அன்றாட நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி! (Post No.4555)

Date: 28  DECEMBER 2017

 

Time uploaded in London- 6-04 am

 

Written by S NAGARAJAN

 

Post No. 4555

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.

 

 

 

ஸ்ரீ ஜோஸியம் (ஞான ஆலய குழுமத்திலிருந்து வெளியாகும் மாதப் பத்திரிகை) டிசம்பர் 2017இல் வெளியாகியுள்ள கட்டுரை

 

 

அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுக்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசி!

 

ச.நாகராஜன்

 

ஹிந்து வாழ்க்கை முறையில் ஜோதிடத்தின் இடம் தனி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று குழந்தை மனதில் பதியும் படி அவ்வை பிராட்டி அருளினார். அதே போல ஜோதிடர் இல்லாத ஊரில் ஒரு தினமும் கூட வாழாதே என்று முதுமொழி கூறுகிறது.

 

ருணதாதா ச தேவக்ஞ: ஸ்ரோத்ரிய: சுஜலா நதி

யத்ர ஹோதே ந வித்யந்தே ந தத்ர திவஸம் வஸேத்

 

பழைய காலம் தொட்டு வழங்கி வரும் இந்த சுபாஷித ஸ்லோகத்தின் பொருள்: கடன் தந்து ஆதரிக்காத ஒருவர், ஜோதிடர், வேதங்களை அறிந்த குருக்கள், நல்ல நீரைக் கொண்டு ஓடும் நதி – இவையெல்லாம் எங்கு இல்லையோ அங்கு ஒருவன் ஒரு நாள் கூட வசிக்கக் கூடாது.

அன்றாட வாழ்விற்கு ஜோதிடரைக் கலந்து ஆலோசிக்காமல் ஒரு நல்ல காரியத்தைக் கூடத் தொடங்காத பண்புடைய வாழ்வு ஹிந்துத்வ வாழ்வு.

 

புத்தாடைகளை எந்த நட்சத்திரத்தில் அணிய வேண்டும்?

அவிட்டம், புனர்பூசம்,ஹஸ்தம், சித்ரா, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்), பூசம், அஸ்வினி ஆகிய நட்சத்திர தினங்களில் புத்தாடைகளை அணிய வேண்டும் என்று முகூர்த்த மார்த்தாண்டம் என்ற நூல் விளக்குகிறது.

புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் புத்தாடை அணிய முகூர்த்த மார்த்தாண்டம் அறிவுறுத்துகிறது.

 

கடனை வாங்க வேண்டி இருந்தால் எந்த நாளில் வாங்க வேண்டும்?

 

வீட்டு லோன், படிப்பு லோன், கல்யாண லோன் என்று இன்று லோன் இல்லாத வாழ்க்கையே கிடையாது. வங்கிக் கடன் இன்று சர்வ சாதாரணமாக ஆகி விட்டது. கடனை வாங்குவதற்குக் கூட நமது நூல்களில் வழிகாட்டுதல்கள் உண்டு.

புதன்கிழமைகளில் ஒரு போதும் கடன் வாங்காதே என்று ராமாசார்ய டீகா அறிவுறுத்துகிறது.

வாங்கிய கடனைத் திருப்பித் தர உகந்த நாள் செவ்வாய்க்கிழமை.

ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளில் கடனை ஒரு போதும் வாங்கக் கூடாது

.

திதிகளில் கொண்டாட்டமும், விலக்க வேண்டியவையும்

 

ஹிந்து வாழ்க்கையும் முறையில் திதிகளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.

அக்ஷய திருதியை – திருதியை

விநாயக சதுர்த்தி – சதுர்த்தி

வஸந்த பஞ்சமி – பஞ்சமி

ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி

ரத சப்தமி – சப்தமி

கிருஷ்ண ஜயந்தி – ஜன்மாஷ்டமி – அஷ்டமி

ராம நவமி – நவமி

மஹா சிவராத்திரி – மஹா சதுர்த்தசி – சதுர்த்தசி

சித்ரா பௌர்ணமி – பௌர்ணமி

மஹாளய அமாவாசை – அமாவாசை

இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

எந்த திதியில் எதை விலக்க வேண்டும் என்பதற்கும் கூட நம் சாஸ்திரங்கள் தீர்க்கமான வழிகாட்டுதலைத் தருகின்றன.

ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய தினங்களில் எண்ணெய் மற்றும் மாமிசத்தை விலக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் கூறுகின்றன

 

ஆக இப்படிப் பல்வேறு விதிகளை நமது நலன் கருதி இதனால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கால ஓட்டத்தில் பரீட்சித்ததாலும், உள்ளுணர்வாலும் கண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பல்வேறு சாஸ்திர நூல்களில் கூறியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் படித்துத் தேர்ந்தவரே ஜோதிடர். ஆகவே தான் அவரிடம் ஒரு காரியத்தைத் தொடங்கு முன் அதை என்று செய்யலாம் என்பதைக் கேட்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.

அவரும் நல்ல நாளைக் குறிப்பதோடு எதை எதைச் சேர்க்க வேண்டும், எதை எதை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்.

ஒவ்வொரு சின்ன விஷயத்திற்கும் கூட விதிமுறைகளை வகுத்திருக்கும் மதம் ஹிந்து மதம் என்பது ஆச்சரியமான விஷயம்.

***

 

ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம் (Post No.3861)

Written by S NAGARAJAN

 

Date:29 April 2017

 

Time uploaded in London:-  7-28 am

 

 

Post No.3861

 

 

Pictures are taken from different sources; thanks.

 

contact: swami_48@yahoo.com

 

 

ஜோதிடமே துணையாகும்

 

ஜோதிட பலன் பார்க்க திதியே முக்கியம்:

விதி விளக்கம் – 1

 

 

ச.நாகராஜன்

 

ஜோதிடம் கடல் போன்ற ஒரு சாஸ்திரம். இதை நீந்திக் கடந்தவ்ர்கள் மிகச் சிலரே.

 

ஜோதிடத்தில் பலன் பார்க்க ஏராளமான அம்சங்கள் உள்ளன. திதியைப் பற்றி அவ்வளவாக யாரும் பொதுவாகப் பொருட்படுத்துவதில்லை.

ஆனால் ‘சோதிட தர்ஸனம் என்னும் விதி விளக்கம்’ என்னும் நூல் திதியின் அற்புத மஹிமைகளை நன்கு விளக்குகிறது.

1897ஆம் ஆண்டு “க்வர்ன்மெண்ட் உத்தியோகஸ்தராயிருந்து பென்ஷன் வாங்கி வரும்  மிட்டா – முனிசாமி செட்டி. பி.ஏ. (பச்சையப்பன் காலேஜ்)” எழுதிய இந்த நூல்  1934ஆம் ஆண்டு சென்னையில் பதிக்கப்பட்ட ஒரு நூலாகும்.

 

நூலாசிரியர் தரும் பல்வேறு தகவல்கள் மிகுந்த சுவாரஸ்யமானவை.

 

அவற்றில் சிலவற்றை இந்தக் குறுந்தொடரில் பார்க்கலாம்.

 

  1. இந்து விரதமும் திதியும்    

 

நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருக்கும் விரதங்களும் முக்கிய பண்டிகைகளும் திதியை முதன்மைப் படுத்தியே அமைக்கப்பட்டுள்ளன. அனேக விரதங்களில் முக்கியமான சிலவற்றைக் கீழே காணலாம்:

 

 

  • கணேச சதுர்த்தி அல்லது விநாயக சதுர்த்தி – சதுர்த்தி
  • ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி
  • ரத சப்தமி     – சப்தமி
  • கிருஷ்ண ஜயந்தி அல்லது கிருஷ்ணாஷ்டமி – அஷ்டமி
  • ஸ்ரீ ராம நவமி – நவமி
  • மஹா சிவராத்திரி,ம்ஹா சதுர்த்தசி – சதுர்த்தசி
  • சித்திரா பௌர்ணமி – பௌர்ணமி
  • மாளய அமாவாசை அல்லது சர்வபிதுரு அமாவாசை – அமாவாசை

 

இது தவிர இறந்த கால திதி அனுஷ்டானம், சில நட்சத்திர சம்பந்தமான திதிகள், சங்கராந்தி சம்ப்ந்தப்பட்ட திதிகள், ராமாயணம், ம்ஹாபாரதம் ஆகிய காவியங்களில் வரும் முனீஸ்வரர், ஆசாரியர் ஆகியோரின் பிறந்த அல்லது திதிகள் போன்றவை திதிகளின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன.

ஒவ்வொரு ஹிந்துவும் இறந்த கால திதியை அனுஷ்டித்தே பெரியோர்களுக்குச் சிரார்த்தம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்கிறார்.

 

 

ஆகவே விதி விளக்கத்திற்குரிய்  திதியை ஒவ்வொருவரும் தீர்க்கமாக அனுஷ்டிக்க வேண்டும்.

 

திதிகளே நவகிரகங்களுக்கு இருக்கும் ந்ன்மை தீமை பலன்களைத் த்ருகிறது. தீமையான திதியினால் அமைந்த கிரகங்களும் கூட எக்கதியில் அவைகள் நன்மையோ அல்லது இஷ்ட ப்ராப்தியோ செய்கின்றனவென்றும் , தீமையோ அல்லது மாரகமோ எப்போது செய்கின்றனவென்றும், எக்காலத்தில் யோகம் அதாவது, ஒரு ஜன்மாவின் லௌகிக அந்தஸ்து பொருள், சொத்து, க்ஷேமம், இவைகளுக்கு தீமையையோ அல்லது க்ஷேமத்தையோ விளைவிக்கின்றன என்றும் திதிகளினாலேயே ஏற்படுகின்றன.

 

 

ஒவ்வொருவரும் தங்கள் திதியை மிக நுட்பமாகக் கவனித்து வந்தால் அதன் பலனையும் உற்று நோக்கி வந்தால் திதியில் இருக்கும் தெய்வீக ரகசிய ந்ன்மை, தீமையை அறிய முடியும்.

 

இப்படிக் கூறும் இந்த ஜோதிடர், சோதிடத்தில் திதியின் மஹிமையை அலசி ஆராய்ந்து தருகிறார். நூலாசிரியர் தரும் மேலும் சில் சுவையான தகவல்களை அடுத்துக் காண்போம்.

-தொடரும்

தென்புலத்தாருக்கு 96 கும்பிடு!

rameswaram

Rameswaram Agni Theertham where ancestors are worshiped on important days.

ஆராய்ச்சிக் கட்டுரையாளர்- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்- 1371: தேதி 26 அக்டோபர் 2014

தந்யம் யசஸ்யம் ஆயுஷ்யம் ஸ்வர்க்யம் சத்ரு விநாசனம்
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145

உலகில் மிகவும் ஆச்சர்யமான பிறவிகள் இந்துக்கள். முன்னோர்களை அவர்கள் வழிபடும் முறை தனிச் சிறப்புடைத்து. இவர்கள் போல இறந்து போனோரைக் கொண்டாடும் இனம் உண்டோ என்றில், இல்லை என்று பகர ஒரு நொடியும் தேவை இல்லை. பெரிய தலைவர்கள் இறந்தால் அடக்கம் நடைபெறும் போது 21 முறை பீரங்கிக் குண்டு வெடித்து மரியாதை செய்வர். இதற்கு கடற்படை சம்பிரதாயமே காரணம் என்று கலைக் களஞ்சியங்கள் செப்பும். பின்னர் ஆண்டுதோறும் அவர்கள் கல்லறைக்குச் சென்று மலர் தூவுவர். ஆனால் இந்துக்களோ ஆண்டுக்கு குறைந்தது 96 முறை வணங்குவர். ஆதிகாலத்தில் மூன்று வர்ணத்தாரும் செய்த இக்கடன் இப்போது குறுகிப்போய் ‘’பிராமணர் மட்டும்’’ என்று ஆகிவிட்டது. அதுவும் அருகிப் போய் 96 முறைக்குப் பதில் 12 அல்லது 24 முறை என்று சுருங்கிவிட்டது. காலத்தின் கோலம்!!

தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?

திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)

தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல்
இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை (41)
என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.

அதாவது கிருஹஸ்தன் என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.

thai amavasya

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பிள்ளை பெறுவது எதற்காக என்று புற நானூற்றில் கோப்பெருஞ்சோழன் சொல்கிறான் — சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு வந்த பல புலவர்களில் ஒருவர் பொத்தியார். அவருக்கு இடம் தர மறுத்த சோழ மன்னன் புதல்வன் பிறந்த பின் வருக — என்கிறான். புதல்வர் எதற்காக? பிண்டோதக் கிரியை என்னும் இறுதி யாத்திரைக் கிரியை செய்வதற்காகும் என்று உரைகாரர்கள் நவில்வர்.

உரைகாரர் சொன்னால் நாங்கள் நம்பவேண்டுமா? என்போருக்கு அகநானூற்றுப் புலவர் செல்லூர் கோசிகன் கண்ணனார் — (கௌசிக கோத்ரத்துதித்த கிருஷ்ணன் என்னும் புலவர்) — வாய்மொழியாக உண்மை அறிதல் நலம்:

“இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர்தீர்காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்” எனப்——— அகம்.66

பிள்ளைகள் இல்லாவிட்டால் நரகமா?

பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?

இல்லை. இல்லவே இல்லை. ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளிதின் விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று )

இதனால்தான் பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும் 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.

TharpaNam Pic

இதோ அவர்கள் சொல்லும் அற்புத மந்திரங்கள்:
எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய) — அவர்கள் எல்லாம் தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்.

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்கும்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இவ்வாறு ஒரு ஆண் — தனது வம்சத்தில் பிறந்து இறந்த தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா ஆகிய மூவருக்கும் நீர்க்கடன் செலுத்திய பின்னர், தாயின் வம்சத்திலும் தந்தை, தாத்தா, கொள்ளுத் தாத்தா என்று எள்ளும் நீரும் இரைப்பர். இந்த ஆறு பேருடைய மனைவிமார்களும் இதே போல மரியாதை பெறுவர். எல்லோரும் இறந்து போயிருந்தால் இப்படி 12 பேருக்கும் வழிபாடு நடக்கும். இந்த அற்புத முறையை உலகில் வேறு எங்கும் காண முடியாது!!

இனி இந்துக்கள் – குறிப்பாக பிராமணர்கள் செய்ய வேண்டிய 96 இறந்தார் கடமைகளைத் தருகிறேன் (ஸ்ரீரங்கம் பி.ஜே.ஸ்ரீனிவாசன் எழுதிய நூலில் இருந்து)
அந்தக் காலத்தில் தீ மூட்டி சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்:

adi amavasya

12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.

-சுபம்-