QUIZ துவாரகா பத்து QUIZ (Post No.12,957)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,957

Date uploaded in London – –   26 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.100

1.சப்த புரி என்னும் ஏழு புனித நகரங்களில் துவாரகா எங்கே இருக்கிறது அதன் சிறப்புக்குக் காரணம் என்ன ?

XXXX

2.பேட் துவாரகை எங்கே இருக்கிறது அங்குள்ள விசேஷம் என்ன ?

xxxx

3.துவாரகா கோவிலை இடித்த முஸ்லீம் மத வெறியனின் பெயர் என்ன ?

XXXX

4.வைணவத் திருத்தலங்களில் ( 108)  ஒன்றாக விளங்கும் துவாரகாதீசர் கோவிலைப் பாடிய ஆழ்வார்கள் யார் 

xxxx

5.கடலுக்கடியில் கண்டு பிடிக்கப்பட்ட துவாரகாவில் என்ன கிடைத்தது?

xxxx

6.துவாரகா பற்றி மஹாபாரதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

xxxx

7. கிருஷ்ணர் இறந்த இடம் எங்கே உள்ளன ?

xxxx

8. மதுராவிலிருந்து 800  மைல் தூரத்திலுள்ள துவாரகாவுக்கு ஏன் கிருஷ்ணா குடிபெயர்ந்தார் ?

XXXX

9.துவாரகா சைவர்களுக்கும் முக்கிய இடமாகத் திகழ்வது எப்படி?

xxxxx

10.துவாரகா ஏன் கடலில் மூழ்கியது?

XXXX

விடைகள்

1.துவாரகா நகரம்,  குஜராத் மாநிலத்தில் கோமதி ஆற்றின் வலது கரையில் அரபிக் கடற் கரையில் இருக்கிறது ; யது குல அரசர்கள் ஆண்ட ஆனர்த்த நாட்டின் தலைநகராக விளங்கியது. மோட்சம் அடையும் வாயிலாக இருப்பதால் துவாரகை என்ற பெயர் ஏற்பட்டது. கோவிலுக்கு அருகில் கோமதி நதி கடலில் சங்கமம் ஆகிறது.போர்பந்தர், ஜாம்நகர் ஆகியன அருகிலுள்ள விமான நிலையங்கள்.

மூலவர்- கல்யாண ராமன்,  த்வாரகாதீசன், த்வாரகா நாத்ஜீ , நின்ற திருக்கோலம்

தாயார்- கல்யாண நாச்சியார், லெட்சுமி, ருக்மிணி, அஷ்ட மஹிஷிகள் என்னும் எட்டு மனைவியர்

XXXX

2.. துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகையை அடையலாம். கட்ச் வளைகுடாவில் உள்ள ஒரு சிறு தீவு பேட் துவாரகை; இங்கு கிருஷ்ணர் சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார்.  கிருஷ்ணனின் மாளிகை  இது. இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு கிருஷ்ணன், ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என மொத்தம் ஐந்து கோவில்களும் சங்க தீர்த்தம் என்னும்  தீர்த்தமும் இருக்கின்றன. சிந்து-சரஸ்வதி நாகரீக தடயங்கள் இங்கே கிடைத்திருக்கின்றன. 

XXXXX

3.மகமது பேகடா Mahmud Begada  என்னும் சுல்தான்  1473 ஆம் ஆண்டில், கிருஷ்ணரின் கோவிலை இடித்து, உள்ளேயிருந்த செல்வங்களைக் கொள்ளை அடித்தான்.

xxxx

4.பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்கள 13 பாசுரங்களைப் பாடியுள்ளனர்.

xxxx

5. பேட் துவாரகையில் 1982-இல் அகழாய்வு செய்த போது, சிந்து-சரஸ்வதி நாகரீக மட்பாண்டங்கள் கிடைத்தன. 1500 BCE ஆண்டுகளுக்கு முற்பட்ட 580 மீட்டர் நீளம் கொண்ட சுவர் கடலில் அமிந்திருப்பது கண்டெடுக்கப்பட்டது. மேலும் சிந்து-சரஸ்வதி நாகரீக முத்திரைகள், எழுத்துக்கள் பொறித்த குடுவை, செப்புக் கலைஞரின் அச்சு, செப்பு மீன் கொக்கி, கப்பல்களில் அழிந்த பாகங்கள், கல் நங்கூரம் ஆகியன கிடைத்தன .

XXXX

6.துர்வாச முனிவர் நீண்டகாலம் துவாரகையில் தங்கி தவமிருந்தார். (மகாபாரதம்; 13, 160)

பாண்டவர்கள் வன வாழ்க்கை காலத்தில் அர்ஜுனன்  சில ஆண்டுகள்  தங்கி சுபத்திரையை மணந்தான்.

மஹாபாரதப் போரில் துவாரகையின் கிருதவர்மன், கௌரவர் அணியிலும்; சாத்தியகி பாண்டவர் அணியிலும் நின்று போரிட்டனர்.

மௌசல பர்வத்தில், சாம்பனால் யாதவர்கள் ஒருவருகொருவர் சண்டையிட்டு மடிந்த பின் பலராமர் துவாரகையை தீயிட்டு அழித்த பின் சரசுவதி ஆற்றை நோக்கி புனிதப் பயணம் மேற்கொண்டார்.

xxxx

7.கிருஷ்ணன் , வைகுண்டத்துப்போக தயாரானவுடன் , ஒரு வேடனின் அம்பினால் உயிர்நீத்தார்;  அதற்கு முன் அவர் அரச மரத்துக்கு அடியில் படுத்திருந்த சயன கோலத்தை  பாலகா என்னும் இடத்தில் காணலாம்.

XXXX

8. ஜராசந்தன் என்னும் மன்னன் மக்களைகத் துன்புறுத்தியதால் ,கிருஷ்ணன் யாதவ குடிகளை உத்தரப்பிரதேசத்திலிருந்து குஜராத்துக்கு அழைத்து வந்தான். விஸ்வகர்மாவைக்கொண்டு துவாரகை நகரை நிர்மாணித்தான்.

xxxx

9.ஆதி சங்கரர், பாரத நாட்டின் நான்கு மூலைகளில், நான்கு மடங்களை நிறுவி பாரத நாடு ஒன்றே என்று காட்டினார். அவர் மேற்கு திசையில் ஸ்தாபித்த  பீடம் துவாரகா பீடம் . மேலும் வெராவால் ஸ்டேஷனில் இறங்கி, கஜினி முகமது அழித்து பின்னர் வல்லப்பாய்  படேல் முயற்சியில் எழும்பிய,  புகழ்பெற்ற சோமநாதர் ஆலயத்தைக் கண்டு, சிவ பெருமானைத் தரிசிக்கலாம் .ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான நாகேஸ்வரர் கோவில் 16  கி.மீ தொலைவில்தான் இருக்கிறது.

xxxx

10.துவாரகை என்னும் இடத்தைக் கிருஷ்ணன், சமுத்திர ராஜனிடம் வாங்கி , புதிய நகரை எழுப்பியதாக ஸ்தல புராணம் கூறும்; இதே போல கேரளத்தைப் பரசுராமர் கடலிலிருந்து மீட்டதாகவும் சொல்லுவர்  . இதன் பொருள் என்னவென்றால்,  கட ல் பின்வாங்கிய இடத்தில் புதிய குடிஏற்றம் நிகழ்ந்தது என்பதேயாகும் . கடல் பின் வாங்கி வருவதையம் சுனாமி போன்ற சீற்றங்களால் நகரங்கள் மூழ்குவதையும் வரலாறு காட்டுகிறது. .

—subham—

Tags- துவாரகை துவாரகா , கிருஷ்ணர், சிந்து-சரஸ்வதி நாகரீக தடயங்கள், பேட் துவாரகை

டாட்டாவின் வெற்றி ரகசியம் – 1 (Post No.12,956)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,956

Date uploaded in London –  –   26 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 24-1-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

டாட்டாவின் வெற்றி ரகசியம் – 1

ஜாம்ஷெட்ஜி டாட்டா – இந்திய தொழில்துறையின் தந்தை!

நேர்மையான வணிகக் கொள்கைகளுடன் பாடுபடுங்கள்!

ச.நாகராஜன்

.

7-1-1965 அன்று ஜாம்ஷெட்ஜி டாட்டாவைப் போற்றும் விதமாக இந்தியா வெளியிட்ட தபால்தலை

ஒரு கோப்பை பாலில் சர்க்கரை போல!

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம்.

கி.பி.பத்தாம் நூற்றாண்டில் குஜராத்தை ஆண்டு வந்தார் மாமன்னர் ஜடி ராணா. அப்போது பெர்சியாவிலிருந்து முகலாயர் தாக்குதலிலிருந்து தப்பி வந்த பார்சிக்கள் குஜராத்தின் சஞ்ஜன் துறைமுகத்தை வந்தடைந்தனர். பார்சிக்களின் தலைவர், நாட்டில் உள்ளே வந்து குடியேற அனுமதி தருமாறு கேட்டு ஒரு தூதுவரை மன்னர் ராணாவிடம் அனுப்பினார். சற்று யோசித்த மன்னர் ஒரு கோப்பையில் பாலை நிரப்பி அதை தூதுவரிடம் கொடுத்து தலைவரிடம் கொடுக்கச் சொல்லி அனுப்பினார்.

தலைவர் அந்தக் கோப்பையை வாங்கி ஒரு கணம் யோசித்தார். பின்னர் சிறிது சர்க்கரையை அள்ளி அதில் போட்டு மன்னரிடம் கொண்டு சென்று தருமாறு தூதுவரிடம் கூறினார்.

நடந்ததைக் கேட்டார் மன்னர். பிறகு புன்முறுவல் பூத்தார். அனைவரையும் நாட்டிற்குள்ளே வந்து தங்குமாறு அழைப்பு விடுத்தார்.

அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. எதற்கு கோப்பையில் பாலை மன்னர் நிரப்பினார்,, அதற்குள் எதற்கு சர்க்கரையை பார்சிக்களின் தலைவர் போட்டார் என்று.

மன்னரே விளக்கினார். நாட்டில் குடியேற அனுமதி கேட்ட போது எங்கள் நாடே முழுவதுமாக மக்களால் நிரம்பி இருக்கிறது என்பதைக் குறிக்க கோப்பையில் பாலைத் தளும்பத் தளும்ப விட்டு நிரப்பி அனுப்பினேன். அதற்கு அந்தத் தலைவர் பாலில் சிறிது சர்க்கரையைப் போட்டார். சர்க்கரை எப்படி பாலில் கரைந்து விடுகிறதோ அது போல உங்கள் மக்களுடன் மக்களாக நாங்கள் கலந்து கரைந்து விடுவோம். அதுமட்டுமல்ல, சர்க்கரை எப்படி இனிப்புடன் சுவையைக் கூட்டுகிறதோ அது போல உங்கள் நாட்டில் வாழும்போது அனைவரது வாழ்க்கையையும் மேம்படுத்த உழைப்போம் என்றார் அவர்.

இதுபோன்ற சிறந்த மனிதர்களை இங்கு வரவழைப்பது நமது பெரும் பாக்கியமன்றோ என்றார் மன்னர்.

அன்று பெர்சியாவிலிருந்து (இன்றைய இரான், ஈராக்) இந்தியாவிற்கு வந்த பார்சிகள் சொன்ன சொல் தவறாமல் இந்திய நாட்டின் வளப்பத்தையும் பண்பாட்டையும் மேம்படுத்திக் கொண்டே வருகின்றனர்.

இங்குள்ள மக்களோடு மக்களாக கலந்து, தங்களுக்கு மட்டும் பெருமை தேடாமல் இந்த நாட்டிற்கும் அதன் மேன்மைக்கும் தியாகம் செய்யும் திருக்கூட்டமாக இன்றளவும் திகழ்ந்து வருகின்றனர் பார்சிக்கள்!

இதற்கு மிகப் பெரும் சான்றாக விளங்குபவர் ஜாம்ஷெட்ஜி டாட்டா.

பிறப்பும் இளமையும்

ஜாம்ஷெட்ஜி நுசர்வாஞ்சி டாட்டா (Jamshedji Nusserwanji Tata) குஜராத் மாநிலத்திலுள்ள நவ்சாரி என்ற இடத்தில் 1839ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதி நுசர்வாஞ்சி மற்றும் ஜீவன்பாய் டாட்டாவிற்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் மிக்க ஏழ்மையான ஒரு புரோகிதர் குடும்பம்.

இளமையிலேயே படிப்பதில் ஆர்வமும் அனைத்தையும் உடனே அறியும் கூர்மையான அறிவுத்திறனையும் கொண்டிருந்தார் டாட்டா.  அவர் மேலைநாட்டுக் கல்வித்திட்டத்தின்படி கல்வியைக் கற்றார்.

வழக்கமான குடும்பம் செய்து வந்த புரோகிதத்தை ஏற்காமல் முதன் முதலாக வணிகத்தில் குடும்பம் ஈடுபட அவர் காரணமானார்.

படிக்கும் போதே ஹீராபாய் டாபூவை அவர் மணந்தார், அவரது தந்தையார் ஓபியம் வணிகத்திற்காக சீனாவிற்கு அடிக்கடி சென்று வந்தார். தனது மகனை அதில் ஈடுபடுத்த நினைத்த அவர் டாட்டாவை சீனாவிற்கு அனுப்பினார். ஆனால் சீனா சென்ற டாட்டா ஓபியத்தை விட பருத்தி வாணிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். அதில் தேர்ச்சியும் பெற்றார்.

தொழிற்சாலைகளின் வளர்ச்சி

29 வயது முடிய தந்தையுடன் வணிகம் செய்து வந்த டாட்டா 1868இல் தனியாக தனது நிறுவனத்தை ஆரம்பித்தார். 1869இல் சிஞ்ச்போக்லி என்ற இடத்தில்  திவாலாகி இருந்த ஒரு பஞ்சாலையை வாங்கிய அவர் அதை அலெக்ஸாண்டிரியா மில் என்று பெயர் மாற்றம் செய்தார். இரண்டே வருடங்களில் அதை லாபம் கொழிக்குமாறு செய்து, பின்னர் விற்றார்.

1874இல் பெரிய அளவில் ஒரு பஞ்சாலையைத் தொடங்கினார். நாக்பூரை சரியான இடமாக அவர் தேர்ந்தெடுத்ததை மற்றவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தனர். ஆனால் உற்பத்திச் செலவு, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றை வெகுவாகக் குறைத்து லாபத்தை ஈட்டி அனைவரையும் பிரமிக்க வைத்தார் அவர்.

பின்னர் அவர் மனதில் இரும்பு எஃகு தொழிற்சாலையை உருவாக்கும் எண்ணம் தோன்றியது..

டாட்டா அயர்ன் அண்ட் ஸ்டீல் ப்ளாண்ட் ஜார்கண்டில் சாக்க்ஷி கிராமத்தில் தொடங்கியது. பிரம்மாண்டமான அளவில் அது வளர்ந்தது கிராமம் பின்னர் பெரிய நகராக மாறி டாட்டா நகர் என்ற ரயில் நிலையம் உருவாகும் அளவு வளர்ந்தது.

இப்போது பெரும் நகரமாக ஜாம்ஷெட்பூர் என்ற பெயரில் விளங்குகிறது.

இதைத் தொடர்ந்து டாட்டா குடும்பம் பெரிதாக வளர்ந்தது. பல்வேறு துறைகளில் இந்தக் குடும்பம் முத்திரை பதித்து விட்டது. இன்று சுமார் 29 பொது நிறுவனங்களைக் கொண்டுள்ளது டாட்டா குடும்பம். இதன் வருடாந்தர மொத்த வருமானம் 1245000 கோடி ரூபாய். பத்து லட்சம் பேர்கள் இந்த நிறுவனங்களில் இப்போது வேலை பார்த்து வருகின்றனர்.

 பாரதத்தின் முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இவரை ஒன் மேன் ப்ளானிங் கமிஷன் – ONE MAN PLANNING COMMISSION -என்று பாராட்டினார்.  இந்திய தொழில்துறையின் தந்தை என்று பொருத்தமான பெயரால் இவர் இன்று அறியப்படுகிறார்.

***

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 1 (Post No.12,955)

பொன்னாங்காணி

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,955

Date uploaded in London – –   25 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் மூலிகை மர்மம் ,

வெளியிட்ட ஆண்டு 1899

By முனிசாமி முதலியார்

இந்த நூலின் பின்னணி : இது, நான் பிரிட்டிஷ் நூலகத்தில் கண்டு (British Library in London) எடுத்த நூல் . சுமார் 20  ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் பிரிட்டிஷ்  லைப்ரரியில் பத்து வெவ்வேறு சப்ஜெக்ட்  நூல்களை   எடுத்து டிஜிட்டல் வடிவில் (Digitalize)  ஏற்றவேண்டும் என்று பிரிட்டனில் உள்ள நேஷனில் லாட்டரிக்கு தமிழ் ஹெரிட்டேஜ் பவுண்டேஷன் TAMIL HERITAGE FOUNDATION (THF) சார்பில் (தமிழ் மரபு அறக்கட்டளை) மனுச் செய்தேன்  ; பணம் கிடைத்தவுடன் பத்து நூல்களையும் மின்னணு வடிவில் THF  சைட்டில் ஏற்றினோம் . இப்போதும் யாரும் அந்த பத்து நூல்களையும் இலவசமாகப் படிக்கலாம் ; மூலிகை நூலில் உள்ள சுவையான விஷயங்களை மட்டும் தருகிறேன்.

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன

xxxx

1.பொன்னாங்காணி சமூலத்தை ஒருவர் அதிகாலையில் எழுந் வாய்கொண்டமட்டும் தின்றுவரவும்  . இப்படி மண்டலக்   கணக்  காய் அருந்தினால் உடலில் குளிர்ச்சி  உண்டாகும். கண் குளிர்ச்சி உண்டாம். பகலில் நட்சத்திரம் தெரியும்.

xxxx

2.அரசம் விதையை பாலில் காய்ச்சி உண்டு வந்தால் நீர்க்கடுப்பு மேக சிலுமிஷம் தீரும் . இதை மண்டக்கணக்காக பெண்கள் சாப்பிட்டு வந்தால் கெர்ப்பந்தரிக்கும் . கெர்ப்பந்தரிக்க அனுபோகமான எண்ணெய்  முறை பார்வதீ பரணீயத்தில் சொல்லியிருக்கிறது .

xxxx

3.அகத்திக் கீரையை யாவரேனும்  வாரத்திற்கு இருமுறை சமைத்து உண்டி யோடு உபயோகி த்து வந்தால் பித்தகம்- பித்தாதிக்கம் – பித்த மயக்கம் இவை அணுவேனும் அணுகாது.

xxxx

4.அருநெல்லியை வடகம் செய்து வைத்திருந்து துவையல் முதலிய காரசாரத்துடன் உபயோகித்து வந்தால் பித்த சாந்தியும் தேகக் குளிர்ச்சியும் நேத்ராப் பிரகாசமும் உண்டாகும்.

xxxx

5.ரசம் கட்ட :-அம்மான் பச்சரிசியை அரைத்து குகை செய்து சூதகத்தை கிரமப்படி சுத்தி செய்து உருக்கினால் கட்டிவிடும்.

xxxx

6.அழிஞ்சி வேர் ,சித்திரமூலம் வேர், செவியம் , பேராமுட்டி, முருங்கைப்பட்டை, பூசணி வேர் வகைக்கு -வ- பலம் எடுத்து படி தண்ணீரில் போட்டு கேட்டுக்கொன்றாய் காய்ச்சி வடித்துக் கொடுக்கவும் . அதிக வேர்வை , வெருப்பு, மயக்கம், நாக்கு வழுவழுப்பு , மலஜலம் வெளுப்பு முதலிய சேத்துமஜென்னி தீரும்.

xxxx

7.அப்பைக் கோவைக்கிழங்கைக் கொட்டைப்பாக்களவு எடுத்து பசும் பாலில் அறைத்துகே கொடுக்க முலைக்குத்து – கடிவிஷம்- கரப்பான் வியாதிகள் தீரும். புளிப்பும் கரப்பான் பதார்த்தங களையும்  நீக்கி பத்தியமிருக்கவேண்டியது.

xxxx

8.அலரிச் செடியின் சமூலமும் கடுக்காயும் சுட்டுக்காரியாக்கி நல்லெண்ணெய் அல்லது வேப்பெண்ணெய் யில் குழைத்து சிரங்குகளுக்குத் தடவ உலர்ந்துபோகும்.

xxxx

9.அமுக்கனாங்கிழங்கு– நீர்முள்ளி வித்து -குறுந்தொட்டி வேர் சமனிடை எடுத்து பசும் வெண்ணெயில் குழைத்துச் சாப்பிடவும், இப்படி இருவேளையும் 20 நாள் சாப்பிட தாது விருத்தியுண்டாகும் .

xxxx

அவுரி இலை – வசம்பு- உள்ளி- இம்மூன்றும் சமனிடை எடுத்து சிதைத்து நாசியில் நஸ்யம் செய்தால் ஜன்னி, புரயிசுவு , வலி, கழுத்து வலி இதுகள்  தீரும் .

To be continued………………………..

tags- மூலிகை மர்மம் , 1899, வெளியிட்ட ஆண்டு, முனிசாமி முதலியார்

QUIZ  புரி பத்து QUIZ (Post No.1,954)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,954

Date uploaded in London – –   25 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

QUIZ SERIAL No.99

1.சப்த புரி என்று போற்றப்படும் ஏழு புனித நகரங்களில் ஒன்றான புரி நகரம் எங்கே இருக்கிறது ? அதன் முக்கியத்துவம் என்ன?

xxxx

2.புரி நகரத்திலுள்ள ஜகந்நாதர் ஆலயத்தில் யார்யாரைத் தரிசனம் செய்யலாம்?

xxxx

3.ஜகந்நாதர் கோவில் ரத யாத்ரா எப்படி உலகம் முழுதும் பிரசித்தம்அடைந்தது  ?

xxxx

4.அண்மைக்காலத்தில் ஜகந்நாதர் ரத யாத்திரையை உலகெங்கும் நடத்துவது யார் ?

xxxx

5.ரத யாத்திரை எவ்வளவு நாட்கள் எப்போது நடக்கும் ?

xxxxx

6.ஜகந்நாதர் ஆலயத்துக்கு எத்தனை வாசல்கள் கோபுரத்தின் உயரம் என்ன ?

xxxx

7.கோவிலின் கிழக்கு வாசலுக்கு எதிரேயுள்ள அருண ஸ்தம்பத்தின் விளக்கம் என்ன ?

XXXX

8.ஜகந்நாதர் கோவிலில் வணங்கப்படும் மூர்த்திகளின் தனிச் சிறப்பு என்ன ?

XXXX

9.ஜகந்நாதர் கோவில் சமையல் அறை உலகிலேயே பெரிய சமையல் அறையா ?

XXXX

10. ஜகந்நாதர் (PURI நகர்)  கோவில் பற்றிச் சொல்லப்படும் அதிசயங்கள் என்ன  ?

XXXX

விடைகள்

1.ஒடிசா (ஒரிஸ்ஸா) மாநிலத்தில் புரி நகரம் இருக்கிறது. மாநிலத் தலைநகரம் புவனேஸ்வரிலிருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கிறது .

சைதன்ய மஹா பிரபு இங்கு மாயமாய் மறைந்தார் ; தற்காலத்தில் தினமும் கடற்கரை ஆர்த்தி நடக்கிறது .

ஆதி சங்கரர்  ஸ்தாபித்த நான்கு மடங்களில் இங்கு கோவர்த்தன மடம் உள்ளது

xxxx

2.கிருஷ்ண பரமாத்மா , அவருடைய அண்ணன் பலபத்ரா (பலராமன்), தங்கை சுபத்ரா  ஆகிய மூவரை தரிசிக்கலாம் .

xxxx

3.ஆங்கில அகராதியில் ஜக்கர்னாட் என்ற சொல்லைத் தோற்றுவித்தது ஜகந்நாதர் ஆலயம். இந்த ரத யாத்திரையின்போது மக்கள் தேர்ச் சக்கரத்தில் சிக்கி இறப்பது வாடிக்கையாக இருந்தது . இதை ஆங்கிலத்தில் எதையும் நசுக்கித் தள்ளி முன்னேறும் விசை அல்லது பொருள் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தத்  துவங்கினர் .

1: a massive inexorable force, campaign, movement, or object that crushes whatever is in its path

an advertising juggernaut, a political juggernaut

2.chiefly British : a large heavy truck

xxxx

4.பக்திவேதாந்த பிரபுபாதா துவக்கிய ஹரே கிருஷ்ணா இயக்கம், தற்காலத்தில் உலகெங்கிலும் உள்ள பெரிய நக ரங்களில் ஜகந்நாதர்/கிருஷ்ணா, பலபத்ரா, சுபத்ரா உருவங்களுடன் ரத யாத்திரையை முக்கிய வீதிகளின் வழியே நடத்துகிறது .

xxxx

5.உலகப் புகழ்பெற்ற  புரி ஜகந்நாதர் ரத யாத்திரை ஆஷாட (ஜூன்-ஜூலை) மாதத்தில் ஒன்பது நாட்கள் நடக்கும் ; மூன்று ரதங்களை லட்சக் கணக்கானோர் இழுத்து வருவார்கள் .தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

Xxxx

6. கோபுர உயரம் 190 அடி. கோவிலுக்கு நான்கு வாசல்கள் உண்டு,

கிழக்குப் பகுதியில் சிங்கத்தவார என்னும் சிங்க வாசல் ; இதுதான் கோவிலின் நுழைவாயில். தெற்கு திசையில் அஸ்வத்துவார் என்னும் குதிரை வாசல்; மேற்கில் வியாக்ர வாசல், அதாவது புலி வாசல்; வடக்கில் யானை வாசல் (ஹாத்தி த்வார் ); இவை தர்மம், ஞானம், வைராக்யம், ஐஸ்வர்யம் ஆகியவற்றைக் குறிக்கின்றன.

XXXXX

7. அருணன் என்றால் சூரியன் (Aruna Stambha {Solar Pillar} . இந்தக் கல் தூணின் உச்சியில் தியான நிலையில் இருக்கும் சூரியனின் உருவம் இருக்கும். 16 பட்டைகள் கொண்ட இந்த குளோரைட் தூணை கோனார்க் நகரிலுள்ள சூரியன் கோவிலிலிருந்து எடுத்து வந்து இங்கே நிறுவி இருக்கிறார்கள்.

XXXX

8. பொதுவாக, கோவில்களில் கல் அல்லது லோகத்தால் ஆன சிலை அல்லது விக்கிரகம் வழிபாட்டில் இருக்கும். ஆனால் இங்கோ வேப்ப  மரத்தினால் ஆன மூர்த்திகள் வழிபாட்டில் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய உருவங்களை செதுக்குவார்கள் ; பெரிய முழிகளுடன் , வர்ணங்கள் தீட்டப்பட்ட இவை, கோவில் சிலைகள் போல வடிவாக இராது .

XXXX

9. ஆமாம். அமிர்தசரஸ் பொற்கோவில் சமையல்அறை போல ஒரு லட்சம் பேருக்கு இலவச அன்னதானம் செய்தாலும் இங்குதான் 500  வகையான உணவு வகைகளைச்  செய்கின்றனர்  . வேறு எங்கும் இத்தனை வகைப் பிரசாதங்கள் கிடையாது ; மிஞ்சிய உணவை வீணடிக்கக்காமல் காயவைத்து பிரசாதமாகவும் விற்று விடுகிறார்கள் . ரசோய் கர் என்று அழைப்பார்கள்.   மஹாலெட்சுமியே கண்காணிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள் .

XXXXX

10.கோவிலின் நிழல் கீழே விழாது.

கோவில் கோபுர  கொடியை அர்ச்சகர் தினமும் மாற்றவேண்டும் ; இது 1800  ஆண்டுகளாக தினமும் நடக்கிறது .

கோவில் கோபுர  கொடி, காற்று வீசும் திசையை நோக்கிப் பறக்கும் . ஏனைய இடங்களில் இப்படி இல்லை

கோபுரத்துக்கு மேல் பறவைகள் உட்காராது; பறக்காது .

கடலோர நகரங்களில் காலையில் காற்று கடலிலருந்து வரும்; மாலையில் கடற்பரப்பை நோக்கி வீசும் ; இங்கு இது நேர்மாறாக நடக்கிறது .

கோவில் கடற்கரையில் இருக்கிறது ; ஆயினும் கோவிலுக்குள் நுழைந்துவிட்டால் இந்த சப்தம் கேசமும் கேட்காது .

கோபுரத்தின் உச்சியில் ஒரு  டன் எடையுள்ள கல் சக்கரம்  சுழல் கிறது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இதை இவ்வளவு உயரத்துக்கு ஏற்றினர் என்பது அதிசயமே  .

உலகிலேயே பெரிய சமையல் அறை  உள்ளது; தினமும் 56  வகை பிரசாதங்கள் நைவேத்தியம் செய்யப்படுகின்றன. ஆண்டில் மொத்தம் 500  வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன.

–SUBHAM —

TAGS- புரி, ரத யாத்திரை,  ஜகந்நாதர், பலபத்ரா சுபத்ரா, கோபுர அதிசயங்கள் , பெரிய சமையல் அறை

கர்ம ரகசியம்!–4; யம லோகத்திற்கு ஒரு விஸிட்! (Post No.12953)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,953

Date uploaded in London –  –   25 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

கர்ம ரகசியம்! – 4

வாங்க சார்யமலோகத்திற்கு ஒரு விஸிட்! – உயிரோடிருக்கும் போதே!!

ச.நாகராஜன்

மரணம் என்று சொன்னவுடனேயே யமன் பற்றிய நினைவு தான் நமக்கு வரும்.

அவனது லோகம் எப்படி இருக்கும்? அது எவ்வளவு தூரத்தில் உள்ளது. செத்த பின்னர் நமது உயிர் அல்லது ஆத்மா அதை எப்படி அடையும் ..இத்யாதி கேள்விகள்.

இதே கேள்விகள் தர்மபுத்திரருக்கும் தோன்றி இருக்கிறது. அவர் இவற்றைக் கேட்டே விட்டார், பதிலும் பெற்று விட்டார். அதை மஹாபாரதத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

வனபர்வத்தில் மார்க்கண்டேய ஸமாஸ்யா பர்வம் என்ற உப பர்வத்தில் (வனபர்வம் 203வது அத்தியாயம்) வரும் காட்சி இது.

மார்க்கண்டேயரை தர்மபுத்திரர் தரிசிக்கிறார். மார்க்கண்டேயர் யமனை வென்றவர் ஆயிற்றே. யமனைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அவருக்கு அத்துபடி.

அவரிடம் தர்மர் கேட்கிறார்:

1) யமலோக மார்க்கமானது எப்படிப்பட்டது?

2) என்ன அளவுள்ளது?

3) மானிட லோகத்திற்கும் யம லோகத்திற்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது?

4) அது எவ்விதமாக இருக்கிறது?

5) மனிதர்கள் எந்த உபாயத்தால் அந்த வழியைக் கடக்கிறார்கள்?

இதற்கு மார்க்கண்டேயர் பதிலை விளக்கமாகத் தருகிறார்.

ரகசியங்களுக்குள் மிக்க ரகசியமாக இருக்கும் விஷயத்தை அவர் உரைக்கத் தொடங்குகிறார்.

1) யம லோகத்திற்கும் மனித லோகத்திற்கும் மத்தியிலிருக்கிற வழியானது எண்பத்தாறாயிரம் யோஜனை தூரம் உள்ளது. (ஒரு யோஜனை தூரம் என்பது 8 மைல்கள் அல்லது 12.8 கிலோமீட்டர் ஆகும்) 6,88,000 மைல் தூரத்தில் யமலோகம் உள்ளது.

2) கோரமாக இருக்கும். காடாக காணப்படும்.நாற்புறங்களிலும் தண்ணீர் இல்லாத வெளி. அந்த வழியில் மரங்களில் நிழலும் இல்லை, தண்ணீரும் இல்லை. களைப்படைந்தவனும், இளைத்தவனுமான மனிதன் இளைப்பாறத்தக்க வீடும் இல்லை.

3) யமனுடைய கட்டளையை மேற்கொண்ட யமதூதர்கள் ஆண்களையும், பெண்களையும் பூமியில் உள்ள இதர உயிருள்ள மற்றவைகளையும் பலாத்காரமாகக் கொண்டு போகின்றனர்.

சிறந்த தானங்களை பிராமணர்களுக்குத் தந்தவர்களுக்கு குதிரை வாகனம்; அன்னதானம் செய்தவர்கள் அன்னத்தினால் அங்கு திருப்தியுற்றுச் செல்ல அன்னமிடாதவர்களோ பசியினால் துன்பமுற்றுச் செல்கின்றனர்;ஆடைகளைக் கொடுத்தவர்கள் ஆடையோடு செல்ல ஆடையைத் தானமாக வழங்காதவர்கள் ஆடையின்றிச் செல்கின்றனர். தீர்த்தத்தை தானம் செய்தவர்களுக்கு அங்கு புஷ்போதகை என்ற நதியின் அம்ருதம் போன்ற குளிர்ச்சியான நீர் கிடைக்கிறது.தீவினை செய்தவர்களுக்கு அந்த நதியில்

சீழானது குடிப்பதற்குக் கிடைக்கிறது.

ஆக எவ்வித நற்கர்மங்களை மேற்கொண்டால் எவ்வித பலனை யமலோகத்தில் பெறலாம் என்பதை மார்க்கண்டேயர் இப்படி விளக்குகிறார்.

அடுத்து மஹாபாரதத்தில் சபா பர்வத்தில் மந்த்ர பர்வம் என்ற உப பர்வத்தில் யமலோகம் பற்றி நன்கு விவர்க்கப்படுகிறது. (சபா பர்வம் அத்தியாயம் 6)

தனது சபைக்கு நிகர்த்த சபை ஒன்று உண்டா என்று தனது சபைக்கு வந்த நாரத மஹரிஷியிடம் தர்ம புத்திரர் கேட்க அவர் புன்னகையுடன் யம சபை, வருண சபை, இந்திர சபை, குபேர சபை ஆகிய சபைகளை விவரமாகக் கூறுகிறார். மானிட லோகத்தில் தர்மரின் சபையே சிறந்தது என்ற நற்சான்றிதழையும் அவர் வழங்குகிறார்.

யம சபையைப் பற்றி அவர் கூறியதன் சுருக்கம் இதோ:

யம சபை ஒளியே உருக்கொண்டதானது.

நூறு யோஜனைக்கு மேல் அகலமுள்ளது.

சூரியனைப் போன்ற ஒளியினால் எங்கும் பிரகாசிப்பது.

நினைத்த உருவம் அமைவது.

மிக்க குளிர்ச்சியும் அதிக வெப்பமும் இல்லாமல் மனதை மகிழ்விப்பது.

துயரம், மூப்பு, பசி, தாகம், வெறுப்பு, மனச்சோர்வு, களைப்பு, கெடுதல் இவற்றில் ஒன்றும் அச்சபையில் உள்ளவர்களுக்கு இல்லை.

தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் உரிய போகங்கள் அனைத்தும் அங்கு உள்ளன.

சுவையையும் பலத்தையும் தரும் பக்ஷ்யம், போஜ்யம், லேஹ்யம், சோஷ்யம், பேயம் ஆகிய ஐந்து வகை உணவுகளும் அங்கு கிடைக்கும்.

பூமாலைகள் உண்டு. சுவையுடைய தண்ணீரும் வெந்நீரும் உண்டு.

ராஜ ரிஷிகளும், பிரம்ம ரிஷிகளும் அங்கு சூரியனின் புத்திரனான யமனை வணங்கிப் போற்றுகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஒரு பெரிய ரிஷிகள், அரசர்கள் பட்டியல் தரப்படுகிறது. மிக நீண்ட பட்டியல் அது.

அங்குள்ளோரின் பெயர்களைக் கணக்கிடமுடியாது.

விஸ்வகர்மா நெடுங்காலம் தவமிருந்து நிர்மாணித்த சபை அது. தன்னொளியால் ஜ்வலிப்பது.

பொய் சொல்லாத, நியம் தவறாத, சாந்தமுள்ள, சுத்தருமான சந்யாசிகள் தங்களது நல்ல கர்மங்களினால் துலக்கப்பட்டு அந்த சபைக்கு வருகின்றனர். 

இப்படி வர்ணிக்கப்படுகிறது யம சபை! 

என்ன, யம சபை விஸிட் எப்படி?

***

Malayali Ramaswami given Rig Veda by American Malayalis

Ramaswami of Malayli origin, USA

 Nikki Haley of Punjabi Sikh origin, USA

Posted on 24-2-2024

Kerala Hindus of USA gift ‘Rig Veda’ to Vivek Ramaswamy’s family

The atmosphere resonated with spirituality as Ramaswamy, in turn, recited the potent Aikyamatya Suktham, embracing the profound wisdom encapsulated within the Rig Vedam.

NewsBharati    04-Jan-2024 11:34:52 AM

The Kerala Hindus of North America gifted the sacred ‘Rig Vedam’ to the parents of India-American US presidential candidate Vivek Ramaswamy, an occasion marked by deep reverence at the Dayton Temple, Ohio. A viral video shows Vivek’s father conducting a ceremonial pooja for the ancient text before passing it on to him.

The atmosphere resonated with spirituality as Ramaswamy, in turn, recited the potent Aikyamatya Suktham, embracing the profound wisdom encapsulated within the Rig Vedam. 

In a momentous ceremony at the Dayton Temple, the Kerala Hindus of North America presented the sacred ‘Rig Vedam’ to Vivek Ramaswamy’s parents, met with profound reverence. 

As a testament to tradition and heritage, Vivek’s father led a ceremonial pooja for the ancient text before passing it to Vivek. The atmosphere reverberated with spirituality as Vivek recited the powerful Aikyamatya Suktham, embracing the cherished wisdom of the Rig Vedam. 

In November, last year, Ramaswamy opened up about his ‘Hindu’ faith, emphasising that it provides him with freedom and has motivated him to undertake this presidential campaign as a moral obligation. 

Ramaswami with his wife Apoorva

Ramaswami with his son Karthick

Speaking at ‘The Family Leader’ forum organised by The Daily Signal platform, the Indian-American entrepreneur drew parallels between the teachings of Hinduism and Christianity, expressing his intention to promote shared values for the benefit of the next generation. 

Ramaswamy said, “May faith is what gives me my freedom. My faith is what led me to this presidential campaign…I am a Hindu. I believe there is one true God. I believe god put each of us here for a purpose. My faith teaches us that we have a duty, a moral duty to realise that purpose. Those are God’s instruments that work through us in different ways, but we are still equal because God resides in each of us. That’s the core of my faith”.

The Ohio-based bio-tech entrepreneur also drew parallels between Hindu and Christian faiths and said that these are the ‘shared values’ of God, and he will stand for those shared values.

“I went to Christian High School. What do we learn? We learnt the 10 commandments. We read the Bible. Scriptures class. God is real. There is one true God. Don’t take his name in vain. Respect your parents. Don’t lie. Don’t steal. Don’t commit adultery. What I learned at that time, is that these values are familiar to me. They don’t belong to Hindus. But, they don’t belong to Christians either. They belong to God actually. And I think these are the values that undergird this country,” Ramaswamy said.

Notably, 38-year-old Ramaswamy is a native of southwest Ohio. His mother was a geriatric psychiatrist and his father worked as an engineer at General Electric. His parents migrated to the US from Kerala.

Ramaswamy’s campaign has gained attention, and he has risen in GOP primary polls, although he still trails behind Trump and Florida Governor Ron DeSantis in support. (Later he withdrew from the contest and expressed his support to Donald Trump).

The above news story is lifted from News Bharat  dated 10-1-2024

(Now Nikki Haley of Punjabi Sikh origin is contesting against Trump. Nikki converted to Christianity like Kamala Harris, when she married Haley.)

–subham—

Tags- News Bharati, Rig Veda, Ramaswami, USA, Malayali, Apoorva, Nikki Haley

Swami Vivekananda and Gandhiji’s wife on Ramayana


Posted on 24-1-2024

ON RAMA AND RAMAYANA

Swami Vivekananda drew attention because of his speech in Chicago’s Parliament of Religions in September 1893. The New York Herald wrote about Swamiji, “He is undoubtedly the greatest figure in the Parliament of Religion. After hearing him, we feel how foolish it is to send missionaries to this conference”.

For such an eminent person, Ramayana was a great source of inspiration. On January 31, 1900, Swami Vivekanand delivered a talk on Ramayana. During his speech, Swami Vivekanand made some reference to Ram Setu. He said, “Learning everything about Sita from Hanuman, Ram collected an army and with it marched towards the southernmost point of India. There Rama’s monkey built a huge bridge, called Set-Bandha, connecting India with Ceylon. In very low water, even now it is possible to cross from India to Ceylon”. Significantly, Bhaskar Setupathi was Swamiji’s greatest disciple and it was because of Setupathi that Swamiji participated in the Chicago conference. Setupathi means the Lord of Bridge.

Swami Vivekanand, who is attributed to rejuvenating the Hindu way of life in modern days, used to hold Prabhu Ramchandra in very high esteem. Swami Vivekanand’s affection for Prabhu Ramchandra can be understood by some of his quotes. These quotes are:


1.Rama, the ancient idol of the heroic ages, the embodiment of truth, of morality, the ideal son, the ideal husband, the ideal father, and, above all, the ideal all, the ideal king.

2.He who was Shri Rama, whose stream of love flowed with resistless might even to the Chandala (the outcaste); Oh, whoever was engaged in doing good to the world though superhuman by nature, whose renown there is none to equal in the three worlds, Sita’s beloved, whose body of Knowledge Supreme was covered by devotion sweet in the form of Sita.


3.Rama, the ancient idol of the heroic ages, the embodiment of truth, of morality, the ideals son, the ideals husband, the ideal father, and, above all, the ideals all, the ideal king, this Rama has been presented before us by the great Saint Valmiki.

4.Rama and Sita are the ideals of the Indian nation.

5.“Where, there is Rama, there is no Kama; where there is Kama, there Rama is not. Night and day can never exist together.” The voice of the ancient sages proclaims to us, “If you desire to attain God, you will have to renounce Kâma-Kânchana (lust and possession).

6. You have now to make the character of Mahavira your ideal. See how at the command of Ramachandra he crossed the ocean. He had no care for life or death! He was a perfect master of his senses and wonderfully sagacious. You have now to build your life on this great ideal of personal service. Through that, all other ideals will gradually manifest in life. Obedience to the Guru without questioning, and strict observance of Brahmacharya — this is the secret of success. On the one hand, Hanuman represents the ideal of service, so on the other hand, he represents leonine courage, striking the whole world with awe. He has not the least hesitation in sacrificing his life for the good of Rama. A supreme indifference to everything except the service of Rama, even to the attainment of the status of Brahma and Shiva, the great World – gods! Only the carrying out of Shri Rama’s best is the one vow of this life! Such whole–hearted devotion is wanted.


Swami Vivekanand, thus, reasserted the popular image of Prabhu Ramchandra as “Maryadapurushottam’. For Swamiji, Prabhu Ramchandra was an ideal son, ideal husband, ideal brother and ideal king, who was affectionate to all. Above all, Prabhu Ramchandra was an icon of morality for Swami Vivekanand. Swami Vivekananda feels that India needs devotion like Hanuman.

XXXXX

Kasturba Gandhi On Ramayana

News Bharati    10-Jan-2024 22:00:59 PM

Ramayana was very close to the heart of Kasturba Gandhi, wife of Mahatma Gandhi. She had deep faith in the Ramayana and used to read it every day. Kasturba read Ramayana in the morning when Gandhi was on the morning walk.

All the biographers of Kasturba mentioned that she used to read Ramayana for one and half hours every morning. Ramayana was also inseparable from Kasturba in the evening prayers. She used to sign ‘bhajans’ from Ramayana during the evening prayers.


Kasturba was a deeply religious woman. She fasted on Ekadashi, Purnima, Amavasya, Shivratri, and so on. During all her imprisonments, she had a copy of the Ramayana and the Bhagwat Purana with her. She used to read both of them even in the jail. In Pune’s Aga Khan Palace, Kasturba used to recite two stanzas of the Tulsi Ramayana regularly during the evening prayers.

Kasturba would sit down with the Ramayana and read these verses with the explanatory notes. The notes were in Hindi and her Hindi was not very good Gandhi would often explain to her the verses in Gujarati.

Kasturba had expressed her wish to watch a movie – `Bharat Milap’, which was based on Ramayana. But she was doubtful whether Gandhi would permit her to watch the movie.

In July 1914, Mahatma Gandhi and Kasturba traveled to England by ship. Mahatma Gandhi used to recite the Gita and Ramayana for Kasturba for an hour every day during the journey.

Above two stories are from News Bharati.

—-  Subham—-

Tags- Rama, Ramayana, Vivekananda quotes, Kasturba Gandhi

Jaina Kanchi; Amazing Facts about Kanchipuram – Part 3 (last part)- Post No.12,952


Jain Temple at Kanchipuram, Tamil Nadu

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,952

Date uploaded in London – –   24 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Kanchi is considered holy by Hindus, Buddhists, and Jains.There are about 100 temples.

Of the Pancha Bhuta Shrines, Kanchi represents Earth/ Prithvi Sthala.

XXXX

Tiruparutti kundram area of Kanchi has two Jain temples . Chandraprabha temple and Varthamana Mahavira temple are unique in many respects.

The sthala vriksha of Mahavira temple is Kura tree (Bottle Brush tree) and there is an interesting inscription about the tree. A verse in praise of it is engraved on a stone built into the platform of  the temple. It says that the tree neither grows tall nor becomes short, protects the sceptre of the king, represents dharma and stand in front of the eternal abode of Trailokyanatha.

xxxx

Five Alvars, Four Great Saivite Saints and several minor poets have sung about the gods in Hindu temples. Sangeetha/ Music Trinity and the Father of Carnatic music Purandaradasa did not lag. They also composed songs about the gods at Kanchi.

xxxx

Lot of sculptures are in Kailasanatha Temple

Kailsanatha temple is the oldest temple according to available records. Pallava king Rajasimha and his consort Queen Rangapataka (Miss Colour Flag or Colour Banner)  built the temple. There are beautiful sculptures, inscriptions and some paintings.

Xxxx

Kanchi Shankaracharya Mutt raised the profile of the town. It was shifted to Kumbakonam during Muslim invasion and then shifted back to Kanchi by Paramacharya (1894-1994) . He, Chandra Sekaraendra Sarasvathi as the head of it delivered scholarly lectures. A lot of politicians and VIPs sought his blessings.

xxxx

Kamakshi temple here is unique because it enshrines Lord Vishnu and Aroopa Lakshmi as well. Adi Shankara installed Sri Chakra in the temple. It was so powerful, that no major temple has shrines for Sakti Devatas except Kamaksi  temple.

xxxx

Buddhism  was practised during post Sangam period according to Manimekalai, one of the post Sangam Tamil epics. Pali texts also mentioned Kanchi. Chinese pilgrim Yuwang Chwang  saw Asoka stupi in Kanchi. He has given a detailed account of Buddhist activities in and around Kanchipuram.

Five images of Buddha were found in and around Kamakshi temple. Buddhists occupied Hindu temples a one time. Later they were reconverted as Hindu temples.

xxxx

Kamakshi  Temple at Kanchi

Dr Nagaswami eminent historian , has written an article about the Sanskrit comedy drama MATTA VILASA PRAHASANA written by Pallava king Mahendra Varman in 600 CE. It shows the downfall of Buddhism. No where the 2000 year old Sangam literature mentioned Gautama Buddha, because it was imported into Hindu Tamil Nadu . Only post Sangam Tamil epics give some details.

— Subham—

Tags- Amazing Facts, Kanchipuram,  Jain temples, Kura tree, Mahavira

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 4 (Post No.12,951)

Kanchi Kamakshi Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,951

Date uploaded in London – –   24 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

31. சீனாவிலும் ஜப்பானிலும் காஞ்சிபுரம் நகரம் புகழ் பரவியதற்கு

உதவியவர் யார் ?

xxxx

32. காஞ்சியில் தொல்பொருட் துறை பராமரிப்பிலுள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் எது ?

xxxx

33.காஞ்சியின் மிகப்பமையான இக்கோவிலைக் கட்டியவர் யார் ?

xxxx

34. காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற சமண ஆலயம் எது?

xxxx

35.காஞ்சி காமாக்ஷி கோவிலின் சிறப்பு என்ன  ?

xxxx

36.காஞ்சி மடம் எங்கே இருக்கிறது ?

xxxx

37. சமணர் கோவிலில் உள்ள குரா மரத்தின் சிறப்பு என்ன?

xxxx

38.காஞ்சி  நகருக்கும் சங்கீத மேதைகளும் தொடர்பு உண்டா ?

xxxx

39.காஞ்சி மடத்தில் யார் சமாதிகள் /அதிஷ்டானங்கள் உள்ளன ?

xxxx

40.ஓரிருக்கையில் என்ன இருக்கிறது?

xxxx

Tirupparuthikundram Jain Temple 

விடைகள்

31.போதி தர்மர் , அந்த (China and Japan) நாடுகளுக்குச் சென்று புத்த மதத்தை பரப்பினார் .

.xxxx

32.கைலாசநாதர் கோவில் .

xxxx

33.காஞ்சி நகரிலுள்ள மிகப்பழைய கோவில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் ஆகும். இதை  பல்லவ மன்னர் ராஜசிம்மன் (பொ.ஆ.700 CE)  கட்டினார். பின்னர் அவருடைய மனைவி, ராணி ரங்க பதாகை கட்டினார் . இதில் மொத்தம் 58  சந்நிதிகள் உள்ளன. கருவறையில் பதினாறு பட்டைகளுடன் கூடிய சிவ லிங்கம் வழிபாட்டில் உள்ளது. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது.

சென்னையிலிருந்து 45  மைல் தொலைவில்  காஞ்சிபுரம் இருக்கிறது.

xxxx

34.சமணக் காஞ்சி அல்லது திருப்பருத்திக்குன்றம், காஞ்சிபுரத்திற்கு தெற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் வேகவதி ஆற்றின் கரையில்  இருக்கிறது ; அங்கு இரண்டு கோவில்கள் உள்ளன.  சீன பௌத்த யாத்ரீகர் யுவான் சுவாங் , கி.பி.640-ல் வந்த சமயம்,   காஞ்சிபுரத்தில், 83 சமணக் கோவில்களைக் கண்டதாக தன் பயணக்குறிப்பில் எழுதியுள்ளார்.

1.சந்திரபிரபா கோயில்

சமண சமயத்தின் எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப்பிரபருக்கு கோவில் அமைக்கப்பட்டுள்ளது.;

2.வர்த்தமானர் கோவில்

24வது தீர்த்தங்கரான மகாவீரர் எனும் வர்த்தமானர் மூலவராக உயர்ந்த பீடத்தின் மீது, தேவர்கள் கவரி வீச, முக்குடை கவிழ்ப்ப, ஆழ்ந்த தவக்கோலத்தில் காட்சி தருகிறார். இவரை திரிலோகநாதர் என்று அழைப்பர்.

xxxx

35.ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரம் அன்னையின் சந்நிதியில் உள்ளது . ஒரு புறம் பெருமாளும் மறுபுறம் அரூப லெட்சுமியும் உள்ளனர். ஆகையால் இது ஒரு வைணவ தலமும் ஆகும். தசரத சக்ரவர்த்தி காலத்திலிருந்து கோவில் உள்ளதாக பக்தர்கள் நம்புகிறார்கள் . காமாட்சி அம்பாள், இங்கே நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருக்கிறாள். முன் இருகைகளில் கரும்பு வில்லினையும், மலர்க் கணைகளையும், மேல் இரு கைகளில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தியும் இருக்கிறாள். இந்தக் கோவிலில் அன்னை இருப்பதால் இங்குள்ள பிற கோவில்களில் தனிப்பட்ட அம்மன் சந்நிதி கிடையாது!

xxxx

36.காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு அருகில் காஞ்சி மடம் இருக்கிறது ; ஹைதர் அலி காலத்தில் கும்பகோணத்துக்கு இடம்பெயர்ந்த மடம் மீண்டும் சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர இந்திர சரஸ்வதி காலத்தில் (1894-1994) காஞ்சிக்குத் திரும்பியது; நூறு ஆண்டுகள் வாழ்ந்த அவரால் மடம் உலகப் புகழ்பெற்றது ; அவர் பேசிய உரைகள் தெய்வத்தின் குரல் என்ற நூலாக வந்தவுடன் மடத்தின் பெருமை மேலும் அதிகரித்தது. அவருக்குப் பின்னர் வந்த ஜெயேந்திர சரஸ்வதி காலத்தில் சில சம்பவங்களால் அவப்பெயர் ஏற்பட்டது.  நீண்ட மடாதிபதிகள் பட்டியல், இதை ஆதி சங்கரர் நிறுவியதைக் காட்டுகிறது. சங்கரர் காலம் பற்றி காஞ்சிப் பெரியவர் நீண்ட உரை நிகழ்த்தியுள்ளார்  . முஸ்லீம் படையெடுப்பால் தங்கத்தால் ஆன பங்காரு காமாட்சி தஞ்சைக்குச்  சென்றதும் , இவர் மடம் இடம்பெயர்ந்து சென்றதன் நியாயத்தைக் காட்டுகிறது.

xxxx

37.காஞ்சிபுரத்தில்  சமணர் கோவிலில் உள்ள Kura குரா மரத்தை (Webra corymbosa) ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். இதை பாட்டில் பிரஷ் Bottle Brush Tree  மரம் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். சிவனுக்கும் முருகனுக்கும் உகந்த இந்த மரத்தைப்பற்றி திருப்பருத்திக்குன்ற சமணர் கோவிலில் ஒரு கல்வெட்டு இருக்கிறது . வர்த்தமானீஸ்வரர் ஆலயத்தின் ஸ்தல விருட்சம் ஆகும். “தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்ய நாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது” (South Indian Inscriptions Vol. VII, No. 399) என்று இந்த ஆலயத்தின் கல்வெட்டு கூறுகிறது . ஒரு கல்வெட்டில் மரம் பற்றிய பாடல் இருப்பது அரிது.

xxxx

38.கர்நாடக சங்கீதத்தின் பிதாமஹரான புரந்தரதாசர் , சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள் அனைவரும் காஞ்சி நகர கோவில்களில் குடிகொண்ட கடவுளர்களைப்  பாடியுள்ளனர் . ஏனையோர் சிவன் விஷ்ணுவைப் பாடியபோதும், சாமா சாஸ்திரிகள் மட்டும் காமாட்சியை மட்டும் போற்றிப் பாடியிருக்கிறார்கள்

xxxx

39.காஞ்சிப் பெரியவர் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் (1894-1994) மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்கள் (சமாதிகள்) உள்ளன.

xxxx

40.ஓரிருக்கையில், காஞ்சி மகானின் மணிமண்டபம் இருக்கிறது இதை அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் பிரதோஷம் மாமா. இந்த இடம் நகருக்கு மிக அருகில் இருக்கிறது . மணிமண்டபத்தில்  100  அடி உயர விமானம், பாதுகா மண்டபம், ருத்ராக்ஷ மண்டபம் ஆகியன உள்ளன . இந்த இடம் திருமழிசை ஆழ்வார், கனி கண்ணன் , பெருமாள் (Lord Vishnu) ஆகியோர் கதையால் ஏற்கனவே சிறப்பு பெற்ற இடம் ஆகும்.

Kailasanatha Temple in Kanchipuram

–subham —-

Tags- ஓரிருக்கை, அதிஷ்டானங்கள், காஞ்சி மடம், கைலாசநாதர் கோவில், போதி தர்மர்

ராம நாம மஹிமை – 5 (Post No.12,950)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,950

Date uploaded in London –  –   24 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழா நன்கு தெய்வீகமாக நடந்து முடிந்துள்ளது.  ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது ஐந்தாவது கட்டுரை!

ராம நாம மஹிமை – 5

ச.நாகராஜன்

சில முக்கிய துதிகள்

ராம நாம மஹிமையை விளக்கும் ஏராளமான நூல்கள் உள்ளன; ஸ்தோத்திரங்கள் உள்ளன.

அவை அனைத்தையும் தொகுத்தால் ஒரு பெரும் கலைக்களஞ்சியமாகி விடும்.

ஏற்கனவே அனைத்து ராமாயணங்களின் பட்டியலையும் முன்பே வெளியிட்டுள்ளோம்.

ராமாயண வழிகாட்டி என்ற நூல் பற்றியும், இராமாயணத்தில் நதிகள், வாகனங்கள், ப்ரதிக்ஞைகள், ஜோதிடக் குறிப்புகள் என்ற நூல் பற்றியும் www.pustaka.co.in இணைய தளத்தில் பார்க்கலாம். இவற்றைப் பெற்றுப் படிக்கலாம். புத்தகமாகவும் Paper Back ஆகவும் வாங்கலாம்.

அத்துடன் திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம் என்ற நூலில் தமிழ் திரைப்படங்களில் வந்த ராமர் பாடல்களைப் பற்றிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு தரப்பட்டுள்ளது.

இங்கு சில முக்கிய துதிகள் கொண்ட நூல்களின் பட்டியலைக் காண்போம்.

1) ராமாஷ்டோத்தர ஷதாபிதான ஸ்தோத்ரம்

2) ராம ஹ்ருதயம்

3) ராம கீதா

4) ராமரக்ஷா ஸ்தோத்ரம்

5) ப்ரஹ்மதேவக்ருதா ராம ஸ்துதி

6) ஜடாயு க்ருத ராம ஸ்தோத்ரம்

7) ராமாஷ்டகம்

8) ஶ்ரீ ராமாஷ்டகம்

9) ஶ்ரீ மஹாதேவ க்ருதா ராம ஸ்துதி

10) அஹல்யா க்ருத ராம ஸ்தோத்ரம்

11) இந்த்ர க்ருத ராம ஸ்தோத்ரம்

12) ராமசந்த்ராஷ்டகம்

13) ஶ்ரீ சீதாராமாஷ்டகம்

14) ராமஷட்பதி

15) ரகுநாதாஷ்டகம்

16) ராம கவசம்

17) த்ரைலோக்ய மோஹன கவசம்

18) ஜானகீ த்ரைலோக்ய மோஹன கவசம்

19) ஶ்ரீ ராம ஸ்தோத்ரம்

20) ராமஸ்தவராஜம்

21) ராம மஹிம்ன ஸ்தோத்ரம்

25) ராமமுர்ஜகப்ரயாதஸ்தோத்ரம்

1925ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஸ்தோத்ர ரத்னாகரத்தில் 406 ஸ்தோத்திரங்களை ஶ்ரீ வேங்கடேசாச்சாரியார் அவர்கள் தொகுத்துள்ளார். அதில் உள்ள ராம ஸ்தோத்திரங்கள் மட்டும் மேலே தரப்பட்டுள்ளன.

ராம ரஹஸ்யோபநிஷத்

ராம நாமத்தின் ரகசியத்தை உரைக்கும் உபநிஷதம் இது. ராம நாமத்தில் உள்ள சப்த மற்றும் எழுத்துச் சேர்க்கைகள் இதில் விளக்கப்பட்டுள்ளன.

இணையதளத்திலிருந்து இதை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அறிஞர்கள் கூற்று

ஏராளமான மஹான்களும், அறிஞர்களும் ராம நாம மஹிமையைப் பற்றி பல நூறாண்டுகளாக விளக்கி வந்துள்ளனர்.

ராம நாமம் பற்றி மஹாத்மா காந்திஜி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பல உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

ரகுபதி ராகவ ராஜாராம் அவருக்கு இஷ்டமான பிரார்த்தனை.

குறிப்பிடத்தகுந்த ஒரு நூல் பற்றிய விவரத்தை இங்கு தருகிறேன்.

Ramanama – The Infaalible Remedy by Mahatma Gandhi என்ற 104 பக்கங்கள் கொண்ட நூலை Anand T. Hingorani, Karachi 1947ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியிட்டுள்ளார். 35 அத்தியாயங்கள் கொண்டுள்ளது இந்த நூல். ராம நாமத்தைப் பற்றிய 295 விஷயங்கள் அற்புதமாகத் தரப்பட்டுள்ளது.’

காந்திஜி அவர்களின் மூன்று முக்கிய குறிப்புகளை மட்டும் கீழே காணலாம் – இந்த நூலிலிருந்து தரப்படுகிறது.

1) What, however, left a deep impression on me was the reading of the Ramayana before my father. … . That laid the foundation of. My deep devotion to the Ramayana. Today I regard the Ramayana of Tulsidas as the greatest book in all devotional literature.

From – My Experiments with Truth – Part I – Chapter 10

2) “Tell us, they plaintively ask, “how to get rid of the devil, how to get rid of the impurity that has seized us.” When I ask them to take Ramanama and kneel before God and seek His help, they come to me and say, “We do not know where God is. We do not know what is to pray.:

A Tamil saying has always remained in my memory and it means: “God is he Help of the helpless” (திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதை மஹாத்மா இங்கு குறிப்பிடுகிறார்)

If you would ask Him to help you, you would go to Him in all your nakedness, approach Him without reservations, also without fear or doubts as to how He can help a fallen being like you.”

From – Young India – April 4, 1929

3) Shri Ganesh Shastri Joshi, Vaidya, tells me after reading my article on Nature Cure in Harijan of 3rd March, 1946, that in Ayurveda, too, there is ample testimory to the efficacy of Ramanama as a cure for all disease.

From – Harijan, March 24, 1946

இன்னும் ஏராளமான முக்கிய ரகசியக் குறிப்புகளை மஹாத்மா காந்திஜி ராம நாமம் பற்றித் தந்துள்ளார்.

படிப்போம்; பகிர்வோம்.

***