எதை எதை காசு கொடுக்காமல் பெறக்கூடாது என்றும் எதை எந்த ஜாதியினர் கொடுத்தாலும் வாங்கலாம் என்றும் முதல் பாடலில் சொல்கிறார் அம்பலவாணர். பிரமணர்களைத் திட்டினால் ஆயுள் குறையும் என்றும் எச்சரிக்கிறார்.
அடுத்த பாடலில் தத்துவங்கள் என்ன என்று எண்ணிக் காட்டுகிறார்.
மின்னுவதெல்லாம் பொன் அல்ல;
வெளுத்தது எல்லாம் பால் அல்ல ;
பூணுல் அணிந்தவர் எல்லாம் ஐயர் அல்ல;
உயர்ந்தோர் HIGHER ஹையர் = ஐயர் ;
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,
திமிர்ந்த ஞானச் செருக்குடையோர் ; எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுவோர் பிராமணாள்; வறுமையில் வாடினாலும், என் ஜாதியை கீழ் ஜாதி பட்டியலில் சேருங்கள் என்று கேட்காதவர், கெஞ்சாதவர் உண்மையிலேயே HIGHER ஹையர் தானே?
ஆகவே, அம்பலவாணர் சொல்லும், ஒழுக்கம் உடைய அந்தணருக்கு ஆதரவு தாருங்கள்.
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு என்ற என்னுடைய பழைய கட்டுரை இதோ::–
பேரறிவாளன், உலகின் முகல் பொருளாதார நூல் எழுதிய நிபுணன் ஆகிய சாணக்கியன் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் ப்ராஹ்மணாள் பற்றி ஒரு பெரிய எச்சரிக்கை விடுக்கிறான்.:
இரண்டு பிராமணர்கள் நின்று கொண்டிருந்தால் குறுக்கே போகாதே!
பிராமணன் இருந்தால் அவனுக்கு எதிரே கால் நீட்டாதே. ;
பொருள்—“இரண்டு பிராமணர்களுக்குக் குறுக்கே போகாதே; ப்ராஹ்மணனுக்கும் அக்னிக்கும் (தீ) குறுக்கே போகாதே போகாதே; அவ்வாறே கணவன்– மனைவி, எஜமானன்–சேவகன் (முதலாளி- தொழிலாளி), உழுகலன் (ஏர்)- காளை மாடு இவர்களுக்கு இடையிலும் செல்லாதே.
பாதாப்யாம் ந ஸ்ப்ருசேதக்னிம் குரும் ப்ராஹ்மணமேவ ச
நைவ காம் ந குமாரீம் ச ந வ்ருத்தம் ந சிசும் ததா
சாணக்கிய நீதி, அத்தியாயம் 7, ஸ்லோகம் 6
பொருள்
அக்னி, ஆசிரியர், ப்ராஹ்மணன், பசு மாடு, இளம் பெண், முதியவர், குழந்தை ஆகியோருக்கு முன்னால் காலை நீட்டி உட்காராதே, படுக்காதே..
xxx
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல் ஒழுகு!
அந்தக் காலத்தில் ப்ராஹ்மணர்கள் தூய ஒழுக்கத்தின் சின்னமாக விளங்கினர்; அந்தக் காலத்தில் மூவேந்தர்களும் கூட ப்ராஹ்மணர்களைக் கண்டு அஞ்சினர்.; சங்க இலக்கியத்தில் அதிகமான பாடல்களை இயற்றிய கபிலரையும் பரணரையும் கண்டு சேர சோழ பாண்டியர்கள் மரியாதையுடன் கூடிய பயம் கொண்டனர். ‘புலன் அழுக்கற்ற அந்தணாளன்’ என்று தமிழ்ப் பார்ப்பான் கபிலனை சங்கப் புலவர்கள் புகழ்ந்து, தலைமேல் வைத்துக் கூத்தாடினர்.
‘’குணம் என்னும் குன்று ஏறி நிற்கும் பார்ப்பனர்கள் வெகுளி கணம் ஏயும் காத்தல் அரிது’’ என்பதால் பயந்தனர். அந்தக் காலத்தில், அவர்கள் வாயில் நல்ல சொற்கள் வந்தால் அது பலிக்கும்; சுடு சொற்கள் வந்தால் அது ஒருவனுடைய குலத்தையே வேர் அறுக்கும் என்பது உண்மையாக இருந்தது. .
நவ நந்தர்களை வேருடன் அறுத்து, அலெக்ஸ்சாண்டரும் கண்டு அஞ்சிய மாபெரும் மகத சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சாணக்கியன் இதற்கு உதாரணம்..
xxxxx
இதனால் வேளாண் குடி மக்களுக்கு திரிகடுகம் ஆசிரியர் நல்லாதனார், ஒரு நல்ல புத்திமதி செப்பினார்::-
சூதாட்டத்தில் பணம் கிடைக்க வேண்டும் என்று காத்திராதே; விரும்பாதே; பார்ப்பனர்களை தீ என்று கருது;
அகலாது அணுகாது குளிர் காய்பவர் போல இரு;
உழவுத் தொழிலை கடனே என்று செய்யாமல், விரும்பிச் செய்.
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை
பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்- ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்
அழகென்ப வேளாண் குடிக்கு
–திரிகடுகம், நல்லாதனார்
உண்மையில் இந்த தீக்காயும் உவமையை முதல் முதலில் பயன்படுத்தியவர் ஆதி சங்கரர் ஆவார். அவர் எழுதிய பாஷ்யங்களில் இந்த உவமை வருகிறது..
பகவத் கீதை 9-29 ம் ஸ்லோகத்துக்கு அண்ணா எழுதிய உரையில் இதை மேற்கோள் காட்டுவார்::-
“அக்னியைப் போல் நான் உளேன்; எட்டி நிற்பவர் குளிரை அக்னி போக்குவதில்லை; ஸமீபித்து வருவோர் குளிரைப் போக்குகிறது. இது அக்னியின் பாரபக்ஷமன்று. அது போலவே பக்தர்கள் என் அருள் பெறுவதும். மற்றவர் பெறாததும்”-
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
88. பல்துறை, அறப்பளீசுர சதகம்
தாம்புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
தங்களுக் கவைத ழுவுறா!
சற்றும்அறி வில்லாமல் அந்தணரை நிந்தைசெய்
தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறுங்கலவை மாலைதயிர் பால்புலால்
வீடுநற் செந்நெல் இவைகள்
வேறொருவர் தந்திடினும் மனுமொழி யறிந்தபேர்
விலைகொடுத் தேகொள் ளுவார்!
தேன்கனி கிழங்குவிற கிலையிவை யனைத்தையும்
தீண்டரிய நீசர் எனினும்
சீர்பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
சீலமுடை யோர்என் பரால்!
ஆன்கொடி யுயர்த்தவுமை நேசனே! ஈசனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆன் கொடி உயர்த்த உமை நேசனே – ஏற்றுக்கொடியை
கொடையையும் புகழுவோர் தங்களுக்கு அவை தழுவுறா – தாங்கள் செய்த தவத்தினையும் ஈகையையும் புகழ்ந்து கூறிக்கொள்வோருக்கு அவை கிடையாமற் போய்விடும், சற்றும் அறிவு இல்லாமல் அந்தணரை நிந்தை செய்
தயவு இலோர் ஆயுள் பெருகார் – சிறிதும் அறியாமல் அந்தணரைப் பழிக்கும் இரக்கமிலோர்க்கு ஆயுள் குறையும், மேம்படு நறுங்கலவை மாலை தயிர் பால்,
புலால் வீடு நல் செந்நெல் இவைகள் – உயர்ந்த மணமிக்க கலவைச் சந்தனம்,மாலை, தயிர், பால், ஊன், வீடு, நல்ல செந்நெல் ஆகிய இவற்றை,வேறு ஒருவர் தந்திடினும் மனுமொழி அறிந்தபேர் விலை கொடுத்தேகொள்ளுவார் – மற்றொருவர் கொடுத்தாலும் மனு கூறிய முறையை அறிந்தவர்கள் விலை கொடுத்துத் தான் வாங்குவார்கள், தேன் கனி கிழங்கு
விறகு இலை இவை அனைத்தையும் தீண்ட அரிய நீசர் எனினும் சீர் பெற
4) மஹேஸ்வரன் காம மயக்கத்தினாலும் மோஹத்தினாலும் குரு பத்னிகளிடத்தில் மயங்கலாமா?
5) பரசுராமர் சொந்தத் தாயை கொல்லலாமா?
6) சந்திரன் குரு பத்னியை சேர்த்துக் கொள்ளலாமா?
7) பகவான் கிருஷ்ணர் கோபிகளை ரமிக்கலாமா?
இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான ஒருவன் அப்படிச் செய்தால் என்ன தப்பு?
விளக்கம் தேவை.
இதிஹாஸ, புராணங்களைப் போற்றுவோருக்கு எழும் நியாயமான சந்தேகங்களை அவர்கள் கேட்கின்ற போது அவர்களைத் திட்டி, அவமானப்படுத்தி அப்புறப்படுத்தி விடக் கூடாது.
தக்க விளக்கங்களை அளிக்க வேண்டும்.
முதலில் இவர்களே இப்படிச் செய்தால் சாமானியனான நான் இது போலச் செய்தால் அதில் என்ன தப்பு என்ற கேள்வியைக் கவனிப்போம்.
இதே சந்தேகம் எழுந்தபோது சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள சந்தேகம் கொண்டவர்கள், போதாயன மஹரிஷியை அணுகினர்.
அவர் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறினார்.
“தேவர்களைப் போல நடக்க முயலாதே;
அவர்கள் சொல்லியதைப் போல நட”
“தேவர்களால் எது அனுஷ்டிக்கப்பட்டதோ, முனிவர்களால் யாது அனுஷ்டிக்கப்பட்டதோ அது மனிதர்களால் கடைப்பிடிக்கக் கூடியதல்ல. அவர்கள் சொல்லியதை அனுஷ்டிக்க வேண்டும்.
ஏன் நாம் அப்படிச் செய்யக் கூடாது?
இதற்கு மனு காரணத்தை (ஹேது) கூறி விட்டார்:
“முன்னோர்களாகிய அந்த மஹான்களின் சரீரங்களும் இந்திரியங்களும் தேஜோ மயங்கள். ஆகையால் தாமரை இலையானது ஜலத்தினால் பற்றாமல் இருப்பது போல, அவர்கள் தோஷத்தினால் பற்றப்படுகின்றவர்கள் அல்ல”
நம் போன்றவர்களின் அறிவுக்கு எட்டாத யோகப் பெருமை பெற்றவர்கள் அவர்கள். அவர்களது வடிவம், உருவம், அமைப்பு, குணாதிசயங்கள் மனித விதிகளுக்கு உட்பட்டதல்ல.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு சரிதத்தையும் எடுத்து உன்னிப்பாக ஆராய்ச்சி செய்து பார்த்தோமானால் நமக்குக் கிடைக்கும் உண்மைகள் நம்மை வியப்படையவே செய்யும்.
பரசுராமர் தந்து தந்தையின் சொற்படி கேட்டார்; சித்தி பெற்றார்.
யாக்ஞவல்க்யர் ஆதித்தனை நோக்கித் தவம் செய்தார், சுக்ல யஜூர் வேத உபதேசத்தைப் பெற்றார்.
இந்திரன் மூன்று லோகங்களும் க்ஷேமம் அடையவேண்டியதன் பொருட்டு அதன் நிமித்தமாகவே பிரம்மஹத்தி தோஷத்தைத் தானே அங்கீகரித்துக் கொண்டான்.
உண்மையில் பார்த்தால், ஆதிசேஷ பகவானாகிய இறைவன் தேவர்கள் மற்றும் பிராமணர்களின் நன்மைக்காகவே அவர்களின் காரியத்தை முன்னிட்டே சுக்ல யோனி சம்பந்தமாக உள்ள யோனியை அடைந்து பலபத்ரராகப் பிறந்தான்.
பாண்டவர் ஐவரும் தனது தாயின் வசனம் சத்தியமாக ஆதல் வேண்டும் என்பதன் பொருட்டாகவே ஆச்சரியமான பல நிபந்தனைகளோடு திரௌபதியுடன் இல்லறம் நடத்தினர்.
சந்திரன் தனது தவத்தால் மஹேஸ்வரனுடைய பரம கருணைக்கு ஆளானதோடு மிகுந்த மேன்மையை அடைந்தான்.
பிரும்ம தேவன் சத் புத்திரன் ஜனிப்பதால் ஏற்படும் அபாரமாகிய சித்தியை விளக்கிக் காட்டினான்.
இவை எல்லாம் சாஸ்திரத்திற்கு விரோதமான செய்கைகள் அல்ல. புனிதமான செயல்களே. .
AHALYAA SAAPA VIMOCHANAM
இப்படி தைத்திரீய உபநிஷத் தீபிகையில் விளக்கத்தைக் காணலாம்.
சாஸ்திரங்களையும் வேத, இதிஹாஸ புராணங்களையும் நன்கு கற்றறிந்த சங்கரானந்த சரஸ்வதி போன்ற மஹான்களால் எழுதப்பட்டுள்ள விளக்கவுரைகளைப் படித்தால் நமக்குப் பல உண்மைகள் புரியும்; சந்தேகங்கள் விலகும்.
இனி இது பற்றி விளக்கமாக இனி வரும் கட்டுரைகளில் பார்ப்போமே
கோபத்தைப் பற்றி எச்சரிக்காத தமிழ், ஸம்ஸ்க்ருதப் புலவர்கள் எவரும் இல்லை. வியாசர் முதல் பாரதி வரை எச்சரித்துள்ளனர் ; கோபத்தை வென்றால் அபூர்வ சக்திகள் உண்டாகும் என்று புலவர்கள் கூறுகின்றனர்.
இந்த ‘பிளாக்’ blog கில் கோபம் பற்றி நிறைய கட்டுரைகள் உள்ளதால் அவற்றின் லிங்க் links மற்றும் கீழே கொடுத்துள்ளேன். நான் முன்னரே எழுதியது போல நரகத்தின் மூன்று வாசல்களில் ஒன்று கோபம் ; இதை பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார். காம, க்ரோதம்/கோபம், லோபம்/பேராசை மூன்றும் நரகத்துக்கு இட்டுச் செல்லும் வாசல்.
பத்திரிக்கைகளில் Crime News கிரைம் நியூஸ் படிப்பவர்கள், எல்லா குற்றவாளிகளையும் இந்த மூன்று வகையில் பிரித்து விடலாம். அதுவும் குடி போதை அல்லது கஞ்சா போதையில் இருந்தால் கோபம் அவர்களை சிறைக்கு இழுத்துச் செல்லும் என்பது திண்ணம். இதோ பழைய கோபக் கட்டுரைகள்
8 Jul 2016 — DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE. (for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com). fight-scenes- …
XXXX
அறப்பளீசுர சதகம் 87. சீற்றத்தின் கொடுமை
கோபமே பாவங்களுக் கெல்லாம் தாய்தந்தை!
கோபமே குடிகெ டுக்கும்!
கோபமே ஒன்றையும் கூடிவர வொட்டாது!
கோபமே துயர்கொ டுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
கோபமே உறவ றுக்கும்!
கோபமே பழிசெயும்! கோபமே பகையாளி!
கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
கூடாமல் ஒருவ னாக்கும்!
கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீயநர
கக்குழி யினில்தள் ளுமால்!
ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
தமிழர்களின் தலை சிறந்த நிர்வாகத்தை விளக்கும் இரண்டு சொற்கள் எண்பேராயம், ஐம்பெருகுங் குழு ஆகும் . உலகம் முழுதும் பிரதமர் அல்லது ஜனாதிபதிக்கு அடுத்த நிலையில் வைக்கப்படுபவர் உட்துறை அமைச்சராகும் . பழங்காலத்தில் அவர் பெயர் அமைச்சர் அல்லது தலைமை அமைச்சர்.. அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர் நிதி மந்திரி. அதற்கடுத்த நிலையில் உள்ளவர் பாதுகாப்பு அமைச்சர். அந்தக் காலத்தில் அவர் பெயர் படைத்தலைவர் அல்லது சேனாதிபதி. இவர்கள் அடங்கிய குழு எண்பேராயம் அல்லது ஐபெருங் குழு ஆகும்.
சிவாஜி அமைச்சரவையிலும் , கிருஷ்ண தேவராயர் அமைச்சரவையிலும் இவ்வாறு எட்டு பேர் கொண்ட அஷ்டப் பிரதான், அஷ்ட திக்கஜங்கள் இருந்தனர் ; அவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே விக்ரமாதித்யன் சபையில் நவரத்னங்கள் ( 9 அறிஞர்கள்) இருந்தனர்.. மஹாபாரத, ராமாயண காலங்களில் அமைச்சர்கள் இருந்ததையும் அவர்கள் அறிவுரை வழங்கியதையும் இதிஹாச புராணங்கள் மூலம் அறிகிறோம்
xxxxxx
ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் எண்பேராயம் , ஐம் பெருங்குழு
தமிழர்களின் ஆலோசனைக் குழு (சிலப்பதிகாரம், மணி மேகலை, சொல்லும் எண்பேராயம்)
சிலப்பதிகாரம் 26-38
மணி மேகலை 1-17
1.கரணத்தியலாவர்- கணக்கர்
2.கருமக்காரர்- செயலர்
3.கனகச் சுற்றம் – கருவூல ஆதிகாரி
4.கடைக் காப்பாளர்- அரண்மனைக் காவலர்
5.நகர மாந்தர் – முதியோர்
6.படைத்தலைவர் – காலாட்படைத் தளபதி
7.யானைவீரர் – யானைப்படையின் தலைவர்
8.இவுளி மறவர் – குதிரைப்படையின் தலைவர்
Xxx
ஐம்பெரும் காப்பியங்கள் சொல்லும் ஐம்பெருங் குழு
சிலப்பதிகாரம்- 3-126
மணி மேகலை—1-17, 2-68, 4-89; 5-5; 27-14, 89; 29-43, 30-190
ஐம்பெருங் குழு
1.மந்திரி/ அமைச்சன்
2.புரோகிதன்
3.தூதன்
4.ஒற்றன்/ சாரணர்
5.சேனாபதி/ படைத் தலைவர்
Xxxxx
இந்தப் பொறுப்பு வகிப்பவர்களின் முக்கியப்பணிகளை அறப்பளீசுர சதகம் பாடிய அம்பல வாணர் சற்று விரிவாகவே பாடுகிறார்
85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன் Defence Minister and Home Minister, Commander in Chief
தன்னரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
சாலமேல் வருக ருமமும்
தானறிந் ததிபுத்தி உத்தியுண் டாயினோன்
தானாதி பதியா குவான்;
மன்னவர் மனத்தையும், காலதே சத்தையும்,
வாழ்குடி படைத்தி றமையும்,
மந்திரா லோசனை யும்எல்லாம் அறிந்தவன்
வளமான மதிமந் திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
சூழ்பகைவர் புரிசூழ்ச் சியும்,
தோலாத வெற்றியும் திடமான சித்தியுள
சூரனே சேனா திபன்
அன்னையினும் நல்லமலை மங்கைபங் காளனே!
அனகனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அன்னையினும் நல்ல மலைமங்கை பங்காளனே – தாயினும்
நல்லருள் புரியும் மலைமகளை யிடப்பாகத்திற் கொண்டவனே!, அனகனே –
தூயவனே!, தன் அரசன் வலிமையும் பரராசர் எண்ணமும் சால மேல்வரு
கருமமும் தான் அறிந்து – தன் அரசனுடைய ஆற்றலும் மாற்றரசர் நினைவும் நன்றாகப் பின்வரும் அலுவலும் ஆராய்ந்து, அதி புத்தி உத்தி
உண்டாயினோன் தான அதிபதி ஆகுவான் – சிறந்த அறிவும் சூழ்ச்சியும்
இன்று நாம் வழங்கி வரும் பழனித் திருத்தலத்தின் பெயர் பழைய காலத்தில் வையாபுரி என்று வழங்கப்பட்டு வந்தது.
அதை பேகன் என்னும் பெரும் வள்ளல் ஆண்டு வந்தான். இவன் வேளிர் தலைவரில் ஒருவனான ஆவியர் குடியில் பிறந்ததனால் வையாவிக்கோப் பெரும் பேகன் என அழைக்கப்பட்டான்,
கடைச் சங்க காலத்தில் இருந்த ஏழு வள்ளல்களில் இவனும் ஒருவன்.
‘ஒரு நாள் பேகன் மலை வழியே சென்று கொண்டிருந்தான். அங்கு ஒரு மயில் தன் சிறகை விரித்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்டான்.
அது குளிருக்கு ஆற்றாமல் வருந்துவதாக நினைத்த பேகன் தன் மீது போர்த்திக் கொண்டிருந்த போர்வையை எடுத்து அந்த மயில் மீது போர்த்தி மகிழ்ந்தான்.
இந்தக் கொடை மடத்தைக் கண்ட புலவர்கள் அவனைப் போற்றினர்.
கண்ணகி என்ற கற்புடைய மங்கையோடு வாழ்ந்து வந்த போது ஒரு சமயம் பரத்தையர் வலையில் சிக்கி மயங்கி இருந்தான் அவன்.
இதனை அறிந்த கபிலரும் அரிசில் கிழாரும் பெருங்குன்றூர்க் கிழாரும் பேகனைக் கண்டு, ‘நாங்கள் பரிசில் பெற உன்னைப் பாட வரவில்லை. மனதிலே துயர் கொண்டு தனித்து வாழ்கின்ற உனது மனைவியுடன் நீ கூடி வாழ வேண்டும்’ என்றே பாடினோம் என்றனர்.
இதைக் கேட்ட பேகன் மனம் திருந்தி தன் மனைவியோடு வாழத் தொடங்கினான்.
இந்தச் சம்பவம் பெரிதும் பேசப்பட்டது.
இவன் வாழ்ந்து வந்த நாடு வையாபுரி நாடு என்ற பெயரையும் பெற்றது.
“உடா அ போரா ஆகுத லறிந்தும்
படா அ மஞ்ஞைக் கீந்த்த எங்கோ
கடா அ யானைக் கலிமான் பேகன்” என பரணரின் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
“மடத்தகை மாமயில் பனிக்கு மென்றருளிப்
படா அ மீத்த கெடாஅ நல்லிசைக்
கடா அ யானைக் கலிமான் பேக!” என்று வன்பரணர் புறநானூற்றுப் பாடல் கூறுகிறது.
“வானம் வாய்த்த வளமலைக் கவாஅற்
கான மஞ்ஞைக்குக் கலிங்க நல்கிய
அருந்திற லணங்கி னாவியர் பெருமகன்
பெருங்கன் னாடன் பேகன்” என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.
“முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் – தொல்லை
இரவாம லீந்த இறைவர்போ னீயுங்
கரவாம லீகை கடன்” என்று இப்படி ஐயனாரிதனார் கூறுவதைப் பார்க்கலாம்.
அருணகிரிநாதர் தனது திருப்புகழில்,
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவினன் குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே”
என்று பாடுவதையும் நாம் காண்கிறோம்.
(பாடல் எண் 170 ‘நாத விந்து கலாதி நமோ நம’ என்று தொடங்கும் பாடல்)
இப்படிப்பட்ட பழம் பெருமையைக் கொண்ட திருத்தலமான பழனிக்கு மிக அருகில் ஆய்க்குடி என்னும் ஊர் இருக்கிறது.
(தென்காசி அருகேயும் ஆய்க்குடி என்ற பெயரில் பிரசித்தமான ஒரு ஊர் இருக்கிறது)
இது பல ஊர்களைத் தன்னுள் அடக்கியுள்ள ஒரு ஜமீனின் தலைநகரம்.
ஜமீந்தார் வேட ஜாதி, ஆய் எயினன் என பாணர் முதலியோர் அகநானூற்றில் கூறும் ஆய்க்கும், இந்த ஆய்க்குடிக்கும் அதை ஆள்வோருக்கும் ஏதேனும் பொருத்தம் இருக்குமோ என அறிஞர்கள் ஐயம் எழுப்புகின்றனர்.
இப்படிப்பட்ட வையாவிக்கோப் பெரும் பேகன் வாழும் மண்டலம் கொங்கு மண்டலமே தான் என கொங்குமண்டல சதகம் தனது 44ஆம் பாடலில் புகழ்ந்து கூறுகிறது.
பாடல் இதோ:
கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்கமருள்
செய்யாண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தருமவ்
வையாவிக் கோப்பெரும் பேக னெனும்பெரு வள்ளறங்கு
வையா புரியெனுங் கோநக ருங்கொங்கு மண்டலமே
இப்பாடலின் பொருள் :
காட்டில் ஆடிக் கொண்டிருக்கும் மயில், குளிருக்கு ஆற்றாமல் நடுங்குகிறது என்று நினைத்து, தான் மேலே போர்த்திருந்த உயர்ந்த ஆடையை அதன் மேல் சார்த்திய, வையாவிக்கோப் பெரும் பேகன் வசிக்கும் வையாவிபுரி என்னும் ஊரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்த ஊரே தான் என்பதாம்.