Date uploaded in Sydney, Australia – 2 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
During my previous two trips to Sydney, I covered Shiva, Murugan (Skanda/ Kartikeya), Venkateswara, and Nantien Buddhist temples. During this third trip, I decided to cover rest of the temples. So, I went to Ganapathy (Vinayakar) temple and a Shakti temple in the past few weeks. My son told me that there are two more temples in an industrial area one next to another. Who will say we don’t want two birds in one stone. So, we rushed there in car on 31 January 2026 to get two mangoes in one stone. We were not disappointed.
In a vast industrial area with trucks and cranes, two small temples peeped out. First, we entered the Sydney Durga temple.
Surprise! Surprise!
Wes aw Tamil poet Tiruvalluvar statue next to Sarasvati Devi statue in the temple complex. When we moved a little further, we saw Tamil poet Ilango’s statue, the author of the most famous Tamil epic Silappadikaram.
Then we climbed several steep steps to see a huge hall with Goddess Durga in the main shrine. From the temple posters we came to know that it is run by Sri Lankan Tamils. On either side of the main shrine Lord Ganesh and Lord Skanda/ Murgan occupied two small shrines.
The unique feature of the temple is the eight beautiful Lakshmi statues (Ashta Laksmi) in the corridor. Apart from them, there are Navagrahas and other minor deities. There were four priests looking after the visiting devotees. In total only 25 devotees were inside the huge Mandapa. So, we had good Darshan (viewing) of Gods. It has a divine atmosphere.
There is a canteen outside where one can buy Tamil snacks.
Shirdi Saibaba Temple
Just a few doors away, is the Shirdi Sai Temple. Again, we climbed a number of steps to see a huge hall with Shirdi Sai baba occupying the Main shrine. A beautiful and melodious divine song was going on air. It created more divine atmosphere. About 15 people with one priest were there. Lord Ganesh, Siva and Hanuman are in smaller shrines. The unique feature of the temple is a Siva Linga where one can do Abisheka. Water pots are placed near it. We did Abishek (bathing of the God) with Mrtyunjaya Mantra from the Yajurveda. Here also one canteen is operating.
Both the temples must be visited by the devotees. There is good scope for big Puja, ceremonies and Dhyana (meditation).
After visiting Sai Mandir, we came back to Tamil Durga temple and bought hot Idli, Vadai, Sambhar, Chutney and Masala Tea.
Date uploaded in Sydney, Australia – 2 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 8
இவை அனைத்தும் பழனி மலை முருகன் பற்றிய பாடல்களில் உள்ளவை!
சென்னை வசவு கஸ்மாலம் !
குரம்பை மல(ம்) சலம் வழுவளு நிணமொடு … சிறு குடிலாகிய
இந்த வீடு – உள்ளே இருப்பது மலமும், மூத்திரமும், கெட்ட
வழுவழுப்பான கொழுப்பும்,
எலும்பு அணி சரி தசை இரல் குடல் … எலும்பும், அடுக்காகச்
சரிந்துள்ள தசைகளும், ஈரலும், குடலும்,
நெதி குலைந்த செயிர் மயிர் குருதியொடு … முறையின்றி
சிக்குற்ற மயிர்களும், இரத்தம் முதலியவைகளுடன்,
இவை பல கசுமாலம் … இவற்றோடு கெட்ட அழுக்குகள்
நிறைந்ததுமான,
பகவத் கீதையின் இரண்டாவது அத்தியாயத்திலுள்ள கஸ்மலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் பிற்காலத்தில் சென்னை வணிகர்கள் ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் பயன்படுத்தும் வசை மொழியாக மாறிவிட்டது .
श्रीभगवानुवाच ।
कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् ।
अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन ॥ २-२॥
கஸ்மலம் – மதிமயக்கம், தீய எண்ணம்
śrībhagavānuvāca
kutastvā kaśmalamidaṃ viṣame samupasthitam
anāryajuṣṭamasvargyamakīrtikaramarjuna 2-2
The Blessed Lord said: Whence is this perilous condition come upon thee, this dejection, un-Aryan-like, heaven-excluding, disgraceful, O Arjuna?
śrībhagavānuvāca = the Supreme Personality of Godhead said; kutaḥ = wherefrom; tvā = unto you; kaśmalaṃ = dirtiness; idaṃ = this lamentation; viṣame = in this hour of crisis; samupasthitaṃ = arrived; anārya = persons who do not know the value of life; juṣṭaṃ = practiced by; asvargyaṃ = which does not lead to higher planets; akīrti = infamy; karaṃ = the cause of; arjuna = O Arjuna.;
Sanskrit dictionary
[«previous (K) next»] — Kashmala in Sanskrit glossary
விளங்குகின்ற கலிசை என்னும் பதியில் வாழ்கின்ற சேவகனுடைய மனத்தில் வீற்றிருக்கும் முதல்வனே,
வயல் வாவி புடை மருவு வீரை வரு பழநி ஞான மலையில்
வளர் பெருமாளே. … வயல்களும் குளங்களும் பக்கங்களில்
பொருந்தியுள்ள வீரை என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளவனும், பழனியாகிய ஞான மலையில் வீற்றிருப்பவனுமான பெருமாளே.
(மனிதர்களைப் புகழ்ந்து பாடாத அருணகிரிநாதர் அபூர்வமாகப் பாடிய சிலரில் கலிசைச் சேவகனார் ஒருவர். இவர் அருணகிரியாரின் நண்பர்,முருக பக்தர், வீரைநகரில் பழநி ஆண்டவரை எழுந்தருளப் புரிந்தவர்).
***
சிவன் செய்த ஐந்து வீரச் செயல்கள்
பகலைப் பல் சொரியத் தக்கன் பதி புக்கு அட்டு அழல்
இட்டுத் திண் புரம் மட்கிக் கழை வில் புட்பச் சரனைச் சுட்டு
அயனைக் கொத்திப் பவுரிக் கொள் பரமர்க்குச் சற்குரு
ஒத்துப் பொருளைக் கற்பித்து அருள்வோனே … சூரியனின்
பற்களைத் தகர்த்தும், தக்ஷன் தலை நகரில் சென்று அங்கே அவன் தலையில் நெருப்பு இட்டு கொன்றும், வலிய திரி புரங்களை அழித்தும், கரும்பு வில்லும் மலர்க் கணையும் உடைய மன்மதனைச் சுட்டு எரித்தும், பிரமனுடைய தலையை அரிந்தும் திருநடனம் புரிகின்ற பரமசிவனுக்கு சற்குருவாய் அமைந்து பிரணவப் பொருளை உபதேசித்து அருளியவனே,
***
கண்ணன் செய்த செயல்கள்
இந்திர நீல வனத்தில் செம் புவி அண்ட கடாகம்
அளித்திட்டு அண்டர்கள் எண்படு சூரை அழித்துக்
கொண்டு அருள் ஒரு பேடி இன்கன தேரை நடத்தி …
இந்திரனது காவலில் இருந்த இருண்ட காண்டவ வனத்தில்
(இருந்த அரக்கர்களை எரி ஊட்டியும்), செவ்விய பூமி முதல் அண்ட கோளத்தில் இருந்தவர்களை (அவுணர்களின் துன்புறுத்தலிலிருந்தும்) காப்பாற்றியும், தேவர்களின் எண்ணத் தக்க துன்பத்தை நீக்கி,nஅவர்கள் நாட்டைத் திரும்பித் தந்து அருளியும், ஒப்பற்ற பேடியாகிய*அர்ச்சுனனுடைய அழகிய தேரை (சாரதியாய்) நடத்தியும்,
செம் குரு மண்டல நாடும் அளித்துப் பஞ்சவர் இன்புறு
தோழ்மை உடைக் கத்தன் திரு மருகோனே … செம்மையான
குரு மண்டல நாட்டைப் பாண்டவர்களுக்குத் தந்து அப்பாண்டவர் ஐவரின் இன்புறு நட்பைப் பூண்டிருந்த தலைவனான திருமாலின் அழகிய மருகனே,
(பாண்டவரின் வனவாசத்தின் கடைசி ஆண்டில் அர்ச்சுனன்
ஒரு பேடி உருவில் அஞ்ஞாதவாசம் புரிந்தான்.)
***
விருதா ! = வெட்டிப்பயல், உதவாக்கரை
சிவனார் மனங்குளிர … சிவபிரானது மனம் குளிரும்படியாக
உபதேச மந்த்ரம் … ஓம் என்ற மந்திரத்தின் விளக்க உபதேசத்தை
இருசெவிமீதி லும்பகர்செய் … அவரது இரு செவிகளிலும் சொன்ன
சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து
பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய
விபீஷணன் … (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும்
அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று,
பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன்
***
ஐந்து வகைச் சக்திகள்
ஒருமாது சேர்பஞ்ச வடிவி … ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச*
சக்திகளின் கலவையான வடிவழகி,
மோகி யோகங்கொள் மவுன ஜோதி … சிவத்தின் காதலி,
சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி
வடிவினாள் ஆகிய உமா தேவியார்
சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா … சேர்ந்திருக்கிற
இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப்
பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே,
(* இறைவி ஆதிசக்தி, பராசக்தி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற ஐந்து சக்திகளாய் உள்ளாள்.)
To be continued …………………………………
Tags- நவ மணிகள் பஞ்ச, ஐந்து சக்திகள், நவ நதிகள், விபூதி, கலிசை, விருதா, கஸ்மாலம், அருணகிரிநாதர், அரிய செய்திகள் -Part 8, சொல் அழகும், பொருள் வளமும், திருப்புகழ்
Date uploaded in Sydney, Australia – 1 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மேலும் இரண்டு பெரிய, அழகிய கோவில்களுக்கு எனது விஜயம்
ஆஸ்திரேலியாவில், குறிப்பாக சிட்னி நகரிலுள்ள, எல்லா கோவில்களையும் பார்க்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டேன் . இதுவரை சிட்னி சிவன், முருகன், கணபதி, வெங்கடேஸ்வரா , துர்கா உள்பட ஐந்து கோவில்களுக்குக் சென்றுவிட்டேன் இன்னும் சில கோவில்கள் இருப்பதாகவும் இரண்டு கோவில்கள் அடுத்தடுத்து இருப்பதாகவும் என்னுடைய மகன் சொன்னவுடன் நேற்று ஜனவரி கடைசி நாளன்று (31-1-2026) காரில் விரைந்தோம்.
பெரிய கோவிலின் போர்டில் துர்கா தேவஸ்தானம் என்று எழுதியிருந்தது; அது தமிழ்த் தென்றலோ என்ற சந்தேகத்தை எழுப்பியது. காரை நிறுத்திவிட்டு கோவில் வளாகத்துக்குள் காலடி வைத்தோம்.
சர்ப்ரைஸ்! சர்ப்ரைஸ்! Surprise ! Surprise !
திருவள்ளுவர் சிலை! அருகில் கலைவாணி (சரஸ்வதி) சிலை!! மிகவும் சந்தோசம் ஏற்பட்டது ; காமெரா ‘கிளிக்’ ‘கிளிக்’ என்றது .
சிறிது நகர்ந்தோம் ; மேலும் சர்ப்பிரைஸ்!
சமண மதத் துறவி கோலத்தில் இளங்கோ அடிகள் ! கீழே ஆங்கிலத்தில் விளக்கம்.
இதை அடுத்து இருப்பது ஷீரடி பாபா கோவில்.
இரண்டு கோவில்களும் பக்கா இண்டஸ்ட்ரியல் ஏரியாவில் இருக்கிறது . கோவிலைக் கண்டுபிடிப்பது எப்படி என்று என் மகன் முன்கூட்டியே சொல்லிவிட்டான்; எந்த இடத்தில் நூற்றுக் கணக்காண டிரக்குகளும், லாரிகளும், பளுதூக்கும் கிரேன்களும் தென்படுகிறதா அங்கேதான் இரண்டு கோவில்களும் உள்ளன என்றான்; ஆகையால் லாரிகளைப் பார்த்தவுடன் கோவிலைத் தேடினோம். சிறிய கோபுரம் எங்களை எட்டிப்பார்த்தது . ஆனால் இரண்டு கோவில்களும் பிரம்மாண்டமான அமைதி தவழும் அற்புதக் கோவில்கள்.
துர்கா கோவில் வளாகத்தில் கார்களை நிறுத்தலாம் . மலை போல படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பெரிய சந்நிதியில் துர்கா தேவி; இரு புறமும் கணபதியும் முருகனும் குடிகொண்டுள்ள சிறிய சந்நிதிகள். மூன்று நான்கு பட்டர்கள் பக்தர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர் உபயதாரர்களுக்கான பூஜையை ஒருவர் செய்துகொண்டிருந்தார் . மொத்தத்தில் சுமார் 25 பேர் இருந்தோம்; ஆகையால் நல்ல தரிசனம்
இந்தக் கோவிலின் சிறப்பு நவக்கிரகம், சிவன் போன்ற தெய்வங்களுடன் அஷ்ட லட்சுமியையும் அழகாக பெரிய சிலைகளாக வடித்துள்ளனர். கோவிலைச் சுற்றி பெரிய திறந்த வெளிப் பிரகாரம் தமிழ் நாட்டுக் கோவில்களை நினைவு படுத்தியது. கோவிலுக்குள் தெய்வீக சூழ்நிலையை, சாந்நியத்தை, உணர முடிந்தது.
சில சீன பக்தர்களும் வந்திருந்தனர் ஏனையோர் தமிழ் பக்தர்கள்தான் .
கோவிலுக்கு வெளியே வந்தோம் பெரிய கான்டீன் மண்டபம் தென்பட்டது. சூடான இட்லி, வடைகளை விலைக்கு வாங்கிச் சாப்பிட்டோம் . மசாலா டீயும் கிடைத்தது
ஷீரடி சாய் பாபா கோவில்
ஆனால் அதற்கு முன்னால் அடுத்த கோவிலுக்கும் சென்று ஷீரடி பாபாவை வழிபட்டோம். மீண்டும் படிகள் ஏறிச் செல்ல வேண்டும் . பிரம்மாண்டமான மண்டபத்தின் முக்கிய சந்நிதியில் ஷீரடி பாபா சிலை ; இனிமையான வேற்று மொழிப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது; நல்லDivine Atmosphere தெய்வீக அட்மாஸ்பியர்! ஒரு வடக்கத்திய அர்ச்சகர் இருந்தார். ஒரு பத்து பேர் உட்கார்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
கணபதி, அனுமார், சிவன் மூர்த்திகளும் இருந்தன. கோவிலின் சிறப்பு சிவலிங்கத்துக்கு நாமே ஜலத்தினால் அபிஷேகம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது; நாங்களும் ஓம் நமசிவாய மற்றும் திரயம்பக (மிருத்யுஞ்சய) மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்தோம்.
இங்கும் வெளியே கான்டீன் உள்ளது மெனு மட்டும் பார்த்துவிட்டு இட்லி வடை சாப்பிட தமிழ்க் கோவிலுக்குத் திரும்பிவந்தோம்.
இரண்டு கோவில்களும் பார்க்க வேண்டிய கோவில்கள். பூஜைகள், தியானம் செய்ய உகந்த கோவில்கள். கூட்டம் இல்லை என்பதும் மிக உயர்ந்த பிரம்மாண்டமான மண்டபங்கள் என்பதும் இரண்டு கோவில்களுக்கும் உள்ள சிறப்பு .
பல முத்து உதிர் செய்ப் பழநிப்பதி வெற்பினில் நில் குமரப்
பெருமாளே. … பவளக் கொடி சுற்றிய அழகிய கமுகு மரத்தின்
உச்சிக் குலையினின்றும் பல முத்துக்கள் உதிர்கின்ற பழநிப் பதி மலையில் நின்றருளும் பெருமாளே.
*(மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இடையே போட்டியும் பொறாமையும் வெடித்தது . ஒவ்வொரு புரும் தன்னுடைய கவிதையே சிறந்தது என்று சொன்னபோது விவாதம் ஏற்பட்டது , அப்போது சிவபெருமான் சொன்னபடி, மதுரை செட்டி குலத்தில் ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது பாடலையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் பாடல்களைக் கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் கவிதையே சிறந்தவை என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.- திருவிளையாடல் புராணம்.)
***
ரஷ்ய விண்வெளி வீரர் யுரி ககாரினை விட வேகமாக முதன் முதலில் பூமியைச் சுற்றியது முருகன்தான் !
கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,
பலவிதமான பழங்கள், கரும்பு
நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்
போன்ற வயிற்றையும்,
விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த
அடையாளத்தையும், மும்மதத்தையும்*
நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்
கொண்ட கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு
இளையவனே,
வடவரையின் முகடு அதிர … வடமலையாகிய மகாமேருவின்
சிகரங்களும் அதிரும்படி,
ஒருநொடியில் வலம்வரு மரகத மயில்வீரா … ஒரே நொடியில்
உலகம் யாவையும் வலம்வந்த மரகதப் பச்சை மயிலையுடைய வீரனே,
***
சுக்ரீவன் 11 ருத்திரர்கள் பற்றி
இரவி குலத்தி ராசத மருவி … சூரிய அம்சமாக வந்த
சுக்ரீவன் ரஜோகுணத்தை மேற்கொண்டு
எதிர்த்து வீழ்கடு ரணமுக … (வாலியை) எதிர்த்து, தோற்று
நின்ற கொடிய போர்க்களத்தில்,
சுத்த வீரிய குணமான இளையவ னுக்கு … சுத்த வீரியம்
வாய்ந்த குணத்தினனாகிய தம்பி சுக்ரீவனுக்கு உதவி,
நீண்முடி அரசது பெற்று வாழ்வுற … அவன் பெரிய
அரசாட்சியைப் பெற்று வாழுமாறு
இதமொடளித்த ராகவன் மருகோனே … அன்புடன் அருளிய
ராகவனின் மருமகனே,
பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை …
பதினோரு ருத்திரர்களின்* பிரகாசம் விளங்கும் கோவிலில்
பரிவொடு நிற்கும் ஈசுர … அன்போடு எழுந்தருளியிருக்கும்
தவத்துக்கு உரியவரும் ஆகிய திருமாலின் அழகிய மருகனே.
***
சமணர்கள் பற்றி
பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த
பெருமாளே. … தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய
சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து,
பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.
(சம்பந்தர், அப்பர் , அருணகிரிநாதர் பாடல்களில் குண்டர்களென்று வசைபாடப்படும் ஜைனர்கள் , அரசியலில் ஈடு பட்ட சமணர்கள் ஆவர். சமண மத்திலுள்ள பாமரர்கள் உலக மஹா சாதுக்கள் )
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1-2-2026 தைப்பூச நன்னாள் – சிறப்புக் கட்டுரை!
புண்ணியம், பாவம் என்பவை எவை? வள்ளலார் பிரான் அருளுரை!
ச. நாகராஜன்
வள்ளலார் இராமலிங்க அடிகளார் தோற்றம் 5-10-1823 ஜோதியுடன் கலந்த நாள் 30-1-1874
சமீப காலத்தில் வாழ்ந்து சன்மார்க்கத்தை நிறுவி ஏராளமான ரகசியங்களை உலகிற்கு அளித்தவர் வடலூர் ராமலிங்க அடிகளார் ஆவார்.
வள்ளலார் என்று அனைவராலும் போற்றப்படும் இவர் ஶ்ரீ முக வருடம் தை மாதம் 19ம் நாள் (31-1-1874) வெள்ளிக்கிழமை அன்று தன் அறையில் சென்று இறைவனுடன் ஜோதி மயமாகக் கலந்தார்.
அவரது பாடல்களையும் நூல்களையும் ஒவ்வொரு தமிழரும் படித்தல் வேண்டும்.
இங்கு அவரது உரைகளில் புண்ணியம் பாவம் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.
அருளை நாம் எப்படிப் பெறுவது?
புத்தி தத்துவத்தால் நன்மை, தீமையை விசாரிக்க வேண்டும்.
பெரியாரைத் துணை கொண்டு அவர் சொல்லும் திருப்பணியை இடையறாது செய்ய வேண்டும்.
நன்மை, தீமை என்பவை யாவை?
நன்மை தீமை என்பவை புண்ணிய பாவம் ஆகும்.
புண்ணியம் என்பது என்ன?
ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். இது புண்ணியம்.
பாவம் என்பது என்ன?
ஆரம்பத்தில் சுகமாயும் பின்னர் துக்கமாயும் இருக்கும். இது பாவம்.
புண்ணிய பாவங்கள் எப்படி நம்மை வந்து அடைகின்றன?
மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் இவை அடைகின்றன.
மேலும் மனத்தினிடத்தில் நால் வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும் ஆக பன்னிரண்டு வகையாக இவை நம்மை வந்து அடையும்.
அவை யாவை?
அவையாவன:
மனத்தினால் – 1. பரதார கமனம் பண்ண நினைத்தல் 2. அன்னியருடைய சொத்தை கிரகிக்க நினைத்தல் 3. அன்னியருக்குத் தீங்கு செய்ய நினைத்தல் 4. முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமைப் படுதல்.
இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
வாக்கினால்:- 1.பொய் சொல்லல் 2. கோள் சொல்லுதல் 3. புறம் கூறல் 4. வீணுக்கு அழுதல் இவை நான்கும் வாக்கினால் செய்யும் பாவங்கள் ஆகும்.
தேகத்தினால் :- 1. பிறர் மனைவியைத் தழுவுதல் 2. புசிக்கத் தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல் 3. அன்னியர்களை இம்சை செய்தல் 4.தீங்கு செய்வோரைத் தடுக்காமல் அவர்களுக்கு உதவி செய்தல்.
இவை நான்கும் தேகத்தினால் உண்டாகும் பாவங்கள் ஆகும்.
இவற்றைத் தவிர்க்க வேண்டும்.
திருவாசகம், திருமந்திரம் பற்றி வள்ளலார்
திருவாசகம் என்பது மெய்ப்பொருள் நிரம்பிய வார்த்தை. மெய்ப்பொருளைத் தரும் வார்த்தை.
சாத்திரங்களில் சிறந்தது திருமூலர் திருமந்திரம். இது மொத்தம் எண்ணாயிரம்.
தோத்திரங்களில் சிறந்தது திருவாசகம்.
இவற்றை ஊன்றிப் பார்க்கவும்.
இது போன்ற அபூர்வமான ஆயிரக்கணக்கான தெய்வீக விஷயங்களை
வள்ளலார் பாடல்களிலும் நூல்களிலும் பார்க்கலாம்.
இவற்றை இணையதளத்தில் பெறலாம்.
சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்
வடலூர்
607303 என்ற விலாசத்திலிருந்து நூல்கள் பற்றிய முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.
Date uploaded in Sydney, Australia – 31 January 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Festivals -Feb.1- Thai Pooasm festival in temples; 15- Maha Sivaratri.
Largest Sahasra Linga in Bihar
Full Moon/Purnima-1, ;New Moon/Amavasya-17;
Hindu Fasting Days/Ekadasi- 13, 27;
Hindu Auspicious Days/Muhurtha- 6, 8, 15, 16, 20 of February 2026.
Yaksha Prasna is a dialogue between Pandava king Yudhishthira and Lord of Dharma who appeared as a yaksha. It is found in the Vana Parva of Mahabharata . There are 124 questions answered by Yudhishthira . Here is the first batch.
***
February 1 Sunday
Question: What is more important than the earth itself?
Yudhishthira: One’s mother.
***
February 2 Monday
Question: What is higher than heaven?
Yudhishthira: One’s father.
***
February 3 Tuesday
Question: What is swifter than the wind?
Yudhishthira: The mind.
***
February 4 Wednesday
Question: More numerous than the blades of grass?
Yudhishthira: The thoughts in the mind.
***
February 5 Thursday
Question: What is the highest sanctuary of dharma?
Yudhishthira: Liberality.
***
February 6 Friday
Question: What is the highest sanctuary of fame?
Yudhishthira: A gift.
***
February 7 Saturday
Question: Of heaven?
Yudhishthira: The truth.
***
February 8 Sunday
Question: What is the most praiseworthy thing of all?
Yudhishthira: Skill.
***
February 9 Monday
Question: The most valuable possession?
Yudhishthira: Knowledge.
***
February 10 Tuesday
Question: The greatest treasure?
Yudhishthira: Health.
***
February 11 Wednesday
Question: The greatest happiness?
Yudhishthira: Contentment.
***
February 12 Thursday
What is the greatest wonder in the world? Every day, creatures die, yet those who remain live as if they are immortal.
***
February 13 Friday
Who is truly happy? He who lives within his means, is not in debt, and stays at home.
***
February 14 Saturday
What is the best way to cross the world? Knowledge.
***
Mrutyunjaya Mantra from the Yajur Veda
February 15 Sunday
By what does one become learned? By Srutis/ Vedas (that scriptures which are heard)
***
February 16 Monday
How one acquires something very great? By ascetics’ austerities (tapas)
***
February 17 Tuesday
How can one acquire intelligence? By serving the old
Brahmins (learned/saints)
***
February 18 Wednesday
What constituents the divinity of Brahmanas?
Study of Vedas (scriptures)
***
February 19 Thursday
What sleeps but does not close its eyes? Fish
***
February 20 Friday
What does not move after birth? Egg
***
February 21 Saturday
What which is without a heart? Stone
***
February 22 Sunday
Who is friend of the exile? Companion.
***
February 23 Monday
Who is friend of the householder? Wife
***
February 24 Tuesday
Who is friend of the sick? Physician
***
February 25 Wednesday
Who is friend of one who is about to die? Charity
Duty, guest, amrita, universe
***
February 26 Thursday
What is Amrita? Milk of cow is Amrita
***
February 27 Friday
What is highest shelter of happiness? Good behavior is the highest guard of happiness
அஞ்ச லெனவலிய மயில்மேல் நீ அந்த மறலியொடு உகந்த மனிதன் நமதன்பன் எனமொழிய வருவாயே
XXX
பிப்ரவரி 25 புதன் கிழமை
(தேவர்கள் தொழும் உன் பாதங்களை தொழ அருள் புரி)
உம்பர் தொழும்பத கஞ்சம் தம் தஞ்ச மெனும்படி
என்றென்றுந் தொண்டு செயும்படிஅருள்வாயே .
***
பிப்ரவரி 26 வியாழக் கிழமை
இனிமையில் ஒன்றாய்ச் சென்று உட்படும் மனம் உன் தாட்கு
அன்பு உற்று இயல் இசை கொண்டு ஏத்து என்று உள்
தருவாயே … இனிமையில் ஒன்றுபட்டுச் சென்று உட்படுகின்ற என் மனம் உன்னுடைய தாள் மீது அன்பு கொண்டு, இயற்றமிழிலும், இசைத் தமிழிலும் பாக்களை இயற்றி ஏத்த வேண்டும் என்னும் மனப் பக்குவத்தைத் தருவாயாக.
***
பிப்ரவரி 27 வெள்ளிக் கிழமை
யமபடர்கள்நின்று சருவ மலமே யொழுக உயிர் மங்கு பொழுது
பூளைச் செடியின் பூ (Aerva lanata) சிறியது, வெள்ளையாக, தேங்காய் பூ போன்ற அமைப்பைக் கொண்டது, எனவே இது தேங்காய்ப்பூக் கீரை என்றும் அழைக்கப்படுகிறது. இது பொங்கல் திருவிழாவின் போது காப்புக் கட்டவும், தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகைச் செடியாகும். இதன் பூக்கள், இலைகள் மருத்துவ குணம் கொண்டவை, இலைகள் ரசம் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன.
பூளைப்பூவின் வேறு பெயர்கள்: பொங்கப்பூ, சிறுபீளை, பீளைசாறி, கற்பேதி, பாஷாணபேதி, கண்பீளை.
***
ராவணன் ஒரு முட்டாள் !
ஏதத்து இலங்கையினில் ஆதிக்கம் உண்டது ஒரு முட்டாள்
அரக்கர் தலை இற்றே விழக் கணைகளே தொட்ட கொண்டல்
உருவு ஆகி … குற்றம் பொருந்திய இலங்கையில் தலைமை கொண்ட முட்டாளாகிய ராவணனுடைய தலை அறுந்து கீழே விழ அம்புகளை ஏவியவரும், மேக நிறத்தை உடையவரும்,
சுமந்து அதிகம் மட்டு ஆர் மலர்க் கமலம் உற்றா சனத்
திருவை மார்பில் புணர்ந்த ரகுராமற்கும் அன்புடைய
மருமகன் ஆகி … மிகுந்த வாசனையை உடைய தாமரை மலர்
மணம் கொண்ட, ஜனகன் மகளாகிய சீதையை மார்பில் அணைத்த ரகுராமனுக்கு அன்புடைய மருகனாகி,
–திருவீழிமிழலை , சம்பந்தர் தேவாரம், முதல் திருமுறை
***
மலையான் மகளஞ்சவ் வரை எடுத்தவ் வலியரக்கன்
றலை தோளவை நெரியச் சரணுகிர் வைத்தவன்
–திருவேணுபுரம்
***
இசைகயிலை யையெழுதரு வகையிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல் பணி கொலுமவ னுறை பதி
இவ்வாறு ஒவ்வொரு பதிகத்திலும் இராவணன் கதறியதும், சிவ பிரான் அருளியதும் சம்பந்தர் தேவாரத்தில் காணக்கிடக்கிறது . ராவணன் ஒரு கிரிமினல் CRIMINAL என்பதால் அவனை நிசி சரன் NIGHT WALKER (ராத்திரியில் ஆட்டம்போடும் கள்ளன் ) என்றும் திட்டுகிறார் திரு ஞான சம்பந்தர்.
–திருச் சிவபுரம்
***
திரி நயனி, திரி புவனி !
நிருமலிய திரி நயனி வாள் வீச வரு குமரி … மாசு
இல்லாதவளும், மூன்று கண்களை உடையவளும், ஒளி வீச
எழுந்தருளும் குமரி,
கவுரி பயிரவி அரவ பூணாரி திரி புவனி … கெளரி, காளி,
பாம்பை அணி கலனாகப் பூண்டுள்ளவள், மூன்று உலகங்களுக்கும் தலைவி,
நிபுட மலை அரசன் அருள் வாழ்வான புரண உமை
அருள்பாலா … நெருக்கமாக உள்ள இமய மலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமா தேவி பெற்ற மகனே,
***
காசுக்காக கற்பகமே என்று பாடும் கவிகள் !
பெருகி ஒரு காசே கொடாதவரை ஐந்து தருவை நிகரே
ஆகவே எதிர் புகழ்ந்து பெரிய தமிழே பாடி … தாராள மனத்துடன்
ஒரு காசு கூட கொடுக்காத லோபிகளை ஐந்து கற்பகத் தருக்களையும்* நிகர்ப்பீர்கள் என்று எதிரிலே புகழ்ந்து, (அவர் மீது) பெரிய தமிழ்ப் பாக்களையே பாடி,
நாள் தொறும் இரந்து நிலை காணாப் பிணியின் அகமே
ஆன பாழ் உடலை நம்பி … தினமும் (இங்ஙனம் பிச்சை எடுக்கும் காண முடியாத நோய்க்கு உள்ளாகும் பாழான இந்த உடலை நம்பி,
உயிரை அவமாய் நாடியே பவ(ம்) நிரம்பு பிறவி தனிலே
போக மீளவும் உழன்று திரிவேனோ … உயிரைப் பயனிலதாக
நினைத்து, பாவ வினைகள் நிரம்பியுள்ள பிறவியில் சேரவே மீண்டும் அலைந்து திரிவேனோ?
அரி புத்திர சித்தஜனுக்கு அருமைக்கு உரியத் திரு மைத்துன
வேளே … திருமாலின் மகனான மன்மதனுக்கு அருமையான அழகிய மைத்துனனாகிய* தலைவனே,
மன்மதன் திருமாலின் மகன். வள்ளி திருமாலின் மகள்.
எனவே வள்ளிக் கணவன் முருகன் மன்மதனுக்கு மைத்துனன் ஆகிறான்.
***
தயிர்த் திருடனும் தனுஷ்கோடியும்
தயிரச் சோரன் எனும் அவ் உரை வசைக் கோவ
வனிதையர்கள் தரத்து ஆடல் புரியும் அரி மருகோனே …
தயிரைத் திருடுபவன் என்ற அந்த மொழி நிந்தையைப் புகல்கின்ற கோபிகளுடன் திருவிளையாடல் புரிந்த கண்ணபிரானின் மருகனே,
தமிழ்க் காழி மருத வன மறைக்காடு திரு மருகல்
தனுக்கோடி வரு குழகர் தரு வாழ்வே … (சம்பந்தரின் திருநெறித்தமிழ் எனப்படும் செந்தமிழ்த் தேவாரத்துக்குப் பிறப்பிடமாகிய) சீகாழி,திருவிடை மருதூர், வேதாரண்யம், திருமருகல், தநுஷ்கோடி ஆகிய தலங்களில் வீற்றிருக்கும் சிவபெருமான தந்த குமரனே,
****
மனிதர்கள் பற்றி பாரதியாரும், அருணகிரியாரும் போட்ட கணக்கு!
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் மதவி சாரர்
ஒருகுண வழியு றாத …… பொறியாளர்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி
உறநம னரகில் வீழ்வ …… ரதுபோய்பின்
வருமொரு வடிவ மேவி யிருவினை கடலு ளாடி
மறைவரி னனைய கோல …… மதுவாக
மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு
வடிவுற அருளி பாத …… மருள்வாயே
ஒருவரை யொருவர் தேறி யறிகிலர் … ஒருவர் சொல்வதை மற்றவர் இன்னதென்று தெரிந்து அறியமாட்டாதவர்களாகிய
மத விசாரர் ஒருகுண வழியு றாத பொறியாளர் … மத
ஆராய்ச்சியாளர்களும், ஒரு கொள்கை வழியில் நிலைக்காத மனத்தை உடையவர்களுமான மக்கள்
உடலது சதமெ னாடி களவுபொய் கொலைக ளாடி … இந்த
உடல் நீடித்து இருக்கும் என்று எண்ணி, களவும், பொய்யும், கொலையும் செய்து கொண்டே வந்து,
உற நமன் நரகில் வீழ்வர் … இறுதியாக அனைவரும் யமனுடைய
நரகத்தில் சென்று வீழ்வர்.
அதுபோய்பின் வருமொரு வடிவ மேவி … அந்த நிலை
முடிந்தபின்பு கிடைக்கும் வேறு ஓர் உருவத்தை மறு பிறவியில் அடைந்து,
இருவினை கடலுள் ஆடி மறைவர் … நல்வினை, தீவினை என்ற
இருவினைக் கடலில் உளைந்து மறைவர்.
இனனைய கோலம் அதுவாக … இத்தகைய மனிதர்களின் கோலம்
அவ்வாறாக, மருவிய பரம ஞான சிவகதி பெறுக நீறு … (யான் அவ்வாறு அலையாமல்) பொருந்திய பரமஞானமாகிய சிவகதியைப் பெறுவதற்காக திருநீற்றைத் தந்து,
வடிவுற அருளி பாதம் அருள்வாயே … நல்ல நிலையை நான்
அடைய எனக்கு அருளி, உன் திருவடிகளைத் தந்தருள்வாயாக.
***
பாரதியாரும் காளி தேவியிடம் சொல்கிறார் !
வேடிக்கை மனிதன் போல் வீழ்வே னென்று நினைத் தாயோ?-
தேடிச் சோறுநிதந் தின்று –
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி –
மனம் வாடித் துன்பமிக உழன்று –
பிறர் வாடப் பலசெயல்கள் செய்து –
நரை கூடிக் கிழப்பருவ மெய்தி –
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் –
பல வேடிக்கை மனிதரைப் போலே –
நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?– பாரதியார் பாடல்
—subham—
Tags- பழனி ,திருப்புகழில், அரிய செய்திகள், பாரதியார் , அருணகிரிநாதர் , வேடிக்கை மனிதர் , பூளைப்பூ , முட்டாள் இராவணன், சொல் அழகும், பொருள் வளமும்- Part 6
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
குரு பூர்ணிமா அன்று ஷீர்டி சாயி பாபா கொடுத்த கட்டளை!
ச. நாகராஜன்
1909ம் ஆண்டு பாபாவின் நித்ய பூஜையும் ஆரத்தியும் ஆரம்பமானது.
ஆனால் குரு பூர்ணிமா அன்று விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
அந்த வருடம் குரு பூர்ணிமா வந்தது. பாபா அணுக்கத் தொண்டரான தாதா கேல்கரை தன்னிடம் வரச் சொன்னார். அவரும் வந்தார்.
அவரிடம் பாபா, “இன்று குரு பூர்ணிமா தினம் என்பது உனக்குத் தெரியாதா, என்ன? உனது பூஜை சாமான்களை எல்லாம் கொண்டு வந்து குருவுக்கு பூஜை செய்” என்றார்
அவ்வளவு தான், ஓடோடிச் சென்ற கேல்கர் பூஜா திரவியங்களைக் கொண்டு வந்து வெகு விமரிசையாக குரு பூஜையைச் செய்தார்.
அன்று ஆரம்பித்த குரு பூர்ணிமா தினத்தன்று செய்யும் குரு பூஜை இன்று வரை தொடர்கிறது.
ஆனால் ஹெச். வி. சாதே என்ற பக்தர் சிவராத்திரி தினத்தன்று நள்ளிரவில் வழிபட வந்த போது பாபா வேண்டாம் என்று கூறி அதை மறுத்து விட்டார்.
ஒரு முறை பாபா கூறினார் இப்படி:
“இந்த உலகம் வேடிக்கையானது. எல்லோரும் எனக்கு வேண்டியவர்களே. எல்லோரையும் சமமாக நோக்கி நான் சமமாக பாவிக்கிறேன். ஆனால் சிலரோ திருடர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்காக நான் என்ன செய்ய முடியும்? மரண வாயிலில் இருக்கும் அவர்கள் மற்றவர்களைத் தீர்த்துக் கட்டத் திட்டம் தீட்டுகிறார்கள்! அவர்கள் எனக்கு மிகுந்த வேதனை தருகிறார்கள். நான் பேசாமல் அமைதியாக இருந்து விடுகிறேன். கடவுள் மிகப் பெரியவர். அவர் மிகவும் சக்தி வாய்ந்த தனது அதிகாரிகளை எங்கும் கொண்டிருக்கிறார். அவர்களிடம் அனைவரும் திருப்தியுடன் இருக்க வேண்டும்.
நான் மிகவும் சக்தி வாய்ந்தவன். நான் இங்கு எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் வருடங்களுக்கு முன் இருந்திருக்கிறேன்.
பாபா இப்படி தன்னைப் பற்றி அபூர்வமாகக் கூறிய தருணம் இது.
அவர் ஹிந்துக்களையும், இஸ்லாமியரையும், கிறிஸ்தவர்களையும் சமமாகவே பாவித்தார். அருள் புரிந்தார்.
இதை விளக்கும் ஏராளமான சம்பவங்கள் உண்டு.
29-8-1835 அன்று அவதாரமெடுத்த ஷீர்டி சாயிபாபா 15-10-1918 அன்று சமாதி எய்தினார்.
அதுவரை அவரது வாழ்வில் ஏராளமான அற்புதமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்தன.
படிக்கப் படிக்கத் திகட்டாத பல ஆன்மீக ரகசியங்களை விளக்குபவை அவை என்பது மட்டும் திண்ணம்!