Sadhu Vaswani Quotations – OCTOBER 2022 CALENDAR (Post No.11,308)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,308

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In September 2022 ‘Good Thoughts’ calendar I gave 30 quotations of Sri Vaswani; More Quotations from Sadhu Vaswani are given below.

Festival Days- October 2- Gandhi Jayanthi, 3-Durgashtami, 4- Sarasvati Puja/ Aayudha Puja, 5-Vijaya Dasami, Dasarah, 24- Deepavali/ Diwali, Laksmi Kubera Puja, 25- Solar Eclipse/ Surya Grahana, 25/26 Skanda Shashti Vrata begins, 30- Soora Samharam/ Skanda Shasti

Newmoon day/ Amavasyai- 24/25;Fullmoon day- 9

Ekadasi Fasting Days- 6, 21

Auspicious days- 28, 30

OCTOBER 1 Saturday

“The universe works like an echo: Whatever thoughts you think, will rebound on you. Therefore, be careful of the thoughts you think.”

OCTOBER 2 Sunday

“The secret of relaxation is in these three words: ‘Let it go”!”

OCTOBER 3 Monday

Time belongs to God.
He has loaned it to us for use.
Let us use every minute, – every moment, – in the best way we can.

OCTOBER 4 Tuesday

If there is a language which the deaf can hear and the blind can see, it is the language of love!

OCTOBER 5 Wednesday

“Love can keep you healthy and happy, and help you face the problems of daily life in the right spirit.”

OCTOBER 6 Thursday

“With a healthy sense of humour you can confront the most difficult of situations and come out unscathed.”

OCTOBER 7 Friday

Peace has three dimensions. Peace within ourselves, peace among nations and peace with nature.

OCTOBER 8 Saturday

Refuse to be disturbed by anything. Refuse to be resentful or unhappy. And you will always feel on top of the world.

OCTOBER 9 Sunday

Problems and challenges are not a dead end; they are only a bend in the road.

OCTOBER 10 Monday

Problems are not stumbling blocks; they are stepping stones to a better, richer, more radiant life.

OCTOBER 11 Tuesday

Life is too short to be spent in fault-finding, holding grudges, or keeping memory of wrongs done to us. Forgive even before forgiveness is asked. Forgive and forget.

OCTOBER 12 Wednesday

Time belongs to God.
He has loaned it to us for use.
Let us use every minute, – every moment, – in the best way we can.

OCTOBER 13 Thursday

The test of character is –

  • Do you have the courage to stand up for truth even though the heavens fall?
  • Can you smile in trouble?
  • Can you say “No” when evil tempts?

OCTOBER 14 Friday

It is not outer conditions that need to be changed. The change has to be brought within me to be able to see things as they are.

OCTOBER 15 Saturday

Be not afraid of life, but believe that every experience life brings to you is for your good. Move on in faith. Believe and achieve.

OCTOBER 16 Sunday

You may write wonderful commentaries on the Bhagavad Gita or any other world scriptures, but if you do not reflect the wisdom of these scriptures in word and action, how are you any better than a desktop printer?

OCTOBER 17 Monday

The stars can only indicate. They cannot compel. Man is the maker of his own destiny.

OCTOBER 18 Tuesday

We must build bridges between hearts, for building bridges of brotherhood is the price of a man’s survival.

OCTOBER 19 Wednesday

Selfless service equals meditation.

OCTOBER 20 Thursday

“We would miss some of the best lessons of life, if suffering did not come to us. Suffering is a great teacher.”

OCTOBER 21 Friday

Both rain and sunshine are needed to make a rainbow. Both joy and sorrow are needed to make a life truly beautiful and colorful.

OCTOBER 22 Saturday

The food of the soul is silence. If we don’t practice silence, we are starving ourselves.

OCTOBER 23 Sunday

Teach me O Lord! To observe all the rules of the game of life, never to lose my sense of humor, and always to hold my tongue when it is so difficult to hold it!

OCTOBER 24 Monday

Always look at the bright side of things and you will be happy and will make others happy.

OCTOBER 25 Tuesday

It is good to know many things, but it is always better to make good use of whatever little we know.

OCTOBER 26 Wednesday

What we give to this world comes back to us. Therefore, let us give love, kindness, help, sympathy and service and they will return to us, and we will stand strong as a towering lighthouse amidst the stormy waves of this world.

OCTOBER 27 Thursday

Every time you are irritated, you are burning up valuable emotional energy, which can be used constructively.

OCTOBER 28 Friday

Patience brings rhythm and harmony into our chaotic lives.

OCTOBER 29 Saturday

With faith we can achieve the impossible. Without faith we cannot cross the threshold.

OCTOBER 30 Sunday

The present system trains only the head. It produces sharp brains, not illuminated hearts. Education can only be complete when it trains the head, the hands (to serve) and the heart. It is the emotional quotient that leads to the sacrifice quotient, which in turn binds humanity.

OCTOBER 31 Monday

“The Guru is one who dwells in the Light and the Light dwells in him.”

–subham—

Tags–Sadhu Vaswani , Quotations , OCTOBER 2022 , CALENDAR,  Diwali

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்- Part 3 (Post No.11,307)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,307

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இது மூன்றாம் பகுதி

மதுரை வைகை நதி ஒரு காலத்தில் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியது. அ தன் அழகை சங்க காலத்துக்குப் பின்ன எழுந்த சிலப்பதிகார காவியத்திலும் காணலாம். சங்க கால நூல்களில் எட்டுத் தொகையில் ஒன்று கலித்தொகை என்னும் நூல்;. வைகை நதியின் கரைகளில் உள்ள ஐந்து வினோத உருவம் கொண்ட மரங்கள்  இருந்தன.அவைகளின் பூக்களும் வெவ்வேறு நிறத்தில் பூத்துக் குலுங்கின இதைக்க கண்டவுடன் கலித்தொகை புலவருக்கு புராணம்தான் நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார் :-

5 மரம் 5 கடவுள்

கலித்தொகை 26, பாலை பாடிய பெருங்கடுங்கோ

ஒரு குழை ஒருவன் போல், இணர் சேர்ந்த மராஅமும்,

பருதி அம் செல்வன் போல், நனை ஊழ்த்த செருந்தியும்,

மீன் ஏற்றுக் கொடியோன் போல், மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும்,

ஏனோன் போல், நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும்,

ஆன் ஏற்றுக் கொடியோன் போல், எதிரிய இலவமும், ஆங்குத்

தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப்,

போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற,

நோதக வந்தன்றால், இளவேனில் மேதக;

(FROM PROJECT MADURAI WEBSITE)

பொருள்

ஒப்பற்ற குழைகளை அணிந்த பலதேவனைப் போல வெண்ணிற பூங்கொத்துக்களைக்  கொண்ட மராமரம் , பருதியஞ் செல்வனான கதிரவனைப் போல , விரிந்த இதழ்களைக் கொண்ட செருந்தி, சுறாமீனைக் கொடியாக உடைய மன்மதனைப்  போலக்  கரிய வண்டுகள் ஆர்க்கும் காஞ்சி, காமனின் தம்பியான சாமனைப்போல  நிறம் மாறுபட்டு, பசலை பாய்ந்து, தோன்றும் ஞாலல் , இடபக் கொடியை உடைய சிவனைப் போல சிவந்து தோன்றும் இலவம் — இவ்வாறு கரை அழகுடன் விளங்கியது .

என்ன ஆச்சரியம் பாருங்கள் ; மரங்களைக் கண்டாலும் கடவுள் நினைப்பேதான் ! அதுவும் காதல் கவிதை நிறைந்த நூலில். இந்தக்  கடவுளரும், அவர்களுடைய  கொடிகளும் தமிழர்களுக்குப் புதிதும் அல்ல.. ஏற்கனவே நக்கீரர் பாடிய புற நானூற்றுப் (56) பாடலிலும் இவைகளைக் காண்கிறோம். தமிழர்களுக்குத் தெரியாத வாகனங்களோ, புராணக் கதைகளோ கிடையாது!

Xxxx

திரிபுராந்தகன் (சிவன்)

கலித்தொகை நூலில் ஒரு விசித்திரமான ஒற்றுமையையும் காணலாம். உலகைத் தோற்றுவித்தவர் பிரம்மா.  பாலைக் கலியைத் துவங்கும்  பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அவர் பெயரைச் சொல்லி தொடங்குகிறார் அதுதான் நூலின் முதல் பாடல் !

முப்புரங்களை சிவன் எரித்த காட்சியை பல சங்கப்  புலவர்கள் உவமையாகப் பயன்படுத்துவர். பாலை பாடிய பெருங்கடுங்கோவும் அதை வருணிக்கிறார். அருணகிரி நாதரின் முதல் திருப்புகழிலேயே  நாம் ‘முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம் அச்சது பொடி செய்த அதி தீரா’- என்பதைக் காண்கிறோம்

கலித்தொகை 2

தொடங்கல் கண் தோன்றிய முதியவன் முதலாக,           

 அடங்காதார் மிடல் சாய, அமரர் வந்து இரத்தலின்,          

 மடங்கல் போல் சினைஇ, மாயம் செய் அவுணரைக்        

 கடந்து அடு முன்பொடு, முக்கண்ணான் மூவெயிலும்      

 உடன்றக்கால், முகம் போல ஒண் கதிர் தெறுதலின்          

 சீறு அரும் கணிச்சியோன் சினவலின், அவ்வெயில்         

 ஏறு பெற்று உதிர்வன போல், வரை பிளந்து, இயங்குநர்  

 ஆறு கெட விலங்கிய அழல் அவிர் அரிடை –        

 மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய,        

 இறப்பத் துணிந்தனிர், 2-9

பொருள்:

உலகம் தோன்றிய காலத்தே தோன்றிய முதியவனான நான்முகன் முதலாக, அடங்காதவர்களின் (அரக்கர்) வலிமை

தேவர் பலரும் வந்து முறையிட,சிங்கம் போல் சினத்துடன் சென்று ,மாய வேலை செய்யும் அரக்கர்களை வென்று எரிக்கும் வலிமையொடு,முக்கண்ணனான சிவன் முப்புரங்களையும் எரிக்க சினந்து நோக்கிய போது தோன்றிய அவன் முகம்போல,ஒளிரும் கதிரவன் (தீப்பிழம்பாக) சுடுகின்றான்.

சீறுகின்ற கணிச்சி படையை உடைய அந்த சிவன் சினந்து நோக்கியதால் அந்த மதில் சுவர்கள் படைகளால் தாக்கு பெற்று உதிர்வனபோல் (அக் கதிரவனின் வெம்மையால்) மலை வெடித்துச் சிதறி வழியை அடைத்து கிடக்கும். அரிய அவ்வழியாக -நீயும் கடந்து செல்ல நினைக்கிறாய்.

XXX

மஹாபாரதக் கதை

முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து,

மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக்

குறங்கு அறுத்திடுவான் போல்கூர் நுதி மடுத்துஅதன்

நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை,

மல்லரை மறம் சாய்த்த மால் போல், தன் கிளை நாப்பண்,

கல் உயர் நனம் சாரல்கலந்து இயலும் நாட! கேள்;

பொருள்

அறம்  மறந்து , அதர்மத்தையே கொண்டவனாயிருந்தான் நூற்றுவர்  தலைவனான துரியோதனன்  அவனது தொடையை முறித்து பீம சேனன் அவனைக் கொன்றான். அது போல முறம் போன்ற காதுகளைக்கொண்ட யானை, தன் தந்தங்களால் புலியைக் குத்திக் கொன்றது . அதன்பிறகு அந்த யானை, மல்லரை வீழ்த்திய திருமாலைப்போல கம்பீரமாய் யானைக் கூட்டத்தில் உலவியது

திரு முருகாற்றுப்படை, பரிபாடல், கலித்தொகை ஆகிய மூன்று சங்கத்தமிழ் நூல்களிலும்  நூற்றுக் கணக்கான புராண இதிஹாஸக் கதைகள் உள்ளன.

தொடரும்tags-  மஹாபாரதக் கதை, கலித்தொகை , 5 மரம் 5 கடவுள்,  பாலை பாடிய பெருங்கடுங்கோ

விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்! -Part 2 (Post No.11,306) 

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,306

Date uploaded in London – 29 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

 Part Two

 மின்சாரப் பம்ப் செட் புழக்கத்தில் வருவதற்கு முன் கிராமங்களில் வயலுக்கு நீர் பாய்ச்ச ‘ஏத்தம்’ உபயோகப்பட்டது. இளங்காலையில் விவசாயி “மூங்கில் இலை மேலே, தூங்கும் பனிநீரே! தூங்கு பனிநீரை வாங்கு கதிரோனே!” என உல்லாசமாகப் பாடியவாறே ஏற்றம் இறைப்பர். அதை விளக்கும் ‘விடி’ ஒன்றை ஆசிரியர் தரும் அழகே, அழகு!

சீருண்ட மங்கையர்க்கு வளையல் விற்ற

   செம்மலுறை திருமதுரா புரிநன்னாட்டில்

நீரேறத் தலையாகும் வாலுங்கூழை

   நிற்பதுகீ ழிருகாலு மொருகான்மேலே

சீருடனே ஒருகாலில் நடக்கும்போது

திடமாக மெலிரண்டாட் சுமைசுமக்கும்

வாரணியுங் கொம்புமுள தோடிப்பாயும்

வண்மையுள விக்கதையை வழுத்துவீரே!

{ இறைவன் சொக்கநாதர் வளையல் வியாபாரியாகத் தோன்றி, அழகிய வணிகர் மகளிருக்கு வளையல்கள் விற்று, அணிவித்து, அவர்களின் சாபத்தைப் போக்கிய கூடல்மாநகரில் நடப்பதைப் பாருங்கள்! நீர் நிரப்பத் தலையாகும், குட்டை வாலு முண்டு,கீழே நிற்பதோ இருகால்,ஒருகால் மேலே, ஒழுங்காக அந்த ஒரு காலில் நடக்கும் போது, உறுதியுடன் எளிதாக இரண்டு ஆள் பாரம் சுமக்கும், தோல்பையி லிருக்கும் நீரும் செடிகளின் வேர் நோக்கிப் பாயும்!}

 அடுத்து நாம் பார்க்கப் போவது ஒரு சாதாரண சின்னப் ‘பொடி’ விஷயமே! ஆம், ‘ஸ்நஃப் பவுடர்’, நுகட்காரம், நாசிப்பொடி, மூக்குப் பொடி என்றழைக்கப்படும் விநோதப் பழக்க வழக்கத்தைப் பற்றிதான். இது பரவலாக மேட்டுக்குடி மக்களி டமும், புலவர்கள், கலஞர்களிடமும் அவர்களின் அந்தஸ்துக்கு ஒரு முக்கிய அடையாளமாக 70, 80-ம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. டி.ஏ.எஸ்.ரத்தினம் பட்டணம் பொடியை மூக்கில் ஏற்றிக் கொள்ளாவிட்டால் மற்ற காரியம் எதுவும் சுமுகமாக நடந்தேறாது என்ற நிலை! அருகில் இருப்பவருக்குச் சங்கடம் கலந்த அருவருப்பு, துணி துவைப்போர்க்கு அவஸ்தை என்பதை இப்பிரியர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். கடைக்காரர் பிரத்தியேகமான பொடி ஜாடியிலிருந்து சன்ன மானத் துகளை, மிகவும் மெலிதான, நீண்ட, தலைப் பகுதியில் சின்னக் குழியுடனி ருக்கும் கரண்டியால் தட்டித்தட்டி (விழும் ஆனால் அதிகம் விழாத மாதிரியும் இருக் கும்!) மட்டைநார் இலையில் போடும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்!

“பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன், ஐயகோ!” என்கிறார் வள்ள லார் (திரு அருட்பா,அவா அறுத்தல், பாடல் 12). “சோமசுந்தரன் கடையில் செய்த பொடியினைப் போடா மூக்குப் புண்ணியம் செய்யா மூக்கு” என்று தமிழ் தாத்தா உ.வே.சா. அவர்கள் ஒரு கவிதையே பாடியுள்ளார். சாதாரணமானவர்களுக்குத் தும் மலைத் தரும்பொடி இங்கு புலவர் மூலம் புதிர் வெண்பாவைக் கொடுத்துள்ளதை ரசிக்கலாம்….

கிள்ளிக்கை பார்ப்பதுவுந் தேய்ப்பதுவு முண்டும்

கெம்பீர மாய்வறுத்து இடிப்பதுவுமுண்டும்

அள்ளிநறு நெய்சுண்ணஞ் சேர்ந்தாடலுண்டும்

     அதற்கான ஜாடியதி லடைப்பதுண்டும்

கள்ளருந்துங் காளைடைப்போற் றிரிவதுண்டும்

     கருதிமரி யாதைகெட்டு நடப்பதுண்டும்

புள்ளிமயிற் சாயலென்றும் நடையினாளே

     பொற்கொடியே இக்கதையைப் புகலுவாயே!

{ ஒரு சிட்டிகைக் கையிலெடுத்துப் பார்த்துத் தேய்ப்பது உண்டாம், நன்றாக வறுத்து சன்னமாய் இடிப்பதுமுண்டாம், நறுமணமிக்க நெய், சுண்ணாம்பு சேர்ப்பது உண்டு, அதற்கான ஜாடியில் வைப்பதுண்டாம், கள் குடித்த காளையைப் போல் திரிந்துப் பிறரிடம் மரியாதைக் கெட்டு நடப்பது உண்டாம். மயில் போல் ஒய்யாரநடை பயி லும் பொற்கொடியே இதற்குப் பதில் என்ன?}

இதோ பொம்மலாட்ட நாட்டுப்புறக் கலைக்கு வீரவணக்கம் செலுத்துகிறார் புலவர்….

குலுக்குண்டு வலுக்கொண்டு குதிப்பதுண்டு

கொத்துமணி முத்துவடங் கொள்வதுண்டு

வலிப்புண்டு, சிரிப்புண்டு வாட்டமுண்டு

மருங்கிலுடை யணியொட்டி யாணமுண்டு

கலுக்குண்டு, பிலுக்குண்டு அலைப்புமுண்டு

     கணிக்கவல்ல வேசியுங்கூத் தாடியல்ல

சிலைக்குநிகர்வடிவழகி தேவமாதே

     தெளிவாயிக் கதைப்பயனைச் செப்புவாயே!

{ குலுக்கி-மினுக்கி, பலம் கொண்டுக் குதிக்கும், பல சாரம் கொண்ட மணிமாலை, முத்துச் சங்கிலி அணிந்திருக்கும், அழகு காட்டும்,சிரிக்கும், வாடும்,இடையில் ஒட்டியாணம் தரித்திருக்கும், பகட்டு-ஆடம்பரம் காட்டி வருந்தவும் செய்யும், கணிகை, வேசி, கூத்தாடியுமல்ல, அழகியத் தெய்வப் பெண்ணே, விடை பகருவாய்!}

படித்து, ரசிக்க இன்னும் பல புதிர் வெண்பாக்கள் உண்டு. கடைசியாக ஒரு விடு(டி) கதையுடன் முடிவு செய்வோம்…காஞ்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஒருகள ஆய்வு ஆராய்ச்சியில் கிராம மக்கள் சொன்ன ஒரு விடு(டி)கதை……

ஊருக்கு ஒதுக்குப்புரமாக மாடு மேய்த்துக் கொண்டிருந்தப் பையன் அவ்வழியே சென்ற ஒரு பைராகியைப் பார்த்துக் கேட்கிறான்:

“அய்யா, புல்லாங்குழலாம் ,புலித்தோலாம்! பூரண புஸ்தகமாம்,

போறதோர் பண்டாரமே, நாளை இதே வழி வருவியா?” (குழலூதி,புலித்தோல் அணிந்து ஊர் சுற்றும் எல்லாம் அறிந்த ஞானியே, நாளையும் இவ்வூர்ப் பக்கம் வருவீரா?)

அதுக்கு அந்தப் பைராகி அளிக்கும் சொல்லாடல் பதிலைப் பாருங்கள்!

“அப்பனே! வெள்ளி வேர் கடந்து, வேங்கணம் பொய்மாரி, கள்ளிப் பால் வத்தி

,கடலும் திசைமாறி, பம்பையாடு குட்டியிட்டு, வறட்டாடு பால் கறந்து,

செத்தாடு குட்டியிட்டு,, செனையாடு பால் கறந்து, ஒலக்கைத் துளுத்து,

ஒரலேறிப் பூப்பூத்து,அம்மி பழஞ்சாறாம், நார்த்தங்கா(ய்) ஊறுகாயாம்,

எருது பசுவாகி, பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்! என்றாராம்.

 {பொருள்–நான் நிச்சயம் இவ்வழி வருவேன். அதற்குரியச் சாத்தியக் கூறுகளைச் சொல்கிறேன், கேள் அப்பனே!  வெள்ளியாகிய நிலா சாய்ந்து,இருள் பொய்யாக மாறி, வெளுத்தவுடன் வருவேன்,

கள்ளிப்பால் வத்தி=  வெட்டுண்டக் கள்ளிச் செடியிலிருந்து வடியும் பால் வற்றிக் காயும் போது வருவேன்,

கடலும் திசை மாறி= கட்டுடலாய் இருந்தாலும் உட்கார்ந்து எழும்போது உண்டாகும் தடுமாற்றம் நிற்கையில் வருவேன்,

பம்பையாடு குட்டியிட்டு….செனையாடு பால் கறந்து= முல்லை நில ஆடு வயதுக்கு வந்து, குட்டிபோட்டு, பால் வற்றிவிட்ட ஆடு பால் சுரக்க,செனை ஆடு குட்டிப் போட் டுப் பால் கொடுக்கும் சமயம் வருவேன்,

ஒலக்கை துளுத்து= இப்போது நட்ட தென்னம்பிள்ளை வளர்ந்து,

ஒரலேறிப் பூப்பூத்து= உலக்கை மாதிரி உயர்ந்து நின்று, பூப்பூத்து காய்க்கும் போது,

அம்மி பழஞ்சாறாம்….ஊறுகாயாம்=உச்சி வெயிலில் உடல் காக்க, அம்மியில் அறைத் தக் கூழும், பழஞ்சாறும், தொட்டுக்க நார்த்தங்காய் ஊறுகாயும் கொண்டு வாரேன்,

எருது பசுவாகி= காளை, பசுவைச் சினையாக்கி,

பசுவும் ஈனும் காலத்தில் வருவேன்= அந்தப் பசுவும் கன்று போடும் போது நிச்சயம் நான் வருவேன் எனச் சாதுரியமாகவும், நக்கலாகவும் பதிலளித்துச் சென்றாராம்!}

 அக்காலத்தில் சாதாரணமானவர்களிடம் கூட தமிழ் எப்படியெல்லாம் செழித்து வளர்ந்துள்ளது என்பதை நினைக்கும் போது நமக்குப் பெருமை பிடிபடவில்லையே!

       வாழ்க தமிழ், வளர்க தமிழ் மொழி!

  Tags- மூக்குப் பொடி, பைராகி, சொக்கநாதர் ,வளையல் வியாபாரி,  ‘ஏத்தம்’

கடவுளைக் காட்டு! – 2 (Post No.11,305)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,305

Date uploaded in London – –    29 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு! – 2

ச.நாகராஜன் 

1

கடவுளைக் காட்டு

‘கடவுள் இருக்கிறார் என்றால் எனக்குக் காட்டு’ என்ற நாத்திகவாதியின் கூற்றிற்கும் கூட காலம் காலமாகப் பலரும் பதில் அளித்து வந்துள்ளனர்.

‘பார்க்க வேண்டிய ஒருவனுக்குத் தகுதி இருந்தால் அவன் பார்க்க முடியும்’ என்பது தான் எளிய பதில்!

கால்குலஸ் போட வேண்டுமெனில் அதற்கான அடிப்படை கணித அறிவு வேண்டுமல்லவா?

அறுவை சிகிச்சை செய்ய ஆசைப்படும் ஒருவனுக்கு சர்ஜனாக ஆக வேண்டுமெனில் அதற்கான படிப்பையும் அனுபவத்தையும் பெற்றால் தானே அது முடியும்?

தேனின் சுவை என்ன என்று கேட்பவனுக்கு விளக்கம் எத்தனை பக்கங்களில் தந்தாலும் அவனால் உணர முடியுமா?

சுவைத்துப் பார்த்தால் தானே தேனின் சுவையை அவன் அறிய முடியும்.

‘பக்குவிகள் அறிய முடியும்’ என்று ஒரு சிறிய பதிலை மெய்ஞானிகள் ‘கடவுளைக் காட்டு’ என்பவனுக்குப் பதிலாக அளிக்கின்றனர்.

2

கடவுளைக் கண்டதுண்டா?

ஸ்வாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரமஹம்ஸரை, “நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?” என்று கேட்டார்.

“ஆம், பார்த்திருக்கிறேன்” என்று பதில் சொன்னார் பரமஹம்ஸர்.

“அப்படியானால் அவரை எனக்குக் காட்டுங்கள்” என்றார் விவேகானந்தர்.

அவரை அருகிலிருந்த கங்கை ஆற்றுக்கு இழுத்துச் சென்ற பரமஹம்ஸர் கங்கை நீரில் ஆழ்த்தினார்.

மூச்சு முட்டியது விவேகானந்தருக்கு.

ஒரு வழியாக விவேகானந்தரின் தலையை வெளியில் எடுத்தார் பரமஹம்ஸர்.

திகைத்துப் போன விவேகானந்தர் பரமஹம்ஸரைப் பார்த்தார் – ‘இப்படிச் செய்யலாமா?’ என்று.

“நீரில் மூழ்கி இருந்த போது என்ன நினைத்தாய்?” கேள்வியைக் கேட்டார் பரமஹம்ஸர்.

“உயிர் பற்றிய நினைப்பு ஒன்று தான் இருந்தது” என்றார் விவேகானந்தர்.

இது போல ஏகாக்ர சிந்தனையுடன் இறைவனை நினை; அவர் உனக்குக் காட்சி அளிப்பார் என்றார் பரமஹம்ஸர்.

விவேகானந்தருக்குப் புரிந்தது.

அவர் பரமஹம்ஸர் காட்டிய வழியில் சென்றார்; கடவுளைக் கண்டார்.

3

இறைவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான்?

இறைவன் இருக்கிறான் என்றால் அவன் எவ்வளவு தூரத்தில் இருக்கிறான் என்று மன்னன் ஒருவன் தன் குருவைக் கேட்டான்.

உடனே அவர், “அவன் கூப்பிடு தூரத்தில் தான் இருக்கிறான்!” என்று பதில் கூறினார்.

ஒருமுனைப்போடு ‘ஆதிமூலமே’ என்று கூக்குரலால் கூப்பிட்ட கஜேந்திரனுக்கு அந்தக் கணத்திலேயே காட்சி அளித்து அவனைக் காப்பாற்றினான் இறைவன்.

“இதயகமல வாஸா! ஹிருஷிகேஸா” என்று அலறிய திரௌபதிக்கு ஆடை அளித்து அந்தக் கணமே காப்பாற்றினான் கண்ணன்.

ஆக அவன் கூப்பிடு தூரத்தில் தானே இருக்கிறான். இதயத்தில் உறைபவனே என்றாள் திரௌபதி. கூப்பிடு தூரத்தில் இருந்த அவன் உடனே வந்து அவளைக் காத்தான்!

மன்னன் புரிந்து கொண்டான்; எப்படி இறைவனைக் கூப்பிட வேண்டும் என்றும் அறிந்து கொண்டான்!

4

கடவுளை எப்படிக் காண்பதுஇப்போது என்ன செய்து கொண்டிருக்கிறான்?!

மன்னன் ஒருவன் தன் மந்திரியிடம், ‘கடவுளை எப்படிக் காண்பது, அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான். எனது இந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான விடையை நாளை அரசவையில் அனைவருக்கும் முன்னாலும் சொல்ல வேண்டும். இல்லையேல் தண்டனை உண்டு’ என்றான்.

கவலைப்பட்ட மந்திரி வீட்டிற்கு வந்து சோகமாக இருந்தான்.

அவனது கவலையைப் பார்த்த  மந்திரியின் சிறுவயது மகன் விஷயம் என்ன என்று கேட்டு மன்னனின் கேள்விகளை அறிந்து கொண்டான்.

‘இதற்கு நானே பதில் சொல்வேனே’ என்ற அவனை மந்திரி ஆச்சரியத்துடன் பார்த்தார்.

மறுநாள் அரசவை கூடியது. மன்னன் மந்திரியைப் பார்த்தான்.

மந்திரியோ தன் மகனைக் காட்டி, “இந்த இரண்டு கேள்விகளும் பெரிய கேள்விகள் இல்லை மன்னா! என் மகனே பதில் கூறுவான்” என்றார்.

“இந்தச் சிறுவனா?” என்று அதிசயித்த மன்னன் அவனைப் பார்த்தான்.

“மன்னா! எனக்குத் தயிரைக் கொண்டு வரச் சொல்லுங்கள்” என்றான் சிறுவன்.

பானையில் தயிர் வந்தது.

அதைக் காட்டிய சிறுவன், ‘இதோ இப்போது இது கடையப் படப் போகிறது’ என்றான்.

தயிரைக் கடைந்தவுடன் வெண்ணெய் மேலே மிதந்து வந்தது.

“மன்னா! இதோ இந்த வெண்ணெய் உள்ளே தானே இருந்தது? எப்படி வந்தது இப்போது?” என்றான்.

“கடைந்தவுடன்” என்றான் மன்னன்.

“அதே போலத் தான் இறைவனும். அனைவரின் உள்ளேயும் இருக்கிறான். முறுக வாங்கிக் கடையுங்கள். உங்களுக்குத் தானே வெளிப்படுவான்” என்றான் சிறுவன்.

மன்னன் முகம் மலர்ந்தது.

‘அடுத்த கேள்விக்கு பதில்?’ என்றான் மன்னன்.

“மன்னா! நான் குருஸ்தானத்தில் இருந்து அல்லவா இதற்குப் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் உங்கள் சிம்மாசனத்தை விட்டு இறங்கி இங்கே என் ஸ்தானத்தில் அமருங்கள். உங்கள் இடத்தைத் தாருங்கள்” என்றான்.

மன்னனும் இணங்கினான். அவன் கீழே அமர சிறுவன் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

காவலாளிகளைக் கூப்பிட்டு தனக்கு பணிவிடைகளைச் செய்யச் சொன்னான் சிறுவன்.

அவர்களும் மன்னனின் சிம்மாசனத்தில் அமர்ந்த அவனுக்கு அவனது ஆணையின்படி அனைத்தும் செய்தனர்.

“மன்னா! இதைத் தான் இறைவன் இப்போது இங்கு செய்து கொண்டிருக்கிறான். நீங்கள் மன்னர். நானோ சிறுவன். ஆனால் உங்கள் இடத்தை எனக்குக் கொடுத்து என் இடத்தை உங்களுக்குக் கொடுத்து அவரவர் முன்பு செய்த வினைக்கு ஏற்ப பலன்களைத் தருகிறான். புரிகிறதா, உங்களுக்கு?” என்றான் சிறுவன்.

மன்னன் விக்கித்துப் போனான்.

அரசவையில் உள்ள அனைவரும் மேதையான அந்த சிறுவனைப் பாராட்டினர்.

அன்றிலிருந்து அவனை அரசவையில் தன் மந்திரிகுழாத்தில் ஒருவனாக அமர்த்திக் கொண்டான் மன்னன்.

இந்த நீதிக் கதை உணர்த்துவது தான் இறைவனைப் பற்றிய உண்மை!

5

காண்பதற்கு எளியன்!

வாதுக்களாலும் பற்பல ஏதுக்களாலும் இறைவனை அறிய முடியாது.

தூய்மையான உள்ளத்துடனுன் அன்புடனும் தகுந்த செய்கைகளினால் மட்டுமே இறைவனை அறிய  முடியும் காண முடியும்!

அப்போது அவன் எளியன்!

***

 புத்தக அறிமுகம் – 71

விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. ஹான்ஸ் ஜென்னி   விளக்கும் மந்திர மகத்துவம்!                     2. ஹிந்து மதம் கூறும் பிரபஞ்சத்தின் வயது!

3. ஹிந்து மதம் ஒரு மதமல்ல, ஒரு வாழ்க்கை முறை!

4. அணுத்துகள் விஞ்ஞானிகள் வியக்கும் நடராஜ நடனம்!

5. விஞ்ஞானிகள் வியக்கும் மந்திர மகத்துவம்!

6. விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்!

7. ஓம் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி தரும் புது உண்மைகள்!

8. ஷ்ரோடிங்கரின் பூனை விளக்கும் பிரம்ம ரகசியம்!

9. நாஸா வியக்கும் சம்ஸ்கிருத மொழி!

10. ஆரேகானில் தோன்றிய அதிசய ஶ்ரீ யந்திரம்

11. விஞ்ஞானிகள் வியக்கும் வித்தக சித்தர் கணம்!

12. இறைவன் இருக்கிறான் உயிரியல் தரும் ஆதாரங்கள்!

13. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட – மல்டிவர்ஸ் – நாயகியே சரணம்!

14. க்வாண்டம் பிஸிக்ஸ் அடிப்படையில் வெள்ளையர் வியந்த அருள்

   வெள்ளம்!

15. பெருவிலிருந்து வந்த தம்பதியர் கண்ட ரமணர்!

16. கணிதத்தின் மூலம் கடவுள்!

17. மூளை ஆற்றலை ஊக்குவிக்கும் தோப்புகரணம்!

18. அற்புத புருஷரைச் சந்தித்து ஆனந்தம் அடைந்த அதிசய சித்தர்

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

வளர்ந்து வரும் அறிவியல் நாளுக்கு நாள் நமக்குத் தரும் புத்தம் புது உண்மைகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன! ஆனால் இதே உண்மைகளை மெய்ஞானிகள் தங்கள் அனுபவத்தாலும் தவத்தாலும் முன்பே கூறி இருப்பதை அறியும்போது நமக்குப் பிரமிப்பு இரட்டிப்பாகிறது. ‘ஞான ஆலயம்’ மாத இதழில் விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் ஒப்பிட்டு எழுதப்பட்ட தொடர் இப்பொழுது நூலாக! இறையன்பர்களுக்கு ஆன்மிக விருந்தாகவும் ஆன்மிகத்தை நம்பாதவர்களுக்கு அதை அறிவியல் நோக்கோடு விளக்கும் அறிவு விருந்தாகவும் ஒருசேரத் திகழும் இந்த நூல் இரு தரப்பினருமே கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒன்று!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘விஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள் -2 (Post No.11,304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,304

Date uploaded in London – 28 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கத் தமிழர்கள் இந்து மத நூல்களைக் கரைத்துக் குடித்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். பழந்  தமிழ் நூல்களில் அமிர்தம்,  இந்திரன் என்பனவெல்லாம் தினசரி பேச்சுவழக்கில் கூட இருந்திருக்கிறது. இது எப்படித் தெரிந்தது என்று நீங்கள் வியக்கலாம். அம்ருத என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை மூன்று உச்சரிப்புகளில் (three different spellings) 40 இடங்களில் பழந்  தமிழர்கள் பயன்படுத்துகின்றனர். உலகப் புகழ் பெற்ற திருவள்ளுவர் அவர்தம் திருக்குறளில் அமிழ்தம் (குறள்  64, 720, 1106 ) என்றும் சாவா மருந்து என்றும்  (குறள் 82) பயன்படுத்துகிறார். திருவள்ளுவர் இந்திரன் என்ற சொல்லை குறள் 25லும்  பயிலுகிறார்.

சிலர் இது தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் ஏனெனில் தொல்காப்பியரும் இந்திரன், வருணனைத் தமிழ்க் கடவுளராகக் காட்டுகிறார் என்று சொல்லிப் பசப்பினர் . ஆனால் அவர்களின் சந்தேகத்துக்கு அதற்கும் முன்னரே புறாநானூறு விடை கூறிவிட்டது   திருவள்ளுவருக்கு முன்னர் வாழ்ந்த கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி என்ற பாண்டிய மன்னன், தமிழர்கள் இந்திரன் அமிழ்தம் கிடைத்தால்கூட தனியே சாப்பிடாமல் பகுத்துண்டு உண்ணுவர் என்று பாடிவிட்டார்.

“உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

அமிழ்தம் இயைவ தாயினும், இனிதுஎனத்

தமியர் உண்டலும் இலரே; முனிவிலர்;

துஞ்சலும் இலர்; பிறர் அஞ்சுவது அஞ்சிப்

புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்; பழியெனின்

 உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்;

அன்ன மாட்சி அனைய ராகித்

தமக்கென முயலா நோன்தாள்

பிறர்க்கென முயலுநர் உண்மை யானே.”—புறநானூறு 182

XXX

இப்போது மேலும் சில புராணக் காட்சிகளைக் காண்போம் .

நீல நிற யமுனை நதியும், வெள்ளை நிற கங்கை நதியும் கலப்பதை உலகப் புகழ் பெற்ற காளிதாசன் வருணிப்பதை (மேகதூதம் 51, 61; ரகு வம்சம்  13-54/57) நினைவுகூறும்  வகையில் கபிலர் பாடுகிறார் :

மாயோன் அன்ன மால்வரைக் கவா அன்

வாலியோன் அன்ன வெள்ளருவி – நற்றிணை 32, கபிலர்

பொருள் :

“நீல நிற மலை கிருஷ்ணன் போல உள்ளது ; அங்கே வானிலிருந்து விழும் வெண்ணிற அருவி பலராமன் போல உள்ளது. காளிதாசன் (கி.மு .முதல் நூற்றாண்டு) , கபிலருக்கு முன்னால் வாழ்ந்தவன். அவனும் வெள்ளை, நீல நிறத்தைக் கண்டவுடன் இப்படி பலராமன்- கிருஷ்ணன்”  என்று ஒப்பிடுகிறான்

கிருஷ்ணன் – கோபியர் கதை தமிழர்களுக்கு அத்துபடி என்று காட்டும் இன்னும் ஒரு கவிதையும் சங்கத் தமிழ் நூல்களில் காணக்கிடக்கிறது :

அகநானூறு 59, பாடியவர் மருதன் இள நாகன்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந் தகை இழந்த கண்ணினை, பெரிதும்

வருந்தினை, வாழியர், நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை,

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் 5

மரம் செல மிதித்த மாஅல் போல,

புன் தலை மடப் பிடி உணீஇயர்அம் குழை,

நெடு நிலை யாஅம் ஒற்றி, நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இன் தீம் பைஞ் சுனை ஈரணிப் பொலிந்த

தண் நறுங் கழுநீர்ச் சேண் இயற் சிறுபுறம்

தாம் பாராட்டிய காலையும் உள்ளார் 15

வீங்கு இறைப் பணைத் தோள் நெகிழ, சேய் நாட்டு

அருஞ் செயற் பொருட்பிணி முன்னி, நப்

பிரிந்து, சேண் உறைநர் சென்ற ஆறே.

—–அகநானூறு 59, பாடியவர் மருதன் இள நாகன்

மருதன் இள நாகன் பாடிய இந்தப் பாடலில் இரண்டு புராணச் செய்திகள் உள்ளன. பாகவத புராணம்கந்த புராணச் செய்திகளை இங்கே காண்கிறோம்.

பொருள் :

“வடக்குத் திக்கில் நீர்வளம் பொருந்திய யமுனை ஆற்றின் மணலை உடைய அகன்ற துறையில் நீராடிய யாதவர் குல மகளிர் குளிர்ந்த தழையை உடுத்திக்கொள்ளக் குருந்த மரம் வளையும்படி மிதித்துத் தந்தான் கண்ணன் . அவனைப்  போல ஆண்  யானையானது, தனது துணைவியான பெண் யானை உண்பதற்காக அழகிய தளிர்களை உடைய  ‘யா’ மரத்தை வளைத்துத் தருகிறது”.

இந்தக் கதையின் முழு வடிவம் சம்ஸ்க்ருத நூலில் உள்ளது.  யமுனை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த  ஆயர் / யாதவர் மகளிரின் ஆடைகளை கண்ணன் விளையாட்டாக எடுத்து மரத்தின் மீது போட்டுவிட்டான். அப்போது கண்ணனின் அண்ணன் பலராமன் தூரத்தில் வந்து கொண்டு இருந்தான். அவன் மிகவும் கறாரான (Very Strict man) பேர்வழி ; அண்ணனுக்குப் பயந்த கண்ணன், பெண்களுக்கு ஆடை கிடைக்குமாறு குருந்த மரத்தை வளைத்துக் கொடுத்தான்

‘யா’ மரத்தின் தழைகளைத் தின்னுவதற்கு வசதியாக பெண் யானைக்கு, ஆண் யானை வளைத்துக் கொடுத்ததற்கு மிகவும் பொருத்தமான உவமை இது. தமிழர்கள், பாகவத புராணத்தை 2000 ஆண்டுகளுக்கு முன்னர், தினமும் படித்திருப்பார்கள் போலும் .

இதை நான் எழுத்துவதற்குக் காரணம் என்னவென்றால் யமுனை நதியைத் தொழுநை என்று அழைக்கிறார் மருதன் இளநாகன். வடக்கேயுள்ளவர்கள் ஜமுனா என்பர். அது எப்படி தமிழில் தொழுனை ஆனது என்பதை உரைகார்கள் விளக்கவில்லை.ஆனால் அப்படியே பேசசு வழக்கில் சொல்லியிருக்கவேண்டும்

தொழு என்றால் மாட்டுக் கொட்டில் . யமுனைக்கரையில் கண்ணன்  வளர்ந்த இடம் மாட்டுக் கொட்டில் தான். தொழு என்றால் தொழுதல் , வணங்குதல் என்ற பொருளும் உண்டு. கண்ணனை கோபியர்கள் தொழுத நதி என்றும் பொருள் சொல்லலாம். ஆனால் இந்த கோபியர்- கண்ணன் சம்பவம் சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் மேலும் விரிவாகவே இடம்பெறுகிறது. அங்கும் இளங்கோ அடிகள், தொழுநை என்றே குறிப்பிடுகிறார்.

ஆய்ச்சியர் குரவை

கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் 1

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் 2

ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ;

கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் 3

எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்

முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை

அணிநிறம் பாடுகேம் யாம்;

இறுமென் சாயல் நுடங்க நுடங்கி 1

அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்

அறுவை யொளித்தான் அயர அயரும்

நறுமென் சாயல் முகமென் கோயாம்;

வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் 2

நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்

நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்

வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

XXX

தொழுநைத் துறைவன் ராதா என்ற பெயருடைய நப்பின்னையுடன்  ஆடிய காட்சியையும் கண்ணனின் ஏனைய திருவிளையாடல்களையும் ஆய்ச்சியர் குரவை –யில்  படம்பிடித்துக் காட்டுகிறார்  இளங்கோ.

XXX

மீண்டும் அகநானூறு பாடல் 59க்கு வருவோம். இங்கு கந்த புராணச்  செய்தியையும் மருதன் இளநாகன் நமக்கு வரைந்து காட்டுகிறார்.

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்,10

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து,

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை,

இந்த வரிகளின் பொருள்

சூர பன்மனையும் அவனுடைய உறவினரையும் அழித்த, ஒளி பொருந்திய இலை போன்ற, நீண்ட வேலை உடைய சினம் மிக்க முருகப் பெருமானின் குளிர்ந்த திருப்பரங்குன்றம் . அது நல்லந்துவனால் பாடப்பட்டது

ஆக , அகநானூற்றின் காதல் கவிதையில் கூட இரண்டு புராணச்  செய்திகளை நமக்கு அளித்துவிட்டார் இளநாகன்.

—தொடரும்

TAGS- ஆய்ச்சியர் குரவை, சூரபன்மன் , தொழுநை, கண்ணன், நப்பின்னை , ராதா, கோபியர், பாகவதம், கந்த புராணம் , சங்க இலக்கியம், யாதவர் , மகளிர் புராணச் செய்திகள் 2

விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்!  (Post No.11,303)  – Part 1   

WRITTEN BY B.KANNAN, DELHI

Post No. 11,303

Date uploaded in London – 28 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

                            விநோத விடு(டி)கவிப் பொக்கிஷம்!                

            Written By B.Kannan, New Delhi

சமீபத்தில் நாட்டுப்புற இலக்கிய நூல்களைப் படிக்கத் தேடுகையில் தற்செயலாக இரு சிறியப் புத்தகங்களைக் காண நேர்ந்தது. அவையிரண்டும் நாம் பாட்டிமார், கொள்ளுப் பாட்டிமார்களிடமிருந்துக் கற்றுக் கொண்டதும், மூளைக்கு வேலைக் கொடுக்கக் கூடியதுமான, புதிர் இலக்கியத்தைப் பற்றியதுதான்!

“அம்மாடி என் செல்லம், டேய் பேராண்டி! நான் இப்போ புதிர் போடுறேன்,கண்டுப் பிடிக்கிறீங்களா? கடகடா,குடுகுடு நடுவிலே பள்ளம், அக்காள் வீட்டுக்குத் தங்கச்சி போகலாம், தங்கச்சி வீட்டுக்குள் அக்காள் நுழைய முடியாது!, ஆள் இறங்காத குளத் திலே இறங்கி சுற்றிச் சுற்றிக் கும்மாளமிடுது!’ என்ன சொல்லுங்க பார்க்கலாம்என்று வாய்நிறையப் பற்கள், நமுட்டுச் சிரிப்புடன் நம்மைக் கேள்வி கேட்டப் பெரியவங் களை மறக்க முடியுமா, என்ன? ( விடை: கல் உரல், படி-ஆழாக்கு, மத்து)

122 புதிர் வெண்பாக்கள் கொண்ட விநோத விடிகதை என்ற முதல் புத்தகம் ஆதிபுரி இரத்தினவேலு முதலியார் அவர்களால் 1898-ம் ஆண்டு, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தால் வெளிடப் பட்டுள்ளது. இதன் திருத்தப்பட்ட மறுபதிப்பு, விவேக விளக்க விநோத விடுகவிப் பொக்கிஷம் என்ற தலைப்பில் த. குப்புசாமி நாயுடு அவர்களால் 1938-ல் பிரசுரமானது.ஒவ்வொரு செய்யுளும் உற்சாகமுடன் நம்மைச் சிந்திக்க வைக் கிறது. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டச் சில புதிர்களைப் பார்க்கலாம்…….

முதலில், மேற்கண்ட நூல்களின் தலைப்பிலுள்ள ‘விடி’, ‘விடுகவி(தை)’ என்பதற்கு இடையேயுள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது நல்லது. அச்சில் நூல்கள் வருவ தற்கு முன் வாய்மொழி இலக்கியங்களே, அதாவது, கதை, பாடல், பழமொழி, விடு கதை என்பவை, புழக்கத்தில் இருந்தன. இவற்றுள் அறிவூட்டுதலையும், அறிவுநுட் பத்தை வளர்ப்பதிலும் பெரும்பங்காற்றியவை விடிகளாகும். உறவுமுறை, உயிரி னங்கள், அன்றாடம் புழக்கத்திலிருக்கும் பொருட்கள் என அனைத்துக் கருத்துருவி லும் விடிகள் விடுக்கப்படுகின்றன. உடனுக்குடன் ஓரிரு சொல்லில் விடுக்கும் புதி ருக்குப் பதில் பெறப்படுவது விடிகள் எனப்படும். ஒரு பொருளின் பெயரை மனதில் இருத்தி, அதன் குணங்களை வரிசையாகச் சொல்லி, அப்பொருள் எதைக் குறிக்கிறது என்று கேட்பதே இதன் நோக்கம்.

(உ.ம்.) ‘ஓடியாடி வேலை செய்வாள், பின்னர் மூலையில் ஒதுங்கிக் கிடப்பாள்’ (துடைப்பம்).

‘தாடிக்காரன், கொண்டைக்காரன் சமையல் அறைக்குள் சென்றால் வெள்ளைக்காரன்’

(தேங்காய்). உடைபட்டால் வெண்ணிறமாகத் தானே தோற்றமளிக்கும்!

‘அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம், அது என்ன? (வளையல்)

இதிலிருந்து சற்றுமாறுபட்டு கேட்கப்படும் கேள்வியின் பதில் ஒரு கதையாக அமை யுமானால் அது விடுகதை வகையாகிறது. இதில் கேள்வி கேட்கப்பட்டவர்கள் தான் பதில் கூறமுடியும். (உ.ம்) அக்பர்- பீர்பல், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன், வேதா ளம்-விக்கிரமாதித்தன்,போஜ ராஜன்-பதுமைப் புதிர்க் கதைகள் எனலாம். இதற்குரிய ஒரு சுவாரசியமானச் சொல்லாடல் நிகழ்வைக் கட்டுரை முடிவில் காணலாம்.

இப்போது நாம் புத்தகத்தில் சொல்லப்படும் சில விடிகளுக்கு விளக்கம் காண்போம்….

எதையும் ஆரம்பிக்கும் முன் பிள்ளையார்சுழி போட வேண்டுமல்லவா? எனவே அந்தக் காப்புச் செய்யுளிலிருந்தே சுவாரசியம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது. விநாயகரைப் பற்றிய விளக்கம், இதோ……

வருங்காலம் நிகழ்ந்துரைப்பான் சாஸ்திரியல்ல

வாங்கியுண்ண வழிபார்ப்பான் முடவனல்ல

 சுரும்புமுகர் மலர்முடிப்பான் சுதனுமல்ல

     துகளில்பசும் புல்சுமப்பான் தோட்டியல்ல

 பருமனுடல் நீறணிவான் பரமனல்ல

     பலரில்லம் புசிக்கும்பர தேசியல்ல

 பொருந்துவனக் கிளிபோன்ற மொழியினாளே

     புகழுண்டாம் இக்கதையைப் புகலுவாயே.

{எதிர்காலம் நலமுற வழி காட்டுவான், சோதிடன் அல்ல, உட்கார்ந்த இடத்திலிருந்தே சாப்பிடக் கிடைக்குமா எனப்பார்ப்பான், நொண்டியல்ல,

வண்டு முகரும் மலரை அணிவான் (மலர்க்கணை ஏந்திய மன்மதன்) மகனுமல்ல,

தன் மேல் பசும்புல் (அருகம்) சுமப்பான், தோட்டக்காரனல்ல, பருத்த உடலில் சாம் பல் நீறணிவான் முக்கண்ணன் அல்ல, பலரது வீட்டிலும் விரும்பிச் சாப்பிடுவான், பரதேசி அல்ல, அப்படியானால், கிள்ளை மொழி பேசும் பெண்ணே, பொருத்தமான பதில் கூறுவாய்! )

இதோ இவரை நமக்கு நன்றாகத் தெரியுமே!

பார்த்துமுகம் பல்காட்டுங்கண் ணாடியல்ல,

   பசங்களிடம் சேட்டைசெயும் வேசியல்ல,

கூத்தாடிப் பணம் பறிக்கும் தாசியல்ல,

   குந்திசற்று மிருக்காது நாயுமல்ல,

போத்துகின்ற கொடியாகும் பூமியல்ல,

போர்புரிந்து ஜெயமடையும் விஜயனல்ல,

சாத்துகின்ற விக்கதையின் பயனைச் சொன்னால்

சரணமென்றே அவரடியைச் சாரலாமே!

{ பார்த்தால் மூஞ்சி, பல் காட்டும், கண்ணாடியல்ல, பசங்களிடம் வம்பு செய்யும் வேசியல்ல, அரங்கமேறி காசு கேட்கும் கணிகையுமல்ல, ஓரிடத்தில் சும்மா யிருக்காது, நாயுமல்ல, கிளையில் தொங்கும் கொடியுமல்ல, சண்டையிட்டு ஜெயிக்கும், பார்த்தன் அல்ல, இவர் யார் என்று சொன்னால் அவர் பாதங்களைச் சரணடையலாம்! }  ( மந்தி, குரங்கு)

இதைக் கண்டால் மயங்காதவர் உண்டோ?

நீலக்கண் ணாடிகொள்ளும் கவரையல்ல,

   நேர்த்தியுடன் தான்விரிக்குங் கடையுமல்ல

கால்தூக்கி நடனமிடுங்  காளியல்ல

   கால்கொண்டே பாம்பாட்டும் ஜோகியல்ல

மேல்நிறைந்த பொட்டுமுண்டும் வானமல்ல

மேன்மைமிகக் கொண்டாடும் வேந்தனல்ல

பாலுக்கு நிகரான மொழியினாளே

பத்மினியே இக்கதையைப் பகருவாயே!

{ சுவரில் மாட்டிவிட்ட நீலக் கண்ணாடியல்ல, பாங்காகப் பொருட்களைப் பரத்தி வைக்கும் கடையுமல்ல, ஒருகால் தூக்கி நாட்டியமாடும் காளியுமல்ல, கால்களைக்

கொண்டே பாம்பை வசப்படுத்தும், பாம்பாட்டியுமல்ல, மேனிமுழுதும் கண்பொட்டு உண்டு, ஆகாயமல்ல, தேவேந்திரனுமல்ல, மேன்மைமிகு மருதநில வேந்தனல்ல (இந்திரன்), பெண்ணே, பத்மினியே விடைசொல்லுவாயே!} (வண்ணத் தோகை மயில்)

இன்னுமொன்று….

மண்மிதித்து மேற்றுளைக்கும் குயவனல்ல

மதித்துவயல் நெல்காக்கும் மனிதனல்ல

கண்ணிரண்டுங் குழிந்துநிற்குங் குருடனல்ல

கற்கோட்டைக் குள்ளிருக்கும் வேந்தனல்ல

எண்ணமுடன் பகைஞர்பசி நோயைத் தீர்ப்பான்

ஈரைந்து கரமுடையோன் பரமனல்ல

பெண்ணணங்கே இக்கதையின் சாரமாய்ந்து

பேசிடிலோ ஆசிரியப் பெயருண்டாமே!

{ மண்சேற்றை மிதித்துப் பிசைந்து, துளையிட்டு மண்பாண்டம் செய்யும் குயவ னல்ல, வயற் கரையில் மறைந்திருந்துப் பயிர்க் காக்கும் விவசாயியல்ல, இரண்டு கண்களும் குழிவாயிருக்கும், குருடனல்ல, உறுதியானக் கற்கோட்டையில் இருக்கும் அரசனல்ல, தன் பகைவனின் (மனிதன்) பசியைத் தீர்த்து வைப்பான், பத்து கைகள் உண்டு ஆனால் தெய்வமல்ல, இதன் பொருள் கண்டு பதில் கூறுவாய், பெண் அணங்கே! }  (நண்டு)

இதை வேறுவிதமாக கிராமப்புறங்களில் கூறுவதுமுண்டு

எட்டுக்கால் ஊன்றி, இரண்டு கால் படமெடுக்க, வட்டக் குடை பிடித்து வாறாராம் வன்னியப்பு! (சிற்றரசன்).

 to be continued……………………………..

tags- B.Kannan, விநோத, விடு(டி)கவி ,பொக்கிஷம்,

கடவுளைக் காட்டு! – 1 (Post No.11,302)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,302

Date uploaded in London – –    28 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுளைக் காட்டு! – 1

ச.நாகராஜன்

கடவுள் இருக்கிறாரா?

கடவுள் இருக்கிறார் என்றால் கடவுளைக் காட்டு!

விஞ்ஞானிகளில் பெரும்பாலோனோருக்கு இந்தக் கேள்வி எழுகிறது.

இதே கேள்வியைப் பு’திய நாத்திகவாதிகளும்’ கேட்கின்றனர்.

புதிய நாத்திகம் (New Atheism) என்னும் ‘நியூ அதியிஸம்’ கடவுள் இல்லை என்பதை உறுதிபடக் கூறுகிறது. கடவுள் நம்பிக்கை என்பது ஒரு மூட நம்பிக்கை என்றும் மதமும் பகுத்தறிவற்ற தன்மையும் கொஞ்சம் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாதவை என்றும் அது வலியுறுத்துகிறது.

கடவுளின் மீதான நம்பிக்கை பெரும் தவறு என்றும் டார்வினின் பரிணாமக் கொள்கையின் படியும் பல கோடி ஆண்டு இயல்பான வளர்ச்சியில் அணுத்துகள்கள் மாறி மாறி இயற்கைத் தேர்வின் படி மனிதனாக உருவானான் என்றும் அது வற்புறுத்துகிறது.

பழைய நாத்திகம் என்னும் கொள்கையில் ஊறிப் போன மடலின் மர்ரே ஓ’ஹேர் (Madalyn Murray O’Hare) முதலானோர் நாத்திகம் என்பது மதவாதக் கொள்கை போல ஒரு கொள்கை அல்ல என்றனர்.

ஆனால் புதிய நாத்திகமோ ‘கடவுள் இல்லை; இயற்கையின் இயல்பான பரிணாம எழுச்சியில் தான் அனைத்தும் உருவானது என்பது ஒரு தீவிரமான கொள்கை தான்’ என்று உறுதிபடக் கூறுகிறது.

இந்த புதிய நாத்திகம் என்ற சொற்றொடர் 2006ஆம் ஆண்டு கேரி உல்ஃப் (Gary Wolf) என்ற பத்திரிகையாளரால் உருவாக்கப்பட்டது.

அதை உற்சாகமாக நாத்திகவாதிகள் பலரும் ஆமோதித்து வரவேற்றனர்.

இதற்கு ஆதரவாக ஏராளமான புத்தகங்கள் உலகெங்கும் வெளியாகி விட்டன.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஏராளமான புத்தகங்கள் வெளியாகி விட்டன.

காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும், ‘இந்தக் கடவுளைக் காட்டு, கடவுள் இருக்கிறார் என்பதற்கு நிரூபணத்தைக் காட்டு’ என்ற வாதத்திற்கு அவ்வப்பொழுது அந்தந்தக் காலத்திற்கேற்ப அறிஞர் பெருமக்கள் விடை அளித்து வந்துள்ளனர்.

இவர்களில் விஞ்ஞானிகளும் உண்டு; மெய்ஞானிகளும் உண்டு.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த லியனார்ட் யூலர்  (Leonard Euler – தோற்றம் 15-4-1707 மறைவு 18-9-1783) ஒரு பிரபலமான கணித மேதை. இயற்பியல் விஞ்ஞானி. வானவியல் நிபுணர். பூகோளவியல் அறிஞர். தர்க்கத்தில் வல்லுநர். ஒரு பொறியியல் வல்லுநரும் கூட.

கணிதத்தில் அனலிடிக் நம்பர் தியரி, காம்ப்ளெக்ஸ் அனாலிஸிஸ், இன்ஃபைனட்ஸிமல் கால்குலஸ் (Analytic Number Theory, Complex Analysis, Infinitesimal Calculus) உள்ளிட்டவற்றில் பல கண்டுபிடிப்புகளைச் செய்து உலகை பிரமிக்க வைத்தவர் அவர்!

ரஷியாவில் செயிண்ட் பீடர்ஸ்பர்க்கில் அமைந்திருந்த ராயல் அகாடமி ஆஃப் ஸயின்ஸஸ்-இல் அனைவரும் போற்றும் ஒரு உறுப்பினராகவும் அவர் இருந்து வந்தார்.

ஒரு நாள் பிரான்ஸை சேர்ந்த நாத்திகவாதியான டெனிஸ் டிடராட் (Denis Diderot) ரஷிய ராணியான காதரினின் அழைப்பின் பேரில் ரஷியாவுக்குவந்தார்.

எப்படியாவது ஆத்திகவாதியாக இருக்கும் யூலரை நாத்திகவாதியாக மாற்றுவது தான டிடராட்டின் நோக்கம்.

இதை அறிந்து கொண்ட யூலர் அவரை ராணியின் முன்னிலையில் பொது அவையில் இது பற்றி விவாதிக்க அழைத்தார்.

அரசவை கூட்டம் கூடியது.

யூலர் கம்பீரமாக டிடராட்டைப் பார்த்து, “ஸார்! ஏ ப்ளஸ் பி டு தி எந்த் பவர் டிவைடட் பை என் ஈக்வல்ஸ் எக்ஸ். தேர்ஃபோர் காட் எக்ஸிஸ்ட்ஸ். ரிப்ளை” என்று முழங்கினார்.

(Sir, a plus b to the nth power divided by n equals x; , therefore, God exists! Reply!)

கணிதத்தில் ஒன்றுமே தெரியாத டிடராட் முழித்தார். பதில் சொல்லத் தெரியவில்லை.

கூட்டத்தில் அனைவரும் சிரித்தனர். அவமானப்பட்ட டிடராட் மறுநாளே மூட்டை கட்டிக் கொண்டு பிரான்ஸுக்குத் திரும்பினார்.

கணிதத்தில் நிலை எண்கள் அல்லது மாறிலிகள் (Constants) பலவற்றை ஒன்று சேர்த்து அற்புதமான ஒரு சூத்திரத்தை யூலர் தரவே அதைப் புரிந்து கொள்ள முடியாமல் டிடராட் தவித்தார்.

கடவுள் என்பவர் கணிதத்திற்கு அப்பாற்பட்டவர் என்பதை பல கணித மேதைகள் வற்புறுத்தி வந்துள்ளனர்.

காலமும் கணக்கும் நீத்த காரணன் இறைவன்!

பிரபஞ்சமானது தானே தோன்றியது என்ற கூற்றை பிரபல விஞ்ஞானியான ரோஜர் பென்ரோஸ் (Roger Penrose) தனது ஒரே ஒரு வாக்கியத்தால் தவிடு பொடி ஆக்கி விட்டார்.

பிரபஞ்சம் தானே உருவாக வேண்டுமெனில் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு எண் அமைந்தால் மட்டுமே அது உருவாக முடியும். அப்படிப்பட்ட எண் எது என்று கேட்டால்  அது இது தான் என்று அவர் ஒரு கணித சூத்திரத்தைக் கூறினார்.

அது இது தான்:-

Penrose has put ‘the probability against the emergence of Universe as 1 divided by  ten raised to the power to the power of 123!’

கற்பனைக்கும் அப்பாற்பட்ட இந்த எண்ணை யாரால் நினைத்துப் பார்க்க முடியும்! இது அமைந்தால் தான் படைப்பவன் இன்றி பிரபஞ்சம் தானே உருவாகும் சாத்தியக்கூறு அமையும்!

ஆகவே படைப்பவன் – இறைவன் – ஒருவன் இருக்கிறான் என்பதை எளிதில் ஊகிக்க முடியும்!

** 

புத்தக அறிமுகம் – 70

பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்!

 நூலில் உள்ள அத்தியாயங்கள்

1)பிரமிடின் அபூர்வ சக்திகள்

 2)பிரமிடா? ·ப்ராடா?

 3)பிரமிட் கல்லறையின் புதிய ரகசியம்

 4)உயிர்த்தெழ விரும்பும் உறைபனிச் சடலங்கள்

 5)செத்தும் வாழ பல கோடி செலவழிப்போர்

 6)நடமாடும் பிணம்

 7)ரத்தம் உறிஞ்சும் டிராகுலா

 8)மனித ரத்தத்தில் குளித்த மகாராணி

 9)சூனியக்கலையின் சூத்திரதாரிகள்

10)மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா?

11)மரணத்திற்குப் பின் – கார்ல் ஜங்கின் அனுபவம்

12)விமான விபத்தின் காரணங்களைக் கூறிய ஆவி

13)இறந்தும் எழுதினார் சார்லஸ் டிக்கன்ஸ்

14)சிந்தனையாளர் லாட்ஜின் அனுபவங்கள்

15)ஜெயிலுக்கு வந்த பேய்

16)பேயைப் படம் பிடித்த டி.வி.

17)ஸ்படிக மண்டை ஓடு காக்கும் உலக ரகசியம்

18)விளங்காத மர்மங்களின் தொகுப்பு

19)தானே எரிந்த விநோத சம்பவங்கள்

20)விநோதமான மழைகள்

21)கண்ணீர் விடும் அதிசய பொம்மை

22)உங்களிடம் சைக்கிக் பவர் உள்ளதா?

23)டெலிபதி மனிதர்

24)அயல் கிரகவாசிகள் நம்மைக் கடத்துகிறார்களா?

25)அயல்கிரகக் கடத்தல்

26)பறக்கும் தட்டைப் படம் பிடித்த பி.பி.சி. கேமராமேன்

27)படைவீரர்களை விழுங்கிய பறக்கும் தட்டு!

28)மர்ம வட்டங்கள் பற்றிய திரைப்படம்

29)அயல் மனித தேடல்

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

பிரமிடின் அபூர்வ சக்திகள் ஏராளம். அதன் மர்மங்களை விளக்கும் கட்டுரை உள்ளிட்ட 29 கட்டுரைகளை இந்த நூலில் காணலாம். உறைபனி சடலங்கள், நடமாடும் பிணம், ரத்தம் உறிஞ்சும் டிராகுலா, மனித ரத்தத்தில் நிஜமாகவே குளித்த மகராணி, ஜெயிலுக்கு வந்த பேய் என்று பல்வேறு  அதிசய சம்பவங்களை விளக்குகிறது இந்த நூல். டெலிபதி மனிதர், அயல்கிரகக் கடத்தல் என்று அயல் கிரகவாசிகள் பற்றிய சுவையான சம்பவங்களையும் இந்த நூலில் படிக்க முடியும்.

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘பிரமிட் மர்மங்களும் அதீத புலனாற்றல் அதிசயங்களும்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

**

சங்கத் தமிழ் இலக்கியத்தில் புராணக் காட்சிகள்-1 (Post No.11,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,301

Date uploaded in London – 27 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பழந் தமிழ் நூலான தொல்காப்பியம் முதல் பிற்காலத்தில் வந்த ‘சமயம் அல்லாத’ நூல்களில் கூட  வேத இதிஹாச, புராண கதாபாத்திரங்ககளைக் காண்கிறோம். அமிர்தம், கங்கை நதி , இமய மலை , கற்புக்கரசி அருந்ததி, சப்த ரிஷிக்கள், ராஜ சூய யாகம் , யூப நெடுந் தூண் , ஆகியவற்றையும் இந்திரன், வருணன், விஷ்ணு, ஸ்கந்தன் , சிவன் ஆகியோரையும் சங்க நூல்களில் காண்கிறோம் . புறநானூறு, அக நானூறு காட்டும் ராமாயணக்  கதைகள் கம்பனிலோ , வால்மீகியிலோ  இல்லை என்பதும், கண்ணன் – கோபியர் கதையை 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழன் எழுதிவிட்டான் என்பதும் பெருமைக்குரிய விஷயங்கள்.

தனம் தரும் கஜலெட்சுமி

சில புராணக் காட்சிகளைக் காண்போம்:

ஒரு புலவர் மலைகளையும் காடுகளையும் கடந்து செல்கிறார். அப்போது ஒரு அறிய காட்சியைக் காண்கிறார். இரண்டு புறம் மலைகள்; அந்த இரண்டிலும் அருவி நீர் கொட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த அ ருவிகளுக்கு இடையே ஒரு வேங்கை மரம் பூத்துக் குலுங்குகிறது. இதைப் பார்த்தவுடன் கஜ லெட்சுமி உருவம் அவர்  மனதுக்கு வந்துவிடுகிறது. உடனே கவி மழை பொழிகிறார்;

கபிலரின் குறிஞ்சிக்கலி – 44 ஆம் பாடல்

கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல்    44-1

எதிர் எதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து,              

அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ,         

முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரி வேங்கை,     

வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப்,           

புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித்         

திரு நயந்து இருந்தன்ன தேம் கமழ் விறல் வெற்ப! 

*ஞாயிற்றின் கதிர்கள் விரிந்து அடர்ந்த ஒளியால் அழகு கொண்ட அகன்ற மலைச்சாரலில், எதிர் எதிரே ஓங்கி நின்ற கரிய மலைத்தொடர்களில்,  அதிருகின்ற இசையை எழுப்பும் அருவி, தனது அழகிய கிளைகளின் மேல் விழ, முதிர்ந்த மலர்கொத்துகள் மலர்கின்ற முழவு போலும் அடிமரம் படைத்த்த, (மலர்களின் நிறம் காரணமாக) நெருப்புபோல் தோன்றும் வேங்கை மரத்தின் மேல், நெற்றியில் வரிகளையுடைய அழகிய களிறு ஒன்று, மலரும் நீரும் கலந்து ( தீ அணைக்க?) பொழிய, மொட்டு அவிழ்ந்த தாமரை மலர், தன்னிடத்தே அழகு பெற்று, திருமகள் விரும்பி இருப்பது போல், அதன் தேனின் மணம் கமழும் வெற்றியை உடைய மலைநாடனே!.

GAJA LAKSHMI FROM DENMARK (200 BCE)

கஜ லட்சுமியின் படம் எல்லார் வீட்டுக் கதவுகளிலும் , குறிப்பாக நாட்டுக்கோட்டை செட்டியார் வீட்டுத் தேக்கு  மரக்கதவுகள் அல்லது வாசலில் பொறிக்கப்பட்டிருக்கும். இலங்கையின் தென் கோடியிலும் கஜ லெட்சமி உள்ளாள் . டென்மார்க் நாட்டிலுள்ள சதுப்பு நிலப்பகுதியில்  குண்டஸ்ட்ரப்(Gundestrup in Denmark) என்னும் இடத்தில் கிடைத்த அண்டாவிலும் கஜலெட்சமி இருக்கிறாள். இவை அனைத்தும் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. ஆகையால் தமிழ்ப் புலவருக்கு கஜலட்சுமி காட்சி தந்ததில் வியப்பில்லை!

Xxx

ராவணனை அலற வைத்த கயிலை மலை

அடுத்த காட்சியைக் காண்போம் :

கபிலரின் குறிஞ்சிக்கலி – 38 ஆம் பாடல்

இமைய வில் வாங்கிய ஈர்ஞ் சடை அந்தணன்                 38-1

உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக,               

ஐ இரு தலையின் அரக்கர் கோமான்                                  

தொடிப் பொலி தடக்கையின் கீழ் புகுத்து, அம் மலை    

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல –                              38-5

உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக்                

கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மத யானை,     

நீடு இரு விடர் அகம் சிலம்பக் கூய்த், தன்                 

கோடு புய்க்கல்லாது, உழக்கும் நாட! கேள்;  

பொருள்:

*கயிலையிலே சிவ தனுசுவை வளைத்த ஈர சடையை உடைய அந்தணனாகிய சிவன், உமையவளொடு அமர்ந்து இருந்தான். அப்போது பத்து தலைகளை உடைய, அரகர்களின் தலைவன் இராவணன், வளை பொலிந்த தன் கைகளை அடியில் புகுத்தி  பின் அந்த மலையை எடுக்க முடியாமல் (அரற்றி) உழல்பவன் போல், 

புலியின்  உருவம் என ஏமாறும் வண்ணம் பூக்கள பூத்திருந்த வேங்கை  மரத்தின் அடியை சினத்தால் குத்திய மதம் கொண்ட யானை, நெடிய இருண்ட மலையகம் முழுதும் ஒலிக்குமாறு கூவி தன் கொம்புகளை மீட்டு எடுக்க முடியாமல் உழக்கும் நாட்டை உடையவனே! கேட்பாயாக!

ராவணன் தன் அகந்தை எல்லை மீறிப் போகவே சிவனும் உமையும் வசிக்கும் கயிலை மலையையே தூக்க முயற்சி செய்து , கைகள் நசுங்கவே, அலறிக்கொண்டு , கெஞ்சிக் கேட்டு விடுதலை பெற்றான். இதைத் தேவாரம் பாடிய  திரு ஞான சமம்பந்தர் ஒவ்வொரு பதிகத்தின் இறுதியிலும் பாடி இருக்கிறார். அவருக்கு  முன்னரே கபிலர் பாடியதில் வியப்பில்லை.

Xxxx

முருகனின் முத்து மாலை

மற்றொரு  புலவருக்கு வானத்தில் பறவகைகளைக் கண்டவுடன் முருகன் ஞாபகம்  வந்துவிடுகிறது . குமரியிலிருந்து பறவைகள் இமய மலைக்குக் குடியேறுவதை  தமிழர்கள் நன்கு அறிவார்கள். இது ஆண்டுதோறும் நடைபெறும்  பற வைகள் குடியேற்றம் ஆ கம்.இது .

நெடுவேள் மார்பில் ஆரம் போலச்

செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்

பைங் காற் கொக்கின் நிரை பறை  உகப்ப

……………………..

–அக நானூறு 120, நக்கீரர்

திருமுருகாற்றுப்படை பாடிய முருக பக்தரான  நக்கீரர் , வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் முருகனைப் பாடிப் பரவுவது இயற்கைதான். அவர் சொல்கிறார் —

பெரும்புகழுடைய  முருகப் பெருமானின் மார்பில் சூட்டப்பட்ட முத்துமாலை போலச் சிவந்த வானத்தில் பொருந்தி, மீனை உண்ணும் பசிய காலை உடைய கொக்கினம் , வரிசையாய்ப் பறந்து உயர, பகற்பொழுதைப் போக்கி ஞாயிறு மேற்குத் திக்கில் மறைய மலையை  அடைந்தது.

பறவைகள் குடியற்றத்தைக் காணும் பறவை இயல் ஆர்வலர்களுக்கு இந்தப் பாடலின் பொருள் தெள்ளிதின் விளங்கும் ; வானத்தைப் பார்த்தால் வெள்ளை நிறக் கொக்குகள் ,அரை வட்ட வடிவில் , ஆங்கில எழுத்தான  V  வடிவில் , பறக்கும் . அதை முத்துமாலை என்று வாருணித்தது பொருத்தமே.

To be continued…………………………….

Tags- புராணம், சங்க இலக்கியம், இந்து மதம்,கடவுள், முருகன் , முத்து மாலை, ராவணன், கயிலை மலை

KARI for Elephant is Not a Tamil Word? -Part 8 (Last Part) Post No.11,300

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,300

Date uploaded in London – 27 SEPTEMBER 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 8 (Last Part)

Sangam age Tamil poet Nallantuvanaar was enjoying the scene of elephants bathing in the flooded river; he saw elephants bathing with their mates in such depths that their trunks get submerged- Akanaanuuru verse 43.

Nalvelliyaar (Miss Good Friday) was a poetess who was acquainted with the mountain scenery and the life of the animals there, especially of the elephants. Here is one description:

There is a pathetic picture of a family of elephants. The male is killed by a tiger, and the bereaved mate with its young one close to it, grieves over the loss like the warrior fatally wounded in a battle field – Natrinai 47

The elephants always move in a herd with a leader among them. The poetess refers to this in a comparison wherein she states that that the hero who has to leave his love returns to his village like the male elephant deserted by its herd- Akanaanuuru 32.

Paranar , one of the oldest and celebrated Sangam poets, punned on the word Venkai which means both a tiger and a tree with yellow flowers. The elephant hears the blended notes of the musical instruments of musicians and mistakes it for the roar of a tiger, gets angry, attacks a blossomed Venkai tree tears off its branches and wearing it on its head makes a roar that echoes in the mountain rocks-Pathitruppaththu 41

A block of rock covered with the Venkai blossoms looks like the coloured spots and stripes on the cheetah or tiger. So Tamils used this word to mean both the tree and the animal. They, very often, used it as apun.

Tamils were so wealthy they used ivory dice made up of elephant’s tusk- Akanaanuuru 135.

Mamulanar (maa muula naar) describes a horrible scene of a python slowly devouring a male elephant when its mate spends sleepless nights  roaring with great sorrow- Natrinai 14

In another picture , a tiger attacks a male elephant whose loud roar terrifies its mate and makes it run away leaving its young one; after a while the poor  female elephant searches for the young one with its trunk raised up and placed on its head, – really an affectionate mother searching for her missing child –

Akananuru 347

Uttiyar (uuttiyaar) is an unidentified poet of Sangam period. Like the compilers of the Rig veda, Tamils also named the unidentified poets with their repeated words or unique expression in the poem. The phrase used by the poet is ‘uutti anna’- paint like, is used as his name. He is describing a pathetic scene. A young elephant was carried away by a swift mountain stream immediately after a heavy rain. Its mother cried aloud and its father searches for it in the flowing current of water- Akananuru

Animal intelligence

Kavan Mullaipputanar  gives us some information on wise  elephants.  They are pictured wise enough to suspect a pit as one dug out by the hunters to catch them though in fact it is a well dug out and unfinished as no water was found in it- Akananuru 21

The dried leaves over it are thought of by the elephants as having been wantonly used by the hunters to camouflage the pit and to deceive the animals coming that way, and they get angry and fill it up. This the poet must have seen with his own eyes or learnt from the reports of others.

There are many similes comparing the mountain to an elephant. It is most appropriate when the waterfall on the mountain is compared to the must of the ruttish elephant.

A Konku tree of golden blooms is compared to an elephant. Adorned with gold ornaments- Kalittokai 42

Everything dark, huge and majestic suggests to the poets’ comparisons with the elephant, the greatest mammal of the hill. The blocks of rocks in the hills are to the poet like the elephants– Kalittokai 108.

The ruttish elephant that breaks its pegs, kills its keeper and runs wildly, is compared to a ship that is driven by the storm from its moorings–Maturaikkanchi  375-383.

There are some happy scenes watched by the pots as well. The baby elephants are said to play with the boys of the adjacent village (Kuruntokai 394) . There is a picture of a young elephant competing  with a boy and running to take a wood apple just fallen from the tree in front of the house- Purananuru 181

The broad leaves of the Cempu plant and the lotus waving in the wind remind the poets of the ceaseless waving of the ears of the elephant- Kuruntokai 76

A block of huge rock washed by rain resembles the washed elephant- Kuruntokai 31

Very often elephant’s trunk was compared to a snake- Akananuru 349, 391

All the body parts of the animal’s body are compared to something in nature. In Sangam Tamil books.

— Subham —

 Tags- Elephant, Kari, Tamil, Intelligence, similes 

பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று (Post No.11,299)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,299

Date uploaded in London – –    27 SEPTEMBER 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கென்னடி – மிட்சுபிஷி – செர்னோபில் – பிரமிக்க வைக்கும் கர்ம பலன் சம்பவங்கள் மூன்று!

ச.நாகராஜன்

1

இந்த மூன்று உண்மைச் சம்பவங்களையும் ரஷிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்துள்ளவர் செய்ம் ஜெஹாவி (Chaim Zehavi)

இதைத் தமிழில் தருகிறேன்.

2

இரண்டாம் உலக மகா யுத்த காலம். யூதர்களின் தலை விதி பற்றிய உண்மை அறியப்பட்ட நேரம். ஆனால் இன்னும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை.

சில பணக்கார யூதர்கள் ஒரு கப்பலை விலைக்கு வாங்கினார்கள். அதன் மூலமாக தங்கள் குடும்பத்தினரை பத்திரமாக அமெரிக்காவிற்கு அனுப்பி விடலாம் என்பது அவர்கள் எண்ணம்.

ஆனால் அவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய விசா வேண்டுமே. ஆகவே அவர்கள் லண்டனில் உள்ள அமெரிக்க தூதரை அணுகினார்கள். அப்படி விசா வழங்குவது அவருக்கு ஒன்றும் கடினமான காரியம் அல்ல, ஆனால் அவர் தீர்க்கமாக மறுத்து விட்டார்.

ஆகவே தங்கள் குடும்பத்தினரைக் காப்பதற்காக அந்த யூதர்கள் விசா இன்றிப் பயணமானார்கள்.

அமெரிக்க தூதருக்கு இது தெரிந்தவுடன், அவர் உடனே வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு ஒரு கப்பலில் விசா இல்லாமல் சட்டத்திற்குப் புறம்பான முறையில் சிலர் அமெரிக்கா வருவதாகத் தகவலை அறிவித்தார். போரின் பயங்கரங்களை எல்லாம் மீறி ஒருவழியாக யூதர்கள் அமெரிக்காவை அடைந்தனர். ஆனால் அமெரிக்காவிற்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த துரதிர்ஷ்டவசமான யூதர்கள் அனைவரும் லண்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். லண்டன் எரிந்து கொண்டிருந்தது. அங்கே அகதிகள் முகாம்களில் அவர்கள் எரிந்து சாம்பலாயினர்.

இந்த விஷயம் தெரிந்தவுடன் லண்டனில் இருந்த யூத குரு  அங்கிருந்த அமெரிக்க தூதரிடம் வந்து கூறினார்:

“உங்களுடைய இந்த செய்கை உங்களது பதவிக்கு உகந்த ஒன்று அல்ல. நீங்கள் மனிதர் என்று அழைக்கப்படக் கூட லாயக்கில்லாத ஒருவர். நூற்றுக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் நீங்களும் உங்கள் வம்சாவளியினரும் பல தலைமுறைக்குச் சபிக்கப்பட்டவர்கள் ஆவீர்கள்”. இதைக் கூறிவிட்டு அவர் சென்றார்.

அந்த அமெரிக்க தூதரின் பெயர் ஜோ கென்னடி (JOE KENNEDY) அவர் தான் ஜாக் கென்னடியின் (JACK KENNEDY) தந்தை!

 3

இரண்டாம் உலகப் போரின் போது நடந்த இன்னும் ஒரு சம்பவம். லிதுவேனியா நகரம்.

அங்கிருந்த ஜப்பானிய தூதர் ஒரு கனவான். இரக்கமுள்ள மனிதர். நாஜிகள் செய்யும் அக்கிரமங்களை அவர் ஆதரிக்கவில்லை.  ஐரோப்பிய நீதி அமைப்பின் எதிர்காலம் பற்றி அவருக்குக் கவலையாக இருந்தது. அவர் தனது பதவி அதிகாரத்தை வைத்து யூதர்களுக்கு ஜப்பான் வருவதற்கான விசாக்களை வழங்கினார். ஜப்பானிலிருந்து அவர்கள் அமெரிக்காவிற்குச் சென்றனர். இதனால் பல்லாயிரக்கணக்கான யூதர்களை அவர் காப்பாற்றினார்.

இதைக் கண்டுபிடித்த ஜெர்மானிய அதிகாரிகள் உடனே அவரை அந்தப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்று கோரினர்.

ஜப்பான் நாஜிகளின் கூட்டாளி. ஆகவே ஜப்பான் வேண்டுகோளை ஏற்றது.

ஆனால் அவர் பதவிக் காலம் முடிய இன்னும் இரு வாரங்கள் இருந்தது. அந்த இரண்டு வாரங்களையும் பயன்படுத்தி நிறைய பேரை பணிக்கு அமர்த்தி  இரவும் பகலுமாக வேலை செய்து இன்னும் நிறைய பேருக்கு விசாக்களை வழங்கச் செய்தார். இதனால் இன்னும் ஏராளமான யூதர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டது.

இது மிகவும் அபாயகரமான ஒரு பணி தான். பிரமிக்க வைக்கும் ஒன்று!

வில்னா சினாகோக்கிலிருந்து (Vilna Synagogue) கிளம்புவதற்கு

முன்னர் யூதர்கள் அவருக்கு நன்றி சொல்ல அவரிடம் வந்தனர்.

“நீங்கள் யூதர்களுக்கு ஆற்றிய இந்தச் செயலை ஒரு போதும் மறக்கமாட்டோம். இந்தக் கடனை நாங்கள் நிச்சயம் உங்கள் வம்சாவளியினருக்கு ஈடு செய்வோம். கடவுள் உங்களையும் உங்கள் வம்சாவளியினரையும் ஆசீர்வதிப்பாராக” என்று உளமுருக அவர்கள் கூறிச் சென்றனர்.
இந்த அற்புதமான மனிதர் ஜப்பானுக்குத் திரும்பினார். அற்புதமான முறையில், அவருக்குத் தண்டனையாக அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதோடு அவர் பென்ஷன் மட்டுமே நிறுத்தப்பட்டது.


பதவியை இழந்த அவர் தனது குடும்பத்தினரைக் காப்பாற்றுவதற்காக ஒரு சிறிய பட்டறையை ஆரம்பித்தார்.

அவர் பெயர் மிட்சுபிஷி! (MITSUBISHI)
 
                                           4 

 
உக்ரேனின் சக்தி வாய்ந்த தலைவரின் சிலை ஒன்று கியவ் (KIEV) நகரின் மையத்தில் உள்ளது. அந்தத் தலைவரின் பெயர் போக்டன் கெமில்னிட்ஸ்கி.(BOGDEN KHMELNITSKY).

அவர் ஒரு அழகிய குதிரை மீது அமர்ந்து கொண்டிருக்கிறார். அவரது வலது கையில் ஒரு வாளைப் பிடித்திருக்கிறார். அந்த வாளின் நுனி ஆகாயத்தை நோக்கி இருக்கிறது. அவர் தான் உக்ரேனின் சுதந்திரத்திற்கான எடுத்துக்காட்டு. கெமில்னிட்ஸ்கி உக்ரேனியர்களின் பெருமிதத்திற்கான தலைவர். அங்கு வருகை புரிவோரெல்லாம் அந்த சிலையின் அழகைப் பார்த்து வியப்பர்.

ஆனால் பலருக்கும் அவர் செமிடிக் இனத்தவருக்கு எதிராக மிருகத்தனமாகச் செயல்பட்டவர் என்பது தெரியாது.

அவரது மனச்சாட்சிக்கு நன்கு தெரிந்தபடியே யூதர்களுக்கு எதிராக ஏராளமான நிகழ்வுகள் நடைபெற்றன. யூதர்களின் நகரங்களும் கிராமங்களும் எரிக்கப்பட்டன. அப்பாவியான ஏராளமான கொன்று குவிக்கப்பட்ட யூதர்களின் ரத்தம் கொட்டியது.

எதிர்காலத்தில் மேதைகளாகவும் சாதனையாளர்களாகவும் திகழக் கூடிய எத்தனை பேரை உலகம் இழந்ததோ!

அவரது இரக்கமற்ற அரக்க குணத்தால் பெண்களும் குழந்தைகளும் கூடத் தப்பவில்லை.

இது வரலாற்று உண்மை.

சபிக்கப்பட்ட கெமில்னிட்ஸ்கியால் உக்ரேனுக்கு பெரும் துயரம் ஏற்பட்டது.

ஆனால் ஒரு நகரத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு அவரது செயல் கொடூரமானதாக இருந்தது.

சினோகோக் என்ற அந்த நகரில் கெமில்னிட்ஸ்கியும் அவரது குண்டர் கூட்டமும் யூதர்களின் அனைத்து வீடுகளையும் தரைமட்டமாக்கியது. அவர்களின் சொத்துக்களைச் சூறையாடியது.

சிறுவர்களும் பெண்களும்சினாகோக்கிலிருந்து (Synagogue) தூக்கிச் செல்லப்பட்டு இரக்கற்ற முறையில் முற்றிலுமாக எரிக்கப்பட்டனர். ஒரு யூதர் கூட அங்கு உயிருடன் இல்லை; அங்கு மீதி இருந்தது அந்த நகரின் பெயர் மட்டும் தான்.

ஆனால் ஆண்டுகள் பல கழிந்து தண்டனை வந்தது.

அந்த நகரின் பெயர் செர்னோபில். அது தான் சினாகோக் இருந்த இடம்.

அங்கு தான் அணு உலைக் கூடம் அமைக்கப்பட்டது.

அங்கு தான் உலகின் மிக மோசமான அணு ஆயுத விபத்து ஏற்பட்டது.

ஆம், யூதர்கள் அழிக்கப்பட்ட அதே இடத்தில் தான் உலகின் மிக கோரமான விபத்து ஏற்பட்டது.

அது விளைவித்த அழிவு … வார்த்தைகளால் சொல்ல முடியாத ஒன்று!

5

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று சம்பவங்கள் வியப்பைத் தரும் உண்மை சம்பவங்கள்.

இவற்றினால் நாம் அறிந்து கொள்வது :-

நல்ல கர்மம் நல்லதைத் தரும்; தீய கர்மம் ஒரு போதும் அதைச் செய்தவரை விடாது. தீயதைத் தந்தே தீரும்!

இவற்றால் தனி நபர் விதி (Individual fate) மற்றும் கூட்டு விதி (Collective Fate) இரண்டையும் நன்கு அறிந்து கொள்ளலாம்.

பகவத்கீதையில் ஶ்ரீ கிருஷ்ணரின் ஒரு அருள் வாக்கை என்றும் நாம் மறக்கவே கூடாது :

ந ஹி கல்யாண க்ருத் கஶ்சித் துர்கதிம் கச்சதி …  

                 (அத்யாயம் 6 ஸ்லோகம் 40)

பொருள் : கல்யாண பாவனையுடன் – (நல்லதை விழையும் பாவனையுடன்) கர்மம் செய்பவன் (ஒரு நாளும்) – எந்த நிலையிலும் துர்கதியை அடைய மாட்டான்.

***

 Tags- கர்ம பலன்,  சம்பவங்கள்

புத்தக அறிமுகம் – 69

ஆங்கிலம் அறிவோமா?

நூலில் உள்ள அத்தியாயங்கள்

01)ஆங்கில மொழி விநோதங்கள்

02)சொற்கள் பிறந்த விதம்

03)பிழைகளைத் தவிர்ப்போம்

04)மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும்

05)சில வினாக்களும் விடைகளூம்

முதல் அத்தியாயமான ஆங்கில மொழி விநோதங்களில் உள்ள தலைப்புகள்:

 1)நூல் அறிமுகம்

 2)எழுத்தின் சிறப்புகள்

 3)ஐந்து வௌவல்

 4)பொருள் பொதிந்த பத்து வார்த்தைகள்

 5)சிறிய சொற்களே சிறந்தவை!

 6)பெரிய்ய்ய்ய வார்த்தைகள், நீளமான வார்த்தைகள்

 7)சிறப்பான சில வார்த்தைகள்

 8)வாக்கிய அமைப்பு

 9)மீண்டும் மீண்டும் வரும் வார்த்தைகள்

10)சக்தி வாய்ந்த ‘கமா’

11)எப்படியும் மாற்றலாம்!

12)அடிப்படைச் சொற்கள் 850! மொத்தச் சொற்கள் எட்டு லட்சம்! 13)மொழிபெயர்ப்புக் கலை

14)குறுக்கெழுத்துப் புதிர்

15)ANAGRAM

16)ஆங்கில எழுத்திலக்கணமும் உச்சரிப்பும் (ALPHABET) 17)PALINDROME

18)ஆங்கில உச்சரிப்பு

19)சொற்களின் மகிமை

20)DOUBLETS

21)OXYMORONS

22)PANAGRAM

23)TONGUE TWISTERS

24)பொருத்தமான பேச்சுக்கு ஒரு முடிவே இல்லை!             

**.

நூலைப் பற்றிய சிறு அறிமுகக் குறிப்பு:-

உலக மொழியான ஆங்கிலத்தைக் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல் இது! ஆங்கிலம் கற்பதற்கான ஆர்வத்தைத் தூண்டும் நூல்! ஆங்கில மொழி விநோதங்கள், சொற்கள் பிறந்த விதம், பிழைகளைத் தவிர்ப்போம், மரபுச் சொற்களும், மரபுத் தொடர்களும், சில வினாக்களும் விடைகளும் என்னும் ஐந்து அத்தியாயங்களில் ஆங்கில மொழியை அறிமுகம் செய்து வைக்கிறது இந்த நூல். அனாக்ராம், கிராஸ்வேர்ட் பஸில், கடினமான இருபது வார்த்தைகள், குயுக்தி வார்த்தைகள், Doublets, Oxymorons, Panagram, Tongue Twisters என ஆங்கில மொழியின் அருமையான பரிமாணங்களையும் ரொபாட், மெஸ்மரிஸம், சேண்ட்விச், ஏஒன், பிகினி, பாய்காட் போன்ற, ஏராளமான சொற்கள் தோன்றிய விதத்தையும் நூல் அழகுற விளக்குகிறது. ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் படிக்க வேண்டிய நூல்!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ஆங்கிலம் அறிவோமா? நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

Singapore, National Library இல் நிலாச்சாரல் வெளியீடுகள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 ———–