12-10-20 ஞானமயம் – பங்களூர் செய்தி மடல்.(Post 8809-C)

UDUPI SRI KRISHNA TEMPLE

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8809-C

Date uploaded in London – –14 OCTOBER 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

12-10-2020 திங்கள் கிழமையன்று லண்டன் நேரப்படி மதியம் 2 மணிக்கும் இந்திய நேரப்படை மாலை 6.30 மணிக்கும் பங்களூர் செய்தி மடல் ஒளிபரப்பானது. ஒவ்வொரு திங்களன்றும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்.

12-10-2020 அன்று ஒலிபரப்பான செய்தி மடல் இதோ:

வணக்கம்.

ஞானமயம் வழங்கும் பங்களூர் செய்தி மடல்.

வழங்குவது பிரஹன்நாயகி சத்ய நாராயணன்.

தலைப்புச் செய்திகள்

பங்களூரில் உள்ள இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் அனைத்து ஆலயங்களும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன

புகழ்பெற்ற புண்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்

இனி, விரிவான செய்திகள் :-

சுமார் ஆறு  மாத காலமாக மூடப்பட்டிருந்த இஸ்கான் ஆலயம் அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து திறக்கப்பட்டுள்ளது.

கோவிட் 19 நோயினால் மூடப்பட்டிருந்த ஆலயமானது அரசின் வழிபாட்டுத் தலங்களுக்கான சமீபத்திய வழிகாட்டுதல் நெறிகளின் படி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. வார நாட்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரையிலும் மீண்டும் மாலை 4 மணி  முதல் இரவு 8 மணி முடிய ஆலய தரிசனம் செய்யலாம்.சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் வேண்டும் என்றும் ஆலயச் செய்திக் குறிப்பு ஒன்று கூறுகிறது. அத்துடன் பத்து வயதிற்கு கீழ்ப்பட்டவர்களும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் கர்ப்பிணிகளும் தங்கள் பாதுகாப்பைக் கருதி ஆலயத்திற்கு வர வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

வருகை புரிவோர் அனைவரும் தெர்மல் ஸ்கீரினிங் நடைமுறைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் ஆலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு அறிவிக்கிறது.

அடுத்து அரசின் சமீபத்திய வழிபாட்டுத் தலங்கள் குறித்த நெறிகாட்டுதலின் படி படிப்படியாக கர்நாடக மாநிலத்தில் அனைத்து ஆலயங்களும் திறக்கப்பட்டு வருகின்றன. இதையொட்டி வருகின்ற நவராத்திரி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் பாரம்பரிய பழக்கத்தை விடாது கொண்டாடப்படும்.

என்ற போதிலும் கொரானா நோயின் தீவிரத் தாக்கம் குறித்து பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு அறிவித்தபடி மேற்கொள்ளுதல் வேண்டும்.

அடுத்து திவ்ய ஸ்தலமான உடுப்பி பற்றி ஒரு சிறு அறிமுகம்

உடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோவில் த்வைதக் கொள்கையை நிறுவிய மத்வாசார்யரால் ஸ்தாபிக்கப்பட்ட ஒன்றாகும்.

விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்ட தெய்வச் சிலை துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கியது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் மத்வாசாரியர் அந்தச் சிலையைக் கண்டெடுத்து அதை உடுப்பியில் ஸ்தாபித்தார்.

அத்துடன் எட்டு மடங்களையும் அவர் நிறுவினார். கிருஷ்ண பகவானின் வழிபாட்டை ஒவ்வொரு மடமும் இரு மாதங்கள் மேற்கொள்ளும்.

ஒரு ஜன்னல் வழியே கிருஷ்ணரின் அற்புதமான தெய்வீகத் திருவுருவத்தைக் கண்டு வணங்கும் பக்தர்கள் ஆனந்தப் பரவசம் அடைகின்றனர். மேற்கு பார்த்திருக்கும் இந்த கிருஷ்ணரை தரிசிப்பது விசேஷமாகும்.

இந்த ஆலயத்தில் தினமும் அன்னதானம் நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்தது. கோவிலின் பூஜைக்கு தேவைப்படும் 4 டன் சந்தனத்தை அரசு வருடந்தோறும் வழங்கி வருகிறது. கோவிலின் அருகில் மத்வ புஷ்கரிணி என்னும் தீர்த்தம் உள்ளது.

உடுப்பி தலம் மிகப் பண்டைய கால புராண வரலாற்றைக் கொண்டதாகும்.

முன்னொரு காலத்தில் தட்சனின் சாபத்தால் சந்திரன் தன் ஒளியை இழந்தான்; அழகையும் இழந்தான். இதனால் வருந்திய சந்திரன் சிவபிரானை நோக்கிக் கடும் தவம் இருந்தான். சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபிரான் அவனுக்கு அருள் பாலித்தார்; சந்திரன் தன் ஒளியையும் அழகையும்ம் மீண்டும் பெற்றான். அப்போது சந்திரன் ஒரு குளத்தை நிர்மாணித்தான். அந்தத் திருக்குளமானது சந்திர புஷ்கரணி என்ற பெயரைப் பெற்றது.

உடுப்பி என்ற பெயர் உடு மற்றும் பா என்ற இரு சொற்களின் சேர்க்கையாகும்.

உடு என்றால் நட்சத்திரங்கள் எனப் பொருள் பா என்றால் அதிபதி என்று பொருள். நட்சத்திரங்களுக்கு அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் இது உடு பா என்ற பெயரைப் பெற்றது; காலப் போக்கில் பெயர் மருவி இப்போது உடுப்பி என அழைக்கப்படுகிறது.

உடுப்பி கிருஷ்ணர் கோவிலுக்கு அருகிலேயே சந்திர மௌலீஸ்வரர் கோவில் மற்றும் அனந்தேஸ்வரர் கோவில் அமைந்துள்ளன.

காலம் காலமாக மக்கள் பக்தியுடன் வணங்கி வரும் ஸ்ரீ கிருஷ்ணர் அனைவருக்கும் சர்வ மங்களத்தை தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

இதுவரை நீங்கள் கேட்டது பங்களூர் செய்தி  மடல்.

வழங்கியது ப்ரஹன் நாயகி சத்யநாராயணன். நன்றி.

TAGS – ஞானமயம், பங்களூர் செய்தி மடல், 12-10-20

காலம் சென்ற பிரபல பாடகர் எஸ்.பி.க்கு ‘ஞானமயம்’ அஞ்சலி(8776)

MRS HARINI RAGHU ON ZOOM BROADCAST

WRITTEN BY BRHANNAYAKI SATHYANARAYANAN

Post No. 8776

Date uploaded in London – –5 OCTOBER 2020
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com

5-10-2020அன்று ஞான மயம் ஒளி /ஒலி பரப்பில் லண்டன் திருமதி ஹரிணி ரகு , பெங்களூர் திருமதி சத்திய நாராயணன் ஆகிய இருவரும் பாட கர் எஸ் .பி.பாலசுப்ரமண்யத்துக்கு அஞ்சலி செலுத்தினர். ஹரிணி உரை எழுத்து வடிவில் ல்லை. ஆனால் FACEBOOK.COM/GNANAMAYAM ல் கேட்கலாம். பிரஹந்நாயகி உரை இதோ எழுத்து வடிவில் :–

உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்! (Post No.8776)

5-10-2020 அன்று ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பான அஞ்சலி உரை
உவமையிலா ஓசை இன்பம் தந்தவர்!
பிரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் சார்பில் உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறுவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

MRS BRHANNAYAKI SATHYANARAYANAN


காட்டு நெடு வானம் கடல் எல்லாம் விந்தை எனில்
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா!
ஆசை தரும் கோடி அதிசயங்கள் கண்டதிலே
ஓசை தரும் இன்பம் உவமை இலா இன்பம் அன்றோ!
ஆம் மஹாகவி பாரதியார் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை தான்.
நாதங்கள் சேரும் நயத்தினுக்கு எதுவும் ஈடாகுமா?
லட்சோபலட்சம் மக்கள் பல்லாண்டுகளாகக் கேட்டு மெய்மறந்து இருந்த இசை அதிசயத்தைத் தந்தவர் எஸ்.பி.பி.
எஸ்.பி.பி என்ற இந்த மூன்றெழுத்து, இசை உலகில் விளைவித்த அற்புதங்கள், ஏராளம், ஏராளம்.
பதினாறு மொழிகளுக்கும் மேலான மொழிகளில், ஆயிரம் ஆயிரம் பாடல்களை தன் அமுத கானக் குரலால் அள்ளி வழங்கியவர் இன்று நம்மிடையே இல்லை என்பதை நினைக்கும் போது உள்ளமெலாம் கனக்கிறது.


அவர் பாடிய பாடல்களில் இழைந்தோடிய ராகங்கள் ஏராளம்; அவை தந்த உணர்ச்சிகளோ நவ ரஸ உணர்ச்சிகள்.
இருப்பினும் ஆன்மீகத்தில் மனதை மேம்படுத்தி அனைவரையும் உயர ஏற்றிய அவரது பக்திப் பாடல்களை யாராலும் மறக்கவே முடியாது.


மனதை இதமாக வருடும் இனிய குரல், எஸ்.பி.பி.யின் குரல்!
அது ஆன்மாவின் குரலாக அவரது பக்திப் பாடல்களில் கோடானு கோடி இல்லங்களில் ஒலித்துக் கொண்டே இருந்தது; ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
ப்ரம்ம முராரி சுரார்ச்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க விநாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் என்று லிங்காஷ்டகத்தை இனிய குரலில் பக்தியைக் குழைத்து, சொல்லுக்குச் சொல் இடம் விட்டு, பொருள் புரியும் படி, இசையாக அவர் வழங்கிய விதம் உவமை இலா ஒன்றாகும்.
கோடி கன்யா தானத்தை விட ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பது மேலாகும் என்ற அவரது வில்வாஷ்டக பாடலைக் கேட்போருக்கு மெய் சிலிர்க்கும். என்ன ஒரு அபூர்வமான Presntation!
சங்கரா நாத சரீராபரா என்று மத்யமாவதி ராகத்தில் அவர் வழங்கிய பாடல் அவருக்கு தேசிய விருதை மட்டும் வாங்கித் தரவில்லை, பக்தர்களின் ஆழ்மனது அன்பையும் வாங்கித் தந்தது. சங்கராபரணம் பாடல்களைப் பாட முதலில் தயங்கியவர், பின்னர் மிகுந்த உழைப்புடன் கடின பயிற்சி எடுத்துப் பாடினார். வெற்றியும் பெற்றார்.


‘சிவன் எனும் ஒசை அல்லது அறையோ, உலகில் திரு நின்ற செம்மை உளதே’ என்று அப்பர் பெருமான் சிறப்பித்துக் கூறும் அந்த சிவ நாமம் அவரை உயரத்தில் ஏற்றியது!
வரணும் அம்மா வரணும் அம்மா, மூகாம்பிகை தாயே சரணம் அம்மா’ என்ற அவரது தேவியின் பாடல்கள் தாயின் அருளை யாருக்குத் தான் பெற்றுத் தரவில்லை.
நாராயணா என்று பக்தி இழையோடும் அவரது பாடல்கள், ‘நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்ற ஆழ்வாரின் ரகசியத்தை அல்லவா நமக்குக் கற்றுத் தந்தது!
ஸ்ரீ கணேச பக்தி புஷ்பாஞ்சலியை நாற்பது லட்சம் பேர் இதுவரை கேட்டிருக்கிறார்கள் என்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
காவடி பற்றிய அவரது பாட்டு முருக பக்தர்களைக் கவர்ந்ததில் தான் வியப்பேது?

S P B


உள்ளம் உருக்கும் குரலில் அவர் பாடிய ஐயப்ப பக்திப் பாடல் ஒன்றை லட்சோப லட்சம் மக்கள் கேட்டதில், இன்றும் கேட்டு வருவதில் என்ன அதிசயம் இருக்கிறது?
ஐயப்பனைப் பற்றிய அந்தப் பாடலைக் கேட்காதவர், பாடாதவர் யார் உள்ளார்?


ஹரிவராசனம் விஸ்வமோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்யபாதுகம்
அரி விமர்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஸ்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா என்ற பாடலுக்கு இணை உண்டா என்ன? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
பூவுலகில் இருந்து இசை சேவை செய்து ஓயாமல் உழைத்தது போதும், இவரை நம்மருகில் வைத்துக் கொண்டு இனிய இசையை எந்நாளும் கேட்போம் என்று அனைத்து தெய்வங்களும் எண்ணி அவரைத் தம் அருகில் அழைத்துக் கொண்டனவோ!


உவமை இல்லா ஓசை தரும் இன்பத்தை என்றும் நீ வழங்குவாய், எஸ்.பி.பி உன் புகழ் ஓங்குக என்று கூறி, என் சிரம் தாழ்த்தி அஞ்சலி செலுத்தி, உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன். நன்றி , வணக்கம்!

TAGS – எஸ்.பி.பி , S P B, ஞானமயம், அஞ்சலி ,