
Written by london swaminathan
Date: 3 February 2016
Post No. 2503
Time uploaded in London :– காலை 8-30
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com; contact
பிரிட்டிஷ் நூலத்தில் பழைய செந்தமிழ் இதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தபோது ஒரு சுவையான விஷயம் அகப்பட்டது. “செந்தமிழ்” என்னும் பத்திரிக்கை மதுரைத் தமிழ் சங்கத்தால் பாண்டித்துரைத் தேவர் தலைமையில் வெளியிடப்பட்டது. ராகவ ஐய்யங்கார், பத்திரிக்கை ஆசிரியராகப் பணியாற்றிய காலம் அது. அதில் நூல் மதிப்புரையில் பல நூல்களுடன் பாரதியாரின் முதல் வெளியீடான ஸ்வதேச கீதங்கள் மதிப்புரையும் வெளிவந்துள்ளது. அதே இதழில் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் “ஆனந்தமடம்” பற்றியும் மதிப்புரை வந்துள்ளது. இதை வெளியிடவே தைரியம் வேண்டும்!
இதன் சம காலத்தில் வெளியான பல புத்தகங்கள், இதழ்களை நான் தொடர்ந்து பேஸ் புக்கில் ஓராண்டுக் காலமாக வெளியிட்டு வருகிறேன். அவை எல்லாவற்றிலும் ஒரு விஷயம் இழையோடுவதைக் கண்டேன். எல்லோரும் முதல் பக்கத்திலோ, கடைசி பக்கத்திலோ விக்டோரியா மஹாராணி, ஜார்ஜ் சக்ரவர்த்தி, வேல்ஸ் இள்வரசர் ஆகியோருக்கு ஜால்ரா அடித்துள்ளனர். அவர்களைப் போற்றி கவிதை, கும்மி பாடல் முதலியனவற்றைப் பிரசுரித்துள்ளனர். இதனால்தான் பாரதியார், “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்று பாடி தனது நெஞ்சக் குமுறலைக் கொட்டியிருக்கிறார். அந்த அஞ்சாத சிங்கம் வெளியிட்ட பாடல் தொகுப்புக்கு துணிவுடன் மதிப்புரை – பாராட்டுரை—எழுதிய செந்தமிழுக்கும் நாம் வணக்கம் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.
இதோ அந்தச் சின்ன மதிப்புரை:–



–சுபம்–
You must be logged in to post a comment.