VICTORY IS WHERE KRISHNA IS! A SCENE FROM THE BATTLE FILED!! (Post No.11,165)

VICTORY IS WHERE KRISHNA IS! A SCENE FROM THE BATTLE FILED!! (Post No.11,165)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,165

Date uploaded in London – 4 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Mahabharata is full of twists and turns. Here is scene just before the great war begins

Dr S.Radhakrishnan, philosopher, and former President of India describes the scene in the battlefield:

योत्स्यमानानवेक्षेऽहं य एतेऽत्र समागता: |
धार्तराष्ट्रस्य दुर्बुद्धेर्युद्धे प्रियचिकीर्षव: || 23||

yotsyamānān avekhe ha ya ete tra samāgatā
dhārtarā
hrasya durbuddher yuddhe priya-chikīrhava

I desire to see those who have come here to fight on the side of the evil-minded son of Dhritarasthra, wishing to please him.

His request for the chariot to be placed in the middle of the battlefield was to take a closer look at the Kaurava army. Arjun wanted to see all those who had taken the side of injustice. He wanted to punish them equally, as they had chosen to be on the wrong side, none of them would be spared.

Dr S.R.’s commentary on the above sloka:-

All the preparations for the ware are ready. That very morning , Yudhisthira looks at the impenetrable formation organised by Bhisma. trembling with fear he tells Arjuna: How can victory be ours in the face of such an army?

Arjuna encourages his brother quoting an ancient verse, “they that are desirous of victory, conquer not so much by might and prowess as by truth, compassion, pity, and virtue. Victory is certain to be where Krishna is. … Victory is one of his attributes  … so also is humility.

Krishna advises Arjuna to purify himself and pry to Durga for success. Arjuna descends from his chariot and chants in praise of the Goddess. Pleased with his devotion,  Durga blesses Arjuna, O Son of Pandu, you will vanquish your enemy in on time. You have Narayana himself to help you. And yet as a man of action, Arjuna did not think out the implications of his enterprise. The presence of his teacher, the consciousness of the Divine, helps him to realise that the enemies he has to fight are dear and sacred to him. He has to cut social ties for the protection of justice and the suppression of lawless violence.

The establishment of the  Kingdom of God on earth is a cooperative enterprise between God and man. Man is a co-sharer in the work of creation.

–subham–

tags, Krishna, Vitory, battle filed, Arjuna, Yuthisthira

பகவத் கீதை ஒரு கப்பல் ; ஏறினால் அடுத்த கரை சேரலாம் (Post.11,164)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,164

Date uploaded in London – 4 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் நூற்றுக் கணக்கான மொழிகளில் வெளியாகியுள்ளன ; இன்னும் வெளியாகி வருகின்றன. ஆனால் பகவத் கீதையின் பெருமையைக் கூறும் ஸ்ரீமத் பகவத் கீதா மஹாத்ம்யம் பற்றி பலருக்கும் தெரியாது. அதில் கீதையின் பெருமையைச் சொல்லும் அருமையான ஸ்லோகங்கள் இருக்கின்றன . சில சுவையான விஷயங்களை மட்டும் காண்போம்.

 பகவத் கீதை ஒரு கப்பல்

ஸம்ஸார ஸாகரம் கோரம் தர்த்துமிச்சதி யோ நரஹ

கீதானாவும் ஸமாஸாத்ய  பாரம்  யா து ஸுகேன ஸஹ

பொருள்

பயங்கரமான சம்சார சாகரத்தை எந்த மனிதன் கடக்க விரும்புகிறானோ  அவன் கீதையாகிய கப்பலில் ஏறிச் சுகமாக அக்கரை  சேரலாம் .

திருவள்ளுவரும் இதே கருத்தை பத்தாவது குறளில் சொல்கிறார்.-

பிறவிப் பெருங்கடல் நீந்துவர்  நீந்தார்

இறைவன் அடி சேராதார்

வள்ளுவர் பார்த்த கடல் ஏரி போல் உள்ள வங்காள விரிகுடாதான் . ஆகையால் அவர் நீச்சல் பற்றிப் பாடுகிறார்.ஆனால் மஹா பாரதம் எழுதிய வியாசரோ பசிபிக், அட்லாண்டிக் , இந்து மஹா சமுத்திரம் அனைத்தையும் கண்டவர்; அறிந்தவர் ; பூகோள மன்னன்; ஆகையால்தான் கோரம்/ பயங்கரமான என்ற அதை மொழியைப் போட்டு சம்சார சாகரம் என்ற சொல்லைப் பிரயோகிக்கிறார்.

வியாஸருடைய கடல் பற்றிய அறிவை பகவத் கீதை 2-70 லு ம் காண்கிறோம் ,

आपूर्यमाणमचलप्रतिष्ठं समुद्रमापः प्रविशन्ति यद्वत्।

तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे स शान्तिमाप्नोति न कामकामी॥७०॥

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||

யத்³வத் = எவ்விதம்
ஆப: ப்ரவிஸ²ந்தி = நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில்
ஆபூர்யமாணம் அசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரம் = நிறைந்து இருந்து அசையா நிலைகொண்டிருக்கும் கடல்
தத்³வத் = அதே விதமாக
யம் காமா: ப்ரவிஸ²ந்தி = எவன் விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது (கடலைப் போல இருக்கிறானோ)
ஸ ஸா²ந்திம் ஆப்நோதி = அவன் சாந்தியடைகிறான்
காமகாமீ ந = விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்

கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.

Gita sloka taken from sangatham.com; thanks.

சுவையான விஷயங்கள்

ஆன்மீகத்தைக் கொஞ்சம்  ஒதுக்கிவைத்துவிட்டு , வேறு சில அறிவியல் , மொழி இயல் விஷயங்களை அலசுவோம்.

புத்தரும், மகாவீரரும் கடல் கரையைக் காணாத நேபாளம், பீஹார் பகுதியில் சுற்றியவர்கள் அதிகபட்சம் உத்தரப் பிரதேசம் வரை வந்தவர்களே. ஆகையால் கடல் பற்றிப் பேசுவதில்லை  மேலும் இந்தப் பிறவி என்பது கடல்போலப் பெருகியது, அதைக் கடப்பது எளிதல்ல என்ற  உவமையும் இந்தியாவில் பிறந்த மதங்களில் மட்டுமே காணக்கூடியது.

கீதா மஹாத்ம்யத்தில் வரும் நாவம் என்ற சொல்லில் இருந்து நேவி NAVY போன்ற ஆங்கிலச் சொற்கள் வந்ததையும் உலகம் அறியும். அது மட்டும் அல்ல ; கடலில் எத்தனை நதிகள் கோடிக்கணக்கான டன் நீரைக் கொண்டு கொட்டினாலும் அது நிரம்புவதில்லை என்ற உவமையை வேதத்திலும், சங்க இலக்கியத்தில் பரணர் எழுதிய பாடலிலும் காணலாம்.

அதுமட்டுமல்ல ; இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில்  இந்த உவமையை தினமும் சொல்கின்றனர். ஆகாஸாத் பதிதம் தோயம்…………………………… வானிலிருந்து விழும் மழைத்துளிகள் (நதியாக) கடலை நோக்கிச் செல்லுவது போல என் பிரார்த்தனை அனைத்தும்  கேசவனை நோக்கிச் செல்லட்டும் என்று சொல்கிறார்கள்.

.Xxx

கீதா மஹாத்ம்யத்தில் உள்ள இன்னும் ஒரு ஸ்லோகத்தைக் காண்போம்

கீதா கங்கா ச காயத்ரீ கோவிந்தேதி ஹ்ருதி ஸ்திதே

சதுர் ககார ஸம்யுக்தே புனர் ஜன்ம ந வித்யதே

பொருள்

கீதை, கங்கை, காயத்ரீ, கோவிந்தன் என்ற நான்கு க-கார நாமங்கள் இருதயத்தில் நிலை பெற்றுவிட்டால் புனர் ஜென்மம் இல்லை . இந்த ஸ்லோகம் மஹா பாரத த்தில் உள்ளது.

இதிலுள்ள சுவையான விஷயங்களைச் சொல்கிறேன்

மேற்கூறிய நான்கில் ஓன்று  நம் வாழ்க்கையில் அமைந்து விட்டாலேயே நமக்கு முக்தி கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை .கங்கை நதி பற்றி ரிக் வேதத்திலும் உள்ளது. சங்கத் தமிழ் பாடல்களிலும் உள்ளது. சேரன் செங்குட்டுவன் , தன்னுடைய தாயாரை கங்கையில் குளிப்பதற்கு அழைத்துச் சென்ற செய்தியும், மற்றும் ஒரு முறை இமயத்தில் கல் எடுத்து புனித கங்கையில் நீராட்டி பத்தினித் தெய்வமான கண்ணகிக்குச் சிலை எடுத்த செய்தியும் சிலப்பதிகாரத்தில் உள்ளது. அவர்களுக்குப் பின்னர் வந்த அப்பர் சுவாமிகளும் கங்கையின் பெருமையைப் பாடுகிறார்..

2000 ஆண்டுகளுக்கு முன்னர் உலகிலேயே பெரிய நாடு இந்தியாதான். இப்போதுள்ள ஏழு நாடுகளை உள்ளடக்கியது. அவர்கள் அனைவரும் கங்கையைப் பாடிப் பரவியதிலிருந்து இந்துமதம், எப்படி பிரம்மாண்ட மான தேசத்தைக் கட்டிக்க காத்தது என்பதை அறிகிறோம்.

ஏனைய மூன்று “க” பற்றி , கீதையின், காயத்ரீயின், கோவிந்தனின் பெருமையை நாம் நன்கு அறிவோம் ..

Xxx

கீதை புஸ்தகம் வீட்டில் இருந்தால்

லண்டனில் என்னுடைய வீட்டின் மேஜையின் மீது எப்போதும் பகவத் கீதை, திருக்குறள், பாரதியார் பாடல் புஸ்தகங்கள் இருக்கும். இப்படி இருப்பதால் திடீரென்று எதையோ ஒரு விஷயத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. நேரம் கிடைக்கையில் ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டிப் படித்தாலும் புதிய கருத்து உதயமாகும். உடனே பென்சிலைக் கொண்டு மார்ஜினில் குறிப்பு எழுதுவேன். இதை ஆதரிக்கும் ஸ்லோகம் இதோ —

கீதாயாஹா புஸ்தகம் யத்ர நித்ய- பாடச்ச வர்த்ததே

தத்ர ஸ ர்வாணி தீர்த்தானி ப்ரயாகாதீனி பூதலே

பொருள்

எவ்விடத்தில் கீதை புஸ்தகம் இருக்கிறதோ , எங்கே கீதா பாடம் நிகழ்கிறதோ , அவ்விடத்தில் இவ்வுலகிலுள்ள பிரயாகை முதலிய ஸகல தீர்த்தங்களும் எப்போதும் உறைகின்றன .

ஆகவே எல்லோரும் சித்பவானந்தர் எழுதிய பகவத் கீதை புஸ்தகத்தையோ அல்லது சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் அறிஞர் அண்ணா அவர்கள் உரை எழுதிய கீதை புஸ்தகத்தையோ மேஜையின் மீது வைத்துக்கொள்ளுங்கள். அட்டை முதல் அட்டை வரை படிக்க முடியாவிட்டாலும் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து படியுங்கள் . பின்னர் நீங்களும் என்னைப் போல பாரதீய வித்யா அவன் நடத்தும் 5 பகவத் கீதை தேர்வுகளிலும் எளிதில் தேர்ச்சி அடையலாம்.

வாழ்க பகவத் கீதை ! வளர்க்க இந்து மதம் !!

Xxx subham xxxx

Tags- கீதை, கப்பல், பிறவி, பெருங்கடல் 4 க-காரம் , புஸ்தகம், பிரயாகை

களப்பாளன் பாடிய அந்தாதி! (Post No.11,163)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,163

Date uploaded in London – –    4 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொண்டை மண்டல சதகம் பாடல் 30

களப்பாளன் பாடிய அந்தாதி!

ச.நாகராஜன்

களப்பாளன் என்னும் செல்வந்தர் தமிழில் வல்லவர். வேளாள குலத்தைச் சேர்ந்த அவர் நெற்குன்றூர் என்னும் தலத்தில் வாழ்ந்து வந்தார்.

திருப்புகலூரில் உறைகின்ற சிவபிரான் மீது அடி மடக்கும், சொல் இன்பமும், இலக்கண இன்பமும் பொருந்தும் படி அற்புதமான ஒரு கலித்துறை அந்தாதியை (நூறு பாடல்கள் கொண்டது அந்தாதி) அவர் பாடினார்.

‘பூக்கமலம்’ என்ற சொல்லை முதலாகக் கொண்டு அமைந்தது அந்த அந்தாதி.

பூக்கமலத்து விழிவளர்வானென்றும் போற்றியவூர்

மாக்கமலத்து மகிழ்கின்றவூர்மது வானிறைந்த

தேக்கமலத்து வழியேபரக்குந் திருப்புகலூர்

நோக்கமலத்துயர் சோதிநெஞ்சே நம்மை நோக்குதற்கே

என்ற அற்புதமான பாடலே அது.

அவையடக்கமாக அவர் பாடிய பாடல் இது:

வளப்பாடிலாத வெருக்குமிதழி மலருமன்ப

ருளப்பாடுறைபுக லூரருக்காதலி னோதிமிக்க்கோர்

தளப்பாடிது தமிழ்க் கென்னிலுஞ் சாற்றுவன் சந்திரன் சொற் களப்பாளனெற்குன்ற வாணனந்தாதிக் கவித்துறையே

இந்தப் பாடல் மூலம்  அவர் அந்தாதி பாடியது தெரிய வருகிறது.

படுபருந்துஞ் சூர்ப்பேயும் பல் விலங்கும் நாயும்

கொடியுங் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம்

என்ற பாடல் மூலம் இவனது வெற்றித் திறத்தை அறிய  முடிகிறது.

இப்படிப்பட்ட களப்பாளன் வாழ்ந்த மண்டலம் தொண்டை மண்டலமே என தொண்டைமண்டல சதகம் தனது 30 வது பாடலில் பாடி அவனைப் புகழ்ந்து கூறுகிறது.

பாடல் வருமாறு:-

கிளப்பார் கிளப்ப வடிமடக்காகக் கெழுமிய சொல்

லளப்பா மதுரத் துடன்பூக் கமலமென் றாய்ந்தெடுத்த

களப்பாள னெற்குன்ற வாணனந்தாதிக் கலித்துறையே

வளப்பார்புகழை வளர்ப்பிக்கு மாற்றொண்டை மண்டலமே

பாடலின் பொருள் : நெற்குன்றூரில் வாழ்கின்ற களப்பாளன் என்னும்

வேளாண் தலைமகன் – செல்வத்தாலும் வெற்றியாலும் அன்றிக் கல்வியாலும் கூடச் சிறந்தோன் என்பதை – பிறிது ஒன்றையும் வியந்து சொல்லாத புலவர்களும் வியந்து பாடி பாராட்டும் படி – திருப்புகலூர் என்னும் திருத்தலத்தில் உறைகின்ற சிவபிரான் மேல்

அடி மடக்கும் சொல் இன்பமும் இலக்கண இன்பமும் பொருந்த, முதற் பாடலில் முதலிலே “பூக்கமலம்” என்னும் சொல்லை மங்கலம் முதலியவற்ற்கு இயையும் பாடி ஆராய்ந்து எடுத்து முடித்த கலித்துறை அந்தாதியே எடுத்துக் காட்டியது. இந்த எடுத்துக்காட்டு வளப்பம் பொருந்திய பூவுலகின் கண் தொண்டை மண்டல வேளாண் மக்களது புகழை வளரச் செய்ய வல்லது!

தொண்டை மண்டலத்தில் வாழும் வேளாளர் செல்வச் சிறப்பு, கொடைச் சிறப்பு, வெற்றிச் சிறப்பு ஆகியவற்றுடன் தமிழில் அழகுற நூல்கள் இயற்றும் தமிழ்ச் சிறப்பையும் கொண்டவர்கள் என்பதை இந்தப் பாடல் அழகுற விளக்குகிறது.

***

புத்தக அறிமுகம் – 18

புராணத் துளிகள் – பாகம் 2

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

முதல் பகுதி

புராண மஹிமை

புராணம் பற்றிய ஒரு நூல் : புராணக் களஞ்சியம்

18 புராணங்களையும் எளிதில் நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகம்

இரண்டாம் பகுதி

பிரம்மாவின் வம்சம்

சுகம் எது, துக்கம் எது?சத்ரு எவர், நண்பர் எவர்?

வியாஸரின் ஆசிரமம் இருக்கும் இடம்!

ஸ்ரீமத் பாகவதத்தின் இன்னொரு பெயர்!

வேதாங்கம் ஆறு

வேதங்களின் புரோகிதர்கள்

ஏழு சிரஞ்சீவிகள்

ருணங்கள் மூன்று

ப்ராண பிணம் யார்?

சுபாஸ்ரயம் எது?

லலிதா ஸஹஸ்ர நாம மஹிமை

ஒருவர் அர்க்யம் விடுவது எதற்காக?

பாகவத மஹிமை

அம்பிகைக்குப் பிரியமான விரதங்கள் எவை?

மூன்று ஈஷணைகள்!

கிருஷ்ணர் வில்லை முறித்த சம்பவம்!

காயத்ரி ஸ்தோத்ரம் கூறுவதால் ஏற்படும் பயன்

ருத்ராக்ஷம் அணிவதன் மஹிமை

மீன் போல பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி

சரஸ்வதி ஸ்தோத்ரம் / ஸ்துதி பற்றிய ஒரு தொகுப்பு

வாஹனம்!

தேவியின் கண்கள்

பாரத தேசத்தின் பெருமை

தர்ப்பம் ஏன் புனிதமானது!

வைரத்தைப் பரிசோதித்த பின்னரே அணிய வேண்டும்?

வாஹனம் – 2

நவ கிரகங்கள்

அழகாபுரியின் வர்ணனை!

சுகருக்கு ஜனக ராஜன் கூறிய ரகசியம்!

மும்மூர்த்திகளும் ஒருவரே!

மெதுவாகச் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

மாயைக்கு மருந்து

தூக்கம் வராத நான்கு பேர்!

பலன் தரும் யந்திரங்கள்!

அஹிம்சையே தர்மங்களுக்குள் உயர்ந்த தர்மம்

சப்த ரிஷிகள் யார் யார்?

சிவனைத் துதிக்கும் பாக்கியம் ஏன் ஏற்படுகிறது?

சிவனும் விஷ்ணுவும் ஒருவரே!

காலமே ஈஸ்வரனுக்குச் சமம்!

யார் யாரை வதம் செய்தனர் – 2

பீஷ்மரின் கடைசி பிரார்த்தனை

சூரியனுடைய சஞ்சாரம்

பவித்ர நதிகள்

தேவர்களை சந்தோஷம் அடையச் செய்பவை!

ப்ரளயம் நான்கு வகைப்படும்

துர்கா ஸப்த சதி!

நாராயணன் என்று பெயர் வரக் காரணம்!

தூய்மை (சௌசம்) எதனால் ஏற்படும்?

நான்கை வைத்து ஒரு மனிதனை எடை போடு!

மேலே உள்ள லோகங்கள் ஏழு! கீழே உள்ள லோகங்கள் ஏழு!!

*

அணிந்துரை

என்னுடைய அருமை நண்பர் சந்தானம் நாகராஜன் அவர்கள் இறை உணர்வும் நாட்டுப்பற்றும் தன் இரண்டு கண்களாகக் கொண்டவர்.அன்னை மீனாட்சியின் அருளாசியுடன் மதுரை மாநகரில் தனது இளமை பிராயத்தைக் கழித்தவர். இவருடைய தந்தையார் சந்தானம் அவர்கள் தினமணி ஆசிரியராக பணியாற்றி தனக்கென ஒரு முத்திரையைப் பதித்து விளங்கிய பத்திரிகையாளர். சுதந்திர போராட்டக் களத்தில் திரு ஏ.என்.சிவராமனுடன் இணைந்து போராடிய தேசபக்தர். அவரே இவருக்கு வழிகாட்டி! அவருடன் நற்பணி மன்றங்களில் பணியாற்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அடியேனும் இணைந்து பயணித்த காலங்கள் இன்றும் பசுமையாக எனது எண்ணத்தில் நிழலாடுகின்றன.

சந்தானம் நாகராஜன் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளரும் ஆவார்.

“நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்கு உழைத்தல் இமைப்போதும் சோராதிருத்தல்” என்ற மகாகவி பாரதியாரின் கவிதை வரிகளை சிந்தனையில் கொண்டு இன்றுவரை சோர்வின்றி தேசியத்துக்கும் தெய்வீகத்துக்கும் அரும்பணியாற்றி வருகிறார்.

இதுவரை அவர் ஆன்மிகம் தேசியம் அறிவியல் முதலான பலதுறைகளில் உன்னதமான கருத்துக்களுடன் ஆயிரக்கணக்கான கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.” பாக்யா” இதழில் பல்வேறு கட்டுரைகள் எழுதி விழிப்புணர்வுக்கு வித்திட்டிருக்கிறார்.

பாரதியின் ஞானப்பாடல் வரிகளான “ஊருக்கு உழைத்திடல் யோகம்! நலம் ஓங்கிடுமாறு வருந்துதல் யாகம்! போருக்கு நின்றிடும்போதும் உளம் பொங்கலில்லாத அமைதி மெய்ஞானம்!” என்ற கவிதை வரிகளே இவரை “புராணத்துளிகள்” படைக்க அடித்தளமாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்

புராணங்கள் என்பவை வேதங்களில் உள்ள கருத்துகளை தெளிவாக கூறுவதாகும். புராணம் என்ற சொல்லிற்கு பழமை வாய்ந்தது என்று பொருள். நெடுங்காலமாக செவிவழியாகவே கற்பிக்கப்பட்டு வந்த வேத உபநிடதங்கள் வியாச மகரிஷியால் வகுக்கப்பட்டன. இதன் அடிப்படையில்தான் இதிஹாச புராணங்கள் மலர்ந்தன. இவற்றில் வேதவியாசரே தொகுத்த பதினெட்டு புராணங்கள் மகாபுராணங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

“சநாதன தர்மம்” என்ற வேத சாகரத்திலிருந்து பேரலையாக எழுந்த இதிகாச புராணங்களின் ஆன்மிக அமுதத்தின் திவலைகளை எளிய நடையில் இன்றைய இளைய சமுதாயத்துக்கு புரியும் படியாக தொகுத்து எழுதியுள்ளார் எனது நண்பர் சந்தானம் நகராஜன் அவர்கள்.

புராணம் என்றால் தொன்மையானது. புரா, நவம் என்ற இரு சொற்களின் கலவையே புராணம். புரா என்றால் தொன்மை, நவம் என்றால் புதுமை. அதாவது தொன்மையில் புதுமை என்பர் ஆய்வாளர்கள்.அந்த வகையில் தொன்மையான சநாதன தர்மத்தை எளிமையாக புரிந்துகொள்ள புதுமையான புராணங்களை இயற்றினர் மகரிஷிகள்.

அறம் பொருள் இன்பம் வீடு என்ற நால்வகை புருஷார்த்தங்களை விளக்கி இந்த மாநிலத்து மாந்தரெல்லாம் சநாதன தர்மத்தின் வழியில் வாழ்ந்து நற்பேறு அடைய வழிகாட்டும் கலங்கரை விளக்கமே புராணக் களஞ்சியங்கள்.

ஏற்கனவே புராணத்துளிகள் முதல்பாகம் பதிவு செய்து மகத்தான பணியினை செய்த நண்பர் நாகராஜன் இப்போது இரண்டாம் பாகம் இயற்றியுள்ளார்.

அது இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது.

முதல் பகுதியில் “புராண மஹிமை”யினை ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவு மூலம் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். பதினெண்புராணங்களை விளக்கியும் அவைகளை நினைவில் கொள்ள ஒரு ஸ்லோகத்தையும் எழுதியுள்ளதும் அருமை.

அடுத்த பகுதியில் “புராணக் களஞ்சியம்” என்ற தலைப்பில் தனது இரண்டாவது பாகத்தினை பதிவிட்டுள்ளார். இந்த பாகத்திலும் உன்னதமான பாகவத புராணம் முதலானவைகளில் உள்ள புருஷார்த்த விஷயங்களை தெளிவாக அழகாக வரிசைப்படுத்தி விளக்குகிறார். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளையும் பரம்பொருளை அடைய நாம் செய்ய வேண்டிய கிரியைகளையும் செவ்வனே எடுத்துரைக்கிறார். விஞ்ஞான ரீதியாகவும் புராணங்களில் உள்ள கால நிர்ணயம் உள்ளிட்ட பஞ்சாங்க விஷயங்களையும் விவரமாக விளக்குவது அருமை!

ஞான சாகரத்தில் ஆழ்ந்து அவர் அனுபவித்து எடுத்த நல்முத்துக்களை நமக்கு வரிசைப் படுத்தி அழகிய அணிகலனாக பதிவிட்டுள்ளார். இவருக்கு இவ்வளவு திறமையும் ஊக்கமும் விளைந்துள்ளது பகவத் பாகவத கடாட்சமே! மொத்தத்தில் “புராணத்துளிகள்” இரண்டாம் பாகம் ஒரு திரண்ட கருத்துப் பொக்கிஷமே!

நண்பர் சந்தானம் நாகராஜனின் நற்பணி பாரத சமுதாயத்துக்கு மட்டுமில்லாமல் உலகளாவிய சநாதனதர்மத்துக்கும் பரவட்டும் என்று எல்லாம் வல்ல இறைவனையும் ஆச்சார்யரையும் வேண்டி வணங்கி அவரை பாராட்டி மகிழ்கிறேன்.

அடியேன்
என் ஸ்ரீனிவாசன் BSc FCA
ஆடிட்டர் மதுரை 625014

29-12-2021

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

எல்லாம் வல்ல இறைவனின் அருளால் புராணத் துளிகள் – இரண்டாம் பாகம் மலர்கிறது.

பதினெட்டு புராணங்களிலும் உள்ள லட்சக்கணக்கான ஸ்லோகங்களில் உள்ள அறிவுப் பொக்கிஷத்தைப் பரப்பும் பணி மிகவும் குறைந்து விட்ட இந்த நாட்களில் ஒரு சில கருத்துக்களையேனும் தொகுத்துத் தரும் பாக்கியம் இறைவனின் அருளாலேயே ஏற்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரை வழங்கி என்னை கௌரவித்திருக்கும் ஆடிட்டர் திரு என். ஸ்ரீனிவாசன் அவர்களுடன். ஐம்பது ஆண்டுகளாக தெய்வீகப் பணியிலும் தேசீயப் பணியிலும் இணைந்து பணியாற்றியதால் இவரைப் பற்றி நன்கு அறிவேன். மிகச் சிறந்த ஆடிட்டரான இவர் ஏராளமான பெரிய நிறுவனங்களுக்கு ஆடிட்டர். நிதி ஆலோசகர். தனிப்பட்டவர்களின் வாழ்க்கை வளம் பெற வழி கோலியவர். அத்துடன் மட்டும் நின்று விடாமல் சமூகப் பணியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலரும் இலரே; முனிவிலர்
துஞ்சலும் இலர்: பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலை

என்ற கடலுள் மாய்ந்த இளம் பெரும் வழுதி கூறிய இலக்கணப்படி தமக்கென வாழாப் பிறர்க்குரியாளராக வாழ்பவர். இளைஞர் நற்பணி மன்றம் என்ற ஒரு அரும் மன்றத்தின் தலைவராக இருந்து பாரதியார் பாடல்கள் மூலமாக இளைஞர்களிடையே தேச பக்தியை ஊட்டியவர். வேதாந்த தேசிகர் பக்த சபை, தாம்ப்ராஸ் உள்ளிட்ட முக்கிய ஆன்மீக சபைகளில் பொறுப்பு வகிப்பதோடு ஆன்மீக இயக்கங்களில் முன்னின்று பொறுப்பேற்று வழி நடத்தியவர், வழி நடத்துபவர்.

அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

இந்த நூலை அழகிய முறையில் மின்னணு நூலாகத் தயாரிக்க முன் வந்த புஸ்தகா டிஜிடல் மீடியா பிரைவேட் லிமிடட் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ்அவர்களுக்கும் மற்றும் இந்தப் புனிதமான பணியில் ஈடுபட்டு உதவியாற்றும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.

ச.நாகராஜன்
பங்களூர்

மின்னஞ்சல் முகவரி : snagarajans@gmail.com

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Tags- களப்பாளன், அந்தாதி,

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-72 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,162)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,162

Date uploaded in London – 3 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-72 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

ஸூயதே  9-10 பிறப்பிக்கின்றது

ஸூர்ய ஸஹஸ்ரஸ்ய 11-12  ஆயிரம் சூரியர்களின்

ஸூர் யஹ  15-6 சூரியன்

ஸ்ரு ஜதி 5-14 சிரு ஷ்டித்தான்

ஸ்ரு ஜாமி 4-7 படைத்துக் கொள்கிறேன்

ஸ்ருதீ 8-27 மார்க்கங்கள்

ஸ்ருஷ்டம் 4-13 சிருஷ்டிக்கப்பட்டது

ஸ்ருஷ்ட் வா 3-10 சிருஷ்டித்து

ஸேன யோஹா 1-21 சேனைகளுக்கு

ஸே னானீனா ம் 10-24 சேனாபதிகளுக்குள்

ஸேவதே 14-26 சேவிக்கின்றானோ

ஸேவயா 4-34 சேவையாலும்

ஸைன்யஸ்ய 1-7 சேனைக்கு

ஸோ டும் 5-23 தாங்குவதற்கு

ஸோமபாஹா 9-20 சோம பானங்களால்

ஸோமஹ 15-13 சந்திரன்

ஸௌம்க்ஷ் யாத் 13-32  சூட்சுமத் தன்மையால்

ஸௌபத்ரஹ 1-6 சுபத்திரையின் புதல்வன் (அபிமன்யு)

ஸௌமதத்தி 1-8 சோமதத்தனுடைய புதல்வன் (பூரிச்ரவஸ் )

ஸௌவ்ம்யத்வம் 17-16  அன்புடைமை

ஸௌம்யம் 11-51 இனிய

ஸௌம்யவபுஹு 11-50 இனிய உருவத்தை

ஸ்கந்தஹ 10-24 கந்தன்         23 WORDS

ஸ்த ப்தஹ 18-28 கர்வமுடையவன்

ஸ்த ப்தாஹா 16-17 வணக்கமில்லாதவராய்

ஸ்து திபிஹி  11-21 புகழுரைகளால்

ஸ்துவந்தி 11-21 துதிக்கின்றனர்

ஸ்தேன ஹ 3-12 திருடன்

ஸ்த்ரி யஹ 9-32 பெண்கள்

ஸ் த்ரீ ஷு 1-41 பெண்கள்

ஸ்தா ணு ஹு 2-24 நிலையான , நகராத

ஸ்தா னம் 5-5 நிலை

ஸ்தா னே 11-36  இது பொருத்தமே

ஸ்தாபய 1-21 நிறுத்தும்

ஸ்தாபயித்தவா 1-24  நிறுத்தி

ஸ்தாவர ஜங்க மானா ம் 13-26

ஸ்தாவராணாம் 10-25 அசையாப் பொருட்களில்

ஸ்தாஸ்யதி 2-53  நிற்குமோ

ஸ்தித ப்ரக்ஞஸ்ய  2-54 ஞானம் நிலைத்து

ஸ்தித்வா 2-72  நின்று     40 WORDS

ஸ்தித தீஹீ  2-54 அந்த ஸ்தித பிரக்ஞன்

ஸ்திதம் 5-19 நிறுத்தப்பட்டதோ

ஸ்திதஹ  5-20 நிற்பவனாய்

ஸ்திதான் 1-26 இருந்த

ஸ்திதாஹா 5-19 நிலைபெறுகின்றனர்

ஸ்திதிம் 6-33 நிலையை

ஸ்திதிஹி 2-72 (ஒன்றுபட்ட) நிலை

ஸ்திதெள 1-14 நின்றுகொண்டு

ஸ்திர புத்திஹி  5-20 நிலையான புத்தியுடையவனாய்

ஸ்திர மதிஹி 12-19 திடச் சித்தம் உடையவன்

ஸ்திரம் 6-11 அசையாதது

ஸ்திரஹ 6-13 ஸ்திரமாக இருந்து

ஸ்தைர்யம் 13- 7 விடா முயற்சி

ஸ்னிக்தாஹா 17-8 பசை உடையவனாக

ஸ்பர்சனம் 15-9 மெய், உடல்

ஸ்பர்சன் 5-27 விஷய நுகர்ச்சிகளை

ஸ்ப்ரு சன் 5-8 தொட்டாலும்

ஸ்ப்ரு ஹா 4-14 ஆசை

ஸ்மரதி 8-14 நினைக்கிறானோ, எண்ணுகின்றானோ

ஸ்ம ரன் 3-6 நினைத்துக்கொண்டு  60 WORDS

ஸ்ம் ருதம்  17-20  கருதப்படும்

ஸ்ம் ருதஹ  17-23 கூறப்பட்டுள்ளது

ஸ்ம் ருதா 6-19 (அறிஞர்களால்) சிந்திக்கப்பட்டுள்ளது

ஸ்ம்ருதி ப்ரம்சாத் 2-63 நல்ல நினைவு கெட்டதால்

ஸ்ம்ருதி விப்ரமஹ  2-63 நல்ல நினைவின் கேடு

ஸ்ம்ருதி ஹி 10-34 ஞாபக சக்தி

ஸ்யந்தனே 1-14 தேரின் மேல்

ஸ்யாத் 1-36 ஏற்படும்

ஸ்யாம 1-37   ஆவோம்

ஸ்யாம் 3-24 ஆவேன்

ஸ்யு ஹு 9-32 உ ண்டோ , இருக்கிறார்களோ

ஸ்ர ம்ஸ தே 1-30 நழுவுகிறது

ஸ்ரோ தஸாம் 10-31 நதிகளில்

ஸ்வ கர்மணா 18-46 தனக்குரிய கருமத்தால்

ஸ்வ கர்ம நிரதஹ 18-45 தன் கருமத்தில் நிலைபெற்றவன்

ஸ்வகம் 11-50  தனக்கு உரிய

ஸ்வக்ஷுஷா 11-8 உன்னுடைய கண்களாலேயே

77—WORDS ARE ADDED FROM PART 72 OF GITA WORD INDEX

TAGS- TAMIL WORDS INDEX, PART 72, BHAGAVAD GITA,பகவத்கீதை ,சொற்கள் ,இண்டெக்ஸ்-72

எஸ். நாகராஜன் ஜுலை 2022 கட்டுரைகள் (Post No.11,161)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,161

Date uploaded in London – –    3 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

SNR Article Index : July 2022

JULY  2022

  1-7-2022   11067. SNR Article Index JUNE 2022

  2-7-2022   11073 உலக இயக்கத்திற்கு உதவும் நாடு! 22-6-22 மாலைமலர்

             கட்டுரை

 3-7-2022 11076 ட்ரோன் காட்டும் எதிர்கால உலகம் 

  4-7-2022   11078  நெப்போலியனின் அருங்குணம் நேரம் தவறாமை!

 5-7-2022 11080  ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!

 6-7-2022 11082 ISBN அதிசயம்!

 7-7-2022 11085 நடந்தவை தான் நம்புங்கள் – 22

 8-7-2022 11089 நடந்தவை தான் நம்புங்கள் – 23

   9-7-2022 11091 நடந்தவை தான் நம்புங்கள் – 24

10-7-2022 11093 நடந்தவை தான் நம்புங்கள் – 25  

11-7-2022 11095 நடந்தவை தான் நம்புங்கள் – 26

12-7-2022  11097  நடந்தவை தான் நம்புங்கள் – 27

13-7-2022  11099  சந்தோஷமாக இருப்போமே!

14-7-2022 11102 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 67

15-7-2022 11105  உலகின் முக்கிய அதிசயத்தைக் கொண்ட நாடு – ( 29-6-22

              மாலைமலர் கட்டுரை)

16-7-2022 11108. மூன்று மந்திரங்களை உலகிற்கு வழங்கிய நாடு (5-7-22

              மாலைமலர் கட்டுரை)

17-7-2022  11111 புத்த பூமி ஹாங்காங்! (மாலைமலர் 12-7-22 கட்டுரை)   

18-7-2022  11114   காந்திஜிக்கு அமைக்கப்பட்ட மணப்பெண் அறை! +

                                  புத்தக அறிமுகம் 1 ஆலயம் அறிவோம் – முதல் பாகம்

19-7-2022 11117 விநாயக் தாமோதர் சவர்கார்

                                   புத்தக அறிமுகம் 2 ஆலயம் அறிவோம் – இரண்டாம்

               பாகம்

20-7-2022 11120  ஜீனியஸாக ஆக ரைகாவ் எஃபெக்ட் பற்றி அறிந்து

              கொள்ளுங்கள்

                                    புத்தக அறிமுகம் – 3 நடந்தவை தான் நம்புங்கள்!

20-7-2022 11123    மேதை ஆக ஏழு படிகள்!

              புத்தக அறிமுகம் 4 உலகவலத்தில் ஒன்பது நாடுகள்

22-7-2022 11126.    செப்பு மொழி இருபத்தியிரண்டு

              புத்தக அறிமுகம் 5 திருக்குறளில் அந்தணரும்

               வேதமும்

23-7-2022 11129     ஓஷோவின் குட்டிக் கதைகள்

              புத்தக அறிமுகம் 6 அதிசய மஹாகவி பாரதியார்!

24-7-2022 11132   செப்பு மொழி இருபத்திமூன்று

              புத்தக அறிமுகம் 7 தமிழ் என்னும் விந்தையில்  

              (வி)சித்திர கவி விளக்கம் – பாகம் 1

25-7-2022 11135.  பெண் விஞ்ஞானி எல்லன் ஸ்வாலோ ரிச்சர்ட்ஸ்

             புத்தக அறிமுகம் 8 தமிழ் என்னும் விந்தையில்  

              (வி)சித்திர கவி விளக்கம் – பாகம் 2

26-7-2022 11139.  கீமோதெராபியைக் கண்டுபிடித்தவர் – ஜேன் குக் ரைட்!

             புத்தக அறிமுகம் 9 நோய் தீர, இன்பம் சேர, வினை தேய

             தேவாரம், திருவாசகம்!

27-7-2022 11142   செப்பு மொழி இருபத்திநான்கு

              புத்தக அறிமுகம் 10 காலத்தை வென்ற கவிஞன்

              கண்ணதாசன்

28-7-2022 11146    ஒலி ஏற்படுத்தும் அதிர்வுகளை விளக்கிய சோபி  

              ஜெர்மெய்ன்!

                புத்தக அறிமுகம் 11  12288 காதல் வகைகளில்

              இலக்கியம் தரும் சில காட்சிகள்!

29-7-2022 11149   மூன்று திரைப்படங்கள் 1) A Twele-year Night 2) Argo 3) A Call to

                                   Spy  –  புத்தக அறிமுகம் 12 சம்ஸ்கிருதச் செல்வம்

30-7-2022 11151   ராக்கெட்ரி:    மாதவனின் அருமையான படம்!

              புத்தக அறிமுகம் 13 : பகவான் ரமணரின் வாழ்க்கையில் 

              சுவையான சம்பவங்கள்!

31-7-2022 11154     கோலாகல கோலாலம்பூர் (மாலைமலர் 26-7-22 கட்டுரை)                

                                    புத்தக அறிமுகம் 14 : செல்வம் செழிக்க – ஜெம்ஸ்,

              வாஸ்து வழிகள்

***

புத்தக அறிமுகம் – 17

மகான்களின் சரிதம் – பாகம் 2

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஷீர்டி சாயிபாபா!

2. ஸ்ரீ மத்வாசாரியர்!

3. ஸ்ரீ ராகவேந்திரர்!

4. ஸ்ரீ சதாசிவ ப்ரஹ்மேந்திராள்

5. ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள்

6. ஸ்ரீ முத்துசாமி தீக்ஷிதர்!

7. ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள்!

8. ஸ்ரீ திருஞானசம்பந்தர்!

9. ஸ்ரீ திருநாவுக்கரசர்

10.ஸ்ரீ சுந்தரர்!

11. ஸ்ரீ மாணிக்கவாசகர்

12. ஸ்ரீ அருணகிரிநாதர்

13. ஸ்ரீ தாயுமானவர்!

14. ஸ்ரீ உமாபதி சிவம்

15. ஸ்வாமி தயானந்த சரஸ்வதி!

16. ஸ்வாமி ராமதீர்த்தர்!

17. மஹரிஷி அரவிந்தர்

18. ஸ்ரீ சத்ய சாயி பாபா!

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

(ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா முதல் ஸ்ரீ சத்ய சாயி பாபா வரை)

லண்டனிலிருந்து வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஞானமயம் ஒளிபரப்பில் பங்கு கொள்ளுமாறு லண்டன் திரு ச. சுவாமிநாதன் மற்றும் சிவஸ்ரீ கல்யாண்ஜி அழைப்பு விடுத்த போது அதை ஏற்றுக் கொண்டு வாரந்தோறும் ஒரு மகானின் சரிதத்தைக் கூறும் பாக்கியம் கிடைத்தது.

அந்த உரைகளில் இடம் பெற்ற மகான்களின் சரிதம் முதல் பாகமாக மலர்ந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் இன்னும் 18 மகான்களின் சரிதமும் அவர் தம் அருளுரைகளும் விளக்கப்பட்டுள்ளன.

ஞானமயம் வாய்ப்பை எனக்கு நல்கிய லண்டன் திரு ச. சுவாமிநாதன், திரு கல்யாண்ஜி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

14-1-22

ச.நாகராஜன்

பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

General Public follow Great Men: Lord Krishna (Post No.11,160)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,160

Date uploaded in London – 2 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

There are two interesting slokas in the third chapter of Bhagavad Gita. Those two couplets explain why great saints simple rituals do even after reaching highest state in spiritual matters. They are like ladders. They want others also to reach spiritual heights step by step. They set the examples for laymen. In sloka 3-20 Lord Krishna says why one should do certain actions for the sake of others. In sloka 3-21 he says ordinary people do what great people do.

First let us look at the meaning of two Slokas before reading the commentaries.

कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादय: |
लोकसंग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि || 3-20||
यद्यदाचरति श्रेष्ठस्तत्तदेवेतरो जन: |
स यत्प्रमाणं कुरुते लोकस्तदनुवर्तते || 3-21||

karmaaiva hi sansiddhim āsthitā janakādaya
loka-sa
graham evāpi sampaśhyan kartum arhasi


yad yad
ācharati śhrehhas tat tad evetaro jana
sa yat pram
āa kurute lokas tad anuvartate

Translation

BG 3.20-21: By performing their prescribed duties, King Janaka and others attained perfection. You should also perform your duties to set an example for the good of the world. Whatever actions great persons perform, common people follow. Whatever standards they set, all the world pursues.

Set an example to Others

Dr Radhakrishnan, philosopher and former President of India, explains the word Lokasamgraha in 3-20,.

Janaka was the king of Mithila and father of Sita, wife of Rama. Janaka ruled, giving up his personal sense of being the worker. Janaka and others worked lest people at large may go astray, convinced that their senses were engaged in activity, Guna gunesu vartante. Even those who have not known the truth might adopt works for self purification.

Lokasamgraha

Lokasamgraha means World maintenance. It stands for the unity of the world, the interconnectedness of the society. If the world is not to sink into a condition of physical misery and moral degradation, if the common life is to be decent and dignified, religious ethics must control social action.

The aim of religion is to spiritualise society, to establish a brotherhood on earth.

We must be inspired by the hope of embodying the ideals in earthly institutions. When the Indian world lost its youth, it tended to become otherworldly. In a tired age we adopt the gospel of renunciation and endurance. In an age of hope and energy we emphasise active service in the world and the saving of civilisation.

Boethius affirms that “ he will never go to heaven who is content to go alone”.

My Comments

We are reminded of the story of great Vaishnavite saint Ramanuja. His Guru taught him the Ashtakshara Mantra (OM NAMO NARAYANA) and told him it would elevate him to the highest level but he should not reveal it to anyone. But he went straight to the top of the temple tower and proclaimed the great mantra to everyone. He told his guru the reason for his ‘blasphemous’  action as well. “If I go to hell for violating guru’s command, that is fine because millions are going to be benefitted”.

Swami Vivekananda also had a great dilemma whether to work for his moksha/ liberation or to work for the welfare of the people. He swam to a rock in the middle of the sea in Kanyakumari and did meditation. Then it dawned upon him to serve the society. He started lecturing to people around the world and established missions for service. Several leaders of India sacrificed a lot for the benefit of the society.

Lord Krishna also told Arjuna to work for Lokasamgraha and set an example .

Sri Ramakrishna Paramahamsa added a word of caution about misusing Janaka’s name. “Becoming Janaka is not that easy. Every one who is a father can also call himself a Janaka”. He punned on the word Janaka. Janaka in Sanskrit also means father.

Dr Radhakrishnan quotes two Slokas from Yoga vaasishta

“The knower has nothing to gain either by performing or by abstaining from action. Therefore, he performs action as it arises”.

Again “ to me it is just the same whether something is done or not. Why should I insist on not performing action? I perform whatever comes to me”.

Here are the Slokas

Jnaasya naartah karmatyaagaih naarthah karmasamaasrayaih

Tena stitham yathaa yad yat tat tathiva karoty asau VI 6-199

Mama naasti krtenaartho naakrtenah kascana

Yathaa praaptena tisthaami hy akarmani ka aagrahah VI 6-216

In Gita 3-21 Lord Krishna says the world needs an example to follow

Dr Radhakrishnan continues,

Common people imitate the standards set by the elect. Democracy has become confused with disbelief in great men. The Gita points out that great men are the path makers who blaze the trail that other men follow. The light generally comes through individuals who are in advance of society. They see the light shining on the mountain heights while their fellows sleep in the valley below. When they proclaim the splendour of that light, a few recognise it and slowly the many are persuaded to follow them.

Great Tamil Saivite and Vaishnavite saints sang about this splendour and begged the people to follow them. In the North devotional poets did the same.

Kanchi Paramacharya explained in one of his talks the reason for the rituals they do every day.

Rama Krishna Paramahamsa explained this in one episode. Once a mother got worried about the addiction of her child to sweets. She couldn’t control him. She came to Sri Ramakrishna and begged him to correct her son. He sent the lady back and asked her to come the following week. This happened several times. When the lady was about to burst in anger, Sri Ramakrishna called the boy and said,

‘Hey boy,don’t eat sweets’.

From that day he never touched the sweets.

The woman was wonderstruck and asked Swamiji, why did you ask us to come every week for several months and said this. You could have said it during our very first visit. Sri Ramakrishna smiled and said, I was myself very fond of Bengali sweets Rasagolla and so I controlled myself first which took several weeks and then I said it to your son.

One must preach what one practises and practise what one preaches. Then the word will have magical power.

Fortunately India now has got some great men who set good examples for others .

Xxx Subham xxx

Tags- Great men, General Public , Loka samgraha, Bhagavd Gita, 3-20, 3-21

கண்ணைக் கவரும் நயாகரா நீர்வீழ்ச்சி (Post No.11,159)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,159

Date uploaded in London – –    2 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

19-7-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

இரு நாடுகளில் கொட்டும் ஒரு நீர்வீழ்ச்சி!

கண்ணைக் கவரும் நயாகரா!

ச.நாகராஜன்

கவர்ந்திழுக்கும் நயாகரா

மனித மூளையைப் பற்றிய சிறந்த ஆராய்ச்சி நூலை எழுதிய பியர்ஸ் ஜே.ஹோவர்ட், ஒரு நீர்வீழ்ச்சிக்குச் சென்று அதைப் பார்க்கும் போது மனித மனதில் ஏற்படும் சோர்வு, மயக்கம், மன இறுக்கம், மன அழுத்தம் ஆகியவை எல்லாம் போய் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பிறக்கும் என்று கூறுகிறார்.

ஆக மனதிலுள்ள எல்லா பாரத்தையும் இறக்கி புத்துணர்ச்சி பெற சிறந்த டூர் ஒரு அருவியை நோக்கிச் செல்வது தான்.

இந்த வகையில் உலகின் அதிசய நீர்வீழ்ச்சிகளுள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் நீர்வீழ்ச்சி எது என்று கேட்டால் உடனடியாக வரும் பதில் – நயாகரா நீர்வீழ்ச்சி என்பது தான்!

உலகில், கிட்டத்தட்ட  நூறு நீர்வீழ்ச்சிகள் நயாகராவை விட அதிக உயரத்தைக் கொண்டிருக்கின்றன. இவற்றில் இரண்டு அருவிகள் நயாகராவை விட இன்னும் அதிக நீரை கொட்டு கொட்டென்று கொட்டுகிறது. என்றாலும் எந்த அருவியும் நயாகரா போல ஒரு அற்புதமான கவர்ச்சியைத் தரவில்லை.

இரு நாடுகளில் கொட்டும் நீர்வீழ்ச்சி

அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய இருநாடுகளில் கொட்டும் நயாகரா நீர்வீழ்ச்சி பிரம்மாண்டமானது. இந்த நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது இது.

இங்கு செல்ல அமெரிக்க மற்றும் கனடிய விசா வேண்டும்.

கனடியன் ஃபால்ஸ் எனப்படும் குதிரைலாட அருவி, அமெரிக்கன் அருவி மற்றும் ப்ரைடல் வெய்ல் அருவி ஆகிய மூன்று நீர்வீழ்ச்சிகளாக இது அமைந்துள்ளது.

அமெரிக்க பகுதியில் சுமார் 184 அடி உயரமும்  1060 அடி அகலமும் உள்ளது. கீழே பெரும் பாறைகள் பெருமளவில் ஆங்காங்கே உள்ளதால் நீர் வீழ்ச்சியின் உயரமும் அதற்குத் தக மாறுகிறது. அமெரிக்க பகுதியில் வரும் நீர் நயாகரா நதியின் நீரில் பத்து சதவிகிதம் தான்.

மீதமுள்ள நீரெல்லாம் கனடிய பகுதியில் ஹார்ஸ் ஷூ அருவியாக – குதிரை லாட அருவியாக உருவெடுக்கிறது. இங்கு உயரம் 188 அடி. அகலமோ 2215 அடி!

மூன்று அருவிகளில் சிறியது நியூயார்க் மாகாண பகுதியில் அமைந்துள்ள ப்ரைடல் வெய்ல் அருவி தான்; ஆனால் பார்ப்பதற்கு இங்கு ஏராளமான ஆர்வமூட்டும் பகுதிகள் உள்ளதால் அனைவரும் இங்கு வரத் தவறுவதில்லை.

இது இருக்குமிடம் :லாங்கிட்யூட் 79 W லேடிட்யூட் 43.1 N

நயாகரா அருவி கொட்டுகின்ற அமெரிக்க பகுதியில் நியூயார்க்கும் கனடிய பகுதியில் அண்டாரியோவும் இருக்கின்றன.

அண்டாரியோவில் உள்ள அண்டாரியோ ஏரியையும் அதற்கு 320 அடி மேலே உள்ள ஈரி ஏரியையும் இணைத்து உருவாகும் நயாகரா ஆறு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு நீரை வெள்ளமெனச் சுமந்து செல்கிறது தெரியுமா? ஒவ்வொரு விநாடியும் மலைக்க வைக்கும் அளவான 280 லட்சம் லிட்டர் அல்லது ஏழு லட்சம் காலன் நீரைக் கொண்டு செல்கிறது!

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வட அமெரிக்காவில் இருந்த பிரம்மாண்டமான பனிப்பாறைகள் உருக ஆரம்பித்து மிஸிஸிபி நதியாக மாறி ஐஸ் யுகத்தில் நயாகரா நதியாக பரிணமித்தது.

கால வெள்ளம் உருண்டோட இன்று நாம் காணும் நயாகரா நீர்வீழ்ச்சி சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது.

இப்போதுள்ள நீர்வீழ்ச்சி சுமார் 11 கிலோமீட்டர் நகர்ந்து இந்த இடத்திற்கு வந்து விட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கனடாவின் டொரொண்டோ

வட அமெரிக்காவில் அமைந்துள்ள கனடா நாட்டின் ஜனத்தொகை மூன்று கோடியே எண்பத்தேழு லட்சம். பரப்பளவு முப்பத்தைந்து லட்சத்து பதினொன்றாயிரம் சதுர மைல்.

கனடாவின் மிக அழகிய நகர் டொரொண்டோ. கண்களில் மாயாஜாலத்தை உருவாக்கும் இல்லூஷன் மியூஸியம், அண்டோரியோ அருங்காட்சியகம், பேடா ஷூ மியூஸியம்,, ஆர்ட் காலரி, ரிப்ளியின் அக்வேரியம், உள்ளிட்ட பல கண்கவரும் இடங்கள் இங்கு உள்ளன. சி என் டவர் என்ற 1122 அடி உயரமுள்ள வானளாவிய கட்டிடத்தில் ஏறி டொரொண்டோவைப் பார்ப்பது ஒரு கண்கொள்ளாக் காட்சி!

கனடாவின் டோரொண்டோ நகரிலிருந்து 80 மைல் தொலைவில் உள்ள நயாகராவை படகு, கார், ரயில் மூலம் அடையலாம்

அமெரிக்கப் பகுதியில் உள்ள நயாகரா ஃபால்ஸ் ஸ்டேட் பார்க்

அமெரிக்காவின் மிகப் பழைய பூங்காவான ஸ்டேட் பார்க் நயாகராவின் அமெரிக்கப் பகுதியில் அமைந்துள்ளது.

இங்கு கேவ் ஆஃப் தி வின்ட்ஸ் என்னும் குகை, நயாகரா அட்வெஞ்சர் தியேட்டர், நயாகரா வீழ்ச்சியை உயரத்திலிருந்து பார்ப்பதற்கான பார்வை கோபுரம் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன.

வழிகாட்டுதலுடன் கூடிய திட்டமிட்ட பயணமும் இதற்கென உண்டு.

இந்த பார்க்கிற்கு ஆண்டு தோறும் வருகை புரிவோரின் எண்ணிக்கை 80 லட்சத்தையும் தாண்டுகிறது

நயாகரா நதியருகே 14 வகையான அரிய தாவர வகைகள் உள்ளன. நியூயார்க் நகர் அருகே 1901ஆம் ஆண்டு 170 அரிய வகை மரங்களில் 140 வகைகள் நயாகரா பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நயாகரா பகுதியில் அரிய வகை மலர்ச் செடி வகைகள் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்டவை உள்ளன.

ஆகவே நயாகரா அமெரிக்காவில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் பெரிதும் விரும்பும் பகுதியாக அமைந்து விட்டது.

தேன் நிலவுக்கான இடம்

வெள்ளமெனக் கொட்டும் நீர் கண்கொள்ளாக் காட்சியைத் தர உலகெங்கும் உள்ள மக்கள் நயாகராவை நோக்கிக் கவர்ந்திழுக்கப்படுகின்றனர்!

அதிகமான பனியையும் அற்புதமான வர்ணஜால வானவில்லையும் கொண்டிருக்கும் நயாகரா காதலர்களைக் கவர்ந்திழுக்கவே, அது காதலர் உல்லாசப் பயணம் போகத் தகுந்த இடமாக ஆனது; புதிதாக மணமான இளம் தம்பதிகள் தேன்நிலவு செல்ல உகந்த இடமாகவும் ஆனது.

நயாகராவின் பெருமை உலகெங்கும் பரவவே சக்கரவர்த்தி நெப்போலியனின் தம்பியான ஜெரோம் போனபார்ட் தான் மணந்து கொண்ட மணப்பெண்ணான தனது இளம் மனைவி எலிஸபத் பாட்டர்ஸனுடன் இங்கு 1803இல் தேநிலவுப் பயணம் மேற்கொண்டார். முதன் முதலாக ஆவணப்படுத்தப்பட்ட பயணம் இது தான்.

இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கில் இளம் தம்பதிகள் இங்கு வந்து குதூகலமாக தேநிலவைக் கொண்டாடவே ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்ட் கிண்டலாக, “அமெரிக்க மணப்பெண்ணுக்கு இரண்டாவது ஏமாற்றமாகத் திகழ்வது நயாகரா” என்றார். குறும்பான இந்த வாக்கியம் பெருமளவில் அனைவரையும் நகைக்க வைத்தது.

ஒரு காதலன் காதலியிடம் சொல்ல சிறந்த வாக்கியமாகச் சொல்லப்படுவது இது: “உன் மேல் நான் கொண்டிருக்கும் அன்பு நயாகராவைக் காட்டிலும் ஆழமானது; அகன்றது; உயர்ந்தது!”

சாகஸ வீரர்களுக்கான சரியான இடம்!

இந்த அகலமான நீர்வீழ்ச்சியே தங்களின் சாகஸத்தைக் காட்ட சரியான இடம் என்று இதை சாகஸ வீரர்கள் தேர்ந்தெடுத்து, தங்கள் சாகஸங்களைக் காட்ட ஆரம்பித்தனர். பிரான்ஸை சேர்ந்த சார்லஸ் ப்ளாண்டின் என்னும் 34 வயதே ஆன இளைஞர் நயாகராவில் 1600 அடி நீளமும் இரண்டு அங்குல குறுக்களவும் உள்ள கயிறை எடுத்து இரு புறமும் இணைக்கும் விதத்தில் கட்டினார். 1859ஆம் ஆண்டில், அதில் நடந்து காண்பித்து உலகையே பிரமிக்க வைத்தார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருக்க நான்கு நிமிடங்களில் அவர் நயாகராவை  நடந்து கடக்கவே கூட்டம் ஆரவாரித்தது.  சில நாட்கள் கழித்து இன்னும் அதி சாகஸ செயலாக கண்ணைக் கட்டிக் கொண்டு வேறு அவர் நடந்து காண்பித்தார்.

இதுவரை ஒரு பெண்மணி, பத்து ஆண்கள் ஆக மொத்தம் பதினோரு பேர்கள் இப்படி நயாகராவில் கயிற்றின் மீது (tight rope walk)  நடந்துள்ளனர்.

https://tamilandvedas.com/wp-content/uploads/2020/07/d1164-nia5.jpg

ஹௌடினியின் சவால்!

உலகின் ஆகப் பெரிய மாஜிக் நிபுணரான ஹௌடினி (தோற்றம் மார்ச் 24, 1874 மறைவு அக்டோபர் 31, 1926) தன்னை நன்கு கட்டிப் போட்டு, சீல் செய்யப்பட்ட பெட்டியில் வைத்து ஆற்றில் தூக்கி எறியப்பட ஒரு சில நிமிடங்களில் மீண்டு வருவார். அவரது சாகஸங்களிலேயே அனைவரையும் பிரமிக்க வைக்கும் சாகஸம் இது.

‘தி மேன் ஃப்ரம் பியாண்ட்’ என்ற படத்தில் நடிப்பதற்காக 16 பேர் அடங்கிய குழுவுடனும் இயக்குநர் பர்டனுடனும் நயாகராவுக்கு 1921 மே மாதம் முதல் வாரத்தில் வந்த ஹௌடினி அருமையான ஒரு காட்சியைப் படமாக்கினார். படகில் போகும் காட்சி அது. ஒரு படகு  நீர்வீழ்ச்சியின் வேகத்தில் சுக்கு நூறானது. இன்னொன்றில் ஹௌடினி நயாகராவில் நீந்திய காட்சி நன்கு படமாக்கப்பட்டது.

அப்போது அவர் தன்னைக் கட்டி சீல் வைக்கப்பட்ட பெட்டியில் வைத்து நயாகராவில் தூக்கி எறியப்பட தான் தப்பிக்கும் மேஜிக்கை செய்யப்போவதாக அறிவித்தார். உலகமே பிரமித்தது. உடனே போலீஸார் அவரை அது போன்ற சாகஸ செயலை செய்யக் கூடாது என்று தடை விதித்தனர்.

படகுக் காட்சி எடுக்கப்பட்ட சில மணி நேரத்திற்கு முன்னர் இன்னொரு அதிசய தற்செயல் ஒற்றுமை நிகழ்வு நடந்தது.  அன்னி எட்ஸன் டெய்லர் என்னும் பெண்மணி தனது 63ஆம் வயதில் காலமானதாக ஒரு செய்தி வந்தது. இந்த சாகஸப் பெண்மணி தான் முதன் முதலாக ஒரு பீப்பாயில் நயாகரா நீர்வீழ்ச்சியில் சென்று உயிரோடு திரும்பியவர்.

இந்தச் செய்திகளை எல்லாம் நயாகரா டூரின் போது தெரிந்து கொள்ளலாம்.

அத்துடன் நாமும் நயாகரா டூரின் போது நான்கு மணி நேர படகுப் பயணத்தை மேற்கொண்டு மெய் சிலிர்க்கலாம்.

முக்கிய விஷயம் நயாகரா நீர்வீழ்ச்சியைப் பார்க்க உகந்த காலம் ஜூன் முதல் ஆகஸ்ட் முடிய உள்ள கோடைக்காலமே..

நயாகராவில் உள்ள க்ளிப்டன் ஹாலில் ஒரு ஸ்கை வீல் ராட்டினம் உள்ளது. 175 அடி உயரமுள்ள ஸ்கைவீல் ராட்டினத்தில் பத்திரமாக வடிவமைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் அமர்ந்து பத்து நிமிடத்தில் மூன்று சுற்றுக்கள் சுற்றலாம்; நயாகரா பகுதி முழுவதையும் பார்த்து மகிழலாம்.

‘பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்’ என்ற பிரபல ஹாலிவுட் திரைப்படத்தின் சில காட்சிகள் நயாகராவில் படம் பிடிக்கப்பட்டு உலக ரசிகர்களைக் கவர்ந்தது.  

நயாகரா தங்கும் இடங்கள்

பகல் நேர பிரம்மாண்டத்தோடு கூட இரவு நேர வண்ண மய விளக்கு வர்ணஜாலத்தையும் பார்த்து மகிழ்ந்து விட வேண்டும் என்று திட்டமிடுவோர் நயாகராவில் ஒரு நாள் தங்க வேண்டும் அல்லவா? கவலை இல்லை, நயாகராவில் பத்துக்கும் மேற்பட்ட பெரிய தங்கும் விடுதிகள் உள்ளன.

இப்படிப்பட்ட அதி ஆற்றல் வாழ்ந்த நீர் வீழ்ச்சியை சும்மா இருக்க விடலாமா? இந்த நீரை உபயோகித்து கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது நயாகரா தரும் மின்சக்தி 49 லட்சம் கிலோவாட் ஆகும்!

இரண்டே வரிகளில் நயாகரா!

1842ஆம் ஆண்டு நயாகராவிற்கு வந்த உலகின் மிகப் பெரிய எழுத்தாளரான சார்லஸ் டிக்கன்ஸ், “ தேவதைகள் உகுக்கும் கண்ணீரில் என்ன சொர்க்க சத்தியம் மிளிர்கிறதோ” (what heavenly promise glistened  in those angel’s tears) என்று வியந்து  கூறினார்.

நீங்கள் பார்த்த நயாகராவைப் பற்றி இரண்டு வரிகள் சொல்லுங்கள் என்று கேட்டால் சாமானியரும் நூறு வரிகள் சொல்வர்.

மாதிரிக்கு இரண்டு வரிகள்:

அற்புதங்களையே நம்பாதிருந்த நான் உலகில் அற்புதங்கள் உண்டு என்பதை நயாகராவைப் பார்த்தவுடன் உணர்ந்தேன்.

நீங்கள் உயிரோடிருப்பதை நிஜமாகவே உணர நயாகரா தான் சிறந்த இடம்!

****

புத்தக அறிமுகம் – 16

மகான்களின் சரிதம் – பாகம் 1

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஸ்வாமிஜி கிருஷ்ணா!

2. பகவான் ஸ்ரீ ரமண மஹரிஷி!

3. ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்!

4. குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர்!

5. ஸ்ரீ குழந்தையானந்த ஸ்வாமிகள்!

6. ஸ்ரீ அப்பைய தீட்சிதர்

7. ஸ்ரீ நீலகண்ட தக்ஷிதர்

8. திருவிசைநல்லூர் ஸ்ரீதர வெங்கடேச ஐயாவாள்!

9. பகவந்நாம போதேந்திரர்

10. ஸ்ரீ சமர்த்த ராமதாஸ்

11. ஸ்ரீ துளஸிதாஸர்!

12. பக்த மீராபாய்

13. ஸ்ரீ ஜெயதேவர்

14. ஸ்ரீ சைதன்ய மஹா ப்ரபு!

15. ஸ்ரீ நாராயண தீர்த்தர்!

16. சேக்கிழார்!

17. ஸ்ரீ குமரகுருபரர்!

18. திரு அருட்பிரகாச வள்ளலார்

அணிந்துரை

ல ஆயிரக்கணக்கான தமிழ் உள்ளங்கள் பெரிதும் ஆவலுடன் ஞானமயம் ஒளிபரப்பில் பார்த்தும், கேட்டும் ரசித்த பாரததேச மகான்களின் சரிதத்தைப் புத்தக வடிவில் அனைவரும் படித்து மகிழும் வகையில் திரு.ச.நாகராஜன் அவர்கள் அளிக்க முன்வந்திருப்பது போற்றுதற்குரியதாகும். அவர் ஒரு பன்முகம் கொண்ட வித்தகர்.

இதழியல் எழுத்தாளர், வானொலி, தொலைக்காட்சி விரிவுரையாளர், நிர்வாக இயல், அறிவியல், இசை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரையாளர், தேசியவாத சிந்தனையாளர்.

இதழியல் எழுத்தாளர், வானொலி, தொலைக்காட்சி விரிவுரையாளர், நிர்வாக இயல், அறிவியல், இசை மற்றும் சுயமுன்னேற்றக் கட்டுரையாளர், தேசியவாத சிந்தனையாளர்.

ஆன்மிகமும், தேசியமும் தன் இரு கண்கள் என பாவித்த தேவர் ஐயாவைப் போல் இவரும் விஞ்ஞானத்தையும், ஆன்மிக நெறியையும் தனது இரு நயனங்களாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார். “ஜாக் ஆஃப் ஆல் டிரேடு, (ஆல்ஸோ) ஈக்வெலி

மாஸ்டர் ஆஃப் எவ்வெரிதிங்” என்றுதான் இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும்!

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருத மொழிகளில் புலமைப் பெற்றவர். மொழி மாற்றம் செய்து வெளியான அவரது கட்டுரைகள் கொம்புத் தேனில் தோய்த்து எடுத்தப் பலாச்சுளையைக் கண் மூடி அனுபவித்து ருசிக்கும் ரசனையைத் தருகின்றன, மேன்மேலும் படித்தாலும் திகட்டாமல் சுவைக்கத் தோன்றுகிறது என்பது என்னவோ, உண்மை தான்!

“ஒருவன் முதலில் தன் தாயிடமிருந்து கொஞ்சம், பின்னர் தந்தையிடமிருந்து கொஞ்சம், அடுத்து ஆச்சாரியாரிடமிருந்து கொஞ்சமும் கற்கிறான். ஆனால் அவன் பூரண அறிவைப் பெற நன்கு கற்றறிந்தப் பெரியோர்களின் அனுக்ரகம் வேண்டும்” என்ற (நீலகண்ட தீட்சிதரின்) வாக்குப்படி இந்நூலாசிரியரின் வாழ்க்கை அமைந்திருப்பது தான் அற்புதம். பல மகான்களின் அருளாசியும் கிட்டியிருக்கிறது.

சங்கம் வளர்(ந்த) மதுரையில் வசித்ததும், சுதந்திரப் போராட்டத் தியாகியும், பத்திரிகைத் துறை அனுபவம் வாய்ந்த தன் தகப்பனார் தெய்வத்திரு சந்தானம் அவர்களின் பேராற்றலும் இயல்பாகவே அவரிடம் வேரூன்றி விட்டதை அவரது எழுத்துக்களில் காணலாம். எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் நிபுணர்.

அதை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் மூலம் அறியலாம்.

இனிய வாக்கு எதையும் வெல்ல வல்லது.

“ஹுவே வாசம்” எனும் ஸாமகானம் இனிய சொற்களைப் பேசவும், கேட்கவும் அறிவுறுத்துகிறது. மகான்கள் இதைத்தான் உபதேசிக்கிறார்கள் என்பது இங்குக் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

குரு வணக்கக் கட்டுரையுடன் தொடங்கி மொத்தம் 18 மகான்களின் மகோன்னத வாழ்க்கைச் சரிதையை எங்கும் தொய்வின்றிச் சுவாரசியமாக எடுத்துச் சொல்லியி ருக்கிறார். தற்போதையச் சூழ்நிலையில் நம் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

இப்போது இவையெல்லாம் பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம் பெறாத நிலை உள்ளது நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. இத்தொகுப்பைப் படிப்பவர்கள் தங்கள் சந்ததியினருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டியது அவர்களின் கடமைகளுள் ஒன்றாகும்.

அப்போதுதான் இந்நூலாசிரியரின் எதிர்பார்ப்பும் நிறைவேறும். வருங்காலச் சந்ததியினரின் வாழ்வும் நலம் பெறும்.

துல்யம் கர்ஷந்தி ப்ரதிவீம்
துல்யம் சாஸ்த்ராணி அதீயதே
உன்மஜ்ஜந்தி நிமஜ்ஜந்தி
தைவஸ்யைகஸ்ய சேஷ்டயா”

விவசாயிகள் பலர் ஒரே மாதிரியே பாடுபட்டு நிலத்தை உழுது பயிரிடுகிறார்கள். அதே போல் பலர் மிகச் சிரமப்பட்டுச் சாஸ்திரங்களை நன்கு கற்கிறார்கள். ஆனாலும் சிலர் தங்கள் வாழ்க்கையில் முன்னேறி வெற்றிப் பெறுகின்றனர். மற்றவர்கள் பெரும் தோல்வியையே சந்திக்கிறார்கள். இதுதான் விதியின் விளையாட்டு.

இந்த விதியின் விளையாட்டில் புறம் பார்க்காமல் முன்னேறிக் கொண்டிருக்கிறார் திரு ச.நாகராஜன் அவர்கள்.

அது தொடரட்டும். மகான்கள் அருளிய ஆசிகள் அவருக்கு என்றும் நல்வழி காட்டிடும். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

வாழ்க தமிழ், வெல்க தமிழ்.

டிசம்பர் 22, 2021

பா.கிருஷ்ணன்
புது டில்லி

*

நூலில் நான் தந்துள்ள என்னுரையில் ஒரு பகுதி இது:-

என்னுரை

லண்டனிலிருந்து வாரந்தோறும் ஒளிபரப்பாகும் ஞானமயத்தில் பங்கு கொள்ளுமாறு லண்டன் திரு சுவாமிநாதன் மற்று சிவஸ்ரீ கல்யாண்ஜி அழைப்பு விடுத்த போது அதை ஏற்றுக் கொண்டு வாரந்தோறும் ஒரு மகானின் சரிதத்தைக் கூறும் பாக்கியம் கிடைத்தது.

அந்த உரைகளில் ஒரு பகுதியே இந்த நூலாக அமைகிறது. ஆகவே திரு சுவாமிநாதன், திரு கல்யாண்ஜி ஆகியோருக்கு எனது உளம் கனிந்த நன்றியை காணிக்கை ஆக்குகிறேன்..

.இந்த நூலில் 18 மகான்களின் சரிதத் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.

இந்த நூலுக்கு அணிந்துரை கொடுத்து என்னை கௌரவித்திருப்பவர் பிரபல எழுத்தாளர் திரு டில்லி பா.கண்ணன் அவர்கள்.

தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி ஆகிய பல்மொழி வல்லுநரான இவர் வால்சந்த் நகர் கனரகத் தொழிற்சாலை, புனேயிலும் டாடா ஸ்டீல் டின்பிளேட், ஜாம் ஜெட்பூரிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார். தற்சமயம் ஓய்வு பெற்று புது தில்லியில் வசித்து வருகிறார்.

கல்கி, ஆனந்தவிகடன், குமுதம் பக்தி ஸ்பெஷல், தீபம், ஞான ஆலயம் உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளில் அருமையான கட்டுரைகளை ஆன்மீகத்தில் தோய்த்து அளித்து வந்தார்; அளித்து வருகிறார். இவருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!.

22-12-21                                                                                           ச.நாகராஜன்
பங்களூர்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

பகவத் கீதையில் சுவையான சொல் ‘லோக ஸங்க்ரஹம்’ (Post No.11,158)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,158

Date uploaded in London – 1 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பகவத் கீதை மூன்றாம் அத்தியாயம் இருபதாவது ஸ்லோகத்தில் (3-20) ‘லோக ஸங்க்ரஹம்’ என்ற சொல்லை கிருஷ்ண பரமாத்மா  பயன்படுத்துகிறார். இதன் பொதுவான அர்த்தம் “உலகத்தை நல்வழிப்படுத்தி , அதனால் வேற்றுமைகளைப் போக்கி  ஒற்றுமையை வள ர்ப்பது” (அண்ணா உரை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை)

இதைப் படிக்கையில் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன. சுவாமி விவேகானந்தருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது . நான் ஒருவன் மட்டும் தவம் செய்து முக்தி அடைவது சரியா , அல்லது மக்களுக்கு நல்லதைப் போதித்து அவர்களையும் மேல் நிலைக்குக் கொண்டு செல்லுவது சரியா என்று மனதில் கேள்வி எழுந்தது. கன்னியாகுமரிக்கு வந்து கடலில் நீந்தி ஒரு பாறையில் அமர்ந்து தியானம் செய்தபோதுதான் அவருக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அதன்படி பாரத மக்களுக்கு சேவை செய்வதே மேல் என்று உலகம் முழுதும் பயணம் செய்து ஆன்மீக உத்வேகம் ஊட்டினார். சேவை அமைப்புகளை உருவாக்கி மற்றவர்களையும் சேவை செய்யவைத்தார். இப்போது கன்யாகுமரியில் அந்த இடத்தில் விவேகானந்தா பாறை நினைவுச் சின்னம்  உளது

காஞ்சி பரமாசார்ய சுவாமிகளும் (1894-1994) சொற்பொழிவாற்றுகையில், உயர்ந்த அத்வைத (அஹம் பிரம்மாஸ்மி) நிலையை அடைந்த பின்னர் எதற்கு எங்களுக்கு நித்திய கிரியைகள், பூஜைகள் என்று எண்ணலாம். இவையெல்லாம் மற்றவர்களுக்கும் கிடைப்பதற்காகவே சங்கர பகவத் பாதாளினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று.

என்னுடைய விளக்கம்

ஏணியை வைத்து மேலே ஏறிச் சென்றவர் அந்த ஏணியை அகற்றிவிட்டால் , ஏனையோர் மேலே வரமுடியாது. ஆகையால் அந்த படிகள் மிகவும் அவசியம். இதைத்தான் பகவான் கிருஷ்ணர் ‘லோக ஸங்க்ரஹம்’ என்று சொல்லுகிறார்.

முதலில் ஸ்லோகத்தைப் பார்த்துவிட்டு இது தொடர்பாக சுவாமி சித்பவானந்தர், ராமகிருஷ்ண மடம் அண்ணா ஆகியோர் சொல்லும் கதைகளைப் பார்ப்போம்.முன்னாள் ஜனாதிபதியும், தத்துவப் பேராசிரியருமான டாக்டர் ராதா கருஷ்ணரும் யோக வாசிஷ்ட ஸ்லோகங்களை மேற்கோள்  காட்டுகிறார்.

பகவத் கீதை மூன்றாவது அத்தியாயம்:–

कर्मणैव हि संसिद्धिमास्थिता जनकादयः।
लोकसङ्ग्रहमेवापि सम्पश्यन्कर्तुमर्हसि॥२०॥

கர்மணைவ ஹி ஸம்ஸித்³தி⁴மாஸ்தி²தா ஜநகாத³ய:|
லோகஸங்க்³ரஹமேவாபி ஸம்பஸ்²யந்கர்துமர்ஹஸி ||3-20||

ஜநகாத³ய: ஹி = ஜனகன் முதலியோரும்
கர்மணா ஏவ = செய்கையாலேயே
ஸம்ஸித்³திம் ஆஸ்தி²தா = சித்தி (சிறந்த பேற்றை) பெற்றார்கள்
லோகஸங்க்³ரஹம் ஸம்பஸ்²யந் = உலக நன்மையைக் கருதியும்
அபி கர்தும் ஏவ அர்ஹஸி = நீ தொழில் புரிதல் தகும்

ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ தொழில் புரிதல் தகும்.

(from sangatham.com; thanks)

இந்த ஸ்லோகத்தில் ஜனகன் என்னும் மன்னனை கண்ணன் உதாரணம் காட்டுகிறார். அவர் ஆட்சி செய்து, யாக யக்ஞங்கள் செய்தபோதும், தாமரை இலைத் தண்ணீர்போல வாழ்ந்து முக்தி எய்தினார் .இது பற்றி அண்ணா உரை:–

“உலக வாழ்க்கையில் இருந்து கொண்டே ஆத்ம ஞானத்தைப் பெற்றவர்க்கு உதாரணமாக ஜனங்கள் எப்போதும் ஜனக மஹாராஜாவைச் சொல்லுகின்றனர். மானிட ஜீவிய சரித்திரம் முழுவதிலும் இந்த உதாரணம் ஒன்றேதான் காணப்படுகிறது . நீ உலகில் இருந்துகொண்டே ஜனகரைப்போல இருப்பதாக நினைத்து ஏமாந்துவிடாதே! பல மக்களைப் பெறுவதாலேயே பலருக்கு ‘ஜனகர்’ (பிதா , அப்பா Father ) என்னும் பெயர் பொருத்தமாகும்; ஜனகரைப் போல ஞானம் பெற் றதாலன்று . அந்த ஞானம் அரிதினும் அரிது” – ராமகிருஷ்ண பரமஹம்சர் .

இதை மேற்கோள் காட்டும் அண்ணா மேலும் ஒரு ஸ்லோகத்தையும் ; உபநிஷத் வாக்கியத்தையும் காட்டுகிறார்.

கடோபநிஷத் 2-19க்கு ஆனந்த கிரி சொன்னது-

விவேகி ஸர்வதா முக்தஹ  குர்வதோ நாஸ்தி கர்த்ருதா

அலேபவாத மாச்ரித்ய  ஸ்ரீ க்ருஷ்ண ஜனகெள யதா

சுவாமி சித்பவானந்தர் சொல்கிறார் –

ஞானியர்கள் கர்மத்தில் ஈடுபடுதலில் இன்னொரு சிறப்பு உண்டு. குருடன் குருடனுக்கு வழிகாட்ட முடியாது கண்ணுடையவன்தான் கண்ணில்லாதவனைக் கையைப் பிடித்து  அழைத்துக்கொண்டு போகமுடியும். ஞானக் கண்ணுடையவர்கள் கர்மத்தைத் தவறுதலின்றி செய்ய வல்லவர்கள் ஆவர். கர்மம் செய்தே முன்னேற்றம் அடைந்தாகவேண்டிய உலக மக்களை நல்வழியில் நடாத்துதல் அவர்களுக்கு இயலும். ஆக, அப்பொறுப்பை எண்ணிப் பார்க்குமிடத்து  கர்மம் செய்வது அவசியமாகிறது.

xxx

முன்னாள் ஜனாதிபதியும் தத்துவப் பேராசிரியருமான சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன், யோக வாசிஷ்ட ஸ்லோகங்களை மேற்கோள் காட்டுகிறார்.

“மதத்தின் பணி , உலக மக்களுக்கு ஆன்மீக ஒளியை உண்டாக்குவதாகும் லோக ஸங்க்ரஹம் என்பது உலகை வழிநடத்தல் ஆகும். சமூகத்தை இணைக்கும் பாலம், உலக ஒற்றுமையை உண்டாக்கும் பணி” .

யோக வாசிஷ்டத்தில் வரும் ஸ்லோகங்கள் இவை –

ஞானியானவன் கர்மத்தைச் செய்வதாலோ செய்யாமல் இருப்பதாலோ லாபம்/ பலன் எதையும் அடையப்போவதில்லை.ஆகையால் கர்மம் வரும்போது அதைச் செய்கிறான் .

ஒன்றைச் செய்வதும் செய்யாமல் இருப்பதும் எனக்கு ஒன்றேதான் .கர்மம் செய்யாதே என்று நான் எதற்கு கட்டாயப்படுத்த வேண்டும்.; எந்த எந்த கர்மம் வருகிறதோ அதை நான்  செய்கிறேன்

–யோக வாசிஷ்டம்

ஞாஸ்ய நார்த்தஹ கர்மத் தியாகைஹி நார்த்தகர்ம ஸமாச்ரயைஹி

தேன ஸ்திதம் யதா யத் யத் தத் ததைவ கரோதி அசெள 6-199

மம நாஸ்தி க்ருதேணார்த்தோ நாக்ருத்தேன கஸ்சன

யதா ப்ராப்தேன திஷ்டாமி ஹி அகர்மணி க ஆக்ரஹக 6-216

பகவத் கீதையில் இதற்கு அடுத்த சுலோகத்தில் (3-21) பெரியவன் எதைச் செய்கிறானோ அதையே மற்றவர்களும் செய்வர் என்று கண்ணன் பகர்கிறார். அது தொடர்பான கதைகளை இன்னொரு கட்டுரையில் காண்போம்.

–சுபம்–

Tags-  பகவத் கீதை, சுவையான சொல், லோக ஸங்க்ரஹம்,

­­நிகமாந்த வேதாந்த தேசிகர் அருளிய கோதா ஸ்துதி (Post No.11,157)

WRITTEN BY Dr A.Narayanan, London

Post No. 11,157

Date uploaded in London – –    1 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸம்ஸ்க்ருதத்தில் எழுதிய கோதா ஸ்துதியை, லண்டன் டாக்டர் ஏ. நாராயணன் தமிழில் கவிதை வடிவில் தந்துள்ளார். நாம் அனைவரும் ,திரு ஆடிப் பூரத்தன்று (1-8-2022)  இதை பக்தியுடன் துதித்து , ஆண்டாளின் அருளைப் பெற்று சகல செளபாக்கியங்களுடன் வாழ்வோமாக!

 ஸ்ரீரங்கநாதன் அருள் துணை .

விட்டுசித்தன் துழாய்  தோட்டத்தவதரித்தப் பூமகளே  ! 

விண்ணுலகச் சந்தனைத்தரு தழுவிய கற்பகக்கொடியே!

கண்ணுறங்கு மரவணைத்துயிலோன் கட்டளை மீறிய

மண்ணுலகோர் மீதவன் சினங்கொளாப் பொறுத்தருள

பெண்ணின் பெருமைவடிவாய் அரங்கனையார்த்தவளே                             1

கோதாத்துதி

வேதங்கள் போற்ற இயலாப் புகழெய்திய கோதைநாயகி 

வேதத்துக் கொப்பத் தமிழ் பாமாலை தொகுத்த வேதநாயகி

வேதவல்லியைத் துதிக்கத் துணிவிலா இவ்வேதியோனை 

கவிதைவடிவாய் நின் புகழ் பாட என் கைப்பிடித்தெழுதிய        

கவியரசியைக் காலமெல்லாமடி பணிவேனே                                                                      2

கோதையின் கொலுசு மணியோசைக் கேட்டனரங்கன்

ஒலித்ததிலோ அணங்கின் பெருமை கவிதை மொழியாக

ஓதிய வேங்கட நாதனுக்கு ஓதுவித்தவளோ கோதையாக

ஆழி கையேந்தா அரங்கன் மகிழ  ஆண்டாளும் மகிழ்ந்தாள்                                        3

கண்ணனின் பால லீலை கண்டதால் யமுனைக்கரைக் கேற்றமே

கரு நிறமான நீர் பெருகுகின்ற யமுனை கோதையின் தோற்றமே

கண்ணனே கோதை மொழிந்த யமுனைத்துறைவனாகக் கிட்டியதே

கண்ணனுபவம் யமுனை நீராடிய குருமார்களுக்குக் கோதையாலே           4

அணங்கணிந்த  பூ மாலைத் தன் கழுத்தைத்  தழுவ  அயருற்ற அரங்கன்

அடியவளாக வந்து  அவனை ஆண்டவளாக அவள் பாடிய  திருப்பாவையும்

நாச்சியார் திரு மொழியும் வீணை நாதமாயொலிக்கப் பேச்சிலா நிலயில்

அச்சமில்லாப் பாபம் புரிவோரைத் தண்டிக்க இச்சையில்லாதவனுமானான்           5 

 நாச்சியார் கோதையின் சிவந்த உதடுகளோ சோனை நதி செந்நீர் போலாக­

பேச்சிலே பெருகும் கவிதை தெளி நீர் ஸரஸ்வதியாகி விரஜா நதி சிறப்பெய்த­

பேரழகி  வனிதை கோதையின் வனப்பான மார்போ துங்கபத்ரா நதியுமாக

கவிதை வரியிலே கோதாவரியும் நர்மதையுமானதி லமிழ்ந்தானோ அரங்கன்        6  

வேதம் மொழிவதோ எறும்புப்புற்று  நிலமகள் செவியென

கோதையும் நிலமகளாய் தோன்றியதாலன்றோ அவள்

செவிவாய் வழிவந்த காரணப்பெயரே வால்மீகீ என்ற ஆதி

கவி வாய் மொழிந்ததோ ராமாயணமெனும் இதிகாசம்                                                    7

நாயகியாய் நாயகனாய் நின்ற நந்த கோபன் குமரனை

ஓயாமல்  அனுபவிக்கு கந்ததோ கோதை குமரியானதாலே

நாயகியாய் பாவித்துக்  கண்ணனுக்கு விரித்த வலையிலே  

விட்டுசித்தனுக்கு கிட்டாது தட்டி தவிக்கவிட்டான் மாயன்                   8

பையத்துயின்றப் பரமனடி பாடி பாருள்ளோருய்ய  

பைந்நாகம் படுக்கையா யுடையோநின் சிறப்பறிய

பரமன் மனமுதித்த மதியே பட்டர்பிரான் கோதையே!

அலைமகளும் அம்புலியோனுடன்பிறந்தவளாயாவாளே                          9                                                                

பரமனோ அகமகிழ்வான் அடியாரவன் புகழ் பாடக்கேட்க

பட்டர்பிரானுட்பட ஆழ்வார் பாசுரங்களில் அதி  ­

பரவசமாகா அரங்கன் கோதை சூடிய மாலையவன் தோள்

பற்றியதருணமே விட்டுசித்தன் பெரியாழ்வாரானான்                                                     10

யோகத்துயிலில் அரங்கன் கண்கள் தழுவிய தென் திசை

வில்லிபுத்தூர் புகழோங்கியதோ குமரி கோதைப் பிறப்பால்

விழிவைத்தெதிர் கொள்ள நங்கை சூட்டிய நற்பாமாலையில்

ஏங்கிய அரங்கனின் கண்கள் தேங்கியது தென் திசை நோக்கி                                    11­

கரைகிறதோ மக்களின் பாபங்கள் புண்ய நதிகளில் நீராட்டத்தில்

கரைந்த பாபங்களால் கறைபட்ட  இந்நதிகள் பருவகாலத்தில்

கறை நீங்கிப் புனிதமாகிறதோ கோதாவரியுடன் சங்கமாகி புனிதம்

குறையாத கோதாவரியின் சிறப்பு கோதாவின் பெயரோடிணைய                            12

அழகுக்கேற்ற அங்கங்களும் அமைந்த அணங்கு கோதாய்!

படுக்கையாகப் பாம்பும் பயணிக்கப் பறவையும் கொண்ட

வயோதிக அரங்கனா நீ விரும்பும் மணாளனெனத் தோழிகள்

ஏளனம் செய்தும் ஏற்றவனரங்கனே என்றாளோ கோதை                                              13

கோதையின் கேச உறவால் தேசடைந்த மாலை கேசவன்

தோளேற்க அவனணிந்த வைசயந்தி மாலையின் வண்டுக்

கூட்டங்கள் கோதை சூடிய மாலைக்குத் தாவிக் கருத்த

குடை போல் காட்சியளித்ததோ அரங்கன் திரு முடி மேல்                                         14

 மணம் கமழும் வைசயந்தி மாலை மாலனின் மார்பேற்க

மண் மகள் சூடிக்கொடுத்த மாலையோ மாதவனின்

மணி முடியோடிணைந்தது  காட்டுவதோ இம்மாசிலா

மாதவியின் பக்திக்கிடம் மாதவனின் மகுடமே                                                              15

மங்கை சூடிக்கொடுத்த மாலையின் கீர்த்தி  மாலனின்

மகுடத்தோடிணைந்ததாலாக மணம் கமழ்ந்த மலர்

மாலையில் மதுவருந்தும் தேனீக்களின் ரீங்காரம்

மங்கல வாத்திய ஒலியாயறிவித்தது மண நன் நாளை                                              16

மாலனின் நாபிக்கமலத்தின் நறுமணமும்  அவன் திரு

மார்புறையும் அலைமகளின் சந்தனக்காப்பின் மணமும்

மணம் கமழும் தமிழ் வேதமான பாசுரங்களிலும் நிறையா

மனம் நிறையுற்றதோ கோதை சூடிய மாலையவனணிய                                         17

அரங்கன் அகமகிழ்ந்து ஆண்டாளின் மேலாடையையே

 அணிய பரிவட்டமாகவும் அவள் கூந்தலின் மணம்

அள்ளி வீசிய சூடிக்கொடுத்த மாலையிலுமே அரங்கன்

அடியார்க்கு அருளும் அதிகச்சிறப் பெய்தினான்                                                           18

மறைகளின் சிரமான உபனிடதங்களில் கமழ்வதோ

மண்டலமெங்கும் காணா மாலன்  மங்கை கோதை சூடிய

மாலையவன் தோள் சேர அதிலுன் கருங்கூந்தலின்மணம்

வீச விஞ்சிய அவன் பெருமையை உபனிடதங்கள் காணா                                        19

உலகுக்கே  அப்பனானோன் நீ சூடிய மாலையை சிரமேற்று

உன் திருப்பணியிலவன்  உவகையடையக்கண்டு நாணம்

நண்ணிய நயனங்கள் நாயகனின் மலரிணைந்த மகுடம்

நல்க நீலக்கமல மாலையோ ஒன்றுத் தோன்றாத்தோன்றியது                                 20                                     

நாயகனரங்கனும் நாயகிக் கோதையும் மாலை மாற்றிய

நயமுறக் கண்டோரெழுப்பிய ஆரவாரச் சர்ச்சையிலே

நெடியோன் நிலமகளி வர்களில் உயர்வு  தாழ்வு காண விழைய

நடு நிலையோர் கண்டதோ இவ்விருவரும் சம நிலையே                                             21

அடியார்க்கென்றுமருளும் மாலன்  நீல முகில் வண்ண மேனியில்

அருகில் நின்ற ஆண்டாளின் இளம்புல்லொத்த ஒளிப் படர அத்துடன்

அமலன் அகமுறையும் அலைமகளின் பொன்னோளி இணைந்து

அடைந்ததோ அரங்கன் மேனி ஆடிடும் மயில்  கழுத்து வண்ணம்                            22

நெடியோனினொரு பக்கம் கொடி இடையாள் கோதை நிலமகளாய்

நெருங்கி இருக்கத் திருமகள் மரு தோள் கற்பக தருவாய் இணைந்த

சிலையான நிலையில் தலை முடி தாள் வைத்துப் பூசித்ததாலோ

மனுவும் மாந்தாதாவும் மாட்சி பெற்று பல் காலம் ஆட்சி செய்ய                                     23

சாத்திரங்களை மீறி நெறி தவறுவோர் மீது அனந்தன்

ஆத்திரமடைவதை திருமகள் தடுக்க இயலா நிலையில்

ஆண்டாளின் பார்வையில் அலைமகளின் ஏக்கம் ஏறி

கெஞ்சியத் தயையால்  விடுத்ததோ விட்ணுவின் சீற்றம்                                             24   

அவரவர் விதைத்த வினைக்கேற்ப அவரவரைத் தண்டிக்க

அறுகுணன் அமலுக்குக் கொணரா வண்ணம் நெறித்த

புருவத்தால் கோதை கசிந்த பார்வையில் பொங்கிய

கருணையால் போர்த்துவிட்டாளோ அரங்கனை                                                           25

அரவணைத்துயிலுமரங்கனோ நீல மேகத் திருமேனியான்

அவன் திருமார்புறங்கும் அலைமகளோ மின்னற்கொடியாள்

மின் தாங்கிய முகில் சொரிந்த நீர் கோதையெனும் தயையே

அமுதமாய் உலகோரனுபவிக்கு மல்லல்களுக்கு ஔடதமாய்                                 26

தாய்ப்பாலருந்தும் சேய் முலை கடித்தும் வலியுணரா

மேலும் பாலூட்டி இன்புறுவதையொத்தத் தாயன்பே

நாச்சியார் கோதை தயை வடிவாய் அடியார்

பிழை பொறுத்தருள் பாலிப்பது                                                                                      27

இந்திர நீல நிறத்தழகாள் நிலமகள் நப்பின்னை

இளங்கரத்தில் அல்லி தாங்கப் பெருதனத்தால்

தலைக் குனிந்த நிலையில் பட்டர்பிரான் செல்வி 

நோக்க இயலாளோ அடியாரபராதமனைத்தும்                                                           28

பட்டர்பிரான்  கோதையைப்போற்றும் வேங்கட நாதன்

கோதாத் துதியைத் தூய்மையாய் இடைவிடாத்

துதிப்போர்  அரங்கன் கோயில் திருப்பணியில்

அமர்ந்து அரங்கன் திருவடியிலேயே ஒன்றிவிடுவர்                                                           29   

 நாராயணன்

விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்..! (Post No.11,156)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,156

Date uploaded in London – –    1 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளி நிலையத்தில் வீரர்களின் வாழ்வில்..!

ச.நாகராஜன்

1

தலை கீழாகத் தொங்கப் பழகு!

ஃப்ராங்க் கல்பெர்ட்ஸன் (Frank Culbertson) விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் விண்வெளிப்பயணக் குழுவினருக்கு ஒரு சின்ன அறிவுரையை வழங்கினார்.

என்ன அது?

முடிந்தமட்டும் தலைகீழாகத் தொங்கிப் பழகுங்கள் – ஜிம்னாஷியத்தில் சின் – அப் (chin-up bar) பாரில் இருப்பது போல!

எதற்காக என்று கேட்டால் இரண்டே வார்த்தைகளில் பதில் : ஃப்ளூயிட் ஷிஃப்ட்! (Fluid Shift).

புவி ஈர்ப்பு விசை இல்லாததால் உடலில் இருக்கும் திரவங்கள் நினைத்தபடி அங்கும் இங்குமாக ஓட ஆரம்பிக்கும்! இதனால் உடலில் நெருக்கி அடித்தாற் போல ஒரு திணறல் இருந்து கொண்டே இருக்கும்!

சிலருக்கு வயிறு குமட்டும். வாந்தி வரும். சிலருக்கோ வெஸ்டிப்யூல் அமைப்பு எனப்படும் அங்கண மண்டல கோளாறுகள் வரும்.

இதற்கு ஒரு தனிப் பெயரே உண்டு. ஸ்பேஸ் அடாப்டேஷன் சிண்ட் ரோம் – விண்வெளி வாழ்க்கைக்குத் தயார்படுத்திக் கொள்ளும் நோய் என்று! சுருக்கமாக விண்வெளி வியாதி என்று இதைச் சொல்லலாம்.

எப்படிப்பட்ட உடல் வலு கொண்டவராக இருந்தாலும் இது அவரை ஒரு புரட்டு புரட்டி விடும்!

வயிறு குமட்டுவது போனாலும் கூட இந்த ஃப்ளூயிட் ஷிப்ட் போகாது.

அது நுகர்ந்து பார்க்கும் சக்தியுடன் விளையாடும்; அதனால் சுவை தெரியாது; பசி எடுக்கும் உணர்வும் தெரியாது.

ஸ்காட் கெல்லி (Scott Kelly) என்ற விண்வெளி வீரர் தான் கர்ப்பமுற்றது போன்ற உணர்வு ஏற்பட, பலவற்றிற்குக் கர்ப்பிணிகள் ஏக்கமுறுவதைப் போல ஏக்கம் கொண்டார்.

பூமியில் அவ்வளவாக அவருக்கு இனிப்பு பிடிக்காது. ஆனால் விண்வெளியிலோ சாக்லட் சாப்பிட வேண்டும் என்ற ஆசை பிறந்தது!

ஒரு வருடம் விண்வெளியில் இருந்தால் உடலில் இருக்கும் காற்று அறைகள் எல்லாம் அடைத்துக் கொண்டது போல இருக்கும்!

சாப்பாடோ சுவையற்றதாகத் தான் இருக்கும். ராணுவத்தில் பரிமாறப்படுவது போல் உணவு வகைகள் இருக்கும்; சில சமயம் புதிதாக உள்ள பழ வகைகள் பூமியிலிருந்து வரும். அல்லது எப்போதாவது அத்தி பூத்தாற் போல வீட்டிலிருந்து அனுப்பப்படும் உணவு வகைகள் வரும்.

முன்னாள் நாஸா விண்வெளி வீரர் ஜிம் வாஸ் (Jim Voss) ரஷிய உணவு சப்ளை ஒன்று வந்த போது ஒரு சடங்கையே செய்து அந்த உணவு வந்த பாக்கிங்கை பிரித்ததை நினைவு கூர்கிறார். உள்ளிருந்து வரும் வாசனை பற்றி அவர்களுக்கு நன்கு தெரியும்.

பூமியில் வருமே, சமையல் வாசனை அது போலப் பெட்டியைத் திறந்தவுடன் கமகமக்கும். ஒருவழியாக விண்வெளி ஸ்டேஷனில் அடிக்கும் அந்த நாற்றம் போல இருக்காது என்று ஒரு ஆறுதல் தான்!

 இந்த நாற்றம் சகிக்க முடியாது போனதால் விண்வெளி வீரரான வந்தே ஹெய் (Vande Hei) தனது ஒவ்வொரு உணவு வகை மீது உள்ளிப்பூண்டு மசாலாவைத் தடவி விடுவார்! இன்னும் சிலருக்கோ ஶ்ரீரச்சா (Sriracha Sauce) சாஸ் ஒரு வரபிரசாதமாக அமையும்!

 நிகோல் ஸ்டாட் (Nicole Stott) என்ற விண்வெளி வீ ராங்கனைக்கோ பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் கிடைக்கும் பலவகை உணவு ரகங்கள் மிகவும் பிடிக்கும். ரஷியர்கள் அருமையான சூப் வகைகளைத் தருவார்கள். ஜப்பானிய விண்வெளி வீரர்களோ  அரிசி, கறிகாய் வகைகளைத் தருவார்கள். அவரது குடும்பம் அவருக்கு மிகவும் பிடித்ஹ்த இஞ்சி பூச்சுடன் கொண்ட சாக்லட்டை அனுப்பி வைப்பார்கள் அவருக்காக! சீஸ் கூட அவருக்கு ஓகே தான்! ஆனால் அவர் தனக்கென ஒரு எல்லையை வகுத்துக் கொண்டார். அதிகமாகச் சாப்பிடமாட்டார்!

ரெஸ்ட் ரூம் போவதில் இருக்கும் சவாலை விட உணவு உண்ணப் போவது பெரும் சவால் தானாம்!

சிறுநீர் பூமியில் போவது போல போக முடியாது. ஒரு டியூப் வழியாக உறிஞ்சி எடுக்கபப்டும். அதே போலத் தான் மலக் கழிவும் கூட!

ரிச்சர்ட் காரியாட் (Richard Garriot) என்ற பயணி விண்வெளியில் இரு வாரம் இருக்கும் படியாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். அதற்காக மூன்று கோடி டாலர் பணத்தைக் கொடுத்து அந்தப் பயணத்தை மேற்கொண்டார்.  “அது ஒட்டிக் கொள்ளும் தன்மை உள்ளது தானே! அதனால் அது உங்களை ஒட்டிக் கொண்டே இருக்கிறது” என்று கிண்டல் செய்தார் அவர். “ஆகவே தான் அது உங்களை விட்டுப் பிரியாமல் வெளியே வரத் தயங்குகிறது” என்றார் அவர்.

மூன்று முறை விண்வெளிப் பயணம் மேற்கொண்ட ஸ்வான்ஸன் (Swanson) என்ற விண்வெளி வீரருக்கு விண்வெளியில் பாத் ரூம் போகவே பிடிக்கவில்லையாம். “தினசரி திகில் ஊட்டும் விஷயம் அது” என்கிறார் அவர்.

விண்வெளி நிலையத்தின் உஷ்ணநிலை மிதமான 72 டிகிரி ஃபாரன்ஹீட். ஈரப்பதமும் மிதமாக  (Humidity) இருக்கும்.

ஆனால் எலும்பு அடர்த்தியையும் (bone density) தசை திணிவையும் (Muscle Mass) சீராக வைத்திருப்பதற்காக விண்வெளி வீரர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து கொண்டே இருப்பர். அதாவது உடலிலிருந்து நிறைய வேர்வை வந்து கொண்டே இருக்கும். நல்லவேளையாக, அது உடலிலிருந்து சொட்டு சொட்டாக விழுவதில்லை. தோலிலேயே இருக்கும். ஆனால் தலையைச் சிலிர்த்தாலோ உடலிலிருந்து வேர்வைத் துளிகள் தூறல் போல விழும்.

ஆகவே எப்போது பக்கத்தில் ஒரு துண்டு தயாராக இருக்க வேண்டும்.

இப்படி ஏராளமான அனுபவங்களை விண்வெளி வீரர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

விண்வெளி வாழ்க்கை என்பது சுலபமல்ல; அதற்கு ஏராளமான பயிற்சிகள் தேவை.

உடல் பலம் மட்டும் போதாது; மனோபலமும் வேண்டும்!

இவை இருந்தால் வாய்ப்புக் கிடைக்கும் போது நீங்களும் ஒரு விண்வெளி வீரர் / வீராங்கனை தான்!

***

வீரர்/ வீராங்கனை பற்றிய குறிப்பு :-

ஃப்ராங்க் கல்பெர்ட்ஸன் அமெரிக்க முன்னாள் கடற்படை அதிகாரி. விண்வெளி எஞ்சினியர். (தோற்றம் 15-5-1949)

ஸ்காட் கெல்லி அமெரிக்க விண்வெளி வீரர் (தோற்றம் 21/2/1964) நான்கு முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். இப்போது ஓய்வு பெற்று விட்டார்.

ஜிம் வாஸ் அமெரிக்க விண்வெளி வீரர். (தோற்றம் 3/3/1949). ஐந்து முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்.

வந்தே ஹெய் : தற்போதைய விண்வெளி வீரர். (தோ 10/11/1966) 523 நாட்கள் இது வரை இவர் விண்வெளியில் இருந்திருக்கிறார்.

நிகோல் ஸ்டாட் அமெரிக்க விண்வெளி வீராங்கனை (தோற்றம் 19/11/1962) நான்கு முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். 27 வருட நாஸா வாழ்க்கைக்குப் பின்னர் இப்போது ஓய்வு பெற்றிருக்கிறார்.

ரிச்சர்ட் காரியாட் விண்வெளி சுற்றுலாப் பயணி. (தோற்றம் 4/7/61) இவர் ஒரு கேம் டிஸைனர். இவரது தந்தை ஓவன் காரியாட் ஒரு விண்வெளி வீரர்.

ஸ்வான்ஸன் அமெரிக்க விண்வெளி வீரர். (தோற்றம் 3/12/1960) மூன்று முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார்.

xxx

tags- விண்வெளி நிலைம்

புத்தக அறிமுகம் – 15

நோயில்லா வாழ்வு பெற சில ரகசியங்கள்!

பொருளடக்கம்

அணிந்துரை

என்னுரை

1. ஆரோக்கியம் பெற அருமையான வழி!

2. ஆரோக்கியம் என்றால் என்ன? அதை எப்படி அடைவது?!

3. 100 இரகசியங்கள் – நல்ல வாழ்க்கையைக் கவர்ந்து இழுத்து அமைத்துக் கொள்ள!

4. நூறு ஆண்டு ஆயுளை ஆரோக்கியத்துடன் தரும் அதர்வ நிதி!

5. ஆக்ஸிஜன் அதிகமாக உள்ள காற்றை சுவாசிப்போம்!

6. ஒரு கிராம் வைரஸ் : 750 கோடி மக்களின் பயத்திற்குக் காரணம்!

7. பலாப்பழம் சாப்பிடலாம், டயபடீஸ் இருந்தாலும்!

8. கொரானா பற்றிய அறிய வேண்டிய சில உண்மைகள்!

9. ஆசார்ய சரகர்: ஆயுர்வேத நூல் அருளிய மஹான்!

10. கொரானா காலத்தில் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை உண்மைகள் சில!

11. பதார்த்த குண சிந்தாமணி!

12. மூளைக்கு வல்லாரை, முடி வளர நீலிநெல்லி : அருமையான மூலிகைப் பாட்டு!

13. ஆயுர்வேதம் கூறும் ஐந்து உணவு தோஷங்கள்!

14. சைவ உணவு சாப்பிடுவது தப்பா?

15. நீடித்த ஆயுளைத் தரும் கார்போஹைட்ரேட்!

16. பேரீச்சம்பழங்கள் தரும் அற்புத ஆரோக்கியம்!

17. நோய்களைத் தீர்க்கும் நவரத்தினங்கள் : பதார்த்த குண சிந்தாமணி

18. ஆரோக்கியமான மனம்! ஆரோக்கியமான உடல்!! – 1

19. ஆரோக்கியமான மனம்!

ஆரோக்கியமான உடல்!! – 2

20. அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 1

21. அற்புத சிகிச்சை முறை அகு பிரஷர்! – 2

22. 100 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ… அறிவியல் உரசிப் பார்த்து அதிசயிக்கும் யோகா!

23. நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 1

24. நல்ல ஜீரணத்திற்கான அருமையான அறிவுரைகள்! – 2

25. உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 1

26. உங்களின் ஜீரண மண்டல அமைப்பு உங்களை நோயுறச் செய்கிறதா, பருமனாக ஆக்குகிறதா? – 2

27. உங்களுக்கு குளூட்டன் ஒவ்வாமையா? இதோ நிவாரணம்!

28. மலர் மருத்துவம் பற்றிய சில உண்மைகள்!

29. மலர் மருத்துவம்!

30. நல்ல வாழ்க்கையின் அடிப்படை இரகசியம்!

31. காலையில் பனித்துளி படர்ந்த புல்வெளியில் வெறும் காலுடன் நடப்பதால் ஏற்படும் நற்பலன்கள்!

அணிந்துரை

திரு. ச. நாகராஜன் எழுதிய ‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த நூலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற மூன்று பாகங்களைத் தொடர்ந்து இது நான்காவது பாகமாக அமைகிறது.

நமது வழக்கப் பிரகாரம் பெரியோர்களை நாம் வணங்கும் போது எல்லோரும் எப்படி ஆசீர்வாதம் பண்ணுவார்கள்? தீர்க்காயுஷ்யமான் பவ –

நீண்ட ஆயுளுடன் வாழ்வாயாக;

தீர்க்க சுமங்கலி பவ – நீங்கள் கணவனுடன் நீடித்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று இப்படி ஆசீர்வதிப்பர்.

ஆனால் தற்காலத்தில், இந்த வாழ்த்துக்கள் எல்லாம் பயன் பெறாது; நடைமுறையில் ஒத்து வராது. ‘ஆரோக்யவான் பவ’ – ‘ஆரோக்கியத்துடன் வாழ்வாயாக’ என்ற ஆசீர்வாதமே தற்சமயம் நமக்குத் தேவைப்படுகிறது.

நூற்றுக்கு 95 பேர்கள் இன்று மாத்திரை மூலமாகவே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முக்கியமான காரணம் நமது உடலும் மனமும் தான். இதனைப் பல்வேறு விதமான ஆங்கில ஆசிரியர்களின் கட்டுரைகள் மூலமாக விளக்குகிறார் ஆசிரியர்.

உடல் ஆரோக்கியம் என்றால் என்ன, என்னென்ன காரணங்களினால் உடல் ஆரோக்கியம் கெடுகிறது என்பதை விளக்கி முடித்த பிறகு உடலையும் மனதையும் ஆரோக்கியமாக நாம் வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார்.

இதையும் மீறி நமக்கு வியாதிகள் வந்து விட்டால் நாம் என்ன செய்வது?

முதலில் ஆயுர்வேதத்தை விளக்கிய பின் அந்த ஆயுர்வேத முறைப்படி வியாதிகளை எப்படி எல்லாம் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது.

எனக்கு ஆயுர்வேதம் பிடிக்காது; சித்த வைத்தியம் தான் பிடிக்கும் என்றால் அப்படி சித்த வைத்தியம் மூலமாக நோய்களை எப்படி தீர்த்துக் கொள்வது என்பதை ‘பதார்த்த குண சிந்தாமணி’ என்ற புத்தகத்தை முதலில் விளக்கி விட்டு, எந்த வியாதி வந்தாலும் சரி, அதன் மூலமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்று சித்த வைத்தியத்தின் படி சொல்கிறார்.

ஆயுர்வேதமும் வேண்டாம்; சித்த வைத்தியமும் வேண்டாம்; மருந்து முறைகளே வேண்டாம் என்றாலும் வர்ம முறையின் படி – அகுபிரஷர் மூலமாகவும் வியாதியைத் தீர்த்துக் கொள்ளலாம் என மிக அருமையாக விளக்குகிறார்.

இதைவிட அருமையாக வேறு யாராலும் சொல்ல முடியாது.

இது போக, ஆங்கில (BACH) பாச் மலர் மருந்து என்று ஒன்று இருக்கிறது. அந்த மலர் மருந்துகளை உபயோகித்து நமது வியாதிகளை மட்டுமல்ல; மனம் மட்டுமல்ல; ஆரோக்கியம் மட்டுமல்ல; நமது வாழ்க்கை முறை எப்படி சிறப்பாகச் செயல் பட அந்த மருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

அதில் மிக முக்கியமான ஒன்று ரெஸ்க்யூ ரெமடி (RESCUE REMEDY) அது ஒன்று இருந்தாலே போதும்; அது எப்படிப்பட்ட வியாதியையும் தீர்க்கும் கை கண்ட மருந்து. இதில் ஆபரேஷன் இல்லை; பின் விளைவு இல்லை. அப்படிப்பட்ட மலர் மருந்தை வைத்துக் கொண்டால் போதும்; நாம் சுகமாக வாழலாம் என்பதும் கூறப்பட்டிருக்கிறது.

ஆரோக்கியத்திற்கான இந்த வேத புத்தகம் நம் கையில் இருந்தால் நமக்கு எந்த விதமான வியாதியும் வராது; வந்தாலும் அதை உரிய முறையில் போக்கிக் கொள்ள வழிகள் உண்டு; இதை நாம் கடைப்பிடிப்பதோடு நமது நண்பர்களிடமும் கூறினால் இந்த சமுதாயமே சிறப்பாக வாழ முடியும் என்ற குறிக்கோளுடன் இதை ஆசிரியர் எழுதி இருக்கிறார்

ஆகவே, ‘நோயில்லா வாழ்வு பெற சில இரகசியங்கள்’ என்ற இந்த ஆரோக்கிய வழிகாட்டி ஒன்று இருந்தாலே போதும், சிறப்பான முறையில் வாழலாம் என்பது உறுதி!

ஆகவே ஒவ்வொருவரும் இந்தப் புத்தகத்தைத் தம்மிடம் வைத்திருப்பதோடு, தங்கள் நண்பர்களிடமும் சிபாரிசு செய்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் என்ற எனது நல்லெண்ணத்தை நானும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

வாழ்க வளமுடன்!

சென்னை                             ச. சீனிவாசன்


7-1-2022

*

புத்தகத்தில் நான் தந்த என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

நோயற்ற வாழ்க்கைக்கான சில அடிப்படை உண்மைகளை பல ஆண்டுகளாக கட்டுரைகளாக பல பத்திரிகைகளிலும் இணையதள இதழ்களிலும் எழுதி வருகிறேன். ‘அனைவருக்கும் ஆரோக்கியம்’ என்ற முதல் மூன்று பாகங்களைத் தொடர்ந்து இந்த நூல் வெளியாகிறது.

இந்தக் கட்டுரைகளை வெளியிட்டு என்னை கௌரவித்த தினத்தந்தி அதிபர் திரு S.பாலசுப்ரமணியன் ஆதித்தன் அவர்களுக்கும், http://www.tamilandvedas. Com திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களுக்கும், ஹெல்த்கேர் ஆசிரியர் திரு R.C. ராஜா அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலுக்கு நல்லதொரு அணிந்துரையை நல்கி என்னைக் கௌரவித்திருக்கும் திரு ச. சீனிவாசன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.

தொழில் துறையில் அவர் ஒரு டெக்ஸ்டைல் எஞ்ஜினியர்; தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரும் நூற்பாலையில் மனித வள மேம்பாட்டிற்கான பயிற்சியாளராகத் திகழ்ந்து ஓய்வு பெற்றார்.

கடந்த முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் அவர் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேலாக, உயர் நிறுவனங்களின் மேலாளர்களிலிருந்து சாமானிய தொழிலாளர் வரை, அவர்கள் மேம்படுவதற்கான பயிற்சி தந்து அவர்களை உயர்த்திக் காட்டிய வழி காட்டி. பல்லாயிரக் கணக்கில் ஜோக்குகளைத் தொகுத்து வைத்திருப்பவர். நூற்றுக் கணக்கில் நகைச்சுவை நூல்களைச் சேகரித்திருப்பதோடு அவற்றை அவ்வப்பொழுது உரிய முறையில் பயன்படுத்தும் நகைச்சுவை நிபுணர். சித்த வைத்தியம் உள்ளிட்ட பல கலைகளைக் கற்ற பன்முகப் பரிமாணம் கொண்ட வித்தகர். பண்பாளர். சித்த மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர். மூலிகைகளையும் மருந்து வகைகளையும் ஆராய்ந்தவர்.

அத்துடன் மட்டுமின்றி ஒருவரை நேரில் பார்த்தவுடன் அவருடைய ஜாதகம் உள்ளிட்ட எதையும் கேட்காமலேயே face reading என்னும் முகம் பார்த்து அனைத்தும் அறியும் சாஸ்திரப் படி, அவருடைய குறை என்ன, பிரச்சினை என்ன என்பதை உள்ளுணர்வாற்றலால் கண்டு அதைச் சொல்லி அதை தீர்க்கும் வழிகளையும் பரிந்துரைப்பவர்.

அச்சன்கோவில் ஸ்வாமிஜி கிருஷ்ணாஜியின் அனுக்ரஹத்தைப் பெற்றதோடு அவர் உபதேசத்தின் படி அறுபது ஆண்டுகளாக தினமும் காலையில் தவறாது கணபதி ஹோமம் செய்து மஹா கணபதியின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவர். இதில் மிகச் சிறப்பான அம்சம் என்னவெனில் இதற்காக ஒரு பைசா கூட யாரிடமும் எப்போதும் பெறாதவர். எப்போதும் அவரது இல்லத்தில் அவரை அணுகி அவரிடம் அவரது அறிவுரையைக் கேட்க திரளான மக்கள் குழுமி இருப்பதில் வியப்பே இல்லை; டெலிபோன் மணி இடைவிடாது ஒலிப்பதிலும் ஆச்சரியம் இல்லை.

அத்துடன் துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அவர் விஜயம் செய்யும் போதெல்லாம் அவருக்கு ஆர்வமுடனான வரவேற்பு இடம் பெறுவதிலும் வியப்பில்லை.

தனது அனுபவத்தின் அடிப்படையிலான அணிந்துரையை இந்த நூலுக்கு அவர் அளித்திருக்கிறார்; அவருக்கு மீண்டும் எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்டுரைகளைப் படித்து என்னை எழுத ஊக்குவித்த அனைத்து வாசகர்களுக்கும் பெரியோர்களுக்கும் எனது நன்றி. அனைவரும் ஆரோக்கியத்துடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி.

சென்னை                             ச.நாகராஜன்

  7-1-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852