ஆடலும் பாடலும் நிறைந்த ஆனந்த வேத காலம் (Post No.10,602)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,602

Date uploaded in London – –    27 JANUARY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

பூமி சூக்த ஆரய்ச்சிக் கட்டுரை 13

வேத காலம் என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்த காலம்; அதே நேரத்தில் சங்க காலம் போலவே போர்களும் நிகழ்ந்த காலம் ; மக்கள் வீரத்துக்கு முதலிடம் தந்தனர். எனக்கு வீரம் மிக்க புத்திரர்கள் பிறக்க வேண்டும் என்ற துதிகள் ரிக்வேதம் முழுதும் நிரவிக் கிடக்கின்றன

மந்திரம் 41 இந்த ஆடல் பாடலையும் போர் முரசு ஒலிகளையும் எடுத்து இயம்புகிறது. ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டும் போர் பற்றியனவே. சங்கத் தமிழ் இலக்கியத்தில் போர் என்ற அம்சத்தை விலக்கினால் வரலாறு என்பதே இராது.காதலும், கொடையும் இன்றும் உளது; ஹோமர் எழுதிய முதல் கிரேக்க காவியம் இலியட்- உம் போர் பற்றியதே.

இந்த அதர்வண வேத பூமி சூக்தத்துக்கு முன்னதாகவே ரிக் வேதத்திலும் ஆடல் பாடல் உண்டு.

ரிக் வேதத்தில்

1-92-8; 2-22-4; 5-52-12 ஆகியவற்றில் நடனம் ஆடுவோர் பற்றிய குறிப்புகள் உள்ளன இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் நிறைய உள . (இது பற்றி பல கட்டுரைகள் இந்த பிளாக்கில் உள்ளன.)

XXXX

மந்திரம் 37ல் தஸ்யூக்கள் என்ற சொல் வருகிறது. எல்லா சமய நூல் களிலும் எதிரிகள் என்று சிலர் வருணிக்கப்படுகின்றனர். அவர்களை உள்ளத்தில் உள்ள தீய எண்ணங்களாகவோ அல்லது உள்நாட்டு, வெளி நாட்டு படைகளாகவோ வியாக்கியானக்காரர்கள்  எழுதியுள்ளனர். 2100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காளிதாசன், தஸ்யூக்களை திருடர்கள் என்ற பொருளில் பயன்படுத்தியுள்ளான். உண்மை அப்படியிருக்க , விஷமக்கார வெள்ளைக்காரர் கள் தஸ்யூக்களை மட்டும் பூர்வ குடி மக்களாகச் சித்தரித்து இனவாதம் பேசியுள்ளனர். நல்ல வேளையாக அந்தப் பயல்கள் தமிழ் இலக்கியத்தைப் படிக்கவில்லை. சுமார் 1200 ஆண்டுகளுக்கு, தமிழர்கள்  குடுமி பிடிச் சண்டையில் ஈடுபட்டனர்; சேரனும் சோழனும் பாண்டியனும் ஒருவனை ஒருவன் அடித்துக் கொண்டு செத்தான். அதையெல்லாம் இனப் பூசல் என்று சொல்லியிருப்பான் வெளிநாட்டுக்காரன்.

பாடல் 38-ல் யாக பூமி வருணிக்கப்படுகிறது ; இதை புறநானூற்றில் முதுகுடுமிப் பெருவழுதி பற்றிய பாட்டிலும். பூஞ்சாற்றூர் பார்ப்பான் விஷ்ணுதாசன் பற்றிய பாடலிலும். இராஜ சூயம் செய்த சோழன் பாட்டிலும் காண்கிறோம் .

பாடல் 39-ல் சப்த ரிஷிகள் என்னும் 7 ரிஷிகள் பற்றி வருகிறது அவர்களை ‘கைதொழு எழுவர்’ என்று சங்க இலக்கியமும் பாடுகிறது. பிராமணர்கள் தினமும் 3 வேளை செய்யும் சந்தியாவந்தனத்திலும் 7 ரிஷிகள் வருகின்றனர் . பாணினியும் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் அதே வரிசையில் 7 ரிஷிகள் பெயரை அடுக்கியுள்ளான்.

ரிக் வேதம் முழுதும் ரிஷிகளை  “உலகைப் படைப்போர்” என்று வருணிக்கின்றனர் ; அதே சொற்கள் — பூதக்ருதே  ரிஷயஹ — இங்கும் வந்துள்ளது. பகவத் கீதையில் கண்ணனும் இதைச் சொல்கிறான் தன்னைப் போலவே சக்திபடைத்தவர்கள் சனகர் முதலானோர் என்பார். ரிபுக்கள் என்னும் தேவர்கள் மனித நிலையிலிருந்து தெய்வமானதை ரிக்வேதமே விளம்பும்.

‘மனிதனும் தெய்வமாகலாம்’ என்னும் கட்டுரையில் திருவள்ளுவரும் இதைச் சொல்லுவதை எழுதியுள்ளேன் .

40- ஆவது பாடலில் செல்வத்தை வாரி வழங்க மீண்டும் வேண்டுகிறார் முனிவர்/ரி ஷி.

41ல் ஆடல் பாடல் மிக்க இன்பமயமான வேத கால வாழ்வின் சித்திரத்தைப் பார்க்கலாம்

42-ல் வேளாண்மையைப் போற்றும் சமுதாயத்தைக் காண்கிறோம்

வேத கால மக்களை நாடோடிகள் என்று சித்திகரித்த விஷமக்கார கும்பல்களுக்கு வேட்டு வைக்கும் பாடல் இது. ரிக் வேதம், அதர்வண வேதம் எல்லாவற்றிலும் சாகுபடி செய்து விளைவித்த தானியங்களைக் காண்கிறோம். அடுத்த பாட்டும் நகர நாகரீகத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது

பாடல் 43ல் தேவர்களால் உருவாக்கப்பட்ட நகரங்களை பார்க்கலாம். இன்றுவரை ‘புரம்’ என்பது பூரி, பூர், ஊர் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தையும் தாங்கி நிற்கும் பூமியை பிரஜாபதி காக்கவேண்டும். அப்போதுதான் பூமி நம்மீது  வளம் சொரிவாள் என்கிறார் புலவர்.; முழுக்க முழுக்க ஆக்கபூர்வ சிந்தனை; நம்பிக்கையூட்டும் காட்சிகள்

63 மந்திரங்களில் மீதமுல்ல 20 மந்திரங்களை அடுத்து வரும் கட்டுரைகளில் தொடர்ந்து காண்போம்.

மந்திரம் 37

யாப ஸர்ப்பம் விஜமானா விம்றுக்வரீ  யஸ்யாமாஸன்னக்னயோ யே அப்ஸ்வ ந்தஹ

பரா தஸ்யூன் தததீ தேவபீயூனிந்த்ரம் வ்ருணானா ப்ருதிவீ ந வுத்ரம்

சக்ராய தத்ரே வ்ருஷபாய வ்ருஷ்ணே -37

பொருள்

எந்த  பூமாதேவியின் நீரில் நெருப்பு உண்டோ, தூய்மை செய்யும் அவள், பாம்பினை நடுங்கச் செய்தாள் ; கடவுள் விரோதிகளான தஸ்யூக்களை  நீக்கி, காளை போன்ற வலிமைக்கு இந்திரனை வைத்துக் கொண்டு விருத்திரனை அகற்றினாள் -37

xxxx

மந்திரம் 38

யஸ்யாம் ஸதோ ஹவிர்தானே யூபோ யஸ்யாம் நிமீயதே

ப்ரஹ்மாநோ  யஸ்யாமர்ச்சந் த்யுக்பிஹி  ஸாம்னா யஜுர்விதஹ

யுஜ்யந்தே யஸ்யாம்ருத்விஜஹ ஸோமமிந்த்ராய பாதவே –38

பொருள்

எந்த பூமியின் மீது யாக குண்டமும், மண்டபமும், யூப நெடுந்தூண்களும் நிற்கின்றனவோ அங்கே பிராமணர்கள்  ரிக், சாம, யஜுர் வேத துதிகளைப் பாடுகின்றனர் ; இந்திரனை சோம ரசம் பருகச் செய்வதற்காக புரோகிதர்கள் சுறுசுறுப்பாக உள்ளனர்.-38

xxxx

மந்திரம் 39

யஸ்யாம் பூர்வே பூதக்ருத ருஷயோ கா உதாந்ருசுஹு

ஸப்த சத்ரேண வேதஸோ யக்ஞேன தபஸா  ஸஹ –39

பொருள்

எந்த பூமியில் சப்த ரிஷிக்கள் வேதம், யாகம், தவம் ஆகியவற்றுடன் துதித்தார்களோ , உலகைப் படைக்கும் ரிஷிகள் புனித மொழிகளை  வழங்கி கினார்களோ – 39

xxxx

மந்திரம் 40

ஸா நோ பூபிரா திசது  யத்தனம்  காமயா மஹே

பகோ அனுப்ரயுங்க் தாமிந்த்ர ஏது புரோ கவஹ –40

பொருள்

அந்த பூமியானது நாங்கள் விரும்பும் செல்வம் அனைத்தையும் வழங்கட்டும்  பகன் என்னும் தேவன் பணிகளை வழங்கட்டும்; இந்திரன் எங்களை வழி நடத்திச் செல்லட்டும் – 40

Xxxx

மந்திரம் 41

யஸ்யாம் காயந்தி ந்ருத்யந்தி பூம்யாம் மர்த்யா வ்யை லபாஹா

யுத்யந்தே யஸ்யாமாக் ரந்தோ யஸ்யாம் வததி துந்துபிஹி

ஸா நோ பூமிஹி ப்ர ணுததாம் ஸபத்னான ஸபத்னம் மா ப்ருதிவீ  க்ருணோது -41

பொருள்

எந்த பூமியில் மக்கள் ஆடியும் பாடியும் மகிழ்கிறார்களோ, எங்கே கூடிக்குலவி கதைக்கிறார்களோ, எங்கே போர் முரசுகள் ஆரவாரம் செய்கின்றனவோ , அந்தப் பூமாதேவியானவள் எங்கள் எதிரிகளை விரட்டட்டும்; எதிரிகள் இல்லாத பூமியை அவள் எங்களுக்கு அளிப்பாளாகுக  –41

Xxxx

மந்திரம் 42

யஸ்யாமன்னம் வ்ரீஹி யவௌ யஸ்யா இமாஹா பஞ்ச க்ருஷ்டயஹ

பூம்யை பர்ஜன்ய பத்ன்யை  நமோஸ்து வர்ஷ மேதஸே -42

பொருள்

எந்த பூமியில் அரிசியும் யவம் முதலிய தானியங்களும் விளைகின்றனவோ , எங்கு ஐந்து இன  மக்கள் வாழ்கின்றனரோ மழை பொழியும் பர்ஜன்யனை துணையாக உடைய அந்த பூமாதேவியை வணங்கித் துதிக்கிறோம்.- 42

Xxxx

மந்திரம் 43

யஸ்யா புரோ தேவக்ருதாஹா க்ஷேத்ரே யஸ்யா விகுவர்த்ததே

ப்ரஜாபதிஹி ப்ருதி வீம்  விஸ்வ கர்பா மாசா மாசாம் ரண்யாம்  நஹ க்ருணோது-43

பொருள்

தேவர்கள் உருவாக்கிய நகரங்கள் எங்குள்ளனவோ , எங்கு பல்வேறு பணிகளில் மக்கள் ஈடுபட்டுள்ளனரோ , எந்த பூமாதேவி அவளுடைய கருப் பையினுள் அனைத்தையும் தாங்கி நிற்கின் றனளோ அவளை எங்கள் நலனை முன்னிட்டு பிரஜாபதியானவர் கருணை மிக்கவளாக ஆக்கட்டும் -43

Xxxx

வேதத்தில் நடனம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

5 Apr 2015 — வேதத்தில் பரத நாட்டியம்! … ஷண்முகாநந்தா நுண்கலை – இசை சங்கத்திலும் 16-12-1989 ல் …

ஜப்பானில் சாம வேதம்; வேத கால இசைக் கருவிகள் …

https://tamilandvedas.com › ஜப்ப…

·

28 Nov 2019 — Related · மிருதங்க இசை மரபு : ஒரு அருமையான நூல்! (Post No.10476) December 23, 2021 In “க. தியாகராஜன்”.

வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?(Post No.3868)

https://tamilandvedas.com › வள்…

1 May 2017 — வள்ளுவனுக்கு சங்கீதம் தெரியுமா?(Post No.3868) … (Post 10,408) December 4, 2021 In “அதர்வண வேதம்“.


சங்கீதம் தோன்றிய கதை: ஒரு புராண வரலாறு

https://tamilandvedas.com › சங்க…

13 Apr 2014 — வேதத்தில் இருந்து தோன்றியது இசை என்றும் சொல்லுவர். சாமவேதம் இசையுடன் ஒதப் …

பரத முனிவர் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › பர…

3 Aug 2021 — பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! … முன்னொரு கட்டுரையில் பரத நாட்டியம் …


கம்ப ராமாயணத்தில் பரத நூலும், சுரத நூலும்! (Post …

https://tamilandvedas.com › கம்ப-…

14 Nov 2016 — Related · பரதநாட்டியம் பூமிக்கு வந்த கதை ! (Post No.9930) August 3, 2021 In “கதை” · நாட்டிய நாடகம் ..

மனிதனும் தெய்வமாகலாம் -குறள் , ரிக் வேதம் (Post …

https://tamilandvedas.com › மனி…

12 Jun 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. மனிதன் …

TO BE CONTINUED……………………………..

tags- பூமி சூக்த கட்டுரை 13, வேத காலம் , ஆடல் பாடல்

வேதத்தில் விளையாட்டுகள் ! (Post No.8866)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8866

Date uploaded in London – –28 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வேதகாலத்தில் மக்கள் இன்பமாக வாழ்ந்தனர். பெண்களும் பொது இடங்களுக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர். பாணினி 2700  ஆண்டுகளுக்கு முன் எழுதிய இலக்கண நூலிலும் அதன் உரைகளிலும் பல புதிய — அதாவது இப்போது வழக்கொழிந்த — விளையாட்டுகளைக்  காண்கிறோம் .

வேத கால மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், தேர்கள் செய்யும் தச்சசு வேலை, கால்நடை- குதிரை வளர்ப்பு, போர்த் தொழில், ஆயுத உற்பத்தி முதலியன ஆகும்.

அவர்கள் பொழுது போக்கச் செய்தவை – சூதாட்டம், ஆடல், பாடல், இன்னிசைக் கருவிகள் வாசித்தல், தேர் ஓட்டல், தேர் பந்தயம்/ ரதம் ஓட்டும் போட்டி, BOARDS GAMES போர்டு/ அட்டை விளையாட்டுகள்– அதாவது சொர்க்கப்படம் — பாம்பு-ஏணி SNAKES AND LADDER படம் உள்ள அட்டைப்பட விளையாட்டுகள், பல்லாங்குழி முதலியன.

சூதாட்டத்தின் தாக்கத்தை மஹாபாரதம்  வரை காண்கிறோம். நள- தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். புறநானுற்றில்  பிராமணனும் மன்னனும் ஆடிய வட்டு ஆட்டத்தில் ஒருவர் மீது ஒருவர் பகடைக் காய்களை எரிந்து கோபம் அடைந்த பாடல் உளது. திருவள்ளுவரோ பத்து குறள்களில்  சூதாட்டம் பற்றி எச்சரிக்கிறார் ;ஆக, இமயம் முதல் குமரி வரை சூதாட்டம் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் மிகப்பழமையான புஸ்தகம் ரிக்வேதம்; ஜெர்மானிய ஹெர்மன் ஜாகோபியும் இந்திய சுதந்திர சிற்பி பாலகங்காதர திலகரும் 6000 முதல் 8000 ஆண்டுப் பழமையானது என்று நிரூபித்துள்ளனர்; அதில் சூதாட்டத்தில் பணம் இழந்த ஒரு மனிதன் புலம்பு, புலம்பு என்று புலம்பி, உலகில் சிறந்தது வேளாண்மையே என்று விவசாயத்துக்குத் திரும்பி  வந்ததை ரிக்வேத 10-34-13 சூதாட்டப் பாடல் காட்டுகிறது; உலகின் முதல் சொற்பிறப்பியல் புஸ்தகம் (ETYMOLOGY எடிமோலஜி )எழுதியவர் யாஸ்கர். உலகில் கிரேக்கர்கள்  புஸ்தகம் எழுதுவதற்கு முன்னால் , அவர் சொற்பிறப்பியல் அகராதிக்கே போய்விட்டார். அவ்வளவு பழமையானது சம்ஸ்கிருதம். அவரும் சூதாட்டம்  ஒழிக , விவசாயம் வாழ்க என்று நிருக்தம் 8-3 ல் கதைக்கிறார்.

வள்ளுவனும் உலகிற்கு ஆணி, வேளாண்மை என்று சொல்லி பத்து பாக்களில் விவசாயம் ஜிந்தாபாத் என்று சொல்லிவிட்டு, மேலும் 10 குறட் பாக்களில் சூதாட்டம் மர்தாபாத் என்று வசை பாடுகிறார். ஆக, சூதாட்டம் என்னும் விளையாட்டு இந்துக்களின் வாழ்வில் கொடிகட்டிப் பறந்ததைப்  பார்க்கிறோம் .

இதற்கு அடுத்த படியாக வரும் விளையாட்டுகள் குதிரைப் பந்தயம், தேரோட்டும் பந்தயம். 

குதிரைப் பந்தயம் சென்னை கிண்டி முதல் உலகின் மிகப்பெரிய  நாடுகள் வரை நடைபெற்றது. இப்பொழுது சூதாட்ட பெட்டிங் BETTING — பந்தயப்பணம் கட்டும் – கடைகள் உலகின் மிகப்பெரிய நகரங்களில் பேட்டைதோரும் உளது. இதைத் துவக்கி வைத்தவர்களும் இந்துக்களே. ‘இம்’ என்னும் முன்னே 700 காதம் சென்ற SUPER FAST சூப்பர் பாஸ்ட் ரதங்களை , நள   தமயந்தி சரிதத்தில் படிக்கிறோம். ‘வைகலும் எண் தேர் செய்த தச்சர்’கள் பற்றி புறநானுற்றில் பயில்கிறோம்.; தச்சர் என்பது ஸம்ஸ்க்ருதச் சொல்..

அகநாநூற்றில் காதலியைக் காணவரும் காதலர்கள் SUPER FAST SPEED சூப்பர் பாஸ்ட் ஸ்பீடில் வண்டியை ஒட்டும்படி டிரைவர்களுக்கு கட்டளை இடுவதையும் எழுதி வைத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் — காந்தார- கேகய — வீராங்கனை கைகேயி, தசரதன் ரதத்துக்கு சாரதியாக இருந்து வெற்றிவாகை சூடி , இரண்டு வரம் பெற்று, அதை ‘மிஸ்யூஸ்’ MISUSE  பண்ணி ராமாயணக் கதையை எழுதச் செய்ததையும் நாம் அறிவோம்.  ஆக இமயம் முதல் குமரி வரை ‘பக்கா’ ரோடுகள் இருந்ததும் அதில் ஜப்பானிய BULLET TRAIN புல்லட் ட்ரையினை விட அதி வேகத்தில் நம்மூர்க்கார்கள் சென்றதையும் உலகிற்கே சொன்னோம். அப்பொழுது எகிப்தியர்களும், பாபிலோனியர்களுக்கும் குதிரைக்கும் ரதத்துக்கும் ஸ்பெல்லிங் SPELLING  கூடத் தெரியாது என்பதை சரித்திர வல்லுநர்கள் புகல்வர் . மாயா நாகரீக மக்களுக்கோ சக்கரம்/WHEEL என்பதே தெரியாது என்றும் பகர்வர்.

ரிக்வேதம் 10-102 பாடலில் ‘ரேக்ளா ரேஸ்’ போல அதிவேக மாட்டுவண்டி CHASE சேஸ் ஒன்றைப் படிக்கலாம். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வரும் CAR CHASE கார் சேஸ் போன்றவற்றை விட அதிவேகத்தில் மாட்டு வண்டி பறந்ததையும் அந்த வீரனின் மனைவியும் வண்டி யி ல் சென்றதால் காற்றில் அவளுடைய ஆடை பறந்ததையும் படித்து மகிழலாம் ;

இது பற்றி வேதங்களுக்கு விளக்க உரை எழுதிய சாயனர் ஒரு கதை சொல்கிறார். முத்கலன் என்பவருடைய பசு, காளை மாடுகளைத் திருடர்கள் திருடிச் சென்றனர். அவனது  மனைவி முத்கலானி  வேகமாக காளை  வண்டியை ஓட்டி ச் சென்றாள் . முதக்கலன் தன்னுடைய  ‘கதை’–யைத் தூக்கி எறிந்து  திருடர்களை விரட்டினான். அக்காலத்தில் இந்து தம்பதியர்கள் எவ்வளவு வீரர்களாகத் திகழ் ந் தனர் என்பதற்கு இப்பாட்டு எடுத்துக்காட்டு. வண்டி ஓட்டுதல் , ரதம் ஓட்டுதல் முதலியனவும் ஆண் பெண் பங்கேற்புடன் நடைபெற்றன.

அந்தக்  காலத்தில் க்ஷத்ரியர்களாகப் பிறந்தால் வீரத்தை நிரூபித்தால்தான் பெண் கொடுப்பார்கள். கிருஷ்ணன், ஜல்லிக்கட்டில் பங்கு கொண்டு ஏழு காளைகளை அடக்கி நப்பின்னையை கல்யாணம் கட்டினான். அதைத் தொடர்ந்து யாதவ குல மாதர் அனைவரும் காளையை அடக்கியவரை மக்க  விரும்பியதை கலித்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. இது போல குதிரைப் பந்தயத்தில் வெற்றி பெறுவோருக்கே பெண் கொடுத்தனர் வடக்கத்திய இந்துக்கள். சில நேரங்களில் யாரும் தூக்க முடியாத சிவன் வில்லைத் தூக்கி நாண்  ஏற்றிய ராமனுக்கு சீதையைக் கொடுத்ததையும் டில்லியில் நடந்த உலகத்தின் முதல் ஒலிம்பிக் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜுனனுக்கு திரவுபதி கிடைத்ததையும் பார்க்கலாம். வில்வித்தை முதலிய விளையாட்டுகள் அடங்கிய ஒலிம்பிக் போட்டியை நாம் 5200 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தியதை மஹாபாரதம், பாகவதம் முதலிய நூல்கள் காட்டும்.

குதிரைப் பந்தயத்தில் எல்லைக் கம்பம் ஒன்று இருக்கும் அதன் பெயர் கார்ஸ்ம என்று சாயனர் விளக்குகிறார் — RV. 1-116- 17

சவித் புதல்வியின் பெயர் சவிதா அல்லது சூர்யா . ரத போட்டியில் யார் வெல்வரோ அவருக்கே சவிதா/ சூர்யா கிடைப்பாள் என்று அறிவிக்கப்படுகிறது; எல்லாக் கடவுளரும் போட்டியில் பங்கேற்றனர். இறுதியில் அஸ்வினி தேவர்கள் வெற்றி பெற்றனர். உடனே எல்லோரும் சூர்யாவை தேரில் ஏற்றிச் சென்று அஸ்வினி தேவர்களுக்கு அளித்தனர் – காண்க ரிக்/ RV 1-119-5

ராஜசூய யாகத்தின்போது குதிரைப் பந்தயம், ரதம்  ஓட்டும் பந்தயம் நடைபெறும். சோழன் ராஜசூய யாகம் செய்ததை புறநாநூறு பாடுகிறது. அதற்கு சேர, பாண்டிய மன்னர்களும் அவ்வையாரும் வந்தனர். அப்போதும் இந்தப் பந்தயங்கள் நடந்திருக்கவேண்டும்.

ரிக் வேதம் RV.1-116 பாடலில் இன்னும் ஒரு சம்பவம் உளது. விமதன் என்பவன்  கல்யாணம் கட்டிமுடித்த பின்னர் புது மனைவியை ரதத்தில் அழைத்து வந்தான் . அப்போது அவனை எதிரிகளோ திருடர்களோ தாக்கினர். அஸ்வினி தேவர்கள் விரைந்து வந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு உதவுகின்றனர்.

இதே பாடலில் மேலும் சில வியப்பான செய்திகள் உள .

அஸ்வினி தேவர்கள் தங்கள் பலத்தைக் காட்ட — திறமையைக் காட்ட – ஒரு காளை மாட்டையும் காட்டுப் பன்றியையும் ரதத்தில் கட்டி இருந்தனர்.

100 சக்கரங்கள் 6 குதிரைகள் பூட்டிய ரதம் பற்றியும்  இதே பாடல் பாடுகிறது 1-116-ரிக்.

இந்தப் பாடல் அதிசயங்களின் பட்டியல் ; விளையாட்டுக்குத் தொடர்பில்லாத அதிசயங்களை தனியே காண்போம்.

கேலா (Khela)என்ற மன்னனுடன்  அவன் மனைவி விஸ்பலா(Vispala) வும் சென்றாள் . போரில் அவள் கால்களை இழந்தாள் . அஸ்வினி தேவர்கள் அவளுக்கு செயற்கைக் காலை பொருத்தினர். அந்த அளவுக்கு மருத்துவத் துறையில் இந்துக்கள் முன்னேறி இருந்தனர். தமிழ் நாட்டில் கீரந்தை  என்ற பிரமணனுக்காக கைகளை வெட்டிக்கொண்ட பாண்டிய மன்னனுக்கு மருத்துவர்கள் தங்கக் கைகளைப் பொருத்தியதால் பொற்கைப் பாண்டியன் என அவன் பெயர்பெற்றான்

ஆக தேர்கள், தேர் விளையாட்டுகள் பற்றி சங்க இலக்கியத்திலும் ரிக் வேதத்திலும் நிறைய செய்திகள் கிடைக்கின்றன.

–SUBHAM–

tags– வேத காலம், சங்க காலம், விளையாட்டுகள், சூது , குதிரை, ரதம், பந்தயம்

வேத காலத்தில் வாணிபம் (Post No.5076)

Written by London Swaminathan 

 

 

Date: 4 JUNE 2018

 

 

Time uploaded in London – 18-28

 

Post No. 5076

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU

 

வேத காலம் முதல் நாம் கடல் வணிகம் செய்து வருகிறோம். வேதத்தில் இரு புறமுள்ள கடல்கள் என்ற சொற்றொடர் வருவதால் மேலைக் கடற்கரையையும் கீழைக் கடற்கரையையும் அவர்கள் ஒருங்கே ஆண்டது தெரிகிறது.

சிலப்பதிகாரத்தில் மாசாத்துவான் மகன் கோவலன் என்றும் மாநாய்க்கன் மகள் கண்ணகி என்றும் நாம் பயில்கிறோம். இது அவர்களுடைய பெயர்கள் அன்று. அவை பட்டங்கள் ஆகும். அதாவது தலா ய்லாமா, போப்பாண்டவர், சங்கராச்சார்யார் போன்ற பட்டங்கள். அல்லது டாக்டர், வக்கீல் என்பது போலத் தொழில் பட்டங்கள் எனலாம். இரண்டும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்.

 

சார்த்தவாஹன என்றால் வணிகர் தலைவன். அதாவது வணிகர்கள் ஒரு கூட்டமைப்பு வைத்து அதில் ஒருவரைத் தலைவர் ஆக்குவர். அவர் மஹா சார்த்தவாஹனன் ; தமிழில் மாசாத்துவான். கப்பல் வணிகர்கள்  மஹா நாயக்கன் என்பவரைத் தலவராகக் கொள்வர். அவர் மாநாய்க்கன். ஆக கோவலன், கண்ணகி ஆகியோரின் தந்தை பெயரை நாம் அறியோம் ஆனால் அவர்கள் பட்டங்க ளையே அறிவோம். அக்காலத்தில் ஜாதி முறைக் கல்யாணம் இருந்ததால் வணிகர் குலத்துக்குள் அத்திருமணம் முடிந்தது.

 

சார்த்தவாஹன என்பதற்கு அமரகோஷம் போன்ற ஸம்ஸ்க்ருத நிகண்டுகள் பொருள் தருகையில் “ஒரே/ சம அளவு முதலீடு செய்த வணிகர் குழு” என்று சொல்லும்; அவர்கள் ஊர் விட்டு ஊர் போய் அல்லது நாடு விட்டு நாட்டுக்குப் போய் வியாபாரம் செய்வர்.

 

வேதத்தில் இந்தச் சொல் இல்லாவிடினும் ‘பாணி’ என்ற சொல் உள்ளது. அது வணிகரைக் குறிக்கும்; பிற்காலத்தில் ‘பனியா’ என்ற சொல் வணிகரைக் குறித்தது.

 

வேத காலத்தை அடுத்து வந்த பாணினி என்ற உலகப் புகழ்பெற்ற இலக்கண வித்தகர் (கி.மு. ஏழாம் நூற்றாண்டு) போகிற போக்கில் ஒரு எடுத்துக் காட்டாக ‘உத்தரபத’ (வட பெரும் வழி) என்று சொல்கிறார். அப்படியானால் ‘தென் பெரும் வழி’ ஒன்றும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கலாம்.

அதர்வண வேதத்தில் ப்ருத்வி சூக்தத்தில் (பூமி) பல வழிகளில் செல்லும் வணிகர் பற்றிய குறிப்புகள் உள. ஆக வேத காலம் முதல் வணிகம் நடந்தது தெளிவு. அது மட்டுமல்ல; அதே துதியில் பல மொழி பேசும் மக்கள் பற்றிய குறிப்பும் உளது. ஆகவே அக்காலத்திலேயே மக்கள் பல்வேறு மொழி பேசும் பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ சென்றதும் தெரிகிறது.

 

மக்கள் பயணிக்க பல வழிகள் உளது;

ரதங்களும் மாட்டு வண்டிகளும் செல்ல அவை உள்ளன;

நல்லோரும் தீயோரும் அவற்றில் செல்லலாம்;

அவைகள் எங்கள் கட்டுப்பாட்டில் வரட்டும்;

வழிப்பறி கொள்ளையர்களையும் எதிரிகளையும் விரட்டுவோம்.”

அதர்வ வேதம் 12-47

 

வற்றாது பால் சுரக்கும் பசுக்கள் போல

இந்த பூமியும் எங்களுக்கு ஆயிரம் நதிகள் (வழி) மூலம் வளம் சுரக்கட்டும்;

பல்வேறு மொழிகளையும் சமய வழிகளையும்,

வாழும் இடங்களுக்கு ஏற்ப

பின்பற்றும் பூமி இது

அதர்வ வேதம் 12-45

 

இந்தத் துதியிலிருந்து தெரிவதென்ன?

பூமியில் பல சாலைகள்/ பயண வழிகள் இருந்தன

மக்கள் தொடர்புக்கு இவைகளே சிறந்த வழிகள்

ரதங்களும் வண்டிகளும் அதில் ஓடின;

எல்லோரும் அதில் பயணிக்க முடியும்;

ஆயினும் வழிப்பறி திருடர்கள் உண்டு;

பாதுகாக்கப்பட்ட வழிகள் இன்பம் தரும் பாதைகள் ஆகும்.

அரசனும் அதிகாரிகளும் அவைகளைப் பாதுகாப்பர்.

 

அகஸ்தியர் கடல் குடித்த வரலாறு, விந்திய  மலையை கர்வ பங்கம் செய்த வரலாறு முதலியன மறை பொருளில் வரலாறு உணர்த்தும் நூல்களாகும். கடலைக் குடித்தார் என்றால் அகஸ்தியர்தான் முதலில் வணிகர் குழுவுடன் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்றார் என்பது பொருள்.  அவர் விந்திய மலையைக் கர்வ பங்கம் செய்தார் என்றால், விந்திய மலையின் தலையைத் தட்டி, சாலை அமைத்தார் என்பது பொருள். ஆக அகஸ்தியர் காலத்தில் இருந்து இந்தப் பயணம் துவங்கிவிட்டது. அதை நமது புராணங்கள் விளக்குகின்றன.

அந்தக் காலத்தில் வடக்கில் பூபாரம்/ ஜனத்தொகை அதிகரித்தவுடன் சிவபெருமானே அகஸ்தியரை அழைத்து தென் பகுதிக்கு அனுப்பியது ஆளே இல்லாத தென் பகுதிக்கு ஆட்களை குடியேற்றியது தெரிகிறது. அகஸ்தியர் தலைமையில் 18 குடிகள் வந்தனர். இவை இல்லாம் கி.மு.800 முதல் 1000 வரை நடந்ததால் அந்தக் காலத்திலேயே மக்களின் பெரும்பயணம் துவங்கியதை நாம் அறிகிறோம். அதற்கு முன்னதாக ராமன் காலத்தில் கடலோர போக்குவரத்து நடந்தது. காடுகள் வழியே போகச் சாலைகளோ முறையான பாதைகளோ இல்லை அந்தப் பெருமை அகஸ்தியர் என்னும் முனிவரையே /இஞ்சினீயரையே சாரும்!!!

 

–சுபம்–

 

கிரஹணம் மூலம் ரிக் வேத காலம் நிர்ணயம் (Post No.4466)

Written by London Swaminathan 

 

Date: 7 DECEMBER 2017 

 

Time uploaded in London-  22-08

 

 

Post No. 4466

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks.

 

 

மாக்ஸ்முல்லர் குத்து மதிப்பாக வேதத்துக்கு நிர்ணயித்த காலம் எல்லாம் தவறு என்பது எல்லோராலும் ஏற்கப்பட்டுவிட்டது. அவரது காலத்திலேயே அவர் சொன்ன கி.மு 1200 என்பதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னதெல்லாம், இதற்கு கீழாக வேதத்தின் காலத்தை யாரும் குறைக்கமுடியாது என்று சொன்னேனே தவிர இதுதான் முடிவு என்பதல்ல; வேதத்தின் காலம் 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இருக்கலாம் என்று சப்பைக்கட்டு கட்டி தப்பித்துக் கொண்டார்.

 

இப்பொழுது சரஸ்வதி நதிதீர ஆய்வு, விஞ்ஞான முறையில், வேதத்தின் காலத்தை நிர்ணயித்துவிட்டது. அதாவது கி.மு.2000க்கும் முன்னர்தான் இருக்க முடியும்; சிந்துவெளி நாகரீகத்துக்கு முந்தியோ அல்லது சமகாலத்தானதோ இருக்கலாம் என்று காட்டிவிட்டது.

 

ஆனால் இதற்கு முன்னரே ஹெர்மன் ஜாகோபி, பாலகங்காதர திலகர் ஆகியோர் வானசாஸ்திர முறைப்படி ஆராய்ந்து கி.மு 4000 அல்லது அதற்கு முன் என்று சொன்னார்கள்; பலருக்கும் புரியாத விஷயம் என்பதால் எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் அந்த வாதம் ஒரு புறம் ஒதுங்கிவிட்டது.

அண்மைக் காலத்தில் இந்த அணுகுமுறையை மேலும் சிலர் தீவிரமாக ஆராய்ந்து கிரஹணக் குறிப்புகளை மட்டும் வைத்து உலகிலேயே மிகப் பழைய நூலான ரிக் வேதத்துக்குக் காலம் நிர்ணயம் செய்துள்ளனர்.

 

உமாபாத சென் என்பவர் ரிக்வேத காலம் என்ற புத்தகத்தில் பல சுவையான செய்திகளைத் தருகிறார். ரிக் வேதத்தில் உள்ள சூரிய கிரஹணக் குறிப்புகளை யாரும் உதாசீனம் செய்யமுடியாது; ஏ.லுட்விக் (A.Ludwig) என்பவர் இந்த விஷயத்தை மிகவும் விரிவாக ஆராய்ந்து எழுதினார்.

 

பத்தாவது மண்டலத்தில் (10-138-4) சூரியன் கிரஹணத்தால் பீடிக்கப்பட்டது பற்றிப் பாடியுள்ளனர். சிலர் இதை சந்திர கிரஹணம் என்று தவறாக மொழி பெயர்த்துவிட்டனர். ஆனால் முழு துதியையும் படித்தால் சூரிய கிரஹணம் என்பது தெளியப்படும்.

 

லுட்விக் என்பவர் வேதத்தைக் குறை

கூறுவோரைக் கண்டித்துள்ளார். இதே போன்ற குறிப்புகள் பிற நாட்டு இலக்கியங்களில் வரும்போது கேள்வியே கேட்காமல் இருப்பவர்கள் ரிக் வேதம் என்று சொன்னவுடன் மட்டும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்? என்பது அவரது கேள்வி.

 

நாலாவது மண்டலத்திலும் (4-28-2) ஒரு கிரஹணக் குறிப்பு வருகிறது. அங்கே இந்திரன், சோமனால் சூரியனை மறை

த்தார் என்று துதி பாடுகின்றனர் சோம என்ற சொல்லுக்கு வேதத்தில் இரண்டு பொருள் உண்டு: 1.நிலவு, 2.சோமரஸம்

இது நிலவைத்தான் குறிப்பிடுகிறது, சோம ரசத்தை அல்ல என்று பேராசிரியர் வில்லிபிராண்ட், வேதகால பழங்கதைகள் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 

இந்திரன் இந்த கிரஹணத்துக்குக் காரணம் என்று அந்த மந்திரம் சொல்லுவது பலருக்கும் புதிராக இருந்தது. மேலும் ஸ்வர்வானு என்பதை மேகங்களென்று மொழி பெயர்த்தனர் ஆனால் சொல்பிறப்பியல் முறைப்படி ஆராய்ந்தால் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும்சந்திரன் எனப் பொருள்படும். விஷ்ணு புராண காலத்தில் ஸ்வர்பானு என்பதை ராகு என்ற கிரகமாக மாற்றிவிட்டட்னர். புராணங்கள் என்பது வேதக் கருத்துக்களைப் பாமரமக்கள் புரிந்து கொள்வதற்காக எழுதப்பட்ட கதைப் புத்தகமாகும்.

 

இந்திரன் கிரஹணத்தை உண்டாக்கியதாகவும் அத்ரி நாலாவது மந்திரத்தில் சூரியனைக் கண்டுபிடித்ததாகவும் வேதம் சொல்லும். இதன் பொருள் அவர் நாலு மந்திரம் உச்சரிக்கும் காலத்துக்கு சூரியன்  முழுஅளவு மறைந்திருந்தது என்பதாகும்.

 

இந்துக்களின் சரியான கிரஹணக் கணக்கீட்டு  முறைகளை  லுட்விக் பாராட்டுகிறார். சூரியனின் ஒளியைத்தான் சந்திரன் பிரதிபலிக்கிறான் என்பதை வேத கால ரிஷிகள் அறிவர். இது மிகவும் அதிசயமான விஷயம் என்கிறார்.

 

இந்திரனை கேட்டை நட்சத்திரத்துக்கு அதிப தி என்பர். இந்து இந்திரனுக்கும் கேட்டை நசத்திரத்தும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

ரிக்வேதத்தின் 10-138-3/4 மந்திரத்தில் சூரியனின் குதிரைகளை இந்திரன் அ விழ்த்துவிட்டான் என்பது சூரியனின் ஒளி குன்றி கிரஹணம் ஏற்பத்தட்டதாகும் என்று லுட்விக் சொல்கிறார்.

ஐந்தாவது மண்டல (5-40) சூர்ய கிரஹணத்தை விரிவாக்கக் காட்டுகிறது என்பார்.

 

வேத காலத்தில் நடந்த இரண்டு சூரிய கிரஹணங்களில் ஒன்று பூரண சூரிய கிரஹணம். இந்திய அட்ச ரேகையில் நடந்த கிரஹணம் சூரியன், கேட்டை (இந்திரன்) நட்சத்திரத்தின் அருகில் பகல் நேரத்தில் இருந்தபோது நடந்தது. இந்த மாதிரியான நட்சத்திர நிலை எப்போது இருந்தது என்று இந்திய வானாராய்ச்சிக் கூடத்துக்கு உமாபாத சென் எழுதிக் கேட்டபோது பதிலே வரவில்லை. ஆனால் வெளி நாட்டு ஆய்வுக் கூடங்கள், சரியான பதிலை அனுப்பின. அமெரிக்காவிலுள்ள ஸ்மித்சோனியன் வானாராய்ச்சிக்  கூடத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ரையன் மார்ஸ்டென், இப்படிப்பட்டதொரு நிலை கி.மு 2990ல் இருந்தது என்று எழுதினார்.ஆகவே முழு சூரிய கிரஹணத்தை கி.மு.3000 ஆண்டை ஒட்டியது என்றும், மற்ற பர்ஸ்வ கிரஹணம் பிந்தியது என்றும் தெரிகிறது.

 

சரஸ்வதி நதி தீர ஆராய்ச்சி, வானியல் ஆராய்ச்சி ஆகியன எல்லாம் விஞ்ஞான மு றைப்படி வேத காலத்தை கி.மு.2000க்கு முன்னர் வைக்க உதவுவதால் மாக்ஸ்முல்லர் சொன்ன தேதியை ஒதுக்கித் தள்ளிவிடலாம்.

TAGS:- சூரிய கிரஹணம், வேத காலம், ரிக் வேதம்

-SUBHAM–

மாக்ஸ்முல்லர் மண்ணைக் கவ்வினார்! அணுசக்தி விஞ்ஞானிகள் செமை அடி! (Post No.4217)

Written by London Swaminathan

 

Date: 16 September 2017

 

Time uploaded in London- 16-51

 

Post No. 4217

 

Pictures are taken from various sources; thanks.

 

 

வேதத்தை மொழிபெயர்த்து வெளியிட்ட மாக்ஸ்முல்லருக்கு பாம்பு போல இரட்டை நாக்கு; சில இடங்களில் வேதத்தைப் புகழ்வார்; சில இடங்களில் வேதத்தை இகழ்வார்; அவர் செய்தது கூலி வேலை. முதலில் கிழக்கிந்திய கம்பெனியும் அப்புறம் இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களும் அவருக்கு கூலி கொடுத்தன. அதாவது கூலிக்கு மாரடித்த குப்புசாமி! கூலி போட்டவர்களின் நோக்கம் என்ன? எப்படியாவது இந்துமதத்தை மட்டம் தட்ட வேண்டும் என்பதே. ஆனால் அவர்கள் பாச்சா பலிக்வில்லை. வேதத்தில் உள்ள துதிகள் உலகையே வியக்கவைத்தன. பிக் பேங்(Big Bang) பற்றியும் உலக சமாதானம் பற்றியும், பூமித் தாய் பற்றியும், நதிகள் பற்றியும், இயற்கையின் விந்தைகள் பற்றியும், காலைக் கதிரவனுக்கு முன்னர் தோன்றும் உஷா தேவி பற்றியும்’ அளவற்ற வளம் படைத்த அதிதி தேவி பற்றியும், மாயாஜாலம்  புரிந்து கடலில் சென்றவர்களை மீட்ட அஸ்வினி தேவர்களைப் பற்றியும், அக்கினி தேவன், வௌணன், உலக மஹா வீரன் இந்திரன் ஆகியோர் பற்றியும் சரமா என்ற நாய் பற்றியும், கணித வரிசைப்படி யாப்பு இலக்கணம் ( மீட்டர்) பற்றியும், டெஸிமல் ஸிஸ்டம் பற்றியும் வேத கால ரிஷிகள் பாடிய பாடல்கள்- அதுவும் மாக்ஸ்முல்லர் கணக்குப்படி 3200 ஆண்டுகளுக்கு முன் பாடிய பாடல்கள் எல்லோர் மூக்கிலும் விரல்களை வைத்து வியக்க வைத்தன.

 

 

துப்புகெட்ட மாக்ஸ்முல்லர் ஒரு தப்புக் கணக்குப் போட்டார். வேதத்துக்கு காலம் நிர்ணயிக்கிறேன் என்று கடலாழம் தெரியாமல் காலைவிட்டார்; உலகில் எல்லா மொழிகளும் 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாறும். புத்தமத வாசனையே இல்லாத உபநிஷதங்களுக்கு கி.மு 800 என்று காலம் சொல்வேன். அதற்கு முந்தைய ஆரண்யக, பிராமண நூல் களுக்கு கிமு.1000 என்று காலம்  சூட்டுவேன்; அதற்கு முந்தைய சம்ஹிதையிலுள்ள துதிகளுக்கு கி.மு 1200 என்று முத்திரை குத்துவேன் என்றார்.

 

மொழிகள் மாறுமென்பது உண்மையே. புற நானூற்றுத் தமிழ் இன்று இல்லை; தொல்காப்பிய விதிகளை நாம் இன்று பின்பற்றுவதில்லை. ஆனால் மண்டு மாக்ஸ்முல்லர் தெரிந்தும் மறைத்த உண்மை- வேத மொழி மாறாதது; மாற்ற முடியாதது; அதில் இலக்கணப் பிழைகள் இருந்தாலும் ரிஷிகள் சொன்னது சத்தியம் என்று சொல்லி யாரும் அதை மாற்றிவிடக்கூடாது என்பதற்காக உலகம் வியக்கும் அதிசயமான கண பாடம், ஜடா பாராயணம் என்றெல்லாம் சொல்லைப் புரட்டிப் புரட்டி பாடம் கற்பித்தனர். உலகில் இந்த அற்புதத்தை வேறு எந்த மொழியிலும் காண முடியாது.

அது மட்டுமல்ல; திருட்டு மாக்ஸ்முல்லர், நுழை நரிக்குப் பிறந்த தந்திரசாலி மாக்ஸ்முல்லர், இன்னொரு உண்மையையும் மறைத்தார். அவர் சொன்ன 200 ஆண்டு மொழிமாற்றக் கணக்கை வேறு எந்த பழைய மொழிக்கும் ஒப்பிட்டுக் காட்டவில்லை. எடுத்துக் காட்டாக தமிழ இலக்கியத்தில  இந்தக்கொள்கையை புகுத்தினால் பழைய நூல்களின் காலம் உல்டா (அந்தர் பல்டி) அடிக்கும். சிலப்பதிகாரம், பொருள் அதிகாரம், திருக்குறள் அதிகாரம் ஆகியன ஆறாம் நூற்றாண்டுக்குத் தவ்விக் குதிக்கும்! ஆக மாக்ஸ்முல்லர் போட்டது குத்து மதிப்பான பால்காரிக் கணக்கு!

 

மாக்ஸ்முல்லர் கி.மு 1200 என்று ரிக் வேதத்துக்கு முத்திரை குத்தியவுடன் அவர் காலத்தில் வாழ்ந்த ஏனைய வேதம் படித்த வெள்ளையர்கள் அவர் மீது பாய்ந்து குதறினர். உடனே அவர் ‘ஜகா’ வாங்கினார். நான் சொன்னது இதற்கும் கீழாக எவரும் ரிக் வேத காலத்தைக் குறைக்க முடியாது என்பதே; உண்மையில் ரிக்வேத காலத்தை எவரும் சொல்ல முடியாது. அது 5000 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருக்கலாம் என்று பின்வாங்கினார்.

விஞ்ஞானிகள் நிரூபணம்

 

கடந்த 25 ஆண்டுகளில் பாபா அணுசக்தி ஆய்வுக் கேந்திர விஞ்ஞானிகள், நிலத்தடி நீர்க் கமிஷன் விஞ்ஞானிகள், பல்வேறு பல்கலைக்கழக ஆய்வுத் துறை விஞ்ஞானிகள் ஆகியோரும், விண்வெளி விண்கல புகைப்படமும் காட்டிய பேருண்மை, மாக்ஸ் முல்லருக்கும் இந்துக்களை மட்டம் தட்டும் மார்கசீய வாதிகளுக்கும் செமை அடி– அடி மேல் அடி — வகையடி- தொகையடி– கொடுத்தது. அதாவது ரிக்வேதம் 50-க்கும் மேலான இடங்களில் விதந்து ஓதும் பிரம்மாண்டமான, கடல் போன்ற சரஸ்வதி நதி கி.மு 2000க்கு முன் வட மாநிலங்க களை ள வளப்படுத்தி பாய்ந்தது என்றும் அது மறைந்த பின்னரே ஹரப்பா மொஹஞ்சதாரோ நாகரீகம் உச்ச கட்டத்தை அடைந்தது என்றும் காட்டினர்.

 

இது மேலும் ஒரு புதிரைப் போட்டது. சரஸ்வதி நதி ஆய்வுக்கு முன்னர், ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களையும் பல்வேறு அறிஞர்கள் பல்வேறு முறையில் கால வரிசைப்படுத்தினர். இப்பொழுது அவர்களுக்கும் அடி விழுந்தது. ஏனேனில் சரஸ்வதி நதியைப் புகழும் பகுதிகள் பல மண்டலங்களில் பரவி விரவிக் கிடக்கின்றன. ஆகவே அவை அனைத்தும் கி.மு.2000க்கு முன்னரே — அல்லது மிகமிக முன்னரே பாடப்பட்டிருக்க வேண்டும். நல்ல ஆராய்ச்சியளர்கள் சரஸ்வதி நதிக் குறிப்பு களைக் கொண்டே வேதத்துக்கு காலம் நிர்ணயிக்க முடியும்.

 

போகிறபோக்கைப் பார்த்தால் வியாசர் கி.மு 3102 வாக்கில் (கலியுக துவக்கம்) வேததங்களை நான்காக வகுத்ததாக இந்துக்கள் நம்புவது விஞ்ஞான உண்மையே என்று முடிவு செய்து விடுவார்கள்.

 

 

வானவியல்

வேதத்தில் உள்ள வானவியல் குறிப்புகளைக் கொண்டு ரிக்வேதத்துக்கு கி.மு4000 என்று திலகரும், கி.மு 4500 என்று ஜெர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும் கால நிர்ணயம் செய்தனர். இதை ப்யூலர், பார்த், வின்டெர்நீட்ஸ், ப்ளூம்பீல்ட் ஆகியோர் ஏற்றதாகவும் அவர்களுடைய கணக்கீட் டில் எந்த தவற்றையும் எவரும் காணவில்லை என்றும் திரு சட்டோபத்யாயா கூறினார். பேராசிரியர் சென் குப்தா பழங்கால இந்திய காலவரிசை என்ற நூலில் ரிக் வேதத்துக்கு கி.மு 4000 என்று காலம் காட்டினார்.

 

ஆக பாபா அணுசக்தி கேந்திர நிலத்தடி நீர் ஆய்வு, ஐசடோப் ஆய்வு, கார்பன் 14 தேதி நிர்ணயம் — எல்லாம் சரியே; அவை அனைத்தும் சிந்து சமவெளி நாகரீகத்துக்கு முன்னரே சரஸ்வதி நதி ஓடியது என்று காட்டுகின்றன.

 

 

இந்தியாவுக்கு 3 சாபக்கேடுகள்/ பரிசுகள்

 

சீன, எகிப்திய, பாபிலோனிய, கிரேக்க, மாயன் நாகரீகத்துக்கும் இந்திய நாகரீகத்துக்கும் ஒரு பெரிய வேறு பாடு உண்டு.

 

இந்திய நாகரீகத்தை தடயங்களை மூன்று விஷயங்கள் அழித்தன

 

பருவக்காற்று- தென் மேற்குப் பருவக் காற்றும் வடகிழக்குப் பருவக் காற்றும் ஆண்டுதோறும் மழையைக் கொட்டி, நதிகளை வெள்ளப் பெருக்கெடுக்க வைத்து பல ஊர்களை அழித்தன. நாம் அசோகர் காலத்துக்கு முன்னர் கல்லில் எதையும் வடிக்காததால் தடயங்கள் அழிந்தன. பருவக்காற்றுகளை இயற்கை தந்த பரிசு என்றும் சொல்லலாம். ஜீவநதிகளால் பாசனம் பெருகியது

இரண்டாவது சாபக்கேடு; நில அதிர்ச்சி/ பூகம்பம்

 

நமது காலத்திலேயே தென்னாட்டில் தனுஷ்கோடி கடலுக்குள் போனதைப் பார்த்தோம். நேபாளக் கோவில் கோபுரங்கள் உருண்டோடி மொட்டைக் கோபுரம் ஆனதைக் கண்டோம். 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு ஒரு முறை உண்டாக்கும் மாபெரும் பூமி அதிர்ச்சி நதிகளைப் பிறட்டி,உருட்டி அட்டஹாசம் செய்தன. ஆகையால் நமது நாகரீக தடயங்கள் அழிந்தன. மொஹஞ்சதாரோவில் கல்லில் முத்திரை களை உருவாக்காவிடில் நாம் முக்கிய தடய ங்களை  இழந்திருப்போம்.

 

மூன்றாவது சாபக்கேடு வெளி நாட்டினரின் படை எடுப்பும் அவர்களின் அழிவு வேலைகளும் ஆகும். நமது கண்ணுக்கு முன்னாலேயே முஸ்லீம் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானிலுள்ள பாமியன் குகை புத்தர் சிலைகளை — மிக உயரமான புத்தர் சிலைகளை –அழித்ததைக் கண்டோம். கிமு ஆறாம் நூற்றாண்டு டேரியஸ் (Darius) காலம் முதல் 2600 ஆண்டுகளாக இந்தியா தாக்குதலுக்கு உள்ளானது; கஜினி முகமதுகளும் மாலீக்காபூர்களும் உலகிலேயே செல்வச் செழிப்புள்ள நாடு இந்தியா  என்பதை அறிந்து கொள்ளையோ கொள்ளை என்று அடித்துச் சென்றனர். இது வெள்ளையரின் கோஹினூர் வைரக் கொள்ளை வரை நீடித்தது.

 

 

உலக மஹா எஞ்சினீயர் பகீரதன், அகத்தியன்!

 

இவ்வாறு சரஸ்வதி நதி மஹாபாரத காலத்திலேயே (கி.மு3102) வற்றி பூமியில் மறையவே கங்கை என்னும் நதி புனிதம் பெற்றது. அதன் தடைபட்ட பாதையை மாற்றி அதை உத்திரப் பிரதேச, வங்காள பூமியில் திசை திருப்ப பல இந்து மன்னர்கள் முயன்றனர். இறுதியில் உலகப் புகழ்பெற்ற — உலகின் முதல் நதி நீர் பொறியியல் வல்லுனன்– பேரரசன் பகீரதன் அந்த கங்கை நதியை மாற்றினான். அதைக் கடல் வரை- வங்காள விரிகுடா சாகர் தீவு வரை பாய வைத்தான். அவனது எஞ்சினீயரிங் வேலலைகளை நாம் இன்றும் புராணக் கதைகளாகப் படிக்கிறோம். இதைப் பார்த்து அகத்தியர் என்னும் எஞ்சினீயர்/ முனிவர் காவிரி நதியையும் திசை திருப்பி கர்நாடகம், தமிழ் நாடு வரை பாயவைத்தார். விந்திய மலை மீது முதல் முதல் நில மார்க்க சாலைகளைப் போட்டார் அகத்தியர். இதை விந்திய கர்வபங்கம் என்ற புராணக்  கதைகளாக நாம் படிக்கிறோம். மூன்றாவதாக தென் கிழக்காசியாவுக்கு கடல் வழி மூலம் இந்து நாகரீகத்தை எடுத்துச் சென்றார். இதனால் அவரது சிலைகள் தென் கிழக்காசியா முழுதும் பரவிக்கிடக்கின்றன.

மார்கஸீயத் திருடர்கள்!

இந்திய கல்வித்துறை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வெளிநாட்டு அடிவருடிகள்– மார்கஸீயத் திருடர்கள் கைகளில் இருந்ததால் பல தொல்பொருத்துறை உண்மகைள் எழுதப்படவில்லை. போர்னியோவில் மனிதரே நுழைய முடியாத காட்டில் நாலாம் நூற்றாண்டு மூலவர்மனின் யூபஸ்தம்பம் இருந்தது. துருக்கி-சிரியா எல்லையில் பொகஸ்கோய் நகரத்தில் வேத மந்திரம் எழுதிய க்யூனிபார்ம் கல்வெட்டு கண்டுபித்தது, தசரதன், பிரதர்தனன் முதலிய பெயர்களில் சிரியா-துருக்கியை இந்து மன்னர்கள் ( மிடன்னி நாகரீகம்) ஆண்டது முதலியவைகளை காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் தனது உரைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னர் குறிப்பிட்டும் கூட கல்வித்துறை கயவர்கள் நமது சரித்திரப் புத்தகத்தில் அதைச் சேர்க்கவே இல்லை. வெள்ளைத் தோல் அறிஞர்களும் மிட்டனி நாகரீகம் குறித்தோ இந்திரன், மித்திரன், வருணன் ஆகிய வேத கால தெய்வங்களின் பெயரில் உடன்படிக்கை கைச்சாத்திட்டதையோ பேசாமல் ‘கப் சிப்’ என்று வாய் மூடி இருந்தனர்.

 

கிக்குலி என்பவன் துருக்கி நாட்டில் (துரகம்= குதிரை) வடமொழியைப் பயன்படுத்தி கி.மு 1400ல் குதிரைப் பயிற்சி கொடுத்த நூல் கிடைத்துள்ளது.

 

இது தவிர எகிப்திய மன்னன் மூன்றாவது அமெனோபிஸ்ஸுக்கு தசரதன் மகளை மணம்புரிவித்து, அவன் எழுதிய தசரதன் கடிதங்கள் இன்னும் எகிப்தில் உள்ளன. இவை அனைத்தையும் காங்கிரஸ் ஆட்சிக்கால கயவர்கள்- திருடர்கள் – வரலாற்றுப் புத்தகத்தில் சேர்க்காமல்- மார்கஸீயவாதிகள் எழுதிய அசிங்கங்களையும் வெள்ளைக்காரர்கள் தங்களை இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்து எழுதிய விஷயங்களையும் மட்டும் சிலபஸில் சேர்த்தனர்.

 

ராமாயாண  தசரதனையும் இந்த தசரதனையும் குழப்பிக்கொண்டு விடாதீர்கள் மாமன்னர் அசோகனின் பேரன் பெயர் கூட தசரதன்தான்.

 

மேற்கூறிய கட்டுரையின் சாரம்:–

 

பாபா அணுண்சக்தி ஆராய்ச்சியாலரின் அறிவியல் கூற்றுகளும்

திலகர் ஜாகோபியின் வானவியல் கூற்றுகளும்

பொகஸ்கோய் க்யூனிபார்ம் கல்வெட்டு தரும் தொல்பொருத் துறை ஆதாரங்களும்

எகிப்திலுள்ள தசரதன் கடிதங்களும்

ரிக் வேதத்திலுள்ள சரஸ்வதி நதியின் பிரம்மாண்ட வர்ணனைகளும்

 

மாக்ஸ்முல்லரின் வேத காலக் கொள்கைகளைப் பொடிப் பொ டியாக்கி பொய்யாய் பழங்கதையாய்ச் செய்துவிட்டன.

 

வேத காலம் என்பது வியாசரின் காலத்துக்கும் (கி.மு.3102) முந்தையது என்பது நிரூபிக்கப்ப ட்டுவிட்டது.

 

வேத காலத்துக்கு இந்திய அறிஞர்களால் கொடுக்கப்பட்ட தேதி

ஜி.கே பிள்ளை- கி.மு4000 முதல் கி.மு 3000 வரை

ராஜேஸ்வர் குப்தா- கி.மு 4000

உ.வி.ராவ்- கி.மு.5000

 

வெளிநாட்டு அறிஞர்கள்

எஹ்.டி.கிரிஸ்வால்ட்- கிமு 1200 முதல் கி.மு 4000

டி.பர்ரோ- கி.மு 1200

 

இவர்களுக்கு எல்லாம் அ ண்மை க் கால சரஸ்வதி நதி பற்றிய ஆராய்ச்சிகள் தெரியாததால் அறியாத பிள்ளைகளை மன்னித்துவிடலாம்.

 

சிலர் குதிரை, இரும்பு பற்றிய குறிப்புகள் இருப்பதால் வேதங்களை கி.மு1500 க்கு முன்னர் வை க் கமுடியாதென்று வாதிடுவர். ஆனால் அந்த குதிரைக்கும் இரும்புக்கும் தேதி நிர்ண யிப்பது வெள்ளைத் தோல், உள் நோக்கப் பேர்வழிகள். இவை இரண்டும் இந்துக்களின் கண்டுபிடிப்பு; உலகம் முழுதும் சென்றது இந்தியாவில் இருந்துதான். நாம் நிர்ண யிக்கும் தேதியே சரி. மேலும் அஸ்வ (குதிரை) அயஸ் (பொன்) என்பது பல பொருள் உடைத்து.

 

இதையெல்லாம்விட மிக முக்கிய சான்று சங்கத் தமிழில் உள்ளது. புற நானூற்றின் முதல் பாடல் முதல் கடடைசி பாடல் வரை வேதக் குறிப்புகள், வேதச் சடங்கு குறிப்புகள் உள. இவை 2200 ஆண்டுகளுக்கு முந்தையவை. நாட்டில் இமயம் முதல் குமரி வரை – போர்னியோவின் மூல வர்மன் ஆட்சி வரை- வியட் நாமின் பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வரை ஒரே கலாசாரம் 2000 ஆண்டுகளுக்கு முன் இருக்க வேண்டும் என்றால்– போக்குவரத்தும் இன்டெர்நெட்டும் மொபைலும் இல்லாத காலத்தில் பரவ வேண்டுமானால் – அதற்கு 1000 அல்லது 1500 ஆண்டுகளாவது ஆகும்.

எல்லாவித தடயங்களையும் சான்றுகளை யும் ஒட்டு மொத்த முகமாக நோக்குமிடத்து பாபா அணு சக் தி ஆய்வுகளும் வியாசரும் சொல்லுவதே சரி.

TAGS: மாக்ஸ்முல்லர், வேத காலம், தேதி

–சுபம்—