காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா? (Post No.10,224)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,224

Date uploaded in London – 18 OCTOBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சுபாஷித செல்வம்

காக்கைகள் கூவும் போது குயில் ஓசை எடுபடுமா?

ச.நாகராஜன்

சரோஜா பட் தொகுத்த சுபாஷித சதகம் என்ற நூலிலிருந்து சில சுபாஷிதங்களைப் பார்த்தோம். இதோ இன்னும் ஐந்து சுபாஷிதங்கள்

கோலாஹலே காககுலஸ்ய ஜாதே விராஜதே கோகிலகூஜிதம் கிம் |

பரஸ்பரம் சம்வததாம் கலானாம் மௌனம் விதேயம் சததம் சுதீபி: ||

காகங்கள் பல கூடி ‘கா, கா’ என்று கரையும் போது குயிலின் இனிமையான ஓசை எடுபடுமோ? ரௌடிகள் பலர் கூடி தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அறிவாளியான ஒருவன் மௌனமாகவே இருக்க வேண்டும்.

Does the cooing of a cuckoo appeal pleasing amidst the din and noise created by a flock of crows? When wicked people are arguing with each other a wise man should always keep silent.

*

சத்சங்காத் பவதி ஹி சாதுதா கலானாம்

சாதூனாம் ந ஹி கலசங்கமாத் கலத்வம் |

ஆமோதம் குஸுமபவம் ம்ருதேவ தத்தே

ம்ருதகந்தம் ந ஹி குஸுமானி தாரயந்தி ||

கெட்டவர்களும் கூட நல்லவர்கள் சேர்க்கையால் நல்லவர் ஆவர். ஆனால் நல்லவர்களோ கெட்டவர் சேர்க்கையால் கெட்டவர் ஆக மாட்டார். பூமியானது மலர்களின் சுகந்த வாசனையால் வாசனையுறுகிறது. ஆனால் மலர்களோ பூமியின் கெட்ட நாற்றத்தைத் தாம் கொள்வதில்லை.

Bad people become good in the company of the good. But the good do not become bad in the company of the bad. The earth bears the fragrance of the flowers. But the flowers do not carry the smell of the earth.

*

சுஜனோ ந யாதி வைரம் பரஹிதநிரதோ விநாசகாலேபி |

சேதேபி சந்தனதரு: சுரபயதி முகம் குடாரஸ்ய ||

ஒரு நல்லவன் மற்றவர்களுக்கு நல்லதைச் செய்யும் போது தான் அழிந்தாலும் கூட கெடுதலைச் செய்ய மாட்டான். சந்தன மரமானது தன்னை வெட்டித் தள்ளும் கோடாலியைக் கூட மணக்க வைக்கிறது.

A virtuous person engaged in doing good to others does not become inimical even at the time of (his own) destruction. The sandal wood tree makes the blade of the axe fragrant even when it is being cut.

*

சத்பிஸ்து லீலயா ப்ரோக்தம் ஷிலாலிகிதமக்ஷரம் |

அசத்பி: ஷபதேனாபி ஜலே லிகிதமக்ஷரம் ||

விளையாட்டாக ஒரு நல்லவன் பேசினாலும் கூட அது கல்லில் எழுதப்பட்டது போல ஆகி விடும். ஆனால் துஷ்டர்கள் வாக்குறுதி அளித்தாலும் கூட அது ஜலத்தின் மீது எழுதப்பட்ட வார்த்தைகள் போல ஆகி விடும்.

Even the casual speech made by righteous people is (like) words engraved on a stone. The promise made by the wicked persons are (as transitory) as words drawn on water.

*

வதனம் ப்ரஸாதசதனம் சதயம் ஹ்ருதயம் சுதாமுசோ வாச: |

கரணம் பரோபகரணம் சேஷாம் கேஷாம். ந தே வந்த்யா: ||

சாந்தமான முகம், கருணை நிரம்பிய இதயம், அமுதம் போன்ற வாக்கு, எப்போதும் பரோபகார உதவி செய்யும் செயல்கள் கொண்ட நல்லோரை யார் தான் மதிக்காமல் இருப்பார்கள்?

Who does not respect the (kind people) whose face is the abode of tranquility, heart is full of compassion, speech, nectar and whose deeds consist in doing good to others?

***

English Translation by Saroja Bhate

Source : Subhasita Shatakam Thanks : Saroja Bhate

 tags -காக்கைகள் , குயில், ஓசை,

tags-காக்கைகள் , குயில், ஓசை,

தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தேடும் ஒட்டகம்! (Post.9774)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 9774

Date uploaded in London – –  –25 JUNE   2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

டாக்டர் டி.எஸ்.கௌரிபதி திரிபாதி அவர்கள் தேர்வு செய்து வழங்கிய ஐந்து சுபாஷிதங்கள் கட்டுரை எண் 9753இல் (வெளியான தேதி: 20-6-2021) தரப்பட்டது. அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இந்தக் கட்டுரையில் காணலாம்.

தோட்டத்தில் நுழைந்தாலும் கள்ளிச் செடியையே தான் தேடும் ஒட்டகம்!

ச.நாகராஜன்

சம்ஸ்கிருத அறிஞரான டாக்டர் டி.எஸ்.கௌரிபதி சாஸ்திரி (Dr.T.S. Gouripathi Sastri)   அவர்களிடம் ஆந்திரா பல்கலைக்கழகம் நல்ல சில சுபாஷிதங்களைத் தேர்ந்தெடுக்குமாறு (1978இல்) பணிக்க, அவர் 36 சுபாஷிதங்களைத் தொகுத்துத் தந்தார். அதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பையும் அவரே செய்துள்ளார். அவற்றில் முதல் ஐந்து சுபாஷிதங்களை சென்ற கட்டுரையில் கண்டோம். அடுத்த ஐந்து சுபாஷிதங்கள் இதோ:-

ஸ்லோகார்தாஸ்வாதகாலே து சப்தோத்பத்திவிசிந்தகா: |

நீவீ மோக்ஷணவேலாயாம் வஸ்த்ரமூல்யவிசிந்தகா: ||

ஒரு கவிதையை (ஸ்லோகத்தை) ரசிக்கும்போது அதிலுள்ள வார்த்தைகள் எந்த வேர்ச்சொற்களைக் கொண்டுள்ளன என்று கவலைப்படுவோர், ஒரு பெண்மணியின் ஆடைகளை அவிழ்க்கும் போது அவள் இடையில் அணிந்திருக்கும் ஆபரணங்களின் விலை என்னவாயிருக்கும் என்று கவலைப்படுவோரைப் போலத்தான் (என்று சொல்ல வேண்டும்)!

Those who are worried about the derivation of the words at the time of the relishing the poem are really like those who worry about the cost of the lady’s waist garments while undressing them.
                                                               *

கர்ணாம்ருதம் சூக்திரஸம் விமுச்ய தோஷேஷு யத்ன: சுமஹான் கலஸ்ய|

அவேக்ஷதே கேலிவனம் ப்ரவிஷு: க்ரமேலக: கண்டகஜாலமேவ ||

செவிக்கு அமிர்தமான சூக்திகளின் சாறை ஒருவர் தரும் போது அதிலுள்ள நல்லனவற்றை விட்டு விட்டு, குறைகளைக் கண்டுபிடிக்கும் மோசமானவரின் முயற்சி பிரமாதம் தான்! ஒட்டகமானது ஒரு தோட்டத்தில் நுழையும் போது கள்ளிச் செடி எங்கிருக்கிறது என்பதைத் தான் தேடும்.

Greatest is the endeavour of the wicked man in (locating) the defects leaving the quintessence of the wise saying really Ambrosia to the ears. The camel (searches) finds the cactus only when it enters a garden.

                                  *

பரிஸ்ரமஞ்ஞம் ஜனமந்தரேன மௌனவ்ரதம் விப்ரதி வாக்மிநோபி |

வாசம்யமா: சந்தி வினா  வஸந்தம் பும்ஸகோகிலா: பஞ்சமசஞ்சவோபி ||

மிகப்பெரும் பேச்சாளர்கள் கூட, ஒரு அறிவாளியின் முயற்சி எத்தகையதாயிருக்கும் என்று உணரும் ஒருவர் இருக்கும் போது தவிர மற்ற நேரத்தில், மௌன விரதத்தையே மேற்கொள்வர். ஆண் குயில்கள் மிக ரம்யமான ஐந்தாம் ஸ்வரத்தை தனது  குரலில் எழுப்பும் சக்தியைக் கொண்டிருந்தாலும் கூட வசந்த காலத்தைத் தவிர இதர காலங்களில் மௌனமாகவே இருக்கும்.

Even the great orators take the vow of silence except when they find a person who knows what is meant by scholarly endeavor. Although the male cuckoos endowed with the capacity to sing the (charming) fifth musical note in their voices keep quiet except in the spring.

*

யஸ்ய நாஸ்தி ஸ்வயம் ப்ரஞ்ஞா சாஸ்த்ரம் தஸ்ய கரோதி கிம் |

லோசனாப்யாம் விஹீனஸ்ய தர்பண: கிம் கரிஷ்யதி ||

இயல்பான அல்லது உள்ளார்ந்த பகுத்தறிவைக் கொண்டிராத ஒருவனுக்கு ஒரு அறிவாளி அறிவை அடைய எடுத்துக் கொள்ளும் முயற்சி என்ன லாபத்தைத் தரும்? இரண்டு கண்களையும் இழந்த ஒருவனுக்கு கண்ணாடியினால் என்ன பயன்?

How can the knowledge or the discipline wrought by a scholarly endeavour benefit a person who is destitute of inherent or natural discrimination? What can a mirror do to a person who is destitute of both of the eyes?

*

யஸ்ய நாஸ்தி விவேகஸ்து கேவலம் யோ பஹுஸ்ருத: |

ந ஸ ஜானாதி சாஸ்த்ரர்தாத் தர்வீ  பாகரஸாந்வி ||

இயல்பாக பகுத்தறியும் அறிவைக் கொண்டிராமல் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு, ஒரு அகப்பைக்கு உணவின் சுவை என்னவென்று எப்படித் தெரியாதோ அது போலவே, உள்ளார்ந்த அர்த்தம் என்னவென்று ஒரு போதும் தெரியாது.                                                               The person who is devoid of discrimination but who reads widely never knows the (real) meaning, i.e., the (real) essence of the disciplines just as the ladle does not know the relish of a dish.

***

Index :

கவிதையை ரசிப்பது எப்படி?

நல்ல சூக்திகளில் குறை காணுபவன்

அறிவாளிகள் மௌனமாக இருக்கும் சமயம்

இயல்பான பகுத்தறிவு இல்லாதவனுக்கு எவ்வளவு படித்தாலும் பயனில்லை.

 –subham–

tags- குயில் , ஒட்டகம், சுபாஷிதம் 

ஜலே தைலம், கலே குஹ்யம், பாத்ரே தானம்!!!

Compiled by London swaminathan

Post No.2214

Date: 4   October 2015

Time uploaded in London: காலை 13-30

Thanks for the pictures.

Don’t use pictures. Don’t reblog for at least a week.

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு” (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–