ஒலி(Noise Pollution)  மாசால் ஏற்படும் கேடுகள்! (Post No.10,382)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,382

Date uploaded in London – –   27 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ச.நாகராஜன் எழுதியுள்ள சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள் பற்றிய பத்து உரைகள் ஆல் இந்தியா ரேடியே சென்னை வானொலி A அலைவரிசையில் (720 Hz) தினமும் காலை 6.55 (மாநிலச் செய்திகள் முடிந்த பின்னர்) 11-11-2021 முதல் ஒலிபரப்பாகி வந்தன.

17-11-2021 காலை ஒலிபரப்பான ஏழாவது உரை கீழே தரப்படுகிறது. 

ஒலி மாசால் ஏற்படும் கேடுகள்!

                     ச.நாகராஜன்

தேவையற்ற அளவுக்கு அதிகமான சத்தம் அனைத்துமே ஒலி மாசு (NOISE POLLUTION) எனப்படும். பொதுவாக இந்த அதிக ஒலி தொழிற்சாலைகள், மற்றும் சில குறிப்பிட்ட தொழிலகங்கள் ஆகியவற்றிலிருந்து வருகிறது. இது மட்டுமின்றி சாலைகளில் செல்லும் அதிக வாகனப் போக்குவரத்து, புகைவண்டி, விமானம், ஆகியவற்றிலிருந்தும் எழுகிறது. கட்டிடங்கள் கட்டும் இடங்களிலிலிருந்தும் அதிக ஒலி எழுகிறது.

மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு இந்த ஒலி மாசு பெரும் கேடாக இருப்பதில் வியப்பில்லை. பொதுவாக டெசிபல் என்ற அளவீட்டின் மூலம் ஒலி அளக்கப்படுகிறது.  சாதாரணமாக ஒரு மனிதன் 0 டெசிபலிலிருந்து 140 டெசிபல் வரை ஒலியைக் கேட்கமுடியும். 120 முதல் 140 டெசிபல் அளவு வரை உள்ள சத்தம் காதுக்கு வலியைத் தருகிறது. ஒரு நூலகத்தில் அனுமதிக்கப்படும் ஒலி 35 டெசிபல; ஒரு பேருந்தோ அல்லது நகர்ப்புற புகைவண்டியோ தரும் ஒலி 85 டெசிபல்; கட்டிட வேலையில் எழுப்பப்படும் ஒலி 105 டெசிபல்! தூரம் செல்லச் செல்ல ஒலி குறைவதையும் நாம் உணர்கிறோம்.

80 டெசிபலுக்கு அதிகமாக தொடர்ந்து பல மணி நேரம் அதிக சத்தத்தைக் கேட்கும் போது முதலில் செவிப்பறை பாதிக்கப்படுகிறது. பின்னர் காது, கேட்கும் சக்தியை இழக்க நேரிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. மனச்சோர்வும், தூக்கமின்மையையும் ஏற்பட்டு மன நிம்மதியை இழக்க நேரிடுகிறது. ஒருவருக்கொருவர் பேசுவது கூட இயலாத நிலை ஏற்படுகிறது. அதீதமான ஒலி இதயக் கோளாறுகளையும் ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், பள்ளிக்கூடங்கள், குழந்தைகள் அதிகம் உள்ள இடங்கள், நூலகங்கள் ஆகியவற்றில் மிகக் குறைந்த ஒலி அளவைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவது இன்றியமையாதது.

வீடுகளில் வானொலி, டி.வி. உள்ளிட்ட சாதனங்களை கூட ஒலிக் கட்டுப்பாட்டை அனுசரித்துக் கேட்கும் பழக்கமானது ஆரோக்கியத்தையும் அண்டை அயலாரின் பாராட்டையும் தரும்.

இந்த ஒலி பறவைகளுக்கும், பூச்சிகளுக்கும் பெரும் ஆபத்தாக அமைகிறது. சத்தத்தை வைத்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இவை அப்படிச் செய்ய முடியாமல் தவிக்கின்றன. அதிக ஒலியின் காரணமாகச் சில சமயம் உயிரையும் இழக்கின்றன. சங்க இலக்கியங்களில் அசுணம் என்ற பறவை அதிக ஒலியைக் கேட்டால் உடனே இறந்து விடும் என்பதையும் நான் இங்கு நினைவு கூரலாம். 

இது மட்டுமல்ல, கடலில் ஏற்படும் பெரும் இரைச்சலால் ஒலிகளின் மூலமாக தகவலைப் பரிமாறிக் கொள்ளும் திமிங்கிலங்கள், டால்பின்கள் பெரிதும் சங்கடத்திற்கு உள்ளாகின்றன. கடலில் செல்லும் கப்பல்கள் எழுப்பும் இரைச்சல், எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலை (OIL and GAS INDUSTRY) எழுப்பும் இரைச்சல் ஆகியவற்றால் இவை, தனக்கு இரை தேட முடியாமலும் சந்ததிப் பெருக்கத்திற்கு தகுந்த துணையிடம் நாட முடியாமலும் தவிக்கும் நிலைமையை ஏற்படுத்துகிறது.

திசை தெரியாமல் தடுமாறும் திமிங்கிலங்கள் பெரிய கப்பல்களின் மீது மோதி உயிரை இழக்கின்றன. ஆகவே அதிகம் திமிங்கிலங்கள் உள்ள இடங்களில் மிக மெதுவாகச் செல்லுமாறு கப்பல்கள் அறிவுறுத்தப்படுகின்றன.

ஆகவே நீரிலும் நிலத்திலும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒலி மாசு பற்றிய சரியான புரிதலைக் கொண்டு அதைக் கட்டுப்படுத்துவோம்; ஆரோக்கியத்தையும் இயற்கை உயிரினங்களையும் காப்போம்!

***

 tags-  ஒலி ,Noise Pollution, திமிங்கிலங்கள்  ,   மாசு,           

மாசுகள் உருவாகும் வகைகள்! (Post No 2685)

plastic rubbish

Written by S NAGARAJAN (for AIR talk)

Date: 1 April 2016

 

Post No. 2685

 

Time uploaded in London :–  5-55 AM

 

( Thanks for the Pictures)

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

 

(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

 

 Plastic-Bottles-Trash-waste-460x250

    சுற்றுப்புறச் சூழல் மாசு படுவதன் காரணங்கள் பல!

    தீங்கு பயக்கும் அல்லது நச்சு கலந்த பொருள்கள் காற்றிலோ நதிகள், கடல்களிலோ கலக்கும் போது அவை மாசுபடுகின்றன. விலங்குகள், தாவரங்கள் ஏன் மனிதர்கள் கூட இதற்கு விலக்கு அல்ல. அவர்களிடமிருந்தும் கூட சூழல் மாசுக்குள்ளாகும் நிலை உருவாகலாம்.

 

   சூழலில் ஏற்பட்டுள்ள மாசினால் இங்கிலாந்தில் பதினோரு லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

   சூரிய ஒளியின் ஆற்றலினாலும் காற்றுச் சுழலிகள் மூலமாகவும் மின் சக்தி உருவாவது இன்றைய காலகட்டத்தின் அவசரத் தேவையாகிறது.

 

   நமது வாகனங்களில் நாம் பயன்படுத்தும் டீஸல் மற்றும் பெட்ரோல் சுற்றுப்புறச் சூழலில் மாசை ஏற்படுத்துகிறது. ஆகவே அவற்றின் பயன்பாட்டை முடிந்த அளவு ஒவ்வொருவரும் குறைத்தல் வேண்டும்.  

   ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் இரசாயனக் கழிவுகள் நதி, கடலில்     கலந்தால் அவை பல மைல் தூரம் உடனடியாக கொண்டு செல்லப்படுவதால் அபாயம் வெகு விரைவில் எங்கும் பரவும் நிலை ஏற்படுகிறது.    

 

  பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பல்வேறு பொருள்கள் ஆகியவற்றின் பயன்பாட்டை உடனடியாக ஒவ்வொருவரும் நிறுத்தி விட்டால் சுற்றுப்புறச் சூழலில் பெரும் முன்னேற்றம் ஏற்படும்.     பிளாஸ்டிக் பைகள் கடலில் மிதக்கும் போது அவற்றை தனது உணவாக எண்ணி அவற்றை உட்கொள்ளும் மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் பரிதாபமாக உயிரை இழப்பது பெருமளவில் பெருகி வருகிறது.  

வீட்டில் சுத்தப்படுத்துவதற்காக நாம் பயன்படுத்தும் திட மற்றும் திரவ வடிவிலான இரசாயனப் பொருள்களைப் பற்றி நன்கு அறிந்த பின்னரே அவற்றைச் சிறிய அளவில் பயன்படுத்ல் வேண்டும். சூழலுக்கு உகந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.  

 

   சுற்றுப்புறச் சூழல் பற்றிய அனைத்து விஷயங்களையும் நாம் அறிந்து பிறருக்கும் அவற்றைக் கூறுதல் பெரிய சமுதாய சேவை ஆகும்!

–Subham–