பழகத் தெரிய வேணும், பெண்ணே (ஆணே) பார்த்து நடக்க வேணும்! (Post No.2902)

HowtoWinFriendsandInfluencePeopleCover

Compiled by London swaminathan

 

Date: 17  June 2016

 

Post No. 2902

 

Time uploaded in London :– 8-35 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

grow rich

வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? உங்கள் நண்பர்களை வெல்லுவது எப்படி? ( How to win friends and Influence People) என்றெல்லாம் நூற்றுக் கணக்கான புத்தகங்களை (Self-Improvement Series) விலைக்கு வாங்குகிறோம். இதையெல்லாம் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே சம்ஸ்கிருதத்தில் ரத்தினச் சுருக்கமாக நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர். புகுந்த வீட்டுக்குப் போகும் (புக்காத்துக்கு= புகுந்த+ அகத்துக்கு) புதுமணப் பெண்ணுக்கு உலக மஹா கவிஞன் காளிதாசன் சொன்ன அறிவுரைகளை முன்னரே ஒரு கட்டுரையில் தந்தேன். அற்புதமான அறிவுரையை, நாலைந்து ஸ்லோகங்களில் வடித்துக் கொடுத்துவிட்டான். இப்பொழுது வேறு ஒரு கவிஞனின் பாடலைக் காண்போம்:–

 

கீழ்கண்ட அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகம்– யார், யாரிடம் எப்படிப் பழக வேண்டும் என்று பொட்டில் அடித்தது போலச் சொல்கிறது:–

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே, தயா பரிஜனே,சாட்யம் சதா துர்ஜனே, ப்ரீதி: சாது ஜனே, நயோ ந்ருப ஜனே, வித்வத் ஜனே சார்ஜவம்,

சௌர்யம் சத்ருஜனே, க்ஷமா குருஜனே,காந்தாஜனே த்ருஷ்டதா, யேசைவம் புருஷா: கலாசு குசலாஸ்தேப்வேவ லோகஸ்திதி:

 

தாக்ஷிண்யம் ஸ்வஜனே- நமக்கு நெருக்கமானவரிடத்தில் பரிவும்

தயா பரிஜனே – சுற்றத்தாரிடம் கருணையும்

சாட்யம் சதா துர்ஜனே – கெட்டவரிடத்தில்  ஒதுங்கிப்போ கும்போக்கையும்

ப்ரீதி: சஜ் ஜனே – நல்லோரிடத்தில் அன்பையும்

நயோ ந்ருப ஜனே- ஆள்வோரிடத்தில் (அரசாங்கம்) நாசூக்கையும்/ நைச்சியத்தையும்

வித்வத் ஜனே சார்ஜவம்- அறிஞர்களிடத்தில் நேர்மையையும் ( ச+ ஆர்ஜவம்)

சௌர்யம் சத்ருஜனே – விரோதிகளிடத்தில் சூரத்தனத்தையும் (வீரத்தையும்)

க்ஷமா குருஜனே- ஆசிரியர்/குருவிடத்தில் பொறுமையையும்

காந்தாஜனே த்ருஷ்டதா- மனைவி மற்றும் அவளுடைய வட்டத்தில் பற்றையும்

யேசைவம் புருஷா: – எந்த மனிதர்கள் கடைப்பிடித்து

கலாசு குசலாஸ்தேப்வேவ – இந்தக் கலையில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்களோ

லோகஸ்திதி: – அவர்கள் கையில்தான் உலகம் இருக்கிறது.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலாதார் (குறள் 140)

Blog_Post_Books_5

–சுபம்–

 

 

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!! (Post No 2901)

punarjanma 4

Article written by S.NAGARAJAN

 

Date: 17 June 2016

 

Post No. 2901

 

Time uploaded in London :–  5-42 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

திரு ஆர் சி ராஜா அவர்களை ஆசிரியராகக் கொண்டு மாதம் தோறும் நெல்லையிலிருந்து தமிழில் வெளி வரும் மருத்துவ மாத இதழான ஹெல்த்கேர் இதழில் மே 2016 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 

ஆரோக்கிய ஆன்மீக இரகசியம்

 

மறு பிறப்பு உண்டா என்ன? – சரகர் தரும் பதில்!!

 

.நாகராஜன்

 punarjanma5

று பிறப்பு பற்றிய சந்தேகங்கள்

 

மறு பிறப்பு பற்றி ஏராளமான சந்தேகங்கள் இயல்பாகவே எழுகின்றன. புண்ணிய காரியங்களைச் செய், மறு உலகில் சந்தோஷமாக இருக்கலாம்; மறு பிறப்பில் நன்றாக வாழலாம் என்ற கொள்கை முன் வைக்கப்படும் போது அதற்கு என்ன ஆதாரம் என்ற கேள்வி எழுகிறது? கண்ணால் பார்ப்பதே மெய் என்று எடுத்துக் கொண்டால் மறு உலகத்தைக் கண்ணால் காண முடிவதில்லையே!எப்படி அதை நம்ப முடியும் என்ற கேள்வி எழுகிறது.

 

 

சாஸ்திரங்களை நம்புவோர் மறு பிறப்பு உண்டு என்று சொல்லும் போது அதை ஏற்காதவர்கள் அதற்கு என்ன ஆதாரம் என்கின்றனர்.

 

தாய் தந்தையே இந்தப் பிறவிக்குக் காரணம் என்றால் இந்தப் பிறவிக்குப் பின்னால் உள்ள பிறவிக்கு யார் காரணம்? இயற்கை தான் நம்மைப் படைக்கிறது என்று வைத்துக் கொண்டால் அப்போதும் கூட இன்னொரு பிறவிக்கு காரணம் எது?மதியே அனைத்திற்கும் காரணம் என்று வைத்துக் கொண்டாலும் மறு பிறப்பு கொள்கை அடிபட்டுப் போகிறது.

இப்படி அனைத்துக் கோணங்களையும் எடுத்துக் கொண்டு அலசி ஆராய்கிறார் சரகர்.

 

 

 

எல்லைக்குட்பட்ட புலன்களின் செயல்பாடுகள்

 

புத்திசாலியாக இருக்கும் ஒருவன் மறுபிறப்புக்கு மாறாகப் பேசப்படும் வாதங்களை ஏற்கக் கூடாது.ஏன்? ஏனெனில் புலனுக்கு உள்ளடங்கிய பார்வை ஒரு எல்லைக்கு உட்பட்டவை. ஆனால் அறிவோ – சாஸ்திரங்கள் மூலமாகப் பெறப்படுவது, ஊகம், தர்க்கம் மூலமாக அறிதல் ஆகியவை மூலமாகப் பெறப்படும் அறிவோ – எல்லையற்றது. அதன் மூலம் புலன்களுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் பற்றிய சரியான பார்வையைப் பெற முடியும்.

 

இன்னொரு விஷயம். கண்ணால் பார்ப்பது மட்டுமே மெய்; புலன்களால் உணரப்படுவது மட்டுமே உண்மை என்று கூறுவது சரியான் ஒன்றல்ல. புலனுக்கு மீறிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. மிகுந்த தொலைவில் உள்ள ஒன்றை எப்படிப் பார்க்க முடியும்? தடைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு பொருளைப் பார்ப்பது சாத்தியமா? எடுத்துக்காட்டாக சுவர் ஒன்றின்  பின்னால் இருக்கும் ஒரு பொருளை எப்படிப் பார்ப்பது? புலன்கள் கூர்மையின்றி இருந்தால் அப்போது அந்தப் புலன்கள் பார்க்க முடிபவை மட்டுமே தான் உண்மையா? புலன்கள் கூர்மையாக இருந்தாலும் மனம் ஒன்றில் ஈடுபடவில்லையெனில் எதிர்த்தாற் போல இருப்பதும் தெரிவதில்லை; காதில் ஒலி விழுந்தாலும் கவனம் இல்லையேல் அது கேட்பதில்லையே! ஒரே பொருள் போன்ற இரண்டு பொருள்களைக் கண்டால் மயக்கம் ஏற்படுகிறது. மிகச் சிறிய பொருளைக் காண முடிவதில்லை. நிழல் பட்டால் அப்போது எதிரில் இருப்பதும் மறைகிறது. ஆக இப்படி எவ்வளவோ விஷயங்கள் புலன்களை எல்லைக்குட்பட்டவை என்பதை நிரூபிக்கிறதே

 

 

பெற்றோர் தான் பிறப்புக்கு காரணம் என்றால் அது இரண்டு விதமாக ஏற்பட வேண்டும். ஒன்று  முழுமையாக அவர்கள் பிறப்புக்குரிய உயிரில் மாற வேண்டும். அப்படி என்றால் அவர்கள் புதிய உயிர் பிறந்தவுடன் மரிக்க வேண்டும். அப்படி ஏற்படவில்லை.

 

 

அடுத்து ஒரு பகுதி மட்டும் புதிய உயிரில் மாற் வேண்டும். அப்படி தாயோ தந்தையோ பகுதியைப் பிரித்துக் கொடுக்கவில்லை. அப்படி என்றால் வேறு எதோ ஒன்று புதிய உயிரின் படைப்பில் இருக்கிறது, இல்லையா?

பெற்றோர் மட்டுமே பிள்ளைகளின் பிறப்புக்குக் காரணம் என்றால், அவர்களின் மனமும், புத்தியும் பிள்ளைகளுக்கு மாற்றி விடப்படுகிறது என்றால் அப்படிப் பிள்ளை பிறந்தவுடனேயே அவர்களது மனம் புத்தி ஆகியவை இயங்காமல் நின்று விட வேண்டும்..ஆக, அதுவும் சரியல்ல.

 

 

ஒரு பிறப்பு ஏற்படும் போது ஐந்து அடிப்படை பூதங்களும் ஆத்மாவும் இணைகிறது; பின்னர் பிரிகிறது. ஆத்மா முடிவற்ற ஒன்று.

 

 punarjanma 6

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்றா?

 

உலகம் தற்செயலாக ஏற்பட்ட ஒன்று என்ற வாதமும் சரியில்லை.  ஏனெனில் இப்படிச் சொல்பவருக்கு எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை; ஆராய வேண்டிய அவசியமும் இல்லை. அது அது தன் பாட்டிற்கு ஏற்படுகிறது என்றால் மேலே பேசுவதற்கு ஒன்றுமே இல்லை!

 

 

அறிவால் ஆய்ந்து பார்!

ஆகவே புத்திசாலியாக இருக்கும் ஒருவன் தன் அறிவைக் கொண்டு ஆராய வேண்டும்.

எந்த ஒன்றும் இரண்டே இரண்டுக்குள் தான் அடங்கியிருக்கிறது.

ஒன்று அது உண்மையாக இருக்க வேண்டும் அல்லது பொய்யாக இருக்க வேண்டும்.

 

 

ஒரு விஷயம் உண்மையா அல்லது பொய்யா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு வழிகள் உள்ளன.

  • ஆன்றோர் அல்லது ரிஷிகள் கூற்று
  • நேரடிப் பார்வை (புலனறிவு)
  • ஊகம்
  • தர்க்கம் மூலமாக அறிவது

ரஜஸ், தமஸ் ஆகிய இரண்டையும் கடந்து நிகழ் காலம் எதிர் காலம், இறந்த காலம் ஆகிய மூன்று காலங்களையும் பார்க்க வல்ல்வர்கள் ஆப்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களிடம் பொய்யே இருக்க முடியாது. ஆக அவர்கள் கூறுவதை நம்பலாம்.

 

punarajanma3

ப்ரத்யக்ஷ பிரமாணம் என்பது ஒரு எல்லைக்குட்பட்டது.

ஊகம் என்பதோ மூன்று வகைகளைக் கொண்டது. நிகழ்காலம், இறந்தகாலம் எதிர்காலம் ஆகியவற்றுடன் அது தொடர்பு கொண்டது. புகை மூலம் தீ இருப்பது தெரிகிறது. குழந்தை பிறப்பதன் மூலம் பாலியல் சேர்க்கை உணரப்படுகிறது. இவை இரண்டும் நிகழ்காலம் இறந்தகாலம் ஆகியவற்றிற்கான உதாரணங்கள்.ஒரு மரத்தின் விதையை விதைக்கும் போது அது எந்த மரமாக வளரும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது எதிர்காலத்திற்கான விளக்கம்.

 

 

தர்க்கம் மூலமாக அறிவதைப் பல உதாரணங்களால் விளங்கிக் கொள்ளலாம். நிலத்தைப் பண்படுத்தி உழுது. விதை விதைத்து பருவ காலத்தில் மழையும் பெய்தால் விளைச்சல் நன்கு ஏற்படும்.ஆணும் பெண்ணும் பருவ காலத்தில் இணைந்தால் கரு உருப்பெறும். நிகழ்காலம் இறந்த காலம் எதிர்காலம் ஆகிய மூன்றிற்கும் பொருந்தும் ஒன்றைப் பலவேறு காரணிகளால் புத்தி பார்த்து அறிவது யுக்தி எனப்படும்.

இது மனித வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கும் தர்மம் (புண்ய காரியங்கள்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) ஆகிய மூன்றைப் பூர்த்தி செய்ய உதவுகிறது.

ஆகவே இந்த அடிப்படையில் மறுபிறப்பு பற்றி ஆராய வேண்டும்.

 

punarjanma1

 

மறுபிறப்பு உண்மையே என்பதற்கான காரணங்கள்

ஒரு வித ஆசையும் அற்ற பெரும் ரிஷிகள் கூறுவது உண்மை. அவர்கள் காரண காரிய தொடர்பு பற்றி ஆய்ந்து மறு பிறப்பு உள்ளது என்கின்றனர்.

 

 

இரண்டாவதாக பிறக்கும் குழந்தைகளில் பிறக்கும் போதே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன. நிறம், எடை, வடிவம், அழகு,புத்தி, மனம், குரல் இப்படி எல்லாவற்றிலும் தனித் தனி வேறுபாடு இருக்கிறது. ஒரு குழந்தை ராஜ குமாரனாகப் பிறக்கிறது. இன்னொன்றோ பிச்சைக்காரனாகப் பிறக்கிறது.

ஒன்று பிறந்தவுடன் இறக்கிறது. இன்னொன்றோ நூறு வயது வ்ரை வாழ்கிறது. தாய்ப் பாலைக் குடிப்பது, அழுவது, சிரிப்பது ஆகிய எல்லாவற்றிலும் கூட ஒரு குழந்தை போல இன்னொரு குழந்தை இருப்பதில்லை.

 

 

இந்த ஜன்மத்தில் செய்யும் நல்ல அல்லது கெட்ட வினைகளுக்கேற்ப அடுத்த பிறவி அமைகிறது என்பதை ஊகித்து அறியலாம்.

 

தர்க்கப் படியாகப் பார்த்தாலும் மறு பிறப்பு சரியே. கர்த்தா, காரணம் ஆகியவற்றிற்கேற்ப செயல்கள் அமைகின்றன. விதையின்றி மரமில்லை.

 

ஆகவே மேற்கூறிய அனைத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்தால் மறு பிறப்பு உண்டு என்பது நன்கு புரியும்.

ஒரு புத்திசாலி நாத்திக வாதத்தால் மயங்க மாட்டான். அவன் நல்ல காரியங்களைத் தொடர்ந்து செய்து நல்லதையே பெற முயல்வான்.

 

ஆக சரகரின் இந்த விரிவான விளக்கம் மறு பிறப்பு பற்றிய தெளிவை நமக்கு ஏற்படுத்துகிறது, இல்லையா?!

************.

 

கண்ணு! கண்ணு! ஏ கண்ணூ!! சுவையான துணுக்குகள்! (Post No 2899)

sentamil chintamanai 1

Compiled by London swaminathan

 

Date: 16 June 2016

 

Post No. 2899

 

Time uploaded in London :– 8-06 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

செந்தமிழ் சிந்தாமணி என்ற பழைய பத்திரிக்கையில் வந்த சுவையான விஷயங்கள்:–

 

வெள்ளை காகம் விலை இரண்டரை ரூபாய்!!

 

white crow (2)

கண்ணு! கண்ணு !! ஏ, கண்ணு!!!

 

kannu kannu (2)

 

தாயைப் போல பிள்ளை, நூலைப் போல சேலை!

 

poy thay (2)

–subham–

 

 

இஷ்டம், பூர்த்தம் என்றால் என்ன? (Post No.2897)

family havan2

Compiled by London swaminathan

 

Date: 15 June 2016

 

Post No. 2897

 

Time uploaded in London :– 8-20 AM

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

 

தான தர்ம அனுஷ்டானங்கள், இஷ்டம் பூர்த்தமென இருவகைப்படும்:-

 

அக்னிஹோத்ரம் தப: சத்யம் வேதானாம் சைவ பாலனம்

ஆதித்யம் வைஸ்வதேவஸ்ச இஷ்டமித்யபிதீயதே

 

அக்னிஹோத்ரம்

தவம்

சத்யம்

வேதம் ஓதுதல்

அதிதி /விருந்தோம்பல்

வைஸ்வதேவம் ( எல்லா கடவுளர்க்கும் தினசரி அக்னியில் இடப்படும் பலி; இன்னொரு அர்த்தம் -பூத யக்ஞம்)

இவைகள் இஷ்டம் என்று அறியப்படும்.

(திருக்குறளில் துறவறவியல் மற்றும் இல்லறவியலில் இவை கூறப்பட்டுள்ளன).

 

WELL IN SALEM, AZAKIYA SINGAR

வாபீகூபதடாகாதி தேவதாயதனானி ச

அன்னப்ரதானமாராமா: பூர்தமர்த்யா: ப்ரசக்ஷதே

குளம் (வாபீ) தோண்டல், கிணறு (கூப:) வெட்டல், ஏரி (தடாகா:) அமைத்தல்,ஆலயம் கட்டுதல் (தேவ ஆயதனா:),அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்தல் (ஆரமா:) – இவைகள் பூர்த்தம் எனப்படும்.

காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இஷ்டம், பூர்த்தம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காண்க. குறிப்பாக வைஸ்வதேவம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்)

 

xxx

 

ஆறு வகையான ஆபத்துகள்

அதிக மழை (அதி வ்ருஷ்டி)

மழையின்மை/வறட்சி (அனாவ்ருஷ்டி)

வெட்டுக்கிளி (சாலபா:0

எலிகள் (மூஷகா:)

கிளிகள் (சுகா:)

அயல்நாட்டானின் படையெடுப்பு (ப்ரத்யாசன்னா:)

 

அதிவ்ருஷ்டிரனாவ்ருஷ்டி: சலபாமூஷகா: சுகா:

ப்ரத்யாசன்னாஸ்ச ராஜான: ஷடேதா ஈர்தய: ஸ்ம்ருதா:

belize_1984_parrots

–சுபம்–

 

 

உத்தமன் யார்? மத்யமன் யார்? அதமன் யார்? (Post No.2894)

Logo Three people on podium

Written by London swaminathan

 

Date: 14 June 2016

 

Post No. 2894

 

Time uploaded in London :– 16-16

 

( Pictures are taken by London swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

three figures

நல்லவன் யார்?

மீண்டும் மீண்டும் இடையூறு வரினும் எடுத்த காரியத்தை முடிப்பவனே (உத்தமன்) சிறந்தவன்.

சிலர், ஒரு வேலையைத் துவக்கியபின்னர், இடையூறு வந்தால் அதை விட்டு விடுவார்கள். இவர்கள் (மத்யமன்) இடைப்பட்ட நிலையிலுள்ளவர்கள்.

இடையூறு வரும் என்று பயந்துகொண்டு வேலையையே துவங்கமாட்டார்கள் கீழ்நிலையிலுள்ளவர்கள் (அதமன்).

 

ப்ராரப்யதே ந கலு விக்னபயேன நீசை:

ப்ராரப்யதே விக்னவிஹதா விரமந்தி மத்யமா:

விக்னைர் முஹுர்முஹுர் அபி ப்ரதிஹன்யமானா:

ப்ராரப்தம் உத்தமகுணா ந பரித்யஜந்தி

 

கருமமே கண்ணாயினார்

உத்தமர் யார் என்று நீதிவெண்பா கூறுகிறது:-

ஒரு வேலையைச் செய்யும்போது, உடலுக்கு வரும் கஷ்டத்தைப் பற்றிக் கவலைப்படமாட்டார். பசியைப்பற்றி கவலைப்படமாட்டார். வேலை முடியும் வரை தூங்க மாட்டார். யார் இடையூறு செய்தாலும் அதைப் பொருட்படுத்தார். காலம் வீணாகுமோ என்று கவலைப்படமாட்டார். யார் இகழ்வதையும் பொருட்படுத்தமாட்டார்.

 

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்- செவ்வி

அருமையும் பாரார் அவமதிப்புங்கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

Snakes---Banded-Egyptian-Cobra

விஷப் பாம்பும், தீயோரும்

தாழ்ந்தோருக்கு செய்யும் (உபகாரம்) உதவியால் கெடுதலே (அபகாரம்) வரும். பாம்புக்கு பால் வார்த்தால் விஷம்தான் அதிகரிக்கும்.

உபகாரேண நீசானாம் அபஹாரோ ஹி ஜாயதே

பய: பானம் புஜங்கானாம் கேவலம் விஷவர்தனம்

–சுபம்–

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல! (Post No.2893)

blindfolded1

Article written by S.NAGARAJAN

 

Date: 14 June 2016

 

Post No. 2893

 

Time uploaded in London :–  6-56 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

உலகின் அதிசய நூல் யோகவாசிஷ்டம் ! – 4

 

கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல!

 

ச.நாகராஜன்

 

யோக வாசிஷ்டம் என்னும் பெரிய நூலை படிக்கலாம் என்று அதன் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க ஆரம்பிப்பது  கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கிறது என்று அன்பர்கள் சொன்னால் அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.

 

 

விஷயம் சூக்ஷ்மமான விஷயம். ஆர்வம் உள்ளவர்களுக்கே 32000 சுலோகங்களைப் படிப்பது என்பது எளிதான காரியமல்ல. அதுவும் ஆங்கிலத்தில் படிக்கும் போது முழு சாரத்தையும் கிரகிக்க முடியுமா என்ற சந்தேகம் எழுவது இயல்பே.

இதனால் அன்பர்கள் முதலில் “Quintessence of Yogavasishtha” என்ற புத்தகத்தை முதலில் படிக்கலாம். ருசி வந்து விடும்,

 

 

பின்னர் சம்ஸ்கிருதத்தின் அழகைக் காணவும் அதில் ஆழ்ந்த அர்த்தமுள்ள பல்வேறு விஷயங்களைப் படிக்கவும் ஒரு நல்ல நூல் உள்ளது.  தேர்ந்தெடுத்த சுமார் 2500 சுலோகங்கள் சம்ஸ்கிருதத்திலும் அதன் ஆங்கில மொழியாக்கமும் உள்ள புத்தகம் அது        


B.L. Atreya
தேர்ந்தெடுத்த ஸ்லோகங்களை Samvid  என்பவர்அழகுற ஆங்கிலத்தில்  மொழியாக்கம் செய்துள்ளார். இந்த நூலின் பெயர் ‘The Vision and the way of Vasistha’.  583 பக்கங்கள் கொண்ட புத்தகத்தில் யோக வாசிஷ்டம் எதைச் சொல்ல வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு பிரமிக்கலாம் இதன் இன்றைய விலை ரூ 400/

 

 

அழகிய எளிய சம்ஸ்கிருதம் இந்த நூலில் அமைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்ட இரு ஸ்லோகங்களை இங்கு பார்க்கலாம். நூலின் பெருமையைக் கூறும் ஸ்லோகங்கள் இவை.

 

 

க்ரந்தேனானேன லோகோயமஸ்மாத் ஸம்சார சங்கடாத்

சமுத்தரிஷ்யதி க்ஷிப்ரம் போதேனேவாஷு ஸாகராத்

 

This mankind will cross over this peril of worldly existence speedily by this work, as (one crossed over) the ocean quickly by a boat.

.

யதிஹாஸ்தி ததன்யத்ர யத்ரேஹாஸ்தி ந தத் க்வசித்

இமம் சமஸ்தவிஞ்ஞான சாஸ்த்ர கோஷம் விதுர்புதா:

 

What is here (in this work), that is elsewhere.  What is not here that is nowhere. The wise consider this as the repository of all scriptures of Higher Knowldege.  (Translation by Samvid)

 

 

 

இந்த நூலைப் படித்த பின்னர் யோகவாசிஷ்டம் முழுவதையும் ப்டிப்பதில் கஷ்டம் இருக்காது.

 

இவ்வளவு பீடிகைக்குப் பின்னரும் இந்த அதிச்ய நூலைப் படிக்காமல் இருந்தால் அது பாக்கியக் குறைவே.

படிப்பவர்களுக்கு மற்றவர்களுக்குப் புரியாத பிரபஞ்ச இரகசியங்கள் புரியும்.

 

********

ஜமைகா சத்திரம்: கடத்தல்காரர்கள் சொர்கம் (Post No.2892)

jam 1

Written by London swaminathan

 

Date: 13 June 2016

 

Post No. 2892

 

Time uploaded in London :– 17-59

 

(  Pictures are taken by london swaminathan)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

jam 2

 

இங்கிலாந்தின் கார்ன்வாலில்(Cornwall) உள்ள ஜமைகா இன் (சத்திரம்) Jamaica Inn என்ற மியூசியத்துக்கு ஜூன் 11 (2016) போயிருந்தேன். அங்கு கடற் கொள்ளைக் காரர்கள், கடத்தல் காரர்கள் பற்றி ஒரு சிறிய மியூசியமும், ஹோட்டலும், மதுபான விடுதியும் உள்ளன. லண்டனிலிருந்து ஐந்து மணி நேரம் காரில் சென்றால் இந்த இடத்தை அடையலாம். கார்ன்வால் என்னும் பிராந்தியம் அழகான கடற்கரை, பழங்காலச் சின்னங்கள், நீர்வீழ்ச்சிகள் முதலியவற்றுக் கும் பெரிய மார்க்கெட்டுக்கும் பெயர் பெற்ற இடம். நாங்கள் இரண்டே நாள் விடுமுறையில் சென்றதால் ஜமைகா இன், நியூ கீ கடற்கரை, ஈடன் கார்டன் Eden Garden என்ற மிகப்பெரிய தாவரவியல் பூங்கா, செயின்ட் ஆஸ்டல் (St Austell) வாரச் சந்தை ஆகியவற்றை மட்டுமே பார்க்கமுடிந்தது.

 

ஒருகாலத்தில் கார்ன்வால் என்பது யாரும் அதிகம் வராத ஒரு பகுதியாக இருந்ததால் அது கஞ்சா முதலிய பொருட்களை கடத்துவோரின் சொர்கபூமியாக மாறியது. வெளி உலகிற்கே இப்படி ஒரு கடத்தல்காரர் பூமி இருப்பதும் அவர்கள் ஒரு ஹோட்டலில் வழக்கமாக சந்தித்து பண்டமாற்றம் செய்வதும் யாருக்கும் தெரியாமல் இருந்தது. 1936 ஆம் ஆண்டுகளில் இவ்விஷயங்களைக் கூர்மையாகக் கவனித்த டாப்னி டூ மோரியர் (Daphne du Mauriere) என்ற பெண்மணி கடத்தல்காரர், கடற்கொள்ளைக்காரர்கள் பற்றி நல்லதொரு நாவல் எழுதினார். அவர் வாயிலாக இந்த இடம் பற்றி எல்லோரும் அறிந்தனர். பின்னர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக் இதே பெயரில் ஒரு திரைப்படம் எடுத்தார்.

jam5

அந்தத் திரைப்படத்தில் கடல் கொள்ளையர்கள், எப்படிக் கப்பல்களைக் கவிழ்த்து, மாலுமிகளைக் கொன்று பொருள்களைக் கொள்ளையடிக்கின்றனர் என்று காட்டப்படுகிறது.

 

இப்பொழுது பாட்மின், லான்சஸ்டன் என்ற இரண்டு ஊர்களுக்கிடையேயுள்ள ஜமைகா இன், ஒரு சுற்றுலா இடமாக மாறிவிட்டது. ஒரு சின்ன மியூசியத்தில் கடத்தல் காரர்கள் பற்றிய நாவல்களின் தொகுப்பு, பழைய ஓவியங்கள், அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், அவர்கள் கடத்திய பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 

தமிழ்நாட்டில் சணல் நாரினால் பின்னப்பட்ட பைகளில் சாமான்கள் வாங்குவோம். அது மாதிரிப் பையின் மீது கஞ்சா படம் போட்டு இத்தனை கிலோ என்று எழுதி இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இப்படி கிலோ கணக்கில் ஜமைகா தீவில் கஞ்சா விற்கப்பட்டது. அந்தப் பைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பாம்பாட்டிகள் வைத்திருக்கும் மகுடிகள் அங்கே பழங்கால இசைக்கருவிகள் என்றும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. ஜமைகா என்னும் நாடு மேற்கிந்தியத் தீவு நாடுகளில் ஒன்று ஆகும்.

ஒரு தனி அறையில் பத்து நிமிட வீடியோ திரைப்படமும் காட்டப்படுகிறது. டாப்னி எழுதிய நாவல்களும் உள்ளன. ஜமைகா இன் என்ற பெயரில் பி.பி.சி.சீரியல், நாடகம் ஆகியனவும் வந்திருப்பதால், இந்தக் கதைகளை அறிந்தோருக்கு இது ஒரு நல்ல மியூசியமாகத் திகழும். ஒரு சிறிய நுழைவுக் கட்டணம் இருந்தபோதிலும், நாவலைப் படித்தவர்களும், திரைப்படத்தைப் பார்த்தவர்களும் ஜமைகா இன் – சத்திரத்தைப் பார்க்காமல் வரமாட்டார்கள். சுமார் 300 ஆண்டுப் பழமையான இடம் இது.

 

jam 7

 

jam11

 

jam10

–சுபம்–

 

 

உலகின் அதிசய நூல் யோக வாசிஷ்டம் ! – 3 (Post No.2890)

yoga-vasistha

Article written by S.NAGARAJAN

 

Date: 13 June 2016

 

Post No. 2890

 

Time uploaded in London :–  8-57 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

யோக வாசிஷ்டத்தை இலவசமாகப் படிக்கலாம், பெறலாம்!

 

ச.நாகராஜன்

 

யோக வாசிஷ்டம் பிரம்மாண்டமான பெரிய நூல். இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை கீழ்க்கண்ட இணையதள தொடுப்பிலிருந்து (link) பெறலாம்..

https://archive.org/stream/YogaVasishtaOfValmikiValmiki/Yoga%20Vasishta%20of%20Valmiki%20-%20Valmiki_djvu.txt

 

ரமண மஹரிஷி யோக வாசிஷ்ட உண்மைகளை அனுபூதியாக அனுபவித்தவர். அவர் யோக வாசிஷ்டம் பற்றி தன் வாழ்க்கை நெடுக அன்பர்களுக்கு அதன் அருமை பெருமைகளைப் பற்றிப் பல்வேறு சமயங்களில் அருளுரை அருளியிருக்கிறார்.

ரமணாசிரமம் வெளியீடாக Yoga Vasishta Sara (The essence of Yoga Vasishta) என்ற சிறிய ஆங்கில நூல் யோக வாசிஷ்ட சாரத்தைத் தருவதாக அமைந்துள்ளது. பத்தே அத்தியாயங்களில் சாரத்தைத் தருகிறது இந்தச் சிறு நூல்.

இந்த நூலை ரமணாசிரமம், திருவண்ணாமலையிலிருந்து பெறலாம். ஆசிரமத்தின் இணையதளத்திலிருந்து ரமணாசிரம புத்தகங்கள் பலவற்றையும் பெறலாம்.

இணையதளத்தில் ஆசிரமத்தின் கீழ்க்கண்ட தொடுப்பிலிருந்து இதை தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

http://www.ramana-maharshi.info/downloads/downloads.htm

அடுத்ததாக பங்களூரிலிருந்து, “Quintessence of Yogavasishtha”

என்ற மிக அருமையான நூல் வெளியிடப்பட்டுள்ளது. இதை எழுதியவர் சி.எஸ்.குப்தா.

இதைப் படித்தவர்கள் மனநிறைவுடன் முழு யோகவாசிஷ்டத்தை ஆழ்ந்த ஈடுபாட்டுடன் படிப்பார்கள் என்பது நிச்சயம்.

ஆர்தர் கானண்டாயில் அல்லது இர்விங்வாலஸ் நாவலைப் படிப்பதில் உள்ள சஸ்பென்ஸ்,  விக்ரமாதித்தன் புதிர் கதைகளில் ஆழ்ந்த கருத்துடன் பெறப்படும் லாஜிக்,, டைம் டைலேஷன், ஸ்பேஸ் மர்மம் போன்றவற்றை  உள்ளடக்கிய ஸை- ஃபி (ஸயிண்டிபிக் ஃபிக் ஷன்) நாவல்களில் உள்ள அறிவியல் மர்மங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதோடு அதையும் மீறி அபாரமாக சுவாரசிய விருந்து அளிக்கும் இந்த புஸ்தகம் யோக வாசிஷ்ட கருத்துக்களை 174 பக்கங்களில் தருகிறது.

இதை வெளியிட்டுள்ளோர் : Satsangha Seva Samithi, Gandhi Bazar, Bangalore – 4 (1978ஆம் ஆண்டு வெளியீடு)

யோக வாசிஷ்டத்தின் கருத்துக்களை உலகின் மாபெரும் மேதைகளின்  கருத்துக்களோடு ஒப்பிட்டுக் காட்டிய யோகவாசிஷ்ட அறிஞர் பி.எல். ஆத்ரேயா எழுதிய Yoga Vasistha and Modern Thought” என்ற புத்தகத்தையும் முதலில் படித்து விட வேண்டும். 1934ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த புத்தகம் இப்போதும் விலைக்கு வாங்க முடிகிறது.

இது தவிர ஏராளமான புத்தகங்கள் இதன் அருமை பெருமைகளை வெளியிடுகின்றன. அனைத்தையும் கூட ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கலாம்.

சரி,தமிழில் யோகவாசிஷ்டத்தைப் பெற முடியுமா? முடியும்.

இணையதளத்தில் கீழ்க்கண்ட தொடுப்பிலிருந்து இதை இலவசமாகத் தரவிரக்கம் (டவுன்லோட்) செய்து கொள்ளலாம்.

 

https://www.scribd.com/doc/11815811/YOGA-VASISTAM-TAMIL-BOOK

யோகவாசிஷ்டம் (முதல் ஐந்து பிரகரணங்கள்) என்ற இந்த நூலை எஸ்.வி. கணபதி அவர்கள் தமிழாக்கம் செய்து 1943ஆம் ஆண்டு அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை வெளியீட்டாக வெளியிட்டுள்ளார்.

313 பக்கங்கள் கொண்ட நூல் இது.

ஆக தமிழிலும் ஆங்கிலத்திலும் உடனடியாகப் படிக்க சில நூல்களை இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

இன்னும் ஏராளமாக உள்ள யோக வாசிஷ்ட புத்தகங்களையும் கட்டுரைகளையும் படிப்பதன் மூலம் வாழ்க்கையில் மேம்பட முடியும்.

வாழ்க்கையில் இந்தப் புத்தகத்தைப் படித்தால் வேறு ஒரு புத்தகத்தையும் நாட வேண்டாம் என்று சொல்லும் கீர்த்தியைப் பெற்ற நூல் யோகவாசிஷ்டம்.

படித்தால் அருமை தெரியும்.

**********

 

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்! (Post No.2888)

Profit, loss and risk crossword on white background

Profit, loss and risk crossword on white background

Article written by S.NAGARAJAN

 

Date: 12 June 2016

 

Post No. 2888

 

Time uploaded in London :–  22-40

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

 

வாழ்க்கையையே நஷ்டமாக்கிக் கொள்பவர்கள்!

ச.நாகராஜன்

நாடு முழுவதும் சுற்றி வரும் கவிஞர் உலக வாழ்க்கையின் இயல்பைக் கண்டு வியக்கிறார்.

மனிதரில் தான் எத்தனை விதம்! வாழ்க்கையை தனக்குத் தானே எப்படியெல்லாம் அவர்கள் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! வியப்பு மேலிடுகிறது அவருக்கு!

சிலர் அறியாமையால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்!

சிலரோ தங்களின் அலட்சியப் போக்கினால் நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! சிலரோ அதிகம் படித்து விட்ட கர்வத்தினால் வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொள்கிறார்கள்! இன்னும் சிலரோ ஏற்கனவே வாழ்க்கையை நஷ்டப்படுத்திக் கொண்டவர்களுடன் சேர்ந்து அவர்களின் செல்வாக்கினால் தங்கள் வாழ்க்கையை  நஷ்டப்படுத்திக் கொ ள்கிறார்கள்!

என்னே உலகின் போக்கு!

Some are lost due to ignorance; some are due to negligence;

Some due to arrogance of wisdom; some due to influence of those who are lost already!

கேசிதஞானதோ நஷ்டா: கேசித் நஷ்டா: ப்ரமாதத:  I

கேசித் ஞானாவலேபேன  கேசித் நஷ்டைஸ்து நாஷிதா: II

சாணக்ய நீதி உள்ளிட்ட பல நூல்களில் இந்த அருமையான செய்யுள் இடம் பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிரறது.

அறியாமையைப் போக்கிக் கொள்.

எதிலும் அலட்சியமாக இருக்காதே.

படித்ததினால் அகம்பாவம் கொள்ளாதே.

ஏற்கனவே வாழ்க்கையை இழந்தவர்களுடன் சேராதே. நல்லவர்களுடன் பழகு!

வாழ வேண்டிய விதத்தை ஒரே ஸ்லோகத்தில் கவிஞர் அழகாகச் சொல்லி விடுகிறார் இல்லையா!

*****

“ஆரிய” சப்தத்தின் பிரயோகம் (Post No.2887)

arya

Article written by London swaminathan

 

Date: 11 June 2016

 

Post No. 2887

 

Time uploaded in London :– 6-10 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com

 

Arya (1)

Please read my (London Swaminathan) articles posted earlier:

1.Aryan Hitler and Hindu Swastika

2.Sibi Story in Old Tamil Literature

3.Were Moses and Jesus Aryans? (Two Parts)

4.திராவிடக் காகமும் ஆரியக் கொக்கும் (in Tamil)

5.சோழர்கள் தமிழர்களா?? (In Tamil)

  1. ஆரிய ஹிட்லரும் ஹிந்து ஸ்வஸ்திகாவும்(in Tamil)

7.திராவிடர்கள் யார்? (July 17, 2013)

8.தமிழன் காதுல பூ!!! (March 25, 2012)

9.ஆரிய சப்பாத்தியும் திராவிட தோசையும் (August 14, 2013)

10.ஆரிய ஜீன் —- திராவிட ஜீன் ஆராய்ச்சி முடிவுகள்(December 29, 2013)

11.Eighteen groups of Indians! (November 4, 2013)

12.‘Dravidians are Invaders’ ( December 26, 2013)

13.Aryan, Non Aryan Issue in Murder Attack in Britain! (November 10, 2013)

14.Arya Putra Ravana Spoke Sanskrit! Hanuman spoke Prakrta! (Research Article No.1848; Date: 6 May 2015)

15.Brahmin Kings of Sri Lanka! (Article No.1854; Dated 9 May 2015.)

16.Were Moses and Jesus ‘Aryans’? (July 20, 2013)

17.Were Moses and Jesus ‘Aryans’? (Part 2)

(July 23, 2013)

18.Are these customs Aryan or Dravidian?

(July 2, 2013)

19.Aryan Chapatti and Dravidian Dosa!

(August 14, 2013)

20.Who are Dravidians? (July 17, 2013)

 

arya

ஆரிய என்ற சொல் சங்க இலக்கியத்தில் இமயத்தில் வாழும் முனிவர்களைக் குறிக்கப் பயன்பட்டது. பிற்கால இலக்கியங்களில், வடக்கில் வாழும் மக்களையும், சம்ஸ்கிருத மொழியையும் குறிக்கப் பயன்பட்டது. இந்தியாவைப் பிளந்து, மதத்தை நிலைநாட்ட வந்தவர்கள், இதற்கு இனப்பூச்சு பூசி, திராவிடர் என்றால் பூர்வ குடி மக்கள், ஆரியர் என்றால் கைபர் கணவாய் வழியாகக் குடியேறியவர்கள் என்று விஷமத் தனமான புதுப் பொருள் கற்பித்தனர். ஆனால் தமிழ் இலக்கியத்திலோ, சம்ஸ்கிருத இலக்கியத்திலோ இதற்கு ஆதாரம் கிடையாது. ராமாயணத்தில், ராமனை சீதை, ‘ஆரிய’ என்று அழைப்பார். மாண்புமிகு, மரியாதைக்குரிய என்று இதற்குப் பொருள். நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ் நாவல் எழுதியவர்களும், வெளியிட்டவர்களும், ஆரிய சிகாமணிகளே, ஆரிய சிரேஷ்டர்களே என்று, வாசகப் பெருமக்களை அழைத்துள்ளனர். ‘மெத்தப் படித்தவர்களே’, ‘பண்பாடுடுடையவர்களே’ – என்று பொருள்.

 

ஆரிய என்ற சொல் மருவி ‘ஐயர்’ (உயர்ந்தோர்) என்று ஆயிற்று (ஆர்ய= அஜ்ஜ= அய்யர்= ஐயர்).

 

சில சுவையான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் ‘ஆரிய’ – என்ற சொல்லின் பிரயோகத்தை விளக்குகின்றன:–

 

கர்தவ்யம் ஆசரன்  கார்யம் அகர்த்வ்யம் அநாசரன்

திஷ்டதி ப்ரக்ருதாசாரே ச வா ஆர்ய  இதி ஸ்ம்ருத:

தர்ம விதிகளைக் கடைப்பிடிப்பவன், அதர்ம விதிகளை அனுசரிக்காதவன், நடைமுறை விதிகளைக் கடைப்பிடிப்பவன் ஆர்யன் என்று கருதப்படுவான்.

 

வாச்யௌ நடீசூத்ரதாராவார்ய நாம்னா பரஸ்பரம்

வயஸ்யேத்யுத்தமைர்வாச்யோ மத்யாரார்யதி சாக்ரஜ:

 

(வக்தவ்யோ) அமாத்ய ஆர்யேதி சேதரை:

ஸ்வேச்சயானாமபிர்விப்ரார்விப்ர  ஆர்யேதி சேதரை:

 

நாடகத்தில் நடிகரும், சூத்ரதாரியும் (டைரக்டர்) ஒருவரை ஒருவர் ‘ஆர்ய’ என்று அழைக்கலாம் (இதை காளிதாசன் நாடகங்களில் காணலாம்).

 

வயதில் குறைந்தவர்கள் மூத்தவர்களை ஆர்ய எனலாம்.மந்திரிகளை ஆர்ய (மாண்புமிகு) என்று கூப்பிட வேண்டும். பிராமணர்கள் விருப்பத்தின்பேரில் மற்றவர்களை ஆர்ய என்று அழைக்கலாம்.

 

வீடு எது? காடு எது?

வீடு என்றால் பவனம். இதில் ‘ப’ என்ற எழுத்து போய்விட்டால் அது ‘வனம்’—அதாவது காடு. இதை விளக்கும் அழகிய சம்ஸ்கிருத ஸ்லோகம் இதோ:

யன் மனீஷி பதாம்போஜரஜ: கணபவித்ர்ரிதம்

தத்தேவ பவனம் நோ சேத்பகாரஸ்தத்ர லுப்யதே

பூதம் ஹி தத் க்ருஹம் யத்ர ஸ்வதாகார ப்ரவர்த்ததே

 

பொருள்:-

எந்த வீட்டில் ஞானிகளின் பாததூளி படுகிறதோ, எந்த வீட்டில் ஸ்வதா என்ற வேத மந்திரத்துடன் நீத்தார் (இறந்தோர்) கடன் நடைபெறுகிறதோ அது பவனம் (வீடு); மற்றதனைத்தும் வனம்!

(அரும் பத விளக்கம்:–மனீஷி= அறிஞர்கள், ஞானிகள்; கண=பாத தூளி, பத+அம்புஜ= பாத கமலங்கள், திருவடிகள்; பூதம்= புனிதமாக்கப்பட்ட)

 

–சுபம்–