நடந்தவை தான் நம்புங்கள்! – 23 (Post No.11,089)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,089

Date uploaded in London – –    8 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள்! – 23

ச.நாகராஜன்

1

கல்லறை கால்கள்!

இடுகாடு வேலையில் நிபுணரான ஆல்மன் ப்ரௌன் ஸ்ட்ரோவ்கர் கான்ஸாஸில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். அவர் பிணங்களுக்கான இறுதிச் சடங்கைச் செய்வதில் வல்லவர். ஆனால் தனது பிஸினஸ் நாளுக்கு நாள் குறைந்து வருவதைக் கண்ட அவர் அதிர்ந்து போனார். அவருக்கு வரும் பிஸினஸ் அவருக்குப் போட்டியாக ஆரம்பித்த இன்னொருவருக்குத் தவறாமல் போய்க் கொண்டிருந்தது. இது என்ன விசித்திரமாக இருக்கிறதே என்று ஆராய்ச்சியில் இறங்கினார். அப்போது தான் தெரிய வந்தது உள்ளூர் டெலிபோன் ஆபரேடர் போட்டி கம்பெனியை வைத்திருந்தவரின் மனைவி என்று! அவருக்கு வரும் கால்கள் அனைத்தையும் அந்த ஆபரேடர் தனது கணவருக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

அந்தக் காலத்தில் ஓரிடத்திலிருந்து இன்னொருவருக்குச் செய்யப்படும் தொலைபேசி அழைப்பு ஒரு ஆபரேட்டருக்குச் செல்லும். அவர் தான் இணைப்பை உரிய நம்பருக்கு வழங்குவார். ஆக இடுகாட்டு இறுதிச் சடங்கிற்காக ஆல்மன் ஸ்ட்ரோவ்கர் நம்பரைக் கேட்டவர்களுக்கு எல்லாம் அவர் தனது கணவரின் நம்பரோடு இணைப்பைத் தந்து கொண்டிருந்தார்.

உடனே ஆராய்ச்சியில் தீவிரமாக இறங்கிய ஆல்மன் ஸ்ட்ரோவ்கர் ஒரு எக்ஸ்சேஞ்ஜ் ஸ்விட்சைக் கண்டுபிடித்தார். அது கேட்ட நம்பருக்கு ஆபரேடர் உதவியின்றி, தானே இணைப்பைத் தந்து விடும்!

1892இல் லா போர்ட், இண்டியானாவில் முதல் ஆடோமேடிக் ஸ்விட்ச் நிறுவப்பட்டது.

பின்னர் தான் அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர் ஸ்ட்ரோவ்கர் உட்பட!

ராங் கனெக்‌ஷன் இல்லாமல் நினைத்த நம்பருடன் அப்போது முதல் தான் பேச முடிந்தது! இது உலகெங்கும் பின்னர் பரவியது!

2

வீதியில் கூட்டம்! வெலவெலத்துப் போன அதிகாரிகள்!

1810ஆம் ஆண்டு ஒரு நாள் லண்டனில் உள்ள பெர்னர் வீதியில்

கூட்டம் வந்து கொண்டே இருந்தது. வந்தவர்கள் அனைவரும் 54 என்று இலக்கமிட்ட ஒரு குறிப்பிட்ட வீட்டிற்குச் சென்று கொண்டே இருந்தனர்.

அவர்கள், பாடகர்கள், பாதிரியார்கள், கல்லறையில் இறுதிச் சடங்கு செய்வோர், வக்கீல்கள் என அனைத்துத் துறைகளையும் சேர்ந்தவர்கள்.

அவர்கள் கொண்டு வந்த சாமான்களும் வெவ்வேறு விதமானவை.

லண்டனின் பாதிப் போக்குவரத்து அந்த வீதியில் இருந்ததால் லண்டன் வாழ்க்கையே கிட்டத்தட்ட ஸ்தம்பித்து விட்டது.

அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. அங்கு வந்து அனைவரையும் ஒழுங்குபடுத்துவதில் களைத்துப் போனார்கள் அந்த அதிகாரிகள்!

குறிப்பிட்ட வீட்டின் சொந்தக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டின் வேலைக்காரியும் வந்த ஒவ்வொருவரையும் திருப்பி அனுப்பிக் கொண்டே இருந்தாள்.

கடைசியில் தான் விஷயம் என்னவென்று தெரியவந்தது.

தியோடர் ஹூக் என்பவர் ஒரு எழுத்தாளர், இசை அமைப்பாளர். (Theodre Hook) . அவர் தனது நண்பரான சாமுவேல் பீஸ்லியிடம்(  Samuel Beazley) ஒரு பந்தயம் வைத்தார். எந்த ஒருவரையும் தன்னால் பிரபலப்படுத்த முடியும் என்று. சாமுவேல் அதை நம்பவில்லை.

விளைவு தியோடர் மும்முரமானார். ஆயிரக் கணக்கான கடிதங்களை லண்டனில் உள்ள ஏராளமானோருக்கு அனுப்பி, குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு வேண்டிக் கொண்டார்.

அனைவரும் ஏதோ ஒரு பெரிய வேலை தமக்குக் கிடைத்த சந்தோஷத்தில் சாரிசாரியாக வந்து கொண்டிருந்தனர்.

ஹூக்கும் பீஸ்லியும் ஒரு இடத்தில் அமர்ந்து நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். பீஸ்லி திகைத்துப் போனார். பந்தயத்தில் தோற்றும் போனார்.

பின்னால் தான் நடந்தது என்ன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பத்திரிகைகள் அதை வெளியிட்டன!

3

ஜோதிடருக்கே ஜோஸ்யம்!

பிரபல எழுத்தாளரான ஜொனாதன் ஸ்விப்டை (Jonathan Swift) அறியாதவர் இருக்க முடியாது. உலகப் புகழ் பெற்ற கலிவர்ஸ் டிராவல்ஸ் (Gulliver’s Travels)  என்ற நாவலை எழுதியவர் அவர் தான். இன்னும் பல புகழ்பெற்ற படைப்புகளையும் அவர் படைத்தவர்.

ஆசாமி குறும்புக்கார ஆசாமி.

வாழ்நாள் முழுவதும் ஏதாவது குறும்புகள் செய்து கொண்டே இருப்பது அவர் வழக்கம்.

அந்தக் காலத்தில் ஜான் பார்ட்ரிட்ஜ் என்று ஜோதிடம் சொல்வதில் வல்லவராக இருந்த பிரபல ஜோதிடர் ஒருவர் இருந்தார்.

அவருக்கே ஜொனாதன் ஸ்விப்ட் ஒரு ஜோதிடம் கூறினார்!

அவர் 1708ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி இறந்து விடுவார் என்பது தான் அவர் ‘கணித்த’ ஜோதிடக் குறிப்பு!

மார்ச் 30 வந்தது. ஜோதிடர் இறக்கவில்லை.

ஆனால் ஸ்விப்டோ ஜோதிடர் இறந்ததாக அறிவித்து விட்டார்.

பார்ட்ரிட்ஜ் தான் இறக்கவே இல்லை என்றும் உயிரோடு தான் இருப்பதாகவும் எவ்வளவோ கூறினாலும் மக்கள் ஜோனாதனைத்

தான் நம்பினர்!

4

ஒரு உண்மையான ஜோதிடக் குறிப்பு

ஜோதிடர் ஒருவர் தனது அன்றைய மாதக் குறிப்பு நிச்சயம் பொய்யாகப் போகாத கணிப்பு என்று கூறி அதை மாதத்தின் முதல் நாளில் வெளியிட்டிருந்தார்.

குறிப்பு இது தான்:

இந்த மாதம் உங்கள் மனைவியிடமிருந்து திட்டு வாங்குவது வழக்கத்தை விட நிச்சயமாகக் குறைச்சலாகவே இருக்கும்!

அது பிப்ரவரி மாதம்! அதற்கு 28 நாட்கள் தானே!

***

tags-  நடந்தவை தான் நம்புங்கள்! – 23

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்-64 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post.11,088)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,088

Date uploaded in London – –    7  JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 64 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

வேத வாதரதாஹா  2-42  வேதத்தின் அர்த்தவாதத்தில் பற்றுடையவராய்

வேதவித்  15-1 வேத விற்பன்னர்கள்

வேதவிதஹ  8-11 வேதம் அறிந்த அறிஞர்கள்

வேதானாம் 10-22 வேதங்களில்

வேதாந்தக்ருத் 15-15  வேதாந்தத்தை ஆக்கியவனும்

வேதாஹா  2-45 வேதங்கள்

வேதிதவ்யம் 11-18   அறிதற்குரிய பரம்பொருள்

வேதிதும் 18-1 அறிந்து கொள்ள

வேதேஷு 2-46 வேதங்களில்

வேதே 15-18  வேதத்தில்  10

வேதைஹி 11-53 வேதங்கள் மூலம், வாயிலாக

வேத்யம் 9-17 கற்றுணரத்  தக்கவனும்

வேத்யஹ  15-15 அறிய வேண்டிய பொருள்

வேபதுஹு  1-29 நடுக்கம்

வேபமானஹ  11-35 நடுங்குகின்ற

வைனதேயஹ – 10-30 கருடன் , வினதாவின் புதல்வன்

வைராக்யேண  6-35  வைராக்யம், திட உறுதி

வைரிணம் 3-37  சத்ருவாக

வைஸ்ய கர்ம 18-44 வைஸ்யர்களின் கடமை

வைஸ்யாஹா 9-32 வைசியர்கள்         20

வைச்வாநரஹ  15-14 ஜீரணத்துக்கு உதவும் வயிற்றில் உள்ள தீ

வ்யக்த மத்யானி  2-28  தோற்றம் இடையிலும்

வ்யக்தயஹ 8-18  தோற்றங்கள்

வ்யக்திம்  7-24  தோற்றத்தை

வ்யதி தரிஷ்யதி  2-52  கடந்து செல்லுமோ

வ்யதீதானி  4-5 சென்றுவிட்டன

வ்யதயந்தி 2-15 கலக்குதல்

வ்யதா 11-49      பயம்

வ்யதிஷ்டாஹா 11-34  பயந்து வருந்துதல்

வ்யதாரயத்  1-19 பிளந்தது        30 words

வ்ய பாஸ்ரித்ய 9-32  சரணடைந்து

வ்யவசாயஹ  10-36 விடாமுயற்சி

வ்யவசா யாத்மிகா  2-41 நிச்சய வடிவமான

வ்யவசிதஹ 9-30  நிச்சயித்தவன்

வ்யவஸ்திதாஹா 1-45 துணிந்தவர்கள் ஆயினோம்

வ்யவஸ்திதான் 1-20  எதிர்நின்ற

வ்யவஸ்திதெள 3-34 உட்புகுந்து  நிற்கின்றன

வ்யாத் தானனம்  11-24  திறந்த வாய்களுடைய

வ்யாப்தம் 11-20  நிறைந்துள்ளது

வ்யாமிஸ்ரேண 3-2 குழப்புவது போன்ற        40

வ்யாப்ய  10-16  வியாபித்து, பரந்து

வ்யாயஸ ப்ரஸாதாத்  18-75 வியாசரின் அருளினால்

வ்யாஹரன்  8-13  உச்சரித்துக்கொண்டு

வ்யுதஸ்ய  18-51 விடுத்து

வ்யூடம் 1-2 படை அணிவகுப்பில்

வ்யூடாம் 1-3 அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ள

வ்ரஜ  18-66 புகு , அடை

வ்ரஜேத்  2-54 நடப்பான்

XXXX

शक्नोती

ச – சொற்கள்

சக்னோதி 5-23  வலிமை பெற்றவனோ

சக்னோமி 1-30 சக்தி உள்ளவன் ஆக இருக்கிறேன்    50

சக்னோஷி 12-9  சக்தியுடைய

சக்யஸே 11-8  இயலும் , கூடும்

சக்யம் 11-4 கூடும், முடியும்

சக்யஹ  6-36 முடியும்

சங் கம் – 1-12 சங்கினை

சங் காஹ  1-13 சங்குகள்

சங் கெள  1-14  சங்குகளை 

சடஹ  18-28 வஞ்சகனும்

சதச ஹ  11-5 நூற்றுக் கணக்கில் / காக

சத்ரு த்வே  6-6 பகைமை நிலையில்    60

சத்ரு வத் 6-6 பகைவர் போன்ற

சத்ரும் 3-43 பகையை எதிரி, பகைவர்

சத்ரு ஹு  16-14  எதிரி

சத்ரு ன்  11-33 எதிரிகள், பகைவர்கள்

சத்ரவ்  12-18  சத்ரெள -பகைவனிடத்து

சநைஹி  6-25 மெல்ல, மெதுவாக

சப்த  ப்ரஹ்மா 6-44  சப்த பிரம்மம் ஆகிய வேதம்

சப்தஹ  1-13 சப்தம் , ஆரவாரம்

சப்தாதீ ன் 4-26  சப்தம் முதலிய        

69 words are added from this part 64

Tags – Tamil Gita, Word index 64

இலங்கை உடுவில் முத்துக்குமார கவிராயர், சேனாதி ராயர் கவிதைகள் (Post.11087)

WRITTEN BY B. KANNAN

Post No. 11,087

Date uploaded in London – –    7 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நேற்று இதன் முதல் பகுதி “ஈழத்துப் பாவலர்கள் இயற்றிய ஊர்-இடப்பெயர் கவிதைகள் ” என்ற தலைப்பில் இங்கு வெளியிடப்பட்டது

Part 2

19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உடுவில் முத்துக்குமார கவிராயரும், இருபாலை சேனாதிராய முதலியாரும் ஈழத்து இலக்கியத்தின் இரு கண்களாக விளங்கினார்கள். இருவரும் உற்ற நண்பர்களும் கூட.

ஒரு சமயம் கவிராயரின் குலதெய்வக் கோயிலான மாவை எனும் மாவிட்டபுர ஆலயத்தின் வேட்டைத் திருவிழாவில் முருகப் பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலம் வருகையில், சேனாதிராயரும் உடனிருந்தார்.

அப்போது அவர் கவிராயரைப் பார்த்து, உமது சுவாமியின் பவனியை வர்ணித்துப் பாடும்” என்றார். உடனே கவிராயரும் பின்வரும் நாமாந்தரிதையைப் பாடினார்…….

  முடிவி லாதுறை சுன்னாகத் தான்வழி

     முந்தித் தாவடிக் கொக்குவின் மீதுவந்

  தடைய வோர்பெண்கொ டிகாமத் தாளசைத்

    தானைக் கோட்டைவெ ளிகட் டுடைவிட்டாள்

  உடுவி லான்வரப் பன்னாலை யான்மிக

    உருத்த னன்கடம் புற்றமல் லாகத்தில் 

  தடைவி டாதணை யென்றுப லாலிகண்

    சார வந்தனள் ஓரிள வாலையே

பதவுரை: முடிவிலாதுறை………..வழி=ஆதியும் அந்தமுமில்லாத வெள்ளிமலையாகிய கைலாயத்தில் உறைகின்ற ஈசனின் பிள்ளை (வழி) யாகிய கந்தசுவாமி,

முந்தித் தாவு……..வந்தடைய=முந்தித் தாவுகின்ற கால்களையுடைய குதிரை (கொக்கு) வாகனத்தில் பவனி வர,

ஓர் பெண்கொடி காமத்தாள்=காதல் கொண்ட ஒரு பெண், அசைத்து ஆனைக் கோட்டை….உடைவிட்டாள்=தன் நிலை மறந்து மார்பகத்தை மறைத்திருக்கும் மேலாடையையும் நெகிழவிட்டாள்,

உடுவிலான் வர=அப்போது நட்சத்திரத்தை மனைவியாகக் கொண்ட ( உடு =நட்சத் திரம், இல்=மனைவி) சந்திரன் உதித்தான்,

பன்னாலையான் மிக உருத்தனன்= கரும்பு வில்லையுடைய (ஆலை=கரும்பு) மன்மதன் கோபம் கொண்டான், ஓர் இளவாலை= முருகனைக் காதலித்த அந்த ஒப்பற்ற இளம் பெண்,

கடம்பு உற்ற மல் ஆகத்தில்=கடம்பணிந்த மல்யுத்தம் செய்கின்ற மார்போடு, தடை விடாது அணையென்று= குறிக்கீடு ஏதுமின்றி அணைத்துக் கொள்ள வேண்டுமென்று,

பல ஆலி=நிறைய நீர்த்துளி, கண்சார வந்தனள்= கண்களிலிருந்து சொரிய, கந்த சுவாமிக்கு எதிரே அவனது திருவடிகளே சரணமென்று வீதியில் ஊர்வலத்தை எதிர்கொண்டாள்.

இங்கு சுன்னாகம், தாவடி, கொக்குவில், கொடிகாமம், ஆனைக்கோட்டை, கட்டுடை, உடுவில், பன்னாலை, மல்லாகம், பலாலி, இளவாலை ஆகிய ஊர்ப்பெயர்கள் வேறு பொருளில் கையாளப் பட்டுள்ளன.

கவிராயரின் தோழர் சேனாதிராயரின் குலதெய்வக் கோயில் நல்லூர் கந்தசுவாமி ஆலயமாகும். அந்நாட்களில் மாசி மாதத்தில் நல்லூர் கோயிலின் கொடியேற்றத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

ராயரின் வேண்டுகோளுக்கிணங்க முத்துக்குமாரர் திருவிழாவில் கலந்து கொண்டார். இப்போது கவிராயர் கேட்டு முதலியார் அவர்கள் பாடல் இயற்றுவதுதானே முறை! அப்படியேதான் நடந்தது.

சேனாதிராயர் பின்வரும் பிரேளிகையைக் கவிராயர் மனங்குளிரப் பாடினார்…..

  திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்          

  இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை

  இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்

  தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை

  தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை

நல்லூர் செவ்வேள் மீது இயற்றப்பட்டக் குறவஞ்சிப் பாடல் இது. இதில் புலவர் தான் வசிக்கும் இடம் இருபாலை மற்றும் நல்லூர் நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். மற்றவை அப்பொருட்களைக் குறிக்கின்றன.

பதவுரை: திருவாரும்……..பெருமானார்=திருவருள் நல்கும் நல்லூர் உறை கந்தசுவாமி, இருபாலை=இரண்டு இளம் கொங்கைகளை உடைய, குயத்தியரோடு=பெண்களுடன் ( வள்ளி, தெய்வானை), (குயத்தி=மண்பாண்டம் தயாரிக்கும் பெண்) இன்பமுற்றார் அம்மானை= உல்லாசமாய் இருந்தார் அல்லவோ,மகளீரே, இருபாலைக்…………முற்றார் ஆமாயின்= அப்படி அவர்களுடன் மகிழ்வுடன் இருந்தார் என்றால், தருவாரோ சட்டி……அம்மானை= பழச் சாறு/ரசம் சேகரித்து வைக்க மண் சட்டி /குடம் தருவாரோ, பெண்ணே, தருவார் காண்…………அம்மானை= கிருபாநிதியாகிய முருகவேள் நிச்சயம் தந்து அருளுவார், பெண்ணே!

குயவ சம்பந்தம் வைத்துள்ளவர், சாறு வைக்கச் சட்டி, குடம் கேட்டால் தரத்தானே, வேண்டும்? இது வெளிப்படைக் கருத்து. உட்கருத்தோ வேறு விதம். சட்டி=சஷ்டி திதி, குடம்=கும்ப மாசி மாதம், சாறு= திருவிழா என்று ஒரு பொருள். அதாவது கும்ப மாதம் சஷ்டி திதியில் ஆண்டு உற்சவம் தொடங்க (கொடியேற்றம் செய்ய) கார்த்திகேயன் அநுக்கிரகிப்பார் என்பதாகும்.

முடிவாக உடுவில் முத்துக்குமார கவிராயர் இயற்றிய மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு செய்யுளுடன் இப்பதிவை நிறைவு செய்வோம். இது அனைத்துப் பண்டிதர் களாலும் போற்றிப் புகழப்பட்ட ஒரு பாடலாகும்

கவிராயரின் குலதெய்வமான “கோதை குறமாது குணதேவ மடமாது இருபாலும் உற வீறிவரு குமரேசன்” மாவிட்டபுரக் கந்தன் ஊரைப் பவனி வருகையில் நாமாந் தரிதையில் ஒரு பாடலை அவன் மீது பாடினார். அதில் இச்சா சக்தியான வள்ளி சூடியிருக்கும் ஓர் அணிகலனின் சிறப்பையும் புகழ்ந்திருக்கிறார். மேலும், மல்லாகம், மாதகல், சுன்னாகம், ஈவினை, துன்னாலை, சில்லாலை, கொடிகாமம் எனும் ஊர்ப் பெயர்கள் ஏழும் கருதியப் பொருளை மறைத்திருக்கும் பெயர்களாகும். இதோ அந்தப் பாடல்……

 மல்லாக மாதகலான் மருகன்சுன் னாகத்தான்

      மகன்பா வாணர்

 சொல்லாச்சீ ரீவினையான் துன்னாலை யானத்தான்

      சுரும்ப ரோதிச்

 சில்லாலை யிருள்வென்ற குறக்கொடி கா மத்தானைச்

      சிகண்டி மாவூர்

 வல்லானை மாவிட்ட புரநகரத் திடைப்பவனி 

      வரக்கண் டேனே

பதவுரை: மல்லாக மாதகலான் மருகன்=வலிமையான மார்பில் அனவரதமும் லக்ஷ்மி தேவியை அகலாமல் இருத்தி வைத்திருக்கும் மகாவிஷ்ணுவின் மருகன்,

சுன்னாகத்தான் மகன்=கயிலைமலை அரசராகிய ஈசனின் மகன், பாவாணர் சொல்= பாக்கள் இயற்றும் திறன் மிக்கவர்களுக்கு, சீர் ஈவினையான்= செல்வம் வழங்கும் குணமுடையவன்,

சுரும்பு ரோதி= கரு வண்டுகள் ரீங்காரமிட்டு மொய்க்கும் நாண் கொண்ட,துன்னாலையானத்தான்=  வளைந்த கரும்பு வில்லையுடைய மன்மதனின் மைத்துனன் (ஈசனின் மகள் ரதியின் சகோதரன் முருகன் ஆவான்), சில்லால் ஐ இருள்வென்ற= வியக்க வைக்கும் தகட்டணியால் (வள்ளியின் ஜடைபில்லை) இருளை விரட்டியடித்த, குறக்கொடி காமத்தான்=வள்ளி நாயகியின் மேல்

ஆசைக் கொண்டவன், சிகண்டி= சேவல் கொடி, மயில் வாகனம் உடைய, மாவூர் வல்லானை==மாவூரில் உறையும் பெருமானை, மாவிட்ட…………டேனே= மாவை நகர வீதிகளில் ஊர்வலம் வரக் காணும் பேறு பெற்றேனே!.

சுரும்பு=வண்டு, சிகண்டி= கோழி, மயில். இங்கு பாவலர் வள்ளி அணிந்திருக்கும் ஒரு நகையின் குணாதிசயத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், அதன் பிரகாசம் இருளை விரட்டக் கூடியது என்கிறார்.

 சில்=தகட்டணி. இது கூந்தலின் உச்சியிலிடப்படும் ரத்தினங்கள் இழைத்த ஒரு வகை ஆபரணம். இக்காலத்தில் ஜடைபில்லை என  வழங்கப்படுகிறது. இதிலுள்ள ரத்தினங்களிலிருந்து எழும் பிரகாசமான ஒளி இருளை விலக்கக் கூடியது எனக் கூறுகிறார் கவிராயர்.

இதைப் பற்றிய வர்ணனையைக் கவி கம்பர், தமிழறிஞர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகியோர் தங்கள் பிரபந்தங்களில் விவரித்துள்ளனர். மேலும், தமிழ் இலக்கியத்தில் பெயர் பெற்றக் காவியமான மேருமந்திரப் புராணம் எழுதிய சமணசமய தத்துவ ஞானி வாமனாச்சாரியா (விஜயநகர மன்னர் ஹரிஹரர்-2 ஆட்சிகாலம்) தனதுநூலில் 50-வது பாடலில் இதைப் பற்றி விவரிக்கிறார்,

50. சஞ்ச யந்த னெனும்பெய ரானவ

    னஞ்சு தாயர்தங் கைவழி யந்திவாய்

    மஞ்சி லாமதி போல வளர்ந்தபி

    னஞ்சி லோதியர்க் கின்னமிர் தாயினான்.

அஞ்சிலோதி” என்பதை “அம் – சில் – ஓதி”  எனப்பிரித்து   ‘அழகிய  தகட்டணியை  அணிந்த கூந்தல்”  எனப் பொருள் கொண்டனர் பண்டைய உரையாசிரியர்கள் பெரும் பாலார்..

அஞ்சிலோதியர்க்கு – ஐந்துவகைப்  பாகுபாட்டில் அமைந்த (முடி, கொண்டை,சுருள், குழல், பனிச்சை)  கூந்தலையுடைய  ஸ்த்ரீமார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

கவிபாடும் வன்மையில் மிகச் சிறந்தவரான நாமாந்தரிதை பிரேளிகைப் புகழ் முத்துக்குமாரரின் கவிதைகளைக் கேட்டுணர்ந்த அறிஞர்கள் பலரும் இவரைக் கவிராசர் என அழைத்ததில் எந்த அதிசயமும் இல்லை எனலாம்!

— subham—-

Tags- ஊர்-இடப்பெயர்,  நாமாந்திரிதை பிரேளிகை—3, சேனாதிராயர், நல்லூர் கந்தசுவாமி, மாவிட்டபுரம்

யார் ஹிந்து ? ஞான மொழிகள்-91 (Post No.11,086)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 11,086

Date uploaded in London – 7 JULY 2022          

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள்-91

உள்ளே புகுந்து நெய் குடிக்க முடியாமல் இருந்த போதிலும் அந்த நெய்

இருந்த பாத்திரத்தை எறும்புகள் சுற்றி நிற்கும். மறந்தாகிலும் அரைக்காசு கொடுக்காதவர்களாக இருந்தாலும் அவர்களை நூறு பேர் சுற்றிக்

கொண்டிருப்பார்கள்.

நாலடியார்

xxx

பேனுக்கு பயந்து யாரும் தலையை வெட்டி எறிவதில்லை.

பிச்சைகாரர்களுக்கு பயந்து யாரும் சமைக்காமல் இருப்பதில்லை,

மாடுகளோ, பறவைகளோ,பயிரை மேய்ந்து விடுகின்றன என்பதற்காக

குடியானவர்கள் பயிர்த்தொழிலை விட்டு விடுவதில்லை.

அது போல பழிக்கு பயந்து யாரும் நல்ல பணிகளை செய்வதை கை

விட்டு விடக் கூடாது.

பதஞ்சலி

Xxxx

தாய் , தந்தையர்க்கு பணிவிடை செய்பவர்கள்,பசித்தவர்க்கு உணவு

தருபவர்கள்,தோப்பு, கிணறு தண்ணீர் பந்தல் நிறுபவர்கள் ஆகியவர்கள்

சொர்க்கம் செல்கிறார்கள்.

பீஷ்மர்

Xxx

எது அழகு ???

பயிர்களை சுமந்து நிற்கும்போது நிலம் அழகு பெறுகிறது.

தாமரையை சுமந்து நிற்கும்போது குளம் அழகு பெறுகிறது.

நாணத்தை சுமந்து நிற்கும்போது பெண் அழகு பெறுகிறாள்.

அறத்தை சுமந்து நிற்கும்போது் ஆண் அழகு பெறுகிறான்.

நான் மணிக் கடிகை

Xxx

தமோ குணம் உடையவர்கள் யார்???

புத்தியை சரியாக உபயோகிக்காதவன்,கஞ்சத்தன்மை உடையவன்,

பிறரை கோபிக்கிறவன், உடைய ஒருவன் தமோகுணமுடையவன்.

மைத்ரீ உபநிஷதம்

Xxxx

பல நிறங்களை உடைய பசுக்களின் பால் ஒரே வெண்மையுடையதாக

இருக்கிறது.

அதுபோல

ஞானிகள் பலவகைப் பட்ட சரீரங்களை உடைய ஜீவர்களை ஒரே

அறிவு மயமானவர்களாக காண்கிறார்கள்.

பிரம்மபிந்து உபநிஷதம்

Xxxx

தேசம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் கோவில்கள் சிறப்படைய

வேண்டும்

கோவில்கள் சிறப்படைய வேண்டுமென்றால் வழிபாடுகள் சிறப்படைய

வேண்டும்

இந்து மதம்

Xxx

மூங்கில் மரத்தில் அழகிய இலைகள் அதிகமாக இல்லாமற் போனால்

அது வசந்த காலத்தின் குற்றமா?

ஆந்தைக்கு பகலில் கண்தெரியாமல் போனால் அது சூரியனின்

குற்றமா?

சாதகப்பறவையின் வாயில் நீர் விழாவிட்டால் அது மேகத்தின்

குற்றமா?

ஏற்கனவே விதி தலையில் எழுதியிருப்பதை அழித்துவிட யாரால் முடியும்?

பர்த்ரு ஹரியின் நீதி சதகம்

Xxxx

ஒரு பெரிய குளத்தில் நீராடுவதற்கு பல துறைகள் இருக்கின்றன.

நீராடுவதற்கோ, தண்ணீர் எடுப்பதற்கோ யாராக இருந்தாலும் எந்த

துறை வழியாக இறங்கின போதிலும் தண்ணீர்இருக்கும் இடத்திற்கு

செல்ல முடியும்.ஒருவனுடைய நீராடும் துறை நல்லது, மற்றவனுடைய நீராடும் துறை கெட்டது என்று சண்டை போடுவது வீண்.

அது போல நித்யானந்தமாகிய குளத்திற்கு செல்லும் துறைகளும் பல

உள்ளன. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட துறைகளில்

ஒவ்வொன்றாகும். இந்த துறைகளில் ஏதாவதொன்றின் வழியாக நேராக,

உறுதியான, பக்தியுடன் சென்றால், நீ நித்யானந்த தண்ணீரை அடைவது

நிச்சயம்.ஆனால் உன்னுடைய மதம் உயர்ந்தது மற்றவை தாழ்ந்தவை

என்று மட்டும் சொல்லாதே!

ஶ்ரீ ராம கிருஷ்ண பரம ஹம்ஸர்38

Xxx

யார் ஹிந்து ???

எவர் பாவம் செய்யும் மன் நிலையை அடக்கி அதை புண்ணிய காரியங்களை

செயவதில் ஈடுபடுத்தி வாழ்கின்றாரோ, தீயசக்திகளை ஆத்ம சக்தியால்

ஒடுக்கி சிறிதும் அச்சமின்றி வாழ்கின்றாரோ அவரே ஹிந்து ஆவார்.

கலிகா புராணம்

Xxxx

யார ஓங்காரத்தை தனது முக்கியமான மந்திரமாக கொண்டிருக்கிறாரோ,

மறு பிறவி என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எவருக்கு இருக்கிறதோ,

எவர் பசுவை தெய்வமாக மதிக்கின்றாரோ, நமத புண்ணிய பாரத பூமியின்

நன்மைக்கு தன்னை அர்ப்பணிக்கிறாரோ அவரே ஹிந்து ஆவார்.

மாதவ திக் விஜயம்

xxxx

ஹிந்து என்ற பெயர் தாங்கிய மனிதன் எந்த நாட்டை சேர்ந்தவனாலும்

அவன் எந்த மொழி பேசினாலும் அந்தக கணமே அவன் உங்களுக்கு

நெருங்கியவனாயும், இனுயவனாயும் ஆகி விட வேண்டும்.

ஹிந்து என்று பெயர் தாங்கிய மனிதனுக்கு ஏற்படும் துன்பம் உங்கள்

உள்ளத்தை வந்து தாக்கி உங்கள் மகனே துன்பப்படுவது போன்ற

உணர்ச்சியை உங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான்,

அப்போது மட்டும்தான் – நீங்கள் ஹிந்து ஆவீர்கள்.

ஸ்வாமி விவேகானந்தர்52

Xxxx

பிறப்பற்றவர், மாறுதலற்றவர், உருவமற்றவர், ஆனந்ததைக்கடந்தவர்,

எப்போதும் ஆனந்தமயமாக இருப்பவர், ஒன்றேயானவர், நிறைந்தவர்,

எல்லாவற்றிற்கும் மேலானவர்,குணங்களை கடந்தவர்,வித்தியாசமற்றவர்,

ஆசைகளைக்கடந்தவர்,பரம்பொருள் ஆகிய கணேசரை நாம்

வணங்குவோம்.

கணேச ஸ்தோஸ்திரம்

Xxx

உடல் அழிவதைப்போல ஆத்மா அழிவதில்லை.! அது மட்குடம்

உடையும்போது குடத்திலிருக்கும் காற்றும் ஆகாயமும் உடையாமல்

இருப்பது போன்றது.

வடலூர் வள்ளலார்

xxxx

செல்வம் என்பது வண்டிச்சக்கரம் போன்றது.மேலாகவும், கீழாகவும்

மாறி மாறி வரும்.அது நடுவில் நிலை பொருந்தி எவரிடமும் நிற்கவே

நிற்காது!

நாலடியார்

Xxx

தேடிவைத்த பொருளை தாங்களும் அனுபவிக்காமல்,பிறருக்கும்

கொடுக்காதவர்களும் இருக்கிறார்கள்.அவர்கள் வரப்போகும் ஏழேழு

ஜன்மங்களிலும் கண்ணால காணும் பாக்கியத்தை பெறாமல் வருந்தி

நாசமடைவார்கள்.

யோகி வேமன்னா

Xxx

நாம் தீய வழியில் ஈட்டும் பொருள் இந்த உலகில் ஆனந்தத்தை

கொடுக்கிறது.ஆனால் அதே பொருள் நம் மரணத்திற்குப் பிறகு

நாம் கொடும் துன்பங்களை அனுபவிப்பதற்கு காரணமாக

அமைகிறது.ஆகவே நிரந்தர ஆனந்தத்தை பெற விரும்புவர்கள் 68

தீய வழியில் பொருளை ஈட்டவே கூடாது.

மகரிஷி அத்ரி

Xxxx

பணம் இல்லாதவர்கள் பணம் சம்பாதிக்கப் பார்த்தால் அது முடியாத

ஒரு காரியமாகிறது.ஆனால் பணக்காரர் விஷயத்திலோ, எப்படி

காட்டில் ஒருயானையை பின்பற்றி பல யானைகள் போகின்றனவோ

அது போல பணத்தோடு பணம் சேர்கிறது.

மகா பாரதம்

To be continued……………………….

Tags – ஞான மொழிகள்-91

நடந்தவை தான் நம்புங்கள் – 22 (Post No.11085)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,085

Date uploaded in London – –    7 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நடந்தவை தான் நம்புங்கள் – 22

ச.நாகராஜன்

1

ஜான் ட்ரைடனின்  மனைவி

ஜான் ட்ரைடன் (John Dryden – 1631-1700) தனது மனைவியான லேடி எலிஸபத்துடன் அவ்வளவாக இணக்கமாக இல்லை. எலிஸபத்தின் சகோதரர்களின் வற்புறுத்தலினாலேயே அவரை அவர் மணம் செய்ய நேரிட்டது.

எப்போதும் புத்தகங்கள் படிப்பதிலும் எழுதுவதிலும் அவர் நேரத்தைச் செலவழித்து தன்னை அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை என்ற வருத்தம் எலிஸபத்திற்கு இருந்தது.

ஒரு நாள் அவர் ட்ரைடனிடம், “ட்ரைடன், எப்போது பார்த்தாலும் மக்கிப் போன அந்த பழைய புத்தகங்களையே எப்படி உங்களால் படித்துக் கொண்டிருக்க முடிகிறது. அந்த புத்தகங்களில் ஒன்றாக நான் இருந்தால் உங்களுடன் அதிக நேரம் இருப்பேனோ, என்னவோ” என்று கூறி அங்கலாய்த்தார்.

உடனே ட்ரைடன், மை டியர், நீ ஒரு புத்தகமாக ஆக வேண்டுமென்றால் பஞ்சாங்கமாக ஆகி விடு. அபோது தான் ஒவ்வொரு வருடமும் உன்னை மாற்றிக் கொண்டே இருக்க முடியும்” என்று பதில் கூறினார்.

    Source and Thanks :-Tpoic 51 Oxford Book for Literary  anecdotes by James Sutherland

2

உணவு பற்றாக்குறை பற்றிய மாநாடு

சமீபத்தில் உலகளாவிய ஒரு சர்வே எடுக்கப்பட்டது. ஒரே ஒரு கேள்வி தான் சர்வேயில் கேட்கப்பட்டது.

அது இது தான்:

தயவுசெய்து நீங்கள் உல்கில் மீதி இருக்கும் நாடுகளில் நிலவும் உணவு பற்றாக்குறைக்கான தீர்வு பற்றிய உங்களது நேர்மையான கருத்தைத் தர முடியுமா?

இந்த சர்வே உலகில் உள்ள நாடுகளுக்கெல்லாம் அனுப்பப்பட்டது.

ஆனால் அது படு தோல்வி அடைந்து விட்டது.

ஏனெனில்,

ஆப்பிரிக்காவில் அவர்களுக்கு “உணவு” என்றால் என்ன என்று தெரியாது.

கிழக்கு ஐரோப்பாவில்,அவர்களுக்கு “நேர்மை” என்றால் என்ன என்று தெரியாது.

மேற்கு ஐரோப்பாவில், அவர்களுக்கு “பற்றாக்குறை” என்றால் என்ன என்று தெரியாது.

சீனாவில் அவர்களுக்கு “கருத்து” என்றால் என்ன என்று தெரியாது.

மத்திய கிழக்கில், அவர்களுக்கு “தீர்வு” என்றால் என்ன என்று தெரியாது.

தென்னமெரிக்காவில்அவர்களுக்கு “தயவுசெய்து” என்றால் என்ன என்று தெரியாது.

அமெரிக்காவிலோ, அவர்களுக்கு “உலகில் மீதி இருக்கும் நாடுகள்” என்றால் என்ன என்று தெரியாது.

சர்வே என்றால் ஜாக்கிரதையாக பதில் சொல்ல வேண்டுமல்லவா?

தங்களுக்குப் புரியாத வார்த்தை கேள்வியில் இருந்ததால் யாரும் பதில் தரவில்லை.

சர்வே தோல்வியில் முடிவடைந்தது!

**

பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்!

உளவியலாளர் ஒருவர் தன் நண்பரிடம், ‘ஏன் இன்னும் நீ திருமணம் செய்து கொள்ளவில்லை?’ என்று கேட்டார்.

“அதுவா, அழகு, சாமர்த்தியம், படிப்பு எல்லாவற்றிலும் சிறந்த இளமையான பெர்ஃபெக்ட் பெண்ணை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது தான்…” என்று இழுத்தார்.

“சும்மா கதை விடாதே, ஏராளமான இளம் அழகிகளைப் பார்த்துக் கொண்டே இருக்கிறாய்? ஒருவரைக் கூடவா உனக்குப் பிடிக்கவில்லை” என்றார் உளவியலாளர்.

“ஒரு அழகியைப் பார்த்தேன். அவள் ஒருத்தி தான் நான் பார்த்ததிலேயே பெர்ஃபெக்ட். எனக்கு சரியான ஜோடி என்றால் அது அவளாகத் தான் இருக்க முடியும்” என்றார் நண்பர்.

“பின் என்ன, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே” என்றார் உளவியலாளர்.

“ஆனால் அவள் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் அல்லவா வேண்டும் என்கிறாள்!” என்றார் நண்பர்!

***

4

மனைவியுடனா

இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் ஒரு அனுபவஸ்தர் கூறுவது இது:

உங்கள் மனைவியுடன்  வாதாடுவது என்பது இண்டர்நெட்டைப் பயன்படுத்த முயலும் போது ‘TERMS OF USE’ஐப் படிப்பது போலத் தான்.

 (பேந்த பேந்த விழித்து விட்டு) கடைசி கடைசியாக “I AGREE” என்று சொல்லி விட வேண்டியது தான்!

***

tags- உணவு பற்றாக்குறை, ஜான் ட்ரைடன்

MY VISIT TO TIRUVARUR SHIVA TEMPLE (Post No.11,084)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,084

Date uploaded in London – –    6  JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

 I went to Tiruvarur Thyagaraja (Shiva) temple from Madurai by car on 27th May,2022 and returned to Vaitheeswaran koil for overnight stay. It was not my first trip to Tiruvarur. May be second or third trip after a gap of 60 years. When I was young my parents took me there. I was born very near in Kilvalur near Nagappattinam.

Tiruvarur temple is famous for 6 things:-

It has the biggest Ratha/ Car/ Chariot in Tamil Nadu; name of the Ratha is Aazi Ther.

It has one of the largest temple tanks called Kamala Alayam.

It has the Samadhi of Kamala Muni, one of the 18 Sidhdhas

It is the place where once Manu Neethi Choza ruled.

Is the place where God Shiva did many miracles for Saint Sundarar.

It is the place associated with Trinity of Carnatic Music- Thyagaraja, Muthu Swami Deekshitar and Sama Shastrigal.

Xxx

About the temple

It is located 45 kilometres from Thanjavur and 21 Kilometres from Nagappattinam.

The town is associated with lot of miracles. The huge temple has many different shrines. Two for Lord Shiva and two for Goddess Parvati

God Shiva here is called Vanmeekanathar (Vanmeeeka= Ant hill; related to Valmiki); another shrine is Thyagaraja or Thyakesa)

Goddess Parvati here is called Kamalambikai (Kamala + Ambika).

But the temple has three more shrines:-

TIRUVARUR ARANERI-  within the temple in second corridor (Prakaram). God Akileshwar; goddess Vandar Kuzali

TIRUVARUR PARAVAIYUN MANTALI- Is associated with Miss Paravai, one of the two wives of Saivite saints Sundarar. It is near the temple Chariot. God is known as Thoovaaya nathar, Goddess is known as Panjin Melladi Ammai. This is known as Paravai Nachiar Temple

(Tamil word Thali/shrine came from Sthala in Sanskrit; English word Temple came from Tamil word Ambala)

Inside the main temple is Alliam kothai , another goddess ; Kamalambal has a separate shrine, separated from the main shrine.

Two popular gods in the temple are

Goddess Raja Durga- people born under the stars Chitra and Hastham come here for special blessings; considered to be a goddess who readily fulfils the requests (demands) of her devotees.

Another popular god is Ganesh known as Maatru Uraiththa Pillayar, associated with Saivite saint Sundarar.

Xxx

Details in bullet points:

The gods here are sung and sanctified by Appar/Tiru Navukkarasar, Sambandhar and Sundarar. Manikavasagar’s Thiruvasagam mentioned the temple.

It is one of the Pancha Bhuta Sthalas representing Prithvi (earth); pancha- five; bhuta- elements; sthala- shrine.

It is one of the Sapta Vidanga Sthalas- meaning one of the seven shrines where statue/idol appeared on its own. (Vi Danga- not sculpted with chisel; un chiselled idol).

Pathiri (Patali) tree is the Sthala Vrksha

Temple is also called Tiru mula sthanam- meaning the original shrine- that is older than Chidambaram

Xxx

MIRACLES

Lord Shiva helped the Saivite saint Sundarar in many ways; HE went to ask the hand of Miss Paravai for his devotee Sundarar.

Sundarar is associated with TIME TRAVEL and TELE TRASPORTATION. (see my old articles). Sundarar deposited some gold in the Manimutar River in far away Vridhdhachalam and revered the gold from the tank Kamalalayam here. He tele transported the gold!

Sundarar listed all the Saivite saints in his hymn Tiru Tondar Tokai and that happened here in the 1000 Pillar Mandapa (probably the mandapa came later in that place); This hymn was the basis of another great book called Periya Purana composed by poet Sekkizar.

Nami Nandhi, a Saivite saint, lighted the lamp of water here. When he ran out of  oil, he lit the lamp of water.

Other saints such as Seraman Perumal, Viran mindar, Seruthunai Thandi, Kazarsingan (all Naayanaars) are associated with this town.

A Choza king who followed Manu Smrti in letter and spirit was Manu Neethi Choza. When his son crushed a calf under the wheels of his speeding chariot, the cow came to the palace and rang the Calling Bell; immediately the king came out and found out the blunder. Immediately he asked his son to lie on the road and ran over the chariot on him. But Lord Shiva, appreciating his honesty revived both the calf and his son. The incident is sculpted here near East Tower.

(Calling Bells in Palaces- Hindu kings of South and North India used to hang a huge bell in front of the palace. Anyone with a grievance can go there and ring the bell. This calling Bell method is unique to Hindu India)

Another miracle is that Saint Sundarar, who lost vision in one of his eyes, regained it here.

There is a cave inside the temple known as Naga Bilam.In the olden days devotees used it as a short cut to reach the feet of God. So Indra closed it. The place known Adakeswaram is inside the temple.

Nine tall towers, 24 sub shrines,86 Ganesh statues and 365 Sivlingas add more glory to the temple.

Two Choza kings revived the Saivite Hymns Thevaram from Tiruvaur.

Nava Grahas (Nine heavenly bodies) in temples normally face in different directions. But here all the nine are facing one direction.

There are two sayings in Tamil:

Thiruvarur Ther Azaku (Tiruvarur became famous because of the beauty f its Ratha)

Kovil/temple, Kulam/Tank, Senkazu Neerodai/another tank- each measures five VELIS.

A Veli is equal to 6-67 acres.

This means all the three are equally huge in size.

The feeling one gets after visiting Tiruvarur is that it is  combination of several temples.

( I saw even huge Mahavira (or Buddha??) statue while I was passing from one shrine to another)

–Subham–

 Tags- Tiruvarur, Temple, Thyagaraja, Vanmeekanathar, Kamalalayam Tank, Kamala Muni, Carnatic Trinity

ஈழத்துப் பாவலர்கள் இயற்றிய ஊர்-இடப்பெயர் கவிதைகள் (Post.11,083)

WRITTEN BY B. KANNAN

Post No. 11,083

Date uploaded in London – –    6  JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஊர்-இடப்பெயர் நாமாந்திரிதை பிரேளிகை–3

      Written By B.KANNAN, NEW DELHI

அன்புள்ளத் தமிழ் நெஞ்சங்களுக்கு கண்ணன் அநேக நமஸ்காரம்.

இந்தப் பகுதியில் ஊர்ப்பெயர், இடப்பெயர் ஆகியவற்றைக் கொண்டு எப்படி ஈழத்துப் பாவலர்கள் அரிய விஷயங்களைத் தெள்ளத் தெளிவாக நாமாந்திரிதை அணி மூல மாக எடுத்திக் காட்டியுள்ளார்கள் என்பதைப் பார்க்கப் போகிறோம்.

குறளில் நவக்கிரகங்கள்

சங்கக் காலத்துக்குப் பின் வந்த புலவர்கள் பல பிரபந்தங்கள் இயற்றியுள்ளனர். அவைகளில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி ஆகிய நாற்கவிகளுள் சித்திரக்கவி பாடுவதும், அதற்கு உரை வகுப்பதும் கடினமான காரியமாகும் எனும் தமிழ்த் தாத்தா உ.வே.சா. திருவையாறு ஆசுகவி ஜனாப் அப்துல் கபூர் சாஹிப் அவர்களின் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறார். சேது சமஸ்தானக் கவிஞர் ரா.ராகவையங்கார் ஒருமுறை இவரிடம், காளமேகப் புலவர் 12 ராசியும் வரிசையா கத் தளை தட்டாமல் ஒரு வெண்பாவில் பாடியது போன்று இயற்ற முடியுமா என வினவினார். அதற்கு சாஹிபு அவர்கள் 15 சீர் கொண்ட வெண்பாவில் 12 ராசியைப் பாடுவது பெரிதல்ல, 7 சீருள்ளக் குறள் வெண்பாவில் 12 ராசியையும் அமைத்துப் பாடுகிறேன், கேளுங்கள் என்றார்.

அந்தக் குறள் இதோ….

  ஆடுசே வீணை அலவனரி பெண்டுலைதேள்

  நீடுவிற்சு றாக்குடமீ னே.

(ஆடு=மேஷம், சே=எருது, ரிஷபம், வீணை=மிதுனம், அலவன்=நண்டு, கடகம், அரி=சிம்மம், பெண்=கன்னி, துலை=துலாக்கோல்,தராசு, தேள்=விருச்சிகம், நீடுவில்= நீண்ட தனுசு, சுறா= மகரம், குடம்=கும்பம், மீன்=மீனம், ஏ= எனும் ராசிகளின் பெருமை கேளீர் )

இப்படி எல்லாரது மனதையும் கவர்ந்தவர் தனது சித்திரக்கவி மாலை நூலில் நாமாந்தரிதை பிரேளிகை அணியில் பாடல் இயற்றாமல் விட்டது வருத்த மளிக்கிறது.

ஈழத்தில் சித்திரக்கவிகளைப் பாடியோராக மிகவும் பிரபலமானவர்கள், அரசகேசரி, முத்துக்குமார கவிராசர், சேனாதிராய முதலியார், மயில்வாகனப் புலவர், நமச்சி வாயம் பிள்ளை, ஈழத்து தமிழ்த் தாத்தா என அறியப்படும் கந்தமுருகேசனார் என்று பட்டியல் நீளும்..

.கந்த முருகேசனார்

கந்தமுருகேசனார் ஆறுமுக நாவலர் மீது பாடிய நல்லை நாவலன் கோவை நூலில் உள்ள 492 பாடல்களுள் சித்திரக்கவிகளும் அடங்கியுள்ளன. அவற்றில்அநேகமானவை பிரேளிகை வகையைச் சார்ந்தவை. அவற்றுள் ஒன்று…. செவிலிப் பெண் தரையின் மீது தலைவன்-தலைவியோருடையக் கால் அழுந்தியக் குறியைக் கண்டு வருத்தத் துடன் கூறுவதாக அமைந்த பாடல்

  நாலடி கண்டனன் முன்னினி வள்ளுவர் நாட்டமுற்றேன்

  ஆலடி யாகம நால்வர்க் குரைவளை யாபதியின்

  நாலடி தோய்நா வலனலை யேழை நறுங்தொடைறோண்

  மேலடி வைப்பப் புகுங்கொல மூவர் வியனிலைக்கே (383)

பதவுரை- முன் நாலடி கண்டனன்=அவர்கள் சென்ற பாதையில் முதலில் நான்கு அடிச்சுவடுகள் பார்த்தேன், இனி வள்ளுவர் நாட்டம் உற்றேன்= இப்போது பொய்யா மொழிப் புலவரின் குறள் அடி போல் இரண்டு அடிச்சுவடு மட்டுமே காண்கிறேன், வளை ஆல் அடி நால்வர்க்கு ஆகமம் உரை=வளைந்து நிழல் தரும் கல்லால மரத் தின் கீழ் முனிவர்கள் நால்வருக்கு ஆகமப் பொருள் போதிக்கும்,

ஆ பதியின் நால் அடி தோய் நாவலன் நல்லை=ஆன்மாக்களுக்குத் தலைவனான ஈசன் அருளிய நாற்பாதங்களில் நனைந்த நாவலர் பிரானின் நல்லூரைச் சேர்ந்த வளான, நறும் தொடை ஏழை=நறுமணம் வீசும் மலர்மாலை அணிந்த என் மகள், அ மூவர் வியன் நிலைக்கு=அப்பாலை நிலத்தின் கண், (அடி, தோள்), மேல் வைப்ப புகும் கொல்=காலைத் தோள் மேல் வைத்துச் சென்றிருப்பாளோ?

இச்செய்யுளில் நாலடி, வள்ளுவர், வளையாபதி என்பன நாமாந்தரிதை அணியில் அமைந்துள்ளன. நாலடி=நாலடியார், வள்ளுவர்=திருக்குறள், ஐம்பெருநாப்பியங்களுள் ஒன்றான வளையாபதி.

நாற்பாதம்=சரியை, கிரியை, யோகம் ஞானம் நாலடியார்ப் பெயரில் அந்தரிதையானது, தலைவன் அடி இரண்டும், தலைவியின் அடிச்சுவடு இரண்டுமான நான்கு குறளில் மறைத்து வைக்கப்பட்டது.

முதலில் நான்கு பாதச் சுவடுகளைக் கண்ட செவிலி சற்று முன்னே சென்று இரண்டு அடிகளை மட்டுமே பார்க்கிறாள்.அதுபற்றி அவளுக்கு எழுந்த எண்ணம், மற்ற இரு சுவடுகளுக்கான தலைவியை தன் மீதே வைத்துச் சென்றிருக்க வேண் டும் என்பதாம். சுட்டுப் பொசுக்கும் பாலை நிலத்தில் கால் வைக்க முடியாமல் தவித்துச் செல்லுதலை வேடிக்கையாக இப்படிக் கூறுவது வழக்கம்–காலைத் தோளில் வைத்துச் செல்வது என்று! 

அ மூவர்==அயன், அரன், அரி மூவருமே வியக்கும் வண்ணம், கால் பதித்தால் சுட்டெரிக்கும் அந்தப் பாலை நிலத் தரையின் மேல் பாவையை அடியெடுத்து வைக்க விடாமல் காதலால் கட்டுண்டத் தலைவன் தன்னுடையவளைத் தோளில் தாங்கிச் சென்றான் என்கிறார் பாவலர். இதுவே மற்ற இரு சுவடுகள் “குறளு” க்குள் (நாலடி சிறுத்து ஈரடியாக) மறைந்து விட்டதற்கானக் காரணமாம்!

ஞானம் போதித்த ஈசன் அமர்ந்திருக்கும் நல்லூர் தலத்தைச் சேர்ந்த நற்பண்புள்ளப் பெண் என்மகள் என்றும் மறைமுகமாக செவிலி கூறுவதாக அமைந்துள்ளது பாடல்.

மல்லாகம் நமச்சிவாயம் பிள்ளை

யாழ்ப்பாணத்து மல்லாகம் நகரம் தமிழ்ப் புலவர் பலருக்குத் தாயகமாய் விளங்கி யுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கவர் குலநலம், குணநலம், குடும்ப நலம் மற்றும் அறிவு நலமும் வாய்க்கப் பெற்ற புலவர் நமச்சிவாயம் பிள்ளை அவர்கள். அவர் இயற்றிய “ஊர்ப்பெயர் உட்பொருள் விளக்கம்” எனும் நூல் ஈழத்தின் வடமாகாண–சிறப்பாக குடா நாட்டின் ஊர்ப்பெயர்களைச் சிலேடைப் பொருளில், நாமாந்தரிதை

அணியில் தொடர்புபடுத்திச் சைவசமய உட்பொருளை 27 பாடல்களில் 172 ஊர்-இடப்பெயர்களில் பொதித்து வைத்துள்ளார்.

உ.ம். சுன்னாகம் என்ற ஊர்ப்பெயர் மகேசனின் இருப்பிடமான  வெள்ளியங்கிரி-கைலை மலையைக் குறிக்கும்.

சுன்னம்+அகம்= வெண்ணிறச் சுண்ணாம்பு (பனி படர்ந்த) வீடு.  அல்லது சுல்=வெள்ளி, நாகம்= மலை என்றும் கூறலாம், மாதகலான்= உமையொருபாகனான பரமேஸ்வரன் (மாதகல் எனும் ஊர்ப்பெயர் அடங்கியுள்ளது- பாடல் 2), மட்டுவில்லான்= காமபானத் தால் மதியை அலைக்கழிக்கும் கரும்பு வில் உடைய மன்மதன், மட்டு=காமபானம் மட்டுவில் என்பது இடப்பெயர்.

சில பெயர்களுக்கு அடைமொழியிட்டும், பால் காட்டும் ஈறுகளையும், வேற்றுமை உருபுகளை இணைத்தும்,வேறு சிலவற்றைப் பிரித்திசைத்தும், திரித்து வழங்குவதன் மூலமும் இவ்வகைப் பொருள்களைக் கண்டுணரலாம். இதோ மாதிரிக்கு ஒன்று……

   தாவப்பலாலிகொணீர் வேலியார்படி தாவடியான்

   மாவைப்புரிமுகமாலயன் றேடும்வயவையன் பிற்

   போயிட்டியையுறுவார்க்கு நல்லூரைப் புரிவன் மண்டை 

   தீவைத்தெரிக்குமுன்னே யொட்டகப் பொலந்தீத்துய்யவே  (11)

மகாவிஷ்ணுவும், பிரமனும்தேடுகின்ற மகேசன், பக்தியுடன் சிவதருமங்களைச் செய்பவர்களுக்குச் சிவலோகப் பிராப்தி அடையச் செய்வார். ஆகையால் மனமே மரணம் சம்பவிக்கும் முன் புலன்களை அடக்கிப் புண்ணியங்களைச் செய்து பிழைத்துக் கொள் என்பது இதன் பொது கருத்து.

பதவுரை: தாவு அபல்=பலவிடத்திலிருந்துப் பாய்ந்து வருகின்ற ஆலி=மழை நீரை, கொள்=தன்னுள் அடக்குகின்ற, நீர்வேலி ஆர் படி தரவு அடியான்=சமுத்திரம் எனும் வேலியால் சூழப்பட்ட பெரிய பூமியை ஓரடியாய் அளக்கும் பாதங்களை உடைய வராகிய, பாவைப்புரி முகமால்=ஶ்ரீதேவியை விரும்புகின்ற முகப்பொலிவையுடைய விஷ்ணுவும், அயன்=பிரமனும், தேடும்=தேடுகின்ற, வயஜ= வலிமை வாய்ந்த சிவ பெருமான், அன்பிற்போய்= மனதில் பக்தியுடனே சென்று, இட்டு இயையுறு னர்க்கு=சிவனைப் போற்றும் சிவனடியார்களுக்கு, நல்லூரைப்புரிவன்=சொர்க்கத்தைக் கொடுக்க விரும்புவர், மண்டை தீவைத்து எரிக்குமுன்=தலையைச் சிதையிலிட்டு எரிப்பதற்கு முன்னரே, அகம்=மனமே, புலந்தீத்து உய்ய=ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் பொருட்டு, ஒட்டு= பெருமானிடம் சரணடைவாய்.

இப்பாடலில், பலாலி, நீர்வேலி, தாவடி, மாவிட்டபுரம் (மாவை), முகமாலை, வயா விளான், போயிட்டி, நல்லூர், மண்டைதீவு, ஒட்டகப்புலம் ஆகிய ஊர்ப்பெயர்கள் மறைந்து நிற்பதைக் காணலாம்.

To be continued………………………………………………….

ISBN அதிசயம்! (Post No.11,082)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,082

Date uploaded in London – –    6 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ISBN அதிசயம்!

ச.நாகராஜன்

ISBN என்பது International Standard Book Number என்பதின் சுருக்கம்.

இது 13 எண்களைக் கொண்ட ஒரு எண். இதன் மூலம் நீங்கள் விரும்பும் புத்தகத்தைக் குறிப்பது சுலபம். இந்த எண்ணை மட்டும் குறிப்பிட்டு, புத்தகத்தை உலகளாவிய விதத்தில் வாங்குவதும் சுலபம்.

இது 2006  முடிய 10 எண்களை மட்டுமே கொண்டிருந்தது.

2007 ஜனவரி முதல் தேதி முதல் 13 எண்களைக் கொண்ட நம்பர் ஆனது.

இப்போது 13 எண்கள் கொண்ட ISBN நம்பரையே நாம் குறிக்க வேண்டும்.

10 எண்கள் கொண்ட நம்பர் மட்டுமே இருந்தால் ISBN தளத்திற்குச் சென்று அதற்கான 13 எண் நம்பரைப் பெறலாம்.

இந்த 13 எண்கள் புத்தகத்தை வெளியிட்டவர் யார், புத்தகத்தின் தலைப்பு என்ன, எந்த மொழியில் அந்தப் புத்தகம் உள்ளது, எப்போது அது வெளியிடப்பட்டது, அது எத்தனையாவது பதிப்பு என்ற விவரங்களைத் தரும்.

அது ஒரு பத்திரிகையா, கல்வி சம்பந்தமான இதழா, அல்லது வேறு எதாவது ஒரு இதழா போன்ற அனைத்து விவரங்களையும் இந்த எண் மூலம் சுலபமாக அறிந்து விட முடியும்.

ISBN இல் 10 எண்ணுக்கும் இப்போது நடைமுறையில் உள்ள 13 எண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

முதலில் வருகின்ற மூன்று எண்கள் 978 அல்லது 979 என்பதைக் கொண்டிருக்கும்.

ஏராளமான புத்தகங்கள் உலகளாவிய விதத்தில் பிரசுரமாவதை ஒட்டி இந்த ஒரு சிறிய மாறுதல் ஏற்படுத்தப்பட்டது.

ஆக ISBNஇல் உள்ள 13 இலக்க எண் ஐந்து முக்கிய விஷயங்களை உடனே கண்டு பிடிக்க உதவுகிறது.

  1. முதல் மூன்று எண்கள் – 978 அல்லது 979
  2. பதிவுக் குழு பற்றியது : எந்த நாடு, அல்லது எந்த பூகோளப் பகுதி, மொழி என்ன,  உள்ளிட்ட விவரங்களை ஒன்று முதல் 5 இலக்கங்கள் வரை கொண்டிருக்கும்.
  3. பதிவு பற்றிய விஷயம் -இது எந்த பதிப்பாளர் என்பதைக் குறிக்கிறது. 7 இலக்கம் வரை இது இருக்கலாம்.
  4. பிரசுரம் பற்றிய விஷயம். எது எத்தனையாவது பதிப்பு, தலைப்பு என்ன என்பதைத் தரும். இது 6 இலக்கம் கொண்டதாக இருக்கலாம்.
  5. சரிபார்க்கும் எண் _ இதுதான் கடைசி ஒற்றை இலக்க எண். அதாவது 13வது எண். இது கணித இயல் படி நீங்கள் விரும்பிய புத்தகத்தின் எண் இது தான் என்பதைச் சரியாகச் சொன்னீர்களா என்பதைச் சரி பார்க்கும்.

சரி, இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேள்வி எழுவது இயல்பே!

என்ன என்று பார்க்கலாம்.

ஒருவர் ஒரு புத்தகத்தை வாங்க ஆர்டர் செய்கிறார். ஆனால் அவசரத்தில் ஒரு எண்ணைத் தப்பாகப் பதிவிட்டு விடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது வாங்க நினைத்த புத்தகத்திற்குப் பதிலாக தப்பான புத்தகம் வந்து சேர்ந்து விடுமா? வராது.

ஏன்? அதில் தானே சரிபார்க்கும் ஒரு எண் ரகசியம் உள்ளது.

ISBN Digit0521427061Total
When Multiplied0106420124905410165
ISBN Digit1862307369Total
When Multiplied11618815049245450275
ISBN Digit0486256642Total
When Multiplied082424103042483620242

மேலே தரப்பட்ட ISBN எண்களைக் கூர்ந்து கவனியுங்கள்.

முதல் வரிசையில் 10 இலக்க எண் உள்ளது. அடுத்த வரிசையில் உள்ள இலக்க எண்கள் அந்த இலக்கம் எத்தனையாவது இலக்கமோ அதைக் கொண்டு மேலே உள்ள எண்ணைப் பெருக்கி வருவதாக அமைந்திருக்கிறது.

எடுத்துக் காட்டு முதல் இலக்கம் 0. 0ஐ முதல் இலக்கமான 1ஆல் பெருக்கினால் வருவது 0.

அடுத்த இரண்டாவது இலக்க எண் 5. இது இரண்டாவது இலக்கமாக இருப்பதால் இரண்டால் 5ஐப் பெருக்கினால் வருவது 10.

அடுத்த  மூன்றாவது இலக்க எண் 2. இது மூன்றாவது இலக்கமாக இருப்பதால் மூன்றால் 2ஐப் பெருக்கினால் வருவது 6.

இப்படியே 10 இலக்க எண்களையும் பெருக்கியதை இரண்டாவது வரிசையில் பதிவிட்டு, பின்னர் அந்த எண்களைக் கூட்டினால் வரும் தொகையான 165 பதிவிடப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது வரிசையில் உள்ள 0+10+6+4+20+12+49+0+54+10 = 165.

இரண்டாவது மற்றும் மூன்றாவது டேபிள்களில் வரும் கூட்டுத் தொகை முறையே 275 மற்றும் 242.

இதில் உள்ள அதிசயம் என்னவெனில் 165, 275, 242 இவை 11 என்ற எண்ணால் வகுபடக் கூடிய எண்களே.

ஆக ISBNஇல் நீங்கள் எந்த 10 இலக்க எண்ணைப் போட்டாலும் இப்படிக் கூட்டுத் தொகை 11ஆல் வகுபடக் கூடியதாகவே அமைந்திருக்கும்.

ஒருவர் ஒரு எண்ணைத் தவறாகப் பதிவிட்டு விட்டால் இந்தக் கூட்டுத்தொகை 11ஆல் வகுபடாது.

உடனே கம்ப்யூட்டரே உங்களை நீங்கள் பதிவிட்ட எண்ணைச் சரிபார்க்கச் சொல்லி சரியான எண்ணைக் கேட்கும்.

இரண்டு எண்களை ஒருவர் தவறாகப் பதிவிட்டு விட்டாலும் கம்ப்யூட்டர் உடனே அதைக் கண்டுபிடித்து சரியான எண்ணைத் தாருங்கள் என்று கேட்கும்!

சரி, 13 இலக்க எண்ணுக்கும் இது பொருந்துமா, பொருந்தாது!

13 இலக்க எண் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கூட்டுத் தொகை பத்தால் வகுபடக் கூடியதாக மாற்றப்பட்டு அமைக்கப்பட்டது.

ஒரு 13 இலக்க ISBN எண்ணை நீங்களே இந்த முறையில் சரி பார்க்கலாம்.

இது CODE எனப்படும் குறியீட்டு கணித மாயாஜாலத்தால் அமைக்கப்பட்ட முறை.

  The Number Mysteries என்ற அருமையான புத்தகத்தில் கணிதப் பேராசிரியர் Marcus Du Sautoy இதை அற்புதமாக விளக்கி இருக்கிறார்.

அதனால் இது எனக்குத் தெரிய வந்தது.

இப்படி CODE எனப்படும் குறியீட்டு கணித மாயாஜாலம் சுமார் 5000 ஆண்டுகளாக வெவ்வேறு முறையில் உலகெங்கும் இருந்து வந்திருக்கிறது.

அவற்றை இன்னொரு கட்டுரையில் பார்ப்போம்!

நன்றி : Marcus Du Sautoy – The Number Mysteries

***

tags – ISBN எண்

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 63 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம் (Post No.11,081)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,081

Date uploaded in London – –    5 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பகவத்கீதை சொற்கள் இண்டெக்ஸ்- 63 ; கீதை மூலம் ஸம்ஸ்க்ருதம்

விவஸ்வதே  4-1 விவஸ்வானுக்கு

விவஸ்வான்  4-1 சூரியன்

விவிக்த தேச ஸேவிதம் 13-10 தூய்மையான தனி இடத்தில்  நாட்டம்

விவிக்த ஸேவி  18-52 தனிமையை  நாடியவனாய் 

விவிதைஹி 13-4 பல வழிகளில் , பலவிதமாக

விவிதாஹா  17-25 பற்பல , பல வகைப்பட்ட

விவ்ருத்தம் 14-11 மேலிட்டுள்ளது / அதிகரித்தது

விவ்ருத்தே  14-12 மேலி ட்டபோது

விசதே 18-55 புகுகின்றான் 

விசந்தி 8-11 புகலிடமாய் அடைகின்றனரோ

விசாலம் 9-21 பரந்த

விசிஷ்டாஹா  1-7, முக்கியமான ,  தலை சிறந்த

விசிஷ்யதே  3-7 சிறப்பு அடைகிறான் , சிறந்தவன்

விசுத்தயா 18-51 பரி சுத்தமான, தூய்மையான

விசுத்தாத்மா 5-7 தூய மனம் படைத்த

விச்வதோ முகம் 9-15 எங்கும் முகமுடைய விராட ரூபியான

விச்வதோ முகஹ  10-33 எங்கும் முகமுள்ளவனும்

விச்வமூர்த்தே 11-46 எங்கும் நிறைந்த

விச்வரூப  11-16  உலக வடிவானவனே

விச்வஸ்ய  11-18 உலகத்திற்கு /பிரபஞ்சத்தின்

விச்வம்  11-19  உலகத்தை

விச்வே தேவா 11-22 ருத்ரர் முதலிய எல்லா தேவர்களும்

விஷமே  2-2  இந்தச் சிக்கலான நிலையில்

விச்வேஸ்வர  11-16  உலகிற்கு இறைவா

விஷய பிரவாலாஹா 15-2 விஷயமாகிய தளிர்விட்டு

விஷயான் 2-62  பொருட்களை , விஷயங்களை

விஷயாஹா 2-59  பொருள்கள்

விஷய இந்த்ரிய ஸம்யோகாத் 18-38 புலன்கள்- பொறிகளின் கூட்டுறவால்

விஷம் 18-37 – நஞ்சு , விஷம்

விஷாதம்  18-35 மனக்  குழப்பம்

விஷாதி  18-28 தன்னம்பிக்கை இழந்தவன்

விஷீதன் 1-27 விசனம் அடைந்து, துக்கம் உற்று

விஷ்டப்ய 10-42  தாங்கி

விஷ்டிதம்  13-17  நிலையாக விளங்குகிறது

விஷ்ணுஹு 10-21 காக்கும் தொழில் உடைய, எங்கும் வியாபித்த

விஷ்ணோ  11-24 ஓ விஷ்ணு

விஸர்கஹ  8-3 தியாக ரூபமான யக்ஞம்

விஸ்ருஜன் 5-9  விட்டாலும்

விஸ்ருஜாமி 9-7 உற்பவிக்கச் செய்கிறேன்

விஸ்ருஜ்ய  1-47  எறிந்துவிட்டு

விஸ்தரசஹ  11-2 விரிவாக

விஸ்தரஸ்ய  10-19 விளக்கமாக, விரிவாக

விஸ்தரேண 10-18 விளக்கமாக, விரிவாக

விஸ்தாரம் 13-30  விரிவாகப் (பெருகுவது)

விஸ்மயஹ 18-77 ஆச்சர்யத்துடன் , வியப்புடன்

விஸ்மயா விஷ்டஹ 11-14 பெரு வியப்படைந்து

விஸ்மிதாஹா 11-22 ஆச்சர்யத்துடன் , வியப்புடன்

விஹாய 2-22 களைந்து விட்டு

விஹார சய்ய ஆஸன போஜனேஷு  11-42 விளையாடுகையிலோ , படுக்கையிலோ ,உட்கார்ந்து  யிருக்கை யிலோ , சாப்பிடுகையிலோ

விஹிதாஹா 17-23 சிருஷ்டிக்கப்பட்டன

வீக்ஷந்தே 11-22  பார்க்கிறார்கள்

வீத ராக பய க்ரோதஹ 2-56 பாசம், பயம், கோபம் ஆகியன இல்லாமல்

வித ராகாஹா  8-11 பற்றுதல் இன்றி

வீர்யவான் 1-5 பலசாலியான

விக்ரோதரஹ 1-15 பீமன் / ஓநாய் வயிறு படைத்த / பசி மிகுந்த

வ்ருஜினம் 4-36 பாவத்தையும்

வ்ருஷ்ணீனாம் – 10-37 வ்ருஷ்ணி/ யாதவ  குலத்துதித்த

வேகம்  5-23 மனக் கிளர்ச்சி

வேத்தா 11-38  யாவும் அறிந்தவன்

வேத்தி  2-19  உணர்கின்றானோ

வேத்த  4-5  அறிதல்

வேத  2-21  அறிகின்றானோ

வேத யக்ஞா அத்யனைஹி 11-48  வேதம் கற்பதாலும் யாகம் செய்வதாலும்

63  WORDS ADDED FROM PART 63 OF GITA WORD INDEX

xxx

tags- BhagavadBhagavad-Gita, Tamil word Index, Part 63

ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!! (Post No.11,080)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,080

Date uploaded in London – –    5 JULY 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஃபெர்மி பாரடாக்ஸ்! ரஸ்ஸல் பாரடாக்ஸ்!!

 

ச.நாகராஜன்

ஃபெர்மி பாரடாக்ஸ் என்றால் என்ன?

1950ஆம் ஆண்டு ஒரு நாள்.

நொபல் பரிசு பெற்ற பிரபல அணு இயற்பியல் விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Nuclear Physicist Enrico Fermi)  லாஸ் ஆல்மாஸ் நேஷனல் லாப்-இல் தன் சகாக்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது பேச்சுவாக்கில் அவர் நியூயார்கர் இதழில் அயல்கிரக்வாசிகளைப் பற்றி வந்த செய்தி அறிக்கையின் அடிப்படையில் வெளிவந்த கார்ட்டூனைப் பற்றிப் பேச ஆரம்பித்த போது ஒரு கேள்வியைக் கேட்டார்.

அவர்கள் எல்லாம் எங்கே? என்று கேட்டார் அவர்.

கோடிக் கணக்கான நக்ஷத்திரங்கள் வானிலே ஜொலிக்கின்றன. அவற்றைச் சுற்றி ஏராளமான கிரகங்கள் உள்ளன.

இவையெல்லாம் பற்பல கோடி ஆண்டுகள் பழமையானவை. அப்படியானால் பூமி போன்ற ஒரு கிரகம் அங்கு இருக்க வாய்ப்பு உண்டு. நம்மை விட முன்னேறிய நாகரிகங்களும் நம்மை விட தொழில்நுட்பத்தில் மேலான நிலையைக் கொண்டுள்ள அதி நவீன அயல்கிரகவாசிகளும் இருக்கக் கூடும்.

அப்படியானால் அவர்கள் எங்கே? ஏன் இன்னும் ஒருவர் கூட பூமிக்கு வரவில்லை?

இது தான் அவர் கேட்ட கேள்வி.

அயல்கிரகவாசிகள் இருப்பது நிச்சயம் என்றாலும் அவர்களில் ஒருவரைக் கூட ஏன் நாம் இன்னும் பார்க்கவில்லை என்ற முரண்பாடு – பாரடாக்ஸ் – Paradox – அவர் பெயரால் வழங்கப்படலாயிற்று.

அவர் கிடுகிடுவென்று சுமாரான ஒரு கணிதத்தைப் போட்டுப் பார்த்தார். பிரபஞ்சத்தில் மனித இனம் தோன்றி தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தைக் கணக்கிட்டுப் பார்த்த அவர், பூமியில் இவ்வளவு காலம் கழிந்த நிலையில் ஒரு அயல்கிரகவாசியாவது வந்திருக்க வேண்டுமே, ஏன் ஒருவரைக் கூட நாம் இன்னும் பார்க்கவில்லை என்றார்.

அவரது இந்த முத்திரை கேள்வி தான் ஃபெர்மி பாரடாக்ஸ் ஆயிற்று!

அடுத்து ரஸ்ஸல் பாரடாக்ஸ் பற்றிப் பார்ப்போம்!

ரஸ்ஸல் பாரடாக்ஸ்!

தர்க்கம் மற்றும் கணிதத்தில் பிரபல மேதையான ரஸ்ஸல் கூறிய ஒரு வாக்கியம் உலகப் புகழ் பெற்ற வாக்கியமாக ஆகி விட்டது.

இது ரஸ்ஸல்’ஸ் பாரடாக்ஸ் ( Russell’s Paradox) அதாவது ரஸ்ஸலின் முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது.

ஒரு நாவிதர், தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்ளாதவர்களுக்கு மட்டுமே ஷேவ் செய்து விடுவார். அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்கிறாரா?

(There is a barber who shaves precisely those people who don’t shave themselves. Does he shave himself?)

இது தான் அவரது வாக்கியம்!

அந்த நாவிதர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்பவராக இல்லை எனில், இப்போது அவரது விதியின் படி அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்ள வேண்டும்.

அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்பவர் என்றால், அவரது விதியின் படி அவர் தனக்குத் தானே ஷேவ் செய்து கொள்ளக் கூடாது!

அவர் தனக்குத் தானே ஷேவ் செய்பவராக இருந்தாலும் சரி, அதே சமயம் அவர் ஷெவ் செய்து கொள்ளாமல் இருந்தாலும் சரி இந்த இரண்டும் தர்க்க ரீதியாக சரிப்பட்டு வராது.

அதனால் தான் ரஸ்ஸலின் முரண்பாடு என்று அழைக்கப்படுகிறது.

இது கணிதத்தில் உள்ள ‘sets’ or grough of things ஆகியவற்றுக்கு நிகராகச் சொல்லப்படுகிறது.

அவர் set theoryயில் ஒரு புது வித setஐக் கண்டு பிடித்தார். அது கணித ரீதியாக சரி என்றாலும் கூட நாவிதர் பாரடாக்ஸ் போல தர்க்க ரீதியாக ஒத்து வராத ஒன்று.

இதனால் அவர் ரஸ்ஸல் பாரடாக்ஸ் மூலம் புகழப் படுகிறார்!

***

tags- பெர்மி பாரடாக்ஸ், ரஸ்ஸல் பாரடாக்ஸ்,