காசி முதல் காரைத் தீவு வரை அகஸ்தியர் பயணம், மிகப்பழைய நூல் தகவல் (Post No.7926)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No.7926

Date uploaded in London – 5 May 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

தமிழர்கள் பற்றி புத்த ஜாதகக் கதைகள் சொல்லும் அதிசய விஷயங்கள்

காசி முதல் காரைத் தீவு வரை அகஸ்தியர் பயணம், மிகப்பழைய நூல் தகவல் (Post No.7926)

இலங்கை சரித்திரத்தைச் சொல்லும் மஹாவம்சம் என்னும் பாலி மொழி நூல் சொல்லும் அதிசய விஷயங்களை  சில ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே பல கட்டுரைகளாகத் தந்தேன். சுருக்கமாகச்  சொல்ல வேண்டுமானால் சிங்களவர்கள் என்னும் இனத்தவர், 50 சதம் தமிழர், 50 சதம் வங்களியர் . 2600 ஆண்டுகளுக்கு முன்னர் அடாத பாவச் செயல்களைச் செய்த வங்காள – ஒரிஸ்ஸா பகுதி மன்னன் விஜயனை நாடு கடத்தினர். அவன் பெரிய கும்பலுடன் முதலில் குஜராத்துக்குப் போய்விட்டு மறு கப்பல் ஏறி இலங்கையில் இறங்கினான்.

அங்கே மனிதர்களை ஏமாற்றி கல்யாணம் செய்து அடித்துக் கொல்லும் யக்ஷிணி இனத்தைச் சேர்ந்த அழகி குவேனியை மனம் புரிந்தான். அங்குள்ள பிராஹ்மணர்கள் “இது க்ஷத்திரிய தர்மத்துக்கு முரண் ஆனது; ஆகையால் பக்கத்திலுள்ள பாண்டிய நாட்டு மதுரையில் பெண் எடு” என்று அறிவுறுத்த மதுரை மாநகர விதிகளில் தண்டோரா போடப்பட்டது. உடனே மன்னன் மகள், மந்திரி மகள்கள் , சேனாதிபதிகளின் மகள்கள் அனைவரும் புறப்பட்டு இலங்கைக்குச் சென்று  அங்கிருந்த வங்காளி – ஒரிஸ்ஸா / கலிங்க கும்பலை கல்யாணம் செய்தனர். இதுவே அதாவது ‘உறவினில் fifty பிப்டி / உதட்டினில் fifty பிப்டி’ என்று கலப்பட மணத்தில் முடிந்தது ;இப்படி கலப்படத்தில் பிறந்தது  சிங்களவர்   இனம் என்பதை மஹா வம்சம் செப்பும். ஆனால் இது கண்ணகி எரித்த மதுரை அல்ல. அது கடல் சூழ் இலங்கை கஜ பாஹு விஜயம் செய்த மதுரை. விஜயன் பெண் எடுத்ததோ கடல் கொண்ட தென் மதுரை அல்லது கபாட புரம் ; நிற்க.

சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் இரண்டு தமிழ் அய்யங்கார்கள் 2400 ஆண்டுகள் அல்லது அதற்கும் முந்தைய வால்மீகி ராமாயணத்திலும்,புத்த ஜாதகக் கதைகளிலும் தமிழர்கள் பற்றி வரும் விஷயங்களை விரிவாக எடுத்துரைத்தனர். வால்மீகி முனிவர் சம்ஸ்க்ருதத்தில் எழுதிய விஷயங்களை ராகவ அய்யங்கார் , மதுரை தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அற்புதமான செந்தமிழ் பத்திரிகையில் எழுதினார். புத்தர் ஜாதகக் கதைகளில் சொன்னதை பி.டி ஸ்ரீனிவாச அய்யங்கார் ஆங்கிலத்தில் புஸ்தகமாக எழுதினார்.( M RAGAVA IYENGAR AND P T SRINIVASA IYENGAR)

இதோ ஜாதகக் கதை சொல்லும் விஷயங்கள்.

முதலில் மதம் மாற்றம் செய்யும் அயோக்கியர்கள் பற்றி ஒரு வரி—

இந்து மதத்தினரை வேற்று மதத்துக்கு மாற்ற விழைவோர் முதலில் ஒரு அண்டப் புளுகை அவிழ்த்து விடுவார்கள் . உங்கள் சாமிதான் எங்கள் மதத்திலும் உளது என்று காட்டுவர். இந்த ஏமாத்து வேலையை முதலில் செய்து இந்துக்களின் காதில் பூ சுற்றியவர்கள் பவுத்தர்கள் . இந்தியாவில் வழங்கிய அத்தனை புராண இதிஹாஸக் கதைகளையும் எடுத்து அவை எல்லாம் புத்தரின் பூர்வ ஜென்மத்தில் — அவர் போதி சத்துவராக அவதரித்தபோது நடந்தவை என்று புளுகினர்.

இப்படி அவர்கள் செய்த அயோக்கியத்தனத்திலும் நன்மை உண்டு. எப்படி வெளிநாட்டுக்காரர்கள் கொள்ளை அடித்த செல்வங்களை நாம் இன்று லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் பாரிஸ் லூவர் , கெய்மே மியூசியங்களிலும், நியூயார்க் மெட்ரோபாலிட்டன் மியூஸியத்திலும் காண முடிகிறதோ அப்படி 2600 ஆண்டுகளுக்கு முன்னர் புத்தர் காலத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதை 560 புத்த ஜாதகக் கதைகளும் காட்டிவிடுகின்றன . மிகவும் அரிய பெரிய விஷயங்கள் அவற்றில் உள்ளன. சில்வன் டேவி போன்றோர் ஆராய்ந்த அளவுக்கு இந்தியர்கள் கூட இன்னும் முழு அளவுக்கு ஆராயவில்லை . கிணற்றுத் தவளையாக வாழும் தமிழர்களுக்கு இப்படி புஸ்தகம் இருப்பதே தெரியாது.

அகத்ஸ்த்ய முனிவர் பற்றி

முதல் முதலில் அகஸ்திய முனிவரையும் பாண்டிய நாட்டையும் தொடர்பு படுத்தி எழுதியது உலக மஹா கவிஞனான காளிதாசன் ஆவான். அவன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ரகு வம்ச காவியத்தில் சம்ஸ்க்ருதத்தில் இதை எழுதினான். அதற்கும் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே அகஸ்தியர் பற்றி ஜாதகக் கதை.இருக்கிறது. இது கி.மு. நாலாம் நூ ற்றாண்டுக் கதை.

ஜாதகக் கதைகளில் வலாஹஸ்ஸ ஜாதகம், –எண் 196, ஹத்திபால ஜாதக -எண் 509, மூகபக்க ஜாதக எண் .538 ஆகியன இலங்கை பற்றி இயம்புகிறது. அப்போது அந்தத் தீவின் பெயர் நாக த்வீபம்..

புத்தர் வில்லாளியாகப் பிறந்து,வேதங்களைக் கற்று,  தட்சசீலத்தில் பயின்று , பிராக்டிகல் எக்ஸ்பீரியன்ஸுக்காக  PRACTICAL EXPERIENCE —  வாழ்க்கைப் பயிற்சிக்காக — ஆந்திரத்துக்குச் சென்றதாக பீமஸேன ஜாதகம் பகரும் . அதாவது அவர் பூரவ ஜென்மத்தில் போதிசத்வராக ஜெனித்தபோது நடந்தது இது.

இன்னொரு பிறப்பில் அவர் குயவனாக சேரி  ராஜ்யத்தில் பிறந்தார் என்று சேரி  வாண்ய ஜாதகம் இயம்பும். இத்து சேர நாடாக இருக்கலாம் என்கிறார் பி.டி .எஸ். அய்யங்கார்.  அவர் தான் செய்த பொருட்களை விற்பதற்காக தெளவாக நதியைக் கடந்து  அந்தபுரம்  என்னும் ஊரில் நுழைந்தார் .

இன்னொரு ஜாதகக் கதையில் (எண் .480) அவர் –போதி சத்வர்  — ஒரு பிராமண அறிஞரின் மகனாகப் பிறந்தார் . அப்போது புத்தரின் பெயர் அகித்தி . அவர் சந்நியாசியாக மாறி தனது சகோதரி யசவதியுடன் காசியிலிருந்து மூன்று லீக் /யோஜனை தூரத்தில் தாங்கினார். சீடர்களின் அன்புத் தொல்லை பொறுக்கமாட்டாமல்,    தான்  மட்டும் DAMILA டமில/ தமிழ் தேசத்துக்குப் போனார் ; அங்கு காவேரப்பட்டணத்தில் ஒரு உத்யாவனத்தில் / தோட்டத்தில் தாங்கினார் இங்கேயும் பக்தர்கள் நச்சரிக்கவே அவர் தம்பபண்ணி அருகிலுள்ள  அஹி தீப  என்ற கார தீபத்துக்குப் போனார்.

காரைத் தீவு

இந்தக் கதை காசி நகர பிராமண அகத்தியரை இலங்கையிலுள்ள காரைத் தீவு வரை கொண்டு செல்கிறது!

அஹி என்றால் பாம்பு/ நாகம்.

அவ்வகையில் இலங்கை காரைத்தீவின் பெயரும் வருகிறது

காரைத் தீவு , நாகத் தீவு முதலியன யாழ்ப்பாணத்தில் இருக்கின்றன

இதில் நிறைய ஆராய்சசிக்குரிய விஷயங்கள் இருக்கின்றன.

கவர ரிஷியின் மகளான காவிரியின் பெயரில் அந்த நதி, காவேரி என்று அழைக்கப்பட்டது.

சங்க இலக்கியத்தில் காவிரி பூம்பட்டினம் அடிபடுகிறது.

அகத்தியர் என்பது கோத்திரப் பெயர் என்பதால் பல அகத்தியர் இருப்பதை நினைவிற்கொள்ள வேண்டும்

ஆயினும் ஒரு மகரிஷி என்பதால்தான் அவரை போதிசத்வர் அவதாரத்துக்கு ஜாதக     கதை ஏற்றியிருக்கிறது. மேலும் அவர் சோழ நாட்டின் காவிரி பூம்பட்டினம் வரை வந்து இருக்கிறார். அத்தோடு அகத்தியனுக்கு காவிரிக்கும் உள்ள தொடர்ப்பு உலகப் பிரசித்தம். இன்றும் கல்லணையில் சிலையைக் காணலாம்.

ஆக எல்லா விஷயங்ககளையும் கூட்டிக்கழித்துப் பார்க்கையில் இவர் தமிழ் அகத்திய முனிவர் என்பது வெளிப்படை. இவர் பாண்டிய நாடு போகாமல் இலங்கை காரைத்தவுக்குப் போனது புதுக்கதை.

மொத்தத்தில் 2400 ஆண்டுக்கு முன்னிருந்த காவிரி பூம்பட்டினம் காரைத் தீவு, காசி மாநகரம் , தமிழ் –டமில தேசம் — பற்றி நமக்குத் தகவல் கிடைக்கிறது.

tags – காசி, காரைத் தீவு ,அகஸ்தியர், பயணம், ஜாதகக் கதை

—SUBHAM—

வேதத்தில் கபிஞ்ஜலா பறவை மர்மம்!

kapinjala2

Written by London Swaminathan
Post No 1061; Dated 24th May 2014.
(This article is posted in English already)

“ரிக் வேதத்தில் ஒரு பறவைப் பாட்டு” என்ற கட்டுரையை நேற்று வெளியிட்டேன். அதனுடைய இரண்டாவது பகுதி இது.

கபிஞ்ஜலா என்ற பறவையை சாதகப் பட்சி என்று பிற்கால இலக்கியங்கள் வருணித்தன. தமிழர்கள் இதை ‘துளி நசைப் புள்’ –(மழைத் துளிகளுக்காக ஏங்கும் பறவை)– என்று புறநானூற்றிலும் ஏனைய சங்க இலக்கிய நூல்களிலும் வருணித்து இருப்பதை முதல் பகுதியில் கண்டோம்.
இந்தப் பறவை பற்றி இரண்டு சுவையான கதைகள் பிற்கால இலக்கியத்தில் உள்ளன. அவைகளை அறிந்தால், உலகின் மிகப் பழைய மதப் புத்தகமான ரிக் வேதத்தில் இதை ஏன் இந்திரனுக்கு ஒப்பிட்டனர் என்பது விளங்கும்.

2400 ஆண்டுகளுக்கு முன்னர் பௌத்தர்கள் 547 ஜாதகக் கதைகளைத் தொகுத்தனர். இவை ஒவ்வொன்றிலும் போதிசத்வர் (புத்தர்) முன் ஜன்மத்தில்என்ன மிருகமாக, பறவையாக, அரசனாக, தொழிலாளியாகப் பிறந்தார் என்று கதை ரூபத்தில் இருக்கும். ஆனால் உண்மையில் இவை எல்லாம் இந்து மதக் கதைகள். பௌத்த மதத்தைப் பரப்புவதற்காக பஞ்ச தந்திரக் கதைகள், ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் முதலியவற்றை ‘’பவுத்தமயமாக்கி’’ வெளியிட்டனர். அதாவது கதையை கொஞ்சம் மாற்றி தந்திரமாக வெளியிட்டனர். அகத்தியர் வரலாற்றைக் கூட இதில் ‘’அகித்தி’’ என்று பெயரை மற்றி எழுதி வைத்துள்ளனர். இந்த ஜாதகக் கதைகளில் மேலும் கொஞ்சம் மாற்றம் செய்து திபெத்தியர்கள் வெளியிட்டனர்.

பூர்வ ஜாதகக் கதைகளில் தித்திரி ஜாதகம் என்று உள்ளதை திபெத்தியர்கள் கபிஞ்ஜலா ஜாதகம் என்பர். தித்திரி என்பதை தமிழில் தத்தை (கிளி) என்பர். கபிஞ்ஜலா என்பது சாதகப் பட்சி என்று நான் எழுதியுள்ளேன். இதற்கு காளிதாசன் படைத்த மேகதூதக் காவியத்தில் இருந்து சகுனம் (புள் நிமித்தம்) பற்றிய நம்பிக்கைகளை ரிக் வேதக் கவிதையுடன் (ரிக் 2-42, 2-43) ஒப்பிட்டும் காட்டினேன்.

இனி சுவையான திபெத்திய ஜாதகக் கதையைக் காண்போம்:
kapinjala

புத்த ஜாதகக் கதை

முன்னொரு காலத்தில் ஒரு காட்டில் பெரிய ஆலமரம் இருந்தது. ஒரு யானை வந்து அதன் இலைகளைத் தின்றுகொண்டு அதன் நிழலில் வசித்தது. அதற்குப் பின் அங்கே ஒரு குரங்கு வந்து தங்கியது. உடனே யானை எதிர்ப்பு தெரிவித்தது. நான் தான் முதலில் வந்தேன் என்று அதற்குக் காரணமும் சொன்னது. குரங்கு கேட்டது, ’இந்த மரத்தின் பழங்களை நீ பார்த்து இருக்கிறாயா?’. யானை நான் பார்த்ததில்லை என்று சொன்னது. அப்படியானால் நான் உனக்கு முன்னால் வந்தேன். அந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டேன். இப்போது இலை மட்டுமே எஞ்சியிருக்கிறது. உடனே யானை. ‘’குரங்காரே நீரே மூத்தவர். நாம் இருவரும் சேர்ந்து வாழ்வோம்’’ என்று சொன்னது.

கொஞ்ச நாள் கழித்து ஒரு முயல் வந்து அங்கே உட்கார்ந்தது. யானையும் குரங்கும் ஆட்சேபம் தெரிவித்தன. முயல் கேட்டது, ‘’நீங்கள் இந்த மரத்தின் கன்றைப் பார்த்தது உண்டா?’’ என்று. அவை இரண்டும் இல்லை என்று சொன்னவுடன், ‘’நான் வந்த போது மரக் கன்றுதான் இருந்தது. என் உயரம்தான் மரமே வளர்ந்து இருந்தது. ஆகையால் இந்த மரம் எனக்கே உரியது’’ என்றது. யானையும் குரங்கும் அதனை நண்பனாக ஏற்று நீயே, ‘சீனியர்’. நாங்கள் உன்னுடன் வாழ்கிறோம் என்றன.

இவர்கள் இப்படிப் பேசி முடிப்பதற்குள் மரத்தின் உச்சியில் இருந்து கபிஞ்ஜலா பறவை கூச்சல் போட்டது. ‘’நிறுத்துங்கள், உங்கள் பேச்சை. நான் பழம் தின்று ஒரு கொட்டையைத் துப்பினேன் அதுதான் இந்த மரமாக வளர்ந்தது’’ என்றவுடன் யானை, குரங்கு, முயல் ஆகிய மூன்றும் அந்தப் பறவையின் தலைமையை ஏற்றுக் கொண்டு சுகமாக நண்பர்களாக வாழ்ந்தன. ‘’இந்த நாலு பேரில் கபிஞ்ஜல பறவை என்பது புத்தரின் முந்தைய பிறப்பில் போதிசத்துவர்’’ — என்று கதை முடிகிறது.
ஆக கபிஞ்ஜல என்பது புத்தர். இப்படிப் பறவையை ஆன்மாவுக்கு ஒப்பிடுவது புத்தருக்கும் முந்தைய உபநிஷத்துகளிலேயே இருக்கிறது வள்ளுவனும் ஆத்மாவை பறவைக்கு ஒப்பிடுவான்:
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு (338)
(குடம்பை= கூடு, புள்=பறவை).

paint kapinjala

தேவிபாகவதக் கதை

தேவிபாகவதத்தில் ஆறாவது பகுதியில் விருத்ராசுரனை இந்திரன் வதை செய்த கதை உள்ளது. மூன்று தலைகளை உடைய விஸ்வரூபனை இந்திரன் கொன்றபோது ஒரு தலையில் இருந்து கபிஞ்ஜலப் பறவையும், மற்றொன்றிலிருந்து குருவிகளும், மூன்றாவது தலையில் இருந்து கிளிகளும் வந்ததாக தேவி பாகவதம் கூறும். இவைகள் சோம பானம், சுராபானம், அன்னம் ஆகியவற்றைச் சாப்பிட்ட மூன்று தலைகள் என்றும் அவை முறையே தேவர், அசுரர், மனிதர் ஆகியோரைக் குறிப்பதாகும் என்றும் அறிஞர்கள் விளக்கம் தருவர். இதற்குப் பின்னர் விருத்திராசுரனை அவனது தந்தை யாகத் தீயில் இருந்து உருவாக்கவே, விருத்திரனையும் இந்திரன் கொல்கிறான்.

ஆக இந்த இரண்டு கதைகளிலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். கபிஞ்ஜல பறவை என்பது தேவர் (கடவுள்). அதுதான் உயர்ந்தது. இது க்ருத்சமடர் பாடிய ரிக்வேதப் பாடலில் உள்ள கருத்து. இந்த வேதக் கதையையே பிற்காலத்தில் பர்த்ருஹரி, காளிதாசன், சங்ககால தமிழ்ப் புலவர்கள், பௌத்தர்கள், தேவிபாகவதம், ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகியோர் சாதகப் பட்சி என்ற பெயரில் பயன்படுத்தினர்.

ஆன்மீகத்தின் உச்சநிலையை நாடும் ஞானியைக் குறிக்கவோ, கடவுளைக் குறிக்கவோ கபிஞ்ஜல பறவையை உவமையாகப் பயன்படுத்தினர். இந்த நோக்கில் ரிக் வேதப் பாடலைப் பார்த்தோமானால் உண்மை புலப்படும். மேலோட்டமாகப் படித்தால் அது ஒரு அழகான பறவைப் பாட்டு!
பெரிய தத்துவங்களைப் போதிக்க இயற்கையில் உள்ள பறவைகள், மிருகங்கள், ஆறு, மலை முதலியவற்றைப் பயன்படுத்துவதை உபநிஷத காலத்தில் இருந்தே காண முடியும்.

இது தொடர்பாக முன்னர் வெளியான கட்டுரைகளையும் படிக்கவும்:
1.இயற்கை போதிக்கும் 13 பாடங்கள், 2.காடுகள் பற்றி கேள்வி- பதில், 3.சிந்துசமவெளியில் அரச மரம், 4. சோம பானமும் சுரா பானமும் 5. காளை வாகனம் எப்படிக் கிடைத்தது? 6.கா கா! கா கா!! 7.கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை 8.சிந்து சமவெளியில் ஒரு புலிப் பெண் 9.தேள் தெய்வம் 10. எந்தக் கடவுளுக்கு என்ன வாகனம் 11. சங்க இலக்கியத்தில் வாகனங்கள் 12. உலகம் முழுதும் இந்து வாகனங்கள் 13. வாகனங்கள் தோன்றியது எங்கே? 14. நீண்டகாலம் வாழும் ரகசியம் 15.சுமேரியாவில் தமிழ் பறவை 16.அதிசய பறவைத் தமிழன் 17.மழை அற்புதங்கள் 18.பாம்புராணி 19.அருகம்புல் ரகசியங்கள் 20.சிட்டுக் குருவியிடம் பாரதி அற்ற பாடங்கள் 21.இளநீர் மகிமையும் தென்னையின் பெருமையும் 22.நாலு கடல் நீரில் ஒரே நாளில் குளிக்கமுடியுமா? 23.யானை பற்றி நூறு பழமொழிகள் 24.நல்லோர் அவைபுக்க நாகமும் சாகா 25.கிணற்றுத் தவளை: அப்பரும் விவேகாநந்தரும் சொன்ன கதைகள் 26.கொக்கைப்போல இருப்பான், கோழிபோல இருப்பான் 27. திருமூலர் சொன்ன யானைக் கதை 28. வேதத்தில் வெள்ளரிக்காய் 29.சப்தம் கேட்டால் இறந்துவிடும் அசுணமா
3 proportions

ஆங்கிலக் கட்டுரைகள்:
The connection between William Wordsworth and Dattatreya (posted 10 November 2011), 13 saints in nature (posted on 7 November 2013)
The Mysterious Vedic Homa Bird: Does it Exist? (posted on 10 December 2011), Can Birds Predict your Future?, Hindu Eagle Mystery Deepens (Posted on 16-2-2013), A Tamil bird in Sumerian Double headed Eagle in Sumeria, Double Headed Eagle: Sumerian- Indian Connection, Karikal Choza and Eagle Shaped Fire Altar, Bird Migration in Kalidasa and Tamil Lterature, Friends of Birds, Four Birds in One Sloka, Can Parrots recite Vedas?, Gods and Birds