வீணைக் கொடியுடைய வேந்தனே! (Post No.9124)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9124

Date uploaded in London – –9 January 2021      

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வீணைக் கொடியுடைய வேந்தனே!

கொடிகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள்.  சின்னங்கள் முத்திரைகளைக் கண்டுபிடித்தவர்கள் இந்துக்கள் ; வாகனங்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்தவர்கள் இந்துக்கள் (READ MY OLD RESEARH ARTICLES ON VAHANAS, SYMBOLS AND FLAGS PLEASE). தொல்காப்பியத்திலேயே பலராமனின் பனைக்கொடி உளது.

புறநானூற்றுப் பாடல் 56, மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப்பட்டது அதில்  சிவனின் ரிஷபக் கொடி, முருகனின் மயில் கொடி, பலதேவனின் பனைக்கொடி, விஷ்ணுவின் கருடக்  கொடி  ஆகிய அனைத்தும்  குறிப்பிடப்படுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழர்கள்  அதி தீவிர இந்துக்கள் . அவர்களுக்கு ராமாயண, மஹாபாரத, புராணக் கதைகள் அத்துபடி!! திருப்பறங்குன்றத்தில் இருந்த இந்திரன்-அகலிகை ஓவியத்தை ஒரு கிராமத்தான், அவனுடைய  மனைவிக்கு விளக்கிய பரிபாடல் காட்சி மூலமும் இது தெரிகிறது

துரியோனாதணனுக்கு பாம்புக் கொடி ; ராவணனுக்கு வீணைக் கொடி என்பதும் நமக்குத் தெரியும் .

ஆயினும் திருக்குறள் காலம் வரை யாழ் பற்றிய குறிப்பே கிடைக்கிறது. சங்கம் மருவிய காலத்தில் எழுத்து வடிவில் உருவான சிலப்பதிகாரத்தில்தான் முதல் முதலில் வீணையை சந்திக்கிறோம்.(6-18). ‘நாரதர் வீணை’ (6-18, 22) பற்றி இளங்கோ பாடுகிறார். பின்னர் மணிமேகலையில் (CHAPTER 29) காண்கிறோம் . ஆனால் கம்பன் பல இடங்களில் வீணைக் கொடியைக் குறிப்பிடுகிறான்; பாடுகிறான்

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வரும் இராவணன் பற்றிய பாடல் எல்லோரும் கேட்டு ரசித்த பாடல் …………….

வீணைக் கொடியுடைய வேந்தனே

வீரமே உருவாகிடும் இசை வெள்ளமே

உயிரெனவே நினைந்து உலவும் வீணைக் கொடியுடைய வேந்தனே

ஆனந்தகான அமுத மழையே

பொழிந்து மனம் தனை உருக வழி செய்த

வீணைக் கொடியுடைய வேந்தனே (பாடல் – ஏ.மருதகாசி

வால்மீகி ராமாயணத்தில்தான் இதற்கான மூலம் உளது. ஸீதையைத் தேடிச் சென்ற அனுமன், ராவணனின் அந்தப்புரத்தில் நுழைந்த போது, ‘விபஞ்சி’ என்ற ஒரு வகை வீணையுடன் பல பெண்கள் தூங்குவதைக் காண்கிறான். ஒரு பெண்மணி வீணை வாசித்த களைப்பில் அதைக் கட்டிக்கொண்டு உறங்கும் காட்சியும் வருகிறது . இவை சுந்தர காண்டத்தில் உளது. ஆயினும் இராவணன் சாம கானப் பிரியன், சிவ பக்தன் , வீணை வாசிப்பதில் வல்லவன் என்று கேட்டபோதிலும் அவன் வீணை வசிக்கும் காட்சியை வால்மீகி வருணிக்கவில்லை. அவனுக்கும் வீணாவுக்கும் உள்ள தொடர்பை ஒரு அற்புத உவமை விளக்குகிறது. அவன் போர்க் களத்தையே வீணை வாசிப்பதற்கு ஒப்பிடுகிறான்.

யுத்த காண்டத்தில் வரும் வால்மீகி ஸ்லோகம் ஒரு புதுமையான உவமை! போர்க்களம் என்பது  ‘வீணை யாம்’ . அதில் அவன் பயன்படுத்தும் வில், அம்புகள் வீணை வாசிக்கும் கருவியாம் . இதைப் புரிந்துகொள்ள ராவணன் வைத்திருந்த விநோத வகை வீணையை நாம் அறியவேண்டும். அவனிடம் ‘ராவண ஹஸ்தக’ என்ற விசேஷ வகை வீணை இருந்தது. இதை வயலின் வாசிப்பது போல அவன் (violin bow)வில்லால் வாசிப்பானாம். ஆகையால்தான் போர்க்களத்தை வீணைக்கு ஒப்பிடும் உவமையை வால்மீகி பயன்படுத்துகிறார்.

கம்பனும் ‘ராவணன்- வீணை’ தொடர்பை பல பாடல்களில் ‘வீணைக்கொடி’ மூலம் விளக்குகிறான் .

ஆரண்ய காண்டத்தில் ராவணனுடன் சடாயு போரிட்ட காட்சியை வர்ணிக்க வந்த கம்பன் கொடியை மறக்கவில்லை

“இடிப்பு ……………

…………….

கடிப்பக் கடிது உற்றவன் காண் தகும் நீண்ட வீணைக்

கொடிப் பற்றி ஒடித்து உயர் வானவர் ஆசி கொண்டான்”

பொருள் —

இடி முழக்கத்துடன் பறந்துவந்து, சிறகுகளால் ராவணன் தலைகளைத் தள்ளிவிட்டு , நீண்ட வீணைக்கொடியைப் பழித்து ஒடித்து , அச்செயல் மூலம் தேவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றான்

Xxx

பின்னரும் சடாயு உயிர் நீத்த படலத்தில் கொடியை மறக்கவில்லை கம்பன் …

இராமனும் இலக்குவனும் தெற்கு நோக்கி பயணம் செய்கையில் சடாயு இறந்த இடத்தில் வீணைக்கொடி ஒன்று தரையின் மீது கிடந்ததைக் கண்டனர்

“பாக வீணையின் கொடி ஒன்று கிடந்தது பார்மேல் “–

இதற்கு அடுத்த சில பாடல்களில் சடாயுதான் சீதையைக் கவர்ந்த பகைவருடன் போரிட்டு இதைச் செய்திருக்க வேண்டும் என்று இலக்குவனிடம் சொல்லி கண்ணீர் விடுகிறான்.

Xxxx

கம்ப இராமாயண யுத்த காண்டத்தில், முதற் போர் புரி படலத்தில் வரும் பாடல் இதோ ………………………

ஏழிசைக் கருவி வீற்றிருந்தது என்னினும்

சூழிருந்திசைகளைத் தொடரும் தொல்கொடி

வாழிய உலகு எலாம்  வளைத்து வாய் இடும்

ஊழியின் அந்தகன் நாவின் ஓங்கவே

பொருள் ……….

“தேரிலே ஏழிசைக் கருவியாகிய வீணையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது .அந்தக் கொடி காற்றில் திக்குகள் தோறும் படபடத்தது. அது யமனுடைய நாக்கு போல இருந்தது ஊழிக் காலத்தில் உலகத்தை எல்லாம் தனது வாய்க்குள் போட்டு விழுங்கும் யமனின் நாக்கு போல உயர்ந்து விளங்கியது”.

யுத்த காண்டத்தில், இன்னும் ஒரு பாடலில் வீணைக்கொடியின் அவல நிலையைப் பாடுகிறான் கம்பன் …

எழுத்து வீணை கொடு ஏந்து பதாகை மேல்

கழுகும் காகமும் மொய்த்தன 

பொருள்

வரையப் பெற்ற வீணையைச் சின்னமாகக் கொண்ட ராவணனின் கொடி மீது  காகமும் கழுகும் மொய்த்தன .

XXXX

MY OLD ARTICLE………

அகத்தியரும் வீணை வாசிப்பதில் வல்லவர்

நச்சினார்க்கினியர் சொல்லும் இராவணன் வீணைக்  கதை 

ராவணன் – பாண்டியர் சமாதான …

tamilandvedas.com › 2014/06/24 › ர… 

24 Jun 2014 — ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை ! pandya-flags. Pandya Flags drawn by me. தமிழ் இலக்கியத்தில் ஓர் அதிசயத் தகவல்!! ஆராய்ச்சிக் …

–subham—

tags- வீணைக் கொடி, நச்சினார்க்கினியர், ,ராவணன்