தமிழ் சினிமா பாடலில் ரிக் வேதம், காளிதாசன் தாக்கம் (Post No.10,930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,930

Date uploaded in London – –    3 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ

நுண் கொடி அதிரலொடு  நுணங்கு அறல் வரிப்ப

-அகநானூறு 237

கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ

வேனில் அதிரலொடு விரை இ

அகநானூறு 261

மள்ளர் அனன மரவம்  தழீஇ 

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்

–ஐங்குறுநூறு 400

xxx

உலகிலேயே மிகவும் பழமையான  நூல் ரிக் வேதம்; அதில் வரும் மந்திரத்தில் உள்ள வேத கால கடவுளர் அதே வரிசையில் கி.மு.1380 தேதியிட்ட துருக்கி நாட்டு கியூனிபார்ம் லிபி கல்வெட்டில் உள்ளது. இப்படித் தொல்பொருட் துறைச் சான்றும் இருப்பதால் உலகம் முழுதும் சம்ஸ்க்ருதம் பரவியது தெரிய வந்தது. அது மட்டுமல்ல; ரிக் வேதப் புலவர்கள் 400 பேரும் என்ன உவமைகளைப் பயன்படுத்தினரோ அவை அப்படியே சங்கத் தமிழ் நூல்களிலும் உள்ளது. 450 சங்கப்புலவர் எழுதிய 2500 பாடல்களில் 200 காளி தாசன் உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காளிதாசன் காலம் மன்னன் விக்ரமாதித்தனின் காலம் என்பதும் உறுதியாகிவிட்டது. அதாவது கிமு. முதல் நூற்றாண்டு . காளிதாசனும் சங்கத் தமிழ்ப் புலவர்களும் நமது தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஒரே உவமையைக் கையாளுவது இமயம் முதல் குமரி வரை ரிக் வேதப் பாடல்களின் தாக்கத்தைக் காட்டுகிறது

xxx

1973 — TAMIL FILM ஸ்கூல் மாஸ்டர் — மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஜானகியம்மா


பூங்கொடியே.. பூங்கொடியே..


பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ

பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக..
பார்க்கவோ பறிக்கவோ
சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனது என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போததோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ

XXXX

வசந்த ஊஞ்சலிலே

அசைந்த பூங்கொடியே

உதிர்ந்த மாயமென்ன

உன் இதய சோகமென்ன

உன் இதய சோகமென்ன

நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனோ

நாதியில்லை தேவியில்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா

நானும் வாழ்வை ரசிப்பேனா

XXXX

TAMIL FILM – AMARA DEEPAM

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓ..ஓஓ..

பூங்கொடியே நீ சொல்லுவாய்

XXX

கடைசியாக உள்ள அமர தீபம் படத்தில் காதலன், காதலி இருவரும் பூங்கொடியைப் பார்த்துப் பாடுகின்றனர் ; ஆனால் மாமரம் என்ற வரி வருகிறது. நிறைய தமிழ் திரைப்படப்பாடல்களில் பெண்ணை பூங்கொடி (புஷ்ப லதா) என்று வருணிப்பதைக் காண்கிறோம் . காளிதாசன்  தனது காவியங்களில் நிறைய இடங்களில் ஆண் மகனை மாமரம் என்றும் பெண்மணியை அதைக் கட்டித்தழுவும் பூங்கொடி என்றும் வருணிக்கிறார் அதற்குப் பின்னர் சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் இதே மரம், கொடி = காதலன், காதலி உவமையை, உருவகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்துக்கு ஊற்றாக விளங்குவது ரிக் வேத, அதர்வண வேத மந்திரங்களாகும்.

ஒவ்வொன்றாகக் காண்போம் :-

ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி  Sexy செக்சி உரையாடல் (10-10) மிகவும் பிரபலமானது.

பத்தாவது மண்டல பத்தாவது துதியில் 13, 14 ஆவது மந்திரங்களில் மரம்- கொடி உவமை வருகிறது. “உன்னை வேறு ஒரு பெண் மரத்தைக் கொடி தழுவுவது போலத் தழுவட்டும் என்று யமி திட்டுகிறாள். உடனே யமனும் அடுத்த மந்திரத்தில் அதே சொற்களைப் பயன்படுத்தி சகோதரியைத் திட்டுகிறான் ; சகோதர- சகோதரி உறவு கூடாது, சகோத்திர கல்யாணம் கூடாது என்பதற்காக அக்காலத்தில் யாக யக்ஞங்கள் முடிந்தவுடன் இதை நாட்டிய நாடகமாக நடித்துக் காட்டினார்கள்  .

வேதத்தில் கொடி என்பதற்கு ‘லிபுஜா’ என்றும் மரத்திற்கு ‘வ்ருக்ஷம்’ என்றும் புலவர்கள் பயன்படுத்தினர். பிற்காலத்தில் ‘லிபுஜா’  என்பதற்கு லதா என்ற சொல் பயன்பட்டது

அதர்வண வேதத்திலும் மரம்- கொடி (லதா) 6-8-1

ஒரு கொடி எவ்வாறு மரத்தின் எல்லா பக்கங்களிலும் படர்ந்து அணைக்குமோ அவ்வாறு நீ என்னைக் கட்டித்தழுவு; என் மீது எப்போதும் காதல் இருக்கட்டும்; என்னை எப்போதும் நீங்காதவளாக இருப்பாயாக.

இது நல்ல உவமை- மரத்தைச் சுற்றிப் படரும் கொடி எவ்வளவு காற்று, மழை அடித்தாலும் மரத்தோடு நிற்கும். மரம் விழுந்தால் அத்தோடு கொடியும் விழும். வேத கால புலவர்கள் எவ்வளவு உன்னிப்பாக இயற்கையைக் கண்டு ரசித்தனர் என்பது தெரிகிறது.

இது காளிதாசனுக்கும் மிகவும் பிடித்த காட்சி . மாமரத்தைக் கட்டி அணைக்கும் பூங்கொடியை அவன் பல பாடல்களில் பாடுகிறான்.

பெண்ணை பூங் கொடியாக வருணிப்பது விக்ரம ஊர்வசீய நாடகத்தில் வருகிறது. அங்கு உண்மையில் ஊர்வசியே கொடியாக மாறி விடுவதாக கதை போகிறது.

உலகப் புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் ப்ரியம் வதா என்ற தோழி, மற்றோரு தோழியான அனசூயாவிடம் சகுந்தலையைக் கிண்டல் செய் கிறாள் “அவளுக்குப் பிடித்த மல்லிகைக் கொடியையே சகுந்தலை பார்ப்பது ஏன் என்றால் அந்த மரத்தைச் சுற்றி படர்ந்த கொடி போல தனக்கும் ஒரு ஆண் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” .

(இதை அவளைக் காதலித்து மணக்கப் போகும் துஷ்யந்தன் மறைந்து இருந்து பார்க்கும் வகையில் அற்புதமாக அமைத்துள்ளான் காளிதாசன்).

XXX

புத்த மதத்தினருக்கு காதல் கீதல் எல்லாம் ரொம்ப தூரம்; ஸம்ஸ்க்ருதமும் ரொம்ப தூரம். ஆனால் பிராமணராக இருந்து புத்த மதத்திற்கு மாறிய அஸ்வகோஷர் புத்த சரிதம், ஸெளந்தரானந்தம் முதலிய ஸம்ஸ்க்ருத காவியங்களில் இந்த ‘மரம்- கொடி உத்தி’யைப் பயன்படுத்தினார் இதற்கெல்லாம் முன்னதாக மஹாபாரத வன பருவத்திலும் 3-12-12 இது உளது . கிர்மீர என்ற அரக்கனால் அச்சுறுத்தப்பட்ட காட்டில் மரங்களை நீண்ட கொடிகள் சிவப்பு  நிற மலர்களுடன் கட்டித் தழுவின என்று வியாசர் பாடுகிறார்.

மாமரத்தை அதிமுக்தா, மாதவி கொடிகள் சுற்றி வளைத்து படரும் காட்சிகளை காளிதாசன் மேலும் பல இடங்களில் பயன்படுத்துகிறான் .

ரிக் வேதம், அதர்வண வேதம் ஆகியவற்ரறில் வரும் இக்காட்சியைத் தமிழ்ப்புலவர்கள் படித்திருக்கலாம் ; கண்ணாலும் நேரில் கண்டு இருக்கலாம். இமயம் முதல் குமரி வரை, இந்துக்கள் சிந்தனை ஒன்றே! .  2000 ஆண்டுகளுக்கு முன்னர் வேறு  எங்கும் இதைக் காண முடியாது .

xxx

இதோ சங்கத் தமிழ் பாடல்கள் :-

அதிரல் கொடி

பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய இன்னும் ஒரு அகப்பாடலில் (அகம் 99)     அதிரல் பரந்த அம் தண் பாதிரி என்று கூறுவதால் அதிரல் கொடி , பாதிரி மரத்தில் படரும் செய்தி கிடைக்கிறது

சங்க இலக்கியப்  பாடல்களில் அதிரல் கொடி வரும் இடமெல்லாம், பாதிரி மரமும் வருவதால் பெரும்பாலும் அந்த மரத்தில் படரும் கொடியை தமிழர்கள் கண்டனர் என்பதை அறியலாம்

xxx

புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ

நுண் கொடி அதிரலொடு  நுணங்கு அறல் வரிப்ப

-அகநானூறு 237

பொருள்

பாடியவர் – தாயங் கண்ணனார் ; திணை – பாலை

அதிரல் = காட்டு மல்லிகை; அதி முக்தா ?

புல்லிய காம்பினை உடைய பாதிரியின்  நல்ல நிறமுடைய மலர்கள், மெல்லிய கொடியாகிய அதிரலோடு சேர்ந்து நுண்மையான மணலிடத்தே கோலம் செய்து கிடக்கும்.

xxx

கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ

வேனில் அதிரலொடு விரைஇ

—அகநானூறு 261

பொருள்

புலவர் – பாலை பாடிய பெருங் கடுங்கோ

இந்த வேனிற்காலத்தில் காட்டிலுள்ள பாதிரியின் ஒளியுடைய மலர்களை காட்டு மல்லிகை மலருடன் கலந்து அழகான கூந்தலில் செருகி, தேன் சிந்தும் வெண்கடம்ப மலர்களையும் சூடி (காதலனு ம் காதலியும் நடந்து சென்றனர் )

xxx

மள்ளர் அனன மரவம்  தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்

–ஐங்குறுநூறு 400

பொருள் :-

ஐங்குறு நூறு — புலவர் ஓதல் ஆந்தையார் – பாலைத் திணை

மரவம்  தலைவனுக்கும் ஆடுகொடி தலைவிக்கும் உவமை.

பெருமாட்டி ! வீரர் போன்ற மரவ மரங்களை  மகளிர் போலும் அசையும் கொடிகள் தழுவுகின்ற வேனில் பருவத்தில் வதுவை செய்துகொண்ட  மகள் இன்று வருவாள் என்று தூதர்கள் கூறுகின்றனர் என்று

செவிலி கூறினாள் . இதில் ‘உண்ணும் பொருள்களை உடைய வேனில்’, ‘மகள் ஆராய்ந்து அணிந்து கொண்ட கழல்’ , ‘சினமும் வேலும் உடைய காளை /ஆண்மகன்’ என்ற தாய்மொழிகளும் உள

மரவம் = வெண்கடம்ப மரம் ; வந்தன்று = வந்தது ; தூதே = தூதர் மூலம் வந்த தகவல்

–subham—

TAGS-  கொடி , மரம் , காளிதாசன் , ரிக்வேதம், சங்கத் தமிழ், சினிமா , பாடல்கள் , மாமரம்

KING DIED AND QUEEN FAINTED BECAUSE OF NEWSPAPER HEADLINES (Post.10,929)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,929

Date uploaded in London – –   3 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 50

COMPILED Kattukutty

Strange World! (விசித்திர உலகம்!)

One of the greatest messages ever received…

Disciple: “Master, what is the difference between Death and Moksha ” ?

Buddha: “When Breath stops, and Desire remains,
that is Death….
and
when Desires stop and Breath remains….
that is Moksha” !! 

*

 “Good decisions come from experience, and experience comes from bad decisions.”

*

A King enrolled his donkey in a race & won.
Local papers read:


‘KING’s ASS WON’


The king was so upset with this kind of publicity that he gave the donkey to the queen.
The local paper then read:


“QUEEN HAS THE BEST ASS IN TOWN”


The king fainted….


Queen sold the donkey to a farmer for Rs 1000. Next day papers read:

“QUEEN SELLING HER ASS FOR Rs 1000”


The queen fainted…


The next day king ordered the queen to buy back the donkey and leave it in jungle.


The Next Headlines:


“QUEEN ANNOUNCES HER ASS IS FREE & WILD”


The king died… !!

That’s how the Media works in India Today !!

*

*The contest was to describe peace, tranquility and happiness in minimum words.

*I just wrote “sleeping wife”.

*The judge gave me award with an emotional hug.

*

xxx

Read this

Last month a family from Tamil Nadu was on holidays in Australia.
Apart from his wife and two children, his old age mother also accompanied them.

They were traveling on one of the free ways.

This Tamil Family was in their car and was followed by a Local Aussie Lady, driving at a safe distance.

Suddenly the Aussie Lady saw a head of an old lady coming out of the window and vomiting blood.

She took a quick action and informed the 000 for help.

In no time, there appeared an Air Ambulance Helicopter.

The well trained staff quickly shifted that old lady on the stretcher. Oxygen supply started. Doctors started examining her. Sometime later, the old lady was declared safe and fit to travel again.


Kudos to Quick Help and Well Done The Aussie Lady.

But , for these services, our man had to pay AUD 3500.

With these unplanned heavy financial charges, our man was in shock and he blasted his Old Aged mother :

Mum! I told you not to spit chewed Betel Nut from running car!

*” ஏம்மா…வெத்தலையப்போட்டு எச்சில கார்ல இருந்து துப்பாதேன்னு சொன்னா கேட்கமாட்டியா?”*

                                                                       **
–suham—

 Tags – King, Queen, ASS, Newspaper


அதே கணவன்தான் வேண்டும்! படித்ததில் சிரித்தது! (Post No.10,928)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,928

Date uploaded in London – –   3 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 52

Compiled by Kattukutty

படித்ததில் சிரித்தது!

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம்
சொன்னார் ,

“பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி
பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும்
கணவனே , ஏழு ஜென்மத்துக்கும்
கணவனாக அவர்களுக்கு கிடைப்பான். ஆனால்
அதில் ஒரு சிக்கல் இருக்கிறது”.


என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .

“பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள். அதுதான் சிக்கல். இருவரையும்
திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..??”

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,

பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள், இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .
சித்திரகுப்தர், சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .

கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு
விடுவோம் என்று முடிவு செய்து ,
அவர்களிடம் பேசினார்கள்.


கணவன்மார்களில் ஒருவர், ஒரு யோசனை
சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர்
அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு
இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும்
இருக்க முடியாது என்று கூறிவிட்டு
இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார்.

இந்த தீர்வை, சித்திரகுப்தன் அந்த பெண்களிடம்
கூறினார் . அதற்கு அந்த பெண்கள்
சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டு விட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு *”அது”*..??

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம், பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால்
ஒரு நிபந்தனை, ஏழு ஜென்மத்திற்கும்
*அதே மாமியார்* தான் இருப்பார், அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் ….

” வாழ்க வளமுடன் “


* https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

*ஒரு டாக்டரின் புலம்பல்*

கண்ட எண்ணைலயும் பொரிச்ச வடையையும், சமோசவையும் சாப்பிடறானுவ..!

சாக்கடைக்கு பக்கத்தில உள்ள குழாயிலிருந்து எடுத்த தண்ணில முக்கிக் கொடுக்கற பானிபூரியை சாப்பிடறானுவ..!

பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமே வளர்க்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடறானுவ..!

டாய்லட் நல்லா கிளீன் பண்ணும்னு நிரூபிக்கப்பட்ட கோக்கையும், பெப்ஸியையும் குடிக்கறானுவ..!

தண்ணியடிக்கறானுவ..!,
சிகரட் குடிக்கறானுவ..!,

குட்கா.., பான்னு புகையிலையைப் போட்டு மெல்றானுவ..!

ரோட்டில புகைக்கு நடுவே ரெண்டு மணிநேரம் காத்தை சுவாசிச்சு வீட்டுக்கு வரானுவ..!

இவ்வளவும் பண்ணிட்டு, உடம்பு சரியிலலைன்னு இங்க வந்து நான் ஒரு மருந்து எடுத்துக்கொடுத்தா,
*” இந்த மருந்தாலே ஏதாவது SIDE EFFECT இருக்கா”*-ன்னு கேக்கறாயங்க. . .

முடியல…..

xxxxx

*tags –   டாக்டரின் புலம்பல், அதே கணவன்

ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல் போட்டி! (Post 10,927)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,927

Date uploaded in London – –     3 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொண்டைமண்டல சதகம் பாடல் 21

ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல் போட்டி!

ச.நாகராஜன்

குலோத்துங்க சோழன் அவையில் இரு பெரும் புலவர்களான ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் அரசவையை அலங்கரித்தனர்.

ஒட்டக்கூத்தர், புகழேந்தியார் ஆகிய இருவருக்கும் அடிக்கடி பாடல் போட்டி நடைபெறுவதுண்டு.

அதனால் மன்னரும் மற்றையோரும் தாம் பெற்ற தமிழ்ப் பாடல்களால் பெரிதும் மகிழ்ச்சி அடைவது வழக்கம்.

ஒரு முறை நெய்த்தானம் என்னும் ஊருக்குச் சென்ற குலோத்துங்கன் தம்முடன் இரு பெரும் புலவரையும் அழைத்துச் சென்றான்.

அங்கு ஈசனை தரிசனம் செய்யும் போது ஒட்டக்கூத்தரை கவி பாடுமாறு வேண்டினான் குலோத்துங்கன்.

அவர் அற்புதமான ஒரு பாடலைப் பாடினார். அடுத்து புகழேந்தியாரை வேண்ட அவரோ ஒட்டக்கூத்தரை விஞ்சுமாறு ஒரு பாடலைப் புனைந்து பாடினார்.

இது ஊரெங்கும் பரவ அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த அரும் சம்பவத்தைத் தொண்டை மண்டல சதகம் தனது 21 பாடலில் கூறிப் போற்றுகிறது.

நூலார்கலை வல்ல செம்பியன்கேட்ப நொடித்து  மிக்க

கோலாகலனொட்டக் கூத்தனையன்றுதற் கோலியென்று

மேலார்கவிசொல்லி நெய்த்தானத்தேசென்று வென்றுகொண்ட

மாலார்களந்தைப் புகழேந்தியுந் தொண்டை மண்டலமே

பாடலின் பொருள் :

இலக்கண நூல்களும் ஏனைய சாத்திரங்களும் கற்று வல்ல குலோத்துங்க சோழ மஹாராஜன் ஒட்டக்கூத்தப் புலவர் சகிதமாய், தன்னை அழைக்க நெய்த்தானம் என்னும் தலத்திற்குச் சென்று நெய்த்தானீசரைத் தரிசிக்கும் போது ஒட்டக்கூத்தரைக் கவி பாடச் செய்து தன்னையும்  பாடச் சொல்ல “தற்கோலி” என்னும் சிறந்த பாடலைப் பாடி, மிகுந்த மேன்மை உடைய ஒட்டக்கூத்தரை வென்றவராகிய புகழேந்திப் புலவர் வாழ்ந்த மேகம் தவழும் சோலை சூழ்ந்த களத்தூரும் தொண்டை மண்டலத்தில் உள்ள ஊராகும்.

இதில் கூறப்படும் பாடல்களைப் பார்ப்போம்.

ஒட்டக்கூத்தர் பாடிய பாடல் இது:

விக்கா வுக்கா வித்தா விப் போய் விட்டா நட்டார் சுட்டூர் புக்கார்

இக்கா யத்தா சைப்பா டுற்றே யிற்றே டிப் போய் வைப்பீர் நிற்பீர்

அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்

நெக்கா டக்கா னத்தோ டொப்பேர் நெய்த்தா னத்தானைச் சேவித்தே

கடினமான இந்தப் பாடலின் பொருள் வருமாறு:

விக்கா – விக்கல் கண்டு

உக்கு – அஞ்சி நடுநடுங்கி

ஆவி தாவி போய் விட்டால் – உடலிலிருந்து ஆவி அப்புறப்பட்டு உடலை விட்டுப் போய் விட்டால்

நட்டார் – (முன்னர் பிரியாமல் இருந்த) தாய் தந்தை முதலிய சுற்றத்தார்

சுட்டு ஊர் புக்கார் –  உடலைச் சுட்டு விட்டு தம் ஊருக்குத் திரும்பி வாழ்வர்

இக் காயத்து ஆசைப்பாடு உற்று – இந்தத் தன்மையை உடைய உடலின் மீது ஆசைப்பட்டு

இல் தேடிப் போய் வைப்பீர் நிற்பீர் – அதனை போஷிக்க நித்தம் பொருளைத் தேடி அறம் செய்யாமல் அதனை வீட்டில் புதைத்து வைக்கின்றவர்களே

அக்கு ஆட – அக்குமாலை அசைந்தாடவும்

பேய் தொக்கு ஆட – பேய்கள் கூடி ஆடவும்

சூழ் அப்பு ஆட – ஜடா மகுடத்தில் இருக்கும் கங்கை ஆடவும்

பூண் நெக்கு ஆட – காதில் அணிந்த சர்ப்பக் குழைகள் நெகிழ்ந்து ஆடவும்

கானத்து ஆட போம் – மயானத்திலே அடுகின்ற

அ பேர் நெய்த்தானத்தானை – அந்தப் பெரிய நெய்த்தானம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள பரமசிவனை

சேவித்தே– வணங்கி நிற்பீர்

இதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். உடனே புகழேந்தியார் தன் பங்கிற்கு இந்தப் பாடலைப் பாடினார்:

தற்கோ லிப்பூ சற்பா சத்தே தப்பா மற்சா கைக்கே நிற்பீர்

முற்கோ லிக்கோ லிப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர்

வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூ கத்தே றித்தா விப்போய்

நெற்றா ளுற்றா லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைத்தி யானித்தே

ஒட்டக்கூத்தர் எந்தப் பொருளை மையமாகக் கொண்டு நெய்த்தானத்தானைப் பாடிப் பரவினாரோ அதே பொருளை மையமாகக் கொண்டு அதை விட கடினமான நடையில் பாடி நெய்த்தானத்தைப் பாடி பரவிய புகழேந்தியாரின் திறத்தையும் மேன்மையையும் கண்ட சோழன் வியந்து பாராட்டினான்.

பாடலின் பொருள் வருமாறு:

தன் கோலி – இருவினைகள் தன்னை வளைத்துக் கொள்ள

பூசல் பாசத்தே – * பாசத்திரயமாகிய போராட்டத்தில் அகப்பட்டு

தப்பாமல் சாகைக்கே நிற்பீர் – தப்பாமல் சாகும் படி நிற்பவர்களே

முன் கோலி கோலி -முந்தி விரைந்து

முட்டாமல் பூசித்து – மந்திர தந்திர வழுவு வராமல் பூஜை செய்து

சேவித்து – வணங்கி

வற்றா நெடு ஓடை – வற்றாத நெடிய நீரோடைகளில் உள்ள

பாரைச் சேல் – பாரை மீன்கள்

மைபூகத்து – மேக மண்டலத்தை அளாவி இருக்கின்ற கமுக மரத்தில்

தாவி ஏறிப் போய் – தாவி ஏறிச் சென்று

(பாக்குகளை உதிர்த்து அங்கிருந்து திரும்பி)

நெல் தாள் உற்று – நெல்லின் அடியில் விழுந்து  (இந்த நெற்கதிர்களைச் சிதறி)

ஆலை பாகில் சேர் – ஆலையாடிக் காய்ச்சப்படும் கரும்பின் பாகில் பாய்கின்ற வளப்பம் மிகுந்த

நெய்த்தானத்தானைத் தியானித்தே – நெய்த்தானத்தில் எழுந்தருளி இருக்கும் பரம்சிவனைத் தியானித்து நிற்பீர்களாக!

* பாசத் திரயம் என்பது மண், பெண், பொன் என்ற மூன்றில் ஆசை

அருமையான இந்தப் பாடல்களின் சரிதத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது தொண்டைமண்டல சதகம்!

***

TAGS– ஒட்டக்கூத்தர், புகழேந்தி, குலோத்துங்க சோழன், பாடல் போட்டி

SEA IN BRAHMINS’ DAILY PRAYER! (Post No.10,926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,926

Date uploaded in London – –    2 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

I have been writing about Brahmins’ wonderful culture of preserving the past customs. In all the Pujas and religious performances, they do ‘Sankalpa’ (uttering the purpose or aim) in which they say where and when they perform that ritual. Nowadays you need google map to say all these things. But Brahmins, by word of mouth, spread it and did it for a long time. Hindus  must follow five rules to write a mythology and two of them are about History and Geography (Puranam Pancha lakshanam).

xxx

I have been reading a book on Sea in Sanskrit literature written by university scholars. It is very informative, but lacking in practical knowledge of Hindus .

I can compare it to one of my job interviews, where I failed to get the job. I applied for a top post in administration ; when I failed to get the job I asked for feed back of my performance. They informed my manger where I was very weak. I answered all questions except budgeting and finance. The reason being I never did this in my previous jobs. They tried very hard to get the exact words from me like Budget, Income and Expenditure statement, Balance sheet etc. I never used any of these words in my reply. That reflected my weakness in that area. Once you don’t practise onething it would not come naturally.

Foreigners who commented on Hindu scriptures lacked practical knowledge. Some idiots have been writing for long that Vedic Hindus did not know sea at all. Sindhu meant both river and sea in Sanskrit . But their argument is that Hindus knew only river Sindhu (Indus). If one looks at Tamil or Sanskrit dictionary, one would be amazed to see 20 to 30 meanings for one word. Some meanings may be quite contradictory.

If we apply this argument (i.e Sindhu is river only ) to Tamil literature, then no one can connect Tamils with Indus Valley Civilization. Tamils did not know Indus River or that area 2000 years ago. No where in Tamil Sangam literature we find anything about River Indus; but they sing about the glory of Himalayas and River Ganga. Sangam Period Tamils had no word for heart that pumps blood. You can’t say heart operation in Tamil. That doesn’t mean Tamils did not know heart at all.

In short, we need secondary evidence to support our argument. In the Rig Veda Asvins’ great adventure of rescuing Bhujyu from the sea is repeated by many seers. Sea is known to all Hindus.

But the amazing thing about those several thousand-year-old Vedas is that the Brahmins’ Daily Prayer to Sun called Sandhyavandana has sea in it. They have to do it three times a day depending upon the position of the sun.  They use Vedic mantras to sing about mountains, seas, rivers, and seers in them.  They cant do it without water. That shows that they were not from cold countries. From birth to death, Hindus need water for all the rituals. Westerners from cold countries wear even dirty shoes in the Church. But Hindus never do it. Because their religion emanated in tropical countries, they wash their feet and enter the temple.

Brahmins invoke the Goddess Gayatri from the top of a mountain and ask her to return to the peak after the prayer. In the same way they use the famous simile Akaasaat Patitam Toyam Yathaa Gachchati Sagaram = “like all the rain water that fall from the sky reach the ocean ultimately, let all my prayer should reach You (the God)= Sarva Deva Namaskarah Kesavam Prati Gachati.

xxx

The words used by Kalidasa for SEA in his works are:

Saagara

Samudra

Arnava

Mahaarnva

Udadhi

Mahodadhi

Udanvat

Lavanaambhas

Varunaalaya

Ratnaakara

Amburaasi

Nadiipati

Saritaam pati

There are many other words in later literature.

xxx

The rivers /sindhu flowing into the sea/Samudra are mentioned in the Rigveda many times

Rigveda 6-56-3; 8-92-22; 9-108-16; 9-88-6; 8-44-25; 8-6-4

In the Vedas, Kalidasa and Sangam Tamil literature the rivers are women and the sea is Man; so all the women are going to mingle or meet with the man. Words Saritaampati and Nadipati (sea= Lord of the Rivers) confirm it.

Ancient Tamils follow other things said in the Vedas as well such as Moon=man, Stars= women; Tree=Man, Creepers or climbers=women)

This shows that from Himalayas to Kanyakumri the approach is same for thousands of years.

xxx

Coming back to the knowledge of sea of Vedic Hindus which the Brahmins use it even today, I would like to point out the following mantras:-

1.Aakaasaat patitam toyam yathaa gachchati saagaram, sarva deva namakarah, Kesavam pratigachchati=  Like the water from the sky (as rivers)reach he ocean all the prayers reach Lord Vishnu.

This simile Akaasaat patitam Toyam is in Bhagavad Gita (11-28) and Tamil literature as well.

2.In the Mid Day Prayer these lines are in one of the mantra (aasatyena rajasaa……..)

Ya udagaan mahatornavaad- vibhraaja maanas, sareerasya madhyaath, sa maa vshabhaha lohitaakshaha sooryo vipaschin manasaa punaatu

Meaning

May my mind be fully sanctified by that sun god who confers all wishes, who has red eyes, who knows everything and who rises from the WATERS OF THE OCEAN SHINING IN ALL DIRECTIONS.

The Vedic mantras are intermingled with a Brahmin’s life. He recites the selected mantras from at least three Vedas. In fact, the Gayatri mantra is in all the four Vedas. So one can claim he recites all the four Vedas every day. The sikhara/peak and Samudra, Arnava reflect their knowledge in geography. Though Varuna mantra recited in the daily prayer of a Brahmin doesn’t mention sea, all the Hindus know Varuna is the Lord of the Sea.

MY EARLIER ARTICLES ON SEA

SEA IN KALIDASA & TAMIL LITERATURE

https://tamilandvedas.com › sea-in-ka…

29 Mar 2012 — Tamil poet Paranar said the same thing when he sang that the sea neither shrinks because the clouds drink its waters, nor swells because the …

Sea in Vedas

https://tamilandvedas.com › tag › sea-in-vedas

14 Apr 2015 — Posts about Sea in Vedas written by Tamil and Vedas. … Sea Travel and Ship and the Rig VedaRig Veda is the oldest book in the world …


sea goddess | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sea-goddess

21 Jul 2020 — Tamil word ‘Neer’ for water is in the Rig Veda according to scholars of yester years. This water nymph references blasts their theory and shows …

VEDIC HINDUS DOMINATION OF MIGHTY OCEAN-30 …

https://tamilandvedas.com › 2020/10/31 › vedic-hindus…

31 Oct 2020 — VEDIC HINDUS DOMINATION OF MIGHTY OCEANSEA IN THE RIG VEDA– 30 QUOTATIONS. NOVEMBER 1 SUNDAY. AS RIVERS TO THE OCEAN – 6-36-3.

—subham—

யமா-யமி SEXY செக்சி உரையாடல் பகுதி -2 (Post No.10,925)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,925

Date uploaded in London – –    2 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக்வேதம் 10-10-9

யமா-யமி YAMA- YAMI SEXY DIALOGUE செக்சி உரையாடல் பகுதி -2

தன்னுடன் படுக்க வரமாட்டேன் என்று சகோதரன் யமன் சொன்னவுடன் யமிக்கு கோபம் வந்தது. கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்கிறாள் :-

அவன் மீது சூரியன் ஒளி விழுந்து அவனை வெளிச்சம் போட்டுக் காட்டட்டும் ; இரவும் பகலும்  வானமும் பூமியும் கொஞ்சிக் குலவட்டும்; நட்புணர்வு அற்ற யமனை யமி பொறுத்துக் கொள்வாளாக .

அடுத்த மந்திரம் – யமன் சொன்னது:-

(நீ சொன்னபடி செய்தால் ) சொந்தக்காரர்களே பொறுத்துக்கொள்ள முடியாதபடி, ஏற்க முடியாத செயல்களை, அண்ணன் – தங்கைகள் செய்யத் துவங்குவார்கள். அழகியே; வேறு ஒரு ஆண் மகனை நாடு; அவனைக் கைகளுக்கு அடியில் அணைக்கும் தலையணை போல பயன்படுத்து .

11- ஆவது மந்திரம் ( ரிக் 10-10-11)

சகோதரிக்கு ஆதரவு தராமல் ஓடிப்போகும் அந்த சகோதரன் எவன்? சகோதரன் இருந்தும் கஷ்டப்படும் அந்த பரிதாபத்துக்குரிய பெண் யார்? காதல் கனிந்ததால் நான் பேசலுற்றேன்; அருகே வா; கட்டியணைத்துக்கொள்.

12-ஆவது மந்திரம்

நான் உன்னுடன் இணையக் கூடாது ; ஒருவன் சகோதரியுடன் படுத்தால் அதை உலக மக்கள் பாவம் என்று ஏசுவார்கள்  உனக்கு என்ன இன்பம் தேவையோ அதை மற்றவருடன் அனுபவி. உன்னுடைய சகோதரன் இந்த மாதிரி தகாத வார்த்தைகளை  சகோதரியிடம் எதிர் பார்க்கவில்லை.

உடனே யமி கோபத்தில் கத்துகிறாள் —

சீ சீ ; நீ ஒரு பயந்தோளி ; கோழை ! உன் உடலுக்குள் இதயம் என்பதே இல்லை போலும் ; ஒரு மரத்தைக் கொடி சுற்றுவது போலவும், ஒரு குதிரையின் கழுத்தில் சேணத்தின் வளையம் தொங்குவது போலும் உன்னை மற்றோரு பெண் கட்டிக்கொள்ளப் போகிறாள்.

கடைசி மந்திரம் (14)

யமீ ! நீ மற்ற ஒரு ஆளை கட்டி  அணை ! அவன் உன்னை மரத்தைச் சுற்றிப் பற்றும் கொடி போல காட்டிக்கொள்ளட்டும் ; நீ அவனது இதயத்தைக் கொள்ளை கொள் ; அவன் உன் வலையில் விழட்டும் ; அவன் உன் ஜோடியாகத் திகழட்டும்

இத்தோடு ரிக் வேத துதியின் (10-10) 14 மந்திரங்களும் முடிந்துவிட்டன.

(இதில் முக்கியமான ஒரு உவமை வருகிறது ஆண் = மரம், பெண் = கொடி ; இந்த வேத உவமையை ,அப்படியே காளிதாசன் முதல் சங்கத் தமிழர் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர் ; இந்துக்கள் இமயம் முதல் குமரிவரை ஒரே சிந்தனை உடையவர்கள்  என்பதை இது காட்டும்; அது பற்றி தனியாக எழுதுகிறேன்) .

இதன் தாத்பர்யம் என்ன? உட்கருத்து என்ன? இப்படி கோடிப் பேரில்  ஒருவருக்கு எண்ணம் உதிக்கலாம். அதை பத்திரிகையில் நாம் தினமும் படிக்கிறோம். இதைச் செய்யக்கூடாது என்பதே நீதி.

திருவள்ளுவர் ‘வரைவின் மகளிர்’ என்று தேவுடியாள் prostitutes  பற்றி ஒரு சாப்டர் chapter எழுதுகிறார். இன்னும் பல குறள்களில் இருமனப் பெண்டிரை women with two minds  ஏசுகிறார் . தமிழர்கள் அப்படிப்பட்ட கீழ்ஜாதியா? இல்லையே! அப்படிப் போகக்கூடாது என்பதே அவர் சொல்லும் நீதி. சங்க இலக்கியத்தில் உள்ள 2500 பாடல்களில் 10 சதவிகித பாடல்களில் தமிழர்கள்  பரத்தையுடன் படுத்துவிட்டு வீட்டுக்கு வருவதும் மனைவியர் கதவைத் தா ழிட்டுப் புலம்புவதையும் படிக்கிறோம் ; அப்படிச் செய்தால் மனைவிமார்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்பதைக் காட்டவே புலவர்கள் அப்படி கற்பனை செய்கிறார்கள். அது போலவே ரிக் வேத்தில் வரும் செக்சி பாடல்களும் சமுதாயத்தின் தீமைகளை  எடுத்துரைக்கின்றன.

அது சரி, நெருப்பில்லாமல் புகையுமா ? என்னு சிலர் வினா எழுப்பலாம். உண்மைதான்; எகிப்தியர்கள் இப்படி சொந்த சகோதரிகளையே மணந்தனர் ; காம்பீஸஸ் Cambyses  என்ற பாரசீக மன்னன் இப்படி சகோதரியையே மணந்தான் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். வெள்ளைக்காரர்கள் இப்படிச் செய்வது இப்போது பத்திரிகைகளில் வருகிறது. அதாவது ஒரே பெண் பல ஆண்களை divorce டைவர்ஸ் செய்துவிட்டு பலரை அடுத்தடுத்து மணப்பதால் ஒருவருக்குப் பிறந்தவரை கணவரோ மனைவியோ கட்டிக்கொள்கின்றனர். பிரபல நடிகை எலிசபெத் டெய்லருக்கு எட்டு கணவர்கள் என்பதை அறிவோம். யாருக்குப் பிறந்த ஆண் அல்லது பெண்ணை யார் மணக்கிறார்கள் என்று பத்திரிகையில் படிக்கும்போதுதான் தெரியும்.

இந்த உரையாட பகுதிகள் நீண்ட உரை நடையுடன் , வசனங்களுடன் நடத்தப்பட்ட நாடகங்கள் என்பது இப்போது ஆராய்ச்சியில் தெரியவருகிறது. புருருவஸ் – ஊர்வசி  sexy செக்சி உரையாடல்களை காளிதாஸ் போன்ற உலக மஹா கவிஞன் விக்ரம ஊர்வஸீயம் என்ற நாடகமாக வடித்தது இதற்குச் சான்று பகரும்.

செக்ஸ் sex பற்றியே புஸ்தகம் எழுதும் சில கீழ்ஜாதிப் பெண்களும் ஆண் ஜாதி கீழ்மகன்களும் ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகம்; அதுகள் ரிக் வேதம் பற்றி ஆயிரக்கணக்கில் புஸ்தகங்களை கட்டுரைகளையும் எழுதியுள்ளன . அவைகளை மட்டும் படிப்போரின் ரத்தமும் கெட்ட ரத்தம் ஆகிவிடுவதால் நாம் இவைகளின் உட்கருத்தை தமிழ் இலக்கியக் காட்சிகளுடன் ஒப்பிட்டு விளக்க வேண்டும்.

அதாவது எழுத்தை மட்டும் வைத்து கன்னா பின்னா என்று எழுதி டாக்டர் பட்டம் வாங்காதே ; உண்மை நிலை அதுவல்ல என்பதைச் சொல்ல வேண்டும் ஏனைய மதப் புஸ்தகங்களிலும், மதத் தலைவர்கள் வாழ் விலும் புஸ்தகங்களிலும் இத்தகைய விஷயங்கள் இருந்தபோதும் அதை வெளிநாட்டார் கதைக்க மாட்டார்கள்;

கிரேக்க நாட்டில் மிகப்பெரிய தெய்வம் ஸூ ஸ் ZEUS ;அவர் சகோதரி HERA ஹீராவையே மணக்கிறார். இருவரும் CHRONOS  க்ரோனோஸுக்குப் பிறந்தவர்கள் அவர்களை யாரும் கண்டித்து எழுதவில்லை. பைபிளில் ADAM AND EVE ஆதாம் – ஏவாள்  கதையும் இதைப் போன்றதே .

யம YAMA என்ற சொல்லுக்கே அடக்கம் – புலன் அடக்கம் என்பதே பொருள்; யோகம் பயில்வோருக்குத் தெரிந்த விஷயம். . மிருகங்களில் பல விநோதப் பழக்கம் உடையவை. கணவனுடன் கூடிய பின்னர் கணவனையே சாப்பிடும் சிலந்திப் பூச்சிகள்; பிறந்த குட்டிகளில் சிலவற்றைச் சாப்பிடும் பிராணிகள் என்று புஸ்தகத்தில் படிக்கிறோம். அவைகளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் நீதி நெறி முறைகள், சட்ட திட்டங்கள் ஆகும்; நீதிகளை விளக்க வந்ததே வேதங்கள். முழு அர்த்தம் தெரியாத மார்க்ஸீயங்களும் திராவிடங்களும் விஷம் கக்கும் போது , வெளிநாட்டு கீழ்ஜாதிகள் புஸ்தம எழுதும் போது, அவர்களுடைய புஸ்தகங்கள், சங்கத் தமிழ் பாடல்களைக் கொண்டு அவர்களுக்கு நீதி புகட்ட வேண்டும் .

இந்துக்களில், குறிப்பாக பிராமணர்களில், சகோத்திர கல்யாணம் தடை  செ ய்யப்பட்டுள்ளது . ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் சகோதர , சகோதரிகள் என்பதே இதன் கருத்து

ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் கூறுகிறது-

சகோத்ராய துதித்தராம் ந ப்ரயச்சேத்

SAGOTRAAYA DUTHITARAM NA PRAYACCHET

த்யாத் விவேத என்னும் சம்ஸ்க்ருத நீதி மஞ்சரி  இது பற்றிக் கூறுவதாவது —

சம்சாரே  அஸ்திரதாம் த்ருஷ்ட்வா நைனஹ குர்யன் மஹாநபி

பகினி போகம் பாபம் யமோராஜாபி ந கரோத்

SAMSAARE ASTHIRATAAM DRSTVAA NAINAHKURYA MAHAANAPI

BHAGINI BHOGAM PAAPAM YAMORAAJAAPI NA KAROY

பொருள்

உலகத்தின் நிலையற்ற தன்மையை உணர்ந்த பெரியோர்கள் தீய செயல்களைச் செய்யமாட்டார்கள் ; எம ராஜனும் கூட , பாவம் என்று அறிந்து , சகோதரியுடன்  உறவுகொள்ள மறுத்துவிட்டான் .

இறுதியாக எல்லா மத நூல்களும், பெரியோரின் வாழ்வில் வந்த தீய எண்ணங்களை அரக்கன், சாத்தான், மாரன் என்று வருணிப்பதையும் அதை அவர்கள் எப்படி வெற்றி கொண்டனர் என்பதையும் எழுதியுள்ளன. அது போன்ற தீய எண்ணத்தையே யமி YAMI என்ற பெயரில் வேதங்கள் கூறின என்றும் அதற்கு மருந்து  யம= அடக்கம் என்றும் தத்துவார்த்த விளக்கமும் உளது .

வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே- வெற்றி

எட்டு திக்கும் எட்ட கொட்டு முரசே- மஹா கவி பாரதியார்

–subham–

TAGS- யமா, யமி , YAMA- YAMI SEXY DIALOGUE , செக்சி, உரையாடல் பகுதி -2

Give without Remembering; Take without Forgetting (Post No.10,923)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,923

Date uploaded in London – –   2 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Let us pray for each other to have a day filled with happiness,

Health, safety,abundance, peace and love.

xxx

LISTEN TO YOUR SOUL, IT IS OLDER THAN YOUR HEART,

AND WISER THAN YOUR MIND!!!

xxxx

Junk material is as follows

Dear friends, it is my sincere request to reject English terminology

For you dharmic tweets for eg;

1.use ‘mandir’ not temple. Temple is the word used by jews

For their praying space.

2.use ‘bhagwan’or ‘praphu’; not lord, lord means powerful officer.(கோர்ட்டில் my lord என்று ஜட்ஜை குறிப்பிடுவதை கவனிக்கவும்)

3.use ‘baktha’ instead of devotee, devotee means-some one

Interested or enthusiastic about it.

4.use ‘dharma’, not religion, religion means a cult nothing more than that.

5.use ‘moksha’ not salvation, salvation means away from harm.

6.use vrat (விரதம்) not fasting, fasting means not eating for sometime,

It doesn’t ‘sankalp’.

7.use prarthana not pray, pray is simply asking for help.

A WORD CHANGES THE ESSENCES EMOTIONS.

***

DONT LOOK BACK, YOU ARE NOT GOING THAT WAY!!!

Every sun rise delivers opportunities, while every

Sun set asks what we did with opportunities.

Make the best today!!!

Never mix your words with mood.

Because you will have many options

to change your mood, but you will

Never get any options to replace

Your spoken words………

xxx

Happiness keeps you sweet!!

Trials keeps you strong!!

Sorrows keep you human!!

Success keep you glowing!!

But only

Faith keeps you going!!

Live simply, walk humbly, and

Love genuinely!!!

Xxx

We come from nothing, we go with nothing,

But one great thing that we can achieve in

Our beautiful life is……a little remembrance

In some ones mind and a small place in

Someones heart!!!

xxxx

SUCCESS

success will never lower its standard

To accommodate us, we have to rise

our standard to achieve it.

xxx

Give without remembering

and take without forgetting !!!

to be continued……………………..

தெருக்குறள்—வெள்ளத்துப்பால் (Post No.10,922)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,922

Date uploaded in London – –   2 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 49

Kattukutty

மாற்றி யோசிக்கணுங்க!

This message is fun to read and also says there is also different ways to approach an issue


ஒரு சிந்தி மார்வாரி ஒருவரிடம் கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார்.

மறுநாள் கடைத்தெருவில் சிந்தி போய்க் கொண்டிருந்த போது மார்வாரி அவரை சந்தித்தார். “அப்பவே சொல்ல மறந்து போய்ட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு வித்தது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.

மார்வாரியிடம், சிந்தி தயங்காமல் “நேத்து நானேஉங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் தண்ணீர் வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலிபண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்” என்றாரே பார்க்கலாம்.

***
திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்*

“இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு
*முதல் மந்திரி*
உங்க மாமனார்தான். அவர்தான் .
*பாதுகாப்புத் துறை,*
*வெளியுறவுத்துறை* எல்லாம் கவனிச்சுக்குவார்.

“இங்க நான்தான்
*துணை முதல்வர்.*
*உள்துறை,*
*நிதித்துறை,*
*ஜவுளித்துறை*
எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும்.

“என் மகன் அதாவது
உன் வீட்டுக்காரன்தான்
*தொழில் துறை,*
*போக்குவரத்துத் துறை,*
*வீட்டு வசதித்துறை*
எல்லாம் பாத்துக்குவான்.

“என் மக, அதாவது உன்னோட நாத்தனார் சிறப்புத்திட்டங்கள்
*செயலாக்கத் துறையையும்,*
*விளையாட்டுத் துறையையும்*
பாத்துக்குவா.

*நீ எதைப் பாத்துக்கறே சொல்லு…???*
உனக்கு
*உணவுத்துறை,*
*சுகாதாரத்துறை,*
*குடும்ப நலத்துறை*
எல்லாம் ஒதுக்கலாமுன்னு இருக்கேன்;
*சரிதானா…???*

சிரித்துக்கொண்டே
*மருமகள் சொன்னாள்*
“ஐயோ அத்தை;
பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு எதுக்கு…???
நீங்களே எல்லா நிர்வாகமும் பண்ணுங்க.

*நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்*
அப்பதான் அடிக்கடி வெளிநடப்பு செய்ய முடியும்…

*கொய்யால யாருகிட்ட*

                                                                                  ***

 
கணவன் :- கொஞ்சம் வெளிய போயிட்டு வரேன்

மனைவி :- எங்க என்ன விஷயமா போறீங்க?

கணவன் :- எனக்கு அறிவுக்கான விளக்கமும் என் வாழ்வில் அதற்கான தேவையைப் பற்றியும் தெரியவேண்டும். என் மனம் நிறைவடைந்திருப்பதை உணரவேண்டும், கடவுளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு என்னைச்சுற்றியுள்ள தெய்வீக சக்தியை உணரவேண்டும்

மனைவி :- தண்ணியடிக்கவா? தெளிவா சொல்லித் தொலைங்க…

மனைவிடா 

                                                                   ***

தெருக்குறள்—வெள்ளத்துப்பால்



தமிழில் ஒன்றேமுக்கால் அடியில் டிவிட்டரை அந்த காலத்துலேயே தட்டிவிட்ட வள்ளுவர் இன்று இருந்து சென்னையை உலுக்கிய மழைவெள்ளத்தை அனுபவித்திருந்தால் எந்த மாதிரி குறள் எழுதியிருப்பார்…ஒரு கற்பனை



மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
‘போட்’டினில் பின் செல்பவர்
———-
வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்சேரியில் வீடு கட்டியோர்
———————
மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார்…இளைத்தார்
கீழ்போர்ஷனில் குடி இருப்ப்வர்.
————————-
நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக.
ஜலம் உள்ளே வருமாவென !
—————————–
சம்சாரம் தந்திடுமே துன்பம் புயல்மழையால்
மின்சாரம் போயினும் அஃதே !
————————-
வெள்ளத்தால் வந்திடும் துயரம் – நல்ல
உள்ளத்தோர் உதவா விடின்
—————————-
நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின்
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.
———————————
ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால்
நாறிடும் பிழைப்பு என்றறி.
———————————————-
தண்ணீராய் செலவழித்து கட்டிய வீடுதனில்
தண்ணீரே நுழைந்தது பார்,
———————————————-
ஆஸ்தியென ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்
————————————————————
இருளில் தவிப்பது துன்பமதனினும் துயரம்
பொருள்கள் பாழாகும் நிலை

To be continued……………………………

 tags-  தெருக்குறள், வெள்ளத்துப்பால்

வாழ்க்கைத் தத்துவம்: ஊசி ஓட்டையிடுகிறது. நூல் அதை அடைக்கிறது (Post No.10,921)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,921

Date uploaded in London – –   2 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 48

Kattukutty

அம்மா – ஏண்டா முடிய நீளமா வளர்த்துகிட்டு

ரப்பர் பேண்டெல்லாம் போட்டுட்டு அலையற……

பையன் – இதுதாம்மா இப்ப பேஷன்……

அம்மா – நாயே …. உங்ங அக்காவ

பொண்ணு பாக்க வந்தவங்க உன்னே

பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு

போயிருக்காங்க………

XXX

புருஷன் – வர வர நீ கோட்ஸேயாக மாரிட்டு வர பரிமளம்

எனக்கு பிடிக்கலே,………

என்னங்க சொல்றீங்க ??? புரியலையே???

என்பர்ஸுல இருக்கற காந்தியெல்லாம்

ஒவ்வொண்ணா சுட்டுகிட்டு இருக்கேன்னு

சொல்லறேன்……

XXXX

ஜெமோ கென்யாட்டா – கென்யாவின் முதல் ஜனாதிபதி

மிஷனரிகள் வந்தபோது ஆப்ரிக்கர்கள் நிலம் வைத்திருந்தனர்.

அவரகள் கண்களை மூடி பிரார்த்தனை செய்வது எப்படி என்று

கற்றுக் கொடுத்தனர். கணகளை திறந்த போது மிஷனரிகள்

நிலம் வைத்திருந்தனர். நாங்கள் பைபிளை வைத்திருந்தோம்!!!

XXX

ஜூனியர் டாக்டர் ஒருவர் நோயாளியிடம் :

உன்னுடைய வியாதியெல்லாம் போக

வேண்டுமென்றால் உன்னுடைய பற்களை எல்லாம்

எடுக்க வேண்டும்

நோயாளி தன் பல் செட்டை வாயிலிருந்து கழற்றி

டேபிள் மேல் வைத்து விட்டு சிரி சிரியென்று சிரித்தார்!!!

XXX

ஒரு பெண் தொலை பேசியில் :

சார்…..என். குழந்தைகளில் ஒருவனுக்கு நீங்கள்

தந்தை என்பதால் நான் உங்களை சந்தித்து

பேச விரும்புகிறேன்.

இவன் – ஓ மை காட்,…….ரம்யா???

அவள் – இல்லை

இவன்- கீதா???

அவள் – இல்லை

இவன் – உமா???

அவள் – (குழம்பிப் போய்) இல்லை …சார்…. நான்….

உங்கள் பையனின் வகுப்பு ஆசிரியை…….

XXX

நான் கோழையாக இருக்கலாம், ஆனால் உண்மை

என்னிடம் இருக்கும் வரை என்னை யாரும் அசைக்க

முடியாது- மகாத்மா காந்தி

XXX

உன்னுடைய சக்திக்கேற்ற வேலை கிடைக்க வேண்டும்

என்று எண்ணாதே,

உன்னுடைய வேலைக்கேற்ற சக்தி கிடைக்க வேண்டுமென்று

கடவுளை வேண்டிக்கொள்.

XXX

வாழ்க்கைத் தத்துவம்

ஊசியும் நூலும் ஒன்றாவே செயல்படுகிறது்

ஊசி ஓட்டையிடுகிறது. நூல் அதை அடைக்கிறது.

ஒவ்வோர் கெடுதலிலும் ஒரு நல்லது இருக்கத்தான்

செய்கிறது.

XXX

உன்னிடம் யாரும் குறை காணாமல் இருக்க வேண்டுமென்றால்

நீ யாரிடமும் குறை காணாதே…….

ஏனெனில் எக்குறையைக் கண்டு மற்றவர்களை மதிப்பிடுகிறாயோ,

அதே குறையால்தான் உங்களையும் மதிப்பிடுவார்கள்.

–ஜீஸஸ் கிரைஸ்ட்

***

 tags- ஞானமொழிகள்– 48

விஞ்ஞானத்திலும் மோசடிகள்! (Post No.10,920)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,920

Date uploaded in London – –     2 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விஞ்ஞானத்திலும் மோசடிகள்!

ச.நாகராஜன்

நாளுக்கு நாள் வெளிவரும் புது வித அறிவியல் ஆய்வறிக்கைகள் நம்மைத் திகைக்க வைக்கின்றன.

பேப்பரில் வந்தவுடன் அது உண்மை என நம்பி விடுகிறோம்.

ஆனால் பல ஆய்வறிக்கைகள் ஒரு குறிப்பிட்ட (கெட்ட) நோக்கத்துடன் “தயாரிக்கப்படுபவை” என்பதை நம்மில் பலரும் அறிவிதில்லை.

விஞ்ஞானத்தில் கொள்கை முரண்பாடுகள் இருப்பின் அதை அவர்கள் பொதுவாக மறைக்கவே பார்ப்பார்கள்.

தவறான உள் நோக்கத்துடன் கூடிய அறிக்கைகளும் செயற்கையாக எழுதப்பட்ட லேப் ரிபோர்ட்டுகளும் நம்மிடம் தரப்படும் போது அதை எப்படி அறிய முடியும்?

சில நிஜ சம்பவங்களை இங்கே பார்ப்போம்.

வானவியல் விஞ்ஞானியான ஹாடன் அர்ப் (Astronomer Haton Arp)

பிக்பேங் கொள்கையை மறுத்து தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க முற்பட்டார்.

பிக் பேங் (Big Bag Theory) கொள்கையையா மறுப்பது? அவர் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பிபபது கூடாது என்று மறுக்கப்பட்டது. அத்துடன்  அருமையான அறிவியல் ஆய்வாளராக அவர் இருந்த போதும்  வலுக்கட்டாயமாக ரிடயர் ஆகும்படி அவர் வற்புறுத்தப்பட்டார்.

எப்படியோ இன்றளவும் பிக் பேங் தியரி காப்பாற்றப்பட்டு வருகிறது?

விஞ்ஞானத்தை விட சர்ச் சக்தி வாய்ந்தது. அது சொல்வதற்கெல்லாம் விஞ்ஞானிகள் தலை அசைத்து ஆட்டம் போட வேண்டும்.

பிக் பேங், டார்வின் தியரி உள்ளிட்டவற்றை யாரும் மறுத்தோ எதிர்த்தோ பேசக் கூடாது.

‘தி டேல் ஆஃப் பில்ட்டவுன் மேன்’ ஒரு சிறந்த உதாரணமாகும்.

1911ஆம் வருடம் பில்ட்டவுனில் ஒரு குழியில் மனித மண்டையோட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை மனிதக் குரங்குகளின் எலும்புக்கூடுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டு இங்கிலாந்து தான் கற்கால முதல் மனிதன் தோன்றிய இடம் என்பது நிறுவப்பட்டது.

நாற்பது ஆண்டுகள் கழித்து இது ஒரு மோசடி வேலை என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வெளி உலகிற்கு அறிவித்தனர்.

1964ஆம் ஆண்டு கார்லோ ரூபியா (Carlo Rubia)  சில ஆய்வறிக்கைகளை சமர்ப்பித்தார். இவர் 1984ஆம் ஆண்டு நோபல் பரிசையும் பெற்றார்.

ஆனால் அவரது டீம் உறுப்பினர்களே அவரது தரவுகள் எல்லாம் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பதைச் சொல்லி விட்டனர்.

மார்க் ஸ்பெக்டர் (Mark Spector) தனது 24ஆம் வயதிலேயே நோபல் பரிசு பெற இருந்தார். அவரது தியரி அபாரமானது. எப்படி ஒரு கட்டியில் உள்ள வைரஸானது  நார்மலாக இருக்கும் செல்களை  கான்ஸர் உள்ளவையாக எப்படி ஆக்குகிறது என்பதை அவர் தியரி கூறியது. 36 மாதங்கள் கழித்து அவரது அறிக்கைகள், புள்ளி விவரங்கள், தரவுகள் செயற்கையாகத் தயாரிக்கப்பட்டவை என்பது அறியப்பட்டு அவர் ஒரு ;ஃப்ராடு என்பதும் நிரூபிக்கப்பட்டது.

இப்படித் தான் ஒரு சிறிய குழுவை ஆராய்கிறேன் என்று சொல்லி சில புள்ளி விவரங்களை எடுத்துக் கொண்டு 750 கோடி உள்ள மனித குலம் அனைத்திற்கும் அந்தப் புள்ளி விவர அடிப்படையில் தவறான சில கொள்கைகளை அளிப்பதும் நடந்து வருகிறது.

ஆகவே அறிவியல் செய்தி எது சொன்னாலும் அது உண்மை என்பதை நம்பக் கூடாது.

பொறுத்திருந்து பார்த்தால் உண்மைகள் வெளிப்படும்.

காலம் காலமாக நாம் கடைப்பிடித்து வரும் சாஸ்திர விதிகள் இந்த வித அபாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருப்பது நமக்கு பிரமிப்பை ஊட்டும் ஒரு செய்தியாக இருக்கிறது.

அறிவியல் கொள்கைகளை அறிவியல் ரீதியாக உரசிப் பார்ப்போம்; பின்னரே அவற்றை நம்புவோம்.

இது தான் நாம் கற்க வே பாடம் இன்று!

***