
திருவாரூர் தேவதாசி கொண்டியம்மாள் கதை (Post No 2610)
Article written by london swaminathan
Date: 8 March, 2016
Post No. 2610
Time uploaded in London :– 20-11
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com;
பிரிட்டிஷ் லைப்ரரியில் இலங்கை ருத்ர கணிகை அஞ்சுகம், 1911ஆம் ஆண்டில் எழுதிய புத்தகம் கிடைத்தது. அதில் கிடைத்த திருவாரூர் ருத்ர கணிகை கொண்டியம்மாளின் கதையைக் கீழே கொடுக்கிறேன். பக்கங்களைப் படிக்க முடியாதவர்கள் அல்லது பழைய தமிழ் நடை புரியாதவர்கள் முதலில் சுருக்கக் கதையைப் படியுங்கள்:-
கதைச் சுருக்கம்:
திருவாரூர் ருத்ர கணிகை (கோவிலில் ஆடும் தேவதாசி) பரம பக்தை; ஒரு முறை பங்குனி உத்திரத்தின் போது தேர் நகர மறுத்தது. எவ்வளவோ பேர் வந்து இழுத்தும் தேர் நகர வில்லை. பின்னர் சோழ ராஜாவின் கனவில் சிவபெருமான் தோன்றி கொண்டியம்மாள் தேரில் ஏறி சாமரம் வீசினால் தேர் நகரும் என்று கூறினார். மறு நாள் கொண்டியம்மாளை தக்க மரியாதையுடன் அழைத்து வந்து சாமரம் வீசச் செய்யவே தேர் புறப்பட்டு, பவனி வந்து நிலையை அடைந்தது.
ஆனால் தேரில் ஏறுமுன் , கொண்டியம்மாள் ஒரு நிபந்தனை போட்டார். தனது செயல் வெற்றி பெற்றால், தான் இறந்த பின்னர் தன் சடலத்தைக் காவேரிக் கரையில் தகனம் செய்யவேண்டும் என்றும் திருவாரூரில் ஒரு மைலுக்கு ஒரு பிள்ளையார் கோவில் கட்ட வேண்டும் என்றும் நிபந்தனை போட்டார். மன்னர் அதை ஏற்றுக் கொண்டதோடு நில்லாமல் கொண்டியம்மாள் இறந்த பின்னர் அப்படியே செய்தான். இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்தது. அப்போதைய பிள்ளையார் கோவில்கள் இன்றும் உள்ளன.









–subham
You must be logged in to post a comment.