பர்த்ருஹரி சொல்லும் விஞ்ஞான விஷயங்கள் (Post No.5685)

Himalaya pictures from Radhika Balakrishnan

Written by London Swaminathan

swami_48@yahoo.com

Date: 21 November 2018

GMT Time uploaded in London –10-34 am
Post No. 5685

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog

பர்த்ருஹரி இந்த ஸ்லோகங்களில் சொல்லும் அறிவியல் துளிகள்

1.மலைகள் பறந்தன;

2.சூரிய காந்தக் கல் நெருப்பைக் கக்கும்;

3.பூமியைப் பாம்பு தாங்குகிறது-

பர்த்ருஹரி நீதி சதகம் தொடர்ச்சி

ஸ்லோகங்கள் 31,32,33

 

 

‘பெருந்தன்மை கொண்டபெரியோர்கள், கொடையாளிகளின் சக்திக்கும் பெருமைக்கும் அளவே இல்லை. இந்த பூமியை ஆதிசேஷன் என்னும் பாம்பு தாங்குகிறான். அந்த சேஷ நாகத்தை ஆமை தன் முதுகில் தாங்குகிறது. அநத ஆமையை கடல் தனது அடித்தளத்தில் தாங்கி நிற்கிறது’.—1-31

காளிதாஸன் போன்ற உலகப் புகழ்பெற்ற கவிஞர்களும் பூமியைப் பாம்பு தாங்குவதாகக் கருதினர். இதன் விஞ்ஞான விளக்கம் தெரியவில்லை. இதை அப்படியே சொல்லுக்குச் சொல் பொருள் கொள்ளாமல் அதன் தாத்பர்யத்தை அறிய வேண்டும். உலகில் ஒவ்வொரு பழைய கலாசாரத்திலும் இப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தது. கிரேக்கர்கள அட்லஸ் (Atlas) என்பவன் தனது தோளில் பூமியைச் சுமப்பதாக நம்பினர். இதனால் தேசப்பட புத்தகத்துக்கு அட்லஸ் என்று பெயர் சொல்லுவர்.

வஹதி புவனேஸ்ரேணிம் சேஷஹ பணாபலகஸ்திதாம்

கமடபதினா மத்யே ப்ருஷ்டம் ஸதச தார்யதே

தமபி குருதே க்ரோடாதீனம் பயோதிரநாதராத்

தஹஹ மஹதாம் நிஸ்ஸீமாநஸ்சரித்ர விபூதயஹ – 31

वहति भुवनश्रेणिं शेषः फणाफलकस्थितां

कमठपतिना मध्येपृष्ठं सदा स च धार्यते ।

तम् अपि कुरुते क्रोडाधीनं पयोधिरनादराद्

अहह महतां निःसीमानश्चरित्रविभूतयः ॥ 1.31 ॥

XXX

‘தேவர்களின் தலைவனான இந்திரன் இமயமலை மீது தன் வஜ்ராயுதத்தை வீசித் தாக்கினான். அப்போது இமயத்தின் மகனான மைநாக பர்வதம் தந்தையை விட்டு ஓடிப்போய் கடலில் அடைக்கலம் புகுந்தது. இது சரியான செயலன்று. மகன் என்னும் பெயருக்கு ஏற்ற செயலுமன்று’ – 1-32

மலைகள் ஆதிகாலத்தில் பறந்தததாகவும் ,இந்திரன் அவற்றின் சிறகுகளை வெட்டியதாகவும் புராணங்கள் புகலும்.இந்த நிகழ்ச்சியை உவமையாகப் பயன்படுத்துவர் புலவர் பெருமக்கள்.

இதில் பெரிய அறிவியல் உண்மை இருப்பதாக நான் கருதுகிறேன். டைனோஸரஸ் போன்ற ராட்சத மிருகங்கள் பூமியிலிருந்து அழிய பெரிய விண்கற்களே காரணம் என்று விஞ்ஞானிகள் இப்போது பகர்வர். பூமியின் துவக்க கால சரிதத்தில் இத் தாக்குதல்கள் அதிகம் இருந்தன. இன்றும் ஒவ்வொரு நொடியும் பூமியில் விண்கற்கள் விழுந்தபோதும் அவை காற்றில் பஸ்மம் ஆகி சாம்பல மட்டுமே பூமியில் விழும். இரவு நேரத்தில் வானத்தை உற்று நோக்குவோர் நட்சத்திரங்கள் விழுவது போலக் காண்பது எல்லாம் இந்த விண்கற்களே. ஆயினும் துவக்க காலத்திலிவை அதிகம் இருந்தது.

இதை பாமர மக்களுக்கு விளக்க எழுந்த கதைதான் மலைகள் பறந்ததும் அதை இந்திரன் வெட்டி வீழ்த்தியதும்.

இந்த பர்த்ருஹரி ஸ்லோகத்தில் சொல்லவரும் நீதி ஒருவருக்கு ஆபத்து ,, வருகையில் — குறிப்பாக தந்தைக்கு ஆபத்து வருகையில் — மகன் ஓடிப்போவது — உதவாமல் பயந்து ஒளிவது — முறையன்று– வீரமும் அன்று என்பதாகும்.

நீதியைப் புரிந்து கொண்டு விட்டோம். இதிலுள்ள அறிவியல் விஷயங்களை நுணுகி ஆராய்வோம்:

1.பூமியின் ஆரம்பகட்டத்தில் விண்கற்கள் (Meteorites) , நுண்கிரஹங்களின் (asteroids) தாக்குதல் அதிகம் இருந்ததை இந்துக்கள் அறிவர்.

  1. உலகில் கடலுக்கு அடியிலும் மலைகள் இருப்பது (Submarine mountains) இந்துக்களுக்கு நன்கு தெரியும். (சக்ரவாள மலை பற்றியஎனது கட்டுரையில் முன்னரே விளக்கி இருக்கிறேன்)

3.பிற்காலத்தில் இந்த விண்கல், நுண் கிரஹவீ ழ்ச்சி அறவே நின்றதையும் இந்துக்கள் அறிவர். ஆகையால்தான் இந்திரன் பறக்கும் மலைகளின் சிறகுகளை வெட்டி அவற்றை கடலுக்குள் அனுப்பிய கதைகள் எழுந்தன.

கடலியலும் (Oceanography), பூகர்ப்ப இயலும் (Geology) வளந்த இந்த நாட்களில் நாம் படிப்பதை புராணங்கள் கதை ரூபத்தில் நமக்குக் கற்பித்தன.

அது மட்டுமல்ல; இந்திரன்தான் உலகின் முதல் சிவில் எஞ்சினீயர். அவன் மலைப் பாறைகளை அகற்றி தண்ணீரை விடுவித்த கதை உலகின் பழமையான் நூலான ரிக் வேதத்திலேயே உளது.

இதை அறியாத சிலர் இந்திரன் அரக்கனை வெட்டி வீழ்த்தியதாகவும் அவர்கள் பழங்குடி மக்கள் என்றும் பிதற்றினர். இந்திரன் என்பது தலைவன், மன்னன், முழுமுதற் சக்தி போன்ற பல பொருட்களில் ரிக் வேதத்தில் வருகிறது. ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் இந்திரன் பெயர் வநததை ‘ஒரு ஆள்’ என்று நினைத்து வெள்ளைக்காரர்கள் குழம்பிப் போய் நம்மவர்களையும் குழப்பிவிட்டனர்.

வரம் பக்ஷச்சேதஹ ஸமதம கவன்முக்தகுலிஸ

ப்ரஹாரைருத்ரச் சதூபஹலதஹனோத்ரார குரூபிஹி

துஷாரத்ரேஹ்ஹே ! பிதரி க்லேசவிவசே

ந சாசௌ ஸம்பாதஹ பயஸி பயஸாம் பத்யூருசிதஹ -32

वरं पक्षच्छेदः समदमघवन्मुक्तकुलिशप्रहारैर्
उद्गच्छद्बहुलदहनोद्गारगुरुभिः ।
तुषाराद्रेः सूनोरहह पितरि क्लेशविवशे
न चासौ सम्पातः पयसि पयसां पत्युरुचितः ॥ 1.32 ॥

XXX

சூர்யகாந்தக் கல், சூரிய ஒளியை நெருப்பாக கக்குவதை காளிதாஸன், தமிழில் திருமூலர் போன்ற ஏராளமான புலவர்கள் பயன்படுத்துவதால், லென்ஸ் (Lens), உருப்பெருக்கு ஆடி (Magnifying glass) பற்றி இந்துக்களுக்கு முன்னரே தெரிந்ததை நாம் அறிய முடிகிறது.

இதோ பாட்டின் பொருள்

சூரிய ஒளிபட்டவுடன் உயிரே இல்லாத ஜடப்பொருளான சூர்ய காந்த மணி கூடப் பிரகாஸிக்கிறது; நெருப்பை உமிழ்கிறது. அப்படி இருக்கையில் பெரியோர்களை யாரேனும் அவமதித்தால் அவர்கள் சும்மா இருப்பார்களா? 1-33

ஆக, பல விஞ்ஞான உண்மைகளை உவமையாகப் பயன்படுத்துவதால் இவைகளைப் பாமர மக்களும் அறிந்தது புலனாகிறது. நம்மில் பலர் எப்படி டெலிவிஷன், ரேடியோ, மொபைல் போன் பற்றிய விஞ்ஞான விஷயங்களை அறியாமலேயே அதை பயன்படுத்த மட்டுமே தெரிந்து கொண்டது போல பாமர மக்களுக்கு உவமை மட்டுமே தெரியும். அதன் பின்னுள்ள விஞ்ஞான விஷயங்கள் தெரியாது.

பூமியின் சலனம் பற்றி முழுதும் அறியாவிட்டால் இந்துக்கள் கிரஹணத்தைக் கணக்கிட்டும் இருக்க முடியாது. ஜோதிட சாஸ்திரத்தை உருவாக்கி இருக்கவும் முடியாது. சனிக் கிரஹம் குருக் கிரஹம் போன்றவற்றுக்கு விஞ்ஞானப் பெயர்களை சூட்டி இருக்கவும் முடியாது.

சனிக் கிரஹம் (சனை= மந்தம், மெதுவாக) சூரியனைச் சுற்றிவர 30 ஆண்டுகள் ஆவதை அறிந்து சனைச் சரன் (மந்த கதியில் செல்வோன்) என்று பெயரிட்டனர்.

குரு என்றால் கனமான என்று பெயர்; கிரஹங்களில் பெரியது குரு (வியாழன்)) என்பதாலும், குருவைப் போல ஒருவரை உயர்த்தி, உந்தி விடுவதாலும் (Slingshot Gravity effect) அந்த கிரஹத்துக்கு குரு என்று பெயரிட்டனர், இந்த ‘ஸ்லிங் ஷாட் எப்பெக்ட்’ இப்பொதுதான் விஞ்ஞானிகளுக்குத் தெரியும். இனி வரப் போகும் எதிர்காலக் கண்டு பிடிப்புகளை இந்துக்கள் முன்னரே அறிவித்துவிட்டதை  எனது முந்தைய  கட்டுரைகளில் பட்டியலிட்டு விட்டேன்.

யதசேதனோபி பாதைஹி ஸ்ப்ருஷ்டஹ ப்ரஜ்வலதி ஸவிதுரினகாந்தஹ

தேஜ்ஸ்வீ புருஷஹ பரக்ருதநிக்ருதிம் கதம் ஸஹதே – 33

Tags- நீதி சதகம், பர்த்ருஹரி, சூர்யகாந்த மணி, பறக்கும் மலைகள், பூமி பாம்பு, சேஷ நாகம்

–சுபம்—

நள தமயந்தி கதையில் விஞ்ஞான விஷயங்கள்-2 (Post No.5372)

RESEARCH ARTICLE WRITTEN BY LONDON SWAMINATHAN

Date: 28 August 2018

 

Time uploaded in London – 20-53 (British Summer Time)

 

Post No. 5372

 

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

 

 

நள தமயந்தி கட்டுரையின் முதல் பகுதி நேற்று வெளியானது; இதோ இரண்டாவது பகுதி:-

 

மஹாபாரதத்துக்கு முன்னர், இந்த நாட்டின் பூகோளம்- புவி இயல் எப்படி இருந்தது?

இந்தக் கதையில் நான்கு தேசங்கள் பற்றிக் கேள்விப் படுகிறோம்:

விதர்ப்ப நாடு- மஹாராஷ்டிரத்தின் நாக்பூர் பகுதி- இன்றும் அதே பெயரில் திகழ்கிறது.

நிஷாத நாடு- நிஷாத என்றால் ஏதோ எழுத்தறிவற்ற வேடர்கள் என்று வெளி நாட்டினர் எழுதுவர். ஆனால் நளனின் அறிவைப் பார்க்கையில் நிஷாத என்ற சொல்லின் பொருளே மறைந்து விடுகிறது! ராமாயணத்தில் வரும் குஹனும் நிஷாதர்களின் அரசனே. ஆனால் ராமாயண காலம் மிகவும் முந்தியது. தற்போதைய குவாலியர் பிரதேசம் நிஷாத நாடு என்று கருதப்படுகிறது.

 

தஸார்ண நாடு- தமயந்தியை சாத்தன் எனப்படும் வியாபாரிகள் கூட்டத்தில் கண்ட சேதி நாட்டு ராஜமாதா அவளை அழைத்து அடைக்கலம் கொடுக்கிறாள். ஒரு நாள் பேச்சுவாக்கில் அவள் விதர்ப்பநாட்டு மன்னன் பீமனின் மகள் என்று தெரிந்தவுடன், “தமயந்தி நானும் உன் தாயும் தஸார்ண நாட்டு மன்னன் சுதர்மாவின் மகள்கள் என்று சொல்லி அவளைக் கட்டிக்கொண்டு அழுகிறாள்; இது தமிழ் திரைப்படக் காட்சியைவிட பெரிய ‘சஸ்பென்ஸ்’ காட்சியாக அமைகிறது. என் கணவர் பெயர் வீரபாகு என்கிறாள். குறிப்பிடத்தக்க பெயர் வீரபாகு.

அப்பொழுது தமயந்தியின் முகத்தைத் துடைக்கையில் புருவங்களுக்கு இடையில் மச்சத்தைப் பார்த்துவிட்டு நீ என் தந்தையின் அரண்மனையில்தான் பிறந்தாய் என்கிறாள். மச்சத்தின் முக்கியத்துவதையும் கதையில் கொண்டு வருகின்றனர்!

 

 

மற்றொரு நாடு கோசல நாடு- அதன் தலைநகரான அயோத்தியில் மன்னனாக இருப்பவன் ருது பர்ணன். ஆக, மன்னர்களின் பெயர்களுடன் நமக்கு நாட்டின் புவியியலும் கிடைக்கிறது.

 

சுதேவன் என்ற பீமனின் நண்பன் தெரிவித்த தகவலின் பேரிலேயே ராஜ மாதா பூர்வ கதைகளை அறிந்தாள் உடனே அவளைப் பல்லக்கில் வைத்து பெரும் சேனையின் துணையுடன் விதர்ப்ப நாட்டுக்கே அனுப்பிவைத்தாள். சுதேவனும் உடன் செல்கிறான். அவனுக்கு விதர்ப்ப மன்னன் பீமன் 1000 பசுக்களைப் பரிசாகக் கொடுக்கிறான்.

MINUS X MINUS = PLUS

நளனைப் பாம்பு கடித்தவுடன் அவன் விகார உருவம் அடைந்து குட்டையாகிறான்; அங்கும் ஒரு சொற் புரட்டுக் கதை வருகிறது. அவன் காப்பாற்றிய பாம்பு பத்து வரை எண்ணச் சொல்கிறது அவன் 1,2, 3,4 என்று எண்ணி பத்து (தஸ) என்று முடிக்கிறான். இதற்கு பத்து என்றும் கடி என்றும் பொருள் உணடாகையால் பாம்பு நானைக் கடித்து விடுகிறது. நளன் வருத்தப்பட்டபோது கவலைப் படாதே விஷத்தை விஷம் முறிக்கும் (minus X minus = plus);

ஏற்கனவே கலி (கரி) புகுந்து ஏற்பட்ட கொடுமை இந்த விஷத்தால் கொஞ்சம் கொஞ்சமாக விலகும் என்கிறான். விஷத்துக்கு விஷம் முறிவு என்பது விஷம் பற்றிய அறிவியல் கூற்று. மஹாபாரதத்தில் விஷம் கொடுக்கப்பட்ட பீமனை துரியோதனாதிகள் பாம்புள்ள குளத்தில் தூக்கிப்போட்டவுடன் அவன் விஷப் பாம்புகளால் தாக்கப்பட்டு விஷத்தை விஷம் முறித்த கதையையும் நாம் அறிவோம். ஹோமியோபதியின் தத்துவமும் இதுவே; உடலில் எது விஷப்பொருளாகத் தாக்கி வியாதியை உண்டாக்குகிறதோ அதையே சிறுகச் சிறுகச் சாப்பிட்டால் விஷம் முறிந்து விடும்.

 

நின்ற சீர் நெடுமாறன் என்ற கூன் பாண்டியன் கதை பெரிய புராணத்தில் வருகிறது. ஞான சம்பந்தரின் அதிசய விபூதி கூன் பாண்டியனை நிமிர்த்திவிட்டு நின்ற சீர் நெடுமாறன் ஆக்கியது. அதுபோலவே சிறிது சிறிதாக விஷ்ம் நீங்கிய நளன் தமயந்தியிடம் முழு உண்மையையும் அறிந்தவுடன் கூன் மறைந்து விடுகிறது.

 

கலியின் மூலம் ஏற்பட்ட கெட்ட குணங்கள் கார்க்கோட பாம்பின் மூலம் அகற்றப்படுகிறது.

மேற்கோள்உத்தி

போஜ ராஜனிடம் கோபித்துக் கொண்டு ஓடிய உலகப் புகழ் காளிதாசனைக் கண்டுபிடிக்க போஜன் கவிதை டெக்னிக்கை/ உத்தியைப் பயன்படுத்தி அவனைக் கண்டுபிடித்து விடுகிறான். அது போல பாரப்பனன் பர்ணாதனைத் தூது அனுப்பிய தமயந்தியும் நளன் அடிக்கடி சொல்லும் (quotation) கொட்டேஷனை/ மேற்கோளைச் சொல்லி அனுப்புகிறாள்: “நற்குலத்தில் தோன்றிய பதிவ்ரதைகள் துன்பம் வந்தபோதும் தம்மையே காத்துக் கொள்வர்; ஒழுக்கம் தவற மட்டார்கள்” என்பது அந்த மேற்கோள். இதை பிராஹ்மணன் பர்னாதனிடம், ‘வாகுகன்’ என்ற பெயரில் ருதுபர்ணனிடம் சமையல் வேலை செய்த நளனும் சொன்னவுடன் அவன் இவனேதான் என்று கண்டு பிடித்து தமயந்தியிடம் சொல்லி விடுகிறான். இதுவும், அவள் திட்டம்போட்டு இரண்டாவது ஸ்வயம்வரத்தை அறிவித்ததும், தமயந்தி எவ்வளவு புத்திசாலி என்பதைக் காட்டுகிறது. மாபாரத காலத்துக்கு முன்னமேயே பாரத சமுதாயம் அறிவுசார்ந்த பெருமக்களையும் சுதந்திரப் பெண்மணிகளையும் கொண்டிருந்தது.

 

எட்டு அதிசயங்கள்

800 மைல் தொலைவை 24 மணி நேரத்தில் கடந்து விதர்ப்பதேச குண்டினபுரத்துக்கு அயோத்தி மன்னனை அழைத்து வந்த பாஹுகன் (வாகுகன்) நளனாகத் தான் இருக்கும் என்று கருதிய தமயந்தி, தனது பணிப்பெண் கேசினியை அனுப்பி ரஹஸியாமாக உளவறியச் சொல்கிறாள். அப்பொழுது தேவர்கள் நளனுக்கு அளித்த எட்டு அதிசய சக்திகளைக் கண்ணால் கண்டு தமயந்திக்கு ரிப்பொர்ட் (report)  தருகிறாள். உடனே தமயந்திக்கு அவன் நளன்தான் என்பது 100 சதவிகிதம் தெரிந்து விடுகிறது;

 

அவையாவன:

 

தாழ்வான வாயிலை அடைந்தால் அவன் குனிந்து செல்வதில்லை; வாயில் தானே உயர்கின்றது.

நெருக்கமான இடத்தில் அவன் நுழைந்தால் வழி தானே விரிவடைகிறது. மொஸஸுக்கு கடல் தானே விலகி வழிவிட்டதையும் அதற்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையான கண்ணபிரானுக்கு யமுனை நதி விலகி வழிவிட்டதையும் பாம்பு குடை பிடித்ததையும் நாம் அறிவோம்.

 

நளன் பார்த்த மாத்திரத்தில் குடங்களில் நீர் நிரம்புகிறது.

அவன் ஒரு துரும்பை சூரிய ஒளியில் காட்டினாலும் அது தானாகவே பற்றி எரிகிறது. நீர் இல்லாமலும், நெருப்பு இல்லமலும் அறு சுவை படைக்க வல்லவன் அவன்.

 

நீர் அவன் இஷடப்பட்டபடி பெருகுகிறது நெருப்பு அவனைச் சுடுவதில்லை. (பகவத் கீதையில் ஆத்மாவின் வருணனை நினைவுக்கு வரும்)

 

மலர்களை அவன் கசக்கினாலும் கசங்குவதில்லை அது மணம் வீசி கசங்காமல் நிற்கிறது.

 

இவற்றையெல்லாம் பார்த்த கேசினி அப்படியே அறிவிக்கிறாள்!

 

இந்தக் கதையில் நளனும் தமயந்தியும் பிரிந்திருந்த காலம், ‘மூன்று ஆண்டுகள்’ என்ற குறிப்பு இருப்பது கதையின் உண்மைத் தன்மைக்குச் சான்று பகர்கின்றது; ராமாயணத்தில் வண்ணான் பேச்சைக் கேட்டு சீதையை ராமன் சந்தேகித்து பூக்குழி இறங்கச் சொன்ன விஷயம் நமக்குத் தெரியும். அதே போல நளனும் மூன்றாண்டு தனித்திருந்தாயே; உன் கற்பின் திறன் என்னவோ என்று சம்சயத்தைக் கிளப்பவே வாயு தேவன் ஆகாயத்தில் இருந்து தமயந்தி கற்புக்கரசி என்று ‘சர்டிபிகேட்’ (Certificate) கொடுக்கிறான்; கதை முழுதும் திகிலூட்டும் காட்சிகள்; திரைப்பட டைரக்டர்கள் தோற்று விடும் ‘சஸ்பென்ஸ்’ நிறைந்தது நள தமயதி கதை அனைவரும் மஹாபாரதத்தையும் அதீவீர ராம பாண்டியன், புகழேந்திப் புலவர் ஆகியோரின் நள உபாக்கியானங்களையும் கற்றல் நன்றே.

 

கல்வி  தானம்

‘எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு’— என்ற குறளின் தத்துவத்தை அறிந்த நளன், ருதுபர்ணனுக்கு அஸ்வ சாஸ்திர ரஹஸியங்களைச் சொல்லித் தருகிறான். உரியவர்களுக்கு கல்விதானம் செய்ய வேண்டும் என்பதை இக்கதை விளக்கும்; இருவரும் ஒருவருக்கொருவர் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர் சூதாட்ட ரஹஸியங்களை ருது பர்ணனிடம் கற்ற நளன், மீண்டும்

தனது தம்பி புஷ்கரனை சூதாட்டத்துக்கு அழைத்து அவனை வென்று, முன்னர் இழந்த நாட்டை மீட்டு கதையை இனிதே முடிக்கிறான். அது மட்டுமல்ல; சகோதரன் என்பதால் அவனை மன்னித்து அவனுக்கு பரிசும் தருகிறான். “பகைவனுக்கு அருள்வாய்- நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்” என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கிறான்.

வணிகர் கூட்டம்

காட்டில் கூட்டம் கூட்டமாகச் செல்லும் வணிகர் கூட்டத்தை யானை தாக்கி அனைவரும் சிதறி ஓடிய காட்சி மஹா பாரதத்தில் விரிவாக உள்ளது. அதில் தமயந்தி அதிசயமாக உயிர் தப்புகிறாள். இப்பொழுது பெண்களைக் கிண்டல் செய்து வம்புக்கிழுக்கும் கும்பல் அப்போதும் இருந்ததையும் பெரியோர்கள் தமயந்தியைக் காத்ததையும், நளோபாக்கியானம் விளக்குகிறது. அக்கால சமுதாய நிலை, வணிகரின் வியாபார உத்திகளை இந்த உபாக்கியானப் பகுதி விளக்குகிறது

முனிவர்களின் பங்கு பணி– Psychologists

முனிவர்களின் பங்கு பணி இதில் முக்கியமானது ; இந்திர லோகத்துக்கு மாதலி ஓட்டிச் சென்ற ராக்கெட்டில் வெளிக் கிரகத்துக்குப் போன அர்ஜுனன் திரும்பி வரவில்லையே என்று நொந்துபோய்க் கிடந்த பாண்டவ சஹோதர்களுக்கு இந்த அருமையான கதையை பிருகதஸ்வர் என்ற முனிவர் நாரதர் சொன்ன படியே சொல்கிறார்; அக்காலத்தில் முனிவர்கள்  இக்கால  ’ஸைகாலஜிஸ்டுகள் (Psychologists) செய்யும் பணியை சம்பளம் வாங்காமல் செய்தார்கள்;  தற்போது பிரிட்டனில் (Psychologists) ஸைகாலஜிஸ்டுகளின் வருட சம்பளம் 60,000 பவுண்டுகள்; அக்காலத்தில் வீட்டிலுள்ள கிழப் பாட்டிகளும் காட்டிலுள்ள முனிவர்களும் இந்த சேவையைக் காசு வாங்காமல் செய்தனர்! பர்வதர் என்ற முனிவரும் நாரதருடன் சென்றதாக வனபர்வத்தில் காண்கிறோம்.

 

இன்றும் கூட ஒருவர் நன்றாகச் சமைத்தால் நள பாகம், பீம பாகம் என்று சொல்கிறோம். கை,கால்களை சரியாக கழுவாமல் வந்தால் அதன் வழியாக சனி நுழைவான் என்று குழந்தைக ளை மிரட்டுகிறோம்; அக்காலத்திலேயே ‘சுத்தம் சோறு போடும்’ என்று பெரியோர்கள் சொல்லிக் கொடுக்க இந்தக் கதைகள் உதவி செய்தன.

 

தடிப்பான எழுத்துகளில் உள்ள விஷயங்கள் நேற்றைய கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன.

1.பிற கிரஹங்களில் வாழும் மக்கள் நிலை (Extra Terrestrials)

2.மாறுவேடக் கலை ( Art of Disguise)

3.எட்டு அதிசய சக்திகள் (மாயாஜாலக் கலை) Eight Paranormal Powers

4.பறவைகளை தூது விடப் பழக்கல் (Bird Migration and Training Birds for communication)

5.சமையல் கலை (Art of Cookery)

6.தேரோட்டும் கலை (Art of Charioting)

7.எண் ரஹஸியம் (Magic Numbers)

8.சூதாட்டக் கலை (Art of Gambling and Manipulation)

9.மாயமாய் மறையும் கலை (Invisible Cloaking)

10.விஷத்தை விஷம் முறிக்கும் அறிவு (Toxicology)

11.மனநலம் தரும் சொற்கலை (Moral Teaching and Psychology)

12.கடிதம் எழுதும் கலை (Letter Writing by Kings)

13.ஸத்தியமே பெரிது (Truth alone Triumphs)

14.தூய்மையின் அவஸியம் (Necessity of cleanliness)

15.கவிதைக் கலை (Role of Poetry)

16.பார்ப்பனரைத் தூதுவிடும் கலை (Brahmin Ambassadors/ Role of Ambassadors)

17.வணிகர்கள் (சாத்தன்) பயணக் கலை (Travellers’ Tale & Business Travel)

18.பாரத நாட்டின் புவியியல் (Geography)

19.பாரத நாட்டின் வரலாறு (History)

20.முனிவர்களின் பங்கு பணி (Role of Saints/Pscychologists)

21.குழந்தைகள் வளர்ப்புக் கலை (Child care)

22.பெண்களின் மஹத்தான சுதந்திரம் ( Unusual Freedom of Indian Women)

23.மச்ச சாஸ்திரம் (Body marks)

24.அஸ்வ (குதிரை) சாஸ்திரம் (Science of Horses)

25.வ்ருக்ஷ (மரம்) சாஸ்திரம் (Tree Science)

  1. தகவல் பரிமாற்றம்(SHARING/ EXCANGE OF INFORMATION)

 

 

Also read

நள தமயந்தி – சுவையான காதல் கதை! (Post No.5215) | Tamil and Vedas

tamilandvedas.com/2018/07/14/நள…

Written by S NAGARAJAN Date: 14 JULY 2018 Time uploaded in London – 6-49 AM (British Summer Time) Post No. 5215 Pictures shown here are taken from various …

 

த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? (Post No.4873 …

swamiindology.blogspot.com/2018/04/post-no4873.html

post no. 4873. pictures are taken … த்ரிவிக்ரம பட்டரின் நள சம்பு முடியாதது ஏன்? … நள …

–subham—