More Rare Pictures from 1928 Book(Post No.14,661)

Title- Aryan Rule in India

Author- E B Havell

Year- 1928

Place- London

TRIMURTI, ELEPHANTA CAVE, HINDU TEMPLES, NATARAJA, APPAR, TEMPLES, MONUMENTS , MARTAND, SANCHI, SARNATH, BIG TEMPLE, MARTAND, MAHABALIPURAM

–Subham—

Tags- rare pictures, E B Havell,MAHABALIPURAM, TRIMURTHY

If You are A Patriotic Hindu You must Know these 13 Bais! (Post No.14,660)

Written by London Swaminathan

Post No. 14,660

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Questions

1.Who is the BAI who was Gandhiji’s Wife?

2.Who is the BAI who was called Jhansi ki Rani?

3.Who is the BAI who was Princess of Mewar and a great poet/devotee of Lord Krishna?

4.Who is the BAI who renovated temples that were destroyed by Muslims in Madhya Pradesh?

5.Who is the BAI who fought against the British from Ramgarh in Madhya Pradesh?

6.Who is the BAI who helped Jhansi ki Rani in the First Independence War against the British Rule?

7.Who is the BAI who was Veera Shivaji’s mother and inspired him to save Hindus?

(Please note that all these BAIs are honoured by the Govt. of India in Commemorative Postage Stamps.)

More BAIs from Stories of Great Devotees of Panduranga are:

8.Who is the BAI who was raised by the Saint Namdev? She was   a low-caste maidservant and poet.from Maharashtra with 340 Marathi abhangas (poems).to her credit.

9. Who is the BAI who got her Puja Box intact mysteriously when her husband threw it into the river?

10. Who is the BAI who was  younger sister of the first Varkari saint, Dnyaneshwar?

11. Who is the BAI who was   a low-caste maidservant and poet.from Maharashtra with 340 Marathi abhangas (poems).to her credit?

12. Who is the BAI who hailed from Rampur of Kutch and did Yajna , but money in her purse never exhausted?

13. Who is the BAI who was born in kasi and changed her atheist husband as a devotee when her dead child was revived by the Bagavathars/Bhajan Singers?

****

ANSWERS

1.Kasturibai; 2.Rani Lakshmibai; 3.Princess Mirabai 4.Ahilyabai; 5.Rani Avantibai; 6.Jhalkaribai; 7Jjiabai; 8.Janabai; 9.Pilabai ; 10.Muktabai ;

11.Janabai ; 12.Dhanbai ; 13.Ramabai

—subham—

Tags- women devotees, Mirabai, Lakshmibai, Janabai, Avantibai, Dhanbai, Ramabai, Sakkubai, Jijabai,

முதல் எழுத்து எது ? (Post No.14,659)

Written by London Swaminathan

Post No. 14,659

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வெற்றிவேற்கை : ஓம் என்றால் பிள்ளையார்

வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்)

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.

வெற்றி வேற்கை வீரராமன்,

கொற்கை ஆளி, குலசேகரன், புகல்

நல்—தமிழ் தெரிந்த நறுந்தொகைதன்னால்

குற்றம் களைவோர் குறைவிலாதவரே.

வாழிய, நலனே! வாழிய, நலனே!

****

திருவிளையாடற்புராணத்தில் ஓம்காரம்

முதல் எழுத்து எது ?

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை

அங்க மாறுமே கால்களாய்

     முதலெழுத் தம்பொற்பீ டிகையாகித்

துங்க நான்மறை நூல்களே

     நித்திலந் தொடுத்தசை தாம்பாகி

எங்க ணாயக னெம்பெரு

     மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு

தங்கி னாலென நவமணி

     குயின்றபொற் றவிசது சமைத்திட்டார்.

எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள், எம் பெருமாட்டியோடு இருப்பதற்கு – எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு, ஆறு அங்கங்களுமே கால்களாகவும்,

பிரணவம் அழகிய பொற்பீடமாகவும், உயர்ந்த நான்கு வேதங்களாகிய நூல்களே,  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும்,

வடிவங்கொண்டு, தங்கினாற்  போல,  நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள்

     முதலெழுத்து – எல்லா வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும்

முதலாகிய பிரணவ எழுத்து.

****

ஓம் என்ற பிரணவம், அ+ உ +ம  என்ற எழுத்துக்களால் ஆனதால் அ–என்ற எழுத்தையும் முதல் எழுத்தாகச் சொல்லலாம்; அதை கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்னதை அப்படியே திரு வள்ளுவர் முதல் குறளில் சொன்னார்.

ஓம் பற்றிய பொன்மொழிகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag 

30 Dec 2016 — அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர். ஜனவரி 20

 

31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499

 

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016; Post No.3499

 

 

—Subham—

Tags- பிரணவ எழுத்து. முதலெழுத்து, திருவிளையாடற்புராணம், ஓம்காரம்

கம்பனுக்கும் பரஞ்சோதிக்கும் திராவிடநாடு தெரியாது ! (Post No.14,658)

Written by London Swaminathan

Post No. 14,658

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 APPAR/ TIRU NAVUKKARASAR TRAVEL MAP 

DRAVIDA DESA OUTSIDE TAMIL NADU.

GODDESS MEENAKSHI’S MOTHER KANCHANAMALA WAS FROM SURASENA COUNTRY.

திராவிடம் என்ற சொல்லி இனத்வேஷ சொல்லாக வைத்து கால்டு வெல் முதல் திராவிடக் கட்சிகள் வரை பல செப்படி வித்தைகளை செய்து வருவதை நாம் அறிவோம் ; அதன் உண்மைப் பொருள் தெற்கத்திய SOUTHERN  என்பதாகும். காரவேலன் , வஜ்ர நந்தி,  குமாரில பட்டர், ஆதி சங்கரர் ஆகியோர் த்ரமிர சங்கடன் திராவிட சங்கம் , திராவிட பாஷா, திராவிட சிசு என்றெல்லாம் சொன்னார்கள்;பின்னர் திராவிட ஆச்சாரியா, திராவிட வேதம் என்றெல்லாம் அபிதான சிந்தாமணி என்னும் சிங்காரவேலு முதலியாரின் என்சைக்ளோபீடியாவிலும் காண்கிறோம்.

ஐம்பத்தாறு நாட்டுத் தேசப்பட MAPS புத்தகத்தைப் பார்த்தால் சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வெளியேதான் திராவிடநாடு உள்ளது. பரஞ்சோதி, கம்பர் ஆகியோர் சேர- சோழ -பாண்டிய தேசங்களைப் பாடினாலும் திராவிட நாடு என்று எங்கும் சொல்லவில்லை . கீழ்க்கண்ட பட்டியல்களைக் கண்டு மெய்ப்பொருள் காண்பது அறிவு!

****

திருவிளையாடற்புராணம் — பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவரின் நாற்பது நாடுகள் பட்டியலில் திராவிட நாடு இல்லை !

மெய்காட்டிட்ட படலம் 27 நாடுகள் பட்டியல்

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை

(29)

கொங்கரிவ ரையகுரு நாடரிவ ரைய

கங்கரிவ ரையகரு நாடரிவ ரைய

அங்கரிவ ரையவிவ ராரியர்க ளைய

வங்கரிவ ரையவிவர் மாளவர்க ளைய.

ஐயனே இவர் கொங்க நாட்டினர், ஐயனே இவர் குருநாட்டினர்;

ஐயனே இவர் கங்க நாட்டினர்; ஐயனே இவர் கருநாட நாட்டினர்;

– ஐயனே இவர் அங்க நாட்டினர்; ஐயனே இவர்கள் ஆரிய நாட்டினர்கள்; ஐயனே இவர் வங்க நாட்டினர்; ஐயனே இவர்கள்

மாளவநாட்டினர்கள். (30)

****

குலிங்கரிவ ரையவிவர் கொங்கணர்க ளைய

தெலுங்கரிவ ரையவிவர் சிங்களர்க ளைய

கலிங்கரிவ ரையகவு டத்தரிவ ரைய

உலங்கெழு புயத்திவர்க ளொட்டியர்க ளைய.

ஐயனே இவர் குலிங்க நாட்டினர்; ஐயனே இவர்கள்

கொங்கண நாட்டினர்கள்; ஐயனே இவர்தெலுங்க நாட்டினர்கள்; ஐய ஐயனே இவர்கள் சிங்களநாட்டினர்கள்; ஐயனே இவர் கலிங்க

நாட்டினர்; ஐயனே இவர் கவுட நாட்டினர்; ஐயனே திரண்ட

கற்போலும் புயத்தினையுடைய இவர்கள் ஒட்டிய நாட்டினர்கள். (31)

****

கொல்லரிவ ரையவிவர் கூர்ச்சரர்க ளைய

பல்லரிவ ரையவிவர் பப்பரர்க ளைய

வில்லரிவ ரையவிவர் விதேகரிவ ரைய

கல்லொலி கழற்புனை கடாரரிவ ரைய.

ஐயனே இவர் கொல்லநாட்டினர்; ஐயனே இவர்கள்

கூர்ச்சர நாட்டினர்கள்; ஐயனே இவர் பல்லவநாட்டினர்; ஐயனே

இவர்கள் பப்பர நாட்டினர்கள்; ஐய ஐயனே இவர்கள் வில்லர்கள்; ஐயனே இவர் விதேகநாட்டினர்; ஐய ஐயனே இவர் கல்லென்னும் ஒலியையுடைய வீரக்கழலையணிந்த கடார நாட்டினர்.

****

கேகயர்க் ளாலிவர்க்ள கேழ்கிளர் மணிப்பூண்

மாகதர்க ளாலிவர் மராடரிவர் காஞ்சி

நாகரிக ராலிவர்க ணம்முடைய நாட்டோர்

ஆகுமிவர் தாமெனமெய்க்* காட்டியறி வித்தான்.

இவர்கள் கேகயநாட்டினர்கள்; ஒளி விளங்கும் மணிகள் பதித்த அணிகளை யணிந்த இவர்கள் மகத நாட்டினர்கள்; – இவர் மராடநாட்டினர்; – இவர்கள் காஞ்சி நாட்டிலுள்ள

நாகரிகமுடையவர்கள்; இவர் நமது நாட்டினராவர்; என என்று, மெய்க் காட்டி அறிவித்தான் –

அவரவர் உருவினைக் காட்டித் தெரிவித்தான். காஞ்சி நாகரிகர்

என்றது சோழரை யாதல்வேண்டும். (33)

*****

திருமணப்படலம் –நாற்பது நாடுகள் பட்டியல்

தென்னர் சேகரன் றிருமக

     டிருமணத் திருமுகம் வரவேற்று

மன்னர் வந்தெதிர் தொழுதுகைக்

     கொண்டுதம் மணிமுடி மிசையேற்றி

அன்ன வாசகங் கேட்டனர்

     கொணர்ந்தவர்க் கருங்கலந் துகினல்கி

முன்ன ரீர்த்தெழு களிப்புற

     மனத்தினு முந்தினர் வழிச்செல்வார்.

பாண்டியர்களின் முடி போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன்

திருமணங் குறித்த ஓலையை, வரவேற்பாராய், – மன்னர்கள் எதிர்கொண்டு வந்து, வணங்கி, கையில் வாங்கி,  தம்முடைய மணிகள் அழுத்திய முடியின்மேல் ஏற்றி, அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும்

அளித்து, முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக,

மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள் .

****

கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர்

                                        பாஞ்சாலர்

வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்

அங்கர் மாகத ராரியர் நேரிய ரவந்தியர் வைதர்ப்பர்

கங்கர் கொங்கணர் விராடர்கள் மராடர்கள் கருநடர்

                                         குருநாடர்.

கொங்கு நாட்டரசரும், சிங்களநாட்டரசரும், பல்லவநாட்டரசரும், வில்லவர் , கோசல நாட்டரசரும், பாஞ்சால நாட்டரசரும், சோனகர் –

சீனர்கள் சாளுவர் , மாளவர் காம்போசர், அங்கர், மகதர் ,

ஆரியர் , சோழ வரசரும், அவந்தியர் , வைதர்ப்பர், கங்கர், கொங்கணர், , விராடர்கள் ,மராடர்கள்,கருநடர்,  குரு நாட்டரசரும்,

     இவருள் கொங்கர், பல்லவர், வில்லவர், நேரியர் என்போர்

தமிழ் மண்டலத்தினர்; சிங்களர், கங்கர், கொங்கணர், கருநடர்

என்போர் தமிழ் மண்டலத்தின் சார்பிலுள்ளவர். வில்லவர் –

விற்கொடியையுடைய சேரர். நேரியர் – நேரி மலையையுடைய

சோழர்.

****

கலிங்கர் சாவகர் கூவிள

     ரொட்டியர் கடாரர்கள் காந்தாரர்

குலிங்கர் கேகயர் விதேகர்கள்

     பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்

தெலுங்கர் கூர்ச்சரர்* மச்சர்கள்

     மிலேச்சர்கள் செஞ்சையர் முதலேனைப்

புலங்கொண் மன்னருந் துறைதொறு

     மிடைந்துபார் புதைபட வருகின்றார்.

கலிங்கர் , சாவகர் , கூவிளர், ஒட்டியர் , கடாரர்கள், காந்தாரர் ,

குலிங்கர், கேகயர், , விதேகர்கள் , பௌரவர், , கொல்லர்கள்

கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர் மச்சர்கள், மிலேச்சர்கள், செஞ்சையர்,

முதலாக, பிற நாட்டரசாகளும், வழிகள் தோறும், நெருங்கி, பூமி

மறையும்படி வருகின்றார்கள் .

     கலிங்கம் – வடக்கே கீழ்கடலோரத்திலுள்ளது. சாவகம் –

தெற்கிலுள்ள தீவு; ஜாவா. கடாரம் – கிழக்கிலுள்ளது; பர்மாவின்

ஒருபகுதி. பௌரவர் – பூருமரபினர் : தத்திதாந்தம். கல்யாணர் –

சாளுக்கியர். (75)

*****

மாக்ஸ்முல்லர், கால்டு வெல் உண்டாக்கிய ஆரிய, திராவிடர் கிடையாது ; வெளிநாட்டிலிருந்து மதத்தைப் பரப்பவும் நாடு பிடிக்கவும் வந்தவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டு , இந்தியாவையே ஆரியர்- திராவிடர் என்று பிரித்தனர். இ ந்துக்கனின் எந்த சரித்திர, சமய நூல்களிலும்  இந்தப் பிரிவினை இல்லை. அவர்கள் மக்களை ௧௮ வகையாகப் பிரித்தனர் இதை ராமாயண காலத்திலிருந்து காண்கிறோம்

எழுவ ரன்னையர் சித்தர்விச் சாதர

     ரியக்கர் கின்னரர் வேத

முழுவ ரம்புணர் முனிவர்யோ

     கியர்மணி முடித்தலைப் பலநாகர்

வழுவில் வான்றவ வலியுடை

     நிருதர்வாள் வலியுடை யசுரேசர்

குழுவொ டும்பயில் பூதவே

     தாளர்வெங் கூளிக ளரமாதர்.

ஏழு மாதரும்,  சித்தரும் , வித்தியாதரரும், இயக்கரும்,

கின்னரரும்,  மறையின் எல்லை முடிய உணர்ந்த முனிவர்களும்

யோகிகளும் , மணி விளங்கும் உச்சியையுடைய தலையினையுடைய பல உரகர்களும்/,நாகர்  குற்றமில்லாத சிறந்த

வலிமையையுடைய அரக்கர்களும்,  வாளின் வலியுடைய அசுரர் தலைவர்களும், கூட்டத்தோடு உலாவும் பூத வேதாளர்களும்,

*****

கங்கர்கொங்கர்கலிங்கர்குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் — பால காண்டம்கம்ப ராமாயணம்

1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்

சிங்களாதிபர் சேரலர் தென்னவர்

அங்கராசர் குலிந்தர் அவந்திகர்

வங்கர் மாளவர் சோழர் மராடரே

2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்

ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்

சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்

சோன சேகர் துருக்கர் குருக்களே

3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்

சேதிராசர் தெலுங்கர் கருநடர்

ஆதிவானம் கவித்த அவனிவாழ்

சோதி நீள்முடி மன்னரும் துன்னினார்

—பால காண்டம், கம்ப ராமாயணம்

உலாவியல் படலத்தில் ராமன் — சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.

பொருள்:-

1.கங்க நாடு, கொங்கு நாடு,  கலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.

முதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.

இதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.

கம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-

கம்பன் காலத்தில்திராவிட நாடு என்று  ஒரு நாடு இல்லை.

கொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

துருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.

மிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)

ஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.

சுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.

துருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி ‘உன் அமுத உத்தியன ஒண் நகர்……..‘ என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.

*******

புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686)

Date: 2 April, 2016  Post No. 2686 

புராதன இந்தியாவில் 56 தேசங்கள், அதாவது 56 பிரிவுகள் இருந்தன. இவைகளை இப்போதைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். பலம்பொருந்திய மன்னர்கள் ஆளுகையில் எல்லா மன்னர்களும் சக்ரவர்த்தியின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டார்கள். சுயம்வரம், போட்டிகள், பட்டாபிஷேகங்கள் முதலியவற்றுக்கு 56 தேச ராஜாக்களுக்கும் அழைப்பிதழ்கள் சென்றன. அவ்வப்பொழுது சண்டைகளும் போட்டார்கள்; பெண் கொடுத்து, பெண் எடுத்தார்கள். 

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாக திராவிட நாடு காட்டப் பட்டிருப்பது பற்றி, திராவிடர்கள் யார்? என்ற கட்டுரையில் முன்னரே எழுதியுள்ளேன் (திராவிடர்கள் யார்? ஜூலை, 2013). இதிலுள்ள வரைபடங்கள் ஓரளவுக்கு நமக்கு, நாடுகளின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கிறது. ஆயினும் அவ்வப்பொழுது அவற்றின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனதால் குழப்பங்கள் ஏற்பட்டன. 

ஒருவர் ஒரு நூலை எழுதும்போது, ஒரு நாட்டின் எல்லை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அதற்கேற்ப அவர்கள், ஊர்கள் பற்றியும் மக்கள் போக்குவரத்த் பற்றியும் எழுதினர். பிற்காலத்தில் நாம் அவைகளை ஒரு சேரப் படிக்கையில் முரண்பாடுகளைக் காண்கிறோம். யவன தேசம் என்பது பல தவறான முடிபுகளைத் தோறுவித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ரோமாபுரி, கிரேக்கம் மற்றும் அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் ஆண்டோர், அராபியர் ஆகிய அனைவரையும் குறித்தது! 

இதோ ஜகதீச அய்யர் எழுதிய புராண இந்தியா – 56 தேச சரிதம். பேஸ்புக்கில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதிலுள்ள வரைபடங்கள், மேலும் ஆராய்ச்சி செய்ய உதவும்:–

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் –பகுதி 2 (Post No 2693)

Date: 4 April, 2016; Post No. 2693

நாடுகளின் வரைபடத்தைப் பார்த்தால் தேசங்களின் இருப்பிடம் தெரியும் ; மீனாட்சியின் தாய் சூரசேன நாட்டிலிருந்து வந்த காஞ்சன மாலா ஆவாள் ; இது வட  இந்தியாவில் காட்டப்பட்டுள்ளது!

–SUBHAM—

TAGS- கம்பன் பரஞ்சோதி, திராவிடநாடு , 56 தேசங்கள், ஆரியர், திராவிடர் திருவிளையாடல் புராணம் , நாடுகள் பட்டியல்

நேருஜியின் தவறுகள்! – 3 (Post No.14,657)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,657

Date uploaded in London – –18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நேருஜியின் தவறுகள்! – 3

ச. நாகராஜன்

கட்டுரை தொடர்கிறது.

37. தொழிலகங்களின் கழுத்தை நெரித்தார்.

38. மாநிலங்கள் அமைப்பதில் ஏகப்பட்ட குளறுபடிகளைச் செய்தார்.

39. மொழிக் கொள்கையில் குளறுபடிகளைச் செய்ததோடு உருது,

   பெர்ஸிய அராபிய மொழிகளை ஆதரித்து ஊக்குவித்தார்.

40. பாகிஸ்தானை ஜின்னா  அமைக்க வழிகோலினார்.

41. நேரு- லியாகத் உடன்படிக்கையை ஏற்படுத்தினார்.

42. தவறான நேரு – ஈரா வரைபடத்தை உருவாக்கினார்.

43. நமது ஆபத்துக் கால நண்பனான இஸ்ரேலை உதைத்து எறிந்தார்.

44. தனக்குத் தானே கோல் போடும்படியான அமைச்சரக 

    ராஜிநாமாக்களைச் செய்ய வைத்தார்.

45. அஸ்ஸாமின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கினார்.

46. ஒருங்கிணைந்த பாரதத்திற்கான காபினெட் மிஷன் திட்டத்தை

   கருவிலேயே அழித்தார்.

47. 1946ல் NWFP தவறைச் செய்தார்.

48. ஒழுங்கற்ற தனக்கு மட்டுமே உதவும் செகுலரிசம் மற்றும்

    மைனாரிடி கொள்கையை ஏற்படுத்தினார்.

49.  பிரிட்டிஷ் நேருவாக இருந்ததை மாற்றிக் கொள்ள முயலவில்லை.

    அத்தோடு பாரத வரலாற்றையும் பண்பாட்டையும் சிதைத்தார்.

50. பாபரைப் புகழ்ந்து வணங்கினார்.

51. நேதாஜியின் போர்க் கவசத் திருட்டும் நேருஜியும் ஒரு தனிக் கதை.

        (NEHRU AND NETHAJI’S STOLERN WAR CHEST)

52. நேதாஜியின் ஐஎன்ஏ-ஐ படாத பாடு படுத்தினார்.

53. நேதாஜிக்கு மரியாதை தராமல் தவறாக நடத்தினார்.

54. பகத்சிங் மற்றும் ஆஸாத்திற்கு மரியாதை தரவில்லை.

55. வீர் சவர்க்காரை மதிக்கவில்லை.

56. சர்தார் படேலுக்கு மரியாதை தரவில்லை.

57. சர்தார் படேலின் மகளான மனிபென்னுக்கு மரியாதை தரவில்லை.

58. அம்பேத்கருக்கு மரியாதை தரவில்லை.

59. டாக்டர் சியாம் பிரசாத் முகர்ஜிக்கு மரியாதை தரவில்லை.

60. டாக்டர் ராஜேந்திரபிரசாத் அவர்களை மதிக்கவில்லை.

61. பி.டி. தாண்டனை மதிக்கவில்லை.

62. பொர்டொலாயை மதிக்கவில்லை.

63. ஜெனரல் திம்மய்யாவுக்கு மரியாதை தரவில்லை.

64. பொதுஜனங்களை மதிக்கவே இல்லை.

65. எட்வினா மவுண்ட்பேட்டனுக்கு விசேஷ சலுகைகளை அளித்தார்.

இத்துடன் முடிகிறது பட்டியல்.

சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவும் இந்தப் பட்டியல் அனைவரின் கவனத்தையும் கவர்கிறது.

இவற்றில் அனைத்துமே உண்மை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

ஆனாலும் இந்தியாவின் பல பிரச்சனைகளுக்கு மேலே உள்ள பல தவறுகளே காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

அன்பர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பட்டியல் இது!  

***

58Pictures of 2500 Indian Stamps!- Part 58 (Post No.14,656)

Written by London Swaminathan

Post No. 14,656

Date uploaded in London –  17 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

PART 58

Stamps posted today include YEAR 2000, YEAR 2001, STAMPS,

Pictures of 2500 Indian Stamps,

MINT (NOT USED)  STAMPS;

PANCHATANTRA STORIES, FOUR TEMPLES, RAMESWARAM KEDARNATH, AUNDA NAGNATH, SAINT RAVIDAS, SHYAM PRASAD MUKERJEE, JAIN MAHAVIR SYMBOLS, CHADRASEKHAR, SAANKARAN NAIR, MUSICIAN F CHOPIN, MAURYA CHANDRA GUPTA, MAHATMA GANDHI, CHILDREN’S DAY, TRYAMBAKESHWAR, RANJIT SINGH, SURAJ NARAIN SINGH. SUN TEMPLE

–subham—

Tags– 
Stamps posted today include YEAR 2000, YEAR 2001 STAMPS,

Pictures of 2500 Indian Stamps, PART 58 ,mint, KONARK SUN TEMPLE, SHIVA TEMPLES, PANCHA TANTRA STORIES

Rare Pictures from 1906 book-2 (Post No.14,655)

Written by London Swaminathan

Post No. 14,655

Date uploaded in London –  17 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Title- Vision of India

Year –1906

Author –Sidney Low

huts, madrasi, tamil coolies, bathing in benares, kumbh mela, allahabad, water supply in punjab, jain temle in gwalior, magistrate camp, 

HINDU FAKIRS, PROCESSION, GOAT FIGHTING, SIKH MAHANT, DELHI, BOMBAY BAZAR , COOLIES, VILLAGE SCENES, BASKET WEAVERS  etc.

–subham—

Tags – Rare Pictures , 1906 book-2, Sidney Low

Lord Shiva’s 64 Divine Sports is No Mystery, but Pure History! -Varaguna Mystery –Part 2 (Post No.14,654)

Written by London Swaminathan

Post No. 14,654

Date uploaded in London –  17 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Manikkavasagar, author of Tiruvasagam

In the first part of this article, we saw that the Tiru Vilaiyadal Puranam (T V P) is a history book. It gives us the history of Madurai and the 64 miracles of Lord Shiva in and around Madurai in Tamil Nadu. According to Mahabharata, Pandya is the oldest Tamil race.  Arjuna’s marriage with Ulupi and Chitrangada is described in the various Parvas of Mahabharata. All these names proved historical when the Alupas of Karnataka used the names in their records.

Like Zoroaster left Gujarat in the Rig Vedic period and migrated to Iran, a section of the Pandyas left Tamil Nadu and migrated to Karnataka and other parts of North India. Thank God, we have historical, epigraphical records in the Alupa Kingdom. They used names like Kulasekara, Dhanajaya, Chitravahana in their records. This is a clear proof to show that the names of Pandyas found in Hindu religious books are not fictional.

Even Chozas used Kulothunga which is used for Pandyas. In the twelfth century, we see again Sundara Pandya, Vira Pandya etc.

I am referring all these names to show that the names in TVP are real Pattabishea/Coronation Names of Pandyas.

In Egypt and Hindu India, there was a belief that the real names of Kings should not be disclosed in public So they had Coronation Names (Pattabisheeka names).

****

Manikkavasagar

Varaguna Mystery

We have three Varaguna Pandyans in Tamil Nadu according to the available records. But there was one more Varaguna earlier than these three Pandyas who fooled many scholars. Those scholars placed the famous saint Manikka Vasagar (M) (maanikka vaasagar, tiru vilaiyaadal puraanam) in the Ninth Century CE. They ignored the Tevaram songs of Appar and Sambandar and did this ignorantly.

The two T V Ps written by P P Nambi and Paramjoti place the story of Varaguna well before M and Sambandar. We know for sure that Sambandar and Appar were contemporaries of the greatest of the Pallava Kings, Mahendra Varman (600 CE).

Even if someone doubts the chronology of Pandyas in the two TVPs, they can’t ignore the Tevaram Verses sung by Appar and Sambandar.  In the TVP, King Varaguna was associated with the story of Shiva giving a poet a recommendation letter to a Cera (Kerala) king. The recommendation letter is called Tirumukam in Tamil. Sambandar has referred to it. And we already saw the two TVP anecdotes of Fox changing to Horses vice versa and Lord Shiva carrying sand to strengthen the banks of River Vaigai are sung by Appar and Sambandar (600 CE). So, the Varaguna episode must also be placed before ninth century. Varaguna is just an euphoric title. It can be given to any good king who is a Shiva Bhakta as well. In Egypt we see at least 14 Ramesses as kings. Why not four Varagunas in Tamil Nadu?

Paramjoti gives us the story in Chronological order. Moreover, he says seven kings were there and go to the next epiode. And then he gives names of 15 kings, then narrated another miracle. So, he skipped many because there was no miracle reported in that period. And he placed Sambandar story after a gap of 15 kings. So, there should be at leat 300 year gap between the M and Sambandar. Varaguna- Recommendation Letter anecdote goes still far behind. And we must also remember that al the 64 episodes found in the TVP happened before ninth century.

Now let us look at the order of kings:

After Anantha Guna Bhushanan (who clashed with Jain king Kharavela) Kula Bhusana ruled; brahmins migrated to other countries because of famine.

Next came Rajasekhara who divided the kingdom and gave half of it to his brother.

Then Paranjothi skips six kings; That means at least 120 years elapsed.

Then the Varaguna and the story of Shiva’s recommendation letter comes. After dealing with three more kings, he gave us the names of 22 kings and then only he relates Aalavay/ snake city story. It is reported as Uragapura/Snake town in Raghuvasa of Kalidasa.

Then only comes the poor brahmin poet Dharumi’s clash with Sangam brahmin poet Nakkiran. This is referred to by Appar in 600 CE.

Therefore all the above anecdotes may be dated pre 600 CE. Sambandar and Appar Tevaram verse  also confirmed it.

Then again 15 kings skipped and M anecdotes are narrated.

After skipping 12 more kings, he comes to the anecdotes regarding Sambandar clash with the Jains. If we believe in these stories,  then we must conclude that the anecdotes have had happened before 600 CE.

One Varaguna is praised as a great devotee of Vishnu. We have a great Vaishnavite shrine which is named Varaguna Mangai.

MY DISCOVERY

GNANA SAMBANDAR AND APPAR MENTIONED SHIVA’S RECOMMENDATION LETTER TO CERA KING GIVEN TO THE SINGER BABABHATTAR; THEREFORE, VARAGUNA MENTIONED IS THE FIRST VARAGUNA; MAY BE VAISHNAVA VARAGUMA MENTIONED ELSEWHERE.

SEKKIZAR SANG ABOUT THE GLORIOUS HIGH MADURAI TEMPLE TOWERS; THEREFORE 12TH CENTURY TOWER MENTIONED IN MADURAI INSCRIPTION IS THE LATER ONE; OTHER TOWERS WERE DESTROYED BY MUSLIM INVADERS.

ALL THE THREE NAMES OF MADURAI , I.E. MADURAI, KOODAL AND AALAVAAY / URGAPURAM ARE IN SANGAM LITERATURE; THEREFORE TVP ANECDOTES ARE VERY ANCIENT.

VELLIAMPALAM, I.E. THE SILVER HALL OF MADURAI IS MENTIONED IN SILAPPADIKARAM AND PURA NANURU; THAT SHOWS T V P ANECDOTE IS VERY ANCIENT.

FINALLY

MANIKKAVASAGAR (M)  IS EARLIER TO SAMBANDAR AND APPAR, IF THEIR TEVARM POEMS ARE TRUE

VARAGUNAN IS VERY ANCINET TITLE AND NOTHING TO DO WITH THE LATER SHIVA DEVOTEE VARAGUNAN.

–SUBHAM—

TAGS- Lord Shiva’s,  64 Divine Sports,   No Mystery, Pure History, Varaguna Mystery , Part 2, Paramjoti, Tiru Vilaiyadal Puranam, Velliambalam, Aalavay, My discovery

பத்து “பாய்” களைக் கண்டு பிடித்தால் நூறு மார்க்! (Post No.14,653)

Written by London Swaminathan

Post No. 14,653

Date uploaded in London –  17 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

இமயம் முதல் குமரி வரை பாய் என்று முடியும் பெயர்களுடன் புகழ்பெற்ற பெண்கள் இருந்தனர் .

அவர்களை விவரிக்கும் வருணனைகள் கீழே உள்ளன; பத்து பேரைக் கண்டு பிடியுங்கள் நூறு மார்க்!

ஏதேனும் பத்து கேள்விகளுக்குப் பதில் சொன்னால் போதும்.

கேள்விகள்

1.காந்திஜியின் மனைவி பெயர் என்ன?

2.வீர சிவாஜியின் தாயார் பெயர் என்ன?

3 .கிருஷ்ணரைப் பாடி புகழ்பெற்ற ராஜபுதன இளவரசி யார்?

4.முஸ்லீம்கள் இடித்த கோவில்களை புதுப்பித்த மாளவ தேச  மஹா ராணி பெயர் என்ன?

5.மஹாராஷ்டிரத்தில் பக்தி அலைகளைப் பரப்பிய குடும்பத்தில் உதித்த பாய் (நிவ்ருத்தி ஞானதேவ் சோபான ………. ஏக்நாத் நாமதேவ் துக்காராம் என்பது பஜனை கோஷம்) யார்?

6.மித்ருராவ் என்ற சிந்து தேச இளைஞனை மணந்து அவன் போக்கை இறைவனிடம் திருப்பிய பண்டரீபுர பக்தை யார்?

7.மத்தியப்பிரதேச ராம்காரிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட ராணி; இந்திய தபால்தலையில் இடம்பெற்ற ராணி யார்?

8.பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த முதல் சுதந்திர போரில் போராடிய ஜான்சி ராணி; இந்திய தபால்தலையில் இடம்பெற்ற ராணி யார்?

9.ஜான்சிராணி படையிலிருந்து வீரப் போரிட்ட வீராங்கனை பாய்; இந்திய தபால்தலையில் இடம்பெற்றவர் யார்?

****

150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மஹாபக்த விஜயம் என்ற நூலில் இடம்பெற்ற இந்த ராணிகளைத் தெரியுமா ?

10.பண்டரிபுரம் கோவிலில் நின்ற சிறு பெண்; நாமதேவரால் வளர்க்கப்பட்ட பக்தை யார்?

11.கோபத்தில் கணவனால் ஆற்றில் எறியப்பட்ட பூஜைப்பெட்டியை இறைவனே கொண்டுவந்து கொடுத்த பக்தை யார் தெரியுமா ?

12.காசி நகரிலே ஆண்ட சிற்றரசன் சந்தன ராஜனின் புதல்வியாகப் பிறந்த, இறந்த குழந்தையை பாகவதர் அருளால் மீட்டுக், கணவனைத் திருத்திய, பெண் யார்?

LAST QUESTION

13.நாம் படுப்பதற்கு உதவும் புகழ்பெற்ற பாய் எது ?

விடைகள் 

1.காந்திஜியின் மனைவி பெயர் கஸ்தூரி பாய் .

2.வீர சிவாஜியின் தாயார் பெயர் ஜீஜா பாய் .

3 .கிருஷ்ணரைப் பாடி புகழ்பெற்ற ராஜபுதன இளவரசி மீராபாய் .

4.முஸ்லீம்கள் இடித்த கோவில்களை புதுப்பித்த மாளவ தேச  மஹா ராணி பெயர் அஹல்யா பாய் .

5.மஹாராஷ்டிரத்தில் பக்தி அலைகளைப் பரப்பிய குடும்பத்தில் உதித்த பாய், முக்தாபாய் (நிவ்ருத்தி ஞானதேவ் சோபான முக்தாபாய் ஏக்நாத் நாமதேவ் துக்காராம் என்பது பஜனை கோசஷம்) ..

6.மித்ருராவ் என்ற சிந்து தேச இளைஞனை மணந்து அவன் போக்கை இறைவனிடம் திருப்பிய பண்டரீபுர பக்தை சக்குபாய் .

7.மத்தியப்பிரதேச ராம்காரிலிருந்து பிரிட்டிஷாரை எதிர்த்துப் போரிட்ட ராணி அவந்தி பாய்; இந்திய தபால்தலையில் இடம்பெற்ற ராணி.

8.பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து நடந்த முதல் சுதந்திர போரில் போராடிய ஜான்சி ராணி லெட்சுமி பாய்; இந்திய தபால்தலையில் இடம்பெற்ற ராணி .

9.ஜான்சிராணி படையிலிருந்து வீரப் போரிட்ட வீராங்கனை ஜல்காரி பாய்;இந்திய தபால்தலையில் இடம்பெற்றவர் .

****

150 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட மஹாபக்த விஜயம் என்ற நூலில் இடம்பெற்ற இந்த ராணிகளைத் தெரியுமா ?

10.பண்டரிபுரம் கோவிலில் நின்ற சிறு பெண்; நாமதேவரால் வளர்க்கப்பட்ட பக்தை ஜனாபாய் .

11.கோபத்தில் கணவனால் ஆற்றில் எறியப்பட்ட பூஜைப்பெட்டியை இறைவனே கொண்டுவந்து கொடுத்த பக்தை பிளாபாய் .

12.காசி நகரிலே ஆண்ட சிற்றரசன் சந்தன ராஜனின் புதல்வியாகப் பிறந்த, இறந்த குழந்தையை பாகவதர் அருளால் மீட்டுக், கணவனைத் திருத்திய பெண் ராமாபாய் .

LAST QUESTION

13.நாம் படுப்பதற்கு உதவும் புகழ்பெற்ற பாய் பத்தமடை பாய் .

–SUBHAM–

 TAGS– பத்து “பாய்” கள் , கண்டு பிடி, நூறு மார்க்

நேருஜியின் தவறுகள்! – 2 (Post No.14,651)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,651

Date uploaded in London – –17 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

நேருஜியின் தவறுகள்! – 2 

ச. நாகராஜன்

கட்டுரை தொடர்கிறது. 

25) பாரதத்துடன் காஷ்மீரை ஓரங்கமாக ஆக்கும் முயற்சியில் நேருவின் அணுகுமுறை  முற்றிலும் தவறாக இருந்தது. சர்தார் படேலை காஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க அவர் அனுமதிக்கவில்லை. மற்ற எல்லா பிரச்சனைகளுக்குரிய பகுதிகளை சர்தார் படேல் வெற்றிகரமாகத் தீர்த்தார் – ஹைதராபாத் நிஜாம் பிரச்சனையைத் தீர்த்தது போல! 

26) 1948ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் இந்தியா ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காஷ்மீரைத் திரும்பிப் பெற்றது.

ஆனால் அவசரம் அவசரமாக ஐக்கியநாடுகள் சபைக்குச் சென்றார் அவர். இது ஒரு ராஜதந்திரத் தவறு.  ஆனால் இப்போதோ இந்தியா காஷ்மீர் பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையீடோ அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களோ இருக்கக்கூடாது என்று இந்தியா வலியுறுத்துகிறது. முதலில் இதைச் செய்தவர் நேரு தான்! 

27) மேலும், சீனப் போரில் நாம் வெல்லுகின்ற சமயத்தில் நேரு நமது விமானப் படை போரில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்தினார். நாம் அக்சாய் சின் பகுதியை இழந்தோம். 

28. ஶ்ரீ லங்காவில் இருந்த தமிழர் பிரச்சனை பற்றி அவர் கண்டு கொள்ளவே இல்லை.

 29. 55 கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு அவர் தானம் வார்த்தார்.

 30. 1929ம் ஆண்டு உரிமையில்லாமலேயே காங்கிரஸ் தலைமையைக் கைப்பற்றினார்.

31. ஜனநாயக முறைப்படி அல்லாமல் சுதந்திரம் பெற்றவுடன் தானே பிரதம மந்திரியாக ஆனார்.

 32. பிரிவினையைத் திட்டமில்லாமலும் தகுந்த முன்னேற்பாடு இல்லாமலும் செய்தார்.

 33. ஆர்டிகிள் 370 – நேரு இந்தியாவிற்குக் கொடுத்த கொடைதான். அவருக்கு நன்றி தான் சொல்ல வேண்டும்.

 34. ஜம்மு காஷ்மீர் பற்றிய ஆர்டிகிள் 35 A – இதற்கும் அவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

 35. சட்டத்திற்குப் புறம்பாகத் தவறான முறையில் மதமாற்றம் செய்து வருவதை அவர்  கண்டு கொள்ளவே இல்லை.

 36. விவசாய முன்னேற்றம் பற்றி அவர் நினைக்கவே இல்லை!

 இன்னும் பட்டியல் தொடரும் 

நன்றி : கொல்கத்தாவிலிருந்து வாரந்தோறும் வெளிவரும் ஆங்கில பத்திரிகை TRUTH VOL 93 – ISSUE NO 8 (6-6-2025)

**