கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 15
PART 15
கோவில் எண் 14 – செங்கன்னூர் /செங்கண்ணூர் /திருச் செங்குன்றூர் கோவில்
இந்த ஊரின் பெயரை மூன்று வித ‘ஸ்பெல்லிங்’ SPELLINGS குகளுடன் எல்லோரும் எழுதுகின்றனர் . கோவில் பற்றிய நிறைய உண்மைச் சம்பவங்கள் உள்ளன. அவைகளைக் காண்பதற்கு முன்னால் , கோவிலின் சிறப்பு அமசங்களை புல்லட் பாயிண்டுBULLET POINTS களில் காண்போம் .
கோவில் எங்கே இருக்கிறது?
.கோட்டயத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கிறது . இருப்பிடம் – ஆலப்புழை மாவட்டம் .
சிறப்பு அம்சங்கள்
அஸ்ஸாம் போலவே மாத விலக்கு MENSES OF GODDESS உள்ள கோவில் . அஸ்ஸாம் மாநில கெளஹாத்தி நகரில் அன்னை காமாக்யாவின் அதிசய கோவில் உள்ளது . ஆண்டுதோறும் அங்கு தேவிக்கு மாதவிலக்கு என்று கோவிலை மூடிவிடுடுவார்கள் . அங்கும் தேவியின் இடுப்பின் கீழ்ப்பகுதி விழுந்ததால் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்று கருதப்படுகிறது. செங்கன்னூரில் மாதம்தோறும் நடந்த பாதவிலக்கு இப்போது வருடத்தில் 3, 4 தடவை மட்டுமே ஏற்படுகிறது .
இத்தலம் விறன்மிண்ட நாயனார் அவதரித்த திருத்தலமாகும்.
தேவார வைப்புத் தலங்களில் ஒன்று .
மகாதேவர் / சிவன் கோவில் என்பதே உண்மை; ஆயினும் அம்மனின் அதிசய மாதவிடாய் காரணமாக அவள் புகழ் பரவி பகவதி/ பார்வதி கோவில் ஆகிவிட்டது.
கோவிலில் புராண, ராமாயண, மஹாபாரத சிற்பங்கள் உள்ளன
இதுதான் கோவலன் புஷ்பக விமானத்தில் வந்து கண்ணகியை சொர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்ற கண்ணகியின் திருச் செங்குன்று என்றும் நம்பிக்கை உள்ளது
மஹாதேவர், பகவதி சந்நிதிகள் தவிர ஏனைய கடவுளரின் சந்நிதிகளும் உள .
கதை 1
உலகிலேயே முதல் முதலில் மக்கட் தொகை பிரச்சினை, குடியேற்றப் பிரச்சினையை கருத்திற்கொண்டது (FIRST REPORT OF POPULATION EXPLOSION AND MIGRATION) இந்துமதமே . சிவ பெருமானுக்கும் பார்வதிக்கும் இமயமலை கைலாசத்தில் திருமணம் DIVINE WEDDING நடக்க விருந்ததை ஒட்டி ஏராளமானோர குழுமிவிட்டனர். சிவன் உடனே பாப்புலேஷன் எக்ஸ்ப்ளோஷன் POPULATION EXPLOSION பற்றி சிந்தித்தார். அதே நேரத்தில் தென்னாட்டில் ஜனத்தொகை குறைவு என்பதையும் அறிந்து 18 ஜாதி மக்களை தமிழ் நாட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு அகத்திய முனிவரைப் பணித்தார் (FIRST ORGANISED MIGRATION) . போகும் வழியில் விந்தியமலையை கர்வ பங்கம் செய்தல் (அதாவது மலையை மட்டம்தட்டி ரோடு போடுதல் ROADWAYS WORK), தமிழ் நாட்டில் இலக்கணம் கெட்டுக்கிடக்கும் தமிழ் மொழிக்கு இலக்கணம் அமைத்தல் (WRITING GRAMMAR OF TAMIL LANGUAGE) ஆகிய பணிகளையும் ஒப்படைத்தார். அகஸ்தியருக்கு ஒருபுறம் மகிழ்ச்சி ஒருபுறம் வருத்தம். பெரிய காரியங்களை (BIG TASKS) சிவன் தன்னை நம்பி ஒப்படைப்பதால் தன்னை அந்த அளவுக்கு சிவன் உயர்த்திவிட்டாரே என்று மகிழ்ந்தார். அதே நேராத்தில் அரிய , பெரிய திருமணத்தை , கல்யாணச் சாப்பாட்டினை MISS மிஸ் பண்ணப்போகிறோமே என்று வருத்தப்பட்டார் . சிவனிடம் முறையிட்டபோது , அன்பரே , கவலைப் படாதீரும் ; நேரடி ஒளிபரப்புச் DIRECT TELECAST ARRANGED செய்கிறேன்; திருமணத்தை தென்னாட்டில் இருந்துகொண்டே ZOOM ஜூம் வழியாகக் காண்பதற்கு அருள் புரிவேன் என்றார் அவ்வாறே நிகழ்ந்தது என்பதை திருவிளையாடல் புராணம், புறநானூற்றின் நச்சினார்க்கினியர் உரை, பாரதி பாடல் (ஆதி சிவன்பெற்று விட்டான்…..) முதலியவற்றிலிருந்து அறிகிறோம் .
ஆனால் செங்கன்னூர் தல வரலாற்றில் கூடுதல் அம்சமும் உளது. அகஸ்திய மாமுனிவர், சிவன் கட்டளைப்படி SONADRI சோனாத்ரி (செங்குன்று ) மலையில் தங்கி தவம் செய்த்துக்கொண்டிருந்த போது பார்வதியும் பரமசிவனும் வந்து தங்கியதாகவும் அப்போது தேவிக்கு மாத விலக்கு (மாதவிடாய் ) ஏற்பட்டதால் 28 நாட்களுக்கு மட்டும் அம்மையப்ப னின் தரிசனம் கிடைத்ததாகவும் தல வரலாறு பகர்கிறது .
கதை 2
சிலப்பதிகாரத்தில் உள்ள கோவலன் – கண்ணகி கதையை அறியாத தமிழ் மகன் கிடையாது கோவலனை அநியாயமாகக் கொன்ற பாண்டிய மன்னரையும் அவனது மனைவியையும் HEART ATTACK ஹார்ட் அட்டாக்கில் இறக்கச் செய்துவிட்டு, மதுரை நகரில் இருந்த தீயோர் பகுதியை தீக்கிரையாக்கிவிட்டு SETTING FIRE TO MADURAI CITY கேரளத்தில் உள்ள செங்குன்று RED HILLS ஊரில் ஒரு மரத்துக்கு அடியில் நின்று தவம் செய்தாள் ; அப்போது கோவலன் விசேஷ விமானத்தில் SPECIAL PLANE வந்து இந்த ஊரில் தரை இறங்கினார். அதை காட்டில் வாழ்ந்த வேடர்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து நின்றனர் கண்ணகி அதில் ஏறிக்கொண்டவுடன் அவள் DIRECT FLIGHT TO HEAVEN டைரக்ட் பிளைட்டில் சொர்க்கம் சென்றாள் . இதற்குப் பின்னர் அந்தக் காட்டுக்கு OFFICIAL ROYAL VISIT அபிஷியல் வீசிட் மேற்கொண்ட மஹாராஜா செங்குட்டுவன், அவருடைய தம்பி இளங்கோ/PRINCE , ராணியம்மா ஆகியோரிடம் காட்டு மக்கள் கதை, கதையாகச் சொன்னார்கள்; செங்குட்டுவனுக்கு ஒரே ஆச்சக்காரியம் . அடக்கடவுளே யாராவது அந்தக் கண்ணகி- கோவலன் பற்றி எழுதக்கூடாததா என்றார் மாமன்னர். அருகிலிருந்த சீத்தலைச் சாத்தனார் எனக்கு I KNOW THE FULL STORY புல் ஸ்டோரியும் தெரியும். இதோ நான் சொல்கிறேன் என்றார் . உடனே இளங்கோ எழுத்தாணியை எடுத்துக்கொண்டு பனை ஓலையில் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமாக நமக்கு யாத்துத்தந்தார். அவ்வளவு சிறப்புடையது இந்த ஊர்.
கதை 3
கர்னல் மன்றோ கண்ட அதிசயம் COL. MUNRO’S EXPERIENCE
வெள்ளைக்காரன் ஆட்சியில் திருவாங்கூர் சமஸ்தானத்தின் ஆஸ்தான திவான் ஆக இருந்தவரின் பெயர் COL. MUNRO கர்னல் மன்றோ. அவர் தனது பணியின் ஒரு பகுதியாக மஹாதேவர்/ பகவதி கோவில் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக்கொண்டு வந்தார். தேவியின் திருப்புனித நாள் செலவு GODDESS’ MENSES EXPENSES செல்வது என்ற வரியையும் தொகையையும் பார்த்துவிட்டு வெடிச் சிரிப்பு சிரித்தார். ஏண்டா பசங்களா, யானைக்கு அல்வா வாங்கிப்போட்டதாக கணக்கு எழுதிய கதையெல்லாம் கேட்டவன் நான்; என்னையே ஏமாற்றுகிறீர்களா ? பழமும் தின்னு கொ ட்டையும் போட்டவன் நான் என்று சொல்லி பேனாவால் ஒரு கிராஸ் CROSSED OUT போட்டு இனிமேல் இதற்கெல்லாம் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.அன்று அவருடைய மனைவிக்கும் மாதவிடாய் ஏற்பட்டது ; குழந்தைகளுக்கும் காய்சசல் வந்தது ஆனால் இடைவிடாத ரத்தப்போக்கு ஏற்பட்டவுடன் மருத்துவர்களை அழைத்து சிகிச்சை தரச் சென்னார் ; அப்படியும் அது நிற்கவில்லை; உடனே மலையாள ஜோதிட சிகாமணிகளை அழைத்து பிரஸ்னம் போட்டுப்பார்த்தார் . அதில் கிடைத்த விடை இது தெய்வக்குற்றம் ; சாந்தி செய்ய வேண்டும் என்று பதில் வந்தது அப்போது ராணி லக்ஷ்மிபாய் (1810-1814) ஆட்சி நடந்து கொண்டிருந்தது. உடனே கர்னல் மன்றோ கோவில் கணக்கை தான் ஆதரிப்பதாகவும் ஆண்டுதோறும் வேண்டிய செலவைச் செய்யலாம் என்றும் உத்தரவிட்டு, சொந்தப பணம் 700 ரூபாயையும் செலவுக்குக் கொடுத்தார் பின்னர் மனைவியும் குழந்தைகளும் சுகம் அடைந்தனர் .
மேலும் சில உண்மைச் சம்பவங்களைத் தொடர்ந்து காண்போம்.
To be continued……………………………………………….
TAGS- கேரளம், புகழ்பெற்ற ,108 கோவில்கள், PART 15, செங்கன்னூர், PART 15
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
22-11-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
26-11-23 அன்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும். கட்டுரை இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!
இரண்டாம் பகுதி
ச.நாகராஜன்
திருவண்ணாமலை தீபம்
பஞ்சபூத தலங்களில் அக்கினி தலமாக விளங்கும் திருவண்ணாமலை தலத்தை நினைத்தாலேயே முக்திப் பேற்றைப் பெறுவர் என்பது அறநூல்கள் தரும் அற்புத உண்மை. இந்தத்தலத்தைப் பற்றிய புராண வரலாறு அனைவரும் அறிந்த ஒன்றே!
ஒருமுறை தமக்குள் யார் பெரியவர் என்ற போட்டி பிரம்மா, திருமால் ஆகியோருக்கு இடையே எழ, சிவபிரான் அவர்களிடம் தனது அடியையோ முடியையோ யார் காண்கிறாரோ அவரே பெரியவர் என்று கூறினார். அவர் பெரும் ஜோதிப்பிழம்பாகத் தோன்ற பிரம்மா, திருமால் இருவராலும் அடி, முடியைக் காண இயலவில்லை. இருவரின் அகங்காரம் அழிந்து பட அந்தக் கணத்தில் ஜோதிப் பிழம்பிலிருந்து சிவபிரான் சிவலிங்கத் திருவுருவில் வெளி வந்தார். ஜோதிப் பிழம்பே அருணாசலம் ஆனது.
இந்த மலையைப் பற்றி பகவான் ரமண மஹரிஷி கூறுகையில், ‘கைலாயத்தில் சிவன் உறைகிறார். ஆனால் இந்த மலையே சிவபிரான் தான்” என்று கூறியருளினார். ஆக இங்கு கிரிவலம் பெரும் சிறப்பைப் பெறுகிறது.
இங்கு கார்த்திகை தீபத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி தீபம் ஏற்றப்படும். இறைவனின் கர்ப்பக்ருஹத்தில் கற்பூரம் ஏற்றப்பட அதிலிருந்து ஒரு மடக்கில் (அகல்) நெய்த்திரியிட்ட விளக்கு ஏற்றப்படுகிறது. நந்திதேவர் முன்னிலையில் ஏற்றப்படும் ஐந்து நெய்விளக்குகள் பஞ்ச மூர்த்தங்களைக் குறிக்கும். அம்மன் சந்நிதியில் ஏற்றப்படும் ஐந்து நெய்த்திரி மடக்குகள் பஞ்ச சக்தியைக் குறிக்கும். மாலையில் அனைத்து தீபங்களும் ஒன்று சேர்க்கப்பட்டு, அனைத்தும் இறைவனில் ஐக்கியம் என்ற உண்மையைப் புலப்படுத்தும். அன்று மட்டும் ஆண்டு முழுவதும் வெளிவராத அர்த்தநாரீஸ்வரர் திருவீதி உலா வருவார்.
சிவபிரானின் இடப்பாகத்தில் அன்னை இடம் பெற்றது கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நன்னாளிலே தான்.
ஒன்று சேர்க்கப்பட்ட தீபங்கள் கொடிமரம் அருகே அடையாளமாக அசைக்கப்பட மலை மீது தீபம் ஏற்றப்படும்.
பல மைல் தூரம் தெரியும் இதைப் பார்த்தாலேயே அனைத்துப் பாவங்களும் போகும். நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.
ஐந்து அடி உயரமுள்ள பிரம்மாண்டமான கொப்பரையில் பசுக்களின் நெய் தாரை தாரையாக ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்பட லட்சக்கணக்கான மக்கள் அதை தரிசித்து வழிபடுவது இன்றளவு நடக்கும் ஒரு தெய்வீக நிகழ்வாகும்.
வள்ளலார் விளக்கும் தீப மகிமை
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என்ற தாரக மந்திரத்தை வழங்கிய வள்ளலார் பெருமான், இல்லத்தில் தீபம் ஏற்றுவதன் முக்கியத்துவத்தைப் பலவாறாக விளக்கியுள்ளார். அவற்றில் ஒரு சிறு பகுதி இது (அவரது சொற்களிலேயே தரப்படுகிறது) :-
“இரவில் தீபமில்லாத இடத்தில் இருக்கப்படாது. ஏனெனில், அப்படியிருந்தால் அது ஆயுள் நஷ்டத்தை உண்டுபண்ணும் ஆகையால் நாம் வாழுகிற வீட்டில் தீபத்தை வைத்து ஆயுளை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.”
“தீபத்தில், ஒளி, சோபை, பிரகாசம் என்ற மூன்றில் பிரகாசம் காரண அக்கினி. சோபை காரணகாரிய அக்கினி. ஒளி காரிய அக்கினி.”
ஆயுளை தீர்க்கமாக்கும் தீபமேற்றுதல் குறித்த முழு விளக்கத்தையும் அவரது உபதேசக் குறிப்புகளில் காணலாம்.
நட்சத்திரமாலை விளக்குகள்
பாரத தேசத்தில் இமயம் முதல் குமரி வரை உள்ள ஆலயங்களில் தினமும் ஏற்றப்படும் தீப வகைகள் ஏராளம். விளக்குகளில் மட்டும் சுமார் ஐநூறு வகைகள் உண்டு. இவை அனைத்துமே நலம் தருபவையே. ஒளிச் சுடர் விளக்குகள் ஆங்காங்கே உள்ள மக்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்ய ஏற்றப்படுகின்றன.
ஆலயங்களுக்குச் செல்வோர் இறைவனைத் தொழும் போது ஏற்படும் நலன்களை இந்த விளக்குகள் தூண்டி விடுகின்றன. இந்த வகையில் எடுத்துக்காட்டாக, ஒரே ஒரு தலத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
பாண்டி வளநாட்டில் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளதும் பழம்பெரும் நூல்களால் போற்றிப் புகழப்படுவதுமாகிய ஒரு சிவத் தலம் திருப்பெருந்துறை ஆகும்.
இந்தத் திருக்கோயிலில் இடப்படும் தீப வகைகள் சிறப்புப் பெயர் பெற்று விளங்குகின்றன.
அவையாவன:
நட்சத்திரமாலை : இதிலுள்ள தீபங்கள் இருபத்தேழு. சக்கரத்தில் இருபத்துநான்கு. மேலே மூன்று. இது இங்குள்ள ஆறு சபைகளுள் ஒன்றான ஆனந்தசபையின் மூலஸ்தானத்திற்குப் பின்னால் உள்ளது.
கலா தீபம் : இதிலுள்ள தீபங்கள் ஐந்து. இது சித் சபையில் உள்ளது.
வர்ண தீபம் : வர்ணம் என்றால் எழுத்து என்று பொருள். இதில் உள்ள தீபங்கள் ஐம்பத்தொன்று. இது சத்சபையில் உள்ளது.
தத்துவ தீபம் : இதிலுள்ள தீபங்கள் முப்பத்தாறு. இது தேவ சபையிலுள்ளது. முப்பத்தாறு தத்துவங்களை இவை குறிக்கின்றன.
புவன தீபம் : இதிலுள்ள தீபங்கள் 224. இது தேவ சபையில் தத்துவ தீபத்திற்கு முன்னேயுள்ளது. இதனை தீப மாலை என்றும் கூறுவர்.
புவனம் 224ஐக் குறிப்பது புவனதீபம்.
பத தீபம் : இதிலுள்ள தீபங்கள் எண்பத்தொன்று. இது இங்குள்ள குதிரைச் சேவகர்க்குப் பின் உள்ளது. பதங்கள் எண்பத்தொன்றைக் குறிப்பது பத தீபம்.
மஹாபாரதத்தில் தீபதானம் பற்றிய விளக்கம்
தானங்களில் தீப தான மகிமையைப் பற்றி பீஷ்மர் தர்மபுத்திரருக்கு விளக்கும் போது சுக்ராசாரியாருக்கும் பலிக்கும் இடையே நடந்த உரையாடலைக் குறிப்பிடுகிறார்.
“தனக்கு மேன்மையை விரும்புபவன் கோவிலிலும் சபாமண்டபத்திலும் நாற்சந்தியிலும் மலையிலும், உயர்ந்த மரத்திலும் தீபங்களை நித்தியமாக வைக்க வேண்டும். தீபம் வைக்கும் மனிதன் மனித குலத்திற்கே பிரகாசமாகவும் பரிசுத்த ஆத்மாவாகவும் பெயர் பெற்றவனாக இருந்து தேஜோலோகத்தை அடைவான். தீபத்தை தானமாகக் கொடுப்பவன் சொர்க்கலோகத்தில் தீபமாலைகளின் நடுவில் விளங்குவான்.” இன்னும் அதிக விவரங்களை மகாபாரதம், அநுசாஸன பர்வம் 155வது அத்தியாயத்தில் படிக்கலாம்.
கார்த்திகை தீப வெண்பா
காஞ்சிபுரம் புராணிகர் சோணாசல பாரதியார் (1859-1925) இயற்றிய திருவண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா தீப மகிமைகளை விளக்கும் ஒரு அற்புதமான நூல். இதில் தீபம் ஏற்றுவதால் ஏற்படும் நன்மைகள் சிறந்த வரலாறுகளுடனும் உண்மை சம்பவங்களுடனும் குறிப்பிடப்படுகின்றன. காப்புப் பாடலுடன் நூறு வெண்பாக்கள் அடங்கிய இந்த நூலைப் படிக்கும் அனைவரும் உடனே தீபம் ஏற்றுவதை வழக்கமாகக் கொண்டு அனைத்து நலன்களையும் பெறுவர் என்பதில் ஐயமில்லை.
இதை இணையதளத்தில் www.projectmadurai.org என்ற தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ் மங்கையர் அவசியம் படிக்க வேண்டிய ஒரு அரிய தமிழ்ச் செல்வம் இது.
குறிப்பு : மாலைமலர் நாளிதழில் 7-12-2019 இதழில் வெளியாகியுள்ள
‘திருவிளக்கு ஏற்றுவோம், செல்வச் சிகரம் ஏறுவோம்!’ கட்டுரையை இங்கு நினைவு கூரலாம். இதை இணையதளத்தில்,கட்டுரை தலைப்பு, கட்டுரையாளர் பெயரைப் பதிவிட்டு எப்போதும் படிக்கலாம், தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
हे साधो व्यसनैर्गुणेषु विपुलेष्वास्थां वृथा मा कृथाः ॥ 98॥
98. O Good man! To enjoy desired results, worship virtuous conduct, the all-powerful goddess who converts wicked people to good, fools to wise men, enemies to well-wishers, the imperceptible to perceptible and deadly poison into nectar, in a trice. Do not, with vain efforts, place your hope on numerous other virtues.
விரும்பிய எல்லாவற்றையும் அடைய ,நல்லொழுக்கத்தை வழிபடுங்கள்/ போற்றுங்கள். அதுதான் ,மகத்தான தேவதை; ஒரு நொடிப்பொழுதில், தீயோரை நல்லோராக மாற்றும்; முட்டாள்களை புத்திசாலிகளாக் கும் ;எதிரிகளை, உங்கள் வசமாக் கும்; விஷத்தை அமிர்தமாக்கும் தேவை இல்லாமல் மற்ற குணங்கள் மீது நம்பிக்கை வைக்காதீர்கள்.
99. Whether a deed is good or bad, its consequences must be analysed assiduously by a wise man. The result of actions done with great haste, becomes a dart that stings the heart until death.
குணவதகுணவத்வா குர்வதா கார்யஜாதம்
பரிணதிரவதார்யா யத்னதஹ பண்டிதேன |
அதிரபஸக்ரு தானாம் கர்மணாம் ஆவிபத்தேர்
பவதி ஹ்ரு தயதாஹீ ஶல்யதுல்யோ விபாகஹ || 1.99 ||
ஒரு செயல் நல்லதோ கெட்டதோ அதன் விளைவுகளை ஆராய்பவன் புத்திசாலி; அவசரப்பட்டு செய்யும் செயல்கள் இறுதி வரை இதயத்தைத் துளைக்கும் அம்புகள் ஆகிவிடும்.
कृत्वा कर्पूरखण्डान् वृतिमिह कुरुते को द्रवाणां समन्तात्
प्राप्येमां कर्मभूमिं न चरति मनुजो यस्तपो मन्दभाग्यः ॥ 100॥
100. The unfortunate man who, being born in this land, the Karma-bhumi, does not practise penance, is like one who, in vessel studded with Vaidurya (gems), cooks sesame oil-cake with sandalwood for fuel, or like one who furrows the earth with a gold ploughshare for the roots of the crown-flower shrub, or like one who makes a fence with camphor plant cuttings, for a millet-field.
இந்த கர்ம பூமியில் பிறந்த ஒருவன் தவம் செய்யாமல் இருப்பது துரதிருஷ்டமானது.சந்தன மரத்தை விறகாக வைத்து வைடூர்ய இரத்தின பாத்திரத்தில் எண்ணெய்ப் பிண்ணாக்கினை சமைப்பவனுக்கு அவன் சமம் ஆனவன் .
கார்த்திகைத் தீபம் பண்டிகையை அறுமீன் விழா எனத் தமிழுலகம் கொண்டாடு கிறது. அது செவ்வேளுக்கு உகந்த நன்னாள். கார்த்திகை மாதத்துக்குத் தமிழில் அறுமீன் எனப் பெயர். அழகன் முருகனை எடுத்து வளர்த்த ஆறு ரிஷி பத்தினி மாரும், நட்சத்திரமாக ஜொலிக்கும் கற்பின் இலக்கணமான அருந்ததியும் சேர்ந்து, ஆர(ற)ல் மீன் வடிவில் வடதிசை வான்வெளியில் மின்னுவதைப் பரிபாடல் (5.43) “மாதவர் (மாமுனிவர்) மனைவியர் பெற்றனர்” என்ற தலைப்பில் புலவர் கடுவன் இளவெயினனாரும், ‘அகலிரு விசும்பின் ஆஅல் போல, வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை’- கார்த்திகை மாதத்தில் தோன்றும்‘ஆஅல் [ஆர(ற)ல்] என்னும் விண்மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம் என மலைபடுகடாம் (பாடல் 10) இயற்றியப் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிக னாரும் எடுத்துரைக்கின்றனர்:
அறல் என்றால் ஆற்று மணலில் உள்ள வரிவரியான கோடுகள்,பெண்ணின் கூந்த லுக்கு உவமையாய் சங்க இலக்கியத்தில் சொல்லப்படுகிறது. ஆற்றுநீருக்குக் கீழே மணலருகே கிடக்கும் விலாங்கு மீனுக்கு ஆர(ற)ல் என்று பெயர்
மேலும், கௌசிகனார் கூறுகிறார்: “மைபடு மாமலை பனுவலின் பொங்கி கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி., இருங்கல் இகுபத்து..” கார்த்த(கருமை) இகை(திரட்சி)= கார்த்திகை என்பதாகும். இதை, நீருண்ட கருமைநிற மேகங் கள் திரட்சியாகக் காணப்படும் மாதம், நீண்ட வரிசையில் திரண்டிருக்கும் அகல் விளக்கொளி வீசுகின்ற திருவிழா நாள் என்றும் கொள்ளலாம்.
பொருளீட்ட வெளியூர் சென்றுள்ளத் தன் தலைவன், உழவுப்பணி முடிந்து ஏர் கலப்பைகள் இளைப்பாறும் வேளையில், குறுமுயல் நிழல்படியும் முழு பால்நில வுக்குப் போட்டியாக வீதிதோறும் ஜெகஜ்ஜோதியாய் விளக்கேற்றி, வீடு நிறையத் தோரணங்கட்டி, கார்த்திகைத் தீபத் திருவிழாவை மகிழ்ச்சியுடன் எல்லாருடன் கொண்டாட வந்து சேருவானோ என எண்ணி மருகுவதை, ‘உலகு தொழில் உலந்து, நாஞ்சில் துஞ்சி,மழை கால் நீங்கிய மாக விசும்பில்’ என உணர்ச்சியுடன் விவரிக்கி றார் நக்கீரர் (அகநானூறு 141)
இதிலிருந்து இத்திருக்கார்த்திகைத் தீப வழிபாடு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் நாட்டவருக்கு உரியப் பண்டிகையாக நடைபெற்று வருவதை அறிகிறோம்.
மேலும், கார்த்திகை விழாவில் நீண்ட வரிசையில் ஏற்றப்படும் அகல் விளக்குகளின் சுடரொளி, இலவம்,நெல்லி மரங்களின் செந்நிறப் பூக்கள் ஒரேநேரத்தில் மலர்ந்து அழகூட்டுவதற்கு நிகராக உள்ளன என்று பிற சங்கப் பாடல்கள் விவரிக்கின்றன.
களவழி நாற்பது பாடியப் புலவர் பொய்கையார், போர்க்களத்தில் சேரநாட்டு வீரர் களும், சோழர்ப் படைப் போராளிகளும் ஒருவரை ஒருவர் எதிர்த்துத் தாக்கிக் கொள் ளும் போது குருதி ஒழுகியோடி ஒளிரும் காட்சியானது, தீபத்திருநாளில் சுடர்விடும் விளக்கொளிக்கு ஒப்பானது எனச் சொல்கிறார் (பாடல் 17)
கார் நாற்பது இயற்றிய மதுரை கண்ணங் கூத்தனார் அதன் 26-வது செய்யுளில் தீபத் திருநாளின் முக்கியப் பின்னணியை எடுத்துக் கூறுகிறார். ‘நலமிகு கார்த்திகை நாட் டவ ரிட்ட தலைநாள் விளக்கிற்…’ என்று- அழகு மிக்க கார்த்திகைத் திருவிழாவில் ‘தேந் திளமுலையார் தையலார்’ ஏற்றி வைத்த ஏற்றமிகு முதல் நாள் அகல் தீபத் தைச் சாரல் மழையினூடே, கார்காலத்துக்கே உரிய மருதோன்றி,மருதாணி பூக்கள் வழியெல்லாம் பூத்துக் குலுங்கி மேலும் அழகுறச் செய்தனவாம்! என்பவர், கார்த்தி கைத் தீபம் முதல்நாள் மகேசன் உமையம்மைக்குத் தன் இடப்பாகம் அளித்து அர்த்த நாரியாகத் தோற்றமளித்ததையும், அரியும்,அயனும் அடிமுடி தேடி வீழ்ச்சியுற்றதை யும், ‘அழலவிர் (தீப்பிழம்பு) சோதி அருமறை இறைவன்’ பொருட்டு எண்ணிறைந்த விளக்குகளை ஏற்றிக் கொண்டாடும் தருணத்தில் நாடு அழகுடன் விளங்குவதால் ‘நலமிகு கார்த்திகை’ என்றும், மூன்றுநாள் விழாவில் முதல்நாள் நிகழ்வே அரனுக் குச் சிறப்புடையது ஆதலின் ‘தலைநாள் விளக்கு’ என்றும் கூறுகிறார்.
யாழ்ப்பாணம் வித்துவ சிரோமணி திரு.பொன்னம்பலப் பிள்ளை இயற்றிய மாவை (மாவிட்டபுரம்) யமக அந்தாதி அங்கு அருள் புரியும் காங்கேயமூர்த்தி என்றழைக் கப்படும் கந்தன் புகழ் பாடுகிறது. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் நீர்விழா நடத்துவதும்,கடலாடுவதும், சுடர்க்காடு போல் விளக்கேற்றி வைத்துப் பரவுதலும் நிகழக்கூடிய கார்த்திகைப் பண்டிகையை இப்படி விவரிக்கிறது.
இப்பாடலில் ஒரு தனித்துவம் உண்டு. யமக அணித்தொகையில் அமைந்துள்ளக் கார்த்திகை என்ற சொல் ஒவ்வொரு அடியிலும் வெவ்வேறுப் பொருளில் வந்து கார்த்திகைத் தீபவிழா சூழ்நிலையைச் சிறப்பித்துக் கூறுகிறது.
முதல் அடி; கார்த்திகை=செந்நிறக் காந்தள் மரம், கார்+திகை=பெரிய வேங்கைமரம், ஆர்குமிழ்=அரியவகைக் குமிழ மரம், நிலம் கவின தோன்றி= (கார் மாதத்தில்) நிலம் அழகுறப் பூத்துக்குலுங்கித் தோன்ற (குமிழம்=சர்வோபத்ரம், நீண்ட கூம்பு வடிவுடை யது)
2-ம் அடி; கார்த்து=கார்காலத்தில், கார்+திகை=கரிய மேகம் வானமுழுதும் திரண்டி ருக்க, ஐ=மேன்மையான, இகு நீர்விழ=சொரியும் மழைநீர் பொழிகையில், ஓங்கும் கடல் குடைந்தும்=கடலில் நீராடிக் கொண்டு
3-ம் அடி; கார்=மழை, குளிருக்கு, திகை=திகைத்த, கார்த்திகைமீன்=ஆரல் மீனும், அலவன்=நண்டும், சுடர்க்கு ஆடு=வெயிலொளியில் வெளியே தலைகாட்டிக் கரை யில் ஒதுங்கும்
4-ம் அடி:திருக்கார்த்திகை= அழகிய கார்த்திகைத் தீபநாளில், கார்த்த=கரிய, இகை= அடர்த்தியானக் கொன்றை மலர் அணிந்திருக்கும், மாவையன்= மாவைத் தலத்தில் அருள் புரியும் கந்தவேளை, காண்=தரிசிப்பாயானால்,முத்தி கண்டனை= பெரும்பேறு அடைவாய்
அப்படியே நாமும் மாவை கந்தசாமிப் பெருமானைப் போற்றி, கார்த்திகை நன்னா ளில் அவன் அருள் பெற வேண்டுவோம். நகுல முனிவரின் கீரிமுகத்தை நீக்கி ஈசன் சாபவிமோசனம் அருளியதால் அவர் நிர்மாணித்த ஆலயமே மாவை நகுலேஸ்வரர் கோவிலாகும். மேலும், குதிரை முகம் கொண்டு, குன்மநோயால் பீடிக்கப்பட்ட திசை உக்கிரசோழன் மகள் மாருதப்புரவீகவல்லி இத்தலத்து ஈசனை நியமத்துடன் தொழு ததினால் குறை நீங்கப் பெற்றாள். அதனால் இத்தலம் மா=குதிரை(முகம்) விட்ட புரம்=நீங்கிய நகரம் எனவாயிற்று. இளமை எழில்நலம் மீண்டும் பெற்றபோது
அவளுக்கு அழகன் முருகன் நினைவு வர, அங்கு வேலவனுக்கு இப்போது உள்ள ஆலயத்தை எடுப்பித்தாள்.
புகழ்பெற்ற யாழ்ப்பாணத்துப் புலவர் உடுவில் முத்துக்குமார கவிராயர் “கோதை குறமாது குணதேவ மடமாது இருபாலும் உற வீறிவரு குமரேசன்” மாவிட்டபுரக் கந்தன் இந்நாளில் நகர்வலம் வரும் அழகை வர்ணிப்பதைப் பாருங்கள். அதில் இச்சாசக்தியான வள்ளி சூடியிருக்கும் ஓர் அணிகலனின் சிறப்பையும் புகழ்ந்திருக் கிறார். மேலும், மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் எனும் ஊர்ப் பெயர்கள் ஏழும் கருதியப் பொருளை மறைத்திருக்கும் பெயர்களாகும் (ஓரு வார்த்தை இருவிதப் பொருள்). இதோ அந்தப் புகழ் பெற்றப் பாடல்……
சுன்னாகத்தான் மகன்=கயிலைமலை அரசராகிய ஈசனின் மகன், பாவாணர் சொல்= பாக்கள் இயற்றும் திறன் மிக்கவர்களுக்கு, சீர் ஈவினையான்= செல்வம் வழங்கும் குணமுடையவன்,
சுரும்பு ரோதி= கரு வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்கும் நாண் கொண்ட, துன்னாலையானத்தான்= வளைந்த கரும்பு வில்லையுடைய மன்மதனின் மைத்துனன் (ஈசனின் மகள் ரதியின் சகோதரன் முருகன் ஆவான்), சில்லால் ஐ இருள்வென்ற= வியக்க வைக்கும் தகட்டணியால் (வள்ளியின் ஜடைபில்லை) இருளை விரட்டியடித்த, குறக்கொடி காமத்தான்=வள்ளி நாயகியின் மேல்
ஆசைக் கொண்டவன், சிகண்டி= சேவல் கொடி, மயில் வாகனம் உடைய, மாவூர் வல்லானை==மாவூரில் உறையும் பெருமானை, மாவிட்ட…………டேனே= மாவை நகர வீதிகளில் ஊர்வலம் வரக் காணும் பேறு பெற்றேனே!.
(சுரும்பு=வண்டு, சிகண்டி= கோழி, மயில்).
இங்கு பாவலர், வள்ளி அணிந்திருக்கும் ஒரு நகையின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் பிரகாசம் இருளை விரட்டக் கூடியது என்கிறார்.
சில்=தகட்டணி. இது கூந்தலின் உச்சியிலிடப்படும் ரத்தினங்கள் இழைத்த ஒருவகை ஆபரணம். இக்காலத்தில் ஜடைபில்லை என வழங்கப்படுகிறது. இதிலுள்ள ரத்தினங் களிலிருந்து எழும் பிரகாசமான ஒளி இருளை விலக்கக் கூடியது எனக் கவிநயத்து டன் கூறுகிறார் கவிராயர்
Kartikai Constellation
அந்த வள்ளி மணாளன் முருகவேள் நம்மை என்றென்றும் காப்பானாக!
கோவிலுக்கு 4 பெரிய கோபுரங்கள்;கிழக்கு கோபுரம் வழியாகக் கோவிலுக்குள் செல்ல 18 படிகள் ஏற வேண்டும் வடக்கு கோபுர வாசல் 57 படிகள் உடையது.
ஆரண் முழா கண்ணாடியும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. செம்பும் ஈயமும் கலந்த கலவையில் பாலிஷ் செய்யப்பட்டு இது தயாரிக்கப்படுகிறது . இதை முதலில் செய்தவர் திருவாங்கூர் மஹாராஜா
திருவாறன் விளை என்பது தலத்தின் இன்னும் ஒரு பெயர் ; அது ஆரண் முழா ஆகிவிட்டது .
மலையாள தேசத்தில் பிரபல கிருஷ்ணன்/ விஷ்ணு கோவில்கள் உள்ளன. அவை :குருவாயூர் , திருவார்ப்பு , அம்பலப்புழா , ஆரண் முழா.
இவைகளில் செங்கண்ணூர் திருத்தலத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஆரண் முழா பார்த்தசாரதியை தரிசிப்போம். இந்த ஊரின் பெயரைச் சொன்ன உடனே ஐயப்ப பக்தர்களுக்கு ஐயப்பனின் விலை உயர்ந்த திருவாபரண ஊர்வலம் ஞாபகத்துக்கு வந்து விடும். அதையும் இறுதியில் காண்போம்
XXX
செங்கண்ணூர் சென்றால் அருகிலுள்ள ஐந்து வைணவ தலங்களைத் தரிசிக்கலாம் ; அவை ஆரண் முழா , திருவார்ப்பு , திருவல்லா , திருப்புலியூர் , திருச் சிற்றாறு , திருவண் வண்டூர் .
எப்படி காஞ்சிபுரம் சென்றால் 13 தொண்டை நாட்டு வைணவ தலங்களை எளிதில் தரிசிக்கலாமோ அப்படி அமைந்த ஊர் செங்கண்ணூர் . அங்கு பகவதி, சிவன் கோவில்களும் உள்ளன .
மஹாபாரத யுத்தத்தில் கர்ணனின் தேரின் இடச் சக்கரம் மண்ணில் புதைந்தது. அதை சரி செய்ய அவன் இறங்கினான்; அப்போது கிருக்ஷ்ணன் அம்பால் அடி என்றான்; அது தவறான செயல்; நேருக்கு நேர் தயாராக இருக்கும்போதுதான் அம்பு விடவேண்டும் ; யுத்தம் முடிந்த பின்னர் இந்த நிகழ்ச்சியால் வருத்தமுற்ற அர்ஜுனன் , அந்தப் பாவத்துக்குப் பரிகாரமாக இந்தக் கோவிலைக் கட்டினான் என்பது செவி வழிச் செய்தி .
சிலர் கர்ணனுக்குப் பதில் பீஷ்மருடன் அர்ஜுனன் செய்த சண்டையையும் தொடர்புபடுத்துவர்
இன்னும் ஒரு கதை
ஒரு காலத்தில் மது, கைடபன் என்ற இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடமிருந்து வேதங்களைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் இதனால் அவருக்கு சிருஷ்டி என்னும் படைப்புத் தொழிலே மறந்து போனது. உடனே விஷ்ணுவைத் தியானத்தில் துதித்தார். அவருக்கு படைப்பு என்னும் தொழிலை விஷ்ணுவே நினைவுபடுத்திய ஸ்தலம் இது.
பாம்பு வடிவபடகுப்போட்டி Snake Boat Race
இங்கு படகுப்போட்டி ஒன்று ஆண்டுதோறும் நடக்கும்; அதுவும் கோவிலுடன் தொடர்புடையதே.. ஒரு அர்ச்சகர் பிராமணமர் வடிவில் வந்தது பார்த்தசாரயத்தியே என்று அறிந்து படகில் கோவிலுக்கு நிறைய நெல்லைக் கொண்டுவந்த சம்பவம் வருடாந்திர படக்குப் போட்டியாக நடக்கிறது இதற்கு திருவோணச் சிலவு தோணி என்று பெயர். ஒரு முறை அந்தப் படகினைத் தடுக்க எதிரிகள் முயன்றபோது பாம்பு வடிவ படகினைச் செலுத்துவோர் பாதுகாப்பாக வந்தனராம் .பாம்புப் படகுகளுக்கு சுண்டன் வல்லம் என்று பெயர். அதன் நீளம் 103 அடி . நூறு படகோட்டிகளும் 25 வஞ்சிப் பாட்டு பாடகர்களும் படகில் இருப்பார்கள்.அன்றைய தினம் விருந்தும் ஏற்பாடு செய்யப்படும்
ஊர்ப்பெயர் காரணம்
ஆறு என்றால் நதி மற்றும் எண் ஆறு/ 6. முழை என்றால் மூங்கில் ;; முன்னர் இந்த விக்கிரகத்தை நிலக்கல் என்னும் இடத்தில் அர்ஜுனன் பிரதிஷ்டை செய்ததாகவும் மறவர்கள் தாக்கும் காட்டுப்பகுதிக்குள் அந்த ஊர் இருந்ததால் அதை ஆறு மூங்கில் கம்புகளினால் ஆன தெப்பத்தில் சுவாமியைக் கொண்டுவந்ததால் ஆறு முழா ஆகிய தாகவும் செப்புவர்.
திருவாபரண ஊர்வலம்
சபரி மலை ஐயப்பனின் விலை மதிப்புமிக்க அணிகலன்கள்/ ஆபரணங்கள் பந்தளம் மஹாராஜா அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அவை பக்தர்கள் புடைசூழ, பெரிய பாதுகாப்புடன் சபரி மலைக்கு எடுத்துச் சென்று தர்ம சாஸ்தாவுக்கு அணிவிக்கப்படும்
ஆபரணங்கள் பந்தளத்திலிருந்து புறப்படும். அந்த ஆபரணப் பெட்டி பந்தளத்திலிருந்து 14 கி.மீ தொலைவிலுள்ள ஆரண் முழாவில் தங்கிச் செல்லும். மகர விளக்கு பூஜையின் போது ஐயப்பனுக்கு தங்க திருவாபரணங்கள் அணிவிக்கப்படும்.
இந்த திருவாபரணங்கள் அதிகாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரண்மனையில் இருந்து பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு , சிறப்பு பூஜைக்கு பிறகு பக்தர்கள்தரிசனத்துக்கு வைக்கப்படும் அதைத் தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, திருவாபரண ஊர்வலம் புறப்படும்
இந்த ஊர்வலம் ஐயப்பனின் பாரம்பரிய பெருவழிப் பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப் பயணமாக மறுநாளைக்கு பம்பை வந்தடையும். அங்கிருந்து பக்தர்களின் சரண கோஷம் முழங்க ஆபரண பெட்டிகள் நீலிமலை, சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு வரப்படும்.திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் 18-ம் படிக்கு கீழ் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்டு ஐயப்பனுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்குப் பின்னர் மகர ஜோதி தரிசனம் கிடைக்கும் .
இப்படி ஆண்டுதோறும் நாம் பத்திரிக்கைச் செய்தியை படிக்கலாம்.
—subham—
Tags- திருவாபரண பெட்டி ஊர்வலம் , ஆரண்முழா, திருவாறன் விளை , பார்த்தசாரதி கோவில், கேரள, புகழ்பெற்ற 108 கோவில்கள், part 14
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
22-11-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
26-11-23 அன்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்படும். கட்டுரை இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
கீர்த்தி மிக்க திருக்கார்த்திகை தீபம்!
முதல் பகுதி
ச.நாகராஜன்
கந்தனும் கார்த்திகையும்
தமிழர் தம் வாழ்வில் தனி இடம் பெறும் மாதம் கார்த்திகை மாதம். தனி இடம் பெறும் நட்சத்திரம் கார்த்திகை.
தமிழர் துதிக்கும் தனிப் பெரும் வெற்றித் தெய்வமான கந்தனையும் கார்த்திகையையும் இணைத்துப் பேசும் புராணக் கதைகள் ஏராளம் உண்டு.
முன்பொரு காலத்தில் சூரியன் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்த போது சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு பொறிகள் தோன்றி முருகன் அவதரித்ததாகப் புராணங்கள் விளக்குகின்றன.
அம்பா, தாளா, நிதாக்னி, அப்ரயந்தி, மேகயந்தி, வர்ஷயந்தி என்பவை ஆறு நட்சத்திரங்கள். இந்த ஆறு பேருமே முருகனை சரவணப்பொய்கையில் குழந்தை உருவில் இருந்தபோது எடுத்து பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். ஆறு பேரும் மகிழும் வண்ணம் தனித்தனி உருவம் எடுத்து அவர்களை மகிழ்வித்தான் கார்த்திகேயன்.
முருகனுக்கு ஒரு தனிச் சிறப்பு, அவன் செல்லும் பாதையில் அவனுக்கு முன்னால் வெற்றி தேவதை செல்லும். எடுத்ததெல்லாம் வெற்றி. எப்போதும் வெற்றி.
அதி உஷ்ண நட்சத்திரமான கார்த்திகை (ஆங்கிலத்தில் plieades) அனைத்து தீமைகளையும் சுட்டுப் பொசுக்கி விடும்.
ஆகவே தான் திருக்கார்த்திகை தினத்தில் ஒளி விளக்கேற்றி கந்தனை துதித்தல் மரபு.
துதி, வாணி, வீரம், விஜயம், சந்தானம், துணிவு, தனம், தானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு, அறம், குலம், நோயின்மை, வயது (ஆயுள்) ஆகிய பதினாறு பேறுகளையும் தரும் தெய்வமாக இருக்கும் முருகனை தமிழர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வணங்கிப் போற்றித் துதிக்கின்றனர்.
இதை சங்க இலக்கியம் உள்ளிட்ட பழைய நூல்களில் பரக்கக் காணலாம்.
அறுமீன், ஆரல், ஆல் என கார்த்திகை நட்சத்திரத்தை நற்றிணை, அகநானூறு, பரிபாடல், கலித்தொகை உள்ளிட்ட நூல்கள் குறிப்பிட, கார்த்திகை மகளிர் அறுவர் என்று கார்த்திகை மகளிரை, பரிபாடல், திருமுருகாற்றுப்படை ஆகிய நூல்கள் குறிப்பிடுகின்றன. முருகனைப் பல்வேறு பெயர்களால் போற்றுகின்றன.
இலக்கியம் காட்டும் விளக்கொளி
விளக்கின் வகைகளையும் அவற்றைத் தமிழ் மகளிர் போற்றித் துதித்து இல்லங்களிலும் கோவில்களிலும் ஏற்றி வந்ததையும் நூற்றுக் கணக்கான குறிப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் காணலாம். விளக்கு அணைந்தால் அது அபசகுனம் என்று கருதப்பட்டதை ‘நெடுநகர் வரைப்பில் விளக்கும் நில்லா’ என்ற புறநானூற்று வரி (பாடல் 280) விளக்குகிறது.
அருளாளர்கள் அனைவரும் விளக்கைப் போற்றுவதை சமய இலக்கியத்தில் காணலாம்.
நூற்றுக் கணக்கான பாடல்களில் சில எடுத்துக்காடுகள் இதோ :
மாணிக்கவாசகர் : “ஜோதியே, சுடரே, சூழ் ஒளி விளக்கே”
ஞானசம்பந்தர் : “விண்களார் தொழும் விளக்கு” என்று சிவபிரானைத் தொழுது ஞான விளக்கினை ஏற்றுவோம் என்ற அறைகூவலை விடுக்கிறார்.
சுந்தரர்: “பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்”
அப்பர் : “இல்லக விளக்கு அது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கு அது ஜோதி உள்ளது
பல்லக விளக்கு அது பலரும் காண்பது
நல்லக விளக்கு அது நமச்சிவாயவே”
இப்படி 22 இடங்களில் அப்பர்பிரான் விளக்கைச் சுட்டிக் காட்டுகிறார்.
திருமூலர் : “விளக்கினை ஏற்றி வெளியினை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்”.
காலத்தினால் பிற்பட்ட கவியரசர் கண்ணதாசனும் இல்லத்தரசி ஏற்றும் விளக்கை தன் திரைப்படப் பாடலில் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இதோ அவர் இயற்றிய பாடலில் ஒரு பகுதி:-
இறைவன் முருகன் திருவீட்டில்,
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி,
உயிரெனும் காதல் நெய்யூற்றி,
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி!
(மலர்கள் நனைந்தன பனியாலே என்ற பாடலில் வருவது)
விளக்கை எப்படி எப்போது ஏற்றுவது?
குத்து விளக்கில் அடிப்பாகம் பிரம்மாவையும் நீண்ட நடு தண்டுப்பாகம் விஷ்ணுவையும் மேற்பகுதி சிவனையும் குறிப்பதால் அது மும்மூர்த்திகளையும் குறிப்பதாக ஆகிறது.
ஒரு முகம், இரு முகம், பஞ்ச முகம் என பலவகை விளக்குகள் உண்டு. அனைத்தும் நன்மைகளையே தரும். பசு நெய் உத்தமம், அடுத்து நல்லெண்ணெய் பயன்படுத்தப்படலாம். பருத்தியால் ஆன பஞ்சு திரி அல்லது தாமரை தண்டு திரி கொண்டு ஏற்றுதல் உத்தமம். கிழக்கு மற்றும் வடக்கு திசை நோக்கி தீபங்கள் ஏற்றப்பட வேண்டும்.
தீபத்தை வீட்டின் வாயிலில் இரு புறமும் கார்த்திகை மாதம் முழுவதும் ஏற்றுவது மரபு.
அன்றாடம் காலையிலும் மாலை சந்தியா வேளையிலும் தீபம் ஏற்றுவது நமது மங்கையரின் வழி வழி வந்த மரபுப் பண்பாகத் திகழ்கிறது. கிராமங்களில் இன்றும் பழைய வீடுகளின் திண்ணைச் சுவரில் இரு புறமும் தீபம் ஏற்றுவதற்கான பிறை மாடங்களைக் காணலாம்.
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்கள்
விளக்கு ஏற்றுவதால் ஏற்படும் பயன்களைப் பட்டியலிடவே முடியாது. மஹாலட்சுமி வாசம் புரியும் இடம் என்பதால் செல்வச் செழிப்பு ஏற்படும். துன்பங்கள் தொலையும். கடன் தொல்லை போகும். திருமணத் தடை நீங்கும். குடும்ப ஒற்றுமை ஓங்கும். சகல விதமான கிரக தோஷங்களும் நீங்கும். பெண்கள் நலம் பெறுவர். இப்படி உலகியல் வாழ்க்கைக்கான பல அம்சங்களில் நலம் பெறுவதோடு ஆன்மீக வாழ்க்கையில் ஏற்றம் பெறச் செய்து அரிதான முக்திக்கும் வழி வகை செய்யும் ஒரு வழிபாடே திருவிளக்கு ஏற்றும் வழிபாடாகும்.
‘தமஸோ மா ஜோதிர் கமய’ – இருளிலிருந்து என்னை ஒளிக்கு இட்டுச் செல் என்பதே அனைவருக்குமான வேத முழக்கம்.
கர்மாவுக்கு வணக்கம் சொல்லுவோம். பிரம்மாவை ஒரு குயவன் போல சதா சர்வ காலமும் படைப்புத் தொழில் ஈடுபடுத்துகிறது. விஷ்ணுவை பத்து அவதாரங்கள் எடுக்க அனுப்புகிறது ; சிவ பெருமானை கபாலம் ஏந்தி வீடு வீடாக பிக்ஷை எடுக்க வைக்கிறது ; சூரியனை சதா சர்வ காலமும் சுற்ற வைக்கிறது—95
அண்டத்திடையில் அயநெதானா லேயிருப்பான்
விண்டு வெ தனாற் பரியாய் மேவுதற்கேற்பட்டான்
பண்டுருத்திரன்தான் பலி யோடெ தானாலே
கொண்டிரந்தான் சூரியனுங் கோளமா வானத்தில்
அண்டி எதனாற் றிரிவான் அத்தகைய வூழ் வினைக்குத்
தெண்டனிட்டு வந்தனஞ் செய்வேன்
XXXXXX
SLOKA 96
नैवाकृतिः फलति नैव कुलं न शीलं
विद्यापि नैव न च यत्नकृतापि सेवा ।
भाग्यानि पूर्वतपसा खलु सञ्चितानि
काले फलन्ति पुरुषस्य यथैव वृक्षाः ॥ 96॥
நைவாக்ருதிஹி பலதி நைவா குலம் ந ஶீலம்
வித்யாபி நைவ ந ச யத்னக்ருதாபி ஸேவா |
பாக்யானி பூர்வதபஸா கலு ஸஞ்சிதானி
காலே பலந்தி புருஷஸ்ய யதைவ வ்ருக்ஷாஹா || 1.96 ||
ஒருவன் உலகத்தில் இன்பத்தை அனுபவிப்பதற்கு அவனது அழகோ , அவனுடைய குலப்பிறப்போ, கல்வி யோக்கியதாம்சங்களோ குருவுக்கு சேவை செய்வதோ காரண மல்ல. அவனுடைய கடந்த கால நற்செய்கைகளால் கிடைத்த அதிர்ஷ்டமே இதற்குக் காரணம்.
XXXXX
SLOKA 97
वने रणे शत्रुजलाग्निमध्ये
महार्णवे पर्वतमस्तके वा ।
सुप्तं प्रमत्तं विषमस्थितं वा
रक्षन्ति पुण्यानि पुरा कृतानि ॥ 97॥
வனே ரணே ஶத்ருஜலாக்னிமத்யே
மஹார்ணவே பர்வதமஸ்தகே வா |
ஸுப்தம் ப்ரமத்தம் விஷமஸ்திதம் வா
ரக்ஷந்தி புண்யானி புராக்ருதானி || 1.97 ||
ஒரு காட்டின் நடுவில் சிக்கித் தவித்தாலோ போரில் அகப்பட்டாலோ , எதிரிகளிடம் சிக்கினாலோ ; கடலில் விழுந்தாலோ ஒருவன் ஒரு காயம் கூட இல்லாமல் தப்பிப்பதற்கு அவன் பூர்வ ஜென்மத்தில் செய்த நற்பலன்தான் காரணம், தீயில் விழுந்த பொழுதும் மலை உச்சியில் நின்றபொழு தும், தூங்கும் போதும் குடித்த போதும், கஷ்டத்தில் சிக்கியபோதும் நம்மைக் காப்பாற்றுவதும் நல்ல கர்ம பலனே ,
(பல பர்த்ருஹரி நீதி சதக நூல்களில் மேற்கண்ட ஸ்லோகங்கள் இல்லை.)
—-SUBHAM—-
Tags- Nitisataka, Part 29, Bhartruhari, slokas 95,96,97