1.விந்திய மலையுடன் எந்த முனிவரை உடனே நினைப்பீர்கள்? ஏன் ?
XXXX
2.இந்தியாதான் உலகிலேயே பழமையான நாடு என்று காட்டும் குகைகள் மனித தடயங்களுடன் நடுக்காட்டில் உள்ளன. விந்திய மலையில் உள்ள அந்த குகையின் பெயர் என்ன?
xxxx
3. இந்திய தேசீய கீதத்தில் உள்ள இரண்டு மலைகள் எவை?
xxxx
4.விந்திய மலையின் தெய்வம் யார் ?
xxxx
5.இந்த மலை எங்கே உள்ளது?
xxx x
6.விந்திய மலையில் உற்பத்தியாகும் நதிகள் எவை ?
xxxx
7.விந்திய மலைக்கு ஏன் அந்தப் பெயர் ஏற்பட்டது?
xxxx
8.விந்திய மலையில் உள்ள புனிதத்தலங்கள் யாவை ?
XXXX
9.விந்திய மலை பற்றிய பழைய குறிப்புகள் எவை ?
xxxx
10.விந்திய மலையின் நீளம் என்ன ?
XXXX
விடைகள்
1.அகஸ்திய முனிவரை எல்லா புராணங்களும் விந்திய மலையுடன் தொடர்பு படுத்துகின்றன ; அதை அவர் கர்வ பங்கம் செய்தார் .அதாவது வளர்ந்து கொண்டே இருந்த மலையை மட்டம் தட்டி, தென்னாட்டுக்கு ரோடு/ சாலை போட்டார்; 18 ஜாதி மக்களை தென்னாட்டில் குடியேற்றினார்.
XXXX
2.பிம்பேட்கா குகைகள் BHIMBETKA CAVES மத்திய பிரதேசத்தின் போபால் அருகிலுள்ளன ; அங்கு பழங்காலத்தில் , 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் ,மனிதர்கள் வாழ்ந்து ஓவியங்களை வரைந்துள்ளனர் ; நடுக்காட்டில் மனிதர்கள் வாழ்ந்தது, கரையோர நகரங்களிலும் மனிதர்கள் வாழ்ந்ததைக் காட்டுகிறது
xxxx
3.விந்தியம் , ஹிமாசலம்
xxxx
4.விந்தியாவாசினி
xxxx
5.இந்தியாவின் மத்தியப் பகுதியில் இருக்கிறது. இதற்கு இணையாக சாத்பூரா மலைத் தொடர் இருக்கிறது.
இரண்டையும் விந்திய மலை என்றே பொதுவாக அழைக்கிறார்கள் . இரண்டுக்கும் இடையே தப்தி நதி ஓடுகிறது.
Xxxx
6.கங்கை–யமுனையின் உபநதிகள் சம்பல் நதி, பேட்வா நதி, தாசன், கென், தமசா நதிகள், காலி சிந்து, பார்வதி நதிகள் ஆகியன விந்திய மலையின் வட பகுதியில் உற்பத்தியாகின்றன. நர்மதா நதியும் ன் நதியும் தென் பக்க சரிவிலிருந்து உற்பத்தி ஆகின்றன
Xxxx
7.வைந்த் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு தடுத்தல் என்று பொருள்; இது உலகின் முதல் அகராதியான அமர கோசத்தில் இருக்கிறது; வடக்கே இருந்து தென் திசை நோக்கி வருவோரை இது தடுத்தது; எல்லோரும் கடலோரமாகவே நடந்து தென்னகம் வந்தனர் அகஸ்தியர் பெரிய CIVIL ENGINEER சிவில் என்ஜினீயர். திட்டமிட்டு சாலை போட்டார்; பிற்காலத்தில் இது வழியாக மெளரிய படைகள் கர்நாடகத்துக்கு வந்தன ; ஆனால் விந்திய மலையை சங்க இலக்கியங்கள் குறிப்பிடவில்லை வியாத என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்து வேடன் என்ற தமிழ்ச் சொல் வந்தது ; வ்யாத என்பது விந்த்ய என்று மாறியிருக்கலாம். அசலம் என்றால் மலை; விந்த்ய +அசலம் = விந்த்யா சலம்
xxxxx
8.உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிர்ஜாபூரில் மலையின் ஒரு முனை இருக்கிறது; அங்குள்ள விந்தியாவாசினி கோவில் ஒரு முக்கிய சக்தி பீடம்; அதிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் மஹா காளி கோவிலும் ஒரு கு கைக் கோவிலும் உள்ளது ; இவை தவிர சிறிய பைரவர், சிவன் கோவில்களும் இருக்கின்றன.
XXXXX
9.மஹாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் புராணங்களிலும் விந்திய மலை பற்றிய குறிப்புகள் உள்ளன ; ஸ்ம்ருதி என்னும் சட்ட நூல்களில் உள்ளன. பீம்பேட்கா என்ற மனித இனத்தின் பழைய சுவடுகள் உடைய பிம்பேட்கா குகையையும் ஆதிவாசிகள் பீம் சேனனின் ஆசனம் என்றே அழைக்கின்றனர்; இங்கு 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்தனர் .
xxxxx
10.இதன் நீளம் 675 மைல்கள் (1,086 கி.மீ ) ஒரு புறம் குஜராத்; மறு புறம் மத்திய பிரதேச- உத்தர பிரதேச எல்லை.
Bhimbetka caves
—SUBHAM—
TAGS- விந்தியாவாசினி கோவில், சாத்பூரா மலை, விந்திய மலை, QUIZ, பிம்பேட்கா குகைகள் BHIMBETKA CAVES, விந்திய கர்வ பங்கம், விந்திய மலை பத்து
குருவாயூருக்கு வாருங்கள் கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது ; இது இரண்டாம் பகுதி
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 28
கோவில் எண்–29 குருவாயூர் கிருஷ்ணன்
குருவாயூர் கிருஷ்ணனின் அற்புதங்களை எவரும் பட்டியலிட முடியாது. நோய்களைத் தீர்ப்பது முதல் மகப்பேறு இல்லாதோருக்கு குழந்தை பிறக்கவைப்பது, செல்வ மழை பொழிவது, தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வது பேரிடர்களிலிருந்தது காப்பாற்றியது என்று நீண்ட பட்டியல் அது; கேரள மக்கள் அடுக்கடுக்காக சொல்லுவார்கள்
குருவாயூரப்பனின் பெருமையைப் பேசும் பல நூல்கள் இருந்தாலும் மேப்பத்தூர் நாராயண பட்டதிரி எழுதிய நாராயணீயம் என்ற சம்ஸ்க்ருத நூல்தான் தலையாயது ; இந்தியா முழுதும் இந்த நூலை பாராயணம் செய்வோர் உளர்; ஏதேனும் பிரச்சினை வந்தால் அல்லது கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் நாராயணீயம் படித்தால் போதும் ; தமிழ் ஆங்கில மொழி பெயர்ப்புகளும் கிடைக்கும் .நாராயண பட்டதிரிக்கு இருந்த கடுமையான வாத நோய் நாராயணீயம் இயற்றியதால் அகன்றது.
நாம் தேவாரத்தில் 10 பாடல்களை பதிகம் என்போம்; இதை சம்ஸ்க்ருதத்தில் தசகம் என்பர். இது போன்ற 100 தசகம் ஸ்லோகங்கள் உடைய இந்த நூலை குருவாயூரில் அமர்ந்து மனமுறுகிப் பாடினார். .எல்லோருக்கும் ஆயுளும் ஆரோக்கியமும் கிடைக்க இது உதவுகிறது
திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று– பேயாழ்வார்
என்று ஆழ்வார்கள் கண்ட காட்சியினை நாராயண பட்டதிரி அக்ரே பஸ்யாமி – என் முன்னே காண்கிறேன் என்று சொல்லி வியக்கிறார்.
குருரம்மா Kururamma (1570–1640 AD) என்பவருக்கு குழந்தை இல்லை; கணவனை இழந்த அவர் கிருஷ்ணனையே குழந்தையாக எண்ணி போற்றியது பற்றி கேரளத்தில் நிறைய கதைகள் உண்டு. அதிகம் கல்வி அறிவில்லாத அவர் கண்ணனை தன் குழந்தையாக எண்ணி வாடா, போடா என்று அன்புடன் அழைத்தார்; கண்ணனின் விஷமங்களைக் கண்டித்தார். குருர் இல்லத்தின் மூத்த பெண்மணி என்பதால் அவர் குரூர் +அம்மா என்று அழைக்கப்பட்டடார் .
one of the priests
கேரளத்தில் பல கோவில்களில் அற்புதம் நிகழத்திய மகான் வில்வமங்கள சுவாமிகள் அவரும் குருவாயூரப்பன் பக்தர்; பூந்தானம் நம்பூதிரி பாடிய ஞானப்பனா வும் குருவாயூர் கிருஷ்ணன் புகழ் பாடுகிறது.
அண்மைக்காலத்தில் குருவாயூரப்பனை வழிபட்டு குஷ்ட நோய் நீங்கிய உபன்யாச சக்கரவர்த்தியும் தனக்கென புதிய சொற்பொழிவுப் பாணியை வகுத்தவருமான அனந்த ராம தீட்சிதர் தினமும் தனது உரைகளில் குருவாயூரப்பனை நினைவுகூர்ந்தார்.
குருவாயுர் கோவிலில் 41 நாள் பஜனை செய்வது, வலம் வருவது போன்றன பலருடைய நேர்த்திக் கடன் ஆகும். சில ரூபாய்கள் மட்டுமே தேவைப்படும் மலர் முதல் 21 பூஜைகளை செய்யும் உதயாஸ்தமன பூஜா வரை பல வேண்டுதல்கள் உள்ளன.
குழந்தைக்கு முதல் உணவு ஊட்டும் சடங்கு, இந்துக்களின் 40 சடங்குகளில் (சம்ஸ்காரம்) ஒன்று ; இதை அன்னப்ராஸ்னம் என்பர்; இவ்வாறு அன்னத்தை குழந்தைக்கு அளிக்கும் வைபவமும், கல்யாணங்களும் இங்கே நிறைய நடக்கின்றன. காலை 3 மணிக்குத் திறக்கும் கோவிலை இரவு 9 மணிக்கு மூடுவார்கள். மதியம் 1 முதல் 4 வரை மட்டும் மூடியிருக்கும் குருவாயூர் முழுதும் நாராயண, நாராயண என்ற கோஷத்தை மக்கள் உச்சரித்த வண்ணம் இருப்பார்கள்.
கோவில் அமைப்பு கேரள பாணியில் இருக்கிறது.
கோவிலில் உள்ள விக்கிரகம் விஷ்ணு விக்கிரகமே ; அதையே எல்லோரும் கண்ணனாக வழிபடுகின்றனர்.நான்கு கைகளில் சங்கு, சக்கரம், கதை, துளசிமாலை/ தாமரை இருக்கின்றன.
14ம் நூற்றாண்டு முதல் உள்ள வரலாறே நமக்குக் கிடைக்கிறது. ஆனால் ஆதி சங்கரர் காலம் முதல் கோவில் இருந்ததை செவி வழிச் செய்திகளும் சடங்குகளும் நிரூபிக்கின்றன. நாராயணன் நம்பூதிரி என்பவரின் குடும்பம் பரம்பரை தந்திரி (கோவில் தலைமை அர்ச்சகர்) ஆவார். கேரள அரசின் கட்டுப்பாட்டிலுள்ள குருவாயூர் தேவஸ்வம் போர்டு கோவிலை நிர்வகிக்கிறது
திருவிழாக்கள்
கும்ப மாதத்து பூச நட்சத்திரத்தில் 10 நாள் விழா துவங்கும்.
இது தவிர ஜன்மாஷ்டமி , பெரிய ஏகாதசி நாட்களில் விழாக்கள் இருக்கும்
கோவிலில் கணபதி, அய்யப்பன்,, நாக தேவதைகளுக்கு தனித்தனி சந்நிதிகள் இருக்கின்றன.
டில்லியில் குருவாயூர் கோவில் போலவே புதிய கோவிலைக் கட்டி அதை உத்தர குருவாயூரப்பன் கோவில் என்று அழைக்கிறார்கள் .
Xxxx
நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த மலர்கள் துலாபாரத்தைக் கண்டோம்; இதோ மேலும் சில துலாபாரங்கள்
எடைக்கு எடை தங்கம்
குருவாயூர் கோவிலில் ,2006ஆம் ஆண்டில், பெங்களூர் கே.சி.பி மேனன் கொடுத்த 70 கிலோ தங்க துலாபாரம்தான் சாதனைப் புஸ்தகத்தில் இடம்பெறுகிறது. பாலக்காட்டைச் சேர்ந்த அவருக்கு வயது 58. தனது வியாபாரம் கேரளம், பெங்களூரு, துபாயில் அமோகமாக நடப்பதால், தான் வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடனை செலுத்துவதாக அவர் நிருபர்களிடம் சொன்னார். பெங்களூரிலிருந்து வந்த அவர் 70, ஒரு கிலோ தங்கக்கட்டிகளைக் கொண்டுவந்தார்; அவரது கம்பெனியின் பெயர் ஷோபா டெவலப்பர்ஸ்.
Guruvayoor Devaswom officials told UNI P N C Menon, Chairman of Shobha Developers, Bangalore, gave 70 kg of gold for ‘thulabharam.’ ‘It is the biggest gold offering by an individual or institution in the history of the temple. The previous highest was two kg in 1970.’ Mr Menon, a native of Palakkad, running a group of institutions in Kerala, Bangalore and Dubai, told reporters the offering was made in fulfilment of a vow. ‘My business has reached such heights with the blessings of Lord Krishna and it is my humble gratitude to the Lord.’ The 58-year-old devotee, who flew in from Bangalore, brought 70 gold bars weighing one kg each for the offering.
இது 2006ம் ஆண்டில் டிசம்பரில் நடந்தது.அப்போது அந்த தங்கத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் ; இப்போது பன்மடங்கு அதிகம் (70,000 கிராம் X ரூ.6400)
xxxxxx
குருவாயூரில் துர்கா ஸ்டாலின்
August 10, 2023, 20:18 [IST] குருவாயூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு 32 சவரன் எடை கொண்ட தங்க கிரீடத்தைக் காணிக்கையாக வழங்கியுள்ளார். சந்தனம் அரைக்கும் இயந்திரத்தையும் குருவாயூரப்பனுக்கு காணிக்கை அளித்துள்ளார் துர்கா ஸ்டாலின்.
Xxxxx
குருவாயூர் கோவிலில் வாழைப்பழத்தை துலாபாரமாக வழங்கிய கேரள கவர்னர்
திருவனந்தபுரம்: மே 8, 2023 கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை வாழைப்பழம் கொடுத்து துலாபாரம் நடத்தி தரிசனம் செய்தார். கேரள கவர்னரான ஆரிப் முகமது கான் குருவாயூர் கோயிலில் நேற்றுமுன்தினம் சாமி தரிசனம் செய்தார். இந்த கோயிலில் எடைக்கு எடை துலாபாரம் நடத்துவது முக்கிய வழிபாடாகும். கவர்னர் ஆரிப் முகமது கான் தனது எடைக்கு எடை வாழைப்பழம் துலாபாரம் கொடுத்தார். பிறகு சாமி தரிசனம் செய்து விட்டு திரும்பினார்.
கோவிலுக்கு வெளியே நடத்தப்படும் துலாபாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி கோவிலின் கிழக்கு நடைபந்தலில் அவருடைய எடைக்கு எடை (83 கிலோ) கதலிப்பழம் வழங்கப்பட்டது.
Xxxx
Thrissur: october . 2023 On the auspicious occasion of Guruvayur Ekadashi, an offering was made by Nathan Menon, hailing from Thiruvananthapuram, by presenting golden crowns to Ayyappan and Guruvayurappan. The dedication of these crowns took place on the second day of the Ekadashi lamp ceremony.
குருவாயூர் ஏகாதசி உற்சவத்தின்போது திருவனந்தபுரம் நாதன் மேனன் சபரிமலை ஐயப்பனுக்கும் குருவாயூர் கிருஷ்ணனுக்கும் தங்க கிரீடங்களை காணிக்கையாக வழங்கினார்.
–subham—
tags – துர்கா ஸ்டாலின் , கேரள கவர்னர், 7 கிலோ தங்கம் துலாபாரம், கே சி பி மேனன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
கொங்குமண்டல சதகம் பாடல் 52
தமிழுக்காகக் கொதிநெய்யில் கையை விட்டு சத்தியம் செய்த ஆணூர்ச் சர்க்கரை!
ச.நாகராஜன்
தமிழகத்தில் புலவர்களுக்கு அரசன் முதல் ஆண்டி வரை அனைவரும் தனிப் பெரும் கௌரவத்தைக் கொடுத்து வந்தனர்.
புலவருக்குப் பரிசுகள் வழங்குதல், அவர் வாயிலிருந்து ஆசிச் சொற்களைப் பெறுதல், அவர் மனம் நோகாமல் நடத்தல் என்பனவற்றில் அனைவரும் கவனம் செலுத்தி வந்தனர்.
கொங்குமண்டலத்தில் தமிழ்ப் புலவனை இகழவே இல்லை என்று சத்தியம் செய்த ஒரு தலைவனின் அற்புத வரலாறு உண்டு.
இதை கொங்குமண்டல சதகம் 52ஆம் பாடலில் படம் பிடித்துக் காட்டுகிறது.
கீழ்கரை பூந்துறை நாட்டில் திருச்செங்கோடு நகரில் ஏகாலியர் (கொங்க வண்ணார்) மரபில் வீரபத்திரன் என்னும் தமிழ்ப் புலவர் கல்வி கேள்விகளில் வல்லவராய்த் திகழ்ந்தார். மக்களிடம் பெரும் மதிப்பும் பெற்றார்.
தான் கற்ற கல்வியை அனைவருக்கும் நல்க எண்ணி அவர் ஊர் தோறும் விஜயம் செய்தார். மக்கள் அவரை அன்புடன் வரவேற்றனர்.
ஒரு நாள் அவர் கொங்குமண்டலத்தில் காரையூரை அடைந்தார். அங்கு நாட்டுத் தலைவனாக விளங்கிய சர்க்கரை என்பாரை அவர் அணுகினார்.
சர்க்கரை அவரை உரிய விதத்தில் வரவேற்று அன்புடன் உபசரித்தார்.
சிறிது நேரம் அளவளாவிய பின்னர் அவருக்கு அமுது படைக்க எண்ணிய அவர் தன் வீட்டிற்குள் சென்று மனைவியிடம் அவருக்கு உணவு படைப்பதற்கு ஏற்றதைச் செய்யுமாறு கூறினார்.
அவர் மனைவியுடன் இருந்த சமயத்தில் வெளியே புலவருடன் இருந்த ஒருவர், “ஐயா! தங்களுக்கு உணவு படைக்கச் சிறிது நேரம் ஆகும் என நினைக்கிறேன்” என்று கூறினார்.
இதைக் கேட்ட புலவர் உள்ளே ஏதோ நம்மைப் பற்றி இழிவுரை நடந்திருக்கிறது என்று எண்ணினார். ஆகவே தான் வலிய வந்து இப்படி இந்த ஊழியர் சொல்கிறார் என்று நினைத்த புலவர் மதியார் வீட்டில் உணவு உண்ண வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தார். உடனே அந்த இடத்தை விட்டு அகன்றார்.
உள்ளேயிருந்து வந்த சர்க்கரை புலவரைக் காணாது திகைத்தார்.
அவர் சென்று விட்டார் என்பதைக் கேட்ட அவர் ஓடோடிச் சென்று அவரைக் கண்டு அவர் முன்னால் நின்றார்.
“புலவரே! என்ன நடந்தது? ஏன் வெளியே சென்று விட்டீர்கள்? எது நடந்திருந்தாலும் என்னை மன்னியுங்கள்” என்றார்.
உடனே புலவர் மலர்ச்சியற்ற முகத்துடன், “எதிர்த்தோர்க்கு மிண்டன் வித்வான்களுக்குத் தொண்டன் என்ற விருது உங்கள் முன்னோர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கேட்டு அறிந்து உங்களைச் சந்திக்க வந்தேன். உள்ளே சென்று நீங்கள் உணவு அருந்துவதாக உங்கள் ஊழியர்கள் மூலம் கேள்விப்பட்டேன். வந்தவர்களை உபசரித்து உணவு ஊட்டிப் பின் தான் புசிக்க வேண்டும் என்பது நல்ல குடிப்பிறந்தவர்களின் கடமை.
அதுமட்டுமின்றி, உண்ணுங்கள், உண்ணுங்கள் என்று உபசரிக்காதவர் வீட்டில் புசிப்பது தகாது என்பதால் திரும்பி விட்டேன். ஒரு புலவன் ஒருவரது இல்லத்திற்குச் செல்வது அவருக்கு கீர்த்தியை விளைவிப்பதற்கே ஆகும். இதற்கு முன் புலவர் புகழ்ந்து உங்களைப் பாடி இராவிடில் உங்களைத் தேடி நான் ஏன் வருகிறேன்? ஏராளமானோர் இருக்க உம்மை ஏன் நான் தேடி வருகிறேன்?” என்று கூறினார்.
இதைக் கேட்ட சர்க்கரையார் அதிர்ந்து போனார்.
“ஐயா! புலவர் திலகமே! அறிஞர்களின் வடிவம். பிறப்பு முதலியவற்றை விசாரித்தல் மரபு அல்ல. புலவர்கள் பிரசங்கங்களாலும் நூல்களாலும் உலகிற்கு நல்லதைச் செய்கிறார்கள்; பெருமை சேர்க்கிறார்கள். என்னை கௌரவிக்க வந்துள்ள உங்களை நான் இகழவில்லை. இதை இப்போதே மெய்ப்பிக்கிறேன்” என்று கூறிய சர்க்கரையார் நெய்யைக் கொதிக்க வைத்து அதில் தன் கையை விட்டுச் சத்தியம் செய்தார்.
அவர் இகழவில்லை என்பதை அறிந்து கொண்ட புலவர் திருப்தியுடன் அவருடன் அமர்ந்து உணவு உண்டார்.
பின்னர் அவர், “ஐயா மன்றாடியாரே! நீர் சத்தியம் செய்தும் என் மனம் சமாதானம் ஆகவில்லை. உமது சத்தியம் உண்மை என்றால் என் எச்சில் வாயைக் கழுவி விடுவீரா?” என்று கேட்டார்.
உடனே மகிழ்ச்சியுடன் புலவரின் எச்சில் வாயையும் கையையும் சர்க்கரையார் கழுவி விட்டார்.
புலவர் மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.
உடனே அவர் மீது கொண்ட பெருங்காதலால் ‘காதல்’ என்னும் ஒரு பிரபந்தத்தையே இயற்றினார்; அதை அரங்கேற்றினார்.
புலவர் மகிழும் படி சர்க்கரையார் அவருக்கு பரிசில் அளித்தார்.
இந்த வரலாற்றை இரகுநாத சேதுபதி சமஸ்தான தளவாய் அண்ணாமலை பிள்ளை மீது பொன்னாங் காணி அமுதகவிராயர் கூறிய விருத்தத்தில் கூறுகிறார் இப்படி:
சீரிலகுமான்மணிப் பாய்சுமந்தான் கம்பர் சிவிகை
பாண்டிய னேந்தினான்
செல்வமுயர் கச்சியப்பன் உதை பொறுத்தனன்றிழ்சுட்டி
சோமனீந்தான்
தாரிலகு குமணனுந் தலை கொடுத்தான் சிவன் றானுமொரு தூது சென்றான்
சர்க்கரையு மெச்சில் வாய் கழுவினான் காளத்தி
தனதிருகை புற்றிலிட்டான்
பேரிலகு கம்பயனும் விரலாழி யீந்தனன் பெரியவன்
பெண் கொடுத்தான்
பிணிமுகத் தான் கீரனைப் புரந்தான் பேதை முதுகிலன்
மொருவனிட்டான்
பாருலகி லித்தமிழ்க் குத்தொண்டு செய்தபேர்
பார்க்கிற்’ கணக்கில்லையே
பரராசர் பணிகின்ற வண்ணாமலைக் குரிசில் பாதத்தை
வருடினானே
இந்த அமுத கவிராயர் ஒரு துறைக்கோவையாகப் பாடிய இரகுநாத சேதுபதி கி.பி. 1647 முதல் 1662 வரை வாழ்ந்தவர்.
எனவே முந்நூற்றி எழுபது வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.
மகிழ்ந்துகா ரைப்பதியில் வாழ்சர்க் கரைதான்
புகழ்ந்து திரிபுல வோரை – இகழ்ந்து நான்
வையவில்லை யென்று சொல்லி மண்டலமெ லாந்துதிக்க
நெய்யிலே கையை விட்டா னேர்ந்து
– செந்தமிழ்த் தொகுதி மூன்று – பக்கம் 22
–
தூசர் குல வாணனுக்கோர் சோர்வுரைக்க வில்லையென
நேசமுட நேகாய்ந்த நெய்தனிறி கையை விட்டோன்
என இப்படி நல்லதம்பி சர்க்கரை – காதல் கூறுகிறது.
இப்படிப்பட்ட அற்புதமான வரலாற்றை கொங்குமண்டல சதகம் பதிவு செய்கிறது பாடல் 52இல் :
முகஞ்சோர்ந் தகன்றிடு மேகாலிப் பாவலன் முன்னநின்றே
யிகழ்ந்தே நிலையைய வென்று சுடுநெய் யினிற்கையைவிட்
டுகந்தே யுணுமெச்சில் வாயைக் கழுவி யுவப்பியற்றி
மகிழ்ந்தே புகழ்பெரு சர்க்கரை யுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : தன்னை இகழ்ந்ததாகக் கேள்வியுற்று முகம் வாடித் திரும்பிச் சென்ற வீரபத்திரன் என்னும் ஏகாலியர் குலத்தில் உதித்த புலவரைப் பின் தொடர்ந்து சென்று மறித்து நின்று, ‘ஐயா உம்மை இகழவில்லை’ என்று கொதி நெய்யில் கையை விட்டுச் சத்தியம் செய்து, அப்புலவனின் எச்சில் வாயைக் கழுவி அப்புலவனை மகிழ்வித்த சர்க்கரை என்னும் உபகாரி வாழ்ந்ததும்
1.சங்க இலக்கிய காலத்துக்கு முன்னதாக வந்த நூல் என்று கருதப்படும் தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா பற்றிய குறிப்பு இருக்கிறதா?
xxxx
2.சங்க இலக்கியத்தில் எந்த நூலில் கார்த்திகைத் திருநாள் விழாவைப் போற்றுகிறார்கள் ?
xxxx
3.தமிழ்நாட்டில் எந்த ஊரில் கார்த்திகை தீபத் திருநாள் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது?
xxxxxx
4.அன்றைய தினம் அங்கே என்ன நடக்கும்?
xxxx
5.கார்த்திகைக்கும் முருகனுக்கும் என்ன தொடர்பு ?
xxxx
6.கார்த்திகை விழாவின் பின்னுள்ள விஞ்ஞான ரகசியம் என்ன ?
xxxx
7.வானத்தில் கார்த்திகை நட்சத்திரம் எங்கே உளது ?
xxxx
8.வெளிநாட்டில் கார்த்திகை உண்டா?
xxxx
9.கார்த்திகை அன்று என்ன தின்பண்டங்களைச் செய்கிறார்கள் ?
Xxxx
10. கார்த்திகை நட்சத்திரத்தை தமிழ் அகராதிகள் நிகண்டுகள் என்ன பெயர்களில் அழைக்கின்றன?
XXXXX
விடைகள்
1.தொல்காப்பியத்தில் கார்த்திகை விழா
வேலி நோக்கிய விளக்கு நிலையும்–
தொல்.பொருள்.புறத்திணை இயல்-35
வேலி நோக்கிய விளக்கு நிலையும்– என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.
xxxx
2. அகநானூறு நற்றிணை , மலைபடுகடாம் , பரிபாடல் ஆகிய சங்க நூல்கள் இவ்விழாவினாக்க குறிப்பிடுகின்றன .
தொழில் விஷயமாக வெளியூர் என்ற கணவன், கார்த்திகை விழாவுக்கு வரட்டும் என்று மனைவி சொல்லும் பாடல் அகநானூற்றில் (141) இருக்கிறது
குறுமுயல் மறுநிறம் கிளர, மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகல் இருநடுநாள்
அறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி (அகம்.141)
இதே போல அகம்.185, 11, நற்றிணை 202 ஆகிய பாடல்களிலும் கார்த்திகை விழா சிறப்பிக்கப் படுகிறது.
3.திருவண்ணாமலையில் பெரிய அளவில் கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாடப்படுகிறது .
Xxxx
4.கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமி நாளில் தீபத்திருநாளை இந்துக்கள் கொண்டாடுகிறார்கள் .அன்று காலையில் அண்ணாமலை அருணாசலேஸ்வர் கோவிலில் பரணி தீபமும் மாலையில் மலை உச்சியில் கார்த்திகை தீபமும் ஏற்றப்படும். கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இது பல நாட்களுக்கு எரியும்; சுமார் பத்து மைல் வரை தெரியும் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தரிசிக்க லட்சக் கணக்கான பத்தர்கள் வருகின்றனர்
ஹிந்துக்கள் அவரவர் வீடுகளில் 2 அல்லது 3 நாட்களுக்கு தீபம் ஏற்றுவர்; இதற்கு அகல் விளக்கும் இலுப்பை எண்ணெயும் பயன்படுத்தப்படும்.
வைணவர்கள் ரோகிணி நட்சத்திர நாளில் விளக்கு ஏற்றி பெருமாளுக்கு நைவேத்தியம் படைப்பார்கள்
xxxxx
5. முன்னொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாக நமது புராணங்கள் விளக்குகின்றன. ஆறு தலைகளும் பன்னிரு கைகளும் கொண்டு மயில் வாகனத்தில் பவனி வரும் முருகன் தமிழர் தம் தனிப்பெரும் கடவுள்!கார்த்திகை மாதர் அறுவர் முருகனை வளர்த்ததாகப் புராணம் கூறுகிறது. அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப் பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர்
xxxx
6.ஐப்பசி கார்த்திகை அடைமழைக் காலம். அப்போது பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளிகள் முதலியன பெருகும். அந்தக்காலத்தில் சொக்கப்பனை கொளுத்தும் போது பூச்சிகள் தானாகவே வந்து அதில் விழுந்து இறக்கும். மேலும் வீடுகளில் நடக்கும் சொக்கபனைகளில் பழைய துணிகள் இலை தழைகளை எரித்து வீட்டைச் சுத்தப்படுத்துவர். மனிதர்களுக்கு பைரோமேனியா PYROMANIA என்ற வியாதி உண்டு. தீவைத்தலில் ஆர்வம் என்று இதன் பொருள்; ஆதி காலத்தில் நம் முன்னோர்கள் குகைகளில் வாழ்ந்தபோது மிருகங்களை மிரட்டவும், உணவு சமைக்கவும் தீயை மூட்டி ஆடிப்பாடினார்கள் . அந்த ஜீன்கள் GENES இன்னும் நம் ரத்தத்தில் உள்ளதால் சிறுவர்களும் இளைஞர்களும் எதையாவது தீ வைத்து எரிக்க ஆசைப்படுவர்; அவர்களுடைய இந்த சக்தியை முறையாக பயன்படுத்த இந்துக்கள் தீபாவளி, கார்த்திகை பண்டிகைகளை ஏற்படுத்தினார்கள். TO CHANNELISE THE PYROMANIAC URGE.
XXXX
7.வானத்தில் ஒரையன்ORION (திருவாதிரை, மிருக சீர்ஷம்) நட்சத்திரக் கூட்டத்துக்கு அருகில் உற்று நோக்கினால் ஒரு நட்சத்திரக் கொத்து PLEIADES பிரகாசிக்கும். இதை பைனாக்குலரில் பார்த்தால் ஏழு நட்சத்திரங்கள் தெரியும்; முருகனும் அவரை வளர்த்த ஆறு பெண்களும் என்று நாம் சொல்லலாம். ஒரையன் நட்சத்திரக் கூட்டம் செவ்வக வடிவில் இருப்பதால் யாரும் எளிதில் கண்டுபிடிக்கலாம். நாலு மூலைகளில் நான்கு விண்மீன்கள் இருக்கும். (கார்த்திகை = பிளையடஸ் PLEIADES )
XXXXX
8. வெளிநாட்டில் இதே காலத்தில் தீபாவளி போல பட்டாசு வெடிக்கிறார்கள்; சொக்கப்பனை கொளுத்துகிறார்கள்; கிறிஸ்தவ மதம் பரவும் முன்னரே இவை இருந்தன. இன்றும் நீடிக்கின்றன; ஆயினும் ஒவ்வொரு நாட்டிலும் ஹாலோவீன் நாள் HALLOWEEN DAY, GUY FAWKES DAY கை பாக்ஸ் டே என்றெல்லாம் புதிய கதைகளுடன் இணைத்துவிட்டனர் .லண் டனில் பட்டாசு முழக்கத்தைக் கேட்கலாம். சொக்கப்பனை கொளுத்துவது மட்டும் கிராமப்புறங்களில் மட்டும் நீடிக்கிறது . அன்றைத்தினம் பயங்கர உருவங்களை பறங்கிக் காயில் (PUMPKINS) வெட்டி அதற்குள் விளக்குகளை வைக்கிறார்கள் .
XXXX
9.அப்பம், நெல் பொரியை வெல்லப் பாகில் கலந்து செய்யப்படும் பொரி உருண்டை மற்றும் , பாயசம் சர்க்கரைப் பொங்கல் , வடை இருக்கும். பிராமணர் வீட்டில் கட்டாயம் அவல் / பொரி உருண்டையும் அப்பமும் இருக்கும் .
XXXX
10.தமிழ் அகராதியில் கார்த்திகை என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிகரான தமிழ் சொற்கள் – அறுமீன் , அழல், அங்கி, அளக்கர்,அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் (இதில் சில சொற்கள் தமிழ் அல்ல).
—-subham—-
Tags- கார்த்திகை பத்து , க்விஸ், கேள்வி பதில், பொரி , முருகன், சரவணப் பொய்கை,
திரிஸூர் (திருச்சூர்) மாவட்டத்தில் இருக்கிறது அங்கிருந்து 27 கிமீ. திருவனந்தபுரத்திலிருந்து 292 கி.மீ; கொச்சியிலிருந்து 80 கி.மீ ; கோழிக்கோட்டிலிருந்து 90 கி.மீ
சிறப்பு அம்சங்கள்
1. பிறந்த குழந்தையாக இருந்தபோதே உலகத்தில் அற்புதங்களை செய்து 120 வயது வரை அதிசயங்களைக் காட்டிய ஒரே கடவுள் கண்ணன். அவனைக் குழந்தை வடிவத்திலேயே தரிசிக்க உதவும் ஸ்தலம் குருவாயூர்.
2. நாராயண பட்டதிரி என்ற மஹான் தன்னுடைய நோய் நீங்க நாராயணீயம் பாடி, குவாயூர் அப்பன் புகழை உலகம் அறிய உதவினார்.
3. இங்குள்ள கண்ணன், அஞ்சனக் கல் என்ற விசேஷ கல்லில் செதுக்கப்பட்டுள்ளார்.
4. குருவாயூர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது துலாபாரம் தான். துலா என்றால் தராசு; அதில் ஒருவர் நின்று அவர் பாரம்/ எடை எவ்வளவோ அவ்வளவுக்கு தன்னால் இயன்றதைக் கொடுப்பது துலாபாரம். .நாட்டின் பிரதமர், ஜனாதிபதி முதல் சாலையில் செல்லும் பாமர பக்தன் வரை தங்கக்கட்டிகள் முதல் துளசி வரை எதையும் துலாபாரம் கொடுப்பார்கள். சேரன் செங்குட்டுவன் ஒரு பிராமணனுக்கு தன எடைக்கு எடை தங்கக்கட்டி கொடுத்த செய்தி சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. இந்துக்களின் துலா பரம் சுமேரியா வரை பரவியது. அங்கும் துலாபாரம் கொடுத்தனர். நாடு முழுதும் பல கோவில்களில் இது இருந்தாலும் குருவாயூர் துலாபாரத்தை மிஞ்ச எவராலும் முடியாது
5.குருவாயூர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் அடுத்ததாக நினைவுக்கு வருவது யானைகள்தான் ; இங்கு நடந்த யானைப் பந்தயத்தில் முதலாவது வரும் யானைதான் பகவானைச் சுமக்கும் பாக்கியம் பெற்றதாகும். கேசவன் முதலிய யானைகள் இவ்வாறு புகழ்பெற்று , ப க்தர்கள் சிலை யும் வைத்துவிட்டார்கள்
6.குருவாயூர் சென்ற எவரும் அருகிலுள்ள யானைகள் முகாமுக்கு செல்லாமல் வரமாட்டார்கள்; நூற்றுக் கணக்கான வளர்ப்பு யானைகளை ஒரு சேரக் காணலாம் .
7. நிர்மால்ய தரிசனம் ; முதல் நாள் செய்த அலங்காரத்தை அதி காலை 3 மணிக்கு கோவில் சந்நிதி திறந்தவுடன் கலைக்கத் துவங்குவார்கள் ; அந்த பழைய அலங்காரத்தில் காண்பது நிர்மால்ய தரிசனம்.
இதுவும் இங்கு ஒரு சிறப்பு .
xxxxx
கீழே உள்ளது சுய புராணம்; படிக்காமலும் அடுத்த பகுதிக்குப் போகலாம்
ஒரு எச்சரிக்கை :
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் குருவாயூர் கோவில் அருகில் லாட்ஜ் எடுத்து இரவு 2 மணிக்கே குளித்துவிட்டு கோவிலுக்குள் போய் நின்றோம். மராத்தான் போட்டி போல ஒரு 100 அல்லது 200 பேர் முதல் வரிசையில் நின்றோம் . எங்கள் தூரத்து உறவினரும் (அதே ஊர்க் காரர்) கூடவே வந்திருந்தார். சிக்னல்signal கிடைத்தவுடன் ஓடினோம். கொஞ் சம் தவறி விழுந்து இருந்தால் பின்னல் வந்தவர்கள் எங்களை மிதித்து chutney சட்னி ஆக்கி இருப்பார்கள். பின்னர் உறவினரிடம் சொன்னோம்; மிக்க நன்றி; வயதானவர்களுக்கு இதைக் காட்டாதே , அப்பா; கோவிலுக்குள் மரணம் ஏற்பட்டு நாள் முழுதும் கோவிலை மூடிவிடப் போகிறார்கள் என்று . ஆகவே ஓட்டப்பந்தயத்தில் வெல்ல முடிந்தால் மட்டும் நிர்மாலய தரிசனத்துக்குப் போங்கள் ; அந்தக் காலத்தில் இந்த அதி காலை 3 மணிக்கு எவரும் வந்திருக்கமாட்டார்கள் போலும்! இப்பொழுது எங்கும் கூட்டம் அதிகம் .
மக்களுக்குப் பேராசை பெருத்துவிட்டது; உழைக்காமலேrefugee அகதி என்று சொல்லி 10 பெட்ரூம் bed room வாங்கும் அயோக்கியர்கள் பெருத்து விட்டார்கள்; எனக்கு ஓட்டுப்போட்டால் இதுவும் அதுவும் free free ப்ரீ என்று சொல்லும் அயோக்கியர்கள், அதை நம்பும் மஹா அயோக்கியர்கள் நிறைந்த காலம் இது. கடவுளைக் கும்பிட்டு ,சுருக்கு வழியில், வேலை செய்யாமலே ப்ரமோஷன் வாங்க வேண்டும் என்று நினைக்கும் அ + பக்தர்கள் கோவிலுக்கு அதிகம் வருவதால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். ஆனால் எங்களைக் கூட்டிச் சென்ற உறவினர் எங்களுக்கு ஸ்பெஷல் சந்தன பிரசாதம் முதலியவற்றை வாங்கித் தந்ததையும் நன்றியுடன் நினைவு கூறுகிறேன் 1971–ம் ஆண்டில் என் பெரிய அண்ணன் கல்யாணம் குருவாயூரில் நடந்த பொழுது கோவிலுக்குள் ஓடிப்பிடித்து விளையாடினோம்;. கூட்டம் இல்லாத உண்மை பக்தர்கள் காலம் அது.)
xxxxx
8.குருவாயூருக்கு ஏன் அந்தப் பெயர் ?
குரு பகவானும் (ஜூப்பிட்டர் jupiter/ வியாழன்/ பிருஹஸ்பதி), வாயு பகவானும் வணங்கிய தலம் உலகில் ஏற்பட்ட முதல் சுனாமி TSUNAMI தாக்குதலை இந்துக்கள் பாகவத புராணத்தில் பதிவு செய்தனர் உலகிலேயே முதல் முதலில் சுனாமி பற்றி ரிப்போர்ட் செய்தவர்கள் இந்துக்களே; அவ்வளவு மஹா மேதாவிகள். துவாரகா (குஜராத்தில் உள்ள இடம்) மூழ்குவதை அறிந்த கண்ணன் தனது சிலையை மூழ்காமல் பாதுகாக்கும் பொறுப்பை உத்தவரிடம் கொடுத்தார். அவர் குருவையும் வாயுவையும் வேண்டிக்கொள்ள அவர்கள் அந்த சிலையை மீட்டெடுத்து குருவாயூரில் பிரதிஷ்டை செய்தனர் .
9.இதை பூலோக வைகுந்தம் என்றும் தென்னக துவாரகை என்றும் அழைப்பர்.; கேரள மக்கள் எப்போதும் முனங்கும் வேண்டுகோள் , குருவாயூரப்பா, காப்பாத்தப்பா என்பதுதான். ஏனெனில் இங்கு நடந்த அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம் ! பாமர மக்களுக்கு ஏற்பட்ட அற்புதங்களின் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது .
10.காண்டவ வனத்தை அர்ஜுனனும் கண்ணனும் அழிக்கப் போவதாக அறிவித்தனர். அந்த இடத்தில் வாழ்ந்த நாகர் என பொதுமக்கள் காடு திருத்தி நாடக்குவது மன்னர் கடமைதான். இருந்தாலும் காண்டவ கவனத்தை விட்டுவிடுங்களேன் என்று மன்றாடினார்கள் காண்டவ இனத்தவரை கோண்ட் GONDS என்றும் அந்த நிலத்தை கோண்ட்+ வன GOND+ VANA/FOREST என்றும் எழுதுவார்கள்; வெள்ளைக்கார முட்டாள் களும் நம்ம ஊர் முட்டாள்களும் அர்த்தம் புரியாமலே கோண்ட்வானா லாண்ட் GONDWANA LAND என்று மேப் MAP புகளில் எழுதி வருகின்றனர் ; நாகர் இனத்ததுக்கும் பாண்டவ இனத்துக்கும் இடையே பகைமை வளர்ந்தது. இந்த நேரத்தில் அந்த வம்சத்தில் வந்த பரீட்சித் ஒரு நாக சந்நியாசியை அவமானப்படுத்தவே ஏழே நாட்களில் உன்னை ஒரு நாகன் கொல்லுவான் ; பிடி சாபம் என்கிறார். பரீட்சித் பிரம்மாண்ட பாதுகாப்பு அரணை ஏற்படுத்தி ஒளிந்து கொண்டார்; அரண்மனைக்குள் பழங்கள் கொண்டுவரும் கூடையில் ஒரு நாகர் ஒளிந்து வந்து பரீட்சீத்தைத் தீர்த்துக்கட்டினார் ; உடனே அவர் மகன் ஜனமேஜயன் , கிடைத்த நாகர்களை பிடித்து படுகொலை செய்யவே ஆஸ்தீகர் என்பவர் தலையிட்டு சமாதான உடன்படிக்கை செய்வித்தார் ( இந்த வரலாற்று முக்கியம் வாய்ந்த உடன்படிக்கையை பிராமணர்கள் தினமும் நர்மதாயை நமஹ என்ற மந்திரத்தில் சொல்லி வருகின்றனர் ).
இப்படி நாகா இன மக்களை பரீட்சித்தின் மகன் ஜனமேஜயன் படுகொலை செய்ததால் அவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. அவனை குருவாயூருக்குப் போய் தவமிருந்தால் குஷ்ட நோய் நீங்கும் என்று தத்தாத்ரேயர் அறிவுரை வழங்கினார். அவரும் அவ்வாறே செய்து நோய் நீங்கியதால் குருவாயூரப்பன் மஹிமை எல்லோருக்கும் புரிந்தது .
தொடரும் ……………………………………..
–SUBHAM—
TAGS– கேரள கோவில்கள், PART 27, குருவாயூர் கிருஷ்ணன் கோவில் , நிர்மால்ய தரிசனம், துலாபாரம் , யானைகள் முகாம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொங்குமண்டல சதகம் பாடல் 21
சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு
ச. நாகராஜன்
சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் நிகழ்ந்த அற்புத வரலாறை 16ஆம் பாடலில் விரிவாகப் பார்த்தோம்.
முதலை வாயில் அகப்பட்ட சிறுவனை மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் திரும்பி வரச் செய்து அக்குழந்தையின் தாயின் துயர் போக்கினார் சுந்தரர்.
இது நடந்த இடம் அவிநாசி. அங்கிருந்து கிளம்பிய சுந்தரர் அடர்ந்த காட்டினூடே சென்று வழி தெரியாது திகைத்தார்.
உலகத்தையே ஈன்ற கன்னி வேடச்சியாகவும், எல்லாம் வல்ல இறைவன் வேடனாகவும் தோன்றி வழி காட்டுவதற்காகத் துடியலூருக்குள் புகுந்தனர்.
அம்மையும் அப்பனும் திடீரென்று மறையவே சுந்தரர் அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று அகத்தீஸ்வரரையும் அருந்தவச் செல்வியம்மையையும் முறையாக வணங்கிப் பாடிப் பணிந்தார்.
“உணவருந்திச் செல்க” என ஆகாயத்திலிருந்து அசரீரி ஒலி ஒன்று ஒலித்தது.
கணநாயகர் பல்வகையான உணவுடன் காட்டு முருங்கையிலை, காய்கறியும் ஆக்கிப் படைத்தனர்.
தனது பரிஜனங்களோடு விருந்தை உண்ட சுந்தரர் கடவுளைப் பாடி வணங்கி விடை பெற்றுச் சென்றார்.
கொங்குமண்டலத்தில் துடியலூர் இருப்பது ஆறைநாடு.
இதை துடிசை புராணம் விரிவாக விளக்குகிறது.
சொல்லரும் கிராத வேடந் துணைவியுந் தானுங் கொண்டு
மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ வன்று
ஒல்லுநர் தம்மை நோக்கி யுயங்குத லொழித்தி யென்று
வல்லுரந் தன்னி னல்ல வழிதனைக் காட்டி யாங்கே
கடிய தானமுட் கான முருங்கையி
னெடிய காயட காதிய நெய்சுவைப்
பொடி விராய பொறித்த புளிக்கின
முடிவி லாத முதிர்கறி பாகரோ (துடிசைப் புராணம்)
திரு அவிநாசிப் புராணம் இது பற்றி இப்படிக் கூறுகிறது:
சுந்தரரது தேவாரத்தில் வாள்கொளி புத்தூர் பாடலில் உள்ள பாடல் இது:
திருவின் நாயகன் ஆகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாவறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே
இந்த அற்புத வரலாற்றை கொங்கு மண்டல சதகம் பாடல் 21இல் பதிவு செய்கிறது இப்படி:-
வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியிளங்
காட்டு முருங்கை யிலைகாய்நெய் பெய்து கறிசமைத்துப்
பாட்டு முழக்குவன் றொண்டர்க் கன்னம் படைத்துநரை
மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் ; வழி தெரியாது மயங்கும் சுந்தரருக்கு (வன்றொண்டருக்கு) வேட வடிவம் பூண்டு வழி காட்டுவித்து, காட்டு முருங்கையிலை காய் கறியுமாக்கி விருந்து செய்த விருந்தீசுரர் விளங்கும் துடியலூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.
துடியலூர் தற்போதைய கோவை மாவட்டத்தில் உள்ள தலமாகும்.
***
கொங்குமண்டல சதகம் தொடரில் விடுபட்டுப் போன பாடல் இது.
1.காஞ்சன ச்ருங்கம் என்ற இமயமலை சிகரத்தை சங்கத் தமிழ் நூல்கள் எப்படி மொழிபெயர்த்தன ?
xxxxx
2.இமய மலையைப் புகழ்ந்து காளிதாசன் எழுதிய முக்கியப் பாடல்கள் எந்த நூலில் உள்ளன ?
xxxxx
3.சேரன் செங்குட்டுவன் இமய மலைக்குப் போனது ஏன் ?
xxxx
4.இமயமலைக்கு சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உள்ள பெயர்கள் என்ன?
xxxx
5.ஹிமாலயத்தில் உருவாகும் மூன்று பெரிய நதிகளின் பெயர்கள் என்ன?
xxxxx
6.சிவ பெருமான் உறையும் கயிலாய மலை எந்த நாட்டில் உள்ளது?
xxxxx
7.இமய மலையில் உள்ள சிகரங்களில் இந்திய எல்லைக்குள் உள்ள பெரிய சிகரம் எது?
xxxxx
8.இமய மலையில் உள்ள இந்துக்களின் முக்கிய புனிதத் தலங்கள் எவை?
xxxxxx
9.இந்த மலையின் நீளம் என்ன ?
xxxx
10.இந்த மலையில் உள்ள கணவாய்களின் பெயர்கள் என்ன ?
xxxxxx
விடைகள்
1.இப்பொழுது கஞ்ஜன் ஜங்கா என்று அழைக்கப்படும் இமயமலைச் சிகரம் புறநானூற்றின் இரண்டாவது பாடலிலேயே முரஞ்சியூர் முடிநாகராயரால் பாடப்பட்டிருக்கிறது. காஞ்சன ஸ்ருங்கம் என்ற அருமையான சம்ஸ்கிருதச் சொல்லை இப்படிக் கஞ்சன் ஜங்கா ஆக்கிவிட்டனர். ஆனால் புறநானூற்றில் அழகாக பொற்கோடு என்று மொழிபெயர்க்கப் பட்டிருக்கிறது. இமயமலை பற்றி முடிநாகராயர் பாடியது அப்படியே காளிதாசனின் குமார சம்பவத்தில் இருக்கிறது. இதுதவிர பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னனை காரிகிழார் பாடிய ஆறாவது பாடலிலும் இமயமலை வருணனை வருகிறது. இவையெல்லாவற்றையும் காளிதாசன், சங்க காலத்துக்கும் முந்தைய புலவன் என்ற எனது ஆராய்ச்சிக் கட்டுரையில் விளக்கி விட்டேன்.
XXXX
2.காளிதாசன் குமார சம்பவ காவியத்தில் முதல் பத்து பாடல்களில் இமயமலையை வருணிக்கிறார் ; இதை சங்கப்புலவர்கள் பல இடங்களில் மொழிபெயர்த்துப் யன்படுத்தினர் ; இதன் மூலம் காளிதாசன், சங்க காலத்துக்கு முன்னர் வாழ்ந்தவர் என்பது சந்தேகமறத் தெரிகிறது
xxxx
3. கண்ணகி என்பவள் பத்தினித் தெய்வம் என்று இளங்கோ நிலை நாட்டியதால், புனித இமய மலையில் கல் எடுத்து, சிலை வடித்து, அதைப் புனித கங்கையில் கழுவி கொட்டுவரவுவதற்காக இமயம் சென்றான் செங்குட்டுவன்; அவன் ஏற்கனவே தனது தாயார் புனித ஸ்னானம் செய்வதற்கு கங்கை சென்று வந்தவன் என்பதும் குறிப்பிட்டது தக்கது.
xxxx
4.பொற்கோட்டு இமயம், வட பெருங்கல் , பேரிசை இமயம், பனி படு நெடுவரை என்பன சங்கத் தமிழ் நூல்களிலும், சிலப்பதிகாரத்திலும் , ஹிமாத்ரி , ஹிமாலய , ஹிமவத் , ஹிமவான், பர்வதேஸ்வர , என்பன வேதம் முதல் காளிதாசன் வரை சம்ஸ்க்ருதத்தில் உள்ளன
ஹிமம் என்றால் பனி; அது உறையும் இடம் ஹிம+ ஆலயம்
xxxx
5.இமய மலையில் மானஸ சரோவர் என்னும் மாபெரும் புனித ஏரியுள்ள வட்டாரத்தில் சிந்து பிரம்மபுத்ரா , கங்கை ஆகிய மூன்று பெரிய நதிகள் உற்பத்தியாகின்றன
xxxx
6.மவுண்ட் கைலாஷ் எனப்படும் கயிலாய மலை திபெத் நாட்டில் உள்ளது; தற்பொழுது திபெத் நாட்டினை சீனா ஆக்கிரமித்துள்ளது .
xxxxx
7.பொற்கோட்டு இமயம் என்னும் காஞ்சன ஸ்ருங்கம் , இந்திய எல்லைக்குள் உள்ள மிக வயர்ந்த இமய சிகரம் ஆகும் Kangchenjunga 8586 metres; எவரெஸ்ட் என்னும் உலகிலேயே உயர்ந்த சிகரம் திபெத்- நேபாள எல்லையில் உள்ளது ; இந்தியாவில் இல்லை.
xxxx
8.இமயமலையில் இந்துக்கள் வணங்கும் சார் தாம் என்னும் நான்கு புனிதத் தலங்கள் — கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத்
XXXXX
9.இமய மலையின் நீளம் சுமார் 1550 மைல் ;1,550 miles (2,500 km)
xxxxx
இந்திய எல்லைக்குள் வாரும் முக்கிய கணவாய்கள் – காரகோரம், பீர்பஞ்சால், பனிஹல் , பர்சைல் , பென்சி கணவாய்கள்
கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 26
கோவில் எண்–28 காலடி க்ஷேத்ரா , ஆதி சங்கரர் அவதரித்த புனித ஸ்தலம்
ஆதி சங்கரர் அவதரித்த காலடி – 26
இந்திய தத்துவ ஞானிகளில் முன்னனியில் நிற்பவர் ஆதி சங்கரர். உலகம் வியக்கும் அற்புதங்களைச் செய்தவர். அவர் பிறந்த இடம் எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கிறது. காலடி என்பது ஊரின் பெயர் .கொச்சி நகரிலிருந்து 45 கி.மீ தொலைவில் இருக்கிறது.
அவர் அவதரித்த ஊர் பூர்ணா நதிக்கரையில் இருக்கிறது.; அவரது காலம் கி.பி 732 என்று சிலரும், காஞ்சி மஹா சுவாமிகள் போன்றோர் சங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியவர் என்றும் வாதிடுவர். ஆதி சங்கரர் போலவே “மீணடும் ஒரு புதிய சங்கரர் = அபி நவ சங்கர” என்ற பெயரில் மீண்டும் ஒருவர் தோன்றி சங்கரர் போலவே செயற்கரிய செயல்களை செய்ததால் இந்தக் குழப்பம் .
ஆதி சங்கரர் என்ன அத்புதங்களைச் செய்தார் ?
1. இந்தியாமுழுதும் — கன்யா குமாரி முதல் காஷ்மீரில் ஸ்ரீ நகர் வரை சென்று கோவில்களையும் மடங்களையும் ஸ்தாபித்தார். வெள்ளைக்காரன்தான் இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்தினான் என்று பேசும் அரைவேக்காடுகளுக்கு அவர் இந்தியாவின் நான்கு மூலைகளில் ஸ்தாபித்த 4 மடங்கள் தக்க பதில் பகரும் .
2. முக்கிய உபநிஷதங்களுக்கு, விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கு , பகவத் கீதைக்கு பிரம்ம சூத்தரத்துக்கு உரை எழுதி உலக சாதனை ஏற்படுத்தினார். உரைச் சக்கரவர்த்தி என்று சொல்லலாம். அவருக்கு அடுத்தபடியாக உரை எழுதிய ஒரே ஆள், மதுரை பாரத்வாஜ கோத்ர பிராமணன் நச்சினாக்ர்க் கினியர் ; அந்தப் பார்ப்பான் உரை எழுதாவிடில் தமிழ் மொழியே அழிந்து போயிருக்கும்; ஒரு பயலுக்கும் புறநானூற்றுக்கும் அக நானூற்றுக்கும் அர்த்தம் தெரியாமல் கருணாநிதி, நெடுஞ்செழியன் விஷ (ம) உரை எழுதி இருப்பார்கள்
3. ஏராளமான ஸ்லோகங்களை எளிய சம்ஸ்க்ருத மொழியில் எழுதி இன்றுவரை அவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன ; இதில் ஆதி சங்கரர் எழுதியது எவை? அவரைப்போலவே 100க்கு 100 அச்சுபோல போல வந்த அபிநவ சங்கரர் எழுதியது எவை? என்ற சர்ச்சையில் இறங்க எந்த மடத்து சங்கராச்சார்யாரும் தயாராக இல்லை. மொழியியல் அறிஞர்கள் முடிவு சொல்ல வேண்டிய விஷயம் அது ( ஆதி சங்கரர் காலம் பற்றி நான் எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை இதே பிளாக்கில் உள்ளது.)
4.ஆதி சங்கரர் போல வாதம் செய்தவரும் இல்லை; வாதத்தில் வென்றவரும் இல்லை; இந்தக்கால அயோக்கியர் நடத்தும் டெலிவிஷன் விவாதம் போல அல்லாமல், நியாயமான விவாதம்; அதில் தோற்றவர் மனம் உவந்து குருவின் கட்டளைக்குப் பணிந்தனர்; இதன் மூலம் மாபெரும் அத்வைத தத்துவத்தை ஆதி சங்கரர் உலகெங்கும் பரப்பினார்; அதை ஆங்கிலத்தில் பரப்பியவர் சுவாமி விவேகானந்தர்.
5. சாலைகள் பாலங்கள், கூகுள், இன்டெர்னட், விமானங்கள் , வாட்ஸப் , மொபைல் போன்களுடன் ,25 பேர் துப்பாக்கிகளுடன் பின் தொடரும் போலி பிபிசி அட்டன்பரோக்களைப் புகழும் அரை வேக்காடுகளுக்கு சங்கரர் அத்புதங்கள் புரியாது . இவை எதுவுமே இல்லாத காலத்தில் அவர் நாட்டை வல ம் வந்து மடங்களை நிறுவினார்.
6. இவை தவிர அவர் ஒரு ஏழைக்கு இறங்கி கனகதாரா ஸ்தோத்திரம் பாடியவுடன் தங்க நெல்லிக்காய் மழை பெய்தது போல ஏராளமான அற்புதங்கள் !
இவ்வளவு சேவைகளைச் செய்த சங்கரரை நினைத்தாலே புண்ணியம்; அந்த தலத்தை , அவரது மடத்தை , பிறந்த இடத்தை மிதித்தால் எவ்வளவு புண்ணியம்!!
(நான் காலடி தலத்தை காரில் அடையும் போது நள்ளிரவு; இருந்த போதிலும் மடத்துக்கு வெளியே காரில் இருந்தவாறே கும்பிடு போட்டுவிட்டு அதிகாலை பிளைட்டில் Flight கொச்சியில் ஏறி லண்டன் வந்தேன்; அப்போது நான் இந்தியாவில் இருந்தது 24 மணி நேரமே; அதற்குள் ஒரு கல்யாணம், ராமர் கோவில், பரதன் கோயில், சிவன் கோவில் எல்லாவற்றையும் முடித்தேன்; மறக்க முடியாத 24 மணி நேர இந்திய விஜயம்).
7. நாஸ்தீக நேருஜி கூடப் புகழ்ந்த ஒரு தீர்க்கதரிசி சங்கரர்; 90க்கும் மேற்பட்ட துர் மதங்களை அழித்துத் துடைத்து ஆறு சமயங்களை ஸ்தாபித்தார்.
சங்கரர் – முதலை கதை
எல்லோருக்கும் தெரிந்த கதை; ஆதலால் மிகச் சுருக்கமாக — திருச்சூரைச் சேர்ந்த ஆர்யாம்பா- சிவகுருவுக்கு நீண்ட காலமாக குழந்தை பிறக்கவில்லை; த்ரிசூர் வடக்கு நாத சிவனை வேண்டவே சங்கரர் அவதரித்தார். அம்மாவுடன் பூர்ணா நதியில் குளிக்கச் சென்றார். முதலை , சங்கரன் காலைப் பிடித்தது; அம்மா! இந்தப் பிறவி எனக்கு இத்தோடு முடிந்தது; என்னை சந்நியாசி ஆக அனுமதித்ததால் அது என்னை உயிர் தப்பவிடும் என்றார் ; அம்மாவின் மனம் உலகம் முழுதும் ஒன்று போல் இருக்கும்; நீ பிழைத்தால் போதும் மகனே; எங்கிருந்தாலும் நீ வாழ்க என்றாள் . முதலை மறைந்தது. 16 வயதுக்குள் சாஸ்திரம் என்னும் சமுத்திரத்தின் கரை கண்டார்; 32 வயது வரை வாழ்ந்து இறைவனடி சேர்ந்தார். அவருடைய குரு, நர்மதை நதிக்கரையில் வசித்த கோவிந்த பகவத்பாதர்; அவர் வாதத்தில் வென்ற புகழ்மிகு அறிஞர் மண்டன மிஸ்ரர்; சங்கருக்கு 4 முக்கிய சிஷ்யர்கள் — ஹஸ்தாமலகர் , சுரேஷ்வரர் , பத்மபாத ஆச்சார்யா, தோடகாச்சார்யா.
காலடியில் சங்கரர் கோவில் தவிர, கீர்த்தி ஸ்தம்பம் (வெற்றித் தூண்) ஒன்றும் உள்ளது. நாடு முழுதும் பல இடங்களில் சங்கரர் சிலைகளும் உள்ளன. நாட்டின் வடகோடியில் இமயமலையில் அவர் ஸ்தாபித்த சாரதாம்பாள கோவிலும் காஷ்மீரின் தலைநகரில் அவர் ஸ்ரீ சக்கரத்தை ஸ்தாபித்து ஸ்ரீ நகர் என்று பெயரிட்டதும் இவர் புகழை இமயத்தின் உச்சிக்கு ஏற்றிவிட்டது
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !!
—SUBHAM—
TAGS- கேரள மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள்,
PART 26, கோவில் எண் 28 , காலடி க்ஷேத்ரா , ஆதி சங்கரர் , புனித ஸ்தலம்,