Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
லண்டனில் விலை உயர்ந்த வயலின் இசைக் கருவி களவு போய்விட்டது; லண்டன் போலீசார் பொதுமக்களுக்குத் திருடனைக் கண்டுபிடித்தால் போன் செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர் ; இஸ்லிங்க்டன் என்பது லண்டனின் ஒரு பகுதி. அதிலுள்ள மதுபான விடுதியில் பிப்ரவரி 18 ஆம் தேதி களவு போனது; சி சி டி வி காமெராவில் திருடன் தெரிகிறான். ஆயினும் இதுவரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை; ஆகையால் இப்போது பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர்.
ஒரு வயலினுக்கு ஏன் இவ்வளவு முதலிடம் கொடுக்கிறார்கள் என்ற வினாவை நீங்கள் எழுப்பலாம். இதன் விலை 150,000 பவுன்; ரூபாய்க் கணக்கில் வேண்டுமானால் 117-ஆல் பெருக்கிக்கொள்ளுங்கள்.
1 Pound sterling equals
117.18 Indian Rupee as of 24 June 2025.
இந்த வயலின் இத்தாலியிலுள்ள பிளாரன்ஸ் நகரில் 1740-ஆம் ஆண்டில் செய்யப்பட்டது . மிக விலை மதிப்புடையது அதன் உரிமையாளருக்கோ விலைமதிப்பற்றது; அதாவது விலையே சொல்ல முடியாது!.
பஞ்சகல்யாணி: திருவிளையாடல் புராணத்தில் குதிரை சாஸ்திரம்- Part 2 (Post 14,761)
Written by London Swaminathan
Post No. 14,671
Date uploaded in London – 21 June 2025
****
Part- 3 சாமுத்ரிகா லட்சணம் (last part)
இதில் குதிரையின் உயரம் , வயது, அது குதிக்கும் உயரம், சாமுத்திரிகா லட்சணம், அதனால் வரும் நன்மை தீமைகள், முதலியனவற்றைப் பார்க்கையில், துருக்கி நாட்டில் கிக்குலி (Horse Trainer Kikkuli)ஏன் சம்ஸ்க்ருத மொழியில் குதிரை ஓட்டம் பற்றிக் கற்பித்தார் என்று விளங்குகிறது .
ஸம்ஸ்க்ருதச் சொற்கள் உடைய 3400 ஆண்டுப் பழமையான கல்வெட்டு (1400 BCE) ஜெர்மனியில் பெர்லின் மியூசியத்தில் இப்போது இருக்கிறது.
பந்தியில் கட்டப்பட்டிருப்பினும், தீங்குவிளையும்; இவை நிற்க;
போரின்கண் அஞ்சுதலில்லாத குதிரைக்கு வயசு முப்பத்திரண்டாகும்; பருவம் பத்தாகும்; ஒவ்வொரு பருவத்திலும் வைத்த கால வளவு,
மூன்றாண்டும் இரண்டு திங்களும் பன்னிரண்டு நாளுமெனத்
துணிந்து வரையறை செய்தனர்; இன்னமும் ஒரு வகையாகப் பரிநூலார் கூறும் இலக்கணத்தைக் கேட்பாயாக.
****
எவ்வண்ண பேதமிகுந் திருந்தாலும் வெள்ளைகலந் திருந்த
தானால்
அவ்வண்ணப் பரிநன்று கரும்புரவிக் கேடேனு மகன்மார்
பேனுஞ்
செவ்வண்ண மிருக்கினது சயமுளதப் படிவெண்மை சேர்ந்தா
லந்த
மைவண்ணப் பரியின்பேர் வாருணமாஞ் சயங்கொடுக்கு
மாற்றார்போரில்.
எந்த நிறத்தின் வகை மிக்கிருந்தாலும், வெள்ளை / வெண்ணிறங் கலந்திருக்குமாயின், அந்நிறத்தையுடைய குதிரை நல்லது; கரிய குதிரைக்கு வயிற்றிலேனும் அகன்ற மார்பிலேனும்,
செந்நிற மிருக்குமாயின், அக்குதிரை வெற்றியையுடையது, அப்படி வெண்மை சேர்ந்தால் – அங்ஙனமே வெண்ணிற மிருப்பின், அந்த
மை போலுங் கரிய நிறத்தினையுடைய குதிரையின் பெயர், வாருணம்[ அது பகைவருடன் புரியும் போரின்கண் தன் தலைவனுக்கு வெற்றியைக் கொடுக்கும்.
****
மகவளிக்கும் பிடர்வெளுப்பு மகிழ்வளிக்கு
முரவெளுப்பு மணித்தார்க் கண்டத்
தகவௌப்புப் பொருள்கொடுக்கு முகவெளுப்புச்
சயங்கொடுக்கு மதன்பின் பக்கத்
தகவெளுப்புச் சுகம்பயக்கு மிடவெளுப்புச்
சந்தானந் தழைக்குஞ் செல்வம்
மிகவளர்க்குந் தனம்பலதா னியநல்கும்
வலப்புறத்து வெள்ளை மாதோ.
பிடர் வெளுப்புள்ள குதிரை தன் தலைவனுக்கு மகப் பேற்றினைக் கொடுக்கும்; மார்பு வெளுப்புள்ள குதிரை மகிழ்ச்சியைக் கொடுக்கும்; மாணிக்கமாலையை யணிந்த கழுத்தின்கண் வெண்மையுள்ள குதிரை, பொருளைக் கொடுக்கும்; முகவெளுப்புள்ள குதிரை வெற்றியைக் கொடுக்கும்; அம்முகத்தின் பின்பக்கத்தின் கண் பொருந்த வெளுப்பமைந்த திரை,இன்பத்தைக் கொடுக்கும்; இடது பக்கத்தில் வெண்மையுள்ள குதிரை மகப் பேறு மிகுதலாகிய செல்வத்தை ப் பெருக்கும்;வலது பக்கத்தின்கண்
வெண்மையுள்ள குதிரை, திரவியத்தையும் பல விளைபொருளையும் அளிக்கும். வெளுப்பு,வெள்ளை என்பன பரிக்கு ஆயின.
****
நற்புறம்வான் முகமூன்றும் வெளுத்தபரி வென்றிதரு*
நாபி தொட்டு
முற்புறமெ லாம்பரிதி யெனச்சிவந்து மதியெனப்பின்
முழுதும் வெள்கும்
பொற்புடைய வயப்பரிக்குப் பகல்விசய மதியெனமுற்
புறம்பு வெள்கிப்
பிற்புறமெல் லாங்கதிர்போற் சிவந்தபரிக் கிராவிசயம்
பெருகு+மன்றே.
நல்ல முதுகும் வாலும் முகமுமாகிய இம்மூன்றிலும்
வெண்ணிறமுள்ள குதிரை (தன் தலைவனுக்கு) வெற்றியைத் தரும்; உந்தி முதலாக, முன் பக்கமனைத்தும் சூரியனைப்போல் செந்நிறம் பெற்று, பின்புறமனைத்துஞ் சந்திரனைப் போல வெளுத்திருக்கும், அழகுடைய தாவுங்குதிரைக்குப் பகற்போரில் வெற்றியும், முன்புறமுற்றும் சந்திரனைப்போன்று வெண்ணிறம் பெற்று, பின்புறமனைத்து சூரியனைப்போலச் சிவந்த குதிரைக்கு, இராப்போரில் வெற்றியும் பெருகும்.
உயர்குடியிற் பிறந்த கற்புடை மகள்போலக் கவிழ்ந்த முகத்தையும், கருங்குவளை மலர்போலும் கண்ணையும் கொண்டு, கருமுகில் போல் விளங்கிய சிறந்த நிறமும், கருநெய்தல் போல மிக்க மணமும் நிறைந்து, மணமிக்க மலரும் அகிற்குழம்பும் சந்தனக் குழம்பும் நெருப்புப்போன்ற மணிகள் அழுத்திய அணிகளுமாகிய இவற்றால் ஒப்பனைச் செய்யின், நீங்காத மகிழ்ச்சியை அடைந்து விளங்குவது, உத்தமக்குதிரை என்று, புரவிநூலின் வரம்பினைக் கண்டறிந்தவர் கூறுவர்.
தாவுகின்ற உத்தமக் குதிரைக்கு உயரம் நூறுவிரலளவாகும், தாவுகின்ற மத்திமக்குதிரைக்கு உயரம் அந்நூறு விரலில் பதினாறு விரல் நீக்கி மீதமாகக் கூறப்படும் எண்பத்து நான்கு விரலளவாகும், அதமக்குதிரைக்கு உயரம் அறுபத்தொரு விரலளவாகும் என்று கூறுவர்; அழிவில்லாத புகழை யுடையோய், வேந்தர்கள், இக்குதிரைகளைப் பூசித்து வணங்கிக் கயிறுமாறுவார் களென்று கூறியருள,
பொருநர் – ஈண்டு வேந்தர். பூசனஞ் செய்து – பூசித்து. மாறுவர் – மாறும் வழக்க முடையர். பொருகின்ற நரிப்பரியை என உண்மை புலப்பட வைக்கும் நயம் பாராட்டற்குரியது. (120)
****
கொத்தவிழ்தார் நறுஞ்சாந்தங் கொண்டுசெழும் புகைதீபங்
கொடுத்துப் பூசை
பத்திமையாற் செய்திறைஞ்சி யெதிர்நிற்ப வாலவாய்ப்
பரனை நோக்கிக்
கைத்தலந்தன் சிரமுகிழ்த்து வாழியெனப் பரிகொடுத்தான்
கயிறு மாறி
முத்தொழிலின் மூவராய் மூவர்க்குந் தெரியாத முக்கண்
மூர்த்தி.
கொத்தொடு மலர்ந்தமலர்களாற் றொடுத்தமாலையும்
தூபமும் தீபமுங் கொடுத்து, அன்புடன் வழிபட்டு, வணங்கி எதிரே
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
உங்கள் கணவரோ மகனோ இன்று பருப்பு ரசம் வையுங்கள் என்று சொல்லிவிட்டார்கள் ;பருப்பு ரசம் என்று சொன்னவுடன் உங்கள் மனதிற்கு வரும் பத்து அம்சங்களைச் சொல்லுங்கள் . கீழே உள்ள அட்டவணையுடன் ஒப்பிட்டு உங்களுக்கு நீங்களே மார்க்/ மதிப்பெண் போட்டுக் கொள்ளுங்கள் .
விடைகள்
1. துவரம் பருப்பு – பத்து மார்க்
2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
பிராமணர்கள் உள்ளிப்பூண்டு பயன்படுத்தமாட்டார்கள் ; சிலர் புளிக்குப் பதிலாக எலுமிச்சம் பழ ரசத்தையும் பயன்படுத்துவார்கள் ; கொத்தமல்லியின் மணம் நீடிக்க கறிவேப்பிலையத் தவிர்க்கவேண்டும் .துவரம் பருப்பு கிடைக்காவிட்டால் பாசிப்பருப்பையும் பயன்படுத்தலாம்.
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- English
Published – June 2025
Subject – Literature
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
+ 44 07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 146+2 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
Foreword
Scholars in India have been quoting Shakespeare in their speeches and writings for decades. They have compared the quotations from Shakespeare’s plays with sayings in Hindu scriptures. I collected all such comparisons and used them in my articles in my two blogs.
When I bought a Shakespeare Quotation book last year, I was able to do the comparison subject wise or topic wise. Tamil and Sanskrit poems and proverbs echo Shakesperean thoughts. It proves the saying that Great men think alike.
One does not need to copy another when it comes to universal truths. But certain beliefs like women are inferior or certain animals like dogs, donkeys and pigs are despicable reflect the age they lived in. It helps the researchers to do sociological studies. So far, I have compared only some topics. There are lot more comparisons which will come in the second part of the book. Readers are welcome to come with more comparisons and similarities.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முன்னொரு கட்டுரையில் பாடகம், சூடகம்,நாடகம், ஆடகம் பற்றி திருஞான சம்பந்தர் பாடியதைக் கண்டு ரசித்தோம் . மூன்று வயதிலிருந்து 16 வயதுக்குள் ஆயிரக் கணக்கான தெய்வீகப் பாடல்களை நமக்கு அளித்துவிட்டு இறைவனுடன் கலந்துவிட்டார்.
சேனன் என்று முடியும் ஐந்து பேர்களையும் , நந்தி என்று முடியும் ஐந்து பேர்களையும் பாடலில் அழகாக அடுக்குகிறார் .
சமணர்கள் எலிப்பாட்டு, கிளிப்பாட்டு இயற்றிய செய்திகளை நமக்குச் சொல்கிறார் !
சம்ஸ்க்ருத மொழியை சாகதம் என்றும் பிராகிருத மொழியை பாகதம் என்றும் தமிழ் மொழிப்படுத்துகிறார் ; தன்னை பால்மணம் மாறாத வாயுடைய பச்சிளம் பாலகன் என்கிறார்; சொக்கன் என்ற தமிழ்ப்பெயரை நமக்கு அளித்தவரும் சம்பந்தர்; மதுரையில் சொக்கர் என்ற பெயருடையவர்களைக் காணலாம். சுந்தர என்பதன் அருமையான மொழியாக்கம் இது.
****
சோழநாட்டு இளவரசி மங்கையற்கரசி; அவள் பாண்டிய மன்னன் கூன் பாண்டியனுக்கு வாக்குப்பட்டாள். அப்போது கூன் பாண்டியன் அரசியலில் ஈடுபடும் எண்ணாயிரம் சமணர்களிடையே சிக்கிக் கொண்டார் . உடனே மங்கையற்கரசியார் அமைச்சர் குலச்சிறையாருடன் சென்று சம்பந்தரை வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பாண்டிய நாட்டுக்கு எழுந்தருளவேண்டும் என்று பிரார்த்தித்தார். சம்பந்தரும் இசைவு தெரிவித்தார் ; அருகிலிருந்த அப்பர் பெருமான் நீரோ சிறுவன்; அரசியல் பேசும் சமணர்கள் பொல்லாதவர்கள் போகாதீரும் என்றார் ; சிவன் அடியார்களை நாளும் கோளுங்கூட தீங்கு செய்யாது என்று வேயுறு தோளிபங்கன் பதி கத்த்தைப்பாடி மதுரைக்குச் சென்றார் .
சமணர்கள் பாண்டிய மன்னனை எச்சரித்தார்கள்; எப்படி அந்தச் சின்னப்பையனைத் தடுப்பீர்கள்? என்று மன்னன் கேட்டபோது அவர் தங்கியிருக்கும் மடத்துக்குத் தீவைப்போம் என்றனர் மன்னனும் சம்மதித்தான் ; சமணர்கள் இரவோடிரவாக மடத்துக்குத் தீ வைத்தனர் ; அப்பர் சொன்னது மெய்யாயிற்று! ஞான சம்பந்தரோ சுப்பிரமணியரின் அவதாரம். இந்தத் தீ பையவே சென்று பாண்டியர்க்காகவே என்று சொன்னவுடன் பாண்டியனை வெப்ப நோய் தாக்கியது பின்னர் பாண்டியனின் சுர நோயைத் தீர்த்து குள்ளனாக இருந்த குப்ஜ பாண்டியனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கினார் ; அனல்வாதம், புனல்வாதம் ஆகியவற்றிலும் சமணர்கள் தோற்றனர் அவர்கள் சொன்ன வாக்கினை மீறாதபடி கழுவில் ஏறி இறந்தனர்.
*****
அதிசய பாடல்
அவர் மதுரைக்கு வந்த போது பாண்டிமாதேவி மங்கையற்கரசியாரையும் , பாண்டிய நாட்டு மந்திரி குலச்சிறையாரையும் பாராட்டிப் பாடினார் ; இதில்தான், சுவையான விஷயம் உள்ளது!
Men Are from Mars, Women Are from Venus என்றும்
Pink for Girls and Blue for Boys என்றும் ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
Gendered associations with pink and blue became widespread after World War II, with pink hues assigned to girls, and blue hues assigned to boys. Since the 1950s, these gendered associations have increasingly been applied in the marketing of products, from clothes to toys.
இன்றும் மேலை நாடுகளில் பள்ளிக்கூட யூனிபார்ம்களில்/ சீருடைகளில் இதைக் காணலாம் . இதற்கெல்லாம் சம்பந்தரின் பாடல்தான் காரணம் போலும் !
சம்பந்தர் சொன்னார் ஒற்றைப்படை எண்கள் பெண்கள், இரட்டைப்படை எண்கள் ஆண்கள் என்று
Odd numbers are Women, Even Numbers are Men.
அவர் பாடிய, பதிக்கத்தில் மங்கயற்கசியாரைப் பாடியது எல்லாம் ஒற்றைப்படை எண்கள் !அமைச்சர் குலச்சிறையாரைப் பாடியது எல்லாம் இரட்டைப்படை எண்கள் ! யாராவது ஒரு புலவரைக் கூப்பிட்டு இப்படிப் பாடு என்றாலும் முடியாது; அதற்கு அவர் அவகாசம் கேட்பார்; சம்பந்தரோ மோதல் நடக்கப்போகும் TENSE டென்ஸ் ஆன சூழ்நிலையில் சர்வசதாரணமாகப் பாடுகிறார் .இதை மங்கையற்கரசி வளவர்கோன் பாவை என்று துவங்கும் மூன்றாம்-திருமுறை
திரு ஆலவாய்ப்பதிகத்தில் காணலாம்.
பாடல் முழுவதையும் கீழே கொடுத்துள்ளேன் .
எனது கருத்து
பெண்ணுக்கு ஏன் சம்பந்தர் முதலிடம் கொடுத்தார் ? பெண்ணே உலகின் மூல சக்தி ; பராசக்தி. அவருடன் சிவன் சேரும் போதுதான் இயங்கும் சக்தி பிறக்கிறது ;சிவன் நடராஜனாக ஆட வேண்டுமானால் அவருக்கு சக்தி இருக்கவேண்டும் ; அதனால்தான் சிவகாமி உடன் உறையும் சிவகாமிநாதனைக் காண்கிறோம். அதனால்தான் அங்கையற்கண்ணியுடன் உறையும் சுந்தரேசனைக் காண்கிறோம்.
மூன்றாம்-திருமுறை
1.மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப்
பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
2.வெற்றவே யடியார் அடிமிசை வீழும்
விருப்பினன் வெள்ளைநீ றணியுங்
கொற்றவன் றனக்கு மந்திரி யாய
குலச்சிறை குலாவி நின்றேத்தும்
ஒற்றைவெள் விடையன் உம்பரார் தலைவன்
உலகினில் இயற்கையை யொழிந்திட்
டற்றவர்க் கற்ற சிவனுறை கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
3. செந்துவர் வாயாள் சேலன கண்ணாள்
சிவன்திரு நீற்றினை வளர்க்கும்
பந்தணை விரலாள் பாண்டிமா தேவி
பணிசெயப் பாரிடை நிலவுஞ்
சந்தமார் தரளம் பாம்புநீர் மத்தந்
தண்ணெருக் கம்மலர் வன்னி
அந்திவான் மதிசேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
4 கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்
அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியுங் குலச்சிறை குலாவுங்
கோபுரஞ் சூழ்மணிக் கோயில்
மணங்கமழ் கொன்றை வாளரா மதியம்
வன்னிவண் கூவிள மாலை
அணங்குவீற் றிருந்த சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
5. செய்யதா மரைமேல் அன்னமே யனைய
சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி
நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான்
விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
6 நலமில ராக நலமதுண் டாக
நாடவர் நாடறி கின்ற
குலமில ராகக் குலமதுண் டாகத்
தவம்பணி குலச்சிறை பரவுங்
கலைமலி கரத்தன் மூவிலை வேலன்
கரியுரி மூடிய கண்டன்
அலைமலி புனல்சேர் சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
7. முத்தின்தாழ் வடமுஞ் சந்தனக் குழம்பும்
நீறுந்தன் மார்பினின் முயங்கப்
பத்தியார் கின்ற பாண்டிமா தேவி
பாங்கொடு பணிசெய நின்ற
சுத்தமார் பளிங்கின் பெருமலை யுடனே
சுடர்மர கதமடுத் தாற்போல்
அத்தனார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
8 நாவணங் கியல்பாம் அஞ்செழுத் தோதி
நல்லராய் நல்லியல் பாகுங்
கோவணம் பூதி சாதனங் கண்டால்
தொழுதெழு குலச்சிறை போற்ற
ஏவணங் கியல்பாம் இராவணன் திண்டோ ள்
இருபதும் நெரிதர வூன்றி
ஆவணங் கொண்ட சடைமுடி யண்ணல்
ஆலவா யாவதும் இதுவே.
9 மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும்
மணிமுடிச் சோழன்றன் மகளாம்
பண்ணினேர் மொழியாள் பாண்டிமா தேவி
பாங்கினாற் பணிசெய்து பரவ
விண்ணுளார் இருவர் கீழொடு மேலும்
அளப்பரி தாம்வகை நின்ற
அண்ணலார் உமையோ டின்புறு கின்ற
ஆலவா யாவதும் இதுவே.
10. தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறுந்
தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநா டோ றும் இன்புறு கின்ற
குலச்சிறை கருதிநின் றேத்தக்
குண்டரா யுள்ளார் சாக்கியர் தங்கள்
குறியின்கண் நெறியிடை வாரா
அண்டநா யகன்றான் அமர்ந்து வீற்றிருந்த
ஆலவா யாவதும் இதுவே.
11. பன்னலம் புணரும் பாண்டிமா தேவி
குலச்சிறை யெனுமிவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவா யீசன்
திருவடி யாங்கவை போற்றிக்
கன்னலம் பெரிய காழியுள் ஞான
சம்பந்தன் செந்தமி ழிவைகொண்
டின்னலம் பாட வல்லவர் இமையோர்
ஏத்தவீற் றிருப்பவர் இனிதே.
******
மானின்நேர்விழி மாதராய்வழுதி என்ற மூன்றாம் திருமுறைப் பதிகத்தில் ஒரு தாயின் உள்ளத்தைக் காண முடிகிறது ; எனதருமைக் கணவரே, பாண்டிய மன்னரே! உங்கள் சுர நோயைத் தீர்ப்பதற்கு ஒரு பாலகன், சின்னப்பையன் வந்திருக்கிறான் ; அவனுடன் எட்டாயிரம் சமணர்களை மோதவிடுவது என்ன நியாயம்? அவனோ இளம் வயதுக் குழந்தை; சமணர்களோ திட காத்திரம் உள்ளவர்கள் ; இப்படி மன்னனிடம் பாண்டிமாதேவி மன்றாடியவுடன், தாயே கவலைப்படாதீர்கள் நான் அவர்களை சமாளிக்கிறேன் என்று சம்பந்தர் ஆறுதல் கூறுகிறார் இப்படித் தாயுள்ளம் படைத்த ஒரு பெண்மணி என்பதால்தான் அவருக்கு முந்தைய பதிகத்திலும் முதலிடம் கொடுத்தார்.
சமணர்களின் பத்து பெயர்களைச் சொல்லி சம்பந்தர் கிண்டல் செய்கிறார் ; இவை எதுகை மோனைக்காக சொல்லப்பட்ட பெயர்கள் இல்லை ; உண்மையான பெயர்கள் ; மருள் நீக்கியாராகப் பிறந்த அப்பர் என்னும் திருநாவுக்கரசர், சமண மதத்தில் சேர்ந்த பின்னர் ஏற்ற பெயர் தருமசேனர் ; அதே போல மதுரையில் திராவிட சங்கம் என்ற பெயரில் சமணர்களுக்கு ஒரு சங்கம் அமைத்தவர் பெயர் வஜ்ர நந்தி ; பவணந்தி என்பவர் நன்னூலை எழுதியதையும் நாம் அறிவோம். ஆகவே சேனன், நந்தி என்ற பெயர்களை சம்பந்தர் சொல்லுவது உண்மைப் பெயர்களே ; கல்வெட்டுகளிலும் இவைகளைக் காண்கிறோம்.
*****
இதோ தேவாரப் பாடல்கள் ; முக்கியப் பெயர்களை பெரிய எழுத்தில் காட்டியுள்ளேன்.
மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
இடங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 1
ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 2
அத்தகுபொருள் உண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள்வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 3
சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 4
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறியாதார் என்று சமணர்களை சமபந்தர் சாடுவதிலிருந்து அவர்கள் தமிழும் பேசவில்லை; சம்ஸ்கிருதமும் தெரியாது ; அவர்கள் பேசியது கொச்சையான பாகதம்/ பிராகிருதம் என்று தெரிகிறது
கூட்டினார்கிளி யின்விருத்தம்
உரைத்ததோரொலி யின்தொழிற்
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
எக்கர்தங்களைப் பல்லறங்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 5
கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனுஞ்
சினகருக்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 6
பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மதி
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 7
மேலெனக்கெதி ரில்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலுஞ்
சீலிகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 8
பூமகற்கும் அரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 9
தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே. 10
எக்கராம்அமண் கையருக்கெளி
யேனலேன்திரு ஆலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கிடர் இல்லையே.
–சுபம்—
TAGS– ஞான சம்பந்தர் , அதிசய சொல்லாக்கம், சந்து, இந்து, கந்து சேனன், கனக, குணக, திவண நந்தி, ஒற்றைப்படை எண்கள், இரட்டைப்படை எண்கள், ஆண்கள், பெண்கள், சமணர்கள், ஆலவாய்ப் பதிகம் , மூன்றாம் திருமுறை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இந்தியாவின் ஊழல் மிக்க, மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார்
ச. நாகராஜன்
இணையதளத்தில் அக்கு வேறு ஆணி வேறாக ஒவ்வொருவரைப் பற்றியும் ஆதாரத்துடன் அலசி ஆராய்கிறார்கள்.
இந்தியாவின் ஊழல் நிறைந்த மிக மோசமான பாதுகாப்பு மந்திரி யார்? என்பது பற்றிய ஆராய்ச்சியும் இவற்றில் ஒன்று.
அது யார் என்று தெரிந்து கொள்ள ஆவலா?
இதோ பதில்:
பாகிஸ்தான் 1965ல்இந்தியாவைத் தாக்கியது.
இதற்கு முன்னதாக சீனா 1962ம் ஆண்டு இந்தியாவைத் தாக்கியது ஆக்கிரமித்தது.
இந்தியா 72000 சதுரகிலோமீட்டர் பரப்பை இழந்தது. அப்போது பாதுகாப்பு மந்திரியாக இருந்தவர் வி.கே.கிருஷ்ணமேனன். அவர் இந்தியாவில் அதிகம் இருக்க விரும்பியதே இல்லை. பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்வதிலேயே அவர் விருப்பம் கொண்டிருந்தார். அவர் இந்தியாவை ஒருபோதும் நேசித்ததில்லை.
1960-61ல் அவர் பாராளுமன்றத்தில், “பாகிஸ்தான் இப்போது நமது நண்பன்” என்று ஒரு அறிக்கையை அளித்தார்.
1948ல் பாகிஸ்தானுடன் நாம் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொண்டிருந்தோம். பாகிஸ்தானும் நாங்கள் ஒரு போதும் இந்தியாவைத் தாக்க மாட்டோம் என்று கூறியிருந்தது.
“நமக்கு எதிரியே இல்லை. ஆகவே ராணுவம் எதற்காக நாம் ராணுவத்தை நீக்கி விடலாம்” என்றார் அவர்.
ஒரு அவசரகால நிலை ஏற்பட்டால் ராணுவம் இல்லாமல் என்ன செய்வது என்று ஒருவர் கேட்டார்.
அப்போது அவர் பதில் கூறினார் :- நம்மிடம் காவல்துறை இருக்கிறது. அதை வைத்து சமாளித்து விடலாம்.
ஒரு நாள் காபினெட் கூட்டத்தில் நமக்கு ராணுவம் தேவை இல்லை என்பதால் பாதுகாப்பிற்கான பட்ஜெட் தொகையைக் குறைத்து விடலாம் என்றார் அவர். ஆகவே பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டது. அவர் ஆயுதத் தயாரிப்பையும் கூட குறைக்க உத்தரவிட்டார்.
தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விட்டு டீ, காப்பி தயாரிக்கும் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார்.
அந்தச் சமயம் சீனா இந்தியா மீது படையெடுக்கத் திட்டமிட்டது. நமது ராணுவத் துருப்புகள் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்டதையும் நமது பட்ஜெட் தொகை குறைக்கப்பட்டதையும் சீனா நன்கு அறிந்திருந்தது.
ஆகவே நமது வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள இப்போது அருணாச்சல பிரதேசம் என்று அறியப்படும் நேஃபா பகுதியை அது தாக்கியது.
எல்லையில் யாரும் இல்லை என்பதால் சீனாவைத் தடுக்க யாரும் இல்லை!
இந்தியப் பெண்களிடம் மிக மிக மோசமான முறையில் சீன ராணுவம் நடந்து கொண்டது.
பலரைக் கற்பழித்தது. ஏராளமானோரைக் கொன்றது.
அங்குள்ளவர்களிடம் போரிட எந்த விதமான ஆயுதமும் இல்லை. ஆகவே அவர்களால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை. பொதுமக்களைக் காக்க ராணுவமே இல்லாததால் பொதுமக்கள் அனைவரும் இந்திய அரசை வெறுக்கத் தொடங்கினர். இந்த வெறுப்பு புரட்சியாக மாறியது. இன்றும் கூட அவர்கள், ‘1962ம் ஆண்டு
சீனா எங்களைக் கற்பழித்த போதும் கொன்று குவித்த போதும் உங்கள் இந்திய ராணுவம் எங்கே இருந்தது? என்று கேட்கின்றனர். இதன் விளைவாக போடோலேண்ட் என்று தங்களுக்கு தனிப் பகுதி வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தனர் அவர்கள். சீன ஆக்கிரமிப்பால் தான் அவர்கள் இந்திய அரசின் மீது நம்பிக்கையை இழந்தனர்.
72000 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததோடு புனிதமான கைலாஸ் மானசரோவரையும் இழந்து விட்டோம்.
இன்று கைலாஷ் பகுதிக்குச் செல்ல சீனாவிடமிருந்து விசா வாங்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.
ஆகவே மேற்கூறிய காரணங்களால் இந்தியாவின் மிக மோசமான பாதுகாப்பு மந்திரி வி.கே.கிருஷ்ணமேனன் தான் என்பது எனது அபிப்ராயம்.
இப்படி இதைக் கூறியவர் ஶ்ரீ ராஜீவ் தீக்ஷித் ஆவார்.
ஆதாரம், நன்றி : ட்ரூத் வார இதழ்
TRUTH Weekly from Kolkata -Volume 93 -Issue no 7 Dated 30-5-2025
தமிழ் ஒரு கடல் என்றால் சம்ஸ்க்ருதம் ஒரு சமுத்திரம். அந்த மொழியிலுள்ள நூல்கள் எல்லாவற்றையும் எவரும் பட்டியல் இட முடியாது . காரணம் என்னவெனில் அழிந்த நூல்கள் ஏராளம்; ஆனால் அவற்றிலுள்ள ஓரிரு விஷயங்கள் மட்டும் மேற்கோள் காட்டப்படுகிறது . சமயம், மருத்துவம், ஜோதிடம் வானியல், பாலியல், சிற்ப சாஸ்திரம், அறிவியல் , இலக்கியம், இலக்கணம், சங்கீதம் , நடனம், நாடகங்கள், கவிதைகள், கதைகள் , நியாயங்கள், சுபாஷிதங்கள் என்று ஒவ்வொரு துறையிலும் எண்ணற்ற நூல்கள் உள்ளன. இவை எல்லாவற்றையும் எவராலும் படித்திட முடியாது;
ராமாயணத்தைப் படிப்பது போல மகாபாரதத்தின் ஒரு லட்சம் ஸ்லோகங்களையும் சம்ஸ்க்ருதத்தில் முழுதும் படித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் .
என்ன, என்ன அந்த மொழியில் இருக்கிறேது என்று தெரிந்துகொண்டால் இயன்ற அளவு மொழிபெயர்ப்பிலாவது படிக்கலாம். ஒரே மொழியைத் தெரிந்து கொண்டு கிணற்றுத் தவளை போல ஒலி எழுப்புவது நகைப்புக்கு இடம் கொடுக்கும்.
இந்த நூலில், முக்கிய புத்தகங்களின் ஒரு (SAMPLE) மாதிரி மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது ஆர்வம் உடையோர் புத்தகங்களை வாங்கிப்படிக்கலாம்.
அன்புடன்
லண்டன் சுவாமிநாதன்
ஜூன் 2025
Swami_48 @ yahoo.com
பொருளடக்கம்
1.பிள்ளையாரை முதலில் வணங்குவது ஏன்?
2.காளிதாசனின் வியப்பூட்டும் உவமைப் பட்டியல்!
3.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-1
4.சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை! ஒரு சின்ன ‘சர்வே’தான்!-2
5.சம்ஸ்க்ருத மழை பொழிந்த அறுபது கவிஞர்கள் – Part 1 to Part 7
6.ரிக் வேதத்தை முதலில் மொழிபெயர்த்தவர் யார்?
7.விவேகானந்தர் உரைகளை நமக்குத் தந்த ஜே. ஜே. குட்வின்!
8 .தொல்காப்பியத்தில் துர்கா தேவி: –தெ.பொ.மீ. தகவல்
9.ஆதிசங்கரரை காப்பி அடித்த கபிலரும் தொல்காப்பியரும்!
10.ராம ரத்தினத்தின் விலை என்ன ?
11.ஜேம்ஸ் பாண்ட் (007) -ஐ தோற்கடித்த ஹிந்து!
12.ஷேக்ஸ்பியர் மீது தாகூர் எழுதிய கவிதை!
13.நள்ளிரவில் நான் எழுதிய கவிதை
14..தமிழில் பழ மறையைப் பாடுவோம்: –பாரதியார்
*************
அட்டைப்படத்தில் காளிதாசனின் நூல்களிலிலுள்ள ஸ்லோகங்களுடன் வெளியான தபால்தலைகளைக் காணலாம்.
*****
ABOUT THE BOOK AND THE AUTHOR
Title – சம்ஸ்க்ருத மொழி உலகிற்கு அளித்த நன்கொடை
Author – London Swaminathan (Santanam Swaminathan)
Language- Tamil
Published – June 2025
Subject – Literature and Culture
xxx
AUTHOR’S PROFILE
Santanam swaminathan (London swaminathan)
Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)
Higher Diploma in French and Sanskrit
DOB 6-11-1948
Work Experience- Now retired.
Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,
BBC Tamil Producer in London 1987-1991,
Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,
Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.
Living with his wife and two sons in London from 1987.
xxx
Blog Details
tamilandvedas.com
swamiindology.blogspot.com
xxx
Contact Details
swami_48@yahoo.com
swaminathan.santanam@gmail.com
Mobile Number in London
07951 370 697
Published Works
Over 9500 articles in English and Tamil and over 145 Tamil and English Books.
Visited 16 Countries
India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Malaysia, Singapore, Italy and Greece
*****
Ref. 148 Books written by London Swaminathan in Tamil and English.
ENGLISH BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
(1) Is Brahmastra a Nuclear Weapon?
(2). AMAZING TIME TRAVEL by HINDU SAINTS
(3).Famous Trees of India
(4).DID INDIANS BUILD EGYPTIAN PYRAMIDS?
(5).ALL ABOUT DRAVIDAS, TAMIL SANGAMS,
KUMARIK KANDAM AND TOLKAPPIAM
(6).STORY OF TAMIL DEVADASIS AND ORIGIN OF DANCE DRAMA IN VEDAS
(7). Interesting Anecdotes from the World of Music
(8).KALIDASA’S SIMILES IN SANGAM TAMIL LITERATURE: NEW CLUE TO FIX HIS AGE
(9).BIRDS AND GODS- OMENS, VAHANAS AND STRANGE STORIES FROM HINDU SCRIPTURES
(10).Animal Einsteins: Amazing Intelligence of Creatures in Nature
(11) THE WONDER THAT IS HINDU TEMPLE
(12). KALKI AVATAR SOON! KALI YUGA FINITO!
(13). Date of Mahabharata War & other Research Articles
(14).Miracles of Hindu, Parsi, Jain & Buddhist Saints
(15). HINDU STORIES ABOUT MONKEYS,
DONKEYS AND ELEPHANTS
16.VALLUVAR, EINSTEIN AND SHAKESPEARE
17. Mayan Civilization and Hindu Nagas
Asuras, Rishis and Gandharvas
18.Hindu Wonders in Muslim Countries
19.Hindu Influence in Mesopotamia and Iran
20. Hinduism in Sangam Tamil Literature
21.Interesting Titbits from Bhagavad Gita
22.Om in Rome; Manu Smriti in London Church
23.Tamil Hindus 2000 Years Ago!
24.Rewrite Indian History
25. Beautiful Hindu Women and
Wonderful Weddings
26.Woman is an Adjective, Man is a Noun2
27.Amazing and Unknown Names of Hindu Gods,
Himalaya, Water and Sea!
28. 1000 Hindu Quotations for Speakers and Students
29. History is a Mystery in India
30.Thousand More Hindu Quotations for Speakers and Students
31. Controversial and interesting Laws in Manu Smriti
(First Part)
32. Controversial and interesting Laws in Manu Smriti
(Second Part)
33. Linguistic and Language Wonders in India- Old Theories Binned
34. Interesting Anecdotes for Partygoers and Essay Writers
35.More Interesting Anecdotes for Partygoers
36.Third Book of Anecdotes for Students and Speakers
37. Brahmins in Tamil and Sanskrit Literature
38.Gandhiji’s Views on Controversial Matters
39.Guide to Hindu Homa (Havan) and Festivals
40.Guide to 108 Famous Temples in Maharashtra
41.Tamil Hindu Encyclopaedia
42.Strange Stories about Hindu Saints Temples and
Historical Atrocities
43. Nagarjuna’s Sex Tips from China and Hinduism in Burma & Thailand
44.Medical Wonders in Hindu Scriptures
45.Hidden Secrets in Vishnu Sahasranama
46.My Research Notes on Viveka Chudamani
47.Greatest Tamil Book Tirukkural & Oldest Language Sanskrit
48.Country of Kangaroos and Koalas! Amazing Australia!!
49. Dreams in Hindu Literature
50.History: A Bundle of Facts and Fabrications
51.Tamil and Sanskrit Proverbs around the World
52.Hindu Beliefs in Shakesperean Plays
****
TAMIL BOOKS WRITTEN BY LONDON SWAMINATHAN
லண்டன் சுவாமிநாதன் எழுதி வெளியிட்ட நூல்கள்:
1.உலகம் முழுதும் பாம்பு வழிபாடு!
2.தாய்லாந்து, வியட்நாம், கம்போடியாவில் தமிழ் முழக்கம்
3.தேனினும் இனிய கம்பராமாயணப் பாடல்கள்
4.பெண்கள் வாழ்க –
5.சுமேரியர்- இந்தியர் தொடர்பு
6.இந்து மத நூல்களில் வெளி உலக வாசிகளும், காலப்பயணமும்
7.தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ?
8.பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா?
9.தமிழ் மொழி அதிசய மொழியே? இதோ சான்றுகள்!
10.திருப்பதி பாலாஜி தமிழ்க் கடவுள் முருகன்! அருணகிரிநாதர் போடும் புதிர்!!
11.திருவாசகத் தேன் ! திருமந்திர ஜுஸ் !!
12. தொல்காப்பியர் முதல் பாரதி வரை
பெரியோர்களுடன் ஒரு நிமிடப் பேட்டி
13.எலும்பு வலுப்பட கால்சியம்; குழந்தை பிறக்க செலீனியம் ; பல் பளபளக்க ப்ளூரைட்
14.ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்
15.வெள்ளி, அலுமினியம், யுரேனியம் பற்றிய சுவையான கதைகள்
16.கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்!
கிரேக்க நாட்டில் இந்துமத சடங்குகள், கதைகள்!!
17.சிங்கப்பூரில் சிவபெருமான் !
சிந்து சமவெளியில் சிவலிங்கம் !!
18.திராவிடர்கள் யார்? குமரிக் கண்டமும் 3 தமிழ்ச் சங்கங்களும் உண்மையா?
19.தொல்காப்பிய அதிசயங்கள்
20.கம்பராமாயணத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள்
21.ரிக் வேதத்தில் தமிழ்ச் சொற்களும் அதிசயச் செய்திகளும்
22.எகிப்திய நாகரீகத்தில் இந்தியர் பங்களிப்பு
23..சுமேரியாவில் தமிழ் யாழ்! ஜப்பானில் சாம வேத இசை!!
24.மனைவி ஒரு மருந்து
25.தமிழ் ஒரு கடல்! முத்துக் குளிப்போம் வாருங்கள்!
26.சங்கத் தமிழ் நூல்களில் காளிதாசன் உவமைகள்
27.தமிழ்நாட்டை உலுக்கிய பேய்
28.பறவைகள் சகுனம் உண்மையா?
கடவுளுக்கு வாகனம் எதற்காக?
29.கணவர் மேல் 44 காதல் கவிதைகள்! இறந்த பின்னர்
பெட்டிக்குள் 2000 கவிதைகள் !!
30.கடவுளை மறுத்த இங்கர்சால்! இந்துமத ஆதரவு
யேட்ஸ் , ரொமைன் ரோலண்ட், வால்ட் விட்மன்!
31.சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
32.தமிழ், சம்ஸ்க்ருத கல்வெட்டுகள்
தரும் சுவையான செய்திகள்
33.மொழியியல் ஆய்வில் விஷமங்கள், விசித்திரங்கள், விநோதங்கள்
34.முப்பது கட்டுரைகளில் இந்துமத அதிசயங்கள்
35.ரிக்வேதத்தில் மேல் நாட்டினரை
திகைக்கவைக்கும் கவிதைகள் !
36.முக்கிய கோவில்கள், சமாதிகளை
தரிசிக்க உதவும் கையேடு
37. தீயோரை அழிக்க கல்கி வருகிறார்!
38.சுவையான யானை பூனை கதைகள்,
உண்மைச் சம்பவங்கள்
39.மகாவம்ச நூலில் தமிழர்கள் பற்றி வியப்பூட்டும் செய்திகள்
இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது : முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானம்!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1) திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்.
2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்.
3) குன்றம் குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும்.
4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்.
5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து, இந்து விரோதிகளுக்கும், தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது.
6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் : காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டம்!
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
முருக பக்தர்கள் மாநாட்டால் தமிழகத்தில் ஆன்மிக புரட்சி ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தவர், மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்த சேகர்பாபு, திருமா, வைகோவிற்கு நன்றி கூறினார்.
பல்வேறு இடங்களில் மாநாட்டிற்கு வந்தவர்களை காவல்துறை தடுத்தனர் என்றும் முருகனின் ஆசியால் இந்த மாநாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் கடல் அலையெனப் பக்தர்கள் திரண்டுள்ளனர் என்றும் அனைத்து கட்சியினரையும் சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தோம் என காடேஸ்வரா சுப்பிரமணியம் குறிப்பிட்டார்.
ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் கொடுக்க நேரம் கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என்று குறிப்பிட்டவர், முருக பக்தர்கள் மாநாடு தமிழ்நாட்டில் ஆன்மிக புரட்சியை ஏற்படுத்தும் என்று காடேஸ்வரா சுப்பிரமணியம் திட்டவட்டமாக கூறினார்.
நாங்கள் நடத்தும் மாநாட்டிற்கு கணக்குக் காட்ட தயார் என்றும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பணம் எந்த தொழிலதிபர்களிடமிருந்து பெற்றது? என்றும் அதில் எவ்வளவு ஊழல் நடந்தது என வெளியிட அமைச்சர் சேகர்பாபு தயாரா? என காடேஸ்வரா சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார்.
*****
இந்துக்கள் வாழ்வியலுக்கு பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் : அண்ணாமலை எச்சரிக்கை
தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முருக பக்தர்கள் மாநாட்டில் பேசியவர்,
வெறும் இரண்டு விழுக்காடு இருக்கும் ஒரு நாடு போர் நடத்துகிறது என்றும் இந்தியாவில் ஆபரேஷன் நடத்தினால் சிலருக்குப் பிடிக்கவில்லை என அண்ணாமலை குறிப்பிட்டார். நாம் ஒற்றுமையை இருந்தால் சிலருக்குப் பிரச்சனை என்றும் தொடர்ந்து நமது வாழ்வியலுக்குப் பிரச்சினை வருகிறது. என்றும் என்னுடைய வாழ்வியல் முறைக்கும் பிரச்சினை வந்தால் நான் திருப்பி அடிப்பேன் என உறுதிபட கூறினார்.
இந்து மக்களிடம் எப்போதும் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் அரசியல் நடத்துகிறார்கள் என்றும் இவற்றை அனைத்தையும் மாற்றத் தான் இந்த மாநாடு என அண்ணாமலை கூறினார்.
இந்த மாநாடு ஒரு எச்சரிக்கை மணி என்றும் இந்துக்கள் ஒற்றுமை இருக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார். ஆளும் ஆட்சியர்கள் முருகன் பக்தர்களை எந்த வீட்டில் வைத்துப் பார்க்க விரும்புகிறார்கள் என்றும் தொடர்ந்து இந்துக்கள் வாழ்வியலுக்குப் பிரச்சினை வந்தால் சூரசம்ஹாரம் நடக்கும் என அண்ணாமலை எச்சரிக்கை விடுத்தார்.
*****
முருக பக்தர்கள் மாநாடு : பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம்!
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் மாலை அணிவித்து ஆசீர்வாதம் வழங்கினர்.
மதுரையில் இந்து முன்னணி சார்பில் சிறப்பாக நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றார்.
பச்சை வேட்டி மற்றும் தோளில் பச்சைத் துண்டு அணிந்து, பாரம்பரிய தமிழ் அடையாளங்களோடு வருகை தந்த பவன் கல்யாணுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு மாலை அணிவித்து ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகள் ஆசீர்வாதம் வழங்கினர். பின்னர், மண்டியிட்டு கீழே அமர்ந்து ஆதீனங்களைப் பவன் கல்யாண் வணங்கினார்.
*****
மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
இந்து முன்னணி சார்பில் மதுரை அம்மா திடலில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.
முருக பக்தர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக மதுரை பாண்டிகோவில் அம்மா திடலில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் அறுபடை வீடுகளின் மாதிரிகளில் வழிபாடு நடத்தினர். மாநாட்டின் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் குவிந்த முருக பக்தர்கள் அரோகரா முழக்கத்தால் மாநாட்டுத் திடல் அதிர்ந்தது. பக்தர்களின் கூட்டத்தால் சித்திரைத் திருவிழாவை மிஞ்சிய மக்கள் வெள்ளமாக மாநாட்டுத் திடல் காட்சியளித்தது.
மாநாட்டில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, கே.டி.ராஜேந்திர பாலாஜி, பாஜக மூத்த தலைவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகளும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாநாட்டின் முதல் கலை நிகழ்ச்சியாகப் பம்பை நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநாட்டில் சிறுவன் சூரிய நாராயணன் தனது காந்தர்வ குரலால் முருகன் பாடலை பாடியதைப் பக்தர்கள் அனைவரும் மெய்மறந்து ரசித்தனர்.
தொடர்ந்து மாநாட்டு மேடையில், சிரவ ஆதின கர்த்தா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் உரையாற்றினார். அவருக்குத் திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாகத்தன்று பூஜை செய்யப்பட்ட வேல் வழங்கப்பட்டது.
பின்னர் சிவன், பார்வதி வேடமிட்டு கலைஞர்கள் நடனமாடியதைப் பக்தர்கள் அனைவரும் கண்டு ரசித்தனர். மேலும் மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளும் களைக கட்டின.
*****
இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள்: பவன் கல்யான்
ஒரு இந்து, இந்துவாக திகழ்ந்தால் மதவாதியாக கருதப்படுகிறார். இந்து மதத்தை மதிக்காவிட்டாலும் பரவாயில்லை அவமதிக்காதீர்கள். முருகர் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் திகழ்கிறார். நிறத்தில் பேதம் இல்லை, அகத்தின் வழியே பார்க்கிறோம் கடவுள், கலாசாரம், பண்பாட்டை கேலி செய்தனர். சிவபெருமான் நெற்றிக்கண்ணை திறந்தது மதுரையில்தான். இப்படை தோற்கின் எப்படை வெல்லும், வெற்றியின் படிக்கட்டு அன்பு நாச சக்திகளை கிள்ளி எறிய வேண்டும். இந்துக்களை சீண்டிப் பார்க்க வேண்டாம் பேச்சு சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர். பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பேசுகின்றனர் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறினார்
ஹிந்து மதத்தின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம், அதனைக் காக்க, தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது முன்னின்று போராடிய ஹிந்து முன்னணி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் இணையற்ற உயிர்த்தியாகங்களை நினைவு கூறும் வாய்ப்பு கிடைத்தது பெருமை.
தமிழ்நாட்டில் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள் உள்ளன. அவை நம் கோவில்களை மையமாகக் கொண்டதால் மட்டுமே காலத்தால் அழியாது நிற்கின்றன, அப்படிப்பட்ட நம் கோவில்களை, இன்று நடைபெறும் சுரண்டலில் இருந்து பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
இன்றைய முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் அருள் பெறும் பாக்கியம் கிடைத்தது பெருமகிழ்ச்சி. ஆன்மீக பூமியான தமிழகத்தில், சனாதன தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இன்று கூடிய லட்சக்கணக்கான பொதுமக்களுக்கும், மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
*****
முருகன் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றம்
மதுரை, முருகன் மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என முருகன் மலைகளை காக்க வேண்டும், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
*****
4 கி.மீ தூரம் நடந்து செல்லும் மக்கள்
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் அம்மா திடலுக்கு முன்னர் உள்ள சாலை முழுதும் மக்கள் வெள்ளத்தால் குவிந்துள்ளது. பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு மக்கள் நடந்து செல்கிறார்கள். மாநாட்டு திடலை சுற்றி அமைக்கப்பட்ட 20 க்கும் மேற்பட்ட வாகன நிறுத்தங்கள் நிரம்பின.
இந்த மாநாட்டில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளின் மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனைத் தரிசிப்பதற்காக முருக பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்துள்ளனர்.
*****
மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு இல்லை – எல்.முருகன்
மதுரை முருகர் மாநாட்டிற்கு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய பிறகும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது கட்சி சார்ந்த மாநாடு அல்ல என்றும், அனைத்து தரப்பினரும் கட்சி பேதமின்றி பங்கேற்கும் ஆன்மீக மாநாடு என்றும் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.
*****
மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்: இயக்குனர் அமீருக்கு நடிகை கஸ்துாரி பதிலடி
மதுரை: ”மாற்று மதத்தினர் தேவையற்ற சொற்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என இயக்குனர் அமீருக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கஸ்துாரி பதிலடி தந்தார். அவர் கூறியதாவது: கும்பாபிஷேகம், முருக பக்தர்கள் மாநாடு நடத்துவதில் அரசியல் இல்லை. தி.மு.க., நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. ஆனால் மக்களின் பேரெழுச்சியுடன் மதுரை மாநாடு நடக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இங்கு அரசியல் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வரவுள்ளது பெருமை. அதை தி.மு.க., ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதுதான் ‘அக்மார்க்’ மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் மத நல்லிணக்கத்தை பார்க்கப்போகிறீர்கள். முருக பக்தர்கள் என்று சொல்லி மதவாதம் செய்வதாக இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.மாற்று மதத்தினர் தேவையில்லாத சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அமீரின் மூதாதையர்கள் தமிழர்கள் தானே. அவர்களை அமீர் தமிழனாக நினைக்கவில்லையா எனத் தெரியவில்லை. மதுரையம் பதியில் மாற்று மதத்தினர் இதற்கு அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாகதான் வரலாறில் உள்ளது.
–subham—
Tags–மதுரை, முருகன் மகாநாடு, இந்து முன்னனி, ஆறு தீர்மானங்கள், கண்காட்சி, அறுபடை வீடுகள், 5 லட்சம் பேர் ,