சில புதிர்க் கவிதைகள்! (Post No.5104)

Written by S NAGARAJAN

 

Date: 13 JUNE 2018

 

Time uploaded in London –  9-50 am  (British Summer Time)

 

Post No. 5104

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

சம்ஸ்கிருதச் செல்வம்

சில புதிர்க் கவிதைகள்!

ச.நாகராஜன்

 

முந்தைய கட்டுரைகளில் சில சம்ஸ்கிருத புதிர் ஸ்லோகங்களைப் பார்த்தோம்.

ஆயிரக் கணக்கில் இவை உள்ளன.இங்கு இன்னும் சில புதிர்க் கவிதைகளைப் பார்ப்போம்.

1

பல கேள்விகள். ஆனால் அத்தனை கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் இருக்கும்.

அப்படிப்பட்ட புதிர் ஸ்லோகம் ஒன்றைப் பார்ப்போம்:

 

கிமிச்சதி நர: காஷ்யாம்   ந்ரூபானாம் கோ ரணே ஹித: |

கோ வந்த்ய: சர்வேதேவானாம்   தீயதாமேகமுத்தரம்  ||

 

காசியில் எதை அடைய மனிதர்கள் விரும்புகின்றனர்? (ம்ருத்யு : இறத்தல்)

போரில் எது அரசர்களுக்கு உகந்தது? (ஜய: வெற்றி)

தேவர்களில் எந்த கடவுள் மிகவும் உயர்ந்தது? (ம்ருத்யுஞ்ஜய: சிவன்)

ஒரே விடை இவை மூன்றிற்கும் தரலாம் ம்ருத்யுஞ்ஜய:

 

பஹிர்லாப வகையில் உள்ள புதிர் இது:

 

A riddle of Bahirlapa variety:

 

What do men desire in Kasi? (Metyum : Death)

What is beneficial to kings in a battle ? (Jayah: Victory)

Which God is supreme among the gods? (Mrtyunjayah: Siva)

One answer may be given for all the three – (Mrtyunjayah)

(Translation by S.Bhaskaran Nair)

2

கிமகரவமஹம் ஹரிர்மஹோக்ரம்

ஸ்வபுஜவலேத கவாம் ஹிதம் விதித்சு|

ப்ரியதமதவதேன பீயதே க:

பரிணதபிம்பபலோபம: ப்ரியாயா: ||

 

இதுவும் பஹிர்லாப வகையில் உள்ள புதிர் தான். புஷ்பிதாக்ரா என்ற சந்தத்தில் அமைந்த ஸ்லோகம் இது.

 

க்ருஷ்ணனாகிய  நான் பசுக்களைக் காக்க கோவர்த்தன மலையை எனது கைகளால் என்ன செய்தேன்? (அதர: நீ தூக்கி நிறுத்தினாய்)

எது காதலரின் வாயால் முத்தமிடப்பட்டது? (அதர: உதடு)

எனது காதலியின் எந்த அங்கம் வில்வப் பழம் போல உள்ளது? (அதர: உதடு)

 

A riddle of Bahirlapa variety. Puspitagra metre.

 

What did I, Krsna, do to the mountain (Govardhana) with the might of my arms for the welfare of the cows? (Adharah : You held it)

What is kissed by the mouth of the beloved? (Adharah: lip)

What is that of my beloved, which resembles a bimba-fruit? (Adharah: lip)

(Translation by A.A.Ramanathan)

 

3

கிம் ஸ்யாத் வர்ணசதுஷ்டயேன வனஜம்       வர்ணைஸ்த்ரிமிர்பூஷணம்

ஸ்யாதாத்யேன மஹி த்ரயேன து பலம் மத்யம் த்வயம் ப்ராணதம் |

வ்யஸ்தே கோத்ரதுரங்கதாசகுசுமான்யந்தே ச சம்ப்ரேஷணம்

யே ஜானந்தி விசக்ஷணா: க்ஷிதிதலே தேஷாமஹம் சேவக: ||

 

இதுவும் பஹிர்லாப வகையில் உள்ள புதிர் தான். சார்தூலவிக்ரிதிதா என்ற சந்தத்தில் அமைந்த ஸ்லோகம் இது.

இதன் பொருள்:

நான்கு எழுத்துக்களால் அமைந்த எந்த வார்த்தை தாமரையைக் குறிக்கிறது?(குவலயம்)

மூன்று எழுத்துக்களால் அது ஒரு ஆபரணத்தைக் குறிப்பிடுகிறது. (வலயம் : கையில் அணியும் வளையல்)

முதல் எழுத்து பூமியைக் குறிக்கும் : (கு)

மூன்று எழுத்துக்களை இணைத்தால் ஒரு பழத்தைக் குறிக்கும் : (குவல) (ஈச்சம்பழம்)

இரண்டு எழுத்துக்கள் வலிமையைக் குறிக்கும் : (பலம்)

தனியாகப் பார்த்தால் குடும்பம், குதிரை தின்னும் உணவு, பூ ஆகியவற்றையும் கடைசியில் பார்த்தால் அனுப்புவதையும் குறிக்கும்.

இதை அறிந்த புத்திசாலிகள் எவரோஅவருக்கு நான் சேவகன்.

 

A Riddle of Bakiralva variety.

Sardulavikridita metre.

 

What is the word with four letters which means a lotus? (Kuvalayam)

With three letterx it meanss an ornament. (Valayam)

The first means the earth (Ku)

Three letters together mean a fruit. (Kuvala) – The Jujube-fruit.

Two together have the meaning of strength. (Balam)

Separately it means family, horsefood and flower, and at the end it means sending.

Tose clever people who knew of this, of them I am a servant.

(The answer is the word Kuvalayam)

(Translation by A.A.Ramanathan)

 

இன்னும் பல புதிர்க் கவிதைகளை பின்னர் பார்ப்போம்.

***

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்! (Post No.4216)

Written  by S.NAGARAJAN

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 5-56 am

 

Post No. 4216

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

சம்ஸ்கிருதத்தில் இரு புதிர்க் கவிதைகள்!

 

ச.நாகராஜன்

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் ஆயிரக்கணக்கான புதிர்க் கவிதைகள் உள்ளன.

 

இவற்றை விடுவிப்பதில் அனைவருக்கும் ஒரு ஆனந்தம்.

இரு கவிதைகளை மட்டும் இங்குக் காண்போம்.

 

உரசி முரமித: கா காடமாலிங்கிதாஸ்தே

  சரஸிஜமகரந்தாமோதிதா நந்தனே கா I

கிரிசமலகுவர்ணைரனர்வாக்யாதிசங்க்யைர்

  குருமிரபி க்ருதா கா சந்தஸாம் வ்ருதிரஸ்தி II

 

 

சுபாஷித ரத்ன பாண்டாகாரம் என்ற சுபாஷிதத் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள கவிதை இது.

இதன் பொருள்:

கிருஷ்ணரின் மார்பில் அவரை ஆரத் தழுவி இருப்பது யார்?

மாலினி! (1)

 

நந்தனா தோட்டத்தில் தாமரைகளின் மது யாருக்கு வழங்கப்பட்டது?

மாலினி! (2)

 

பெரிய மலைகளின் எண்ணிக்கையால் குற்றோசை உடைய அசைகளாலும், கடல்களின் எண்ணிக்கையால் நெடிலோசை நிறைந்த அசைகளாலும் எந்த சந்தம் இருக்கிறது?

மாலினி! (3)

 

 

  1. மலர் மாலை
  2. ஆகாய கங்கை அல்லது ஒரு பூக்காரி
  3. மாலினி என்ற சந்தம்

ஆங்கிலத்தில் இந்தக் கவிதைக்கான மொழிபெயர்ப்பை A.A.R. இப்படி வழங்குகிறார்:

Who remains on the chest of Krishna embracing him tightly? (Malini 1)

Who is rendered fragrant by the honey of lotuses in the Nandana garden?

(Malini 2)

With short syllables of the number of the great mountains and with long ones of the number of seas, which metre is made up? (Malini 3)

  1. Flower – garland
  2. A female florist or heavenly Ganga
  3. Malini metre.

*

உபௌ ரம்பாஸ்தம்பாவுபரி விபரீதௌ கமலயோஸ்

    ததங்கர்வே ரத்னாஷ்மஸ்தலமய துரூஹம் கிமதி தத் I

தத: கும்போ பஸ்சாத் பிஸகிஸலயே கந்தலமயோ

    ததன்விந்தாவிந்தீவரமதுகரா: கிம் புனரிதம் II

 

 

பகதத்தரின் சுக்திமுக்தாவளியில் உள்ள கவிதை இது.

இது அமைந்துள்ள சந்தம் ஷிகாரிணி

இதன் பொருள்:

இரண்டு தாமரை மலர்களின் மேல் (2) இரு வாழைத் தண்டுகள் (1) வெவ்வேறு விதமாக வைக்கப்பட்டுள்ளன.

இவற்றின் மேலே ரத்தினக் கல்லென்னும் அகலமான பிரதேச்ம் உள்ளது.(3)

 

 

பிறகு அதன் நுண்ணிய தன்மையால் இன்னதென்று ஊகிக்க முடியாத ஒன்று இருக்கிறது. (4)

பின்னர் இரு கலசங்கள் உள்ளன. (5)

அதன் பிறகு அடுத்து இரு வாழைத்தண்டுகள் உள்ளன.(6)

பின்னர் மிருதுவான குருத்து (7)சந்திரனுடன் (8)வருகிறது.

அதன் மேல் இரு நீல அல்லி மலர்கள் உள்ளன. (9)

அத்துடம் தேனீக் கூட்டம் (10) வேறு உள்ளது.

இது என்ன? (11)

 

 

  1. தொடைகள்
  2. பாதங்கள்
  3. ப்ருஷ்ட பாகம்
  4. மெல்லிய இடை
  5. மார்பகம்
  6. கைகள்
  7. கழுத்து
  8. முகம்
  9. இரு கண்கள்
  10. கூந்தல்
  11. அழகிய பெண்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பைக் கீழே காணலாம்: (மொழியாக்கம் A.A.R)

Two banana –stems (1) placed differently  over two lotuses (2) , above these there is the broad region of a gem-slab  (3), and then something (4) which is difficult to guess (due to smallness), then are the two pots (5), and next come two stalks (6), then the tende sprout (7), with the moon (8) over which are two blue lilies (9) and a swarm of bees (10) – What can this be (11)  – Translation by A.A.R.

 

 

  1. Thighs
  2. Feet
  3. Hips
  4. Thin waist
  5. Bosom
  6. Hands
  7. Neck
  8. Face
  9. Eyes
  10. Tresses
  11. A (beautiful woman)

 

சம்ஸ்கிருத இலக்கியத்தில் இருக்கும் ஆயிரக் கணக்கான புதிர்க் கவிதைகளை ரசிப்பது ஒரு வாழ்நாள் இலக்கிய அனுபவமாகவே இருக்கும்.

இன்னும் சிலவற்றைப் பின்னர் காண்போம்.

***