இந்திய ‘ரிஷி’ கிரீஸில் ‘கரடி’ ஆன கதை!- Part 1 (Post No.10,724)

PICTURE OF SAPTA RISHI STARS WITH VASISTHA AND ARUNDHATI

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,724

Date uploaded in London – –    8 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இந்தியாவிலும் மற்ற பூமியின் வட கோளார்த்த நாடுகளில் வசிப்போரும் இரவு நேரத்தில் வானத்தின் வடக்கு திசையில் பார்த்தால் தெரியும் நடசத்திரக்கூட்டத்துக்குப் பெயர் சப்தரிஷி மண்டலம் . இதற்கு வானசாஸ்திர வரைபடத்தில் இன்றும் உள்ள பெயர் – பெருங்கரடி நட்ச த்திரக் (Ursa Major= Great Bear Constellation) கூட்டம். ஹிந்து மத ரிஷி (Rsi) வெளிநாடுகளில் எப்படி கரடி (Rksa= Ursa= Arktos) ஆனார் என்பது பற்றி சுவையா கதை உளது. இந்த சுவையான கதை, நமக்கும் கிரேக்க நாட்டுக்கும், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இடையே வேத காலத்திலேயே தொடர்பு இருந்ததையும் காட்டுகிறது. அலெக்ஸ்சாண்டருக்குப் பின்னரே இந்திய- கிரேக்க தொடர்பு வந்தது என்ற வெள்ளைக்காரன் – கொள்ளைக்காரன் – சித்தாந்தத்தையும் போட்டு உடைக்கிறது.

தமிழில் சப்தரிஷி மண்டலம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இமயம் முதல் குமரிவரை வழிபடப்படும் நடத்திரங்கள் சப்த ரிஷி மண்டலம் என்னும் 7 விண் மீன் களாகும் . அதிலும் குறிப்பாக வசிஷ்ட நடசத்திரத்தைச் சுற்றிவரும் அருந்ததி நட்சத்திரத்தையும் குமரி வரையுள்ள இந்துக்கள் வணங்கி வருகின்றனர்.இந்துக்களின் வாழ்வுடன் வேத காலம் முதல் பின்னிப் பிணைந்தது 7 நக்ஷத்திரங்கள்.

நற்றிணைப் பாடல் 231 :- முதல் சான்று

மையற விளங்கிய மணி நிற விசும்பின்

கைதொழு மரபின் எழுமீன் போலப்

பெருங்கடல் பரப்பின் இரும்புறந்தோயச்

………………………………. (புலவர் இளநாகனார்)

பொருள்

மாசற விளங்கிய நீலமணி போன்ற நிறத்தையுடைய ஆகாயத்தின் கண்ணே தோன்றி உலகத்தாரால் கைதொழப்படும் தகுதி உடைய  முனிவரின் தோற்றமாகிய ஏழு மீன்களைப்போலே  பெய்ய கடற்பரப்பின் கண்ணே ……………………..

இதிலிருந்து சபதரிஷி மண்டல நடசத்திரங்களை வணங்குவது மரபு என்றும் அது நெய்தல் நில காதலன், காதலிக்கும், தோழிக்கும் தெரிந்த உண்மை என்பதும் விளங்கும்.

புலவர் இளநாகனார் சொல்லுவது போல, இருண்ட வானத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால் வடதிசையில் பட்டம் பறப்பது போல 7 நட்சத்திரங்களைக் காணலாம். ஆஸ்திரேலியா , தென் அமெரிக்கா ,  தென் ஆப்ரிக்கா போன்ற தென் கோளார்த்த நாடுகளில் தெரியாது.

இந்தப் பட்டத்தில் 4 நட்சத்திரங்கள் ஒரு சதுரம் போலவும், மீதி 3  பட் டத்தின் ‘வால்’ போலவும்  இருக்கும். வால் பகுதிதான் மிகவும் முக்கியமானது; அதில் கடைசி நட்சத்திரத்துக்கு முந்தைய நட்சத்திரம் வசிஷ்ட மகரிஷி. அதைச் சுற்றிவரும் நட்சத்திரம் அருந்ததி. அது தெரிந்தும் தெரியாமலும் மாறி மாறி தோன்றும். இதைப் பார்ப்பது இந்துக்களின் திருமணச் சடங்கில் அருந்ததி காட்டல் அல்லது  அருந்ததி பார்த்தல் என்று அழைக்கப்படும்.

திருமண நாளன்று முதல் இரவு அறைக்குள் நுழைவதற்கு முன்னர் தமிழர்கள் இதை பார்க்கவேண்டும். உடனே அதைக்ககாட்டும் பிராஹ்மண புரோகிதர் இப்படி இணைபிரியாமல் வாழுங்கள் என்று சொல்லி வாழ்த்துவார் . இது வேதம், மனு ஸ்ம்ருதி, சங்க இலக்கியம், பிற்கால சிலப்பதிகாரம், திருக்குறள் முதலிய நூல்களில் வருகிறது. இதை முன்னரே எழுதியுள்ளேன் . இதோ சுருக்கமாக ..

“இதோ தமிழர்கள் வணங்கிய வடக்கத்திப் பெண் அருந்ததி:—

FROM MY OLD ARTICLE  கட்டுரை எண்:- 1131; தேதி—26 ஜூன் 2014.’அற்புதப் பெண்மணி அருந்ததி!’


1)“வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை” (புறநானூறு 122)
மலையமான் திருமுடிக்காரியின் மனைவி பற்றி கபிலர் பாடிய பாடல் இது. உனது மனைவி வடமீன் (அருந்ததி) போன்று (புரையும்) கற்பிற் சிறந்தவள். (மடமொழி அரிவை= இனிய சொற்களை உடைய பெண்).

2)“அருந்ததி அனைய கற்பின் “(ஐங்குறுநூறு 442, பேயனார் பாடிய பாடல்)


3)விசும்பு வழங்கும் மளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் (பதிற்றுப்பத்து 31—27/28)
பொருள்:– வான உலகத்தில் திரியும் தெய்வப் பெண்களில் சிறந்தவளான புகழ்மிகு விண்மீன் அருந்ததிக்கு நிகரானவள்.

எந்தக் கற்புக்கரசியைப் புகழ்ந்தாலும் அவளை இப்படி அருந்ததியோடு ஒப்பிடுதல் தமிழர்தம் மரபு.


4)பெருநல் வானத்து வடவயின் விளங்கும்
சிறுமீன் புரையின் கற்பின் நறுநுதல் (பெரும்பாணாற்றுப்படை 302-303)

5)வடமீன் போல் தொழுதேத்த வயங்கிய கற்பினாள் (கலித்தொகை 2—21)

6)கடவுள் ஒருமீன் சாலினி (பரிபாடல் 5).

7)தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் (சிலப்பதிகாரம் 1-27)


8)சாலி ஒருமீன் தகையாளை — (சிலப்பதிகாரம்)


9)அங்கண் விசும்பின் அருந்ததி அன்னாளை (சிலப்பதிகாரம்)
சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வருணிக்கும் இளங்கோ அடிகள், அவளை அருந்ததிக்கு ஒப்பீட்டுப் பாடிய வரிகள் இவை.

இதை கிரேக்கர்கள் ஏன் கரடிகள் என்று அழைத்தனர் ? என்பதைக் காண்போம்

ரிக்ஸ = கரடி – சம்ஸ்க்ருதம்

உர்சா = கரடி – லத்தீன் மொழி (URSA= R/ursa=Rishaya)

ஆர்க்ட்டோஸ் = கரடி = கிரேக்க மொழி

சப் தரிஷி மண்டலம் = URSA MAJOR = GREAT BEAR= DIPPER= CHARLES’ WAIN = HIPPOPOTAMUS = SEVEN OXEN  ETC.

WAIN= WAGON= VAHANA IN SANSKRIT

அலெக்ஸ்சாண்டருக்கு முன்னரே நமக்கும் கிரேக்க நாட்டுக்கும் தொடர்பு உண்டு என்பது  பிதகோரஸ் தியரம் (Pythagoras Theorem) முதலியவற்றில் இருந்து தெரிகிறது. அலெக்ஸ்சாண்டர் இந்தியா வந்த காரணமே ரிஷி முனிவர்களை சந்திக்கத்தான் . அலெக்சாண்டரின் குரு போன்றவர் அரிஸ்டாட்டில்; அவரது குரு பிளாட்டோ; அவரது குரு சாக்ரடீஸ்; அவரது குரு உபநிஷத ரிஷிகள்; ‘உன்னையே நீ அறிவாய்’ என்ற அவரது வாசகம் பகவத் கீதை, உபநிஷத்தில் உள்ள வாசகம்; உபதேசம்

Rishis of Upanishads- Pythagoras- Socrates- Plato- Aristotle- Alexander

மேலும் இந்துக்களை போல 7 நட்சத்திரங்களையும் ஒருசேர கிரேக்கர்கள் , ரோமானியர்கள் பார்க்கவில்லை. 4 வேடர், 2 நாய்கள் அல்லது 3 நாய்கள் அல்லது கரடிகள் –இப்படியெல்லாம் கதை எழுதினர் ; நாம் ஒ ருவர்தான் 7 புனிதர்களின் பெயர் சூட்டி இன்றுவரை நட்சத்திரங்களையும் வணங்குகிறோம். ரிஷிகளையும் வணங்குகிறோம். பிராமணர்கள்  தினமும் 3 வேளை செய்யும் சந்தியாவந்தனத்தில் 7 ரிஷிகள் பெயரையும் சொல்லுவார்கள். அதே வரிசையில் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி இலக்கண புஸ்தகத்தில் எழுதியுள்ளார். தமிழ் நாட்டில் 2000 ஆண்டுகளாக சந்தியாவந்தனம் நடைபெறுவதை புறநானூற்றின் 34 ஆவது பாடலில் காலை அந்தி, மாலை அந்தி என்று புலவர் ஆலத்துர் கிழார் பாடுகிறார். இன்ன பிற காரணங்களால், கிரேக்கர்கள் அரைகுறையாகக் காப்பி அடித்த விஷயம்தான் இந்த ரிஷி= கரடி மர்மத்தின் பின்னணி.; விளக்கம் பெற தொடர்ந்து படியுங்கள்

Xxxxxx

தொல்காப்பியத்தில் உள்ள ஓரை (Orai= Hora= Hour) என்ற சொல்லும் கிரேக்க ஹோரா (Hora in Greek is Hour in English)  என்பதிலிருந்து வந்ததே என்று சொல்லி வையாபுரிப்பிள்ளை போன்ற அறிஞர்களும் கூட மதிமயங்கிப் போனார்கள். இதனால் தொல்காப்பிய காலத்தையும் ஜோதிட சாஸ்திரத்தில் ஹோரை குறிப்பிட்ட காலத்துக்குப் பின்னரும் வைத்தார். அதுபற்றி விவாதிக்க நான் இப்போது வரவில்லை.

வெள்ளைக்காரன் சித்தாந்தம் என்ன என்பதைச் சொல்லவே அந்த உதாரணம். ஹோமர் எழுதிய கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலியட் அல்லது ஆடிஸி Iliad and Odyssey (சில நாடுகளில் ஒடிஸி என்று உச்சரிப்பர்) காவியங்களில்  ஒரு சம்ஸ்க்ருத  சொல் இருந்து, அதே சொல் அதற்கு முந்தைய ரிக் வேதத்தில் வந்தால் , பார்த்தீர்களா! நாங்கள் அன்றே சொன்னோம்; நாம் அனைவரும் ஒரு காலத்தில் மத்திய ஆசியாவில் ஒரே கூரையின் கீழ் வாழ்ந்தோம். ஆரியர் என்று பெயர் கொண்ட நாடோடிக் கும்பல் கைபர் கணவாய் வழியே இந்தியாவுக்குள் நுழைந்தது. நாங்கள் கோமணத்தோடு ஜெர்மனிக்குள்ளும் கிரேக்கம் முதலிய நாடுகளுக்கும் சென்றோம். அப்போது பயன்படுத்திய சொல்லில் இதுவும் ஒன்று என்பர்.. அதாவது அவர்கள் இந்துக்களிடமிருந்து கடன் வாங்க வில்லையாம்.

ஹோரை போன்ற சொற்கள் முதலில் கிரேக்க மொழியில் வந்து, பின்னர் நமது ஜோதிட சாஸ்திரத்தில் வந்தால் பார்த்தீர்களா, நாங்கள் அன்றே செப்பினோம். இந்துக்களுக்கு கணக்கும் தெரியாது; ஜோதிடமும் தெரியாது. நாங்கள் ஐரோப்பியர்கள்தான் எல்லாம் சொல்லிக் கொடுத்தோம் என்று கதைப்பார்கள்.

அவர்கள் கையாளும்  மூன்றாவது தந்திரமும் உண்டு. திடீரென்று இலக்கியம், எழுத்து எதுவும் இல்லாத முண்டா மொழி Munda Language பெயரைச் சொல்லுவார்கள்; பிராஹுய் மொழி என்பார்கள் (அதில் 99 சதம் சம்ஸ்க்ருதம் மூன்றே எண்கள் தமிழ்!!) திடீரென்று அவர்களே குப்தர்  காலத்தில் வந்தவை என்று சொன்ன புராணக் கதைகளை சான்று காட்டுவார்கள். திடீரென்று நமக்கு 700 ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த சாயனர் எழுதிய வேத பாஷ்யத்தைக் காட்டுவர். சாயனர் சொல்லாத ‘ஆரிய’, குமாரில பட்டர் சொல்லாத ‘’திராவிட “இனம் பற்றிக் கதைப்பார்கள், அவர்கள் இருவரும் ஆரிய திராவிட என்ற சொற்களை இனம் என்ற பொருளில் பயன்படுத்தவே இல்லை. திசையைக் குறிக்கவும்,ஒருவர் ‘பண்பாடும் நாகரீகமும் நன்னடத்தையும் உள்ளவர்’ என்பதைக் குறிக்கவே பயன்படுத்தினர். தமிழ் சங்க இலக்கியத்திலும் பாரதியார் பாடல் முழுவதும் ‘ஆரிய’ என்ற சொல் இந்தப் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது. சுருங்கச் சொன்னால் அவர்கள் யாதுதானர்கள். வாலமீகியும் ரிக்வேதமும் பயன்படுத்தும் யாதுதானர்களின் பொருள்= வேறு வேறு உரு எடுத்து மயக்கும் ராக்ஷஸர்கள்.

TO BE CONTINUED………………………………..

XXXXXXXXXX

PICTURE OF SRI LANKAN STAMP ON URSA MAJOR

Tags- கரடி, ரிஷி, சப்த ரிஷி, நட்சத்திரம் , எழுமீன் , ஏழு கிரேக்க, லத்தீன் , ஊர்சா,

குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை! (Post 10,723)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,723
Date uploaded in London – – 8 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷிதம்
குவித்த கரங்களில் இருக்கும் மலர்களின் வாசனை!
ச.நாகராஜன்

அஞ்சலிஸ்தானி புஷ்பாணி வாஸயந்தி கரத்வயம் |
அஹோ சுமனஸாம் வ்ருத்திர்வாமதக்ஷிணயோ: சமா ||

குவித்த கரங்களில் இருக்கும் மலர்கள் இரு கைகளுக்கும் வாசனையைத் தருகிறது. நல்ல மனமுள்ளவர்களின் அணுகுமுறையும் மலர்களைப் போலவே இடதுபுறம் வலது புறம் ஆகிய இரு புறங்களிலும் இருப்பவர்களுக்கும் சமமாகவே இருக்கும்.

Flowers in folded hands make both the palms fragrant. The attitude of the good minded (flowers and good people) is indeed the same towards both, the left and the right.
*
அநாஹுதா: ஸ்வயம் யாந்தி ரஸாஸ்வாதவிலோலுபா: |
நிவாரிதா ந கச்சந்தி மக்ஷிகா இவ பிக்ஷுகா: ||

நல்ல ருசியுள்ளவற்றில் பேராசை கொண்ட பிச்சைக்காரர்கள் ஈக்களைப் போலவே அழைக்கப்படாவிட்டாலும் கூட மொய்த்துக் கொண்டிருப்பார்கள், விரட்டினாலும் போக மாட்டார்கள்.

Just like flies, beggars greedy for the taste of the tasty things flock even when they are not invited and do not go away even when they are driven out.
*

ப்ராப்ய சலானதிகாரான் ஷத்ருஷு மித்ரேஷு சாத் வித்வத்ஸு |
நாபக்ருதம் நோபக்ருதம் ந சத்க்ருதம் கிம் க்ருதம் தேன ||

(வரும், போகும் என்ற இயல்புடைய) அதிகாரத்தை ஒருவன் அடையும் போது எதிரிகளை விரட்டி, நண்பர்களை ஆதரித்து, வித்வான்களை கௌரவிக்காவிடில் அவன் அடைவது தான் என்ன?

After having gained authority which is transitory (by nature) if on has not hurt enemies, favoured (his) friends and honoured the learned people, what has he achieved?

*
அஹோ கலபுஜங்கஸ்ய விசித்தோயம் வதக்ரம: |
அன்யஸ்ய தஷதி ஸ்ரோத்ரமன்ய: ப்ராணைர்வியுஜ்யதே ||

கெட்டவனாக இருக்கும் பாம்பைப் போன்ற ஒருவனின் விசித்திரமான கொலைச் செய்கை எப்படி இருக்கிறது? அவன் ஒருவனின் காதைக் கடிப்பான், அடுத்தவனின் உயிரையே எடுப்பான்.

What a strange way of killing of the snake in the form of a wicked person? He bites the ear of one person and another is deprived of life.
*

லோபாவிஷ்டோ நரோ வித்தம் வீ க்ஷதே ந ஸ சாபதம் |
துக்தம் பஷ்யதி மார்ஜாரஸ்ததா ந லகுடாஹதிம் ||

பேராசையுள்ள ஒருவன் செல்வத்தைப் பார்க்கிறான், ஆனால் ஆபத்துக்களைப் பார்ப்பதில்லை. ஒரு பூனையானது பாலைப் பார்க்கிறது, ஆனால் தடி கொண்டு அடிப்பதைப் பார்ப்பதில்லை.

A greedy person looks at wealth, he is not (aware) of perils. A cat looks at the milk but not at the beating with cudgel.
(English Translation by Saroja Bhate)


tags- tags- குவித்த கரங்கள் , மலர்கள்,

STARS SHOW INDIA’S  LINK WITH GREECE AND IRAN IN VEDIC PERIOD (Post No.10,722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,722

Date uploaded in London – –    7 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Hindus must understand the mentality of foreign “scholars”; they are Yatudhanas; Yatudhanas are demons who can take ‘different shapes’ according to Rig Veda and Valmiki Ramayana. If they find something similar in two places, first they will look at the date or period of those two things, then they will say, Look Greek has this word; So, Hindus borrowed it. If they find the word in Rig Veda first and later Homer’s Iliad and Odyssey, then they will say, Look, all of us lived in Central Asia at one time and then you, Aryans (Hindus) entered India via Khyber Pass and we went to Greece.

This migration matter is not found anywhere in Sanskrit or Tamil literature. Both say we are the sons of the soil.

Another trick, the gangs follow is, they will say ‘Sayana said it’, ‘Kumarila Bhatta said It’,  but cunningly put capital A for aryas and capital D for dravidians as if they are two separate races. It is also not in Tamil or Sanskrit literature. They used ARYA to say the Rishis in Himalayas or the language of the Rishis with due respect.

When Sita addressed Rama as Arya!, we know it is ‘Respectful Sir’. When the greatest Tamil poet Bharatiyar used Arya throughout his poems, we know it is a respectful term. So for at least 2000 years in Tamil , ‘ARYA’ is not a racial term. But Max Muller gangs and Caldwell gangs abused and misused the words.

Caldwell did not know anything about the vast and rich Sanskrit literature; so all the Tamil publications add a footnote in his book (Caldwell is wrong; he did not have any knowledge in this field).

The third trick, foreign “scholars”;  particularly linguistic“scholars”  use is, suddenly they quote dateless, period less, unrecognised sources, ‘Look it is a word from Munda language’. Mundas don’t have anything in writing; they have no literature, and they have no script. They might have come in the last few hundred years. And we know all languages change in course of time.

How do we know that foreigners are bluffing or fooling us? One must have a vast knowledge about Hindu scriptures. One must know Tamil Sangam literature; one must know the Sanskrit inscriptions from 1400 BCE at Bogazkoy in Turkey to second century CE Srimaran inscription in Vietnam (Champa); One must know the Dasaratha letters in Egypt and the 4th century CE Sanskrit inscription of Mulavarman in the so called ‘virgin forests’ of Borneo, part of Indonesia.

xxxx

Now let us look at one example.

No one could miss the beautiful Seven Stars in the northern sky. The constellation is called Saptarishi Mandala in Hindu books and Ursa Major (Great Bear in Latin) in Rome and Greece.

The same constellation is called Hippopotamus in Egypt and Seven Oxen in Latin. It is also known as Charles’s Wain (Wagon= Sanskrit Vahana) in Mesopotamia

Read the Etymoonline Description at the end (It shows they have no knowledge about Tamil Poems and Sanskrit Rig Veda)

Tamils not only knew about it but also worshipped it 2000 years ago (See Narrinai verse 231 by Ilanaganar)

The Sapta Rishis are in the Rig Veda which is dated between 1500 BCE and 6000 BCE. Later we find it in Homer’s Iliad dated 800 BCE. Both Hindus and Greeks have one strange story about BEARS becoming RISHIS.

Satapata Brahmana, which is also dated 8th Century BCE have the following story:

“The Krittikas-  Pleiades- are  Agni’s  Naksatra. Other Naksatras have one, two, three or four stars, but they have the most (six) stars; and they do not wander away from the eastern region, whereas all the other Naksatras do wander from the eastern region. They were formerly the wives of  Bears , for indeed, the Seven  Rishis were in earlier times called the bears; but they were prevented from having intercourse, since the  Seven  Rishis rise in the north while they rise in the east”.

We see the word rksas/ bear in the Rigveda for stars as well 1-24-10

Sayana’s commentary says the rksas/bears in this hymn are indeed seven rsis .

Homer in his Iliad 18.487 and Odyssey 5-273 also refers to these stars as Bear, in Greek ‘Arktos’ ( in Latin ‘Ursa’).

Now we have to see who borrowed it from whom. We have Bear as Star even in Rig Veda which is dated well before Homer’s Iliad. Satapata Brahmana gives lot of symbolic stories, strange etymologies for many other things as well.

Moreover, unlike other cultures, Hindus are the only one who treat all the seven stars as one group. It is even in Bhumi Sukta of Atharva Veda, older than Satapata Brahmana. More over Hindus from Kashmir to Kanyakumari worship the seven stars even today from Vedic days. Even 2000 year old Tamil literature refers to it ‘The Worshipful Seven Stars ‘in Narrinai poem. The seven stars are part and parcel of Hindu life; on the wedding day night husband and wife should see Arundhati, the double star system in the Ursa Major. That double star is mentioned even in Tirukkural (as Alakai- Ghost- Alcol in Arabic).

So we know it is evolved in Hindu world and travelled to Western world. Is it possible? Yes we have proof; The horse of Rig Veda is seen only around 1500 BCE in Egypt. Pharaohs married Hindu women from Turkey and the Dasaratha Letters (also known as Amarna letters) prove it. Above all the Sanskrit numerals are in Avestan Gathas and Kikkuli’s Horse Manual in 1300 BCE. So we see very clear westward march of Hindus and Homer comes several hundred years after this.

Even Satapata Brahmana is placed around 3000 BCE on the basis of astronomical references in the work. Westerners’ argument of Eastward migration is proved wrong by another factor as well. According to them Satapata Brahmana and Homer’s Iliad are from 8th century BCE. Why then it is not same in Rig Veda and Atharva Veda. So Greeks borrowed it from us.

xxx

Another Strange Coincidence in Mesopotamia

Khotanese term ‘hauda richa’ also coincides with Sapta Rishi. That shows they borrowed it from the Vedas. All these are dated after Vedas.

In one Rig Vedic hymn they are also called Uksan/Oxen

RV 3-7-7

In Mesopotamia the seven stars were known as chariot or wain. Wain is a Sanskrit word for Vahan. Homer used the term chariot as well for the same stars. This also shows it travelled from Middle East to Greece along with our idea of Seven Rishis/Bears.

Rsi and Rksa are word play for Sanskritwallas. We see lot of word plays, puns etc in Vedas and Brahmanas.

They named North and South with prominent visible stars in the direction. If they say Agastya (Canopus) it is South. If they say Sapta Rishis, it is North. Latin also use septentriones/ Seven Oxen for North. Latin and Greek came several hundred years after Sanskrit.

So we see very clear westward movement of culture, languages, ideas etc.

Even when we put Rig Veda in 1500 BCE, we see a big time gap of 700 year with Homer. If we put Rig Veda in 2000 BCE like Wilson or 4000- 6000 BCE like Herman Jacobi and B G Tilak, the time gap will be bigger.

One must not forget Seven Rishis, Seven Bears, Seven Oxen are in the Vedas, while one or two of these are found very late in Greek or Latin.

Satapata Brahmana 3000 BCE

The Vedic seers changed the names from Rksa to Sapta Rishis is reported in Satapata Brahmana (2-1-2-4). It is dated as 3000 BCE by great scholar S B Dixit. He showed the evidence in the Satapata Brahmana that “Krittikas (Pleiades) do not move from the East” shows the condition of sky in 3000 BCE

All the westerners deliberately ignore the astronomical references in the Vedas, which show very early dates.

Conclusion

Homer copied the idea or the matter about  Seven Stars from the Hindus. The Vedic ideas moved in different directions. From 1500 BCE we see Hinduism in Egypt. From 1000 BCE we see Hindu ideas in Iran; From at least 800 BCE we see them in Greece. From Greece it spread throughout Europe.

–subham—

Attachment from etymoonline

Charles’s Wain (n.)

Old English Carles wægn, a star-group associated in medieval times with Charlemagne, but originally with the nearby bright star Arcturus, which is linked by folk etymology to Latin Arturus “Arthur.” Which places the seven-star asterism at the crux of the legendary association (or confusion) of Arthur and Charlemagne. Evidence from Dutch (cited in Grimm, “Teutonic Mythology”) suggests that it might originally have been Woden’s wagon. More recent names for it are the Plough (by 15c., chiefly British) and the Dipper (1833, chiefly American).

It is called “the Wagon” in a Mesopotamian text from 1700 B.C.E., and it is mentioned in the Biblical Book of Job. The seven bright stars in the modern constellation Ursa Major have borne a dual identity in Western history at least since Homer’s time, being seen as both a wagon and a bear: as in Latin plaustrum “freight-wagon, ox cart” and arctos “bear,” both used of the seven-star pattern, as were equivalent Greek amaxa (Attic hamaxa) and arktos.

The identification with a wagon is easy to see, with four stars as the body and three as the pole. The identification with a bear is more difficult, as the figure has a tail longer than its body. As Allen writes, “The conformation of the seven stars in no way resembles the animal,–indeed the contrary ….” But he suggests the identification “may have arisen from Aristotle’s idea that its prototype was the only creature that dared invade the frozen north.” The seven stars never were below the horizon in the latitude of the Mediterranean in Homeric and classical times (though not today, due to precession of the equinoxes). See also arctic for the identification of the bear and the north in classical times.

A variety of French and English sources from the early colonial period independently note that many native North American tribes in the northeast had long seen the seven-star group as a bear tracked by three hunters (or a hunter and his two dogs).

Among the Teutonic peoples, it seems to have been only a wagon, not a bear. A 10c. Anglo-Saxon astronomy manual uses the Greek-derived Aretos, but mentions that “unlearned men” call it “Charles’s Wain”:

Arheton hatte an tungol on norð dæle, se haefð seofon steorran, & is for ði oþrum naman ge-hatan septemtrio, þone hatað læwede meon carles-wæn. [“Anglo-Saxon Manual of Astronomy”] 

[Septemtrio, the seven oxen, was yet another Roman name.] The star picture was not surely identified as a bear in English before late 14c.

xxxxxxxxxxx

Rishi, Bear, Sapta Rishi, Rksa, Ursa Major, Homer, Satapata Brahmana, Tamil Narrinai 

தொல்காப்பியம் பற்றி கருணாநிதி விட்ட ‘கப்ஸா’! (Post.10,721)

IF U DONT C PICTURES, GO TO MY OTHER BLOG swamiindology.blogspot.com

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,721

Date uploaded in London – –    7 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

தொல்காப்பியப் பூங்கா என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய நூலில் பக்கத்துக்குப் பக்கம் கப்ஸா விட்டிருக்கிறார்; தாவது கதை அளந்து இருக்கிறார். நல்ல வேளை , கப்ஸா அடிப்பதற்கு முன்னர் இளம்பூரண அடிகளும்  நச்சினார்க்கினியரும் (மதுரை பாரத்வாஜ கோத்திரப் பார்ப்பான் ) என்ன சொன்னார்கள் என்று எழுதிவிட்டு தன கருத்தைச் சொல்கிறார். முன்னுரை எழுதிய கருணாநிதி, அன்பழகன் , நன்னன் ஆகியோர் இதுவரை தொல்காப்பியர் பற்றிய கருத்துக்களை நிராகரிக்கின்றனர். ஐந்திரம் என்று ஒன்று இல்லை, அகஸ்தியர் என்ற ஒருவர் இல்லை போன்ற பல பொன்மொழிகள்!

இன்று பாரதியார் போன்றோர் பாடிய பாடல்களில் , அதற்கு முன்னர் கம்பன் பாடிய, பரஞ்சோதி முனிவர் பாடிய பாடல்களில் எல்லாம் அகஸ்தியர்- தமிழ் தொடர்பு பாராட்டப்பட்டுள்ளது. அதையும் கூட சில இடங்களில்  திரித்துக் காட்டியுள்ளனர் இவர்கள் சொல்லாமல் மறைக்கும் விஷயங்கள் அதிகம். ஒரே ஒரு எடுத்துக்காட்டை மட்டும் தருகிறேன்.

பனம்பாரனார்  பாயிரத்தை ஏற்றுகொள்வோரும் நாலு வேதத்தில் வல்லவரான அதங்கோட்டு ஆச்சாரியார் ஏன் தொல்காப்பியருக்கு சர்ட்டிபிகேட் கொடுத்தார் என்பதை விளக்கவில்லை. கருணா நிதியோ எல்லாம் கதை என்று சொல்லி கதை அளக்கிறார்.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப” – என்ற பொருள் அதிகார சூத்திர உரையை மட்டும் எடுத்துக் கொள்வோம் ;

“அய்யர்” என்பது பிராமண புரோகிதர் இல்லை “உயர்ந்தோர்” என்று சொன்னவர் “கரணம்” என்ற சொல் தமிழ் சொல் அல்ல என்பதைச் சொல்லவில்லை. அவர் மறைத்தாரா அல்லது அவருக்கே தெரியாதா என்பதை யாம் அறியோம்.

கரணம் என்பது விதிகள், சடங்கு என்ற பொருளில் திருமண விஷயத்தில் பயன்படுகிறது . இதற்கான காரணம் மஹா பாரதத்தில் உள்ளது. ஒரு ரிஷியின் மனைவியை மற்றோருவர் இழுத்துக் கொண்டுபோனபோது  அவளுடைய மகன் இது என்ன அக்கிரமம் என்று கதறுகிறான். அதற்கு விளக்கம் சொல்கையில் முன்காலத்தில் இப்படி விதிமுறைகள் இல்லாமல் வாழ்க்கை நடந்ததாகவும் பின்னர்தான்  ஊர் அறிய சடங்குகளோடு கல்யாணம் நடத்தும் முறை வந்ததாகவும் மஹாபாரதம் சொல்கிறது. இதைத் தான் தொல்காப்பியர் “பொய்யும் வழுவும்” என்கிறார். அதைக்கட்டுப்படுத்த எழுந்த சடங்கு விதிகள்தான்  “கரணம்” (INSTRUMENT) .

‘கரணம்’ தொல்காப்பிய  பொருள் அதிகாரத்தைத் தவிர பதிற்றுப் பத்து பதிகத்தில் மட்டுமே வருகிறது. பதிகத்தில் வருவதை சங்க இலக்கியப் பகுதியாக ஏற்பது இல்லை

பொருள் அதிகாரம் – 3-140, 141, 142, 143, 144

பின்னர் சிலப்பதிகாரம், மணிமேகலையில் ஓரிரு இடங்களில் வருகிறது.

இதனால் தாமஸ் லெஹ்மான் , தாமஸ் மால்டன் (A Word Index for Cankam Literature by Thomas L and Thomas M) தொகுத்த சொல்லடைவில் “கரணம்” இல்லை

xxxxx

கரணம் – தமிழ்ச் சொல் இல்லை

அய்யர் யாத்தனர் கரணம் , மலர் 48, தொல்காப்பியப் பூங்கா , கலைஞர் மு.கருணாநிதி

மலர் 46-ல் கோவலன்-கண்ணகி கல்யாணம் ஏன் தோற்றுப்போனது என்று காரணம் சொல்கிறார்.

சிலப்பதிகார வரிகள் :- “மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்து” — திருமணம் நடந்தது

“பார்ப்பனர் ஓதிய மந்திரமும்- கோள் பார்த்துக் குறித்த நல் ஓரையும்  அவர்களைப் (கோவலன்-கண்ணகி) பாதுகாத்திடவில்லை” என்று கருணாநிதி சொல்கிறார்.

xxxx

எனது உரை

தமிழர் காதில் நன்றாகப் பூ சுற்றுகிறார் . எப்படி?

ஐயர் மந்திரம் இல்லாத கல்யாணம் எல்லாம் வெற்றியாம். இதை எழுதியவருக்கு எத்தனை மனைவி என்று அறிக !!!

xxx

இதற்குப்பின்னர் தமிழில் முதல் முதலில் உரை எழுதிய இளம்பூரண அடிகளையும் அவரை அடியொற்றி உரை எழுதிய நச்சினார்க்கினியரையும் குறைகூ றுகிறார் அவர்கள் இருவரும் நால் வருண அடிப்படையில் உரை எழுதினர் என்று கருணாநிதி சொல்கிறார்.

தொல்காப்பிய பொருள் அதிகார சூத்திரம் :

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

-பொருள் அதிகாரம் , கற்பியல் நூற்பா 4

பக்கம் 306-ல் வெள்ளை வாரணார் விளக்கத்தை சேர்த்துள்ளார்

“அய்யர் என்பது சிறப்புடைய பெரியோரைக் குறிக்கும் தமிழ்ச் சொல் ஆகும். ஆர்ய என்பதன் திரிபாக பிறழ உணர்ந்து உரை எழுதியோரும் உண்டு”.

இதற்குப் பின்னர் அடிக்கடி சந்தித்த காதலன் காதலிக்கு  திருமணம் செய்ய முடிவு செய்தவுடன் ஒருவர் ‘அய்யரை அழைப்போம்’ என்றார் ; வேறு குலத்தவர் எதற்காக? என்று ஒருவர் கேட்க “இந்த அய்யர் அறநெறி வகுத்த பெரியவர்” என்ற விளக்கம் வேறு!!!

xxxx

எனது கருத்து

இதில் விளக்கப்படாத விஷயம்  ‘கரணம்’ என்ற சொல். அது தமிழ்ச் சொல் அல்ல .

எப்படி நிரூபிக்க முடியும் ?

தொல்காப்பியத்தைத் தவிர சங்க இலக்கியத்தில் எங்கும் இந்தச் சொல் இல்லை! தமிழில் முழுக்க முழுக்க தமிழர் கல்யாணத்தை விவரிக்கும் இரண்டே பாடல்கள்தான் உண்டு- அக நானூறு 86, 136.

அதிலும்  இச் சொல் இல்லை. மேலும் அங்கும் ரோகிணி (சகடம்) நட்சத்திரத்தில் கல்யாணம் செய்த குறிப்புதான் உளது. அதை வராஹ மிஹிரர் நூல்களிலும் காண்கிறோம். அதுவும் சகடம்/வண்டி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல் ( ச- எழுத்தில் சொற்கள் வராது என்பது தொல்காப்பிய  விதி)

தொல்காப்பியம் தவிர கரணம் வரும் இடமெல்லாம் “கரத்தால் செய்யக்கூடிய பணிகளே கரணம்” என்றும் அவை தந்திர கரணம், சித்திர கரணம் , நாட்டிய கரண முத்திரைகள் என்றே சிலப்பதிகாரத்தில் வருகிறது

கரணம் என்பதை நாம் ‘உபகரணம்’ முதலிய இடங்களில் இன்றும் பயன்படுத்துகிறோம்.

எல்லாவற்றுக்கும் மேலாக பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரி என்ற சம்ஸ்க்ருத – தமிழ் பேரறிஞர் இது ஹோமச் சடங்கை குறிக்கும் சொல். இது யாக்ஞ வாக்ய ஸ்ம்ருதியில் உளது என்று காட்டுகிறார்.

அக்நவ்கரணம் – யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி 1-150

இது ஒன்றை மட்டும் காட்டினால் நாம் ஒதுக்கித் தள்ளிவிடலாம் அவரோ புறநானூற்றிலும் தொல்காப்பியத்திலும் உள்ள ஏராளமான விஷயங்களை 1946-ல் எழுதிவிட்டார்.

இறுதியாக ஒரு சொல்- “ஐயர் யாத்தனர்” என்று தொல்காப்பியர் சொன்னதே அது “ரிக்- அதாவது செய்யுள் = மந்திரம்” என்றும் விளங்கும். இன்றும் ரிக் வேத கல்யாண மந்திரங்கள் (Rig Veda 10-85) எல்லா பிராமணர்  வீடுகளிலும் முழங்குகிறது. யாத்தல் என்றால் ‘கட்டுதல்’, ‘செய்யுள் இயற்றல்’; யாப்பு- செய்யுள் இலக்கணம்.

மேலும் தமிழர்கள் கல்யாணத்துக்குப் பயன்படுத்தும் வதுவை (திருமணப் பெண், மனைவி) என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொல்லே. ஆக முழு தமிழர் திருமணத்தைக் காட்டும் அகம்.86, 136 பாடல்கள், சம்ஸ்க்ருதத்தில் உள்ள பழக்க வழக்கங்களைக் காட்டுகின்றன (உ.ம் . சகடம்/ரோகிணி நட்சத்திரம், வதுவை)

காதல் (களவு முறைக்) கல்யாணங்களில்  எத்தனை தற்கொலைகள் , எத்தனை கொலைகள், எத்தனை கள்ளத் தொடர்புகள் என்பதை நாள்தோறும் நமக்கு பத்திரிகைகள் அளிக்கின்றன ; அதாவது கருணாநிதி சொல்வது பொய்/ கப்ஸா  என்று  நமக்குக் காட்டுகின்றன ; இந்தியாவிலேயே அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலம் மஹாராஷ்டிரமும் தமிழ்நாடும் தான் என்று நமக்கு கலகைகளஞ்சிய தகவல்களும் சொல்கின்றன. அதில் பெரும்பாலானவை காமம், கள்ளத் தொடர்பு, காதல் என்பதையும் நாளேடுகள் நிரூபிக்கின்றன.

மேலும் காதல் கல்யாணமும்  புதிதல்ல . மனு ஸ்ம்ருதி சொல்லிய எட்டுவகைத் திருமணங்களை அப்படியே தொல்காப்பியர் சொன்னதையும் தமிழ் அறிஞர்கள் அறிவர். உலகப் புகழ்பெற்ற காளிதாசனின் சாகுந்தலம் நாடகம் காதலில் மலர்ந்ததே. சங்க காலத்திலேயே பேகன், DIVORCE டைவர்ஸ் செய்ததையும் ஆங்கே புலவர்கள் சமாதானம் செய்ததையும் சங்க இலக்கியம் செப்புகிறது.

பகவத் கீதை ஸ்லோகத்தில் காமம், க்ரோதம், லோபம் என்ற மூன்றுதான் நரகத்தின் நுழைவாயில்கள் GATE WAYS TO HELL என்று கிருஷ்ண பரமாத்மா சொன்னதையும் இன்று சிறை ச் சாலைகள் நிரூபிக்கின்றன.

50, 60 ஆண்டுகளாக  திராவிடர்கள் விடும் கப்ஸாக்களை படிப்பதற்கு முன்னர், வை தாமோதரம் பிள்ளை, ந.மு வேங்கடசாமி நாட்டார், வையாபுரிப் பிள்ளை, உ.வே.சாமிநாதையர் முதலிய அறிஞர்கள் எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும்

xxxxx

1935 ஆனந்த விகடன் தமிழ் அகராதியில் கரணம்

கரணம்

அந்தரித்தியம், அறுதிச் சீட்டு, உபகரணம், எண்ணிக்கை,

எது, ஐம் பொறி , கணிதம், கலவி, காரணம், கூத்து , செய்கை,

கூத்தினோர் விகற்பம், நற்செய்கை, பஞ் சாங்கத்தில் ஒன்று,

விருப்பம், கையாற் செய்யும் தொழில், இந்திரியம், அந்தக்கரணம், மனம்,

விவாகச் சடங்கு, தலை கீழாகப் பாய்கை , கருவி, எண் , சாசனம், கணக்கன்,

கருமாதிச் சடங்குக்கு உரிய பண்டங்கள், உடம்பு, மணச் சடங்கு, நாகவம்,

கி மிஸ்துக்கினம் , கரண காரணம், புணர்ச்சி, சாதகதமம், சாத ன பத்திரம் ,

தத்துவம், துணைக்கருவி, விநோதக்கூத்து ஆறினுள் ஒன்று,சாசனம், புத்தி,

கன்மேந்திரியம், அகம்காரம், பவம் , பாலவம், கவுல வம், வனசை , சகுனி,

பத்திரம், சதுர்பாதம், தைது லை  , கரசை.

xxxx

Sanskrit dictionary

[«previous (K) next»] — Karana in Sanskrit glossary

Source: DDSA: The practical Sanskrit-English dictionary

Karaṇa (करण).—a. [k-lyu]

1) Making, doing, effecting, producing.

2) (Ved.) Clever, skilled; रथं न दस्रा करणा समिन्वथः (ratha na dasrā karaā saminvatha) Rv.1.119.7.

-ṇaḥ 1 (Ved.) An assistant. यमस्य करणः (yamasya karaa) Av.6.46.2.

2) A man of a mixed tribe.

3) A writer, जज्ञे धीमांस्ततस्तस्यां युयुत्सुः करणो नृप (jajñe dhīmāstatastasyā yuyutsu karao npa) Mb.1.115. 43; Ms.1.22.

4) A child. cf. …… करणः शिशौ । शूद्राविशोः सुतेऽपि स्यात् (karaa śiśau | śūdrāviśo sute’pi syāt) Nm.

-ṇam 1) Doing, performing, accomplishing, effecting; परहित°, संध्या°, प्रिय° (parahita°, sadhyā°, priya°) &c.

2) Act, action.

3) Religious action; Y.1.251.

4) Business, trade.

5) An organ of sense; वपुषा करणोज्झि- तेन सा निपतन्ती पतिमप्यपातयत् (vapuā karaojjhi- tena sā nipatantī patimapyapātayat) R.8.38,42; पटुकरणैः प्राणिभिः (paukaraai prāibhi) Me.5; R.14.5.

6) The body; उपमानमभूद्विलासिनां करणं यत्तव कान्तिमत्तया (upamānamabhūdvilāsinā karaa yattava kāntimattayā) Ku.4.5.

7) An instrument or means of an action, न तस्य कार्यं करणं न विद्यते (na tasya kārya karaa na vidyate) Śvet.6.8; करणं च पृथग्विधम् (karaa ca pthagvidham) Bg.18.14.18. उपमितिकरणमुपमानम् (upamitikaraamupamānam) T. S.; तस्य भोगाधिकरणे करणानि निबोध मे (tasya bhogādhikarae karaāni nibodha me) Mb.3.181.19.

8) (In Logic) The instrumental cause which is thus defined :व्यापारवद- साधारणं कारणं करणम् (vyāpāravada- sādhāraa kāraa karaam).

9) A cause or motive (in general).

10) The sense expressed by the instrumental case (in gram.); साधकतमं करणम् (sādhakatama karaam) P.1.4.42; or क्रियायाः परिनिष्पत्तिर्यद्- व्यापारादनन्तरम् । विवक्ष्यते यदा यत्र करणं तत्तदा स्मृतम् (kriyāyā parinipattiryad- vyāpārādanantaram | vivakyate yadā yatra karaa tattadā smtam) ||

11) (In law) A document, a bond, documentary proof; Ms.8.15,52,154.

12) A kind of rhythmical pause, beat of the hand to keep time; अनुगर्जितसंधिग्धाः करणै- र्मुरजस्वनाः (anugarjitasadhigdhā karaai- rmurajasvanā) Ku.6.4.

13) (In Astrol.) A Division of the day; (these Karaṇas are eleven).

-bava, bālava, kaulava, taitila, gara, vaṇija, viṣṭi, śakuni, catuṣpāda, nāga and [rkistughna].

14) The Supreme Being.

15) Pronunciation.

16) The posture of an ascetic.

17) A posture in sexual enjoyment. बोभुज्यते स्म करणेन नरेन्द्रपुत्री (bobhujyate sma karaena narendraputrī) Bil. ch.42. वात्स्यायनोक्तकरणैर्निखिलैर्मनोज्ञै । संभुज्यते कविवरेण नरेन्द्रपुत्री (vātsyāyanoktakaraairnikhilairmanojñai | sabhujyate kavivarea narendraputrī) || Ibid.45.

18) A field.

19) Plastering with the hand.

2) The usage of the writer caste.

21) The Principle of intelligence; दृष्टाः करणाश्रयिणः (dṛṣṭā karaāśrayia) Sāṅ. K.43.

22) (In Astron.) Name of a treatise of Varāhamihira on the motion of planets.

-ṇī 1) A woman of a mixed caste. माहिष्येण करण्यां तु रथकारः प्रजायते (māhiyea karayā tu rathakāra prajāyate) Y.1.95.

2) Absurd or irrational number.

-sutā f. An adopted daughter.

–subham —

Tags- ஐயர் யாத்தனர் கரணம் , தொல்காப்பியம், கருணாநிதி, கப்ஸா , பொய்  உரை , தமிழ் சொல் இல்லை

ச.நாகராஜன் கட்டுரைகள் பிப்ரவரி 2022 (Post No.10,720)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,720
Date uploaded in London – – 7 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் கட்டுரைகள் பிப்ரவரி 2022 INDEX
February 2022 INDEX

1-2-22 10616 14 கேள்விகளுக்கு ஒரு சொற்றொடரில் பதில்! சம்ஸ்கிருத
விந்தை!!
2-2-22 10619 வள்ளுவர் தரும் ஊடல்-கூடல் அகராதி! நல்லதிலும் தவறு;
கேட்டிலும் உறுதி!
3-2-22 10623 நான் யார்? ரமண மஹரிஷியின் நூல்!
4-2-22 10625 கேளிக்ருஹத்தில் நடக்கும் அந்தரங்கக் காட்சிகளைக் காட்டும்
கவிதை!
5-2-22 10628 ச.நாகராஜன் கட்டுரைகள் ஜனவரி 2022
6-2-22 10633 மஹரிஷி ததீசி – 1
7-2-22 10637 மஹரிஷி ததீசி – 2
8-2-22 10640 அதிர்ச்சியூட்டும் செய்தியும், ஆனந்த செய்தியும்!
9-2-22 10643 தழுவி நின்றொழியான், தரை மேல் வையான்!
10-2-22 10646 மார்பகங்களுக்கேற்ற மார்பு இல்லையே – இளைஞனின் புலம்பல்!

11-2-22 10649 100 வழிகளில் மூளை ஆற்றலைக் கூட்டலாம் – 2 (ஹெல்த்கேர்
பிப்ரவரி கட்டுரை)
12-2-22 10651 கானகத்தில் புலியும் ஸ்வாமி விவேகானந்தரும்!
13-2-22 10655 டயபடீஸை புரிந்து கொள்ளுங்கள்; அதைத் தீர்க்கும் வழிகள்
தெரியும்!
14-2-22 10657 நமக்குத் தொழில் கவிதை! (காவ்யானுசாஸனம்)
15-2-22 10660 பக்தி எத்தனை வகைப்படும்? நாரதரின் பதில்!
16-2-22 10663 உயிர் காக்க உதவும் ஸ்தோத்திரங்கள்!
17-2-22 10666 ஆற்றைக் கடக்கத் துணையாக வருபவர் யார்?
18-2-22 10668 சிந்தாமணி ப்ரக்ஞா – பகவான் ரமணரின் விளக்கம்!
19-2-22 10671 மஹரிஷி குசத்வஜரின் பெண்ணே, ராவணனின் அழிவுக்குக்
காரணம்!
20-2-22 10674 ஈனர்களை ஒருபோதும் அண்டாதே! (சுபாஷிதம்)

21-2-22 10677 சாதலை நீக்கும் நெல்லிக்கனியை ஔவைக்கு கொடுத்த
அதியமான்! கொங்குமண்டல சதகம் பாடல் 42
22-2-22 10680 வள்ளல்களின் வழக்கம்! தொண்டைமண்டல சதகம் பாடல்கள் 69
& 66
23-2-22 10683 மஹரிஷி ஔத்தாலகியும் யமலோகம் கண்ட நசிகேதனும்!
24-2-22 10686 சம்ஸ்கிருத பஹிராலவ வகை புதிர்க் கவிதைகள்!
25-2-22 10688 உலகின் தாயகம் இந்தியா! அறியுங்கள்!! நேசியுங்கள் !!!
26-2-22 10692 ஸ்ரீநகர்
27-2-22 10695 மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 66 – பாட்டிடையிட்ட
பாரதியார் சிறுகதைகள் – முதல் தொகுப்பு – இராஜ
முத்திருளாண்டி
28-2-22 10698 சித் பூஜையும், மூர்த்தி பூஜையும் : சிவபிரான் அருளுரை! (யோகவாசிஷ்டம்)


FEBRUARY 2022 LONDON SWAMINATHAN ARTICLES INDEX No.111 (Post No.10,719)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,719

Date uploaded in London – –    6 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

DED  1279  ‘KARU’ IS NOT A TAMIL WORD?(Post No.10,700); 28/2

Greek and Roman authors place India’s first king in 6777 BCE; Post 27-2/

SANSKRIT WORDS IN ZEND AVESTA-PART 2 (Post No.10,690);25/2

SANSKRIT WORDS IN ZEND AVESTA-PART 2; 10,697; 10,670; 18/2

SOMA MYSTERY IN IRAN-4  10,687;24/2

SOMA MYSTERY IN IRAN-3  10,684;23/2

SOMA MYSTERY IN IRAN; ZEND AVESTA GIVES WONDERFUL DETAILS -2; 10,682;22/2

SOMA MYSTERY IN IRAN; ZEND AVESTA GIVES WONDERFUL DETAILS -1;10,678; 21/2

HOW DID TAMILS GET AYIRAM FROM SANSKRIT?10681;21/2

VEDIC WORDS SABHA AND SAMITI FOUND AROUND THE WORLD;10,676;20/2

SELF CONFIDENCE OF VEDIC PEOPLE VENI,VIDI,VICI;10,673;19/2

SIMILARITIES BETWEEN BHAGAVAD GITA AND PARSI’S ZEND AVESTA,10,667; 17/2

MYSTERIOUS BRIDGE TO CROSS AFTER DEATH IN HINDU AND PARSI RELIGION,10,665; 16/2

WOMAN’S CHASTITY: VALMIKI AND MANU VERSES IN TIRUKKURAL COUPLET, 10,661; 15/2

KALKI AVATAR IN PARSI LITERATURE; 10,559; 14/2

SOMA YAGA IN INDIA AND IRAN-PART 2; 10,658; 14/2

NO PURDAH IN INDUS VALLEY; GREAT POET AND VEDAS AGAINST PURDAH,10,654;12/2

SOMA YAGA IN INDIA AND IRAN-PART 1; 10,652; 12/2

HINDU GODS IN ZEND AVESTA- 4;10,647;10/2

HINDU GODS IN ZEND AVESTA- 3;10,645;9/2

HINDU GODS IN ZEND AVESTA- 2;10,642;8/2

HINDU GODS IN ZEND AVESTA- 1;10,639;7/2

LINGUISTICS SHOWS THE WAY OF HINDU MIGRATARY ROUTE; 10,644

PYRAMIDS ERODED; VEDAS NEVER ERODED; BEAUTIFUL INTRODUCTION TO RIG VEDA; 10,635; 6/2

A NEW STORY: YAJUR VEDA IN ZOROASTRIAN  ZEND AVESTA-2;10,631;5/2

JANUARY 2022 LONDON SWAMINATHAN ARTICLES INDEX 110; 10,629; 5/2

HINDUS MIGRATED TO IRAN; PERSIANS IN THE RIG VEDA; 10,627; 4/2

FOR MUSIC LOVERS- BHARAT’S GREATEST MUSICIAN BHARAT RATNA BHIMSEN JOSHI; 10,626; 4/2

GIVE US GOLD AND GEMS  HIDDEN IN SECRET PLACES-VEDIC POET;10,622;2/2

XXXXX

TAMIL ARTICLES

‘கரு’ (KARU- CORE-) என்பது தமிழ்ச் சொல் அல்ல (Post No.10,699); 28-2

பகவத் கீதையில்சுவையான சொற்கள் – 7 ரிஷிகள், சப்த ரிஷிகள்; 10697;27/2

பகவத் கீதையில்சுவையான சொற்கள் – வேத வாத ரதாஹா ; 10,694; 26/2

கி.மு.1000 அவெஸ்தன்- தமிழ் தொடர்பு ; 10,691; 25/2

‘ஆயிரம்’ தமிழ் சொல் அல்ல- 10,670; 21/2

கீதை ஸ்லோகத்துடன் முடியும் பூமி சூக்தம்,;10,669; 18/2

கற்பு பற்றி வள்ளுவர், வால்மேகி, கம்பன்,ஷேக்ஸ்பியர் , மநு 10,664;16/2

அவை, சட்டை, சட்ட- தமிழ் சொற்கள் அல்ல; சட்ட மேலவை ஸம்ஸ்க்ருதம்  ; 10656; 13/3

பர்தா ஒழிக – பாரதியார் முழக்கம்; 10653; 12/2

வினி, விடி, விசி – ஜூலியஸ் சீஸரும் அதர்வண வேதமும்;;10650;11/2

ஞானப் படகு , ஞான விளக்கு , ஞானத்  தீ, ஞானக்  கண், ஞான வேள்வி ; 10,648; 10/2;

பெண்கள் எட்டு வகை! அறிந்து கொள்க 10641; 8./2

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் -அதர்வண வேதப் புலவன்;10,636;6/2

மீண்டும் புலவர் புராணம் , 10,632;5/2

பூமியில் புதைந்துள்ள தங்கமும் வைரமும் தருக – புலவன் வேண்டுகோள்;10,624; 3/2

Q & A ஆயிர மாமுக கங்கை என்று தேவாரத்தில் எங்கு வருகிறது? 10,621, 2/2

கல்யாணத்தின் நாலாவது நாள் என்ன நடக்கும்? 10,620;2/2

சங்க இலக்கியத்தில் மர வழிபாடு-2; ;10,618; 1/2

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -41; 1/2; 10,617

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -42; 5/2; 10,630

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -43; 7/2; 10,638

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -44; 15/2; 10,662

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -45; 20/2; 10,675;

பகவத் கீதை சொற்கள் இண்டெக்ஸ் -46; 23/2; 10,685;

–SUBHAM —

TAGS—-    index 111, february 2022, london swaminathan

சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் கோத்திரங்கள் (Post No.10,718)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,718

Date uploaded in London – –    6 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சங்க காலத்திலேயே பல்வேறு கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்கள் தமிழ் நாடு எங்கும் வசித்தது புலவர்களின் பெயர்களிலிருந்து தெரிகிறது. இது தவிர கல்வெட்டுகள், செப்பேடுகளில் நிறைய விஷயங்கள் கிடைக்கின்றன. முதலில் முது பெரும் அறிஞர், வரலாற்று ஆசிரியர் டாக்டர். இரா. நாகசாமி தரும் தகவல்களைத் தருகிறேன் :

புத்தகத்தின் பெயர் – யாவரும் கேளிர் , எழுதியவர் டாக்டர். இரா. நாகசாமி, 1973, வாசகர் வட்டம், சென்னை-17

“அகத்தியர், கவுண்டின்யர் தலைமையில் பிராமணர்கள் வந்தனர். இவர்கள் வேறுகுடிகளோடு வந்தனர்.அசோக மாமன்னன் பவுத்த சமயத்தைப் பரப்புவதற்கு இலங்கைக்கு, ஆட்களை அனுப்பியபோது  இலங்கையில் அந்தணர் இருந்தனர்; அவர்களில் பலரும் பவுத்த மதத்தைத் தழுவினர் என்று அந்நாட்டு நூல்களிலிருந்து அறிகிறோம்.. பிராமணப் பெண்கள் பிராகிருத மொழி பேசினர் .

சங்க காலத்திலேயே பல கோத்திரங்களைச் சேர்ந்த பிராமணர்கள் வசித்ததை சங்க இலக்கியயனங்களிலிருந்து அறிகிறோம்.

கவுண்டின்யர்,

வாதுளர்

கோசிகர்

ஆத்ரேயர்

காசியபர்

ஆகிய கோத்திரங்களைச் சேர்ந்தோர் தமிழ்நாட்டில் வசித்தனர்.

சுமார் கிபி. எட்டாம் நூற்றாண்டில் தமிழகத்திலும் ஆந்திரத்திலும் 32-க்கும் மேற்பட்ட கோத்திரங்களை சேர்ந்தோர் வசித்தது செப்பேடுகளில் இருந்து தெரிகிறது.

அந்த கோத்திரங்கள் பின்வருமாறு:

சாண்டில்ய, ஆவிஷ்ட, கவுண்டின்ய , ஹரித

பாரத்வாஜ, ஆத்ரேய, சாவர்ணி, லோஹித ,

கெளதம , கெளசிக , மெளத்கல ,  வாசிஷ்ட,

தாராயண , வத்ஸ, சாங்கிருத்யாயன , கார்க்க

பராசர, விஷ்ணுவிருத்த, மாஷல , அக்நிவேச்ய ,

காச்யப, ரதீதர , காமக , சாங்கர்ஷ,

கண்வ, மாத்தர , குத்ஸ, சாலவத,

வாதூல பவுரு குத்ஸ, கபி , ஜாதகர்ண

XXX

பாண்டியரின் ஸ்ரீவரமங்கலம் செப்பேடு பார்கவ கோத்திரத்தையும் தளவாய்புரம் செப்பேடு வான கோத்திரத்தையும் குறிக்கின்றன .

XXX

சூத்திரங்கள்

அந்தணர்களின் அன்றாட வாழ்க்கையை  கிருஹ்ய சூத்திரங்கள் என்ற நூல்கள் கட்டுப்படுத்துகின்றன . இவற்றில் பல கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே சூத்திரத்தைப் பின்பற்றுவது உண்டு.

இச்சூத்திரங்கள், இயற்றிய முனிவரால் பெயர்பெற்றன பல்லவர் காலத்தில்

ஆபஸ்தம்ப,

பிராவசன

வாஜசனேயி

ஹிரண்யகேசி

பவிஷ்ய

சந்தோக

கலாராச்ய

காலார்ச்ச

அக்னிவேச்ய

முதலிய சூத்திரங்களைப் பின்பற்றினோர் இருந்தனர் என்பதை காசாக்குடி, புல்லுர் முதலிய செப்பேடுகளால் அறியலாம்.

ஸ்ரீவரமங்கலம் செப்பேடு ஆச்வலாயன சூத்திரத்தைக் குறிக்கிறது

பாண்டியர் செப்பேட்டில் பெளதாயன கல்பத்தைச் சேர்ந்தவர் குறிக்கப்படுகிறார்.

தமிழகத்தில் ஆபஸ்தம்பம் , போதாயனம் , ஆச்வலாயனம் ஆகிய சூத்திரங்கள் இன்றுவரையிலும் பெருவாரியாகப் பின்பற்றப்படுகின்றன

XXX

நான் கண்ட விஷயங்கள் :–

இனிமேல் நான்கண்ட விஷயங்களைத் தருகிறேன்.

சங்க இலக்கியப் புலவர்கள் தங்கள் பெயர்களுடன் பெருமையாக கோத்திரப் பெயர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர் . இதோ சில எடுத்துக் காட்டுகள்:-

தொல்காப்பியரும், காப்பியாற்றுக் காப்பியனாரும் கபி என்னும் காவ்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்

தொல்காப்பியரின் பெயர் த்ருண தூமாக்கினி என்று ‘உச்சிமேற் புலவர்கொள்’ நச்சினார்க்கினியர் செப்புகிறார்.

பாலைக் கெளதமனார் – கெளதம கோத்ரம்

செல்லூர் கோசிகன் கண்ணன் –  கெளசிக

பெருங் கெளசிகனார் , இளம் கெளசிகனார் – கெளசிக

கள்ளில் ஆதிரையனார், தங்கால் ஆத்ரேயன் – ஆத்ரேய

கொடி மங்கலம் வாதுளி நற்சேந்தன் – வாதூல

கார்க்கியார் – கார்க்ய

மதுரை கவுணியன் பூதனார் – கவுண்டின்ய

ஆமூர்க் கோதமன் சஹதேவன் –  கெளதம கோத்ரம்

இவர்களைத் தவிர கபிலர், பரணர், நக்கீரர் முதலிய சுமார் 20 பிராமணப் புலவர்கள் தங்கள் கோத்திரங்களை வெளியிட வில்லை.

நச்சினார்க்கினியர் என்னும் உரை ஆசிரியர் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர்தான் தமிழில் அதிக உரைகளை நமக்கு எழுதிவைத்தவர். அவர் எழுதிய ஒவ்வொரு உரை முடிவிலும் தன்னை மதுரை பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்த  நச்சினார்க்கினியர் எழுதிய உரை என்று பெருமையாக தம்பட்டம் அடிக்கிறார்.

–SUBHAM—

tags- சங்க இலக்கியம், கோத்ரம், சூத்திரம், பட்டியல், பிராமணர், பார்ப்பனர் .

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 2 (Post No.10,717)

WRITTEN BY S NAGARAJAN
Post No. 10,717
Date uploaded in London – – 6 MARCH 2022

Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

தமிழ் என்னும் விந்தை

நடுவெழுத்தலங்காரப் பாடல் – 2
ச.நாகராஜன்

நடுவெழுத்தலங்காரப் பாடல்கள் தமிழில் ஏராளம் குறிப்பிடத்தகுந்த ஒரு பாடலாக சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர் இயற்றிய ஒரு பாடலைக் கூறலாம்.

இவர் கி.பி.1857ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் பிரபலமான மு.ரா.அருணாசலக் கவிராயர் அவர்களது தம்பி. திருவாவடுதுறை ஆதீனம் இரண்டாவது சந்நிதானமாக இருந்த ஶ்ரீமத் நமசிவாய தேசிக சுவாமிகளிடம் முறையாகக் கல்வி கற்றுத் தேர்ந்தவர். அந்த ஆதீனத்து மகா சந்நிதானமாக இருந்த ஶ்ரீ சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் காலத்தும் பின்னர் ஶ்ரீமத் அம்பலவாண தேசிக சுவாமிகள் காலத்தும் ஆதீன வித்வானாக இருந்தவர். பல தம்பிரான்களுக்குத் தமிழ் கற்பித்தவர்.

தமிழ்ச் சங்கத்தில் சைவ நூல்களின் பரிசோதராகவும் இவர் இருந்தார். இவரது ஆராய்ச்சியின் மூலமாக புராதன சைவ சாஸ்திர நூல்களான ஞானாமிருதம், வில்லிபாரதம் மற்றும் பல நூல்கள் பல விசேஷக் குறிப்புகளுடன வெள்யிடப்பட்டன.

செப்பறைப் பிள்ளைத் தமிழ், அரிமழப் பிள்ளைத் தமிழ் ஆகிய இரண்டு நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

இவர் இயற்றிய நடுவெழுத்தலங்காரப் பாடல் இது:-

பாடலத்தின் பெயர்சதய நாளின்பேர் தெற்குப் பகர்பெயர்
நற் புதுமையின் பேர் விரைவென்ப தின் பேர்
நாடியே படித்தலின் பேர் தலைமையின்பே ரிவற்றி
னடுவெழுத்தாம் பதிக்குருவே நவின்றவப் பேர் முன்பின்
கூடுமவை முறையேயக் கைலைவைத்தோ துநர்க்குக்
கொடுத்தேமுப் புரக்குதவிக் குலவடியார்க் ககற்றித்
தேடியுற்றார் தமக்குசெய் யாதுசெய்தப் பொழுதே
சிறப்பருளம் பலவாண தேவவருள் புரியே

பாடலின் பொருள் இது:

பாடலத்தின் பெயர் – பா(தி)ரி
சதயநாளின் பெயர் – வா(ரு)ணி
தெற்கின் பெயர் – அ(வா)சி
புதுமையின் பெயர் – ந(வ)ம்
விரைவின் பெயர் – ச(டு)தி
படித்தலின் பெயர் – ஓ(து)கை
தலைமையின் பெயர் – இ(றை)மை

பாதிரி, வாருணி, அவாசி, நவம், சடுதி, ஓதுகை, இறைமை ஆகிய சொற்களின் நடு எழுத்துக்களை (அடைப்புக்குள் தரப்பட்டவை) ஒன்று சேர்த்த்தால்
வரும் சொல் திருவாவடுதுறை.
திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் அம்பலவாண தேவ, அருள் புரியே என்று முடிகிறது பாடல்.

இதில் இன்னொரு சிறப்பு இருக்கிறது.
திருவாவடுதுறை என்ற சொல் வரக் காரணமாக அமைந்த சொற்களின் முன் எழுத்தும் பின் எழுத்தையும் சேர்த்துப் பார்த்தால் வரும் சொற்கள் இவை:

பாரி – மனைவி
வாணி – கலைமகள்
அசி – அவமதிச் சிரிப்பு
நம் – ஆணவம், மாயை
சதி – வஞ்சனை
ஓகை – மகிழ்ச்சி
இமை – இமைப் பொழுது

ஆக இப்படி ஒரு அருமையான பாடலை நடுவெழுத்து அலங்காரப் பாடலாக அமைத்து இயற்றியுள்ளார் பெரும் புகழ் சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர்.
இப்படிப்பட்ட அரும் பாடல்கள் கால வெள்ளத்தால் அழியாமல் காப்பது தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையன்றோ!


tags—-சுப்பிரமணியக் கவிராயர், திருவாவடுதுறை 

WOMEN AS GIFT TO RISHIS ! GOTRAS IN TAMIL SANGAM LITERATURE (Post No.10,716)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,716

Date uploaded in London – –    5 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Who are Rishis?

Rishis are Vedic seers. They see what we don’t see. They have perspective outlook. They see inward. Scientists see outward and do research on what they see. Rishis see inward because they know the body is the microcosm and the universe is macrocosm.

The English word ‘seer’ is the mirror image of RSI; that is , you read the word backward, as you see it in a mirror.

Other examples

Hunter Valmiki can’t say Rama. So he was asked to say mara (mirror image of Rama)

English word Leo is the mirror image of Mythical Hindu animal Yali. Liya= Lion= Leo

Ratha in Sanskrit becomes Ther in Tamil.

Xxx

Seven Rishis known as Sapta Rishis are the progenitors of man kind. They created inner heat called ‘Tapas’ with which they did miracles. The more heat one creates and saves, the more powerful one becomes.

But like all miracle men, God sends temptations to test them. Many succumb to such temptations and lose their energy. Visvamitra is the best example. Each time he accumulated great energy, Indra sent him Menaka or Anger or Ego. He lost his energy in the fight with Vasistha (greedy for the divine cow Kamadhenu) , Trisnaku episode (Ego) and Menaka episode (sexual urge).

But those who do not succumb to such temptations develop ‘Urdhwaretas’ (having the semen drawn upwards), sending sexual energy upward unlike ordinary men. Loss of seed/semen meant loss of power. But yet they don’t waste it. They use it one or two times to get progeny. Kalidasa in his Raghuvamsa beautifully explained the qualities of Raghu Dynasty. One of their qualities is the kings marry women not for sex but for getting sons. This is same with the Rishis. The accumulated energy is used for creating good children. But that also goes wrong if the receiving women are bad. We know what happened when Vyasa was asked to lie down with two women. As genetics shows, a child is the product of genes from husband and wife.

Here are some details about the gift of women received by the Rishis/Saints:

Many kings gave their daughters to Rishis…

King Prasenajit gave Renuka to Jamadagni ;

King Trnabindu gave Ilvalaa to  Pulastya ;

King of Vidharba gave Lopamudra to  Agastya;

King Marutta, son of Karandhama gave his daughter to  Angiras;

King Mitrasaha Saudasa gave Madayanti to Vasistha .

Visvamitra got Madhavi and gave her to his disciple Galava and as a result Astaka was born.

Kuvera gave three Rakshasa wives to Pulastya and their names are Puspotkata, Raakaa and Maalini.

Daksa , son of Brahma, gave women to the following,

27 to Soma, the Moon;

13  to Kasyapa;

10 to Dharma

4 to Aristanemi

2 to  Angiras

2 to Krasava

The Gotra organisation shows their children and grand children and great grandchildren. Brahmins strictly follow Gotras and the Same Gotra (sahotra) marriage is banned in the community.

xxx

Gotras in Sangam Tamil Literature

Most interesting thing about the Gotra/clan organisation is we come across different Gotras among Sangam Tamil poets. If the southern most part of India can relate so many gotras in the Chera, Choza, Pandya territories, we may guess the prevalence of different gotras in other parts.

Following are some Gotras of Brahmin poets in Sangam Tamil Literature:

Dr R Nagaswamy, World famous Tamil historian and Archaeologist , gives the list of Gotras found in Sangam literature and later inscriptions :

Kaundinya

Vatula

Kausika

Atreya

Kasyapa

 According to inscriptions, 32 Gotras lived in South India; they were

Chandilya, Bharadwaja, Gautama, Darayana,

Parasara, Kasyapa, Kanva, Vatula

Avishta, Atreya, Kausika, Vatsa, Vishnuvrdda

Rateetara, Maatra, Paurukutsa, Kaundinya

Saavarni, Mautkala, Sankrudyaayana, Maashala,

Kaamaka, Kutsa, Kapi, Harita, Lohita, Vaasistha,

Gaarga, Agnivesya, Saankarsha, Saalavatha,

Jaatakarna, Bhargava, Vaana

Xxx

Tamil  poets with Gotra names as suffix or prefix:–

Tolkapyan, Grammarian, Kavya Gotra

Kaappiyaatru Kaappiyanaar , Kavya Gotra

Paalai Gauthamanaar (Gautama Gotra)

Sellur Kosikan Kannan (Kausika )

Perum Kausikanar, Ilam Kausiknar (Kausika)

Gargyar (Gaarga )

Madurai Kavuniyan Bhutattanar (Kaundinya)

Tangaal Atreyan ( Atreya Gotra)

Kadimangalam Vaatuli  (Vaatula )

Kallil Aaththiraiayanar (Atreya)

Aamur Gotaman Sahadevan (Gauthama )

Kabilar, Paranar, Maamulan and umpteen others have not declared their Gotras. Perhaps those gotras were well known at that time.

The great commentator Nachinarkiniyar, proudly declared at the end of each commentary, that he belonged to Bhaaradvaja gotra.

–Subham —

 Tags- Women, Gifts, Rishis, Gotras, Sangam literature

திராவிட “அறிஞர்கள் ” எழுதிய நூல்கள் பற்றி எச்சரிக்கை ! (Post No.10,715)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,715

Date uploaded in London – –    5 MARCH   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

1967 முதல் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி நடை பெற்று  வருகிறது. அதற்குப் பின்னர் வந்த தமிழ் புஸ்தகங்களில் ஏராளமான திராவிட விஷமங்கள் செய்யப்பட்டுள்ளன. இதில் நிறைய பாதிக்கப்பட்டவர்  திருவள்ளுவர்தான். நெடுஞ்செழியன் போன்றோர் எழுதிய விளக்கவுரைகளைப் படித்தால் திருவள்ளுவர் தற்கொலை செய்துகொள்வார். தமிழ் பிளாக் BLOGS குகளில் அவர் குறளின் குரல் வளையை நெரிப்போரைக்கண்டால் திருக்குறள் என்பதை நான் எழுதவில்லை என்று சொல்லிவிட்டு ஒடி ஒளிந்து கொள்வார்.

ஒரு நூலுக்குப் பல உரைகள் இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட மரபுதான். காளிதாசரின் சில  நூல்களுக்கும்  மனு ஸ்ம்ருதி போன்ற சட்டப்புஸ்தகங்களுக்கும்  60, 70 உரைகள் கூட உள்ளன. திருக்குறளுக்கு பத்துப் பேர் எழுதிய உரைகளில் நமக்கு 5 கிடைத்து இருக்கின்றன. அவை அனைத்தும் எதிரும் புதிருமாக இராது. ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாகாவே இருக்கும். அப்படி எதிர் உரைகள் தந்தாலும் மற்றவர் என்ன சொல்கிறார்கள் என்பதைச் சொல்லி நமது கருத்தைச் சொல்லலாம். நான் கூட ‘இந்திரனே சாலுங் கரி’ என்ற குறள் வரிகளுக்கு பரிமேல் அழகர் எழுதிய உரை தவறு என்று காட்டி  பதின்மர் உறையில் ஒருவரும், புத்தரும் இந்திரனின் ஒழுக்கத்தைப்  புகழ்ந்து கூறிய வரி என்று ஆதாரம் காட்டி  நிரூபித்துள்ளேன்.. வேதங்களுக்கு சாயனர் எழுதிய வேத பாஷ்ய உரைகளை சங்கர மடங்கள் ஏற்பதும் இல்லை; புகழ்வதும் இல்லை. ஆனால் சாயனர் மகா மேதாவி என்று ஏற்றுக்கொள்வர்.

சுருங்கச் சொன்னால் உரை பேதங்களை எல்லோரும் வரவேற்றுள்ளனர்.

திராவிட உரைகள், அப்படியல்ல. அது விஷ(ம)ம்! எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இதன் மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், எந்த தமிழ் நூலின் உரைக்கும் 1965-க்கு முந்தைய நூல்களை நாடுங்கள்.

திருவள்ளுவர், அவ்வையார் பற்றிய பழைய கதைகளை புது நூல்களில் காணமுடியாது. அது தவறு என்று வாதாடுவோரும் பழைய கதைகளைச் சொல்லிவிட்டு, தனது கருத்துக்களை சொல்லலாம். ஏனெனில் அந்தக் கதைகள் பழைய நூல்கள் எல்லாவற்றிலும் உள

xxxx

புலியூயூர் கேசிகன்.

புலியூயூர் கேசிகன். புற  நானூறு உரையைப் படித்தால் எவ்வளவு விஷமம் செய்திருக்கிறார் என்பது விளங்கும். பாரதியார் பாடலில் அவர், துலுக்கன் என்று எழுதிய வரிகளைக்கூட, பொதுமக்களுக்குப் பயந்து, துருக்கன்  என்று சில அறிஞர்கள் மாற்றினாராம்.

இதே போல காஞ்சி பரமாசார்யார் பேசிய உரைகளில் கூட சில விஷயங்களை ரா.கணபதி ‘எடிட் செய்துள்ளார். ஆர் எஸ். எஸ். இ யக்கத்தின் பெருந்தலைவர், மஹா யோகி,  கோல் வால்கர் எழுதிய BUNCH OF THOUGHTS BY M S GOLWALKAR ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ நூல் கூட ‘எடிட்’ செய்து வெளியிடப்படுகிறது. இவ்விரண்டுக்கும் காரணம் சிலர், பழைய விஷயங்களை இடம், பொருள், ஏவல் இல்லாமல் கண்டபடி உபயோகப்படுத்தக்கூடாது என்பதற்காகத்தான்.

ஏசுநாதர் ஆங்கிலத்தில் பேசவில்லை ; அவர் அராமிய மொழியில் கதைத்தார். அதைக் கிரேக்க மொழியில் உருக்குலைத்தனர். அதன் அடிப்படையில் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேம்ஸ் என்பவர் ஆங்கிலத்தில் தந்தார். அதற்குப் பின்னர் நூற்றுக்கண்ணாக்கான மாற்றங்களுடன் ஒவ்வொரு ஆண்டும் பதிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள ஒரிஜினல் கிரேக்க மொழி பைபிளை மொழி பெயர்க்க எவருக்கும் துணிவு இல்லை. அப்படி மொழிபெயர்த்தால் 1000 கணக்கில் மாற்றங்கள் வரும் என்பது அதை எட்டிப்பார்த்த, தொட்டுப்பார்க்க, அறிஞர்களுக்கு விளங்கியது.

தொல்காப்பியயத்தில் 2000 பட பேதங்கள் இருந்தன. ஆனால் பெரும்பாலும் பிரதி எடுத்ததில் ஏற்பட்ட எழுத்துப் பிழைகள்தான்; கருத்துப் பிழைகள் அல்ல. ஆகையால் பெரிய சர்ச்சைக்கு இடமில்லை.

மேற்கூறிய எல்லாவற்றில் இருந்தும் வேறுபட்டது திராவிட உரை விஷ(ம)ம்.

XXXXX

இதோ சில எடுத்துக்காட்டுகள்.

‘பார்ப்பார்’ என்ற சொல்லை புறநானூற்றில் குரவர் (குரு ) என்று மாற்றியுள்ளார் புலியூர் கேசிகன். இந்த விஷமத்தை தவறு என்று காட்ட நமக்கு ஆதாரமும் உள்ளது.

இதற்கெல்லாம் மூல காரணம் ‘கழக வெளியீடு’ என்பது அவ்வை துரைசாமிப்பிள்ளை எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிகிறது

சங்க இலக்கியத்தின் பழைய நூல்களில் ஒன்று புறநானூறு. ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் காண்போம்.

புறம் பாடல் 34

பாடியவர்- ஆலத்தூர் கிழார்

சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது

ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்

மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்

பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கில் கழு வாயும் உள என,

நிலம்புடை பெயர்வதாயினும்  ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே”

 நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. ஆனால் பிரமணர்களையோ, பசுக்களையோ, பெண்களையோ அவமானப்படுத்தியோருக்கு பரிகாரம் உண்டு.

பெண்களின் கருவை சிதைத்தோர்க்கு — என்பது இரண்டாவது வரி. இதில் கரு என்பதும் , சிதை என்பதும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்

இந்தப் பாடலில் மூன்றாவது வரியை கவனியுங்கள் ‘பார்ப்பார்’ என்ற சொல்லை குரவர் என்று புலியூர் கேசிகன் மாற்றியுள்ளார். இதை பாரி நிலையம்  1995ல் வெளியிட்டுள்ளது.இது விரிவாக்கிய, புதிய பாதிப்பு என்றும்  உள்ளது.

இது வேறு பதிப்புகளில் இல்லாத ஒன்று. இது உரை வேறுபாடு அல்ல. பார்ப்பன துவேஷத்தால் கலக்கப்பட்ட விஷம்.

குரவர் என்ற சொல்லை சங்க இலக்கிய சொல்லடைவு நூல்களிலும் காணவில்லை.குரவர் என்பதை சரி என்று சொல்வோரும் அது ‘குரு’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவமே என்பதை ஒப்புக்கொள்ளவேண்டிவரும். காரணம் – தொல்காப்பியடித்திலோ சங்க இலக்கியத்திலோ ‘குரவர்’ இல்லை.

வர்த்தமானன் பதிப்பக வெளியீட்டில் குரவர் என்று போட்டுவிட்டு உள்ளே உரையில் அந்தணர் என்று எழுதியுள்ளார்  மாணிக்கனார். அவர் அரைகுரையாக ‘காப்பி’ அடித்தது இதில் புலனாகிறது.

1958-ம் ஆண்டு. எஸ்.ராஜம் புறநானூற்றுப் பதிப்பில் ‘பார்ப்பார்’ என்றே உளது

நன்றி கொன்றவருக்கு பரிகாரமே இல்லை. இது வால்மீகி ராமாயண (4-34-12) ஸ்லோகத்தின் கருத்தை ஒட்டி எழுந்தது.

இதற்கெல்லாம் மூல காரணம் கழக வெளியீடு என்பது அவ்வை துரைசாமிப்பிள்ளை எழுதிய நீண்ட உரையிலிருந்து தெரிகிறது. கழக வெளியீட்டின் பல பதிப்புகளில்- குறிப்பாக திருமந்திர உரையில்- பார்ப்பன விரோத கருத்துக்களை நிறையவே காணலாம். அதாவது ‘யானை தன் தலையிலேயே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட’ உரைகள்.

மேலும் அவ்வை துரை சாமிப்பிள்ளை, இதே பாடலில் காலை அந்தி, மாலை அந்தி என்று பிராமணர்களின் சந்தியாவந்தனம் பற்றிச் சொல்வதும், ரத்தி , சிதைத்தல் முதலிய ஸம்ஸ்க்ருத  சொற்களை பயன்படுத்துவதும் தமிழ் இலக்கியம் முழுதும் பசுவையும் பிராமணர்களையும் இணைத்தே பாடி இருப்பதையும், 43-ஆவது பாடலில் சோழர்கள் “பார்ப்பார் நோவன செய்யலர்” (சோழர்கள் பிராமணர்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டார்கள் ) என்ற  வரி வருவதையும் எடுத்துக் காட்டுகிறார். இறுதியாக தரும சாத்திர நூல்களில் இந்த மூன்று பாவ செயல்களும் (கோ ஹத்தி, பிரம்மஹத்தி , ப்ரூனுஹத்தி = பசு, பார்ப்பனர், கரு கொலைகள் ) சேர்ந்தே வருவதையும் துரைசாமிப் பிள்ளை காட்டுகிறார்.

சைவ  சித்தாந்த கழகப் பதிப்பு விஷமிகளை சங்க இலக்கிய சொல்லடைவுகள் நிராகரித்தது மகிழ்ச்சிக்குரிய செயல் ஆகும்.

XXX

TAMIL JOKERS

பலரும் தங்கள் பெயர்களை தமிழ்ப்படுத்திக்கொண்டதாக நினைப்பதும் தவறு. சூர்ய நாராயண சாஸ்திரி என்ற மதுரைப் பார்ப்பனர் இதைத் துவக்கிவைத்தார். அவர் துவேஷத்தின்  பெயரில் செய்யாமல் தமிழ் அபிமானத்தில் செய்ததை அவர் எழுத்துக்களில் காணலாம்.100 ஆண்டுகளுக்கு முன்னரே  தமிழை முதலில் செம்மொழி என்று அறிவித்தவர்ம் அவரே

பரிதி மாற் கலைஞர் என்று அவர் பெயரை மாற்றினாலும் அதில் பரிதி, கலைஞர் என்ற சொற்கள் தமிழ் இல்லை என்பது அவருக்குத் தெரியும்.

ஐராவதம் என்பதை வெள்ளை வாரணம் என்று மாற்றினாலும் வாரணம் ஸம்ஸ்க்ருதமே. கருணா நிதியோ முழுக்க ஸம்ஸ்க்ருதப் பெயர். அது போதாதென்று கலைஞர் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லையும் சேர்த்துக் கொண்டார். அவர் எழுதிய தொல்காப்பியப் பூங்கா நூல் பற்றி தனியாக எழுதுகிறேன் .

இந்த வரிசையில் பெரிய Joker ஜோக்கர் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளைதான். தமிழ் வாழ்த்து என்று ஒரு பாடலை எழுதி அதில் முழுவதும் ஸம்ஸ்க்ருத்ச் சொற்களைப் போட்டுவிட்டு ’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’என்று தமிழை ப் பாராட்டி எழுதி எழுதி “நான் ஒரு முட்டாளுங்க நல்லா படிச்சவங்க நாலு பே ரு சொன்னாங்க” — என்ற சந்திரபாபு வின் திரைப்படப் பாடலையும் நினைவுபடுத்துகிறார்.

தமிழில் நாடகமே இல்லை என்ற குறையைப் போக்க  ஒரு ஆங்கில நாடகத்தைத் தழுவி மனோன்மணீயம் என்ற நாடகத்தை சுந்தரம் பிள்ளை எழுதினார் . பரணர் பாடலில் உள்ள 80 வரலாற்றுச் செய்திகளை விட்டு விட்டு ஊர் பேர் தெரியாத ஒரு ஆங்கில நாடகத்தை எடுத்துக்கொண்டு அதற்கு ஸம்ஸ்க்ருதப் பெயர் சூட்டி வெளியிட்டார். நல்ல வேளையாக சுவையும் தரமும் இல்லாத அந்த நாடகத்தை ஒருவரும் படிப்பதில்லை.

சம்ஸ்கிருதத்தைக் குறைகூறி சுந்தரம் பிள்ளை எழுதியதை தமிழ்நாடு அரசே நீக்கிவிட்டது. சிதைக்கப்பட்ட தமிழ் மொழி வாழ்த்தை எல்லோரும் பாடிக் கொண்டிருக்கிறார்கள்: ‘’ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையாவுன்’’ என்ற வரிகளை நீக்கி  பாட்டையே சிதைத்துவிட்டார்கள்.

—- SUBHAM —

tags– திராவிட, அறிஞர் , உரை, புலியூர் கேசிகன், புறநானூறு