Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன் எழுதியஇராமாயணம் – அயோத்தியா காண்டம்-கம்பர் – பாகம் 2
பெங்களூர்நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின்உரிமையாளர்திருராஜேஷ்தேவராஜ்இந்த நூலைவெளியிட்டுள்ளார்.
நூலில் உள்ள அத்தியாயங்கள் இவை:
1.தைலமாட்டுப் படலம்
2. கங்கைப் படலம்
3. குகப் படலம்
4. வனம் புகு படலம்
5. சித்திரகூடப் படலம்
6. பள்ளிபடைப் படலம்
பிற்சேர்க்கை
இராமாயணம் பற்றிய ஆய்வு நூல் வரிசையில் திரு ஆர் சேஷாத்ரிநாதன் எழுதிய இந்த நூல் மூன்றாவது நூலாக அமைகிறது.
நூலுக்கு வழங்கிய முன்னுரையில், “இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் எளிதாக்கி மக்களிடையே கொண்டு செல்ல பல உபந்யாசகர்கள், சான்றோர்கள், சொற்பொழிவாளர்கள் அயராது பாடுபடுகின்றனர். இந்த வரிசையில் என்னுடைய சிறு முயற்சியாக பாலகாண்டத்தையும் அயோத்யா காண்டத்தையும் தொகுத்து வழங்கியுள்ளேன். கம்பரின் அயோத்தியா காண்டத்தைத் தொகுத்து இப்போது வழங்கியுள்ளதில் இந்த இரண்டாம் பாகம் மலர்கிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.
ஆங்காங்கே கம்பரின் இனிய கவிதைகளோடு இராமாயண வெண்பா, அருணாசலக் கவிராயரின் இராமநாடக கீர்த்தனை உள்ளிட்ட நூல்களிலிருந்து பாடல்களைத் தந்து ஒப்பிட்டு அவர் ஒவ்வொரு காட்சியையும் விவரிப்பது பல நூல்களின் சாரத்தை ஒருங்கே சேர்ந்து அருந்திய மகிழ்ச்சியைத் தருகிறது.
இந்த நூலுக்கு திரு ச.நாகராஜன் அணிந்துரை வழங்கியுள்ளார்.
அதில் ஒரு பகுதி இது:
“மொழிவளம் மொழிகுவேனோ மொழிகதைத் தருண முன்னிப்
பொழிவளம் புகலு கேனோ! பொருள் வளம் புடைத்து விம்மிக்
என்று ‘கம்பராமாயண கௌஸ்துப மணி மாலையில்’ கம்ப பக்தர் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை கம்பனை வியந்து பாராட்டுகிறார்.
ஆனால் இந்த வேக யுகத்தில் கம்பனை இனம் காட்ட ஒருவர் வேண்டுமே! இந்த வகையில் தான் இராமாயணக் கடலில் கம்பன் பொதிந்து வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான முத்துக்களை அறிய ஆவல் கொண்டு ஆராய்ந்து அதில் உள்ள பல நல் முத்துக்களைக் கண்டு அவற்றை உலகினருக்கும் தரவல்ல ஒருவராகத் திகழ்கிறார் திரு ஆர். சேஷாத்ரிநாதன்.
அவரது இராமாயண ஈடுபாடும் ஆய்வும் பாராட்டுக்கு உரியது.”
*
பிற்சேர்க்கையில் அவர் இந்த நூலை எழுத உதவிய நூல்களின் பட்டியலைத் தருகிறார்.
காலத்திற்கேற்ற அருமையான ஆன்மீக சேவையைப் புரிந்தமைக்காக திரு சேஷாத்ரிநாதன் அவர்களுக்கு நமது பாராட்டுக்கள் உரித்தாகுக.
அவர் தம் இந்தத் தமிழ்த் தொண்டு சிறக்க வாழ்த்துவோம்.
இந்த நூல் பற்றிய விவரங்களைwww.pustaka.co.inஇணைய தளத்தில் காணலாம். நூல் பற்றிய விவரங்களை 99803 87852 என்ற மொபைல் எண்ணைத் தொடர்பு கொண்டும் பெறலாம். படிக்க, டிஜிடல் வடிவத்தில் நூலைப் பெற, அச்சுப் பதிப்பாகப் பெற என இப்படி மூன்று விதங்களில் இந்த நூலைப் பெறலாம்.
19. Armlets and necklaces shining like the moon, do not adorn a person. Nor do baths, perfumes, flowers and decked hair. Refined speech alone adorns the person bearing it. All ornaments fade away; the ornament of speech is the only lasting one.
நிலவொளி போன்ற மாலைகளும் அழகு சேர்ர்க்காது.
நீர் முழுக்கோ, சந்தனப் பூச்சோ,பூக்களோ, சிகை அலங்காரமோ
ஒருவனுக்கு அழகு அல்ல; பண்பட்ட பேச்சே அழகு தரும்.
ஏனைய எல்லாம் வாடி வதங்கும், உதிர்ந்தும்,உலர்ந்தும் போம்.
நல்ல பேச்சு உண்மையான அணிகலனாக நிற்கும்.
இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்
குஞ்சியகுங் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சளழகும் அழகல்ல- நெஞ்சத்து
நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்
கல்வியழகே அழகு- நாலடியார்
சிகை அலங்காரமோ, கரை போட்ட ஆடை அலங்காரமோ, மஞ்சள் முதலிய அலங்காரப் பூச்சுகளோ அழகல்ல. கல்வி கற்று நடு நிலையில் நிற்பதே அழகு.
இணரூழ்த்தும் நாறா மலரணையர் கற்றது
உணர விரித்துரையாதார் – குறள் 650
கற்ற விஷயங்களை மற்றவர்களுக்கு விளக்கமுடியாதவர்கள்
மலர்ந்தும் மணம் வீசாத மலர்களைப் போன்றவர்கள்.
சொல் அழகு
மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும் காதின் வனப்பும்– செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த
சொல்லின் வனப்பே வனப்பு
–சிறுபஞ்சமூலம் 36 (காரியாசான் இயற்றியது)
பொருள்:- தலை மயிர் அழகும், பார்ப்பவரின் கண்ணைக் கவரும் மார்பின் அழகும், நகத்தின் அழகும், செவியின் அழகும், குற்றமில்லாத பற்களின் அழகும் அழகல்ல. நூல்களின் அமைந்துள்ள சொல்லின் அழகே அழகு.
இடை வனப்பும் தோள் வனப்பும் ஈடின் வனப்பும்
நடை வனப்பும் நாணின் வனப்பும் – படைசால்
கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ
டெழுத்தின் வனப்பே வனப்பு
–ஏலாதி 74 (கணிமேதாவியார் இயற்றியது)
பொருள்:- இடையின் அழகும், தோளினுடைய அழகும், செல்வத்தின் அழகும், நடை அழகும், நாணத்தின் அழகும், திரண்ட கழுத்தின் அழகும், உண்மையான அழகு ஆகாது. கணித நூலறிவும், இலக்கியங்களைப் படித்தறியும் அறிவும்தான் உண்மையான அழகு.
சிறந்த, ஆழமான பல நூல்களைக் கல்லாதவனுடைய அழகு, மண்ணினால் செய்யப்பட்ட பொம்மையின் அழகைப் போன்றதே.
20. Learning is enhanced beauty. It is a hidden, guarded treasure. It gives enjoyment, fame and happiness. It is the greatest of great things. When travelling to foreign lands, it is a friend. It is the supreme deity. It is learning, not wealth that is venerated by kings. A person who is bereft of learning is indeed a beast.
கல்வி என்பது ஒருவனுக்கு அழகு சேர்க்கிறது;
அவனுடைய ரஹஸிய செல்வம் அது;
வளமும், மகிழ்ச்சியும், புகழும் நல்குவது.
‘குரு’க்களுக்கு எல்லாம் ‘குரு’ கல்வி;
வெளி நாடு சென்றால் தெரியாத மக்களிடையே இருக்கையில் அது ஒருவனுக்கு நண்பன்; கல்வியே உயர்ந்த கடவுள்.
மன்னர்களிடையே செல்வத்துக்கு மதிப்பு இல்லை; ஆனால் கற்ற கல்விக்கு மதிப்பு உண்டு. கல்வி கற்காதவன் ஒரு விலங்கு.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்– குறள் 410
பொருள்:-நல்ல புத்தகங்களைப் படித்தவர்க்கும், படிக்காதவர்க்கும் உள்ள வேறுபாடு மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வேறுபாடே (படிக்காதவன் எல்லாம் மிருகம்)
வ்ரீடா சேத் கிமு பூஷணைஹி ஸுகவிதா யத்யஸ்தி ராஜ்ய்ரேன கிம் 1-21
பர்த்ருஹரியின் நீதி சதகம் பர்த்ருஹரி பாடல் 21
பாடல் 21-ன் பொருள்
மன்னிக்கும் குணம் உள்ளவனுக்கு கவசம் எதற்கு?
கோபம் உள்ளவனுக்கு எதிரிகள் எதற்கு?
ஒருவனுக்கு அறிவு இருந்தால் தீயதை எரிக்க தீ எதற்கு?
உண்மை நண்பன் இருந்தால் மருந்து தேவையா?
தன்னைச் சுற்றிலும் கெட்டவர்கள் இருந்தால் பாம்புகள் எதற்கு?
நல்ல விவேகம் இருந்தால் பணம் எதற்கு?
நல்ல குணங்கள் இருந்தால் ஆபரணங்கள் எதற்கு?
கவிதையை ரசிக்கத் தெரிந்துவிட்டால் அவனுக்கு ராஜ்யம், அரசாட்சி எதற்கு?
21. When one has forgiveness, what need is served by an armour? When there is anger, why do people need (other) enemies? What use is there for fire when kinsfolk exist (to cause destruction)? What purpose can medicines serve when there is a friend (to help healing)? If there are evil people, serpents are not necessary and neither is wealth, when there is defect-free learning. What is the use of ornaments when one has modesty, and if one has beautiful poetry, even kingship has no value.
மன்னிக்கும் குணம்–
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்- 314
உனக்கு துன்பம் விளைவித்தவர்க்கு நன்மைகள் பல செய்து அவர்கள் வெட்கப்படும்படி செய்க; அவர் செய்த கெடுதிகளையும் மறக்க.
தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றமாகும் இறைக்கு- குறள் 436
தன்னுடைய குற்றத்தை ஆராய்ந்துவிட்டு, மற்றவர் குற்றத்தை
ஆராய்க; இதில் என்ன கஷ்டம்?
பொறுமையே சட்டை பொறாமை பகைவர்
வெறுமை மனத்தாயத்தார் வெந்தீ மறுவிலா நேசர்
மருந்து நிலவுலகிற் பொல்லாத
நீசரரவம் நிசம் –
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடனுறைந்தற்று- 890
ஒரே கருத்து இல்லாதவருடன் வாழ்தல், குடிசையில் பாம்புடன் வசிப்பது போலாகும்.
கோபம் பற்றி வள்ளுவன்
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்- 306
(சேர்ந்தாரைக் கொல்லி= ஆஸ்ரயாசஹ)
கோபப்பட்டவனை கோபம் என்னும் நெருப்பே அழித்துவிடும்; அவனுக்குத் துணையாக நின்றாரையும் அழித்துவிடும் (நெருப்பு போல)
—–subham——-
Tags- Bhartruhari, Part 7, 4 languages, Slokas 19,20, 21
PTI Story is published in The New Indian Express and The Week
Vasundhara Raje had reportedly stayed inside the temple for the entire duration of the counting of votes of the 2013 assembly polls – which she won – and stayed there till the results were declared.
Published: 02nd November 2023 07:58 PM | Last Updated: 02nd November 2023 07:59 PM
By PTI
BANSWARA: Around election time, a temple in Rajasthan’s Banswara district becomes a favourite of politicians seeking some divine intervention.
Former chief minister Vasundhara Raje is said to be a firm believer of the temple deity, Maa Tripura Sundari, who the devout say helps people seeking power or an “empire” (samrajya).
And politicians across party lines, from village heads to ministers, are regular visitors to the Tripura Sundari temple in Umrai village
“Maa Tripura Sundari blesses devotees who seek ‘samrajya’, which is visits by those wishing to contest the assembly polls has increased,” Nikunj Mohan Pandya, a priest at the temple, told PTI.
Polling in all 200 assembly constituencies in Rajasthan will take place on November 25 and counting will be held on December 3.
“Those wishing for ‘samrajya’ and success in politics visit the temple and pray to Maa Bhagwati (Tripura Sundari). Leaders from different political parties visit the temple. Some have immense faith, and regularly visit and offer prayers. Sadhna is performed at the temple,” he said.
Pandya said that erstwhile kings and rulers would offer prayers before every important battle.
Raje, who often visits the temple, had reportedly stayed inside the temple for the entire duration of the counting of votes of the 2013 assembly polls – which she won – and stayed there till the results were declared.
Chief Minister Ashok Gehlot and several state ministers have also visited the temple this year.
Temple manager Jagesh Panchal said that Prime Minister Narendra Modi has also visited the temple when he was the Gujarat chief minister.
Apart from him, former president Pratibha Patil, many union ministers, CMs of other states have also come for darshan.
On Thursday, Union Minister of Tribal Affairs Arjun Munda offered prayers at the temple.
Pandya said that renovation of the temple has been done from time to time by Panchal samaj, who manage the temple.
Major development works outside the temple were also done during Raje’s tenure as CM.
Deputy leader of opposition Satish Poonia, who also frequents the temple, told PTI, “The place of Tripura Sundari is full of energy. People visit and pray to the goddess so that they can work with more enthusiasm in service of the people in society.”
He said the idol of Tripura Sundari inspires people and that he has strong faith in the deity.
Apart from politicians, a large number of regular devotees also offer prayers at the temple.
Located at a distance of 14 km from Banswara district headquarters, the Tripura Sundari temple is said to be centuries-old but the exact date of its establishment is unclear.
It is said that earlier there used to be three forts named Shaktipuri, Shivpuri and Vishnupuri around the temple and since it was situated in the middle of the forts, Goddess Bhagwati was named Tripura Sundari.
In the sanctum sanctorum, there is a black-coloured grand and attractive idol of the deity with eighteen arms, carrying different weapons in each.
Other small idols, called Das Mahavidya, are also present.
Shri Yantra is engraved at the bottom of the idol, which has its own special tantric significance.
“For centuries, the temple has been a famous worship centre for ‘Shakti’ seekers. People from far and wide come and bow their heads at this Shaktipeeth. During Navratri festival, special programmes take place every day in the temple’s courtyard,” he said.
Priest Ganesh Sharma said, “Due to Jagat Janani Tripura Sundari Shaktipeeth, this place is alive, energetic and powerful.”
President of the temple trust Kanti Lal and general secretary Natwar Lal said that a lot of development work has been done over the years.
They said that people from all over Rajasthan and other states, including Madhya Pradesh, Gujarat, Maharashtra, visit the temple.
During Navratri, special programmes are organised and lakhs of devotees visit the temple, they added.
Ashok Panchal, former president of the trust said, “Whatever wish is asked in this temple, it is definitely fulfilled by Maa Tripura. Due to its importance, many big leaders of the country have come to the temple to bow their heads before the goddess,” he said.
—-subham—-
Tags- Tripura Sundari, Rajasthan, Banswara, Election Time
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 46
105.நாகர் கோவில் கப்பல் திருவிழா
தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் மரத்திற்குக் கீழே நாகர் சிலைகள் இருப்பதைக் காணலாம். இலங்கையில் நாகர் / பாம்பு சிலைகள் தனி சந்நிதிகளிலேயே காணப்படுகின்றன. இலங்கையில் நாகர் வழிபாட்டுக்குப் புகழ்பெற்ற ஊர் நாகர் கோவில் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நாகர்கோவில் போலவே ஊர்பெயரும் கோவிலும் உடைத்து.
இந்த ஊர் ஒரு காலத்தில் நாகர் ஆட்சியின் தலைநகராக இருந்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் துணிபு; இதை மெய்ப்பிக்கும் வகையில் பழங்காலக் காசுகளும் இந்த ஊரில் கிடைத்துள்ளன.
பருத்தித்துறை நகரிலிருந்து 12 மைல் தொலைவில் நாகர்கோவில் இருக்கிறது இதன் அருகில் இருக்கும் வல்லிபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட தங்க கல்வெட்டில் நாகர் ஆட்சி பற்றியும் குறிப்பு உளது. அருகில் செம்பியன்பட்டு முதலிய ஊர்கள் இருப்பது ஒரு காலத்தில் நடந்த சோழர் ஆட்சிக்கும் சான்று பகர்கின்றன .
நாக தம்பிரான் சந்நிதியில் பாம்புடன்சிவன் இருக்கிறார். தம்பிரான் என்ற சொல்லை சிவபிரானுக்கும் பெரிய புராணத்தில் சேக்கிழார் பயன்படுத்துகிறார். கோவிலைச் சுற்றி நான்கு தீர்த்தங்கள் இருக்கின்றன அவை பல வியாதிகளைக் குணப்படுத்தும் என்று பக்தர்கள் நினைக்கிறார்கள். பாம்புக்கடிக்கும் பலவியாதிகளுக்கும் கைகண்ட மருந்தான மூலிகையும் இங்கே வளருகிறது
நாகர்கோவிலில் கப்பல் திருவிழா
புரட்டாசி மாதத்தில் இங்கு வரலாற்றுச் சம்பவம் ஒன்றினை நினைவுகூறும் கப்பல் திருவிழா நடக்கிறது பத்து நாள் உச்சவத்தில் முக்கிய விழா ஏழாம் நாள் இரவில் நடக்கும்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், போர்ச்சுக்கீசிய வணிகர்கள் வந்து பொருட்களை விற்றனராம். தங்களுக்கு ஊழியம் செய்ய 100 இளைஞர்கள் வேண்டும் என்று சொல்லி பொருள் ஆசை காட்டினராம். அதற்கு ஊர் மக்கள் இணங்கவில்லை. உடனே அவர்கள் வலுக்கட்டாயமாக 100 இளைஞர்களைப் பிடித்து கப்பலில் ஏற்றினர். உடனே அவர்கள் இறைவனை வேண்ட , ஆண்டவனே பாம்பு உருவத்தில் வந்து அதிசயம் நிகழ்த்தி பறங்கியரை அடி பணிய வைத்தார்.
கப்பல் தலைவன் பாய் மரத்தை அவிழ்த்து கப்பலை ஓட்டுவதற்கு முனைந்தபோது, விரித்த பாய் மரத்தில் ஒரு பாம்பு படம் எடுத்து ஆடியது. அதனை அவன் கத்தியால் வெட்டியவுடன் நூற்றுக்கணக்கான பாம்புகள் அங்கே நெளிந்து அவனை அச்சுறுத்தின. உடனே கப்பலில் இருந்த இளைஞர்கள் இது நாக தம்பிரானின் செயல் என்றும் தங்களை விடுவித்தால் பிரச்சினை தீரும் என்றும் அறிவுரை சொன்னார்கள். கப்பல் மாலுமியும் அதற்கு இணங்கியபோது பாம்புகளும் மறைந்தன. அப்போது முதல், பக்தர்கள் நூற்றாண்டுக் கணக்கில் இவ்விழாவினைக் கொண்டாடிவருகின்றனர்.
இந்த தல புராணத்தில் சுவையான கூடுதல் செய்திகளும் உண்டு. நாகர்கோவில் இளைஞர்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று மாலுமி கேட்டபோது, அவர்கள் வெள்ளை நிற விபூதியை நெற்றியில் அணிந்திருப்பார்கள் என்று மக்கள் சொன்னார்கள். அதுமட்டுமின்றி அவ்வாறு வெண் பொட்டு ஆட்களை விடுவித்த பின்னரும் கப்பல் நகரவில்லையாம். கப்பல் அறை எண் 18-ல் ஒரு முதிய மாதுவை வேலை செய்ய பிடித்து அடைத்துவைத்துள்ளார்கள். அந்த மாது இந்த ஊரைச் சேர்ந்தவள் என்று ஊர் மக்கள் சொல்லவே அந்தப் பெண்மணியயையும் பறங்கியர் விடுவித்தனர். கப்பலும் நகர்ந்தது.
கப்பல் உற்சவம் பற்றிய 2023 அறிவிப்பு
24.09.2023 ஆரம்பமாகி , .11 தினங்கள் இடம்பெறும் உற்சவத்தில் , 29 ஆம் திகதி பாம்பு திருவிழாவும், 30ஆம் திகதி கப்பல் திருவிழாவும், முதலாம் திகதி வேட்டைத் திருவிழாவும், இரண்டாம் ஆம் திகதி சப்பர திருவிழாவும், மூன்றாம் திகதி சமுத்திர தீர்த்தமும், புதன்கிழமை பட்டுத் தீர்த்தமும் இடம்பெறவுள்ளன.
இது விழாவில் வரிசைக்கிரமத்தில் என்ன என்ன நிகழும் என்பதை அறிவிக்கிறது தற்காலத்தில் பல ஊர்களில் நாக தம்பிரான் உற்சவங்கள் நடக்கின்றன.
xxx
இலங்கையில் 52 ராமாயண தலங்கள்
இலங்கையில் கன்னியா வெந்நீர் ஊற்றுகள், வில்லூண்டி தீர்த்தம், திருகோணமலை ராவணன் பாறை , பல அனுமார் தலங்கள் , சீதை கோவில், ராமர் பூஜித்த லிங்கங்கள் என 52 ராமாயண திருத்தலங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவற்றைக் காண்போம். முதலில் அனுமார் கோவில்களில் துவங்குவோம் .
106.இலங்கையில் ஆஞ்சனேயர் கோவில்கள்
106.கொழும்பு நகர ஆஞ்சனேயர் கோவில் Panchamuga Anjaneyar Temple
கொழும்பு நகரத்திலிருந்து 9 கி.மீ தூரத்தில் கல்கிசை பகுதியில் ஒரு அனுமன் கோவில் கட்டப்பட்டுள்ளது 1996ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்தக் கோவிளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ராமர், அனுமன், விநாயகர், முருகனுடன் சமண மதத்தைச் சேர்ந்த பார்ஸ்வநாதர் சிலையும் இருப்பது ஒரு சிறப்பு.
இரண்டாவது சிறப்பு ஆஞ்சனேயருக்கு தனியாக தேர் உள்ள கோவில் இது. இங்கு நின்று அருள்புரியும் ஆஞ்சனேயர் , பஞ்சமுக ஆஞ்சனேயர் ஆவார் .
Panchamuga Anjaneyar Temple location / access
No 3/11, Sri Bodhirukkarama Road, (Vihara Lane) Kalubowila, Dehiwela,
Xxxx
107 .இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்
நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை நகருக்கு அருகிலுள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இலங்கை சின்மயா மடாலயத்தினரால் நிருவகிக்கப்படுகிறது. ராம- ராவணன் யுத்தத்தில் ராமருக்கு உதவ ஒரு படை இங்கே இருந்தது. ராமர் படை என்பது இறம்பொடை என்று மருவி விட்டது.
இந்த ஆலயம் சுவாமி சின்மயானந்தரின் விருப்பத்துக்கேற்ப 2001 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1981 ஆம் ஆண்டில் சுவாமிகள் இலங்கை வந்திருந்த போது, இந்த இறம்பொடையில் உள்ல வெவண்டன் மலைப் பகுதியைக் கண்டு, அதற்கு “இராம்போதை” (இராமர் பற்றிய அறிவு) என்ற பெயரையும் சூட்டி, மும்பையில் உள்ள குருகுல வேதாந்தக் கல்வி நிலையம் போன்று இலங்கையிலும் அதுபோன்ற ஆசிரமத்தை இவ்விடத்தில் அமைக்க வேண்டினார்..
1996 -ஆம் ஆண்டில் சுவாமி தேஜோமயானந்தர் இலங்கைக்கு வந்தபோது இவ்விடத்தில் பக்த அனுமன் ஆலயம் அமைக்க ஆசி வழங்கினார். 1997 ஆம் ஆண்டில் ஆலயத்துக்கான பூமி பூசை நடைபெற்றது. மகாபலிபுரத்தில் 18 அடி உயர அனுமர் சிலை வடிவமைக்கப்பட்டு 1999 ஆம் ஆண்டில் இவ்விடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டது. பின்னர் 2001 ஏப்ரல் 8 ஆம் நாள் குடமுழுக்கு நடைபெற்றது. பெளர்ணமி பூஜை சிறப்பாக நடத்தப்படுகிறது. ஆன்மீகப் பணிகளுடன் கல்வி, சமூகப்பணிகளையும் ஆலயத்தினர் செய்து வருகின்றனர்.
To be continued…………………….
—subham—
Tags- கப்பல் திருவிழா , நாகர்கோவில், நாக தம்பிரான், இலங்கை,part 46, இராமாயண, தலங்கள் , அனுமார், கோவில், ஆஞ்சனேயர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ஆர்டிகிள் 370 என்ன சொல்கிறது?
ச.நாகராஜன்
இந்திய அரசியல் சாஸனத்தில் ஆர்டிகிள் 370 ஒரு முக்கியமான பிரிவாக அமைகிறது.
இது என்ன சொல்கிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் அறிய வேண்டியது கடமையாகும்.
ஆர்டிகிள் 1 மற்றும் ஆர்டிகிள் 370 மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தும் என்று முதலிலேயே ஆர்டிகிள் 370 கூறி விடுகிறது.
அப்படியானால் இந்திய அரசியல் சாஸனத்தின் இதர பிரிவுகள்???
அங்கு செல்லாது என்று அர்த்தம்.
இனி ஆர்டிகிள் 370இல் உள்ள முக்கியக் அம்சங்களைப் பார்ப்போம்.
· ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இரட்டை குடியுரிமை உண்டு.
· ஜம்மு-காஷ்மீரின் தேசீயக் கொடி இந்திய தேசியக் கொடியை விட வேறானது.
· ஜம்மு-காஷ்மீரின் சட்டசபையின் ஆயுள் காலம் ஆறு வருடங்கள். ஆனால் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களில் உள்ள சட்டசபையின் ஆயுள் காலம் ஐந்து வருடங்கள் மட்டுமே தான்!
· ஜம்மு-காஷ்மீரில் உள்ள குடிமக்கள் இந்திய தேசீயக் கொடியை இகழ்ந்தால் அது குற்றமாகாது. அது போலவே இந்தியாவின் இதர தேசீய அடையாளங்களை இகழ்ந்தாலும் அது குற்றமாகக் கருதப்படமாட்டாது.
· ஜம்மு-காஷ்மீர் குடிமக்களுக்கு இந்தியாவின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் செல்லாது.
· ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய அரசு மிகவும் சில ‘எல்லைக்குட்பட்ட’ விஷயங்களில் மட்டுமே சட்டங்களை இயற்ற முடியும்.
· ஜம்மு-காஷ்மீரில் ஒரு காஷ்மீரிப் பெண் இந்தியாவில் உள்ள இதர மாநிலங்களைச் சேர்ந்த ஒரு ஆணை மணம் புரிந்தால் அந்தப் பெண்ணுக்கான காஷ்மீர் குடியுரிமை ரத்தாகி விடும்.
· ஆனால் அதே காஷ்மீரிப் பெண் ஒரு பாகிஸ்தானைச் சேர்ந்த ஆணை மணம் புரிந்தால் அந்த ஆணுக்கு ஜம்மு-காஷ்மீர் குடியுரிமை கிடைத்து விடும்.
· ஆர்டிகிள் 370 இருப்பதால் ஜம்மு-காஷ்மீரில் மட்டும் RTI எனப்படும் RIGHT TO INFORMATION சட்டப்படி செல்லுபடியாகாது. இதே போலத் தான் இங்கு RTE எனப்படும RIGHT TO EDUCATION மற்றும் CAG சட்டப்படி செல்லுபடியாகாது.
· ஆர்டிகிள் 370 இருப்பதால் ஒரு பாகிஸ்தானிய ஆண் தனக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் என்று நினைத்தால் அவன் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவு தான்!
ஆனால் இது தற்காலிகமானது என்று இந்திய அரசியல் சட்டம் கூறுகிறது.
ஆனால் பற்பல வருடங்கள் கடந்தும் கூட இந்த தற்காலிக சட்டப்பிரிவு அப்படியே இருந்து வந்துள்ளது.
இதை ஆழ்ந்து படிப்போர் இது பாரபட்சமான ஒரு பிரிவு என்பதை நன்கு உணர முடியும்.
இதையொட்டிய ஒன்று தான் 35A என்ற பிரிவு.
ஆகவே இந்த தற்காலிகத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்பது தான் மோடி அரசின் முடிவு. இதுவே இந்திய மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உள்ளார்ந்த ஆசையும் கூட.
இதற்கு முதற்படி எடுத்து வைத்தது மோடி அரசு.
இதன் படி 35A இன் பல அம்சங்கள் நீக்கப்பட்டு விட்டன!
இன்னும் சில அடிப்படை உரிமைகள் ஜம்மு-காஷ்மீரைப் பொறுத்த மட்டில் இந்திய மக்களுக்கு கிடையாது. அங்கு சொத்து வாங்க முடியாது. வணிக நிறுவனம் ஆரம்பிக்க முடியாது. இவை போன்ற சர்ச்சைக்குரிய பல அம்சங்கள் உண்டு.
ஆகவே முழுவதுமாக ஆர்டிகிள் 370 மற்றும் 35A திரும்பப் பெறப்பட வேண்டும்.
அது சீக்கிரமே வரட்டும் என்பது தான் இந்திய மக்களின் ஒட்டு மொத்த ஆசை.
இது வேண்டாம் என்று கூறும் சிலரை அரசியல் ஆதாயத்தைத் தேட நினைக்கும் தேச விரோத சக்திகளோ என்று மக்கள் சந்தேகப்படுவது இயல்பே!
***
ஆதாரம், நன்றி :- கல்கத்தாவிலிருந்து வெளி வரும் ஆங்கில வார இதழ் TRUTH – VOLUME 84 ISSUE – 5 (DATED 17-3-2017), KASHMIR,
மன்னர்களே! உங்கள் கர்வத்தை/ அகந்தையை கற்றோரிடம் காட்டாதீர்.
அறிவாளிகளுடன் யார் போட்டி போட முடியும்?
இதோ தமிழிலுமொரு கவிஞர் அழகாகப் பாடி வைத்துள்ளார்
வெள்ளதால் /வெள்ளத்தே போகாது வெந்தணலால் வேகாது
வேந்தராலும் கொள்ளத்தான் முடியாது
கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவுறாது
கள்ளர்க்கோ மிகவரிது காவலோ மிகவெளிது
கல்வியென்னும் உள்ளத்தே பொருளிருக்க
உலகெல்லாம் பொருள்தேடி உழல்வதென்னே
XXXX
SLOKA 17
இன்னுமொரு பாடல்
अधिगतपरमार्थान्पण्डितान्मावमंस्थास्
तृणम् इव लघु लक्ष्मीर्नैव तान्संरुणद्धि ।
अभिनवमदलेखाश्यामगण्डस्थलानां
न भवति बिसतन्तुर्वारणं वारणानाम् ॥ 1.17 ॥
அதிகத பரமார்த்தான் பண்டிதான்மாவ மம்ஸ்தாஸ்
த்ருணம் இவ லகு லக்ஷ்மீர்நைவ தான் ஸம்ருணததி
அபிநவமதலேகா ஸ்யாமகண்டஸ்தலானாம்
ந பவதி பிஸந்துர் வாரணம் வாரணானாம்
எல்லோரிடமும் கருணை காட்டும் அறிவாளிகளை
அவமதிக்காதீர்கள். செல்வம் என்பது புல்லுக்குச் சமம். அது கற்றோருக்கு அணைபோட முடியாது; மத நீர்ச் செறிவால்
முகம் கருத்த யானைகளை தாமரை மலர்த் தண்டால் கட்டிப்போட யாரே வல்லார்?
உண்மை வித்துவான்களைநீ உல்லிங்கனஞ் செய்யேல்
எண் மையதன்னார்க்குன் இருநிதியம் — நண்ணு மதைக்
கண்டுன் பாற் சேரார் கரியையொரு தாமரை நூற்
கொண்டே கட்டலாகுமோ கூறு –17
xxx
SLOKA 18
இன்னுமொரு பாடல்
अम्भोजिनीवनविहारविलासम् एव
हंसस्य हन्ति नितरां कुपितो विधाता ।
न त्वस्य दुग्धजलभेदविधौ प्रसिद्धां
वैदग्धीकीर्तिम् अपहर्तुम् असौ समर्थः ॥ 1.18 ॥
அம்போஜினீவன விஹார விலாஸம் ஏவ
ஹம்ஸஸ்ய ஹந்தி நிதராம் குபிதோ விதாதா
ந த்வஸ்ய துக்தஜல பேதவிதௌ ப்ரசித்தாம்
வைதக்தீ கீர்த்திம் அபஹர்தும் அசௌ ஸமர்த்தஹ
பிரம்மாவுக்குக் கோபம் வந்தால் தாமரைத் தடாகத்தில் செல்லும் அன்னப் பறவைகளைத் தடுத்து மகிழ்ச்சியைக் கெடுக்கலாம். ஆனாலும் பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தின் அபூர்வ சக்தியை விதியாலும் மாற்ற முடியாது.
October 31, 2023(Article lifted from HINDU POST)Thanks to Hindu post
Posted on 1-11-2023 by swami_48@yahoo.com
What is Sandhya Vandana?
The Sandhya Vandana ritual is performed for Devi Gayatri, Savitri, and Saraswati, thrice a day:
· just before dawn
· at noon
· in the evening when the sun is half set
The steps in the ritual may differ as per the instructions of your kula-guru (family’s religious teacher). Generally, it includes performing pranayama, offering arghya to Surya, and chanting the Pranava mantra Aum with the Gayatri mantra. After the Sandhya Vandana ritual, the person can perform an Agnihotra or other prescribed yagnya and proceed with routine work. A person who regularly performs Sandhya Vandana with devotion obtains a healthy life.
Who can perform Sandhya Vandana?
1. Son of a Vaishya and Shudra
While hunting, Dasharatha fatally hurt Shravana by mistake. Dasharatha then informed his aged parents. Shravana was the dutiful son who took meticulous care of his blind and dependent parents. Shravana’s Vaishya (merchant) father and Shudra (service-oriented) mother were grief-stricken because he was a devoted child and their only support. His sad ascetic father remarked that Shravana used to do his Sandhya Vandana and Yagnya rituals every day. He then cursed Dasharatha to die pining for his son. Indra himself came in an aerial chariot to take Shravana to Deva-loka.
· Brahmana(s) and Kshatriya(s)
Rishi Vishwamitra took Shree Rama and Lakshmana to the forest to deal with the Rakshasa(s) who were disturbing their Brahmanical rituals. The trio performed the Sandhya Vandana rituals at dawn before traveling further. After many Rakshasa(s) were killed, they reached Videha, where Rama married Seeta.
· Sumantra, a charioteer
Just before Rama’s coronation, Kaikeyi wished for his exile and her son Bharata’s kingship. Rama, Lakshmana, and Seeta decided to leave the lavish palace of Ayodhya. Dasharatha’s charioteer Sumantra escorted them out of the city towards the forest. In the evening, Sumantra unyoked the horses and performed his Sandhya Vandana rituals. The next day, he dropped them at Shringaverapura on the banks of River Ganga and returned.
· Ravana, the son of a Brahmana and a Rakshasi
Ravana worshipped Bhagwan Shiva, who reluctantly granted him the Atma-linga. While carrying it, Ravana felt a tremendous urge to urinate due to Bhagwan Shiva’s powers of Maya. Ravana saw a young cowherd and asked him to hold the Atma-linga while he completed the job, which took quite a long time. The cowherd was Bhagwan Ganesha in disguise, who ran away with the Atma-linga, with Ravana in pursuit.
Further, Bhagwan Vishnu clouded the sun, making Ravana stop for his Sandhya Vandana evening prayers. The cowherd called out Ravana 3 times as pre-decided and put down the heavy Atma-linga. The furious Ravana hit out at the boy. When Bhagwan Ganesha appeared in his true form, Ravana apologized. Ravana then tried his best to dislodge the Atma-linga but failed.
· Vali, the monkey king
Vali was the brave and strong ruler of Kishkindha. Once, he was reciting his Sandhya Vandana prayers at the confluence of 3 oceans in the south. Ravana had attacked him from behind, only to have Vali toss him all around the world. The Rakshasa swore that he would never attack Vali again and begged for his friendship which the vanara granted. Ravana was to later abduct Seeta, and Vali would kidnap his brother Sugreeva’s wife Ruma.
· Seeta, the Queen of Ayodhya
When Hanuman was searching for Seeta, he reached the beautiful Ashoka Vatika. It was almost daybreak. Thinking she might come to a water stream for her Sandhya Vandana, he decided to wait on a nearby tree. There, he found and recognized Seeta since he had seen her fly past in the Pushpaka vimana. Later, Hanuman burned down Lanka and reported the events back to Rama. This led the vanara sena to construct the auspicious Rama Setu and the start of the war against the Rakshasa(s).
· Hanuman, the vanara Dev
When Shree Ram and Lakshmana were hurt on the battlefield, Hanuman carried a mountain with the sanjeeevani herbs to cure them. While returning the mountain back, Hanuman took a break for his Sandhya vandana prayers. Later, Lakshmana killed Indrajit, who wanted to perform an Asuric yagnya, and Rama killed Kumbhakarna and Ravana.
1. The royal couple
Rama and Seeta returned to Ayodhya and sat on the throne. Their daily routine concluded with the performance of the Sandhya Vandana ritual in the evening, having dinner, visiting temples for devotional worship, and resting at night.
Thus, Ramayana shows that a person from any of the 4 varnas (profession) or 4 varga (stages of life) can perform the Sandhya Vandana rituals.
(This article is part of an ongoing series on Ramayana by Shri Gaurang Damani and excerpted from his book “Untold Stories of Ramayana”.)
இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45
இலங்கைத் தீவிலுள்ள சுமார் 4000 கோவில்கள் பட்டியலும் எல்லோருக்கும் கிடைக்கிறது. ஆயினும் அதிலுள்ள பழமையான, முக்கியமான 108 ஆலயங்களை பற்றி எழுதத் துவங்கினேன். இன்னும் ஐயனார் கோவில்கள், ஐயப்பன் கோவில்கள் , நாச்சிமார் கோவில்கள், சப்த மாதா கோவில்கள், சீதா தேவி கோவில், ராமாயணத் தொடர்புள்ள கோவில்கள், நாகர் கோவில்கள்,பாபா கோவில்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவைகளில் முக்கியமானவற்றைக் காண்போம் .
103.சப்தமாதா கோவில் , இலங்கை
இலங்கையில் 7 கன்னிமார்கள் சப்தமாதா கோவில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் என்னும் இடத்தில் சப்த கன்னிமார் ஆலயம் உள்ளது. இங்கு ஜூஉலை மாதம் வருடாந்திர உற்சவம் நடக்கிறது. பக்தர்கள் கடற்கரைக்குச் சென்று தீர்த்தம் எடுத்துவந்து வழிபாடு செய்கின்றனர் .
பண்டத்தரிப்பு வட்டாரத்தில் கேணிக்கட்டு அருள்மிகு கன்னிமார் ஆலயம் இருக்கிறது.
ஒட்டுசுட்டான் – புதுக்குடியிருப்புக்கு இடையிலுள்ள மண்ணாக்கண்டல் பகுதியில் கோவில் இருப்பதை நவரட்ணம் தனது புஸ்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இவைகளில் பல, நாச்சிமார் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.
வன்னி பிரதேசத்தில் 7 கன்னிமார்கள் வழிபாடு அதிகம் காணப்படுகிறது
xxxxxxx
வன்னியில் 7 வீர தெய்வங்கள்
ஹாலந்து நாட்டு ஒல்லாந்துப் படைகள் வன்னி குறுநில மன்னர்களையும் தளபதிகளையும் கொன்றபோது அவர்களுடை மனைவியர் 7 பேர் தீக்குளித்து இறந்ததால் அவர்களை 7 வீர தெய்வங்கள் என்று வணங்கும் வழக்கமும் இருக்கிறது. ஆயினும் சப்த மாத்ரிகா சிலை கள் இதற்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவின் எல்லாப் பகுதியிலிருந்தும் கிடைப்பதால், இது ஆதிகாலத்திலேயே இங்கு இந்துக்களால் அறிமுகப்படுத்தகப்பட்டதும் தெரிகிறது.
மாற்றானின் கரம்பட்டு மாசுபடும் மானமதை
ஏற்காது மாதாக்கள் உயிரிழக்க சித்தமானார்
பொல்லாத நஞ்சுநிறை குன்றிமணி வித்துக்களை
செங்கல்லுடன் இடித்துத் துவைத்து கரந்தாங்கி ….
பேராறு மாதாக்கள் பணிப்பெண்ணுடன் சேர்ந்து
வீரா வேசமுடன் நஞ்சுண்டு மடிந்தனரே …
கற்புமிகு மாதாக்கள் எழுவரையும் கைதொழுது
அற்புருக நின்றார்கள் வன்னிவள நாட்டினர்
( வன்னி நாய்ச்சிமார் மான்மியம்)
அவர்கள் இறந்தபின்னர் தகனம் செய்யப்பட்டதால் தீக்குளித்தனர் என்ற சொல்லும் பொருத்தமாகவே உள்ளது.
Xxx
104. ஐயனார் கோவில்கள்
தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் மிகப்பெரிய ஐயனார் உருவ சிலைகளையும் அருகில் குதிரைகளையும் காணலாம். தர்ம சாஸ்தா என்று ஐயனாரை அழைப்பதால் சபரிகிரி ஐயப்பனுக்கும் ஐயனாருக்கும் தொடர்பு உண்டு; இருவரும் ஒருவரே என்று சொல்லுவோரும் உண்டு.
கருணையே வடிவான சிவ பெருமான் பஸ்மாசுரனுக்கு வரம் கொடுத்ததும் அவன் அதை சிவன் தலையிலேயே கை வைத்து சோதிக்க எண்ணிய போது விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அவனை மயக்கியதும் புராணக்கதைகளில் வருகிறது.. அப்போது, சிவனுக்கும் மோகினிக்கும் பிறந்தவரே ஐயனார் என்பது பிற்காலப் புராணங்கள் தரும் செய்தியாகும் ; கிராம மக்கள் வறட்சி நீங்கி, வளம் கொழிக்க ஐயனாரை வணங்குகின்றனர் .
யாழ்ப்பாண அராலி கிழக்கில் இருக்கும் மலையாளங் காடு ஐயனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி உத்தர உற்சவம் நடைபெறுகிறது
வண்ணார் பண்ணை , அராலி, சுன்னாகம் , ஐயனார் கோவிலடி,வரணி ஐயனார் கோவில்கள் அருகிலுள்ள பெரிய கோவில்களாலும், கட்டிடங்களாலும் காண்பதற்கே அரியன ஆகிவிட்டன
புத்தகளம் – அனுராதபுரம் வழியில் பழமையான அய்யநாயக்க தேவாலய (தப்போவ) கோவில் இருக்கிறது. சிலாபம் வரையில் A12 மற்றும் A3 வீதிகளில் பிரதான வீதியில் மட்டும் ஏறத்தாழ இருபது அய்யனார் /அய்யநாயக்க கோவில்களை காணலாம்
சிலாவம் அருகில் மாதம்பையில் உள்ள ஐயனார் கோவிலில் பெரிய குதிரையைக் காணலாம். சிங்களத்தில் ஐயனார் என்பதை அய்யன என்பார்கள்.
மன்னார்- பூநகரி வழியில் உள்ள வெள்ளங்குளம் ஐயனார் கோவில் , அந்த வழியில் செல்லும் யாத்ரீகர்களுக்கு உறுதுணையாக நிற்கிறது. ஏராளமானோர் கற்பூரம் ஏற்றிவிட்டு, சதிர் தேங்காய் போட்டுவிட்டுச் செல்வது வழக்கம்..
திருகோணமலை அருகில் பெரியகுளத்தில் ஐயனார் கல்லுக்கு ஆண்டுதோறும் பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள்.
மட்டக்களப்பு வட்டாரத்திலும் ஐயனார் கோவில்கள் இருக்கின்றன
ஹிந்து மதத்தில் ஏராளமான பிரிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருப்பதாகப் பொய்க் கதை பேசித் திரியும் அரசியல்வாதிகள் ஏன் மற்ற மதங்களைப் பற்றிப் பார்க்க மாட்டேன் என்கிறார்கள்?
சுயநலவாதிகள்! அதனால் தான்!
ஹிந்து மதத்தை ஆதாயமாக வைத்து அரசியல் பிழைப்பு நடத்த நினைக்கும் இவர்களை ஹிந்துக்கள் ஒதுக்க வேண்டும்; அரசியலை விட்டு அப்புறப்படுத்த வேண்டும்.
இவர்களில் சிலர் நான் கிறிஸ்துவன் என்று மேடையிலேயே கர்வத்துடன் கூறிக் கொள்கிறார்கள்!
கிறிஸ்தவத்தில் பிரிவே இல்லையா?
இஸ்லாத்தில் பிரிவே இல்லையா?
பார்ப்போமா?
ஒரே கிறிஸ்து, ஒரே பைபிள், ஒரே மதம் – பிரிவே இல்லாத அபூர்வமான அதிசயமான சமநீதி பேசி அதைக் கடைப்பிடிக்கும் ஒரே உலக மதம் – கிறிஸ்தவம்! அடடா? அப்படியா?!
ஆனால் ரோமன் கத்தோலிக்கர்கள் சிரியன் கத்தோலிக்க சர்ச்சுக்குள் (Roman Caholic and Syrian Catholic Church) நுழைய மாட்டார்கள்!
இந்த இரண்டு பிரிவு கத்தோலிக்கர்களும் மார்தோமா சர்ச்சுக்குள் (Marthoma Church) நுழைய மாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் பெந்தகோஸ்த் சர்ச்சுக்குள் Pentecot Church)
நுழைய மாட்டார்கள்.
இந்த நான்கு பிரிவினரும் சால்வேஷன் ஆர்மி சர்ச்சுக்குள் (Salvation Army Church) நுழைய மாட்டார்கள்.
இந்த ஐந்து பிரிவினரும் செவந்த் டே அட்வெண்டிஸ்ட் சர்ச்சுக்குள் (Seventh Day Adventist Church) நுழைய மாட்டார்கள்.
இந்த ஆறு பிரிவினரும் ஆர்தோடாக்ஸ் சர்ச்சுக்குள் (Orthodox Church) நுழைய மாட்டார்கள்.
இந்த ஏழு பிரிவினரும் ஜோகோபைட் சர்ச்சுக்குள் (Jacobite Church) நுழைய மாட்டார்கள்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
146 பிரிவுகள் உள்ளன கிறிஸ்தவ மதத்தில்.
ஒரு சர்ச்சை இன்னொரு சர்ச் ஆதரிக்காது. அனுமதிக்காது. உள்ளே நுழைய மாட்டார்கள் என்றால் நுழைய விட மாட்டார்கள் என்று அர்த்தம்!
இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?
பதில் யாருக்கும் தெரியாது? …. ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!
சரி இஸ்லாமுக்கு வருவோம்.
ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!
இஸ்லாமில் முஸ்லீம்களில் ஷியாவும் சன்னியும் ஒருவரை ஒருவர் வெறுப்பது கண்கூடு. இதனால் ஏற்பட்ட போர்களையும் அதில் இறந்த இஸ்லாமியரையும் எண்ணிப் பார்த்தால் வருத்தமே ஏற்படும்.
உலகில் உள்ள மதக் கலவரங்களை அலசி ஆராய்ந்து பார்த்தால் இந்த இரு பிரிவினருக்கும் ஏற்பட்ட அடிதடி, சண்டை, கலவரம் நம்மைத் திகைப்புறச் செய்யும்.
ஷியா பிரிவினர் சன்னி பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இந்த இரு பிரிவினரும் அஹமதியா பிரிவின் மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இந்த மூன்று பிரிவினரும் சூபி மசூதிக்குள் நுழைய மாட்டார்கள்.
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
குறைந்தபட்சம் 13 பிரிவுகள் இஸ்லாத்தில் உள்ளன.
இந்தியாவில் ஆவணப்படுத்தப்பட்ட இஸ்லாமில் உள்ள ஜாதிகளின் எண்ணிக்கை 73!
இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள், குண்டு போட்டு அழிக்கிறார்கள், கூண்டோடு ஒழிக்கிறார்கள்.
ஆஹா! ஒரே அல்லா! ஒரே குர் ஆன்! ஒரே நபி!
ஏற்றத்தாழ்வு இல்லாத சமநீதி தத்துவம்; ஒரே மதம்!
இங்கு இப்படி இருக்கும் சமநீதி பற்றி நமது சனாதன ஒழிப்பு வீரர்கள் ஏன் கண்டுகொள்ளவில்லை?
பதில் யாருக்கும் தெரியாது? ….. ஆனால் ஓட்டுப் போடும் நமக்குத் தெரிய வேண்டும்!
இது போக சிலுவைப் போர்கள், சமீபத்தில் நடந்த குவைத் போர் இவற்றையும் சற்றுப் படித்து ஆராய வேண்டும்.
நல்ல கிறிஸ்தவர்களும், நல்ல இஸ்லாமியரும் இந்த போலிப் பசப்புவாதிகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தங்களைப் பகடைக் காய்களாக அரசியல்வாதிகள் பயன்படுத்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இவர்களை அரசியலை விட்டு அப்புறப்படுத்த இறைநம்பிக்கை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்தால்…..