நீ பாதி நான் பாதி கண்ணா! (ஜோதிடக் கட்டுரை)

WRITTEN BY KATTUKKUTY

Post No. 8558

Date uploaded in London – 23 August 2020   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge; this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

kattukutty

சரி, இப்போது பெண்கள் ஆண்களைப் பற்றி என்ன
நினைக்கிறார்கள் என்று பார்ப்போமா??

ஏ மேஷராசி பெண்களே, (நினைத்ததை முடிப்பவள்) நீங்க
கொஞ்சம் படபடப்புப் பேர்வழி — சரியாகச் சொன்னால் “முசுடு”.
எப்போதும் உங்களைப் பற்றியும் உங்கள் கணவரைப்
பற்றியும் உயர்வாகத்தான் நினைக்க வேண்டும் இந்த உலகம்.
உங்கள் கணவரை நீங்கள் சரியான முறையில் “ரிப்பேர்”
பண்ணி முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என வேகமாக
இறங்கி விடுவீர்கள்

ஏ ரிஷப ராசி பெண்களே (உல்லாச உலகம் எனக்கே சொந்தம்)
உல்லாசம், உற்சாகம், சந்தோஷம் எல்லாவற்றையும் அனுபவிக்க
வேண்டும் என வெறி கொண்ட நீங்கள் எதையும் ஊகித்தறியும்
செம intelligent!!!! அப்படி இப்படி என புருஷனை உங்க வழிக்கு
கொண்டு வந்து விடுவீர்கள். பார்க்கறவர்கள் அவ அப்பிடி இப்பிடின்னு
புருஷனை மயக்கி தன் வழிக்கு கொண்டு வந்துட்டாளே,
என உலகமே மெச்சும் உங்களை!!!



ஏ மிதுன ராசி பெண்களே, நீங்க பாடற பாட்டு என காதுல விழுது
நீ பாதி நான் பாதி கண்ணா!!!எல்லாவற்றிலும் சம உரிமை, ஆனால்
புருஷன் வேறு பக்கம் செல்வதாக கொஞ்சம் தெரிந்தாலும் சரி
உங்கள் கை வரிசையைக் காட்டி இரண்டில் ஒன்று பார்த்து விடுவீர்கள்……

ஆல் அவுட் இல்லே, ஆளே அவுட்!!!

ஏ கடக ராசி பெண்களே உங்கள் ஜால்ரா மிகமிக பெரிசு!!!
என் புருஷன்னா புருஷன் தான் அவர மாதிரி உண்டா???என்ற
நீங்கள் புருஷன்மார் தப்பு ஏதாவது செய்தால் ஏன் தான் இப்படி
புத்தி போகிறதோ என சலித்துக் கொள்வீர்கள். சலிப்புடன் வாழ்க்கையும் ஓடும் அப்புறம் என்ன நண்டு மாதிரி கொட்டி
சரி செய்து விடுவீர்கள்.



ஏ சிம்ம ராசி பெண்களே நான் பார்த்திலே அவன் ஒருவனைத்தான்
நல்ல அழகனென்பேன் என்று சரியாக எடை போட்டு தான்
உங்கள் ஜோடியை நீங்களே தேர்ந்தெடுப்பீர்கள்.உயர்ந்த நோக்கம் உள்ளவரையே விரும்பும் நீங்கள் அவரது வாழ்க்கையை
வெற்றி பெறச் செய்வீர்கள் அவருக்கு உறு துணயாய் இருந்து!!!
ஒவ்வொரு வெற்றி பெற்ற ஆணுக்கும் பின் ஒரு பெண் இருக்கிறாள்
என்றால் அது நீங்கள் தான்!!!!

ஏ கன்னி ராசி பெண்களே இந்த ஆம்பளைக் கண்டாலே பிடிக்காது
ஒருத்தன் வாழ்ந்தால் இன்னொருத்தனுக்கு பிடிக்கவில்லை….சரி
யாரையாவது கட்டி தொலைப்போம்……பிறகு அவன் எப்படிப்
பட்டவனானாலும் சரி கணவனே. கண்கண்ட தெய்வம் என சிறப்பாக பிறர் மெச்சும் படி வாழ்க்கை நடத்துவீர்கள்


ஏ துலாம் ராசி பெண்களே, எதோ என் புருஷனும் நாலு காசு
சம்பாதிக்கத் தெரிந்தவர். நான்சொல்வதைக் கேட்டுக்கொண்டு
சமர்த்தா இருப்பார். என் கணவன் தவிர மற்ற ஆண்களெல்லாம்
தில்லு முல்லு கூட்டம்.என் புருஷன் உத்தம புத்திரன் என
புகழ்ந்து கொண்டே வாழ்க்கையைச் சிறப்பாக, ஓட்டுவீர்கள்.
ஆளை எடை போட்டு சமயம் பார்த்து வேலை வாங்குவதில்
உங்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராது

ஏ விருச்சிக ராசி பெண்களே என் புருஷனா அதுக்கு ஒண்ணுமே
தெரியாதே! பாவம்….படபடன்னு ஏதாவது செஞ்சுட்டு வந்து நிக்கும்.
நான் தான் போய் “கரக்‌ஷன் பேக்டர்”சரி செய்வேன். ஏதோ புருஷன்
ஒரு மக்கு மாதிரியாகவும் நினைத்துக் கொண்டு தன் தலையில் தான் உலகம் சுற்றுவதாகவும், பெரிதாக நினைத்துக் கொண்டு பீத்திக்கொண்டு கொண்டு வாழ்கையை ஓட்டுகிறீர்கள் நீங்கள்…….
ஆனாலும் உங்களிடம் “அட்ஜஸ் மெண்ட் “ ஜாஸ்தி எல்லா
விஷயத்திலும் !!!!

ஏ தனுசு ராசி பெண்களே நீங்க ரொம்ப ஆக்டிவாக புருஷனை
பிறாண்டி, பிறாண்டி எல்லா விஷயங்களயும் தெரிந்து கொண்டு
தன் விஷயங்ளையும் புருஷனிடம் சொல்லி நல்லது கெட்டது
தெரிந்து வாழ்க்கையை சூப்பராக, எல்லோரும் பொறாமைப்
படும் படியாக நடத்துபவர்கள்! நீங்கள் ஒரு லேடி ஜேம்ஸ் பாண்ட்!!!

ஏ மகர ராசி பெண்களே கணவனே கண்கண்ட தெய்வம் என பய
பக்தியோடு பணிவிடை செய்து சொன்னபடி கேட்டு அவர் பக்கமே பேசி தன் காரியத்தை சாதித்துக்கொள்ளும் தந்திரமான பெண்!
சாமர்த்தியமாக தக்க நேரத்தில் சரியான முடிவு எடுத்து ,உலகமே போற்றும் அளவுக்கு உயர்ந்து விடுவீர்கள்



ஏ கும்ப ராசி பெண்களே நாங்க இல்லையென்றால் நீங்கள்
வாழ முடியாது என்று சேலஞ்ஜ் விடும் நீங்க அடிக்கடி புருஷனை
யாரும் உங்களை தப்பாகவே எடுத்துக் கொள்ளக் கூடாதென்று
விழுந்து விழுந்து உதவி செய்து புருஷனை டாப் பொஸிஷனுக்கு
கொண்டு வந்து நிறுத்துவீர்கள் விடா முயற்சியின்
சின்னம் நீங்கள்!!!!!

ஏ மீன ராசி பெண்களே இந்த ஆம்புளைங்களை மொதல்ல சரி
செய்யணும்….இவங்க அப்பா, அம்மாவும் இவர எப்படிதாள்
வளர்த்தாங்களோ???? அவர்கள் குறையை சொல்லிச் சொல்லி
மாற்றி தங்கள் வழிக்கு மாற்றி ஒரு வழி செய்து விடுவீர்கள்
கிட்ட தட்ட அது உண்மையாகவும் இருக்கும். உங்களை மாதிரி
யாரும் பிளானிங் பண்ணமுடியாது்!!!

இதோ, பெண்களே, உங்களுக்கென்றே ஒருத்தர்
போட்டிருக்கிறார் ஒரு பாட்டு
T.N.தஞ்சை ராமய்யா தாஸ்
படம்- மிஸ்ஸியம்மா

இசை- S.ரஜேஸ்வர ராவ்

பாடியது ஏ.எம்.ராஜா

1955இல் வெளி வந்த படம்

பழக தெரிய வேணும் உலகில்

பார்த்து நடக்க வேணும் பெண்ணே

பழக தெரிய வேணும்..

பழங்காலத்தின் நிலை மறந்தி

வருங்காலத்தை நீ உணர்ந்து (பழக)

பிடிவாதமும் எதிர்வாதமும்

பெண்களுக்கே கூடாது..

பேதமில்லா இதயத்தோடு

பெருமையோடு பொறுமையாக (பழக)

கடுகடுவென முகம் மாறுதல்

கர்னாடக வழக்கமன்றோ

கன்னியர்கள் ஆடவரை

புன்னகையால் வென்றிடவே (பழக)

                                ***

 tags –நீ பாதி நான் பாதி ,ஜோதிடக் கட்டுரை