Pictures are taken from various sources for spreading knowledge;
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us.
லண்டனிலிருந்து திங்கள்தோறும் இந்திய நேரம் மாலை 6.30க்கு ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் 22-3-2021 அன்று ஒளிபரப்பான இசையின் மஹிமை பற்றிய இரண்டாவது உரை!
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே சந்தானம் நாகராஜன் வணக்கம்.
இசையின் மஹிமை பற்றி உலகம் அறிந்து கொள்ளும் வகையில் சோழ நாட்டில் ஒரு அற்புத சம்பவம் நிகழ்ந்தது.
கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ மன்னனின் அரண்மனையில் தேவ கானத்தை ஒரு பெண்ணும் மானுட கானத்தை ஒரு பெண்ணும் இசைத்தனர். சோழ மன்னன் மானுட கானத்தை இசைத்த பெண்ணைப் பாராட்டிப்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Following programmes were broadcast under
GNANA MAYAM- GNANA SUDAR BROADCAST on
22 MARCH 2021 MONDAY
Title song – Maitrim Bhajata by Kanchi Paramacharya sung by MS
OPENING ANNOUNCEMENT & PRAYER -5 MINUTES
PRAYER BY LALITA MALAR MANIAM, MALAYSIA
SONG BY MRS ANNAPURANI PANCHNATHAN of London
PANGUNI UTHTHIRAM AND KANCHI EKAMPAREWAR TEMPLE FESTIVAL – TALK BY SRI CHANDRASEKHARA GURUKKAL, BIRMINGHAM, UK- 15 MTS
ASHTAPATHI No.6 BY LONDON SRI BALASUBRAHMANYAM- 7 MTS
BENGALURU S. NAGARAJAN’S TALK ON SANGEETHA MAHIMAI PART 2 — 10 MINUTES
PERIAAZVAAR PAASURAMS BY MRS DAYA NARAYANAN of London- 6
DR N KANNAN’S TALK from Chennai — ALWAR AMUTHAM -6
APPR. 60 MINUTES
SRI CHANDRU GURUKKAL, in his talk explained the significance of big umbrella for god, different types of Vahanas, Por chunam powder, Theerthavari, Brahmorchavam and the colour dress for gods with special flower alankaram. He told that he was lucky to perform Puja /Urchavam for Lord Ekampareswar in Kanchi in 1995. It is very rare to get such a divine task because it is given to a family of priest once in three generations.
XXX
INTRODUCTION TO GNANAMAYAM
WE HAVE LAUNCHED A HINDU BROADCAST IN AUGUST 2020 AND IT IS GOING WELL ON MONDAYS VIA ZOOM AND FACEBOOK.
LATER WE HAVE EXTENDED IT TO ONE MORE DAY, ON SUNDAYS TO SPREAD TAMIL CULTURE.
BOTH OUR BROADCASTS ARE NON- POLITICAL AND NON -COMMERCIAL.
WE DON’T ADVOCATE OR SUPPORT ANY VIOLENCE IN ANY FIELD.
IT IS APPROXIMATELY ONE HOUR BROADCAST FROM LONDON.
TIME OF BROADCAST- ONE PM, LONDON TIME—— 6-30 PM INDIAN TIME;
DAYS- MONDAYS AND SUNDAYS
MONDAYS FOR HINDUISM (UNDER GNANAMAYAM AND GNANA SUDAR)
SUNDAYS FOR TAMIL CULTURE & LANGUAGE (UNDER THAMIZ MUZAKKAM/ TAMIL THUNDER)
WORLD HINDU NEWS IN TAMIL AND ENGLISH IS ON SUNDAYS
ALL QUESTIONS ON HINDUISM AND TAMIL LANGUAGE ARE ANSWERED ON BOTH SUNDAY AND MONDAY
XXX
WHO IS THE PRODUCER?
LONDON SWAMINATHAN IS PRODUCING IT ON BEHALF OF ‘GNANAMAYAM’ , LONDON.
FORMER BBC BROADCASTER,
SENIOR SUB EDITOR, DINAMANI,
FORMER TAMIL TUTOR, UNIVERSITY OF LONDON; 3 JOBS FROM 1971- 2014; NOW BLOGGER AND NEWS EDITOR, GNANAMAYAM CHANNEL
PLUS
FORMER MANAGER, TAMIL AND MALAYALEE HEALTH ADVOCACY PROJECT, LONDON;
MANAGER, LONDON TAMIL SANGAM,
HEALTH ADVOCATE , NEWHAM UNIVERSITY HOSPITAL, LONDON;
HINDU CHAPLAIN, HMS PRISONS, GREAT BRITAIN &
CHIEF EXAMINER, TAMIL PAPERS, CAMBRIDGE UNIVERSITY (UNTIL 2019)
***
SRI KALYANA SUNDARA SIVACHARYAR OF WORLD HINDU MAHASANGAM
IS ANOTHER PRODUCER
AND MRS SUJATHA RENGANATHAN AND MRS VAISHNAVI ANAND ARE CO-PRODUCERS FOR OUR PROGRAMMES
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
if u want the article in word format, please write to us
பெண்கள் வாழ்க – பகுதி 1 (Post No.9410)
.6-1-2002-ல் எழுதத் துவங்கிய நூல் . இந்த நூல் முடிவுபெறவில்லையாயினும் ஒவ்வொரு அத்தியாயமும் இன்றும் பொருத்தமானவையே . 2002ம் ஆண்டு செப்டம்பர் மாதம் லண்டனிலுள்ள ஒரு மருத்துவ மனையில் (பிளாஸ்டோ ஹாஸ்பிடல் , கிழக்கு லண்டன் PLAISTOW HOSPITAL IN EAST LONDON) ) “குடும்பத்தில் நடைபெறும் சண்டை சச்சரவுகளும் அதனால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளும் DOMESTIC VIOLENCE AND HEALTH PROBLEMS) என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கு நடந்தது. நானும் ஒரு பிரதிநிதியாகக் கலந்துகொண்டேன். கருத்தரங்கு நடந்த இடத்தில் பல துண்டுப் பிரசுரங்களைக் கொடுத்தனர்.உலகம் முழுவதும் புழங்கும் பெண்களை மட்டம்தட்டும் பழமொழிகள் அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரமும் இருந்தது. இங்கு வந்துள்ள
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முன்னேற நன்கு படிக்க வேண்டும், பெரியோர் பலரும் அவனிடம் சொல்வதை அவன் நன்கு கேட்க வேண்டும், பிறரிடம் பழகும் போது சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல வேண்டும்.
எதைப் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், எதைச் சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும், எதைச் சொல்லக் கூடாது, எங்கு சொல்லக் கூடாது என்பதை அறிய வள்ளுவரைத் தானே நாட வேண்டும்!
அவர் கட்டளைகளாகவும், அன்புரையாகவும், அறிவுரையாகவும் கூறுவது மனித குலத்திற்கே பொதுவான நீதிகளாகும்; வாழ்வாங்கு வாழ வேண்டிய வழிகளாகும்.
கற்க!
இரு குறள்களில் ‘கற்க’ என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார் வள்ளுவர்!
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக (குறள் 391)
ஒருவன் கற்கப்படும் நூல்களைப் பழுதறக் கற்க! அப்படிக் கற்றபின் அந்தக் கல்விக்குத் தக அந்த நூல்கள் சொல்லுகின்ற நெறியின் கண் நிற்கவும்.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றம் கொடுத்தற் பொருட்டு (குறள் 725)
ஒரு அவையில் அஞ்சாது பேச, பதில் சொல்ல, சொல் இலக்கண நெறியினாலே கற்க வேண்டிய அளவை நூல் முதலியவற்றை அறிந்து கற்க வேண்டும்.
கேட்க!!
கேட்க என்ற சொல்லை நான்கு குறள்களில் பயன்படுத்துகிறார் வள்ளுவர்.
(குறள் பாக்கள் :-414,416,695,587)
கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை (குறள் 414)
ஒருவன் தானே கற்கவில்லை என்றாலும் கூட கற்றவர்களை அணுகி கேட்டுத் தெளிய வேண்டும். அது அவன் தளர்ச்சி வந்த போது அவனுக்கு ஊன்று கோல் போலத் துணையாக நிற்கும்.
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் (குறள் 416)
இந்தக் குறளில் எதைக் கேட்க வேண்டும் என்பதை மிக அழகுறத் தெளிவு படுத்தி விடுகிறார் வள்ளுவர். நல்லவை கேட்க என்பது வாழ்நாள் இறுதி வரைக்குமான அற்புதமான ஒரு அறவுரை ஆகும். அதில் எனைத்தானும் என்று கூறி எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் கூட என்கிறார்.
சிறிய அளவு நல்லதைக் கேட்டாலும் கூட அது பயன்படுத்தப்படும் போது மிகப் பெரிய பெருமையைத் தரும் என்று பலனையும் கூறி விடுகிறார்.
எப்பொருளும் ஓரார் தொடரார் மற்றப் பொருளை
விட்டக்கால் கேட்க மறை (குறள் 695)
ஒரு அரசன் அல்லது ஒரு தலைவன் (Leader) அல்லது கம்பெனியின் தலைவன் (CEO) அல்லது உரிய மேலதிகாரி (Manager) நமக்கு இருக்கும் போது நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
எந்தப் பொருளையும் செவி கொடுத்துக் கூர்ந்து கேட்காமலும் அப்பொருளை அறியத் தொடர்ந்து கேட்காமலும் அந்தத் தலைவன் தானே மனம் விட்டுச் சொன்னால் மட்டும் அந்த இரகசியத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அனாவசியமாக மூக்கை நுழைக்காதே என்பது பொருள்!
மறைந்தவை கேட்க வற்றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று (குறள் 587)
சமூக சூழ்நிலையில் ஏராளமான நிகழ்வுகள் ஏற்படுகின்றன. ஒற்றாடல் அதிகாரத்தில் இடம் பெறும் இந்தக் குறள் சாமன்யனுக்கும் சாதாரண நிகழ்வுகளில் பயன் படும் ஒரு குறள் அறிவுரை ஆகும்.
(நமக்கு வேண்டாத, நமக்கு எதிராக) பிறரால் மறைக்கப்பட்டு செய்யப்படும் செயல்களை மற்றவரிடம் கேட்டு அறியக் கூடிய வல்லமை வேண்டும். தான் கேட்டதை சந்தேகமின்றி அது சரிதானா, உண்மை தானா என்று தானே ஆராய்ந்து முடிவிற்கு வர வேண்டும்.
சொல்லுக!!!
சொல்லுக என்று ஆறு இடங்களில் நமக்குக் கட்டளை இடுகிறார் வள்ளுவர்!
மிக மிகத் தெளிவாக எதைச் சொல்ல வேண்டும் என்பதற்கான அறிவுரை இது.
சொல்ல வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் பயன் தரும் சொற்களை மட்டுமே சொல்லுக; பயன் தராத சொற்களை ஒருபோதும் சொல்லாதே.
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல் (குறள் 645)
அறம் பொருள் ஆகியவற்றை அடைய நமது நாக்கே வழி. அதைப் பயன்படுத்துவது எப்படி? சொல்லும் திறன் அறிந்து முறைப்படி அழகுற இனிமையாகச் சொல்ல வேண்டும். அதுவே அறத்தையும் செல்வத்தையும் சேர்க்கும்.
சொல்லுக சொல்லைப் பிறிதோர் சொல் அச்சொல்லை
வெல்லுஞ் சொல் இன்மை அறிந்து (குறள் 645)
ஒரு சொல்லைச் சொல்வதற்கு முன் அந்தக் கருத்தை வெளிப்படுத்தச் சிறந்த சொல் எது என்று நன்கு ஆராய்ந்து இன்னொரு சொல் அதை விட நல்லது இல்லை என்ற தன்மையில் அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். இதுவே வெற்றிக்கு வழி.
அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர் (குறள் 711)
சொல் மூன்று வகைப்படும்.செஞ்சொல், இலக்கணைச் சொல், குறிப்புச் சொல். இதில் நமக்கு ஆகாதனவற்றை விடுத்து எந்த இடத்தில், எந்த அவையில் பேசுகிறோமோ அந்த இடத்தின் நிலையையும் அப்போதைய சூழ்நிலையையும் அறிந்து உரிய சொல்லைச் சொல்ல வேண்டும்.
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மை யவர் (குறள் 712)
இடை, நடை! ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நடை உண்டு. சொற்களின் நடையினை முதலில் நன்கு அறிந்து கொள்ள வேண்டு. அதையும் நினைத்த இடத்தில் சொல்லக் கூடாது. எங்கு பேசுகிறோமோ அந்த நடையை – அதாவது அவையை – அறிந்து ஒரு குற்றமும் இன்றி சொல்ல வேண்டும். கேட்பவர் அதைக் கேட்க விருப்பப்படும் படி செவ்வி அறிந்து அதாவது சொல் வழு, பொருள் வழு இன்றிச் சொல்ல வேண்டும்.
சொல்லற்க!!!!
இவ்வளவு சொன்ன வள்ளுவர் எதைச் சொல்லக் கூடாது என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறார் மூன்று குறள்களில்! (குறள் பாக்கள் 184, 200, 719)
இவற்றுள் குறள் 200 பற்றி மேலே பார்த்து விட்டோம்.
கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்காச் சொல் (குறள் 184)
ஒருவனின் எதிரே நின்று கண்ணோட்டம் இல்லாமல் எதை வேண்டுமானாலும் கடுமையாகப் பேசி விடலாம். ஆனால் அவன் எதிரில் இல்லாத போது, பின் விளைவை அறியாமல் புறம் கூறும் சொற்களைச் சொல்லாதே.
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லுவார் (குறள் 719) புல்லவை – புல்லர் கூடி இருக்கும் அவை
நல்லவை – நல்லோர் இருக்கும் அவை
ஒரு நல்லோர் கூடிய அவையில் அவர்கள் மனம் கவரும் படி பேச வல்லமை உடைய ஒருவன் மறந்தும் கூட புல்லர்கள் குழுமிய அவையில் தன் வாயைத் திறக்கக் கூடாது.
பொச்சாந்தும் என்று ஏன் சொல்கிறார் வள்ளுவர்? நல்லவையில் பேசும் ஒருவன் புல்லர்கள் கூட்டத்தில் பேசினால் இப்படிப்பட்டவர் இந்தக் கூட்டத்தில் பேசலாமா என நல்லோர் அங்கலாய்ப்பர். ஆகவே தான் பொச்சாந்தும் – மறந்தும் கூட – புல்லர்கள் கூட்டத்தில் பேசாதே என்கிறார் வள்ளுவர்.
எதை, எப்படி, எப்போது பேச வேண்டும் என்பதை இதை விட வேறு எப்படிச் சொல்ல முடியும்?
சொல்வது, சொல்லாமல் இருப்பது ஆகியவை பற்றிய உலகிற்கான திரண்ட கருத்தே இவை தாம்!
ஆக, கற்க, கேட்க, சொல்லுக, சொல்லற்க ஆகிய நான்கு கட்டளைகளை சிரமேற் கொண்ட ஒருவன் பெயரும் புகழும் பெறுவான். அறம் ஆற்றியவன் ஆவான். அவனுக்கு மாபெரும் செல்வம் தானே வந்து சேரும்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
FROM ALBERT EINSTEIN TO SRI AUROBINDO WE HAVE BEAUTIFUL QOTATIONS ABOUT INDIA.
HERE ARE SOME QUOTES FROM SWAI VIVEKANANDA, ROMAIN ROLLAND, MARK TWAIN, WILL DURANT, COL. JAMES TODD, SYLVIAN LEVY, ALBERT EINSTEIN, SHRI AUROBINDO AND HU SHIH. IT WAS COMPILED BY RAKHAL SAHA.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
இன்று மார்ச் 21-ஆம் தேதி — ஞாயிற்றுக் கிழமை ,2021
உலக இந்து சமய செய்தி மடல்
தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND
எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.
எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும் .
xxxx
இலங்கையில் சீதை சிறை வைக்கப்பட்ட இடத்தில் இருந்து ராமர் கோவிலுக்கு ‘கல்’
அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜைகள் கடந்த ஆண்டு நடந்த நிலையில், அங்கு பிரமாண்ட கோவிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த கோவில் கட்டுமான பணிக்கு இலங்கையில் சீதையை சிறை வைத்திருந்த சீதா எலியா என்ற பகுதியில் இருந்து கல் எடுத்து வரப்படுகிறது. இந்த தகவலை இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், ‘ராமர் கோவிலுக்காக இலங்கையின் சீதா எலியாவில் இருந்து ஒரு கல் எடுத்து வரப்படும். இது இருநாட்டு உறவை வலுப்படுத்தும் தூணாகவும் விளங்கும். இந்த கல்லை மயூரபதி அம்மன் கோவிலில் வைத்து இலங்கைக்கான இந்திய தூதரின் முன்னிலையில், இந்தியாவுக்கான இலங்கை தூதராக நியமிக்கப்பட்டுள்ள மிலிண்டா மரகோடா பெற்றுக்கொண்டார்’ என்று கூறியுள்ளது.
இந்த கல்லை மிலிண்டா மரகோடாவே இந்தியாவுக்கு கொண்டு வருவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் சீதையை சிறைவைக்கப்பட்ட இடத்தில், அவருக்கு கோவில் ஒன்று அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
xxxxx
ஜூன் 28-ம் தேதி முதல் அமர்நாத் யாத்திரை
தெற்கு காஷ்மீரில் இமயமலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 3,888 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற அமர்நாத் குகைக் கோயில். ஆண்டுதோறும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்தக் கோயிலுக்கு யாத்திரையாக வந்து பனிலிங்கத்தை தரிசித்து செல்வது வழக்கம்.
நடப்பாண்டுக்கான அமர்நாத் யாத்திரை குறித்து அந்தக் கோயிலின் வாரியக் குழுக் கூட்டம் ஸ்ரீநகரில் நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. இதில், வரும் ஜூன் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை மொத்தம் 56 நாட்களுக்கு அமர்நாத் யாத்திரையை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த யாத்திரையின் போது கரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்புடன் கடைப்பிடிக்கப்படும் என்று அமர்நாத் கோயில் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் கோடை காலத்தில் உருவாகும் இந்த பனிக்கட்டி லிங்கம் பின்னர் சுருங்கி மறைந்துவிடும். இது ஒரு இயற்கை அதிசயம். முன்னர் பெரிய லிங்கமாக உருவான பனிக்கட்டி இப்பொழுது புறச் சூழல் வெப்ப அதிகரிப்பால் அளவில் சுருங்கிவிட்டது.
Xxxx
ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா:
பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
ஹரித்வாரில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கும்பமேளா
உலக பிரசித்தி பெற்ற ஹரித்வார் கும்பமேளா கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு 30 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என்று உத்தரகாண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
உலகிலேயே மத நிகழ்வில் அதிகம் பேர் கலந்து கொள்ளும் நிகழ்வு என்ற பெருமை கொண்டது கும்பமேளா. இந்தியாவில் பிரயாக்ராஜ் (அலகாபாத்), ஹரித்வார், உஜ்ஜைன் மற்றும் நாசிக் ஆகிய 4 ஊர்களில் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்துக்களின் புனித நிகழ்வான கும்பமேளாவில் சாதுக்கள், பொதுமக்கள் என கோடிக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு ஆறுகளில் புனித நீராடுவர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் இந்த ஆண்டு கும்பமேளா நடத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக 4 மாதங்கள் வரை நடைபெறும் கும்பமேளா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக 30 நாட்களுக்கு மட்டுமே நடத்தப்படும் என உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.
கும்பமேளாவில் சாதாரண நாட்களில் 10 லட்சம் பேரும், முக்கிய நாட்களில் 50 லட்சம் பேரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
xxxx
மாசிக்கொடை விழா
பெண்களின் சபரிமலை என போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலுக்குத் தெற்கே சுமார் 2 மைல் தொலைவில் கடற்கரையோரத்தில் அமைந்திருக்கிறது மண்டைக்காடு கிராமம். இங்கு புற்றிலிருந்து தோன்றிய புகழ்பெற்ற பகவதியம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் பெண்களுக்கான சிறப்பான ஆலயமாகப் போற்றப்படுகிறது.
இங்கு பகவதி அம்மன் வடக்கு முகமாக சுயம்பு வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சுமார் 20 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பெரிய புற்றே இங்கு அம்மனாக வணங்கப்படுகிறது.
புற்றில் சந்தன முகத்தோடு காட்சி தரும் அம்மனுக்கு முன்பாக, வெள்ளி சிலையாக அமர்ந்த கோலத்திலும், வெண்கல சிலையாக நின்ற கோலத்திலும் பகவதி அம்மன் காட்சி தருகிறார். மேலும் கோவில் வளாகத்தில் பிரசன்ன விநாயகர் சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளது.
xxxxx
ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு புதிய செயலர்
ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) அடுத்த சர்கார்யவாஹ் ஆக (பொதுச் செயலாளராக) தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்ந்தெடுக்கப்பட்டார். 73 வயதான சுரேஷ் பய்யாஜி ஜோஷி கடந்த 2009 முதல் 12 ஆண்டுகள் இந்த பதவியில் நீடித்து சாதனை படைத்தார். வயது காரணமாக இனியும் இப்பதவி வேண்டாம் என்று கூறியதால் புதிய பொதுச் செயலர் ஏக மந்தகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆர்எஸ்எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த பதவி மாற்றத்தை உறுதிப்படுத்தியது. பெங்களூரில் ஆர்.எஸ்.எஸ்ஸின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான அகில பாரதிய பிரதிநிதி சபையில் இதற்கான தேர்தல் நடந்தது.
சர் கார்யாவாஹ் பதவி ஆர்எஸ்எஸ் அமைப்பின் நம்பர் 2 பதவியாகக் கருதப்படுகிறது.தற்போது மோகன் பகவத் உள்ள சர்சங்க்சலக் (ஆர்.எஸ்.எஸ். தலைவர்) பதவிக்குப் பிறகு இதுதான் முக்கியப் பொறுப்பு.
இதன் பின்னர், அடுத்த 3 ஆண்டுகளுக்கான ஆர்எஸ்எஸ் அமைப்பின் இலக்கு குறித்து தத்தாத்ரேயா பேசியதாவது: பசு பாதுகாப்பு, குடும்ப கவுன்சிலிங், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அநீதியை அகற்றுதல், கிராமப்புற வளர்ச்சி ஆகியவை, ஆர் எஸ் எஸ் அமைப்பின் இலக்குகளாக இருக்கும். என தெரிவித்தார்.
பெங்களூரு நகரில் நிருபர்களிடையே பேசிய அவர், லவ் ஜிஹாத் என்னும் வலுக்கட்டாய மதம் மாற்றத் திருமணங்களை ஆர்.எஸ்.எஸ். கண்டிப்பதாகக் கூறினார். மத்தியப் பிரதேசம், கர்நாடகம் போன்ற மாநிலங்கள் இயற்றிய லவ் ஜிஹாத் தடைச் சட்டங்களை ஆர்.எஸ்.எஸ் ஆதரிப்பதாகவும் கூறினார். ஜா தி இன வேறுபாடுகளை அகற்ற ஆர் எஸ் எஸ் பாடுபடுகிறது என்றும் சொன்னார்.
தத்தாத்ரேயா ஹோசாபலே கர்நாடகாவின் ஷிமோகாவில் உள்ள சோராபில் எனும் பகுதியில் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், 1968’இல் ஆர்.எஸ்.எஸ்ஸிலும் பின்னர் 1972’இல் வித்யார்த்தி பரிஷத்தி லும் சேர்ந்தார்.
இந்திய அவசர நிலைப் பிரகடன காலங்களில், உள்நாட்டு பாதுகாப்பு பராமரிப்பு சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்பட்டு 16 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பின் பொதுச் செயலாளராகவும் 15 ஆண்டுகள் பணியாற்றினார்.
Xxxx
உலக பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்கு கேரள அரசு ‘திடீர்’ அனுமதி
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். இதில் நடக்கும் 30-க்கும் மேற்பட்ட யானைகள் கலந்துகொள்ளும் குடை மாற்றும் நிகழ்ச்சி, செண்டை மேளம் மற்றும் பஞ்ச வாத்திய நிகழ்ச்சி, வாணவேடிக்கை உள்ளிட்டவைகளை கண்டு களிக்க ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருவார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பூரம் திருவிழா நடத்தப்படவில்லை. பூரம் விழாவை நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையிலான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அடுத்தமாதம் (ஏப்ரல்) 23-ந்தேதி பூரம் திருவிழா நடக்கிறது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும். இ-டிக்கெட் மூலம் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது.
Xxxx
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆறாட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
உத்திரத்திருநாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வரும் 28-ம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் அவசியம் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28- ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.
xxxxxx
பங்களாதேஷில் இந்து கிராமம் மீது தாக்குதல்
பங்களாதேஷில் உள்ள இந்து கிராமம் ஒன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. பயங்கரவாதிகள் 80 வீடுகளை அடித்து நொறுக்கினர், மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கிராமத்திலிருந்து தப்பிச் சென்றனர்
பங்களாதேஷில் உள்ள ஹிபசாத்-இ-இஸ்லாம் என்ற அடிப்படைவாத அமைப்பின் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புதன்கிழமை இந்துக்கள் கிராமத்திற்கு புகுந்து ஆயுதங்களுடன் தாக்கி சுமார் 80 வீடுகளை, அடித்து நொறுக்கி சூரையாடினர். அடிப்படைவாதக் குழுவின் இணைச் செயலாளர் மவுலானா முப்தி மாமுனூலின் கருத்தை ஒரு இந்து இளைஞர் விமர்சித்ததை அடுத்து கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டனர்.
இந்து இளைஞர்கள் செய்த விமர்சனத்தால் கோபமடைந்த ஹிபாசத்-இ-இஸ்லாத் அமைப்பின் தொண்டர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் போராட்டம் செய்து வருகின்றனர். பேஸ்புக் (Facebook) பதிவு ஒன்றில் மத உணர்வுகள் தூண்டப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளனர். காவல்துறையினர் ஏற்கனவே இந்து இளைஞர்களை கைது செய்திருந்த போதிலும், பயங்கரவாதிகள் இந்துக்கள் உள்ள கிராமத்தை தாக்கினர்.
இந்து மதத்தை சேர்ந்த நபர், வங்க தலைவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலை நிறுவுவதை எதிர்த்த மவுலானா முப்தி மாமுனூலின் கருத்தை விமர்சித்து பேஸ்புக்கில் (Facebook) பதிவிட்டார். இதனால் அடிப்படைவாத முஸ்லிம்கள் இந்து கிராமமான நவு கான் மீது புதன்கிழமை தாக்கினர்.
பல இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அடிப்படைவாதிகள் பல வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர். வீடுகளையும் அடித்து நொறுக்கினர். தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் ஏராளமான போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
xxxxx
இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
21-3-2021 WORLD HINDU NEWS ROUNDUP IN ENGLISH
Namaste , Namaskaram to Everyone
This is a weekly ‘HINDU NEWS ROUND UP’ from around the world.
Read by SUJATHA RENGANATHAN .
XXX
This is a broadcast coming through ZOOM and FACEBOOK.COM / GNANA MAYAM live at
ONE pm London Time and 6-30 PM Indian Time Every SUNDAY.
Even if you miss our live broadcast on SUNDAYS
you can always visit us on FACE BOOK.COM – slash- Gnana Mayam 24 hours a day.
Here is the WEEKLY HINDU NEWS BULLETIN from ‘Aakaasa Dhwani’
– Read by SUJATHA RENGANATHAN .
XXX
Stone from Sita Eliya In Sri Lanka To Be Used In Ram Mandir Construction
A stone from Sita Eliya, the place in Sri Lanka where Hindu goddess Sita is believed to have been held captive by Ravana, will be used in the construction of the Ram Temple in Ayodhya. The Indian High Commission in Colombo said that this will serve as a pillar of strength for India-Lanka ties.
Milinda Moragoda, Sri Lanka’s High Commissioner to India is expected to bring the ancient stone to India.
This stone was received at Mayurapathi Amman Temple by HC-designate of Sri Lanka to India HE Mr. Milinda Moragoda in presence of the High Commissioner,” the Indian High Commission in Sri Lanka tweeted on Thursday.
A temple in Sita Eliya is dedicated to Goddess Sita and is said to mark the place where she was held captive by the Lankan king Ravana and where she regularly prayed to Lord Rama for her rescue.
En route to Hakgala Gardens, the vibrant and colourful temple known as the Seetha Amman Temple can be spotted.
Xxxxx
Amarnath Yatra 2021 Date: Annual Pilgrimage To Start From June 28; Registration From April 1
The authorities have decided to begin the registration process for the 56-day long annual pilgrimage to the holy cave shrine of Amarnathji in south Kashmir Himalayas April 1
Last year the annual yatra to the 3,880-metre high holy cave shrine was cancelled due to rise in Covid-19 cases all over the country
The Amarnath cave, located in the Indian state of Kashmir, is one of the most famous shrines in Hinduism
Inside the main Amarnath cave is an ice stalagmite resembling the Shiva Linga, which waxes during May to August and gradually wanes thereafter.
The cave is situated about 141 km (88 mi) from Srinagar, the capital of Kashmir.
It is a popular pilgrimage destination for Hindus – about 400,000 people visit during the 45-day season around the festival of Shravani Mela in July-August, coinciding with the Hindu holy month of Shravan.
Devotees generally take the 42 km (26 mi) pilgrimage on foot from the town of Pahalgam, about 96 km (60 mi) from Srinagar, and cover the journey in four to five days.
During the past fifty years, the ice Shivlingam has shrunk in size. While weather does affect its shape and size, many environmentalists blame global warming for the condition.
XXXX
Kumbh shahi Snaan: April 12, 14 peak days;
Uttarakhand Police to ramp up measures if visitors number touches 1 crore
With April 12 and 14 being the peak days in the 2021 Kumbh Mela, the Uttarakhand Police will ensure the forces are extra careful with the measures so that an untoward situation such as a stampede can be avoided.
“April 12 and April 14 are peak days as there’s Kumbh ‘shahi snan’. Steps will be taken to avoid a stampede if the crowd number reaches a crore. We’ll be extra careful with people from states with rising Covid-19 cases. Letters will be sent to all states,” Uttarakhand DGP Ashok Kumar said.
The Union Health Ministry had on Monday said that a high-level central team led by Dr SK Singh, Director of National Centre for Disease Control (NCDC), will be deputed to Haridwar to review public health arrangements and medical care for the Kumbh Mela that starts on April 1.
XXXX
News from Kerala
After a gap of one year, Pooram fans and representatives of participating temples are all in joy as the meeting in the presence of Chief Secretary P J Joy on Monday granted permission for organising Thrissur Pooram with all its charm and glory this time, but abiding by the Covid protocol.
All ceremonies including kudamattam and parading of the usual number of elephants are allowed.
Thiruvambady and Paramekkavu devaswoms along with Cochin Devaswom Board and authorities of other participating temples are all set to start preparations for the pooram and exhibition.
District Collector S Shanavas said the pooram would be conducted this time as demanded by the public and devaswoms, but with Covid protocol in place.
The pooram falls on April 23 this year, while its rituals begin seven days before that with flag hoisting. The pooram exhibition used to begin a month before the festival and thousands of people usually visit the hundreds of stalls here
The Thrissur Pooram, considered to be the mother of all temple festivals in Kerala, will be held on April 23 this year.
The fireworks and Pooram displays will be held as usual and 15 elephants have been allowed for the procession and the kudamattam (umbrella changing) ceremony.
Muslim hardliners not amused by Khader’s Hindu temple visit
Leaders of Muslim organisations, who are traditionally loyal to the Indian Union Muslim League (IUML), have resented party leader KNA Khader’s gestures at the Guruvayur temple during a visit in connection with election campaigning. Khader, the sitting MLA from Vengara, is the IUML candidate from the Guruvayur constituency.
In an FaceBook post, Muslim Yuvajana Sangham (SYS) state secretary Abdul Hameed Faizy Ambalakkadavu objected to Khader’s deeds and words at the temple. Faizy found Khader’s words like “Lord Guruvayurappan will certainly read my mind and has blessed me” and the god “will certainly accept the “aval pothi from this Kuchela” un-Islamic. He said there is a chapter in Islamic scriptures which explains actions that will eject a person from Islam. He said even a cursory reading of the chapter will make one realise the gravity of Khader’s actions.
xxxx
Dattatreya Hosabale is RSS’s new general secretary
Dattatreya Hosabale was Saturday appointed as the Rashtriya Swayamsevak Sangh’s (RSS) new sarkaryavah or general secretary.
Election to the post was held during the RSS’s top-decision making body Akhil Bharatiya Pratinidhi Sabha’s (ABPS) annual meeting held in Bengaluru.
Hosabale, who had been one of the RSS joint general secretaries since 2009, replaces Suresh Bhaiyyaji Joshi, who held the position for 12 years.
The post of the general secretary is the second highest executive post in the RSS after the post of sarsanghchalak, currently held by Mohan Bhagwat.
“Bhaiyyaji Joshi requested that he should be relieved from his responsibility as he felt that with age he also would like to step down. Dattatreya Hosabale has been elected unanimously,” said Arun Kumar, RSS national media head.
Hosabale, popularly known as ‘Datta ji’ in the RSS, belongs to a small village in Shivamogga district in Karnataka, from a family associated with the Sangh Parivar. Erudite and an effective orator, Hosabale has a post-graduate degree in English Literature with a keen interest in foreign affairs.
Joining the Sangh in 1968, he was associated with the students’ wing, the Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), and served as its general secretary for 15 years.
Xxxxx
RSS VIEWS ON LOVE JIHADS
The Rashtriya Seva Sangha (RSS) is against all forms of untouchability and caste discrimination, but at the same time the organisation wants laws to regulate ‘love jihad’, said the newly-elected RSS General Secretary Dattatreya Hosabale, in Bengaluru on Saturday.
Speaking after getting elected as RSS Sarkaryavah on the second day of the two-day Akhila Bharatiya Pratinidhi Sabha (ABPS) in Bengaluru, he said that Karnataka and Kerala High Courts have confirmed the incidence of love jihad.
“The use of fraudulent methods to lure girls into marriage and conversion is condemnable and has to be opposed. Suitable laws and regulations have to brought in and RSS will support such laws,” he said.
XXXX
Hindu houses attacked in Bangladesh
Several hundred people from three villages on Wednesday morning carried out a fierce attack on the minority Hindu community in village Naogram of Salla upazila in Sunamganj in Bangladesh, damaging several dozens of houses following a Facebook post by a Hindu youth against Hefazat-e-Islam joint secretary general Mamunul Haque.
The attack carried out several hours after the members of the Hindu community handed over the youth, Jhuman Das Apan, 28, an employee of a private firm, to the local police for his alleged Facebook post.
Witnesses said that the villagers from Santashpur, Natni and Chandrapur villages of Dirai upazila jointly carried out the attacks on over 50 houses of Hindu- populated areas of the village Naogram ransacking houses, allegedly looting valuables and damaging their idols inside their family temples.
No causalities, however, were reported as Naogram residents went into hiding sensing trouble and the local administration and police dispersed the attackers.
The Sunamganj district deputy commissioner and district magistrate Zakir Hossain said in their primary inquiry that they found that the supporters of the Hefazat-e-Islami carried out the attack.
He said that the local authorities promptly reacted.
.
xxxxx
THAT IS THE END OF ‘AAKAASA DHWANI ’ HINDU NEWS BULLETIN BROADCAST FROM LONDON –
ஆலயம் அறிவோம்! வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன். ஆலயம் அறிவோம் .
தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம் பெறுவது புரி ஜகந்நாதர் ஆலயம் ஆகும். ஒடிஸா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தத் தலம்.
புவனேஸ்வரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்தத் தலம் பற்றிய வரலாறு ஒன்று உண்டு. ஜரா என்ற வேடனின் அம்பால் உயிர் துறந்த கிருஷ்ணரின் உடல் கடலில் ஒரு மரம் போல் மிதக்க, கிருஷ்ணர் கனவில் கூறியவாறு அதை, புரியை ஆண்டு வந்த இந்திரதுய்மன் என்னும் மன்னன் எடுத்து, ஒரு சிலையை அமைக்க ஏற்பாடுகள் செய்தான். பெருமாளே ஒரு முதிய தச்சர் வேடத்தில் தோன்றி 21 நாட்கள் யாரும் தான் வேலை செய்யும் அறையைத் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையின் பேரில் சிற்ப வேலையை ஆரம்பித்தார். 15 நாட்கள் அறையிலிருந்து சத்தம் கேட்டது. அதன் பின்னர் கேட்கவில்லை. மூன்று நாட்கள் பொறுத்த மன்னன் பின்னர் அவசரப்பட்டு அறைக் கதவைத் திறந்தான். தச்சர், “21 நாட்கள் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையை நீ ஏன் மீறினாய். ஆகவே அரைகுறையாக உள்ள சிலையை அப்படியே பிரதிஷ்டை செய். இதை தரிசிக்க வருவோர் பொறுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைவர்” என்று கூறினார். அங்கிருந்த பலராமர், சுபத்ரா, ஜெகந்நாதர் ஆகிய சிலைகளை முகம் மற்றும் கைகள் மட்டுமே காணும் நிலையில் அரசன் பிரதிஷ்டை செய்தான்.
கால கிரமத்தில் இந்தக் கோவிலை 1135ஆம் ஆண்டு ஆனந்தவர்மன் என்ற அரசன் புதுப்பித்தான். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இங்குள்ள மரத்தினாலான திருமேனிகள் புதுப்பிக்கப்படுகிறது. ஆண்டு தோறும் புரி ஜகந்நாதரின் ரத யாத்திரை பல லட்சம் மக்களை ஈர்க்கும் உலகப் பெரும் தேர்த்திருவிழா ஆகும். பத்து லட்சம் மக்கள் இந்த ரத யாத்திரையில் கலந்து கொண்டு ஜெகந்நாதரின் அருளுக்குப் பாத்திரமாகின்றனர்.
16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு மஞ்சள் நிறத் தேரில் புரி ஜெகந்நாதரும், 14 சக்கரங்கள் கொண்ட சிவப்பு பச்சை நிறமுடைய தேரில் பலபத்ரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் தேர்வலம் வருவர். ஒவ்வொரு தேர்ச்சக்கரமும் 7 அடி குறுக்களவு கொண்டது. ஜகந்நாதரின் தேரின் உயரம் 45 அடி ஆறு அங்குலம்; அகலம் 34 அடி ஆறு அங்குலமாகும். இந்தத் தேர்கள் வருடா வருடம் புதிதாக செய்யப்படுகின்றன. தேர் கட்டுவதில் வல்லவர்களான தச்சர்களால் குறிப்பிட்ட மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை மஹாநதியில் மிதக்கவிடப்படுகின்றன. அவற்றை புரி அருகே எடுத்து குறிப்பிட்ட முறைப்படி இந்த விசேஷமான தேர்கள் அமைக்கப்படுகின்றன.
தேரோடும் வீதியை தங்கத் துடைப்பத்தால் மன்னர் பெருக்கிச் சுத்தம் செய்வதுப் பாரம்பரியமாக இன்றளவும் நடைபெற்று வருகிறது.
முதலில் பலபத்ரர் தேர், அடுத்து சுபத்ரா தேவி தேர், பின்னர் இறுதியில் நந்திகோஷ ரதம் எனப்படும் புரி ஜெகந்நாதர் தேர் முறையாகப் புறப்படும். ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கும் இந்த உற்சவம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். குண்டிச்சா கோவில் நோக்கிப் புறப்படும் இந்த ரத யாத்திரை மவுசிமா கோவில் வழியே செல்லும். அங்கு ஜெகந்நாதர் ஓய்வு எடுப்பார். பின்னர் மீண்டும் தேர்கள் புறப்பட்டு ஜெகந்நாதர் கோவிலை அடையும்.
புரி கோவிலில் முதலில் சிங்க த்வார் வழியே நுழைந்து 22 படிகள் ஏறி சந்நிதிக்குச் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்தவுடன் தீபத்தை வழிபடுதல் மரபு. ஜகந்நாதர் சந்நிதிக்கு இடது பக்கம் சுபத்ராவும் பலபத்ரரும் இருந்து அருள் பாலிக்கின்றனர். கோவில் கூரையில் கிருஷ்ண லீலை ஓவியங்கள் அழகுறத் திகழ்கின்றன.
இறைவனுக்கு 56 வகையிலான பிரசாதங்கள் நைவேத்யம் செய்யப்பட்ட பின் இந்த மஹா பிரசாதம் அனைத்து பக்தர்களுக்கும் இங்கு வழங்கப்படுகிறது. புரியில் கோவர்த்தன பீடத்தை ஆதி சங்கரர் அமைத்தார். ஜெயதேவரும் கிருஷ்ண சைதன்யரும் இங்கு வழிபாடு நடத்தி வாழ்ந்தனர்.
குருநானக்கைப் பற்றிய ஒரு சுவையான வரலாறு உண்டு. குருநானக் 1508ஆம் ஆண்டு இங்கு யாத்திரையாக தன் சீடருடன் வந்தார். அவரை கோவில் உள்ளே அர்ச்சகர் அனுமதிக்கவில்லை. கடற்கரைத் தலமான புரியில் உள்ள, கடற்கரைக்குச் சென்றார் குரு நானக். அவரது சிஷ்யர் பசியால் வாடினார். அப்போது பெருமாளே ஒரு வயோதிகர் வேடம் பூண்டு தங்கத் தாம்பாளத்தில் உணவைக் கொண்டு வந்து தந்தார். அன்று இரவு அரசர் கனவில், பெருமாள் தான் செய்ததை அரசனுக்குத் தெரிவித்தார். மறு நாள் கோவிலில் தங்கத் தாம்பாளத்தைக் காணாத அர்ச்சகர் அதை மன்னனிடம் தெரிவிக்க மன்னர் புன்சிரிப்புடன் அனைவரையும் அழைத்து கடற்கரை நோக்கி விரைந்தார். அங்கிருந்த மஹான் குருநானக் அவர்களை வணங்கி அவரைக் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். நடந்ததை அனைவரும் அறிந்து குருநானக்கைப் போற்றினர். குரு நானக், புரி ஜகந்நாதர் உலகம் முழுமைக்கும் உடையவர் என்பதை மெய்ப்பித்ததோடு ‘ககன் மெய்ன்’ (Gagan Mein)என்னும் ஒரு அரிய ஆரத்தியையும் பாடி அருளினார்.
காலம் காலமாக பக்தர்கள் வழிபட்டு வரும் பலபத்ரரும் சுபத்ரா தேவியும், புரி ஜெகந்நாதரும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.