கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்! (Post No13,221)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.221

Date uploaded in London – — 9 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 10-5-2024  அக்ஷய த்ரிதியை 

அக்ஷய த்ரிதியை – சிறப்புக் கட்டுரை

கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்!

ச.நாகராஜன்

கிருஷ்ண ரகசியம்!

கிருஷ்ணர் தனக்குப் பிடித்தமான பல இரகசிய விஷயங்களை தகுதி உள்ளவர்களிடம் அவ்வப்பொழுது கூறியுள்ளார். இந்த ரகசியங்கள்.

நம் வாழ்வில் முன்னேறுவதற்கான ரகசியங்கள்.

இதில் கிருஷ்ண பஞ்சமி என்பது கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களாகும்.

கிருஷ்ண பஞ்சமி

கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்கள் – கிருஷ்ண பஞ்சமி!

 மஹாபாரதத்தில் ஆஸ்வமேதிக பர்வத்தில் (அத் 92) வரும் ஒரு விஷயம் கிருஷ்ணருக்குப் பிடித்த ஐந்து தினங்களைப் பற்றிக் கூறுகிறது.

அமாவாசை, பௌர்ணமி தினங்களும் அவற்றை அடுத்து வரும் த்வாதசி தினங்களும் ச்ரவண நக்ஷத்திர தினங்களும் ஆக இந்த ஐந்து தினங்களும் கிருஷ்ண பஞ்சமி என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஐந்து தினங்களும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான தினங்களாகும்.

பர்வத்வயம் சா த்வாச்யௌ ச்ரவணம் ச நராதிப |

மத்பஞ்சமீதி விக்யாதா மதிப்ரியா ச விசேஷத: ||

அக்ஷய த்ருதியை

அடுத்து மிக முக்கியமான விஷயங்கள் நடந்தது அக்ஷய த்ரிதியை தினத்திலே தான்.

அவற்றில் மூன்று பிரதான விஷயங்களை இங்கு பார்ப்போம்.

மஹாபாரதம் இயற்ற ஆரம்பித்த தினம்

மஹாபாரதத்தை இயற்றுமாறும் அதற்காக கணபதியை த்யானம் செய்யுமாறும் பிரம்மா வியாஸரிடம் கூற அவர் விநாயகரை தியானித்தார்.

விநாயகர் அவர் முன் தோன்றி மஹாபாரதத்தை எழுதுவதாகவும் ஆனால் தனது எழுதுகோல் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்குமாறு அவர் ஸ்லோகங்களைச் சொல்ல வேண்டும் என்றும் வியாஸரிடம் நிபந்தனை விதித்தார். வியாஸர் யோசித்தார். ‘சரி’ என்று அந்த நிபந்தனைக்கு ஒத்துக் கொண்ட வியாஸர், விநாயகரை நோக்கி, “ஆனால் பொருளைப் புரிந்து கொண்ட பின்னரே எழுத வேண்டும்” என்று எதிர் நிபந்தனை விதித்தார்.

விநாயகர் புரிந்து கொள்ளக் கஷ்டமான ‘கூட ஸ்லோகங்கள்’ என்று கூறப்படும் புதிர் ஸ்லோகங்கள் 8800-ஐ வியாஸர் அவ்வப்பொழுது இயற்றவே அவற்றின் பொருள் இன்னதென விநாயகர் யோசிக்கலானார். அப்போது வியாஸர் இன்னும் பல்லாயிரம் ஸ்லோகங்களை மனதில் கவனப்படுத்திக் கொண்டார்.

இப்படியாக இயற்றப்பட்ட மஹாபாரதத்தின் மொத்த ஸ்லோகங்கள் அறுபது லக்ஷம் ஸ்லோகங்கள். அவற்றில் முப்பது லக்ஷம் ஸ்லோகங்கள் தேவலோகத்தில் நின்றன. பதினைந்து லக்ஷம் ஸ்லோகங்கள் பிதுர்லோகத்திலும் பதினான்கு லக்ஷம் ராட்சஸர்கள், யக்ஷர்களிடத்திலும் மீதி ஒரு லக்ஷம் ஸ்லோகங்கள் மனிதர் வாழும் பூமியிலும் நின்றன.

இந்த மஹாபாரதம் இயற்ற ஆரம்பிக்கப்பட்ட தினம் அக்ஷய த்ருதியை தினம்.

செல்வம் வளர்ந்து கொண்டே இருக்கும் தினமான இதில் ஆரம்பித்த எதுவும் அழியாது. காலம் செல்லச் செல்ல புகழைப் பெறும்.

மஹாபாரதமே இதற்குச் சரியான எடுத்துக்காட்டாகும்.

சூரிய அனுக்ரஹமும் ஶ்ரீ கிருஷ்ணரின் அனுக்ரஹமும்

வனவாசத்தின் போது தன் நிலையை எண்ணி வருந்திய திரௌபதி சூரிய பகவானை நோக்கி வேண்ட சூரியன் அக்ஷய பாத்திரத்தை அவளிடம் தந்து அழியாத உணவைத் தரும் பாத்திரமாக அதை அளித்தான்.

துரியோதனனால் தூண்டப்பட்ட துர்வாச முனிவர் திடீரென்று ஒரு நாள் பாண்டவர் இருக்குமிடம் வந்து தான் அதிதியாக வந்திருப்பதைத் தெரிவித்து உணவருந்த ஸ்நானம் செய்து விட்டு வருகிறேன் என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்.

உணவு நேரம் முடிந்து அக்ஷய பாத்திரத்தை சுத்தப்படுத்தி வைத்த திரௌபதி திகைத்தாள். கண்ணனை வேண்ட அவர் முன் தோன்றிய கண்ணபிரான அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வருமாறு திரௌபதியிடம் கூறினார்.

திரௌபதி கொண்டு வந்த அக்ஷய பாத்திரத்தில் ஒரு ஓரத்தில் ஒரே ஒரு அரிசி மணி இருக்க அதை உண்டார் கிருஷ்ணன். அனைவரது வயிறும் நிரம்பியது அந்தக் கணத்திலேயே. திருப்தியுடன் துர்வாசர் சென்றார்.

சூரியன் அக்ஷய பாத்திரத்தை திரௌபதியிடம் அளித்த தினம் அக்ஷய த்ருதியை தினம். ஶ்ரீ கிருஷ்ணர் அக்ஷய பாத்திரத்திலிருந்து ஒரு மணி அரிசியை உண்டு அனைவரையும் திருப்திப் படுத்தியதும் அக்ஷய த்ருதியை தினம் தான்.

குசேலரின் ஏழ்மை நீங்கிய தினம்

பால்ய சிநேகிதனான குசேலர் கிருஷ்ணன் அரசனாக அரசாள்வதைக் கேள்விப்பட்டு மகிழ்ந்து அவனைப் பார்க்கக் கிளம்புகிறார். அவரது மனைவி வெறும் கையுடன் அவரைப் பார்க்கப் போகலாமா என்று கேட்டு சிறிது அவல் கொண்ட மூட்டையை அவரிடம் தருகிறாள்.

கஷ்டப்பட்டு நண்பனின் அரண்மனையை அடைந்த குசேலர் கிருஷ்ணரைப் பார்த்து நலம் விசாரிக்க குசேலரைக் கட்டி அணைத்த கிருஷ்ணர் எனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்?’ என்று ஆவலுடன் கேட்டார்.

அவல் மூட்டையை சற்று வெட்கத்துடன் தந்தார் குசேலர். ஆவலுடன் அதைப் பிரித்த கிருஷ்ணர் ஒரு பிடி அவலை வாயில் போட்டுக் கொண்டார்.

ஏழை குசேலரின் சிறு குடில் அந்தக் கணமே மாட மாளிகை ஆனது. அவரது மனைவி குழந்தைகள் பட்டாடை மினுமினுக்க செல்வச் செழிப்புடன் ஆனார்கள்.

இப்படி குசேலருக்கு கிருஷ்ணன் அனைத்தும் அருளிய தினம் அக்ஷய த்ருதியை தினம் தான்.

இந்த தினத்தின் சிறப்புக்கள் ஏராளம் உண்டு.

அழியாத செல்வத்திற்கும் நீடித்த புகழிற்கும் காலத்தை வென்ற வெற்றிக்கும் நாம் எதையும் ஆரம்பிக்க வேண்டிய தினம் அக்ஷய த்ருதியை தினமே!

***

More ( History ) Secrets from Vishnu Sahasranama -8 (Post No.13,220)


nara INDRA modi

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,220

Date uploaded in London – –   8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

PART 8

History facts in Vishnu Sahasranama (VS) continued…..

Upendrah – Word No. in VS 151

Mahendrah – – Word No. in VS 268

Adi Shankara says ,

Upendra : One born as the younger brother of Indra Or one who is greater than Indra. Harivamsa 2-19-46 says

Mam’opari yathendras tvam sthaapito gobhir isvarah

Upendra iti Krsna tvaam gaasyanti bhuvi devataah

The cows have established Thee superior to me as my master. Therefore, O Krishna, the Devas will sing about Thee, addressing Thee as Upendra.

Mahendra – the Great Lord

My comments

Indra is in the names of millions of Indians. My friends’ names are Rajendran, Nagendran, Gagendran (My BBC Nepali colleague) etc. From Rajendra Prasad, First President of India to Narendra Modi, current PM of India, we have Indra in their names. Most famous Hindu speaker Swami Vivekananda’s birth name is Narendra. We find this name in several kings’ names including Mahendra Pallava (600 CE).

We find the word Indra throughout South East Asia. This is more common in Tamil speaking countries.

xxxx

Dhananjayah -– Word No. in VS 660

Arjuna is called so because by his conquest of the kingdoms in the four quarters he acquired great wealth/Dhanam. Arjuna is a Vibhuuti, a glorious manifestation of the Lord, according to the statement in Giitaa 10-57

Paandavaanaam Dhananjayah- among the Pandavas, I am Dhananjaya .

My comments

It is a common name among Chettiyaars (Vaisyas/ business men ) in Tamil Nadu. Puranas about Madurai say that a Chettiyaar by name Dhananjayan  travelling in night saw a mysterious light in the Kadamba Tree forest. When he watched secretly, he saw Devas under the leadership of Indra were worshipping a Shiva Linga. Very next day he reported to Pandya king and then he built a temple over the Linga and shifted his capital from nearby Manalur to Madurai. There came the world-famous Madurai Meenakshi Sundareswar Temple.

40 years ago, AA book of London , listed it among 100 wonders of the world. In 1987, I was walking along Tottenham Court Road in London and entered a book shop. When I browsed through the Automobile Association (AA) of Britain book, I was surprised to see my home town’s temple. Even today Dhanajaya’s statue can be seen in Madurai Temple. People mistook him for Arjuna. Actually, he was the Chettiyaar who discovered Madurai.

xxxx

Guptah – Word No. in VS 545

One who is not an object of words, thought etc. katha Upanishad says 1-3-132

Esa sarvesu bhuutesu gudhotmaa na prakaasate—being hidden in all objects, this Atman does not shine.

My comments

Appar and other great saints also said it in Tamil hymns. He is like fire in the wood, butter in the milk etc.

Chitra gupta , Yama’s accountant, is not a man. It is the computer account of our thoughts and deeds ; Chitra= picture, Gupta= hidden. Whatever we do in our life time is recorded around us like Super computer which can do billion calculations every minute. So, when our soul appears before Yama, it shows our account. Depending upon our bank balance of Punya and Paapa, he sends us to heaven or Hell. Egyptians showed it in a different way. God takes one’s heart and weighs and decides.

But in Indian History Gupta dynasty is praised sky high as Golden Age of Indian History. Those Hindu kings ruled like Rama . Fa-hein , Chinese traveller, said no one locks the door in India during night time; there were no thieves. He visited India during Gupta rule. Gold coins were minted in lakhs. Now as soon as one enters British Museum in London (Numismatics Section), one can see beautiful gold coins of Guptas. They were great rulers and took Indian culture to distant  lands. From 320 CE they ruled for 400 years.

xxxx

Damodarah – Daman – – Word No. in VS 367

Dhaama- – Word No. in VS 211

One who has very benevolent – Udaara—mind because of disciplines like self control (Dama).

Then Shankara quotes from Udyoga Parva of Mahabharat with long explanation.

Dhaama- brilliance; Gita says ,

Param brahma param dhaama – the Brahman is the ultimate support.

My comments

Rudra daaman was a great king who ruled vast areas from Gujarat to Afghanistan. His Sanskrit inscription of 150 CE is very famous .

Daaman also means rope, conquering, taming.

2000 year old Sangam book Purananuru has a poet with this name (Damodara).

xxx

Still we have more words : Pratardana,Varthamana, Manetho, Sumuka, Sammata, Samitnjayah, Purandarah ,Abu , Chaturdhamstraya , Sargon , Sri Vijaya .

TO BE CONTINUED…………………….

Tags- More History Secrets , Vishnu Sahasranama- 8 , Gupta, Daman, Dhananjaaya,  Damodara

மூத்திரம் குடிப்பது நல்லது! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 5 (Post No.13,219)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,219

Date uploaded in London – –   8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

மூத்திர சிகிச்சை/  Urine Therapy

இந்தியப் பிரதம மந்திரி மொரார்ஜி தேசாய் 99 வரை வாழ்ந்தார். அவர் தினமும் தன்னுடைய சிறு நீரைப் பருகியதை பட்டவர்த்தனமாக சொல்லியதோடு மருந்து வாங்க முடியாத பல லட்சக் கணக்கான மக்களுக்கு சிறுநீர் மருத்துவம் சிறந்த மருந்து என்றும் சொன்னார். உடனே உலகமெங்கும் இது பற்றி விவாதிக்கப்பட்டது.

உலகின் பல பகுதிகளிலும் மக்கள் தன்னுடைய சிறுநீரை குளிக்கவோ, குடிக்கவோ பயன்படுத்துவதும் வெளியானது . புற்றுநோய் கண்ட இரண்டு பெண்மணிகள் தன்னுடைய சிறுநீரைக் குடித்து நோயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததும் மருத்துவ சஞ்சிகைகளில் உள்ளது.

ஆயுர்வேத நூல்களிலும் இது இருக்கிறது. ஆனால் அவை காலத்தால் பிற்பட்ட சம்ஸ்க்ருத நூல்கள் . சிறுநீரை அமுரி என்றும் சிவாம்பு (சிவனுடைய நீர்) என்றும் சொல்லுவார்கள் . சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் திருமூலரும் சிறுநீர் மருத்துவத்தை புகழ்ந்து பாடியிருப்பது இது உண்மைதான் என்று காட்டுகிறது

1971ம் ஆண்டில் நிலவுக்குச் செல்லும் மனிதர்களுக்காக மனித சிறுநீரை விரிவாக ஆராய்ந்ததில் அதன் ரசாயனத் தண்மை  தெரிந்தது.அதில் விஷம் எதுவும் இல்லை. ஆயினும் அதிக அளவு உள்ளே செல்லக்கூடாது என்பது தெளிவு.

சிறுநீரில் முதலில் வரும் நீரை விட்டுவிட்டு மத்தியில்/ நடுவில் வெளியேறும் நீரை மிகச் சிறிதளவு குடிக்கலாம் என்று திருமூலரும் சொல்கிறார். இதனால் நோய்கள் வருவதைத் தடுக்கலாம். நரை, திரை, மூப்பு வருவதற்கும் தடை போடலாம். மொரார்ஜி தேசாய் தினமும் யூரின்  (Urine) குடித்து, 99 வயது வரை நோய் நொடியின்றி வாழ்ந்தது இதற்குச் சான்று பகரும்.

முதலில் திருமந்திரம் ஆங்கில மொழிபெயர்ப்பையும் பின்னர் திருமூலர் பாடல்களையும் அவற்றின் விளக்கத்தையும் காண்போம் .

இந்துக்கள் பசுமாட்டின் மூத்திரத்தை ஒரு கையில் ஏந்தி குடிப்பதைக் காணலாம். அரேபியா பாலைவனங்களில் மக்கள் ஒட்டக மூத்திரத்தையும் பாட்டில்களில் அடைத்து விலைக்கு விற்கின்றனர். அமெரிக்கப் பழங்குடி மக்களில் ஒரு சாரார் தினமும் மூத்திரத்தில் குளிப்பதை 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதி வைத்துள்ளனர் . ஆகவே மூத்திரம் என்றவுடன் அருவருப்பு வேண்டாம். முடிந்தால் குடியுங்கள்.

திருமூலர் அருமையான உவமையுடன் துவங்குகிறார். கடல் நீர் உப்பு நீர் கடலுக்குப் பக்கத்தில் எவ்வளவோ (திருச்செந்தூர் நாழிக்கிணறு) நன்னீர் ஊற்றுகள் உள்ளன.. இது போலத்தான் சிறுநீரும் என்கிறார் மூலர். அதாவது சிறுநீர் உப்புக்கரிக்கும்; ஆயினும் அதில் அமுத நீர் உள்ளது. கடலுக்குப் பக்கத்தில் ஊற்று  தோண்டி நல்ல நீர் எடுப்பது போல இதை எடுத்துக் குடியுங்கள் என்கிறார்.

அவர் மேலும் சொல்கிறார்; ஒரு நாளைக்கு ஒருமுறை சரியான விதத்தில் உட்கொண்டால், வாழ்க்கையில் கஷ்டம் என்பதே வராது.

இதை ஓராண்டு உட்கொண்டால் உடம்பில் தேஜஸ் /ஆன்மீக ஒளி பிரகாசிக்கும். தீங்கு எதுவும் வராது; பிராணாயாமப் (சுவாச) பயிற்சிகள் சித்தியாகும். பிராணவாகரத்தில் மனது ஒருமுகப்படும். மேனியோ பொன்மேனியாகும்  ஒருநாளைக்கு 100 மிளகு அளவு மட்டுமே பருக வேண்டும். வியாதி என்பதே வராது .

மருந்தே என்ற தேவையே எழாது.

இதைத் தலையில் தேய்த்துக்கொண்டால் நரைதிரை நீங்கும். கரு மயிர் தலைக்கும். விஷயம் தெரியாதவர்கள் சீ  சீ மூத்திரம் என்பர்.

நடுவில் வரும் சிறுநீரிக் குடிப்போர் சாகா  வரம் பெறுவார். உடலிலுள்ள சுருக்கங்களும் நரைத்த முடியும் நீங்கும்.

ஓ, நீண்ட குருந்தால் உடைய அழகிய பெண்ணே ! ஒரு ரகசியம் சொல்கிறேன் கேள் !!

இந்த சிறுநீரில் மஞ்சள் , மிளகு, வேம்பு, நெல்லிக்கனி சேர்த்து பயன்படுத்து. கூந்தல் கரு கரு என்று வளரும்; பள பள என்று பிரகாசிக்கும்

இது சக்தி  மருந்து.சொர்க்கலோக டானிக்;சிலருக்கு இது தெரியும். இதன் மஹிமையை வார்த்தைகளில் வருணிக்க மு டியாது

I THINK AMURI BECAME URINE IN ENGLISH.

திருமந்திரம்

அமுரிதாரணை – சிறுநீர் சிகிச்சை

845. உடலிற் கிடந்த உறுதிக் குடிநீர்க்

கடலிற் சிறுகிணற்று ஏற்றம்இட் டால்ஒக்கும்

உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்

நடலைப் படாதுயிர் நாடலும் ஆமே.

AMURI DHARANA = URINE THERAPY

845: Effect of Urine Therapy in Yoga

The urinary liquid within the body

Is unto a picot of small well;

Dipped into sea vast

If that is fed once a day

In way appropriate,

Life will know distress none;

Well may you seek it.

பொருள் : சிறுநீரானது கடலின் அருகே சிறு கிணறு தோண்டி ஏற்றமிட்டு இறைத்தலை ஒத்திருக்கும். உடலில் வேறொரு வழியாகக் போவதை மேலே செலுத்தினால் உயிர் வருந்தாமல் பாதுகாக்கலாம்.

846. தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்

ஒளிதரும் ஓராண்டில் ஊனம்ஒன்று இல்லை

வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்கும்

களிதரும் காயம் கனகமது ஆமே.

846: Goodly Effects of Amuri Dharana

If this divine water clear is inside taken

The body glows in a year;

No harm befalls it;

Prana control will realised be;

The mind will center in Letter “A” (Pranava)

And will uplifted be

And the body into gold will turned be.

A IN TAMIL IS NUMBER 8; SOME PEOPLE TAKE IT AS PRANAVA –OM

பொருள் : தெளிந்த இந்தச் சிவநீரைக் கொண்டால் ஓராண்டு சாதனத்தில் ஒளியைக் காணலாம். கெடுதல் இல்லாதது ; எட்டு ஆண்டுகளில் மனம் மேலே நிற்கும். மகிழ்ச்சியை விளைவித்துக் கொண்டிருக்கும். உடம்பு பொன்போன்று பிரகாசிக்கும். சிவநீர் – அமுரி.

847. நூறும் இளகும் நுகரும் சிவத்தினீர்

மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள்

தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்

மாறும் இதற்கு மறுமயி ராமே.

847: Consume 100–Pepper Measure (drops) a Day

Drink of this divine-water

A hundred pepper measure

No medicine beyond this, know men;

But rub it clear on crest of head

Your greying vanishes away

And fresh black hair shoots forth.

பொருள் : உயிரை உடம்பில் நீடிக்கச் செய்ய இதைவிட மேலான மருந்து வேறில்லை. மக்கள் இச் சூட்சுமத்தை உணர்ந்து தெளிந்து சிரசில் பாயச் செய்து கொண்டால் நரைத்த ரோமம் கறுப்பாகும் நூறு மிளகு அளவு எனக்கொண்டு ஒருநளைக்கு ஒரு மிளகு விழுக்காடு நூறு நாளைக்கு உண்ணுதல் வேண்டும் எனவும் கூறுவர்.

848. கரையரு கேநின்ற கானல் உவரி

வரைவரை என்பர் மதியிலா மாந்தர்

நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு

நரைதிரை மாறும் நமனும்அங்கு இல்லையே.

848: Only the Ignorant Dissuade the Practice

The water on the banks of body

Is unto a mirage on the sea

Away, Away, from it-thus they say

The men who know not truth;

They who can drink the midstream

Rid of foam and wave

That arises first and last,

Will immortal be;

And all greying and wrinkling disappears.

பொருள் : அறிவில்லாத மக்கள் சிறுநீர்க் குழாய் அருகில் உள்ள சுக்கிலத்தைக் கழிக்க வேண்டும் என்பர். சத்தற்ற முதல் நிலையையும் முதிர்ந்த நிலையையும் அகற்றி அருந்த வல்லார்க்கு உரோமம் நரைத்தலும் தோல் சுருங்குதலும் மாறும். அவ்வாறு நீரை உடம்பில் அமைக்க வல்லார்க்கு எமபயம் இல்லையாம்.

849. அளக நன்னுத லாய்! ஓர் அதிசயம்!

களவு காயம் கலந்த இந்நீரில்

மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்

இளகும் மேனி இருளும் கபாலமே.

849: Effect of Mixing Ingredients

Oh! damsel of flowing tresses and slender forehead!

Hear you a miracle this!

In this Water hidden in the body

Mix pepper, amla, turmeric, and neem

Soft will your body be;

And dark thine hair on head.

பொருள் : அழகிய கூந்தலையுடைய பெண்ணே ! ஒரு அதிசயம்!! இந்நீர் சிரசை அடையுங்காலத்து, மிளகு, நெல்லிப் பருப்பு, கஸ்தூரிமஞ்சள், வேப்பம் பருப்பு ஆகியவற்றை அரைத்துத் தலையில் தேய்த்து முழுகி வருவீராயின் உடம்பு மேன்மையாவதோடு உரோமம் கருமையாகும்.

XXXXXX

850. வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும்

நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான்

ஆதி மருந்தென்று அறிவார் அகலிடம்

சேதி மருந்திது சொல்லஒண் ணாதே.

850: Greatness of Amuri Dharana

He the Nandi called it: the Hero’s recipe, Heaven’s exlixir, and Sakti’s potion

Some know it as the Medicament Primus

It is specific that is of radiant light

Hard to describe to world at large.

XXXXX

பொருள் : வீரியத்தால் உண்டானபடியால் வீர மருந்தென்றும், ஆகாய வெளியில் சோதியாக அமைவதால் தேவர்கள் மருந்தென்றும் பெண்ணால் அடையப்படுவதால் நாரிமருந்தென்றும் என் குருநாதன் அருளிச் செய்தான். இதனைத் தொன்மையான மருந்தென்று யோகியர் அறிவர். இது விரிந்த சோதி மயமானது. இதனைச் சாமானியருக்குச் சொல்லலாகாது.

—SUBHAM—

TAGS- மூத்திரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை  5, மூத்திர சிகிச்சை, Urine Therapy, சிறுநீர், அருந்தலாமா, அமுரி, சிவ நீர்

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 8 (Post No.13,218)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,218

Date uploaded in London – –   8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxxPART 8

111. Mucuna pruriens (L.) DC.

111.முசுனா ப்ரூரியன்ஸ்

உத்தரபிரதேச மக்கள் பயன்படுத்தும் பாம்புக்கடி மருந்து .

XXXX

112. Tamarindus indica L.

டாமரின்டஸ் இண்டிகா/ புளிய மரம் 

மஹாராஷ்டிரா ஜல்காவன் வட்டார மக்கள் பா ம்புக்கடிக்கு புளிய மர பொடியை உபயோகிக்கின்றனர். (இல்லையா விதையா என்று சொல்லப்படவில்லை).

பொடியைத் தேனில் குழைத்து ஒரு நாளைக்கு மூன்று தடவை சாப்பிடுகின்றனர்.

XXXX

113. Uraria picta (Jacq.) Desv. ex DC.

113. யூராரியா பிக்ட்டா

மேற்கு வங்க புரூலியா வட்டார பழங்குடி மக்கள் இலையின் மசியலை ஒரு நாளைக்கு 2 முறை வீதம் தருகிறார்கள் .அவர்கள் இந்த மூலிகையை மஹாதேவ ஜடா அல்லது ஈஸ்வர ஜடா என்று அழைக்கின்றனர்.

Malayalam: Muvila • Marathi: Pitvan, Prisniparni, Ranganja • Oriya: Isworojota • Sanskrit: Andhriparni, Chitraparni, Sinhapuchchi • Tamil: Sittirappaladai, Chittirappalatai • Telugu: Kolkuponna

சித்திர பாலாடை

(தமிழில் சித்திர பாலாடை என்றால் வேறு தாவரத்தைக் காட்டுகிறா ர்கள் . இப்படி பெயர்க்க குழப்பம் நிறைய மூலிகை விஷயத்தில் இருப்பதால் கவனம் தேவை )

XXXX

F32. Family: Gentianaceae 

114. Enicostemma axillare (Lam.) Raynal.

குடும்பம்- ஜென்டியானேசி

114.எனிகாஸ்டெம்மா ஆக்சிலாரி / வெள்ளறுகு

கன்யாகுமரி ஜில்லா மக்கள் தவற மசியலை பாம்புக்கடித்த இடத்தில் வைத்துக் காட்டுகிறார்கள்

XXXXX

F33. Family: Hypoxidaceae 

115. Curculigo orchioides Gaertn.

குடும்பம் ஹைபோக்சிடேசி

கார்குலீகோ ஆர்க்கியோ ஐடெஸ்

வங்கதேச , உத்தர பிரதேச மக்கள் தண்டு  அல்லது வேரைப் பயன்படுத்துகின்றனர்.

XXXX

F34. Family: Lamiaceae 

116. Anisomeles malabarica R. Br. பேய் விரட்டிபெருந்தும்பை பேய்மிரட்டி

குடும்பம் லாமியேசி

116.அனிசோமேலிஸ் மலபாரிகா

கன்யாகுமரி, சேலம் ஜில்லா குமரகிரி மக்கள் இலை மசியலையோ சாற்றையோ பாம்பு கடித்த இடத்தில் அப்புகின்றனர்.

XXXXX

117. Clerodendrum serratum (L.) Moon

க்ளியோடென்ரம் செர்ராடம்

மத்திய பிரதேச ரேவா ஜில்லா மக்கள் இலையை எண்ணெய் அல்லது வெண்ணெயில் கொதிக்கவைத்து களிம்பு செய்து தடவுகின்றனர்.

XXXX

118. Hyptis suaveolens (L.) Poit.

ஹிப்டிஸ் சுவாவியோலென்ஸ்

உத்தர பிரதேச மக்கள் வன துளசி என்ற பெயரில் இந்த மூலிகையைப் பயன்படுத்துகின்றனர்.

XXXX

119. Leucas aspera (Willd.) Link

லூகஸ் ஆஸ்பெரா

ஆடு மாடுகளைப் பாம்பு கடித்தால் கர்நாடக சிருங்கேரி ஒரிஸ்ஸா, ஆந்திர மக்கள் மிளகு, பூண்டு ஆகியவற்றுடன் சேர்த்து இலை மசியலை ஆடு மாடுகளின் மூக்கில் துப்புகின்றனர். கட்டே தும்பே என்று கன்னடத்தில் பெயர்.

XXXX

120. Leucas capitata Desf.

லூகஸ் கேபிடேடா

பாகிஸ்தானில் இஸ்லாமாபாத் வட்டார மக்கள் பயன்படுத்தும் மூலிகை இது.

XXXX

121. Leucas cephalotes (Roth) Spreng.

லூகஸ் செபலோடஸ்

உத்தராஞ்சலில் இமயமலை வட்டார மக்களும், உத்தரபிரதேச மக்களும் தாவரத்தை கஷாயம் வைத்து பயன்படுத்துகிறார்கள்

XXXX

122. Leucas linifolia (Roth) Spreng.

லூகஸ் லீனிபோலியா

அசாம் சிவசாகர் வட்டார மக்கள் உபயோகிக்கும் மூலிகை இது.

XXXX

123. Ocimum adscendens Willd.

ஆசிமம் அட்ஜெண்டென்ஸ்

மேற்குத் தொடர்ச்சி மலை வாழ் மக்கள் இந்த மூலிகையின் வேர், பட்டை ஆகியவற்றைக் கஷாயம் வாய்த்து பால், வெண்ணெயுடன் கலந்து பயன்படுத்துகிறார்கள் .

ஆசிமம் என்பது துளசி வகைச் செடியாகும்

XXXX

124. Ocimum basilicum L.

ஆசிமம் பெசிலிகம்

காளி துளசி என்ற பெயரில் உத்தர பிரதேச மக்கள் பயன்படுத்துகின்றனர்.

XXXX

125. Plectranthus rugosus Wall. ex Benth.

பிளெக்ட்ராந்தஸ்  ருகோஸஸ்

காஷ்மீர் மக்கள் இலையின் சாற்றை வெந்நீரிலோ பாலிலோ கலந்து குடிக்கின்றனர்.

TO BE CONTINUED……………………………

TAGS- பாம்புக் கடி,  200  மூலிகை மருந்துகள் , Part 8, snake bites, cure, herbs

‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு- 2 (Post No.13,217)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.217

Date uploaded in London – — 8 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 2

 ச .நாகராஜன்

144 வயது

ஒவ்வொரு மனிதரும் நீண்ட ஆயுளைக் கொண்டு வாழ முடியும் என்பது இவரது கொள்கை. தான் 144 வயது வாழப் போவதாக இவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தான் ‘ப்ரொஸ்டேட் கான்ஸரால்’ பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இதை 2013-ல் க் கண்டறிந்த தனது டாக்டர்கள் 2015க்குள் தனக்கு மரணம் நிச்சயம் என்று சொல்வதாக 2014இல் இவர் கூறினார்.

ஆனால் அந்த புற்றுநோயிலிருந்து விடுபட ஒரு விசேஷ தயாரிப்பைக் கண்டுபிடித்து அருந்த ஆரம்பித்தார். இப்போது 95 வயதைக் கடந்து விட்ட இவர் தெம்பாகத் தான் இருக்கிறார்.

கண்டுபிடிப்பு இல்லம்

இவர் ஒவ்வொரு நாளும் காலை எட்டு மணிக்கு எழுந்திருப்பார். தனது இன்னோவேஷன் ஹவுஸ் எனப்படும் கண்டுபிடிப்பு இல்லத்தில் வேலையை ஆரம்பிப்பார். மூன்று அடுக்கு மாடிக் கட்டிடமான இது டோக்கியோவில் இருக்கிறது. விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வீட்டில் கார்பன் நச்சுப்புகை அறவே கிடையாது.

அவரே வடிவமைத்துள்ள ஒரு அமைதி அறை எனப்படும் காம் ரூம்  (Calm Room) அவருக்குப் பெரிதும் உதவுகிறதாம். இந்த பாத்ரூம் ஒரு ஆணி கூட அடிக்காமல் கட்டப்பட்டுள்ளது. அறை  முழுவதும் 24 காரட் தங்கத்தால் இழைக்கப்பட்டு  வேயப்பட்டிருக்கிறது. இது ரேடியோ மற்றும் டெலிவிஷன் அலைகள் பாத்ரூமில் புகுவதைத் தடுத்து விடுமாம்.

வீட்டில் ஒரு எலிவேடரை இவர் அமைத்திருக்கிறார். அது உயரத் தூக்கிச் செல்லும் லிப்ட் என்பதை இவர் மறுத்து, “அது செங்குத்தாக மேலே செல்லும் அறை; அதில் தான் எனது சிந்தனை சிறப்பாக செயல்படுகிறது” என்கிறார்.

கண்டுபிடிப்பு நேரம்

நள்ளிரவு 12 மணியிலிருந்து கால 4 மணி வரை மிக முக்கியமான கண்டுபிடிப்பு நேரம் என்கிறார் இவர். அப்போது தான் இவருக்குப் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றிய எண்ணங்கள் தோன்றுமாம்.

6000 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடிப்பதே தனது லட்சியம் என்கிறார் இவர்!

காலை 4 மணி முதல் எட்டு மணி வரை உறங்குவது இவர் வழக்கம்.

மற்றவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நான் சிந்திக்கிறென் என்கிறார் இவர்.

மாதந்தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பேருக்கு படைப்பாற்றல் திறன் பற்றி இவர் சொல்லித் தருகிறார்.

சுஜி, பிகா, இகி 

தான் எப்படி இப்படி ஒரு மிகப் பெரும் கண்டுபிடிப்பாளராக ஆக முடிந்தது என்பதை சூத்திர பாணியில் இவர் கூறுகிறார்.

அது தான் – சுஜி, – பிகா – இகி!

சுஜி என்றால் தியரி அல்லது அடிப்படைக் கொள்கை

பிகா என்றால் ‘‘எ ஃப்ளாஷ் ஆஃப் இன்ஸ்பிரேஷன்’ – ஒரு கணத்தில் உள்ளத்தில் உத்வேகத்தால் எழும் ஒரு மின்னல் தோற்றம்

இகி என்றால் ப்ராக்டிகாலிடி – நடைமுறைக்கு இயல்பாக ஒத்து வர வேண்டும்.

இந்த மூன்றும் இணைந்தால் படைப்பு வெற்றி தான் என்பது இவரது கொள்கை.

அரசியல் ஆர்வம்

 அரசியலில் இவருக்கு அடங்காத ஆர்வம் உண்டு. கண்டுபிடிப்பில் ஒரு அங்கம் தான் அரசியல் என்பது இவரது கண்டுபிடிப்பு. ஆகவே 1995 முதல் டோக்கியோ மேயர் பதவியைக் குறி வைத்து இவர் போட்டியிடலானார். ஆனால் தோல்வியே கிட்டியது.

ஹாப்பினெஸ் ரியலைஸேஷன் பார்ட்டி என்ற சந்தோஷக் கட்சியின் சார்பில் ஜப்பானின் மேல் சபைக்காக இவர் போட்டியிட்டிருக்கிறார். ஆனால் அதிலும் வெற்றி பெறவில்லை.

 பாராட்டுகள் 

உலகெங்குமுள்ள அறிஞர்களும் பிரபலங்களும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

இவரது இன்னோவேஷன் ஹவுஸில் ஸ்வீடன் அரசருடன் இவர் எடுத்துக் கொண்ட படம், ஜப்பான் சக்கரவர்த்தியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ, அமெரிக்க அதிபரான ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒயிட் ஹவுஸில் எடுத்துக் கொண்ட போட்டோ உட்பட ஏராளமான புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன.

அங்கு பீத்தோவன் சிம்பனி – 5 ஐ கேட்பது இவரது வழக்கம். அந்த இசை இவருக்கு உத்வேகம் ஊட்டுகிறதாம்!

தனது கண்டுபிடிப்புகளுக்காக 41 முறை கிராண்ட்பிரிக்ஸ் விருதை வென்றிருக்கும் இவரது வெற்றிப் புராணம் மிகப் பெரியது.

நியூயார்க் நகரில் 2016ஆம் ஆண்டு ‘வாழ்நாள் தீர்க்கதரிசன விருது’ ஒன்றும் இவருக்கு அவரது 88வது பிறந்த நாளையொட்டி வழங்கப்பட்டது

 சம்பாதித்த சொத்து 

தனது கண்டுபிடிப்புகளால் உலகப் புகழ் பெற்றுள்ள இவரது சொத்தின் இன்றைய மதிப்பு 5 கோடி அமெரிக்க டாலராகும். ஒரு அமெரிக்க டாலரின் இன்றைய இந்திய மதிப்பு ரூபாய் 83.30

இவருக்கு மூன்று புதல்வர்கள் உண்டு. 

ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் இவர் பங்கேற்றுள்ளார். அமெரிக்கத் தொடர்கள் உள்ளிட்ட பல்நாட்டு தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை போட்டி போட்டு அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளன.

ஜப்பானிய டாக் ஷோக்களில் மிக பிரபலமான இவர், தனது கண்டுபிடிப்புகளை நகைச்சுவை உணர்வுடன் விவரிப்பார்.

 ‘தி இன்வென்ஷன்ஸ் ஆஃப் டாக்டர் நகாமட்சு” என்ற ஒரு நகைச்சுவையுடன் கூடிய டாகுமெண்டரி படம் இவரைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜப்பானில் உள்ள தொலைக்காட்சித் தொடர்களால் இவர் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு ஹீரோ ஆகிவிட்டார். ஆனால் ஏராளமான ஜப்பானியர்களைப் பொறுத்த மட்டில் அவர்களுக்கு இவர் ஒரு படைப்புக் கடவுளே தான்!

 உலகின் அதிசயிக்க வைக்கும் கண்டுபிடிப்பாளராகத் திகழும் இவர் அனைவருக்கும் சொல்வது : “நீங்களும் கூட புதியனவற்றைக் கண்டுபிடிக்கலாம்” என்பதே!

***

More ( History ) Secrets from Vishnu Sahasranama –7 (Post No.13,216)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,216

Date uploaded in London – –   7 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Some time ago I listed the history facts in Vishnu Sahasranama (VS). I want to give a complete picture now.

VS lists 1000+ names of Lord Vishnu. Bhishma did not say anything about history. But later kings and queens took the names from the 1000++ naamaas/names.

If one historian reads it, he will be surprised to find famous kings and dynasties, from Asoka to Choza, and from Vedic Civilization to Harappan Civilization.

Vikrami – word No.909 in VS

Vikrama means taking a stride, as also courage. So, the word means one who is greater than anyone else in these respects, according to Adi Shankara.

My comments

In India, lot of kings from Choza, Pandya and Chalukya dynasties took the name of Vikrama or Vikramaditya.

But the greatest of all is Vikramaditya who ruled from Ujjain in second century BCE. All the stories of Vikram and Vetal are based on this king. He drove out foreigners from India. In 57 BCE someone started Vikram Samvat, a new calendar.

Even Chadra Gupta II took this title.

xxxx

Aparaajitah — word No.716 in VS

One who is never conquered by internal enemies like attachment and by external enemies like Asuras, according to Adi Shankara.

My comments

Aparajita Varman was the last Pallava Ruler (885-903). The irony is he was killed by Chozas who he helped them by giving Thanjavur area. But same Aditya Choza who received it, killed him in another battle.

xxxx

Tirhakarah —word No.691 in VS

Tiirtha means Vidyaa, a branch of knowledge or skill. The Lord is called so because He is the source of 14 Vidyaas sanctioned by the Veda as also of Vidyaas outside the pale of Veda. Hayagriva (Vishnu) killed two Asuras Madhu and Kaitabha and then imparted Vedas to Brahma. For Asuras he imparted Vidyas outside the pale of Veda, according to Adi Shankara.

My Comments

We come across similar word Tirthankara in Jainism.

There were 24 of them and the last, 24th Tirthankara Varthamana Mahavira, lived around 600 BCE. Other 23rd Tirthankaras lived before them, some even say from the time of Harappan Civilization.

Tirthankara, in Jainism, a saviour who has succeeded in crossing over life’s stream of rebirths and has made a path for others to follow.

xxxx

Bahusirah- word No.115 in VS

One with innumerable heads. Purusasukta (Rig Veda) says

Sahasra sirsaa purushah- the purusa with innumerable/1000 heads.

My comments

In the Indus/Sarswathi Valley Civilization the famous Pasupati seal has many heads. We may link it to it.

The same seal has horn of buffalo. Even in Tamil we say Are you a Komban/horned fellow? Are you that big/important?

Because in the ancient world leaders only wore turbans/ horns/ crowns in later days.

Naika sringinah – 763

Not one horned is the literal meaning. But Shankara says,

One with four horns. Taittiriya Aranyaka 1-10-17 says

Catvaari srngaa trayosya paadaa

Dve siirse sapta-hastaaso sya

Tridhaa baddho vrsabho roraviiti

Mahaadevo martyaan aavisesa

-The Great Lord of the form of Vrsabha(ox) with four horns, three legs and seven arms tied in three places, has entered into human beings making sound.

Rig Veda 4-58-3 also referred to Four Horns.

Since Rig Veda and Yajur Veda were Pre Indus Valley literature, no one referred to it later.

Prof. Wilson and others date Rig Veda before 2000 BCE, that is before Harappan civilization.

Caturmurtih – 765

Adi Shankara says,

One with four aspects as Viraat, Suutraatmaa, Avyaakrta and Turiiya Or one with FOUR HORNS with colours white, red, yellow and black.

Srngi – 797

One who at the time of Pralaya (Cosmic Dissolution) assumed the form of a fish having prominent antenna.

Here also we come across horn/antenna.

In the VS, we see god as One Horned Person, Four Horned person, No horn person. All these words may not make much sense today, because hey were thousands of years old. Now we see horned people or leaders only among aborigines in the forests or hills.

Mahasrngah- word number 536

Shankara says,

One with great antenna. The Lord is called so becausewhen He took the form of fish, He played in the cosmic waters with a boat tied on its antenna. This Flood- Fish- Boat story is in all cultures and all religions

My comments

This HORN culture was in the beginning of civilization. Hinduism is such an old religion, and  we recite it every day, to remember the history that was 10,000 years ago.

VS is recited by millions of Hindus around the world ( I recite it everyday in London)

xxx

Hitler’s Swastikaa

Svastidah- 901

Svastikrt- 902

Svasti- 903

Svastibuk- 904

Svastidaksinah – 905

Svasti means auspicious.

We find Svastika seal in Indus Valley sites and in all ancient cultures. But the fact is only Sanskrit word Swastika is used in all books around the world. Only Hindus use it until this day. Hitler was misled by Max Muller gang. Since Max Muller boasted I Am German and so I am Aryan in his early writings Hitler took only two points from him. He declared himself as Aryan, the super race, and used Swastika symbol in military uniforms and German Flags. Now if Europeans see this seal they shake and shiver and wet their trousers. Numerous buildings were reconstructed because they looked like Swastika!! Such a scare.

But Tamil inscriptions and Sanskrit inscriptions have this figure and word in the very beginning.

North Indian Wedding invitations carry this even today. Temples all over India use this symbol until this day. The fact that it is used only by Hindus from Indus/Sarasvati Valley civilization to  this day, it belongs to Hindus and originated in ancient India.

xxxx

Nandah – 528

One endowed with all perfection or the word can be Aanandah meaning that in the Lord there are no joys born of sense contacts.

Chadogya Upanishad says 7-23-1,

Yo vai bhuumaatat sukham naalpe sukham asti- what is full that is happiness; in what is small there is no happiness. This is Shankara’s interpretation.

My comments

English Historians said India has no history before Nanda Vamsa and started our history only from Nanda Vamsa of 6th century BCE. After Indus Valley excavation they added that chapter as the first chapter. But never explained 1500 year gap between the two. They fooled all Indians saying they had no history for 1500 years.

Though Max Muller gang put Vedas in 1200 BCE range, archaeologists did not confirm it because there is no archaeological evidence. It is only literary evidence. In short the Western Historians treated us rubbish.

Nanda Vamsa was a mighty empire, but the Nava Nandas were Shudras; they were not Kshatriyas; they treated Brahmins as rubbish. One of the Nvna Nandas pulled the black skinned ugly looking Chanakya, half way through eating Then Chanakya  made a vow to root out Shudra Rule. He found one sturdy fellow among peacock farmers (Mura- Mayura- Maurya- Peacock). Then Chanakya helped him to raise a big army which threw down the mighty Nanda empire.

Maurya Chandra Gupta and Asoka were great peacock eaters. They killed 1000s of peacocks every day for food. Even after embracing Buddhism Asoka did not stop peacock eating. In the available inscription he says I have ordered to kill only two peacocks from today and that too may eventually stop.

So the word Nanda is that important.

xxxx

Asokah – 336

One without the six defects- sorrow, infatuation, hunger, thirst, birth and death.

My comments

We know the famous Emperor Asoka who took Buddhism to nook and corner of the world.

xxxx

Siddarthah  -252

Siddartha was the name of Gautama Buddha who was contemporary of Mahavira, 600 BCE.

xxxx

Mahendrah -268

Many Indian kings had this name. But the most famous was Mahendra Varman, the Pallava king. He was well versed in various arts and literature. He wrote famous Sanskrit Comedy Matta Vilasa Prahasanam. He tortured Appar, the Saivite saint, but later became a Saivite relinquishing Jainism. He lived around 600 CE.

To be continued……………………………

Tags – History, Kings, Vishnu Sahasranama, Horn, Indus seal, Swastika

கோரை,ஆரை,சூரை: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 4 (Post No.13,215)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,215

Date uploaded in London – –   7 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

சூனிய சம்பாஷணை

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்

ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது

நாரை படுக்கின்றாற் போலல்ல நாதனார்

பாரை கிடக்கப் படிகின்ற வாறே.    2870

  • குளத்து நீரில் பாறை போன்றவன் சிவன். 

மனம் என்னும் குளத்தில் அறிவாகிய கோரை வளர்ந்து இருக்கிறது. அதை ஆசை என்னும் ஆரைச்செடி (அறிவினை) மூடி மறைத்துள்ளது. அங்கோ ஓடும் , மீன்களைக் கொத்தி உண்ணுவதற்கு நாரை ஒன்று காத்திருக்கிறது.இந்த சூழ்நிலையில் அந்தக் குளத்தில், பக்தர்களுக்குதவ  பாறை போல சிவபெருமான் காத்திருக்கிறான் .

ஆரை, கோரை, நாரை, பாறை / பாரை என்று ‘நர்சரி ரைம்’ Nursery Rhyme போலச்  சொல்லி, சிவன் பாறை போல உதவுவான் என்கிறார். வழுக்கி விழும் மனக்குளத்தில் பாறையாக நிற்கிறார்.

பாரை = வலிமை  என்றும் பொருள் கொள்ளலாம் பாரை என்பதற்குப் பலரும் பலவிதமாகப் பொருள் எழுதியுள்ளனர்

XXXXX

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன

வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்

வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு

வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.   

வாழைமரமும், சூரை முள்ளும் ஓரித்தில் வளர்ந்திருந்தன. வாழை மென்மையானது. சூரை வலிமையானது. மக்கள் வாழையை விரும்புகின்றனர். 

வாழை- இன்பம்; சூரை – துன்பம்

இன்பமும் துன்பமும் வந்து நம்மை ஆட்டுகிறது; இதில் துன்பமே வலியது  இந்த இரண்டினையும் மனத்திலிருந்து விலக்கிவிட்டு இரண்டினையும் ஒப்ப நோக்கினால் சிவம் என்னும் இன்பத்துடன் வாழலாம்.

பகவத் கீதையில் பல இடங்களில் இதே கருத்து வருகிறது

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव च ।

निर्ममो निरहंकारः समदुःखसुखः क्षमी ॥१२- १३॥

அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |

நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||

எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய், இருக்கும் பக்தன் எனக் கினியவன்

XXXX

பெருஞ்சுடர் மூன்றிலும் உள்ளொளி யாகித்

தெரிந்துட லாய்நிற்குந் தேவர் பிரானும்

இருஞ்சுடர் விட்டிட டிகலிட மெல்லாம்

பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே.

ஞாயிறு திங்கள் தீ என்று சொல்லப்படும் பெருஞ்சுடர் மூன்றும சிவபெருமானுக்குரிய எண்பெரும் வடிவங்களைச் சார்ந்தனவாகும். ஏனைய ஐந்தும் முறையே நிலம், நீர், காற்று, விசும்பு, ஆருயிர்கள் என்று சொல்லப்படும். சிவபெருமான் அம் முச்சுடர்களையும் வடிவாகக் கொண்டிருப்பது போன்று அவற்றை ஒளிரச் செய்து அவற்றிற்கு உள்ளொளியாக நிற்பவனும் ஆகின்றான். அவனே தேவர் பிரானுமாவன்.

உலகிடை எங்கணும் எக்காலத்தும், பிறப்பால், சிறப்பால், பேசும் மொழியால், குறிக்கோளால் ஒருவரோடொருவர் மாறுபடு கின்றனர் அவற்றிடையே சிவபெருமான் கலந்து நின்று அருள்புரிகிறார் அவரவர் அன்பிற்கேற்றவாறு எளியவனாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.. அவன் பல்வேறு வகையாகக் காணப்படும் சிறிய கோரைப்புல் போல  நுண்ணியனாய்க் கலந்து அருள்புரிகிறார்

எவ்வளவோ தாவரங்கள் இருந்தும் ஆரை, சூரை , கோரை என்ற சிறிய செடி வகைகளை எடுத்து திருமூலர் கருத்து சொல்லுவதை பார்க்கையில் , அவைகளில்  மருத்துவ குணம் இருப்பதால் அவைகளை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் போலும்

XXXX

5 மரங்கள், 5 மலர்கள்

மரங்களின் பெயர்களைச் சொல்லி அந்த சங்கேத மொழியில் வேறு பல விஷயங்களைச் சொல்லுவது திருமூலரின் தனிச் சிறப்பு ; உரைகள் இல்லாவிடில் தலையும் வாலும் காணாது தவிப்போம்.

வானச் சிறப்பு

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.  105

பொருள்

மழைநீர் அமுதம் ஆகும் அதனால் பூமியில் அமிர்தம் போன்ற உணவினை வழங்கும் பயிர்கள் தழைக்கும்

கமுகு என்னும் பாக்கு மரம், தென்னை மரம் , கரும்பு, வாழை முதலியன அமிர்தம் போன்றவை மழையில்லாவிடிலோ காஞ்சிரங்காய் நிலை / வறட்சி / துன்பம் நேரிடும்

திருவள்ளுவரும் திருக்குறளில் வான்சிறப்பு அதிகாரத்தில் இதே கருத்தைச் சொல்கிறார்.      

xxxxx

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.     302

இங்கே விளாம்பழம் என்பது சிவபெருமான் ;வில்வம், கூவிளம், கிளுவை, வன்னி, விளா ஐந்தும் சிவனுக்குரிய மரங்கள் ; கண்ணுக்கு முன்னே தெரியும்  விளங்கனியைக் காணாமல் கீழே கிடக்கும் வெம்பி உதிர்ந்த காய்களையே,  கல்லாதவர்கள்  காண்கிறார்கள் ; அவர்கள் கடவுளைப் பற்றி இப்படி, அப்படி என்று எழுதி எழுதி இளைத்துப் போய்விட்டார்கள்; விண் டவர் கண்டிலர்கண்டவர்  விண்டிலர் என்ற ஆன்றோர் வாக்கியத்தை நினைவுபடுத்தும் பாடல் இது. பித்தம் தெளிய மருந்து ஒன்று கண்டேன் என்பதையும் ஒப்பிடலாம். விளங்கனி பித்ததைப் போக்கி நல்லறிவினைத் தரும்.

xxxxxx 

கொட்டியும் எட்டியும்

2861. கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை

எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையுங்

கட்டியுந் தேனுங் கலந்துண்ண மாட்டாதார்

எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறன்றே.

(ப. இ.) குளமாகிய ஆருயிரின்கண் புணர்வும் புலம்புமாகிய கொட்டியும் ஆம்பலும் பூத்துக்கிடந்தன. சுட்டியுணரப்படுவதாகிய பெயரும் வடிவும் விடத்தக்கன. ஆதலின் அவற்றை எட்டியும் வேம்பும் என உருவகித்தனர். இவையகலவே இனியதோர் வாழையும், கட்டியும், தேனும் கலந்துண்ணலாகும். இம் மூன்றும் முறையே உண்மை, அறிவு, இன்ப, வடிவ உருவமாகும்.

உலக இன்பங்களை வேண்டுவோர் எட்டிப்பழத்துக்கு ஆசைப்படுவோர் ஆவர்.

எட்டிப்பழம் பார்க்க அழகானது ஆனால் விஷத்தன்மையுடையது.  உலக இன்பங்களும் அப்படித்தான் 

கொட்டிக்கிழங்கு (Aponogeton natans) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும்.

xxxxxxx

தாமரையும் குவளையும்

2863. தட்டத்து நீரிலே தாமரை பூத்தது

குடடத்து நீரிற் குவளை எழுந்தது

விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்

குட்டத்தி லிட்டதோர் கொம்மட்டி யாகுமே.– திருமந்திரம்

இதில் பிராணாயாமப் பயிற்சியை திருமூலர் விளக்குகிறார்

(ப. இ.) தட்டத்து நீராகிய வலது மூக்கின்வழி எடுத்தலைச் செய்யும் இரேசக மூச்செனப்படும் தாமரை பூத்துளது. குட்டத்து நீராகிய இடது மூக்கில் விடுத்தலைச் செய்யும் பூரக மூச்செனப்படும் குவளை எழுந்துளது. வலது மூக்கைப் பிங்கலை யென்றும், இடது மூக்கை இடைகலை யென்றும் கூறுப. விட்டமாகிய நடுநாடியினுள் தடுத்தலெனப்படும் கும்பகஞ் செய்து அவ் வுயிர்ப்பினை அருளால் அகத்தே விளங்கிக் காண வல்லார்க்குச் சிவபெருமான் அல்லது திருவடிப்பேறு மிகஎளிதாகக் கிடைக்கும். இடையறாப் பேற்றின் பேரின்பம் எய்துவர். இதற்கு ஒப்பு கொல்லையில் தானாகவே காய்த்து அளவின்றிப் பல்கிக் கிடக்கும் கொம்மட்டிப் ( Citrullus colocynthis ) பழமாகும். அதுவே ‘குட்டத்திலிட்டதோர் கொம்மட்டி யாமே’ என்றருளினா.

(அ. சி.) தட்டத்துநீர் – வலதுமூக்கு, பிங்கலை,

தாமரை – இரேசக வாயு.

குட்டத்து நீர் – இடதுமூக்கு, இடைகலை.

குவளை – பூரகவாயு.

விட்டம் – சுழுமுனை.

விளங்க – கும்பகம் செய்ய.

XXXXXX

வேம்பும் பாம்பும்

மூங்கின் முளையில் எழுந்ததோர் வேம்புண்டு

வேம்பினிற் சார்ந்து கிடந்த பனையிலோர்

பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பாரின்றி

வேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறன்றே. 2847

(அ. சி.) மூங்கில் – மனம்.;  வேம்பு – சிவம். பனை – திரோதானம்/ மறைப்பாற்றல்.

பாம்பு – அஞ்ஞானம். வெடிக்கின்றவாறு – அறியப்படாத தன்மை.

(ப. இ.) மூங்கில் முளையாகிய மனத்தின்கண் திருவருளால் ஆருயிர்களை உயிர்விக்கவேண்டி எழுந்ததோர் வேம்பாகிய சிவன் உண்டு. சிவனார் வேம்பென்னும் மருந்தொன்றுண்டு. அது பூண்டு வகையைச் சார்ந்தது. அச் சிவனார் வேம்பினைச் சார்ந்துகிடந்தது. ஒப்பில்லாத பனையொன்று. பனையென்பது கற்பகத்தருவாகும். பனையென்பது நடப்பாகிய மறைப்பாற்றலாகும். அந்நடப்பாற்றலாற் செலுத்தப்படுவது.

அறியாமையாகிய பாம்பென்ப. அப் பாம்பாகிய அறியாமையைத் திருவருட்டுணையால் துரத்தித் தின்பாரரியராகின்றனர்.

துரத்தித் தின்றல் – நீக்குதல். அருளால் அறியாமையை நீக்குவாரின்மையால் சிவம் என்னும் வேம்பு கூடுதலின்றிப் பிரிந்துகிடக்கின்றது.

வெடிக்கின்றது – பிரிகின்றது. அறியாமையாகிய ஆணவம் பாம்பாகிய மாயையின் வழித் தொழிற்படுதலால் காரணத்தைக் காரியமாக ஏற்றிக் கூறப்பட்டது.

சிவனார் வேம்பு (Indigofera aspalathoide)

TO BE CONTINUED………………………….tags- கோரை,ஆரை,சூரை, திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 29 (Post.13,214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,214

Date uploaded in London – –   7 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

மூலிகை Part 29

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 29

310. கன்ன  வீக்கத்திற்கு


சிற்றகத்தியிலையும் வசம்பும் அரிசியும் ஒரேயளவாயெடுத்து அரைத்து பூசினால் கன்ன  வீக்கம் தீரும்.

சிற்றகத்தி (மஞ்சள் செம்பை, கறுஞ்செம்பை) – SESBANIA SESBAN

XXXX

மேகசிரங்குக்கு

சிறு செருப்படை சாறு பிழிந்துயும் ஈருள்ளியும் இடித்து ஆறு தபா வடிகட்டி சாப்பிட பேதியாகும். மேய்ச்ச்சிரங்கு முதலானவை நிவர்த்தியாகும்

XXXX

கண் ரோகமுடையவருக்கு

காலில் தேய்க்க தைலம்

சின்னியிலைச்சாறு — நல்லெண்ணெய்- வகைக்குப் படிகால்  நம்பிக்கிழங்கு விராகனிடை (கால்) இதை பொடித்து மேற்படி எண்ணெய்யில் அரைத்து யாவும் ஒன்ராய்ட் கலந்து வைத்துக்கொண்டு காலில் பாதத்தில் தேய்த்து  வந்தால் கண்ணிலுள்ள சகல ரோக மும்  நிவர்த்தியாகும் .

XXXX

குளுமை தீர

சித்தாமுட்டியை துண்டுத்துண்டாய் நறுக்கி பசும்பாலில் போட்டுக் காய்ச்சி இறுத்துப் பாலைச் சாப்பிட்டு வருவதால் சீதளம் – குளுமை – வாயு தீரும். தீ பனமுண்டாகும் .

சித்தாமுட்டி அல்லது சிற்றாமுட்டி (Sida cordifolia

XXXX

தொந்தரோகம் தீர

சிவ கரந்தையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து சரியிடை சீனி கூட்டி திருகடிப் பிரமாணம் இரு போதும் மண்டலக் கணக்காய தின்று வந்தால் தொந்தரோகம்  யாவத்தும் தீரும். அரோசகம் – இருமல் – மந்தம்- மாந்தம் – வாந்தி – இவை தீரும். பசியுண்டாக்கும்; அழகு கொடுக்கும், தேகம் பரிமளமுண்டாக்கும் , விந்து காட்டும், சஞ்சீவியென்று பெயர்.

XXXX

விஷந்தீர

சிறியா நங்கையிலையைத் தின்னும்படி அப்பியாசப்படுத்தினவர்களுக்கு தேள் கடித்தால் ஏராது .

மற்ற எந்த விஷத்தாலும் பிராண பயமில்லை . ஆயாசம் தணியும் மேனி அழகுண்டாகும் நேத்திரம் பிரகாசிக்கும் .

FOLLOWING IS FROM WIKIPEDIA

சிறியா நங்கை (Andrographis alata)

கசப்பு சுவை உடையதாக இருக்கும். இலைகள் சிறியதாக இருப்பதால், சிறியா நங்கை என பெயர் பெறுகிறது. இலைகள் பெரியதாக இருப்பதால், மற்றொரு தாவரம் பெரியா நங்கை (Andrographis lineata ) எனப் பெயர் பெறுகிறது. குருதியின் சர்க்கரைச் சத்து அளவை வெகுவாகக் குறைப்பதாக அறியப்படுகிறது.

சித்தர் பாடல்

சிறியாநங்கைத் தழையைச் சேவித்த பேரைப்

பிரியார் மடந்தையர்கள் பின்னும் அறியதில்

டங்கனமும் நீறும் தனியழகு முண்டாகும்

திங்கள் முக மாதே தெளி

XXXX

நீர் கட்ட

சிறுகட்டுக்கொடி யிலைய  அதிகாலையில் எழுந்து ஒரு பிடியெடுத்து வாய்கொண்டமட்டும் மென்றுதின்றால் , நீர் ஓழு க்கு- நீர்தாரைகிருச்சினம்  வெள்ளை இவை தீரும்

XXXX

பிரமியத்திற்கு 

சிவந்த கொட்டைக் கரந்தை — ஈருள்ளி வகைக்கு ஒருபிடியெடுத்துஇடித்து சாறு பிழிந்து அதற்கு சரியிடை நல்லெண்ணெய் கலந்துகொடுக்க நிவர்த்தியாகும்.

XXXX

பித்த வாய்வுக்கு

சிவதை வேர் – திரிகடுகு சரியிடை கொண்டு சூரணித்து சக்கரை சமன் கலந்து திருகடியளவு இருவேளையும் தின்று வந்தால் நிவர்த்தியாகும்..

XXXXX

இரத்த பித்தத்திற்கு

சிறுகீரை வேரை பச்சரிசி கழுவிய நீரின் மட்டி விட்டு  விட்டு  அரைத்து தேனில் குழப்பிக்கொடுக்கத் தீரும்.

XXXX

சகல வாதத்திற்கும்

சித்திர மூலம் – மிளகருணை – நொச்சி- இவைகளின் வேர் பட்டை வகைக்கு 5 பலம் எடுத்து இடித்து சூரணித்து திருகடியளவு குளுந்த தண்ணீரில் கொடுக்கத்  தீரும்

XXXX

விஷ சுரத்திற்கு கஷாயம்

சிறுவழுதலை – சீந்தில்- தாமரை வளையம் — கோணக்கிழங்கு — சுக்கு இவை வகைக்கு ஒரு பலம் எடுத்து சிதைத்து  2 படி தண்ணீர் விட்டு கால் படியாக வடித்து மூன்று வேளைக்கு கொடுக்க  நிவர்த்தியாகும்

XXXX

அதிசார சுரத்திற்கு

சித்தாமுட்டி வேர் — வில்வக்   காய் – சீந்தில் தண்டு — நில வேம்பு — சுக்கு — கோரைக் கிழங்கு — கஞ்சா விரை — வகைக்கு பலம் கால் — நாலு க்கொரு பங்காய்  கிஷாயம் காய்ச்சிக்கொடுக்க தீரும்.

XXXX

325. கண்ணில் வியாதி வராதிருக்க

சித்தாமண க்கின் வேரை  அரைத்து பசும்பாலில் காய்ச்சிக் கலக்கி புரை குத்திக் கடைந்து வெண்ணை எடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது. கண் குளிர்ச்சியாக இருக்கும் .

தொடரும் ………………………

Tags-

முனிசாமி முதலியார் , மூலிகை அதிசயங்கள்- 29, சித்தாமுட்டி, சிறுவழுதலை, சிறியா நங்கை

பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு (Post No.13,213)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.213

Date uploaded in London – — 7 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது. 

பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 1

 ச .நாகராஜன் 

கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிகார்டில் அதிகமான கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர் என்று பதிவு செய்யப்பட்ட யோஷிரோ நகாமட்சு, தாமஸ் ஆல்வா எடிஸனை விட மூன்று மடங்கு அதிகமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தவராகத் திகழ்கிறார் –

                                          அறிவியல் தகவல் 

3500 கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்!

உலகின் ஆகப் பெரும் கண்டுபிடிப்பாளர் யார் தெரியுமா? சுமார் 3500 கண்டுபிடிப்புகளைக் கண்டு பிடித்து ‘பேடண்ட் கிங்’ என்ற அடைமொழியைக் கொண்டிருக்கும் ஜப்பானைச் சேர்ந்த யோஷிரோ நகாமட்சு என்பவர் தான்.

அமெரிக்க ஸயின்ஸ் அகாடமிக் சொஸைடியினால் ஆர்க்கிமிடிஸ், மைக்கேல் பாரடே, மேரி க்யூரி,  நிகோலா டெஸ்லா ஆகிய பெரும் கண்டுபிடிப்பாளர்களுடன் ஐந்தாவதாக இவரது பெயரையும் சேர்த்துள்ளது ஒன்றே இவர் எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பாளர் என்பதைச் சுட்டிக் காட்டும்!

144 வயது வரை வாழ உறுதி பூண்டிருக்கும் இவருக்கு இப்போது

வயது 95.

பிறப்பும் இளமையும்

ஜப்பானில் வங்கியர் (பேங்கர்) ஆக இருந்த ஹஜிமே நகாமட்சு என்பவருக்கும் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரிந்த ஷினோ நகாமட்சு என்பவருக்கும் 26-6-1928-ல் பிறந்தார் யோஷிரோ நகாமட்சு.

இவரது தாயார் இவரை படிப்பில் நன்கு ஊக்குவித்தார். இவரது முதல் கண்டுபிடிப்பே இவரது தாயார் மீது இவருக்குள்ள் அன்பின் அடையாளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட கெரோஸின் பம்ப் தான்!

டோக்கியோ பல்கலைக் கழகத்தில் எஞ்ஜினியரிங் படிப்பை முடித்த இவர் தானே தேர்ந்தெடுத்த ஒரு கம்பெனியில் சேர்ந்தார்..

ஹிடாசி நிறுவனத்தில் கிடைத்த நல்ல வேலையை வேண்டாம் என்று சொல்லி விட்டு மிட்சுயி என்ற நிறுவனத்தில் இவர் வேலைக்குச் சேர்ந்தார்.

அந்தக் கம்பெனியை இவர் தேர்ந்தெடுத்த காரண,ம் கண்டுபிடிப்புகளை யார் கண்டுபிடித்தாலும் ஜப்பானில் அந்தக் கம்பெனியே அதற்கு உரிமை கொண்டாடும். ஆனால் மிட்சுயி மட்டும் யார் கண்டுபிடித்தாரோ அவருக்கே உரிமையை வழங்கும்..

கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடிப்பது எப்படி?

இவர் தான் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் விதத்தை விரிவாக விளக்கியுள்ளார்.

தண்ணீருக்கடியில் ஒரு வித கவசமும் இன்றி மூழ்கி ஆக்ஸிஜனுக்காகத் திணறுவார். இன்னும் அரை நொடியில் மரணம் சம்பவிக்கும் என்ற நிலையில் பாதுகாப்பாக மீள்வார். அந்தக் கடைசி நேரத்தில் அவர் மூளையில் பல புதிய எண்ணங்கள் தோன்றும்.

அவற்றை நீருக்கு அடியிலேயே இருந்து அதற்காகவே உள்ள ஒரு குறிப்பேட்டில் குறிப்புகளை எடுத்துக் கொள்வார்.

சில கண்டுபிடிப்புகள்

ஃபிளாப்பி டிஸ்கை தானே முதலில் கண்டுபிடித்ததாக இவர் சொல்கிறார். அடுத்து அதற்கான பாதுகாப்பான உறை ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

பறக்கும் செருப்புகள் என்ற காலணிகளை ஸ்பிரிங்குகள் அமைத்து இவர் கண்டு பிடித்துள்ளார்.

செரிப்ரக்ஸ் சேர் என்னும் நாற்காலியில் உட்கார்ந்தால் போதும், ஒருவரின் படைப்பாற்றல் திறன் கூடும் காலை வெதுவெதுப்பாக்கி மூளையைக் குளிர வைத்து அதன் திறனைக் கூட்டும் அந்த நாற்காலியையும் இவர் கண்டு பிடித்துள்ளார். 

பாலியல் உறவில் இன்பம் காண இவரது கண்டுபிடிப்புகள் பல உண்டு.

செக்ஸ் திறனை அதிகமாக்கும் சிடி இவரது கண்டுபிடிப்புகளுள் ஒன்று.

இவரது கண்டுபிடிப்புகள் பிரபலமாகி அவற்றை உலகெங்கிலுமுள்ள மக்கள் இன்றும் வாங்கி வருகின்றனர். லவ்ஜெட் என்ற இவரது செக்ஸ் படைப்புக்கு சீனா உள்ளிட்ட நாடுகளில் பெரும் வரவேற்பு உள்ளது. இது ஒரு ஸ்ப்ரே. இதை 50000 பேரிடம் தந்து அபிப்ராயத்தைக் கேட்ட அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் அவர்கள் அனைவரும் இது பயனளிக்கும் ஒன்று என்று கூறியதைச் சுட்டிக் காட்டுகிறார்.

கண்ணாடி அணிந்திருப்பது போலவே தோன்றாமல் இருக்கும்படி கண் போன்ற அமைப்பில் உள்ள கண்ணாடி இவரது பிரபலமான படைப்பில் ஒன்று.

‘ப்யான் ப்யான் பூட்’ என்ற இவரது இன்னொரு படைப்பையும் வெகுவாக உலகெங்கும் உள்ள விற்பனை நிறுவனங்கள் வாங்கி விற்கின்றன.

இவரது படைப்புகள் அனைத்தும் இவரது நூலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

இக்நோபல் பரிசு

இவருக்கு 2005-ம் ஆண்டிற்கான இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. வேடிக்கையான சாதனைகளை செய்பவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். சுமார் நாற்பது ஆண்டுகளாக தான் உண்ணும் உணவை, உண்பதற்கு  முன் போட்டோக்கள் எடுத்து வநதார் இவர். ஊட்டச்சத்து பற்றி அறிவதற்காகவே அவர் இந்த போட்டோக்களை எடுத்து வந்தார்.

இந்த சாதனைக்காகவே இவருக்கு இக்நோபல் பரிசு வழங்கப்பட்டது. இக்நோபல் பரிசு வாங்க நேரில் வந்து விழாவில் இவர் கலந்து கொண்டார். அங்கு தனது மருத்துவ நிலை பற்றி ஒரு கவிதையை வேறு இயற்றிப் பாடினார்.

சுமார் 55 வகை உணவு வகைகளை சுழற்சி முறையில் மாற்றி  மாற்றித் தீர்மானித்து உண்ணுவது இவர் வழக்கம்.

இது ஏன்? நீண்ட ஆயுளை உறுதி செய்யத் தான்!

**

London Swaminathan’s Article Index for April 2024 (Post No.13,212)

London swaminathan at Chenkal, Kerala, April 20024

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,212

Date uploaded in London – –   6 MAY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Index No.137

(Please  note that we did not post any article in our blogs from 26-3-24 to 9-4-24)

‘Man can become Invisible’ says Magician Nagarjuna! (Post No.13,127) 10/4

Sterile Women can get Children; People can See Previous Births! Nagarjuna Shows the Way! (Post.13,130) 11/4

Magic of Walking on Water and Walking on Fire! (Post No.13,134) 12/4

How to Fly in the Sky : Nagarjuna’s Instructions to  beat Albert Einstein! (Post No.13,137)13/4

London Swaminathan’s Article Index for March 2024 (Post No.13,133) 12/4

Magic Books and Medical Books by Nagarjuna  (Post No.13,142) 15/4

Cure for Snake Poison! (Post No.13,148) 17/4

Ramayana in Gold in Ayodhya Temple 17/4

Ramayana Wonder in Bengaluru Museum 17/4

Nagarjuna Magic to attract Fish and Coch shells (Post No.13,153) 18/4

Magic Sex Tips by Nagarjuna (Post No.13,157) 19/4

Cure for Scorpion Bites! (Post No.13,160)20/4

My visit to Tallest Siva linga,Largest Shiva Statue and Beautiful Light House in Kerala (Post.13,165) 21/4

Ants in Hinduism- Part One (Post No.13,174)24/4

Ants in Hinduism – Part Two (Post No.13,176) 25/4

More Quotations from Garuda Purana : May 2024 Calendar (Post No.13,183) 27/4

One Rupee Coin is sold for Rs.30,000 in London (Post No.13,184) 27/4

What is Your Birth Star? I will tell You Who You Are!- Part 1 &2 (Post No.13,189) 29/4 and 30/4

xxxx

London swaminathan at  Ahzimala, Kerala.

Tamil Articles

மனிதனை மறைய வைக்கும் அதிசய வித்தை: நாகார்ஜுனா தரும் தகவல் -2 (Post.13,126) 10/4

மலடிகள் குழந்தை பெற ஒரு குளிகை: மந்திரவாதி நாகார்ஜுனா தகவல் (Post.13,129) 11/4

நீர் மேல் நடக்கலாம்; நெருப்பு மீதும் நடக்கலாம்- நாகார்ஜுனா மாஜிக் (Post.13,136) 13/4

பீரங்கிக் கடிகாரம்; திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்– 8 (Post No.13,168)22/4

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் -1 (Post No.13,143) 15/4

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 4 (Post No.13,152) 18/4

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் – 5 (Post No.13,156) 19/4

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் -1 (Post No.13,163) 21/4

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் -2 (Post.13,167) 22/4

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள்- 3 (Post No.13,170) 23/4

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும்  200 மூலிகை மருந்துகள் – Part 4 (Post.13,177) 25/4

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 5 (Post.13,186) 28/4

ஆல்பர்ட் ஐன்டைனுக்கு தெரியாதது இந்துக்களுக்குத் தெரியும் ! (Post.13,140)14/4

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் -3 (Post No.13,149) 17/4

ஆளுயர சந்தன அனுமார்! திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 7 (Post. 13,164)21/4

திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள் -2 (Post No.13,146) 16/4

அரிய எம் எஸ் புகைப்படம்; திருவனந்தபுரம் பாலஸ் மியூசிய அதிசயங்கள்- 6 (Post No.13,161) 20/4

வினோத (வி) சித்திரங்கள்: பாலஸ் மியூசிய அதிசயங்கள் -9 (Post No.13,171) 23/4

இந்துமதத்தில் எறும்பு – 1 (Post No.13,180) 26/4

கைகேயி எறும்புப் பெண்! கம்பன் சொல்லும் அதிசயக் கதை!! இந்து மதத்தில் எறும்பு – 2 27/4

மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள் !- Part 1 (Post No.13,151) 18/4

மேலும் மூன்று ராமாயண அதிசயங்கள்- பகுதி 2 (Post No.13,155) 19/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—21 (Post No.13,132) 12/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—22 (Post No.13,139) 14/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—23 (Post No.13,145) 16/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 24 (Post No.13,159) 20/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 25 (Post.13,173) 24/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 26 (Post.13,19) 26/4

மே 2024 காலண்டர்: மேலும் 31 கருட புராண பொன்மொழிகள் (Post No.13,186) 28/4

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள் – 27 (Post No.13,188) 29/4

ரமணர் பற்றிய சுவையான புதிய நூல் ‘அஹம் ஸ்புரணா’ (Post  No.13,192) 30/4

—subham—

 tags-  London Swaminathan, April 2024 index, article index