Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
During my stay in Sydney for three months (Dec.11, 2024 to Mar.11,2025), I took over 1000 pictures. I have shared all important pictures with you in my 60 articles in Tamil and English. Before I archive other pictures, I will post more here. It may be of interest to some of you.
I have written about our visit to Blue Mountains from Sydney. There huge Dinosaur figures welcome (or scare) children . They are mechanically activated. They roar and move and open their wide jaws. When children see the big sharp teeth, they scream!
The good thing about this show is that all the scientific information is also provided with the huge models.
Here are the pictures
Dinosaur Egg Model
*****
Stuffed Kangaroo (Not Dinosaur)
For full details , please download my books from pustaka.co.in
–Subham—
Tags- Australian ,Titbits, Part 1, Dinosaur Valley ,Blue Mountains, New South Wales
London Swaminathan has written 139 TAMIL and ENGLISH books. Two of them are out of print. Other 137 books are readily available in Pustaka.co.in
Enjoy reading them.. Two Tamil books are printed in two separate volumes.
Here is my latest book:
Shiva Temple in Australia
Foreword
I have visited Australia twice in the last ten years. During 2024-2025, I was lucky to stay there for three months continuously. Australia is the sixth largest country in the world. Unless one is young and wanderlust, it is difficult to cover all the important tourist spots. There are 10,000 beaches!
When I mentioned that I should go to Uluru/ Ayers Rock in the middle of the continent, even my relatives who have been living there for over three decades, advised me against the trip. But the East coast of the continent lashed out by the vast Pacific Ocean is the area where 87 % of the people live. I have covered all the important places in the New South Wales where Sydney is located. Of the seven states, I have covered only two states New South Wales and Queensland.
Though I have visited the most famous natural wonder Great Barrier reef, Brisbane city, Bondi Beach and Nantien Buddhist temple, I have not written much about them in this book. But I have written detailed articles in Tamil. I have travelled by train, ferry, plane and car which helped me to understand the actual life there. Hope this book with lot of useful tips will encourage new visitors to see all the places without any difficulty.
Australian Weather is a problem for travellers. Even Sydney experiences rain in 140 days in a year. So, people walk with umbrellas. I would suggest everyone to study the weather before travelling to a tourist spot.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
முப்பது கோடி முகமுடையாள் உயிர்-
மொய்ம்புற வொன்றுடையாள்-இவள்
செப்புமொழி பதினெட்டுடையாள் எனிற்
சிந்தனை ஒன்றுடையாள்.– பாரதியார்
பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது . அப்போது இந்தியாவின் ஜனத்தொகை முப்பது கோடி என்ற அரிய செய்தியை நமக்கு பாரதியார் அளிக்கிறார். இதனால்தான் பாரதி பாடாத பொருளே இல்லை என்று அறிஞர்கள் செப்புகிறார்கள் . இதை எழுதும் இந்த ஆண்டில் பாரத மக்கட் தொகை 146 கோடி . அதாவது உலகிலேயே அதிக ஜனத்தொகை உள்ள நாடு. சீனாவையும் நாம் மிஞ்சிவிட்டோம்!
சரி, அப்பட்டியானால் மஹாபாரத காலத்தில் என்ன மக்கட்தொகை? ராமாயண காலத்தில் ஜனத்தொகை என்ன? இவை பற்றி பல சுவையான செய்திகள் உள்ளன. சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரிக காலத்தில் ஜனத்தொகை என்ன ? ஹரப்பா வட்டாரத்தில் நமக்கு 300 க்கும் குறைவான எலும்புக்கூடுகளே கிடைத்துள்ளன. ஆனால் நாடு முழுதும் பழங் கற்கால தடயங்கள் கிடைத்துள்ளன எல்லாம் குறைந்தது 5000 ஆண்டுகள் பழமை உடைத்து .
மஹாபாரதப் போரில் 7+11=18 அக்சௌகிணி अक्षौहिणी சேனைகள் கலந்து கொண்டதாகப் படிக்கிறோம்.
அந்தக் காலத்தில் படைகளில்தான் அதிகம்பேர் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள் ; விவசாயம் என்பதெல்லாம் பெரும்பாலும் குடும்பத்துக்கான தொழிலாகவே இருந்தது; ஆகையால் படைபலத்தைக் கொண்டு ஒரு நாட்டின் ஜனத்தொகையைக் கணக்கிட ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்கிறார்கள்.
ஒரு அக்சௌகிணி अक्षौहिणी என்பது 65,610 குதிரைகள், 21,870 தேர்கள், 21,870 யானைகள், 109,350 காலாட்படை வீரர்கள் = : 218,700 வீரர்கள் கொண்டது! இது போல பதினெட்டு பட்டாளங்கள்.
பெண்கள் அக்காலத்தில் போருக்கு வரவில்லை. ஆகையால் இதே போல இன்னும் ஒரு மடங்கு வீட்டில் இருந்திருப்பார்கள் இவர்களைத் தவிர வயதானோரும் ஏனைய தொழில் செய்வோரும், குழந்தைகளும் இருந்திருப்பார்கள்; ஆகவே குத்து மதிப்பாகத்தான் கணக்கிடலாம்.
ஆயினும் இந்த எண்ணிக்கை பிற்கால எண்ணிக்கையுடன் ஒப்பிட உதவுகிறது.
In the Mahabharata, an “akshauhini” is a military formation comprising 21,870 chariots, 21,870 elephants, 65,610 horses, and 109,350 infantry, totaling 218,700 warriors, excluding charioteers.
Here’s a more detailed breakdown:
Chariots: 21,870
Elephants: 21,870
Horses: 65,610
Infantry: 109,350
Total: 218,700 warriors (excluding charioteers)
In the Kurukshetra War: The Kauravas (Duryodhana’s army) had 11 akshauhinis, while the Pandavas (Yudhishthira’s army) had 7.
புராதன இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யம் மெளரிய பேரரசு ஆகும் ; அதில் அங்கம் வகித்த மாமன்னன் அசோகன் நடத்திய கலி
ங்கத்துப் போரும் அதனால் அவன் மனம் மாறி புத்த மத்தை ஏற்றுக் பரப்பியதையும் நாம் அறிவோம் . அந்த கலிங்கத்துப் போரில் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர்; ஒன்றரை லட்சம்பேர் காயமடைந்தனர் ; ஆனால் இதில் மஹாபாரதப் போர் போல இமயம் முதல் குமரி வரையுள்ள படைகள் ஈடுபடவில்லை. நாட்டின் பெரும் பகுதியில் உள்ளோர் ஈடுபட்டிருக்கலாம் ; ஆக அப்போது இரண்டரை லட்சம் படைவீரர்கள் இந்த மாபெரும் யுத்தத்தில் இருந்துள்ளனர்
ஒரிஸ்ஸாவிலுள்ள ஹத்திக்கும்பா கல்வெட்டு நமக்கு ஒரு எண்ணிக்கையைக் கொடுக்கிறது; ஒரிஸ்ஸா ஜனத்தொகை மூன்றரை லட்சம்! இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்!
மவுரிய பேரரசின் எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்ட கூற்று அல்ல ; ஏனெனில் மெகஸ்தனிஸ் எழுதிய இண்டிகா நூலிலும் பெரிய எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார் மெகஸ்தனிஸ் சொல்லும் எண்ணிக்கை – மவுரிய பேரரசில் 6.5 லட்சம் படைவீரர்கள் உள்ளனர்
ஆக 2500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய ஜனத்தொகை சுமார் நாலு கோடிப் பேர்தான்
சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் நூல், மவுரியர் கால மக்கட் தொகை கணக்கெடுப்பு பற்றிப் பேசினாலும் சென்சஸ் புள்ளிவிவரங் களைத்த தரவில்லை.
வெள்ளைக்கார்கள் நடத்திய 1881 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்திய ஜனத்தொகை 23-5 கோடி
இப்போது இந்திய படைவீரர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டு கோடி ; பொதுவாக உலகம் முழுதும் ஜனத்தொகை பெருகிக்கொண்டுதான் வருகிறது ஆகையால் இந்தப் படைவீரர் எண்ணிக்கை அதைக் காட்டுவதைக் காணலாம்.
The Indian Army, the world’s largest standing army, has a strength of approximately 1.237 million active troops and 960,000 reserve troops, making it a significant military force.
The Indian Armed Forces, with over 1.4 million active personnel, are the world’s second-largest military force and possess the world’s largest volunteer army, comprising the Indian Army, Navy, and Air Force.
Here’s a more detailed breakdown:
Indian Army: காலாட் படை / ராணுவம்
1,232,000 active personnel
900,000 reserve personnel
~310 manned aircraft
Indian Navy: கப்பற்படை
135,000 active personnel
100,000 reserve personnel
Approx 1926+ aircraft
Indian Air Force: விமானப் படை
135,000 active personnel
100,000 reserve personnel
Approx 1926+ aircraft
Paramilitary Forces: Approximately 1.3 million paramilitary personnel பாரா மிலிட்டரி எனப்படும் ஓரளவு ராணுவம்.
இது தவிர போலீஸ் காவலர்கள்!
புற நானூற்றில் கபிலர் நிறைய விஷயங்களை நமக்கு அளிக்கிறார் ; பாரியின் முன்னூறு ஊர்களையும் அவன் தானம் செய்துவிட்டதாகப் பாடுகிறார் சிறிய பறம்பு நாட்டில் 300 ஊர்கள் இருந்திருக்குமானால் சேர சோழ பாண்டிய தேசங்கள் முழுதும் எவ்வளவு இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்; இன்றைய இந்தியாவில் ஆறு லட்சம் கிராமங்கள்; ஊர்கள் உள்ளன. மக்கட் தொகையில் நூறு கோடிப் பேர் அங்கே இருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்..
எண்கள் பற்றி எச்சரிக்கை தேவை
ராமாயண காலத்தில் மிகவும் குறைவான மக்களே நாடு முழுதும் வாழ்ந்திருக்க வேண்டும். ஆயினும் எல்லா எண்களுடனும் ஆயிரம் , கோடி என்ற சொற்களை பிற்காலக் கவிஞர்கள் சேர்த்துக் கொண்டனர். இதை ரிக்வேதம் முதல் ராமாயணம் வரை காணலாம். தசரதனுக்கு அறுபதாயிரம் மனைவியர் என்றால் அவருக்கு எண்ணற்ற மனைவியரென்று பொருள்; இதே போல ரிக் வேதத்தில் இந்திரனால் கொல்லப்பட்ட அரக்கர்களின் எண்ணிக்கை லட்சக் கணக்கில் வருகிறது . அங்கும் ஆயிரம் என்பதை நாம் எண்ணற்ற என்ற பொருளில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
–SUBHAM—
TAGS- மக்கட்தொகை, ஜனத்தொகை, சென்சஸ், பழங்கால, போர் வீரர் , ராமாயண, மஹாபாரத, சிந்துவெளி , காலம் , வெள்ளைக்காரர், முப்பது கோடிமுகமுடையாள், பாரதியார்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஹிந்து ராஷ்ட்ரம் ஒன்றே குழப்பங்கள் தீர ஒரே தீர்வு – மகான்களின் தீர்மானம்!
ச. நாகராஜன்
மஹா கும்ப மேளா ஆரம்பத்ததிலிருந்து ஏராளமான மகான்கள், துறவிகள் ஹிந்து ராஷ்ட்ரம் உடனே வேண்டும்; அனைத்து விதமான குழப்பங்களுக்கும் அது ஒன்றே தீர்வு என்று சொல்லி வந்துள்ளனர்.
இதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல ஹிந்து ராஷ்ட்ர மாநாடு மஹா கும்பமேளாவை ஒட்டி நடந்தது.
ஹிந்து ராஷ்ட்ரத்தை அமைக்கத் தங்களால் ஆன அனைத்தையும் செய்ய மகான்கள் உறுதி பூண்டு அதை பகிரங்கமாகத் தெரிவித்தும் உள்ளனர்.
அனைத்து ஹிந்துக்களும் ஹிந்து ராஷ்ட்ரம் அமைய எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
ஜனவரி 31, 2025 அன்று அகில் பாரதீய தர்மசங் மற்றும் ஹிந்து ஜனஜாக்ருதி சமிதி (HJS) ஆகிய இரண்டும் ஒன்றாக இணைந்து மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தின.
நாம் இந்தியாவை பெரிதாக ஆக்குவோம்; இதை ஹிந்து ராஷ்ட்ரமாக ஆக்குவோம், ஜெய் ஶ்ரீ ராம் , ஹர ஹர மஹாதேவ் என்ற கோஷங்கள் வானைப் பிளந்தன.
ஹிந்து ராஷ்ட்ரம் அமையவிருப்பதை எண்ணி அனைவரும் உற்சாகம் மேலிட தங்கள் மகிழ்ச்சியை உரைகளில் காட்டினர். ஓரிழையில் இணைந்து அனைவரும் பாடுபடுவோம் என்று முழங்கினர்.
மாநாடு சங்கொலியுடன் ஆரம்பித்தது.
ஶ்ரீ ஸ்வாமி கர்பத்ரி வேத சாஸ்த்ர அனுசந்தான் கேந்திரத்தின் சார்பில் ஆசுதோஷ் ஜா மற்றும் அனுபம் குமார் த்ரிவேதி வேத ஸ்லோகங்களை முழக்கினர்.
நீலேஷ் குல்கர்னி (சனாதன் ப்ரபாத் தினசரியின் உதவி ஆசிரியர்) சனாதன் ப்ரபாத் பத்திரிகையின் பணியை விரிவாக எடுத்துரைத்தார்.
சத்குரு டாக்டர் சாருதத்தா பிங்களே (National Guide of Hindu janajagruthi Samithi – HJS மற்றும் சத்குரு நிலேஷ் சிங்பால் ஜனஜாக்ருதி சமிதி (Dharma Pracharak of HJS) மகான்களுக்கு மலர் மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளைச் சூட்டி கௌரவித்தனர்.
பங்க்ளாதேஷில் ஹிந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகள் பற்றி அனைவரும் கவலை தெரிவித்தனர். காசி, மதுரா, மற்றும் இதர ஆலயங்கள் ஆகியவற்றை விடுவிக்க சட்டபூர்வமான போராட்டம் நடத்தப்படும் என்பதை அனைவரும் ஒருமனதாக ஏற்று தீர்மானித்தனர்.
ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க ஒரு நடைமுறை இயக்கம் வேண்டும்.
இந்தியா “ஹிந்து ராஷ்டிரம்” என்று சட்டபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூடியிருந்த அனைத்து மகான்களும் தங்கள் உரைகளில் வலியுறுத்தினர்.
20.தீபாவளி, மனித மிருகங்கள், தமிழபிமானி பற்றி பாரதி
21.இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்!
22.தினகர, ருசிகர, சஸிகர, கடகர, ரதகர, மதுகர: –சம்ஸ்கிருத மொழி அழகு
23.குதிரை, பரி, புரவி, இவுளி தமிழ்ச் சொற்களா?
24.சர்ச்சைக்குரிய திருக்குறள் 503- வள்ளுவன் சொல்லுவது என்ன ? இதோ 4 கதைகள்
25.யூத அறிஞர் கோல்ட்ஸ்டக்கர் மர்மத்தைக் கண்டுபிடிப்போம்
26.புகழ்பெற்ற பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம்
27.நலுங்கு பாடல்கள் ஆராய்ச்சி
28.சென்ற மொழியியல் புஸ்தகத்திலுள்ள விஷயங்கள்
*******
அட்டைப்படத்தில் அவஸ்தன், கிரேக்க, சம்ஸ்க்ருத மொழிக் கல்வெட்டுகளைக் காணலாம்
–Subham—
முன்னுரை
தமிழ் – அவஸ்தன்– சம்ஸ்க்ருத- கிரேக்க -மொழி ஆராய்ச்சிக் கட்டுரைகள் என்ற தலைப்பில் வெளியாகும் இந்த நூல் மொழியியல் ஆராய்ச்சி குறித்த எனது இரண்டாவது நூலாகும். உலகின் மிக முக்கியமான நான்கு மொழிகளின் ஒற்றுமைகளை இருபத்தைந்துக்கும் மேலான கட்டுரைகள் ஆராய்கிறது .
தமிழ் தெரிந்தவர்களுக்கு சம்ஸ்கிருதம் தெரிவதில்லை; சம்ஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு தமிழ் தெரிவதில்லை. இதனால் பல தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். கிரேக்கம் மற்றும் அவஸ்தன் மொழி பற்றி நிறைய பேருக்குத் தெரியவே தெரியாது. அவைகள் பற்றிய ஆங்கில நூல்களை நான் படித்தபோது தமிழ் சம்ஸ்க்ருத மொழிகளுடன் அவைகளுக்குள்ள அபூர்வ ஒற்றுமை தெரிந்தது. பாரதியார் பாடலில் சொன்னது போல தமிழ் மொழியை ஆதி சிவன் பெற்றுவிட்டான் என்றால், தமிழின் பழமை எவ்வளவு என்பது எல்லோருக்கும் விளங்க வேண்டும். சிவ பெருமான் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமை யானது தமிழ் மொழி! எழுத்துக்களைக் கற்கும் சிறுவர் சிறுமியர் கற்பது அரிச்சுவடி; அதாவது தமிழ் எழுத்துக்கள், திருமால் எவ்வளவு பழமையானவரோ அவ்வளவு பழமையானது; அதனால் அதற்கு அரிச்சுவடி என்று பெயரென்பதை அம்பலவாண தேசிகர் அறப்பளீஸ்வர சதகத்தில் பாடி நமக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.
தமிழும் சம்ஸ்கிருதமும்தான் உலகின் ஆதி மொழிகள் என்றும் எந்த ஒரு பழைய மொழியிலும் இவ்விரு மொழிகளின் சொற்கள் இருப்பதைக் காணலாம் என்றும் நான் என் கருத்தினை முன்வைத்து ஆதாரங்களைக் காட்டியிருக்கிறேன். மொழியியல் ஆராய்ச்சிக்கு இந்த நூலும் இதற்கு முந்தைய எனது நூலும் துணை புரியும். மேலும் புது நோக்கில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் என்பது எனது நம்பிக்கை .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
க்ஷேத்திர புராணேஸ்வரர் சிலை
பிரும்மா
நர்த்தன கணபதி
நால்வரும் சேக்கிழார் பெருமானும்
நாகர்கள்
மார்ச் மாதம் 16 ஆம் தேதி (2025) கூத்தனூரில் சரஸ்வதி தேவி தரிசனத்தை முடித்துக் கொண்டு திருமீயச்சூருக்குச் சென்றோம் . இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இறைவியின் தரிசனம் கிடைத்தது .
இந்த முறை விஜயத்தில் கண்ட புதிய விஷயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். இங்குள்ள புகழ்பெற்ற க்ஷேத்திர புராணேஸ்வரர்சிலை பார்வதியின் கோபத்தை சிவன் தணிக்கும் காட்சியாகும் அதைப் பார்த்தவுடன் ராதே உனக்கு கோபம் ஆகாதடி என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். ஒவ்வொரு கணவன் மனைவி ஜோடியும் நின்று ரசித்துப் பார்க்க வேண்டிய சிலை அது ; நானும் புகைப் படம் எடுத்தேன் .
க்ஷேத்திர புராணேஸ்வரர் சிலையைக் காணவும் . சிலையை வெவ்வேறு கோணத்தில் பார்த்தால் வெவ்வேறு முக பாவங்கள் தெரியும் வண்ணம் சிலை செதுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோபுரம், அவற்றிலுள்ள சுதைகள், மற்றும் பிரகாரத்திலுள்ள லிங்கங்கள், நாகர்கள் எல்லாம் நூறு சதவிகித பெர்பெக்ஷன் PERFECTION பூரணத்துவம் கொண்டவையாகும் . லலிதாம்பிகையின் அழகையோ காண்பதற்குக் கண் கோடி வேண்டும்!
பிரகாரத்தில் உள்ள சிவ லிங்கம், மற்றும் நால்வர் சிலைகள் மனதில் விட்டு நீங்காது நிற்கின்றன. கோவில் முழுதும் நல்ல சூரிய வெளிச்சம் விழும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதால் எல்லா சிலைகளையும் ரசித்துப் பார்க்க முடிகிறது.
சிவலிங்கங்கள்
*****
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய கட்டுரை இதோ
திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலில் கிளி அதிசயம் (Post No.11,772)
Post No. 11,772; Date uploaded in London – – 5 MARCH 2023
யாளியின் சிலைக்குக் கீழே கிளியைக் காணலாம்
தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல்பெற்ற தலம் திருமீயச்சூர் ஆகும். இது பேரளத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் (பிப்ரவரி 2023) சென்றோம். மிகவும் குறுகலான பாதை. ‘திரு’ என்ற அடைமொழியே பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டிநிற்கிறது. இந்தக் கோவிலில் மேக நாதர் என்ற பெயரில் சிவன் குடிகொண்டுள்ளார். பல சிறப்புகளை உடைய கோவில் இது. இங்குதான் லலிதா சஹஸ்ராமம் உருவாகியது ; மேலும் ரத்தனக் கால் போட்டு அம்மன் லலிதாம்பிகை அமர்ந்துள்ளார்.
நாங்கள் சிவன் சந்நிதியில் தரிசனம் செய்துவிட்டு வலம் வந்தோம். அங்குள்ள பட்டர் எங்களை விரட்டிக்கொண்டு ஓடிவந்தார். “பாருங்கள், பாருங்கள் ! கோவில் விமானத்தின் மீது கிளி அமர்ந்து இருக்கிறது” என்றார். பல கோவில்களில் கிளிகள் பறந்து செல்வதைக் கண்டுள்ளேன். ஆகையால் எனக்கு அது பெரிதாகப்படவில்லை. ஆயினும் அந்தக் கிளி கொஞ்ச நேரத்துக்கு அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்ததை தெளிவாகக் கண்டு ரசித்தோம். அதன் சிறப்பை பட்டர் விளக்கினார்.
பக்தர்களின் வருகையையும் அவர்களது வேண்டுகோளையும் கிளி போய் அம்மனிடம் சொல்லும் என்ற ஐதீகம் அங்குள்ளதாகவும் , இது அபூர்வமாகவே நிகழும் என்றும், ஆகையால் இப்போது என்ன என்ன எல்லாம் வேண்டு மோ அதை எல்லாம் வேண்டிக்கொள்ளுங்கள் என்றும் பகர்ந்தார் . நாங்களும் அதைக்கேட்டுபி பிரமித்துப் போய் வேண்டியதெல்லா வற்றையும் மானஸீகமாகப் பட்டியலிட்டோம். பின்னர் லலிதாம்பிகை சந்நிதிக்குள் நுழைந்தோம் . பட்டருக்கு ஏற்கனவே தட்சிணை கொடுத்துவிட்டோம். ஆகையால் அவர் காசு வாங்க அப்படிச் சொல்லவில்லை. “நம்பினார் கெடுவதில்லை ; இது நான்கு மறைத் தீர்ப்பு. அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்” (பாரதியார் சொன்னது)
கொலுசு அதிசயம்
இந்த மேக நாதர் கோவிலில் லலிதாம்பிகை சன்னிநிதியில் அகத்திய முனிவருக்கு , ஹயக்ரீவர் , லலிதா சஹஸ்ரநாமத்தை உலகிற்கு அளித்தார் என்பதால் இந்த இடம் மிகவும் புகழ் பெற்றது ; அபூர்வமான மந்திரச் சொற்கள் அடங்கிய லலிதா சஹஸ்ரநா மத்தை தினமும் கோடிக் கணக்கானோர் உல கின் பல பகுதிகளில் இன்றும் வாசித்து வருகின்றனர் . (எனது மனைவி சமைக்கத் துவங்கியவுடன் , சமையல் அறையிலிருந்து இது ஒலித்துக்கொண்டே இருக்கும்).
அம்மன் லலிதாம்பிகை , உட்கார்ந்த நிலையில் , வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டவாறு அமர்ந்துள்ளார். இங்கு பக்தர்கள், பல வேண்டுதல்கள் நிறைவேறுவதற்காக அம்மனுக்குக் கொலுசு போட வேண்டிக் கொள்கிறார்கள் . எங்களுடன் வந்த ஒருவர் இது பற்றி விளக்கமாகக் கேட்டார். பட்டரும் பின்னர் அலுவலக ஊழியரும் இது பற்றி விளக்கமாகச் சொன்னார்கள்.
11 அல்லது பதினொன்றரை அங்குல வெள்ளி அல்லது தங்கக் கொலுசு கொண்டுவரவேண்டும் என்றும் வரி செலுத்தப்பட்ட ரசீது சகிதம் வந்தால்தான் அதைக் கோவில் ஏற்கும் என்றும் பெரும்பாலும் இந்நிகழ்ச்சி காலையில் 10 மணி அளவில் தொடங்கி 3, 4 மணி நேரம் நீடிக்கும் என்றும் , மூன்று நாட்களுக்கு முன்னரே போன் செய்து கோவிலில் Booking புக்கிங் செய்வது அவசியம் என்றும் விளக்கினார்கள். கட்டணம் பற்றிக் கேட்டபோது அம்மனுக்கும் சிவனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்ய ரூபாய் 5000-க்குள் என்றும் ஒருவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனை செய்ய அதில் சரி பாதித் தொகை என்றும் விளக்கினார்கள். பிரசாதமும் இதில் அடக்கம்.
அம்மனின் சொரூபம் அற்புதமான காட்சி. வாசனை மிகுந்த குங்குமப் பிரசாதம், அங்குள்ள தெய்வீக சூழ்நிலையை மேலும் உயர்த்திக் காட்டியது.. வளையல்களையும் பக்தர்கள் , அம்மனுக்குக் கொடுக்கிறார்கள். எங்களுக்கு நிறைய கண்ணாடி வளையல்களும் குங்குமத்தோடு கிடைத்தன. சென்னை, முதலிய இடங்களில் விநியோகித்த பின்னர் 4 வளையல்களுடன் லண்டனுக்கு வந்து சேர்ந்தேன்.
சூரியன் பெற்ற சாபத்தை நீக்க இங்கு சூரியன் வழிபட்டதால், மீய்ச்சூர் , என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். சம்பந்தரால் பாடப்பெற்றதால் இந்தக் கோவில், குறைந்தது 1400 ஆண்டுகளுக்கு முந்தையது என்பதற்கு சான்று கிடைக்கிறது. கோவில் பிரகாரத்தில் அற்புதமான சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன.
கோவிலுக்குள் கோவில் அமைந்த இடம் இது. உள்ளுக்குள் உள்ளது இளம் கோயில் எனப்படுகிறது. ஆகவே இரண்டு தலங்களை த் தரிசித்த புண்ணியமும் கிடைக்கிறது .
பிரகாரத்தில் திருமால் வடிவம் தாங்கிய சிலை கும்பிடும் நிலையில் இருக்கிறது. அதற்கு எதிரே குபேர லிங்கம்! திருப்பதி பாலாஜி , குபேரனிடம் வாங்கிய கடனை அடைக்கத்தான் நிறைய பணத்தை பக்தர்களிடமிருந்து ஆகர்ஷிக்கிறார் என்ற கதை அனைவரும் அறிந்ததே. எப்போதும் அபய ஹ ஸ்தத்துடன் அருள்பாலிக்கும் பெருமாள், இங்கு பவ்யமாக கைகூப்பி நிற்பது அவர் வாங்கிய கடனை அடைக்க கும்பிடு போட்ட நிலையில் நிற்பது சாலப் பொருத்தமே..
கோவிலில் உள்ள அனைத்து சிலைகளும் நல்ல, அழகிய முறையில் செதுக்கப்பட்டுள்ளது. மாலை வெய்யிலில் கூட்டமே இல்லாத நிலையில் தரிசனம் செய்தது மன அமைதியை அளித்தது. உற்சவ நாட்களிலும், அம்மனுக்கு உரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களிலும் கூட்டம் நெருக்கித் தள்ளுமாம். கோவிலுக்கு வெளியே உள்ள பூக்கடைகளும் படக்கடைகளும் இதற்குச் சான்று பகர்கின்றன
சூரியன், அவனது தேரோட்டியை அவமதித்த காரணத்தினால் சபிக்கப்பட்டு கருமை நிறம் அடைந்ததால், இதைப் போக்க இங்குள்ள சிவனை வழிபட்டார் என்ற கதையைக் கேட்ட போது , 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் கருப்புப் புள்ளிகள் (Sun Spots 11 year cycle) அதிகரிக்கும் என்ற விஞ்ஞான உண்மையைத்தான் இப்படிச் சொல்கின்றனரோ என்ற எண்ண அலைகள் என் மனத்தில் பாய்ந்தன .
யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள “கஜப்ரஷ்ட விமானம்” மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன. ராஜேந்திர சோழன், செம்பியன் மாதேவி ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்ட கோவில்.
சித்திரை மாதத்தில் ஏழு நாட்களுக்கு மேக நாதர் சந்நிதிக்குள் சூரிய ஒளி புகும். அக்காலத்தில் சூரியனே சிவபெருமானைப் பூஜிக்கிறார் என்றால் மிகையாகாது.
–subham–
Tags- திருமீயச்சுர் , லலிதாம்பிகை, லலிதா சஹஸ்ரநாமம் , சிவன் ,கோவில், கொலுசு, வளையல் , மேகநாதர், மீண்டும் விஜயம்,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
இருதய நோயுள்ளவர்களுக்கு பொருத்தப்படும் பேஸ்மேக்கர்PACEMAKER பற்றிப் பலரும் அறிவார்கள் . ஒருவரின் உடலுக்குள் இருதயத்துக்கு அருகில் பொருத்தப்படும் இக்கருவி இருதயத் துடிப்பைக் கண்காணிக்கிறது அந்த துடிப்பு தாறுமாறாகப் போனால் அதை மின்சக்தி மூலம் தூண்டிவிட்டு சரியாக்குகிறது. நீண்டகாலம் செயல்படும் பேட்டரி இதற்கான மின் சக்தியை அளிக்கிறது .
நீல் ஆர்ம்ஸ்ட்ராங் எப்படி இறந்தார் ?
இதன் முக்கியத்தை உணர நிலவில் முதலில் காலடிவைத்த நீல் ஆர்ம்ஸ்ட்ராங் NEIL ARMSTRONG பிற்காலத்தில் எப்படி மரணம் அடைந்தார் என்பதை அறிய வேண்டும் . அவரது உடலில் பொருத்தப்பட்ட பேஸ்மேக்கர் கருவியை அகற்றியபோது ரத்தம் கசிந்ததால் மரணம் சம்பவித்தது.
இப்போது அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட அரிசிக்கும் GRAIN OF RICE சிறிய அளவுள்ள கருவிTINY PACEMAKER குழந்தைகளுக்கானது. நூறில் ஒரு குழந்தை தாறுமாறான இருதாயத் துடிப்புடன் HEART DEFECTS, பிறக்கின்றது. ஆனால் அது ஒரு வாரத்துக்குள் தானாகவே சரியாகிவிடுகிறது ஆயினும் அந்த ஒருவாரம் கவலை தரும் வாரமாக அமைகிறது . அந்தத் தருணங்களில் செயற்கை இருதயக் கருவியைப் பொருத்துவது சிக்கலானது; இப்போதைய அமெரிக்கக் கண்டுபிடிப்பு இந்த சிக்கலை நீக்கிவிடுகிறது.
இது எப்படி வேலை செய்கிறது?
அமெரிக்காவில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக டாக்டர் ரோஜர்ஸ் PROF.JOHN ROGERS, NORTHWESTERN UNIVERSITY, ILLINOIS, USA இது செயல்படும் முறையை விளக்கினார்.
இந்த மிகச் சிறிய பேஸ் மேக்கர் கருவி 3.5 மில்லிமீட்டர் நீளமும் ஒரு மில்லிமீட்டர் தடிமனும் உடையது; உடலில் குத்த பயன்படும் சிரிஞ்ச் ஊசி முனையில் இதை வைத்துவிடலாம். இதைக் குழந்தையின் உடலுக்குள் செலுத்தியவுடன் அது இருதயத் துடிப்பை அளந்து தகவல் கொடுக்கும். ஒரு வாரத்துக்குப் பின்னர் அது உடலில் கரைந்துவிடும்.
குழந்தையின் உடலின் மேல் சிறிய, மென்மையான , மின்சார கம்பி இணைப்பு இல்லாத, ஒரு கருவியும் இருக்கும்; இருதயத் துடிப்பு சரியாக இல்லாவிட்டால் அதில் மின்சக்தி உண்டாகி உடலுக்குள் செலுத்தப்பட்ட தற்காலிக பேஸ்மேக்கரை செயல்படவைக்கும்.
இது தற்காலிக உபயோகத்துக்கு மட்டுமே உதவும். பின்னர் உடலில் செலுத்தகப்பட்ட பேஸ்மேக்கர் கரைந்துவிடும்.
குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்தாலும் கூட தற்காலிக பேஸ்மேக்கர்தான் தேவைப்படுகிறது என்று ஆராய்ச்சி உதவியாளர் பேராசிரியர் இகோர் எப்பமோவ்PROF.IGOR EFIMOV, கூறுகிறார்.
இந்தக் கண்டுபிடிப்பு வேறு சில சிகிச்சைகளுக்கு வழிவகுக்கிறது பயோ எலெக்ட்ரானிக் மெடிசின்BIO ELECTRONIC MEDICINES என்பது உடலுக்குள் கரைந்துவிடும் மருந்துகளாகும். நரம்புகள், எலும்புகள் , உடலுக்குள் உள்ள புண்கள் முதலியவற்றைக் குணப்படுத்தவும் இதே உத்தியைக் கையாளலாம் என்று பேராசிரியர் ஜான் ரோஜர்ஸ் சொல்கிறார். உடலுக்குள் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தவும் இந்த பயோ எலெக்ட்ரானிக் மருந்துகள் உதவும் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் இந்தக் குட்டிக் கருவிகள் எதிர்காலத்தில் மருத்துவப் புரட்சியைத் தோற்றுவிக்கும் .
PACEMAKER: An electronic device that is implanted in the body to monitor heart rate and rhythm. It gives the heart electrical stimulation when it does not beat normally. It runs on batteries and has long, thin wires that connect it to the heart.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
12-3-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
தூக்கம் – எவ்வளவு உங்களுக்குத் தேவை?
ச. நாகராஜன்
உலகில் இன்று பல லட்சம் பேர்கள் தூக்கமின்றித் தவிக்கின்றனர்.
நடைப்பயிற்சி, விளையாட்டுகள், உடல் பயிற்சி ஆகிய எல்லாவற்றையும் விட உடலுக்குத் தேவையானது நல்ல தூக்கமே.
தூக்கம் அப்படி என்ன உடலுக்கு நன்மை செய்கிறது?
லோபரோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தூக்க ஆய்வு மைய இயக்குநரான டாக்டர் ஜிம் ஹார்ன் ஒரு ஆய்வை மேற்கொண்டார்.
(Dr. Jim Horne, Director of the Sleep Research Laboratory, Loughborough University).
உடலில் மூளையைத் தவிர இதர எல்லா அங்கங்களும் தூக்கமின்றி எட்டு முதல் பதினோரு நாட்கள் வரை இயங்க முடியும் என்பதை அவர் கண்டுபிடித்தார்.
நல்ல ஓய்வு, சரியான உணவு ஆகியவற்றால் அந்த அங்கங்கள் பழைய ஆற்றலைத் திருப்பிப் பெற முடியும் என்றது அவரது ஆய்வு.
ஆனால் மூளையோ சரியான ஓய்வை எடுக்கவில்லை என்றால் மனிதனின் நடத்தையே மாறி விடும். மாயாஜாலத் தோற்றங்கள் உருவாக ஆரம்பிக்கும். உடல் சித்திரவதைக்கு உள்ளாவது போல பாதிக்கப்படும்.
ஒரே ஒரு நாள் நல்ல தூக்கத்தை இழந்தால் கூட அது நமது அன்றாட வாழ்வில் பல தவறுகளை ஏற்படுத்தி விடும். மூளையின் மேல் பகுதியான செரிப்ரல் கார்டெக்ஸ் என்னும் மூளையின் படைப்பாற்றல் பகுதியானது மட்டும் போதுமான ஊக்கம் (மோடிவேஷன்) மற்றும் நாளங்களில் போதுமான அளவு அட்ரினலின் இருந்தால் இன்னும் இயங்கும்.
ஒரு நாளைக்கு ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை.?
நமது வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் கழிகிறது என்பது பெரும்பாலானோரால் சொல்லப்படும் ஒரு கூற்று.
பொதுவாக ஏழு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை ஒருவருக்குத் தூக்கம் தேவை.
ஆனால் சிலருக்கு 5 முதல் 7 மணி நேரம் வரை தூக்கம் போதுமானதாக இருக்கிறது.
மிகச் சிலருக்கே ஐந்து மணி நேர உறக்கம் போதுமானதாக இருக்கிறது.
தூக்கம் இல்லையே என்று புலம்புவதும் வருந்துவதுமே இன்சோம்னியா என்னும் தூக்கமின்மை வியாதியை ஊக்குவிக்கிறது என்கிறது ஆய்வின் முடிவு.
இது வந்து விட்டால் மனத்தளர்ச்சி, சோர்வு கூடவே சேர்ந்து வரும்.
தூக்கத்தில் முதல் பகுதி மிகவும் முக்கியமானது. இது துரித கண் இயக்கம் அல்லது ராபிட் ஐ மூவ்மெண்ட் (ரெம் ஸ்லீப்) (Rapid Eye Movement – REM Sleep) என்று கூறப்படுகிறது.
இது ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கிறது.
சுழற்சி முறையில் ஆழ்ந்த உறக்கத்தையும் லேசான உறக்கத்தையும் நமது இயல்பான தூக்கம் மாறி மாறிக் கொள்கிறது.
மதியத்தில் நேரம் இருந்தால் ஒரு சிறிய நேப் எனப்படும் குட்டித் தூக்கம் போடலாம்.
இது 30 நிமிட நேரம் மட்டும் இருந்தால் போதும்.
சரி, நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகள் என்ன?
நல்ல தூக்கத்தைப் பெற முதலில் தூக்க நேரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் உறங்கச் சென்று குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து கொள்ளப் பழக வேண்டும்.
இந்த ஸ்லீப் ரொடீனானது, ஸ்லீப் ஹைஜீன் (sleep hygiene)
எனப்படுகிறது.
தேவையற்ற எண்ணங்களை அகற்றுதல், தியானத்தை மேற்கொள்ளல் நல்ல தூக்கத்தைத் தரும்.
மைண்ட்புல்நெஸ் என்பதை மேற்கொள்ளலாம்.
உறங்குவதற்கான நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளல் முக்கியம்.
நல்ல உணவுத் திட்டம், நல்ல உடல்பயிற்சி ஆகியவை நல்ல தூக்கத்தைத் தரும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
POSTERS ON THE WALL OF KANCHI SHANKARACHARYA MUTT DEPICTING THE LIFE OF ADI SHANKARA, THE GREASTEST PHILOSOPHER THE WORLD HAS EVER SEEN. I TOOK THESE PICTURES ON 15-3-2025
காஞ்சி சங்கராச்சாரியார் மடத்துக்குச் சென்றோம். மடத்திற்குள் எப்போதும் பூட்டிக்கிடக்கும் பெரியவரின் — காஞ்சீ மஹாசுவாமிகளின் (1894-1994) – பிருந்தாவனம் (சமாதி) – திறந்து இருந்தது; ஆனால் அவரது மற்றும் இளையவரது பிருந்தாவனங்களில் அபிஷேகம் நட ந்து கொண்டிருந்தது; சுமார் நூறு பேர் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். நாங்களும் தரிசனம் செய்தோம்;
மடத்தின் புஸ்தகக் கடைகளில் நிறைய புதிய புஸ்தகங்கள் வந்துள்ளன. மடத்தின் சுவர்களில் ஏராளமான நல்ல விஷயங்களை பொறித்துள்ளார்கள்; பயனுள்ள முயற்சி .
சுவரில் சங்கரர் வரலாறு, கோவில்கள் பற்றிய விவரங்கள் உள்ளன.
13 Mar 2023 — கோவிலுக்குள் மேலும் ஒரு அதிசயம்! காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.
2 Apr 2023 — காஞ்சிபுரத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஓரிக்கை மணி மண்டபத்ததைத் தரிசிக்கும் பாக்கியம் பிப்ரவரி 2023 ஆம் ஆண்டில்தான் கிடைத்தது. எத்தனையோ முறை காஞ்சிபுரம் சென்றாலும் மணிமண் டபத்தைக் கடக்கும் நேரம் அது மூடப்பட்ட …
A blog exploring themes in Tamil and vedic literature | Page 471