ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ் (9759)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9759

Date uploaded in London – –21 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

if u want the article in word format, please write to us.

ரோமானிய பழங் கவிஞர் ஹோரஸ் 

மேலை உலகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த பழங் கவிஞர்களில் (Latin Language Poets) சிறப்பிடம் பெறுபவர் ஹோரஸ் HORACE . இத்தாலி நாட்டின் தென் பகுதியில் உள்ள வெனுசியாவில் (VENUSIA)  அவர் பிறந்தார். அவருடைய தந்தை ஒரு அடிமை (Slave). பொருள் கொடுத்து அடிமைத் தளை யிலிருந்து விடுபட்டார். ‘தந்தை மகற்காற்றும் உதவி அவையத்து முந்தி இருப்பச்  செயல்’ என்பதைக் கருத்திற்கொண்டு மகனுடைய கல்விக்காக ரோம் நகருக்குச் சென்றார். அங்கே ஹோரஸ் கல்வி கற்ற பின்னர் அந்தக் காலத்தில் புகழ் மிகு கிரேக்க அகாடமியில் கற்பதற்காக ஏதென்ஸ் ATHENS நகரத்துப் போனார்.

பிறந்த தேதி – டிசம்பர் 8, கி.மு.65

இறந்த தேதி- நவம்பர் 27, கி.மு 8

வாழ்ந்த ஆண்டுகள் – 56

படைப்புகள் – LATIN கவிதைத் தொகுப்புகள்

 கி.மு ஆண்டுகள்

35- சடைர்ஸ் – முதல் புஸ்தகம் SATIRES BOOK I

30 – சடைர்ஸ் – இரண்டாம்  புஸ்தகம் SATIRES BOOK II

30- எபோட்ஸ் EPODES

23 – ஓட்ஸ் (1,2,3 தொகுப்புகள்) ODES- BOOK I, II, III

20 – எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – முதல் புஸ்தகம் EPISTLES BOOK I

14- எபிஸ்டில்ஸ் /கடிதங்கள் – இரண்டாம்  புஸ்தகம் EPISTLES BOOK II

14- ஓட்ஸ் (நாலாவது தொகுப்பு) ODES BOOK IV

8- ஆர்ட்ஸ் பொயட்டிகா / கவிதைக் கலை ARTS POETICA / ART OF POETRY

கி.மு 44ல் ஜூலியஸ் சீஸர் படுகொலை நடந்த நாளில் ஹோரஸ் , அகாடமியில் படித்துக் கொண்டு இருந்தார். ரோமானிய சாம்ராஜ்யம் அதிபயங்கர குழப்பத்தில் வீழ்ந்தது. ஸீஸர் படுகொலையில் ஈடுபட்டவர் ப்ரூட்டஸ் (Brutus) . அவர்  அமைத்த படையில் ஹோரஸ் சேர்ந்தார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் பரூட்டஸை அகஸ்டஸ் சீசர் மற்றும் மார்க் ஆன்டனி தோற்கடித்தனர்.

ஹோரசுக்கு பெருத்த ஏமாற்றம்; சொல்லொணா வருத்தம். அவரது தந்தையும் இறந்த நிலையில் புதிய ஆட்சியாளர்கள் ஹோரசின் சொத்துக்களை அபகரித்தனர்.. ஒரு சின்ன வேலையில் சேர்ந்த ஹோரஸ் பணம் வேண்டும் என்பதற்காக, கிடைத்த நேரத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அவருடைய கவிதைகளின் அழகைக் கண்டு வியந்த அக்காலத்தின் மிகப்பெரிய கவிஞர் வர்ஜில் (Virgil) ,  ஹோரஸை மெசினஸ்  MAECENAS என்ற பணக்கார வள்ளலிடம் அறிமுகப்படுத்தினார் அவர் கம்பனை சடையப்ப வள்ளல் ஆதரித்தது போல ஹோரஸை ஆதரித்தார்.

முப்பதே வயதில் ஹோரஸ் , சடைர்ஸ் SATIRES என்ற அங்கதச் செய்யுளை இயற்றினார். ஐந்தே ஆண்டுகளில் அத்தொகுப்பின்  இரண்டாபவது தொ குதியை வெளியிட்டார் . அத்தோடு எபோட்ஸ்(Epodes) என்ற கவிதைத் தொகுப்பும் வெளியானது ;வள்ளல் மெசினஸ் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இத்தாலியிலுள்ள அவரது பண்ணை ஒன்றை  ஹோரசுக்கு அளித்தார். இது ரோம் நகரிலிருந்து  தொலைவில் இருந்ததால் ஹோரசசுக்கு நிம்மதி கிடைக்கும் என்று வள்ளல்  நினைத்தார். அ ந்த அமைதியான சூழ்நிலையில் ஹோரசும் அருமையான இசைக் கவிதைகளை (ஓட்ஸ்) இயற்றினார் ODES / ஓட்ஸ் என்னும் பாணியில் 88 கவிதைகளின் தொகுப்பு அது

ODES/ ஓட்ஸ் என்பன ஏதேனும் ஒரு பொருளையோ பிராணி, பறவை ஆகியவற்றையோ நோக்கிப் பாடும் “கூவி அழைக்கும் மகிழ்ச்சிப் பாட்டு” ஆகும்.

வர்ஜில் இறந்த பின்னர் அவருக்கு அடுத்த புகழ் பெற்ற லத்தின் மொழிப் (Latin Poet) புலவர் இவர்தான்.

–subham–

tags- ரோமானிய, கவிஞர் , ஹோரஸ், Horace

வேதக் கழுகும், எகிப்தியக் கழுகும்- எகிப்திய அதிசயங்கள்-12 (Post No.3684)

லண்டனில் கிடைத்த ரோமானிய கழுகு சிலை

 

Written by London swaminathan

 

Date: 2 March 2017

 

Time uploaded in London:-10-35 am

 

Post No. 3684

 

Pictures are taken from various sources; thanks.

 

contact; swami_48@yahoo.com

 

 

எகிப்திலும் ரிக்வேதத்திலும் கழுகு, பருந்து, கருடன், ராஜாளி என்ற பறவைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இவைகளை ஒப்பிட்டுப் பார்த்தால் சில அதிசய விஷயங்கள் — அதிசய ஒற்றுமைகள் — தெரிய வருகின்றன.

 

அவை என்ன?

1.இரண்டு கலாசாரத்திலும் இந்த வகைப் பறவைகள், இறைவனுடனும் அரசனுடனும் சம்பந்தப் பட்டுள்ளன.

2.இரண்டு கலாசாரங்களிலும் மரணம், மரணமிலாப் பெருவாழ்வு ஆகியவற்றுடன் இப்பறவைகள் சம்பந்தப் பட்டுள்ளன.

3.இரண்டு கலாசாரங்களிலும், சூரியனுடன் உடனுள்ள தொடர்பு காட்டப் பட்டுள்ளன.

4.மிகப்பழைய குறிப்புகள் உள்ளன.

கருட வாஹனம்

முதலில் ரிக் வேதத்தைக் காண்போம்:

ரிக் வேதத்தில் பத்து மண்டலங்கள் (பிரிவுகள்) இருக்கின்றன

 

கீழ்கண்ட இடங்களில் ஸ்யேன, சுபர்ணா முதலிய சொற்களால் இப்பறவைகள் குறிப்பிடப்படுகின்றன. இந்திரன், வருணன் போல பருந்தையும் ஒரு தேவதையாக வைத்து ஒரு துதி உள்ளது (4-27).

ஏன் இப்படி பருந்து அல்லது கருடன் மீது பாடினார்கள் என்பது ஒரு புதிராகவே இருக்கிறது!

 

மஹா சுபர்ண என்று சதபத பிராமணத்தில் சொல்ல்ப்படுகிறது (12-2,3,7)

சகன் என்று ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது; இது பற்றி யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை; பருந்தோ, கழுகோ என்று சந்தேகத்துடன் எழுதுவர்! (தைத்ரீய சம்ஹிதை 3-2,1,1)

 

சுபர்ண

இதற்கு இரண்டு பொருள் உண்டு; நல்ல இறக்கை உடைய; நல்ல இலை உடைய.

 

இது கழுகு அல்லது கருடன் அல்லது பருந்து போன்ற பறவை என்று ரிக்வேத உரைகாரர் எழுதுவர்.(1-164-20; 2-42-2; 4-26-4;8-100-8;9-48-3

 

ஸ்யேன என்ற சொல்லாலும் இப்பறவையை வேதம் குறிப்பிடும். சுபர்ணாவின் அரசனே கருடன் என்று அதர்வண வேதம் சொல்லும்; புராணங்களில் கருடனே விஷ்ணுவின் வாஹனமாக அமைந்தது.

கழுகு  வடிவ யாக குண்டம்

விநோதச் செய்தி

 

அன்னப் பறவை பாலையும் தண்ணீரையும் தனித்தனியே பிரிக்கும் சக்தி படைத்தது என்று காளிதாசன் சொன்னதை தமிழ்ப் புலவர்களும் சொல்லுவது பற்றி ஏற்கனவே எழுதிவிட்டேன். ஜைமினீய பிராமணம் என்னும் நூலில், கிரவுஞ்சப் பறவை போல கழுகும் தண்ணீரையும் பாலையும் பிரிக்கும் சக்தி படைத்தது என்று எழுதியுள்ளதாக (2-438) கீத்தும் மக்டொனால்டும் எழுதிய வேத இன்டெக்ஸ் கூறுகிறது

 

இது தவறான மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் சுபர்ண என்ற சொல்லுக்கு அன்னம் என்ற பொருளும் உண்டு என்று விஷ்ணு சஹஸ்ரநாம உரை சொல்லும் (பக்கம் 88, சஹஸ்ரநாம உரை, எழுதியவர் அண்ணா, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4).

விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று “சுபர்ண” என்று சஹஸ்ரநாமத்தில்  வருகிறது.

 

 

பேரறிவு பேரின்பம் ஆகிய இரண்டு அழகிய இறக்கைகளை உடையவர் என்று பட்ட பாஸ்கரர் உரையில் இருக்கிறது. அவர் இது விஷ்ணுவின் ஹம்சாவதாரம் பற்றிய குறிப்பு என்பார்.

த்வா ஸுபர்ணா ஸயுஜா, ஸகாயா ஸமானம் வ்ருக்ஷம் பரிஷ்வஜாதே- முண்டகோபநிஷத் 3-1-1.

 

இதிலிருந்து பறவை என்ற பொதுப் பொருளிலும் கழுகு, கருடன், அன்னம் (ஹம்சம்) என்ற சிறப்புப் பொருளிலும் இச்சொல் கையாளப்ப ட்டது தெரிகிறது.

 

விட்டுணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு இடங்களில் சுபர்ணா என்ற சொல் விட்டுணுவைக் குறிக்கிறது. மற்றொரு இடத்தில் “வேதமாகிய இலைகளோடு கூடிய சம்சார மரத்தின்” என்று ஆதி சங்கரர் உரை சொல்லும். இதற்கு அவர் கீதையை மேற்கோள் காட்டுவார் (கீதை 15-1)

கழுகு  வடிவ யாக குண்டம்

சிந்து சமவெளியில்

 

சிந்து சமவெளியில் கருடன் போல முத்திரை கிடைத்தது.

 

இறந்துபோனவர் வீட்டில் அந்த ஆன்மா கடைத் தேறுவதற்காக 13 நாட்களுக்குள் ஒரு நாள் கருட புராணத்தைப் படிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. கருடன் அமிர்தம் எடுத்து வந்த கதை, மரகதம், மாணிக்கத்தை எடுக்கும் முறை, கரிகால் சோழன் முதலிய அரசர்கள் பருந்து வடிவில் யாக குண்டம் வைத்து, ராஜசூய யக்ஞம் முதலியன செய்ததை முன்னரே எழுதிவிட்டேன்.

 

ரோமானிய மன்னர்களின் சடலத்தைத் தகனம் செய்யும்போது சிதைத்தீக்கு மேலே ஒரு கழுகைப் பறக்கவிடுவர். மன்னரின் ஆவி சொர்க்கத்துக்கு/ வானுலகத்துக்குச் செல்லுகிறது என்பது இதன் பொருள். இது இந்துக்களின் நம்பிக்கை. மனித உடலில் உள்ள ஆன்மா கூட்டைவிட்டுச் செல்லும் பறவை போல மேலே பறதுவிடும் என்பது இந்துமத நூல்களில் காணப்படுகிறது. தமிழ் வேதமாகிய திருக்குறளிலும் சங்க இலக்கியத்திலும் இதே கருத்தைக் காண்க:-

 

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு (338)

 

அழாஅம் உறைதலும் உரியம் – பராரை

அலங்கல் அம் சினைக் குடம்பைப் புல்லெனப்

புலம் பெயர் மருங்கில் புள் எழுந்தாங்கு (கல்லாடனார், அகம்.113)

கீதை 2-22 இதே கருத்தை வேறு உவமையுடன் (நைந்த உடை) சொல்லும்

 

எகிப்தில் கழுகு/பருந்து

 

1.ஹோரஸ் HORUS (சூரிய என்பதன் திரிபுச் சொல்) என்ற இறைவனின் வடிவம்தாம் மன்னன் என்று சொல்லும் எகிப்திய கல்வெட்டுகளும் காகிதங்களும் அந்த ஹோரஸை ஒரு பருந்தாகவே FALCON காட்டியுள்ளன.

2.கி.மு.3000 முதல் வழிபடப்படும் ஹோரஸ் என்னும் சூரிய தெய்வத்தை இந்துக்கள் கருட வாஹனத்தைச் சித்தரிப்பதுபோல, பருந்து முகத்துடனும் , மனித உடலுடனுமே வரைவர்.

3.சில நேரங்களில் சூரியன் நடுவிலும் இரண்டு (SUN DISC WITH WINGS ) இறக்கைகள் பக்கவாட்டிலும் உள்ளது போலும் வரைவர்.

4.இந்தப் பறவையின் கண்கள் நல்ல தாயத்து என்று வரைந்து அதையும் அணிந்தார்கள். இந்துக்கள் கருடனைக் கண்டால் சுப சகுனம் என்பது போல!

உலகிலுள்ள பல பண்பாடுகளில் கழுகு, கருடன் பற்றியுள்ள நம்பிக்கைகள் (மாயன் Mayan, காதிக், Gothic, மெக்ஸிகோ Mexican ) இந்துமத நம்பிக்கைகளின் பிரதிபலிப்பே!

 

முடிவுரை:-

 

ரிக் வேதத்தின் காலம் கி.மு 4500 முதல் 6000 வரை என்று ஜெ ர்மானிய அறிஞர் ஹெர்மன் ஜாகோபியும், இந்திய அறிஞர் பாலகங்காதர திலகரும் ரிக் வேதத்திலுள்ள வானியல் குறிப்புக்ளைக் கொண்டு கணக்கிட்டுள்ளனர். இதுவரை யாரும் அது தவறு என்று சொல்ல முடியவில்லை. நாமும் அந்த தேதியை ஒப்புக் கொண்டால் உலகில் கருடன்/கழுகு பற்றிப் பாடியவர்களில் நாமே முதல்வர் என்பதில் ஐயமில்லை.

 

அஸீரிய கழுகு தேவதை

கண்டபேரண்ட பட்சி (இரட்டைக் கழுகு) துருக்கி

 

–subam–