Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஹெல்த்கேர் ஏப்ரல் 26 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
புதிய ஆய்வு தரும் உண்மைகள்! ஐந்து நாட்களே உட்கொள்ளும் ஜங்க் ஃபுட் மூளையை பாதிக்கும்!
ச. நாகராஜன்
ஜங்க் ஃபுட் என்று அழைக்கப்படும் வெற்றுணவு அல்லது சத்தில்லா உணவு மெதுவாகத் தான் உடலைப் பாதிக்கும் என்று பல ஆண்டுகளாக நிபுணர்கள் கூறி வந்தனர். இவற்றைச் சாப்பிடுவதால் மெதுவாக எடை கூடும் என்பது இவர்கள் கருத்தாக இருந்து வருகிறது. நிறைய சாப்பிட்டவுடன் பல வருடங்கள் கழித்தே பாதிப்பு ஏற்படும் என்று சொல்லி வரப்பட்ட நிலையில் இப்போது புதிய ஆய்வு அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறது.
நேச்சர் மெடபாலிசம் (Nature Metabolism) என்ற பத்திரிகை இந்த நிபுணர்களின் கூற்றுக்கு சவால் விடுகிறது.
ஒரு புதிய ஆய்வை மேற்கொண்ட குழு ஒன்று ஆரோக்கியமான இளைஞர்களைத் தங்கள் ஆய்வுக்கு அழைத்தது. தொடர்ந்து அவர்களுக்கு ஐந்து நாட்கள் ஜங்க் ஃபுட் நிறைய அளவில் தரப்பட்டது. மாடர்ன் ஜங்க் ஃபுட் நிறைய கலோரிகளைக் கொண்டது. அதை இவர்கள் ஐந்து நாட்கள் உண்ட பின் தங்கள் வழக்கமான உணவுக்குத் திரும்பினர்.
இவர்களை ஆய்வு செய்த நிபுணர்கள் திடுக்கிட்டனர். ஐந்து தின ஜங்க் ஃபுட் அளவே இன்சுலினுக்கு மூளை எப்படி மாறியது என்பதைச் சுட்டிக் காட்டியது.
அதிகமான சர்க்கரை, கொழுப்புச் சத்து, உப்பு ஆகியவை மூளையை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை FDA கமிஷனராக இருந்த டேவிட் கெஸ்லர் (David Kessler) தனது புத்தகமான An End to Overeating என்ற புத்தகத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
இன்சுலின் என்பது ரத்த சர்க்கரை அளவு மற்றும் டயபடீஸ் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது என்று மட்டுமே இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அது மூளையையும் பாதிக்கும் என்பது இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதை நிச்சயமாக உறுதி செய்வதற்காக மூக்கில் மட்டும் ஸ்பிரே அடித்து இன்சுலினை நேரடியாக மூளைக்குச் செலுத்தினர் ஆய்வாளர்கள். இதன் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்கும் இதற்கும் தொடர்பு இல்லாமல் செய்யப்பட்டது. பின்னர் Functional Magnetic Resonance Imaging மூலமாக துல்லியமான அளவுகள் எடுக்கப்பட்டன. ஐந்தே நாட்கள் ஜங்க் ஃபுட் -ஐ சாப்பிட்ட இளைஞர்களின் மூளையில் மாறுதல் ஏற்பட்டிருந்தது. நினைவாற்றல் மற்றும் பார்க்கும் பகுதிகளில் மூளை பாதிக்கப்பட்டிருந்தது. அவர்களின் நடத்தையில் நுட்பமான மாறுதல்கள் ஏற்பட்டிருந்தன. பரிசைப் பெறும் போது அதிகம் மகிழாமல் தண்டனை தரும் போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டனர்.
கல்லீரல் கொழுப்பு பெருமளவில் அதிகமாக ஆகியிருந்தது. ஆரோக்கியமாக உடல் காணப்பட்ட போதிலும் உடலின் வளர்சிதைமாற்றம் வெகுவாக மாறி இருந்தது. சுருக்கமாகச் சொல்லப் போனால் மூளை பழைய மூளையாக இல்லை!
கலோரிகள் அதிகமாக உள்ள வெற்றுணவை சாப்பிடும் போது மூளை வலிமையான சிக்னலைப் பெறுகிறது.
இந்த ஆய்வு ஆரோக்கியமான இளைஞர்களிடமே இப்படி ஒரு மாற்றத்தைக் காண்பித்தால் மற்றவர்களிடம் என்னென்ன மாற்றங்களைச் செய்யும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ளலாம்.
ஆகவே ஜங்க் ஃபுட் பெரும் அபாயத்தை விளைவிக்கும் என்பதை உணர்ந்து அதைத் தவிர்க்க வேண்டியது நமது கடமை.
ஜங்க் ஃபுட் என்ற வகையில் அன்றாடம் நாம் வாங்கும் நொறுக்குத் தீனிகளான உருளைகிழங்கு வறுவல், இனிப்பான பானங்கள், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் பர்கர், பிஸ்ஸா, சமோஸா, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆகியவை அடங்கும்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
In Tamil Nadu, previous D M K Government arrested a few speakers for teaching children about Papa, Punya, Rebirth etc from devotional hymns of Alvars and Nayanmars, the Tamil Vaishnavite and Saivite saints. Already we saw Hindutva Valluvar teaching women worship your husband and not the God so that you can command Rainy clouds to pour down. Again, the same Hindutva Valluvar asked Tamils to feed the guests every day so that Goddess Lakshmi will shower wealth in their housse. He did not stop there. He says if you eat the leftover after you fed the guests your fields will produce grains magically; you don’t need to sow the seeds! So superstitious!
And he talks about Indra’s Amrita (ambrosia) again and again. He called it Saavaa Marunthu meaning it will give you eternal life; no death at all; all superstition according to Dravidian Extremists.
But most of the Tamils knew that Dravidians were careful to avoid such Kural couplets in the past. All the Tamil writers are very careful to avoid hundreds of references to prostitutes in Sangam Tamil Books.
Here in the chapter on Hospitality, Hindutva Valluvar repeated his old beliefs.
***
Following Translations are used:
1.A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
2.S M Diaz, I G of Police- SMD Year 2000
3.Rev.Dr.GU Pope – GUP. Year 1886
4.Suddhananda Bharathiyar- SB
5.EVS Publishers, Singapore- EVS. Year 1986
6.H A Popley – HAP (not full book) Year 1931
7.Tamil Original
****
Part 17
Chapter 9 Hospitality
1.2.5 Cherishing Guests
81.What keeps alive the endless toil of the home of the wise? It is the love of the guests and pilgrims that seek shelter under the roof— A Aranganatha Mudaliyar – ANM+2 and B.L. Aranganatha iyer and R. Srinivasa Desikan. Year 1933
***
81.The only purpose, of a family of life of virtue and wealth,
Is to command the means of extending hospitality to guests— S M Diaz, I G of Police- SMD Year 2000
***
81. All household cares and course of daily life have this in view. Guests to receive with courtesy, and kindly acts to do. The whole design of living in the domestic state and laying up (property) is (to be able) to exercise the benevolence of hospitality.– Rev.Dr.GU Pope – GUP. Year 1886 ***
81.Men set up home, toil and earn To tend the guests and do good turn. Suddhananda Bharathiyar- SB
***
81.The sole purpose of a householder’s life and acquisition of wealth is to entertain guests and be hospitable to them— EVS Publishers, Singapore- EVS. Year 1986
***
81.The wealth and joy of home life have one aim:
To cherish guests and show them kindness— HAP (not full book) Year 1931
***
81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
82.What though our festive board is crowned with the rich wine of the gods when our guests hungrily wait at our doors?— ANM+2
***
82.Even the nectar of immortality is not to be consumed
Without sharing with the guests waiting outside— SMD
*** 82. Though food of immortality should crown the board, Feasting alone, the guests without unfed, is thing abhorred. It is not fit that one should wish his guests to be outside (his house) even though he were eating the food of immortality. –GUP
***
82.To keep out guests cannot be good Albeit you eat nectar-like food –SB
***
82.Even though what one eats be ambrosia , eating it alone without sharing it with one’s guests is highly improper—- EVS
***
82.To eat oneself while stranger waits without
Makes even immortal nectar undesired— HAP
***
Devas and Asuras Churnung Milky ocean to get Amrita (Nectar of Immortality)
83.If there a home that falls on evil days which is hallowed by the presence of the guests that daily pour in?— ANM+2
***
83.The life of a man who extends hospitality to guests everyday
Will never be affected by any untoward development – SMD
***
83. Each day he tends the coming guest with kindly care; Painless, unfailing plenty shall his household share. The domestic life of the man that daily entertains the guests who come to him shall not be laid waste by poverty.– GUP
***
83.Who tends his guests day in and out His life in want never wears out.– SB
***
83.He who daily entertain the guests who go to him will never be ruined by poverty—- EVS
***
83.Who daily cheriseth the coming guest
Shall never by want or woe be hard oppressed—HAP
*** 83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
84.Lovingly the Goddess of Wealth ever adorns with her gracious presence the hearths and homes of those, who honour heir guests with a countenance decked in smiles— ANM+2
***
84.Laxmi, the Goddess of Wealth, will graciously live in the house,
Of one who feeds his guests with a cheerful face— SMD
***
84 With smiling face he entertains each virtuous guest, ‘Fortune’ with gladsome mind shall in his dwelling rest. Lakshmi with joyous mind shall dwell in the house of that man who, with cheerful countenance, entertains the good as guests.—GUP
***
84.The goddess of wealth will gladly rest Where smiles welcome the worthy guest. — SB ***
84.The goddess of fortune will be pleased to dwell in the home of the man who entertains his guests cheerfully—- EVS
85.Even unsown, the fields of one rustle with the rich manes of corn that regales one’s guests and then feeds on what remains– ANM+2
***
85.A man who feeds his guests before he has his own repast on the remnants,
Does not even have to sow seeds in his field—SMD
*** 85. Who first regales his guest, and then himself supplies, O’er all his fields, unsown, shall plenteous harvests rise. Is it necessary to sow the field of the man who, having feasted his guests, eats what may remain ?—GUP
*** 85.Should his field be sown who first Feeds the guests and eats the rest? — SB
***
85.The farm of the man who feeds his guests first and eats what is left, will yield crops even though seeds may not be sown— EVS
***
85.What need is there that he should sow his field
Who welcomes guests and eats but what remains?—HAP
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following are treasures from Five Pakistani Museums in Karachi, Taxila (Thatchaseelam), Peshawar (Purushapuram), Swat, and Lahore. They are mainly Buddhist treasures.
They are taken from the following book:
Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN
Author – DR F A KHAN
Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI
STRANGE BUT TRUE- ALL BUDDHA STATUES HAVE PROMINENT TILAK ON HIS FOREHEAD.
-Subham—
Tags- part 2, ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN, five Pakistani museums, Buddhist treasures TILAK
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Purananuru wonders-29, Tamil Encyclopedia-69; One Thousand Interesting Facts -Part 69
Item 541 Tamil Heroine
This is one of the famous poems in Purananuru. This shows Tamil women were heroic in Sangam Age. This is seen not only in Tamil Nadu but also in other parts of India. All Kshatria women were like her. Indian history is full f heroic women who fought against Muslim invaders and Christian invaders. But here is a beautiful comparison from a female poet. Her son is like a tiger cub and so definitely in the battle field.
One must remember the modern rules. Nowadays using boy soldiers is against international law. In those days teenage boys Rama and Lakshmana were taken by Vishwamitra to fight demoness Tadaka and others.
We see Veera Maathaa in Vedic literature as well. (I have written a separate article on this topic some years ago)
Notes: This is the only poem written by this female poet.
***
Item 542 Sanskrit word Thachchan (Puram verse 87)
In English we have lots of words with Tech (nology, nician, nical etc). All these words including Thachcan are derived from Sanskrit word
Takṣa (तक्ष).—[adjective] cutting off, destroying (—°); [masculine] a carpenter (—°); [Name] of a serpent-demon etc.
Source: Cologne Digital Sanskrit Dictionaries: Cappeller Sanskrit-English Dictionary
1) Takṣa (तक्ष):—[from takṣ] 1. takṣa mfn. ‘cutting through
***
Item 543-Eight Chariots in One Day
Avvaiyar, the most famous Female poet of Sangam age had composed several poems and gave us very interesting details of Sangam Age culture. Here in Puram 87 she warns the enemies of chieftain Athiyamān Nedumān Anji that he had also got good carpenters who can make 8 chariots a day! This statement shows us the technology and the road conditions of those days. We have hundreds of references to chariots in Akam (Sex and Family life) section where the hero comes to see his lady love in chariots. So, the road conditions were so good that they can drive very fast. Second point is that Tamils also used Chariots in battlefield like their northern counterparts. We always see Arjuna and Krishna in war chariot in Bhagavad Gita pictures.
***
Item 544 Athiyaman is Sathyavan, not a Tamil King!
Tamil name Athiyaman is Sathyavan in Sanskrit. Because Tolkappaiar banned SA as initial letter in Tamil he is Tamilized as Athiyamaan. Tamil women knows the story of Sathyavaan Savitri very well. They are known for their truthfulness. Sathya=Truth. Asoka 268 BCE also mentioned them in his inscription as Satyaputro. He belonged to Ikshvakus (Ikshu= Sugarcane) which Avvai herself said in another verse. They were the one who introduced Sugarcane cultivation in Tamil Nadu. Like Chozas they also came from North India.
***
Item 544 Strange but True Tamil has no AVV in Tamil!
If you go through word index of Sangam Tamil literature or Tirukkural you wont see the Tamil letter ஔ AVV at all. Only in footnotes under the poems we see ஔ (வையார்)
***
Puranānūru 87, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram O enemies! Protect yourselves before you enter the field! Among us is a warrior who will fight you in battle. He is like a chariot wheel crafted with care for over a month, by a carpenter who creates eight chariots in a day!
***
Avvaiyār and King Athiyamān Nedumān Anji were great friends. Avvaiyār wrote Puranānūru poems 87-104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390 and 392.
***
புறநானூறு87, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: தும்பை, துறை: தானை மறம் களம் புகல் ஓம்புமின் தெவ்விர்! போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன், வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே.
***
Item 545 Different sections of Army
In the Tamil commentary for Puram verse 88, we come across two sections of army “கூழை தார் கொண்டு யாம் பொருதும்”
Koozai= கூழை= the soldiers on the sides of the king or commander and at his back
Thaar = தார்= Front of the battalion= dust soldiers= they ride very fast and produce dust.
This description in the commentary shows Tamils organised the army and allocated particular roles to the soldiers.
***
Puranānūru 88, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram Whoever you may be, if you defend your words, “We will fight with his foot soldiers and the rest of his army”, you haven’t seen my lord who celebrates victories with festivals. He has drum-like shoulders, fine, strong chest with elegant ornaments that shoot rays, and is chief to young, brave warriors who bear long and shining spears.
யாவிர் ஆயினும், “கூழை தார் கொண்டு யாம் பொருதும்” என்றல் ஓம்புமின்! ஓங்கு திறல்
ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன், கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் விழவு மேம்பட்ட நல் போர் 5 முழவுத் தோள் என் ஐயைக் காணா ஊங்கே.
***
Item 546
Here in Puram verse 89, poetess Avvai described the appearance of a Virali:
, “O virali with a bright brow, kohl-rimmed eyes, delicate nature, and lifted, beautiful loins decorated with jewels!
VIRALI= a a female dancer , a female bard.
***
Item 547 Snake simile
Normally snakes will run away if they are hit or chased; but there are certain aggressive kinds of snakes that are ready to fight. Here poetess compared the soldiers to such aggressive snakes
Like snakes that do not fear the rods that hit them.
*** Item 548 Tamils were warmongers!
The king was ever ready for a fight; so he mistook even the natural sounds for beating sounds of war drums,
whenever the wind blows against the clear-sounding eyes of the tightly tied thannumai drum in the courtyard and it resonates.
***
Puranānūru 89, Poet Avvaiyār sang for Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram
O king with a battling army! You asked me again and again, “O virali with a bright brow, kohl-rimmed eyes, delicate nature, and lifted, beautiful loins decorated with jewels! Is there anyone in your huge country who can fight?
Yes, there are young, brave warriors who are fearless Not only that, there is also my king who is happy that it is war, whenever the wind blows against the clear-sounding eyes of the tightly tied thannumai drum in the courtyard and it resonates.
***
புறநானூறு89, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை : தும்பை, துறை: தானை மறம் “இழையணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், மடவரல், உண்கண், வாணுதல் விறலி! பொருநரும் உளரோ நும் அகன்தலை நாட்டு?” என வினவல் ஆனாப் பொரு படை வேந்தே, எறி கோல் அஞ்சா அரவின் அன்ன5 சிறு வன் மள்ளரும் உளரே, அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின், “அது போர்” என்னும் என் ஐயும் உளனே.
***
Item 549
Here is a beautiful description to say that No one can stop the king; no one can survive his attack.
The enemies are compared to deer in front of a tiger, darkness when sun shines, a strong bull that draws the cart even in muddy lands.
***
Item 550 Avvai Fond of Sanskrit Words!
Poetess Avvaiyar never hesitated to use Sanskrit words such as ACHCHU (Axis, Axle) PANDAM (things, materials) SAKATAM (cart).
Shamudrika Lakshana of kings :
Your strong, faultless arms reach down to your legs that are like crossbars – already explained in previous poems.
***
Puranānūru 90, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Thumpai, Thurai: Thānai Maram
If a fierce tiger roars in anger on the fragrant mountain slopes with white glory lilies resembling broken conch and wild jasmine flowers with lush leaves, can a deer herd linger there?
If the sun burns with rage, is it possible for darkness to exist in the expanses of the confused sky?
If a proud ox hauls a cart with goods, even if the long bar grinds the axle bars due to the weight, scattering the sand and breaking stones as it pulls out of a deep rut, is there a place where it cannot go?
O Lord of young warriors! Your strong, faultless arms reach down to your legs that are like crossbars.
Is there any warrior in this vast earth who can take your land and be jubilant, if you enter the field?
அச்சொடு தாக்கிப் பார் உற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய, அரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக்கை 10 வழு இல் வன் கை மழவர் பெரும! இரு நில மண் கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ, நீ களம் புகினே?
***
Item 551 King is Lord Shiva
Hindu poets never hesitated to compare kings with Vedic Gods and other gods. Queens were called Devi= Goddess; feminine form of Deva. Here in Puram verse 91, poetess Avvai blessed the king to live like Lord Shiva. She described Shiva as wee see in Puranas. So ,Tamils were Pukka Hindus well versed in Hindu scriptures
May you live as long as he lives, the god who has a milk-like, brow shaped moon on his lovely head, and a sapphire-like dark neck!
***
Item 552 Ayurveda in Tamil
Nellikkay , Indian gooseberry, Amlaka in Sanskrit has been used by the Hindus for long. They knew the medical benefits of using it. And there was a special type in black colour which is rare and has more medical benefits. Thos who use it would have full life span- 100 years. Even al-Biruni mentioned it is his writings (I have written a separate article on this topic some years ago)
Chieftain Athiyaman gifted such a rare variety to Avvaiyar which shows his generosity
***
Puranānūru 91, Poet Avvaiyār sang to Athiyamān Nedumān Anji, Thinai: Pādān, Thurai: Vālthiyal
O Athiyar king owning uproar-causing alcohol! O king with a mighty hand with whirling bracelets that lifts an unfailing, victorious sword and strikes down enemies in battlefields! O Anji with a golden garland, who is rich in murderous battles!
1 May you live as long as he lives, the god who has a milk-like, brow shaped moon on his lovely head, and a sapphire-like dark neck!
2
O Greatness! Without considering how difficult it was to get the sweet nelli fruit from a tree with small leaves, plucked from the crevices of an ancient lofty mountain that was difficult to scale, you gave it to me, knowing its benefits of removing death, which knowledge you kept within yourself!
***
புறநானூறு91, பாடியவர்: ஔவையார், பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி, திணை: பாடாண், துறை: வாழ்த்தியல் வலம்படு வாய்வாள் ஏந்தி ஒன்னார் களம் படக் கடந்த கழல் தொடி தடக்கை, ஆர்கலி நறவின் அதியர் கோமான்! போர் அடு திருவின் பொலந்தார் அஞ்சி! பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி 5 நீலமணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும! நீயே தொன் நிலைப் பெருமலை விடர் அகத்து அரு மிசை கொண்ட சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது, ஆதல் நின் அகத்து அடக்கிச் 10 சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே.
The Story of Indian Gooseberry Tree in Hinduism (Post No.11923)
Tags- Lord Shiva, Nellikkay, Indian Goosberry, Athiyaman, Sathyavan, Satyaputro, No AVVஔ in Tamil! Purananuru wonders-29, Tamil Encyclopedia-69, Item 552, Sanskrit words, Thachan, Taksha, Tech
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 36
திருவைகுண்டம்
பாண்டியநாட்டுத் திருப்பதிகள்
திருவைகுண்டம் (ஆழ்வார் நவதிருப்பதிகளில் ஒன்று)
பன்னிரண்டு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில், நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவதாக விளங்கும் வைகுண்டநாதர் கோவில் இங்கு அமைந்துள்ளது.
மூலவர் – ஸ்ரீ வைகுண்டநாதன், கள்ளப்பிரான், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் – வைகுந்தவல்லி, பூதேவி (இரண்டு தனிக்கோயில் நாச்சியார்கள்)
தீர்த்தம் – ப்ருகு தீர்த்தம், தாம்பரபரணி நதி.
விமானம் – சந்த்ர விமானம்.
ப்ரத்யக்ஷம் – ப்ருகு சக்ரவர்த்தி, இந்த்ரன்.
விசேஷங்கள் – ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிச்சிறப்பு.
காலதூஷகன் என்ற சோரன் (திருடன்) தான் திருடிய பொருளில் பாதி வைகுண்டநாதனுக்கு ஸமர்ப்பித்ததாகவும், ஒருசமயம் அரண்மனையில் திருடுகையில் பிடிபட்டு வைகுண்டநாதனை த்யானம் செய்ய, பகவான் திருடன் வேடம் பூண்டு அரசனுக்கு தத்வங்களை உபதேசித்து, காலதூஷகன் திருடன் அல்ல யோகி என்று அரசன் நினைக்க, பகவான் ப்ரத்யக்ஷமாகி திருடனுக்கும் அரசனுக்கும் நட்பு உண்டாக்கி அரசன் பிரார்த்தனைப்படி பகவான் “கள்ளப்பிரான்” என்ற திருநாமம் பெற்றார்.
ஸோமகன் என்னும் அசுரன் சதுர்முகனடைய ஞானத்தை அபஹரித்ததாகவும், ப்ருஹ்மா இவ்விடத்தில் தவம் செய்து, பகவான் ப்ரத்யக்ஷமாகி, அசுரன் அபஹரித்த ஸ்ருஷ்டிஸாமர்த்திய ஞானத்தை கொடுத்ததாக வரலாறு.
மணவாளமாமுனிகள் மங்களாசாஸனம் செய்த இடம்.
மங்களாசாஸனம் –
நம்மாழ்வார் – 3571, 3575 – 2 பாசுரங்கள்.
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம் தந்து பிறவா நிலை தரும் பெருமாள்
தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீக நகரமே திருவைகுண்டம் (ஸ்ரீவைகுண்டம்). புகழ்பெற்ற நவதிருப்பதி தலங்களில் முதன்மையானது.
இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் சூரியனின் கதிர்கள் மூலவரின் மீது படுவது சிறப்பம்சமாகும்.
‘கைலாசநாதர் கோவில்’
தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மற்றொரு முக்கிய சிவஸ்தலமான கைலாசநாதர் கோயிலும், குமரகுருபரர் அவதரித்த தலமும் இதுவேயாகும்.
தூத்துக்குடியிலிருந்து சுமார் 35 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
இது திருநெல்வேலி – திருச்செந்தூர் லைனில் ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷனில் இருந்து 1 1/2 மைல் தூரம் உள்ளது. திருநெல்வேலியிலிருந்து பஸ்ஸிலும் வரலாம்.
****
புராண வரலாறு
பிரம்ம தேவனிடமிருந்து அசுரன் சோமுகன் வேதங்களைத் திருடிச் சென்றுவிட, பிரம்மா விஷ்ணுவிடம் உதவி வேண்டுகிறார். தாமிரபரணிக்கரையில் உள்ள கலச தீர்த்தத்தில் நீராடி வைகுண்டத்திலுள்ள நாராயணனை நோக்கி அவர் தவம் புரிய, நாராயணனும் வேதங்களை மீட்டு அவருக்கு உதவும்பொருட்டு, அதே தலத்தில் வைகுண்டநாதராய் எழுந்தருளினார் என்கிறது இக்கோவிலின் தலபுராணம்.
மூலவர் வைகுண்டநாதர் ஆதிசேஷன் குடைபிடிக்க, நான்கு கரங்களுடன், மார்பில் மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். பொதுவாக பெருமாள் ஆதிசேஷனில் சயனித்தபடி இருப்பார். ஆனால் இங்கு ஆதிசேஷன் குடைபிடிக்க பெருமாள் நின்ற திருக்கோலத்தில் இருப்பது தனிசிறப்பாகும். தாயார் திருநாமம் வைகுண்டநாச்சியார்.
உற்சவர் சோரநாதர் (கள்ளபிரான்) பூதேவி, ஸ்ரீதேவியுடன் காட்சி தருகிறார். இவருக்குரிய தாயாரின் திருநாமம் சோர நாச்சியார். இரண்டு தாயார்களுக்கும் தனித்தனி சன்னிதி உள்ளன.
வைகுண்ட ஏகாதசி உற்சவம் வித்தியாசமாக கொண்டாடப்படும் திவ்ய தேசம்
மணித்துளி தரிசனம்
இந்த வைகுண்டநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவம் மற்ற பெருமாள் கோவில்களை விட சற்று வித்தியாசமாக அனுசரிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசியன்று உற்சவர் கள்ளபிரானை அர்த்த மண்டபத்திற்குள் கொண்டு செல்வார்கள். அதே தருணம் மூலவர் வைகுண்ட பெருமாள் சன்னதியை அடைத்து விடுவார்கள்.
பின் கண் இமைக்கும் நேரத்திற்குள் நடை திறந்து, சுவாமிக்கு தீபாராதனை காட்டி உடனே அடைத்து விடுவர். ஒரு சில மணித்துளிகளுக்குள் இந்த வைபவம் நடந்து முடிந்து விடும். இதற்கு மணித்துளி தரிசனம் என்று பெயர். இவ்வேளையில் சுவாமியை தரிசித்தால், பிறப்பில்லா நிலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
உற்சவர் கள்ளபிரானுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம்
ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளில் உற்சவர் கள்ளபிரானுக்கு, 108 போர்வைகள் அணிவித்து பூஜை செய்வது வழக்கம். பின், உற்சவர் கள்ளபிரான் கொடிமரத்தைச் சுற்றி வருவார்.
அதன்பின், ஒவ்வொரு போர்வையாக எடுத்து அலங்காரத்தைக் கலைப்பார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் உள்ள அனைத்து பெருமாள்களும், இந்நாளில் கள்ளபிரான் வடிவில் காட்சி தருவதாக ஐதீகம்.
சூரிய தோஷ நிவர்த்தி தலம்
பாண்டிய நாட்டு நவதிருப்பதி என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒன்பது வைணவத் திவ்ய தேசங்களைக் குறிக்கும். நவதிருப்பதி தலங்களில் முதலாவதான இத்தலம் சூரியனுக்குரியது.
சித்திரை மற்றும் ஐப்பசி மாத பவுர்ணமியன்று காலையில் சூரிய ஒளி வைகுண்டநாதர் பாதத்தில் விழும். இதற்கு ஏற்றாற்போல் சுவாமி சன்னதி எதிரிலுள்ள கொடி மரம், பலிபீடம் தென்புறம் விலகியிருக்கிறது. ஜாதகத்தில் சூரியன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
ஒரே தலத்திலேயே வைகுண்டநாதர் கோவிலும், கைலாசநாதர் கோவிலும் அமைந்திருக்கும் தனிச்சிறப்பு
இந்த தலத்திலேயே, கைலாசநாதர் கோவிலும் உள்ளது. ஒரே ஊரில் கைலாசநாதர் கோவிலும், வைகுண்ட நாதர் கோவிலும் அமைந்திருப்பது வைகுண்டம், கயிலாயம் என இரண்டையும் தரிசித்த பலன் கிடைக்கும்.
கண்களை கவரும் சிற்பங்கள்
இக்கோவிலில் கண்களையும், கருத்தையும் கவரும் வகையில் ஏராளமான சிற்பங்கள் அமைந்துள்ளன. சிற்பக்கலை ரசிகர்களுக்கு இக்கோவில் ஒரு அரிய பொக்கிஷமாகும். நவநாரி குஞ்சரம் என்னும் யானை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஒன்பது பெண்கள், பஞ்ச நாரி துரகம் என்னும் குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
–subham—
Tags- Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-36; திவ்யதேசம், லண்டன் சுவாமிநாதன் படங்கள் ,சூரிய தோஷம், மணித்துளி தரிசனம் திருவைகுண்டம்,யானை வடிவில் ஒன்பது பெண்கள், குதிரை உருவ வடிவில் அமைந்திருக்கும் ஐந்து பெண்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Healthcare ஏப்ரல் 26 இதழில் வெளியான கட்டுரை!
உணவை எப்படி சாப்பிட வேண்டும்? நூறு வார்த்தைகளில் பதில்!
ச. நாகராஜன்
உணவை உண்பது பற்றி அறநூல்கள் கூறுபவை:-
உணவை ஒருவன் புனிதமாகக் கருத வேண்டும். அதை இகழந்து சாப்பிடக் கூடாது. உணவைப் பார்த்தவுடன் ஒருவன் சந்தோஷப்பட வேண்டும். இனிமையாக நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.
உன்னதமான வளம் மிக்க வாழ்க்கையை ஒருவன் விரும்பினால் அவன் தனியாகச் சாப்பிடக் கூடாது. இரண்டு, மூன்று அல்லது அதற்கும் மேல் உள்ளவர்களுடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.
ஒரு நாளின் பகல் நேரத்தில் எட்டாம் பகுதி வரும் போது சூரியனின் வெப்பம் தணிகிறது. இரவு நேரம் ஆரம்பிக்கப் போகிறது என்பதை உணர்ந்து அப்போது உணவருந்தக் கூடாது.
தான் அருந்திய எச்சில் உணவை ஒருவன் யாருக்கும் கொடுக்கக் கூடாது. அதை வைத்திருந்து பின்னர் தானும் சாப்பிடக் கூடாது. அதிகமாக உணவை சாப்பிடக் கூடாது. உணவை மிச்சம் வைத்து விட்டும் ஒருவன் போகக்கூடாது.
சரகர் தெரிவிக்கும் உண்மை வைத்தியரின் குணாதிசயங்கள் என்ன?
இதோ நூறே வார்த்தைகளில் பார்க்கலாம்!
ச. நாகராஜன்
ஆயுர்வேதத்தை உலகுக்கு அளித்த சரகர் தனது சரக சம்ஹிதாவில் யார் உயிரைக் காப்பாற்றும் வைத்தியர் என்று தெரிவிக்கிறார்.
உடலில் உள்ள இரண்டு நெற்றிப் பொட்டுகள், மர்மத்ரயம் எனப்படும் தலை, இதயம், நீர்ப்பை, ஆகிய மூன்று, தொண்டை, இரத்தம், விந்து, ஓஜஸ், குதம் ஆகிய பத்து இடங்களே உயிரின் ஆதார இடங்களாகும்.
ஒரு நல்ல வைத்தியர் இந்த இடங்களைப் பற்றி அறிவதோடு புலன்கள், நுண்ணறிவு, வியாதிகள் வருவதற்கான மூல காரணங்கள், அவை தோன்றுவதற்கான அறிகுறி, அவற்றை சிகிச்சை மூலம் அகற்றும் வழி, ஆகியவை பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
ஆயுர்வேத விஞ்ஞானத்தை முழுதுமாக அறிந்திருப்பதோடு அதை வரிசையாகச் சொல்லத் தெரிய வேண்டும்.
அதன் உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்த நூலறிவோடு கூட,. மருந்துகளைப் பற்றிய அறிவு, நினைவாற்றல், ஆகியவற்றைப் பெற்றிருப்பதோடு இதில் நல்ல அனுபவத்தையும் பெற்றிருக்க வேண்டும்.
Buddhist Treasures from Five Pakistani Museums-1 (Post 15,790)
Written by London Swaminathan
Post No. 15,790
Date uploaded in London –26 May 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Following are treasures from Five Pakistani Museums in Karachi, Taxila (Thatchaseelam), Peshawar (Purushapuram), Swat, and Lahore. They are mainly Buddhist treasures.
They are taken from the following book:
Title of the book- ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN
Author – DR F A KHAN
Published by ELITE PUBLISHERS LIMITED, KARACHI
OLD MAN
FROM JATAKA STORY
SLEEPING MUSICIAN
-Subham—
Tags- part 1, ARCHITECTURE AND ART TREASURES IN PAKISTAN, five Pakistani museums, Buddhist treasures
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
PART 66
மாரியம்மன்
தமிழ்நாட்டிலும் தமிழர் குடியேறிய உலக நாடுகளிலும் வணங்கப்படும் தெய்வம் மாரியம்மன். பார்வதியின் மறு வடிவம் இவள் ; சக்தி மற்றும் துர்க்கையின் அம்சமும் இணைந்தவள் ; அம்மை போன்ற நோய்களுக்கு காரணமானவள்; அவைகளை விலக்குபவளும் அவளே. மலேசியா இலங்கை, மொரீஷியஸ், சிங்கப்பூர், தாய் லாந்து முதலிய நாடுகளிலும் அன்னைக்கு கோவில் உண்டு; மதுரை போன்ற பெரிய நகரங்களிலும் மாரியம்மன் கோவில் இருக்கிறது ; நோய்களும் இயற்கைக் சேதங்களும் வராமல் இருப்பதற்காக கோடை காலத்தில் பொங்கல் வைத்தும், கஞ்சி, கூழ் வார்த்தும் மாவிளக்கு வைத்தும் இவளை வழிபடுகிறார்கள்; உடலில் எந்த பாகம் பாதிக்கப்பட்டதோ அந்த பாகத்தை வெள்ளியில் செய்து உண்டியலில் காணிக்கையாகவும் செலுத்துவார்கள்; சில ஊர்களில் பூக்குழி இறங்குதல் என்னும் தீ மிதித்தல் . முதுகில் கொக்கியை மாட்டி கம்பத்தில் தொங்குதல், தேர் இழு த்தல் ஆகியனவும் மாரியம்மனுக்கு செய்வார்கள்.
Bangkok, Thailand, Muthu Maraiamman Temple
***
மர்ம ஸ்தானம்
உடலில் உயிரை ஆரோக்கியமான நிலையில் வைக்க உதவும் உறுப்புகள் அல்லது இடங்களை மர்ம ஸ்தானம் என்பார்கள்; ஆயுர்வேதம், சில்ப சாஸ்திரம் முதலிய துறைகளில் பயன்படும் சொல் இது; அவைகள் பாதிக்கப்பட்டால் மரணம் சம்பவிக்கும் என்பதால் இந்தப் பெயர்; அன்றாடப் பேசசு வழக்கில் மலஜலம் கழிக்கும் உறுப்புகளுக்கும் இந்தப் பெயர் உண்டு ; மல்யுத்தம் போன்ற பயிற்சிகளில் இவைகளைத் தாக்கக்கூடாது என்ற விதிமுறைகள் உள்ளன .
***
மரீசி
மனு உண்டாக்கிய அல்லது பிரம்மாவின் மனதில் பிறந்த பத்துப் பேரில் ஒருவர் மரீசி ஆவார்; சம்ஸ்க்ருதத்தில் தீப் பொறி என்பது பொதுவான அர்த்தம்
A spark of fire; मरीच्य इव निष्पेतु- रग्नेर्धूमाकुलार्चिषः (marīcya iva niṣpetu- ragnerdhūmākulārciṣaḥ) Rām.1.56.18.
காஸ்யப முனிவரின் தந்தை; கலா என்பவரை மணந்து
அவரைப் பெற்றார்
***
மார்க்கண்டேயன்
மிருகண்டு முனிவரின் புதல்வர் ; நீண்ட காலமாகத் தவம் இயற்றிய பின்னர் அவருக்கு மார்க்கண்டேயன் பிறந்தார் ; அறிவு குறைந்த, ஆனால் நீண்ட காலம் வாழக்கூடிய பிள்ளைகள் வேண்டுமா அல்லது 16 வயது மட்டுமே வாழக்கூடிய புத்திசாலிப் பிள்ளையொருவன் வேண்டுமா என்று சிவ பெருமான் வினவியபோது அவர் அறிவுள்ள பிள்ளையே வேண்டும் என்றார் ; அந்தப்பிள்ளை மாபெரும் சிவ பக்தன் ஆனான் . பதினாறு வயது ஆனபோது எமன் தோன்றினான்; அப்போது அவன் சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிராத்தனையைத் தொடர்ந்தான்; எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்தையும் பெயர்த்து இழுத்தது; அதிலிருந்து வெளிப்பட்ட சிவ பெருமான் எமனை எட்டி உதைத்துத் தள்ளினார் இந்தப் பிள்ளைக்கு வயது என்றும் பதினாறு என்றார் ; இந்த நிகழ்ச்சி திருக்கடையூரில் நடந்ததாக தல வரலாலறு கூறும்
***
மருத் – வேத கால தெய்வங்கள்
மருத் என்றால் காற்று, புயல்காற்று என்றுபொருள் ; இதிலிருந்து வந்த சொற்களே மாருதி – காற்றின் புதல்வன் அனுமன் மற்றும் மந்த மாருதம் சண்ட மாருதம் என்ற சொற்கள் ஆகும் ; இவர்களை இந்திரனின் நண்பர்கள் என்றும் ருத்ர சிவனின் புதல்வர்கள் என்றும் இந்து சமய நூல்கள் பலவாறாக விளம்பும்
திதி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட கர்ப்பத்தை இந்திரன் கலைக்கவே அது 49 துண்டுகளாகச் சிதறியதாகவும் பார்வதி தேவி கருணை கொண்டு அவைகளுக்கு உயிரூட்ட சிவ பெருமானை வேண்டியதாகவும் அவர் அவ்வாறே செய்ததால் அந்த 49 பேரும் ருத்ரனின் பிள்ளைகள் என்றும் ராமாயணம் பகரும் ; அவர்கள் மின்னல் இடியுடன் வலம் வருவார்கள் ; மா ரோதித– அழாதே என்று இந்திரன் சொன்னதால் மருத் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் புராணங்கள் உரைக்கும் ; அஷ்ட திக் பாலகர்களில் வடமேற்கு திசைக்கு அதிபதி வாயு அல்லது மருத்.
மந்த மாருதம் என்பது பொதிகை என்னும் மலய மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று .
சண்ட மாருதம் என்பது சூறாவளிக் காற்று
***
மாதலி
இந்திரனின் விண்கலத்தைச் செலுத்தும் விமானி அல்லது பைலட்; மஹாபாரத வனபர்வத்தில் அர்ஜுனனின் விண்வெளிப்பயணம் பற்றிய விரிவான வருணனை உள்ளது ; மாதலி, ஸ்பேஸ் ஷட்டில் போன்ற விண்கலத்தில் பூமிக்கு வந்து அர்ஜுனனை அழைத்துச் சென்றார்; அங்கு ஐந்து ஆண்டுகள் தங்கிய அர்ஜுனன் பல வீரதீரச் செயல்களைச் செய்தான். இந்திரனின் வாகனம் மீண்டும் மீண்டும் பயன்டுத்தவல்ல ஸ்பேஸ் ஷட்டில் என்பதால் அதே கலத்தில் அர்ஜுனன் பூமிக்குத் திரும்பிவந்தான் .
***
மடங்கள்
தென்னாட்டில் ஆதி சங்கரர், மத்வர் போன்ற பெரிய சன்யாசிகளும் மகான்களும் வசித்த இடங்கள் மடங்கள் ஆகும். இப்போது காஞ்சி காமகோடி சங்கச்சாரியார், சிருங்கேரி சங்கராச்சாரியார் மடங்களும் வைணவர்களுக்கு அஹோபில மடமும் இருப்பது போல், பல மடங்கள் உண்டு; அவர்களின் வழிவந்தோர் பரம்பரை பரம்பரையாக இவைகளை நிர்வகித்து வருகின்றனர் அங்கு தினசரி பூஜைகளும் சொற்பொழிவுகளும் நடக்கும்; அவர்கள் பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிடுகிறார்கள் அவர்களைத் தரிசிக்க ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள் ; பல இடங்களில் முந்தைய ஆச்சார்யார்களின் சமாதிகளும் இருக்கின்றன.
Sringeri Mutt in Kochi, Kerala
***
மத்ஸ்ய அவதாரம் மச்சா வதாரம்
மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரம் மீன் அவதாரம் ;மத்ஸ்ய அல்லாம் து மச்சம் என்பதன் பொருள் மீன் ; உலகில் அக்கிரமங்கள் அதிகரிக்கும்போது அவதாரம் தோன்றும்; ஒரு முறை மஹா பிரளயம் வந்த போது ஒரு படகில் நல்லோர் அனைவரையும் விஷ்ணு ஏற்றிச் சென்றார்; மனு என்ற பெயரிலும் நோவா முதிய பெயர்களிலும் இந்தப் பிரளயக் கதை பல சமய புஸ்தகங்களில் உள்ளன .
***
மத்ஸ்ய புராணம்
மச்சாவதாரக் கதை கூறும் இந்தப் புராணத்தில் 15,000 ஸ்லோகங்கள் வரை உள்ளன ; புராணத்துக்கான பஞ்ச லட்ஷணங்களும் உள்ள இந்தப் புராணம் விஷ்ணு மற்றும் வாயு புராணம் போலவே உள்ளது.
***
மயன்
அசுரர்களின் தச்சன் ; விஷ்வகர்மா என்பவன் தேவர்களின் தச்சன் ; இவன் விப்ரசித்தியின் மகன் ; மண்டோதரி மற்றும் வஜ்ரகர்மாவின் தந்தை.
மஹாபாரதம், ஹரிவம்சம் நூல்களில் பல கதைகள் உள்ளன காண்டவ வனத்தை அர்ஜுனனும் கிருஷ்ணனும் எரித்தபோது மயன் என்பவர் தப்பித்துச் செல்ல அவர்கள் உதவினார்கள்; இதற்கு நன்றிக்கடனாக இந்திரப்பிரஸ்தம் என்னும் தலை நகரில் பளிங்குக் கற்களால் ஆன அழகான மண்டபத்தை மயன் கட்டிக்கொடுத்தான்; அதைப் பார்வையிட வந்த துரியோதனன் கண்ணாடி போன்ற ஹாலில் தண்ணீர் என்று நினைத்து ஆடையைத் தூக்கிக் கொண்டான்; இன்னும் ஒரு இடத்தில் உண்மையிலேயே தண்ணீர் இருந்த இடத்தில் பளிங்குத் தரை என்று நினைத்துக் காலை விட்டான்; இதை எல்லாம் சாளரத்திலிருந்து தோழிகளுடன் பார்த்துக்கொண்டிருந்த திரவுபதி கொல் என்று உரக்கச் சிரித்துவிட்டாள். அவளைப் பழிவாங்கத்துடித்த துரியோதனன் பாண்டவர்கள சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்தபோது திரவுபதியின் ஆடையை விலக்கச்செய்து பழி தீர்த்துக் கொண்டான் ; பெண்கள் மற்றவர்களை இகழ்ச்சி செய்யும் வித்த்தில் சிரித்தால் அழிவு உண்டாகும் என்பதை விளக்கும் கதை இது .
மயன் என்பவன் தென் அமெரிக்காவுக்குச் சென்று பிரம்மாண்டமான கட்டிடங்களைக் காட்டி மாயன் நாகரீகத்தை உண்டாக்கினான்
ராமாயண மஹாபாரத காலத்தில் ஒரே மயன் இருந்திருக்க முடியாது; பொதுவாக மயன் என்ற சொல்லுக்குத் சிறந்த கட்டிடக் கலைஞன் என்றே பொருள் கொள்ள வேண்டும் .
***
மாயா /மாயை
பொய்த் தோற்றம் – கானல் நீர் போன்றது ; இல்லாத ஒன்றை இருப்பதாக நினைப்பது மாயை ;
உபநிஷத ரிஷிகள் இதைப் பல உதாணரங்களில் விளக்கினார்கள்; பாம்பைக் கயிறு என்றும் கயிற்றைப் பாம்பு என்றும் எண்ணுவது மாயைக்கு ஆதிசங்கரர் கொடுத்த உதாரணம் ஆகும் இந்த உலகே மாயம் பரம்பொருள் ஒன்றே சத்தியம் அதுவும் நாமே என்று உணர வேண்டும் என்று சொல்லி ஆதி சங்கரர் அத்வைதக் கொள்கையைப் பரப்பினார்.
***
மணிகர்ணிகா காட்
மணிகர்ணிகா படித் துறை காசியில் கங்கைக் கரையிலுள்ள மயானம் ஆகும்; உலகிலேயே 3000 ஆண்டுகளாகத் தொடர்ந்து சடலங்கள் எரியும் புனித இடம் இது ; விடுமுறை நாளே இல்லாமல் சடலங்களை எரிப்பதற்குக் காரணம் காசியில் இறந்தால் நேரடியாக முக்தி பெறலாம்; மறு பிறப்பு என்னும் பெரும் பிணியிலிருந்து தப்பிக்கலாம் என்று இந்துக்கள் நம் புவதே . உறவினர்களோ பிறரோ சடலங்களை புகைப்படம் எடுக்க அனுமதிப்பதில்லை ஆனால் படகுகளில் சவாரி செய்த வாறே வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடத்தைக்காணலாம் . சடலத்தை தகனம் செய்வதற்கு சந்தனக் கட்டை என்றால் கட்டணம் அதிகம்; சாதாரண விறகு என்றால் கட்டணம் குறைவு ; ஆயினும் முடி சார்ந்த மன்னரும் பிடி சாம்பாராய்ப் போகும்இந்து மத தத்துவத்தை விளக்கும் புண்ய பூமி இது.
****
மாயாதேவி
கெளதம புத்தரின் அன்னையின் பெயர் இது . நேபாளத்தில் கபிலவஸ்து என்னும் பிரதேசத்தில் லும்பினி என்னும் இடத்தில் புத்தர் அவதரித்தார் . மாயாதேவி, லும்பினி தோட்டத்திலிருந்து வீட்டிற்கு நடந்து செல்லும்போது இடுப்பு வலி அதிகரிக்கவே சால் மரக் கிளையினைப் பிடித்துக்கொண்டு நின்றவாறே பிள்ளையைப் பெற்றார் மஹாராணி என்பதால் தோழிகள் புடை சூழ வந்திருந்தார்; இப்போது அந்த இடம் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் பக்தர்களையும் கவர்ந்து இழுக்கிறது அது யுனெஸ் கோ அங்கீகரித்த பாரம்பர்ய இடம் ஆகும்.
***
மாயாவதி
ரதிதேவியின் மறுபிறப்பு மாயாவதி.
காதல் கடவுளான மன்மதனின் (காமன்) மனைவியே ரதி தேவி. மன்மதனை சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கியபோது, ரதி தேவி மிகுந்த துயரமடைந்தாள்.அவள் தனது கணவனை மீண்டும் அடைய வேண்டி சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள். அவளது தவத்திற்கு இரங்கிய சிவன், மன்மதன் பூமியில் பிறப்பான் என்றும், ரதி மாயாவதி என்னும் பெயரில் பூவுலகில் அவதரித்து அவனை மீண்டும் மணந்து கொள்வாள் என்றும் வரமளித்தார்.
பூமியில் பிறந்த மாயாவதி, சம்பரன் என்ற அசுரனின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வளர்ந்தாள். (மன்மதனின் சாம்பல் கடலில் வீசப்பட்டபோது, அதை ஒரு மீன் விழுங்கியது. அந்த மீனை மீனவர்கள் பிடித்து சம்பரனின் சமையல்காரனிடம் கொடுத்தனர் சமையல்காரன் வயிற்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த மீனில் இருந்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை மன்மதனின் மறுபிறவியான பிரத்யும்னன் (கிருஷ்ணன் மற்றும் ருக்மிணியின் மகன்) ஆவான்.
மாயாவதி அக்குழந்தையை அன்புடன் வளர்த்து வந்தாள். நாரதர் மூலம் அக்குழந்தையின் உண்மையான வரலாற்றை அவள் அறிந்தாள். மாயாவதி தனது மாயா சக்தியால் அசுரனான சம்பரனை அழித்து, மன்மதனின் மறுபிறவியான பிரத்யும்னனைத் திருமணம் செய்து கொண்டு வைகுண்டம் திரும்பினாள்.
To be continued………………….
Tags–மாயாவதி HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 66; இந்து மத கலைச்சொல் அகராதி-66, PART 66, மாரியம்மன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Part 35
வரகுணமங்கை ( நத்தம் )
வரகுணமங்கை (தற்போது நத்தம் என்று அழைக்கப்படும் ஊர்) தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வைணவத் திருத்தலமாகும். 108 திவ்ய தேசங்களில் 92-வது தலமாகவும், நவ திருப்பதி வரிசையில் 2-வது (சந்திரனுக்குரிய) தலமாகவும் போற்றப்படுகிறது
மூலவர்: விஜயாசனப் பெருமாள் (கிழக்கு நோக்கி அமர்ந்த
இதன் விமானம் விஜயகோடி விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. இத்தலம் நம்மாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றுள்ளது.
தல வரலாறு: ஸ்ரீவைகுண்டத்தில் நின்ற பெருமாளுக்கு குடை பிடித்த ஆதிசேடன், இங்கு அமர்ந்த நிலையில் உள்ள பெருமாளுக்குக் குடை பிடித்திருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். சந்திரனின் சாபம் தீர்த்த தலமாக இது நம்பப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ (1 மைல்) தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ளது
ரேவா நதிக்கரையில் புண்ணிய கோசம் அக்ரகாரத்தில், வேதவித் என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவன் தன் தாய், தந்தை, குரு ஆகியோருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விட்டு, ‘ஆஸனதை’ என்னும் மந்திரத்தை உச்சரித்து திருமாலை நோக்கி தவம் இயற்ற முடிவு செய்திருந்தான். அப்போது திருமால், வயோதிக வடிவம் கொண்டு வேதவித்தை தேடி வந்தார். “சக்யம், மகேந்திரம் என்னும் இரு மலைகளுக்கு இடையில் உள்ள வரகுணமங்கை என்னும் பதியில் சென்று தவம் இயற்று. அதுவே ஆஸனதை மந்திரத்தை ஜபிப்பதற்கு ஏற்ற இடம்” என்று கூறினார்.
வேதவித்தும் ஆஸனதை மந்திரத்தை வரகுணமங்கையில் இருந்து ஜபித்து, திருமாலை நோக்கி கடும் தவம் இருந்தான். அதன் பயனாக திருமாலின் தரிசனம் கிடைத்து வைகுண்டம் சென்றடைந்தான். வெற்றியைத் தரக்கூடிய ‘ஆஸனதை’ என்னும் மந்திர ஜபத்திற்கு கட்டுப்பட்டு, அனைத்து நலன்களையும் நல்கும் பெருமாளாக ‘விஜயாசனப் பெருமாள்’ இங்கு அருளாட்சி செய்து வருகிறார்.
ஐந்து நிலை ராஜ கோபுரம் சுதைச் சிற்பங்களோடு அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளே நுழைந்தால் கொடி மரம், பலிபீடம் காட்சியளிக்கின்றன.. பெருமாளின் வலப்புறம் வரகுணமங்கையும், இடப்புறம் வரகுணவல்லி தாயாரும் இருந்து பக்தர்கள் கேட்கும் வரங்களை அளித்து அருள்புரிகின்றனர்.
வரகுணமங்கை என்று தாயார் பெயரிலேயே இவ்வூர் அழைக்கப்பட்டாலும், நத்தம் என்று சொன்னால் மட்டுமே பலருக்குப் புரியும்.
அக்னி, உரோமச முனிவர், சத்தியவான் ஆகியோருக்கும் பெருமாள் இங்கு காட்சி அளித்துள்ளார்.
இத்தலத்தில் பிரம்மாவின் கர்வத்தை அழித்த ரோமச ரிஷிக்கும், எமனிடம் போராடி கணவனை மீட்ட சாவித்திரிக்கும், அதர்மத்தை சுட்டுப் பொசுக்கும் அக்னிக்கும் பெருமாள் காட்சி கொடுத்துள்ளார்.
இங்குள்ள மகா மண்டபத்தில் நரசிம்ம மூர்த்தி இருந்த கோலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
திருவிழா:
சித்திரை வருடப்பிறப்பு, ஆடி மாதப்பிறப்பு, புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, ஐப்பசியில் 5 நாள் தெப்ப உற்சவம், திருக்கார்த்திகை, தனுர் மாதம், வைகுண்ட ஏகாதசி, தை மாதப் பிறப்பு, மாசியில் நடைபெறும் 11 நாள் பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்கள் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
முகவரி:
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில்
நத்தம் (வரகுணமங்கை) – 628 601
*****
Taken from another website
தசாவதாரமும் நவகிரகங்களும்:
பொதுவாக சிவன் கோயில்களில் மட்டுமே நமக்கு நவகிரகங்களின் தரிசனம் கிடைக்கும். பெருமாள் கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வாரை தரிசனம் செய்வோம். வைணவ ஸ்தலமான மதுரை கூடலழகர் திருக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது.
ராமாவதார சூர்யஸ்ய சந்திரஸ்ய யதநாயக
நரசிம்ஹோ பூமிபுதரஸ்ய யௌம்ய சோமசுந்த்ரஸ்யச
வாமனோ விபுதேந்தரஸிய பார்கவோ பார்கவஸ்யச :
கேதுர்ம் நஸதாரய்ய யோகசாந்யேயிசேகர
என்ற ஸ்லோகத்தை அடிப்படையாகக் கொண்டு,
ஸ்ரீ ராமாவதாரம் – சூரியன்
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் – சந்திரன்
ஸ்ரீ நரசிம்மவதாரம் – செவ்வாய்
ஸ்ரீ கல்கியவதாரம் – புதன்
ஸ்ரீ வாமனவதாரம் – குரு
ஸ்ரீ பரசுராமாவதாரம் – சுக்ரன்
ஸ்ரீ கூர்மவதாரம் – சனி
ஸ்ரீ மச்சாவதாரம் – கேது
ஸ்ரீ வராகவதாரம் – ராகு
ஸ்ரீ பலராமவதாரம் – குளிகன்
என்று, பெருமாளின் அவதாரங்கள் கிரகங்களோடு தொடர்புடையவைகளாக கூறப்பட்டுள்ளது.
நவ திருப்பதிகள்-வைணவ நவக்கிரக ஸ்தலங்கள்
அதுபோலவே, சோழ நாட்டில் உள்ள நவகிரக ஸ்தலங்களைப் போல, பாண்டிய நாட்டில் உள்ள நவ திருப்பதிகளும் நவகிரக ஸ்தலங்களாகக் கருதப்படுகின்றன. அவை,
ஸ்ரீவைகுண்டம் – சூரிய ஸ்தலம்
வரகுணமங்கை (நத்தம்) – சந்திரன் ஸ்தலம்
திருக்கோளூர் – செவ்வாய் ஸ்தலம்
திருப்புளியங்குடி – புதன் ஸ்தலம்
ஆழ்வார்திருநகரி – குரு ஸ்தலம்
தென்திருப்பேரை – சுக்ரன் ஸ்தலம்
பெருங்குளம் – சனி ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (தேவர்பிரான்) – ராகு ஸ்தலம்
இரட்டைத் திருப்பதி (அரவிந்த லோசனர்) – கேது ஸ்தலம்
To be continued……………………
Tags- நவ திருப்பதிகள், Vishnu Temples 108 “Divya Desams” in Pictures-35, திவ்யதேசம்- லண்டன் சுவாமிநாதன் படங்கள், Part 35, வரகுணமங்கை,தசாவதாரமும் நவகிரகங்களும் வைணவ நவக்கிரக ஸ்தலங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-5-26 தீபம் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!
ராம நாம மஹிமை – ஶ்ரீ சத்ய சாயிபாபா அருளுரை!
ச. நாகராஜன்
ராம நாம மஹிமையை விளக்கும் கதை ஒன்று உள்ளது.
ஒரு சமயம், ப்ரசேதஸ் என்ற மஹரிஷி நூறு கோடி ஸ்லோகங்கள் கொண்ட ஒரு நூலை இயற்றினார்.
மூன்று லோகங்க்ளும் அந்த நூலுக்காக போட்டி போட்டன. இந்த போட்டியானது மிக மோசமான நிலையை அடையவே கடவுளே மூன்று லோகங்களையும் அழைத்தார்.
ஒவ்வொரு லோகத்திற்கும் மூன்றில் ஒரு பங்கு தந்து அதை அந்தந்த லோகம் ஏற்குமாறு அவர் கூறினார்.
அதாவது ஸ்வர்க்கம், பூலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று லோகங்களுக்கும் சமமான பங்கு அது.
முப்பத்துமூன்று கோடியே முப்பத்துமூன்று லட்சத்து முப்பத்திமூன்றாயிரத்து முன்னூற்றி முப்பத்தி மூன்று என்பது மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
ஆக இப்போது மீதி ஒரே ஒரு ஸ்லோகம் இருந்தது. அதில் 32 எழுத்துக்கள் இருந்தன. ஆகவே அதில் ஒவ்வொருவருக்கும் பத்து எழுத்துக்கள் அளிக்கப்பட்டன. மீதம் இருந்தவை இரண்டு எழுத்துக்கள்.
இரண்டு எழுத்துக்களை எப்படி மூன்று லோகத்திற்கு சரிசமமாகப் பிரிக்க முடியும்?
ஆகவே அந்த இரண்டு எழுத்துக்களை மூன்று லோகமும் சமமாக மதித்து போற்ற வேண்டும் என்று கடவுள் அறிவுறுத்தினார்.
அந்த இரண்டு எழுத்துக்களே ரா மற்றும் ம ஆகும். மதிக்கவே முடியாத எல்லையற்ற மதிப்பு கொண்ட ராம நாமம் அதுவேயாகும்.
ராம என்பது தேனீ. இதய தாமரையிலிருந்து தேன் என்ற பக்தியை அது உருவாக்குகிறது. தேனீ தான் உட்கார்ந்திருக்கும் இலைகளை விட்டு எழுகிறது. ஆனால் ராம அதன் அழகைக் கூட்டி மணத்தைத் தருகிறது. ராமர் சூரியன் போல.
சூரியன் நீரை தன்னிடம் தனது கிரணங்களால் இழுத்து அதை மேகமாக மாற்றி மழையாக பூமியின் தாகத்தைத் தணிக்க அனுப்புகிறது.
ராம என்ற தெய்வீக ஆற்றலுடைய ஒலியானது நாபியில் பிறந்து நாக்கிற்கு வந்து அங்கு சந்தோஷமாக நர்த்தனமாடுகிறது.
வேதம் செய்யும் பிரகடனமான தத்வமஸி என்பது ராம என்ற எழுத்துக்களில் ஜொலிக்கிறது.
ராம என்பது மூன்று ஒலிகளை உள்ளடக்கியுள்ளது.
ர, ஆ, ம என்ற ஒலிகள் அதில் உள்ளன.
இவற்றில் ர என்பது சத்தியத்தின் சின்னம். (தத் – ப்ரஹ்மம் – கடவுள்)
ம என்பது த்வம் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும் (த்வம் – ஜீவி – தனிநபர்)
ஆ என்பது இரண்டையும் இணைக்கும் அடையாள சின்னமாகும்.
ராம என்ற எழுத்து எண்கணித சாஸ்திரப்படியும் பொருள் பொதிந்ததாகும்.
ர என்பதற்கு உரிய எண் 2.; ஆ என்பதற்கு உரிய எண் 0; ம என்பதற்கு உரிய எண் 5. ஆகவே ராம என்பதைக் கூட்டினால் – ஐந்தும் இரண்டும் கூட்டப்பட்டால் – வருவது 7 என்ற எண்ணாகும். இது ஒரு புனிதமான எண்ணாகும்.
நாம் இசையில் ஏழு ஸ்வரங்களைக் கொண்டுள்ளோம். சொர்க்கத்தில் சப்த ரிஷிகளைக் கொண்டுள்ளோம். ராம என்பதை ஏழு நாட்கள் தொடர்ச்சியாக ஜபித்தால் மிகவும் பலன் தருவதாக ஆகிறது.
பகவான் ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் உலக மாநாட்டை மும்பையில் பாரதீயவித்யாபவைன் வளாகத்தில் 16-3-1968 அன்று ஶ்ரீ சத்ய சாயிபாபா துவக்கி வைத்து ஆற்றிய உரை