அக்டோபர் 2015 காலண்டர்

arunagiri annamalai

அருணகிரிநாதர் சிலையின் படம்

(மன்மத வருடம் புரட்டாசி/ஐப்பசி)

இந்த மாதக் காலண்டரில், அருணகிரிநாதர் பாடிய, சந்தத் தமிழ் திருப்புகழ் மேற்கோள்கள் இடம்பெறுகின்றன.

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

Compiled  by London swaminathan

Date: 28  September 2015

Post No: 2195

Time uploaded in London :– 16-10

(Thanks  for the pictures) 

முக்கிய நாட்கள்: அக்டோபர் 2 காந்தி ஜயந்தி, 12 மஹாளய அமாவாசை ,13 நவராத்திரி ஆரம்பம்,21 சரஸ்வதி பூஜை, 22 விஜயதசமி, 24 மொகரம்;

8, 13 ஏகாதசி , 27 பௌர்ணமி

முகூர்த்த நாட்கள்: 19, 22,25, 26

amman gold

அக்டோபர் 1 வியாழக்கிழமை

முத்தமிழடை வினை முற்படு கிரிதனில்

முற்பட எழுதிய முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவனுறை ரதம்

அச்சது பொடிசெய்த அதிதீரா.

அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை

தினைவேடர் காவல் தங்கு மலை காடெலாமுழன்று

சிறுபேதை கால் பணிந்த குமரேசா

திரையாழி சேது கண்டு பொரு ராவணேசனை வென்ற

திருமால் முராரி தங்கை  அருள்பாலா.

அக்டோபர் 3 சனிக்கிழமை

சந்ததம் பந்தத் தொடராலே

சஞ்சலந்துஞ்சித் திரியாதே

கந்தனென்றுற் றுனைநாளும்

கண்டுகொண் டன்புற்றிடுவேனோ.

அக்டோபர் 4 ஞாயிற்றுக்கிழமை

இரவுபகல் மோகனாகியபடியில் மடியாமல் யானுமுன்

இணையடிகள் பாடி வாழ என்நெஞ்சிற் செஞ்சொல் தருவாயே.

அக்டோபர் 5 திங்கட்கிழமை

உயர் கருணை புரியும் இன்பக் கடல் மூழ்கி

உனையெனதுள் அறியும் அன்பைத் தருவாயே

amman lakshana

அக்டோபர் 6 செவ்வாய்க்கிழமை

மங்கை அழுது விழவே யமபடர்கள்

நின்று சருவமலமே யொழுக வுயிர்

மங்கும் பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.

அக்டோபர் 7 புதன்கிழமை

மதித்துச் திண்புரம் சிரித்துக் கொன்றிடும்

மறத்திற் றந்தைமன் ரினிலாடி

மழுக்கைக் கொண்ட சங்கரர்க்குச் சென்றுவண்

டமிழ்சொற் சந்தமொன்  றருள்வாயே.

அக்டோபர் 8 வியாழக்கிழமை

புரக்கைக்குன் பதத்தைந்தெனக்குத் தொண்டுறப்பற்றும்

புலத்துக்கண் செழிக்கச் செந்தமிழ் பாடும்

அக்டோபர் 9 வெள்ளிக்கிழமை

மங்கைமார் கொங்கைசேரங்க மோகங்களால்

வம்பிலே துன்புறாமே

வண்குகா நின்சொரூபம் ப்ரகாசங்கொலே

வந்து நீயன்பில்  ஆள்வாய்.

அக்டோபர் 10 சனிக்கிழமை

துன்பநோய் சிந்த நற்கந்தவேள் என்றுனைத்

தொண்டினால் ஒன்றுரைக்க  அருள்வாயே

a o maa

அக்டோபர் 11 ஞாயிற்றுக்கிழமை

அறிவால் அறிந்து இருதாளிறைஞ்சும்

அடியார்  இடைஞ்சல் களைவோனே

அழகான செம்பொன் மயில்மேல் அமர்ந்து

அலைவாயுகந்த பெருமாளே

அக்டோபர் 12 திங்கட்கிழமை

தீப மங்கள ஜோதி நமோ நம

தூய அம்பல லீலா நமோ நம

தேவ குஞ்சரிபாகா  நமோ நம  –அருள்தாராய்.

அக்டோபர் 13 செவ்வாய்க்கிழமை

அபகாரநிந்தைப் பட்டுழலாதே

அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே

உனை நான் நினைந்தருட் பெறுவேனோ.

அக்டோபர் 14 புதன்கிழமை

அவமாயை கொண்டு உலகில் விருதா அலைந்து உழலும்

அடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய

அருள்ஞான இன்பமது புரிவாயே.

அக்டோபர் 15 வியாழக்கிழமை

பிணிபட்டு உணர்வற்று அவமுற்றியமற்

பெறுமக் குணமுற் றுயிர்மாளும்

பிறவிக்கடல் விட்டுயர் நற்கதியைப்

பெறுதற்கு அருளைத் தரவேணும்

kolu3

அக்டோபர் 16 வெள்ளிக்கிழமை

கமல விமல மரகதமணி

கனகமருவும் இருபாதங்

கருத அருளி எனது தனிமை

கழிய அறிவு தரவேணும்.

அக்டோபர் 17 சனிக்கிழமை

வானே காலே தீயே நீரே

பாரே பருக் குரியோனே

மாயா மானே கோனே மானார்

வாழ்வே கோழிக் கொடியோனே.

அக்டோபர் 18 ஞாயிற்றுக்கிழமை

நானே நீயாய் நீயே நானாய்

நானா வேதப் பொருளாலும்

நாடா வீடா யீடே றாதே

நாயேன் மாயக் கடவேனோ.

அக்டோபர் 19 திங்கட்கிழமை

ஓதம் பெறுகடல் மோதுந்திரையது

போலும் பிறவி  லுழலாதே

ஓதும் பல அடி யாருங் கதிபெற

யானுன் கழலினை பெறுவேனோ.

அக்டோபர் 20 செவ்வாய்க்கிழமை

ஆலத்தை ஞாலத்து ளோர்திக்கு வானத்த

ராவிக்கள் மாள்வித்து மடியாதே

ஆலித்து மூலத் டேயுட்கொ ளாதிக்கு

மாம்வித்தை யாமத்தை யருள்வோனே

original

அக்டோபர் 21 புதன்கிழமை

ஏறு தோகை மீதேறி யாலித் திடும்வீரா

ஏழு லோகம் வாழ்வான சேவற் கொடியோனே

சீறு சூரர் நீறாக மோதிப் பொரும்வேலா

தேவ தேவ தேவாதி தேவப் பெருமாளே.

அக்டோபர் 22 வியாழக்கிழமை

ஆடலழ கொக்க ஆடுமயி லெற்றி

ஆண்மையுயுட னிற்கு முருகோனே

ஆதியர ரனுக்கு வேதமொழி முற்றி

யார்வம்விளை வித்த அறிவோனே

அக்டோபர் 23 வெள்ளிக்கிழமை

செருக்கழியத் தெழித்துதிரத்

திரைக்கடலிற் சுழித்தலையிற்

றிளைத்த  அயிற் கரக்குமரப் பெருமாளே

அக்டோபர் 24 சனிக்கிழமை

வடகிரி தொளைபட அலைகடல் சுவறிட

மற்றுத் திக்கெனு மெட்டுத் திக்கிலும் வென்றிவாய

வலியுட னெதிர்பொரு மசுரர்கள் பொடிபட

மட்டித் திட்டுயர் கொக்கைக்குத்திம லைந்தவீரா

அக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை

பருகுத லரியது கந்த தீதிது

உளதென குறளிகள் தின்று மேதகு

பசிகெட வொருதனி வென்ற சேவக மயில்வீரா

Navaratri2

அக்டோபர் 26 திங்கட்கிழமை

மயிலு மியலறி புலமையு முபநிட

மதுர கவிதையும் விதரண கருணையும்

வடிவு மிளமையும் வளமையு மழகிய பெருமாளே

அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை

கால சங்கரி சீலா சீலித்ரி சூலிமந்த்ர சுபாஷா பாஷனி

காள் கண்டிக பாலீ மாலினி கலியாணி

காமதந்திர லீலா லோகினி வாமதந்திர நூலாய் வாள்சிவ

காமசுந்தரி வாழ்வே தேவர்கள் பெருமாளே

அக்டோபர் 28 புதன்கிழமை

ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம்  அமர்ந்த பெருமாளே

அக்டோபர் 29 வியாழக்கிழமை

முட்டா மற்றா ளைச்சே விப்பார் முற்பா வத்தைக் களிவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமளே

அக்டோபர் 30 வெள்ளிக்கிழமை

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய

வெற்றிசத் திக்கரக முருகோனே

வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல

விட்டபச் சைச்சரண மயில்வீரா

kolu1

அக்டோபர் 31 சனிக்கிழமை

நீலமே னிக்குலத் தோகைமே லுற்றுநிட்

டூரசூர் கெட்டுகப் பொரும்வேலா

நேசமாய் நித்தநிற் றாலைநீ ளச்சமற்

றோதநீ திப்பொருட் டரவேணும்

–Subham–

மரங்கள் பழுப்பது ஏன்? நதிகள் ஓடுவது ஏன்?

cherry bunch

செர்ரி பழம் படம்

Don’t Reblog it for at least a week; don’t use pictures.

 

Article written by London swaminathan

Date: 19th  September 2015

Post No: 2170

Time uploaded in London :– 7-05 am

(Thanks  for the pictures) 

உதவி – உபகாரம் பற்றிய பொன்மொழிகள்

(1).பரோபகாராய பலந்தி வ்ருக்ஷா:

பரோபகாராய வஹந்தி நத்யா:

பரோபகாராய துஹந்தி காவ:

பரோபகாரார்த்தம் இதம் சரீரம் – விக்ரம சரிதம்

பொருள்:–

மற்றவர்களுக்காகவே மரங்கள் பழுக்கின்றன

மற்றவர்களுக்காகவே நதிகள் ஓடுகின்றன

மற்றவர்களுக்காகவே பசுக்கள் பாலைப் பொழிகின்றன

மற்றவர்களுக்காகவே இந்த உடல் இருக்கிறது

(2).பரோபகாராய சதாம் விபூதய: – சமயோசித பத்ய மாலிகா

நல்லோருடைய செல்வம் பிறருக்காகவே உளது

(3).விபாதி காய: கருணாபராணாம் பரோபகாரைர்ன து சந்தனேன – பர்த்ருஹரி

ஒருவனுடைய உடல் ஒளிருவது சந்தனத்தால் அல்ல; பிறருக்கு உதவி செய்வதன் மூலமே.

(4).சர்வ பூத உபகாராச்ச கிம் அன்யத் சுக்ருதம் பரம் – கதாசரித் சாகரம்

எல்லா உயிர்களுக்கும் உதவி செய்வதைவிடப் புண்ணியமானது எது?

yellow plums

பிளம்ஸ் பழம் படம்

மனிதரில் முதன்மையானவன் யார்?

(5).ஸ்வார்த்தோ யஸ்ய பரார்த்த ஏவ ஸ ந்ருணாம் அக்ரணீ: – பர்த்ருஹரி

பிறர் நலனைத் தன்னலமாகக் கருதுபவனே மனிதரில் முதன்மையானவன்.

(6).அனபேக்ஷித: குணதோஷ: பரோபகார: சதாம் வ்யசனம் – மஹாபாரதம்

குற்றம், குறைகளைக் கருத்திற் கொள்ளாமல் நல்லோர் உதவி செய்வர்.

(7).அனுத்ததா: சத்புருஷா: சம்ருத்திபி: ஸ்வபாவ ஏவைஷ பரோபகாரிணாம் – சாகுந்தலம்/ பர்த்ருஹரி

வளமுள்ள, செழிப்பான காலங்களில் கூட நல்லோர் அடாவடித்தனம் செய்யமாட்டார்கள்; அவர்களுடையை  இயல்பே பிறருக்கு உதவுவதுதான்.

TWIN TREES

நிழழ் தரும் மரத்தின் படம்

வெய்யிலை வாங்கி நிழலைத் தருவது மரங்களின் குணம்!

(8).அனுபவதி ஹி மூர்த்னா பாதப: தீவ்ரமுஷ்ணம்

சமயதி ப்ரிதாபம் சாயயா சம்ஸ்ரிதானாம் – சாகுந்தலம்

மரங்கள் கடும் வெய்யிலைத் தலையில் தாங்கி, தன் கீழ் இருப்போருக்கு நிழலை மட்டும் தரும் (நல்லோரும் கடும் துயரங்களைச் சுமந்து பிறருக்கு உதவி செய்கிறார்கள்).

(9).அஷ்டதச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம்

பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்- பஞ்சதந்திரம்

பதினெட்டு புராணங்களிலும் வியாசர் சொல்வது இரண்டே வாக்கியங்கள்தான். 1) மற்றவர்களுக்கு உதவி செய்வது புண்ணியம் 2) மற்றவர்களுக்கு கெடுதல் செய்வது பாபம்.

(10).தனானி ஜீவிதம் சைவ பராத்தே ப்ராக்ஞ உத்ஸ்ருஜேத் – ஹிதோபதேசம்

அறிவாளிகள் தன்னுடைய பொருளையும், உயிரையும் பிறருக்காகவே செலவிட வேண்டும்.

(11).நஹி க்ருதம் உபகாரம் சாதவோ விஸ்மரந்தி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

செய்த உதவியை நல்லோர் மறப்பதில்லை.

managai

மா மரத்தின் படம்

சந்தன மரத்தில் குளிர்ச்சி இருப்பது யாருக்காக?

(12).ந ஹி ஸ்வதேஹசைத்யாய ஜாயந்தே சந்தன த்ருமா: -(சு.ர.பா)

சந்தன மரம் “தன்னுடைய” குளிர்ச்சிக்காக வளருவதில்லை

(13).பரம் பரோபகாரத்தம் யோ ஜீவதி ச ஜீவதி — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

பிறருக்காக வாழ்பவனே வாழ்பவன்.

They alone live who live for others; the rest are more dead than alive – Swami Vivekananda

sandalwood

சந்தன மரம் படம்

-சுபம்–

மௌனம், மானம், கர்வம் பற்றிய சம்ஸ்கிருத, தமிழ் பழமொழிகள்

bharati drawing

செப்டம்பர், 2015 காலண்டர்

(மன்மத வருடம் ஆவணி/புரட்டாசி மாதம்)

Compiled by London swaminathan

Date : 31 ஆகஸ்ட்  2015

Post No. 2110

Time uploaded in London : 11-49 am

Swami_48@yahoo.com

Important days:-

செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்; ஜன்மாஷ்டமி (கிருஷ்ண ஜயந்தி); செப்டம்பர் 11-பாரதியார் நினைவு தினம்; 17-விநாயக சதுர்த்தி;24-பக்ரீத்; 29-மகாளயபட்சம் ஆரம்பம்.

 

முஹூர்த்த தினங்கள்:– 9,16, 17,

பௌர்ணமி:– 27/28 அமாவாசை:–12; ஏகாதசி :– 8/9, 24

 

silence

இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஆங்கிலத்திலும், தமிழிலும் தனித்தனியே பொன்மொழிகளுடன் காலண்டர்கள் உள்ளன. இவைகளில் இந்திய இலக்கியங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான மேற்கோள்கள் உள்ளன. படித்துப் பயன்பெறுக.

செப்டம்பர் 1, செவ்வாய்க் கிழமை

பலம் மூர்கஸ்ய மௌனித்வம்

மௌனமாய் இருப்பதே முட்டளுக்கு பலம்.

செப்டம்பர் 2, புதன் கிழமை

தர்துரா யத்ர வக்தாரஸ் தத்ரம் மௌனம் ஹி சோபனம் – சுபாஷித ரத்னகண்ட மஞ்சுசா

தவளைகள் எங்கு பேச்சாளர்களோ, அங்கு பேசாமலிருப்பதே நலம்தரும்

செப்டம்பர் 3, வியாழக் கிழமை

மௌனம் கூஹதி மௌட்யம் சதஸி

சபையில் மவுனமாய் இருப்பது முட்டாள்களுக்குக் கேடயம் போலாகும்

செப்டம்பர் 4, வெள்ளிக் கிழமை

மௌனம் விதேயம் சததம் சுதீபி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம் (சு.ர.பா)

புத்திமான்களால் எப்போதும் மௌனம் காக்கப்படும் (புத்திசாலிகள் அதிகம் பேசாமலிருப்பர்)

செப்டம்பர் 5, சனிக்கிழமை

மௌனம் சம்மதி லக்ஷணம்

மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி

silence image

செப்டம்பர் 6, ஞாயிற்றுக் கிழமை

மௌனம் சர்வார்த்த சாதகம் – பஞ்சதந்திரம் 4-45

பேசாமலிருந்தால் பல காரியங்களும் அனுகூலமாக முடியும்.

செப்டம்பர் 7, திங்கட் கிழமை

மௌனே ச கலஹோ நாஸ்தி – சாணக்ய நீதி 3-9

மௌனம் இருக்குமிடத்தில் கலகம் விளையாது.

செப்டம்பர் 8, செவ்வாய்க் கிழமை

வரம் மௌனம் கார்யம் ந ச வசனம் உக்தம் யதன்ருதம்– சு.ர.பா.

பொய் சொல்வதைவிட பேசாமலிருந்து சாதிப்பதே சிறந்தது.

செப்டம்பர் 9, புதன் கிழமை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல் – குறள் 291

ந ப்ரூயாத் சத்யம் அப்ரியம் – மனு 4-138

உண்மையேயானாலும் மற்றவர்களுக்கு தீங்கு செய்யுமானால் பேசாமலிரு.

செப்டம்பர் 10, வியாழக் கிழமை

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டுபவர் – குறள் 962

புகழை விரும்புவோர், பெரிய செல்வமே கிடைப்பதானாலும் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.

silence draw

செப்டம்பர் 11, வெள்ளிக் கிழமை

சத்யம் யத் பரதுக்காய தத்ர மௌனபரோ பவேத்- விஷ்ணு புராணம் 3-12-43

உண்மை சொல்வதால் கெடுதல் வருமானால் பேசாமலிருப்பதே உத்தமம்.

செப்டம்பர் 12, சனிக்கிழமை

வாக் ஜன்ம  வைபல்யம் அசக்யசல்யம் குணாதிகே வஸ்துனி மௌனிதா சேத்  – நைஷதீய காவ்யம்

நல்லோர் முன்னிலையில் ஒன்றும் பேசாமலிருப்பது பொறுத்துக் கொள்ளமுடியாதது. (பேஸ் புக்கில் நல்ல விஷயங்களுக்கும் ‘லைக்’ போடாமல் கல்லுளி மங்கனாக இருப்பது போல)

செப்டம்பர் 13, ஞாயிற்றுக் கிழமை

விபூஷணம் மௌனம் அபண்டிதானாம் – பர்த்ருஹரி

மௌனமாக இருப்பது பண்டிதரில்லாதோருக்கு அணிகலன்.

செப்டம்பர் 14, திங்கட் கிழமை

அனுத்தரம் ஏவ உத்தரம் – ரத்ன சமுச்சய

பதில் சொல்லாவிடில் அதுவே ஒரு பதில்தான்

செப்டம்பர் 15, செவ்வய்க் கிழமை

துர்ஜனஸ்ய ஔஷதம் நாஸ்திகிஞ்சித் அனுத்தராத் – சுபாஷிதாவளி

தீயோருக்கு எதிரான மருந்து என்னவென்றால், எதிர்வார்த்தை (பதில்) பேசாலிருப்பதுதான்.

day_of_silence_2012_by_eveefugo-d4x36x8

செப்டம்பர் 16, புதன் கிழமை

அகாத ஜலசஞ்சாரி ந கர்வம் யாதி ரோஹித:

அங்குஷ்டமாத்ர தோய அபி சபரி பரபராயதே –பஞ்சதந்திரம்

ஆழ்கடலில் செல்லும் பிராணிகள் கர்வம் அடைவதில்லை; விரல் அளவு தண்ணீரில் செல்லும் மீன்கள் பரபரக்கச் செல்லும் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 17, வியாழக் கிழமை

அபிபூதி பூயாத் அசூனத: சுகமுஞ்சந்தி ந தாம மானின: – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்கள், அவமானம் உண்டாகும் என்பதற்காக உயிரையும் விடுவர்; மானத்தை என்றும் கைவிடார்.

செப்டம்பர் 18, வெள்ளிக் கிழமை

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின்,உலகுடன் பெறினும் கொள்ளலர் – புறம் 182

செப்டம்பர் 19, சனிக்கிழமை

அல்பவித்யா மஹாகர்வீ – சு.ர.பா.

கொஞ்சம் படித்தவர்கள் ‘படம்’ காட்டுவர் (குறைகுடம் கூத்தாடும்)

செப்டம்பர் 20, ஞாயிற்றுக் கிழமை

உத்தமா மானம் இச்சந்தி மானம் ஹி மஹதாம் தனம் – சாணக்யநீதி

நல்லோர் விரும்புவது மானம்; அவர்களுக்கு அதுவே பெரிய செல்வம்.

learn silence

செப்டம்பர் 21, திங்கட் கிழமை

நான்யஸ்ய கந்தமபி மானப்ருத: மஹந்தே- சிசுபாலவதம்

பிறருடைய கர்வத்தை மானமுள்ளவர்கள் பொறுக்கமட்டார்கள்.

செப்டம்பர் 22, செவ்வாய்க் கிழமை

ந அஹங்காராத் சத்ரு:

நான் என்னும் செருக்கைவிட பெரிய எதிரி இல்லை.

செப்டம்பர் 23, புதன் கிழமை

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள்- 963

செல்வமுள்ளபோது பணிவும், வறியநிலையில் உயர்ந்த கொள்கைப் பற்றும் வேண்டும்.

செப்டம்பர் 24, வியாழக் கிழமை

ப்ராணத்யாகே க்ஷணம் துக்கம், மானபங்கே தினே தினே – சாணக்யநீதி

உயிரைவிட்டால் ஒரு நாள்தான் துக்கம்; அவமானத்துடன் வாழ்வதோ நாள்தோறும் துக்கம்.

silence (1)

செப்டம்பர் 25, வெள்ளிக் கிழமை

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் – குறள்- 969

ஒரு முடியை இழந்தாலும் கவரிமா உயிரிழக்கும். பெரியோர்கள், மானம் அழிந்தால் உயிர்துறப்பர்.

செப்டம்பர் 26, சனிக்கிழமை

வரம் ஹி மானினோ ம்ருத்யுர்ன தைன்யம் ஸ்வஜ்னாக்ரத: – கதாசரித்சாகரம்

தன் மக்களுக்கு முன்பு அவமானம் அடைவதைவிட, மானமுள்ளவர்களுக்கு மரணமே மேல்.

செப்டம்பர் 27, ஞாயிற்றுக் கிழமை

பராபவோ அப்யுத்சவ ஏவ மானினாம் – கிராதார்ஜுனீயம்

மானமுள்ளவர்களுக்கு தோல்விகூட உற்சாகமே தரும்.

செப்டம்பர் 28, திங்கட் கிழமை

சதாபிமான ஏகதனா ஹி மானின: – சிசுபாலவதம்

மானமுள்ளவர்களுக்கு அது ஒன்றே எப்போதுமுள்ள சொத்து (செல்வம்).

செப்டம்பர் 29, செவ்வாய்க் கிழமை

தலையின் இழிந்த மயிர் அனையர் மந்தர்

நிலையின் இழிந்த கடை – குறள்- 96964

மானம் போனால், கீழே விழுந்து கிடக்கும் மயிருக்குச் சமம்.

செப்டம்பர் 30, புதன் கிழமை

அதிதர்பே ஹதா லங்கா – மிகுந்த அஹங்காரத்தால் (ராவணனின்) இலங்கை அழிந்தது.

-subham-

புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர்

bahavat_cropped

Research Article No. 2087

Written by London swaminathan
Date : 20 August  2015
Time uploaded in London :– 19-14

புகழ் (கீர்த்தி), அபகீர்த்தி (இகழ்ச்சி) பற்றிய தமிழ், சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

(( இசை= யசஸ் = புகழ்; சம்ஸ்கிருதச் சொல் யசஸ் என்பதும் தமிழ்ச் சொல் இசை என்பதும் ஒரே மூலத்தில் இருந்து பிறந்த சொற்கள்))

(1).இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசை நடுக – நன்னெறி

பொருள்: இந்த பூமியில் உங்கள் பெயர் எப்பொழுதும் இருக்க வேண்டுமானால் புகழை நிலை நிறுத்துக.

(2).உத்திஷ்ட ! யசோ லப: (பகவத் கீதை 11-33)

எழுந்திரு! புகழ் அடை!

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

(3).புகழ் எனின், உயிரும் கொடுக்குவர், பழி எனின், உலகுடன் பெறினும், கொள்ளலர் (புறநானூறு 182)

(4).சம்பாவிதஸ்ய ச கீர்த்திர் மரணாத் அதிரிச்யதே– பகவத்கீதை 2-34

மரணத்தை விடக் கொடியது அவப்பெயர்

(5).புகழ்பட வாழாதார் தம் நோவார் (குறள் 237)

thirukkural1

(6).அனன்யகாமினீ பும்சாம் கீர்த்திரேகா பதிவ்ரதா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பிற ஆண்களிடத்தில் போகாதவளே பதிவ்ரதை என்னும் புகழுடையாள் (அதாவது பிறர் உதவியை நாடாதவனே புகழுடையவன்)

(7).கீர்த்திர்யஸ்ய ச ஜீவதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

புகழ் உடையவனே உயிர் வாழ்பவன் (மற்றவர்கள் இருந்தும் இறந்ததற்குச் சமம்)

(8).கீர்த்திர் த்யாகாத் அனுஸாரிணீ

புகழ் என்பது தியாகத்தைத் தொடர்ந்து செல்லும் (அதாவது, தியாகம் செய்பவனே புகழ் பெறுவான்)

(9).இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே  —(புறநானூறு 182)

இமயத்தின் சிகரம் போல புகழ் பெறுக!

புரம்

(10).க்ஷிதிதலே கிம் ஜன்ம கீர்த்திம் வினா – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

பூமண்டலத்தில் புகழ் இல்லாமல் வாழ்வது ஒரு வாழ்வா?

(11).இசையில் பெரியதோர் எச்சமில்லை – முதுமொழிக் காஞ்சி

பொருள்:-புகழைவிடப் பெரியதொரு செல்வம் (எச்சம்) இல்லை

(12).வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்

எச்சம் பெறாஅ விடின் (குறள் 238)

(எச்சம் = செல்வம்; இசை=யசஸ்)

(13).ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி, யஸ்ய நாம மஹத் யச: – யஜூர் வேதம்

எவனுக்கு பெரும் புகழ் இருக்கிறதோ அவனுக்கு ஒப்புவமை இல்லை

KSS

(14).ஸ்திரம் து மஹதாம் ஏகம் ஆகல்பம் அமலாம் யச: – கதா சரித் சாகரம்

கல்ப கோடி காலத்துக்குப் பெரியோரின் மாசு மருவற்ற புகழ் நீடிக்கும் (பூத உடல் மறைந்தாலும் புகழ் உடம்பு அழியாது)

(15).ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்

பொன்றாது நிற்பது ஒன்று இல் (குறள் 233)

இனி, அபகீர்த்தி பற்றிய மேற்கோள்கள்:– (இதை வள்ளுவர் மானம் என்னும் அதிகாரத்தில் 10 குறள்களாகத் தந்துள்ளார்)

 

(16).அபயசோ யத்யஸ்தி கிம் ம்ருத்யுனா

கெட்ட பெயர் ஏற்பட்ட பின் மரணம் என்ன செய்யும்? (மரணத்தை விடக் கொடிது கெட்ட பெயர்)

(17).மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்

உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் 969)

(18).அபவாத ஏவ சுலபோ வக்துர்குணோ தூரத:

பேச்சாளன் கெட்ட பெயர் எடுப்பது சுலபம்; நல்ல பெயர் எடுப்பதோ அரிது.(அரசியல்வாதிகளுக்குப் பொருத்தமான அறிவுரை)

(19).அயசோ பீரவ: கிம் ந குருதே பத ஸாதவ: — கதா சரித் சாகரம்

இகழ்ச்சிக்குப் பயந்து நல்லோர் என்னதான் செய்யமாட்டார்கள்?

(20).ஸஹதே விரஹ க்லேசம் யசஸ்வீ நாயஸ: புன: — கதா சரித் சாகரம்

எதைப் பிரிந்தாலும் புகழுடையோன் தாங்கிக் கொள்வான்; ஆனால் இகழ்ச்சியைத் தாங்க மாட்டான்

(21).வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய வாழ்வாரே வாழாதவர் – குறள் 240

cover-subhashita-ratna-bhandagara

என்னுடைய பழைய கட்டுரைகள்:

யானை பற்றிய நூறு பழமொழிகள், ஜூன் 5, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – Part 1, ஜூன் 22, 2012

இந்துமதம் பற்றிய 200 பழமொழிகள் – பகுதி 2, ஜூன் 22, 2012

இராமன் பற்றிய பழமொழிகள் ஏப்ரல் 10, 2014

இருபதாயிரம் தமிழ் பழமொழிகள், மே 31, 2012,

பெண்கள் பற்றிய 300 பழமொழிகள் (பகுதி 1,2,3) ஜூன் 26, 2012 & ஜூன் 28, 2012
பாரதி பாட்டில் பழமொழிகள், ஜூன் 25, 2012
அப்பர் தேவாரத்தில் பழமொழிகள் (இது மட்டும் எஸ்.நாகராஜன் எழுதியது) ஜூன் 26, 2012
ஒன்றுக்கும் உதவாத உதிய மரமே
உடம்பைக் கடம்பால் அடி

மேலும் 33 இந்துமதப் பழமொழிகள் ,ஜூலை 21, 2015

ஆரோக்கியம் தொடர்பான பழமொழிகள், 25 பிப்ரவரி 2015
20,000 Tamil Proverbs (English article)

Tamil – English Proverb Book (108 தமிழ்-ஆங்கிலப் பழமொழிகள்), posted 17 August 2015

ஆடுற மாட்டை ஆடிக்கறக்கனும், பாடுற மாட்டைப் பாடிக்கறக்கனும், 2 ஆகஸ்ட் 2015கல்விக்கு அழகு கசடற மொழிதல் (சொல்வன்மை பற்றிய 30 பழமொழிகள்), 12 ஆகஸ்ட் ,2015

 

Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

உண்மை, வாய்மை, மெய்மை (சத்யம்) பற்றிய பொன்மொழிகள்

National-Emblem

Article No. 2049

Written by London swaminathan

Swami_48@yahoo.com

Date : 7  August  2015

Time uploaded in London : – 10-17

 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகுவது உண்மை

சொல்லால் பொய்யாது ஒழுகுவது வாய்மை

உடலால் பொய்யாது ஒழுகுவது மெய்மை!

தமிழர்களைப் போல இவ்வளவு தெளிவாக மனம், மொழி, மெய் ஆகியவற்றின் தூய்மையை விளக்கியவர் எவருளர்?

 

காயேன, வாசா, மனஸேந்த்ரியைர்வா என்று சொல்வதை – த்ரிகரண சுத்தியை – மிக அழகாக விளக்கிவிட்டனர் தமிழர்கள்!

 

இனி சம்ஸ்கிருத, தமிழ் பொன் மொழிகலைக் காண்போம்:

 

அஸ்வமேத சஹஸ்ராத் ஹி சத்யமேவ விசிஷ்யதே – மஹாபாரதம் & ஹிதோபதேசம்

ஆயிரம் அஸ்வமேத யாகங்களை விட சத்யமே சிறந்தது. (உண்மையைக் கடைப் பிடிப்பவன், 1000 யாகங்களைச் செய்வதால் கிடைப்பதைவிடக் கூடுதல் பலன் பெறுவான்)

Xxx

வாய்மை எனப்படுவது — தீமை இலாத சொலல்: குறள் 291

Xxx

உண்மை பேசுவோருக்கு வேறு அறம் தேவைப்பாடாது – குறள் 297

xxx

அசத்யம் ஜன ரஞ்சனம்

பொய் பேசுவது ஜனரஞ்சகம் ஆக இருக்கும் (இறுதியில் கெடுதியை விளைவிக்கும்)

Xxx

பொய்மையும் வாய்மை ………. நன்மை பயக்கும் எனின் –குறள் 292

xxx

நாஸ்தி சத்யாத் பரம் தானம், நாஸ்தி சத்யாத் பரம் தப:  – மஹாபாரதம்

உண்மையை விட உயர்ந்த தானம் இல்லை; உண்மையை விட உயர்ந்த தவம் இல்லை

Xxx

vaymaiyee

தன் நெஞ்சறிவது பொய்யற்க – குறள் 293

xxx

 

நாஸ்தி சத்யாத் பரோ தர்மோ நான்ருதாத் பாதகம் பரம் – மனுஸ்ம்ருதி, மஹாபாரதம்

உண்மையை விட பெரிய தவம் இல்ல; பொய்யைவிட பெரிய பாதகம் (தீங்கு) இல்லை

Xxx

வாய்மை மொழியின் தவத்தொடு தானம் செய்வாரின் தலை – குறள் 295

xxx

 

சச்சாசச்ச வசஸீ பஸ்ப்ருதாதே –அதர்வ வேதம்

உண்மையும் பொய்யும் போட்டி போடும் வசனங்கள்

(அதாவது தர்ம – அதர்மப் போராட்டம் காலாகாலமாக நடைபெறும்)

 

Xxx

சத்யம் கண்டஸ்ய பூஷணம் – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

கழுத்திற்கு அணிகலன் உண்மை விளம்பல்!

Xxx

 

சத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயான்ன ப்ரூயாத்சத்யமப்ரியம்

ப்ரிய ச நான்ருதம் ப்ரூயாதேஷ தர்ம சநாதன: — மனுஸ்ம்ருதி

 

உண்மையே பேசு

இனிமையே பேசு

இனிமையற்றதை, உண்மையே ஆனாலும், சொல்லாதே

அதற்காக இனியது என்று கருதி பொய் பேசாதே

இதுவே எக்காலத்துக்கும் பொருந்தும் சநாதன தர்மம் (இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடு) – மனுஸ்மிருதி

 satya b w

Xxx

உலகத்தார் உள்ளத்துள் எலாம் உளன் – உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் — குறள் 294

xxx

 

சத்யம் வை சக்ஷு:, சத்யம் ஹி ப்ரஜாபதி: — சதபத ப்ராஹ்மணம்

உண்மையே கண்கள், உண்மையே தோற்றுவாய்

 

Xxx

சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு — குறள் 299

Xxx

சத்யமேவ ஜயதே நான்ருதம், சத்யேன பந்தா விததோ தேவயான: — முண்டகோபநிஷத்

 

வாய்மையே வெல்லும், பொய்மை வெல்லாது. உண்மையே சொர்கத்தை அடைவதற்கான பாதை, திறவுகோல் (இது தான் இந்திய அரசு, தமிழ் நாடு அரசு சின்னங்களில் உள்ள வாசகம்)

Xxx

 

புறந்தூய்மை நீரான் அமையும், அகந்தூய்மை வாய்மையால் காணப்படும் — குறள் 298

xxx

 satya1

சத்யம் ஸ்வர்கஸ்ய சோபானம் – மஹாபாரதம்

உண்மையே சுவர்கத்தின் மாடிப்படிகள்

 

Xxx

சத்யஸ்ய நாவ: சுக்ருதம் அபீ பரன் – ரிக் வேதம்

உண்மையெனும் படகுகள் நல்லோரைக் கரை சேர்க்கும்

Xxx

 

பொய்யாமை அன்ன புகழில்லை — குறள் 296

Xxx

 

சத்யான்ன ப்ரமதிதவ்யம் – தைத்ரியோபநிஷத்

உண்மை பேசுவதை ஒரு போதும் அலட்சியம் செய்யாதே

Xxx

சத்யேன தார்யதே ப்ருத்வீ , சத்யேன பபதே ரவி: — மனுஸ்ம்ருதி, சாணக்ய நீதி

இந்த பூமியே உண்மையினால்தான் நிலைபெற்று நிற்கிறது, இந்த சூரியன் உண்மையின் அடிப்படையிலேயே ஒளிருகிறது

 

Xxx

சத்யேன உத்தபிதா பூமி: —  ருக் வேதம், அதர்வ வேதம்

உண்மைதான் பூமியைத் தாங்கி நிற்கிறது.

 satya2

Xxx

ஹிரண்மயேன பாத்ரேன சத்யஸ்யாபிஹிதம் முகம் – ஈஸாவாஸ்யோபநிஷத்

பொன்மயமான பாத்திரத்தினால் உண்மையின் முகம் மூடப்பட்டுள்ளது.

Xxx

வாய்மையை விடச் சிறந்த தர்மம் எனக்குத் தெரியாது – குறள் 300

 

–சுபம்–

 

கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.

கீதை, வேதம் பற்றிய பழமொழிகள்

சாந்தம்

Compiled by London swaminathan

Article No.1927

Date :12th June 2015

Time uploaded in London: 9-25 am

கீதா கங்கோதகம் பீத்வா புனர்ஜன்ம ந வித்யதே

பகவத் கீதையையும், கங்கை நீரையும் அருந்தியவருக்கு மறு பிறப்பு என்பதே இல்லை

கீதா சுகீதா கர்தவ்யா கிமந்யை: சாஸ்த்ர விஸ்தரை:

கீதையை நன்றாகப் படிக்க வேண்டும். மற்ற சாஸ்திரங்களால் என்ன பயன்? – மஹாபாரதம்

ஒப்பிடுக:

பகவத் கீதா கிஞ்சித் அதீதா

கங்கா ஜல லவ கணிகா பீதா

சத்க்ருதபி யேன முராரி சமர்ச்சா

க்ரியதே தஸ்ய யமேன ந சர்ச்சா – பஜகோவிந்தம்,20

பொருள்:கீதையைக் கொஞ்சமேனும் படித்தவர்களுக்கு, கங்கை ஜலத்தை ஒரு துளியாவது பருகியவருக்கு முரஹரியை (கண்ணன்) ஒரு முறையாவது வனங்கியவருக்கு யமனுடன் சண்டை போட வேண்டியது வராது (பீஷ்மர் போல நீங்கள் நினைத்த நேரத்தில் அமைதியாக, ஆனந்தமாக, சுற்றம் புடைசூழ நிற்க, உயிர் துறக்கலாம்)

இதிஹாச புராணாப்யாம் வேதம் சம உப ப்ரும்மயேத் – மஹாபாரதம்

வேத மந்திரங்களை இதிஹாச புராணங்கள் வாயிலாக விளங்கிக் கொள்ள வேண்டும்

ருஷயோ மந்த்ர த்ருஷ்டார:

ரிஷிகள் மந்திரத்தைக் கண்டவர்கள் (இயற்றியவர்கள் அல்ல; ஐன்ஸ்டைன், நியூட்டன் சொன்ன விதிகள் போல அவை முன்னமே உள்ளன; என்றும் இருப்பன)

சின்ன பையன்கள்

வேதோகில தர்மமூலம் (மனு 2-6)

எல்லா  தர்மங்களுக்கும் வேதங்களே வேர் போன்றவை

பாரதே பாது பாரதி

பாரத தேசத்தில் பாரதி (சம்ஸ்கிருதம்) பிரகாசிக்கட்டும் (வாழ்க சம்ஸ்கிருதம் என்று பொருள்)

வேதானாம் சாமவேதோஸ்மி – பகவத் கீதை

வேதங்களில் நான் சாம வேதமாக இருக்கிறேன்

ஸ்ரவணசுகசீமா ஹரிகதா – ப்ரசங்காபரணம்

கேட்பதில் கிடைக்கும் சுகங்களில் உயர்ந்தது ஹரிகதை கேட்கும் சுகமாகும்.

ஸ்ருதிர்விபன்னா ச்ம்ருதயஸ்ச பின்னா: – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வேதங்கள் வேறு; ஸ்மிருதிகள் வேறு (வேதங்கள் சொல்வதை திருத்தவே முடியாது. ஸ்மிருதிகளை பெரியோர்கள் ஒவ்வொரு காலத்திலும் திருத்துவர் அல்லது புதிதாக எழுதுவர்)

ஸம்ஸ்க்ருதி: ஸம்ஸ்க்ருதாஸ்ரிதா

பண்பாடு, சம்ஸ்கிருதத்தை அண்டி வாழ்கிறது.

சர்வஞானமயோ ஹி ச:

வேத இலக்கியமே அனைத்து அறிவும் அடங்கிய களஞ்சியம்.

சர்வம் வேதாத் ப்ரசித்யதி

வேதத்திலிருந்தே எல்லாம் கிடைக்கிறது

சர்வத சம்ஸ்க்ருதீ பூய சுகின: சர்வ சந்து சர்வதச

எல்லாவிதத்திலும் பண்பட்டு எப்போதும் சௌக்கியமாக வாழுங்கள்!

ஸ்துதா மயா வரதா வேத மாதா – அதர்வ வேதம்

வரங்களை அளிக்கும்  வேத மாதா என்னால் தொழப்பட்டாள்.

Pictures are from Face book friends; probably from Art of Living Centre.

–SUBHAM-

காலம் என்னும் அற்புதம் பற்றி முப்பது பொன் மொழிகள்!

clock

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – மன்மத வருடம்- சித்திரை (April 2015)

இந்த பிளாக்—கில் இதுவரை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆயிரத்துக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத பொன் மொழிகள் வெளியிடப் பட்டுள்ளன! படித்துப் பயன் பெறுக!!

Compiled by London Swaminathan

Article No.1758;  Dated 30 March 2015.

Uploaded at London time 9-45 (GMT 8-45)

 

முக்கிய நாட்கள்/ விழாக்கள்:– ஏப்ரல் 2- மஹாவீர் ஜயந்தி,

புனித வெள்ளி, ஈஸ்டர் ஞாயிறு, ஈஸ்டர் திங்கள் – ஏப்ரல் 3, 5, 6;

விஷு, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14; அக்ஷய திரிதியை- 21, மதுரை மீனாட்சி திருக் கல்யாணம்- ஏப்ரல் 30.

 

ஏகாதசி  : 15 ,  29/30; அமாவாசை-18; பவுர்ணமி (சந்திர கிரஹணம்)- ஏப்ரல் 4.

முகூர்த்த நாட்கள்:– 1, 3,6,8,10,15, 22

 

 end-of-time

 

1 புதன் கிழமை

காலோ ஹி துரதிக்ரம:

காலத்தை வெல்ல முடியாது –ராமாயணம்

2 வியாழக் கிழமை

காலே தத்தம் வரம் ஹ்யால்பம காலே பஹுணாபி கிம் – கதாசரித்சாகர:

சரியான காலத்தில் உதவி குறைந்தாலும் சிறந்ததே. தேவை இல்லாத காலத்தில் கூடக் கிடைத்தாலும் என்ன பயன்?

 

3 வெள்ளிக் கிழமை

கால சுப்தேசு ஜாகர்தி – சாணக்ய நீதி தர்பண:

நாம் தூங்கிக்கொண்டிருந்தாலும் காலம் விழித்துக் கொண்டிருக்கிறது

4 சனிக் கிழமை

க: கம் சக்தோ ரக்ஷிதும் ம்ருத்யு காலே  ரஜ்ஜுச் சேதே கே கடம் தாரயந்தி  – ஸ்வப்ன வாசவ தத்தா

மரண காலம் வந்துவிட்டால் யார் யாரைக் காப்பாற்ற முடியும்? நைந்து போன கயிற்றில் தொங்கும் (கிணற்றுப்) பானையை யார் (விழாமல்) பிடிக்க முடியும்?

 

5 ஞாயிற்றுக் கிழமை

அபி தன்வந்தரீ வைத்ய: கிம் கரோதி கதாயுஷி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

வயது போனபின்பு தன்வந்த்ரியே வந்து வைத்தியம் செய்தாலும் பயன் என்ன?

 

The_Value_of_Time

6 திங்கட் கிழமை

ஆயுர்யாதி க்ஷணே க்ஷணே

ஒவ்வொரு வினாடியும் ஆயுள் கழிந்து கொண்டே இருக்கிறது!

 

7 செவ்வாய்க் கிழமை

காலக் கலயதாம் அஹம் –

எண்ணக்கூடிய விஷயங்களில் நான் காலமாக இருக்கிறேன்; அஹம் ஏவ அக்ஷய காலோ— அழிவில்லாத/முடிவில்லாத காலம் நானே!–பகவத் கீதை

 

8 புதன் கிழமை

அந்ததோ அஸ்மாபி ஜீர்யதி

பாறையானாலும் இறுதியில் அழிந்து போகும் (மண் ஆகிவிடும்) – சம்ஸ்கிருத பொன்மொழி

9 வியாழக் கிழமை

அகாலேதுர்லபோ ம்ருத்யு:, ஸ்த்ரியா வா புருஷச்ய வா—- ராமாயணம்

ஆண் ஆகட்டும் பெண் ஆகட்டும்—மரணம் என்பது அகாலத்தில் ஏற்படுவது அரிது.

 

10 வெள்ளிக் கிழமை

ஆயுஷ: க்ஷண ஏகோபி சர்வரத்னைர் ந லப்யதே

நீயதே தத்வ்ருதா யேன ப்ரபாத: சுமஹானஹோ – யோகவாசிஷ்டம்

எல்லா ரத்னங்களையும் கொடுத்தாலும் ஒரு வினாடி ஆயுளைக் கூட விலைக்கு வாங்க இயலாது. அதை வீணாக்குவது எப்பேற்பட்ட மடமை!

time

11 சனிக் கிழமை

ஞாலம் கருதினும் கைகூடும் — காலம் கருதி இடத்தாற் செயின் – திருக்குறள் 484

சமயே ஹி சர்வம் உபகாரி க்ருதம் – சிசுபாலவதம்

சமயம் அறிந்து செய்வது பலன் தரும்.

12 ஞாயிற்றுக் கிழமை

க: காலஸ்ய ந கோசராந்தரகத:  — பர்த்ருஹரி

காலத்தின் பிடியில் சிக்காதவன் யார்?

 

13 திங்கட் கிழமை

கால க்ரீடதி கச்சத்யாயு: – சங்கரரின் மோஹமுத்கரம்

காலம் விளையாடுகிறது. ஆயுள் போய்க்கொண்டிருக்கிறது

 

14 செவ்வாய்க் கிழமை

காலஸ்ய குடிலா கதி: — சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

காலத்தினுடைய போக்கு புரிந்துகொள்ள முடியாதது.

 

15 புதன் கிழமை

காலோ ந யாதோ வயமேவ யாதா; :  — பர்த்ருஹரி

காலம் செல்லவில்லை; நாம்தான் சென்று கொண்டிருக்கிறோம் (நம் ஆயுள் ஒவ்வொரு நிமிடமும் சென்று கொண்டிருக்கிறது)

clock big

16 வியாழக் கிழமை

கத: காலோ ந சாயாதி

கடந்த காலம் திரும்பிவாராது

 

17 வெள்ளிக் கிழமை

கதஸ்ய சோசனம் நாஸ்தி– சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

சென்றது இனி மீளாது மூடரே! நீர் எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து குமையாதீர் (பாரதி)

18 சனிக் கிழமை

கதே ஸோகோ ந கர்தவ்யோ பவிஷ்யன்னைவ  சிந்தயேத் – சாணக்ய நீதி

சென்றதனைக் குறித்தல் வேண்டாம்; எதிர்காலத்தை எண்ண வேண்டாம் (நிகழ்காலத்தை பயனளிக்கும் வகையில் செலவிடு))

19 ஞாயிற்றுக் கிழமை

ந ஸ்வ: ஸ்வ: உபாசித் கோ ஹி மனுஷ்யஸ்ய ஸ்வோ வேத:– சதபத பிராமணம்

நாளை நாளை எண்ணாதே! நாளை வீணில் போக்காதே! நாளை நம்முடைய முறையோ; நமனுடைய முறையோ; யார் அறிவார்?

 

20 திங்கட் கிழமை

நீசைர் கச்சத்யுபரி ச தசா  சக்ர்நேமி  க்ரமேன – மேகதுதம்

வண்டிச் சக்கரம் போன்றதே வாழ்க்கைச் சக்கரம்; மேலும் கீழும் போய்வரும்.

foot steps

21 செவ்வாய்க் கிழமை

பவந்த்யுதய காலே ஹி சத் கல்யாண பரம்பரா: — கதா சரித் சாகரம்

நல்ல காலம் வந்து விட்டால் மங்கள விஷயங்கள் தொடர்ந்து வரும் (தை பிறந்தால் வழி பிறக்கும்)

 

22 புதன் கிழமை

விநாச காலே விபரீத புத்தி: — சாணக்ய நீதி தர்ப்பண:

கெட்ட காலத்தில் புத்தி பேதலிக்கும்.

23 வியாழக் கிழமை

சமய ஏவ கரோதி பலாபலம் – சிசுபாலவதம்

காலமே ஒருவனை பலவானாகவும் பலவீனனாகவும் ஆக்குகிறது

 

24 வெள்ளிக் கிழமை

கொக்கொக்க கூம்பும் பருவத்து (குறள் 490) ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவு வாடி இருக்குமாம் கொக்கு (வாக்குண்டாம்-அவ்வையார்)

உரிய காலம் வரும் வரை கொக்கு போல காத்திரு!

25 சனிக் கிழமை

ஹா ஹந்த சம்ப்ரமதி கதானி தினானி தானி

அடடா! இதோ இந்த நொடி (இப்பொழுது) சென்று விட்டதே!!!

(ஒவ்வொரு வினாடியும் வங்கியில் சேமித்த நம் வாழ்நாள் கழிந்து கொண்டே இருக்கிறது. இதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது)

 

time handy

26 ஞாயிற்றுக் கிழமை

கால கரோதி கார்யாணி கால ஏவ நிஹந்தி ச

காலமே எல்லா காரியங்களையும் முடிக்கிறது.

27 திங்கட் கிழமை

க்ருத ப்ரயத்னோபி  க்ருஹே ந ஜீவதி

என்ன முயன்றாலும் வீட்டில் வாழமுடியாது (இறுதி நேரம் வந்துவிட்டால்)

28 செவ்வாய்க் கிழமை

காலோ ஹி பலவத்தர:

காலம் என்பது வலிமையானது

29 புதன் கிழமை

கதம் கதம் நைவ து சந்நிவர்ததே

போனது போனதுதான்; திரும்பிவாராது.

30 வியாழக் கிழமை

நஹி ஸ்வமாயுசிசகிதேசகிதே ஜனேஷு

மனிதர்களில் தன் ஆயுளை அறிந்தவன் எவனும் இல்லை.

time gita

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

habits-logo

சுவாமியின் பொன்மொழி காலண்டர் – ஜனவரி 2015

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

Compiled by London Swaminathan

Post No.1525; Dated  29    December 2014.

Important Days:  Ekathasi Jan.1 (Vaikunda Ekathasi), 16, 30; Amavasya 20, Pournami- Jan.4

Festivals: Arudra Darsana 5; Bogi Festival 14; Pongal/Makara Sankaranti 15; Republic Day of India 26; Ratha saptami 26; Bhishmashtami 27.

ஆருத்ரா தரிசனம்-ஜனவரி 5, போகி 14, பொங்கல் 15, குடியரசு தினம் 26, ரத சப்தமி 26

ஜனவரி 1 வியாழக் கிழமை

பூட்டைத் திறப்பது கையாலே நல்ல

மனம் திறப்பது மதியாலே

பாட்டைத் திறப்பது பண்ணாலே – இன்ப

வீட்டைத் திறப்பது பெண்ணாலே – பாரதியார்

ஜனவரி 2 வெள்ளிக் கிழமை

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்

உள்ளத்தனையது உயர்வு – திருக்குறள்  595

ஜனவரி 3 சனிக் கிழமை

மணி வெளுக்கச் சாணையுண்டு – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

மனம் வெளுக்க வழியில்லை – எங்கள் முத்து

மாரியம்மா, எங்கள் முத்துமாரி! – பாரதியார்

ஜனவரி 4 ஞாயிற்றுக் கிழமை

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் – குறள் 596

ஜனவரி 5 திங்கட் கிழமை

உத்தரேத் ஆத்மனாத்மானம் – பகவத் கீதை (6-5)

ஒருவன் தன்னாலே தன்னை உயர்த்திக்கொள்ளவேண்டும்

ஜனவரி  6 செவ்வாய்க் கிழமை

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் – தமிழ் பழமொழி

ஜனவரி 7  புதன் கிழமை

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும் – பாரதியார்

ஜனவரி 8 வியாழக் கிழமை

மனம் போல மாங்கல்யம் — தமிழ் பழமொழி

ஜனவரி 9 வெள்ளிக் கிழமை

மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிம வேண்டும் — பாரதியார்

1-piece-of-mind

ஜனவரி 10 சனிக் கிழமை

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியராகப் பெறின் — திருக்குறள்  666

ஜனவரி 11 ஞாயிற்றுக் கிழமை

உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து

வரிசைக்கு வருந்தும் இப்பரிசில் வாழ்க்கைப்

பரிசிலர்க்கு அடையா வாயிலோயே – புறநானூறு 206

ஜனவரி 12 திங்கட் கிழமை

சென்றதினி மீளாது மூடரே! நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம். – பாரதியார்

ஜனவரி 13 செவ்வாய்க் கிழமை

மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் – உலக நீதி

ஜனவரி 14 புதன் கிழமை

தம்மபதத்தில் புத்தர் சொல்கிறார்:

மனம் அலை பாயக்கூடியது; நிலையற்றது. அது இஷ்டப் பட்ட இடத்திற்குச் சிறகடித்துப் பறக்கும். மனதைக் கட்டுப்படுத்துவது கடினம். ஆனால் அப்படிக் கட்டுப்படுத்துவது  மிகவும் நல்லது. கட்டுப்படுத்தப்பட்ட மனதானது, இன்பத்தில் உறைவிடம் ஆகும்.(35)

ஜனவரி 15 வியாழக் கிழமை

“அஸம்சயம் மஹாபாஹோ மனோ துர்நிர்க்ரஹம் சலம்

அப்யாஸேன து கௌந்தேய வைராக்யேன் ச க்ருஹ்யதே” (6—35)

“தோள்வலி படைத்த அர்ஜுனா! மனம் அடக்குதற்கரியது; இதில் சந்தேகம் இல்லை. பயிற்சியாலும் வைராக்யத்தாலு (திட உறுதி) அடக்கமுடியும்”.

ஜனவரி 16 வெள்ளிக் கிழமை

மனதுக்கு மனதே சாட்சி; மனச் சாட்சியைவிட மறு சாட்சி வேண்டாம்- தமிழ் பழமொழிகள்

ஜனவரி 17 சனிக் கிழமை

எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணல் வேண்டும் – பாரதியார்

ஜனவரி 18 ஞாயிற்றுக் கிழமை

மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி – திருக்குறள் 453

(மனத்தின் காரணமாகவே மாந்தர்க்கு அறிவு உண்டாகும்)

ஜனவரி 19 திங்கட் கிழமை

மன நலம் மன்னுயிர்க்கு ஆக்கம் — திருக்குறள் 457

(மனத்தின் தூய்மை உரி இனத்துக்கு எல்லாம் நன்மையும் இனிமையும் தரும்)

ஜனவரி 20 செவ்வாய்க் கிழமை

மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும் — திருக்குறள் 456

(தூய மனம் உடையாருக்கு நல்ல பிள்ளைகளும் புகழும் எஞ்சும்)

mind

ஜனவரி 21 புதன் கிழமை

நினைமின் மனனே நினைமின் மனனே

சிவபெருமானைச் செம்பொன் அம்பலவனை

நினைமின் மனனே நினைமின் மனனே  —-பட்டினத்தடிகள்

ஜனவரி 22 வியாழக் கிழமை

யானை வேட்டுவன் யானையும் பெறுமே;

குறும்பூழ் வேட்டுவன் வறும்கையும் வருமே

அதனால் உயர்ந்த தேட்டத்து உயர்ந்தசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்

தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் – புறநானூறு 214

ஜனவரி 23 வெள்ளிக் கிழமை

மன நலத்தின் ஆகும் மறுமை — திருக்குறள் 459

(நல்ல மனம் உடையாருக்கு மறுமையிலும் இன்பம் கிட்டும்)

ஜனவரி 24 சனிக் கிழமை

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது  சத்தாகி என்

சித்தமிசை குடி கொண்ட தேசோ மயானந்தமே. — தாயுமானவர்

ஜனவரி 25 ஞாயிற்றுக் கிழமை

மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்

இனம் தூய்மை தூவா வரும் — திருக்குறள் 455

ஜனவரி 26 திங்கட் கிழமை

வாய்கொண்டு உரைத்தல்அரிது என் செய்கேன்
என்செய்கேன் வள்ளல்உன் சேவடிக்கண்
மன்னாது பொன்னாசை மண்ணாசை பெண்ணாசை
வாய்ந்துழலும் எனதுமனது

பேய்கொண்டு கள்உண்டு கோலினால் மொத்துண்டு
பித்துண்ட வன்குரங்கோ
பேசுறு குலாலனாற் சுழல்கின்ற திகிரியோ
பேதைவிளை யாடுபந்தோ – வள்ளலார் பாடல்

human_brain

ஜனவரி 27 செவ்வாய்க் கிழமை

“மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய்

அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய்

.நன்றையே கொள் எனில் சோர்ந்து கை நழுவுவாய்

விட்டுவிடு என்றதை விடாது போய் விழுவாய்

தொட்டதை மீள மீளவும் தொடுவாய் – பாரதியார்

ஜனவரி 28 புதன் கிழமை

காடும் கரையும் மனக்குரங்கு கால் விட்டோட அதன்பிறகு

ஓடும் தொழிலால் பயனுளதோ ஒன்றாய் பலவாய் உயிர்க்குயிராய்

ஆடும் கருணைப் பரஞ்ஜோதி அருளைப் பெறுதற்கு அன்புநிறை

தேடும் பருவம் இதுகண்டீர் சேரவாரும் ஜெகத்தீரே! – தாயுமானவர் பாடல்

ஜனவரி 29 வியாழக் கிழமை

மனம் எனும் தோணி பற்றி, மதி எனும் கோலை ஊன்றி

சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது

மதன் எனும் பாறை தாக்கி மறியும் போது, அறிய ஒண்ணாது

உனை உனும் உணர்வை நல்காய், ஒற்றியூர் உடைய கோவே

–அப்பர் தேவாரம் 4-46

ஜனவரி 30 வெள்ளிக் கிழமை

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் — தமிழ் பழமொழி

ஜனவரி 31 சனிக்கிழமை

சிந்தா நாஸ்தி கில – தேஷாம் சிந்தா சிந்தா நாஸ்தி கில

சமதம கருணா சம்பூர்ணாணாம்

சாது சமாகம சங்கீர்ணானாம் – சதாசிவ பிரம்மேந்திரர்

(நல்ல குணங்கள், சாதுக்களின் தொட்ர்புடையோருக்கு மனக்கவலை இல்லை)

Contact swami_48@yahoo.com

பாரதியுடன் 60 வினாடி பேட்டி

12TH_Bharati_GJ_12_1295977e

எழுதியவர் லண்டன் சுவாமிநாதன்
Post No.1278; Dated 10th September 2014.
September 11 is Bharati Memorial Day.
(( நிலாசாரலில் வெளியிட்ட தேதி 16-1-2012 ))

கேள்விகள் – கற்பனை, பதில்கள் – உண்மை!

* வணக்கம் பாரதியாரே, உமது தொழில்?

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்

* உமது ஜாதி?

காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்

(அடடா, என்ன பரந்த மனப்பான்மை!)

* உமக்குப் பிடித்த நூல்?

பன்னரும் உபநிடத நூல் எங்கள் நூலே
பார் மீது ஏதொரு நூல் இது போலே

bharati kutty

* உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள்?

யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்
வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை

(உண்மை.. வெறும் புகழ்ச்சி இல்லை!)

* நீர் ஒரு தீர்க்கதரிசி. நாடு விடுதலை பெறும் முன்னரே நீர் சுதந்திரப் பள்ளு பாடினீர். இனி நடக்கப் போவதை உம்மால் சொல்ல முடியுமா?

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்.
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்.

(பலே.. பலே!)

* மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டும் என்று தேவியிடம் வேண்டினீர், கிடைத்தது. எங்களுக்கும் அந்த தந்திரத்தைக் கற்றுத்தரக் கூடாதா?

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்

(அட, இதுதான் ரகசியமா?)

bharati new, fb

* சரி, நாளைக்கு உமக்கு பிரதமர் பதவி கிடைத்தால் என்ன செய்வீர்?

இனி ஒரு விதி செய்வோம்
அதை எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்
இல்லை என்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்

(அப்பாடா, இன்னும் உம் பேச்சில் புரட்சிக் கனல் பறக்கிறதே!)

* இந்தியா வல்லரசு நாடாகுமா?

எல்லாரும் அமர நிலை எய்தும் நன் முறையை
இந்தியா உலகிற்களிக்கும் – ஆம்
இந்தியா உலகிற்களிக்கும்

(கேட்கவே இனிக்கிறதே! உம் வாயில் ஒரு மூட்டை சர்க்கரை போட வேண்டும்!!)

* இன்றைய இளைஞருக்கு உமது அறிவுரை?

உடலினை உறுதி செய்,
பணத்தினைப் பெருக்கு,
வையத் தலைமை கொள்

(அம்மாடி, ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும்!)

bharati family

* கற்காமல் அறியக்கூடிய கலை ஏதேனும் உண்டா?

சொல்லித் தெரிவது இல்லை மன்மதக் கலை.

(அருமை, அருமை!)

* நீர் இறைவனிடம் வேண்டுவது என்னவோ?

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல் அறிவு வேண்டும்

* சிறுவர்களுக்கு உங்கள் அறிவுரை?

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே
அதைத் தொழுது படித்திடடி பாப்பா
தெய்வம் நமக்குத் துணை பாப்பா
நமக்கு ஒரு தீங்கு வரலாகாது பாப்பா

bharati

* இந்தியருக்கு நீவீர் கூற விரும்புவது?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு
நம்பினார் கெடுவதில்லை
இது நான்கு மறைத் தீர்ப்பு
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்.

* உமது கவிதை பற்றி உமது மதிப்பீடு?

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது
சொற் புதிது, சோதி மிக்க நவகவிதை
எந்நாளும் அழியாத மா கவிதை

அதுவே எங்கள் மதிப்பீடும்.

bharathy statue

* அனுமனுக்கு மயிர்க்கால் தோறும் ராம நாமம் ஒலிக்குமாம், உமக்கு?

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக.
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(அடடா, கேட்கவே மயிர்க் கூச்சிடுகிறதே!)

* கடைசியாக ஒரு கேள்வி. இப்போது எல்லா சாமியார்களும் காயத்ரி மந்திரத்தை எல்லோரும் சொல்லலாம் என்று சொல்லிவிட்டார்கள். இதை நீர் முன்னமே தமிழில் சொன்னதாக எனக்கு நினைவு?

செங் கதிர்த் தேவன் ஒளியினைத் தேர்ந்து தெளிகின்றோம்
அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக

நன்றி! உமது தேமதுரத் தமிழோசை என்றும் எங்கள் காதில் ஒலிக்கும்.

kutti bharathi

I have done 25 more 60 second Interviews in Tamil and English with all the famous people including Socrates, Vivekananda, Buddha, Sathya Sai baba, Kamban, Ilango, Appar, Sundarar, Samabandar, Manikavasagar, Andal, Pattinathar, Thayumanar, Tirumular, Tiruvalluvar and Lord Krishna.
Contact swami_48@yahoo.com

Pictures are taken from various websites;thanks.