பைத்தியம் போல டான்ஸ் ஆடுங்கள்! நம்மாழ்வார் அறிவுரை (Post No.15,178)

Written by London Swaminathan

Post No. 15,178

Date uploaded in London –  13 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 LONDON RATH YATRA PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN

சம்பிரதாய பஜனைகளுக்குச் செல்லுவோர் கண்ணன் புகழ் பாடி பக்தர்கள் ஆடுவதைப் பார்த்திருக்கிறோம். அதே பஜனையில் பெண்கள் கைகளில் விளக்குகளை ஏந்தி வட்டமாகச் சுற்றி  ஆடுவதையும் பார்க்கிறோம். இளம் பெண்கள் கோலாட்டம், கும்மி அடித்து தேவியையோ கிருஷ்ணனையோ பாடி மகிழ்வதையும் பார்க்கலாம். .ஆனால் நம்மாழ்வார் சொல்லும் டான்ஸ் ஆட்டத்தை இன்று ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரிடமே பார்க்க முடிகிறது. இதை வங்காளத்தில் பிறந்த சைதன்யர், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கி வைத்தார் என்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஏனெனில் ஹரே கிருஷ்ண இயக்க ஸ்தாபகர் பக்தி வேதாந்த பிரபுபாத சுவாமிகள், சைதன்யர் போன்ற மஹான்களையே மேற்கோள் காட்டுகின்றார் .

நம்மாழ்வார் பாடிய பாசுரங்களோ சைதன்யருக்கும் 700, 800 ஆண்டுகளுக்கு முந்தையவை. நம்மாழ்வார் சொல்வது போல குதித்தும் மேலே எழும்பியும் துள்ளி ஆடுவோர் ஹரே கிருஷ்ணா இயக்கத்தினர்தான். எல்லோரும் நகைக்கும் படிசிரித்துப் பரிகசிக்கும்படியும் ஆட வேண்டும் அப்போது உடல் தலைகீழாகப் போக வேண்டும்; பக்தர்களின் தலைகள் தரையில் நமஸ்காரம் செய்யும் வகையில் ஆடவேண்டும் என்று நம்மாழ்வார் பாடுவதிலிருந்து 1300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் இத்தகைய பக்தர்கள் தெருக்களில் பஜனை செய்தது தெரிகிறது; ஏனெனில் நம்மாழ்வார் பஜனை  மடங்களைப் பற்றிப் பேசாமல் தெரு வீதிகளில் ஆடும் ஆடடத்தைக் குறிப்பிடுகிறார்.

சிலப்பதிகாரத்தில் மாதவி ஆடிய 11 வகை நடனங்களில் கிருஷ்ணர்,  சக்தி முதலிய டான்ஸ்களை சொன்னாலும் அவை எல்லாம் மேடையில் ஆடியவை;  ரசிகப்பெருமக்களை மகிழ்விக்க நடந்தவை; ஆனால்  நம்மாழ்வாரோ உண்மையான பக்திப்பெருக்கினை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறார் இத்தகைய காட்சிகளை ராம கிருஷ்ண பரமஹம்சர் விவரித்தபோதும் சைதன்ய மஹாப்ரபுவையே நமக்குக் காட்டுகிறார் உண்மையில் இந்த ஆட்டத்தின்/ நடனத்தின் பெருமை எல்லாம் நம்மாழ்வாரையே சாரும்.

அடுத்த முறை ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் டான்ஸ்களை பார்க்கையில் நம்மாழ்வார் பாசுரங்களை பாடுங்கள்; நான் முப்பது ஆண்டுகளாக லண்டனில் ஆண்டுதோறும் ரத யாத்திரையில் ஆண்களும் பெண்களும் ஆடும் ஆட்டத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அது போன்ற ஆட்டத்தை பஜனைகளில் கூடக் காணமுடிவதில்லை. விரைவில் நீங்களும் பைத்தியம் ஆகுங்கள் பரமனைப்   பாடி ஆடுங்கள் சிரிப்பார் சிரிக்கட்டும்; அவர்கள் சிறியோர் என்பது நம்மாழ்வார் வாக்கு சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று ஒரு பாசுரத்தில் ஏசுகிறார். நூற்றுக்கு நூறு உண்மை அது!

****

நம்மாழ்வார் நட்டுவாங்கம்

1

எழுந்தும் பறந்தும் துள்ள வேண்டும்

அதாவது கால் தரையில் படக்கூடாது

2

பண்கள் தலைக்கொள்ளப்பாடி

பறந்தும் குனிந்தும் ஆட வேண்டும்

3

தலையினொடு ஆதனம் தட்டாத

தடுக்கூட்டமாய் பறவி  ஆட வேண்டும்

எம்பெருமான் குணங்களைப்  ப்பாடி ஆடுகையில் தலை தரையில் படும்படி கீழது மேலதாய்ப் பறந்து பறந்து ஆடவேண்டும் .

4

சிறீதரன் தொல் புகழ் பாடி

கும்பிட்டு நட்டம் இட்டு ஆடி

கோகு உகட்டுண்டு உழலாதார்

அதாவது பாடிக்கொண்டே குதித்துக் கூத்தாடி தலை மண்டியிட்டு ஆடவேண்டும்

5

இதைச் செய்யாதார் ஊண் மல்கி மோடு பருப்பார் == அதாவது சோற்றால் அடித்த சதைப்   பிண்டங்கள் போல்வர்

***

திருவாய்மொழி-3-5-

மொய்ம் மாம் பூம் பொழில் பொய்கை முதலைச் சிறைப் பட்டு நின்ற

கைம்மாவுக்கு அருள் செய்த கார் முகில் போல் வண்ணன் கண்ணன்

எம்மானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்

தம்மால் கருமம் என் ? சொல்லீர் தண் கடல் வட்டத்து உள்ளீரே ?–3-5-1

*****

தண்  கடல் வட்டத்து உள்ளாரைத் தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்

திண் கழல் கால் அசுரர்க்குத் தீங்கு இழைக்கும் திரு மாலை

பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்து உழலாதார்

மண் கொள் உலகில் பிறப்பார் வல் வினை மோதம் அலைந்தே –3-5-2

***

மலையை எடுத்துக் கல் மாரி காத்துப் பசு நிரை தன்னை

தொலைவு தவிர்த்த பிரானைச் சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்

தலையினோடா தனம் தட்டத் தடு குட்டமாய்ப் பறவாதார்

அலை கொள் நரகத்து அழுந்திக் கிடந்தது உழைக்கின்ற வம்பரே –3-5-3

****

வம்பவிழ் கோதை பொருட்டா மால் விடை ஏழும் அடர்த்த

செம் பவளத் திரள் வாயன் சிரீதரன் தொல் புகழ் பாடி

கும்பிடு நட்டம் இட்டு ஆடிக் கோகு கட்டு உண்டு உழலாதார்

தம் பிறப்பால் பயன் என்னே ? சாது சனங்கள் இடையே –3-5-4

****

சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு

ஆதி அம சோதி வுருவை அங்கு வைத்து இங்கு பிறந்த

வேத முதல்வனைப் பாடி வீதிகள் தோறும் துள்ளாதார்

ஓதி வுணர்ந்தவர் முன்னா என் சவிப்பார் மனிசரே ?–3-5-5

English translation of verse 3.5.5:

Not all their learning and mumblings dry will make them men,

If they dance not in the open streets, love-smitten

And sing not the glory of the Lord, by Vedas acclaimed

As the foremost, who did in all that supernal splendor descend

From the high heavens, to kill Kañcaṉ, the tyrant

Who did the soft and pious men torment.

***

வார்புனல் அம் தண் அருவி வடதிருவேங்கடத்து எந்தை,

பேர்பல சொல்லிப் பிதற்றி பித்தர் என்றே பிறர்கூற,

ஊர்பல புக்கும் புகாதும் உலோகர் சிரிக்க நின்று ஆடி,

ஆர்வம் பெருகிக் குனிப்பார் அமரர் தொழப்படுவாரே.

English translation of verse 3.5.8:

Those that articulate, with yearning deep, the names many

Of our Lord in Vaṭa Tiruvēṅkaṭam, with its fountains many

And cool, nice cascades, pass in and out of many a town,

Singing and dancing in ecstasy like mad men,

By worldlings ridiculed, will be worshipped by those in heaven.

—subham—

Tags- பைத்தியம் போல,டான்ஸ் ஆடுங்கள், நம்மாழ்வார் அறிவுரை, ஏனையோர் சிரிக்கட்டும், ஹரே கிருஷ்ணா இயக்கம், டான்ஸ்

கோமோரெபி (Komorebi): இயற்கை அன்னை தன்னைப் போற்றும் போது தரும் அருள் கொடை! (Post.15,177)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,177

Date uploaded in London –   13 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

27-8-2025 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை!

கோமோரெபி (Komorebi): இயற்கை அன்னை தன்னைப் போற்றும் போது தரும் அருள் கொடை!

ச. நாகராஜன்

எழில் கொஞ்சும் இயற்கை அன்னை மனித குலத்தை நேசிக்கும் அருள் தாய். தன்னைப் போற்றி வணங்குபவர்க்கு அவள் உள்ள நலம், உடல் நலம், நீடித்த வாழ்வு, மன அமைதி உள்ளிட்டவற்றை வழங்குகிறாள்.

 இந்திய நாகரிகம், ஜப்பானிய நாகரிகம், சீன நாகரிகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இதை உணர்ந்தவர்களாவர்.

 ஜப்பானிய நாகரிகத்தில் கோமோரெபி என்பது ஒரு முக்கியமான அம்சம்.

கோ, மோ, ரெபி ஆகிய மூன்று வார்த்தைகள் சேர்ந்தது தான் கோமோரெபி.

கோ என்றால் மரம் என்று பொருள். மோ என்றால் ஊர்ந்து நகர்தல் என்று பொருள். ரெபி என்றால் சூரிய ஒளி என்று பொருள். ஆக கோமோரெபி என்ற வார்த்தைக்கு சூரிய ஒளி மரங்களுக்கு இடையில் வடிகட்டப்பட்டு ஊர்ந்து செல்லும் போது ஏற்படும் மாயாஜால விளைவு என்று பொருள்.

 ஒளி அந்த இயற்கைச் சூழலில் மரங்களுக்கு இடையே செல்லும் போது மரங்களின் இலைகள் மீது பட்டு வடிகட்டப்பட்டு நம் மீது வந்து விளையாடும்.

இயற்கைக்கும் நமக்கும் உள்ள புனிதமான தொடர்பை வலுப்படுத்துவது கோமோரெபி.

இது நமக்கு ஏற்படுத்தும் முக்கியமான நல்ல விளைவு மன அழுத்தத்தைக் குறைப்பது தான். மன நிலையைச் சீராக்கி மூளை இயக்கத்தை இது மேம்படுத்துகிறது.

சூரிய ஒளி நியூரோ டிரான்ஸ்மிட்டரை வெளிப்படுத்தும் செரோடோனினை வெளிப்படுத்தி மன மகிழ்ச்சியையும் நல்ல உணர்வையும் ஏற்படுத்துகிறது.

அது மட்டுமல்ல, படைப்பாற்றலை ஊக்குவித்து விழிப்புணர்ச்சியைத் தூண்டிவிட்டு ஓய்வை நல்கி புத்துணர்ச்சியை அளிக்கிறது.

ஒரு முறை இந்தக் கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பில் நாம் சிறிது நேரத்தைக் கழித்தாலும் அது நாம் நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திலும் அன்றாட வாழ்வில் நம்மிடம் குடி கொண்டு விடும்.

 அடிக்கடி குற்றாலம், பொதியமலை, தேக்கடி உள்ளிட்ட இடங்களுக்கும் முடிந்தவர்கள் இமயமலைச் சாரல் சார்ந்த இடங்களுக்கும் சென்று கோமோரெபி பயனைப் பெறலாம்.

இப்படி இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் அதைத் தங்கள் இல்லத்திலும் கூட கொண்டு வரலாம்.

இதற்கென உள்ள,  வீட்டில் வளரும் நல்ல செடிகளை வாங்கி அதை ஒளி உள்வாங்கும் இடங்களில் வைப்பதன் மூலம் செடிகளில் வடிகட்டப்பட்ட ஒளியையும் நிழலையும் பெறலாம்.

 இயற்கைக் காட்சிகள் நிறைந்த காட்டு வளத்தைக் காட்டும் ஓவியங்கள் ஆயிரக் கணக்கில் உள்ளன. இவற்றை அறையின் சுவரில் மாட்டி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு காட்டின் நடுவே இருப்பது போன்ற உணர்வை மனதில் கொண்டு வந்து அனுபவிக்கலாம்.

 எங்கு வாழ்ந்தாலும் கூட அன்றாட வாழ்வில் கோமோரெபி எஃபெக்டைக் கொண்டு வர முடியுமா?

முடியும். இதோ வழிகள்:

பூங்கா, மரம் அடர்ந்த பகுதிகளுக்குச் சென்று எப்படி ஒளியானது மரங்களின் ஊடே வருகிறது என்பதைக் கூர்ந்து கவனித்து ஒளியையும் அதன் நிழலையும் மனதில் இருத்தி ஓய்வைப் பெறலாம்,

வீட்டின் உள்ளே உட்புறத்தை அலங்கரிக்கும் போது திரைச்சீலைகளை இயற்கைக் காட்சிகளுடன் கூடியதாக -, மரங்களின் மீது ஒளிபடும் காட்சியுடன் – வாங்கி அதை மாட்டலாம். வீட்டின் உள்ளே வளர்க்கக் கூடிய செடிகளை வாங்கி கோமோரெபி விளைவை அனுபவிக்கலாம்.

போட்டோ பிரியர்கள் இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து அதை பெரிய சைஸில் வீட்டில் மாட்டலாம். ஓவியர்கள் தங்களுக்குப் பிடித்த வனக் காட்சிகளை வரைந்து அதை மாட்டிக் கொள்ளலாம்.

இப்படி காட்டு வளத்தை, வீட்டு வளம் கூட ஒருமுனைப்பட்ட கவனத்துடன் இல்லத்தில் திறம்படக் கொண்டு வந்தால் ஜப்பானின் கோமோரெபி நமது வீட்டிற்குள் வந்தது போல் தான்!

இந்த இயற்கை வனப்பை அனுபவிக்கலாமே!

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 15 (Post.15,176)

Written by London Swaminathan

Post No. 15,176

Date uploaded in London –  12 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிரம்ம ரிஷி தேசம்

மனு ஸ்ம்ருதி புனிதமான இடம் என்று வருணிக்கும் பிரதேசம்.

 சரஸ்வதி நதிக்கும், த்ருஷத்வதி நதிக்கும் இடைப்பட்ட பிரதேசம் கடவுளால் உருவாக்கப்பட்ட பிரம்மாவர்த்த தேசம் ஆகும்.

 அந்த தேசத்தில் எப்போதும் பெரியோர் வசிப்பதால் பிராமணர் முதலிய வருணத்தாருக்கும் கலப்பு ஜாதியாருக்கும் ஆதிகாலத்திலிருந்தே ஆசார விதிகள் பாரம்பர்யமாக உள்ளன.

.குரு, மத்ஸ்ய, பாஞ்சால, சூரசேன தேசங்கள் பிரம்மரிஷி தேசம் எனப்படும். இவை பிரம்மாவத்தத்துக்கு அடுத்த நிலையில் உள்ளன.

.இந்த தேசங்களில் பிறந்த பிராமணர் இடத்தில் ஒவ்வொருவரும் தர்மத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

Brahmavarta, Bramarishi Desa

That land, created by the gods, which lies between the two divine rivers Sarasvati and Drishadvati, the sages call Brahmavarta. 

The custom handed down in regular succession (since time immemorial) among the four chief castes (varna) and the mixed castes of that country, is called the conduct of virtuous men. 

The plain of the Kurus, the country of the Matsyas, Panchalas, and Surasenakas, these form, indeed, the country of the Brahmarshis (Brahmanical sages, which ranks) immediately after Brahmavarta.

***

பிரம்ம புராணம்

புராணங்கள் பதினெட்டில் முதலில் வருவதால் இதை ஆதி புராணம் என்பார்கள் எட்டாயிரம் ஸ்லோகங்கள் வரை இப்போது கிடைக்கிறது. சூரிய வழிபாடு இதில் சிறப்பிடம் பெற்றுள்ளது . ஒரிஸ்ஸாவிலுள்ள பிற்காலக் கோவில்களையும் குறிப்பிடுவதால் இது பிற்கால புராணமாக இருக்கலாம் அல்லது அவை இடைச் செருகலாக இருக்கலாம் . புராணத்துக்குரிய பஞ்ச லட்சணங்கள் குறைவாகக் காணப்படுகின்றன

****

Brahma Purana

In the list of Puranas it come first and so called Aadi Purana (First Purana). But the mention of latter day Orissa temples shows that it is a later Purana. Sun worship occupies important place. Now we get 8000 slokas of this book. But the Pancha Lakshana definition for Puranas is not followed much.

***

பிந்து

பிந்து – ஒரு புள்ளி, பொட்டு; நெற்றியில் அணியும் திலகத்துக்கும் இந்தப் பெயர் .லலிதா சஹஸ்ரநாமத்தில் ஸ்ரீ சக்ரத்தின் மையப்புள்ளியை பிந்து என்பார்கள் .அங்கு தேவி வசிப்பதாக ஐதீகம் பிந்து தர்ப்பண ஸந்துஷ்டா , பிந்து மண்டல வாஸினி – என்ற நாமங்களை லலிதா சகஸ்ரநாமத்தில் காணலாம்; ஸ்ரீ சக்ரத்தின் நடுவிலுள்ள இடத்தில் வசிப்பவள் என்றும் யோக சம்பந்தமான பொருளும் இதற்கு உண்டு  

BINDU– a drop, a dot, small particle; another name tilaka; small dot worn on forehead in between the brows. In the Lalita Sahasranama we come across Bindu in one or two Naamaas, meaning the centre  of Sri Chakra where Goddess Lalitha is residing.  Bindhu tharpana santhushta – She who is happy with the offering in the dot of Ananda maya chakra.

Bindu mandala vaasini – She who lives in the dot in the centre of Srichakra

***

பாஷ்யம்– உரை;  ஆதிசங்கர முக்கிய உபநிஷத்துக்கள் அனைத்துக்கும் பாஷ்யம் எழுதினார் .

BHAASHYA – commentary on a text. Adi Shankara wrote commentaries on important Upanishads.

***

பஜ்ரங் தளம்

இது இந்துக்களின் விரோதிகளுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கையில் இறங்கத் தயங்குவதில்லை; இதை விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் பிரிவு என்று சொல்கிறார்கள். பத்திரிகைகளில் அடிக்கடி இடம்பெறும் இந்து சமய இயக்கம் ஆகும்

BAJRANG DAL

Bhajrangi is the name of Anjaneya or Hanuman. Bajrang Dal is a militant movement which vehemently oppose anti Hindu activities. It has hit the headlines when its members attacked anti Hindus in the Northern India. It is considered a youth wing of Viswa Hindu Parishad

***

பாஹுபலி

இதன் பொருள் வலுவான கரம் படைத்தவன் என்பதாகும் . சமண மத தீர்த்தங்கரர்களில் முதலாமவர் ரிஷபநாதர் அவரது புதல்வரான பாஹுபலி 12 ஆண்டுகள் நின்ற வாறே தவம் புரிந்து வீடுபேறு பெற்றார். அவர் மீது செடிகொடிகள் வளர்ந்தன; கோமடேஸ்வர என்ற பெயரில் அவருடைய பிரம்மாண்டமான சிலை கர்நாடகத்தில் சிரவன பெலகோலாவில் உள்ளது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடைய சிலை; 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா மஸ்தகாபிஷேகம் நடக்கிறது இவரது சகோதரரே பரத சக்ரவர்த்தி.

 Bahubali ( Bāhubalī, lit. ’one with strong arms’) was the son of Rishabhanatha (the first tirthankara of Jainism) and the brother of the chakravartin Bharata. He is a revered figure in Jainism. He is said to have meditated motionless for 12 years in a standing posture (kayotsarga), with climbing plants having grown around his legs. After his 12 years of meditation, he is said to have attained omniscience (kevala jnana). Bahubali’s other names are Kammateshwara and Gommateshwara, His huge statue is in Srvana belagola in Karnataka.

***

பட்டர், பட்டாச்சார்யார்

கோவில்களில் பூஜை செய்யும் அச்சகர்களை சில கோவில்களில் பட்டர்கள் என்பார்கள்; வைஷ்ணவ கோவில்களில் பட்டாச்சார்யா என்பார்கள்.  குருக்கள் என்று சொல்லும் இவர்களுக்கு பொருந்தும். சிவாச்சாரியார்கள் என்றும் அழைத்துக் கொள்வார்கள்.

BHATTAR , BHATTACHARYA

In the Saiva temples like Madurai Meenakshi Sundareswar temple the priests are called Bhattars. In Vaishnava temples they are called Bhattachaaryas.

***

பாலி என்னும் தீவு இந்தோனேசியாவின் ஒரு தீவாகும் அங்கேஉள்ள இந்துக்கள் இன்று வரை இந்து மதத்தைப்  பின்பற்றி வருகிறார்கள் ஆனால் தொலைவு காரணமாக இந்தியாவில் உள்ள இந்து மத தெய்வங்களுக்கும் வழிபாடுகளுக்கும் இடையே அங்கே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன தற்காலத்தில் அது ஒரு பெரிய சுற்றுலாத்தலமாகவும் அமைந்துவிட்டது.

BALI IN INDONESIA

Baali island in Indonesia is a Hindu Island. The people there follow Hinduism, slightly different from the mainland India. Due to distance in Time and Location, these differences are understandable. Nowadays it has become a tourist destination.

***

 ஆங்கில எழுத்துக்களில் பி B என்னும் எழுத்தில் துவங்கும் மூன்று தாவரங்கள் பேல்/ வில்வம், பேசில்/ துளசி, பானியன்/ ஆலமரம் ஆகும்

 வில்வம் என்பது சிவனுக்குரியது துளசி என்பது விஷ்ணுவுக்குரியது   வில்வ இலையை பேல்  என்பார்கள். துளசியை பேசில் என்பார்கள் ஆக வில்வமும் துளசியும் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் முக்கிய அர்ச்சனை இலைகளாக அமைகின்றன இவைகள் எளிதில் கிடைக்கும் இதற்கு செலவு ஆகாது மேலும் இவைகளுக்கு மருத்துவ குணமும் உண்டு அடுத்த படியாக பேனியன் என்று ஆங்கிலத்தில் சொல்லும் ஆலமரமும் முக்கிய வழிபாடாகும். ஆலமரத்தின் கீழ் தட்சிணாமூர்த்தி என்ற வடிவத்தில் சிவன் அமர்ந்திருக்கிறார். பல இடங்களில் பிள்ளையார் முதலிய தெய்வங்களின் கோவில்களும் இருக்கும். வட விருட்சம் என்று அழைப்பார்கள் மேலும் குரு க்ஷேத்ரத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் தான் கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையை உபதேசித்தார். இன்றும் அந்த ஆலமரம் வழிபடப்படுகிறது

BEL

In Tamil Vilva leaves; used in Shiva Puja. These leaves are used in all the Shiva temples.

BASIL

In Tamil Thuasi (Tulsi). Used in all the Vishnu temples and used in the Puja. Tulsi is grown in homes and Mutts and worshipped every day.

BANYAN/ VATA VRKSHA

In Tamil Aala Maram and in Sanskrit Vata Vrksha. It is a holy tree under which Shiva in the form of Dakshinamurthy gave teachings to four great Ridhis/seers. Also Lord Krishna did deliver the Bhagavad Gita under this tree in Kurukshetra. It is venerated even now.

***

 பிரம்மபுத்திரா நதி

இமயமலையில் கங்கா, சிந்து, பிரம்மபுத்திரா ஆகிய மூன்று நதிகளும் மானச சரோவர் என்ற ஏரியைச்  சுற்றியுள்ள இடங்களில் இருந்து புறப்படுகின்றன பிரம்மபுத்திரா நதி திபெத் (சீனாவின்) வழியாக வந்து இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பெருக்கெடுத்து பிறகு வங்காளத்தில் கங்கையுடன் கலக்கிறது. நதிகளில்  இரண்டாயிரம் மைல்களுக்கு சற்று குறைவான தூரம் ஓடும் (1800 மைல் நீளம்) நதி ஆகும். ஆண்கள் பெயர் உள்ள நதி இது ஒன்று மட்டும் தான்.

Brahmaputra

One of the three rivers that originates in the Himalayas near the vast Manasa Sarovar lake. The other two rivers are Ganga and Sindhu (Ganges and Indus). This rive enters India via Tibet (occupied by China) and irrigates Assam ,Begal in India and joins the Ganga before emptying into Bay of Bengal. It is 1800 mile long. It is the only river with a male name.

***

பிரம்மலோகம் என்பது பிரம்மாவின் இருப்பிடம் இ தை  சத்திய லோகம் என்றும் சொல்லுவார்கள் விஷ்ணு இருக்கும் இடம் வைகுண்டம் சிவன் இருக்கும் இடம் கைலாயம் சக்தி இருக்கும் இடம் ஸ்ரீ சக்கரம்/ மணி த்வீபம் என்றும் சொல்வார்கள்.

Brahmaloka

Place where Brahma lives; also called Sathya loka. Similarly we have Kailasa for Lord Shiva, Vaikunda for Lord Vishnu and Manidwipa/Sri Chakra for Devi or Shakti

***

போதாயன தர்ம சூத்திரம்

கிருஷ்ண யஜுர் வேதத்தின் தைத்ரீய பிரிவினைச் சார்ந்தது. இதில் தர்ம சாஸ்திரம், தினசரிக் கடமைகள், வேள்விச் சடங்குகள் மட்டுமின்றி வியத்தகு கணித விஷயங்களும் இருக்கின்றன ; காலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது.

தென்னாட்டில் உள்ள இந்துக்கள் போதாயன அல்லது ஆபஸ்தம்ப என்ற இரண்டு சூத்திரங்களில் ஒன்றினைப்  பின்பற்றுகிறார்கள். குறிப்பாக குருக்கள் மார்கள்  போதாயன சூத்திரத்தைப்

பின்பற்றுகிறார்கள் போதாயனர், ஆபஸ்தம்பர் என்ற இருவரும் பெரிய ரிஷி முனிவர்கள்.

BODHAYANA

Bodhaayana is one of the seers who codified rules on Dharma. Another seer is Aapasthamba.. In Tamil Nadu temple priests mostly follow Bodhaayana Dharma sutra.

The Baudhāyana sūtras (Sanskrit: बौधायन सूत्रस् ) are a group of Vedic Sanskrit texts which cover dharma, daily ritual, mathematics and is one of the oldest Dharma-related texts of Hinduism that have survived into the modern age from the 1st-millennium BCE. They belong to the Taittiriya branch of the Krishna Yajurveda school and are among the earliest texts of the genre.

***

சம்ஸ்கிருதத்தின் புகழ்பெற்ற கவிஞர்கள் பலர்  பாண பாணபட்டர்   பத்ரு ஹரி , பில்ஹணர் பாஷா ஆகியோர் ஆவார்கள் இவர்களின் முக்கியமானவர் பாஷா கவி அவர் எழுதிய 13 நாடகங்கள் நமக்கு கிடைத்துள்ளன அவர் காளிதாக ச ருக்கும் முந்திய காலத்தில் வாழ்ந்தவர் அவர் எழுதிய  சம்ஸ்கிருத நாடகங்களில் முக்கியமானது ஸ்வப்னா வாசவ  தத்தம்..

BHASHA KAVI

Sanskrit has many famous poets with B as the initial letter such as Baana, Bhaana Bhatta, Bhartruhari, Bhilhana, Bhasakavi etc. Of these poets, Bhaasa kavi who wrote 13 Sanskrit dramas is the most famous one. He lived before Kaldasa, in second century BCE or earlier. His Swapnavasava datta is a famous drama.

***

பாதாமி இதனுடைய இன்னொரு பெயர் வாதாபி வாதாபியில் இருந்து சிறு தொண்டன்ர்  கொண்டு வந்த கணபதி தமிழ்நாட்டில் பிள்ளையார் வழிபாட்டினைப்  பிரபலமாகியது மேலும் பாதாமியின் ல் குகைக்  கோவிலும் இருக்கிறது ஒரு காலத்தில் சாளுக்கியரின் தலைநகராக விளங்கியது இப்போது கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது

BADAMI

Baadaami is a cave temple in Karnataka with Hindu, Buddhist and Jain sculptures. It was the capital of Chalukya rulers.  It is the corrupted name of Vaataapi. In Tamil Nadu , Ganesh worship became popular after a Ganesh statue was brought from this place by the Pallava army commander Siruthondar. He is one of the 63 Saivite saints called Naayanmaars.

***

பவ  சாகரம் என்பது பிறவிப் பெருங்கடல்; இதைக் கடப்பதை இந்துக்கள் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள் திருக்குறளின் கடவுள் வாழ்த்திலும் பிறவிப் பெருங்கடல் குறள் வருகிறது  தியாகராஜர் முதலிய சங்கீத மேதைகள் பாடிய பாடல்களிலும் இந்த  பவ  சாகரம் சொல் அடிக்கடி வரும்.

BHAVA SAGARA

Bhava saagara means  the ocean of Birth and death. In Tamil, poets like Tiru Valluvar used Piravip Perunkadal , as translation of Bhava sagara. This word occurs in several Tamil and Sanskrit poems and songs.

***

பாஷா

பாஷா என்றால் மொழி என்று அர்த்தம் பாணினி என்ற உலக முதல் இலக்கண கர்த்தா  சம்ஸ்க்ருதம் என்று சொல்லாமல் பாஷா என்றே சொல்கிறார்; தமிழில் அதை எழுதுபவர்கள் பாடை என்று எழுதுவார்கள். இந்தியாவில் 18 முக்கிய பாஷைகள் இருந்ததை பல புலவர்களும் பாடி இருக்கிறார்கள்.

BHASHAA

It means language. For long poets have been singing India a land of 18 bhashaas. We find it in Tamil for at least 1400 years. Panini, the oldest grammarian in the world used it for Sanskrit; he never used Sanskrit for the language.

***

பிராமி

இது சரஸ்வதியின் ஒரு பெயர். இந்தியாவில் உள்ள மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள எழுத்துக்களுக்கு எல்லாம் மூலமான  எழுத்து பிராமியாகும். இதனுடைய வடிவத்தில்தான் தமிழ் மொழியும் வந்திருக்கிறது. அசோக மன்னன் காலம் முதல் நமக்கு பிராமி எடுத்துள்ள கல்வெட்டுகள் கிடைக்கின்றன தமிழ்நாட்டிலும் ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முந்தைய  பிராமி கல்வெட்டுகளை காண முடிகிறது.

BRAHMI

Braahmi is the script that gave birth to all scripts in India and South East Asia. Asoka used this script to spread Buddhism in his inscriptions. We get Brahmi inscriptions from Afghanistan to Sri Lanka. In Tamil Nadu, the oldest inscriptions are in Brahmi script. Tamil script used today evolved from it.

***

பைரவன் சிவனுடைய ஒரு வடிவம் தமிழ் கோவில்களில் பைரவன் என்ற சன்னதி தனியாக இருக்கிறது அவருடைய வாகனம் நாய். பைரவ வழிபாடு வட இந்தியாவில் உண்டு டாக்டர் இரா. நாகா சாமி ஆங்கிலத்தில் பைரவர் வழிபாடு பற்றி அருமையான ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் இந்தியாவின் வட, தென் பகுதிகளிலும் நேபாளத்திலும் பைரவர் வழிபாடு நடைபெறுகிறது. சைவ சம்பந்தமான கோவில்களில் பைரவருக்கு தனி சந்நிதி உண்டு பைரவர் என்பது சிவனின் உக்கிரமான வடிவமாகும்.

எட்டு வகையான பைரவர்கள் இருப்பதால் அஷ்ட பைரவர் என்று சொல்வார்கள். பைரவனை வணங்கினால் பயம் அகலும்  ஆதிசங்கர் , கால பைரவர் அஷ்டகம் என்ற ஒரு துதியையும் செய்திருக்கிறார்.

BHAIRAVA

Bhairava means the terrible. His vahana is Dog

There are eight principal forms of Bhairava, collectively known as the Ashta Bhairavas. Known as Kaala Bhairava, the “Slayer of Time,” Bhairava represents mastery over time and fear. This fierce form of Shiva instils terror in the wicked while granting fearlessness to His devotees.

Every Shakti Peetha is guarded by a Bhairava, who serves as its Kshetrapala (guardian deity).

The great philosopher Adi Shankara composed the Kalabhairava Ashtakam, an eight-verse hymn, in praise of this formidable form of Shiva.

–Subham—

Tags- பாதாமி, போதாயனர், பிரம்மபுத்ரா, பாஷ்யம், Hindu Dictionary, Part 15, இந்துமத கலைச்சொல் அகராதி– Part 15, Brahma Rishi Desa.

Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம் -Part 24 (Post.15,175)

Written by London Swaminathan

Post No. 15,175

Date uploaded in London –  12 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கால பைரவர் வழிபாடுஇன்றைய தினம் கால பைரவ அஷ்டமி

Today is Kala Bhairava Ashtami

Part 24

Who is Kala Bhairava (kaalabhairava)?

Bhairava (masculine), Bhairavi (feminine)- Names of Siva and his wife Parvati

Bhairava means the terrible. His vahana is Dog

There are eight principal forms of Bhairava, collectively known as the Ashta Bhairavas. They are

Asitaanga – black limbed

Samhaara – destructive;

Ruru – a dog;

Kaala – black or Time

Krodha – anger;

Taamra chuudaa- red crested;

Chandra chuudaa- moon crested;

Mahaa – great.

Other names are – Kapaala, Rudra, Bhiisana, Unmatta, Ku pati.

In these forms He rides a dog. So he is also calledSwaasva meaning Whose horse is a Dog.

Kalabhairava (Bhairava): Slayer of Time

Known as the “Slayer of Time,” Bhairava represents mastery over time and fear. This fierce form of Shiva instils terror in the wicked while granting fearlessness to His devotees.

Every Shakti Peetha is guarded by a Bhairava, who serves as its Kshetrapala (guardian deity). After severing the fifth head of Brahma, Bhairava was afflicted by Brahmahati Dosha (the curse of killing a Brahmin). He wandered until He reached Kashi (Varanasi), where He was finally absolved of this curse.

The great philosopher Adi Shankara composed the Kalabhairava Ashtakam, an eight-verse hymn, in praise of this formidable form of Shiva.

According to Silpasaara, Kala Bhairava wears a girdle of tiny bells on his waist and hods the sword, trident, drum and the drinking cup in his hands. He has a fearsome face with protruding teeth, a garland of skulls and dishevelled hair.

In Durgi in Andhra Pradesh, the dog which is his vehicle is seen biting a human head held by the left lower hand of the image. The goddess with her companion is standing to the right, evidently frightened at the serpent ornaments and the terrible form of Bhairava.

Figures of Bhairava with his dog vehicle and the five hooded serpent over head are found in Bellary area.

Bhirava worship is observed in Nepal and ancient Indonesia.

****

Kaala Bhairava Jayanti (or Bhairava Ashtami), celebrated in North India during the month of Margashirsha (December-January) and in South India during Kartik. Month is calculated differently in Tamil Nadu and other parts of India.  Tamils calculate a month based on Sun’s movement; others calculate a month from the New Moon day/Amavasyai.

***

கால பைரவர் வழிபாடு

இன்றைய தினம் கால பைரவ அஷ்டமிபைரவ ஜெயந்தி .

பைரவ = வைரவ

இந்தியாவின் வட, தென் பகுதிகளிலும் நேபாளத்திலும் பைரவர் வழிபாடு நடைபெறுகிறது. சைவ சம்பந்தமான கோவில்களில் பைரவருக்கு தனி சந்நிதி உண்டு அவருடைய வாகனம் நாய். அதனால் அவருடைய உருவத்தை எளிதில் கண்டுபிடிக்கலாம். பைரவர் என்பது சிவனின் உக்கிரமான வடிவமாகும். பைரவி என்பது அவரது மனைவியின் பெயர்.

பைரவரின் கைகளில் வாள்,   திரிசூலம் ,கபாலம், உடுக்கை முதலியன காணப்படும்; அவருடைய பற்கள் வெளியே நீட்டிக்கொண்டிருக்கும். தலைமுடி கலைந்த வடிவத்தில் இருக்கும் .

சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றிணை துண்டித்த பின்னர் அந்தக் கையில் ஒரு தலை ஒட்டிக்கொண்டது. பிரம்மனைக் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பிடித்துக் கொண்டது இறுதியில் காசிக்குச் சென்ற பின்னர் பிராமணனை கொன்ற தோஷம் விலகியது என்பது கதை.

பைரவன் சிலைகளில் பல்வேறு மாறுதல்களும் காணப்படுகின்றன. எட்டு வகையான பைரவர்கள் இருப்பதால் அஷ்ட பைரவர் என்ற ஒரு வாக்கியமும் உண்டு. பைரவனை வணங்கினால் பயம் அகலும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். பைரவ என்ற சொல்லுக்கு பீரு என்ற வேர்ச்சொல் காரணம்; அதற்கு பயம் என்று பொருள். எதிரிகளின் மனதில் பயத்தை உண்டாக்குவார், பக்தர்களின் மனதில் இருந்து பயத்தை அகற்றுவார். ஆதிசங்கர் , கால பைரவர் அஷ்டகம் என்ற ஒரு துதியையும் செய்திருக்கிறார். கால பைரவர் என்றால் காலத்தை (TIME டைம்) நிர்மூலம் செய்பவர். உஜ்ஜெயினில் இருக்கக்கூடிய மகாகாலம் என்ற சிவனுடைய வடிவமும் இத்துடன் தொடர்புடையது.

புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரும், தொல்பொருட்துறை  நிபுணரும் ஆன காலம் சென்ற டாக்டர் இரா நாகசாமி பைரவ  உருவங்களை ஆராய்ந்து ஒரு விரிவான நூலை எழுதியுள்ளார். சமஸ்கிருத நூல்களில் உள்ள பைரவ வடிவம் பற்றிய செய்திகளை ஆராய்ந்து அவர் புதிய கோணத்தில் தகவல் கொடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள மியூசியங்களில் உள்ள உருவங்களுக்கு இதை படித்த பின்னர் புதிய விளக்கம் கிடைக்கும்.

பைரவருடைய உருவம் நேபாளம், இந்தோனேசியா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. இன்றைய தினம் கால பைரவர் அஷ்டமி இந்த தினத்தை வைரவ ஜெயந்தி என்றும் சொல்வார்கள் தென்னிந்தியாவில் ஐப்பசி கார்த்திகை மாதத்திலும், வட இந்தியாவில் மார்கழி மாதத்திலும் கொண்டாடுகிறார்கள் மாதங்களை கணக்கிடும் போது தமிழர்கள் சூரியனின் போக்கினை கொண்டு கணக்கிடுகிறார்கள்; ஏனையோர் அமாவாசை தினத்தில் இருந்து புதிய மாதம் தொடங்கியதாக கணக்கிடுகிறார்கள் கணக்கிடுகிறார்கள்; ஆகையால் இந்த வேறுபாடு .

தமிழ்நாட்டில் பல கோயில்களில் பைரவரின் பெரிய உருவங் கள் இருக்கின்றன பட்டீஸ்வரம், ஆந்திர மாநிலத்தில் துர்கி  ஆகிய இடங்களில் இதைக்  காணலாம். சக்தி வழிபாடு உள்ள இடங்களில் பைரவர் சிலையும் இருக்கிறது. லண்டனில் இலங்கைத்  தமிழ் கோவில்களில் கடைசியாக பைரவர் சன்னதி இருக்கும் அதை வணங்கிவிட்டு செல்வார்கள் பைரவர் என்பது காவல் தெய்வம் என்பது ஒரு கருத்து.

பைரவ உருவங்களின் அஷ்ட பைரவர்/ எட்டு  உருவங்கள்:

1.அசி தாங்க, 2.கால, 3.க்ரோத, 4.ருரு, 5.தாமிர சூட,  6.சந்திர சூட, 7.சம்ஹார,  8.மகா  பைரவர்கள் என்னும் எட்டு வடிவங்கள் ஆகும்

 ****

காலபைரவாஷ்டகம்

தே³வராஜ-ஸேவ்யமான-பாவனாங்க்⁴ரி-பங்கஜம்

வ்யாளயஜ்ஞ-ஸூத்ரமிந்து³-ஶேக²ரம் க்ருபாகரம் ।

நாரதா³தி³-யோகி³ப்³ருந்த-³வந்தி³தம் தி³க³ம்ப³ரம்

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 1 ॥

பா⁴னுகோடி-பா⁴ஸ்வரம் ப⁴வப்³தி⁴தாரகம் பரம்

நீலகண்ட-²மீப்ஸிதார்த-²தா³யகம் த்ரிலோசனம் ।

காலகால-மம்பு³ஜாக்ஷ-மக்ஷஶூல-மக்ஷரம்

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 2 ॥

ஶூலடங்க-பாஶத³ண்ட-³பாணிமாதி³-காரணம்

ஶ்யாமகாய-மாதி³தே³வ-மக்ஷரம் நிராமயம் ।

பீ⁴மவிக்ரமம் ப்ரபு⁴ம் விசித்ர தாண்ட³வ ப்ரியம்

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 3 ॥

பு⁴க்தி-முக்தி-தா³யகம் ப்ரஶஸ்தசாரு-விக்³ரஹம்

ப⁴க்தவத்ஸலம் ஸ்தி²ரம் ஸமஸ்தலோக-விக்³ரஹம் । [ஸ்தி²தம்]

நிக்வணன்-மனோஜ்ஞ-ஹேம-கிங்கிணீ-லஸத்கடிம் [வினிக்வணன்]

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 4 ॥

த⁴ர்மஸேது-பாலகம் த்வத⁴ர்மமார்க³ நாஶகம் [னாஶனம்]

கர்மபாஶ-மோசகம் ஸுஶர்ம-தா³யகம் விபு⁴ம் ।

ஸ்வர்ணவர்ண-கேஶபாஶ-ஶோபி⁴தாங்க-³மண்ட³லம் [ஶெஷபாஶ, நிர்மலம்]

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 5 ॥

ரத்ன-பாது³கா-ப்ரபா⁴பி⁴ராம-பாத³யுக்³மகம்

நித்ய-மத்³விதீய-மிஷ்ட-தை³வதம் நிரஞ்ஜனம் ।

ம்ருத்யுத³ர்ப-னாஶனம் கராளத³ம்ஷ்ட்ர-மோக்ஷத³ம் [பூ⁴ஷணம்]

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 6 ॥

அட்டஹாஸ-பி⁴ன்ன-பத்³மஜாண்ட³கோஶ-ஸந்ததிம்

த்³ருஷ்டிபாத-னஷ்டபாப-ஜாலமுக்³ர-ஶாஸனம் ।

அஷ்டஸித்³தி⁴-தா³யகம் கபாலமாலிகா-த⁴ரம்

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 7 ॥

பூ⁴தஸங்க-⁴னாயகம் விஶாலகீர்தி-தா³யகம்

காஶிவாஸி-லோக-புண்யபாப-ஶோத⁴கம் விபு⁴ம் । [கஶிவாஸ]

நீதிமார்க-³கோவித³ம் புராதனம் ஜக³த்பதிம்

காஶிகாபுராதி⁴னாத² காலபை⁴ரவம் பஜ⁴ே ॥ 8 ॥

காலபை⁴ரவாஷ்டகம் பட²ந்தி யே மனோஹரம்

ஜ்ஞானமுக்தி-ஸாத⁴கம் விசித்ர-புண்ய-வர்த⁴னம் ।

ஶோகமோஹ-லோப⁴தை³ன்ய-கோபதாப-னாஶனம்

தே ப்ரயாந்தி காலபை⁴ரவாங்க்⁴ரி-ஸன்னிதி⁴ம் த்⁴ருவம் ॥

இதி ஶ்ரீமத்பரமஹம்ஸபரிவ்ராஜகாசர்யஸ்ய

ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய

ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத: க்ருதௌ

ஶ்ரீ காலபை⁴ரவாஷ்டகம் ஸம்பூர்ணம் ।

***

Kalabhairava Ashtakam

dēvarāja-sēvyamāna-pāvanāṅghri-paṅkajaṃ

vyāḻayajña-sūtramindu-śēkharaṃ kṛpākaram ।

nāradādi-yōgibṛnda-vanditaṃ digambaraṃ

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 1 ॥

bhānukōṭi-bhāsvaraṃ bhavabdhitārakaṃ paraṃ

nīlakaṇṭha-mīpsitārtha-dāyakaṃ trilōchanam ।

kālakāla-mambujākṣa-makṣaśūla-makṣaraṃ

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 2 ॥

śūlaṭaṅka-pāśadaṇḍa-pāṇimādi-kāraṇaṃ

śyāmakāya-mādidēva-makṣaraṃ nirāmayam ।

bhīmavikramaṃ prabhuṃ vichitra tāṇḍava priyaṃ

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 3 ॥

bhukti-mukti-dāyakaṃ praśastachāru-vigrahaṃ

bhaktavatsalaṃ sthiraṃ samastalōka-vigraham । [sthitaṃ]

nikvaṇan-manōjña-hēma-kiṅkiṇī-lasatkaṭiṃ [vinikvaṇan]

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 4 ॥

dharmasētu-pālakaṃ tvadharmamārga nāśakaṃ [nāśanaṃ]

karmapāśa-mōchakaṃ suśarma-dāyakaṃ vibhum ।

svarṇavarṇa-kēśapāśa-śōbhitāṅga-maṇḍalaṃ [śeṣapāśa, nirmalaṃ]

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 5 ॥

ratna-pādukā-prabhābhirāma-pādayugmakaṃ

nitya-madvitīya-miṣṭa-daivataṃ nirañjanam ।

mṛtyudarpa-nāśanaṃ karāḻadaṃṣṭra-mōkṣadaṃ [bhūṣaṇaṃ]

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 6 ॥

aṭṭahāsa-bhinna-padmajāṇḍakōśa-santatiṃ

dṛṣṭipāta-naṣṭapāpa-jālamugra-śāsanam ।

aṣṭasiddhi-dāyakaṃ kapālamālikā-dharaṃ

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 7 ॥

bhūtasaṅgha-nāyakaṃ viśālakīrti-dāyakaṃ

kāśivāsi-lōka-puṇyapāpa-śōdhakaṃ vibhum । [kaśivāsa]

nītimārga-kōvidaṃ purātanaṃ jagatpatiṃ

kāśikāpurādhinātha kālabhairavaṃ bhajē ॥ 8 ॥

kālabhairavāṣṭakaṃ paṭhanti yē manōharaṃ

jñānamukti-sādhakaṃ vichitra-puṇya-vardhanam ।

śōkamōha-lōbhadainya-kōpatāpa-nāśanaṃ

tē prayānti kālabhairavāṅghri-sannidhiṃ dhruvam ॥

iti śrīmatparamahaṃsaparivrājakācharyasya

śrīgōvindabhagavatpūjyapādaśiṣyasya

śrīmachChaṅkarabhagavataḥ kṛtau

śrī kālabhairavāṣṭakaṃ sampūrṇam ।

–subham—

Tags- கால பைரவர் வழிபாடு, Kala Bhairava, Bhairva Ashtami, Jayanti, 24Hinduism through 500 Pictures in Tamil and English; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம் -Part 24, ashtakam, adi shankara, Nepal

சாக்ரடீஸின் ஆறு வகையான கேள்விகளைக் கேளுங்கள்! (Post.15,174)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,174

Date uploaded in London –   12 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

25-8-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

சாக்ரடீஸின் ஆறு வகையான கேள்விகளைக் கேளுங்கள்! 

ச. நாகராஜன் 

ஏராளமான செய்திகள். ஏராளமான தகவல்கள். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தினால் சோஷியல் மீடியாக்கள், யூ டியூப் தகவல்கள் லட்சக்கணக்கில் உலா வருகின்றன.

அத்தனையுமே உண்மையா என்ன? இல்லை, இல்லவே இல்லை. 

ஆகவே நம் நலனுக்காக சாக்ரடீஸ் கூறிய ஆறு வகையான கேள்விகளை நிலைமைக்குத் தக நாம் கேட்க வேண்டும். 

அவை என்னென்ன, எதற்காக அவற்றைக் கேட்க வேண்டும்?

இதோ பார்ப்போம்:

 தெளிவு பெறுவதற்காகக் கேட்க வேண்டிய கேள்விகள்

இதை ஏன் நீங்கள் சொல்கிறீர்கள்?

நாம் விவாதிப்பதற்கும் நீங்கள் சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?

  ஊகங்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கேட்க வேண்டிய கேள்விகள்

இதற்கு பதிலாக வேறு எதை நாம் ஊகிக்கலாம்?

இது நடக்காது அல்லது நடக்கும்என்பதை எப்படி நாம் நிரூபிக்க முடியும்/?

 சாட்சியங்கள்ஆதாரங்கள் பற்றி அறிந்து கொள்ள கேட்க வேண்டிய கேள்விகள்

எங்கே, ஒரு உதாரணம் சொல்ல முடியுமா?

இதற்கு ஒத்திருக்கும் இன்னொரு விஷயம் என்ன?

இது நடக்கும் என்று நம்புவதற்கான காரணங்கள் என்ன?ஏன்?

 பல்வேறு பார்வைகள் மற்றும் சரியான கண்ணோட்டத்தை அறிந்து கொள்ள கேட்க வேண்டிய கேள்விகள்

இதற்கு மாற்று வழி என்ன?

இன்னொரு விதமாக இதை எப்படிச் சரியாகப் பார்க்கலாம்?

இது அவசியம் தான் என்று எப்படிக் கூறுகிறீர்கள்?

இது தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள் யாவை?

இதற்கு எதிரான கருத்துகள் யாவை?

 அமுல்படுத்தும் விதமும் அமுல்படுத்தும்போது விளையக்கூடிய விளைவுகளையும் பற்றி கேட்க வேண்டிய கேள்விகள்

இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன?

பொதுவாக இதை எப்படிச் சொல்லலாம்?

நீங்கள் சொல்ல வருவதன் உள்ளார்ந்த கருத்து என்ன?

 கேள்வி பற்றி கேட்க வேண்டிய கேள்விகள்

இந்தக் கேள்விக்கான அவசியம் என்ன?

இதற்கான அர்த்தம் என்ன?

இந்தக் கேள்வியை நான் ஏன் கேட்டது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

இது அன்றாட வாழ்க்கையில் எப்படிச் செயல்பட முடியும்?

இதைப் பரப்புவது ஏன் அவசியம்?

 சாக்ரடீஸின் இந்தக் கேள்வி கேட்கும் திறனால் நமது ஏற்படும் பயன்கள் யாவை?

 இது முதலில் நம்மை நாமே சரியாகப் புரிந்து கொள்ள உதவும்.

 அடுத்ததாக உளவியலில் இது ஒரு பிரச்சினையைத் தீர்க்கச் செல்லும் முன்னர் இப்படிக் கேட்டால் பல விஷயங்களில் நமக்குத் தெளிவு பிறக்கும்; சில முடிவுகளை நாமே மாற்றிக் கொள்ள நேரிடும்.

 ஒரு சின்ன எடுத்துக்காட்டை இங்கு சொல்லலாம்.

 ராமனும் சீதாவும் கணவனும் மனைவியுமாவர். ராமன் ஒரு திட்டத்தைப் பற்றிய தனது எண்ணங்களை அழகுற கம்ப்யூட்டரில் அடித்து சீதாவுக்கு அனுப்பினான். பற்பல பக்கங்கள்; சீதா திகைத்தாள்.

இவ்வளவு பக்கம் வேண்டாம் என்று சொன்னால் அது ராமனின் திறமையைக் குறைப்பது போல ஆகி விடும். இவ்வளவு பக்கங்களை யாராலும் படிக்க முடியாது என்று சொன்னால் எதிர்மறை எண்ணத்தைச் சொன்னதாகி விடும்.

சீதை சாக்ரடீஸ் கேள்வி மாடலை அப்ளை செய்தாள்.

“ஆமாம்,  அனைவரின் கவனத்தையும் ஈர்க்க இவ்வளவு பக்கங்கள் வேண்டுமா?” என்று ராமனைக் கேட்க ராமன் யோசிக்க ஆரம்பித்தான்.

“இவ்வளவு தேவை இல்லைதான்” என்று அவன் சொல்லி முடிக்கும் முன்னமேயே எதை எதை எல்லாம் நீக்கலாம், சுருக்கலாம் என்று சீதை உதவி செய்ய ஆரம்பித்தாள்.

விளைவு அருமையான ஒரு திட்டம் சுருக்கமாக மிளரிந்தது.

ராமனுக்கு ஒரே சந்தோஷம் தன் மனைவி இதை அற்புதமாகச் சுருக்கி உதவியது பற்றி.

வெட்டியான விவாதமும் எதிர்மறை விமர்சனமும் ஒரு போதும் நல்ல விளைவை ஏற்படுத்தாது.

ஆனால் சாக்ரடீஸின் கேள்விகள் நம்மைச் சிறக்க வைக்கும். கேட்டுப் பாருங்களேன்!

***

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி– Part 14 (Post No.15,173)

Written by London Swaminathan

Post No. 15,173

Date uploaded in London –  11 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

பிருஹத் தேவதா

செளநகர் எழுதிய நூல் ; இந்து தெய்வங்களை பற்றி  அவர் 2500  ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார்

Brhad devata

It is text on deities. It is believed that Saunaka wrote it in fifth century BCE.

***

பெனாரஸ்

வாரணாசி என்பது ஆங்கிலத்தில் பெனாரஸ் ஆகிவிட்டது தமிழில் காசி என்று சொல்லுவோம் இந்துக்களின் முக்கியமான புனித தலம் வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது காசிக்குச் செல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம் அங்குள்ள காசி விஸ்வநாதர்- விசாலாட்சி கோவிலும் மிகவும் வணங்கப்படும் தெய்வங்கள் ஆகும் காசி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது வருணா ,அசி

இரண்டு நதிகளுக்கு இடையில் இருப்பது; இந்துக்கள் கடைசி காலத்தை அங்கு கழிப்பதைக்  குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். கங்கா ஆரத்தி மிகவும் பிரசித்தமானது . மோட்சம் தரும் ஏழு நகரங்களில் ஒன்று

 Benares

The greatest pilgrimage destination for the Hindus. Hindus are supposed to visit and bathe in Ganges and have Dasrshan of Lord Viswanatha and Vishalaskhi at least once in a life time. Varanasi is the name that denotes two rivers Varuna and Asi. Centre of great intellectuals from Vedic days. One of the Sapta Puris. Kasi kingdom is one of the oldest kingdoms in the world. We hear about it Mahabharata and other scriptures. Varanasi is corrupted to Benares in English. Ganga Arti is watched by thousands every day.

***

பீஜ மந்திரம் பீஜ என்றால் விதை/ வித்து சில மந்திரங்களுக்கு அபூர்வ சக்தி உண்டு; அதாவது அந்த ஒலியானது சில விளைவுகளை /நன்மைகளை ஏற்படுத்தக் கூடும் அதை முறையாக சுத்தமாக இருக்கும் போது பெரியோர்கள் பயன்படுத்துவார்கள் சில உதாரணங்கள் : க்ரீம், க்லிம், ஸ்ரீம் ,ஐம் ஆகும். மேலும் சில:1. லம்  2. வம் 3. ரம்  4. யம் 5. ஹம் 6. ஓம்  7. க்ஷம்  இவைகளை பாட்டரி அல்லது பவர் ஹவுஸ் என்றும் சொல்லுவார்கள்

; இத்தகைய மந்திரங்கள் தேவி வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது ஓம் கம் கணபதயே என்ற மந்திரத்தில் கம் வருகிறது; யந்திரத் தகடுகளில் இவைகளை எழுதி பூஜை செய்து அபூர்வ சக்திகளை பெறலாம் என்பது நம்பிக்கை .

 Bheeja Mantras    

Bheeja Mantra are brief mantras. These consist of a few syllables and are often characterized by meanings that are not readily apparent. They are a specific type of mantra. Some people describe them as batteries or power houses.

Some examples used in the worship of devatas:

Devi worship will be usually done by using bheeja (seed) mantras:

“Hreem” ,”Kleem”,”kreem” ,”Aim” ,”Sreem” ,Kreem ,Hreem,

Kleem, Sreem , Aim , Gam, Ham , Ram ,Yam ,Ksham ,Tam.

Such mantras are written on Yantras (metal plates with drawings) and worshipped. They repeat it several times to get some powers.

***

 பிரம்ம சூத்திரம்– இது இந்துக்களின் மூன்று முக்கிய நூல்களில் ஒன்று இதில் 555 சூத்திர வடிவில் இறைவனின் குணாதிசயங்கள் உள்ளன.  பிரஸ்தான த்ரயம் என்ற மூன்று நூல்களில் பகவத் கீதை உபநிஷதம் பிரம்ம சூத்திரம் ஆகியன அடங்கும் இது இந்து மதத்தின் ஆதார/ அஸ்திவார நூல்கள். பிரம்ம சூத்திரம் என்ற சம்ஸ்க்ருத நூலை  எழுதியவர் பாதராயண வியாசர். இதற்கு ஆதிசங்கர உரை எழுதியுள்ளார் காலம் 2500 ஆண்டுகளுக்கு முந்தியது 

 Brahma sutras

Written by Badarayana Vyasa around 500 BCE. It is one of the Prasthana Trya. That is the foundation of Vedanta comprising Bhagavad Gita, Upanishads and the Brahma sutras. This book contains 555 sutras. Adi Shankara’s commentary on it is the most popular among the commentaries. The aphoristic verses (sutras) are arranged in in four chapters dealing with attaining knowledge of Brahman. Rejecting the smriti as a base of knowledge, it declares that the Vedic Upanishads are the only acceptable source of truth.

***

 பிரம்ம சமாஜம் ராஜாராம் மோகன் ராய் என்பவர்1828  ஆண்டில் துவங்கிய இந்துமத சீர்திருத்த இயக்கம் ஆகும் அவர் சதி போன்ற பழக்கங்களை நீக்கும்படியும் பால் ய விவாகத்தை தடுக்கும் படியும் கோரி இயக்கம் நடத்தினார். விக்ரக வழிபாடு, யாத்திரை , பல சமயச் சடங்குகளையும் இந்த இயக்கம் எதிர்த்தது. கேசவ சந்திர சென், தேவேந்திர நாத் மற்றும் விண்கலத்தில் வசித்த அறிஞர்கள் ஆதரித்தனர்

Brahmo samaj

It is a reform movement founded in Kolkata in 1828 by Rajaram Mohan Roy. It opposed features like polytheism, pilgrimages, image worship, animal sacrifices, social practices such as sati, child marriages and caste regulations. Debendranath Tagore and Keshu Chandra Sen were some of the prominent people who supported it.

 **** 

பெரிய கோவில் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில் ஒரு மகத்தான பொறியியல் அதிசயம் ஆகும் அங்குள்ள சிவனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகின்றார்கள் பெரிய நந்தியும் கர்ப்ப கிரகத்தில் உள்ள மிகப்பெரிய லிங்கமும் ஓவியங்களும் மிகவும் புகழ் பெற்றவை தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன:

1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்!

2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்!

3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்!

4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!

5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்

Big Temple in Thanjavur is a famous Shiva temple. It is built by Rajraja Choza about 1000 years ago. The tower the Nandhi/Bull statue and the Shiva Linga in the Garbha Griha (Sanctum sanctorum) are huge. The tower is 216 feet tall. Inside the temple old frescoes are on the walls. A stone weighing 80 tons is on top of the min building. It is an engineering marvel. 

*** 

பிரம்மோற்சவம் ஒவ்வொரு கோவிலிலும் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழா பிரம்மோற்சவம் எனப்படும். ஒவ்வொரு நாளும் தெய்வத்தை ஊர்வலமாக வீ தி களின்   வழி யாக கொண்டு வருவார்கள். கோவிலுக்குச்  சென்று வணங்க முடியாதவர்களுக்கு கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுக்கும் ஒரு அருமையான ஏற்பாடு இது. மேலும் கடைசி  நாளில் நடைபெறும் தேர்த்  திருவிழாவில் ஜாதி மத இனம் வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்பது சமுதாய ஒற்றுமையை உறுதி படுத்துகிறது. பிரம்மோற்சவம் மஹாபாரத விராட பருவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பத்துநாட்கள் நடைபெறும். முதல் நாள் ஏற்றப்பட்ட கொடி/ த்வஜம் பத்தாவது நாள் இறக்கப்படும். அதற்கு முன்னர் தீர்த்தவாரி என்னும்  சம்பிரதாய நீர்ச் சடங்கு நடைபெறும். அன்றையதினம் இறைவனை ஆறு அல்லது கடலுக்கு எடுத்துச் செல்வார்கள். 

Brahmorchava : It is the main annual temple festival. Normally it is celebrated for ten days with the Flag hoisting on the first day. During the ten days deities will be taken around the town on different Vahanas. It gives an opportunity to see God at their door step for those who could not go to the temples. Last day or the ninth day, Chariot festival is held. Thousands of people join to pull the huge wooden chariot. Since any one can participate in it, it strengthens the unity of the community. The festival comes to an end when the flag s brought down. Before that, God is taken to the nearest water source for bathing. 

To be continued……

Tags- part 14, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி 14, பிரம்ம சூத்ரம், Big Temple, Brahmorchava

Ancient Tamil Encyclopaedia -Part 31; One Thousand Interesting Facts -Part 31 (Post.15,172)

Written by London Swaminathan

Post No. 15,172

Date uploaded in London –  11 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Part 31

Item 185.

Akananuru அகநானூறு verse 2

Famous poet Kabilar described natural scenery in Kurinji land, hill country, where Kurinji flowers bloom. Even now one can see the Kurinji flowers blooming once in 12 years in Nilgris and Kodaikkanal Hills of Tamil Nadu.

Number 12 is significant in Hinduism. 12 Adityas, and Kumbha Mela, Maha Makam festivals that happen every 12 years are well known. In nature also number 12 is significant, because the Kurinji flower blooms once in 12 Years. In literature also, the term Kurinji is significant because the same poet has authored another Sangam work Kurinjippattau. Ther is also a natural wonder because the poet narrated the names of 99 flowers at one breadth. No where in the world we see such a long list of flowers in any literary work.

In this verse Akananuru அகநானூறு verse 2,

Kabilar/ Kapilar mentioned plantain tree (banana), Jack fruit tree, Bamboo, Black pepper climber, Sandal tree and Venkai tree.

A male monkey ate the mixture of fruits and lied on the flower bed like a drunken one.

கறிவளர் சாந்தம் pepper climbing on sandal tree  , வேங்கை– tiger and tree name, கபிலர்(poet’s name) , ,வரைவு கடாயது wedding request ,

***

186

Tamils play on the word Venkai which means Tiger also. Teenage girls shout Venkai, Venkai to attract the youths. They rush to help the young girls thinking that there are tigers in the vicinity but only Venkai tree flowers. Kalidasa described a different trick of the naughty girls. They call the youths to help them in playing on swings. Suddenly they pretend that they are going to fall down and cry. Immediately the youngsters rush and hold the girls in their arms.

Mischievous girls!

187

Here in this verse, poet’s message is “Oh Ye young man, come quickly and get married with your lady love. Also come during night time, because the moon is shining bright; moreover, her mother is watching and increased her security.

We saw temporary separation of the lovers in Palai verses and in al the Kurinji verses we will see Come quickly and get married message. The Tamil word for it is VARAIVU KADAAYATHU வரைவு கடாயது.

VARAIVU- WEDDING; KADAAYATHU -REQUESTED

188

Last but not the least Tamils have some significance with Venkai tree. The time it blooms is the wedding season in Tamil Nadu.

The wonder is that the plants like Kurinji, Venkai have more meanings. They are not just plants.

***

189

எயினந்தை மகனார் இளங்கீரன் (poet’s name), வலம்படத் தொலைச்சி– killed so as it falls on right hand side மரையா= ஒருவகை மான் அல்லது கட்டுப்பசு wild deer or cow,  

Akananuru verse 3 by Ilam keeranar gives us three interesting details . To identify a poet, Tamils give his father’s name. Here Eyinanthai is the name of poet’s father. This shows that it is a male dominant society. We know father’s names but never mother’s names. Another thing is the prefix Ilam that means young or junior. Probably in his family or another poet’s family, one more Keeran is there who is senior (Muthu in Tamil).

***

190

Another interesting belief is about the tigers. Tamils believe that tigers would its prey only when the killed animal falls on its right side.

Hindus believe that anything on right side is auspicious. All the funeral things are done left wise. All the auspicious things are done right wise/clockwise.

This tiger-right side prey is repeated by many other poets. This is part of poetic jargon or cliché.  When the poets say snake with Nagaratna (cobra gem), moon devoured by demon (lunar eclipse) we see those things in Sanskrit poems too. But this tiger’s obsession with right side is not seen in Sanskrit Kavyas.

Other descriptions of Palai land (arid region) by the poet is nothing new. We see the eagle and its little ones on the trees.

To be continued…………………….

Tags- Kabilar, Natural scenery, tiger righthand side, Kurinji flowers, significance of No.12.

கடவுளைப் போற்றிய நோபல் விஞ்ஞானிகளும், கடவுள் பற்றிய அவர்களின் கருத்துக்களும்! (Post.15,171)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,171

Date uploaded in London – –  11 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

Spirituality

26-8-25 ஆன்லைன்கல்கி இதழில் வெளியான கட்டுரை! 

கடவுளைப் போற்றிய நோபல் விஞ்ஞானிகளும்கடவுள் பற்றிய அவர்களின் கருத்துக்களும்!

 ச. நாகராஜன்

 எல்லா விஞ்ஞானிகளுமே கடவுளை மறுத்தவர்கள் இல்லை.

 பல பிரசித்தி பெற்ற விஞ்ஞானிகள் கடவுளின் படைப்பைப் போற்றியுள்ளனர். பல விஞ்ஞானிகள் ஹிந்து மதம் கூறும் மறு பிறப்புக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

முக்கியமான விஞ்ஞானிகளின் அற்புதமான கருத்துக்களை மட்டும் இங்கு காண்போம்.

 ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (1879-1955)

உலகின் ஆகப் பெரிய விஞ்ஞானி. 1921ம் ஆண்டு க்வாண்டம் தியரிக்காக நோபல் பரிசு பெற்றவர். ஜெர்மானியர்.

இவர் கூறியது:

“கடவுள் இந்த உலகை எப்படிப் படைத்தார் என்று அறிய நான் விரும்புகிறேன். இந்த நிகழ்வு பற்றியோ அந்த நிகழ்வு பற்றியோ அல்லது இந்த அல்லது அந்த மூலகத்தின் நிறமாலை பற்றியோ எனக்கு ஒரு வித ஆர்வமும் இல்லை. கடவுளது எண்ணங்களை அறிய விரும்புகிறேன். மற்றவை எல்லாம் விவரங்களே.”

 மாக்ஸ் ப்ளாங்க் (1858-1947)

எலிமெண்டரி க்வாண்டா பற்றிய ஆராய்ச்சிக்காக 1918ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர். ஜெர்மானியர்.

“பூமியில் மனிதர்கள் தோன்றும் முன்னமேயே கடவுள் இருக்கிறார். அவரை நம்பியவர்களுக்கும் சரி, நம்பாதவர்களுக்கும் சரி ஊழிக்காலம் வரை எங்கும் பரவிய தன்மையால் உலகம் முழுவதையும் தன் பிடியில் வைத்திருக்கிறார்”.

மறுபிறப்பில் நம்பிக்கை கொண்ட அவர் கூறியது;

நமக்கு மேலே உள்ள இன்னொரு உலகில் நாம் எந்த நேரத்திலும் அடைக்கலம் புகலாம்.

 எர்வின் ஷ்ரோடிங்கர் (1887-1961)\

அணுக் கொள்கைக்காக 1933ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்.

ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்..

விஞ்ஞானம் என்பது ஒரு விளையாட்டு. அது கடவுளால் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்ற கொள்கையைக் கொண்டவர்.

அவரது கூற்று:

“எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம். இது ஆழங்காண முடியாத கேள்வி. ஒவ்வொருவருக்குமான கேள்வி இது! இதற்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை.”

“உயிருள்ள ஜீவிகளான நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். ஒரே “இருப்பிலிருந்து”  அல்லது ஒரே அம்சத்திலிருந்து பிறந்த உறுப்பினர்கள் நாம். மேலை நாட்டில் இதை கடவுள் என்று கூறுகிறார்கள். உபநிடதங்களில் இது ப்ரஹ்மம் என்று கூறப்படுகிறது.”

 வெர்னர் ஹெய்ஸன்பர்க் (1901-1978)

க்வாண்டம் மெகானிக்ஸ் ஆய்வுக்காக இவர் 1932ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். ஜெர்மானியர்.

இவரது கூற்று:

“கிளாஸிலிருந்து முதல் மடக்கைக் குடிக்கும் போது இயற்கை அறிவியல் உங்களை நாத்திகனாக ஆக்குகிறது. ஆனால் கிளாஸின் அடியில் செல்லும் போது கடவுள் அங்கே உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்.”

 ராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன் (1868-1953)

மின்னூட்டம் பற்றியும் போட்டோ எலக்ட்ரிக் விளைவுக்காகவும்  இவர் 1923ம் ஆண்டு நோபல் பரிசைப் பெற்றார். இவர் ஒரு அமெரிக்கர்.

இவரது கூற்று:

“ஒரு உண்மையான நாத்திகன் ஒரு விஞ்ஞானியாக இருக்க முடியும் என்பதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

கடவுளை நம்பாத ஒரு சிந்திக்கும் மனிதனை எனக்குத் தெரியவே தெரியாது.”

 சார்லஸ் ஹார்ட் டோனஸ் (பிறப்பு 1915-2015)

லேஸரைக் கண்டுபிடித்தவர். க்வாண்டம் எலக்ட்ரானிக்ஸில் இவரது ஆய்வுக்காக 1964ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்.

“உள்ளுணர்வு,  உலகில் நான் காண்பவை, தர்க்கம் மற்றும் விஞ்ஞான அறிவு ஆகியவற்றின் மூலமாக கடவுள் இருப்பதை நான் மிக வலுவாக நம்புகிறேன்.”

 ஆக இப்படி ஆகப் பெரும் விஞ்ஞானிகள் கடவுளைப் பற்றிய உண்மையை ஆராயத் தொடங்கி கடவுள் இருக்கிறார் என்ற தங்கள் வலுவான நம்பிக்கையை புத்தகங்களில் எழுதியுள்ளனர். பேட்டிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலாக அளித்துள்ளனர். முக்கியமான தங்கள் சொற்பொழிவுகளிலும் கூறியுள்ளனர்.

 ஆகவே பெரும் விஞ்ஞானிகளின் பார்வையில் –  கடவுள் இருக்கிறார்!

**

நம்மாழ்வார் பாசுரமும் இலங்கைத் தமிழும் (Post No.15,170)

Written by London Swaminathan

Post No. 15,170

Date uploaded in London –  10 November 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நான் லண்டனில் வாழும் வெம்பிளி பேட்டை, BRENT COUNCIL பிரென்ட் என்னும் நகரசபையின் கீழ் உள்ளது . இதை இலங்கைத்  தமிழர்கள் எழுதுகையில் பிரென்ற் என்று எழுதுவார்கள். அவர்கள் நடத்தும் பள்ளிக்கூட அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பாடசாலை கிரிக்கெற் போட்டி என்று அறிவிப்பார்கள்  . விக்கிப்பீடியாவுக்குப் போனால் அவர்கள் கனடா நாட்டிலுள்ள டொராண்டோ  , ஒண்டாரியோ பெயர்களை எப்படி எழுதுகிறார்கள் என்று காணலாம் . இதோ விக்கிப்பீடியா :

ரொறன்ரோToronto in Canada

தொராண்டோ (ஆங்கிலம்: Toronto; இலங்கை வழக்கம்:ரொறன்ரோ, தமிழக வழக்கம்: டொராண்டோ) . இதுவே கனடாவின் மிகப் பெரிய நகரமும், ஒன்ரோறியோ மாகாணத்தின் (மாநிலத்தின்) தலைநகரமும் ஆகும். இந்நகரம் தென் ஒன்ரோறியாவில் (ONTARIO ஒன்ட்டாரியோவில்), ஒன்ரோறியா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

***

இது பற்றி வியப்புடன், ஒரு இலங்கைத் தமிழரை இதை எப்படி உச்சரிப்பீர்கள் என்று கேட்டபொழுது டொரோண்டோ என்றார்

எழுதும்போது ஆங்கில “டி ” அல்லது தமிழ்ச் சபதத்திற்கு  “ற்” என்று எழுதுகிறார்கள். இது வேறு எங்கும் இல்லாத வினோத இலக்கணம் . தமிழில்  “ற்”  எண்டு முடியும் சொற்களைக் காண முடியாது. ஆனால் இடையில் வரும்போது “டி ” என்னும் ஒலி “ற்”  ஆக மாறுவதை நம்மாழ்வார் பாசுரங்களில் காணலாம் . பத்மநாபன் என்பதை ப”ற்”பானாபன் என்று  சொல்லி அவர் பாடுகிறார் .

தமிழ் இலக்கணப்படி கல், பல், சொல் என்பதெல்லாம் இடையில் வரும்போது கற்குவியல், பற்பொடி, சொற்கள் என்று மாறுவதைக் காண்கிறோம் ஆனால் துவக்கத்திலும் இறுதியிலும் காண முடியாது  எப்படி யாழ்ப்பாணத்தில் மட்டும் இப்படி வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியதே !

பற்பநாபன் உயர்வு அற உயரும் பெரும் திறலோன்,

எற்பரன் என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த

கற்பகம், என் அமுதம் கார் முகில் போலும் வேங்கட நல்

வெற்பன், விசும்போர் பிரான் எந்தை தாமோதரனே. 2-7-11

***

கிறி உறி  மறி நெறி

கிறி என நினைமின் கீழ்மை செய்யாதே,

உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில்,

மறியொடு பிணை சேர் மாலிருஞ்சோலை,

நெறி பட அதுவே நினைவது நலமே. 2-10-6

English translation of verse 2.10.6:

Desist from base deeds and remember

‘Tis good to think solely of traversing the road

Which leads to Māliruñ Cōlai where live together

Herds of deer and young ones and stays our Lord,

Who from hanging hoops ate up all the butter.

(From wisdomlib.org)

நம்மாழ்வாருக்கு மிகவும் பிடித்த சொற்கள் சில; இராப் பகல் என்பதை நிறைய பாசுரங்களில் உபயோகிக்கிறார் அது போல கிறி என்ற சொல்லும் அவருக்கு மிகவும் பிடித்த சொல்.

அகராதியில் இதற்குள்ள பொருள்:

பொய், வஞ்சம், தந்திரம், மாயாஜாலம், வழி, குழந்தைகளின் முன் கையில் அணியும் ஆபரணம்.

இங்கு வழி , நல்ல வழி என்ற பொருளில் வருகிறது.

தமிழில் பொருள்

நல்ல வழியை எண்ணுவதே சிறந்தது ; இதை வீட்டுக் கீழ்மையை எண்ணாதீர்கள் . அத்திருமாலிருஞ் சோலையில்தான் உறி வெண்ணையை எடுத்துண்டு கண்ணன் கோயில் கொண்டுள்ளான். பெண் மான்கள் தன் குட்டிகளோடு சேர்ந்து வாழும் சோலை மலைக்குச் செல்லும் வழியை நினைப்பதே நல்லது .

மறி என்றால் ஆடு என்றே பெரும்பாலும் பொருள் வருகிறது. இங்கு மான்கள் என்று வருவதும் நோக்கற்பாலது .

***

திருக்குறளுக்கு புதுப் பொருள்!

ஈரடியால் உலகளந்தவனும் மூவடியால் உலகளந்தவனும்

பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம் ; அந்த அவதாரத்தைச் சொல்லும்போதெல்லாம் நம்மாழ்வார், குறளா திருக்குறளா என்று பாடுகிறார் . அவர் மனத்தில் உள்ள கருத்தினை நாம் அறிய முடிகிறது ; மூன்று அடிகளால் உலகத்தினை அளந்து ஓங்கி உலகளந்த உத்தமன்- த்ரி விக்ரமன் – என்ற பெயர் பெற்றான் விஷ்ணு .

இரண்டே அடிகளால் (குறள்) உலகத்தினையே அளந்துவிட்டான் வள்ளுவன்; அவன் பேசாத பொருள் இல்லையே! 

வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி

வைகல் வைகல் தோறும் அமுதாய வானேறே

செய்குந்தா வரும் தீமை உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்

செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கனவே –2-6-1-

குறளா என்று பல பாசுரங்களில் அழைத்தவர் இங்கு திருக்குறள் என்ற சொல்லையே பயன்படுத்துவத்தைக் கவனிக்க வேண்டும் . நம்மாழ்வார் திருக்குறளை நன்றாகக் கற்றவர் என்பதை பல பாசுரங்கள் மூலம் அறிய முடிகிறது . மாணிக்க வாசகரின் திருவாசகமும் அவர் பாசுரங்களில் எதிரொலிக்கிறது. அவற்றைத் தனியாகக் காண்போம் .

***

இதைத் திருவள்ளுவமாலையில் பரணரும் பாடியுள்ளார்.

மாலும் குறளாய் வளர்ந்துஇரண்டு மாணடியால்

ஞாலம் முழுதும் நயந்தளந்தான் – வாலறிவின்

வள்ளுவரும் தம்குறள்வெண் பாவடியால் வையத்தார்

உள்ளுவவெல்லாம் அளந்தார் ஓர்ந்து

இந்த பரணர் பிற்கால பரணர் ஆவார்.

–subham—

Tags- திருக்குறளுக்கு, புதுப் பொருள், கிறி உறி  மறி நெறி, நம்மாழ்வார் இலங்கைத் தமிழ், திருக்குறளா

My Old Articles

இலங்கைத் தமிழும் இந்தியத் தமிழும்! கொஞ்சம் கதைப்போமா ? (Post No.13,659)

Post No. 13,659

Date uploaded in London – 12 September 2024         

பரிகரிஅரிநரிமறிகிரிசுரிவரி (Post No.6057)


Date: 10 FEBRUARY 2019


Post No. 6057

தமிழ் ஒரு அழகான மொழி. பழைய கால ஆநந்தவிகடன் அகராதி அல்லது அதற்கு முந்திய நிகண்டுகள் ஆகியவற்றை எடுத்துப் பார்த்தால் மிகவும் வியப்பாக இருக்கும். ஒரு சொல்லுக்கு இத்தனை பொருளா என்று ஒரு புறம் வியப்போம். ஒரே பொருளைச் சொல்ல இத்தனை சொற்களா என்று மறு புறம் வியப்போம். தாமரை என்பதற்கு பல சொற்கள் இருக்கும். அரி என்ற ஒரு சொல்லுக்கு பல வித அர்த்தங்கள் இருக்கும். மேலும் ஒருஎழுத்து,  இரு எழுத்துச் சொற்களைக் கொண்டே நிறைய விஷயங்களைச் சொல்ல முடியும்.

இந்தச் சொல்லையோ,சப்தத்தையோ வேறு மொழிகளில் பிரயோகித்தால் இன்னும் வியப்பான விஷயங்கள் வரும்.

உதாரணமாக அரி என்ற சொல்லுக்கு விஷ்ணு, பகைவன், சிங்கம் இன்னும் பல பொருள்கள் வரும். ஹீப்ரூ (Hebrew)  மொழியிலும் அரி என்றால் சிங்கம்  என்பதைக் கண்டு வியப்போம். கேஸரி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் (கேசம்/முடி உள்ள மிருகம்)  ஸீசர் என்று உச்சரிக்கப்பட்டு ஜூலியஸ் சீசர், அகஸ்டஸ் சீசர் என்ற பெயர்களில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே புகுந்தது.

ஒரே சப்தம் வரும் சொற்களைச் சொல்லுவதும் கவிதை போல இருக்கும். அதை நினைவு வைத்துக் கொள்வதும் எளிதாக இருக்கும். சொல் விளையாட்டுகளை விளையாடவும் ஏதுவாக இருக்கும்.

குறுக்கெழுத்துப் போட்டி, தமிழ் ஸ்க்ராபிள் (Tamil Scrabble) , சொல் போட்டி போன்றவை மூலமும் விடுகதைகள் மூலமும் மாணவர்களை டெலிவிஷன், வீடியோ கேம்ஸ் முதலியவற்றில் இருந்து திசை திருப்பலாம்.

நான் என் மகன்களுடன் ரயிலில் செல்லும்போது ஒரே சப்தத்தில் முடியும் ஆங்கிலச் சொற்களைச் சொல்லி விளையாடுவோம். ‘ஷன்’ (Tion or Sion)  என்று முடியும் சொற்கள் என்றால்

Consternation

Conflagration

Concentration

Condemnation

Education

Fruition

என்று நூற்றுக் கணக்கில் வரும்.

நாங்கள் மூவரும் சொன்ன சொற்களைக் கேட்டு ஆங்கிலேயர் ஒருவரே வியந்து பாராட்டினார். இன்னும் சிலர் மூக்கில் விரலை வைத்து வியக்காமல் கண்களால் வியந்தனர்.

தமிழிலும் இது போல அறிவு தொடர்பான விஷயங்கள்  பரவ வேண்டும்

யூ ட்யூப், You Tube, Social Media, சோஷியல் மீடியா (பேஸ் புக், வாட்ஸ் அப்), பத்திரிக்கைகள், சினிமா, நாடகங்களில் சில காட்சிகள், பள்ளிக்கூடங்களில் போட்டிகள் மூலம் இவைகளை வளர்க்கலாம்.

நான் சொல்லுவதை விளக்க ஒரே ஒரு உதாரணம்:–

“ரி” சப்தத்தில் முடிய வேண்டும்

விலங்கியல் பெயராக இருக்க வேண்டும் என்று போட்டி விதி வைத்துக் கொள்வோம். எனக்கு உடனே நினைவில் வரும் சொற்கள்

அரி- சிங்கம்

பரி-குதிரை

வரி-வண்டு

நரி- நரி,குள்ள நரி

மறி- ஆடு

கரி- யானை

கிரி-பன்றி

உரி– கடல் மீன் வகை

சுரி- ஆண் நரி

அரி-குரங்கு, சிங்கம்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். குறுக்கெழுத்துப் போட்டிகள் பிரபலமான காலத்தில் வந்த ஆநந்தவிகடன் அகராதி போன்றவை இருந்தால், ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள வேறு பொருள்களும் வியப்பைத் தரும்

வியப்பான செய்தி

தமிழில் அகராதியே இல்லை!!! இப்போது நீங்கள் எந்தக் கடையில் சென்று எந்தப் பதிப்பக அகராதி வாங்கினாலும், ஆங்கில-தமிழ், இந்தி -தமிழ் என்று வைத்துக் கொள்ளுங்களேன். தமிழ் என்ற பெயரில், சம்ஸ்க்ருதச் சொற்கள் இருக்கும். தனித் தனியாக ஒவ்வொரு பக்கத்திலும் தமிழ்- ஸம்ஸ்க்ருத சொல் விகிதாசாரம் போட்டுப்  பார்த்தால் ஸமஸ்க்ருதச் சொற்களே அதிகம் இருக்கும்.

நம்  முன்னோர்கள்   தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் இரு கண்களாக   பார்த்ததால் தமிழ் அகராதி என்ற பெயரில் ஸம்ஸ்க்ருதச் சொற்களையும் சேர்த்தனர். ஆங்கிலத்திலும் இப்படித்தான். பிற மொழிச் சொற்களும் ஆங்கில அகராதியில் இருக்கும்.

(ஆக்ஸ்போர்டு அகராதியில் உள்ள ‘ஐயோ,’ ‘பறையா’ என்ற தமிழ் சொற்களை அகற்றக் கோரி நான் இயக்கம் நடத்தி வருகிறேன்.)

எடிமலாஜிகல் டிக்சனரி என்ற பெயரில் பர்ரோ, எமனோ போன்றோர் திராவிடச் சொற்களை மட்டும் கொண்டு சொற் பிறப்பியல் (Etymological)  அகராதி தொகுத்தனர்.

ஆனால் அதிலும் குறை கண்டேன். நீர் (Nereids=water nymphs) என்ற தமிழ்ச் சொல்

கிரேக்க மொழியிலும் உள்ளது அரிசி என்ற(Oryza) சொல் செமிட்டிக் மொழிகளிலும் கிரேக்கத்திலுமுளது. இவை தொடர்பின் மூலம் பரவியதா அல்லது மனித இனம் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசி, இப்போது மிச்சம் மீதியாக நிற்கின்றனவா  என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயம்.

எடுத்துக் காட்டாக சப்த=ஏழு என்ற சொல் செமிட்டிக், ஸம்ஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் 3000 ஆண்டுகளாக இருக்கிறது. ஆக, சிந்து-ஸரஸ்வதி நாகரீகத்திலும் இது இருக்கவேண்டும். இப்படி அணுகினோமானால் பல புதிர்களுக்கு விடை  கிடைக்கும்.பிலோனிய தெய்வமான செப்பெத்து, யூதர்களின் சப்பத் (sabbath day= seventh day) ஆகியவை ஏழு தொடர்பானவை.

நிற்க.

சொல் ஆட்டம், சொற் சிலம்பாட்டம் விளையாடுவோம்.

தமிழை வளர்ப்போம்!!

–சுபம்–

TWO BOOKS ON AZVARS

ஆழ்வார்கள் சொல்லும் அதிசயச் செய்திகள்

பொருளடக்கம்

1.நான் பெருந்தமிழன் :பூதத்தாழ்வார் பெருமிதம்

2. ஆழ்வார் தரும் அதிசயச் செய்தி: 7 மலை, 7 கடல், 7 முகில்;

காளிதாசர் தரும் அற்புதச் செய்தி

3. ஊர்வசியே வந்து ஆடினாலும் போகமாட்டேன் :ஆழ்வார் உறுதி

4. நம்மாழ்வாரும் ஆங்கிலக் கவிஞனும்

5. பொய்கை ஆழ்வாரின் அற்புதச் சொல் வீச்சு; பாணினியின் ஒப்பீடு

6. முடிச்சோதி, முகச்சோதி, அடிச்சோதி: நம்மாழ்வார் பாசுரம்

7. வேதத்திலும் ஆழ்வாரிலும் கருப்பு சிவப்பு! அப்பரும் ஆழ்வார்களும் – ஒரு ஒப்பீடு

8.நலம் தரும் சொல் – திருமங்கை ஆழ்வார் கண்டுபிடிப்பு

9.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை

10.ஆழ்வார்கள் கேள்வி-பதில் குவிஸ்

11. கொக்கைப் போல இருப்பான், கோழி போல இருப்பான், 

உப்பைப் போல இருப்பான் பக்தன்

12. பாரதி – நம்மாழ்வார் – கிருதயுகம்

13. தமிழில் வைஷ்ணவ ஜனதோ -அசலாம்பிகையின் அற்புதக் கவிதை :

நாமக்கல் வெ .ராமலிங்கம் பிள்ளை

14.தமிழ் இலக்கியத்தில் ஓம்காரத்தின் பெருமை

15. கம்பன் கவிதையில் எட்டெழுத்து மந்திரம்

*****

தமிழ் வளர்த்த ஆண்டாளும் வள்ளலாரும்!

(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)

பொருளடக்கம்

1.திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும்

2.பறை என்றால் என்ன ?

3.ஆண்டாளும் மொழியியலும்

4.ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்!

5.ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்!

6.பாவை என்பது என்ன? 

7.ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்! 

8.ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்!

9.திருப்பாவையின் அமைப்பு

10.திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு!

11.முப்பத்து மூவர்

12.அம்பரமே தண்ணீரே சோறே!

13.‘அல்குல்’ பற்றி ஆண்டாள் பேசலாமா?

14.கம்பனுக்கும் ஆண்டாளுக்கும் பிளாக் ஹோல் எப்படித் தெரியும் ?

15.திருப்பாவை ராகங்கள்

16.ஆண்டாள் பொன்மொழிகள்

*****

17.வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை- 1; கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

18.வள்ளலார் முருக பக்தனா ? சிவ பக்தனா ?

19. தெய்வமணி மாலையில் உவமை நயம்

20. மேலும் பல உவமைகள்

21.வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5

22.வள்ளலார் பாடலில் பகவத் கீதையின் தாக்கம்- 6

23.தமிழ் வளர்த்த பாரதியாரும் வள்ளலாரும்

24.வள்ளலாரின் சிவ பக்தி!

25.வள்ளலாரும் மூலிகைகளும்!

26.வள்ளலாரின் கந்தர் சரணப்பத்து

27.அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

28.அரசே நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

29.நால்வர்க்கு வள்ளலார் போடும் பெரிய கும்பிடு!

30.வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்!

31.நாத்தீகர் மீது ஐந்து புலவர்கள் கடும் தாக்கு

32.ராமலிங்க சுவாமிகளின் 3 முக்கியப் பாடல்கள்

33.நான் ஏன் வடலூருக்குச் சென்றேன்?

வடலூர் வள்ளலாரின் சத்ய ஞான சபைக்கு விஜயம்

34. வள்ளலார் பொன்மொழிகள்

—subham—

அட்டையிலுள்ள ஆண்டாள் படம் , விக்கிப்பீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி . வடலூர் வள்ளலார் படம் லண்டன் சுவாமிநாதன் எடுத்தது.

Tirukkural Calendar from Sri Lanka year 1915

 Tirukkural Calendar from Sri Lanka year 1915

–subham–

tags- Tirukkural, calendar, Tirunavukkarasu, colombo publication, year 1915