சுவையான கதை: கர்ணன் கேட்ட கேள்வியும் கண்ணன் சொன்ன பதிலும்

கர்ண

கட்டுரை எண் 1713; தேதி 13 மார்ச் 2015

எழுதியவர் – லண்டன் சுவாமிநாதன்

லண்டன் நேரம்—காலை 5—53

சுதந்திரப் போராட்ட வீரர் சுப்ரமண்ய சிவா மோக்ஷ சாதன ரஹஸ்யம் என்ற ஒரு அரிய நூலை எழுதியுள்ளார். பெரிய புத்தகம்—அரிய புத்தகம் – 830 பக்கங்கள் – வெளியாயான ஆண்டு 1925. தமிழ்நாட்டில் கிடைப்பது அரிது என்றவுடன் லண்டனில் பிரிட்டிஷ் லைப்ரரிக்குச் சென்று அதைப் படித்தேன். அவர் சொன்ன சுவையான கதை. ஆனால் அவர் சொற்களில் சொல்லாமல் சுருக்கமாக என் சொற்களில் சொல்லிவிடுகிறேன். அன்ன தானத்தின் பெருமையைச் சொல்லும் கதை இது:–

போர்க் களத்தில் வீழ்ந்து கிடக்கிறான் கொடை வள்ளல் கர்ண மாமன்னன். தண்ணீர்! தண்ணீர்! ஒரே தாகம், தயவு செய்து தண்ணீர் தாருங்கள் என்று நாக்கு வறள கத்துகிறான். அந்தப் பக்கம் வந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஒரே புன் சிரிப்பு! கண்ணா, நீயாவது தண்ணீர் தரக்கூடாதா! என்று கெஞ்சுகிறான்.

கண்ணன் உடனே, இதோ தண்ணீர் என்று ஊற்றுகிறார். என்ன அதிசயம்! அவன் கையில் விழுந்தவுடன் எல்லாம் தங்கமாக மாறி ஓடி விடுகிறது. கண்ணா, இது என்ன வேலை? சாகப் போகிறவனுக்கு தங்கம் எதற்கு? எனக்கு தண்ணீர் கொடு, நாக்கு வறண்டு போய்விட்டது என்று கதறுகிறான்.

கண்ண

கிருஷ்ணருக்குமே புரியவில்லை. ஒரு நொடியில் ஞான த்ருஷ்டியில் பார்த்துவிட்டு மீண்டும் புன்சிரிப்பை நெளியவிடுகிறார். கர்ணா! வாழ்நாள் முழுதும் வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் தானம் கொடுத்தவன் நீ! பொன்னாக வாரி வாரி இறைத்தாய். ஆனால் ஒரு நாள் ஒருவன் பசியோடு வந்து அன்னம் கேட்டான். தங்கத்தை மட்டும் கொடுத்து அகந்தை ஏறிப்போன நீ, சோறா? அதோ அங்கே இருக்கிறதே அன்ன சத்திரம்– என்று உன் ஆள்காட்டிவிரலால் சுட்டிக் காட்டி அவனை அனுப்பி விட்டாய். அதனால்தான் இப்பொழுது அன்னமும் தண்ணீரும் கிடைக்காமல் தங்கமாக வருகிறது. அதனால் வருத்தப்படாதே. நீ அன்ன தானமே செய்யாவிட்டாலும் “அதோ! அன்ன சத்திரம்” — என்று ஒரு விரலால் சுட்டிக் காட்டினாயே! அந்த விரலில் ஒரு அன்னதானம் போட்ட புண்ணியம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதை வாயில் வைத்து சப்பு என்றார்.

இதைக் கேட்ட கர்ணன் நாணிக்கோணி தனது ஆள்காட்டி விரலை வாயில் வைக்கிறான். தண்ணீர் ஊற்றெடுத்துப் பெருகுகிறது. கன்னனுக்கும் கண்ணனுக்கும் – இருவருக்கும் — ஆனந்தம். அன்னதானத்துக்கு அவ்வளவு சக்தி. சாகும்போதும் உதவும், செத்தபின்னர், போகும் வழியிலும் உதவும்!!!

கன்னன் = கர்ணன்

karnanan-1-e13315594338311

கஞ்சன் பட்டபாடு! இன்னும் ஒரு கதை!!

இந்தக் கதையை ஒரு மஹா லோபி (வடித்தெடுத்த கஞ்சன்) கேட்டு விட்டான். எச்சில் கையாலும் காக்கா ஓட்டாதவன் அவன்! அடடா! ஒரு விரலால் அன்ன சத்திரத்தைக் காட்டினால் இவ்வளவு புண்ணியமா. என்னிடம் யாரவது வரட்டும் என்ன செய்கிறேன் என்று பார் என்று எண்ணிக் கொண்டே போனான்.அந்த நேரத்தில் ஒருவன் வந்து சேர்ந்தான்; ஐயா! பசிக்கிறது; சோறு இருந்தால் போடுங்கள் என்றான்.

உடனே அவன் ஒரு விரலால் சுட்டிக்காட்டவில்லை! உடம்பு முழுதையும் வளைத்து நெளித்து சுழித்து அன்ன சத்திரம் இருக்கும் திசையைக் காட்டி அங்கே போ, சோறு கிடைக்கும் என்று விரட்டினான். இப்படி உடம்பு முழுதையும் நெளித்து விரட்டி அடித்ததால் அடுத்த ஜென்மத்தில் நெளிந்து நெளிந்து செல்லும் புழுவாகப் பூமியில் பிறப்பெடுத்தான்!

Karnan29211

இதுவும் சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா சொன்ன கதைதாந் — மோக்ஷ சாதன ரஹஸ்யம் — என்னும் அவரது புத்தகம் கிடைத்தால் படிக்காமல் விடாதீர்கள். அவர் சொன்ன மற்றொரு கதை:

சுவையான கதை: “பார்வதி கேட்ட கேள்வியும் சிவன் சொன்ன பதிலும்” — அதை நாளைக்குச் சொல்கிறேன்.

ராம நாமம் ஒரு வேதமே!

home3

Ramayana Ballet in Indonesia

Post No 1712; Date 13th March 2015

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 11

by ச.நாகராஜன்

ராம நாமம் ஒரு வேதமே!

ராமாயணம் வேத சாரம்

எழுதாக் கிளவி என தமிழ் நூல்களால் சிறப்பித்துக் கூறப்படும் வேதங்கள் பாரத தேச மக்கள் அனைவருக்குமான சொத்து. அதன் சாரமே ராமாயணம் என மகான்கள் அருளியுள்ளனர்.

 

वेद वेद्ये परे पुंसि जाते दशरथात्मजे ।
वेदःप्रचेतसादासीद् साक्षाद् रामायणात्मना ॥
வேத வேத்யே பரே பும்ஸி ஜாதே தசராத்மஜே I

வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா II

 

“வேதங்களினால் அறியப்படும் இறைவன் தசரதனின் புதல்வனாகப் பிறந்தான்; வேதம் ப்ரசேதஸ் (வால்மீகி) முனிவரிடமிருந்து) ராமாயணமாகப் பிறந்தது” என்பது இதன் பொருள்.

இதை மீண்டும் மீண்டும் மகான்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். இப்படி அவதரித்த பெரும் அருளாளர்களின் ஒருவர் குரு ராகவேந்திரர். மந்த்ராலய மகான் என போற்றப்படும் இவரது திவ்ய சரித்திரம் ராம நாம மஹிமையை வெளிப்படுத்தும் அற்புதமான வரலாறு ஆகும்.

 

ram

சூப்பர் ஸ்டாரின் நூறாவது படம்!

இவரது வாழ்க்கையை தமிழ் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்குத் தோன்றியது. தனது நூறாவது படமாக இதை எடுத்து அதில் ராகவேந்திரராக நடிக்க அவர் தீர்மானித்தார். படத்தின் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். அவர் சற்று தயங்கிய போது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவரை ஊக்குவித்து கவிதாலயா வெளியீடாக அதை வெளியிட்டார்.ஶ்ரீராகவேந்திரா படம் 1985ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

சாதாரணமாக ஸ்டைல் மன்னர் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் சண்டைக் காட்சிகளிலும் காதல் காட்சிகளிலும் அனாயாசமாக நடிப்பார்; ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்க்கும் விதவிதமான ஸ்டைல்களுடன் பஞ்ச் டயலாக்குகளும் அனைவரையும் பரவசப்படுத்தும்.

அவர் இப்படி ஒரு அருளாளர் வேடத்தில் சோபிக்க முடியுமா? இந்த ஐயத்தை நீக்கியதோடு, தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்து அனைவரையும் வியக்க வைத்து உயர்தர குணசித்திர நடிகர் பட்டியலில் இடமும் பெற்றார் சூப்பர்ஸ்டார்.

படம் வசூலில் சற்று பின் தங்கினாலும், பண்பாட்டைப் பரப்பியதில் முன்னணி இடத்தைப் பிடித்தது.

படத்தில் நடித்தோர் வியாழக்கிழமை விரதம் இருப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பக்தியுடன் நடித்தனர். மக்கள் விரும்பிப் பார்த்த படமாக இது அமைந்தது.

இந்தப் படத்திற்கு இசையமைத்தவர் இளைய ராஜா. பாடல்களை எழுதியவரோ வாலி.

 

IMG_0275

Vali- Sugreeva Fight

வாலி சிறந்த ராம பக்தர். ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். வார்த்தைக் கோவைகளை இடம் பார்த்து இசை நோக்கி அமைப்பவர். அவர் எழுதிய ஒரு பாடலை ஶ்ரீ ராகவேந்திரர் கோவில் மண்டபத்தில்  வீணை இசைத்துப் பாடுவதாக ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றது. ரஜினியின் நடிப்பு இந்தக் காட்சியில் மிக அருமையாக இருப்பதை அனைவரும் ரசித்தனர். ஸ்வர வரிசைகளை உச்சரித்து, நல்ல முகபாவம் காட்டி, சொற்களின் வேகத்திற்கேற்ப வீணையையும் மீட்டி,  தானும் பரவசப்பட்டு பக்தர்களையும் பரவசப்படுத்தினார்.

பாடலைப் பாடியவர்கள் சீனுக்குட்டி பாகவதர், இளமையாக ராகவேந்திரர் பாடும் போது வாணி ஜெயராம், பெரியவராகப் பாடும் போது கே ஜே ஜேசுதாஸ்.

பாடல் இது தான்!

 

ராம நாமம் ஒரு வேதமே!

ராம நாமம் ஒரு வேதமே

ராக தாளமொடு கீதமே

மனம் எனும் வீணை மீட்டிடுவோம்

இசை எனும் மாலை சூட்டிடுவோம்

அருள் மிகு  ராம நாமம் ஒரு வேதமே

ராக தாளமொடு கீதமே

அவன் தான் நாரணன் அவதாரம்

அருள்சேர் ஜானகி அவன்தாரம்

கௌசிக மாமுனி யாகம் காத்தான்

கௌதமர் நாயகி சாபம் தீர்த்தான்  (ராம நாமம் ஒரு வேதமே)

ஓர் நவமி அதில் நிலவெலாம் புலர, நினைவெலாம்  மலரவே,  உலகு புகழ்            தாய் மடியில் ஒரு மழலையாய் உதிக்க, மறையெலாம் துதிக்கவே,  தயரதனின் வம்சத்தின் பேர் சொல்ல, வாழ்த்துக்கள் ஊர் சொல்ல,  விளங்கிய திருமகனாம் ஜனகர் மகள் வைதேகி பூச்சூட, வைபோகம் கொண்டாட, திருமணம் புரிந்தவனாம்

மணிமுடி இழக்கவும் மரவுரி தரிக்கவும்

அரண்மனை அரியணை துறந்தவனாம்

இனியவள் உடன்வர இளையவன் தொடர்ந்திட                                 வனங்களில் உலவிடத் துணிந்தவனாம்

ஶ்ரீ ராம சங்கீர்த்தனம்

நலங்கள் தரும் நெஞ்சே

மனம் இனிக்க, தினம் இசைக்க, குலம் செழிக்கும்

தினம் நீ சூட்டிடு பாமாலை

இது தான் வாசனைப் பூமாலை

இதைவிட ஆனந்தம் வாழ்வில் ஏது

இசைத்தே நாமமே நாளும் ஓது  (ராம நாமம் ஒரு வேதமே)

0487

Sita in Asoka Vana

 

வாலி என்ற புனைப்பெயரில் தன்னை அடையாளம் காட்டிய டி.எஸ்.ரங்கராஜன் 15000 பாடல்களுக்கு மேல் எழுதிய அரும் கவிஞர். ராமகாதையை எளிய நடையில் அவதாரபுருஷன் என்ற தலைப்பில் எழுதி வந்த இவரது தொடரை ஆனந்தவிகடனில் பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் படித்துப் பாராட்டினர்.

அவர், ‘வேத: ப்ரசேதசாதாஸீத் சாக்ஷாத் ராமாயணாத்மனா’ என்ற கருத்தை வேதமே வால்மீகி முனிவரால் ராமாயணமாக வெளிப்பட்டது என்பதை உள்ளடக்கி ராம நாமமே ஒரு வேதமே என்று இயற்றி மகிழ்ந்தார்; அனைவரையும் மகிழ்வித்தார்.

சிறியன சிந்தியாதான்!

கம்பன் வாலியை சிறியன சிந்தியாதான் (தீயன பொறுத்தி என்றான் சிறியன சிந்தியாதான்வாலி வதைப் படலம் பாடல் 119) என்று போற்றுவான். மிக உயர்ந்த சிந்தனைகளிலேயே தோய்ந்து ஊறி இருக்கும் அவன் ராமன் தன்னை மறைந்து நின்று கொன்றான் என்று சிறிய மனதுடன் சிந்தியாதவன்; ஆனால் கம்பன் பிறிதோரிடத்தில் பின்னால் எடுத்துக் காட்டுவது போலமுந்தைய கேள்விச் செல்வத்தால்ஊறிய அவனுக்கு ராம நாம மஹிமை நன்கு தெரியும்!

அவன் தன் மார்பில் ஊடுருவிய அம்பு யாருடையது என்று பார்க்கும் போது அதில் பொறித்திருக்கும் ராம நாமத்தைக் காண்கிறான். அதை கம்பன் சித்தரிக்கும் பாடல் இது:-

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தைத் தானே

இம்மையே எழுமை நோய்க்கு மருந்தினை ராமனென்னும்

செம்மை சேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்

(கம்ப ராமாயணம்கிஷ்கிந்தா காண்டம், வாலி வதைப்படலம் பாடல் 71)

ராம நாம தாரக மந்திரத்தின் சிறப்பைச் சொல்லும் இந்தப் பாடலின் சிறப்பை யாராலும் முழுவதுமாகச் சொல்லி விட முடியாது.

 0603

Ramayana sculptures in Temples

அந்த வாலியும் இந்த வாலியும்!

 

உலகுக்கு எல்லாம் மூல மந்திரம்

தன்னை தன்னை அண்டியவர்க்கு தருபவன்; வைகுண்ட பதம் அருள்பவன்

எழுமை நோய்க்கு மருந்து

இதுவே ராம நாமம்

இப்படி அனைத்து மஹிமைகளையும் கொண்ட ராம நாமம் வேத சாரம்!

இதை சிறியன சிந்தியாத வாலியின் மூலம் தெரிந்து கொள்ளும் போதே பெரியன சிந்திக்கும் கவிஞர் வாலி ராம நாமம் ஒரு வேதமே என்று கூறி இருப்பது எவ்வளவு பொருத்தமாக அமைகிறது.

இரண்டு வாலிகளும் ஒரே கருத்தையே மனதில் ஊன்றி வைத்துள்ளதைத் தான் இது காட்டுகிறதோ?!

****************

 

Strange Bird Stories in Mahabharata!

Swan

swan

Written by London swaminathan

Research Article no. 1711; dated 12 March 2015

Up loaded at 16-30 London time

Strange Animal Stories in Mahabharata! – Part 3

Part 1 and part 2 were posted yesterday and day before yesterday.

We have seen snakes, snake bites, crocodiles, and strange frog, fish and tortoise stories so far. Now let us look at some strange bird stories in the Mahabharata.

 

Swan

(1).Water birds appear in the Yaksha Prasna (Questions of a Ghost) story. The pond was located only when Bhima saw the water birds at a distance. Our forefathers observed nature very closely and found out lot of things through animal behaviour.

(2).Bird migration is also mentioned in the epic. When Bhisma was lying down on the Bed of Arrows, they noticed a kind of birds and commented Uttarayana is round the corner. Our forefathers found out the change of seasons by the appearance of different kinds of birds. Even today the monsoon birds appear every year in Kerala just before the beginning of monsoon on 1st or 3rd of June.

(3).Atreya, a great seer, assumed the form of a swan. Sadhya Gods approached them and asked the difference between righteous and unrighteous men. 5-36

eagle-and-seagull

(4).Shibi story  (3-197 M.Bh.) is known throughout India. Purananuru, part of Sangam Tamil literature and Tamil epic Silappadikaram mentioned the story in several places and claimed that Shibi, King of North West India, was their forefather ((Read my earlier article Were Chozas Tamils?). In the story of Shibi we knew that Indra took the form of a hawk and Agni took the form of a dove. Buddhists pirated all the Hindu stories and included them in the Jataka Tales. Sibhi story is one of them.

Shibi’s son was called Kapotaroma (Dove feather) because he was made up of various fleshy parts of King Shibi (sounds like cloning or tissue culture!). King Shibi cut his body parts to save the dove from the hawk

(5).Shakuntala, who was protected by the birds, is found in Mahabharata (1-71) and Kalidasa’s most famous Shakuntalam drama.

DOVE.eagle

Dove and Hawk

(6).Hindus believe that humans may be reborn as animals and birds depending upon their Karma in the previous birth. We have the story of Jarita in the Mahabharata (1-230).

Jarita (bird) was the wife of a male bird who was seer Mandapala in previous birth. She gave birth to four baby birds. Later Mandapala abandoned her and lived with another female bird known as Lapita. When Krishna and Arjuna burnt down the Khandava Vana (Gond+Vana= Gondwana ) forest Jarita escaped from the fire by flying out at the insistence of the baby birds. Baby birds also escaped miraculously from the fire. When Mandapala (in bird form) came to inquire about their welfare, Jarita ignored him and asked him to go back to his lady love Lapita. Mandapala explained that it was he who saved the baby birds from the fire and Lapita also worried about them. Then Jarita accepted Mandapala and they lived happily in another forest.

It may be just a story rather than a real life incident. But it has got many messages such as accepting a repentant and reformed husband, birds’ love and kindness, fire hazards etc. Husbands returning to their wives after spending time with another woman is a common theme in Sangam Tamil Literature. 279 verses out of 966 Tamil verses (in the love poems) are about visiting prostitutes. We should not take it literally, but the message must be understood!

(7).Asvattama set fire to Pandava’s camp at the dead of night after the war. He did this after watching owls attacking the crows in the night (10-1). The fight between the Owls and the Crows form the entire fifth book of Panchatantra fables.

crow and owl

Owl and Crow fight

(8).Uluka (owl) was the name of emissary sent by Duryodhana to tell the Pandavas that their peace proposal is rejected. Seer Kausika (Visvamitra) also means owl. In Tamil also we have many poets with owl name (Pisir Anthai, Othal Anthai). People thought that they are the names of their towns. My view is that they actually mean the bird of wisdom owl, which is the vehicle of Lakshmi and Greek Goddess Athena. In western countries it is a very common logo in the educational institutions.

This confirms my view that most of the tribal names are totem symbols I have already given the names of Tamil poets with frog names like their counterparts in Sanskrit. Tortoise is also the name of several rishis/seers.

eagle

Eagle

(9)In the article on mysterious Sanskrit names in Sumerian books, I mentioned about Sumukha. Though Manu Smrti also mentioned the name of this king, nothing is found about King Sumukha in any Indian literature. But a Naga by name Sumukha appeared in Mahabharata (5-103). In fact it was not a snake (Naga), it was a human being with Naga symbol or tattoo.

Chikura was the father of Sumukha. He was killed by an eagle (man) before Matali chose Chikura’s son Sumukha to be the husband of his daughter Gunakeshi. The clash between the Naga tribes and the Eagle tribes is known throughout the world. We see it in the flags of Mexico, Emblem of USA and the Mayan stories.

When Sumukha got worried about an imminent attack from eagle (tribes), Indra came and protected Sumukha (Snake people). We see this clash of Nagas and Eagles in all the epic and Hindu Puranic stories.

(10).Eagle appeared in another story in Mahabharata (5-113). Shandili was a pious woman who lived on Mount of Rishaba. Once Galava and his friend, an eagle, came that way in search of good horses. When the eagle (in fact a man of eagle tribe) saw Shandili , he thought this virtuous woman should live in the heaven. The mere thought of carrying her away to heaven made the eagle’s wings to drop off. When he explained that the thought was not impure, Shandili forgave him and gave the eagle (man) more powerful wings.

flag-day-mexicol

Eagle- Snake clash

We have more such stories in the epic. Since thousands of years lapsed between the actual incidence and the writing, the original meaning was lost. Everything made to look like miracle stories.

I will conclude this series “Strange animal stories in Mahabharata” tomorrow.

swami_48@yahoo.com

குடை பிடித்திருப்போர் நியாயம் !

umbrella

Written by எஸ்.நாகராஜன்

Research Article no. 1710; dated 12 March 2015

Up loaded at 9–28 London time

 

சம்ஸ்கிருதச் செல்வம்இரண்டாம் பாகம்

22. வரியை ஏய்க்க நினைத்தவன் கதை!

.நாகராஜன்

நியாயங்களின் வரிசைத் தொடரில் மேலும் சில நியாயங்களைப் பார்ப்போம்:

घट्टकुटीप्रभातन्यायः

ghattakutiprabhata nyayah

கட்டகுடிப்ரபாத நியாயம்

காலை நேரத்தில் வரி வசூலிப்பவனின் குடிசை முன்னால் வருவது பற்றிய நியாயம் இது.

இந்த நியாயத்திற்கு அடிப்படையான கதை இது தான்:

ஒரு நாள் இரவு வீட்டை விட்டுக் கிளம்பிய ஒருவன் வரியைக் கொடுக்காமல் ஏய்ப்பதற்காக வரி வசூலிப்பவன் இருக்கும் குடிசை இருக்கும் வழியே செல்லாமல் சாமர்த்தியமாக மாற்று வழி ஒன்றில் செல்ல ஆரம்பித்தான். இரவெல்லாம் வழி நடந்த அவன், காலை நேரத்தில் தன் எதிரே இருக்கும் ஒரு குடிசைக்கு வந்து சேர்ந்தான். அது தான் வரி வசூலிப்பவனின் குடிசை.

property-tax-bill

எதைத் தவிர்க்க எண்ணி அவன் வேறு ஒரு வழியில் சென்றானோ அது பலிக்காமல் அதே இடத்திற்கு அவன் வந்து சேர்ந்தான்.

வரி கொடுக்காமல் ஏய்க்க முடியுமா, என்ன?

இன்றோ, நாளையோ ஏதோ ஒரு நாள் கொடுத்துத் தான் ஆக வேண்டும்.

வரியைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டும் நியாயம் இது!

er uzavan

चित्रपटन्यायः

citrapata nyayah

சித்ரபட நியாயம்

சித்ரபடம்ஓவியம்

ஓவியம் பற்றிய நியாயம் இது. ஒரு ஓவியத்தின் மதிப்பு அது பார்ப்பவரின் கண்களுக்கு குளுமையை ஊட்டுவதில் தான் இருக்கிறது.

ஒரு நல்ல அழகிய தோற்றம் உடையவன் வேறு குணநலன்கள் இல்லாமல் இருந்தால் அப்போது இந்த நியாயம் பயன்படுத்தப்படும்.

அவன் பார்க்கத் தான் நல்ல அழகு; வேறு எந்த வித குணங்களும் அவனிடம் இல்லை’, என்பதைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் இது பயன்படுகிறது.

umbrella2

छत्रीन्यायः

chatri nyayah

சத்ரி நியாயம்

குடை பிடித்திருப்போர் பற்றிய நியாயம் இது.

ஒரு கூட்டத்தில் பலர் குடைகளைப் பிடித்து நின்று கொண்டிருக்கும் போது அந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அனைவருமே குடை பிடித்துக் கொண்டிருப்பது போலவே தோன்றும்.

ஒருவனுக்கு இருக்கும் சில குணநலன்கள் அவனுடன் சேர்ந்து இருக்கும் மற்றவருக்கும் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்படுவது வழக்கம். சேர்க்கையினால் ஏற்படும் நன்மையைச் சுட்டிக் காட்ட இந்த நியாயம் பயன்படும்.

பப்பட்

जामात्रर्थंश्रपितस्य सूपादेरतिथ्युपकारकत्वम्

jamatrartham shrapitaasya supaderatithyupakarakatvam

ஜாமாத்ரர்தம் ஷ்ரபிதஸ்ய சூபாதேரதித்யுபகாரகத்வ நியாயம்

மாப்பிள்ளைக்காகத் தயாரிக்கப்படும் உணவு வகைகளைப் பற்றிச் சொல்லும் நியாயம் இது.

மாப்பிள்ளை வருகிறார் என்பதற்காக வீட்டில் பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் அவை மாப்பிள்ளைக்கு மட்டுமா பரிமாறப்படுகின்றன? சாப்பிட உட்காரும் அனைவருக்கும் பரிமாறப்படுகின்றன.

ஒரு விஷயம் சிறப்பாக ஒருவரை உத்தேசித்துச் செய்யப்பட்டாலும் கூட, அது மற்ற அனைவரையும் சேரும் போது இந்த நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

bird-nest-in-ash-tree-branch

तिर्यगधिकरणन्यायः

tiryagadhikarana nyayah

திர்யகதிகரண நியாயம்

பறவைகளின் கூடு பற்றிய நியாயம் இது.

பறவைகள் தங்கி வாழும் கூடுகள் பறவைகள் வசிக்க மட்டும் உதவுமேயன்றி மனிதர்கள் வசிக்கப் பயன்படாது.

ஒரு விஷயம் அனைவருக்கும் பயன்பட வேண்டுமென்றால் அது அப்படிப் பயன்படக்கூடிய சூழ்நிலையைக் கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் நினைத்த பயனை அது அனைவருக்கும் கொடுக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த பறவைக் கூடுகளின் நியாயம் சுட்டிக் காட்டப்படும்.

*****************

Fish, Tortoise and Crocodile Stories in Mahabharata

matya-sculpture

Matyavatar= Fish incarnation of Lord Vishnu

Written by London swaminathan

Research Article no. 1709; dated 11 March 2015

Up loaded at 20-35 London time

2.Strange Animal Stories in Mahabharata! – Part 2

Part 1 :Snakes and Snake bites in Mahabharata appeared yesterday.

(1).Fish

Adrika, an Apsaras, was cursed by Brahma to become a fish. She ate the ‘seed’ of human being and became pregnant. When it was caught by the fishermen, they saw two human beings in the womb of the fish 1-63

Fishermen gave the babies to the King of fishermen Dashraja. A boy fish Matsya was given to king. Girl fish Matsyaa was raised by Dashraja as Satyavati. Later Satyavati was married to King Shantanu 1-100

Shambara and Fish

Demon Shambara kidnapped Krishna’s son Pradyumna when he was only ten days old. He threw him into ocean and was swallowed by a fish. Later Pradyumna was recovered from the fish. When Pradyumna grew as an adult killed Shambara and married his widow Mayavati.

My comments: Fish devouring people and coming out alive from the stomach of the fish is a common theme in Indian literature. Fish becoming pregnant with human beings is also common.

Pradyumna marrying a demon’s widow shows that they are also as human as everyone else. We have several stories of inter marriages between the demons and angels. Dubbing one as Drvida and the other as Arya is absurd.

Shambara’s name is also common among demons. We have Shambara in the Rig Veda, Ramayana, Mahabharata and Bhagavata. In future we have to name them Shambara I, Shambara II, Shambara III, Shambara VI etc. Foreigners without knowing the number of people with the same name, wrote a confusing history.

crocodilefish

Indus seal of crocodile and fish

(2).Crocodile

Arjuna came across a region where there was a beautiful lake with crocodiles. Brahmanas migrated to different regions fearing those crocodiles. Arjuna purposefully bathed in the tank and caught a crocodile which turned into an Apsara called Varga. She asked Arjun to catch other 4 crocodiles. Arjuna caught those man eating crocodiles and they became Apsara women too.1-216

Crocodiles eating man or animals is a common theme in Tamil and Sanskrit literature. Adi Shankara of Kaladi in Kerala became an ascetic only after caught by a crocodile. Tamil saints revived boys eaten by crocodiles. Tamil poet Tiru Valluvar used the Crocodile’s strength in water as a simile. Gajendra Moksha sculpture is famous from the days of the Gupta dynasty in which the elephant caught by a crocodile was saved by Vishnu. India being a tropical country was infested with crocodiles and all the rivers from Tamil Nadu to Himalayas had crocodiles. Indus valley civilisation seals show a fish in the mouth of a crocodile.

tortoise mandapa, kanchi

Tortoise Mandapa in Kanchi

(3).Tortoise

Tortoise figures in Indradyumna story in the Mahabharata (3-199).

Indradyumna went to heaven, but had to come down to earth when he spent all the merits he earned through good deeds. He was going from place to place to see old faces who he could remember. At last he found an old tortoise in a Himalayan lake who recalled all the good deeds done by Indradyumna. He again ascended to heaven. Even a tortoise can help a king to ascend to heaven.

Tortoise and Fish form the earliest of the Ten Avatars (Incarnation) of Lord Vishnu. So both of them attained divine status.

In Kerala temples the Dwajasthambas are on top of mysterious tortoise!

In Tamil Nadu,  Temple Mandapas are on tortoise in Kancheepuram, Tirukkazukundram, Tiruchengodu and many other places.

Tortoise was the foundation when Devas and Asuras churned the ocean in Hindu mythology.

Panchatantra fables have several stories of intelligent and stupid tortoises.

panchatantra story, kopeshwar temple

Tortoise story in Panchatantra

Tomorrow we will see the birds in the Mahabharata

பூவாதே காய்க்கும் மரமும் உள!

Jackfruit

பலா மரம்

Written by London swaminathan

Research Article no. 1708; dated 11 March 2015

Up loaded at 08-20 London time

 

பூவாதே காய்க்கும் மரமும் உள மக்களுளும்

ஏவாதே நின்றுணர்வார் தாம் உளரே – தூவா

விரைத்தாலு நன்றாகா வித்தெனவே பேதைக்கு

உரைத்தாலும் தோன்றாது உணர்வு 

—அவ்வையார் இயற்றிய நல்வழி

பொருள்: பூக்காது காய்க்கும் அத்தி, ஆல், அரசு, பலா முதலிய மரங்கள் உலகில் உண்டு. அது போல மக்கள் நடுவில் இதைச் செய் என்று சொல்லாமலேயே குறிப்பால் உணர்ந்து செயல்படும் நல்லோர் உண்டு. வேறு சிலரோ விதைத்தாலும் முளைக்காத வித்து (விதை) போன்றவர்கள். அவர்களுக்குச் சொன்னாலும் புரியாது- தெரியாது. மூடர்களுக்குச் சொல்லும் அறிவுரை இப்படிப் பயனற்றதே—அதாவது விதைத்தாலும் முளைக்காது.

banyan-tree-aerial-root

ஆல மரம்

தாவரவியல் அறிவு மிக்கவர்கள் இந்தியர்கள் — உயரிய கருத்துக்களைச் சொல்ல இது போன்ற அரிய உவமைகளைப் பயன்படுத்துவர்.

நல்வழி இயற்றிய அவ்வையார், சங்க கால அவ்வையார் அல்ல. சங்க காலம் முதல் தமிழகத்தில் வாழ்ந்த ஆறு அவ்வையார்களில் இவரும் ஒருவர். பிற்காலத்திய அவ்வையார். வயதான, அறிவுமிகுந்த, கணவர் இல்லாத, முது பெரும் அறிவாளிப் பெண்களை தமிழ் கூறு நல்லுலகம் “அவ்வை” என்ற அன்புப் பெயரிட்டு அழைக்கும்.

அரச மரம்

அரச மரம்

இந்தப் பாடலில் உள்ள பூவாத மரங்கள் விஷயம்  2300 ஆண்டுகளுக்கு முந்தைய மனுஸ்மிருதியிலும் உள்ளது (1-47)

பூவாது காய்க்கும் மரங்கள் ‘வனஸ்பதி’ எனப்படும். புஷ்பங்கள், பழங்களுடனுள்ள மற்றவை “மரங்கள்” எனப்படும் என்பார் மனு.

Apushpaa: falavanto ye te vanaspataya smruthaa:

Pushpina: falinas cha eva vrukshaam tu ubayata smruta:  (1-47 Manu)

அபுஷ்பா: பலவந்தோ யே தே வனஸ்பதய ஸ்ம்ருதா:

புஷ்பின: பலினஸ் ச ஏவ வ்ருக்ஷாம் து உபயத ஸ்ம்ருதா:

தீயோருடன் பேசாதே என்ற கருத்து பஞ்ச தந்திரக் கதைகளிலும் வருகிறது. குரங்குக்கு புத்திமதி சொன்ன தூக்கணங் குருவியின் கூட்டை, குரங்கு பிய்த்தெறிகிறது. இதன் மூலம் விஷ்ணுசர்மன் – “தீயோருக்கு புத்திமதி சொல்லாதே” — என்கிறார்.

இந்தப் பஞ்ச தந்திரக் கதையை விவேக சிந்தாமணி என்னும் நூலும் கூறுகிறது:-

“வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தானொரு நெறி சொலத் தாண்டிப் பிய்த்திடும்

ஞானமும் கல்வியும் நவின்ற நுல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடரது ஆகுமே”.

 குருவி

தூக்கணங்குருவி — கூடு

எவ்வளவு அற்புதமான கருத்துக்களை நல்வழியும், விவேக சிந்தாமணியும் எளிய தமிழில் நமக்குத் தருகின்றன!! அதே கருத்துக்கள் வடமொழியிலும் உள்ளன. இமயம் முதல் குமரி வரை ஒரே கருத்துடைய இவ்வளவு பெரிய பூகோள நிலப்பகுதி 2000 ஆண்டுகளுக்கு முன் உலகில் வேறு எங்கும் இருந்தது இல்லை. ஒரே சிந்தனை, ஒரே பார்வை, ஒரே குறிக்கோள்!

அத்தி

அத்தி மரம்

வாழ்க தமிழ்!! வளர்க சம்ஸ்கிருதம்!! பொலிக பாரதம்!!!

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?

free panchang

Written by Santanam Nagarajan

Research Article no. 1707; dated 11 March 2015
by ச.நாகராஜன்
தமிழக அரசு தை மாதத்தை புத்தாண்டு துவக்கமாக அறிவித்தவுடன் எழுதப்பட்ட கட்டுரை இது; பலரும் தவறைச் சுட்டிக் காட்டிய பின் இந்த அறிவிப்பு காலாவதியாகி தற்போது தமிழ் புத்தாண்டு சித்திரை மாதமே வழக்கம் போலத் துவக்கப்படுகிறது.

தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
– ச.நாகராஜன்

தமிழர் வாழ்க்கை முறையில் சித்திரையே புத்தாண்டின் துவக்கம்! இதை மாற்றிய தமிழக அரசின் அறிவிப்பு சரியா?

புத்தாண்டின் துவக்கத்தையே தடுமாற வைத்த தமிழக அரசின் பார்வை சரியா? தமிழரின் வானவியல் அறிவியல் நோக்கில் ஒரு சிறிய பார்வை :-

உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்தனர். இதையே உலகின் பல்வேறு பாகங்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தின.

tamil years

பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம்.

இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.

மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.

சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.

அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.

new-year-tamil-cards

அத்தோடு ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகத் தமிழன் பிரித்தான். இளவேனில் (சித்திரை, வைகாசி), முதுவேனில் (ஆனி, ஆடி), கார் காலம் (ஆவணி, புரட்டாசி), கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை), முன் பனிக்காலம் (மார்கழி, தை) பின் பனிக்காலம் (மாசி, பங்குனி) என்ற ஆறு பருவங்களில் வசந்த காலம் எனப்படும் இளவேனில் காலம் வசந்த திருவிழாவிற்கு உரிய காலம் ஆகிறது. உற்சாக ஊற்றாக விளங்கும் இந்தக் காலத்தில் (மதுரை) சித்திரைத் திருவிழா, திருவிடை மருதூர் தேரோட்டம் மற்றும் திருச்சி, காஞ்சி உள்ளிட்ட நகர்களில் கோலாகலத் திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றன. கோலாகலமான விழாக் காலத்தில் புத்தாண்டின் துவக்கம் அமைக்கப்பட்டது அறிவு பூர்வமானது; உணர்ச்சி பூர்வமானதும் கூட!

இத்துடன் சூரியன் மேஷத்தில் உச்சமாக விளங்குகிறான். ஆகவே பிரகாசமான சித்திரையை ‘பிறக்க இருக்கும் புத்தாண்டு’ ஒளி வீசும் ஆண்டாகத் துலங்கும் வண்ணம் ஆண்டுத் துவக்கமாக அமைத்தது மிக்க பொருத்தமாக உள்ளது அல்லவா?

சூரியனைப் பிரதானமாகக் கொண்ட இந்த வாழ்க்கை முறை, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் ஈர்த்தது. ஆகவேதான் மலையாளம், மணிபூர், அஸ்ஸாம், வங்காளம், திரிபுரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் சித்திரையையே புத்தாண்டாக ஏற்றுள்ளன.

அது மட்டுமல்ல, இது உலகின் பல நாடுகளையும் கவர்ந்தது. நேபாளம், பர்மா, கம்போடியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் சித்திரையிலேயே புத்தாண்டுக் கொண்டாட்டத்தை அமைத்துள்ளன!

southindiacitiesbig

இன்னொரு சுவையான செய்தியும் உண்டு! வரலாற்றை ஊன்றிக் கவனித்தால் மேலை நாடுகளும் முன் காலத்தில் ஏப்ரலையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டிருந்தது தெரிய வரும். ஆனால் கிறிஸ்தவ மதம் தோன்றிய பின்னர், மாதத்தில் உள்ள நாட்களெல்லாம் மாற்றி அமைக்கப்பட்டு ஜனவரியே ஆண்டின் முதல் மாதம் என்று கொள்ளப்பட்டது.

மகரத்தில் சூரியன் நுழையும் தை மாதம் மிகுந்த புண்ய காலமாகக் கொள்ளப்படுகிறது. காரணம், உத்தராயணம் என்னும் வடக்கு நோக்கி சூரியன் பயணம் துவக்கும் காலம் அது! அது மட்டுமின்றி அறுவடை செய்யப்படும் மன மகிழ்ச்சியான காலம் இது.

ஆக, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தைப் பொங்கல் கொண்டாட்டம் ஏற்பட்டது.

சூரியனுக்கு நன்றி தெரிவிப்பது வேறு; சூரியனின் ஆரம்பத்தை நிர்ணயிப்பது வேறு. நன்றி தெரிவிப்பது தையிலும், ஆரம்பம் சித்திரையிலும் இருப்பதே சரி!

வான வீதியை 12 பாகமாகக் கொண்டால் மகரம் 270 டிகிரியில் (அல்லது பாகையில்) வரும்.

270 டிகிரியில் பயணத்தை ஆரம்பிக்கச் சொல்லும் தமிழக அரசின் உத்தரவு காலத்தின் விசித்திரமே. ஓட்டப் பந்தய தூரத்தில் முக்கால் பகுதி கடந்த இடத்தை ஆரம்ப இடமாக நிர்ணயிப்பது போன்றது இது!

இரு முறை சனி சூரியனை சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஐந்து முறை வியாழன் சூரியனைச் சுற்ற ஆகும் காலம் 60 ஆண்டுகள். ஆகவே அறுபது ஆண்டுகள் கொண்ட சுழற்சி முறையை அறிவியல் ரீதியாக அமைத்து அறுபது ஆண்டுகளை தமிழன் அமைத்தான், இவை தமிழ் ஆண்டுகள் என்றே இன்று வரை அழைக்கப்படுகின்றன.

இப்படி இன்னும் ஏராளமான அதிசய உண்மைகள் தமிழரின் வானவியல் அறிவின் மூலமாக அறிவியல் ரீதியாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை வல்லார் வாய் கேட்டு உணரலாம். ஆனந்திக்கலாம்.

swami_48@yahoo.com

Snakes and Snake Bites in Mahabharata!

indian-snake

Written by London swaminathan

Research Article no. 1706; dated 10 March 2015

Up loaded at 19-30 London time

Strange Animal Stories in Mahabharata! – Part 1

The stories in Hindu scriptures are real life stories. They are not concocted. The best examples are stories of snake bites. From the story of Parikshit to down south Tamil stories of Periya Purana and Tiruvilaiyadal Purana, we hear about several deaths due to snake bites. In some stories gods or saints came to the rescue of the devotees. In other cases God is not dragged into the scene. Even Parikshit was killed by a “snake”!

(I have interpreted this Parikshit story elsewhere in my blogs, as a Naga Tribes Vs Pandava family clash due to Khandava Vana Dhahana. As a result of which Maya Danava went to South America to establish Mayan Civilization.He led the exodus after Khandava forest burning by Arjuna and Krishna. Khandava Vana is now called Gondwana land. Not many people knew Khandava Vana = is Gond Vana)

There are lot of animal stories in the longest Hindu epic Mahabharata. Many of the stories are very strange and mysterious. People becoming animals or animals becoming humans, semen devoured by an animal giving birth to human beings are some of the themes repeated frequently. I have collected some sample anecdotes and these are not exhaustive. Probably there existed some novel way of saying something symbolically. Someone has to do deeper research into it. Several animal symbols were used as totem symbols by the tribes. So they were called by the animal names. Later writers took it for real animals and called them bears (Jambavan in Ramayana) and Eagle ( Jatayu in Ramayana). In real life bears and eagles were just human beings but with some animal tattoos or animal masks. I am using “Who is Who in the Mahabharata by Subash Mazumdar” for the references. Numbers at the end of each anecdote are the book numbers of Mahabharata. The epic consists of 18 books or parvas.  Here are a few snake stories:

magnificence-cobra-snake-qwficx

Snake

(1).Astika ,son of Jaratkaru, stopped Naga Yajna (throwing snakes into fire)- 1-48

(2).Agastya cursed king Nahusa to become a python. He was saved by Yudhistra after sometime 5-17

(3).Snake poison/bite disfigured Nala. Under the assumed name Bahuka, he worked as a charioteer of King Rituparna of Ayodhya.3-67

(4).Gautami was a learned Brahmana woman. Her son was bitten by a snake and he died. A passer-by hunter caught the snake and was about to kill it. But she told him to spare the life of the snake saying that her dead son would not come to life by killing the snake 13-1

(5).A snake called Karkotaka was cursed by sage Narada to remain stationary in one place until Nala picked him up. When Nala picked him he was bitten by Karkotaka. This changed the colour and shape of Nala. Karkotaka told him that it would benefit him because no one could recognise him as a king. But he gave him a divine garment which would help him to get back to his original form 3-66

When Nala was ready to join his wife Damayanti he wore the divine nNga garment and regained his original appearance 3-73

snake and frog

My Comments: It is strange that Naga tribe (Snake people) is always associated with wonderful garments. Sangam Tamil Work Sirupan Atrppadai (lines 96-97) also described the divine garment given by Neelanagan to chieftain Ay. He gave it to Lord Shiva under the banyan tree. Naga tribe people are described as Oviyar (Painters) in Tamil literature. Probably they painted their body with snake pictures and worshipped snakes! Snake figures are found in every temple in India.

(6).Nagas were the descendants of Kasyapa and Kadru. They were famous and notorious for their skills and cunningness 1-16

My comments: Sri Lanka was called Nagadwipa (Nagar island). The Naga Kanyas were described as cunning women who would entice ship wrecked people to their homes and ‘devour’ them> This means they will strip them of their money etc.

(7).Ruru , grandson of Chyavana rishi, was about to marry a beautiful girl by name Pramadvara. But she died of a snake bite just a few days before the marriage. When he offered half of his life span to the snake bitten girl she was revived. When he wanted to kill all the snakes as an act of revenge, Dundubha prevented him by saying that not all snakes are not poisonous. Dundubha pointed out that snakes are essential part of food chain and it would help the orderly development of different forms of life 1-8

My comments: In all these stories we see some environmental concern. When the kings try to kill all the snakes and all the frogs someone gives them good advice about environmental protection. Even if we take them as human beings with totem symbols, peace is restored by stopping the killings.

Green-tree-frog-2-copy

Snake toy

(8).A Brahmana rishi called Sahasrapata frightened his friend Khagama by throwing upon him a snake toy made up of straw. He did it for fun. But Kaghama cursed his friend to become a snake.  In his non-poisonous snake form he was called Dundhuba. He regained his original form when Ruru visited him. 1-10

(9).Parikshit story

Parikshit ,son of Abimanyu, went for hunting, 36 years after the Mahabharata war. Shamika rishi was doing meditation. When Parikshi asked for water he did not respond and he thought the seer was pretending. Immediately Parikshit threw a dead snake on the rishi (seer). When the seer’s son came and saw this he cursed Parikshit that he would die within seven days by a “snake bite”. Takshaka Naga ‘bit’ him by hiding in a fruit basket

(My comments:–Actually the seer used Naga tribe leader Takshaka to revenge upon Parikshit. He hid himself in a fruit basket like Veera Shivaji hid himself in the fruit basket to escape from Delhi prison of Aurangzeb. On the seventh day Parikshit was killed and then Janamaejaya stared killing the snakes (naga tribes). Seer Astika made a compromise. Even today Brahmins recall this episode thrice a day in their Sandhyavandana water ritual by reciting the mantra Narmadayai nama:……It happened on the banks of River Narmada.)

Leopard Frog

Frog

(10).Ayu was king of frogs. When King Parikshit hunted down the frogs thinking that the queen was eaten by frogs, Ayu revealed that the queen Shobana was his own daughter. Through his powers Shobana re appeared  (3-192)

The story goes like this:

Parikshit was a king of Ikshwaku dynasty (This Parikshit was different from snake bitten Parikshit). Once when the queen and the king were in the forest Parikshit was very thirsty. He asked his wife to go down the well to fetch some water. She went into the water but never came out. He saw only frogs there. He thought that the frogs ate his queen and started massacring him. At that time Ayu, king of frogs appeared and asked him to stop the killing. He told that Shusobana, the queen was his own daughter and she was alive.

My comments: Frog was a totem symbol of a particular tribe and Ayu was the king of that Frog tribe. Actually they are human beings, not frogs. We have poets and seers with the names such as Manduka Maharishi (frog), Therai (Toad) in Sanskrit and Tamil.  Mandukyopanishad is one of the major Upanishads. So what we read here is the story of tribal people. Since thousands of years passed before Vyasa collected all these stories and incorporated them into the epic for the benefit of posterity, the original meaning was lost. Now we have to read the story between the lines.

Tomorrow I will give more animal stories from the Mahabharata.

swami_48@yahoo.com

இந்துக்களின் அதி நவீன, அதி பயங்கர ஆயுதங்கள்!

D-128

Written by London swaminathan

Research Article no. 1705; dated 10 March 2015

uploaded at  காலை 11-10  London time லண்டன் நேரம்

கர தூஷணர்கள் என்னும் ஏழு கோடி அவுணர்களை ஸ்ரீ ராமர் அம்புகளின் மூலம் எளிதில் கொன்றார். ஆனால் ஏன் ராவணனை அப்படிக் கொல்ல முடியவில்லை?

 

அர்ஜுனன், துரியோதனன் போன்றோருக்கு ரஹசிய ஆயுதக் கலையைச் சொல்லிக் கொடுத்த துரோணர், அதை ஏன் ஏகலைவனுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்தார்?

 

பிரம்மாஸ்திரம் போன்ற அஸ்திரங்களை ஏன் “ஒரே ஒரு முறை” மட்டும் பிரயோகிக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டது?

இவை எல்லாவற்றிற்கும் ஒரே விடைதான்.

பழங்கால இந்துக்களிடம் ஒலி (சப்த) ஆயுதங்கள் இருந்தன. அவை அதிர்வு அலைகளைப் பரப்பி, பிரம்மாண்டமான அழிவுகளை உண்டாக்கும். இதை இன்னும் மேலை நாடுகள் கண்டு பிடிக்கவில்லை. எதிர்காலத்தில் கண்டுபிடிக்கக் கூடும். நம்  நாட்டில் அந்தக் கலை அறவே மறைந்துவிட்டது. இவைகளை மிக, மிக அரிதாகவே பயன்படுத்துவர்.

தர்ப்பைப் புல், தண்ணீர், மந்திர சக்தி மூன்றையும் இணத்து அவர்கள் செயற்கரிய செயல்களைச் செய்தனர். வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களைப் பிரயோகித்தனர்.

தற்போது இந்தியா உள்பட உலகில் ஏழு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் அவைகளை எல்லா யுத்தங்களிலும் பிரயோகிப்பதில்லை. இதுவரை அமெரிக்கா மட்டும் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகியில் அணுகுண்டுகளைப் போட்டு பல்லாயிரக் கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றது. இந்தியப் பிரதமர், அமெரிக்க- ரஷிய ஜனாதிபதிகள் ஆகியோரிடம் அணுகுண்டு உபயோகிக்கும் ரகசிய சங்கேதச் சொல் – கோட் – உள்ளது. இது போல துரோணர், கிருபர் ஆகியோரிடம் இருந்த ‘பாஸ்வோர்ட்’ – அர்ஜுனன், கர்ணன் போன்றோருக்கு மட்டுமே தெரியும். எப்படி இந்திய—அமெரிக்க—ரஷிய அதிபர்கள் இதை அரிதாகவே பயன்படுத்துவார்களோ அதே போலத்தான் அக்காலத்திலும் அஸ்திரங்களை அரிதாகப் பயன்படுத்தினர்.

தற்காலத்தில் புற்றுநோயைக் கொல்லும் அரிய அணுசக்தி ஐசடோப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை உடலுக்குள் செலுத்தப்பட்டவுடன், புற்று நோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும். நல்ல செல்களை விட்டுவிடும். இதே போல இந்துக்களின் ஒலி ஆயுதங்கள், யார் மீது எய்யப்படுகிறதோ அவர்களை மட்டும் கொல்லும். ஆயினும் இவைகள் பேரழிவையும், பக்க விளைவு களையும் ஏற்படுத்தும் என்பதால் முதலிலேயே சத்தியம் வாங்கி விடுவார்கள்  — “ஒரே முறைதான் பிரயோகிப்பேன்” என்று.

அணுசக்திக்கு நல்ல, கெட்ட உபயோகம் இருப்பதைப் போலவே இவைகளுக்கும் நல்ல, கெட்ட பயன்பாடுகள் உண்டு. ஆகையால்தான் இவ்வளவு முன் எச்சரிக்கை.

pavithram

மரப்பாச்சி பொம்மை மர்மம்

பிரம்மாஸ்திரம் ஒரு அணு ஆயுதமா? – என்ற ஆங்கிலக் கட்டுரையை லண்டனில் அச்சிட்ட சவுத் இந்தியன் சொசைட்டியின் 2005-ஆம் ஆண்டு மலரில் எழுதி இருந்தேன். அதே கட்டுரையை இந்த பிளாக்-கில் 2011ல் போட்டேன். இதுவரை தினமும் புதுப் புது நேயர்கள் அதைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உத்திரையின் கருவைக் கூட பிரம்மாஸ்திரம் பாதிக்கும் என்பதை அறிந்து கிருஷ்ண பரமாத்மா காப்பாற்றிய விதத்தையும் எழுதி இருக்கிறேன். இக்காலத்திலும் அணுக்கதிரியக்கத்தில் இருந்து பாதுகாக்க ஈயமும், செஞ்சந்தன மரங்களும் பயன்படுவதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு செஞ் சந்தன மரக் கட்டைகள் ஏராளமாக ஏற்றூமதியாகின்றன. இதனால்தான் அக்காலத்தில் மரப்பாச்சி என்னும் பொம்மைகளை செஞ் சந்தன மரக் கட்டைகளில் செய்து கொடுத்தார்கள்

அதர்வ வேதத்தில் நிறைய ரஹசியங்கள் இருக்கின்றன. அதில் தர்ப்பை பற்றிய மந்திரங்கள் அவற்றின் சக்தியை விளக்குகின்றன. ஆனால் தர்ப்பை என்பது “டெலிவரி வெஹிக்கிள்” போன்றவை —அதாவது ஆணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வாஹனங்கள் – உண்மையான அணுகுண்டு என்பவை  துரோணர், கிருபர் போன்றோர் மட்டும் அறிந்த அரிய மந்திரங்களாகும். எப்படி இன்று அணு ஆயுத ரஹசியங்களையும், அவற்றுக்கான சங்கேதக் குறியீடுகளையும் ஆட்சியில் உள்ள ஒரு சிலர் மட்டும் ரஹசியமாகப் பாதுகாக்கிறார்களோ அப்படி அக்காலத்தில் ராஜசபையில் உள்ள பெரியோர்கள் மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். வள்ளுவருக்கும் கூட இவ்விஷயம் தெரியும்:

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

ஆற்றாதார் இன்னா செயல் – (குறள் 894)

பெரியவர்களுக்கு தீமை செய்வது, எமனை தானே கைதட்டி வா என்று கூப்பிடுவதற்குச் சமம் என்கிறார் வள்ளுவர். அதற்குக் கீழே இன்னும் ஒரு குறளில் ஆட்சியைக் கூடக் கவிழ்க்கும் வல்லமை பெரியோருக்கு உண்டு என்கிறார். ஆனால் பெரியோர்கள் எல்லோரையும் ஆசீர்வாதிபார்களேயன்றி அழிக்க மாட்டார்கள்.

நாட்டில் தர்மம் முற்றிலும் அழியும் ஆபத்து வரும்போது மட்டும், வித்தியாரண்யர், சமர்த்த ராமதாசர் போன்றோர் மந்திர சக்தியுள்ள வாட்களை (பவானி வாள்) கம்பண்ண உடையார், வீர சிவாஜி போன்றோர் கையில் கொடுத்து காரியத்தை நிறைவேற்றுவர். அடுத்த கல்கி அவதாரத்தில் உலகம் வியக்கும் இந்து ஆயுதங்களைக் காணலாம்.

ராமன் கூட இதை ராவணன் விஷயத்தில் பயன்படுத்தவில்லை. ராவணன் வேதம் அறிந்தவன் – முறையான யுத்தம் செய்ய வல்லவன். ஆகையால் ராமனும் கூட அவன் போர்க்களத்தில் நிராயுத பாணியாக ராவணன் நின்றபோது, “இன்று போய் நாளை வா” என்று அனுப்பினன். கரதூஷணர்கள் தர்மயுத்தம் செய்பவர்கள் அல்ல.

ஏகலைவன் ஒரு சாமான்யன். அவனிடம் அணு ஆயுத ரஹசியங்களைச் சொல்ல முடியாது. ரஹசியமாக அறிந்த விஷயங்களையும் கூட அவன் பயன்படுத்த இயலாதவாறு அவனுடைய கட்டைவிரல் வெட்டப்பட்டது. அக்கால மக்கள் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்!

pavitra

அதர்வண  வேத தர்ப்பை மந்திரங்கள்

யத்தே தர்பே ஜரா ம்ருத்யு சதம் வர்ஷசு வர்ம தே

தேனேமம் வர்மிணம் க்ருத்வா சபத்னாஞ்ஜஹி வீர்யை :

 

சதம் தே தர்ப வர்,மணி சஹஸ்ரம் வீர்யா மணிதே

தமஸ்மை விஸ்வே த்வாம் தேவா ஜரஸே பர்தவா அது:

—-அதர்வ.19-30

ஏ தர்ப்பையே! மரணத்தை நீக்கி நீண்ட ஆயுளைத் தருபவன் நீ. எல்லா கவசங்களையும் விட நீ உயர்ந்தவன். உலகில் உள்ள எல்லா ஆயுதங்கலையும் விடச் சிறந்தவன் நீ. அரசனைக் காத்து, அவனது எதிரிகளை வீழ்த்துவாயாக.

ஓ தர்ப்பையே! நீ நூற்றுக் கணக்கான கேடயங்களை உடையாய். ஆயிரக் கணக்கான வழிகளில் சக்த்தியை வெளியிடுக்றாய். நீண்ட காலத்துக்கு அரசனுக்கு ஆயுள் தர பெரியோர்கள் உன்னை அவனிடம் தந்துள்ளனர்.–அதர்வம், 19-31

சதகாண்டோ த்ஸ்ச்யவன: சஹஸ்ரபர்ண உத்திர:

தர்போ ய உக்ர ஔஷதிஸ்தம் தே பந்தாம்யாயுஷே –19-31

ஓ, மனிதனே! நான் (மருத்துவன்) உன் கையில் குஷ புல்லைக் கட்டுகிறேன். இது சக்தி வாய்ந்தது நூற்றுக் கணக்கான தண்டுகளையும், ஆயிரக்கணக்கான இலைகளையும் உடையது. ஏனைய  மூலிகைகளை விட இது வலிமை வாய்ந்தது. உன்னுடை வாழ் நாள் அதிகரிக்கும்.

தர்ப்பைப் புல்லுக்கு ‘குசம்’ என்ற பெயரும் உண்டு. உலகின் மிகப் பழைய சமய நூலான ரிக் வேதம் முதல் நான்கு வேதங்களிலும் தர்ப்பை வருகிறது. இதை சங்க காலத் தமிழர்களும் பயன்படுத்தியதைப் புறநானூற்றுப் பாடல்கள் காட்டுகின்றன. விழுப் புண் இல்லாமல் மன்னர்கள் இறந்தால் அவர்களை தர்ப்பைப் புல்லின் மீது கிடத்தி வாளால் வெட்டி பின்னர் புதைப்பர்.

தர்ப்பைப் புல் ஆசனங்களில் அமர்ந்து தியானம் செய்வது அபூர்வ சக்திகள் பெற உதவும் . அக்காலத்தில் இந்து மத யோகிகள் மான் தோல், புலித்தோல், தர்ப்பைப் புல் ஆசனங்களைப் பயன்படுத்தினர். இவைகளில் தர்ப்பாசனங்கள்- புறச் சூழலுக்கு தீங்கு பயக்காதவை.

darbha02

பிராமணர்களின் ஆயுதம் !

(இங்கே குறிப்பிடப்படும் பிராமணர்கள் பிறப்பினால் அந்தஸ்து பெற்ற பிராமணர்கள் அல்ல. ஒழுக்கத்தாலும், தபோ சக்தியினாலும் பிராமணத்துவம் எய்தியவர்களே இங்கே பிராMஅனர்கள் எனப்படுவர்)

பிராமண புரோகிதர்கள் கையில் தர்ப்பைக் கட்டுடன் தான் வீட்டை விட்டுப் புறப்படுவர். அஃதன்றி அவர்கள் தொழில் செய்ய முடியாது.

இதோ பிராமணர்களின் சக்தி பற்றி:–

வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச

சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:

இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு

பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே  ப்ரம்மராக்ஷசா:

விப்ராங்குலிகுசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:

பிராமணன் விரலில் உள்ள (விப்ர+அங்குலி+குசான்) தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்கதர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு (அதோ முகா:) ஓடிப் போய்விடுவார்கள்!

 

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராசிமிவாநல:

 

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹம்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் ( சூரியனைக் கண்ட பனி போல பாவங்கள் மறையும்)

அபவித்ரகர: கஸ்சித் ப்ராம்மணே ய உபஸ்ப்ருசேத்

அபூதந்தஸ்ய தத்சர்வம் பவத்யாசமனம் ததா

சுத்தம் இல்லாத கையை உடையவன் பவித்ரம் அணிந்து தொட்ட மாத்திரத்தில் எல்லாம் புனிதம் ஆகிவிடுகின்றன.

அங்குஷ்டானாமனாமிகாப்யாம் து சின்னம் பைதாமஹம் சிர:

ருத்ரேன து த: காலாத் சமாரப்ய கரோ அசுசி:

 

கட்டை விரலையும் மோதிரவிரலையும் சேர்த்து பிரம்மனின் தலையைக் கொய்த அசுத்தமடைந்த சிவனின் கையும் கையில் தர்ப்பை அணிந்தவுடன் சுத்தமானது.

A23_M51_Pontoon_r13d

பாவனார்த்தம் ததோ ஹஸ்தேகச காஞ்சன தாரணம்

புஞ்சானஸ்து விஷேசேன நான்யதோதேன லிப்யதே

கையில் தங்கத்தையும் தர்ப்பையையும் அணிந்து ஒருவன் எதைச் சாப்பிட்டாலும் அவனை எந்த தோஷமும் பீடிக்காது.

குசானோ உபவிஷ்டஸ்ய சித்யதே யோக உத்தம:

தர்ப்பைபுல் ஆசனத்தில் அமர்ந்தவனுக்கு உத்தமமான யோகங்கள் கிடைக்கின்றன.

ஆதாரம்–தர்ப்பைகளின் பிரசம்ஸை – கோபிலர்

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

fasilitasramayana7

Ramayana ballet is staged in largest Muslim country Indonesia everyday!

Compiled by Santanam Nagarajan

Article no. 1704; dated 10 March 2015

uploaded at 10-50 am london time

 

தமிழ் திரைப்படங்களில் ராமர் – 10

ச.நாகராஜன்

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

 

ராமாயணம் பாராயணம்

ஆ ஸேது ஹிமாசலம் – அதாவது பாரதத்தின் தென் கோடியான சேதுவிலிருந்து (ராமேஸ்வரத்திலிருந்து), வட கோடியான ஹிமாசல மலை வரை உள்ள பிரதேசத்தில் வாழ்வோர் ராமாயணத்தைப் பாராயணம் செய்வதை வாழ்க்கைத் தவமாகவே செய்து வந்துள்ளனர்; செய்து கொண்டிருக்கின்றனர்; இனியும் செய்து வருவர். இந்தப் பாராயணம் தர்ம அர்த்த காம மோக்ஷம் – அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய புருஷார்த்தங்களைத் தரும் என்பது மஹரிஷிகளின் வாக்கு. அந்த வாக்கை நம்பிச் செயல்படும் மக்களின் நம்பிக்கையை இந்த நித்ய பாராயணம் காட்டுகிறது.

ராம ராம ராம ராம ராம நாம தாரகம்

ராமசந்த்ர வாசுதேவ பக்தி முக்தி தாயகம்

ஜானகி மனோஹரம் சர்வலோக நாயகம்

சங்கராதி சேவ்யமான புண்ய நாம கீர்த்தனம்

என அனைவரும் தாரக மந்திரமான ராம நாமத்தைப் போற்றித்  துதிக்கின்றனர்.

இதில் முக்கியமான விஷயமாக உள்ள, ஜானகியின் மனதைக் கவர்வது ராம நாமம் என்பதையும் அது புண்யநாம கீர்த்தனம் என்பதையும் திரைப்படப் பாடல் ஒன்றில் தர விரும்பினார் கவிஞர் கண்ணதாசன்.

அத்தோடு காலம் காலமாக நாம் செய்து வரும் ராமாயண பாராயணம் மங்களகரமானது என்பதோடு அது காதல் மங்களம் – மனம் ஒன்றிய இருவரைச் சேர்த்து வைக்கும் மந்திரமும் கூட என்பதையும் வலியுறுத்த விரும்பினார்.

அதைத் தன் முத்திரைப் பாடலாக இயற்றினார்.
படம்:- நெற்றிக் கண். எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும், மேனகாவும் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1981. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த படம் இது. தந்தையாக வரும் ரஜினிகாந்த் மோசமானவராக இருக்க மகனாக வரும் ரஜினிகாந்தோ நல்லவர்.

படத்திற்கு மிக அருமையாக இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர்களோ கே.ஜே. ஜேசுதாஸும் எஸ். ஜானகியும் ஆவர்.

100_0429

ராமனின் மோகனம்

ராமனின் மோகனம்

ஜானகி மந்திரம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகவே உறவு

இடமும் வலமும் இரண்டு

உடலும் மனமும்

இணைந்தோங்கி நிற்கும்போது

இதையன்றி எண்ணம் ஏது

இளவேனிற்காலம் வசந்தம்

ஒரு கோவில் மணியின் ராகம்

ஒரு வானில் தவழும் மேகம்

பறந்தோடும் நாள் இன்றுதான் கண்களே

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

இடையும் கொடியும் குலுங்கும்

நடையும் மொழியும்

எடை போட கம்பன் இல்லை

எனக்கந்த திறனும் இல்லை

இலை மூடும் வாழை பருவம்

மடி மீது கோவில் கொண்டு

மழை காலம் வெயில் கண்டு

சிலையாக நான் நிற்பதே அற்புதம்

ராமாயணம் பாராயணம்

காதல் மங்களம்

தெய்வீகமே உறவு

ramayana-ballet

மலர்களினூடே மோகனமும் மந்திரமும்

பூங்காவில் மலர்கள் சூழ ரஜினியும் மேனகாவும் பாடுவதாக அமைகிறது காட்சி. மரங்களினூடே காதலர் பவனியும், சிலையாக நான் நிற்பதே அற்புதம் என சிலை போல மேனகா அபிநயம் பிடிப்பதும் ஒரு  புறம் மனதைக் கவர்கிறது எனில் பாடல் வரிகள் சிந்தனையைக் காதல் ரஸத்திலிருந்து தெய்வீக நிலைக்கு உயர்த்தி விடுகிறது – காரணம் பாடல் வரிகள்.

ராமனைப் போற்றிப் பாடும் கம்பனும் பாடலில் இடம் பெற்று விடுகிறான்! கதாநாயகியை வர்ணிக்கத் தனக்கு கவித்துவம் இல்லை என்று கூறியபடியே அழகுற கதாநாயகன் வர்ணிப்பதும் ஒரு தனிச் சுவை தான்!

home3

காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!

ராமனின் மோகனமே ஜானகியின் மந்திரமா, அல்லது ஜானகியின் மந்திரமே ராமனின் மோகனமா? மந்திரம் மோகனத்தால் உருவானதா அல்லது மோகனத்தால் மந்திரம் சக்தி பெற்றதா? இரண்டும் ஒன்றினுள் ஒன்று அடக்கம்; பிரிக்க முடியாதவை என்பதே பதில். இதை அழகுறச் சித்தரிக்கும் இந்தப் பாடல் காமப்பாடல் அல்ல; ராமர் பாடல்!

இளையஜாவின் இசையானது பாடலைத் தூக்கித் தர கண்ணதாசனின் கவிதை வரிகளோ இன்னும் உயரத்தில் ஏற்ற ராமரும் ஜானகியும் ஒரு தெய்வீகத்தைச் சேர்த்து விடுகின்றனர்.

காதல் பாடலில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தும் பாடல் இது என்று சொல்லி முடிக்கலாம்!

*****************

(இந்தக் கட்டுரையை வேறு இடங்களில் பயன் படுத்துவோர் எழுதியோர் பெயர், பிளாக்–கின் பெயர் இல்லாமல் வெளியிடக் கூடாது. வர,வர இலக்கியத் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மனதுக்கு வேதனை தருகிறது. இத்தகையோர் தமிழையும் இந்து மதத்தையும் அழிக்கப் பிரந்த இராக்கதர்கள் ஆவர். தமிழ்த் தாயும், மும்மூர்த்திகளும் அவர்களைச் சபிப்பர்)