உலக இந்து சமய செய்தி மடல் 26-12-2021 (Post No.10,490)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,490

Date uploaded in London – –   26 DECEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை டிசம்பர்  26-ஆ ம் தேதி 2021 ஆம் ஆண்டு

இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

Xxxxx

காசிக்கு செல்லுங்கள்‘: பிரதமர் மோடி

 எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை பற்றி கவலைப்படாமல், புனித நகரமாகிய உத்தர பிரதேசத்தின் காசியை சுற்றுலா தலமாக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார் பிரதமர் மோடி. பார்லிமென்ட் கூட்டத்தொடரின் போது, மாநிலம் வாரியாக பாரதீய ஜனதா கட்சி எம்.பி.,க்களை சந்தித்தார் மோடி.

நீங்கள் அனைவரும் காசிக்கு சென்று விஸ்வநாதரின் அருளைப் பெற்று வாருங்கள்; தொகுதி மக்களிடம் காசியைப் பற்றி சொல்வதுடன், அவர்களையும் காசிக்கு போகச் சொல்லுங்கள்’ என அவர்களிடம் கூறினார். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகனிடமும் காசிக்கு செல்லும்படி கூறினார் மோடி. மேலும் காசி பற்றி எழுதப்பட்ட புத்தகங்களை அனைத்து உறுப்பினர்களுக்கும் கொடுத்து வருகிறார மோடி.

ந்த புத்தகங்கள் ஹிந்தியில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி வாரணாசியின் எம்.பி., யாக தேர்வு செய்யப்பட்ட பின், இந்த புதிய நகரத்தை எப்படி சீரமைத்துள்ளார் என இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. தமிழ் உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் இந்த புத்தகங்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, விரைவில் வழங்கப்பட உள்ளன.

Xxxx

திருமலை இலவச டோக்கன் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம்.

திருப்பதி–திருமலை தேவஸ்தான இணையதளத்தில் சர்வதரிசன இலவச முன்பதிவு டோக்கன்கள் நேற்று வெளியிடப்படாததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.


நேற்று காலை சர்வதரிசன இலவச தரிசன டோக்கன்கள் வெளியிடப்படும் என செய்தி வெளியானது. ஆனால், தேவஸ்தான இணையதளத்தில் டிக்கெட்டுகளின் முன்பதிவு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். விரைவு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாதவர்கள், சர்வதரிசன டோக்கன்கள் முன்பதிவிற்காக காத்திருந்து ஏமாற்ற அடைந்தனர். ஒமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருவதால், சர்வ தரிசன டோக்கன் வெளியீடு குறித்து அதிகாரிகள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்பட்டது.இந்நிலையில் ஜனவரி மாதத்துக்கான சர்வ தரிசன டோக்கன்கள் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

xxx

சபரிமலை கோயிலில் இன்று மண்டல பூஜை நிறைவு: ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து இன்று சிறப்பு பிரார்த்தனை

சபரிமலை,- -சபரிமலையில் இன்று மதியம் மண்டல பூஜை நடைபெறுகிறது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். மகரவிளக்கு கால பூஜைகளுக்காக டிச.,30 மாலை மீண்டும் நடை திறக்கப்படும்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை இன்று  நிறைவடைவதை ஒட்டி நேற்று  மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மண்டல பூஜைக்காக தங்க அங்கி கடந்த 22ம் தேதி ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது.

மண்டல பூஜை நிறைவடைவதை ஒட்டி சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனிடையே எரிமேலியில் நடைபெற்ற பேட்டை துள்ளல் நிகழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள் மேளதாளம் முழங்க ஆடி, பாடி வழிபட்டனர்.

மகரவிளக்கை ஒட்டி ஐய்யப்பன் கோயில் நடை மீண்டும் வருகிற 30ம் தேதி திறக்கப்படவுள்ளது. 31ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதனை தொடர்ந்து மகர ஜோதி பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனம் ஜனவரி மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ளது

Xxx

கர்நாடகா: கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா நிறைவேற்றம்!

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வரும் கர்நாடக மாநிலத்தில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதாகவும், இதை தடுக்க சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அம்மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார். 

அதன் படி, கட்டாய மதமாற்றத்தை தடுக்கும் நோக்கத்தில் கர்நாடக மத சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மசோதா கர்நாடக சட்டசபையில்  நிறைவேற்றப்பட்டது.

முக்கிய அம்சங்கள்

மதமாற்ற தடை சட்ட மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

* மதம் மாற விரும்புபவர்கள் 2 மாதங்களுக்கு முன்பே அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். 

* மதம் மாறினால், அவர்களின் அடிப்படை சாதியின் மூலம் கிடைக்கும் இட ஒதுக்கீட்டின் பலன்கள் உள்பட அனைத்து சலுகைகளையும் இழப்பார்கள். அதே நேரத்தில் அவர்கள் சேரும் மதத்தில் கிடைக்கும் சலுகைகளை பெற முடியும். 

* இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

* சிறுவர்கள், பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களை மதம் மாற்ற முயற்சி செய்தால் அத்தகையவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

கூட்டு மதமாற்றத்துக்கு… 

* மேலும் தவறு செய்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அம்சமும் மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

*அதே போல் கூட்டு மதமாற்றம் செய்தாலும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.

மேற்கண்டவை அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த போதும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சித்தராமையா முதலமைச்சராக இருந்த காலத்தில் அவர்தான் இதை முதலில் கொண்டு வந்தார் என்று பாரதீய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டியவுடன் அவர்களுடைய எதிர்ப்பு முனை மழுங்கிப்போனது ; அவர்களால் அதற்கு மேல் வாய் திறக்கமுடியவில்லை ஜனதா தள மும் , காங்கிரஸ் கட்சியைக் கடுமையாகத் தாக்கியது

தற்போது நிறைவேற்றப்பட்ட கட்டாய மதமாற்ற மசோதா அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து மசோதா சட்டமாக அமலுக்கு வர உள்ளது.

XXXX

XXXX

கோயில் சொத்து ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்ற நடவடிக்கை; தமிழக அரசு அதிரடி

மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாநிலம் முழுவதும் கோயில் நில அபகரித்தவர்கள் மற்றும் சொத்து பட்டியலை தயாரித்து நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதன்படி பல ஏக்கள் நிலங்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது . இந்நிலையில் கோயில் சொத்து மற்றும் கட்டடங்களில் வாடகை தராமல் பலரும் எத்தனித்து வந்தனர். இந்த விவரம் அரசுக்கு தெரிய வந்தது. இதன்படி இது போன்று வாடகை தராமல் இருப்பவர்கள் மற்றும் ஒப்பந்த காலம் முடிந்து வெளியேறாமல் இருப்போர் மீதும் கடும் குற்ற நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது தொடர்பான விசாரணைக்கு கோயில் நிர்வாகிகள் தகுந்த ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர். குற்றம் அறிந்தவர்கள் யாரும் இந்த புகாரை அளிக்க முன் வரலாம். இதனால் பலர் ஆடிப்போயுள்ளனர்.

Xxx

திருப்பதி பாலாஜி வெங்கடாசலபதியை

ராஜபக்சே  தரிசித்தார்.

திருப்பதி,–திருமலை பாலாஜி வெங்கடாசலபதியை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தரிசித்தார். இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இரண்டு நாட்கள் பயணமாக தன் குடும்பத்துடன்  திருப்பதிக்கு வந்தார்.

 இரவு திருமலையில் தங்கிய அவர், காலை தன் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றார். தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனர்.

தரிசனம் முடித்து திரும்பிய, அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகர் மண்டபத்தில் பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை, தீர்த்த பிரசாதம், ஏழுமலையான் திரு வுருவப்படம் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

Xxx

தமிழகத்தில் அறநிலையத் துறை என்ன செய்கிறது? மத்திய தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி காட்டம்!

  • தமிழகத்தில் 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை.
  • தமிழகத்தில் அறநிலையத் துறை என்ன செய்கிறது?
  • மத்திய வெளியுறவு கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி சரமாரி கேள்வி
  • மத்திய வெளியுறவு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறையின் அமைச்சர் மீனாட்சி லேகி காஞ்சிபுரத்தில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின்னர், ஆலய வளாகத்தில் உள்ள சிற்பங்களின் கலை நுணுக்கங்களையும் பார்வையிட்டார்.

    இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது. உதாரணமாக கன்னியாகுமரி கோயிலையும் சொல்லலாம். கன்னியாகுமரி பகவதி அம்மன் அணிந்திருந்த மூக்குத்தியிலிருந்து வரும் ஒளியானது கடலில் கப்பல்கள் செல்ல இடையூறாக இருக்கிறது என 18 வது நூற்றாண்டில் பிரிட்டிஷார் அக்கோயிலின் கிழக்கு வாசலை மூடியிருக்கிறார்கள்.

    தற்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வந்து விட்ட பிறகும் கோயிலின் கிழக்கு வாசல் கதவு இன்று வரை மூடியே இருக்கிறது. கோயில் கிழக்குவாசல் கதவை திறக்க வேண்டும்


  • கன்னியாகுமரி ஊராட்சி நிர்வாகத்துக்கு மத்திய அரசின் சுற்றுலாத்துறை மூலம் நகரை அழகுபடுத்துவதற்கென நிதி அனுப்பப்பட்டிருந்தது. அந்நிதியைப் பயன்படுத்தி கன்னியாகுமரியில் போதுமான வசதிகள் செய்யப்படாமல் டைல்ஸ் மட்டுமே பதித்திருக்கிறார்கள்.

    தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் 5 ஆயிரம் கோயில்கள் இருந்தாலும் அதை முறையாக கண்காணித்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறோம். மேலும் என்னென்ன தேவைப்படும் என்பதை அறியவே காஞ்சிபுரம் வருகை தந்துள்ளேன்.

    காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களின் வரலாறுகளும், கலைச்சிற்பங்களும் வியக்கத்தக்கவையாகவே இருக்கின்றன.
    காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில் ஆகியனவற்றுக்கு இதுவரை அறங்காவலர்கள் கூட நியமிக்கப்படவில்லை.


  • இக்கோயில்களுக்கு ஏதேனும் உதவிகளோ அல்லது வசதிகளோ தேவைப்பட்டாலும் கடிதம் மூலம் என்னைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

  • !காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், வரதராஜப் பெருமாள் கோயில், வைகுண்டப் பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் மத்திய அமைச்சர் சுவாமி தரிசனம் செய்தார்.

  •  
  • அனைவருக்கும்   ஞான மயம் குழுவினர்  ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிகின்றனர் .
  • மீண்டும் புத்தாண்டில் சந்திப்போம்

XXXXXXXXXX

  • இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND
  • நன்றி, வணக்கம்
  • Tags- Tamilhindunews, 26122021

உலக இந்து சமய செய்தி மடல் 7-11-2021 (Post No.10,309)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 10,309

Date uploaded in London – –   7 NOVEMBER  2021         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஞாயிற்றுக் கிழமை நவம்பர் 7 -ம் தேதி 2021

ஆம் ஆண்டு

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,


நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI ANAND


 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் FACEBOOK.COM/ GNANAMAYAM மற்றும் ZOOM வழியாக நேரடியாகக் கேட்கலாம்./ காணலாம்.

XXX

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் -கோவில்களில் சிறப்பு வழிபாடு

நரகாசுரனை   கிருஷ்ணர் வதம் செய்ததை நினைவுபடுத்தும் வகையில், வடமாநிலங்களில் நரகாசுன் உருவ பொம்மைகளை எரித்து தீபாவளி கொண்டாடுகின்றனர். கோவா மாநில தலைநகர் பனாஜியில்  நரகாசுரன் உருவ பொம்மைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். வட நாட்டில் தீபாவளி பண்டிகையை 5 நாட்களுக்குக் கொண்டாடுவார்கள்  .

XXXXX

அமெரிக்கா, பிரிட்டனில் தீபாவளி விழாக்கள்

இதேபோல் உலகம் முழுவதிலும் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரும் தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர். 

அமெரிக்காவில் முதல் தடவையாக தீபாவளி பட்டாசு வாண வேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் அவரது மனைவியும் தீப  படத்துடன் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். இதே போல துணை ஜனாதிபதி திருமதி கம லா ஹாரிஸும் வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

பிரிட்டனில் பார்லிமெண்ட் தீபாவளி விழா ஆன் லைனில் நடந்தது. பிரதமர் பாரிஸ் ஜான்சன் வீடியோ பதிவில் வாழ்த்து அனுப்பினார். உட்துறை அமைச்சர்  திருமதி ப்ரீதி படேல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்

பார்லிமென்டின் இந்து மதகே குழுவின் தலைவரும் இந்தியாவில் உயரிய விரு து பெற்றவருமான பாப் ப்ளாக்க்மன் பாப் பிளாக்மான்  இந்த ஆண்டு தீபாவளி நாட்களில் 24 மணி நேரத்துக்குள் 12 கோவில்களுக்கு விஜயம் செய்து தரிசிப்பேன் என்றார் . அவரை அடுத்து பேசிய உட்துறை அமைச்சர் ப்ரீதி படேல் தன்னால் பாப்  பிளாக்மானுடன் போட்டி போட இயலாது என்றும் தான் வழக்கமாகப் போகும் சின்னக் கோவிலுக்கு அப்பா அம்மாவுடன் போகப் போவதாகவும் தெரிவிதார்

பார்லிமென்ட் தீபாவளி விழாவை பிரிட்டிஷ் இந்துப் பேரவை ஆண்டுதோறும் நடத்துகிறது

REENA RANGER PRESENTED THE HINDU FORUM EVENT

XXX

பிரிட்டனில் காந்திஜி, மஹா லெட்சுமி உருவத்துடன் நாணயங்கள் வெளியீடு

பிரிட்டனின் நிதியமைச்சரான ரிஷி சுனக், ஒரு புதிய தீபாவளிப் பரிசை அறிவித்தார்.தீபாவளியைக் கொண்டாடும் முகத்தான், 5 பவுண்ட் மதிப்புள்ள மஹாத்மா காந்தி உருவம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படுமென்றார்.

 பொதுவாக, இது நாணயம் சேகரிப்போருக்காக வெளியிடப்படும். சாதாரண 5 பவுண்ட் நாணயத்தோடு வெள்ளி தங்கத்திலும் நாணயங்கள் வெளியிடப்படும்  .

இவை தவிர செல்வ தேவதையான லட்சுமி உருவம் பொறித்த தங்க பிஸ்கட்டுகளும் தங்கப் பாளங்களும் வெளியிடப்படும் என்று நிதி அமைச்சர் ரிஷி அறிவித்தார் .

இது இந்தியர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. பிரிட்டனில் மிக முக்கிய அமைச்சர் பொறுப்புகள் இந்திய வம்சாவளியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது

.

XXX

திருமலை பாலாஜி வெங்கடேஸ்வரர் காணிக்கை ரூ.4.16 கோடி

திருமலை பாலாஜி வெங்கடேஸ்வரரை  தரிசிக்க வரும் பக்தர்கள், தரிசனம் செய்த பின் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரன்சிகள் என பிரித்து கணக்கிடுகிறது.

அவ்வாறு பக்தர்கள், தீபாவளிக்கு முந்தைய நாள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் 4.16 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. ‘இது கடந்த சில மாதங்களில் வசூலான, உண்டியல் வருவாய்களில் அதிகபட்சமானது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

XXX

கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு; ஆதி சங்கரர் சிலை திறப்பு

உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையை திறந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சிறப்பு பூஜை செய்து வழிப்பட்டார்.

உத்தரகண்டில் 2013ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோவில் சேதம் அடைந்தது. கோவில் அருகே இருந்த ஆதி சங்கராச்சாரியார் சமாதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோவில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணியை 500 கோடி ரூபாய் செலவில் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன.

கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயரமும், 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் கற்சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி யோகிராஜ் செதுக்கி உள்ளார்.

இந்த சிலை உருவாக்கத்திற்காக 120 டன் கல் கொண்டுவரப்பட்டு, 2020 செப்டம்பரில் சிலை செதுக்கும் பணி துவங்கியது. ஆதி சங்கரரின் அமர்ந்த நிலையிலான இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி நவ.,05-ம் தேதி திறந்து வைத்தார். முன்னதாக அங்குள்ள தேவ மந்திரங்கள் முழங்கிட சிவன் மற்றும் நந்தி சிலைகளுக்கு பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.

XXXX

9 லட்சம் தீபங்களுடன் அயோத்தியில் தீப உற்சவம் – புதிய உலக சாதனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தீபாவளியை முன்னிட்டு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் தீப உற்சவம் நடைபெற்று வருகிறது.

தீப உற்சவ நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக அயோத்தி நகரின் சரயு நதி கரையோரத்தில் ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட அகல் விளக்குகளை ஏற்றிக் கொண்டாடினர். இதனால் அயோத்தி முழுவதும் தீப ஒளி வெள்ளத்தில் ஜொலித்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக சுற்றுலாத்துறை இணை மந்திரி கிஷண் ரெட்டி பங்கேற்றார். மாநில கவர்னர்  ஆனந்திபென் படேல், மாநில அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது சுமார் 6 லட்சம் அகல் விளக்குகளை ஏற்றியது கின்னஸ் சாதனை படைத்த நிலையில், இந்த ஆண்டு ஒன்பது லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய கின்னஸ் சாதனை ஆனது.

XXXX

சபரிமலை நடை திறப்பு: மண்டல பூஜைக்காக முன்னேற்பாடுகள் தீவிரம்


சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜை விமரிசையாக நடைபெறும். இதில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கோயிலுக்கு வருவர். இந்த ஆண்டு மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.

கோயிலில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் 24 மணி நேரத்துக்குள் பரிசோதனை செய்து கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்றார்.

பக்தர்களின் வசதிக்காக, பம்பா மற்றும் நிலக்கல் பகுதியில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறினார்.

 ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே இந்த ஆண்டு சபரிமலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.

XXXX

தமிழகம் முழுவதும் முருகன் கோவில்களில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி திருவிழா  யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

சூரசம் ஹாரம் 9-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மதியம் விஸ்வரூப தரிசனம், உதய மார்த்தாண்ட அபிஷேகம், உச்சிகால அபிஷேகம், சாயரட்சை தீபாராதனை, மாலை 4.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
7-ம் திருவிழாவான 10-ந்தேதி இரவு திருக் கல்யாண வைபவம் நடக்கிறது. கொரோனா தடுப்ப நடவடிக்கையாக சூரசம்ஹாரம், திருக்கல்யாணம் நடைபெறும் 9 மற்றும் 10-ந்தேதிகளில் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை. மற்ற நாட்களில் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
Xxxxx

திருவண்ணாமலை கார்த்திகை மகாதீப விழா: தேரோட்டம், கிரிவலம் ரத்து

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாவிழா உலக பிரசித்திப் பெற்றது. இந்த திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்குகிறது.



விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மகாதீபவிழா நாட்களில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மாட வீதியில் நடைபெறும் மகா தேரோட்டம், இந்தாண்டும் நடைபெறாது. அதற்கு மாற்றாக, கோவில் வளாகத்தில் உள்ள 5ம் பிரகாரத்தில் சாமிகளின் உலா நடைபெறும். கிரிவலம் நடைபெறாது

ஆண்டுதோறும் நடைபெறும் குதிரை சந்தை மற்றும் மாட்டு சந்தைக்கும் அனுமதி இல்லை.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் VAISHNAVI ANAND

நன்றி, வணக்கம்

tags–tamilhindunews,7112021

உலக இந்து சமய செய்தி மடல் 13-6-2021 (Post No.9728)

Compiled  BY LONDON SWAMINATHAN

Post No. 9728

Date uploaded in London – –13 JUNE   2021           

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று ஜூன் 13 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது ராணி ஸ்ரீனிவாசன் Rani Srinivasan

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 2 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம்.

Xxxx

கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் – அமைச்சர் சேகர்பாபு

அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

இந்து சமய அறநிலையத்துறையின் அலுவலர் ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சேகர் பாபு தலைமையில்  ஜூன் 12 ம் தேதி   நடைபெற்றது. இதில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தைச் செயல்படுத்துவது, தமிழில் அர்ச்சனை செய்வது, தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை நடைபெறும். தமிழில் அர்ச்சனை செய்வதற்கு பயிற்சி அளிக்கப்படும். முக்கிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற பலகை வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர் , செல்போன் எண் அறிவிப்பு பலகையில் இடம் பெறும்.

மேலும் அவர் கூறுகையில், மதம் சார்ந்த விஷயங்களில் யாருடைய மனமும் புண்படக் கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், திருச்சி ஜீயர் நியமனத்திலும் தொடர்ந்து எந்த நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வந்ததோ, அதே நடைமுறையை பின்பற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

100 நாட்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக இருப்பார்கள். பெண்களும் அர்ச்சகர்களாக  விருப்பப்பட்டால், தமிழக அரசின் உதவி மூலம் முறையான பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள். கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள 30 கோயில் யானைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது என்றார். 

xxxx

சிவபெருமான் கையில் மதுபானம்: சர்ச்சை ஸ்டிக்கரால் இன்ஸ்டாகிராம் மீது வழக்கு

சிவபெருமானை சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டிக்கராக செய்ததற்காக, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் புகைப்படங்கள் பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. பேஸ்புக்கை தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில், பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில், சிவன் என தேடினால், சிவபெருமானின் கார்ட்டூன் ஒன்று, ஒரு கையில் மொபைல்போனும், மறுகையில் மதுபானமும் வைத்துள்ளது போன்ற ஸ்டிக்கர் ஒன்று உள்ளது.


இதை கண்ட பலர் இன்ஸ்டாகிராம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டில்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து தற்போது அந்த ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Xxxx

கோயில்களை பாதுகாக்க வேண்டும்.. கோயில் நகைகள், சிலைகள் பற்றியும் ஐகோர்ட் உத்தரவு

மாநிலத்திலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் மத்திய சிலை கடத்தல் பிரிவை அமைக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தமிழ அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழகம் முழுவதும் உள்ள தொன்மையான கோவில்களைப் பாதுகாப்பது தொடர்பாக, கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 121 கோவில்கள் உள்ளன.

மேலும், மாநிலத்திலுள்ள 44 ஆயிரம் கோவில்களில் 32 ஆயிரத்து 935 கோவில்கள் நல்ல நிலையில் இருப்பதாகவும், 6,414 கோவில்கள் சிறிய சீரமைப்புப் பணிகள் செய்ய வேண்டிய நிலையில் இருப்பதாகவும், 530 கோவில்கள் பாதி சிதிலமடைந்துள்ளதாகவும், 716 கோவில்கள் முழுமையாகச் சிதிலமடைந்துள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பாதி சிதிலமடைந்த, முழுமையாகச் சிதிலமடைந்த இந்த கோவில்களை யுனெஸ்கோ விதிகளின்படி சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோவில்களைப் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களின் பட்டியலைத் தயாரித்து, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

கோவில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றைப் பட்டியலாகத் தயாரிக்க வேண்டும்; கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம் அமைத்து, இந்த சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அனைத்து மாவட்டங்களுக்கும் தகுதியான ஸ்தபதிகளை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலைகள், நகைகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோவிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

கோவில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளதுடன்,கோவில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்குத் தனி தீர்ப்பாயம் அமைக்கவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். கோவில்களின் கணக்கு வழக்குகளை மத்திய கணக்குத் தணிக்கை துறை தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவை அமைக்க வேண்டும் எனவும், கோவில்களுக்குச் சொந்தமான நீர்நிலைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். கோவில் நிலங்கள், சொத்துக்களைத் திருடியவர்கள், சேதப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர். இந்த உத்தரவுகளை 12 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் எனவும், அது குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளன

xxxx

கோவில் நிலங்களை குறைந்த வாடகைக்கு விடக்கூடாது: நிலுவை தொகையை வசூலிக்கவும் வலியுறுத்தல்

”கோவில் நிலங்களை வைத்து என்ன செய்யலாம் என்பது, அறங்காவலர் அதிகாரத்திற்கு உட்பட்டது; அரசு பொதுவான வழிகாட்டுதலை மட்டுமே தர முடியும். கோவில் இடத்தை குறைந்த வாடகைக்கு விடுகிறோம் என சொல்வது, சந்தனக்கட்டை வைத்து கொண்டு அடுப்பு எரிக்கலாம் என்று சொல்வது போன்றது,” என, ஆலயவழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:வடபழநி ஆண்டவர் கோவிலுக்குச் சொந்தமான, 300 ரூபாய் கோடி மதிப்பி லான, 5.52 ஏக்கர் நிலத்தை, அறநிலையத்துறை அமைச்சரும், கமிஷனரும் தனிக்கவனம் செலுத்தி மீட்டது, மகிழ்ச்சி அளிக்கும் செயல். ‘கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அவை மீட்கப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்படும்’ என, அமைச்சர் கூறியுள்ளார். அதையும் வரவேற்கிறோம்.அதேசமயம், அறநிலையத்துறை அமைச்சர், கமிஷனருக்கு சில விஷயங்களை கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

*கோவில் நிலங்களை யார் ஆக்கிரமித்தாலும், அவை மீட்கப்படும் என்று, அமைச்சர் கூறியுள்ளது நம்பிக்கை அளிக்கிறது. தற்போது, அத்தகைய மிக மதிப்புள்ள, ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் பல உள்ளன.அதன்படி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பரணி தீப கட்டளையின், 500 கிரவுண்ட் நிலம் சென்னை அடையாறிலும்; 175 கிரவுண்ட் நிலம் ராயப்பேட்டையிலும் உள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 250 கிரவுண்ட் நிலங்கள் கிரீன்வேஸ் சாலையிலும்; 150 கிரவுண்ட் நிலங்கள் லஸ் சர்ச் சாலை, ராமகிருஷ்ணா சாலையிலும் உள்ளன.காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 141 கிரவுண்ட் நிலம் மீட்கப்படாமல் உள்ளது. கோடம்பாக்கம், பாரத்வாஜேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 350 கிரவுண்ட் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த ஒரு கோவிலுக்கு மட்டும், 60 கோடி ரூபாய் வாடகை பாக்கி வரவேண்டியுள்ளது.

இவை அனைத்தும் சிறிய உதாரணங்கள் மட்டுமே. இந்த நிலங்கள் எல்லாம் மீட்கப்பட வேண்டும். வாடகை நிலுவை வசூல் செய்யப்பட வேண்டும் என ஆலயவழிபடுவோர் சங்கத் தலைவர் டி.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.
xxx

ராமர் கோவில் கட்டுமானம்; டிசம்பரில் கற்தூண் பணிகள்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமையவுள்ள ராமர் கோவிலுக்கு அஸ்திரவாரம் அமைக்கும் பணி அக்டோபருக்குள் முடியும் என்றும், டிசம்பரில் இருந்து கற்துாண் அமைக்கும் பணி துவங்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறியுள்ளதாவது: ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, அஸ்திவாரம் அமைக்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. பூமிக்கு 50 அடி ஆழத்தில், 400 மீட்டர் நீளம், 300 மீட்டர் அகலம் உடையதாக பிரமாண்ட கோவிலின் அஸ்திவாரம் அமைகிறது.

இந்த அஸ்திவாரம் அமைக்கும் பணி, வரும் அக்டோபருக்குள் முடியும். அதன்பின், கோவிலுக்கான கற்துாண்கள் உள்ளிட்ட இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள், டிசம்பரில் துவங்கும்.இதற்கான கற்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

xxx

காஷ்மீரின் வைஷ்ணவ தேவி கோயிலில் தீ விபத்து

காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காஷ்மீரின் ரீசாய் மாவட்டத்தில் கத்ரா நகரில் பிரசித்தி பெற்ற வைஷ்ண தேவி கோயில் உள்ளது. கோயில் வளாகத்தினுள் போடப்பட்டிருந்த கொட்டகையில் திடீரென தீ பற்றிக்கொண்டது. கொட்டகை முழுவதும் தீக்கிரையானது.

தகவலறிந்த தீயணைப்பு படையினர் வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதுவும் இல்லை. நிலைமை கட்டுக்குள் உள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாகி தெரிவித்தார். தீ விபத்திற்கான காரணம் குறி்த்து விசாரணை நடந்து வருகிறது.

Xxx

மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடு

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற ண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் கடந்த 2-ந்தேதி ஏற்பட்ட தீ விபத்தில் கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணிகள் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று கோவிலில் அடுத்த வாரம் தேவ பிரசன்னம் பார்ப்பதற்கு குமரி மாவட்ட திருக்கோவில்கள் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இதற்கான அனுமதியை இந்து அறநிலையத்துறை ஆணையர் அளித்துள்ளதாக கோவில் வட்டாரம் தெரிவித்துள்ளது. ஆனால், தேவ பிரசன்னம் பார்ப்பதற்கான நாள் குறிக்கப்படவில்லை. அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் பார்ப்பதற்கு நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

அதன்படி தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக 9 கேரளா தந்திரிகளை கோவில் நிர்வாகம் அழைத்துள்ளது. இந்த 9 பேர்களின் பெயரை சீட்டில் எழுதி அம்மன் சன்னதியில் குலுக்கி போட்டு அதில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார். குலுக்கல் முறையில் தேர்வாகும் தந்திரியே தேவ பிரசன்னம் பார்ப்பார். தேவ பிரசன்னம் பார்த்து எடுக்கும் முடிவின் அடிப்படையில் பரிகார பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



xxxxx

கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியீடு

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பொதுமக்கள் அதன் விவரங்களை பார்த்து பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றுக்கு சொந்தமாக 4 லட்சத்து 78 ஆயிரத்து 272 ஏக்கர் நிலங்கள் உள்ளன. அவற்றின் உரிமை ஆவணங்களை சரிபார்க்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது. கோவில் நிலங்களின் உரிமை ஆவணங்களை வருவாய் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ‘தமிழ் நிலம்’ மென்பொருளோடு ஒப்பீடு செய்து முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதி அளவு ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என பிரிக்கப்பட்டு உள்ளன.

Xxxx

வாழ் நாள் சாதனையாளர் விருது

மயிலாடுதுறையிலுள்ள சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமி அதன் முதலாவது ஆண்டுவிழாவை இணையம் வாயிலாக ஜூன் 11,12, 13ம் தேதி கொண்டாடியது. இன்றும் நேற்றும் வாழ் நாள் சாதனையாளர் விருது பலருக்கு வழங்கப்ப ட் டது. லண்டன் முருகன் கோவில் தலைமைக்கு குருக்கள் ஸ்ரீ நாகநாத சிவாச்சாரியார் அவர்களுக்கு இன்று சாதனையாளர் விருது கிடைப்பது குறித்து லண்டன் வாழ் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். லண்டன் உலக இந்து மஹா சங்கம் , அகாதமிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவோர் :- காஞ்சிபுரம் கே ராஜப்பா  சிவாச்சாரியார் , லண்டன் முருகன் கோவில் தலைமைக் குருக்கள் ஸ்ரீ நாகநாத சிவாச்சாரியார் , திருவிடை மருதூர் கண்ணப்ப சிவாச்சாரியார் ,மஹாதேவ குருக்கள், மதுரை  தங்கம் பட்டர்.

விருது பெற்ற அனைவருக்கும் ஞானமயம் குழு வாழ்த்து தெரிவிக்கிறது

xxx

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர்

ராணி ஸ்ரீனிவாசன்

நன்றி, வணக்கம்

tags- tamilhindunews, roundup13621,

உலக இந்து சமய செய்தி மடல் 7-2-2021 (Post No.9240-B)

Compiled BY LONDON SWAMINATHAN

Post No. 9240-B

Date uploaded in London – –7 FEBRUARY  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இன்று FEBRUARY 7 -ஆம் தேதி —  ஞாயிற்றுக் கிழமை ,2021

உலக இந்து   சமய செய்தி மடல்

தொகுத்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

 இது ‘ஆகாச த்வனி’ யின் உலக இந்து சமய செய்தி மடல் நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்,

நமஸ்காரம் செய்திகள் வாசிப்பது VAISHNAVI     ANAND 

 எங்கள் நிகழ்ச்சிகளை ஞாயிற்றுக் கிழமை தோறும் லண்டன் நேரம் பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரம் மாலை 6-30 மணிக்கும் நேரடியாகக் கேட்கலாம். உலக இந்து சமய செய்தித் தொகுப்புடன் நேயர்களின் கேள்விகளுக்கு விடைகளும் அளிக்கப்படுகிறது.

எங்களை எந்நேரமும் தொடர்பு கொள்ள Facebook.com / Gnana mayam முகவரியில் அணுகவும்

Xxx

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்கு காஞ்சி சங்கர மடம் சார்பில் ரூ.6 கோடி நிதி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சி சங்கர மடத்தின் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தொகை ரூ.6 கோடியை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் முன்னிலையில் காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கினார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிக்காக காஞ்சீபுரம் சங்கர மடத்தில் பொதுமக்கள் அனைவரும் காணிக்கை செலுத்துவதற்காக இரு பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன. அதில் காலையிலிருந்தே கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலரும் வரிசையாக நின்று காணிக்கைகளை உண்டியல்களில் செலுத்தினார்கள். மொத்தமாக சேர்ந்த நிதியை ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையிடம் வழங்கும் விழா மாலையில் சங்கரமட வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு காஞ்சீ சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்து அருளாசியுரை வழங்கினார். உடுப்பி பேஜாவர் மடத்தின் பீடாதிபதி விஷ்வப்பிரசன்னதீர்த்த சுவாமிகள் முன்னிலை வகித்தார். பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி எஸ்.ராமச்சந்திரன் வரவேற்று பேசினார்.

விழாவில் தஞ்சாவூரை சேர்ந்த எம்.ஜி.வி.மோகன் என்ற கல்வியாளர் ரூ.5 கோடியும், சென்னை எம்.எஸ்.மூர்த்தி ரூ.25 லட்சம், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.வேதாந்தம் ரூ.19 லட்சம், சென்னை ஜெயசங்கர் ரூ.14 லட்சம், புனே சங்கர மடம் சார்பில் ரூ.5 லட்சம், ஹைதராபாத்தை சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத சங்கர மடத்தின் பக்தர் ரூ.25 லட்சம், ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் பொருளாளரான கோவிந்த தேவ்கிரி சுவாமிகள் சங்கர மடத்தின் பக்தர் என்பதற்காக அவர் ரூ. 11 லட்சம் என பலரும் காணிக்கையாக தனித்தனியாக வழங்கினார்கள்.

இவர்களைத் தவிர சங்கரா கலை அறிவியல் கல்லூரி பழைய மாணவர்கள் சார்பில் ரூ.1.50 லட்சம் உட்பட பொதுமக்கள் வழங்கிய தொகை ரூ.1 கோடியும் சேர்த்து மொத்தம் ரூ.6 கோடி நிதி அயோத்தி கோயில் கட்டும் பணிக்காக சங்கரமடம் பக்தர்கள் சார்பில் காணிக்கையாக வழங்கப்பட்டது.

விழாவினை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் பிருந்தாவனம் வெள்ளி வேலுடன் கூடிய வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

Xxxxxx

இந்து கடவுள்களை தொடர்ந்து அவமதிப்பதாக கூறி எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய பெண் வக்கீல்; பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு

கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக இருந்து வருபவர் கே.எஸ்.பகவான் (வயது 75). இவர் சமீபகாலமாக இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது. ராமர் ஒரு குடிகாரர் என்று கூறி கே.எஸ்.பகவான் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். மேலும் அவர் தொடர்ந்து இந்து கடவுள்களை அவமதித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கே.எஸ்.பகவான் மீது போலீஸ் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் சமீபத்தில் இந்து மதம் என்று எதுவும் இல்லை. இந்து மதம் அவமானகரமானது. கண்ணியம் உள்ளவர்கள் இந்து மதத்தில் இருக்க கூடாது என்று கே.எஸ்.பகவான் கூறி இருந்தார். இதையடுத்து இந்துக்களை அவமதித்ததாக கே.எஸ்.பகவான் மீது, வக்கீல் மீரா ராகவேந்திரா என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வருகிறது. அந்த வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 03 நடந்தது.

முகத்தில் கருப்பு மை பூச்சு

இந்த வழக்கில் ஆஜராக கே.எஸ்.பகவான், பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டுக்கு வந்து இருந்தார். அப்போது அங்கு வந்த பெண் வக்கீலான மீரா ராகவேந்திரா, இந்து மதத்தை அவமதிப்பது குறித்தும், இந்து கடவுள்களை தொடர்ந்து இழிவாக பேசி வருவது குறித்தும் கே.எஸ்.பகவானிடம் கேட்டு, தான் மறைத்து வைத்திருந்த கருப்பு மையை எடுத்து கே.எஸ்.பகவான் முகத்தில் பூசினார்.

இதனை சற்றும் எதிர்பாராத கே.எஸ்.பகவான் அதிர்ச்சி அடைந்தார். மேலும் கோர்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் வக்கீல் மீரா ராகவேந்திராவை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் பரபரப்பு உண்டானது.

தானே ஒரு வழக்கறிஞர் என்பதால் நீ தித் துறையை மதிப்பதாகவும் கே.எஸ் பகவான் போன்றோருக்கு பாடம் கற்பிக்கவே இவ்வாறு கருப்பு மை பூசியதாகவும்  மீரா கூறினார்

2 பிரிவுகளில் வழக்கு

இந்த சம்பவம் குறித்து வக்கீல் மீரா ராகவேந்திரா மீது அல்சூர்கேட் போலீசில் கே.எஸ்.பகவான் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மீரா ராகவேந்திரா மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 341 (தவறான நோக்கத்திற்காக தடுப்பது) மற்றும் 504 (வேண்டுமென்றே அவமதிப்பது, பொது அமைதியை சீர்குலைக்க முயற்சிப்பது) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்து கடவுள்களை தொடர்ந்து அவமதித்து வந்ததால் எழுத்தாளர் கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மையை பூசினேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ள வக்கீல் மீரா ராகவேந்திரா, கே.எஸ்.பகவான் முகத்தில் கருப்பு மை பூசிய வீடியோவையும் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

xxxx

சென்னையில் திருப்பதி பத்மாவதி கோவில்- நடிகை காஞ்சனா நன்கொடை

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட சென்னை ஜி.என்.செட்டி ரோட்டில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும்.



சென்னை தி.நகரில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஏற்கனவே கட்டப்பட்டுள்ளது.


இதேபோல திருப்பதி தேவஸ்தானம் பத்மாவதி தாயார் கோவிலையும் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணி நடந்து வந்தது.

இப்போது ஜி.என்.செட்டி ரோட்டில் கோவிலுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் நடிகை காஞ்சனாவுக்கு சொந்தமானதாகும். அதை அவர் நன்கொடையாக வழங்கி உள்ளார்.

மொத்தம் 14 ஆயிரத்து 880 சதுர அடியில் கோவில் கட்டப்படுகிறது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.30 கோடி ஆகும்.



கோவில் ரூ.6 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட உள்ளது.

கோவிலுக்கு ரூ.5 கோடியே 75 லட்சம் செலவாகும் என முதலில் மதிப்பீடு செய்யப்பட்டு இருந்தது. ஆரம்பத்தில் அலங்கார செங்கல் கொண்டு கட்டுவதாக முடிவு செய்து இருந்தனர்.

அதன் பிறகு ஐதராபாத், குருஷேத்ரா ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள கோவில் போல கிரானைட் மூலம் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதன் காரணமாக அதன் மதிப்பீடு தொகை ரூ.6 கோடியே 85 லட்சமாக உயர்ந்துள்ளது.

xxxxx

திருவானைக்காவல் கோவிலில் பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுப்பு

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன. தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன.

பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில். இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கோவிலில் பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்தநிலையில் இந்த கோவிலின் 3-வது பிரகாரத்தில் குபேர லிங்கேஸ்வரர் சன்னதி அருகே உள்ள சுற்றுச்சுவரை இடித்து புனரமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது, சுற்றுச்சுவர் அருகே இருந்த புதரில் நேற்று காலை சுமார் 3 அடி, 2 அடி உயரத்தில் 2 பழமையான சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டன.


தற்போது அந்த சிவலிங்கங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன. அதனை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் வளாகத்திலுள்ள நெற்களஞ்சியம் அருகே தங்ககாசு புதையல் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Xxxx

சதுரகிரி கோவிலுக்கு 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை, பவுர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல வனத்துறை, கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தை அமாவாசை வருகிற 11-ந்தேதி நடக்கிறது. இதைெயாட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.


இதனால் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வருகிற 9-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

தை அமாவாசைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வத்திராயிருப்பு வழியாக உள்ள தாணிப்பாறை மலைப்பாதை, மற்றும் மதுரை மாவட்டம் பேரையூர் வாழைத்தோப்பு மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

xxxxx

பெரம்பலூர் அருகே களிமண்ணால் அம்மாயி- பாட்டன் பொம்மை செய்து கிராம மக்கள் நூதன வழிபாடு

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தில் அம்மாயி-பாட்டன் மூதாதையர்கள் வழிபாடு ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் பொங்கல் மற்றும் தைப்பூசத்திற்கு பின்பு நடைபெறுவது வழக்கம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன அடையாளம் தெரியாத மூதாதையர்கள் கரடுமுரடான நிலங்களை திருத்தியும், நெருப்பு, சக்கரம் உள்ளிட்ட உபகரணங்களை கண்டுபிடித்தும் தற்போது வாழும் வாழ்க்கையை செம்மைப்படுத்தி உள்ளனர்.

அதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூதாதையர் வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு அம்மாயி-பாட்டன் நூதன வழிபாடு பிப்ரவரி மூன்றாம் தேதி  நடந்தது. கிராம மக்கள் மூதாதையர்களின் உருவம் போன்று களிமண்ணால் பொம்மை செய்து, அவற்றை கன்னிப்பெண்களின் தலையில் சுமந்து வரச்செய்து, ஊரின் நடுவில் பந்தல் அமைத்து அதில் வைத்து நள்ளிரவில் வழிபட்டனர்.


மூதாதையர்களின் உருவ பிரதிமைகளுக்கு மாவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர். பின்னர் விடியும் வரை காவல் காத்து காலையில் சூரிய ஒளியில் தென்பட்டவுடன் உருவபொம்மைகளை நீர்நிலைகளுக்கு மேளதாளங்கள் முழங்க ெகாண்டு சென்று, கரைத்து விட்டு வீடுகளுக்கு திரும்பினர். இதனையொட்டி பெண்கள் குலவையிட்டு, கும்மி பாட்டுக்களை பாடி கோலாட்டம் ஆடினர். நாட்டுப்புறப்பாடல்களும் பாடப்பட்டன.

இத்துடன் லண்டனிலிருந்து வரும் செய்திகள் நிறைவடைந்தன………………………….. செய்திகளை உங்களுக்கு வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த்………………………… நன்றி, வணக்கம்

tags-  tamilhindunews, 7221