ஐயர் – ஐயங்கார் மோதல்! நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல்!! (Post.14,663)

Written by London Swaminathan

Post No. 14,663

Date uploaded in London –  19 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

அய்யர் – ஐயங்கார் மோதல்; நால்வரும் பாடிய ஒரே திருவிளையாடல் !

திருவிளையாடல் புராணத்தில் உள்ள 64   திருவிளையாடல்களில் , சிவ பெருமானின் ஒரே ஒரு லீலையை மட்டுமே, நால்வரும் பாடியுள்ளனர். அதாவது அப்பர் ,சுந்தரர்,, சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தேவார, திருவாசகத்தில் பாடியுள்ளனர்.

SOURCE BOOK:

MADURAI TEMPLE COMPLEX, A V JEYACHANDRUN, MADURAI KAMARAJ UNIVERSITY, 1985

மதுரைப் பல்ககலைக்கழக வெளியீட்டில் ஏ வி ஜெயச்சந்திரன் கொடுத்த பட்டியல் சரியென்றால் , மாணிக்க வாசகர், தேவாரம் பாடிய மூவருக்கும் முன்னால் வாழ்ந்தது உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்கும்மேலும் வரகுணன், பாணபத்திரன் ஆகியோரும் சம்பந்தருக்கு முன்னால் வாழ்ந்தது தெளிவாகும் ;

ஏனெனில் திருமுகம் என்னும் சிபாரிசுக் கடிதத்தை பாணனுக்கு சிவ பெருமான் கொடுத்தது, நரியைப் பரியாக்கியது முதலிய சம்பவங்களை அப்பர் அல்லது ஞான சம்பந்தர் பாடியதாக ஜெயச்சந்திரன் பட்டியல் காட்டுகிறது .

இதில் என்ன அதிசயம் என்றால் நால்வரும் பாடிய சமபவங்கள் இருபது,  முப்பது திருவிளையாடல்களுக்குள் அடங்கி விடுகிறது; ஆனால் விருத்த குமாரன் பாலனாகிய நிகழ்ச்சியை மட்டும் நால்வரும் பாடியுள்ளனர். அப்படியானால் அது சுமார் 1500 அல்லது 1600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்திருக்கவேண்டும்.  ஏனெனில் அப்பர்- சம்பந்தர் காலம் கி பி 600 CE என்பது உறுதியாகிவிட்டது.

ஒரு நிகழ்ச்சி பாடுவதற்குரிய அதிசயமாக மாறுவதற்கு 200 அல்லது 300 ஆண்டுகள் தேவை. மேலும் தருமி என்ற ஏழைப் பிராமணனுக்கு சிவ பெருமான் எழுதிக்கொடுத்த கவிதையை நக்கீரன் என்ற பார்ப்பனப் புலவன் ஆட்சேபிக்கவே சிவ பெருமானே நேரில் வந்ததையும் அப்பர் பாடியள்ளார் ;ஆக இவை எல்லாம் சங்க காலத்தில் நடந்ததையும் மதுரையில் சங்கம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லில் ஒரு அமைப்பு இருந்ததும் உறுதியாகிறது.

தொல்காப்பியர்  என்னும் எழுத்தில் எந்தச் சொல்லும் துவங்கக்கூடாதென்று தடை போட்டதைத் தமிழர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டதையும் அறியமுடிகிறது .

****

ஐயர் – யங்கார் மோதல்!

கதைச் சுருக்கம் பின்வருமாறு

விருத்த குமாரன் பாலன் ஆகிய திருவிளையாடல்

விக்ரம பாண்டியர் ஆட்சியில் விரூபாக்ஷர் – சுபவிரதை தம்பதியினர் மதுரையில் வாழ்ந்தார்கள். அவர்கள் அந்தணர் குலத்தவர். இத்தம்பதிகளுக்கு இறைவன் அருளால் கெளரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சைவ சமயத்தில் பற்றுடன் இருந்த குழந்தை திருமண வயதிற்கு வந்தாள்.

அடியார்களுக்கு அன்னமிடுவதை வழக்கமாக கொண்டிருந்த குடும்பத்தினர் என்பதால், ஒரு நாள் வைணவ இளைஞன் ஒருவன் விரூபாக்ஷர் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தினான். அவன் வைணவன் என்றாலும் விரூபாக்ஷர் அவனிடம் அன்பு கொண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தார்.வைணவ இளைஞனின் குடும்பத்தினர் சைவ பெண்ணான கெளரியை ஏற்க வில்லை. கெளரி  இள வயதிலேயே முக்தியை வேண்டி சிவபெருமானை வணங்கினார்.

கெளரியின் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து வெளியே சென்ற நேரத்தில் அப்பூட்டுகளை உடைத்து அடியாராக வந்தார் சிவபெருமான். அவருக்கு மனதார உணவுகளைப் படைத்து அளித்தாள் கெளரி . அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தானே குழந்தையாக மாறினார். கெளரி யின் புகுந்த வீட்டினர் அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்து கிடைப்பதையும், கெளரி  குழந்தையோடு இருப்பதையும் கண்டு கோபம் கொண்டனர்.

குழந்தை சிவபெருமானாக காட்சியளித்து கெளரி க்கு முக்தி அளித்தார்.

****

இதை தமிழ் அறிஞர் கி.வா. ஜகந்நாதனின்  அற்புதமான விளக்கத்துடன்  காண்போம்.

கெளரி என்னும் பெண் ஒரு வைணவனை மணந்து கொள்கிறாள். அவள் சைவக் குடும்பத்தில் பிறந்தவள். சிவபெருமானை பூசை செய்கிறாள். அவள் சிவனை பூசை செய்கிறாள் என்பதனால் புக்ககத்தார் பல இடையூறு செய்கிறார்கள் . அவள் இறைவனுடைய திவ்ய தரிசனத்தைப் பெறுகிறாள். இந்தக் கதை சைவத்துக்கும் வைணவத்துக்குள் உள்ள முரண்பாட்டைக் காட்டுவதாக முதலில் தோன்றும். ஆனால் ஆழ்ந்து சிந்தித்தால் பழங்காலத்தில் இருந்த ஒற்றுமை நன்கு விளங்கும் . இப்படி நான் சொல்வது நேர் விரோதமாகத் தோன்றலாம் . ஆனால் சற்று விளக்கினால் இந்த உண்மை புலனாகும். திருமணம் செய்வது என்பது அக்காலத்தில், இந்தக் காலத்தைப் போல திடீரென்று  நினைத்துச் செய்வது அன்று.  நன்றாகக் குலம் கோத்திரம் விசாரித்து, பழகின இடத்தில் பெண்ணைக் கொள்ளவோ , பெண்ணுக்குப் பிள்ளையைக் கொடுக்கவோ செய்வார்கள். கெளரியையும் அப்படித்தான்  அந்த வைணவ குடும்பத்தில் கொடுத்தார்கள். மாப்பிள்ளை வைணவன் என்று தெரிந்தும்  சைவ குடும்பத்தினர் தன் பெண்ணைத் திருமணம் செய்து கொடுத்திருக்கினார்கள் . இதனால் அக்கால மக்கள் சைவ வைணவ பேதமின்றி  இணைந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதும்   சமய பேதம் திருமணத்துக்குத் தொடர்புக்குத்  தடையாக  இருக்கவில்லை என்பதும் தெரிகின்றது அல்லவா ?

வைணவர்கள் சிவ பூசையைச் செய்துவந்த கெளரியத் துன்புறுத்திநார்கள்  என்பது சமயம் காரணமாக அமைந்தது அன்று.  அது அவர்களாவது கொடிய இயல்பு காரணமாக அமைந்தது  அதற்கு ஒரு வியாஜ்யம் சிவ பூசை. அவர்கள் திடீரென்று வைணவர்கள் ஆகவில்லை  முன்பே வைணவர்களாக இருந்தவர்களே . அது தெரிந்தே திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும் . அந்தக் காலத்தில் வேறுபாடு இல்லாமல்  சைவர்களும் வைணவர்களும் திருமணம் புரிந்து கொண்டார்கள் என்பதை இந்த வரலாறு காட்டுகிறது. இவற்றைத் தெரிந்து கொள்ள தல புராணங்கள் உதவி செய்கின்றன.

****

என் கருத்து

முதலில் ஏறத்தாழ சங்க காலத்தில் இருந்த பெயர்களைக் கவனியுங்கள் ; எல்லாம் சம்ஸ்க்ருதம் ! பிராமணர் குடும்பத்தில் இப்படி என்று எவரும் சொல்ல முடியாது  சிலப்பதிகார கதா நாயகன் பெயர் கோபாலன்  ( ப= வ மாற்றம் உலகெங்கிலும் உண்டு ; சங்க காலச் சொற்களிலும் இது உண்டு ; சபை= அவை ; பாண்டில்= வண்டி). கண்ணகி கோபாலன் அப்பா அம்மா பெயர் நமக்குத் தெரியாது மஹா நாயகன், மஹா சார்த்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்களை மட்டுமே நமக்கு இளங்கோ விட்டுச் சென்றுள்ளார் ; பிள்ளைமார் ஜாதியில், செட்டியார் ஜாதியில் திலகவதி, புனித வதி, பரமதத்தன் என்ற ஸம்ஸ்க்ருதப் பெயர்கள் இருந்ததையும் தேவாரம் நமக்கு காட்டுகிறது.

இன்னும் ஒரு அதிசயம்

உலகில் விருந்தோம்பல் என்பதை ஒரு பண்பாகக் கருதியது இந்தியாவில் மட்டுமே; இது அதிசயத்திலும் அதிசயம் ; தமிழ், சம்ஸ்க்ருத நூல்கள் இதற்கு ஒரு அத்தியாயம் ஒதுக்கி பல ஸ்லோககங்ளை அல்லது வெண்பாக்களை அல்லது குறள்களைக் கொடுத்துள்ளது சீதையும் கண்ணகியும் இப்படி விருந்து படைக்கும் வாய்ப்பு இல்லாமற் போனதே என்று வருத்தப்படும் பாடலகளை கம்பனும் இளங்கோவும் பாடியுள்ளார்கள்; மேலும் பஞ்ச யக்ஞம் – தினமும் செய்யும் ஐவேள்வி –என்பது இந்து மத சடங்கு! உலகில் வேறு எந்த மதத்திலும் எந்த கலாசாரத்திலும் இது இல்லை; இந்துக்கள் மட்டுமே செய்த சடங்கு. ஏனைய மதத் தலைவர்கள் கதையில் கருணை என்ற தலைப்பில் சில விஷயங்கள் இருந்த போதிலும் அவர்கள் அதைத் தினசரிக் கடமையாகச் செய்ததாக எழுதவில்லை .

இன்னும் ஒரு அதிசயம்

யார், யாருக்கு விருந்து படைத்தார்கள் என்பதைக் கதை காட்டுகிறது  வந்தவன் வைணவன் என்பது அவன் போட்டிருந்த பட்டை நாமத்தில் தெரிந்திருக்கும். அப்படியும் சைவ பிராமணன் வீடு அவருக்குச் சோறு படைத்தது . வேண்டாம் என்று நினைத்திருந்தால் இன்றைய உணவு முடிந்துவிட்டது என்று சொல்லி கழித்துக்கட்டி இருக்கலாம் .

மேலும் இதற்கு மனு நீதி நூலில் ஒரு சான்றும் உள்ளது ; மூன்று ஜாதிக்காரர்கள் குருகுலத்தில் படிக்க வந்தபோது தினமும் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் ; வாத்தியார் வீட்டுக்கும் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் எந்த எந்த ஜாதி பவதி பிக்ஷாம் தேஹி என்பதை எப்படிச் சொல்லவேண்டும் என்ற பெர்முடேஷன் காம்பினேஷனையும் permutation combination  மனு ஸ்ம்ருதி கொடுத்துள்ளது . பவதி பிக்ஷாம் தேஹி = தாயே பிச்சை போடுங்கள்! பிக்ஷாம் தேஹி பவதி; பிக்ஷாம் பவதி தேஹி

****

இன்னும் ஒரு செய்தி 

விக்ரம பாண்டியன் என்பவன் அப்பருக்கும் முன்னால் வாழ்ந்த பாண்டியன் . அபிஷேக பாண்டியனின் மகன். அபிஷேக பாண்டியனை நான் நெடுஞ்செழியன் என்று கண்டுபிடித்தேன்; விக்ர ம   பாண்டியனின் மகன் ராஜ சேகரன் ஆண்டபோது கரிகாலன் குறிப்பு வருகிறது ஆக இவர்களனைவரும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தவர்கள் . ஏனெனில் மாங்குளம் கல்வெட்டு குறிப்பிடும் மதுரை நெடுஞ்செழியன் 2200 ஆண்டுகளுக்கு முன்னிருந்தவன்; கரிகாலனும் ஏறத்தாழ அதே காலத்தில் இருந்தவன் . ஆகவே விருத்த குமாரன் கதையும் அதே காலத்தைச் சேர்ந்ததே ; இதை நால்வரும் பாடியதில் வியப்பில்லை.

*****

வரகுணன் மன்னர் பெயர் அல்ல அது இந்திரன் போல பட்டப் பெயர்

வரகுணன் கல்வெட்டுகளை ஆராய்ந்து கட்டுரை எழுதிய  அனைவரும் அவனது தமிழ்ப் பெயர்களையும் தளவாய்புரம் செப்பேட்டுக் கட்டுரைகளில் எழுதியுள்ளனர் . இதிலிருந்து நல்ல குணமுள்ள எல்லா மன்னர்களையும் வரகுணன் என்று குறிப்பிட்டது தெரிகிறது . மேலும் எல்லா வரகுணன்களும் சிவ பக்தர் இல்லை என்பதை நம்மாழ்வார் பாசுரம் காட்டுகிறது. அவர் வரகுணமங்கை என்று பெயர் சொல்லிப் பாடிய பாசுரத்தில் விஷ்ணுவே வருகிறார்; அந்த ஊரிலும் விஷ்ணு கோவில் மட்டுமே உள்ளது ஆகவே மாணிக்க வாசகரின் திருக்கோவையாரில் வரும் வரகுணன் நமக்குத் தெரியாத , அதாவது வரலாற்றில் அறியாத வரகுணன் ஆவான்; இதை அப்பர் சம்பந்தர் பாடிய தேவாரத்தாலும் அறிகிறோம் . சுந்தரர் குறிப்பிடும் மூர்த்தி நாயனார் போல இவரூம் வரலாறு அறியாத பாண்டிய மன்னனே!

(மகாபாரதத்திலும் பாகவதத்தில் இது போல ஜாதி விட்டு ஜாதி மாறி கல்யாணம் நடந்த செய்திகளும் உள்ளன )

–subham—

Tags- விருத்த குமாரன் பாலன்,  வரகுணன், விக்ரம பாண்டியன், கி.வா.ஜகந்நாதன் ,  அய்யர் – ஐயங்கார் மோதல், நால்வரும் பாடிய ,திருவிளையாடல்,

தகப்பனை விஞ்சிய பிள்ளை! (Post No.14,662)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,662

Date uploaded in London – –19 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதம்

தகப்பனை விஞ்சிய பிள்ளை!

ச. நாகராஜன்

சம்ஸ்க்ருத மொழியில் லட்சக்கணக்கில் உள்ள சுபாஷிதங்களில் சில இதோ:

தகப்பனை விஞ்சிய பிள்ளையின் செயல்கள்!

கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பச்வோம்மோதிம் |

அப்ரதிரிச்யதே ஸுஜன்மா கஸ்சித் ஜனகம்  நிஜேன சரிதேன ||

ஒரு குடம் மிகவும் குறைந்த அளவு தண்ணீரையே தன்னிடத்தில் கொள்கிறது. ஆனால் குடத்தில் பிறந்த முனிவரோ என்றால் (அகத்தியரோவெனில்) ஒரு கடலையே குடித்து விட்டார்.

ஒரு நல்ல புத்திரனானவன் சில சமயம் தனது தகப்பனாரையே தனது செயல்களால் விஞ்சி விடுகிறான்.

வெள்ள நீருக்கும் யுவதிக்குமான சிலேடை!

குரு கம்பீராஸ்யதாம் கல்லோலௌர்ஜனய லோகவிப்ராந்திம் |

தீத பயோதர லக்ஷ்மீ: கஸ்ய ந சரணைர்விலங்கஸ்யாமி |\

இது வெள்ள நீருக்கும் ஒரு யுவதிக்குமான சிலேடை பாடலாக அமைகிறது.

வெள்ள நீர் : நீ நீரில் மிகுந்த ஆழத்தைக் கொண்டிருக்கலாம்.  உனது அலைகளால் மக்களை நடுங்கச் செய்யலாம்.  ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் – எப்போது மேகக்கூட்டத்திலிருந்து நீர்ச் செல்வமானது வற்றுகிறதோ அப்போது நீ வறண்டு போகிறாய். அப்போது யாருடைய காலடிகளால் நி துகைக்கப்படாமல் இருக்கப் போகிறாயோ?

கர்வம் பிடித்த அழகி :  நீ உனது அழகு அலைகளால் மக்களை ஏமாற்ற பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒன்றைக் குறித்துக் கொள் : உனது நிமிர்ந்து நிற்கும் மார்பகங்களின் அழகு தேயும் போது யாருடைய காலடிகள் தான் உன் மீது தூக்கப்பட்டு நீ இகழப்படாமல் இருக்கப் போகிறாய்?

வார்த்தைகள் அதே தான். ஆனால் அது வெள்ள நீருக்கும் யுவதிக்கும் பொருத்தமாக இந்த சிலேடைப் பாடலில் அமைந்துள்ளது!

ஒழுக்கம் கெட்ட பெண் அழிவையே நாடுவாள்!

குலபதனம் ஜனகர்ஹா பந்தனமபி ஜீவிதவ்யசந்தேஹம் |

அங்கீகரோதி குலடா சததம் பரபுருஷசம்சக்தா: ||

தன் கணவனை விட மற்ற ஆண்களிடம் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு பெண்ணானவள் நிரந்தரமாகத் தன் குடும்பத்தின் அழிவையும் மற்றவர்களால் நிந்திக்கப்படுவதையும், சிறை வைக்கப்படுதையும்  ஏன், அவள் உயிரோடு இருப்பதே சந்தேகமாவதையும் வரவேற்கிறாள்.

நீசன் அடுத்தவன் குறையையே சொல்வான்!

குலசீலவ்ருத்த தோஷான் வித்யாதோஷாம்ஸ்ச கர்மதோஷாம்ஸ்ச |

கதயதி பரஸ்ய நீசோ  ந து ஸ்மரத்யாத்மனோ தோஷான் |\

ஒரு நீசனானவன் மற்றவர்களின் குடும்பம், அவர்களின் ஒழுக்கம், நடத்தை, அறிவு, செயல்கள் ஆகியவற்றில் உள்ள குறைகளைப் பற்றி

மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறான்; ஆனால் அவன் தனது குற்றங்குறைகளை மறந்து விடுகிறான்.

***

ANGRY BIRDS FROM ARIZONA

 ஏய் என்ன சொன்ன ? மூக்கைக் கிழிச்சிருவேன் கிழிச்சு ; ஒழுங்காய் பேசு  ]

டேய் போடா ; ஒன்னைக் கொத்திக் கொத்தி சாப்பிடுவேன்டா.  

பறவைகளுக்கும் கோபம் வரும் 

அமெரிக்காவிலுள்ள அரிசோனா மாநிலத்தில் ஒருவர் எடுத்த புகைப்படத்தில் பறவைகளின் கோபம் வெளிப்பட்டதைக் காணலாம் 

இவை வழுக்கைத்தலை கழுகு வகைப் பறவைகள் .

POSTED BY LONDON SWAMINATHAN ON 18TH JUNE 2025.

–SUBHAM–

TAGS– ANGRY RAGLES, ARIZONA, RUDE BIRDS

GIANT BIRD COSTUME TO SAVE CURLEWS பறவையா பைத்தியமா ?

 பற பற பற … பறவையா பைத்தியமா ?

இல்லை இல்லை ! பறவைப் பைத்தியம் 

POSTED BY LONDON SWAMINATHAN ON 18TH JUNE 2025.

பற பற பற … பறவையா பைத்தியமா ?

இல்லை இல்லை ! பறவைப் பைத்தியம் 

மாட் ட்ரெவெள்யான் என்பவர் கார்லயு  பறவைகள் அழிந்து வருவது பற்றி விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக பத்து அடி உயர  பறவை முகமடிசெய்து  அதையணிந்து கொண்டு 53 மைல் நடந்து சென்று பறவைகள் மீதான தனது அன்பினை வெளிக்காட்டினார். 

அன்பிற்கும் உண்டோ அடை க்கும் தாழ்? 

அது பறவை முகமூடி மூலம் வெளிப்படும் !

—SUBHAM—

TAGS– BIRD LOVER, 53 MILE WALK, MATT

COMEDIAN PETE DAVIDSON SPENT TWO LAKH DOLLARS TO REMOVE TATTOOS

சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்! 

பச்சை குத்த பல கோடி டாலர்; அவைகளை அழிக்க அதைவிட பல கோடி டாலர் செலவு. அமெரிக்க காமெடியனின் அவல நிலை ?

POSTED ON 18TH JUNE 2025.

COMEDIAN PETE DAVIDSON SPENT TWO LAK DOLLARS TO REMOVE TATTOOS

–SUBHAM–

TAGS COSTLY TATTOOS, REMOVAL,  COMEDIAN, PETE DAVIDSON.

 RARE PICTURES OF CLIFF JUMPING FROM MAGAZINE

மலை முகட்டிலிருந்து குதிப்பதும் சாதனையே ! ஆண்டு 2024

POSTED ON 18-6-2025

மலை முகட்டிலிருந்து குதிப்பதும் சாதனையே ! ஆண்டு 2024

–SUBHAM–

TAGS- CLIFF DIVING, LEAP. JUMPING FROM TOP, THE RED MAGAZINE

More Rare Pictures from 1928 Book(Post No.14,661)

Title- Aryan Rule in India

Author- E B Havell

Year- 1928

Place- London

TRIMURTI, ELEPHANTA CAVE, HINDU TEMPLES, NATARAJA, APPAR, TEMPLES, MONUMENTS , MARTAND, SANCHI, SARNATH, BIG TEMPLE, MARTAND, MAHABALIPURAM

–Subham—

Tags- rare pictures, E B Havell,MAHABALIPURAM, TRIMURTHY

If You are A Patriotic Hindu You must Know these 13 Bais! (Post No.14,660)

Written by London Swaminathan

Post No. 14,660

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Questions

1.Who is the BAI who was Gandhiji’s Wife?

2.Who is the BAI who was called Jhansi ki Rani?

3.Who is the BAI who was Princess of Mewar and a great poet/devotee of Lord Krishna?

4.Who is the BAI who renovated temples that were destroyed by Muslims in Madhya Pradesh?

5.Who is the BAI who fought against the British from Ramgarh in Madhya Pradesh?

6.Who is the BAI who helped Jhansi ki Rani in the First Independence War against the British Rule?

7.Who is the BAI who was Veera Shivaji’s mother and inspired him to save Hindus?

(Please note that all these BAIs are honoured by the Govt. of India in Commemorative Postage Stamps.)

More BAIs from Stories of Great Devotees of Panduranga are:

8.Who is the BAI who was raised by the Saint Namdev? She was   a low-caste maidservant and poet.from Maharashtra with 340 Marathi abhangas (poems).to her credit.

9. Who is the BAI who got her Puja Box intact mysteriously when her husband threw it into the river?

10. Who is the BAI who was  younger sister of the first Varkari saint, Dnyaneshwar?

11. Who is the BAI who was   a low-caste maidservant and poet.from Maharashtra with 340 Marathi abhangas (poems).to her credit?

12. Who is the BAI who hailed from Rampur of Kutch and did Yajna , but money in her purse never exhausted?

13. Who is the BAI who was born in kasi and changed her atheist husband as a devotee when her dead child was revived by the Bagavathars/Bhajan Singers?

****

ANSWERS

1.Kasturibai; 2.Rani Lakshmibai; 3.Princess Mirabai 4.Ahilyabai; 5.Rani Avantibai; 6.Jhalkaribai; 7Jjiabai; 8.Janabai; 9.Pilabai ; 10.Muktabai ;

11.Janabai ; 12.Dhanbai ; 13.Ramabai

—subham—

Tags- women devotees, Mirabai, Lakshmibai, Janabai, Avantibai, Dhanbai, Ramabai, Sakkubai, Jijabai,

முதல் எழுத்து எது ? (Post No.14,659)

Written by London Swaminathan

Post No. 14,659

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வெற்றிவேற்கை : ஓம் என்றால் பிள்ளையார்

வெற்றி வேற்கை (அதிவீரராம பாண்டியர்)

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்

சரண அற்புத மலர் தலைக்கு அணிவோமே.

வெற்றி வேற்கை வீரராமன்,

கொற்கை ஆளி, குலசேகரன், புகல்

நல்—தமிழ் தெரிந்த நறுந்தொகைதன்னால்

குற்றம் களைவோர் குறைவிலாதவரே.

வாழிய, நலனே! வாழிய, நலனே!

****

திருவிளையாடற்புராணத்தில் ஓம்காரம்

முதல் எழுத்து எது ?

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை

அங்க மாறுமே கால்களாய்

     முதலெழுத் தம்பொற்பீ டிகையாகித்

துங்க நான்மறை நூல்களே

     நித்திலந் தொடுத்தசை தாம்பாகி

எங்க ணாயக னெம்பெரு

     மாட்டியோ டிருப்பதற் குருக்கொண்டு

தங்கி னாலென நவமணி

     குயின்றபொற் றவிசது சமைத்திட்டார்.

எங்கள் இறைவனாகிய சோமசுந்தரக் கடவுள், எம் பெருமாட்டியோடு இருப்பதற்கு – எம் இறைவியாகிய தடாதகைப் பிராட்டியோடு வீற்றிருப்பதற்கு, ஆறு அங்கங்களுமே கால்களாகவும்,

பிரணவம் அழகிய பொற்பீடமாகவும், உயர்ந்த நான்கு வேதங்களாகிய நூல்களே,  முத்தினால் தொடுத்து அசைகின்ற தாம்புகளாகவும்,

வடிவங்கொண்டு, தங்கினாற்  போல,  நவரத்தினங்கள் இழைத்த பொற்றவிசு ஒன்றைச் செய்து அமைத்தார்கள்

     முதலெழுத்து – எல்லா வேதங்களுக்கும் மந்திரங்களுக்கும்

முதலாகிய பிரணவ எழுத்து.

****

ஓம் என்ற பிரணவம், அ+ உ +ம  என்ற எழுத்துக்களால் ஆனதால் அ–என்ற எழுத்தையும் முதல் எழுத்தாகச் சொல்லலாம்; அதை கீதையில் பகவான் கிருஷ்ணன் சொன்னதை அப்படியே திரு வள்ளுவர் முதல் குறளில் சொன்னார்.

ஓம் பற்றிய பொன்மொழிகள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › tag 

30 Dec 2016 — அது ஓம்காரத்தில் துவங்கி ஓம்காரத்தில் முடியும். ஓம் அக்னிமீளே புரோஹிதம் என்று துவங்கி இறுதியில் ஹரி: ஓம் என்று முடிப்பர். ஜனவரி 20

 

31 Beautiful Quotes on Omkara (Aum)—Post No. 3499

 

Compiled by London swaminathan

 

Date: 30 December 2016; Post No.3499

 

 

—Subham—

Tags- பிரணவ எழுத்து. முதலெழுத்து, திருவிளையாடற்புராணம், ஓம்காரம்

கம்பனுக்கும் பரஞ்சோதிக்கும் திராவிடநாடு தெரியாது ! (Post No.14,658)

Written by London Swaminathan

Post No. 14,658

Date uploaded in London –  18 June 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 APPAR/ TIRU NAVUKKARASAR TRAVEL MAP 

DRAVIDA DESA OUTSIDE TAMIL NADU.

GODDESS MEENAKSHI’S MOTHER KANCHANAMALA WAS FROM SURASENA COUNTRY.

திராவிடம் என்ற சொல்லி இனத்வேஷ சொல்லாக வைத்து கால்டு வெல் முதல் திராவிடக் கட்சிகள் வரை பல செப்படி வித்தைகளை செய்து வருவதை நாம் அறிவோம் ; அதன் உண்மைப் பொருள் தெற்கத்திய SOUTHERN  என்பதாகும். காரவேலன் , வஜ்ர நந்தி,  குமாரில பட்டர், ஆதி சங்கரர் ஆகியோர் த்ரமிர சங்கடன் திராவிட சங்கம் , திராவிட பாஷா, திராவிட சிசு என்றெல்லாம் சொன்னார்கள்;பின்னர் திராவிட ஆச்சாரியா, திராவிட வேதம் என்றெல்லாம் அபிதான சிந்தாமணி என்னும் சிங்காரவேலு முதலியாரின் என்சைக்ளோபீடியாவிலும் காண்கிறோம்.

ஐம்பத்தாறு நாட்டுத் தேசப்பட MAPS புத்தகத்தைப் பார்த்தால் சேர சோழ பாண்டிய நாடுகளுக்கு வெளியேதான் திராவிடநாடு உள்ளது. பரஞ்சோதி, கம்பர் ஆகியோர் சேர- சோழ -பாண்டிய தேசங்களைப் பாடினாலும் திராவிட நாடு என்று எங்கும் சொல்லவில்லை . கீழ்க்கண்ட பட்டியல்களைக் கண்டு மெய்ப்பொருள் காண்பது அறிவு!

****

திருவிளையாடற்புராணம் — பரஞ்சோதி முனிவர்

பரஞ்சோதி முனிவரின் நாற்பது நாடுகள் பட்டியலில் திராவிட நாடு இல்லை !

மெய்காட்டிட்ட படலம் 27 நாடுகள் பட்டியல்

நாவலர், பண்டித ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை

(29)

கொங்கரிவ ரையகுரு நாடரிவ ரைய

கங்கரிவ ரையகரு நாடரிவ ரைய

அங்கரிவ ரையவிவ ராரியர்க ளைய

வங்கரிவ ரையவிவர் மாளவர்க ளைய.

ஐயனே இவர் கொங்க நாட்டினர், ஐயனே இவர் குருநாட்டினர்;

ஐயனே இவர் கங்க நாட்டினர்; ஐயனே இவர் கருநாட நாட்டினர்;

– ஐயனே இவர் அங்க நாட்டினர்; ஐயனே இவர்கள் ஆரிய நாட்டினர்கள்; ஐயனே இவர் வங்க நாட்டினர்; ஐயனே இவர்கள்

மாளவநாட்டினர்கள். (30)

****

குலிங்கரிவ ரையவிவர் கொங்கணர்க ளைய

தெலுங்கரிவ ரையவிவர் சிங்களர்க ளைய

கலிங்கரிவ ரையகவு டத்தரிவ ரைய

உலங்கெழு புயத்திவர்க ளொட்டியர்க ளைய.

ஐயனே இவர் குலிங்க நாட்டினர்; ஐயனே இவர்கள்

கொங்கண நாட்டினர்கள்; ஐயனே இவர்தெலுங்க நாட்டினர்கள்; ஐய ஐயனே இவர்கள் சிங்களநாட்டினர்கள்; ஐயனே இவர் கலிங்க

நாட்டினர்; ஐயனே இவர் கவுட நாட்டினர்; ஐயனே திரண்ட

கற்போலும் புயத்தினையுடைய இவர்கள் ஒட்டிய நாட்டினர்கள். (31)

****

கொல்லரிவ ரையவிவர் கூர்ச்சரர்க ளைய

பல்லரிவ ரையவிவர் பப்பரர்க ளைய

வில்லரிவ ரையவிவர் விதேகரிவ ரைய

கல்லொலி கழற்புனை கடாரரிவ ரைய.

ஐயனே இவர் கொல்லநாட்டினர்; ஐயனே இவர்கள்

கூர்ச்சர நாட்டினர்கள்; ஐயனே இவர் பல்லவநாட்டினர்; ஐயனே

இவர்கள் பப்பர நாட்டினர்கள்; ஐய ஐயனே இவர்கள் வில்லர்கள்; ஐயனே இவர் விதேகநாட்டினர்; ஐய ஐயனே இவர் கல்லென்னும் ஒலியையுடைய வீரக்கழலையணிந்த கடார நாட்டினர்.

****

கேகயர்க் ளாலிவர்க்ள கேழ்கிளர் மணிப்பூண்

மாகதர்க ளாலிவர் மராடரிவர் காஞ்சி

நாகரிக ராலிவர்க ணம்முடைய நாட்டோர்

ஆகுமிவர் தாமெனமெய்க்* காட்டியறி வித்தான்.

இவர்கள் கேகயநாட்டினர்கள்; ஒளி விளங்கும் மணிகள் பதித்த அணிகளை யணிந்த இவர்கள் மகத நாட்டினர்கள்; – இவர் மராடநாட்டினர்; – இவர்கள் காஞ்சி நாட்டிலுள்ள

நாகரிகமுடையவர்கள்; இவர் நமது நாட்டினராவர்; என என்று, மெய்க் காட்டி அறிவித்தான் –

அவரவர் உருவினைக் காட்டித் தெரிவித்தான். காஞ்சி நாகரிகர்

என்றது சோழரை யாதல்வேண்டும். (33)

*****

திருமணப்படலம் –நாற்பது நாடுகள் பட்டியல்

தென்னர் சேகரன் றிருமக

     டிருமணத் திருமுகம் வரவேற்று

மன்னர் வந்தெதிர் தொழுதுகைக்

     கொண்டுதம் மணிமுடி மிசையேற்றி

அன்ன வாசகங் கேட்டனர்

     கொணர்ந்தவர்க் கருங்கலந் துகினல்கி

முன்ன ரீர்த்தெழு களிப்புற

     மனத்தினு முந்தினர் வழிச்செல்வார்.

பாண்டியர்களின் முடி போல்பவனாகிய மலயத்துவச பாண்டியன்

திருமணங் குறித்த ஓலையை, வரவேற்பாராய், – மன்னர்கள் எதிர்கொண்டு வந்து, வணங்கி, கையில் வாங்கி,  தம்முடைய மணிகள் அழுத்திய முடியின்மேல் ஏற்றி, அத்திருமுகச் செய்தியைக் கேட்டு, கொண்டு வந்தவர்களுக்கு, அரிய அணிகளும் ஆடைகளும்

அளித்து, முன் இழுத்துச் செல்லும் களிப்பு மிக,

மனத்தினும் விரைந்து வழிக்கொண்டு செல்வார்கள் .

****

கொங்கர் சிங்களர் பல்லவர் வில்லவர் கோசலர்

                                        பாஞ்சாலர்

வங்கர் சோனகர் சீனர்கள் சாளுவர் மாளவர் காம்போசர்

அங்கர் மாகத ராரியர் நேரிய ரவந்தியர் வைதர்ப்பர்

கங்கர் கொங்கணர் விராடர்கள் மராடர்கள் கருநடர்

                                         குருநாடர்.

கொங்கு நாட்டரசரும், சிங்களநாட்டரசரும், பல்லவநாட்டரசரும், வில்லவர் , கோசல நாட்டரசரும், பாஞ்சால நாட்டரசரும், சோனகர் –

சீனர்கள் சாளுவர் , மாளவர் காம்போசர், அங்கர், மகதர் ,

ஆரியர் , சோழ வரசரும், அவந்தியர் , வைதர்ப்பர், கங்கர், கொங்கணர், , விராடர்கள் ,மராடர்கள்,கருநடர்,  குரு நாட்டரசரும்,

     இவருள் கொங்கர், பல்லவர், வில்லவர், நேரியர் என்போர்

தமிழ் மண்டலத்தினர்; சிங்களர், கங்கர், கொங்கணர், கருநடர்

என்போர் தமிழ் மண்டலத்தின் சார்பிலுள்ளவர். வில்லவர் –

விற்கொடியையுடைய சேரர். நேரியர் – நேரி மலையையுடைய

சோழர்.

****

கலிங்கர் சாவகர் கூவிள

     ரொட்டியர் கடாரர்கள் காந்தாரர்

குலிங்கர் கேகயர் விதேகர்கள்

     பௌரவர் கொல்லர்கள் கல்யாணர்

தெலுங்கர் கூர்ச்சரர்* மச்சர்கள்

     மிலேச்சர்கள் செஞ்சையர் முதலேனைப்

புலங்கொண் மன்னருந் துறைதொறு

     மிடைந்துபார் புதைபட வருகின்றார்.

கலிங்கர் , சாவகர் , கூவிளர், ஒட்டியர் , கடாரர்கள், காந்தாரர் ,

குலிங்கர், கேகயர், , விதேகர்கள் , பௌரவர், , கொல்லர்கள்

கல்யாணர், தெலுங்கர், கூர்ச்சரர் மச்சர்கள், மிலேச்சர்கள், செஞ்சையர்,

முதலாக, பிற நாட்டரசாகளும், வழிகள் தோறும், நெருங்கி, பூமி

மறையும்படி வருகின்றார்கள் .

     கலிங்கம் – வடக்கே கீழ்கடலோரத்திலுள்ளது. சாவகம் –

தெற்கிலுள்ள தீவு; ஜாவா. கடாரம் – கிழக்கிலுள்ளது; பர்மாவின்

ஒருபகுதி. பௌரவர் – பூருமரபினர் : தத்திதாந்தம். கல்யாணர் –

சாளுக்கியர். (75)

*****

மாக்ஸ்முல்லர், கால்டு வெல் உண்டாக்கிய ஆரிய, திராவிடர் கிடையாது ; வெளிநாட்டிலிருந்து மதத்தைப் பரப்பவும் நாடு பிடிக்கவும் வந்தவர்கள், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கைக்கொண்டு , இந்தியாவையே ஆரியர்- திராவிடர் என்று பிரித்தனர். இ ந்துக்கனின் எந்த சரித்திர, சமய நூல்களிலும்  இந்தப் பிரிவினை இல்லை. அவர்கள் மக்களை ௧௮ வகையாகப் பிரித்தனர் இதை ராமாயண காலத்திலிருந்து காண்கிறோம்

எழுவ ரன்னையர் சித்தர்விச் சாதர

     ரியக்கர் கின்னரர் வேத

முழுவ ரம்புணர் முனிவர்யோ

     கியர்மணி முடித்தலைப் பலநாகர்

வழுவில் வான்றவ வலியுடை

     நிருதர்வாள் வலியுடை யசுரேசர்

குழுவொ டும்பயில் பூதவே

     தாளர்வெங் கூளிக ளரமாதர்.

ஏழு மாதரும்,  சித்தரும் , வித்தியாதரரும், இயக்கரும்,

கின்னரரும்,  மறையின் எல்லை முடிய உணர்ந்த முனிவர்களும்

யோகிகளும் , மணி விளங்கும் உச்சியையுடைய தலையினையுடைய பல உரகர்களும்/,நாகர்  குற்றமில்லாத சிறந்த

வலிமையையுடைய அரக்கர்களும்,  வாளின் வலியுடைய அசுரர் தலைவர்களும், கூட்டத்தோடு உலாவும் பூத வேதாளர்களும்,

*****

கங்கர்கொங்கர்கலிங்கர்குலிங்கர்: கம்பன் தரும் நாடுகளின் பட்டியல் — பால காண்டம்கம்ப ராமாயணம்

1.கங்கர் கொங்கர் கலிங்கர் குலிங்கர்கள்

சிங்களாதிபர் சேரலர் தென்னவர்

அங்கராசர் குலிந்தர் அவந்திகர்

வங்கர் மாளவர் சோழர் மராடரே

2.மான மாகதர் மச்சர் மிலேச்சர்கள்

ஏனை வீர இலாடர் விதர்ப்பர்கள்

சீனர் தெங்கணர் செஞ் சகர் சோமகர்

சோன சேகர் துருக்கர் குருக்களே

3.ஏதி யாதவர் ஏழ்திறல் கொங்கணர்

சேதிராசர் தெலுங்கர் கருநடர்

ஆதிவானம் கவித்த அவனிவாழ்

சோதி நீள்முடி மன்னரும் துன்னினார்

—பால காண்டம், கம்ப ராமாயணம்

உலாவியல் படலத்தில் ராமன் — சீதை திருமணத்துக்கு வந்த மன்னர்கள் பட்டியல் இது.

பொருள்:-

1.கங்க நாடு, கொங்கு நாடு,  கலிங்க நாடு, குலிங்க நாடு, சிங்கள நாடு, சேர நாடு, தென்னாடான பாண்டிய நாடு, அங்க நாடு, குலிந்த நாடு, அவந்தி நாடு, வங்க நாடு, மாளவ நாடு, சோழ நாடு, மராட நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

2.பெருமை மிகுந்த மகத நாடு, மச்ச நாடு, மிலேச்ச நாடு, மற்றுமுள்ள வீரம் பொருந்திய இலாடநாடு, விதர்ப்ப நாடு, சீன நாடு, தெங்கண நாடு, செம்மை வாய்ந்த சக நாடு, சோம நாடு, சோனக நாடு, துருக்கி நாடு, குரு நாடு ஆகிய நாட்டு அரசர்களும்,

3.ஆயுதங்கள் நிறைந்த யாதவ நாடு, ஏழு பிரிவு கொண்ட கொங்கண நாடு, சேதி நாடு, தெலுங்கு நாடு, கரு நாடு என்னும் கன்னட நாடு, ஆகிய நாடுகளின் அரசர்களும், பஞ்ச பூதங்களில் முதன்மையானதான ஆகாயத்தின் கீழே ஆழும் — ஒளிவீசும் மணிமுடி அணிந்த பிற அரசர்கள் அனைவரும் அந்த மண்டபத்தை அடைந்தனர்.

முதல் பாட்டில், அங்கராசர் என்பதற்குப் பதிலாக சில பதிப்புகளில் அங்கர் சீனர் என்று காணப்படும்; அப்படியானால் அடுத்த பாட்டில் வரும் சீனர் என்ற சொல்லுக்கு மகா சீனர் என்று பொருள் சொல்லுவர் பெரியோர்.

இதே போல சோனர் சேகர் என்பதை சோன கேசர் என்றும் எழுதுவர். விசுவாமித்திரர் சேனைகளை எதிர்ப்பதற்காக காமதேனு என்னும் தெய்வீகப் பசு மூலம் வசிட்டனால் உண்டாக்கப்பட்ட சேனை என்றும் சொல்லுவர். இது பற்றிய கதை மிதிலைக் காட்சிப் படலத்தில் உள்ளது.

கம்பன் பாட்டில் தெரிய வரும் செய்திகள்:-

கம்பன் காலத்தில்திராவிட நாடு என்று  ஒரு நாடு இல்லை.

கொங்கண நாட்டைக் குறிப்பிடும் போதெல்லாம் ஏழு பிரிவு கொண்ட கொண்க்கண நாடு என்பதை ஏன் அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார் என்று தெரியவில்லை.

துருக்கி, சீனம், அரேபியா (சோனகம்) என்பவை கம்பன் காலத்தில் நன்கு தெரிந்தவை.

மிலேச்ச நாடு (ரோம்/இதாலி, கிரீஸ் உள்ளிட்ட யவன பூமி)

ஏழு பிரிவுகள் கொண்ட கொங்கண நாட்டை அவன் சுந்தர காண்டத்திலும் குறிப்பிடுவான்.

சுந்தர காண்டத்தில் அவன் சொல்லும் பல பூகோள/நிலவியல் விஷயங்கள் இன்னும் வியப்பானவை.

துருக்கர் கொண்டுவந்த குதிரைகள் பற்றி ‘உன் அமுத உத்தியன ஒண் நகர்……..‘ என்ற பாட்டிலும் கம்பன் பேசுகிறான்.

*******

புராதன இந்தியாவின் 56 தேசங்கள்! (Post No. 2686)

Date: 2 April, 2016  Post No. 2686 

புராதன இந்தியாவில் 56 தேசங்கள், அதாவது 56 பிரிவுகள் இருந்தன. இவைகளை இப்போதைய மாநிலங்களுக்கு ஒப்பிடலாம். பலம்பொருந்திய மன்னர்கள் ஆளுகையில் எல்லா மன்னர்களும் சக்ரவர்த்தியின் ஒரு குடைக்கீழ் ஆளப்பட்டார்கள். சுயம்வரம், போட்டிகள், பட்டாபிஷேகங்கள் முதலியவற்றுக்கு 56 தேச ராஜாக்களுக்கும் அழைப்பிதழ்கள் சென்றன. அவ்வப்பொழுது சண்டைகளும் போட்டார்கள்; பெண் கொடுத்து, பெண் எடுத்தார்கள். 

இந்தப் பட்டியலில் தமிழர்களின் சேர சோழ, பாண்டிய நாடுகளுக்குப் புறம்பாக திராவிட நாடு காட்டப் பட்டிருப்பது பற்றி, திராவிடர்கள் யார்? என்ற கட்டுரையில் முன்னரே எழுதியுள்ளேன் (திராவிடர்கள் யார்? ஜூலை, 2013). இதிலுள்ள வரைபடங்கள் ஓரளவுக்கு நமக்கு, நாடுகளின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுக்கிறது. ஆயினும் அவ்வப்பொழுது அவற்றின் எல்லைகள் விரிந்தும் சுருங்கியும் போனதால் குழப்பங்கள் ஏற்பட்டன. 

ஒருவர் ஒரு நூலை எழுதும்போது, ஒரு நாட்டின் எல்லை எவ்வளவு தூரம் பரவியிருந்ததோ அதற்கேற்ப அவர்கள், ஊர்கள் பற்றியும் மக்கள் போக்குவரத்த் பற்றியும் எழுதினர். பிற்காலத்தில் நாம் அவைகளை ஒரு சேரப் படிக்கையில் முரண்பாடுகளைக் காண்கிறோம். யவன தேசம் என்பது பல தவறான முடிபுகளைத் தோறுவித்தது இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ரோமாபுரி, கிரேக்கம் மற்றும் அலெக்ஸாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவில் ஆண்டோர், அராபியர் ஆகிய அனைவரையும் குறித்தது! 

இதோ ஜகதீச அய்யர் எழுதிய புராண இந்தியா – 56 தேச சரிதம். பேஸ்புக்கில் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதிலுள்ள வரைபடங்கள், மேலும் ஆராய்ச்சி செய்ய உதவும்:–

புராதன இந்தியாவின் 56 தேசங்கள் –பகுதி 2 (Post No 2693)

Date: 4 April, 2016; Post No. 2693

நாடுகளின் வரைபடத்தைப் பார்த்தால் தேசங்களின் இருப்பிடம் தெரியும் ; மீனாட்சியின் தாய் சூரசேன நாட்டிலிருந்து வந்த காஞ்சன மாலா ஆவாள் ; இது வட  இந்தியாவில் காட்டப்பட்டுள்ளது!

–SUBHAM—

TAGS- கம்பன் பரஞ்சோதி, திராவிடநாடு , 56 தேசங்கள், ஆரியர், திராவிடர் திருவிளையாடல் புராணம் , நாடுகள் பட்டியல்