பரத = பா+ரா+தா & ந்ருத்யம், ந்ருத்தம் வேறுபாடு (Post No.6349)

Written by London swaminathan

swami_48@yahoo.com


Date: 6 May 2019


British Summer Time uploaded in London – 8-27 am

Post No. 6349

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))


–விதுர நீதி 1-73

— subham —tamilandvedas.com, swamiindology.blogspot.com

subham

வேதத்தில் பரத நாட்டியம்!

JR

Picture of Famous Bharata Natyam Dancer Dr Janaki Rengarajan

Research Article written by London swaminathan

Post No. 1777; Date 5th April 2015

Uploaded from London at  14-00

This is already published in English in two parts

உலகிலேயே மிகப் பழமையான நூல் ரிக்வேதம். அதிலுள்ள பல சம்ஸ்கிருதச் சொற்களை தமிழர்களாகிய நாம் இன்றும் அன்றாடம் பேசும் உரையாடலில் பயன்படுத்துகிறோம். இன்றும் அந்த வேதம் கோவில்களிலும் யாகங்களிலும், திருமணச் சடங்குகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதில் நாட்டியம் பற்றியும், சங்கீதம் பற்றியும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. வேதத்தில் வரும் இசைக் கருவிகள், ஆபரணங்கள், தங்க நகைகள், நாட்டியம் – சங்கீதம் ஆகிய எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக வைத்துப் பார்க்கையில் அவர்கள் எவ்வளவு நாகரீகம் படைத்தவர்கள் என்பதை எண்ணி வியக்கிறோம்.

ஒரு நாட்டில், மக்களின் அடிப்படைத் தேவைகள் – உணவு, உடைகள், உறைவிடம் – ரோட்டி கப்டா அவர் மகான் – நிறைவடையும் போதுதான் கவலைகள் மறையும்; கலைகள் மலரும். அவைகள் பரிணமிக்க மேலும் சிறிது காலம் பிடிக்கும். ரிக் வேத காலத்தில் பெண்கள் நகை அணிந்து சபைகளுக்குச் செல்லும் மந்திரங்களைப் பார்க்கையில் அவர்கள் நாகரீகத்தில் மிகவும்  முன்னேறியவர்கள் என்று தெரிகிறது.

குஜராத்தி பெண்கள் இன்று ‘கர்பா’ நடனம் ஆடுவது போல— மேலை நாட்டில் கம்பத்தைச் சுற்றி ‘மே போல் டான்ஸ்’ ஆடியது போல— வேத காலப் பெண்கள் வட்டமாக நின்று ஆடிய குறிப்புகளும் உள.

இந்திரனை நாட்டியக்காரன் என்று ரிக்வேத மந்திரங்கள் துதிபாடுகின்றன. இந்திரன் ஆடியதோடு மற்றவர்களை ஆடவைத்ததையும், கந்தர்வர்கள், அப்சரஸ்கள் ஆடியதையும் காண்கிறோம்.

பிற்கால புராணக் கதைகளில் இதன் முழு விவரங்களும் கிடைக்கின்றன. தேவ லோகத்தில் அரம்பையர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகா, திலோத்தமா – ஆடியதை நாம் அறிவோம். கந்தர்வர்கள் என்பவர்களை இசையுடன் இணைத்து கந்தர்வ கானம் என்று புகழ்வதையும் நாம் கேட்கிறோம். இதற்கெல்லாம் வேதத்தில் மூலம் (வேர்) இருக்கிறது.

ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களில் இதுபற்றி கூடுதலாகத் தகவல் கிடைக்கிறது. அர்ஜுனன், அலி வேடம் தரித்து உத்தரை என்ற ராஜ குமாரிக்கு சங்கீதம் நடனம் பயிற்றுவித்ததை அறிவோம். தமிழில் சிலப்பதிகாரத்திலும் அதன் உரைகளிலும் நாட்டியம் பற்றிய முழு விவரங்களும் உள்ளன. (இது பற்றி நான் எழுதிய முந்தைய கட்டுரைகளைக் காண்க). இந்தப் பிண்ணனியில்தான் சம்ஸ்கிருதத்தில் பரதர் எழுதிய பரத நாட்டிய சாஸ்திரமும் புகழ் பெற்றது.

janki fb

வேதத்தில் வரும் நாட்டிய விஷயங்கள்

தொல்பொருட் துறை அறிஞர் டாக்டர் இரா நாகசாமி 25-2-1989-ல் பம்பாய் ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் சென்னை நாரத கான சபையிலும் ஆற்றிய ஆங்கிலச் சொற்பொழிவுகளில் குறிப்பிடுவதாவது: ரிக் வேதத்தில் சரியான பாத அசைவுகளோடு ஆடும் மருத்துகளை ந்ருதவ: (நடனமாடுவோன்) என்று அழைக்கின்றனர்.

மார்பில் தங்க நகைகளோடு ஆடும் நடனக்காரர்களே! உங்கள் சகோதரத்துவத்தை நாடி மானுடப் பிறவிகளும் ஓடி வருகின்றனர். எங்களையும் பார்த்துக் கொள்வாயாக  – என்று ரிக் வேத துதி கூறுகிறது (8-20-22)

மருத்துக்கள் தாளத்துக் கேற்ப ஆடுவதோடு மட்டும் நில்லாமல், பாடவும் செய்கின்றனர். மருத்துக்கள் ஆண்கள். பெண்களில் மிகச் சிறந்த நடனம் ஆடும் உஷை (அதிகாலைப் பொழுது) பற்றிய அழகிய பாடலும் உண்டு. அவள் பகட்டான ஆடை அணிந்து வரும் காட்சியை ரிக் வேத ரிஷி வருணிக்கிறார்.

“அதிகாலைப் பொழுது — உஷா— கிழக்கு வானத்தில் அழகிய வண்ணங்களில் தோன்றிவிட்டாள். பறவைகள் சிறகடித்துப் பாடுகின்றன (புள்ளும் சிலம்பின காண் – ஆண்டாள் திருப்பாவை)). மனிதர்கள் எழுந்து சுறுசுறுப்பான வேலைகளில் இறங்கிவிட்டனர். உஷத் காலம், ஒரு நடனக்காரி போல, எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளிக்கிறாள்”.

உவமை பற்றிய விதிகள், மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களையே, உயர்ந்த விஷயங்களையே உவமைகளாக்க வேண்டும் என்று சொல்லுகின்றன. வேத காலத்தில் நாட்டியம் என்பது மிகவும் பிரபலமாக இருந்ததால்தான் புலவர் இந்த உவமையைக் கையாளுகிறார்.

நாட்டியக் கலை மிகவும் உன்னத நிலைக்குச் சென்றதைக் காட்டும்  – மிகவும் வளர்ச்சி பெற்றதைக் காட்டும் — பல உவமானங்கள் ரிக் வேதத்தில் வருகின்றன. நாட்டியக்காரிகள், சமூகத்தில் முக்கிய இடம் பெறுகின்றனர். அவர்கள் இல்லாமல் எந்தப் புனிதச் சடங்கும் நடைபெறமுடியாது. புனிதத்துவத்துக்கும், பூரனத்துவத்துக்கும் சின்னமாக விளங்குவது பூரண கும்பம். “ஓ! அழகிய பெண்மணியே, நெய்யும் தேனும் நிறைந்த அந்த பூரண கும்பத்தை எடுத்து வா” என்று இன்னும் ஒரு துதி கூறும்.

அமரகோசம் என்னும் அற்புத சம்ஸ்கிருத நிகண்டில் நாட்டியம் பற்றிப் பல சொற்கள் இருப்பதையும் நாகசாமி எடுத்துரைத்தார்:

தாண்டவம் நடனம் நாட்யம் லாஸ்யம் ந்ருத்யம் ச நர்த்தனே

தன்யத்த்ரிகம் ந்ருத்ய கீத வாத்யம் நாட்யம் இதம் த்ரயம்

(ஆங்கிலச் சொற்பொழிவில் இருந்து நான் மொழி பெயர்த்ததில் பிழைகள் இருந்தால் அவை என்னுடையவை என்று அறிக)

இனி சந்திரா ராஜன் எழுதிய காளிதாசன் எற ஆங்கில நூலில் சொல்லும் சில கருத்துக்களைக் காண்போம்:–

பரத மாமுனி, சம்ஸ்கிருதத்தில் எழுதிய நாட்டிய சாஸ்திரம் என்ற நூல்தான் உலகில் நாடகம், நாடகவியல் கோட்பாடுகள் பற்றிய மிகப் பழைய நூல் (பழங்காலத்தில் நாடகமும் நடனமும் இணைந்தே மக்கள் முன் வைக்கப்பட்டன).

வேத மந்திரங்களைப் பல்ர் பாடியதற்கான சான்றுகளைப் பார்க்கையில் அவை கோஷ்டி கானம் என்பது தெளிவாகிறது. மேலும் அதில் திரும்பத் திரும்ப வரும் பல்லவிகலையும் காண்கிறோம். மேலும் பெண்கள் அழகிய ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்து கைகளில் நீர்க்குடங்களுடன் யாக மேடைகளைச் சுற்றி ஆடிப் பாடி நடன மாடிய காட்சிகளும் மந்திரங்களில் வருகின்றன. இந்தப் பல்லவி, ஆடல், பாடல் ஆகியன அக்காலத்தில் நாடகத்தின் ஆதி வடிவம் ஆகும்.

எங்களுக்கு வரம்பிலா மகிழ்ச்சியை அருள்வாயாக என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-100); மாட்சிமை பொருந்திய அன்னை உன்னை ஈன்றெடுத்தாள். அருள் பெற்ற அன்னை உன்னைப் பெற்றெடுத்தாள்– என்ற வரிகள் மீண்டும் மீண்டும் வருகின்றன ( ரிக் 10-134).

இந்திரனை நாட்டியக் காரன் என்று சொல்லும் ரிக்வேத மந்திரங்கள் வசந்த காலத்தில் நடனமாடும் மருத்துக்கலைப் பற்றியும் பாடுகின்றன (ரிக். 5—52; 6—63). அஸ்வினி தேவர்களும் இவ்வாறு போற்றப்படுகின்றனர்.

jr natraj pose

காளிதாசனில் நாட்டியம்

உலகப் புகழ் பெற்ற சம்ஸ்கிருதக் கவிஞன் கி.மு. முதல் நூற்றாண்டில் வசித்தான் என்னும் பல அறிஞர்களின் கருதை சங்க காலப் பாடல்களும் உறுதி செய்வதைப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் இதே பிளாக்கி- கடந்த ஐந்தாண்டுகளாக எழுதி வருகிறேன். அவனும் பல இடங்களில் நாட்டியம் பற்றிக் குறிப்பிடுகிறான். அவனுக்கு 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வாழ்ந்த வராஹமிகிரரும் பிருஹத் சம்ஹிதாவில் கிரகணமும், கிரகங்களும் நாட்டியப் பெண்களைப் பாதிப்பது பற்றி மூன்று இடங்களில் குறிப்பிடுவான்.

காளிதாசன் எழுதிய நடனக் குறிப்புகலைத் டனிக் கட்டுரையில் தருவேன்.

ரிக்வேதத்திலும் அதர்வ வேதத்திலும் நடனம் பற்றி வரும் இடங்கள் பின்வருமாறு:

ரி.வே.:–

1-130-7; 2—22-4; 5-52-12; 6-63-5; 7-33-9, 7-33-12, 7-10-95; 8-20-22, 8-24-9, 8-24-12, 8-92-2; 10-100, 10-123-5, 10-134, 10-132-6

அ.வே.

4-37-1, 4-37-4, 4-37-5, 7-12-2, 12-1-1, 12-1-41

ரிக் வேதத்தில் கந்தர்வர், அப்சரஸ் பற்றிய பாடல்களும் கூர்ந்து நோக்கப்படவேண்டியவை.

அதர்வவேதத்தில் பூமி பற்றிய பாடல் மக்கள் எப்படி ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்று காட்டுகிறது.

இருபதுக்கும் மேலான இசைக் கருவிகள், இருபதுக்கும் மேலான ஆபரணங்கள், இருபதுக்கும் மேலான நடனக் குறிப்புகள் முதலியன் 3700 ஆண்டுகளுக்கு முந்தைய, உலகின் மிகப் பழைய நூலான ரிக் வேதத்தில் இருப்பது — ரோடி-கப்டா அவ்ர் மகான்—பற்றிய கவலையே இல்லாத ஒரு செழிப்பான நாகரீகத்தைக் காட்டுகிறது என்பதில் இனியும் ஐயம் உண்டோ!!

jan2 (2)

நற்றிணை அதிசயங்கள்!

acrobat-

கட்டுரை மன்னன் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1361; தேதி அக்டோபர் 21, 2014.

புறநானூற்றில் உள்ள அதிசயங்களை “புறநானூற்று அதிசயங்கள்” என்ற தலைப்பில் சில நாட்களுக்கு முன் எழுதினேன். இன்று நற்றிணை என்னும் நூலில் உள் அதிசயங்களைக் காண்போம். சங்க இலக்கியத்தில் 18 நூல்கள் (பத்துப்பாட்டு 10+ எட்டுத்தொகை 8 = 18) உள்ளன. இவற்றில் 2400 பாடல்களுக்கு மேல் இருக்கின்றன. சங்க இலக்கியத்தில் காணும் 18 நூல்களையும் மேல்கணக்கு நூல்கள் என்பர். அதற்குப் பின் எழுந்த திருக்குறள் முதலிய 18 நூல்களைக் கீழ்க்கணக்கு நூல்கள் என்பர். தமிழர்கள் எவ்வளவு புத்திசாலி பாருங்கள். 18 என்ற எண்ணின் சிறப்பை அறிந்து முக்கியமான 36 நூல்களை நமக்கு அழகாக வரிசைப்படுத்திக் கொடுத்து விட்டனர்.

எட்டுத்தொகை என்னும் தொகுப்பில் உள்ள எட்டு நூல்களில் ஒன்று நற்றிணை. இது அகம் என்னும் காதல், குடும்ப வாழ்வு பற்றிய 400 பாடல்களைக் கொண்டது. தமிழனுக்கு 400 என்ற எண்ணின் மீது ஒரு தனி காதல் உண்டு. புற நானூறு, அக நானூறு, நற்றிணை நானூறு, நாலடியார் நானூறு, பழமொழி நானூறு என்று அடுக்கித் தள்ளிவிட்டனர்!

அதிசயம் 1
பாடல் 132 அந்தக் காலத்தில் யாமக் காவலர் என்னும் போலீஸ் படை (Policing) தமிழ் நாட்டில் இருந்து பற்றிக் கூறும்:
காப்புடை வாயில் போற்று ஓ என்னும்
யாமம் கொள்பவர் நெடு நா ஒண்மணி
ஒன்று எறி பாணியின் இரட்டும்

எல்லோரும் அவரவர் வீட்டு வாசல் கொல்லைப்புறம் எல்லாவற்றையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சத்தம் எழுப்பிக் கொண்டே பெரிய மணியை மாறி மாறி அடித்துச் செல்வார்களாம் சங்க கால போலீஸ் படை.!!

அதிசயம் 2
கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். இந்தக் காலத்தில் அவரை மிஸ்டர் மஹாதேவன் என்று அழைக்கலாம். மஹாதேவன் என்று சிவன் பெயரை வைத்துக் கொண்டு இவர் பாடியது மஹாபாரதம்! சரி போகட்டும்! என்று விட்டுவிட முடியவில்லை. இவர் நற்றிணையில் பாடிய கடவுள் வாழ்த்து விஷ்ணு சஹஸ்ர நாமம் என்னும் மஹாபாரதப் பகுதியாகும்! அதில் விஷ்ணுவின் புகழைப் பாடுகையில்

மாநிலம் சேவடி ஆக, தூநீர்
வளைநரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக
பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே (கடவுள் வாழ்த்து)

இது விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்,

க்ஷீரோதந்வத் ப்ரதேசே சுசிமணி விலஸத்ஸைகதே
என்று துவங்கும் தியான ஸ்லோகத்தில்
“பூ: பாதௌ யஸ்ய நாபிர் வியதஸுர நில: சந்த்ர ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணா வாசாச் சிரோத் த்யௌர் முகமபி தஹனோ யஸ்ய வாஸ்தேயமப்தி:” — என்பதன் மொழி பெயர்ப்பாகும்.

vilakku etral

அதிசயம் 3
பரணர் பாடிய பாடல் 201 ல் பூகம்பம், நில அதிர்ச்சி (Earth quake) பற்றிக் குறிப்பிடுகிறார். தமிழ்நாடு, நில அதிர்ச்சி பாதையில் இல்லாவிட்டாலும் வட இந்தியாவில் நடந்த பூகம்பங்கள் பற்றி சங்க காலப் புலவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. பெரு நிலம் கிளறினும் என்ற சொல் இதைக் குறிக்கும். வேறு பல புலவர்கள் நிலம்புடை பெயரினும் என்றும் பாடுவர். இதே பாடலில் கொல்லி மலைப் பாவை பற்றிய அதிசயச் செய்தியையும் சொல்கிறார். கொல்லி மலையின் மீதுள்ள பாவை, என்ன இயற்கைச் சீற்றம் வந்தாலும் அதன் அழகை இழக்க மாட்டாளாம். இப்போது அந்தக் கொல்லிப்பாவை எங்கே என்று தெரியவில்லை. ஒரு வேளை ஏதோ ஒரு கோவிலில் இருக்கலாம்.

அதிசயம் 4
பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய 202 ஆம் பாடலில் கார்த்திகை நாளன்று அழகாக விளக்கு ஏற்றி வைத்திருப்பதை உவமையாகப் பாடுகிறார். தமிழ் இந்துக்கள் 2000 ஆண்டுகளாக இன்னும் கார்த்திகை விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். எத்தனை நாத்திகப் பிரசாரம் நடந்தாலும் தமிழர்கள் அற வழியினின்று பிறழமாட்டார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

அதிசயம் 5
பாடல் 95-ல் கொட்டம்பலவானர் என்னும் புலவர் அந்தக் காலத்தில் கழைக்கூத்தாடிகள் (acrobats) கயிற்றில் தொங்கி சாகசச் செய்ககளைப் புரிந்ததைப் பாடுகிறார். வாத்தியங்கள் முழங்குகையில் ஒரு பெண் கயிற்றில் ஏறி சாகசம் செய்ததைப் பார்த்து குரங்குக் குட்டியும் கயிற்றில் ஏறி சர்கஸ் செய்ததாம். இதிச் சிறுவர்கள் பார்த்து ஆரவாரம் செய்கின்றனர். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் பார்த்து மகிழ்கிறோம். காசு இல்லாமல் பார்க்கும் ஏழைகள் சர்கஸ் காட்சி இது.

acrobat-chennai

அதிசயம் 6
பாடல் 97-ல் பூ வியாபாரம் பற்றி மாறன் வழுதி பாடுகிறார். பூ வாங்கலியோ பூவு!! பூ வாங்கலியோ பூவு!! என்று பெண்கள் கூவி வித்ததை அழகாய்ப் பாடுகிறார். 2000 ஆண்டுகளுக்குப் பின் இன்றும் இக்காட்சிகளை நாம் தமிழக வீதிகளில் பார்க்கிறோம்:
மதனின் துய்த்தலை இதழ் பைங் குருக்கத்தியொடு
பித்திகை விரவு மலர் கொள்ளீரோ? என ………………………………
பாடல் 118-ல் பாதிரிப் பூக்களை வட்டிலில் போட்டுக் கூவி விற்கும் ஒரு பெண் பற்றி பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடுகிறார்.

அதிசயம் 7
தமிழர்கள் ஜோதிடத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை உடையவர்கள்!! பன்றி கூட பல்லி சொல் கேட்டு சகுனம் பார்த்ததை உக்கிரப் பெருவழுதி பாடுகிறார் (பாடல் 98)

அதிசயம் 8
பாடல் 90-ல் அஞ்சில் அஞ்சியார் என்னும் புலவர் அந்தக் காலத்தில் உடைகளுக்கு கஞ்சி (starch) போடும் வழக்கம் இருந்ததைக் குறிப்பிடுவார். அதுமட்டுமல்ல பெண்கள் ஊஞ்சல் ஆடுவது பற்றியும் பாடுவார். இதே போல பாடல் 222-ல் கபிலரும் ஊஞ்சலைக் குறிப்பிடுகிறார். காதல் வயப்பட்ட பெண்ணை தோழி கிண்டல் செய்கிறாள்: நீ ஊஞ்சலில் ஏறிக்கொள், நான் வேகமாக ஆட்டுகிறேன். ஊஞ்சல் உயரமாகச் செல்லும் போது மலை மீதுள்ள உன் காதலனது ஊரையும் பார்க்கலாம். அதைப் பர்த்தாலேயே உனக்கு ஆனந்தம் ஏற்பட்டுவிடுமே!!
pukkari

அதிசயம் 9
தமிழர்கள் வடமொழியில் பரத முனி இயற்றிய பரத சாஸ்திரத்தை அப்படியே பின்பற்றுபவர்கள். பரதன் கூறும் முத்திரைகள், அபிநயங்கள் (gestures) எல்லாம் சிதம்பரம் முதலிய கோவில்களில் இருப்பதை நாம் அறிவோம். பாடல் 149-ல் உலோச்சனார் ஒரு அபிநயம் பற்றிப் பாடுகிறார். பெண்கள் வியப்பையும், வம்பளப்பதையும் காட்ட மூக்கில் விரலை வைத்துக் கடைக்கண்களால் பார்ப்பர். இதை உலோச்சனார்

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்ற ——
என்பர் உலோச்சனார். அழகான காட்சி!

அதிசயம் 10
பாடல் 160-ஐப் பாடியவர் பெயர் இல்லை. அவர் ஆண்மகன் என்பவனுக்குரிய ஆறு பண்புகளை எடுத்துச் சொல்கிறார்:

நயனும் நண்பும், நாணு நன்கு உடைமையும்
பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்

நீதி, நட்பு, இழிசெயல் கண்டு வெட்கப்படுதல், பிறருக்கு உதவுதல், நல்ல குணங்கள், பிறருக்கு இணக்கமாக நடத்தல் (அவர்கள் விரும்பும் வகையில் நடத்தல்) ஆகியன ஆண்களுக்கு வேண்டிய குணங்கள் என்பார்.

dance line drawing

அதிசயம் 11
பாடல் 172 காளிதாசனின் சகுந்தலையை நினைவுபடுத்தும். இதைப் பாடியவர் பரணர். சாகுந்தலத்தில், கவிஞன் காளிதாசன் — பிராணிக ளிடத்தும், செடி கொடிகளிடத்தும் சகுந்தலைக்கு உள்ள பேரன்பை மிக அழகாக கூறுவார். அதுபோல இங்கு ஒரு காட்சி. புன்னை மர விதையை விளையாட்டாகப் புதைத்துவைத்து மறந்து போய் கொஞ்ச காலம் ஆயிற்று. அது திடீரென வளர்ந்து தலைக் காட்டியவுடம் அதற்கு பாலும் தேனும் வார்த்து வளர்க்கிறாள் ஒரு பெண் — அவளுடைய தாயாரும் இது உன் தங்கை என்று சொல்லிப் பாராட்டுகிறாள். அந்த மரத்துக்குக் கீழ் நின்று காதல் பேச்சுகளைப் பேச அவளுக்கு வெட்கமாக இருக்கிறதாம். தங்கையை (புன்னை மரம்) வைத்துக்கொண்டு யாராவது காதலனுடன் அடல்ட்ஸ் ஒன்லி வசனங்களைப் பேச முடியுமா?

அதிசயம் 12
பாடல் 293-ல் கயமனார் என்னும் புலவர், — பெண்ணைப் பெற்ற ஒரு தாய் சாபம் (curse) இடுவதை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார். “என் பெண்ணை சொல்லாமல் இழுத்துச் சென்ற ஆண்மகனுடைய தாயும் என்னைப் போல நடுங்கி கஷ்டப்படட்டும்” என்று சபிக்கிறாள். இதே பாட்டில் காகத்துக்கு குயவன் இடும் பலி பற்றிய குறிப்பும் வருகிறது. இப்படிக்குக் காக்கைக்குச் சோறிடும் வழக்கம் மேலும் இரண்டு பாடல்களில் உள்ளது.

400 பாடல்களில் இருந்தும் 400 சுவையான விஷயங்களை எழுதினால் இடமும் நேரமும் இரா. ஆகையால் நீங்களும் நற்றிணை பயிலவேண்டும் என்று சில பாடல்களைக் காட்டினேன். வேறு என்ன இருக்கின்றன என்பதைக் கோடி காட்டுகிறேன். நீங்களே சுவைத்து மகிழுங்கள்:

பாடல் 3: கணவன் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று மாலை வேலையில் மனவி விளக்கு ஏற்றுதல்
பாடல் 32: கண்ணன்/விஷ்ணு நிறத்தில் மலை உள்ளது. அதில் விழும் அருவி அவன் அண்ணன் பலராமன் போல இருக்கிறது.

பாடல் 35: நாவல் பழத்தை தம் இனத்தைச் சேர்ந்த வண்டு என்று கருதி ஒரு வண்டு வந்தது. அதையும் பழத்தையும் நாவல் பழம் என்று கருதி நண்டு கொண்டு சென்றது. உடனே வண்டு சத்தம் போட, நாரை வந்து சமாதானம் செய்தது (தமிழ் நகைச்சுவைப் பாடல்)

பாடல் 45: மஹாபாரத சந்தனு—மத்சகந்தி வாக்குவாதம் போன்றது.

பாடல் 57: குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திக் கட்டுரையில் குரங்கு, — பால் கறந்தது பற்றி எழுதிவிட்டேன்.

பாடல் 59: பிராமணர்கள் சைவ (vegetarian food) உணவு மட்டுமே சாப்பிட்டதாக சங்க இலக்கியம் காட்டும். ஆயினும் அசைவ உணவு பற்றி அவர்கள் எழுதத் தயங்கியது இல்லை. பாடல் 59-ல் ப்ராமண கபிலர் உடும்புக் கறி, முயல் கறி எல்லாம் பற்றிப் பாடுவார். இதே போல காளிதசனும் பாடுகிறான்.
இன்னும் நூற்றுகணக்கில் சுவைமிகு காட்சிகளைக் கண்டு மகிழ்க.

நற்றிணை தமிழர்களுக்கு “நற்றுணை” (Good Companion) எனில் மிகை அல்ல!!!

contact swami_48@yahoo.com