்படும். சிலநேரங்களில் மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து சென்றுவிட்டால், பூகோளப் படத்தில் அந்த நாட்டின் பெயரே வேறு இடத்தில் இருக்கும். அதாவது எல்லைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

RD parade rehearsal

அபிதான சிந்தாமணி போன்ற கலைக் களஞ்சியங்களில் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் என்ற நாடு காட்டப்பட்டுள்ளது. சேர, சோழ, பாண்டிய நாடுகளின் பெயர்களுக்குப் பின்னர், திராவிடம் என்ற நாடும் உள்ளதால் தமிழ் நாட்டுக்கு வடக்கேயிருந்த பகுதியை அப்படி அழைத்தனர் என்பது தெரிகிறது. திராவிட பாஷைகளுக்கு எல்லாம் தமிழே தலைமை என்பதால் பின்னர் அது தமிழுக்கும் உரித்தானது.

திராவிட = த்ரமிள = தமிழ் என்று ஆனதாகவும் தமிழ்= த்ரமிள- த்ராவிட என்று ஆனதாகவும் வாதிப்போர் தங்கள் கொள்கைக்க்கு ஏற்றவாறு இதை மாற்றிக் கொள்வர். திராவிட என்பது வெள்ளைக்கார்கள் பயன்படுத்திய இனப் பெயராக இல்லாமல், தெற்கு என்ற திசைப் பெயராகவே முற்காலத்தில் விளங்கிற்று.

புலி மூஞ்சி, குதிரை மூஞ்சி, மூன்று கண் மனிதர்கள்!

வராஹமிகிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதாவில் 14-ஆவது அத்தியாயத்தில் திசை வாரியாக நாடுகளைக் குறிப்பிடுகிறார். இதில் உள்ள சில சுவையான செய்திகளை மட்டும் காண்போம்.

மிலேச்சர்கள் பற்றி இவர் இரண்டு இடங்களில் குறிப்பிடுவார். இது அங்கே யவனர்களைக் குறித்த சொல் ஆகும். அல்பெரூனி காலத்தில் இது அராபியர்களைக் குறித்தது. தமிழிலும் இதே கதை என்பதை எனது முந்தைய கட்டுரையில் தந்துள்ளேன்.

புலி முக மனிதர்கள், குதிரை முக மனிதர்கள், பாம்புக் கழுத்து மனிதர்கள், நீண்ட கழுத்து மனிதர்கள், நாய் முக மனிதர்கள், கோரைப் பல் மனிதர்கள், சப்பை மூக்கு மனிதர்கள், தழை உடை மனிதர்கள், சபரர்கள், நிஷாதர்கள், உயர்ந்த கழுத்து மனிதர்கள், தாடிவாலாக்கள், முடி நிறைந்த தேகம் உடையோர், முக்கண்ணர்கள், ஒற்றைக் காலர்கள் என்று பலவகையான மக்கள் இனங்களையும் அவர்கள் ஆளுமிடங்களையும் குறிப்பிடுகிறார். இவை எல்லாம் ஆராய்ச்சிக்குரிய விஷயங்கள். ஒவ்வொரு இனமக்களும் தங்களை அடையாளம் காட்ட ஒவ்வொரு சின்னத்தைப் பச்சைக் குத்திக் கொண்டனர். அதனால் அவர்கள் அப்பெயர்களில் அழைக்கப்பட்டனர். சிக்கிம், பூடான் போன்ற நாடுகளில் இன்றும் கூட முகமூடி அணிந்து நடனம் ஆடுவர். பூதம் போல முகமூடிகளை அணிவதால் அந்நாட்டுக்கு பூதஸ்தான் (பூட்டான்) என்று பெயர். இது போன்ற வழக்கங்கள் அக்காலத்தில் பெருவாரியாக இருந்திருக்க வேண்டும்.

indian women

ராமாயணத்தில் வரும் குரங்குகள் (ஹனுமார்), கரடிகள் (ஜாம்பவான்), கழுகுகள் (ஜடாயு) ஆகியவர்கள் மிருகங்கள் அல்ல. அவர்கள் உடலில் வரைந்த ஒவியங்கள் (பச்சைக் குத்தல்) அல்லது அவர்கள் சில நேரங்களில் அணியும் முகமூடிகளைப் பொருத்து அவர்கள் அடையாளம் காணப்பட்டனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உருண்டோடிவிட்டதால், அனுமார் என்றால், குரங்குகள் என்பது போலக் கதை சொல்லத் துவங்கிவிட்டனர்.

பத்து தலை ராவணன் என்றால், பத்து தலைகள் என்பது பொருளல்ல. ஒருவனுக்குப் பத்து திசைகளிலும் பார்த்து, எதிரிகளை வெல்லும் திறமை இருந்தால் இப்படி அழைப்பர். தசரதன் என்றால் அவனுக்கு பத்து தேர்கள் மட்டுமே இருந்தன என்பது பொருளல்ல. அவன் பத்து திசைகளிலும் உள்ள எதிரிகளை தேரில் சென்று, ஒடுக்கியவன் என்பது பொருள். உலகில் எல்லோருக்கும் எட்டு திசைகள் மட்டுமே தெரியும். இந்துக்களுக்கு மட்டும் பத்து திசைகள். அதாவது தசரதன், ராவணன் போன்ற வீரர்கள் மேல் உலகம், கீழ் (பாதாள) உலகம் உள்பட எல்லா இடங்களிலும் ஆட்சிச் சக்கரத்தைப் பரப்பினார்கள்.

ஆக பழங்கால இலக்கியங்களில் உள்ள முக்கண் மக்கள். ஒற்றைக் கால் மக்கள், புலி-நாய்-குதிரை முக மக்கள் என்பனவற்றை ஆராய்வது பலனளிக்கும் முயற்சியாகும்.

brooklyn museum

நியூயார்க் ப்ரூக்ளின் மியூசிய சிலை

வாழ்க வராஹமிகிரர்! படிக்க பிருஹத் சம்ஹிதா!!!