பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200 மூலிகை மருந்துகள் – Part 12 (Last Part) Post No.13,252


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,252

Date uploaded in London – –   18 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

last part………

F62. Family: Sapotaceae 

181. Isonandra lanceolata Wight

குடும்பம்- சப்போடேஸி

181ஐஸோ நன்ட்ரா லான்சியோலாடா

நெல்லை ஜில்லா பழங்குடி மக்கள் இதை சிறுமொட்டை  என்றழைக்கின்றனர். காய் , வேர் பட்டை , ஆகியவற்றை வேறு சில மூலிகைகளுடன் தண்ணீரில் காய்ச்சி அந்தக் கஷாயத்தை 30 நாட்களுக்கு கு டிக்கின்றனர்

xxxx

F63. Family: Solanaceae 

182. Capsicum annuum L. மிளகாய் வகைகள்

குடும்பம் – சோலனேசி

182-கேப்ஸிகம் அன்னம் மிளகாய் வகைகள்

பாம்புக்கடிக்கு மத்திய இந்திய பழங்குடி மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

183. Datura metel L.

183.டாதுரா மெடல் / கரு ஊமத்தை

மத்திய இந்திய பழங்குடி மக்கள் விதை களையு ம்,  உத்தர பிரதேச மக்கள் இலைகளையும் நிகோபார் தீவு மக்கள்  இலைமசியலையும் பயன்படுத்தி பாம்புக்கு கடிக்கு சிகிச்சை தருகின்றனர் .

xxxx

184. Solanum capsicoides All.

சொலானம் கேப்ஸிகாய்டஸ்

வங்க தேச மக்கள் இந்த மூலிகையின் எட்டு விதைகளை சாப்பிடக்கொடுத்து வாந்தி வரும்படி செய்கின்றனர். ஒரு நாளில் இவ்வாறு மூன்று முறை கொடுக்கினறனர்

xxxx

185. Solanum torvum Sw.

சொலானம் டோர்வம்

வங்க தேச மக்கள் இதன் இலை , வேர் ஆகியவற்றைப் பயன்படுத்தி வாந்தி வருமாறு செய்கின்றனர்.

xxxx

186. Withania somnifera (L.) Dunal

186.விதானியா சோம்னிபெரா

கர்நாடக மக்கள் இதை அசுவகந்தி என்று சொல்லுவார்கள். சிக்மகளூர் வட்டார மக்கள் வேரினை மசித்து பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.

xxxx

F64. Family: Staphyleaceae 

187. Staphylea emodi Wall.

குடும்பம்– ஸ்டாபைலியேசி

187.ஸ்டாபைலியா எமோடி

பாகிஸ்தான் மக்கள் இதை சித்ரா என்பர். இஸ்லாமாபாத் வட்டார மக்கள் இதன் மூலம் சிகிச்சை தருகின்றனர்.

xxxx

F65. Family: Theaceae 

188. Schima wallichii Choisy

குடும்பம்- தியேஸி

188. ஸ்கீமா வல்லிச்சி சோய்சி

மேற்கு மிஜோராம் மக்கள் , இதன் பழத்தின் சாற் றை அளிக்கின்றனர்.

xxxxx

F66. Family: Vitaceae 

189. Leea compactiflora Kurz

குடும்பம் – வைடெஸி

189.லீயா காம்பேக்ட்டி ப்ளோரா

பழத்தை இடித்து அதை பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர். இதை அருணாசல பிரதேச மக்கள் பயன்படுத்துகிறார்கள்..

xxxx

F67. Family: Verbanaceae 

குடும்பம் – வெர் பனேஸி

190-லான்டனா கேமரா

மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் வேர், பூ, தண்டு ஆகியவற்றைக் காய்ச்சி கஷாயம் வைத்துக் கொடுக்கிறார்கள்.

xxxx

191. Lantana indica Roxb.

191. லாண்டனா  இண்டிகா

பாகிஸ்தான் மக்கள் பயன்படுத்தும் மூலிகை  இது

xxxxx

192. Vitex negundo L.

192.வைடெக்ஸ் நெகுண்டோ / கருநொச்சி

கர்நாடக, கேரள , ஹிமாசல பிரதேச மக்கள் பயன்படுத்தும் மூலிகை . இலையை நசுக்கி பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.

xxxx

F68. Family: Zingiberaceae 

193. Hedychium spicatum Buch.-Ham. ex Sm.

குடும்பம்- ஜிஞ்சிபரேசி

ஹெடிசியம் ஸ்பைகேடம் –பூலாங்கிழங்கு,  கிச்சிலி கிழங்கு

மேற்கு மிஜோரம் மாநில மக்கள் இதன் கிழங்கைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள்.

xxxx

69. Family: Zygophyllaceae 

194. Fagonia bruguieri DC.

குடும்பம்- சைகோ பில்லேசி

194.பகோனியா ப்ரு கையெரி

பாகிஸ்தானியர் பயன்படுத்தும் தாவரம்

xxxx

F70. Family: Adiantaceae 

195. Adiantum philippense L.

குடும்பம்- அடியாண்டேசி

195. அடியாண்டம் பிலிபென்ஸ்

xxxx

F71. Family: Dryopteridaceae 

196. Dryopteris cochleata (D.Don) C. Chr

குடும்பம் – ட்ரையோப் டெரிடேசி

196.ட்ரையோப் டெரிஸ் கோச் லியாடா

மத்திய பிரதேச அமரகண்டக் குன்று மக்கள், இதன் கிழங்கைப் பொடிசெய்து களிம்பு போல வெளியே தடவுகின்றனர்.

xxxx

F72. Family: Polypodiaceae 

197. Microsorium punctatum L.

குடும்பம்- பாலிபோடியேசி

197.மைக்ரோஸொரியம் பங்டாட்டம்

கிகோப்பார் தீவு மக்கள் இளம் தளிர்களை மசித்து, அதை பாம்புக்கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள் .

Xxxx

F73. Family: Thelypteridaceae

198. Christella parasitica (L.) H. Lev.

குடும்பம் – தெலிப் டெரிடெஸி

198. க்ரைஸ்டெல்லா பாரஸிட்டிகா

அஸ்ஸாம் மலைஜாதி மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

xxxx

Gynandropsis gynandra (CAPPARACEAE) :

குடும்பம்- கப்பரேசி

199.கைனான் ட்ரோப் சிஸ்  கைநான்ட்ரா

மலையாள மக்கள் இதை கரவெலா வெள்ள வேலா பட்டிவேலா  என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இதனை  பாம்பு கடித்தால் பயன்படுத்துகிறார்கள்

xxxx

200.Buchanania lanzan

200.பூச்சனானியா லான்சென் / சாரம்

மலையாள மக்கள் இதை முரல், நூரமரம் என்று சொல்லுவார்கள். இதையும்  பாம்புக்கடித்தால் பயன்படுத்துவார்கள்.

xxxx

பலன் தரும் மூலிகைகள்

அறிவியல்ரீதியில் ஆராய்ந்ததில் பாம்பு விஷத்தை தடுக்கும் சக்தி கீழ் கண்ட மூலிகைகளுக்கு  இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .

 Strychnos nux-vomica seed extract. எட்டி மரத்தின் விதைகள்

Costus speciosus roots  வெண் கோட்டம்

Ipomoea digitata நிலப்பூசணி

Acorus calamus,வசம்பு

Buchanania lanzan (stem bark),சாரம்

Moringa oleifera (stem, leaves), முருங்கை மரம்

Achyranthes aspera, நாயுருவி

Gynandropsis gynandra, நிலவேளை

Bombax ceiba, முள்ளிலவ மரம்

–subham—

Tags- பாம்புக் கடி ,  200  மூலிகை மருந்துகள், last part,Snake bite, cure, 200 herbs

விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1 (Post.13,251)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.251

Date uploaded in London – — 18 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 மாலைமலர் 15-5-2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1

ச.நாகராஜன்

பலர் தடைகளைச் செய்த போதிலும் விடாது போராடி பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களையும் உயிரினங்களையும் காத்த ஒரு அதிசயப் பெண்மணி ராக்கேல் கார்ஸன். அமெரிக்க ஜனாதிபதி கென்னடியையே ஒரு கமிட்டி அமைக்க வைத்து தனது கூற்றை நியாயப்படுத்திய இந்த அமெரிக்கப் பெண்மணி அதிகம் அறியப்படாதவர். ஆனால் அரிய செயலைச் செய்தவர்.

இவரைப் பற்றித் தெரிந்து கொள்வது இயற்கை ஆர்வலர்களுக்கு உத்வேகம் ஊட்டும்.

பிறப்பும் இளமையும்

அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் 27-5-1907இல் ராக்கேல் கார்ஸன் சாதாரணமான நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தார்.

அவரது தந்தை ஒரு டிராவலிங் சேல்ஸ்மென். ஆகவே பெரும்பாலும் வீட்டில் இருக்க மாட்டார்.

தாயோ ஒரு இசைப் பாடகி. மகளின் புத்தி கூர்மையைக் கண்டு வியந்த தாய், தனது பெண்ணை எப்படியாவது படிக்க வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். பணம் பெரிய பிரச்சினையாக இருந்தது. தங்களுக்குச் சொந்தமாக இருந்த நிலத்தை விற்றார். படிப்புக்கு வழி வகுத்தார்.

தாயிடமிருந்து மகளுக்கு வந்த அரிய குணம் – இயற்கையை நேசிப்பது. இயற்கைக்கு ஊறு விளைவிப்போரை அவரால் சிறுவயதிலிருந்தே பொறுக்க முடியாது. பொங்கி எழுவார்.

இது பின்னால் உலக மக்களுக்குப் பெரிய நன்மையைச் செய்தது!

இளம் வயது எழுத்தாளர்

எட்டாம் வயதிலேயே ராக்கேல் சின்னச் சின்னக் கதைகளை எழுத ஆரம்பித்தார். அந்தக் காலத்தில் நமது அம்புலிமாமா போல செயிண்ட் நிக்கலஸ் என்ற மாதப் பத்திரிகை ஒன்று குழந்தைகளுக்காக அமெரிக்காவில் வெளி வந்து கொண்டிருந்தது. அதை குடும்பத்தினர் படிப்பது வழக்கம்.

1918, மே மாதம் தனது 11ஆம் வயதில் ராக்கேல் ஒரு கதையை எழுதி அந்தப் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். அது நான்கு மாதங்கள் கழித்து பத்திரிகையில் வெளியானதோடு சன்மானமாக பத்து டாலரும் கிடைத்தது.

இரண்டே வருடங்களில் அவரது கதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப்படும் கதைகளாக அமைந்தன. இதனால் மகிழ்ந்த பத்திரிகை நிர்வாகம் அவரது ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு செண்ட் அளிக்க முன் வந்தது.

தனது பண்ணை நிலத்தில் நிறைய நேரம் செலவழிப்பது அவரது இளமைக்கால பொழுது போக்காக அமைந்தது.

உயிரியலாளர்

27ஆம் வயதில் கல்லூரிப் படிப்பை ராக்கேல் முடித்த போது அவரது தந்தை 71ஆம் வயதில் இறந்தார்.

கடல் வாழ் உயிரினம் பற்றிய உயிரியலாளராக அவர் திகழ்ந்தார்.

கடலைப் பற்றிய அனைத்தும் அவருக்கு அத்துபடி.

ரொமான்ஸ் அண்டர் தி வாட்டர் (Romance Under the Water) என்று மீன்களைப் பற்றி அவர் எழுதிய வானொலி உரைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அவர் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது

அரசு வேலை ஒன்றும் அவருக்குக் கிடைத்தது. ஆகவே பணக் கவலை ஒழிந்தது. திருமணத்தைப் பற்றி அவர் சிந்திக்கவே இல்லை. தனியாகவே இறுதி வரை வாழ்ந்தார்.

அப்போது இரண்டாம்  உலக மகாயுத்தத்தில் பேர்ல் ஹார்பர் மீது நடந்த தாக்குதலினால் அமெரிக்கர்கள் அனைவரும் அதில் கவனம் செலுத்தவே 1941-ல் வெளியான அண்டர் தி சீ விண்ட்(under the sea Wind) என்ற அவரது புத்தகத்தைப்  பற்றி யாரும் கவனிக்கவில்லை ஆனால் அடுத்து 1950இல் “சீ அரவுண்ட் அஸ்” (Sea Around Us)  என்ற அவரது புத்தகம் உலகளாவிய விதத்தில் கவனத்தை ஈர்த்தது. ஆறே மாதங்களில் இரண்டரை லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன. அத்துடன் பல விருதுகளும் மெடல்களும் அவரைத் தேடி வந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் அவரை ஆவலுடன் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தனர்.

இயற்கையை உற்றுக் கவனித்து வந்த ராக்கேல் அதற்கு நாசம் விளைவிப்போரை எளிதில் இனம் கண்டார்.

மனிதர்கள் இயறிகையை அழிக்கலாமா, கூடாது என்று முடிவெடுத்த அவர் சைலண்ட் ஸ்பிரிங் – மௌன நீரூற்று – (Silent Spring)  என்ற நூலை எழுதி செப்டம்பர் 1962இல் வெளியிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் கென்னடி நூலைப் படித்து வியந்தார். உலக மக்களின் அனைவரின் பார்வையையும் இது திருப்பியது. பெருத்த சர்ச்சையையும் தோற்றுவித்தது.

தமிழ்நாட்டில் ராஜாஜி கூட சுற்றுப் புறச் சூழல் கேட்டை எதிர்த்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்ட ஆரம்பித்தார்.

DDT இரசாயன உரத்தின் கேடு

விஷயம் என்ன?

அப்போது டிடிடி (DDT) என்ற உரம் வயலில் பயன்படுத்தப்பட ஆரம்பித்தது. இதைப் பற்றிக் கவலை அடைந்த ராக்கேல் அதை எதிர்த்து தீவிர பிரசாரத்தில் இறங்கினார்.

1939இல் பால் முல்லர் (Paul Muller) என்பவர் DDT என்ற இரசாயனத்தை வயலில் பயிர்களை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தலாம் என்றார். இதை ஏற்ற அமெரிக்க ராணுவம் 1943இல் நேப்பிள்ஸ் நகரில் இதைத் தெளித்தது. அதனால் அந்த நகரில் பத்து லட்சம் பேர் தொற்று வியாதியினால் பீடிக்கப்பட்டனர்.

1948 இல் DDT-ஐக் கண்டு பிடித்த முல்லருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கொசுக்களை ஒழிக்க DDT அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் தெளிக்கப்பட்டது.

1959இல் 40000 டன்கள் DDT அமெரிக்கா முழுவதும் தெளிக்கப்பட அமெரிக்காவே கெமிக்கலினால் பாதிக்கப்பட ஆரம்பித்தது.

கொதித்து எழுந்தார் ராக்கேல்.

to be continued………………………………

**

More (Krishna & Sin Cure) Secrets from Vishnu Sahasranama -Part 15 (Post No.13,250)


Veda Vyasa 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,250

Date uploaded in London – –   17 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Adi Shankara’s commentary on Vishnu Sahasranama (VS) gives us new interpretation of many words. We know Krishna means Mr Black. But Shankara gives new information.

Devaki-nandanah- Word or naamaa No.989

The son of Devaki in the incarnation as Krishna. Mahabharata 158-31 says

Jyotismi sukraani ca yaani loke!

Trayo lokaa lokapaalaas trayii ca

Trayo gnayas caahutayas ca pancha

Sarve devaa Devaki putra eva

Meaning

All the luminous bodies in the sky including the planets and the stars, all fires, and in the same way the three worlds, their guardian angels, the three vedas, the three Vedic fires, the five oblations, the entire group of Devas—all this is the son of Devaki.

My comments

All Bhajan songs, Krtis, Keertanas, compositions give more importance to Krishna’s mother Devaki or foster mother Yasoda than his father Vasudeva. This is the greatness of Hinduism. No culture or religion in the world praises women like Hinduism. Manu Smrti places women in the highest position. One sloka/ couplet says Mother is thousand times greater than father. Other two slokas say if a woman is made to cry or weep in a house, the family will be destroyed completely. Brothers must keep their sisters happy by buying them dress and jewellery. No one can show any praise or support for women in any part of the world like this. Manu wrote those slokas 2500 years ago or long before that.

xxxx

Krsnah – Word or naamaa No.57

The Existence- Knowledge- Bliss. Says Mahaabahaarata- Udhyoga Parava 70-5,

Krsir bhuuvaacakah sabdo nas ca nirvrti vaacakah

Visnus tad -bhaava yoga ca Krno bhavati saasvatah

Meaning

The syllable Kr denotes existence, the syllable Na denotes bliss. Vishnu is both these. So He is always Krsna.

(Sat- Chit- Aananda)

xxxx

Krsnah – Word or naamaa No.550

One who is known as Krsna-dvaipayana. Says Vishnu Purana,

Krsna -dvaipaayanam vyaasam viddhi naaraayanam prabhum!

Ko hy anyah pundarikaaksanMahaabhaarata- krt bhavet!!

Meaning

Know that the Vyaasa known as Krsna dvaipaayana was the Lord Naaraayana Himself. Who except the lotus eyed Lord can produce a work like Mahaabhaarata?

My comments

The introductory slokas of VS also confirm it.

Vyaasaaya Vishnu rupaaya Vyasa rupaya vishnave.

Another couplet gives four generations of Vyasa- Vyasa, Vasistha, Sakti- Suka.

My research shows Vyasa was the person who wrote the longest epic and credited with the highest number of literary productions. No one can match him. Without him, Hindus would have lost 18 Puranas and Mahabharat.

xxxxx

Short cut to cure our sins!

Adi Shankara was so compassionate that he composed so many simple slokas to cure our sins. At the same time, he followed all ancient rituals and established Mutts in nook and corner of India for continuing those rituals. We see them even in today’s Shankara Mutts.

Paapanaasanah – Word or naamaa No.992

He who destroys the sins of those who adore Him, remember and sing hymns of praise on Him. The text known as Vrddha- saataapa says,

Pakso pavaasadyat paapam purusasya pranasyati

Praanaayaama -satena iva tat paapapam nasyate nrnaam!!

Praanaayaama – sahasrena  yat yat paapam nasyate nrnaam

Sana-maatrena tat paapam harer dhyaanaat pranasyati

Meaning

–Whatever sin of a man is atoned for by one week’s fasting, that is achieved by a hundred Praanaayaamas. So also whatever sin is atoned for by a thousand  Praanaayaamas, that is atoned for by meditation upon Hari even for a while.

–subham–

Tags- Krishna,  Sin Cure, Secrets from Vishnu Sahasranama , Part 15  , Vyasa

அன்னம், ஆமை, குயில், காகம் – திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 12 (Post No.13,249)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,249

Date uploaded in London – –   17 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் அன்னப்பறவை குடிக்கும் என்ற ஒரு விநோதச் செய்தியும், ஆமை தனது  உடலுறுப்புகள் அனைத்தையும் ஓட்டுக்குள் இழுத்து பாதுகாத்துக் கொள்ளுவது போல புலனடக்கம் தேவை என்றும் காகத்தின் கூட்டில் குயில் முட்டையிட்டு தன்  குஞ்சுகளை வளர்த்துக் கொள்ளும் என்றும் சம்ஸ்க்ருத இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் எல்லாப் புலவர்களும் பாடி  வைத்துள்ளனர். திருமூலரும் இந்த மூன்று செய்திகளையும் தனது பாடலில் சொல்கிறார்.

xxxx

குயில் காகம்

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கை தன் கூட்டிலிட்டால்

அயிர்ப்பின்றிக் காக்கை வளர்க்கின்றது போல்

இயக்கில்லை போக்கில்லை ஏனென்பதில்லை

மயக்கத்தால் யாக்கை வளர்க்கின்ற வாறே.-      — திருமந்திரம்

குயிலின் முட்டையைக் காக்கையின் கூட்டில் வைத்தால், காக்கை சிறிதும் சந்தேகம் கொள்ளாது அம் முட்டையினை அடைகாத்துத் தன் குஞ்சைப்போலவே வளர்க்கும். அதுபோல் தாயும் போக மயக்கத்தால் இயங்காமலும், ஏன் என்று கேட்காமலும், கருவில் உள்ள சரீரத்தைக் காக்கின்றாள். இறைவனின் அருளும் தாயின் தன்னலமற்ற கருணை போன்றதே என்பதே செய்தி.

How Maya Fosters Babe

The koel bird leaves its egg in the crow’s nest;

The crow hatches it, nurses it, suspecting nothing;

It does not move it, does not reject it,

Does not ask why,

So does Maya the young one foster.

xxxx

அன்னம்/ பால்

ஆமேவு பால்நீர் பிரிக்கின்ற அன்னம்போல்

தாமே தனிமன்றில் தன்னந் தனிநித்தம்

தீமேவு பல்கர ணங்களுள் உற்றன

தாமேழ் பிறப்பெரி சார்ந்தவித் தாமே.

பொழிப்புரை : தீமை பொருந்திய பல கருவிகளுடன் ஒட்டிக் கிடக்கின்ற வினைகளைக் குருபரனது அருள் ஆவின்பாலில் கலந்து நின்ற நீரை அன்னப் பறவை பிரிப்பது போலப் பிரித்து அழித்தலால், பிறப்பிற்கு ஏதுவாகிய அவ்வினைகள் முழுதும் தீயில் விழுந்த வித்துப்போலக் கெட்டொழியும்.

பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால் பாலை மட்டும் எடுத்துக் கொள்ளும் அதிசய சக்தி அன்னப் பறவைக்கு உண்டு என்பது வேத காலத்தில் இருந்து வரும் ஒரு நம்பிக்கை. இதுவரை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்வதில்லை. ஆயினும் இதற்கு ஒரு விஞ்ஞான விளக்கம் உண்டு!

உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலத்திலும் — ( காட்சி 6- செய்யுள் 33)– இந்தச் செய்தி வருகிறது. அதற்கு முன் யஜூர் வேதத்தில் — (காடக, மைத்ராயணி, வாஜஸ்நேயி சம்ஹிதை) — சோம ரசத்தைப் பருகிவிட்டு தண்ணீரை ஒதுக்கிவிடும் பறவை என்ற செய்தி இருக்கிறது. வடமொழிச் சொல்லான க்ஷீர என்பது பாலையும் தூய தண்ணீரையும் குறிக்கும் என்பர் வடமொழி அறிந்தோர்.

அன்னம், குள்ள வாத்து, நாரை போன்ற பறவைகள் ஒரே இனத்தை சேர்ந்தவை. இதில் வாத்து போன்ற பறவைகளின் வாயில் சல்லடை போன்ற அமைப்பு உள்ளது விலங்கியல் படித்தோர் அறிந்த உண்மை. ஆக சகதியை ஒதுக்கிவிட்டு நீரையும், தனக்கு வேண்டிய புழுப் பூச்சிகளையும் வாத்துகள் உண்ணும். ஒருவேளை நமது முன்னோர்கள் இந்த விலங்கியல் புதுமையைக் குறிக்க இப்படி – பால்/தண்ணீர்—கதை சொல்லி இருக்கலாம். அல்லது அழிந்து போய்விட்ட, நமக்குத் தெரியாத வேறு வகை அன்னப் பறவை பற்றியும் சொல்லி இருக்கலாம்.

அன்னப் பறவைகளில் ராஜ ஹம்சம், கால ஹம்சம், க்ஷுத ஹம்சம், மஹா ஹம்சம், காதம்ப ஹம்சம், மத்த ஹம்சம் என்று பல வகைகளை வடமொழி நூல்கள் பாடுகின்றன. 

He Roasted the Seeds of Recurring Births

Like unto the swan that from milk the water parts,

So the Lord, Himself, alone, in this Sabha unique,

Grasped the senses many that scorch like fire,

And thus the Seven Births unto roasted seeds rendered.

xxxx

தமிழர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

ஒரு பிறவியில் ஒருவன் ஆமை போல் ஐம்பொறிகளயும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அந்த அடக்கம் அவன் எடுக்கும் ஏழு பிறவிகளுக்கும் பாதுகாவலாக அமையும் என்பது திருவள்ளுவரின் கூற்றாகும்.

இந்த ஆமை உதாரணத்தை பகவத்கீதை (2-58), மனு ஸ்மிருதி (VII-105), திவ்வியப் பிரபந்தம் (2360), திருமந்திரம் (2264, 2304), மகாபாரதம் ஆகிய எல்லா
நூல்களும் கூறுகின்றன. அதாவது இமயம் முதல் குமரி வரை இந்த உண்மை
தெரிந்திருந்தது. ஆனால் திருமூலர் மட்டுமே ஆமையையும் ஆயுள்
நீட்டிப்பையும் இணைத்துப் பேசுகிறார். இதை இன்றைய உயிரியல் விஞ்ஞானமும் கின்னஸ் சாதனை நூலும் உறுதிப்படுத்தி விட்டன.

யதா சம்ஹரதே சாயம் கூர் மோங்கானிவ ஸர்வச:
இந்த்ரியாணி இந்த்ரியார்த் தேப்யஸ் தஸ்ய ப்ரஜ்ஞாபிரதிஷ்டித
(கீதை 2-58)

”ஆமையானது தன் அங்கங்களை ஓட்டினுள் இழுத்துக் கொள்வது போல எப்போது இந்த யோகி புலன்களை, எல்லா இந்திரிய விஷயங்களிலிருந்தும் உள்ளே இழுத்துக் கொள்கின்றானோ அப்போது அவனுடய ஞானம் உறுதியாக நிலை பெற்றதாகும்.”

இன்றைய உயிரியல் BIOLOGY படித்தோருக்கு உலகிலேயே நீண்ட நாள் வாழும்
பிராணி ஆமை தான் என்று தெரியும்.

இதையே திருமூலரும் கூறுகிறார்:-

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

(திருமந்திரம் 2264, 2304)

மரணம் இலாப் பெருவாழ்வு வாழ வேண்டுமானால் – ஆமையை விட ஆயிரம் ஆண்டு கூடுதலாக வாழ வேண்டுமானால் – என்ன செய்ய வேண்டும் என்று கூறுகிறார்:

வாயில்லாக் கிணற்றுள் உறையும் பிரணவ வழிபாட்டாளரிடம் நின்மல சக்கிரம் முதலிய 5 நிலைகள் உண்டு. அந்நிலையில் ஆன்ம ஒளியில்
நழுவா அறிவு ஒடுங்குமேல் அவர் பிரணவ உடலுடன் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டு உயிர் வாழலாம்.

மனிதனைப் போல மூன்று மடங்கு ஆயுள் உடையது ஆமை. இதைக் கண்டுபிடித்து எழுதி வைக்கக் கூட ஒருவர் பல தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அல்லது சரியான தகவலைப் பரப்பும் உத்தி இருந்திருக்க வேண்டும். திருமூலர் 3000 ஆண்டு வாழ்ந்ததாக ஒரு நம்பிக்கையும் உண்டு.

xxxx

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

விளக்கமிக்க முந்நூறும், முப்பதைப் பத்தினால் பெருக்கிக் கிடைத்த
முந்நூறும் சேர்ந்து அறுநூறு ஆகும். இரட்டியதாறு என்பது ஆறும் ஆறும்
பெருக்க முப்பத்தாறு ஆகும். இம்முப்பத்தாறை அறுநூறோடு பெருக்க 21,600
ஆகும். இதுவே ஒருநாள் நாம் சுவாசிக்கும் சுவாசங்கள்.

ஆமை ஒரு நிமிடத்திற்கு மூன்று முறை தான் சுவாசிக்கிறதாம்.

ஒரு மனிதன் ஓம்காரம் சொன்னால் அவனுடய சுவாசத்தின் நீளம் குறைந்து சுவாசம் மிச்சப் படுகிறதாம். ஆகையால் பிரணவ மந்திர (ஓம்) ரகசியம் அறிந்தவர்களும் நீண்ட நாள் வாழலாம்.

வள்ளுவருக்கு முன்பாக இதை கீதையில் கண்ணனும்(2-58), மனுதர்ம சாஸ்திரத்தில்(7-105) மனுவும்,திவ்யப் பிரபந்தத்தில்(2360) ஆழ்வார்களும் சொல்லிவிட்டார்கள்.

“யதா சம்ஹரதே சாயம் கூர்ம அங்கானீவ ஸர்வச:

இந்த்ரீயாணி இந்த்ரியார்தேப்ய: தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா” (கீதை 2-58)

பொருள்: ஆமை தனது அங்கங்களைச் செய்வதுபோல எப்போது யோகியானவன் புலன்களை இந்திரிய விஷயங்களில் இருந்து எல்லா வகையிலும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போது அவனுடைய ஞானம் உறுதியாகும்.

இது பிராணாயமத்தின் மகிமையைப் புலப்படுத்துகிறது. அதாவது மூச்சுவிடுவதை முறையாகக் கட்டுப்படுத்தினால் ஆயுள் அதிகரிப்பதோடு பல அற்புத சக்திகளும் உடலில் தோன்றும். அதைத் தவறாகப் பயன்படுத்தும்படி தேவதைகள் தூண்டும். அதற்குக் கீழ்படிபவர்கள் சில ஆனந்தாக்கள் (சாமியார்கள்) போல அதோகதிக்குப் போய்விடுவார்கள்.

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்

அருமை எளிமை அறிந்தறி வாரார்

ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி

இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

பொழிப்புரை :  பிறரது பெருமை சிறுமைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அரியனாயும், எளியனாயும் நிற்கின்ற முறைமையை எங்கள் சிவபெருமான் அறிவதுபோல அறிவார் யார்? ஒருவரும் இல்லை. அதனால், மேற்குறித்த அவன் அன்பர் இவ்வொரு பிறப்பிலே, ஆமை தனது ஐந்துறுப்புக்களையும் ஓட்டிற்குள் அடக்குதல்போல, புலன் அவா ஐந்தனையும் தமக்கு அரணாய் உள்ள அவனது திருவருளினுள் அடக்கி, இம்மை யின்பம், மறுமையின்பம் இரண்டையும் உவர்த்துக் குற்றம் அற்று இருக்கின்றனர்.

 Senses Controlled, They Saw This World and Next

Who there be who, like our Lord, distinct know

The great and the small, the difficult and the facile?

They, unto tortoise, drawing in senses five under the shell,

They heard and saw This and Next, all impurities dispelled.

xxxx

Silentness of Waveless Thought

Like the ghee subtly latent in purest milk,

Into the waveless Thought the Lord in silentness speaks;

They who, in silentness realise, this mortal coil shuffled,

Purity they become, in Limitless Light mingling.

—-subham—-

Tags- ஆமை, குயில், காகம், அன்னம், பால், தண்ணீர், திருமூலர், திருமந்திரம், ஆராய்ச்சிக் கட்டுரை 12

ராமாயணத்தில் சாபங்கள் (6) (Post No.13,248)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.248

Date uploaded in London – — 17 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (6)

ராமாயணத்தில் சாபங்கள் (6) – தாடகா வனத்தின் சாபம் நீங்கியது!

ச.நாகராஜன்

பாலகாண்டத்தின் இருபத்தி ஆறாவது ஸர்க்கம் தாடகா வனத்தின் சாபம் நீங்கியதை 36,37,38 ஆகிய ஸ்லோகங்களில் விவரிக்கிறது.

தாடகா வனம் முன்பிருந்த செழுமையை இழந்த விருத்தாந்தத்தை விஸ்வாமித்திரர் ராமரிடம் உரைக்கிறார். அகஸ்தியரின் கோபத்தையும் சாபத்தையும் சொல்கிறார்.

ராமன் பெண்ணான தாடகையை எப்படி வதம் செய்வது என்று நினைக்கக் கூடாது என்பதற்காக அவர் உதாரணங்களை வேறு எடுத்துக் காட்டுகிறா.

“ஓ, ஶ்ரீ ராம! முன்னொரு காலத்தில் இந்திரன் பூமியை நாசம் செய்ய விருப்பம் கொண்ட விரோசனனுடைய பெண்ணான மந்தரையைக் கொன்றான்.

அன்றியும் இன்னொரு சமயம் உறுதியான விரதமுடைய சுக்கிரனுடைய தாயாரான பிருகுவின் மனைவி உலகத்தை இந்திரன் இல்லாததாக விரும்பினவளாய் விஷ்ணுவால் கொல்லப்பட்டாள்.

அப்படிப்பட்ட மஹாத்மாக்களாலும் புருஷச்ரேஷ்டர்களாலும் அதர்மமுள்ள ஸ்திரீகள் கொல்லப்பட்டார்கள். ஆகவே எனது ஆக்ஞையால் அருவருப்பை அடையாது, தாடகை வதத்தைச் செய்”” என்கிறார் விஸ்வாமித்திரர் (பாலகாண்டம் 25-ம் ஸர்க்கம்)

ராமர் வில்லில் நாணெற்றி ஒலிக்க, அதனால் கோபம் கொண்டு வந்த தாடகை கல்மழையைப் பொழிவிக்கிறாள். கல்மழையைத் தடுத்ததோடு தாடகையின் இரு கைகளையும் அவர் துண்டித்தார். லக்ஷ்மணரோ தாடகையின் காதுகளையும் மூக்கையும் அறுத்தார். அவளோ மாயையால் மயக்குபவள். ஆகவே வெவ்வேறு உருவங்களை எடுத்து கல்மழை பொழியவே ராமர் அதைத் தடுத்தார். இறுதியில் ஒரு பாணத்தால் தாடகையை அடித்து வதம் செய்கிறார்.

இதனால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைகின்றனர்.

ராம லக்ஷ்மணரைப் போற்றிப் புகழ்கின்றனர்.

ஒரு வழியாக தாடகா வனத்தின் சாபம் போனது.

விஸ்வாமித்ரவச: ச்ருத்வா ஹ்ருஷ்டோ தசராத்மஜ: |

உவாச ரஜனீம் தத்ர தாடகாயா வனே சுகம் ||

(பால காண்டம் ஸர்க்கம் 26 ஸ்லோகம் 36)

 தசரதாத்மஜம் – தசரதகுமாரர்

விஸ்வாமித்ர வச:  – விஸ்வாமித்ரரின் வார்த்தையை

ச்ருத்வா – கேட்டு

ஹ்ருஷ்ட – களித்தவராய்

தாடகாயா: – தாடகையினுடைய

தத்ர வனே – அந்த வனத்தில்

ரஜனீம் – இரவை

சுகம் – சுகமாக

உவாச – கழித்தார்

முக்தசாபம் வனம் தச்ச தஸ்மின்னேவ ததாஹனி |

சம்பகாஷோகபுன்னாகம்ல்லிகாத்யை: சுசோபிதம் ||

சூதைஸ்ஸ பனசை: பூகைர்நாரிகேலைச்ச சோபிதம் |

வாபிகூபதடாகைஸ்ச தீர்திகாபிரலங்க்ருதம் ||

மல்லிகாஹேமகூடஸ்ச மண்டபைரூபஷோபிதம் |

ரமணீயே ஹி பர்பாஜ வனம் சைத்ரரதம் யதா ||

(பால காண்டம் ஸர்க்கம் 26 ஸ்லோகம் 37-40)

தத வனம் ச – அந்த வனமும்

தஸ்மின் அஹனி – அந்த நாளில்

ததா ஏவ – அப்போதே

முக்த சாபம் – சாபம் நீங்கப் பெற்றதாய்

சம்பகாஷோக புன்னாகமல்லிகாத்யை – சம்பக, அசோக, புன்னாக, மல்லிகை இவைகளால்

சுசோபிதம் – விளங்குகிறதாய்

சூதைச் ச – மா மரங்களாலும்

பனஸை:  – பலா மரங்களாலும்

பூகை: – பாக்கு மரங்களாலும்

நாரீகேலை: ச – தென்னை மரங்களாலும்

சோபிதம் – அலங்கரிக்கப்பட்டதாய்

வாபிகூபதடாகை; ச – நடைவாபி, கிணறு, குளங்கள் இவைகளாலும்

தீர்திகாபி – நீண்ட ஏரிகளாலும்

அலங்க்ருதம் – அலங்கரிக்கப்பட்டதாய்

மல்லிகா ஹேம கூடை: – மல்லிகைகள் நிறைந்த ஸ்வர்ணமயமான குன்றுகளாலும்

மண்டபை – மண்டபங்களாலும்

உபசோபிதம் – சிங்காரிக்கப்பட்டதாய்

சைத்ர ரதம் – குபேரனுடைய சைத்ர ரதம் என்கிற

வனே ததா – உத்யான வனம் போல

ரமணீயே – அழகியதாய்

பம்ராஜ ஹி – விளங்கிற்று

 சாபத்தினால் பொலிவிழந்து கிடந்த தாடகா வனம் சாபம் நீங்கப் பெற்று பழைய பொலிவை அடைந்தது.

ஏரிகளாலும் குளங்களாலும் நல்ல மலர்ச் செடிகளாலும் அலங்கரிக்கப் பெற்றது.

இந்த வர்ணனையை இருபத்தாறாவது சர்க்கமான தாடகை வதம் என்ற சர்க்கத்தில் காணலாம்.

***

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 11 (Post.13,247)

அந்தோசபலஸ் கடம்பா / கடம்பு

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,247

Date uploaded in London – –   16 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

161. Cleistanthus collinus (Roxb.) Benth. ex Hook. f.

161.க்ளைஸ்தான்தஸ் காலினஸ்

ஒரிஸ்ஸா மக்கள் பாம்புக் கடித்த இடங்களில் சாற்றைத் தடவுகின்றனர்.

xxxxx

F51. Family: Piperaceae  /குடும்பம்-பைபரேசி

162. Piper nigrum L.

162.பைபர் நைக்ரம் /மிளகு

உத்தராஞ்சல் மக்கள் நெய்யில் மிளகைப் பொறித்து பாம்பால் கடிபட்ட ஆடு மாடுகளுக்கு கொடுக்கின்றனர்.இதே போல கரு மஞ்சளை பாம்பு கடித்த இடத்தில் சூடான ஒரு கோலை வைத்து சூடு போடுகின்றனர்.

xxxxx

குடும்பம்-பிளான்டஜெனேசி

F52. Family: Plantaginaceae

163.பாகோபா மொன்னியெரி

163. Bacopa monnieri (L.) Edwall

வடகிழக்கு இந்திய மக்கள் தாவரத்தை நசுக்கி கடிபட்ட இடத்தில் வைக்கிறார்கள்.மத்திய பிரதேச மக்கள்  செடி முழுதையும் உபயோகித்து கஷாயம் வைத்துக் கொடுக்கிறார்கள் . 

xxxx

 F53. Family: Plumbaginaceae 

164. Plumbago zeylanica L.

குடும்பம்– பிளம்பாஜினேசி

பிளம்பாகோ  சைலானிகா

திரிபுரா மக்கள் பயன்படுத்தும் மருந்து இது.

xxxx

F54. Family: Poaceae 

165. Cynodon dactylon (L.) Pers.

குடும்பம்- போயேசி

சைனோடன் டாக்டைலியான்

இந்திய சதுப்பு நிலக்காடுகளில் வசிக்கும் மக்கள் இதை பயன்படுத்துகின்றனர்.

xxxx

166. Eleusine indica (L.) Gaertn.

166.எலியூசின் இண்டிகா

மேற்கு வங்க முண்டா இந மக்கள் வேறை மசித்து இஞ்சி, மிளகுடன் பாதியை தேனுடன் உள்ளுக்கு கொடுக்கின்றனர். மீதி பாதியை பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர் .

XXXX

167. Oplismenus compositus (L.) P. Beauv.

167.ஆப்ளிஸ்மெனுஸ் காம்போசிடஸ்

நிகோபார் தீவு மக்கள் பாம்பு கடித்த இடத்தில் இந்த தாவரத்தின் புகை விழும்படி எரிக்கிறார்கள்

XXXXX

F55. Family: Polygonaceae 

168. Persicaria chinensis (L.) H. Gross

குடும்பம்- பாலிகோனேசி

பெர்ஸிகாரியா க்ரோஸ்

வங்க தேச சக்மா இன மக்கள், பாம்பு கடித்தால்  இந்த தாவரத்தின் இலையின் சாற்றைக் குடிக்கிறார்கள்.

XXXXX

169. Polygonum perfoliatum (L.) L.

169.பாலிகோணம் பெர்போலியாட்டம்

மணிப்பூர் மக்கள் விதையின் பொடியை பாம்பு கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள்.

xxxxx

F56. Family: Ranunculaceae 

170. Aconitum heterophyllum Wall. ex Royle

குடும்பம் – ரணன் குலேசி

அகோனிடம் ஹெடெரோபில்லம்

சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் வட்டார மக்கள் இதைப் கிழங்கைப் பயன்படுத்தி சிகிச்சை தருகிறார்கள் .

xxxx 

F57. Family: Rubiaceae 

171. Anthocephalus cadamba (Roxb.) Miq.

குடும்பம் – ரூபியேசி

அந்தோசபலஸ் கடம்பா / கடம்பு

உத்தர பிரதேசத்தில் இதை பாம்புக்கடி மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

xxxxx

172. Anthocephalus chinensis (Lam.) Rich. ex Walp.

அந்தோசெபலஸ் சினென்சிஸ்

வங்க தேசத்தில் மரத்தின் இலையையும் பட்டையையும் பாம்பு கடித்தால் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார்கள்.

xxxx

173. Chasalia curviflora var. ophioxyloides (Wall.) Deb & Krishna

சசாலியா கர்வி ப்ளோரா

வங்க தேச  சக்மா பழங்குடி மக்கள் இதன் இலைகளை மசித்து பாம்புக் கடித்த இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள் .

xxxx

174. Tarenna odorata Roxb.

174. டரென்னா  ஒடோரேட்டா

மிஜோரம் மக்கள் வேரின் மசியலை கடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டுகிறார்கள் .

xxxx

F58. Family: Rutaceae 

175. Aegle marmelos (L.) Corr.

குடும்பம் – ரூட்டேசி

ஏஜில் மார்மெலோஸ்

வங்கதேச மக்களும் இந்திய பெருங்கடல் தீவுவாசிகளும் இலை , வேர், பட்டை ஆகியவற்றை சிகிச்சையில் உபயோகப்படுத்துகிறார்கள் .

xxxx

176. Ruta graveolens L.

176.ரூட்டா  க்ரவோலன்ஸ்

மேற்குத் தொடர்ச்சி மலை மலன்ட் வட்டார மக்கள் வேரின் மசியலை கடித்த இடத்தில் அப்புகிறார்கள்

xxxx

F59. Family: Salicaceae 

குடும்பம்- சாலிகேசி

ப்ளகோர்ட்டியா இண்டிகா

தமிழ் நாட்டில் சேர்வராயன் மலைவாழ் மக்களும், இந்து மஹா சமுத்திர தீவுவாசிகளும் பயன்படுத்தும் மூலிகை இது .

xxxx

178. Casearia graveolens Dalz.

178.கேசரியா கிரேவியோலென்ஸ்

மஹாராஷ்டிரா நாசிக் வட்டார மக்கள், பாம்பு கடித்தால் ,  இதன்  தண்டினை நாளைந்து நாட்களுக்குச் சுவைக்கிறார்கள்.

xxxx

F60. Family: Santalaceae 

179. Viscum articulatum Burm. f.

குடும்பம்- சாண்டலேசி

விஸ்கம் ஆர்ட்டிகுலேட்டம்

மேகாலயா காசி- ஜயந்தியா குன்று மக்கள் இதை சிகிச்சைக்கு உபயோகிக்கிறார்கள்.

xxxx

F61. Family: Sapindaceae 

180. Sapindus laurifolius Vahl

குடும்பம்- சபின்டேசி

சபிண்டஸ் லாரிபோலியஸ்

குஜராத் போர்பந்தர் வட்டார மக்கள் பழத்தை கடித்த இடத்திலும் பழரசத்தை உள்ளுக்கும் கொடுக்கிறார்கள் . 

—subahm—

Tags- பாம்புக் கடி     200  மூலிகை மருந்துகள் ,Part 11, Snake bite, Cure 

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-33 (Post 13,246) 

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,246

Date uploaded in London – –   16 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 33

xxxx

362. பல் நோய்க்கு

தாளிசப் பாத்திரியைப் பொடிசெய்து  பல்லுதேய்த்துக்கொண்டுவந்தால்  பல்வலி தீரும் .

xxxx

சர்பத்து

தாழம்பூவின் விறைக்க கிஷயம் வைத்து சக்கரை சேர்த்தது சர்பத்து போல் பாகுபதமாய் காய்ச்சி சாப்பிட்டுவந்தால் சொறி சிரங்கு தினவு இதுகள் தீரும்.

xxxx

கலிதமாகாதிருக்க

தாழம்பூவின் உள்ளேயிருக்கும் விபூதியை எடுத்து கோழிமுட்டை வெள்ளைக்கருவால் ஈழத்து ஆண்குறியில் தடவிப் புணர்ந்தால் விந்து சீக்கிரம் கலிதமாகாது .

xxxx

குளிர்ச்சிக்கு

தாமரைக்கிழங்கைப் பாலில் அரைத்தது பாலில் உட்கொண்டுவந்தால் மேகம் வேட்டை கிரி ச்சினம் இவை தீரும். தேக சாந்தியும் கண் பிரகாசமும் உடம்பு குளிர்ச்சியும் உண்டா கும்

.xxxx 

தி

சிறு விஷங்களுக்கு

தில்லை வித்தை பாலில் அரைத்து உண்டுவந்தால் சில்லறை விஷங்கள் பெரு விஷங்கள் திமிர் வாய்வு கபம் கோழை   கு ட்டம் இவை சாந்தியாகும்.

xxxxx

இந்திரியம் கட்ட

திசை கருடன் என்னும் காட்டுக்கொடி மூலத்தைப் பாலில் உட் கொண்டுவந்தால் மலக்கழிச்சல்  பேதி  இவை தீரும். நீற்ற இந்திரியத்தைக் காட்டும்.  இதன் இலை தண்ணீரைக் கட்டும்.

xxxx

அறிவுண்டாக

திருநீற்றுப் பச்சிலையைப் பாலில் அரைத்துக்கலந்து  உட்கொண்டால் கப வாந்தியை நிவர்த்தியாக்கும். அறிவு துலங்கும்.

xxxx

து

கருமேக சாந்தி

துத்தி விரையைப் பசும்பாலில் அரைத்துப் பாலில் கலக் கி நீடித்து உண்டுவந்தால் கை காலில் படருகிற  கருமேகம் கு ட்டம்  வெப்பு இவை தீரும்

xxxx

மேக சூட்டுக்கு

துத்தி  இலையைக் கஷாயம் வைத்து  பாலும் சக்கரையும் கூட்டி காப்பிபோல் சாப்பிட்டு வரவும். தணியும் .

xxxx

மலச்சிக்கலுக்கு

துத்தியிலையில் வெங்கயம் சிறு பயறு போட்டு  கிரமப்படி சமைத்து  தின்று வந்தால் மலச்சிக்கல் தீரும் மூல ச் சூடு தணியும் .

xxxx 

நீர் சுருக்கு

துத்தி வேர் 3 பலம் திராட்ச்சிப்பழம்  ஒன்னரைப்பலம் இரண்டும் கிஷாயம் வைத்து கொஞ்சம் நெய்விட்டுச் சாப்பிடவும்.  நீர் சுருக்கு தீரும்.

xxxx

பருவுகள் உடைய

துத்தியிலையை அரைத்து பருவுகள் மேல் தடவி வந்தாலும் அல்லது துத்தியிலையில் காட்டி வார் த்துக்கு கிளறி கட்டி வந்தாலும் பருவுகள் உடையும்.

xxxxx

தூ

கபரோகத்திற்கு

தூதுளங்காயை  துவரம் பருப்பிட்டுக் கிரமப்படி சமைத்து தின்றுவந்தால் கபரோகம் பயித்திய தோஷம் பித்த வாய்வு இவைகள் சாந்தியாகும் .

xxxx

மந்த வாய்வுக்கு

தூதுவேளை இலையை குறுக அரிந்து துவரம்பருப்பு மிளகு இவைகளைக்கூட்டி கிரமப்படி குழம்பு செய்து இரண்டொ ரு  வேளை சாதத்துடன் சாப்பிட்டால் உடம்பு ஆதி யந்தமும் குத்தல் – குடைச்சல் – திரேகபாரம்- வயறு மந்தம் – மலச்சிக்கல் யாவும் தீரும் .

xxxx

தெ

நாதவிருத்தி

தென்னம்பாளை மிகவும் இளசியாகக் கொண்டுவந்து அதன் அரிசிகளை எடுத்து பால் விட்டரைத்து எலுமிச்சங்காயளவு சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும் தின்று வந்தால் நாதம் விருத்தியாகும் . இடுப்பு வலிவு உண்டாகும் .

xxxx

தே

ஈளை இருமலுக்கு

தேத்தான் வித்தை ஊறவைத்துப் பாலில் அரைத்து கலக்கியுண்டுவந்தால் பித்தகாசம், க்ஷ்யம், ஈளை, இருமல்- மேகம்- பிரமியம்-  உந்திப்புண் – கிருச்சிரம் – கண்ணெரிவு – தேகக்கடுப்பு  இவை தீரும் . தீபனமுண்டாகும்

 .—subham–

Tags- முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்-33  

ராமாயணத்தில் சாபங்கள் (3), (4), (5)- (Post No.13,245)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.245

Date uploaded in London – — 16 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (3), (4), (5)

ராமாயணத்தில் சாபங்கள் (3) – தாடகைக்கு வந்த சாபம்!

ச.நாகராஜன்

விஸ்வாமித்திரருடன் ராமரும் லக்ஷ்மணரும் அயோத்தியை விட்டுப் புறப்பட்டு திரிபதகை என்ற நதிக்கரையோரம் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அங்குள்ள காமாஸ்ரமஸ்தானத்தில் சுகமாக இருந்த போது அதன் சரித்திரத்தையும் கேட்டு உணர்ந்தார்கள்.

அடுத்து அவர்கள் புகுந்த இடம் ஒரு அடர்ந்த காடு. அதைப் பற்றி ராமர் கேட்க விஸ்வாமித்திரர், “மலத நாடு என்றும் கரூச நாடு என்றும் வழங்கப்பட்ட இரு நாடுகள் இங்கு செழிப்புடன் இருந்தன.

ஒரு சமயம் ஸுந்தன் என்பவனது மனைவியான தாடகை இந்த இடத்தை நாசம் செய்ய ஆரம்பித்தாள்.  இந்த துர்நடத்தை உள்ளவளை எனது கட்டளையினால் நீ வென்று விடு” என்றார்.

தாடகையைப் பற்றிக் கேள்விப்பட்டு வியப்புற்ற ராமர், ‘ஒரு பெண்ணுக்கு ஆயிரம் யானைகளின் பலம் வந்தது எப்படி?’ என்று வினவினார்.

விஸ்வாமித்திரர் அவர் கோர ரூபம் கொண்டு ராக்ஷஸியாக ஆன

கதையைக் கூறலானார்: “முன் காலத்தில் ஸுகேது என்ற பெரிய ஒரு யக்ஷன் இருந்தான். அவன் மகப்பேறு இல்லாமையால் கடும் தவம் புரிந்தான். அதனால் சந்தோஷமடைந்த பிரம்மா அவனுக்கு தாடகை என்ற பெண்ணை வரமாகக் கொடுத்தார்.

அவள் வளர்ந்த காலத்தில் ஜர்ஜ புத்திரனான ஸுந்தனுக்கு அவள் மணம் முடித்துக் கொடுக்கப்பட்டாள். சில காலத்திற்குப் பின்னர் அவள் மாரீசன் என்ற புத்திரனைப் பெற்றாள். அவன் சாபத்தினால் ராக்ஷஸனாக ஆனான்.

ஸுந்தன் அழிந்த அளவில் தாடகை புத்திரனோடு கூட அகஸ்திய முனிவரை உபத்திரவம் செய்ய ஆரம்பித்தாள்.

காமபாணத்தினால் பீடிக்கப்பட்ட தாடகை அகத்தியரை நோக்கி ஓட கோபம் கொண்ட அகத்தியர், “ இந்த ரூபத்தை விட்டு கோரமான உருவம் உனக்கு உண்டாகக் கடவது” என்று சாபமிட்டார்.

அகஸ்த்ய: பரம க்ரூதஸ்தாடகாமபி சபதவான் |

புருஷாதீ மஹாயக்ஷீ விரூபா விக்ருதானனா!

இதம் ரூபமாஹாய தாருணம் ரூபமஸ்து ||

(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 14,15)

இதன் பொருள் :

அகஸ்த்ய: அகஸ்தியர்

பரம க்ரூதத்ஸ – பரம கோபம் கொண்டவராய்

தாடகாம் அபி – தாடகையைப் பார்த்து

புருஷாதீ – ‘மனிதர்களைக் கொல்லுகின்ற நீ

விரூபா – விகார ரூபமுடைய

விக்ருதானனா – விகாரமான முகத்தை உடைய

மஹா யக்ஷீ – மஹா யக்ஷிணியான நீ

இதம் ரூபம் – இந்த ரூபத்தை

அபஹாய – விட்டு விட்டு

தாருணம் – அதி வேதனையை விளைவிக்கும் கோரமான

ரூபம் தே – உருவமானது உனக்கு

அஸ்து – உண்டாகட்டும் (என்று கூறி)

சபதவான் – சபித்தார்.

அந்தக் கணமே அவள் கோர ரூபத்தை அடைந்தாள். அனைவரையும் துன்புறுத்த ஆரம்பித்தாள்.

தாடகை பற்றிக் கூறிய விஸ்வாமித்திரர் ராமரிடம், “இவளை வதம் புரிய மூன்று லோகங்களிலும் உன்னைத் தவிர வேறு எந்த மானிடனாலும் முடியாது பெண்ணைக் கொலை செய்ய வேண்டி இருக்கிறதே என்ற அருவருப்பு உனக்குத் தேவையில்லை. அனைத்து பிரஜைகளின் நன்மைக்காக இதை நீ செய்ய வேண்டியது உனது கடமை. நீ இவளை வதம் செய்” என்றார்.

ராமரும் முனிவரின் ஆணையை சிரம் மேற்கொண்டு தாடகையை வதம் செய்தார். 

ராமாயணத்தில் சாபங்கள் (4) – மாரீசனுக்கு வந்த சாபம்!

இதே தருணத்தில் அகஸ்தியர் மாரீசனை நோக்கி ராக்ஷஸனாய் இருத்தலை அடை என்று சபித்தார்.

ராக்ஷஸத்வம் பஜஸ்வேதி மாரீசம் வ்யஜஹார: |

(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 13)

ச மாரீசம் – அவர் (அகஸ்தியரானவர்) மாரீசனை நோக்கி

ராக்ஷஸத்வம் – ராக்ஷஸனாய் இருத்தலை

பஜஸ்வ – நீ அடைவாயாக

இதி – என்று

வ்யாஜஹார – சபித்தார்.

இதனால், மாரீசன் ராக்ஷஸன் ஆனான்.

ராமாயணத்தில் சாபங்கள் (5) – ஸுந்தனுக்கு வந்த சாபம்!

தாடகையின் கணவனான ஸுந்தனுக்கு ஏற்பட்ட சாபத்தைப் பற்றி பால காண்டத்தில் இதே ஸர்க்கத்தில் ஒரு ஸ்லோகத்தைக் காண்கிறோம்.

ஸுந்தே து நிஹதே ராம சாகஸ்த்யம்ருஷிஸத்தமம் |

தாடகா சஹ புத்ரேண ப்ரதர்ஷயிதுமிச்சதி ||

(பால காண்டம் ஸர்க்கம் 25 ஸ்லோகம் 10)

ராம – ராமா!

ஸுந்தே – ஸுந்தன்

நிஹதே து – அழிந்த அளவில்

சா – அந்த

தாடகா – தாடகையானவள்

புத்ரேண சஹ –  புத்திரனோடு கூட

ருஷிசத்தமம் – முனி ச்ரேஷ்டரான

அகஸ்த்யம் – அகத்தியரை

ப்ரதர்ஷயிதும் – உபத்திரவம் செய்ய

இச்சதி – யத்தனித்தாள்

இங்கு ஸுந்தனுடைய சாபம் பற்றிய முழு விவரங்கள் தரப்படவில்லை.

அவன் யாருக்கு என்ன தீங்கு செய்தான். யார் அவனுக்கு என்ன சாபம் தந்தார்கள் என்பது விளக்கப்படவில்லை.

ஆனால் ஸுந்தனின் அழிவு தரப்படுகிறது.

***

தினையும் பனையும்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-11 (Post.13,244)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,244

Date uploaded in London – –   15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருமந்திரத்தில் வரும் தாவரங்கள் பற்றிய ஆராய்ச்சியை இன்று நிறைவு செய்வோம். தொடர்ந்து பிராணிகள் பற்றிய அதிசயச் செய்திகளைக் காண்போம்

திருமந்திரத்தில் திருக்குறளின் தாக்கத்தை நிறைய பாடல்களில் காண முடியும். அதைத் தனியே காண்போம்

இப்போது தினைபனை இரண்டையும் காண்போம் ; தினை, பனை என்றவுடன் திருவள்ளுவர்தான் நம் நினைவுக்கு வரும்.தினையை 4 இடங்களிலும் பனையை 3 இடங்களிலும் திருக்குறளில் காணலாம் .

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்

திணைத்துணை நன்றி செயினும்-தமக்குத் தினையளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்; பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்-அதனை அவ்வளவிற்றாகக் கருதாது, பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார் என்று பரி மேல் அழகர் உரை சொல்லுவார்.

xxxxx

திருமந்திரத்தில் தினை

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்

சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்

தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்

கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.

(ப. இ.) பேரன்புவாய்ந்த மெய்யடியார்கள் காதலுடன் தன்னை நினைப்பார்களானால் அங்ஙனம் நினைப்பவரைச் சிவபெருமானும் திருவருளால் நினைந்தருள்வன். புருவநடுவாகிய சுனையின்கண் திருவாணையாக விளங்கும் அறிவுப் பேரொளியானை நெஞ்சத்தாமரையினிடத்து விளைந்து மலரும் உள்ளொளியாக வுறையும் சிவபெருமானைத் தினையைப் பிளந்தாலொத்த சிறுமையராயுள்ளாரும் திருவைந்தெழுத்தினையே எண்ணி அவ்வெண்ணத்தால் உறுதி எய்தியவுள்ளத்தின்கண் நினைப்பாராயின் அவ்வுள்ளம் உரனுடைய வுள்ளமாகும்.

xxxx

உறைபதி தோறும் முறைமுறை மேவி

நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி

மறையுட னேநிற்கு மற்றுள்ள நான்கும்

இறைதினைப் போதினில் எய்திட லாமே.

(ப. இ.) திருவருளம்மை உயிர்கள் உய்தற்பொருட்டு, அகத்துப்போல் புறத்தும் திருக்கோவில் கொண்டெழுந்தருளியுள்ளாள். அத் திருக்கோவில் தோறும் முறைமுறையாகச் சென்று மணம் கமழ்கின்ற பூச்சூடியுள்ள அம்மையை நாடொறும் கும்பிட்டு ‘நமசிவய’ என்னும் தமிழ்மந்திரம் மறவாநினைவுடன் ஓதிக்கொண்டிருக்கும் மெய்யடியார்கட்குத் தூமாயையின் கண்ணுள்ள ஏனைய அத்தன், அருளோன், ஆண்டான், ஆசான் ஆகிய நான்குமெய்களின்கண் உறையும் இறைவன் திருவருளும் தினைப்பொழுதினுள் எளிதின் எய்தும்.

xxxxx

திருமந்திரத்தில் பனை

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்து போல

நினையாத வர்க்கில்லை நின் இன்பந்தானே..

இல்லறத்தில் இருந்தபடி ஈசனை வழிபட்டு வருபவர் பெருந்தவம் செய்பவர்க்கு ஒப்பாவர்.நம்முள்ளேயே அறிவாய் இயங்கும் இறைவனை எம்பெருமானை உணர்ந்தவர்கள் அன்பும் கருணையுமாக இருப்பார்கள்.தம் உள்ளத்தில் அப்பெருமான் எழுந்தருளியிருப்தை உணர்ந்திருப்பவர் அன்புடையவராக இருப்பர்.

 நம்முள்ளேயே கொட்டிக்  கிடக்கும் இறையின் கருணையை உணர முடியாமல், அதை வெளியே தேடுவது அறிவுடமை ஆகாது. பனை மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் பருந்து அந்த மரத்தில் உள்ள பனம் பழத்தைப்பற்றி நினையாமல் உணவுக்காக கிழிறங்கி வரும்.

தன்னுள்ளே இருக்கும் ஈசனை உணராமல், ஞானத்தை வெளியில் தேடி, வாழ்வை வீணடிக்கிறார்கள். அதுபோல சிலர் தம்முள்ளே இருக்கும் ஈசனை பற்றி நினைவேயில்லாமல் இன்பத்தை வெளியே தேடுகிறார்கள். அவர்களுக்கு உண்மையான இன்பம் கிடைக்காது.

xxxx

ஆலைக் கரும்பும் சோலைத் தண்ணீரும்

ஆலைக் கரும்பும் அமுதும் அக் காரமும்

சோலைத்தண் ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்

பீலிக்கண் ணன்ன வடிவுசெய் வாளொரு

கோலப்பெண் ணாட்குக் குறையொன்று மில்லை.—2919

வெல்லக்கட்டியும்,அமுதமான்  பாலும்  போன்று  இனிமையானது அன்னையின் திருவருள் . மயிற் பீலியில் எவ்வளவு வண்ணங்கள உளவோ அவ்வளவு வடிவங்களை எடுப்பவள் நம் அன்னை. . அவளுடைய அருள் பெற்றோருக்கு ஒரு குறையுமில்லை.

XXXXX

உள்ளங்கை நெல்லிக்கனி

மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு

கைத்தலம் சேர்தரு நெல்லி கனி ஒக்கும்

சுத்தனை தூய் நெறியாய் நின்ற தேவர்கள்

அத்தனை நாடி அமைந்து ஒழிந்தேனே-2949

உள்ளங்கை நெல்லிக்கனி என்பது தமிழ்ப் பழமொழி. இதைப்  பயன்படுத்தி திருமூலர் நமக்கு ஒரு செய்தியை அளிக்கிறார். சிவ பெருமானை நாடுவோர்க்கு அவன் உள்ளங்கை நெல்லிக்கனி போல அகப்படுவான். தூயநெறி யுடன் வாழும் தேவற்கு அவன் அப்பன். அவனை நானும் தொழுதேன்.அவனுக்கே அடிமையானேன்.

(நெல்லிக்கனி பற்றி இன்னும் ஒரு பொருளும் சொல்லலாம். அதைச் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் இனிக்கும். அதுபோல சிவனும் இனிமை தருவான் ).

xxxxx

கரும்பும் தேனும்

 கரும்புந் தேனுங் கலந்ததோர் காயத்தில்
அரும்புங் கந்தமு மாகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்புங் கைத்தது தேனும் புளித்ததே.—- 2935

(
ப. இ.) கரும்பாகிய உண்டலும் தேனாகிய உறங்கலும் மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சரக்குநிறை காயப்பையாகிய இவ்வுடம்பகத்து முளையும் கிழங்கும்போன்று தோன்றுதலும் நிலைத்தலும் போன்றுள்ள நிலையிலாச் சிற்றின்பத்தினை உள்ளம் விரும்பி நுகர்ந்தது. அவ்வுள்ளம் அவ்வின்பங்கள் நிலையா என அருளால் வெளிப்படக் கண்டது. கண்டதும் கரும்பாகிய உண்டலினும் தேனாகிய உறங்கலினும் உள்ளம் செல்லவில்லை. உள்ளம் வலிய ஆண்டுகொண்ட வள்ளலிடமே ஓவாது செல்லுகின்றது.

Bodily Pleasures Ceased to Interest

In this body of pleasures

Unto sugarcane and honey mixed,

Sprouted the Fragrance of Siva Bliss;

In eagerness my heart sought it

And I visioned the Void;

Then did the cane taste bitter

And honey sour.

XXXX


(
அ. சி.) கரும்பும் தேனும் – உண்டலும் உறங்கலும்.அரும்பும் கந்தமும் – தோன்றுதலும் நிலைத்தலும்.வெளியுறக் கண்டபின்- நன்றாய் அனுபவித்த பின். கரும். . . . . . . . புளித்ததே – உண்டலும் உறங்கலும் ஒழிந்தன.

xxxxx

புளியம்பழம்

அளிஒத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி

புளிஉறு புன்பழம் போல்உள்ளே நோக்கித்

தெளிஉறு வித்துச் சிவகதி காட்டி

ஒளிஉற வைத்துஎன்னை உய்யஉண் டாளே-1040

புளி தன் இளமையில் தோலை விட்டுவிடாமல் ஒட்ட ஒட்டப் பற்றிக்கொண்டிருக்கிறது; பக்குவமாகிப் பழுக்கும்போது, தோலைத் தோடாக்கிப் பற்றை விட்டுப் பற்றிக்கொண்டிருக்கிறது. உயிரும் அப்படித்தான். பழுக்கும்வரை ஒட்ட ஒட்டப் பற்றிக்கொள்கிறது. பழுத்தபிறகு பற்றுவிட்டுப் பற்றி இருக்கிறது. புளியங்காயாகத் தோலைப் பற்றிக்கொண்டு இருந்தவரையில் பேசாமல் இருந்தவர்கள், புளியம்பழமாகித் தோடு விட்டபிறகு, புளியை எடுத்து உண்ணத் தலைப்படுகிறார்கள். பழுத்துப் பற்றுவிட்ட உயிரை இறைமை தன்னோடு சேர்த்துக்கொள்ளும்.

xxxxx

ஆத்தியும் மூங்கிலும்

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி

முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்

கொடியும் படையும் கோட்சரண் ஐஐந்து

மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.     2876

  • அடிமுடி அமைந்த ஆத்தி மரம். அதன் தலைமுடி போல் தோன்றும் மூங்கில் மரம். அது இருக்கும் ஆற்றில் 25 சங்குகள் (தத்துவங்கள்) 

xxxxx

எள்ளும் தங்கமும்

திலமத்தனையே சிவஞானிக் கீந்தால்

திலம் அத்தனை பொன் சிவஞானிக்கு ஈந்தால்

பல முத்தி சித்தி பரபோக மும் தரும்

நிலம் அத்தனை பொன்னை நின்மூடர்க்கு ஈந்தால்

பலமும்அற்றே பரபோகமும் குன்றுமே     484

எள் அளவு பொன் சிவ ஞானிக்குத் தந்தால் அவர் முத்தி, சித்தி, பரபோகம் முதலானவற்றைத் தருவார்

உலக அளவு பொன்னை மூடர்க்குத் தந்தால் அவர்கள் நம்மிடம் இருக்கும் வலிமையையும், பரபோகத்தையும் குன்றச் செய்வர்

xxxx

2858. இலையில்லை பூவுண் டினவண் டிங்கில்லை

தலையில்லை வேருண்டு தாளில்லை பூவின்

குலையில்லை கொய்யும் மலருண்டு சூடுந்

தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

(ப. இ.) இலையாகிய இறைநூற் பயிற்சி யில்லை. பூவாகிய நோக்கமுண்டு. நோக்கம் – பிரவிருத்தி. வண்டின் கூட்டம் என்று சொல்லப்படுகிற தொண்ணூற்றாறு (2139) மெய்களின் ஆராய்வு இங்கில்லை. தலையாகிய பயிற்சிப் பயனாம் பேறு இல்லை. வேராகிய காரணப் பயிற்சியுண்டு. தாளாகிய முயற்சியில்லை. பூங்கொத்தாகிய புலப்பொருட்சுவைச் சேர்க்கை இங்கில்லை. ஆனால் உடலூழாம் கொய்யும் மலருண்டு. அம் மலர் உடலூழாகக் கழிதலின் அம் மலரினைச் சூடும் தலையாகிய ஆருயிர் முனைப்பு இங்கில்லை. அம் முனைப்பு கிளைத்துத் தோன்றுதலுமின்று. புலர்தல் – தோன்றுதல். நான்முகன் தலைகிள்ளப்பட்டதென்பது முனைப்பதற்றப்பட்டதென்னு மெய்ம்மையினை ஈண்டுன்னுக.

(அ. சி.) இலை – நூற்பயிற்சி. பூ – பிரவிருத்தி. வண்டு – தத்துவ ஆராய்ச்சி. தலை – சாத்தியம். வேர் – சாதகம். தான் – சாதக முயற்சி. பூவின் குலை – சவை முதலிய விசயக் கூட்டம். கொய்யும் மலர் – சுகதுக்க அனுபவம். கொய்யும் தலை – ஆன்ம அனுபவம். கிளை – சீவபோதம்.

(33)

2859. அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு

நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்

மிக்கவ ரஞ்சு துயரமுங் கண்டுபோய்த்

தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறன்றே.

(ப. இ.) திருவடிப் பேறாகிய அக்கரைக்கண் சீர்மிகு சிறப்பினனாகிய சிவபெருமான் ஆருயிர்கள் உய்தற் பொருட்டு நெறி நூலும் துறை நூலும் (தமிழ் வேதாகமங்கள்) ஆக்கவிக்கத் திருவுள்ளங்கொண்டருளினன். அதன்பொருட்டு ஆலமரத்தடியில் தென்முகச் செல்வராய் வீற்றிருந்தருளினன். நூலும் தோற்றுவித்தருளினன். அக் குறிப்பே ஆல் + அமர் + அம் = ஆலமரம் கண்டு என ஓதப்பட்டது. உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்துணர்ந்து அப்பொழுதே தோன்றும் அருளாளர் நக்கர். நக்கர் – தோன்றுபவர். அவர் சிவபெருமானாவர். அவரைத் திருமுறை வாயிலாக வழிபட்டு அடியார் நடுவே யிருக்கும் பயன் கொள்வார் மிக்கவராவர். ஐவகைத்துன்பமாவன: தொன்மை இருள், செருக்கு, அவா, ஆசை, சினம் என்பன. இவை காரியத்தைக் காரணமாக மொழியப்பெற்றன. இவ்ஐவகைத் துன்பத்தினுக்கே தக்கவராய் அவற்றுள் ஆழ்ந்து கண்டதே கண்டு கொண்டதே கொண்டு செல்வார் பிறப்புச் சூழலில் தாழ்ந்து கிடக்கும். முறையினராவர்.

(அ. சி.) அக்கணம் நின்றதோர் – ஆன்மாவிற் பொருந்தியதோர். ஆலமரம் கண்டு – ஆல் அமர் அம் கண்டு – சிவத்தைக் கண்டு. நக்கண – வெளிப்படையாக. நடுவே – நடுநிலையுடன். அஞ்சு துயரம் – அஞ்சு துன்பம்: (அவித்தை, அஸ்மிதை, இராகம், துவேஷம், அபினிவேசம..

xxxxx

—subham—

Tags- தினையும் பனையும் திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை-11, திருமந்திரம்

More (Atomic Science) Secrets from Vishnu Sahasranama -14 (Post No.13,243)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,243

Date uploaded in London – –   15 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

In one of the articles already posted here we saw what is big and small in Hindu scriptures . When the world was talking about earth appearing around 4000 BCE, Hindus sang about God who is Sahsra Koti Yugadhaarine i.e.ten thousand million Yugas(multiplied by 4,32,000 years). We know the famous quotation,

In the Katha Upanishad (1.2.20) it is said:

anor aniyan mahato mahiyan

atmasya jantor nihitah guhayam

tam akratuh pasyati vita-soko

dhatuh prasadan mahimanam atmanah.

Aṇor aṇīyān mahato mahīyān: “The Lord is smaller than the smallest and greater than the greatest.

Tamil Saint Manikkavasagar also sang about million galaxies in his Tamil Hymn Tiruvasagam. He used the Upanishad style and said

God (Shiva) is

Older than the oldest and newer than the newest.

He lived 1500 years ago.

(About the age of Manikkavasagar, Kalidasa, Adi Sankara and Rig Veda, please read my research articles).

xxxx

Where is the Anu (atom) in Vishnu Sahasranama (VS)?

Anuh- Word or Naamaa No.835

One who is extremely subtle.

Mundaka Upanishad says,

Esonur aatmaa cetasaa veditavyah – this subtle Atmn is to be comprehended by the mind.

This shows the word ANU is used from Vedic days.

xxxx

suukshma- word number 457

One who is subtle because He is without any gross causes like sound etc. The causes of the grossness of the succeeding elements from Aakaasa downwords is sound and other objects.

Then again Adi Shankara quotes Mundakopanishad 1-1-6

Sarvagatam susuukhmam – He who is very subtle and has entered into everything.

xxxx

But the Big Question is whether the Hindus ever understood the meaning of ATOM as we understand it today?

Yes, they did understand and even sang about splitting of atom; they used it as a simile.

According to Hindu linguistics, a simile must be used only if  it can be understood by the common man. No ancient Sanskrit or Tamil poet would have used biblical phrases David and Goliath or Doubting Thomas.

Anu is used by all Sanskrit and later Tamil poets.

Tirumular, who lived around 8th century CE used the word and sang about splitting it in his work Tirumanthiram,

.

“The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom”

Spiritual Meaning:

 The inner core energy of the primordial atom exists within every individual atom. A yogi with true wisdom approaches the primordial atom through splitting the individual atom in to one thousand atoms. Thus a Kundalini Yogi merges his soul energy with the cosmic energy by realizing that universe is a conglomeration of individual atomic particles.

xxxx

There is an appendix to the Tamil Veda Tirukkural and it is called Tiruvalluva Maalai. There Tamil Poetess Avvaiyaar , while praising the greatness of Valluvar said,

He has put so much into this book as if one splits an atom and places seven oceans into it.

Another poet by name Idaikkadar replaced the word atom with mustard seed.

In short, splitting something and placing or creating a lot of energy is known to Hindus for thousands of years.

Tirumular in his hymns also speaks about splitting a cow’s hair into many thousand parts.

“Take one piece of cow’s hair and cut it into 100

Parts, then take one part of it and again cut it into

1000 parts, then take one part from that and again

cut it into another 10000 parts. The remaining 1 part

from those 10000 parts will resemble the size of the

Atom (Anu in Tamil)”.

This may not be exactly same in today’s Nuclear science book. But Tirumular did not write a science book or article. He wanted to explain something spiritual. But the simile he used shows what can be done with the smallest particle — ANU in Sanskrit, atom in English. Even the Greeks who gave us the word atom did not use the word with the meaning we use it today in science books.

Lord is Atom-Within-Atom

The Lord is the Beginning of all,

He is the Atom-within-the-atom;

Divide an atom within the atom,

Into parts one thousand,

They who can thus divide

That atom within the atom

May well near the Lord,

He, indeed, is the Atom-within-the-atom.– Tirumanthiram

xxxx

Aprameyah – word No.46

All the above examples such as mustard seeds, cow’s hair are only for laymen. The word Aprameyah is explained by Shankara as follows,

One who is not measurable or understandable by any of the accepted means of knowledge like sense perception, inference etc. even the scriptures cannot reveal Him directly.

xxxx

Tvastaa – word No.52

He who makes all beings shrunken at the time of cosmic dissolution. This explains the Big Crunch theory.

xxxx

Mahaadyudtih – word No.176

When we read books on astronomy, we see everything is explained as light or light emitting sources; in the pictures also, we see them as brilliant shining objects.

Shankara says in his commentary,

One who is intensely brilliant both within and without.

Brhad Aranyaka Upanishad says  4-3-9,

Svayam jyotih one who is self illumined

Jyotishaam jyotih- one who illumines the brilliance of all brilliant entities.

—- subham—-

Tags- Vishnu Sahsranama, Atom, Anu, Tirumular, Atomic science,  Tirumanthiram, splitting hair