கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்

குரங்கு, ரமணர்

ஆகஸ்ட்  2015 (மன்மத வருடம் ஆடி/ஆவணி மாதம்) காலண்டர்

Compiled by London swaminathan

Date : 30th July 2015

Post No. 2028

Time uploaded in London : 7-55 AM

Swami_48@yahoo.com

ஏகாதசி :– ஆகஸ்ட் 10 and 26;  முஹூர்த்த தினங்கள்:– 20, 21, 27

பௌர்ணமி:–29;  அமாவாசை:– 14 ஆடி அமாவாசை

Important days:- 3 ஆடிப்பெருக்கு; 14 ஆடி அமாவாசை

15 இந்திய சுதந்திர தினம்; 16 ஆடிப் பூரம்; 28 ஓணம், வரலெட்சுமி விரதம், ரிக் உபாகர்மா; 29  யஜூர் உபாகர்மா, ஆவணி அவிட்டம், ரக்ஷா பந்தன்,; 30 காயத்ரி ஜபம்

cow and calf face book

ஆகஸ்ட் 1 சனிக்கிழமை

ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)

நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.

ஆகஸ்ட் 2 ஞாயிற்றுக்கிழமை

கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?

ஆகஸ்ட் 3 திங்கட் கிழமை

தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)

புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?

ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை

தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)

தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.

ஆகஸ்ட் 5 புதன்கிழமை

ந ச தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)

கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

கஜேந்திர,சேனாபூர்,ஒரிஸ்ஸா

ஆகஸ்ட் 6 வியாழக்கிழமை

சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)

எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்

ஆகஸ்ட் 7 வெள்ளிக்கிழமை

தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)

அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை

ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)

கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.

ஆகஸ்ட் 9 ஞாயிற்றுக்கிழமை

அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241

செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)

ஆகஸ்ட் 10 திங்கட் கிழமை

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை— குறள் 247

உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.

amma ponnu

ஆகஸ்ட் 11 செவ்வாய்க்கிழமை

வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250

நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.

ஆகஸ்ட் 12 புதன்கிழமை

அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245

கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.

ஆகஸ்ட் 13 வியாழக்கிழமை

பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே

பகைவனுக்கருள்வாய் – பாரதி

ஆகஸ்ட் 14 வெள்ளிக்கிழமை

அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)

பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.

(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)

ஆகஸ்ட் 15 சனிக்கிழமை

க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)

பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.

cow and calf vellai pasu

ஆகஸ்ட் 16 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)

வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.

(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)

ஆகஸ்ட் 17 திங்கட் கிழமை

க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)

தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்

(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153

ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை

க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)

பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?

(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)

ஆகஸ்ட் 19 புதன்கிழமை

க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)

பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.

(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)

ஆகஸ்ட் 20 வியாழக்கிழமை

க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)

பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.

(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)

ama ponnu

ஆகஸ்ட் 21 வெள்ளிக்கிழமை

ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)

அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.

ஆகஸ்ட் 22 சனிக்கிழமை

க்ஷமயா கிம் ந சித்யதி (சாணக்ய சதகம் 13-22)

பொறுமையினால் அடைய முடியாதது என்ன?

ஆகஸ்ட் 23 ஞாயிற்றுக்கிழமை

க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)

எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்

ஆகஸ்ட் 24 திங்கட் கிழமை

க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)

வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை

ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்

பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)

எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை

myna, fb

ஆகஸ்ட் 26 புதன்கிழமை

சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)

ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை

நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி (பகவத் கீதை 11-55)

எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்

ஆகஸ்ட் 28 வெள்ளிக்கிழமை

ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)

எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)

ஆகஸ்ட் 29 சனிக்கிழமை

லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதா:(ப.கீதை 5-25)

எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.

ஆகஸ்ட் 30 ஞாயிற்றுக்கிழமை

உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்

IMG_4561

ஆகஸ்ட் 31 திங்கட் கிழமை

அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் —  பாரதியார்

ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே  – பாரதியார்

–சுபம்-

Pictures are used from different sources including face book friends, souvenirs, books etc; thanks.This is a non-commercial  blog.

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: