
Written by London swaminathan
Date: 15 January 2017
Time uploaded in London:- 11-55 am
Post No.3546
Pictures are taken from different sources; thanks.
contact; swami_48@yahoo.com
அந்தக் காலத்தில் அனுபவ அறிவு மூலம் பழமொழிகளையும் பாடல்களையும் எழுதி எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் சென்றனர். அவைகளில் சில:-
ஸ்த்ரீ ரூபம் = அழகினால் பெண்களுக்கு ஆபத்து
பிராமண ராஜ சேவா= அரசர்களிடத்தில் பணிபுரிவதால் அந்தணர்களுக்கு ஆபத்து
காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து
ஹிரண்ய லோபலிப்சா = பேராசையினால் தங்கத்துக்கு அழிவு
சில எடுத்துக்காட்டுகள்:
உலகப் பேரழகி சித்தூர் ராணி பத்மினியால் அவள் மீது ஆசைகொண்ட அலாவுதீன் கில்ஜி ரஜபுத்ர ராஜ்யத்தை அழித்தான்.
பிராமணர்களுக்கும் நவநந்தர்களுக்கும் மோதல் வலுத்து, சாணக்கியனை நந்த வம்சம் அவமானப்படுத்தியது. இறுதியில் நந்த வம்சத்தை வேருடன் கலைந்தார் சாணக்கியர்.
பசுக்கள் வேறு நிலத்தில் மேய்வதால் கிராமங்களில் கோஷ்டி மோதல் ஏற்படுகிறது. அல்லது புலி சிங்கம் முதலிய மிருகங்களால் கொல்லப்படுகிறது.
தங்கத்தின் (செல்வத்தின்) மீது ஆசை கொண்டு சிறைக் கம்பிகளை எண்ணியோர் உலகம் முழுதும் உண்டு
இது போன்ற ஏராளமான எடுத்துக் காட்டுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஸ்த்ரீ விநஸ்யதி ரூபேண ப்ராஹ்மணோ ராஜசேவயா
காவோ தூரப்ரசாரேண ஹிரண்யம் லோபலிப்சயா
–சுபாஷித ரத்ன பாண்டாகாரம் 153/19
xxx

கருட புராணம் (115-7) இதைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லும்:
ஸ்த்ரியோ நஸ்யந்தி ரூபேண தபஹ க்ரோதேன நஸ்யதி
காவோ தூரப்ரசாரேண க்ஷுத்ரான்னேன த்விஜோத்தமாஹா
பொருள்:-
ரூபேண ஸ்த்ரி = அழகினால் பெண்களுக்கு ஆபத்து
க்ரோதேன தபஹ = கோபத்தினால் தவத்துக்கு அழிவு (விஸ்வாமித்ரரும் துர்வாசரும் சிறந்த எடுத்துக்காட்டுகள்)
க்ஷுத்ரான்னேன திவிஜோத்தமாஹா= ஆரோக்கியமற்ற, சுத்தமில்லாத உணவைச் சாப்பிடுவதால் அந்தணர்களுக்கு ஆபத்து.
காவஹ தூரப்ப்ரசாரண = தொலைவில் மேய்வதால் பசுக்களுக்கு ஆபத்து
xxx
பிராமணர்கள் பற்றி மனு தர்ம சாஸ்திரம் சொல்வதும் முக்கியமானது:-
அனப்யாஸேன வேதானாமாசரஸ்ய ச வர்ஜனாத்
ஆலஸ்யாதன்னதோஷாச்ச ம்ருத்யுர் விப்ராஞ்சிதாம்சதி
மனு 5-4
பொருள்:-
வேத அனப்யாசேன = வேதங்களைக் கற்காததாலும்
ஆசாரவர்ஜன = ஆசார விதிகளைப் பின்பற்றாததாலும்
ஆலஸ்ய = சோம்பேறித்தனத்தாலும்
அன்னதோஷ = சாப்பிடக்கூடாத உணவைச் சாப்பிடுவதாலும்
பிராமணர்களுக்கு விரைவில் மரணம் சம்பவிக்கிறது.
எல்லோரும் விதி முறைகளைப் பின்பற்றி நூறாண்டுக்காலம் வாழ்க! நோய் நொடி இல்லாமல் வாழ்க!!
–subham–
You must be logged in to post a comment.