Compiled by London swaminathan
Date: 15 June 2016
Post No. 2897
Time uploaded in London :– 8-20 AM
( Pictures are taken by London swaminathan)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com
தான தர்ம அனுஷ்டானங்கள், இஷ்டம் பூர்த்தமென இருவகைப்படும்:-
அக்னிஹோத்ரம் தப: சத்யம் வேதானாம் சைவ பாலனம்
ஆதித்யம் வைஸ்வதேவஸ்ச இஷ்டமித்யபிதீயதே
அக்னிஹோத்ரம்
தவம்
சத்யம்
வேதம் ஓதுதல்
அதிதி /விருந்தோம்பல்
வைஸ்வதேவம் ( எல்லா கடவுளர்க்கும் தினசரி அக்னியில் இடப்படும் பலி; இன்னொரு அர்த்தம் -பூத யக்ஞம்)
இவைகள் இஷ்டம் என்று அறியப்படும்.
(திருக்குறளில் துறவறவியல் மற்றும் இல்லறவியலில் இவை கூறப்பட்டுள்ளன).
வாபீகூபதடாகாதி தேவதாயதனானி ச
அன்னப்ரதானமாராமா: பூர்தமர்த்யா: ப்ரசக்ஷதே
குளம் (வாபீ) தோண்டல், கிணறு (கூப:) வெட்டல், ஏரி (தடாகா:) அமைத்தல்,ஆலயம் கட்டுதல் (தேவ ஆயதனா:),அன்னதானம் செய்தல், சத்திரங்கள் அமைத்தல் (ஆரமா:) – இவைகள் பூர்த்தம் எனப்படும்.
காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) இஷ்டம், பூர்த்தம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார். தெய்வத்தின் குரல் புத்தகத்தில் காண்க. குறிப்பாக வைஸ்வதேவம் பற்றி அவர் நன்கு விளக்கியுள்ளார்)
xxx
ஆறு வகையான ஆபத்துகள்
அதிக மழை (அதி வ்ருஷ்டி)
மழையின்மை/வறட்சி (அனாவ்ருஷ்டி)
வெட்டுக்கிளி (சாலபா:0
எலிகள் (மூஷகா:)
கிளிகள் (சுகா:)
அயல்நாட்டானின் படையெடுப்பு (ப்ரத்யாசன்னா:)
அதிவ்ருஷ்டிரனாவ்ருஷ்டி: சலபாமூஷகா: சுகா:
ப்ரத்யாசன்னாஸ்ச ராஜான: ஷடேதா ஈர்தய: ஸ்ம்ருதா:
–சுபம்–