புதிய ஐடியாக்கள் -New Ideas from STRATFORD UPON AVON (Post No.3037)

IMG_0225

Written by london swaminathan

Date: 5th    August 2016

Post No. 3037

Time uploaded in London :– 9-47 AM

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

நான் ரோம், நியுயார்க், ஸ்டாக்ஹோம் போன்ற நகரங்களுக்குச் சென்று வந்த பிறகு புதுப் புது யோஜனைகளை எழுதி இந்தியர்களும் இப்படிச் செய்யலாமே என்று எழுதினேன். இங்கே ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்ட்ராட்போர்ட் அபான் ஏவன் STARTFORD UPON AVON என்ற இடத்தில் விற்கப்படும் காந்த வில்லைகலையும் MAGNETS ஒரு மெஷினையும் பாருங்கள். மேலை நாடுகளில் எந்த ஊருக்குப் போனாலும் பிரிட்J FRIDGE மேல் பொருத்த மாக்னெட் கிடைக்கும். அதில் படமோ மேற்கோளோ பொன்மொழியோ இருக்கும். இது போல நாமும் பாரதி, கம்பன், ராகவேந்திரர், தியாகராஜர் பொன்மொழி ளை காந்த வில்லைகளாக விற்கலாம். எல்லா இடங்களிலும் அதுவது அல்லது அவரவர் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், படங்கள் விற்கப்படுகின்றன.

 

IMG_4711

படத்தில் காட்டிய மிஷினில் ஒரு பென்னி அல்லது இண்டு பென்ஸ் காசுகளை நுழைத்தால் SHAKESPEARE படத்துடன் அது வெளியே வரும். இது போல நாமும் ஒரு காசை நுழைத்தால் கம்பன், பாரதி படம் அல்லது பொன் மொழியோடு வரச் செய்யலாம்.

 

IMG_4709

 

IMG_4502

இது போல நாமும் நம் கவிஞர்களின் படைப்புகள் பற்றி சுருக்கமாக போர்ட் அல்லது போஸ்டர் வைக்கலாம்

இது போல அந்தக் கால உடைகளில் நாமும் கவிஞர்கள், சரித்திர நாயகர்கள், ராஜா-ராணிகளின் கதைகளை அவரவர் பிறந்த இடத்தில் நடித்துக் காட்டலாம். இவர்கள் இருவரும் 37  நாடகங்களிலிருந்து முக்கிய கட்டங்களை நடித்துக் காட்டுவர்.

 

IMG_4577

 

Shakespeare’s Birth Place at Stratford upon Avon- two hours’ drive from London: Every time I go to a country or a place, I write about new ideas for Indians to follow (Please see my ideas from New York, Stockholm and Rome).

 

Why dont we sell the quotations of Kamban, Bharatiyar and others on magnets so that we fix them on the Fridges. We always buy fridge magnets whenever we go to a country or a city. Look at the Shakespeare quotations here. And see the machine: if you insert one penny or two pence coin you will get a picture embedded on it. We can also do such things at the birth places of Ragavendra, Bharathy, Kamban, Thyagaraja etc.

மண்டை ஓடு போல காப்பிக் கோப்பைகள்

IMG_4716

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

symposiumIII

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Wriiten  by S NAGARAJAN

Date: 28 September 2015

Post No: 2194

Time uploaded in London :– 15-12

(Thanks  for the pictures)

 

கம்பன் காவிய இன்பம்

கண்ணாடி முன்னர் ஷேக்ஸ்பியரும், கம்பனும்!

.நாகராஜன

 

கண்ணாடி

உலக மகாகவி கம்பன் என்று சொன்னால் உதட்டைப் பிதுக்குவர் ஆங்கில இலக்கியம் நன்கு அறிந்தோர் – பழைய காலத்தில்!

அது ஆங்கிலேயர் அரசாண்ட காலம். தமிழைப் படிக்க வாய்ப்பில்லை. வாய்ப்பிருந்தாலும் தமிழில் ஒன்றும் இல்லை என்று சொல்வது ஒரு வித கௌரவம்!

இரண்டு மொழிகளின் இலக்கியங்களையும், கூடவே சம்ஸ்கிருத இலக்கியங்களையும் படித்தோர் இன்று மனமார ஒப்புக் கொள்வர் கம்பன் உலக மகா கவி தான் என்று.

உதாரணத்திற்கு ஒரே ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்வோம்.

ஆடி! கண்ணாடி!!

mirror2

வள்ளுவரின் கண்ணாடி

வள்ளுவர், குறளில் எதிரில் இருப்பதை உள்ளபடி கண்ணாடி பிரதிபலிப்பது போல நெஞ்சம் கடுத்ததைக் காட்டி விடும் முகம் என்றார். கண்ணாடிக்கு அவர் பயன்படுத்திய சொல் பளிங்கு.

“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்

கடுத்தது காட்டும் முகம்” (குறள் 706)

வள்ளுவரிலிருந்தே கண்ணாடி உவமை பல்வேறு விதமாக காவியங்களில் இடம் பெற்று வந்துள்ளது.

mirror1

ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி

குறுந்தொகையில் ஒரு பாடல் (எண் 8). ஆலங்குடி வங்கனார் என்ற புலவர் பாடிய பாடல் இது.

பரத்தை ஒருத்தி வீட்டிலிருந்து தன் இல்லம் ஏகிய தலைவன் ஒருவனை, அந்தப் பரத்தை தன் பெண்டாட்டி சொன்னபடி அவன் ஆடுவதாக எல்லோரும் கேட்க (எரிச்சலுடன் நையாண்டியாக) இதைக் கூறுகிறாள்.

கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம்மில் பெருமொழி கூறித் தம்மில்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல

மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே

வயலில் இருக்கும் மரம் ஒன்றிலிருந்து கீழே விழும் இனிய பழத்தைக் குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்விப் பிடிக்கும் நாட்டவனான ஊரன், என்னுடைய வீட்டில் இருக்கும் போது பெரும் பேச்சைப் பேசுவான் (அதாவது பரத்தை வீட்டில் ஆட்டம் போடுவான்) ஆனால் தன் இல்லம் ஏகி விட்டாலோ கண்ணாடி முன்னால் கையைத் தூக்கினால் அதுவும் தூக்குவது போல தன் மனைவிக்குப் பணிவிடை செய்வான். (அவள் பேச்சு தான் அங்கே; அங்கு ஆட்டம் மாறும் – அவள் சொல்வதற்கு ஆடுவான்! அதாவது விளையாட்டு விதிகளே மாறி விடும்).

என்ன ஒரு பாடல் பாருங்கள், கண்ணாடியை மையமாக வைத்து! செய்ததைச் செய்யும் கண்ணாடி போல ஆகி விடுவானாம் அங்கே. மனைவி கையைத் தூக்கினால் இவனும் ஆடி போலத் தூக்கி ஆட வேண்டியது தான்!

big_square_gilt_mirror_left

முகுரவானனன்

திருதராஷ்டிரனை விவரிக்க வந்த வில்லிப்புத்தூரார் வில்லி பாரதத்தில் முகுரவானனன் என்று கூறுகிறார் (ஆதிபருவம் சம்பவச் சருக்கம் பாடல் 115)

முகுரம் என்றால் கண்ணாடி. ஆனனம் என்றால் முகம். கண்ணாடி போன்ற முகத்தை உடையவன் என்று பொருள். கண்ணாடி எப்படி தான் பிறரால் காணப்பட்டு பிறரைத் தான் காணும் உணர்ச்சி அற்று இருக்கிறதோ அது போல திருதராஷ்டிரனை அனைவரும் பார்க்க முடிந்தாலும் அவர்களைக் காண முடியாத பிறவிக் குருடன் அவன் என்பதை இந்தப் பெயர் விளங்கச் சொல்கிறது.

இனி உலக இலக்கியத்திற்கு வருவோம்.

ஷேக்ஸ்பியரின் கண்ணாடி

ஷேக்ஸ்பியர்! இலக்கியப் பிரியர்கள் விழிகளை விரிப்பர். அவர் இயற்றிய 43 நூல்களில் எட்டு லட்சத்து எண்பத்தி நான்காயிரத்து நானூற்றி இருபத்தியொன்று (8,84,421) வார்த்தைகள் இருப்பதாக எழுத்தெண்ணிப் படித்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்த எட்டு லட்சத்து எண்பத்திநான்காயிரம் + வார்த்தைகளில் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாத வார்த்தைகள் 10. அதில் கண்ணாடியும் ஒன்று!

அவரது படைப்பான Measure for Measure இல் (II.II) ஒரு காட்சி. இஸபெல்லாவின் சகோதரனான க்ளாடியோவுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது – லார்ட் ஏஞ்சலோவின் ஆணைப்படி. இஸபெல்லா தன் சகோதரனை விடுவிக்க வேண்டும் என்று ஏஞ்சலோவிடம் மன்றாடுகிறாள் இருவரும் மனிதர்களிடம் உள்ள குறைபாடுகளைப் பற்றி விவாதிக்கின்றனர். அப்போது, “Mankind’s glassy essence’ என்று ஷேக்ஸ்பியர் கூறுகிறார். இதன் அர்த்தம் யாருக்கும் சரிவர இன்று வரை விளங்கவில்லை. Glassy என்றால் கண்ணாடி போல உடை படுவதா? அல்லது பிரதிபலிப்பதா? அல்லது குணாதிசயம் அல்லது மனநிலை என்ற உளவியல் பொருளை எடுத்துக் கொள்வதா? இதுவரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. (அர்த்தம் சரிவர விளங்காத ஷேக்ஸ்பியருடைய இதர ஒன்பது வார்த்தைகள்: Armgaunt, balk’d, Braid, Cock- a-hoop, Demuring, Eftest, Impeticos, Portagem Watch-case)

427-Kambar

கம்பனின் இரு கண்ணாடிகள்

இனி கம்பனுக்கு வருவோம்:

சுந்தரகாண்டம், கடல் தாவு படலத்தில் ‘எழுந்தோடி’ எனத் தொடங்கும் 41வது பாடல்!

அநுமன் கடலிலிருந்து எழுந்த மைநாக மலையைப் பார்க்கும் காட்சி!

அழுங்கா மனத்து அண்ணல் (அற்புதமான இந்த சொல் தொடரைப் பற்றிய எமது கட்டுரை ஞான ஆலயம் இதழில் வெளியிடப்பட்டுள்ளதைப் படிக்கலாம்)

‘எழுந்து ஓங்கி விண்ணோடு மண் ஒக்க, இலங்கும் ஆடி

உழுந்து ஓடு காலத்திடை, உம்பரின் உம்பர் ஓங்கிக்

கொழுந்து ஓடி நின்ற கொழுங் குன்றை வியந்து நோக்கி,

அழுங்கா மனத்து அண்ணல், ‘இது என் கொல்?’ எனா அயிர்த்தான்’

எதற்கும் சலியாத மனத்தினாகிய அநுமன் விளங்குகின்ற கண்ணாடி ஒன்றின் மீது  இட்ட ஓர் உளுந்து உருள்கின்ற காலத்திற்குள்ளே ஆகாயத்திற்கும் மேலாக வியாபித்து மேலும் கீழும் எங்கும் முடியும் அடியும் படர்ந்து நின்ற மைநாக மலையை ஆச்சரியத்துடன் பார்த்து , ‘இது என்ன’  எனச் சந்தேகித்தான்.

கண்ணாடி ஒன்றில் உளுந்து ஒன்றை உருட்டிப் பாருங்கள். அது எந்த வித உராய்வுமின்றி விரைந்து ஓடும் ஒரு க்ஷணத்திற்குள்ளாகவே. இதில் உள்ளிருந்த மைநாக மலை பிரதிபலிப்பு போல வந்ததையும் பிரதிபிம்பம் காட்டும் கண்ணாடி உவமை எடுத்துக் காட்டுகிறது.தடையின்றி இயங்குதல், விரைவு, பிரதிபிம்பம் ஆகிய மூன்றை கண்ணாடியில் உருளும் உளுந்து காட்டுகிறது.

இலங்கை நகரை வர்ணிக்க வேண்டும். ராவணனின் இலங்கையை யாராலாவது சரியாக வர்ணிக்க முடியுமா? உலகப் பெரும் புலவராக இருந்தாலும் சரி தான்! முடியுமா?

இப்போது கண்ணாடியின் உதவியை நாடுகிறான் கம்பன். இன்னொரு கண்ணாடியைக் கம்பன் உவமையாகக் காட்டுகிறான். இலங்கை நகருக்காக! அந்த அருமையான பாடல் இது:-

அநுமன் இலங்கைக்கு இப்பால் உள்ள பவள மலை மீது கால் பதிக்கிறான். இலங்கையை நோக்குகிறான்.

மண் அடி உற்று, மீது வான் உறு வரம்பின் தன்மை

எண் அடி அற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கி,

விண்ணிடை, உலகம் என்னும் மெல்லியல், மேனி நோக்கக்

கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்

(பாடல் 79, கடல் தாவு படலம்)

நிலவுலகின் அடிப்பாகம் வரையிலும் வேர் ஊன்றப் பெற்று,உச்சியோ வானுலகில் பொருந்துதலால், உலகத்தின் மேல் மற்றும் கீழ் எல்லை நிலையை மதிப்பிடுவது போன்றதும் தன்னுடைய பாதம் தங்கியதுமான அந்தப் பவள மலையின் மீது நின்று அநுமன், வானத்திலுள்ள தேவலோகமாகிய பெண் தனது வடிவழகைப் பார்ப்பது போல  நிலைக் கண்ணாடி வைத்தது போல விளங்குகின்ற இலங்கையைப் பார்த்தான். வானுலகத்தின் மறுபதிப்பு அல்ல, அல்ல, பிரதிபிம்பமே இலங்கை.

mirror-03

நமக்கு நாமே உருவகப்படுத்த வேண்டும்

கண்ணாடி உவமை கவிஞனின் வேலையைக் கவினுற முடித்து விட்டது. கண்ணாடியின் மீது உளுந்து ஓடுவதை எந்த ஒருவராலும் தானே எளிதில் செய்து பார்க்க முடியும். தடையின்மை, வேகம், பிரதிபிம்பம் ஆகியவற்றை நேரில் உணர முடியும். இலங்கை கண்ணாடியோ ஒவ்வொருவரின் கற்பனையைப் பொருத்து அமையும். தேவலோகம் பற்றிய கற்பனையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் செய்து கொள்ளலாம். அதன் பிரதிபிம்பமே இலங்கை.

கற்பனை செய்து கண்டு கொள் என்ற இந்த உத்தி, உலக மகா கவிகளுள்ளே உன்னதமான ஒருவருக்கு மட்டுமே உதிக்க முடியும்! கம்பன் அப்படிப்பட்ட அருமையான கவி. உலக மகாகவியைக் கண்ணாடி முன்னால் நிறுத்தினால் அதன் பிரதிபிம்பமாக கம்பன் அமைவான். (இங்கும் அவனது கண்ணாடி உவமை தான் உதவுகிறது!!!)

உலகின் ஒப்பற்ற கவிஞன் கம்பன்

இப்போது பார்ப்போம் :- வள்ளுவரின் கண்ணாடி உளவியல் ரீதியிலான நெறி முறைக் கண்ணாடி. ஆலங்குடி வங்கனாரின் கண்ணாடி வாழ்வியல் அங்கத்தின் நாடக பாணியிலான கண்ணாடி. வில்லிப்புத்தூராரின் கண்ணாடி ஒரு மனிதரை விளக்க வந்த கண்ணாடி. ஷேக்ஸ்பியரின் கண்ணாடி தெளிவற்ற கண்ணாடி. கம்பனின் இரு கண்ணாடிகளோ ஒன்று செய்முறைக்கு எளிது; இன்னொன்றோ கற்பனைக்கும் அரிது; அவரவர் மனக்குதிரையின் வேகத்தையே அது பொருத்திருக்கும்.

இப்போது எடை போட்டுப் பார்த்தால் கண்ணாடி (முன்னாடி) முன்னர் ஷேக்ஸ்பியர், கம்பரில் யார் ஜொலிக்கிறார்கள்?!

முடிவு உங்கள் கையில்!

***********

கடவுளுக்கு சவால்!

simpsonz

கடவுளும் விஞ்ஞானிகளும்

கடவுளுக்கு சவால்குரங்கு அடிக்கப் போன ஷேக்ஸ்பியர் கவிதை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

Compiled  by S NAGARAJAN

Date: 23 September 2015

Post No: 2182

Time uploaded in London :– 13-26

(Thanks  for the pictures) 

 

 

.நாகராஜன்

 

கடவுளுக்கு சவால்!

படைப்பு என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; எல்லாம் நம்மாலேயே செய்ய முடியும் என்றார் ஒரு விஞ்ஞானி.

அந்த நகரிலிருந்த பெரியவரிடம் அனைவரும் அந்த விஞ்ஞானியின் அதிசயமான கூற்றைத் தெரிவித்தனர்பெரியவர் விஞ்ஞானியிடம் வந்தார்.

பெரியவர் கேட்டார்:- “நீங்கள் கடவுளைப் போல எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று கூறுகிறீர்களாமே!”

 monkeysshakespeare

 

விஞ்ஞானி முழங்கினார்:+ “ நீங்கள் சொல்வதில் ஒரு திருத்தம்! கடவுளே இல்லை என்கிறேன். எல்லாவற்றையும் மனிதனால் செய்ய முடியும்!”

பெரியவர் விஞ்ஞானியிடம் ஒரு பந்தையும் பேட்டையும் கொடுத்தார்.அவர் ஒரு உயிரியல் விஞ்ஞானி என்பதோடு அவர் ஒரு குரங்கை வளர்ப்புப் பிராணியாக வளர்த்து வந்ததும் பெரியவருக்குத் தெரியும்.

பெரியவர் சொன்னார்:”ஓஹோ! சரி, பெரிய விஷயம் எல்லாம் பேச வேண்டாம். இதோ கொடுத்திருக்கிறேனே, பேட், பந்து, இரண்டையும் உங்கள் செல்லக் குரங்கிடம் கொடுங்கள். அதற்கு பேட் மூலம் பந்து விளையாடக் கற்றுக் கொடுங்கள். நீங்கள் சொல்வதை எல்லாம் அப்புறம் கேட்கிறோம்!”

 

 

பூ! இது சுலபம்என்றார் விஞ்ஞானி. அனைவரும் கலைந்தனர்.

விஞ்ஞானி குரங்கிற்கு பந்து விளையாடக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார். பேட்டையும் பந்தையும் வைத்து எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார். நாட்கள் ஓடின. குரங்கு பந்து விளையாடக் கற்கவே இல்லை.

கடைசி முயற்சியாக குரங்கை பேட், பந்துடன் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். நெடு நேரம் கழித்து ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க அவர் கதவின் சாவித் துவாரம் வழியே பார்த்தார்.

மறுமுனையில் குரங்கு தன் விழிகளை வைத்து இந்தப் பக்கம் பார்த்துக் கொண்டிருந்தது!

 

விஞ்ஞானி அன்றிலிருந்து தன்னால் எதையும் செய்ய முடியும் என்று சொல்வதை நிறுத்தி விட்டார். பெரியவர் புன்முறுவல் பூக்க அனைவரும் வழக்கம் போல கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுதனர்.

கோவிலில்அலகிலா விளையாட்டுடையான்சிரித்தான்!

 

 darwin_italy_stamp

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கொள்கை    

காலம் காலமாக எதையாவது புதுக் கொள்கையாகச் சொல்வது அறிஞர்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அவர்களின் பல கொள்கைகள் கால வெள்ளத்தில் ஈடு கொடுத்து நிற்க முடிவதில்லை!

எவல்யூஷன்’ – பரிணாம வளர்ச்சிஎன்ற கொள்கையை முன் வைத்தார் சார்லஸ் டார்வின். ஆனால் அது தோன்றிய காலம் தொட்டே சர்ச்சைக்குள்ளாகி  படாதபாடு பட்டது.

 

 

ஆனால் தாமஸ் ஹக்ஸ்லி (Thomal Huxley) அதை பலமாக ஆதரித்தார்.அவர் சிறந்த உயிரியல் வல்லுநர் (eminent biologist)

குரங்கிலிருந்து பிறந்தவனே மனிதன் என்று அடித்துக் கூறினார் அவர். அதற்கும் ஒரு படி மேலே போய் ஒரு குரங்கு டைப் அடித்துக் கொண்டே இருந்தால் அது ஷேக்ஸ்பியரின் கவிதையைக் கூட டைப் அடித்து விடும் என்றார்.

அவரது, ‘Monkeys might type Shakespeare’ என்ற வாக்கியம் பிரசித்தமானது. அவ்வளவு தூரம் இங்கிலாந்தின் சொற்பொழிவு அரங்கங்களில் அந்தக் கருத்தை அவர் முழங்கி வந்தார்.

 

 

பரிணாம வளர்ச்சி கடவுளுக்கு எதிரான சவால் என்று விஞ்ஞானிகளும்பகுத்தறிவுகளும்மகிழ மக்களோ முழித்தனர். எது உண்மை?

 

 cartoon

குழுவினரும் குரங்குகளும்       

இதற்கு ஒரு முடிவு கட்ட ஒரு குழு முன் வந்தது. இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள ப்ளிமத் பல்கலைக்கழகத்தைச் (Plymouth University) சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் அடங்கிய குழு தான் அது. இந்த மாணவர்கள் மீடியா லாப் ஆர்ட்ஸ் (Media Lab Arts Course) என்ற பாடத்திட்ட வகுப்பில் பயில்பவர்கள்.

 

இதற்கான ஆராய்ச்சியை அறிவியல் ரீதியில் நடத்த நாங்கள் தயார் என்று குழுவினர் அறிவித்தனர். 2000 பவுண்டு நிதி உதவி உடனே அளிக்கப்பட்டது. (ஒரு பவுண்டு இன்றைய மதிப்பில் சுமார் 101 ரூபாய்; ஆராய்ச்சி நடந்த காலத்தில் குறைவு தான்!) மத்திய இந்தோனேஷியாவில் இருந்த சோலை குரங்குகள் ஆறை வாங்கினர் குழுவினர்.

 

இதற்காக தேவான் என்ற இடத்தில் உள்ள பைக்ங்டன் மிருகக்காட்சிசாலையில் (Paignton Zoo, Devon) ஒரு தனி அறை அமைக்கப்பட்டது. ஒரு கம்ப்யூட்டரும் நிறுவப்பட்டது. குரங்குகளின் இலக்கிய இன்பம்எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை அன்றாடம் அவ்வப்பொழுது கண்காணிக்க குழுவினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

 

ஒரு மாத தீவிர முயற்சியில் அந்த சோலை மந்திகள் கம்ப்யூட்டரை உடைத்ததோடு அதைத் தங்கள் கழிவறையாகவும் பயன்படுத்தியதைக் கண்டு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கேட்ட மக்களோ விழுந்து விழுந்து சிரித்தனர்.

 shakes, falkland

ஷேக்ஸ்பியரை குரங்குகள் மதிக்கவே இல்லை!!

ஒரு குரங்கு ஐந்து பக்கங்களில் ‘S’ என்ற வார்த்தையை மட்டும் அடித்துத் தள்ளி இருந்தது!

 

 

குரங்கின் மீதல்ல ஜோக், கொள்கையின் மீதே தான்!

 

ஆய்வுத் தலைவரான விரிவுரையாளர் ஜெஃப் காக்ஸ் (Geoff Cox) தங்களது ஆய்வின் முடிவை அறிவித்துக் கூறுகையில், “காலப் போக்கில் பரிணாம வளர்ச்சி அடைவதைக் குறிக்கும் ரேண்டம் ப்ராசஸ் (Random Process) முறை மூலம் மிருகங்கள் ஒரு போதும் வளர்ச்சி அடையாது என்பதையும் மிருகங்களைக் கம்ப்யூட்டர் மட்டத்திற்கு கொண்டு வர முடியாது என்பதையும் எங்கள் ஆய்வு உறுதி செய்கிறது. இந்த ஆய்வில் ஜோக் ஏதாவது இருப்பதாக எண்ணி நீங்கள் மகிழ்வீர்களானால் அந்த ஜோக் குரங்குகளின் மீது (அல்லது அதன் செயல்பாடுகளில்) இல்லை. உண்மையில் ஜோக் அந்த பரிணாம வளர்ச்சி கொள்கையில் தான் இருக்கிறதுஎன்றார்.

 

paington 

 

ஊடகத்தின் கொண்டாட்டம்

 

இது என்ன, பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் முடிந்த கதையாய் இருக்கிறதே என்கிறீர்களா! இல்லை உண்மையில் குரங்கு அடிக்கப் போய் கம்ப்யூட்டர் டாய்லட் ஆன கதை தான் இது!

விஷயம் பிரமாதமான விஷயம் இல்லையா! வரிந்து கட்டிக் கொண்டு ஊடகங்கள் ஆய்வுக் குழுவினரை (குரங்குகள் கூடவே இருக்கும் போது தான்!) முற்றுகை இட்டன.

 

உலகளாவிய விதத்தில் ஆய்வு முடிவுகள் ஒளிபரப்பப்பட்டன. லண்டனில் பிரபல பத்திரிகையான டைம்ஸ்இல், நிருபர் சாம் லிஸ்டர் (Times, Sam Lister) செய்தியை வெளுத்துக் கட்டி விட்டார். (இதை ஸ்டேட்ஸ்மென் ஆங்கில நாளிதழ் 10-5-2003 இதழில் வெளியிட்டது)

 

 darwin russia

சார்லஸ் டார்வினின் கொள்கை சந்தி சிரிப்பது ஒரு புறம் இருக்கட்டும்; கடவுளை அடிக்கடி சவாலுக்கு இழுக்கும் விஞ்ஞானிகளின் விளையாட்டு தான் திண்டாட்டத்தில் முடிகிறதுஒவ்வொரு முறையும்!

அலகிலா விளையாட்டுடையான் அவன்!

அவனிடமே ஒரு விளையாட்டா???!!!

****************