15,000 ஆண்டுக்கு முன் மனிதன் பயன்படுத்திய சொற்கள்! (Post No.8105)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8105

Date uploaded in London – 4 June 2020       

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு சொல் எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ அவ்வளவு உறுதியாக அந்தச் சொல் நிலைத்து நிற்குமாம். இது ஆங்கிலத்தை ஆராய்ந்தோர் வெளியிட்ட ஆராய்ச்சி.

இதற்கான என்னுடைய  மறுப்புரை கட்டுரையின் பின் பகுதியில் வருகிறது .

ஆங்கில மொழியில் நான் I (ஐ) YOU நீ (யூ ), நாங்கள் WE (வீ ) என்பன 15, 000 ஆண்டுகளாக மாறவில்லை என்று ஆராய்ச்சியில் தெரியவந்தது. 15,000 ஆண்டுகளுக்கு முன்னர் குகையில் வாழ்ந்த ஆதி மனிதன் பேசிய 23 சொற்களையும் இவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் இங்கிலாந்திலுள்ள ரெடிங் (UNIVERSITY OF READING ) பல்கலைக் கழ கத்தைச்  சேர்ந்தவர்கள் ஆவர்.தீ (FIRE) யைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு, மரவுரியை (BARK) அணிந்து கொண்டு, மாமிசத்தை வாட்டி, வதக்கிக் கடிக்கையில் துப்பிக் கொண்டே இருப்பார்கள். ஆகையால் துப்பு (SPIT), மாமிசம், தீ , நீ, நான், அம்மா (MOTHER மதர் ), பேன் /ஈறு (LOUSE, LICE) , சாம்பல், மரவுரி  ஆகியன அவர்கள் அடிக்கடி பயன்படுத்திய சொற்கள் என்பது இவர்கள் துணிபு. ஆயினும் இவர்கள் சொல்வது, மாக்ஸ்முல்லர் சொல்வது ஆகியன எல்லாம் பிழையுடைத்து என்று இந்திய தேதிகள் (DATES OR PERIODS) காட்டுகின்றன.

ஒரு மொழி 200 ஆண்டுக்கு ஒரு முறை மாறும் என்ற கணக்கில் ரிக் வேதத்துக்கு தேதி குறித்தார் மாக்ஸ்முல்லர். உடனே வில்சன் முதலானோர் அது தவறு என்று காட்டியவுடன் அவர் ‘ஜகா’ வாங்கினார். இதே கொள்கையை நாம் தமிழுக்கும் வைத்தால் பல நூல்களின் காலம் சரிந்து விழும். திருக்குறள், சங்க நூல்கள், சிலப்பதிகாரம் ஆகிய எல்லாவற்றையும் 200 ஆண்டு வரம்புக்குள் வைக்க முடியாது. தொல்காப்பியத்தை மிகவும் முன் வைக்கிறோம். ஆயினும் மொழி நடை புரியும்படியாகவே இருக்கிறது..

இதை எல்லாம் எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள்? நமக்குக் கிடைத்த நூல்களில்  உள்ள சொற்களை கம்யூட்டரில் போட்டு ஆவை என்ன வேகத்தில் எப்படி மாறுகின்றன என்று பார்ப்பார்கள். அதை வைத்து ஒரு மாடல்  MODEL  உருவாக்குவார்கள். அதை அதே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுடன் ஒப்பிடுவர். பின்னர் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடுவர் . உலகிலுள்ள பழைய மொழிகளை 7 சூப்பர் மொழிக் குடும்பமாகப் பிரித்துள்ளனர் (SEVEN SUPER  LANGUAGE  FAMILIES) .

இதே போல நமது பழைய 36 நூல்களை (18 மேல் கணக்கு + 18 கீழ்க்கணக்கு) கம்பியூட்டரில் கொடுத்தால் நமது பழைய காலக்கணக்கீடுகள் அட்டை டப்பாக்களில் கட்டிய வீடு போல சரிந்து விழும். சங்க இலக்கிய, தொல்காப்பிய, திருக்குறள் சொல்லடைவுகளை வைத்து ஆராயும் எனக்கே இது தெரிகிறது. கம்ப்யுயூட்டரில் கொடுத்தால் அதன் முடிவுகளை மறுக்கமுடியாது.

‘நான்’, ‘நீ’ மாறாது என்பது தமிழ் மொழியில் பொய்யாக்கப்பட்டு வருகிறது. ‘நான்’ என்ற சொல்லே சங்க காலத்தில் கிடையாது. ‘யான்’தான் இருந்தது. சிலப்பதிகாரம், மணி மேகலையில் கடைசி அத்தியாயங்களில் (காதை) ஓரிரு இடங்களில் மட்டும் வருகிறது. திருக்குறளில் இல்லை. ஆனால் தேவார காலத்திலிருந்து ‘நான்’ வந்து விடுகிறது சங்க காலத்துக்கும் தேவார காலத்துக்கும் 500 ஆண்டு கூட  இடைவெளி இல்லை. எப்படி ‘யான்’, நான் ஆக மாறியது? வெள்ளைக்கார ஐரோப்பாவில் மட்டும் 15, 000 (I, WE, YOU)  ஆண்டுக்கு மாறவில்லையாம்.

ஆனால் சம்ஸ்கிருதத்தில் அஹம் (நான்) வேதகாலம் முதல் இன்று வரை மாறவில்லை. ‘அஹம்காரம்’ பிடித்தவன் என்று நாம் இப்போதும் சொல்கிறோம். ‘அஹம் பிரம்மாஸ்மி’ என்ற உபநிஷத கால வாக்கியம் மிகவும் பிரசித்தம்.

‘நீ’ என்னும் சொல் சங்க காலம் முதல் இன்றுவரை மாறவில்லை என்பது உண்மைதான். ஆனால் சங்க காலத்தில் இல்லாத ‘நீங்கள்’ எப்போது வந்தது? எப்படி வந்தது? சுருக்கமாகச் சொல்லப்போனால் மொழிக் கொள்கையாளர் (LINGUISTS) சொல்வதெல்லாம் பிதற்றல் என்றே சொல்லத் தோன்றுகிறது..

மாக்ஸ்முல்லர் சொல்வதை பயன்படுத்தினால் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலியவற்றுக்கு இடையே குறைந்தது தலா 200 ஆண்டு இடைவெளி இருக்க வேண்டும்! திருக்குறள் நடை வேறு. சொல் வேறு. 125 ஸம்ஸ்கிருதச் சொற்களை நூற்றுக் கணக்கான குறள்களில் பயன் படுத்துகிறார்!!

நிற்க !

இன்னும் ஒரு சுவையான விஷயம் .

கம்பியூட்டர் மூலம் கிடைத்த இன்னும் ஒரு ஆய்வு. நாங்கள் அதாவது ‘வீ ‘ WE  19,000 ஆண்டுகளாக மாறவில்லையாம். ஆனால் பிரிட் BRID என்பது 3200 ஆண்டுகளுக்கு முன்னர் BIRD பேர்ட் ஆகிவிட்டதாம் . அதாவது ‘R ‘ ஆர் என்னும் எழுத்து அல்லது உச்சரிப்பு இடம் மாறிவிட்டதாதம் . அப்படியானால் நாம் சொல்வதும் சரிதானோ!!! மருதமரம் நிறைந்த மருதை ‘ர்’ இடம் மாறி மதுரை ஆச்சாம் ; குருதை என்பதில் ர/ ஆர் இடம் மாறி குதிரை ஆச்சாம் . மருதை, குருதை என்ற கிராமத்தான் பேச்சுதான் சரி!

ஆங்கிலத்தில் ஆண்டுதோறும் 2500 புதிய சொற்களை ஆக்ஸ்போர்ட் அகராதி சேர்க்கிறது. தமிழ் ஏன் அப்படி வளரவில்லை?? எந்த தமிழ் அகராதி வாங்கினாலும் அதில் சம்ஸ்கிருத சொற்கள்தான் அதிகம் இருக்கின்றன. ஏன் ?

சிந்திடா , தமிழா , சிந்தி ; வெறும் மூக்கைச் சிந்தாதே ! சிந்தித்துப் பார்.

tags – 15,000 ஆண்டுக்கு முன், சொற்கள், ஆதி மனிதன்

–SUBHAM—

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

வியப்பூட்டும் செய்தி: மனிதன் தோன்றியது பர்மாவில்!

(English version of this article is published separately:- swaminathan)

தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும்

சூழ்கலை வாணர்களும்—இவள்

என்று பிறந்தவள் என்று உணராத

இயல்பினளாம் எங்கள் தாய் —-(பாரதத் தாய் பற்றி பாரதி பாடியது)

 

இந்தியாவில் மனித இனம் தோன்றியதாக நமது புராண இதிஹாசங்கள் சொல்லாமல் சொல்லுகின்றன. இதை இது நாள் வரை மறுத்துவந்த வெளி நாட்டினர் இப்போது அவர்களின் தவற்றை உணரத் துவங்கிவிட்டனர்.

“கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்த குடி” என்று தமிழர்கள் சொன்னது உண்மையாகி வருகிறது.

“நியூ சைன்டிஸ்ட்” என்ற பிரபல வாரப் பத்திரிக்கை 2013ல் வரப்போகும் 10 வியத்தகு திடுக்கிடும் செய்திகளை வெளியிட்டிருக்கிறது. நவம்பர் மாதம் வரப்போகும் அதிகப் பிரகாச வால் நட்சத்திரம் அதில் ஒன்று. அது பற்றி விவரமாக தனியே எழுதிவிட்டேன். அதைவிட முக்கியமான செய்தி மனிதன் தோன்றியது ஆப்பிரிக்கா அல்ல. ஆசிய நாடாக இருக்கவேண்டும் என்று ஒரு செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதுவும் இந்தியாவுக்குப் பக்கத்தில்!

மனித குலம் ஆப்பிரிக்காவில், குரங்கிலிருந்து படிப் படியாக பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் ஆனதாகவும் 60,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா, ஆஸ்திரேலியா, முதலிய இடங்களுக்குச் சென்றதாகவும் இதுவரை கூறிவந்தனர். இப்போது அது தவறு, ஆசியாவில்தான் அவன் தோன்றினான் என்றும் இதற்கான சான்றுகள் பர்மா, சீனா, சைபீரியாவில் கிடைத்துள்ளன என்றும் “நியூ சைன்டிஸ்ட்” கூறுகிறது.

பர்மாவில் (மியன்மார்) 37 மில்லியன் ஆண்டு பழமையான மனித படிம அச்சுகள் (fஆஸ்ஸில்) கிடைத்துள்ளன. ஏற்கனவே போன வருஷம் சீனாவில் 15,000 ஆண்டுப் பழமையான சிவப்பு மான் குகை மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த மனித இனம் வேறு எங்கும் காணாமல் மறைந்தது மர்மமாக இருக்கிறது.

3.2 million year old skeleton of Lucy (first woman) in Ethiopia

இவ்வாறு விட்டுப்போன தொடர்ச்சி (மிஸ்ஸிங் லிங்க்) இந்தோநேஷியாவில் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். 2010ஆம் ஆண்டில் முதல் தடவையாக சைபீரியா ( ரஷ்யா ) குகையில் மனிதனின் மூதாதையரின் 50,000 ஆண்டுப் பழமையான எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. அவைகளில் இருந்து டி என் ஏ எடுத்துப் பார்த்ததில் அதே டி என் ஏ தற்கால இந்தோநேசியர் ரத்தத்திலும் இருக்கிறது என்று தெரிந்தது. இவர்களை ஆராய்ச்சியாளர்கள் டெனிசோவன்ஸ் என்று அழைப்பர். இப்போதுள்ள பெரிய புதிர் சைபீரியா முதல் இந்தொநேசியா வரை மிகப்பெரிய பகுதியில் டெனிசோவன்ஸ் எப்படிப் பரவினர் என்பதாகும். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக பர்மாவில் 3.7 கோடி ஆண்டுக்கு முந்தைய மனித எலும்புகள் கிடைத்திருக்கின்றன. ஆப்பிரிக்க மனிதத் தோற்றக் கொள்கை பொடித்து விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை!

ஆசியாவில் அதிக மக்கட்தொகை ஏற்பட்டு பல தடயங்கள் அழிக்கப்பட்டதாலும் முறையான ஆராய்ச்சிகள் செய்யப்படாததாலும் உண்மைகள் மறைக்கப்பட்டிருந்தன. அடுத்த திடுக்கிடும் செய்தி இந்தியாவில்தான் மனித இனம் தோன்றியது என்று வெளி நாட்டினரே அறிவிக்கும் செய்தியாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

 

இது தொடர்பான எனது பழைய கட்டுரைகள்:

1.முதல் திராவிட ராணி: கி.மு 1320,

2.சுமேரியாவில் தமிழ்ப் பறவை,

3.HOW OLD IS INDIAN CIVILIZATION?

4.Double Headed Eagle: The Sumerian Indian Connection,

5.Bull Fighting: Indus Valley to Spain via Tamil Nadu,

6.Naming a Country after a Man,

7.The Sugarcane Mystery: Indus Valley and the Ikshvahu Dynasty,

8.Pandya King Who Ruled Vietnam

Contact swami_48@yahoo.com or Swaminathan.santanam@gmail.com