இனிமையான வார்த்தைகளைப் பேசுவதால் எல்லோரும் சந்தோஷம் அடைகிறார்கள். அப்படி இருக்க, எனது நண்பனே! ஏன் இனிமையாகப் பேசுவதில் கஞ்சத்தனத்தைக் காட்ட வேண்டும்?
திருவள்ளுவரின் குறளுடன் இதை ஒப்பிடலாம்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று (குறள் எண் 100)
இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றைப் பேசாமல் கடுமையான சொற்களைப் பேசுவது இனிய பழம் இருக்கும் போது அதை உண்ணாமல் காயைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!
பஹுனாம் அல்பசாராணாம் சம்ஹதி: கார்யசாதிகா |
த்ருணை விதீயதே ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின: ||
ஏராளமான பலஹீனமான அல்ப பூச்சிகள் ஒன்றாக இணைந்து கடினமான காரியங்களைச் சாதிக்கின்றன. பலமான மதம் பிடித்த யானையைக் கட்டி இழுக்க மெல்லிய வைக்கோல் இழைகள் ஒன்று சேர்ந்து பலமான கயிறாகத் திரிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.
நிகழ்காலத்தில் கவனம் செலுத்துக!
கதே ஷோகோ ந கர்தவ்யோ, பவிஷ்யம் நைவ சிந்தயேத் |
வர்தமானேன காலேன, வர்தயந்தி விசக்ஷணா: ||
பழைய கால (கடந்து போன) நஷ்டங்களையோ எதிர்காலத்தையோ நினைத்து கவலைப்படாதீர்கள். நிகழ்காலத்தில் கவனம் செலுத்துபவர்களே புத்திசாலிகள்!
குணம் வம்ச பரம்பரையாக வருமா?
ந வ்யாப்திரேஷா குணினோ குணவான் ஜாயதே த்ருவம் |
சந்தனோநளசந்தக்தோ ந பஸ்ம சுரபி க்வசித் ||
நல்ல குணமுள்ள புண்யசாலிகளுக்குப் பிறந்தவர்கள் அவர்களுடைய குணங்களை அப்படியே கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு உலக நியதியும் இல்லை. சந்தனக்கட்டைகளை எரித்து சாம்பலாக்கிய பிறகு அந்த சாம்பல் சந்தனத்தின் மணத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதைக் கவனியுங்கள்!
நிர்வாண தேசத்தில் வண்ணானுக்கு என்ன வேலை!
கிம் கரிஷ்யந்தி வக்தார: ஸ்ரோதா யத்ர ந வித்யதே |
நக்னக்ஷபணாகே தேஷே ரஜக: கிம் கரிஷ்யந்தி ||
கேட்க ஒருவரும் கூடியிருக்காத இடத்தில் ஒரு பேச்சாளர் என்ன செய்வார்? நிர்வாண தேசத்தில் அனைவரும் நிர்வாணமாக இருக்கும் போது அங்கு வண்ணானுக்கு என்ன வேலை?
Date uploaded in Sydney, Australia – 26 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
xxxx
ஆங்கில எழுத்து K- ல் துவங்கும் சொற்கள்
Words beginning with “K”. (Tamil Version will be posted tomorrow)
Kalidasa (kaalidaasa)
Kalidasa is widely considered to be the greatest Indian poet and playwright of all time. He wrote in Sanskrit. There are seven works written by him-two epic poems, two shorter poems and three plays. They are 1.Raghu Vamsa (dynasty of Raghu),2.Kumara Sambhava (Birth of Kumara, 3.Megha Duta (Cloud Messenger),4.Ritu Samhara (Cluster of Sesons), 5.Malavikagnimitram (Malavika and Agnimitra),6.Abijnana Shakuntala (The recognition of Shakuntala) and 7.Vikramorvasiya (Urvasi won by valour).His master piece was Shakuntala.
The age of Kalidasa has been debated for long. He could have lived anytime between 2nd century BC and 4th Century AD. Though the western scholars have placed him in the period of Gupta dynasty, Indians believe that he lived in the time of the great Indian King Vikramaditya who started his own Vikrama era in 56 BCE. Kalidasa was one of the Nine Jewels (Navaratna) of Vikramaditya’s court.
My research into Tamil Cankam (also known as Sangam) literature shows that Kalidasa lived sometime before the birth of Christ. Tamil poets have used a lot of his similes. Kalidasa was most famous for his apt similes. The Sanskrit poets praised him as Upama Kalidasasya: ( Kalidasa owns similes).Tamil poets have used lot of common Indian/ Hindu beliefs. The source may be different ancient Indian works. But there are very clear indications to show that the poets have got them from Kalidasa’s works. There are over 200 similarities between the works of Kalidasa and the Sangam Tamil works. No one can reject them as coincidences or of pan Indian origin.
Seven Books—40,000 words—93 commentaries for three of his works—he beat Shakespeare in writing poetry+ dramas+ Epics+ stotras (Shyamaladandakam) and usage of similes. He covered the history of 29 kings in Raghuvamsam. He used 1250 similes! He gives a description of a vast geographical area from Iran to Indonesia! He called the Himalayas “the measuring rod of earth” even before George Everest told the world the height of Everest Peak!!! An amazing poet the world has ever produced. First poet to write a travelogue called Meghadutam in Sanskrit and first poet to report the progress o South West Monsoon from South India to Himalayas.
First poet to link Pandyas and Agastya, which is the foundation of Tamil History.
***
Kalpa
Kalpa (कल्प) refers to “one day in the life of Lord Brahmā. It is equivalent to one thousand catur-yugas. Each catur-yuga is one cycle of the four yugas: Satya, Dvāpara, Tretā and Kali, totalling 4,320,000,000 years.
It signifies a period of creation, duration, and destruction of the universe.
One of the six Vedāṅgas, i. e. that which lays down the ritual and prescribes rules for ceremonial and sacrificial acts; शिक्षा कल्पो व्याकरणम् (śikṣā kalpo vyākaraṇam) Muṇdtod; 1.1.5 see under वेदाङ्ग (vedāṅga).
The doctrine of poisons and antidotes.
One of the trees of paradise; cf. कल्पद्रुम (kalpadruma).
***
Kalpakavriksa- Wish fulfilling tree
Kalpavṛkṣa (कल्पवृक्ष).—A tree in Devaloka. It has the power of giving any object that one wishes to get. There are five Kalpavṛkṣas in Devaloka. Their names are: Mandāra, Pārijāta, Santāna, Kalpavṛkṣa and Haricandana.
***
Kama (kaama)
Wish, desire; this Sanskrit word is used throughout ancient Tamil literature.
Kāma means desire, wish, longing in Indian literature. Kāma often connotes sexual desire and longing in contemporary literature, but the concept more broadly refers to any desire, wish, passion, longing, pleasure of the senses, the aesthetic enjoyment of life, affection, or love, with or without sexual connotations.
Love or desire of sensual enjoyments, considered as one of the ends of life (puruṣārtha); cf. अर्थ (artha) and अर्थकाम (arthakāma).
Dharama, Artha, Kama, Moksha are the four values that Hindus should aim for.
***
Kama – God of Love
Kama is the God of Love and Lust. He is also referred to as Manamatha. He is the most handsome among both men and Gods. He is equivalent to the Greek/Roman Cupid. He uses a bow of sugarcane, and shoots flower tipped arrows at humans to make them fall in love. He is married to Rati, one of the daugters of Daksha.
***
Kāmaśāstra (कामशास्त्र) refers to the “science of erotics”.
Kamasutra
Kāmasūtra (कामसूत्र).—
Name of an erotic work by Vātsyāyana.
First book on sex in the world. Vatsyayana wrote it in Sanskrit. First book in the world which prescribed educational syllabus for women.
“ A woman should study even before reaching adolescence, and then, once married should continue her studies with her husband.” ( Sutra 2, Chapter 3, Kamasutra of Vatsyayana)
Vatsyayana, the Brahmin author of Kamasutra listed all the 64 arts that a woman should learn. Tamil and Sanskrit poets referred to this 64 arts in their poems. Goddess Sarasvati is the source of those 64 subjects.
Kāmasūtra (कामसूत्र) (lit. “principles of love”’) is an ancient Indian Sanskrit text on sexuality, eroticism and emotional fulfillment in life.—The Kāmasūtra is a Sūtra-genre text with terse aphoristic verses that have survived into the modern era with different bhāṣyas (exposition and commentaries). The Kāmasūtra acknowledges the Hindu concept of Puruṣārthas, and lists desire, sexuality, and emotional fulfilment as one of the proper goals of life. Its chapters discuss methods for courtship, training in the arts to be socially engaging, finding a partner, flirting, maintaining power in a married life, when and how to commit adultery, sexual positions, and other topics.
***
Kamadhenu- Wish fulfilling Cow
Kamadhenu is the wish fulfilling cow. The picture and statues of Kamadhenu are in Hindu houses and temples.
It refers to the “celestial cow” also known as Surabhi (सुरभि Surabhī).
Kamadhenu, the divine “cow of plenty” originating from the Churning of the Ocean, is revered as a symbol of abundance and divinity with the power to fulfil desires. According to tradition, she is depicted with various divine attributes, serves as a protective force for sages, and is worshipped for prosperity and to bring good luck to homes and businesses
Kāmadhenu (कामधेनु) was the mythical cow of Vasiṣṭha which satisfies all desires, cow of plenty (= surabhi).
***
Karma
“Karma” (Sanskrit: कर्म) primarily means action, work, or deed, acting as the fundamental spiritual principle of cause and effect in Hinduism, Buddhism, and Jainism. It governs the moral law of actions, shaping future destiny, rebirth, and experiences, often categorized into Sanchita (accumulated), Prarabdha (fruiting), and Agamya or Kriyamana (current).
Karma (कर्म) refers to “action”, “deed”.—1) any action or deed; 2) the principle of cause and effect; 3) a consequence or “fruit of action” (karmaphala) or “after effect” (uttaraphala), which sooner or later returns upon the doer. What we sow, we shall reap in this or future lives. Selfish, hateful acts (pāpakarma or kukarma) will bring suffering. Benevolent actions (puṇya-karma or sukarma) will bring loving reaction.
Karma is three fold:—sañcita,prārabda, kriyamāṇa (or āgāmi)
Also any religious act or rite (as sacrifice, oblation etc., [especially] as originating in the hope of future recompense.
Karman (कर्मन्).—[neuter] action, deed, work, [especially] holy work, sacrifice, rite; result, effect; organ of sense; the direct object ([grammar]); fate, destiny.
***
Karmendriya
Karmendriya (कर्मेन्द्रिय):—[from karma > karman] n. an organ of action (five in number like the five organs of sense, viz. hand, foot, larynx/ogan of voice, organ of generation, and excretion).
The Five Faculties of Action (Karmendriya):
vak-tattva: speech (voice)
pani-tattva: grasping (hands)
pada-tattva: walking (feet)
payu-tattva: excretion (anus)
upastha-tattva: procreation (genitals)
Speaking, Grasping, Moving About, Excreting and Sexual Activities are the Soul’s Powers of responding to and interacting with, the external World.
***
Karta
Karta (Sanskrit: कर्ता, kartā) primarily refers to the “doer,” “agent,” or “creator” of an action. It is a term deeply rooted in Indian philosophy, grammar, and traditional law, representing the individual responsible for bringing about change or taking initiative.
It is a foundational concept in Indian philosophy, grammar, and art, embodying initiative and responsibility.
Sanskrit Grammar (Vyakarana): Karta is the agent or subject of an action.
***
Khadira
Khadira (खदिर)—Sanskrit word for a plant (Acacia catechu).
Khadira (खदिर) is mentioned frequently from the Rigveda1 onwards as a tree with hard wood—the Acacia catechu. The Aśvattha is referred to as engrafting itself upon it in the Atharvaveda, and from it the climbing plant Arundhatī is said to have sprung.
***
Kavya (kaavya)
Kāvya (काव्य).
A poem; महाकाव्यम् (mahākāvyam); मेघदूतं नाम काव्यम् (meghadūtaṃ nāma kāvyam) . Poetics, poetry, a poetical composition
Mahākāvya (महाकाव्य):—the Raghu-vaṃśa, Kumārasambhava and Megha-dūta by Kālidāsa, the Śiśupāla-vadha by Māgha, the Kirātārjunīya by Bhāravi and the Naiṣadha-carita by Śrī-harṣa; [according to] to some the Bhaṭṭi-kāvya is also a Mahakavya.
In Tamil Five Great Epics (Tamil: Aimperumkāppiyaṅkaḷ) are:
Karakam, or Karagaattam, is a traditional, ancient folk dance from Tamil Nadu, India, performed to honour the rain goddess Mariamman. It features dancers balancing decorated pots (karakam) on their heads while performing intricate movements, acrobatics, and sometimes balancing on a rolling wooden block.
Though associated with religious festivals, nowadays they are part of cultural and political processions.
***
Kavadi (kaavadi)
This semi-circular decorated canopy supported with wooden cross-pieces is called a kavadi, meaning ‘burden’ or ‘load’.
A kavadi is a ceremonial, often ornate, wooden or metal arch decorated with peacock feathers, flowers, and photos of Hindu deities, carried by devotees of Lord Murugan as an act of penance, gratitude, or devotion, during the Thaipusam and other Murugan (Skanda/Kartikeya) festivals. It represents a “burden” or sacrifice, often involving fasting, rituals, and sometimes body piercings with hooks or skewers, particularly in Malaysia, Singapore, and Tamil Nadu.
Devotees carry the kavadi to fulfill vows, seek blessings for health or success, or express gratitude to Lord Murugan, the Hindu god of war and wisdom.
Types of Kavadi:
Paal Kavadi: A simple, less painful offering involving pots of milk (paal) carried on a wooden pole.
Alagu Kavadi: A more complex, heavy structure often attached to the body via hooks and spikes piercing the skin (alagu means small spears).
Sangili Kavadi: Involves dragging heavy chariot or metal structures via chains attached to the body.
During the procession, devotees often enter a trance-like state, facilitated by the rhythmic, loud, and intense drumming (urumi melam) and chanting of “Vel Vel” (referring to Lord Murugan’s spear).
In Malaysia, devotees often ascend 272 steps to the shrine in the Batu Caves during Thaipusam. Other famous Murugan temples are also on hills. They also climb the steps.
Gangajal taken in Kavadi poles
TO BE CONTINED……………….
–SUBHAM—
TAGS- Karakam, Kavadi, Kalpa, Kalidasa, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL – 39, இந்து மத கலைச்சொல் அகராதி-39
Date uploaded in Sydney, Australia – 26 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
32 திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 32
திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 32
வள்ளி, தேவயானையின் முற்பிறப்பு!
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர …
கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்
உருவாய் வர,
கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே …
காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே,
தெள்ளி ஏமுற்று ஈரம் முன் ஓதிய சொல் வழாமல் … ஆய்ந்து,
இன்பமுற்று, முன்பு செய்த வாக்குறுதி* தப்பாமல்,
தான் ஒரு வான் உறு செல்வி மார்பில் பூஷணமாய் அணை
மணவாளா … விண்ணுலகில் வளர்ந்த செல்வியாகிய தேவயானையை தன் மார்பில் ஆபரணம் போல் அணைந்த மணவாளனே,
தெள்ளும் ஏனல் சூழ் புன(ம்) மேவிய வள்ளி வேளைக்கார
மனோகர … நன்கு விளங்கிய தினைப் புனத்தில் இருந்த வள்ளிக்கு
காவற்காரனாய் விளங்கும் மனத்துக்கு இனியோனே,
தில்லை மேலைக் கோபுரம் மேவிய பெருமாளே. … தில்லை
மேற்குக் கோபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
* முற்பிறப்பில் திருமாலின் மகளாகத் தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற கன்னிகைகளுக்கு மறுபிறவியில் அவர்கள் முறையே தேவயானை, வள்ளி என்று பிறந்து முருகனை மணந்து கொள்வர் என்று திருமால் வாக்களித்தார்.
***
அருணகிரியின் வரிகள்
கல்லிலே பொன் தாள் படவே அது நல்ல ரூபத்தே வர …
கல்லின் மீது அழகிய திருவடி பட்டவுடனே அது நல்ல பெண்
உருவாய் வர,
கான் இடை கெளவை தீரப் போகும் இராகவன் மருகோனே …
காட்டில் (அகலிகைக்கு உற்ற) துன்பம் நீங்கும்படி சென்ற ராமனுடைய மருகனே,
கம்பரின் வரிகள்
ராமபிரானின் கைவண்ணத்தையும் கால் வண்ணத்தையும் கம்பனும் அழகாக வருணிக்கிறார்
இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கெல்லாம்
உய்வண்ணம் அன்றிமற்றோர் துயர்வண்ணம் உறுவதுண்டோ
மைவண்ணத்தரக்கி போரில் மழைவண்ணத்து அண்ணலே உன்
கைவண்ணம் அங்கு கண்டேன் கால்வண்ணம் இங்குகண்டேன்
***
தில்லை மூவாயிரர் புகழ்
வேத நூன் முறை வழுவாமே தினம் வேள்வியால் எழில் புனை
மூவாயிர(ம்) மேன்மை வேதியர் மிகவே பூசனை புரிகோவே …
வேத நூலில் கூறப்பட்ட முறைப்படியே, தவறாமல் நாள் தோறும்
யாகங்கள் செய்யும் அழகைக் கொண்ட சிறப்பான தில்லை மூவாயிரம் வேதியர்கள் மிக நன்றாகப் பூஜை செய்யும் தலைவனே*,
வீறு சேர் வரை அரசாய் மேவிய மேரு மால் வரை என நீள்
கோபுர மேலை வாயிலின் மயில் மீது ஏறிய பெருமாளே. …
பொலிவு பொருந்திய மலை அரசாக விளங்கும் மேரு மலை போல உயர்ந்துள்ள கோபுரத்தின் மேற்கு வாயில் புரத்தில் மயிலின் மேல் விளங்கும் பெருமாளே.
***
ராவணன் நசுங்கிய கதை
வலித்துத் தோள் மலை ராவணன் ஆனவன் எடுத்தப் போது …
வன்மையுடன் ஆட்டி அசைத்து, தனது தோளால் (கயிலை) மலையை இராவணன் என்பவன் எடுத்த பொழுது*,
உடல் கீழ் விழவே செய்து மகிழ்ப் பொன் பாத … அவனுடைய
உடலைக் கீழே விழச் செய்து மகிழும் அழகிய பாதங்களை உடையவரும்,
* இராவணன் திக்கு விஜயம் செய்த போது, அவனுடைய புஷ்பக
விமானம் கயிலை மலையைக் கடக்க முடியாது தடைபட்டது. அந்த மலையை வேரோடு பறித்து எறிய, அவன் தன் கைகளால் பெயர்த்து அசைக்க, சிவ பெருமான் தமது கட்டை விரலால் அம் மலையை அழுத்த, இராவணன் நசுக்குண்டு சாமகானம் பாடி, இறைவனை மகிழ்வித்து உய்ந்தான்.
மூவர் பாடிய தேவாரப் பாடல்களிலும் இதைக் காணலாம்.
***
ராமாயணக் காட்சிகள்
கொடுங்கைப் பட்ட மராமரம் ஏழுடன் நடுங்க … நீண்ட
கிளைகளை உடைய ஏழு மராமரங்களை அவற்றின் உடல்கள்
நடுங்கும்படியாக அம்பை விட்டும்,
சுக்ரிவன் அவனோடு அமர் ஆடிய குரங்கைச் செற்று …
சுக்ரீவனுடன் போர் புரிந்த குரங்காகிய வாலியை அழித்தும்,
மகா உததி தூள் எழ நிருதேசன் … பெரிய கடலில் தூசி
கிளம்பும்படி, அரக்கர் தலைவன் ராவணனுடைய
குலம் கண் பட்ட நிசாசரர் கோ என … குலத்தைச் சார்ந்த
அரக்கர்கள் எல்லாம் கோவென்ற சத்தத்தோடு அலற,
இலங்கைக்குள் தழலோன் எழ … இலங்கை நகருள் அக்கினி
பகவான் எழுந்து தீப்பற்றி எரியச் செய்ய,
நீடிய குமண்டைக் குத்திர ராவணனார் முடி அடியோடே
பிடுங்க … செல்வம் மேலீட்டால் செருக்குண்ட, வஞ்சகம் நிறைந்த
இராவணனனுடைய தலைகள் பத்தும் அடியோடு அறுபட்டு
விழும்படியாக
தொட்ட சர அதிபனார் அதி ப்ரியம் கொள் தக்க நல் மா
மருகா … செலுத்திய அம்பைக் கொண்ட நாயகனாம் இராமன் மிகுந்த அன்பு கொள்வதற்குத் தகுந்த, நன்கு சிறந்த மருகனே,
காடுகள் புக்கும் தடுமாறி … காடுகளில் புகுந்து தடுமாறியும்,
காய்கனி துய்த்தும் … காய், பழவகைகளைப் புசித்தும்,
காயம் ஒறுத்தும் … தேகத்தை விரதங்களால் வருத்தியும்,
காசினி முற்றும் திரியாதே … உலகம் முழுவதும் திரிந்து
அலையாமல்,
சீவன் ஒடுக்கம் … சீவனை* (சிவமயமாக) ஒடுக்குதலும்
பூத வொடுக்கம் … ஐம்பூதங்களுடைய ஒடுக்குதலும்
தேற உதிக்கும் … நன்றாக உண்டாகும்படி,
பரஞான தீப விளக்கம் காண … மேலான ஞான ஒளி
விளக்கத்தினையான் காணும்படி,
எனக்குன் சீதள பத்மம் தருவாயே … எனக்கு உன் குளிர்ந்த
தாமரை அடிகளைத் தந்தருள்க.
* சீவன் என்பதில் உள்ள (சீ) இரு மாத்திரை நெடில். அதனை ஒரு மாத்திரை குறில் எழுத்தாக (சி) ஒடுக்கினால், சீவன் சிவன் என்று ஆகிவிடும்.
***
நாதத்து ஓசைக் காண் துணையே சுடர் மூலத்தோனைத்
தூண்டிடவே உயிர் நாடிக் காலில் சேர்ந்திடவே அருள் …
உனது திருச்சிலம்போசை முதலிய நாதங்களைக் கேட்பதற்குத் துணை புரியும் தேவனே, மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பி, பிராணவாயு சுழுமுனை* நாடி மார்க்கத்தில் சார்வதற்கு அருள் புரிவாயாக.
திருத்தாள் முத்தர்க்கு … உன் திருவடிகளை ஜீவன் முக்தர்களுக்கு*
அருள்வோனே … தந்தருள்பவனே,
திருக்கா ளத்திப் பெருமாளே. … திருக்காளத்தியில் உள்ள
பெருமாளே.
* ஜீவன் முக்தர்கள் நான்கு வகைப்படுவர்:
பிரம்ம வித்துக்கள் – ஞானம் அடைந்து உலகத்திற்காக உழைப்பவர்கள்,
பிரம்ம வரர் – சமாதிநிலையில் இருந்து தாமே உணரும் ஞானிகள்,
பிரம்ம வரியர் – சமாதியில் இருந்து பிறர் கலைக்க எழும் ஞானிகள்,
பிரம்ம வரிஷ்டர் – சமாதியில் இருந்து கலைக்கப்பட முடியாத ஞானிகள்.
ஜீவன் முக்தன்
உயிருடன் உலவும்போதே இறைவனை முழு அளவில் உணர்ந்து விட்டவர்களை ஜீவன் முக்தர்கள் என்பார்கள் ; அவர்களும் சாதாரண மனிதர்களைப் போலவே நோயவாய்ப்படுவர்; இன்ப துன்பங்களை அனுபவிப்பர் ஆயினும் அவர்கள் என்றும் பேரின்ப நிலையில் திளைத்து இருப்பர் ; நமது காலத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் இந்த நிலையை அடைந்தவர்கள் ஆவர்.
சிவன் நடனம் ஆடிய ஐந்து சபைகள்!
தெரிதமிழை … யாவரும் தெரிந்து மகிழும்படி தமிழை
உதவு சங்கப் புலவோனே … ஆராய்ந்து உதவிய சங்கப்
புலவனாக* வந்தவனே,
சிவனருளு முருக … சிவபெருமான் பெற்றருளிய முருகனே,
செம்பொற் கழலோனே … செம்பொன்னாலான வீரக் கழலை
அணிந்தவனே,
கருணைநெறி புரியும் … அருள் நெறியை அனுஷ்டிக்கும்
அன்பர்க் கெளியோனே … உன் அன்பர்க்கு எளிமையானவனே,
கனகசபை மருவு … கனகசபையில்** வீற்றிருக்கும்
கந்தப் பெருமாளே. … கந்தப் பெருமாளே.
* உக்கிரபாண்டியனாக முருகன் மதுரையில் அவதரித்து, சங்கப் புலவர்களுடன் தமிழை ஆராய்ந்து உதவிய செய்தி இங்கு குறிப்பிடப்படுகிறது.
** பஞ்ச சபைகளில் ஒன்று கனகசபை (பொன்னம்பலம்) – சிதம்பரம். மற்ற சபைகள்:
மாணிக்க வாசகரும் எட்டு இரண்டு, பட்டிமண்டபம் ஆகிய சொற்களைத் திருவாசகத்தில் பயன்படுத்தியது ஒப்பு நோக்கத்தக்கது. இந்தப் பாடலில் எட்டு இரண்டு என்பதை அருணகிரிநாதர் மீண்டும் மீண்டும் பயன்படுத்த்திச் சொல் சிலம்பம் ஆடுவதைக் கண்டு ரசிக்கலாம்.
எட்டு இரண்டும் அறியாத என் செவியில் … எட்டும் இரண்டும்
பத்து என்பதையும் தெரியாத என் காதுகளில்
எட்டும் இரண்டும் இது ஆம் இலிங்கம் என … இவையே சிவக்
குறியாகிய இலிங்கம் *8 என்று
எட்டு இரண்டும் வெளியா மொழிந்த குரு முருகோனே …
அந்த அகார உகார மகார *9 இலக்கணங்களைத் தெளிவாக
உபதேசித்த குருவான முருகோனே,
எட்டு இரண்டு திசை ஓட செம் குருதி … எட்டுத் திசைகளிலும்,
இந்த அண்டத்தின் கீழும் மேலுமாக, பத்து திக்குகளிலும் சிவப்பு நிற
இரத்தம் ஓடும்படி
எட்டு இரண்டும் உருவாகி வஞ்சகர் மெல் … பதினாறு வகை *10
கட்டு செம் கை வளை கூறும் எந்தை இட(ம்) … கைகள் சிவக்க,
வளையல்களை அடுக்கி விலை கூறின எந்தை சிவபெருமானுடைய
சித்தமும் குளிர அநாதி வண் பொருளை நவில்வோனே …
மனமும் குளிரும்படி ஆதியற்றதும், வளமையானதுமான
மூலப் பிரணவப் பொருளை உபதேசித்தவனே,
செட்டி என்று வனம் மேவி … வளையல் செட்டியின் வேடத்துடன்
நீயும் வள்ளிமலைச் சாரலில் தினை வனத்துக்குச் சென்று,
இன்பரசச் சத்தியின் செயல் இ(ன்)னாளை அன்பு உருக …
அங்கே இச்சா சக்தி மயமான வள்ளி நாயகியை அன்பு கனிந்து
தெட்டி வந்து புலியூரில் மன்றுள் வளர் பெருமாளே. …
அபகரித்து வந்து, சிதம்பரத்தில் பொன் அம்பலத்தில் விளங்கும்
பெருமாளே.
(*1) இங்கு சிவயோக முறைகள் விளக்க ப்பட்டுள்ளன.
சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.
***
திருவாசகம்திருச்சதகம்
கட்டறுத்தெனை யாண்டுகண் ணாரநீறு
இட்ட அன்பரொ டியாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடிரண்டும் அறியேனையே.
பட்டிமண்டபம்-வாத சபை..
திருப்பெருந்துறையில் திருவருள் பெற்று அமர்ந்திருந்த அடியார்களிடையே, தம்மையும் ஒருவராக்கி அமர்த்தியமையை நினைக்கின்றார் அடிகளார். சிவஞானம்(பர ஞானம்) கைவரப்பெற்ற அவர்கள் எங்கே? உலக ஞானம்(அபர ஞானம்) கூடப் பெறாத தாம் எங்கே?
இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அறியாமைக்கு ஓர் எல்லை வகுக்கும் முறையில் எட்டும், இரண்டும் எவ்வளவு என்று அறியாத தாம் என்கிறார்.
எட்டினோடு இரண்டும் என்ற தொடருக்கு அகர(8) உகரம்(2) என்றும், இவை இரண்டும் கூட்டிய பத்துக்கு யகரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். இவ்வாறு எல்லாம் பொருள் கொள்ள இடந்தந்து நிற்பதுதான் அடிகளாரின் பாடற்சிறப்பு (தமிழ் எண் வடிவில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். பத்து என்பதை யகரம் போன்ற எழுத்துக் குறிக்கும்).
இன்னும் ஒரு உரை
பொ-ரை: பாசங்களை ஒழித்து என்னை ஆட்கொண்டு, கண்கள் பார்த்து மகிழும்படியாக நீஎன்னை ஏற்றுக் கொண்டாய். திருநீறிட்ட பேரன்பரோடு எல்லோரும் பார்க்கும்படியாகவேநாயனைய என்னை உனது திருவோலக்க மண்டபத்தில் ஏற்றுவித்தாய். அகர உகரமாகிய சிவம் சக்தி இயல்பு அறியேனாகிய என்னை ஏற்றுவித்தாய். இது நீதியோ?
Cutting off all my worldly ties, Thou brought me into the forefront alongside Thy ash- smeared devotees, for all the world to see. And elevated me into Thy congregation. This Thoudidst to me, although I have come to know nothing of the scriptures.
பத்து என்பதற்கு தசகாரியம் என்றும் பொருள் சொல்லுவார்கள்
1. (Śaiva Philosophy) The ten spiritual experiences of the soul in its path towards final deliverance, viz.,
தத்துவரூபம், தத்துவதரிசனம், தத்துவ சுத்தி, ஆன்மரூபம், ஆன்மதரிசனம், ஆன்மசுத்தி, சிவ ரூபம், சிவதரிசனம், சிவயோகம், சிவபோகம் என்ற ஆன்மாநுபவ நிலைகள்.
xxxxx
திருமூலர் சொல்லுவதைக் காண்போம்
985. கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்தறி யீரே.
பொருள் : எட்டும் இரண்டும் அகர உகரம். இவை உயிரும் இறையும் என்று கூறப்படும். எட்டும் இரண்டும் கூடுங்கால் பத்தாகும். பத்தென்பது யகரம். அஃதுயிர், உயிர் சிவத்துடன் ஒன்றி ஒரு மனப்பட்டு நாடப்படும் நந்தியை நாடித் திருவடியுணர்வினுள் வைத்தால் வாடுதலைச் செய்விக்கும் ஐம்புலனும் சிவத்தைத் தேடுதலுக்குத் துணை செய்யும். இங்ஙனம் தேடு நிலையைத் தெளிந்துணர்க.
xxxxxx 986. எட்டும் இரண்டும் இனிதுஅறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
பொருள் : எட்டும் இரண்டும் பத்து. இதன் அடையாளம் ய யகரம் உயிர். உயிரின் அடையாளக் குறி. இவற்றை யாவரும் இனிதறிய மாட்டார். இதை யறிவல்ல அறிவிலார் இருமூன்று நான்கு கூட்டும் கணக்குப் போல் பத்தென்பர். சிவபெருமான் திருவடியே பத்தென்பதாகும். செந்நெறியில் கூறப்படும் பருமை நுண்மையாகிய திரு ஐந்தெழுத்து பத்தாகும். (சிவக்குறி – சிவக் கொழுந்து – சிவலிங்கம்)
994: Six Letters Aum are the Six Faiths and Savitri Mantra
The Six Letters are the Six religions,
The Six Letters multiplied by four,
Into four-and-twenty proliferated,
That the Letters of Savitri mantra art;
Savitri has the Letter First (that is Aum)
They whom separate meditate on it,
Have no more the birth-travail.
பொருள் : ஆறு எழுத்துக்களால் ஆயது ஆறு சமயங்கள் என்பர். ஒவ்வோர் எழுத்தையும் நான்கு பாகுபாடு செய்ய ஆறுக்கும் இருபத்து நான்கு எழுத்தாகும். இவ் இருபத்து நான்கு எழுத்தும் காயத்திரி என்ப. காயத்திரியின் முன் சேர்ந்து மொழியும் எழுத்து ஓங்காரம். அவ் ஓங்காரத்து அறிவதாகிய உண்மை காண வல்லார் பிறவா பெருவாழ்வு எய்துவர். (சாவித்திரி – காயத்திரி. 24 எழுத்துக்கள் கொண்டது. தலை எழுத்து – பிரணவம். பேதிக்க. பிரித்தறிய.)
—subham—
Tags- ஆறுமுறை எட்டும் இரண்டும் – அருணகிரியின் சொற்சிலம்பம்! நான்கு வகை ஜீவன் முக்தர்கள்– Part 31 , செட்டி, பஞ்ச சபை, திருப்புகழ், அரிய செய்திகள்
என்ற இருபத்திரண்டாவது அத்தியாயத்தில் ராமர் மருகாந்தாரத்திற்கு அளித்த வரம் பற்றி குறிப்பிடப்படுகிறது.
லங்கையை அடைவதற்காக வந்த ஶ்ரீ ராமர் சமுத்திரராஜனை வழி விடுமாறு வேண்டினார். ஆனால் சமுத்திரராஜன் வழி விடவில்லை.
இதனால் வெகுண்ட ராமர் தனது அஸ்திரத்தில் பிரம்மாஸ்திரத்திரத்தினால் பாணத்தை அபிமந்திரித்து இழுக்கலானார். உடனே உலகமே இருண்டது. புயல்காற்று அடிக்கத் தொடங்கியது. மின்னல்கள் தோன்றி நெருப்பைக் கக்கின. உடனே சமுத்திரராஜன் ஶ்ரீ ராமர் முன் கை கூப்பியவாறே வந்து வணங்கி ஒரு விண்ணப்பத்தைச் செய்தான்.
“நான் தாண்ட முடியாதவன். அதுவே என் இயற்கைக் குணம். என்றாலும் நீங்கள் சமுத்திரத்தைக் கடக்கும் விஷயத்தில் ஒரு வழி செய்வேன்” என்று உறுதி கூறினான்.
ராமர், “தொடுத்து விட்ட பாணமானது வீணாகாதது. ஆகவே இது எந்த இடத்தில் வீழ்த்தப்பட வேண்டும்” என்று சமுத்திரராஜனைக் கேட்க, அவன், “ வடக்கில் துருமசூல்யம் எனப் பெயர் பூண்ட என்னுடைய தேசத்தை பாபிகள் ஆக்கிரமித்திருக்கின்றனர். அவர்கள் மீது இந்த பாணமானது செலுத்தப்படட்டும்” என்று கூறினான்.
உடனே ராமரும் அங்கு பாணத்தை விடுத்தார். அந்தப் பிரதேசம் மருகாந்தாரம் என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது. பாணத்தால் பூமி பிளக்கப்படவே அங்கு ஜலமானது பொங்கி வந்தது. அது விரண கூபம் என்ற பெயருடன் விளங்க ஆரம்பித்தது.
அப்போது ராமர் மருகாந்தாரத்திற்கு ஒரு வரத்தை அளித்தார்.
பஷவ்யஸ்சால்பரோகஸ்ச பலமூலரஸாயுத: |
பஹுஸ்நேஹோ பஹுக்ஷீரசுகந்திவிர்விதௌஷத: ||
ஏவமேதௌர்குணைர்யுக்தோ பஹுபி: சததம் மரு: |
ராமஸ்ய வரதானஸ்ச சிவ: பன்யா பபூவ ஹ |\
யுத்த காண்டம் 22ம் அத்தியாயம் ஸ்லோக எண்கள் 41,42
ராமஸ்ய – ஶ்ரீ ராமரது
வரதானாத் – வரம் பெற்றதனாலேயே
மரு: – மருகாந்தாரமானது
பஷவ்ய ச – பசுக்களுக்கு நன்மை பயப்பதாயும்
அல்ப ரோக: ச- வியாதி என்பதே அபூர்வமாய் விளங்குகிறதாயும்
பலமூலரஸாயுத: – கனி, கிழங்கு, தேன் இவைகள் நிரம்பியதாயும்
பஹுஸ்த்ரேஹ: – ஏராளமான நெய் உடையதாயும்
பஹுக்ஷீர சுகந்தித: – ஏராளமான பாலை உடையதாயும்,
நறுமணங்களை உடையதாயும்
விவிதௌஷத: – பல வகை ஔஷதிகளை உடையதாயும்
ஏவம் – இப்படியாய்
எதௌ – மேற்கண்ட
பஹுபி: குணை: – பல நற்குணங்களால்
சததம் – எப்போதும்
யுக்தஸ் ச – விளங்குகிறதாய்
சிவ: பந்தா: – மங்களகரமான இடமாக
பபூவ ஹ – ஆயிற்று.
இப்படியாக மருகாந்தாரத்திற்கு ராமர் அளித்த வரம் பற்றி இந்த அத்தியாயத்தில் நாம் காண்கிறோம்.
சமுத்திரராஜன் நளனை சேது அமைக்க உதவி செய்வான் என்று கூற நளனும் சேது அமைக்க உதவினான்.
சேது அமைக்கப்பட்டது. ராமரும் கடலை சேது வழியே தாண்டினார்.
Date uploaded in Sydney, Australia – 24 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
Ancient Tamil Encyclopaedia -Part 54; One Thousand Interesting Facts -Part 54
Item 387 Valmiki Echo
In Puranānūru verse 34, Poet Ālathūr Kizhār said………………..
“They say that even those who are not righteous and chop off the udders of cows, or abort the fetuses of women wearing fine ornaments or who harm their parents, may atone for their evil deeds. But if someone ruined the kindness done to them even if the earth moved, there is no forgiveness for that, say the righteous books”.
These lines are adapted from Valmiki Ramayana 4-34-12. This is in Panchatantra and Mahabharata as well.
Valmiki Ramayana sloka 4-34-12
ब्रह्मघ्ने च सुरापे च चोरे भग्नव्रते तथा। निष्कृतिर्विहिता सद्भि: कृतघ्ने नास्ति निष्कृतिः।। (Valmiki Ramayana, 4-34-12)
go ghne ca eva suraape ca caure bhagna vrate tathaa | niShkR^itir vihitaa sadbhiH kR^itaghne na asti niShkR^itiH || 4-34-12
12. go ghne = in respect of – cow, slayers; suraape ca eva = liquor-drinkers, also, thus; caure = for thieves; tathaa = likewise; bhagna vrate = infringers, of solemnity; sadbhiH niSkR^itiH vihitaa = by savants, atonement, ordained; kR^ita ghne niSkR^itiH na asti = for treacherous one, atonement, not, available.
” ‘The savants have ordained atonement for slayers of cows, for drinkers of liquors, thus for thieves and infringers of solemnity, but no atonement is available to a treacherous person. [4-34-12]
Valluvar also said in his Tirukkural
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.(குறள் 110 )
One may slain every goodness and yet escape,
But no escape for one who slain gratitude.
***
Item 388 Non Veg. Food Items
Tamil bards and kings used lot of non-vegetarian food ; Here Hare meat is referred to.
wealth to bards who utter sweet words and eat huge balls of rich, cooked rice mixed with honey and millet grown in dry fields, that are as large as the eggs of pigeons, with cooked hare meat.”
***
Item 389 Monsoon and Kalidasa Echo
Kalidasa’ Meghadutam is the first travelogue in the world; he traced also the course of South West Monsoon progressing towards the Himalaya. Here poet Ālathūr Kizhār sang about the East wind (Kondal in Tamil) blowing towards the Himalaya.
***
Item 390 Rain Drops Simile
Hindu poets use the simile of countless rain drops or the uncountable sand particles when they wish someone a long life.
May you live for more years than the many raindrops showered by large clouds that that come with the eastern wind and rumble sweetly in the Himalayas, because of the good deeds that noble people have done in this world!
***
Item 391 Sanskrit words
Brahmins do Sandhya (Vandanam) three times a day.
That is referred to as ANTHI here, because Tolkappiam banned SA in Tamil as initial letter
காலை அந்தியும், மாலை அந்தியும், Pratha Sandhya and Sayam Sandhya are dome by Brahmins everyday.
***
Item 392 Dravidian Corruption
Purananuru is corrupted by the Davidians in many places. One of the places is here. Instaed of Brahmins in the old boos in the libraries they replaced Gurvar (Guru)
(குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,)
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்,
(Old Puram Books say Paarppaar/Brahmins)
But all the lines are from the Hindu Smritis (Law Books of Hindus)
Brahmahaththi (Brahmin murder)
Brunu haththi ( abortion done by anyone)
Guru Nindha ( Insulting Guru is one of the Pancha Maha Patakas)
Go Haththi (Cow murder) it is in all the Tamil and Sanskrit Inscriptions as well as all Smritis of Hindus
Now the BJP State Governments in India banned Go Haththi (Killing Cows)
***
Item 393
Hindus believe the rains will pour down even if there is one good person in the city.
இவ்வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண்டாயின், 20
Tamil poetess Avvaiyar says it in one of her verses.
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை
When one irrigates the field that benefits not only the pady crops but also the grass there, the rain fall happens for one good person in the town (that benefits others too)
இதோ வள்ளூவன் எழுதியகுறள்:–
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் ‘பெய்’ என்றால் மழை பெய்யும்..
மநு நீதி நூலிலும் (9-247) நல்ல மன்னவன் ஆட்சியில் பருவ மழை தவறாது என்கிறார்.
9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்–குறள் 559
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
xxx
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு–குறள் 545
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
***
Item 395 Earthquake
நிலம் புடை பெயர்வதாயினும்
Even if the earth moved – shows Tamil poets knew about h earth quakes that were happening in the northern parts of India.
***
Puranānūru 34, Poet Ālathūr Kizhār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan
1 They say that even those who are not righteous and chop off the udders of cows, or abort the fetuses of women wearing fine ornaments or who harm their parents, may atone for their evil deeds. But if someone ruined the kindness done to them even if the earth moved, there is no forgiveness for that, say the righteous books.
2
O husband of a woman with fine jewels! May the many rays of the sun no longer rise for me, unless I sing of your proud, strong effort, every morning and evening, singing, “May he live long, our king Valavan, who gives with an open mind abundant wealth to bards who utter sweet words and eat huge balls of rich, cooked rice mixed with honey and millet grown in dry fields, that are as large as the eggs of pigeons, with cooked hare meat.”
3
O Greatness, I am a humble man! May you live for more years than the many raindrops showered by large clouds that that come with the eastern wind and rumble sweetly in the Himalayas, because of the good deeds that noble people have done in this world!
***
Tamil Verse in full
புறநானூறு34, பாடியவர்: ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன், திணை:பாடாண், துறை: இயன் மொழி
1 ‘ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், (குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்,)
பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்,
(Old Puram Books say Paarppaar/Brahmins)
GURAVAR is wrongly interpreted as Parents. It is GURU/Teacher
2 ‘காலை அந்தியும், மாலை அந்தியும், புறவுக் கருவன்ன புன்புல வரகின் பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக், 10 குறுமுயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக், கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், 15 எங்கோன் வளவன் வாழ்க என்று, நின்
3 பீடுகெழு நோன் தாள் பாடேன் ஆயின், படுபு அறியலனே பல் கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெரும இவ்வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண்டாயின், 20 இமயத்து ஈண்டி இன் குரல் பயிற்றிக் கொண்டல் மா மழை பொழிந்த நுண் பல் துளியினும் வாழிய, பலவே.
***
Item 396 Three Kingdoms (Puranānūru 35)
From the ancient days only three kingdoms- Chera, Choza, Pandya Kingdoms were recognised as the original rulers. This shows that Tamils were well organised
***
Item 397 Venus and Rain (Puranānūru 35)
Forecast of rains was based on the movement of the planet Venus. At the end of Purananuru all Venus poems are placed together. So this is NOT the only reference to Venus and rains. So far we have no scientific evidence to this belief. Further research is required
***
Item 398
Importance of Farming
Here in the verse Puram 35 the poet advises the king to focus his attention on cultivation and irrigation. We have proof that Tamil kings like Karikalan built dams for irrigation.
***
Item 399 (Puranānūru 35)
Another advice by the poet is
Don’t listen to useless words.
If you really understand this, you will not listen to uselesswords that are uttered by slanderers! If you take care of farmers who work with their oxen and all the other communities, even your enemies will praise your feet!
Tiruvalluvar also emphasized the importance of Agriculture in ten couplets
Farmers are the linchpin of the world For they support all others who cannot till.
They only live who live by the plough. The rest must stoop and trail behind.
Those who eat what their hands produce Neither beg nor refuse a beggar.
Mother Earth laughs at the sight of those Who remain idle pleading poverty.
****
Puranānūru 35, Poet Vellaikudi Nākanār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan
1
In this dense world where winds cannot penetrate, decorated with the sky, with huge ocean as its limits, among the three who rule over the cool Thamizh land with roaring drums and armies, your royalty alone is true royalty! O greatness!
2
Even if the moving sun’s rays appear on four sides, even if Venus moves to the south, your country alone is truly a country where lovely, cool Kāviri flows through many canals and feeds the land, and appearing like spears, flowers of the sugarcanes with swaying nodes sway!
O very proud king of a greatly prosperous country! I will tell you something that concerns you! Listen to me! When one rules with a perfect scepter like righteousness itself is ruling, the poor receive showers when they ask for drops of rain. Is your wide umbrella, which touches the sky and blinds the eyes with its brightness, a shield against the sun, like a huge, round cloud in the sky? No! O Valavan with sharp spears! It is a shield for the suffering citizens!
On the wide battlefield where elephants lie scattered like pieces of young palmyra tree trunks, your army withstands the onslaught of attacking forces, and cheers as it retreats, its victories rising from what grows inthe furrows dug by plows.
3
If the rains should fail, if harvests shrink, and if people do deeds that are not natural, those in this vast world blame the kings. If you really understand this, you will not listen to uselesswords that are uttered by slanderers! If you take care of farmers who work with their oxen and all the other communities, even your enemies will praise your feet!
நளி இரு முந்நீர் ஏணியாக, வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழங்கு தானை மூவர் உள்ளும், அரசு எனப்படுவது நினதே பெரும! 5
2 அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும், இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத், தோடு கொள் வேலின் தோற்றம் போல ஆடு கண் கரும்பின் வெண்பூ நுடங்கும் 10 நாடு எனப்படுவது நினதே அத்தை, ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே! நினவ கூறுவல் எனவ கேண்மதி!
ஒழிக்க வேண்டி என் மேல் இரக்கம் கொண்டு அருள் புரிவாயாக.
வள்ளுவர் கூறுகிறார்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – (குறள் 280)
பொருள்: தவம் செய்வாருக்கு மொட்டை அடித்துக் கொள்வதும் சடை முடி வளர்த்தலும் தேவை இல்லை உலகத்தார் எதையெல்லாம் பழிக்கிறார்களோ அத்தகைய தீய வழக்கங்களை விட்டாலே போதும்.
சங்கரரும் சாடுகிறார்
தத்துவ வித்தகர் ஆதி சங்கரர் பஜ கோவிந்தம் என்ற அருமையான துதிப்பாடலில் இதை அழகாக வருணிக்கிறார்.
“ஜடிலோ முண்டி லுஞ்சித கேச :
காஷாயாம்(அ)ம்பர பஹுக்ருத வேஷ :
பஸ்யன் அபி ச ந பஸ்யதி மூட:
ஹ்யுதரநிமித்தம் பஹுக்ருத வேஷ :”
—பஜகோவிந்தம்
( : இவ்வாறு இரண்டு புள்ளி இருக்கும் இடத்தில் ஹ என்று உச்சரிக்கவும்.எ.கா. வேஷஹ, கேசஹ, மூடஹ).
பொருள்: ஒருவன் சடை முடியுடன் இருக்கிறான். மற்றொருவனோ மொட்டைத் தலையன். இன்னும் ஒருவன் ஒவ்வொரு முடியாகப் பிடுங்கிவிட்டான். இன்னொருவன் காவி உடையில் வலம் வருகிறான். இந்த மூடர்கள் கண் இருந்தும் குருடர்கள். இந்த வெளி வேஷம் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குத்தான். எவ்வளவு பெரிய உண்மையை எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார் தோடகர்.
அக்ரே வன்ஹிஹி ப்ருஷ்டே பானுஹு
ராத்ரௌ சுபுக சமர்ப்பிதஜானுஹு
கரதலபிக்ஷஸ்தருதலவாசஹ
ததபி ந முஞ்சத்யாஷாபாஷஹ
துறவியாய் வெயிலில் குளிர்காய்ந்திருப்பார்;
உறங்கிட முடங்குவார் காட்டாந்தரையில் ;
கரமேந்தி உணவு; மரத்தடி வாழ்க்கை;
இருப்பினும் துறந்திலை பலவித வேட்கை.
***
பிரம்மா மீது கண்டனம்
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரில் அதிக ஏச்சுப் பேச்சுக்கு ஆளாவது பிரம்மாதான் . பிரணவத்தின் பொருள் தெரியாததால் குட்டுப்பட்டார்; சிறைப்பாட்டார்; ஐந்து முகங்களில் ஒன்றினை இழந்து நான்முகன் ஆனார்; வள்ளுவனோ பிரம்மா அழியட்டும் என்று சபிக்கிறார். அருணகிரியும் விடவில்லை பிரம்மாவை !
இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல்………………….
* நீதியற்ற வேதன் – தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டு, அவளைப் பார்க்க அந்தத் திசையின் பக்கம் தனக்கு ஒரு முகத்தைப் படைத்துக் கொண்டான். ஆதலால் பிரமன் நீதி அற்றவன் ஆனான்.
பிரம்மா மீது வள்ளுவர் சாபம்!
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்- குறள் 1062
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
ஞாலா மேலா வேதா போதா … பூமியில் மேம்பட்டு நிற்பவனே,
பிரமனுக்கு போதித்தவனே,
நாதா சோதிக் கிரியோனே … நாதனே, ஜோதி மலையாகிய
அருணாசலப் பிரானே,
ஞான ஆசார வான் ஆள் கோனே … ஞான மார்க்கத்தில்
முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே,
நானா வேதப் பொருளோனே … பல வகையான வேதங்களுக்கும்
உட் பொருளானவனே,
வேலா பாலா சீல ஆகாரா … வேலனே, பரமசிவ பாலனே,
பரிசுத்த வடிவனே,
வேளே வேடக் கொடி கோவே … செவ்வேளே, கொடி போன்ற
வேடப் பெண் வள்ளியின் மணவாளனே,
வீர ஆதாரா ஆறு ஆதாரா … வீரத்துக்கு ஆதாரமானவனே,
மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே,
வீரா வீரப் பெருமாளே. … வீரனே, வீரமுள்ள பெருமாளே.
***
நான் கோமாளி, ஏமாளி, கபோதி, ஊதாரி,முழு முட்டாள்!
புலையனான மாவீனன் … கீழ்மகனாக மிகவும் இழிந்தவன்,
வினையிலேகு மாபாதன் … தீவினைச் செயல்களிலேயே செல்லுகின்ற மகா பாதகன்,
பொறையிலாத கோபீகன் … பொறுமை என்பதே சிறிதும் இல்லாத கோப குணத்தினன்
முழுமூடன் புகழி லாத தாமீகன் … முழு முட்டாள், புகழில்லாத
வெறும் டாம்பீகன்,
அறிவிலாத காபோதி … அறிவு என்பதே அற்ற கண்ணில்லாக்
கபோதி,
பொறிகளோடி போய்வீழும் அதிசூதன் … ஐம்பொறிகள் இழுக்கும் வழியிலே வீழும் பெரிய சூதுடையவன்,
நிலையிலாத கோமாளி … ஒரு நிலையில் நிற்காத கோணங்கி,
கொடையி லாத ஊதாரி … ஈகை என்பதே இல்லாத வீண் செலவுக்காரன்,
நெறியிலாத ஏமாளி … நல்லொழுக்கம் இல்லாத பேதை,
குலபாதன் … நான் பிறந்த குலத்தையே பாவத்துக்கு ஆளாக்குபவன், இத்தகைய நான்
நினது தாளை நாடோறு மனதில் ஆசை வீடாமல் … உன்
திருவடிகளையே தினமும் மனதில் ஆசை அழியாமல்
நினையுமாறு நீமேவி யருள்வாயே … நினைக்கும்வண்ணம் நீ என் உள்ளத்திலிருந்து அருள் புரிவாயாக.
***
நான் ஒரு முட்டாளுங்க நல்லாப் படிச்சவங்க நாலு பேரு என்ற திரைப்படப் பாடலில் நகைச் சுவை நடிகர் சந்திரபாபுவும் இதை எதிரொலிக்கிறார் :
நான் ஒரு முட்டாளுங்க!
நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்தும் புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க
கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ.ஏ.ஏ கைதே.. டாய்
கண்ணிறைஞ்ச பெண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீஸ் பீஸா கீசாங்க பேஜாரா பூட்டுதுங்க
நான் ஒரு முட்டாளுங்க
கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டுபோறதெல்லாம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லாம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க
நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னேங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்சவாயன் என்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க
திரைப்படம்: சகோதரி: இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன் இசை: ஆர். சுதர்சனம் பாடியவர்: ஜே.பி. சந்திரபாபு ஆண்டு: 1959
***
சோமுகன் கதை
ஆரணற்கு மறை தேடி இட்ட திரு மால் மகள் சிறுமி மோக
சித்ர வ(ள்)ளி ஆசை பற்றி அருணாசலத்தின் மகிழ்
பெருமாளே. … பிரமனுக்கு வேதத்தைத் தேடித் தந்த திருமாலின்*
மகளாகிய சிறுமி, (உன் மீது) மோகம் கொண்ட அழகிய வள்ளி
நாயகியின் ஆசை பூண்டு திருவண்ணாமலையில் மகிழ்ந்து
வீற்றிருக்கும் பெருமாளே.
* சோமுகன் என்னும் அசுரன் பிரமனிடமிருந்து மறை நூல்களைப் பிடுங்கிக் கடலுள் மறைந்தான். திருமால் பெரிய சேல் மீனாகிக் கடலுள் புகுந்து சோமுகனைக் கொன்று நூல்களை மீட்டார்.
***
கோடி நோய்கள் நீங்கி சிவஞான சித்தி கொடு
வலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி … வலிப்பு நோய்,
பித்த நோய், கண்டமாலை நோய், சிலந்திப்புண்,
வறல்சூலை குட்டமொடு குளிர்தாகம் … உடல் இளைப்பு, வயிற்று
உளைவு, குஷ்டம், குளிர், தாகம்,
மலிநீரிழிச்சல் பெரு வயிறு ஈளை கக்கு … மிக்க நீரிழிவு,
மகோதரம், கபம் கட்டுதல், வாந்தி,
களைவருநீர டைப்பினுடன் வெகுகோடி … அயர்ச்சிதரும்
மூத்திரத்தடை நோய் இவைகளுடன் வெகு கோடிக்கணக்கான
சிலைநோயடைத்தவுடல் புவிமீதெடுத்துழல்கை … சீறி எழும்
நோய்களை அடைத்துள்ள இந்த உடலை, பூமியின் மீது எடுத்துத் திரிதல்
தெளியாவெ னக்குமினி முடியாதே … தெளிந்த அறிவு இல்லாத
எனக்கும் இனிமேல் முடியாது.
சிவமார்திருப்புகழை எனுநாவினிற்புகழை … மங்கலம் நிறைந்த
உனது திருப்புகழை என் நாவாறப் புகழ்வதற்கு
சிவஞான சித்திதனை யருள்வாயே … சிவஞான சித்தியை
தந்தருள்வாயாக.
—subham—
Tags- சங்கரர், வள்ளுவர், நான் ஒரு முட்டாளுங்க ,-PART 30 , பிரம்மா ,கோமாளி, ஏமாளி, அரிய செய்திகள், ஆ ஆ பாடல், மழித்தல் நீட்டல், பஜ கோவிந்தம், ஜடிலோ முண்டி, திருப்புகழ், அருணகிரிநாதர்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
சுபாஷிதச் செல்வம்
உண்மையான பந்து யார்?
ச. நாகராஜன்
சில அருமையான சுபாஷித ஸ்லோகங்கள் இதோ
உண்மையான பந்து யார்?
உத்ஸவே வ்யஸனே சைவ துர்பிக்ஷே சத்ருவிக்ரஹே |
ராஜத்வாரே ஸ்மஷானே ச யஸ்திஷ்டதி ச பாந்தவ: ||
உற்சவ காலங்களிலும், அபாயத்திலும், வறுமையிலும், எதிரிகளுடனான சண்டையிலும் அரண்மனை வாயிலிலும் சுடுகாட்டிலும் எவன் ஒருவன் விடாது கூட இருக்கிறானோ அவனே உண்மையான பந்து.
சூரியனும் பெரியோரும் ஒன்று போல ஜொலிப்பர்!
உதேதி சவிதா தாம்ரஸ்தாம்ர ஏவாஸ்தமேதி ச |
சம்பத்தௌ ச விபத்தௌ ச மஹதாமேகரூபதா ||
சூரியன் உதிக்கும் போது செக்கச் சிவந்த வர்ணத்தில் இருக்கிறான். அவன் அஸ்தமிக்கும் போது மீண்டும் செக்கச் சிவந்த வர்ணத்தில் ஜொலிக்கிறான். அதே போலவே பெரியோர் வளமாக வாழும் காலத்திலும் வறுமையில் இருக்கும் போதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள்.
பெரியோரின் குணம்!
விவேக: சஹ சம்பத்த்யா வினயோ வித்யயா சஹ |
ப்ரபுத்வம் ப்ரஸ்னயோபேதம் சின்ஹமேதன்மஹாத்மனாம் ||
இவை தான் உண்மையான பெரியோரின் குணமாகும்: செல்வத்துடன் கூடவே அறிவு; கல்வி அறிவுடன் பணிவடக்கம், , மேலாளுமையுடன் எளிமை
தாய், தந்தை, நண்பர் செய்யும் உதவி இயல்பானது!
மாதா மித்ரம் பிதா சேதி ஸ்வபாவாதித்ரயம் ஹிதம் |
கார்யகாரணதஶ்சான்யே பவந்தி ஹிதபுத்தய: ||
தாயார், நண்பன், தந்தை ஆகிய மூவரும் ஒருவனுக்கு இயல்பாகவே இதம் (நன்மை) செய்பவராவர். இதே போல இதம் செய்யும் மற்றவர்களும் உண்டு என்றாலும் அவர்கள் காரண காரியத்திற்காகவே அதைச் செய்வர்.
ஏழையாக இருக்கும் ஒருவன் இறந்தவனுக்குச் சமானம். குழந்தை இல்லாதவனும் இறந்தவனுக்கும் சமம் தான். இறந்தவர்களுக்குச் செய்யும் சிரார்த்த காரியத்தின் போது ஸ்ரோத்ரிய பிராமணன் இல்லை என்றால், அவனுக்கு தக்ஷிணையாக தானம் வழங்கப்படவில்லை என்றால் அதுவும் இறப்பிற்குச் சமம் தான்!
மணமில்லாத கிந்சுகா மலர் போல ஒருவன் சோபிக்கமாட்டான்!|\
ரூபயௌவனஸம்பன்னா விஷாலகுத்னசம்பதா: |
வித்யா ஹீனா ந ஷோபந்தே நிர்கந்தா இவ கிந்ஷுகா: |\
ஒருவன் அழகாக இளமையுடன் இருந்தாலும், நல்ல குலத்தில் பிறந்திருந்தாலும் கூட கல்வி இல்லையென்றால் மணமின்றி இருக்கும் கிந்ஷுகா புஷ்பம் போல ஒருவன் சோபிப்பதில்லை.
Date uploaded in Sydney, Australia – 23 February 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆங்கில எழுத்து J- ல் துவங்கும் சொற்கள் தொடர்ச்சி………………
Words beginning with “J”.
Tamil version continued…………………..
ஜயத்ரதன்
சிந்து சமவெளியை ஆண்ட ஜயத்ரதன், துரியோதனன் சகோதரியான துஸ்சலாவை மணந்தான் . மஹாபாரதப் போரில் கெளரவர்கள் தரப்பில் நின்று சண்டையிட்டான். கடுமையான போரில் 13 ஆவது நாளில் அர்ஜுனன் மகனான அபிமன்யுவைக் கொன்றான். உடனே அடுத்த நாள் சூரியன் மறைவதற்குள் ஜெயத்ரதனைத் தீர்த்துக் கட்டுவேன் என்று அர்ஜுனன் சபதம் செய்தான். மறுநாள் சூரியன் அஸ்தமனம் ஆனது போல இருள் கவ்வியது . இது கிருஷ்ணன் தனது சுதர்ஸன சக்கரத்தால் சூரியனை மறைத்தத்தால் ஏற்பட்டதாகச் செப்புவர். உடனே ஜயத்ரதன் தன்னை அர்ஜுனன் கொல்ல முடியவில்லை என்ற வெற்றிக் களிப்பில் வெளியே தலை நீட்டினான். கிருஷ்ண பரமாத்மா சுதர்சன சக்ரத்தை விலக்கவே மீண்டும் சூரிய ஒளி பிரகாசித்தது . உடனே அவனைக் கொல்லும்படி கிருஷ்ணன் சொல்லவே அர்ஜுனன் அவனைக் கொன்றான் என்பது மஹாபாரதக் கதை
உண்மையில் இது சூரிய கிரகண சம்பவம் ஆகும். பாண்டவ சகோதரர்களில் நகுலனும் சகாதேவனும் சோதிடத்தில், வானவியலில், மஹா மேதாவிகள் மறுநாள் முழு சூரிய கிரகணம் நிகழப்போவதைக் கிருஷ்ணனிடம் கூறியிருந்தனர். அதை கிருஷ்ணன் பயன்படுத்திக்கொண்டு இந்த வெற்றியை அர்ஜுனனுக்கு ஈட்டித் தந்தான் . மாபாரதப்போர் துவங்கிய நாள் அமாவாசை என்றாலும் ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் போர் நட ந்தது என்று பார்த்தால் அடுத்த அமாவாசையில் சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.
இன்னுமொரு சம்பவமும் உள்ளது . பாண்டவர்கள் காட்டில் வேட்டையாட்சி ச் சென்ற சமயா த்தில் அவர்களுடைய மனைவி திரவுபதி தனியாக இருந்தாள்; அப்போது ஜயத்ரதன் அவளை அணுகி உணவு கேட்கவே அவளும் உணவினை வழங்கினாள். அவள் கறுப்பி என்றாலும் பேரழகி. அவளை அடைய ஆசை கொண்ட ஜயத்ரதன் தனது தேரில் அவளைக் கடத்திச் சென்றான் பாண்டவர்கள் அவனைத் துரத்திச் சென்று திரவுபதியை மீட்டனர்.
***
ஜெயதேவர்
கீத கோவிந்தம் என்னும் புகழ்பெற்ற அஷ்டபதி பாடல் நூலை சம்ஸ்க்ருத மொழியில் இயற்றிய ஒரிஸ்ஸா மாநிலக் கவிஞர் இவர்
ஜெய கோவிந்தரின் கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்டபதிகளில் மிகவும் ‘விரசமான’ பகுதிகள் என்று கருதப்படும் வசனங்களும் உண்டு. அதாவது கடவுளை நாயக நாயகி பாவத்தில் வழிபடும் ஒரு சிறந்த அணுகுமுறை. உலகில் வேறு எந்த மதத்திலும் இந்த சுதந்திரத்தைக் காணமுடியாது.
ஆனால் கோபியரின் காதல் பற்றி சுவாமி விவேகானந்தர் அற்புதமான சொற்பொழிவாற்றி இருக்கிறார். “முட்டாள்களே (Fபூல்ஸ்) இதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தெய்வீக அன்புக்கு ஈடு இணையானது எதுவும் உலகில் இ ல்லை” என்று இடி முழக்கம் செய்கிறார். அது உடல் ரீதியான சிற்றின்ப அன்பு இல்லை. உள்ளம் ரீதியான பேரின்ப அனுபவம். அதைப் புரிந்து கொள்ள வியாசருடைய சுகர் போல உள்ளத் தூய்மை இருக்கவேண்டும்” என்கிறார் சுவாமிஜி.
இந்தப் புலவருக்கு மேலும் ஒரு சிறப்பு உண்டு . விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் புத்தரையும் ஒரு அவதாரமாக்கி புரட்சி செய்தார் . இவர் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ஸம்ஸ்க்ருதக் கவிஞர் ஆவார் .இன்றுவரை சம்பிரதாய பஜனைகளில் அஷ்டபதிப் பாடல்களை பாடிவருவதால் இவர் அழியாத புகழ் எய்திவிட்டார் .
***
ஜீவன்
உயிருள்ள எதையும் ஜீவன் என்பர்; எறும்பு முதல் யானை வரை ஜீவனுள்ள பிராணிதான் ; உயிர் மூச்சு, பிராண சக்தி என்பது பொருள். மனிதர்களை ஜீவாத்மா என்றும் இறைவனைப் பரமாத்மா என்றும் உபநிஷத்துக்கள் பகர்கின்றன.
ஜீவ என்பதை பைபிளில் ஈவ் என்றும் ஆத்மா என்பதை ஆடம் என்றும் மாற்றிவிட்டனர்!
Jeev = Eve; Atma= Adam in Bible.
***
ஜீவன் முக்தன்
உயிருடன் உலவும்போதே இறைவனை முழு அளவில் உணர்ந்து விட்டவர்களை ஜீவன் முக்தர்கள் என்பார்கள் ; அவர்களும் சாதாரண மனிதர்களைப் போலவே நோயவாய்ப்படுவர்; இன்ப துன்பங்களை அனுபவிப்பர் ஆயினும் அவர்கள் என்றும் பேரின்ப நிலையில் திளைத்து இருப்பர் ; நமது காலத்தில் ராம கிருஷ்ண பரமஹம்சர், சேஷாத்ரி சுவாமிகள், ரமணர், காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் போன்றோர் இந்த நிலையை அடைந்தவர்கள் ஆவர்.
***
ஞானம்
அறிவு என்று பொருள் ஆங்கிலச் சொற்களான க்னோ னாலேட்ஜ் Knowledge. Know என்பன இந்தச் ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்தே பிறந்தன. ஆயினும் இது வரலாறு, விஞ்ஞானம் முதலிய புஸ்தகங்களைப் படிப்பதால் ஏற்படும் அறிவு அல்ல; இது மெய்யறிவு என்னும் பொருளில் பயன்படுகிறது . இறைவன் என்னும் உண்மைப் பொருள் பற்றிய அறிவு இது.
***
ஞானேந்திரியங்கள்
கண் காது மூக்கு தோல், நாக்கு என்ற ஐம்புலன்கள் நமக்கு உண்மை அறிவினை நாட்டை உதவுகின்றன .
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. (குறள் – 27)
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
***
ஜாதவேதஸ் :
அக்கினியின் பெயர்களில் ஒன்று; எல்லாம் அறிந்தவன் என்பது பொருள்; வேதத்தில் வரும் முதல் சொல் அக்கினி. இந்தப் பிரபஞ்ச்மம் முழுதும் அக்கினி வியாபித்துள்ளது சூரியன் முதலான நட்சத்திரம் முதல் நமது உடல்வரை அக்கினியால் இயங்குகின்றன. அக்கினி இல்லையேல் பிரபஞ்சசமோ நாமோ இல்லை இதைக் கடவுளின் தூதர் என்று கருதும் இந்துக்கள் அக்கினியில் ஆகுதி செலுத்தி அவைகளை இறைவனுக்கு அனுப்புகின்றனர் இந்தாளு சமய சடங்குகளில் பிறப்பு முதல் இறப்பு வரை பயன்படுவது அக்கினி.
அக்கினி சாட்சியாகத் திருமணம் செய்வதைச் சங்க இலக்கியமும் வேதங்களும் செப்புகின்றன . அக்கினி சாட்சியாக உடன்படிக்கை செய்ததைக் கல்வெட்டுகளும் இதிகாசங்களும் இயம்புகின்றன.
***
ஜ்வரதேவேர்
ஜ்வரதேவேர் சிவனின் ஒரு வடிவம் ஆகும் . பஸ்மாசுரனை அழிக்க சிவன் எடுத்த ரூபம் இது ஆகம நூல்களில் இவருடைய வடிவம் வருணிக்கப்படுகிறது . அவருக்கு மூன்று தலைகள் , மூன்று கால்கள், ஆறு கைகள், ஒன்பது கண்கள் உள்ளன . சில இடங்களில் கைகளில் உள்ள பொருள்கள் மாறு படுகின்றன
கன்னியாகுமரி மாவட்டத்தில் திற்பரப்பு என்ற இடத்தில் அமைந்துள்ள வீரபத்ரேஸ்வரர் கோயில், திருநெல்வேலி , மதுரை, திருப்பரங்குன்றம், , மயிலாடுதுறை, பவானி உள்பட எண்ணற்ற சிவன் கோவில்களில் ஜ்வரதேவர் சன்னதி உள்ளது.
கும்பகோணத்தில் ஆதி கும்பேஷ்வரர் கோவிலிலும் இவர் சிலை உள்ளது. மூன்று தலைகளில் இரண்டு தலைகள் பிராணிகளுடையவை ; சிங்கம், மான் ஆகியவற்றின் தலைகள் மனித தலைக்கு இரு புறமும் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கையில் தீர்க்க கலசம் இன்னொன்றில் திரிசூலம் காணப்படுகின்றன.
சிவபெருமான் உடலுக்கு வரும் நோய்களையும் பிறவிப்பிணி என்னும் நோயையும் தீர்ப்பவர் என்று கருத்து வேதத்திலேயே உள்ளது; அவரை டாக்டர் என்றும் மருந்து என்றும் அழைக்கும் பிஷக், பேஷஜம் என்ற சொற்கள் யஜுர் வேத ருத்ர மந்திரத்திலேயே வருகிறது வைத்தீஸ்வரன் என்ற அவருடைய பெயரும் இதை மெய்ப்பிக்கிறது.
ஜுரம் என்றால் காய்ச்சல்; ஆகவே நோய்களைத் தீர்ப்பதற்கு இவரை கஷாயம் வைத்து வழிபடுவதும் உண்டு.
பிற்கால வைஷ்ணவ நூலான ஹரிவம்சத்தில் கிருஷ்ணன் உருவாக்கிய ஜூர தேவர் இவருடன் சண்டையிட்டதாகவும் கதைகள் இருக்கின்றன.
***
ஜ்யோதிஷ
தமிழில் ஜோதிடம் என்றும் ஜோதிஷம் என்றும் சொல்லுவார்கள் . ஒளி என்று பொருள்; வேத காலப் படிப்பில் உள்ள ஆறு பாடங்களில் ஒன்று ஜோதிடம். உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதம் முதல் ஜோதிடக் குறிப்புகள் உள்ளன வானவியல் இதில் அடக்கம் . சங்க இலக்கியத்தில் சுமார் 200 ஜோதிடக் குறிப்புகள் உள்ளன.
ஜோதிடம் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு; முதலாவது வானில் உலவும் கிரகங்கள், நட்சத்திரங்களின் பாதையைக் கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப யாக யக்ஞங்களைச் செய்வது. இரண்டாவது அப்படி உலவும் கிரகங்கள் நட்சத்திரங்களைக் கொண்டு இனி என்ன நடக்கும் என்பதைச் சொல்லுவது (Future Predictions) ஆகும். இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது.
உலகிலேயே ஜோதிடத்தை சிலபஸில் — பாட திட்டத்தில் சேர்த்தது இந்துக்கள்தான். வேத பாடசாலைக்குச் செல்லுவோர் ஆறு துணைப்பாடங்களைப் (Six Ancillary Subjects) படிக்க வேண்டும். அப்போதுதான் குருநாதர் கான்வ கேஷன் Convocation தினத்தன்று (பட்டமளிப்பு விழா) சர்ட்டிபிகேட்டைக் கையில் கொடுப்பார் .
தமிழர்களைப் பொருத்த மட்டில் சங்க காலத்திலேயே இந்த நம்பிக்கை ஆழ வேரூன்றிவிட்டது.சங்க இலக்கியத்தில் நூற்றுக்கனக்கான சோதிடக் குறிப்புகளைக் காண்கிறோம். சகுன சாஸ்திரம், பறவை சாஸ்திரம், பல்லி ஜோதிடம், குறி கேட்டல், மணல் ஜோதிடம், கயிறு சோதிடம், சோழி ஜோதிடம் என ஏராளமான விஷயங்களை நம்முடைய இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தை விட அதிகமான பெயர்களை தமிழ் நட்சத்திரப்பட்டியலில் காண முடிகிறது. தும்மல் சாஸ்திரம், கண்துடிப்பு சாஸ்திரம், சகுனங்கள் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இன்றுவரை சூரிய சந்திர கிரகங்கணளைத் துல்லியமாகக் கணக்கிட்டுச் சொல்லும் சோதிடர்கள் பொய் சொல்ல முடியுமா? என்ற வினாவை எழுப்புகிறார் அம்பலவாணர் என்ற புலவர் .
ஒருவர் பிறவியின் காரணமாக குண நலன்கள் வருகிறதா, அல்லது அவரை வளர்க்கும் சூழ்நிலையால் குண நலன்கள் வருகின்றனவா என்ற கேள்விக்கு பிறவிதான் காரணம் என்கிறார் புலவர். தற்காலத்தில் இரண்டையும் (Nature or Nurture) ஆதரித்து கட்டுரைகள் வந்தவண்ணம் இருக்கின்றன (Environment or Genetics)?
மிருகங்கள் கூட ஜோதிடம் பார்த்ததாக- சகுனம் பார்த்ததாக சங்கப் புலவர்கள் பாடி வைத்தனர். சம்ஸ்கிருதத்தில் கிரஹங்களுக்கு நிறைய பெயர்கள் உண்டு. ஆனால் தமிழில்தான் 27 நட்சத்திரங்களுக்கும் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நிறைய பெயர்கள் வருகின்றன.
—subham—
Tags- ஜோதிடம், ஜயத்ரதன், HINDU DICTIONARY , IN ENGLISH AND TAMIL – 38; இந்து மத கலைச்சொல் அகராதி-38, ஜுரதேவர்