God’s Name alone saves!

ram-nam-fb

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2152

Time uploaded in London: – 19-44

(Thanks  for the pictures)

 

 

“In the Kingdom of God, reason, intellect, learning, are of no avail. There the dumb speak ,the blind see, and the deaf hear” – Sri Ramakrishna Paramahamsa

 

There was once a Sadhaka (spiritual aspirant) who aspired after God realisation.  He went to a sadhu and asked him what he should do for realising God .the sadhu said that he should repeat Gods name and think of God constantly. The young aspirant did not like this simple advice He thought poorly of the power of the name. He had the idea that one should learn Sanskrit and master the Vedas and Shastras, before he could get God realisation. So he left this sadhu and went to another sadhu who was well versed in the Vedas and Shastras so that he may gain proficiency in the same.

The teacher agreed, but added that the student should also do some service, besides pursuing his studies.  He was given the work of tending the cows in the ashram. So the young friend took up the service of the ashram cows and whenever he had spare time, he went to the teacher and took his lesson s in Sanskrit. Thus twelve years passed. He became a great Sanskrit scholar and had a good knowledge of the Vedas and Shastras. But he did not realise God. So he asked his teacher why he had not attained God even though he had become learned in the Vedas and Shastras.

The teacher then said mere scholarship and learning did not lead to God realisation. To realise God one must love him intensely and ceaselessly remember him by taking to Ramnam. Now the young aspirant realised his mistake in not listening to the advice of the first sadhu who had asked him to take god’s name twelve years ago. He regretted he had wasted many precious years in merely acquiring learning without chanting god’s name or cultivating love and devotion for God.

parrot cat

Parrot and the Cat Simile

Sri Ramakrishna Paramahamsa naarates a good story:

A parrot repeats by rote the holy name of Radhakrishna, but as soon as it is caught by a cat it screams ‘Kang, kang’, betraying its natural cry worldly-wise men sometimes repeat the name of Hari and perform various pious and charitable deeds with the hope of worldly gains, but when misfortune, sorrow, poverty and death overtake them, they forget Him and all such deeds.

 

ram namaste

Barrenness of Mere Book Learning

One day the late Keshab Chandra Sen came to Sri Ramakrishna in the temple of Dakshineswar and asked him, “How is that even learned people remain so profoundly ignorant of things that truly matter in spiritual life, although they have read a whole library of religious books?”

The Master replied, “ The kite and the vulture soar up high up in the air, but all the times their eyes remain fixed on charnel houses in search of putrid carcasses; similarly the minds of the so called learned men  are attached to the things of the world, to lust and wealth,  in spite of their erudition in sacred lore, and hence they cannot attain  true Knowledge.”

“To explain God after merely reading the scriptures like explaining to a person the City of Banaras (Varanasi) after seeing it only on map”.

–subham–

சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 1

M twain 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2151

Time uploaded in London: –  காலை 7-02

(Thanks  for the pictures)

‘ஓஸி’ டிக்கெட் கேட்போரை பழி வாங்குவது எப்படி?

மார்க் ட்வைன் என்பவர் பிரபல அமெரிக்க எழுத்தாளர். நகைச் சுவை மன்னர். மற்றவர்களை நையாண்டி செய்வதிலும் வல்லவர். ஒரு நாள் குதிரைப் பந்தயத்தில் ஒரு பேர்வழி அவரிடம் வந்து, அசடுவழிய நின்றான்.

“மிஸ்டர் மார்க் ட்வைன்! என்னிடம் ஊருக்குத் திரும்பிப்போக, டிக்கெட்டுக்குப் பணமில்லை. எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் வாங்குங்கள், ப்ளீஸ்!” என்றான்.

“அன்பனே! நானும் உன்னைப் போல எல்லாப் பனத்தையும் இழந்துவிட்டேன். நானும் ஒரு ஓட்டாண்டிதான். எனக்கு மட்டுமே டிக்கெட்டுக்குப்  பணம் உள்ளது. ஆயினும் உங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று மிகவும் ஆசை. ஒன்று செய்கிறேன். ரயிலில் எனக்குக் கீழே சாமான் வைக்கும் இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள்; கால்களால் மறைத்துக் கொள்கிறேன். டிக்கெட் பரிசோதகர் வந்து போனபின்னர் நீங்கள் வெளியே வரலாம்” என்றார். அவரும் ஒப்புக் கொண்டார்.

இப்படி மார்க் ட்வைன் சொன்னபோதும் அவருக்குத் தெரியாமல், இரண்டு டிக்கெட் வாங்கி பையில் போட்டுக்கொண்டார். அந்த ‘ஓஸி’ப் பயண ஆசாமி, ரயிலில் சீட்டுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். டிக்கெட் பரிசோதகரும் வந்தார்.

அவரிடம் மார்க் ட்வைன் இரண்டு டிக்கெட்டுகளைக் கொடுத்தவுடன், அவர் வியப்புடன், மற்றொருவர் எங்கே? என்றார். ஓ, அவரா? இதோ சீட்டுக்கு அடியில் பாருங்கள். ஒரு ஆசாமி இருக்கிறான். அவனுக்குக் கொஞ்சம் பைத்தியம். ஆகையால் பயந்துகொண்டு இப்படித்தான் ஒளிந்துகொள்வான் என்றார். டிக்கெட் பரிசோதகர் அந்தப் “பைத்திய”த்தைப் பார்த்துச் சிரித்துவிட்டுப் போய்விட்டார்.

‘ஓஸி’ டிக்கெட்காரருக்கு பயங்கர கோபம். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக அவரால் எதுவும் சொல்லவும் முடியவீல்லை, மெல்லவும் முடியவில்லை!

books picture2

வேண்டாத புத்தகங்களை வெளியே போடுவது எப்படி?

கொலம்பியா பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் க்ளைட் மில்லர். அவருக்கு மற்றவர்களைச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதில் ஒரு தனி மகிழ்ச்சி!

பல பிரபல வெளியீட்டாளர்கள், விலைபோகாத, மட்டரக புத்தகங்களை இவருக்கு அனுப்பிவைப்பர். இவர் தன்னிடமுள்ள இப்படிப்பட்ட புத்தகங்களை அழகாக பார்சல் செய்து தன்னுடைய இனிய நண்பர்களுக்கு அனுப்புவார். அத்துடன் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பெயரில் பொய்க் கையொப்பமிட்டு ஒரு கடிதமும் வைத்துவிடுவார்:

இனிய நண்பருக்கு

வணக்கம். இத்துடன் நான் அண்மையில் வெளியிட்ட புகழ்மிகு நூல் அனுப்புகிறேன். இதை உங்களுக்கு அனுப்புவதற்குக் காரணம், உங்கள் பெயரை சில இடங்களில் குறிப்பிட்டுள்ளேன். அனுமதியில்லாமல் உங்கள் பெயரைப் பயன்படுத்தி விட்டேன். மன்னிக்கவும். இதில் உங்களுக்கு ஆட்சேபணை எதுவுமிராது என்று நம்புகிறேன்.

இப்படிக்கு

(ஆசிரியர் பெயர்)

புத்தகத்துடன் இந்தக் கடிதத்தைப் பெறும் அவருடைய நண்பர்கள், அன்றுள்ள எல்லா முக்கிய வேலைகளையும் பாதியில் போட்டுவிட்டு, குளிக்காமல் சாப்பிடாமல் அந்தப் புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் புரட்டி தங்கள் பெயரைத் தேடுவர். பெயரைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறிப்போய், மனைவி மக்களை அழைத்து இதில் என் பெயர் இருப்பதாக பிரபல நாவலாசிரியர் ஒருவர் எனகுப் புத்தகம் அனுப்பி இருக்கிறார். என் கண்ணுக்கு என் பெயர் தெரியவில்லை. நிங்களாவது கண்டுபிடியுங்கள் என்பார். அவர்களும் உட்கார்ந்து தேடுவர். அப்புறம் என்ன என்ன நடக்கும் என்பதை நான் எழுத வேண்டியதில்லை.

இப்படி பல புத்தகங்களை பல நண்பர்களுக்கு அனுப்பிய பேராசிரியர், கண்ணாடி முன் நின்றுகொண்டு, தபால் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு வீட்டிலும் என்ன நடக்கிறது என்று கற்பனை செய்துகொண்டு நமட்டுச் சிரிப்பு – விஷமச் சிரிப்பு – சிரிப்பார்!!

–சுபம்–

சிரிப்பு! நகைப்பு! இளிப்பு! பகடி! நக்கல்! கிண்டல்!!! – பகுதி 2

hogarth

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 12 September  2015

Post No. 2150

Time uploaded in London: –  காலை 6-51

(Thanks  for the pictures)

கருமிக்கு ஓவியம் விற்பது எப்படி?

வில்லியம் ஹோகார்த் என்பவர் தலைசிறந்த ஆங்கில ஓவியர். ஒரு பெரிய பணக்காரர், அவரைச் சந்தித்து ஒரு ஓவியம் வரையுங்கள் என்றார். ஆனால் அவர் மஹா கருமி. அது ஹோகார்த்துக்கும் தெரியும் . ஆகையால் ஏதேதோ சாக்குப்போக்குச் சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் அந்தக் கருமி — மஹா கஞ்சன் — விடாக் கொண்டன், கொடாக்கொண்டனாக நச்சரித்தார்.

ஹோகார்த்: சரி, உங்களுக்கு என்ன ஓவியம் வேண்டும்?

கருமி: மாடிக்குப் போகும் வழியில் செங்கடலை வரைந்து அதில் இஸ்ரேலியர்கள் கடந்து போவதையும் எகிப்திய பாரோவின் ஆட்கள் மூழ்குவதையும் (பைபிள் கதை), அப்படியே தத்ரூபமாக வரையுங்கள்.

ஹோகார்த்: அதற்கு பல ஆயிரம் பவுன்கள் செலவுபிடிக்குமே!

கருமி: முடியாது; சில நூறு பவுன்கள்தான் தருவேன்.

ஹோகார்த்: சரி, உங்களுக்காக வரைகிறேன்.

இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஓவியம் தயார் – என்று ஹோகார்த் அறிவித்தார்.

கருமி ஆவலோடு ஓடிவந்தார். சுவர் முழுதும் சிவப்பு சாயம் பூசப்பட்டிருந்தது.

மஹா கருமி (கோபத்துடன்) : என்ன இது? நான் வரையச் சொன்னது இது இல்லையே. செங்கடல் எங்கே? பாரோ எங்கே? இஸ்ரேலியர்கள் எங்கே?

ஹோகார்த்: இதோ பாருங்கள் சிவப்பு சாயம், அதுதான் செங்கடல்

கருமி: இஸ்ரேலியர்கள் எங்கே?

ஹோகார்த்: அவர்கள் செங்கடலைக் கடந்து போய்விட்டார்கள்.

கருமி: எகிப்திய பாரோ (மன்னன்)வின் வீரர்கள் எங்கே?

ஹோகார்த்: அவர்கள் எல்லோரும் கடலில் மூழ்கிச் செத்துப் போய்விட்டார்கள்.

கருமிக்குப் புரிந்தது: கூலிக்கு ஏற்ற வேலைதான் கிடைக்கும் என்று!

ஹோகார்த்துக்கோ ஒரே மகிழ்ச்சி! நல்ல பாடம் புகட்டிவிட்டேன் என்று.

Kipling1977CF

ரட்யாட்ர்ட் கிப்ளிங் துணுக்கு!

கள்ளனுக்கு குள்ளன்

நீ பாய்க்கு அடியில் போனால் நான் கோலத்துக்கு அடியில் போவேன் என்பது கன்னடப் பழமொழி.

ரட்யார்ட் கிப்ளிங் பெரிய எழுத்தாளர். இந்தியாயவை அடிப்படையாக வைத்து கதை எழுதிய பெரிய ஆங்கில நாவலாசிரியர். அவருக்கு ஒரு அமெரிக்க ரசிகர் கடிதம் எழுதினார்:

அன்புள்ள கிப்ளிங்,

நீங்கள் உங்கள் இலக்கியப் படைப்புகளை விற்பதாக அறிந்தேன். ஒரு சொல்லுக்கு ஒரு டாலர் கட்டணம் வசூலிப்பதாகக் கேள்விப்பட்டேன். இத்துடன் ஒரு டாலர் நோட்டு இணைக்கப்படுள்ளது. எனக்கு ஒரு மாதிரி (ஸாம்பிள்) அனுப்புமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

இப்படிக்கு உங்கள்

பரம ரஸிகன்

உடனே கிப்ளிங் பதில் அனுப்பினார்:

அன்புள்ள ரஸிகா,

நன்றி.

இப்படிக்கு கிப்ளிங்

பரமரஸிகன் விடுவாரா? இந்த ஆளிடம் ஒரு சொல் மாதிரிக்கு எழுது என்றால் “நன்றி” என்று ஒரு சொல்லை எழுதி ஏமாற்றிவிட்டார். அவர் கள்ளன் என்றால் நான் கள்ளனுக்கும் குள்ளன் என்று காட்டுகிறேன் என்று எண்ணி, அனதக் கடிதத்தை ஏலம் விட்டார். இரண்டு டாலர் கிடைத்தது.உடனே கடிதம் எழுதினார்:–

அன்புள்ள கிப்ளிங்,

தங்கள் சொல் கண்டேன்; பேரானந்தம் கொண்டேன். அதை ஏலத்துக்கு விட்டேன். இரண்டு டாலர் கிடைத்தது. தபால் செலவு, பேப்பர் செலவு போக கிடைத்த லாபம் 90 செண்ட். அதில் சரி பாதி உங்களுக்குச் சொந்தம்! இத்துடன் 45 செண்ட் தபால் தலைகள்  அனுப்பி இருக்கிறேன்.

இப்படிக்கு உங்கள்

பரம ரஸிகன்.

பிரபல எழுத்தாளருக்கு எப்படி இருந்திருக்கும்? நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்!

டொண்டொண்டொடென்னும் பறை!

குரல்

வாழ்வியல் அங்கம்

டொண்டொண்டொடென்னும் பறை!

 

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY  ச.நாகராஜன்

Date : 12 September  2015

Post No. 2149

Time uploaded in London: –   காலை 6-37

(Thanks  for the pictures)

 

.நாகராஜன்

வழக்கம் போல திருக்குறளைப் புரட்டினேன். பார்வைக்கு வந்த குறள்:

நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்து இவ் வுலகு (குறள் 336)

நேற்று இருந்தவன் இன்றில்லை என்று சொல்லும் பெருமையைக் கொண்டது இவ்வுலகு.

என்ன இவர், உலகிற்குப் பெருமையாக இதைத்தானா சொல்வது? ஒரு ஐஸ்வர்யா ராயை அல்லது க்ளியோபாட்ரா அல்லது சித்தூர் ராணி பத்மினி போன்ற பிரமாதமான அழகியைப் பெற்றது இவ்வுலகு என்று சொல்லக் கூடாதா, அல்லது நிலவில் கால் பதித்த ஆர்ம்ஸ்ட்ராங் போன்ற ‘மனிதனைக்’ கொண்டது இவ்வுலகு என்றாவது சொல்லக் கூடாதா, காலத்தால் முற்பட்டவர் தான், புரிகிறது! இது போல எதையாவது சொல்லி இருக்கலாமில்லையா,

நாலயிர2

சரி, போகட்டும், பார்வை மேலே போக கண்ணில் பட்ட அடுத்த குறளைப் பார்த்தேன்.

நாளென ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார்ப் பெறின்   (குறள் 334)
நாள் என்பது கால அளவையைப் போலக் காட்டி உங்கள் உயிரின் வாழ்நாளை அறுக்கும் வாள்!

என்ன ஒரு நெகடிவ் திங்கிங் (Negative thinking) எத்தனை கோர்ஸ்களிலும் செமினார்களிலும் இளைஞர்களையும் இளைஞிகளையும் சந்தித்து, “இன்றைய நாள் பொன்னாள். இது ஒரு வாய்ப்பு! நேர மேலாண்மை – அது தான் டைம் மானேஜ்மெண்ட் கற்றுக் கொண்டு சரியாக அதைப் பயன்படுத்துங்கள் என்று வாய் கிழியப் பேசி இருக்கிறேன்.

இவரோ நாள் என்பதை உயிரைப் போக்கும் வாள் என்று நினை என்கிறார்.

குறளை மூடினேன். பட்டினத்தாரை எடுத்து புரட்டினேன். வந்த பாடல்:

கட்டி அணைத்திடும் பெண்டிரும் மக்களும் காலத்தச்சன்

வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால்

கொட்டி முழக்கி அழுவார் – மயானம் குறுகி அப்பால்

எட்டி அடி வைப்பரோ? இறைவா, கச்சி ஏகம்பனே!

இதென்னடா சங்கடம் என்று இன்னொரு பக்கத்தைப் புரட்டினால் அங்கு கண்ட பாடல்:

பத்தும் புகுந்து பிறந்து வளர்ந்து பட்டாடை சுற்றி

முத்தும் பவளமும் பூண்டோடி ஆடி முடிந்த பின்பு

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாம் பிணங்கள்

கத்தும் கணக்கென்ன காண் கயிலா புரிக் காளத்தியே!

அட, வார்த்தைகள் பிரமாதம் தான்!

காலத் தச்சன் வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்தி விட்டால் …

செத்துக் கிடக்கும் பிணத்தருகே இனி சாகப் போகும் பிணங்கள் கத்தும் கணக்கு, என்ன கணக்கு!!!!

பின்னால் டி.வியில் வேறு கண்ணதாசன் பாடல் கனமாக, “வீடு வரை உறவு வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ என்று ஒலித்தது.

divyasprabandam1

ஒன்றும் சரிப்படவில்லை?!

பஜகோவிந்தம் நூலில் எடுத்த பாடல்:  புனரபி ஜனனம் புனரபி மரணம் புனரபி ஜனனீ ஜடரே சயனம் (மீளவும் பிறப்பு; மீளவும் இறப்பு மீளவும் தாயின் குடரிடைப் படுப்பு என்ற அழகிய தமிழ் மொழி பெயர்ப்பு வேறு) என்று வர அதையும் மூடினேன்.

இன்று நேரம் சரியில்லை நமக்கு.

நாலடியாரையாவது ஒரு புரட்டு புரட்டி வைப்போம் என்று அதை எடுத்தால்!!

கணம் கொண்டு சுற்றத்தார் கல்லென்றலறப்

பிணம் கொண்டு காட்டுய்ப்பார்க் கண்டும் –

மனம் கொண்டீண்டு  உண்டுண்டுன் டென்னும் உணர்வினால் சாற்றுமே

டொண்டொண்டொ டென்னும் பறை  (நாலடியார் பாடல் 25)

தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு ஓசை கேட்பது போல இருந்தது.

நாலடியார்

டொண் . டொண்.. டொண்..

உண்டுண்டுன்டென்னும் உணர்வினால் சாற்றுமே டொண் டொண் டொண்.. பறைச் சத்தம்!

எங்கேயாவது பறை அடிக்கப்படுகிறதா? இல்லை, இல்லை!

‘மனப்பிரமை தான்!

பறையும் பாடையும் போன நவீன காலம் இது. பாம் பாம் என்று ஹார்ன் அடிக்க ஆம்புலன்ஸே அமரர் ஊர்தி ஆகிச் செல்ல, ஐந்து நிமிடத்தில் எலக்ட்ரிக் க்ரிமடோரியத்தில் சில நொடிகளில் உடலே பிடி சாம்பலாகும் ‘ஒளிமயமான’ காலம்!

பாட்டிகளே பாடையிலே போக என்ற வசவை வாபஸ் வாங்கி, பல்லாயிரம் வாட்ஸில் சாம்பலாகிப் போக என்று மாடர்னாகச் சொல்லும் காலம் அல்லவா இது!

என்ன செய்வது, என்று நெஞ்சம் கொஞ்சம் அஞ்சியது!

எல்லா புத்தகங்களையும் மூட்டை கட்டி மூடினேன். நாலாயிர திவ்ய பிரபந்தம் தொப்பென்று விழுந்தது.

விழுந்த பக்கத்தில் இருந்த பெரியாழ்வாரின் பாடல் இது:-

துப்புடையாரை அடைவ தெல்லாம் சோர்விடத் துத்துணை யாவரென்றே

ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்

எய்ப்பு என்னை வந்து நலியும் போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கத்தரவணைப் பள்ளியானே

கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுத்த கருணையாளன். எய்ப்பு வந்து பேச முடியாமல் இருக்கும் போது அப்போது உன்னை நினைக்க மாட்டேன். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் – கொஞ்சம் பார்த்து செய்யப்பா!

ஆழ்வாரின் அற்புதப் பாடல் மின்னலென உள்ளத்தில் பளிச்சிட்டது. மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பளிச்சென எரிந்தது!

AZHWARGROUP

நெகடிவ் திங்கிங் இல்லையடா, முட்டாளே, திருவள்ளுவருக்கு! அப்போதைக்கு இப்போதே சொல்லி வை என்று சொல்ல அல்லவா அவர் அப்படிச் சொல்லி இருக்கிறார்.

எல்லாப் பெரியோரும் சொல்ல வந்தது ஒரே ஒரு கருத்தைத் தான்:-

கையும் காலும் கண்ணும் செவியும், மெய்யும் செயல்பாட்டுடன் இருக்கும் போதே நினைக்க வேண்டிய ஒன்றை நினை!!

டொண் டொண் டொண். அப்போதைக்கு இப்போதே! செத்த பிணத்தை இனி சாம் பிணங்கள், காலத் தச்சன் வெட்டி விட்ட மரம் போல!

அட, ஒரு மாதிரியாக நெஞ்சைப் பிசைகிறதே. குரல் எழும்பவில்லை.

அ.. ர..ங்க மாநகருள் ளா ஆ ஆ ஆ …..?!

*****************

How can you tackle Angry People?

angry

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 11 September  2015

Post No. 2148

Time uploaded in London: –   19-16

(Thanks  for the pictures)

 

 

Great harm may be caused by anger. Therefore one should restrain anger towards anybody – Tirukkural 303

 

Can there be greater enemy than anger which flares up, destroying one’s peace of mind and cheerfulness? – 304

 

If one wishes to safeguard oneself, one should control anger. If not, it is bound to ruin oneself – 305

 

How Mataji tamed a Modern Durvasa

Swami Ramdas of Ananashramam narrated this anecdote:–

Sadhus (ascetics), to whatever denomination, sect or creed they belong, welcome at Anandhasram situated near Kanhankad in Northern Kerala. Sometimes we would find scuffles and fights going on amongst them in the Ashram Dharmashala. One would say to the other, “You should not touch me. Stand farther away! You belong to a lower sect. You have no business to sit close to me. Why did you touch my leaf? You have polluted the leaf on which I was served my food and so on and so forth”.

anger cartoon

Once a Sadhu came to the Ashram and would not eat food in the common dining hall. So he cooked his food separately. He was given the necessary provisions such as rice, dhal, ghee, wheat flower and vegetables for cooking his food. One day he had taken a bucket from the ashram for storing water. He had, of course his own Lota/tumbler which was used by him for drinking water and other purposes.  He also kept the bucket, nearly half full, by his side it was rather close to the plantain leaf on which he had, as usual, served his food , prepared by himself. He sat down for eating.

Just then, a woman worker of the ashram went there. She wanted the bucket, as it was the one used by her for washing utensils. She was about to take vessel, and had hardly touched it, when the sadhu shouted: “How did you dare to touch my bucket? You have polluted the whole place I cannot take this food”.

He became wild and started cursing and shouting at her. We could hear him in the ashram.  He was jumping about with uncontrollable fury. The woman, unable to stand all this ran away from the place and came to Mataji Krishnabai. In a moment, another person came and reported to Mataji: “The sadhu has collected all the food he had cooked and served on the leaf and thrown it away to the dogs. He is still fretting and fuming. Nobody dare approach him”.

The sadhu was short and stout in stature and had a ferocious look. He had a grizzly beard and a matted hair on his head. Mataji looked at his wild behaviour from a distance and found he was burning with anger. He looked like a modern Durvasa in action. She felt that something must be done to calm him down. She went inside the kitchen store. There were in it some water melons. She cut them into nicely shaped pieces and got also some fine variety of plantains and two tender coconuts. All these she placed on a plate and asked another worker to ake it to the sadhu. She also followed the worker to the place where the sadhu was.

anger

When the sadhu saw the plate with the juicy red water melon pieces and other fine fruits, and Mataji coming along with them, his anger cooled down a bit. Mataji said to him: “The woman worker committed a mistake but she never intentionally did it. Will you just take the fruits on this plate?”  She handed him also a big pitcher full of sweet warm milk. He now sat down and began to eat and when nearly half the fruit and milk was finished, he came back to normal.

Mataji is a tamer of lions. A smile appeared on the sadhu’s face when the whole quantity of fruits and milk went down. Now he was perfectly cheerful. Mataji then asked him, “ How do you feel?” He replied, “Quite happy, mother!”  At last, he went about telling everybody that Mataji was supremely gracious. “The food I had prepared was nothing in comparison”, he said. “What she gave me was veritable nectar. My body was burning, but it has cooled down now. I am most grateful to her”.

DURVASA: An angry saint in the Hindu Mythology, who was famous for his anger and curses
–Subham–

பாரதி சொன்ன ஜோதிடம் பலிக்கும்: பாகிஸ்தான் அழியும்!

akhand baharat 2

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK!  DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRIITEN BY london swaminathan

Date : 11 September  2015

Post No. 2147

Time uploaded in London: –   10-35 am

(Thanks to face book friends and others for the pictures)

“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” – பாரதி

“மந்திரம் போல வேண்டுமடா சொல்லின்பம்” – பாரதி

கவிஞர்கள் வாக்கு பொய்க்காது.பாரதி வாக்குகள் பொய்த்ததில்லை. அதுவும் வேதம் படித்த பிராமணனான பாரதி வாக்கு பொய்த்ததே இல்லை. அவன் சொன்ன மூன்று விஷயங்கள் – ஆரூடங்கள் பலிக்குமா?

முதல் ஆரூடம்

சேதமில்லாத ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா!

இரண்டாம் ஆரூடம்

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் – ஆம், ஆம்

இந்தியா உலகிற்களிக்கும்

ஆம், ஆம், இந்தியா உலகிற்களிக்கும் வாழ்க.

மூன்றாம் ஆரூடம்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

இன்னும் பல விஷயங்களை அவன் சொல்லியிருக்கிறான். அவன் இந்தியாவின் நாத்ரதாமஸ் — மறைபொருளில்  அவன் சொன்ன விஷயங்களை நாம்தான் ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்!

bharathi-1

ஏன் “சேதம் இல்லாத ஹிந்துஸ்தானம்” என்று சொன்னான்? வந்தே மாதரம் என்ற சொல், அல்லாவைத் தவிர மற்றவர்களை வணங்குவதாகும் என்று சொல்லி, காந்திஜிக்கு எதிராக, அல்லாஹு அக்பர் என்று குரல் கொடுத்து இந்தியாவைத் துண்டாடினான் முகமது அலி ஜின்னா. இதன் காரணமாக பாகிஸ்தான் என்னும் குறைப் பிரசவ, அல்பாயுஸ் குழந்தை உருவானது. பின்னர் பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எண்ணி நாமே 1971-ல் அதை உடைத்து பங்களாதேஷை உருவாக்கினோம். “உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி” என்ற பழமொழிக்கிணங்க நமக்கு இப்போது இருபுறமும் எதிரிகள். ஆனால் பாரதி வாக்கு பொய்க்காது. பாகிஸ்தானும் பங்களாதேஷும் (வங்க தேசம்) உலக வரைபடத்திலிருந்து மறைந்து “சேதமில்லாத” ஹிந்துஸ்தானம் உருவாகும். அகண்ட பாரதம் உருவாகும். இது நித்திய சத்தியம்.

இந்தியா வல்லரசாகும்

எல்லோரும் அமர நிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும் என்று பாரதி மும்முறை கூறுகிறான். இந்தியா வல்லரசாகும் என்பது மட்டும் இதன் பொருளல்ல. 2000 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் இருந்தது போல இனி, இந்தியா எப்போதும் தலைமைப் பீடத்திலேயே இருக்கும். எல்லோரும் உலக நாடுகளின் பெயரைச் சொல் என்றால் இன்று அமெரிக்கா, ரஷ்யா ……… என்று வரிசைப் படுத்துவர். இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா……. என்று துவங்கி அடுத்த நாடுகளின் பெயர்களைச் சொல்லுவர். இது மூன்றாம் உலக யுத்தத்துக்குப் பின்னர் நிகழும். மூன்றாம் உலகப் போர் இந்திய மண்ணில் நடைபெறும் என்று இந்திய யோகி ஒருவர் சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. உளவு ஸ்தாபனமும் இப்படியே கணித்திருப்பதை லண்டன் டைம்ஸ் வெளியிட்டிருந்தது கண்டு வியப்படைந்தேன்.

IMG_3754 (2)

இலங்கைக்குப் பாலம்

இலங்கையின் பெயரை சிங்களத் தீவு என்று பாரதி குறித்ததால், தனி நாடு வராது என்று நான் முன்னரே சொல்லி வந்தேன். அது போலவே விடுதலை இயக்கத்தினரும் வேருடன் சாய்ந்தனர். ஆனால் பாரதி சொல்லுவது புதுமையான விஷயம். இரண்டு நாட்டுக்கும் இடையே ஒரு பாலம் அமையப் போகிறது. அது சேதுவை மேடாக்கி அமைக்கப்படும் என்று. இதுவும் 50 ஆண்டுகளுக்குள் நிகழும் என்றே தோன்றுகிறது

இதுவரை சொன்னது பலித்ததா?

கவய: கின்ன பஸ்யந்தி – சாணக்ய நீதி தர்ப்பண:

கவிகள் எதைப் பார்ப்பதில்லை? கவிகள் கண்களில் தென்படாதது ஏதேனும் உளதோ?

ஜஹான் ந பஹுஞ்சே ரவி, வஹான்  பஹுஞ்சே கவி =  சூரியன் புக முடியாத இடத்திலும் கவிஞன் நுழைந்து பார்க்க வல்லவன் என்று சம்ஸ்கிருதத்திலும் ஹிந்தியிலும் பழமொழிகள் உள்ளன. பாரதியும் உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகிவிட்டால் அவன் சொல்வதெல்லாம் மந்திரமாகும் என்கிறான். பாரதி ஒரு சித்தன்; பாரதி ஒரு ரிஷி; பாரதி ஒரு மந்த்ர த்ருஷ்டன்!

பாரதி சொன்னதெல்லாம் பலிக்கும் எனபதற்கு உரைகல் எது?

ஆடுவோமே, பள்ளுபாடுவோமே! ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று  நம் நாடு சுதந்திரமடைவதற்கு கால் நூற்றாண்டுக்கு முன்னரே சொல்லிவிட்டு 1921 ஆம் ஆண்டிலேயே இறந்தும் போனான். அவன் சொன்னது பலித்தது.

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் என்றான். இரண்டாம் உலகப் போர் காலத்திலிருந்து பி.பி.சி. தமிழோசை அந்தப் பணியைச் செய்கிறது. நானும் பிரிட்டிஷாரின் அழைப்பின் பேரில் 1987 முதல் 1992 வரை பி.பி.சி. தமிழோசை மூலம் இப்படி உலகம் முழுதும் தமிழ் முழக்கம் ஒலிக்கச்செய்தேன்.

இதன் பிறகு சிங்களவர் தயவில் (அவர்களடித்த அடியில்)  இலங்கைத் தமிழினம் நார்வே முதல் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா வரை (வடதுருவம் முதல் – தென்  துருவம் வரை) பரவியது. உலக கம்ப்யூட்டர் தலைநகர் பங்களூராக மாறியதால் சென்னைத் தமிழர் உலகெங்கும் பரவி தமிழ் வளர்த்தும் வருகின்றனர். இன்று தமிழ்ப் பள்ளி, தமிழ்க் கோவில் இல்லாத நாடுகள் வெகு சிலவே. தொல்காப்பியப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் இன்று இருந்திருப்பாரானால் “வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” — என்று பாடியதை சிறிது மாற்றி “வடதுருவம் முதல் தென் துருவம் ஆயிடை தமிழ்கூறு நல்லுலகம்” என்று பாடியிருப்பார். பாரதி சொன்னது உண்மையானது!

“சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே” என்று கவிபாடினான் பாரதி. இன்று நம் தமிழ் – நற்றமிழ்—செம்மொழி உயர்வு பெற்றுவிட்டது. இப்படிப் பாரதி பாடிய எத்தனையோ விஷயங்கள் பலித்ததால், நான் சொன்ன மூன்றும் பலித்தே தீரும்.

1.இந்தியா வல்லரசாகும்

2.பாகிஸ்தானும் பங்களாதேஷும் அழிந்து அகண்ட பாரதம் உருவாகும்.

3.சிங்களத் தீவான இலங்கைக்கு சாலைப் பாலமும், ரயில் பாலமும் அமைக்கப்படும்.

வாழ்க தமிழ்! வளர்க பாரதி புகழ்!!

-சுபம்-

பாரதி பற்றி வ.ரா. எழுதிய முக்கிய நூல்

IMG_5774

DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.

WRITTEN BY S.NAGARAJAN

Date : 11 September  2015

Post No. 2146

Time uploaded in London: –   8-50 am

மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள்! – 7

ச.நாகராஜன்

மகாகவி பாரதியார்

.ரா எழுதிய முக்கியமான நூல் இது. பாரதி ஆர்வலர்கள் பிள்ளையார் சுழி போட்டுச் சேர்க்க வேண்டிய பாரதி சம்பந்தமான நூல்களில் முதலாவது நூலாக இது அமைகிறது.

பாரதி பக்தர்களுள் முதலானவர் மட்டுமல்ல முக்கியமானவராகவும் அமைகிறார் .ரா.

 

பாரதியாரின் புகழைப் பரப்புவேன்; பரப்புவதில் வெற்றியும் பெறுவேன் என்ற ஆவேசத்துடன் முனைந்து இவர் ஈடுபட்டதால் பாரதியாரின் பெருமையை முதலில் தமிழகம் உணர்ந்தது; பின்னர் உலகளாவிய அளவில் அவர் புகழ் விரிந்தது.

இதில் எல்லாப் பெருமையும் .ராவுக்கே.

 

1935இல் எழுதப்பட்ட இந்த நூல் சக்தி காரியாலயம் வெளியீடாக 1944ஆம் ஆண்டு தான் பிரசுரமானது. பாரதியாரின் வாழ்க்கையின் முக்கிய அம்சங்களை இது சுருக்கமாக உரைக்கிறது.135 பக்கங்கள் அடங்கிய இந்த நூல் 27 அத்தியாயங்கள் கொண்டுள்ளது. இப்போது இது சுலபமாகக் கிடைக்கிறது.

 

1889 செப்டம்பர் 17ஆம் தேதி திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறந்த .ரா (ராமசாமி ஐயங்கார்) வைஷ்ணவ பிராமணர். ஆனால் பிராமண குலத்தில் அதிசயமானவர். 1951, ஆகஸ்ட் 23ஆம் தேதி மறையும் வரை அவர் தமிழில் சாதித்தது அதிகம். அதில் பாரதியைப் பற்றி சிந்தனை செய்து செயலாற்றியதே முக்கியமானதாக அமைந்தது.

 

 

பாரதியாருடன் .ராவின் சந்திப்பு

 

.ரா புதுச்சேரி சென்று பாரதியாரைச் சந்தித்ததே சுவையான அனுபவம். பாரதியாரைச் சந்தித்து தனது நோக்கமான அரவிந்த பாபுவைச் சந்திக்கும் விருப்பத்தை அவர் சொன்னார். பாரதியார் அவருக்கு தனது பாடலைப் பாடிக் காட்டினார். இந்த அற்புத ஆகர்ஷணம் .ரா.வை இறுதி வரை விடவில்லை.

அரவிந்தர் தனது குறிப்புகளில் .ரா.வின் தோற்றம் தன் மனக்கண்ணில் தெரிந்ததைக் குறிப்பிடுகிறார்.

புதுவை வாழ்க்கையில் அரவிந்தர், .வே.சு. ஐயர் ஆகியோருடனான பாரதியாரின் வாழ்க்கை அதிகாரபூர்வமாக .ரா.வால் இந்த வாழ்க்கை வரலாற்று நூலில் தரப்பட்டுள்ளது தமிழ் மக்களின் அதிர்ஷ்டம்.

 

 

பாரதியார் பற்றிய .ராவின் கணிப்பு

பாரதியாரைப் பற்றிய தனது கணிப்பாக நூலின் கடைசி அத்தியாயத்தில் .ரா. கூறுவது இது:-

பாரதியார் பிறந்த காலத்தில் தமிழ் மொழியும் ஜனசமூகமும் அவ்வளவாக நல்ல நிலைமையில் இல்லை. ஏங்கிக் கிடந்த தமிழர்கள், தூங்கிக் கிடந்த தமிழ் மொழிஇது தான் பாரதியார் கண்டது. இந்த நிலையிலிருந்த தமிழர்களை மாற்றி, ஊக்கமும் உள்வலியும் ஏற்படும்படியாகச் செய்வது மிகவும் அசாத்தியமான வேலையாகும். ஆனால் இந்த வேலையைப் பாரதியார் வெற்றிகரமாகச் செய்து முடித்தார். …..

 

 

இப்பொழுது மனித வர்க்கம் மாறிக் கொண்டு போவதைப் பார்த்தால், பாரதி சகாப்தம் என்பதற்கு ஐந்நூறு வருஷத்திற்குக் குறையாமல் ஆயுள் காலத்தை நிரணயிக்கலாம்.”

.ரா.வின் மதிப்பீட்டையும் தாண்டி பாரதியார் இன்னும் அதிக காலம் தனது தாக்கத்தையும் உத்வேகத்தையும் உலகிற்கு அளிப்பார் என்பதை காலத்தை வென்ற கவிஞன் என்ற நோக்கில் இன்று திடமுடன் கூற முடியும்.

 

 IMG_5775

பாரதியார்மகாத்மா காந்திஜி சந்திப்பு

நூலில் சுவையான ஒரு அத்தியாயத்தைச் சொல்லாமல் இருக்க முடியாது. பாரதியார் காந்திஜியைச் சந்தித்த சம்பவம்:

1919ஆம் வருடம் பிப்ரவரி மாதம் சென்னை வந்த மகாத்மா காந்திஜி ராஜாஜி குடியிருந்த கத்தீட்ரல் ரோடு இரண்டாம் நம்பர் பங்களாவில் வந்து தங்கினார்.

வாயில் காப்போன் .ரா. யாரையும் உள்ளே விடக் கூடாது என்று உத்தரவு.

 

.ராவின் சொற்களிலேயே நடந்த சம்பவத்தைப் பார்க்கலாம்:-

 

நான் காவல் புரிந்த லட்சணத்தைக் கண்டு சிரிக்காதீர்கள். அறைக்குள்ளே பேச்சு நடந்து கொண்டிருக்கிற சமயத்தில் பாரதியார் மடமடவென்று வந்தார்; “என்ன ஓய்!” என்று சொல்லிக் கொண்டே, அறைக்குள்ளே நுழைந்து விட்டார். என் காவல் கட்டுக்குலைந்து போய் விட்டது.

 

உள்ளே சென்ற பாரதியாரோடு நானும் போனேன். பாரதியார் காந்தியை வணங்கி விட்டு, அவர் பக்கத்தில் மெத்தையில் உட்கார்ந்து கொண்டார். அப்புறம் பேச்சு வார்த்தை ஆரம்பித்தது:

 

பாரதியார்: மிஸ்டர் காந்தி!இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

 

காந்தி: மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்: இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி: அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது. தங்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போட முடியுமா?

 

பாரதியார்: முடியாது! நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப் போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் போய் விட்டார். நானும் வாயில்படிக்குப் போய்விட்டேன். பாரதியார் வெளியே போனதும், ‘இவர் யார்?’ என்று காந்தி கேட்டார். தாம் ஆதரித்து வரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி அய்யங்கார் பதில் சொல்லவில்லை. காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை. ராஜாஜி தான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவிஎன்று சொன்னார்.

 

அதைக் கேட்டதும், “இவரைப் பத்திரம்மாகப் பாதுகாக்க வேண்டும்.இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி. எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

.ரா.வின் இந்த ஆவணக் குறிப்பு மிகவும் முக்கியமானது; பொருள் பொதிந்தது.

 

 

.ராவின் முக்கிய நூல்

 

உரைநடைக்கு .ரா. என்று பாரதியார் பாராட்டி இருக்கிறார்அரவிந்தரிடமே.

அந்த .ரா. தன் உரை நடையால் உலக மகாகவியை ஒப்பற்ற விதத்தில் சித்தரித்து வைத்துள்ளார். பாரதியாரின் கவிதா சக்தி, தேச பக்தி, அனைவரையும் ஆவேசப்பட வைக்கும் பாடல் மற்றும் பேச்சு, எளிய வாழ்க்கை, கம்பீரமான சிந்தனை என இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்அத்தனையையும் சொற்சித்திரமாக வடித்துள்ளார் .ரா.

பாரதியார் பற்றி அறிய விரும்புவோர் வாங்க வேண்டிய அருமையான நூல் இது!

*****************

Jesus had only 12 Followers!

12 disciples

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2145

Time uploaded in London: –  19-57

barrymore

Following are the anecdotes about film directors:

Test for a Good Actor

John Barrymore once asked the Great Russian director, Constantin Stanislavski, how he selected artists

“I chose them by means of this,” said Stanislavsky, picking up a pin. “Now, you go into the next room.”

Barrymore went out and in a moment Stanislavsky said, “You may come in now. Please look for the pin.”

The Russian watched as Barrymore picked up the glasses fro the table, looked under them and lifted each plate. He felt along the surface of the table cloth, lifted the corner, and there was the pin.

Stanislavsky clapped his hands: “Very good – you are engaged! I can tell a real actor,” he explained, “by the way he looks for a pin. If he prances around the room, striking attitudes, pretending to think very hard, looking in ridiculous places — exaggerating – then he is not good.”

Russia-2000-stamp-Konstantin_Stanislavski_

How to say you are not fit for acting?

One day at rehearsal Sir Herbert Tree asked a youthful actor to “step back a little.” The player did so. Tree eyed him critically – and went on rehearsing. After a time he repeated his request: “A little further back”. The youth obeyed. Surveying him, Tree went on with his work. Shortly after wards he again asked the youth step still further back.

“If I do,” expostulated the youth, “I shall be right off the stage.”

“Yes,” said Tree, “that is right.”

jesus 12 disciples

10,000 followers for a film director!

This story concerns the Hollywood director, Joseph von Sternberg, who came to sword’s points with Sam jaffe when the actor was appearing in “The Scarlet Empress” under Von Strenberg’s direction.

Mr.Jaffe deemed certain arbitrary instructions to be improper, and disputed the point.

“Mr.Jaffe,” screamed Von Sternberg, “I am Von Sternberg, I have 10,000 followers.”

“You are very fortunate,” said Jaffe coldly, “Jesus Christ had only 12.”

—————xxxxxxxxxxxxxxxxx——————-

பாரதி பாடலில் மிருகங்கள்!

bharati boat

Written by London swaminathan

Date : 10 September  2015

Post No. 2144

Time uploaded in London: –  காலை 8-38

சின்னஞ் சிறு குருவி போலே – நீ

திரிந்து பறந்து வா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா

kuruvi

கொத்தித் திரியும் அந்தக் கோழி – அதைக்

கூட்டி விளையாடு பாப்பா

எத்தித் திருடும் அந்த காக்காய் – அதற்கு

இரக்கப்பட வேணும் பாப்பா!

பாலைப் பொழிந்து தரும், பாப்பா- அந்தப்

பசுமிக நல்லதடி பாப்பா

வாலைக் குழைத்துவரும் நாய்தான் – அது

மனிதர்க்குத் தோழனடி பாப்பா!

pasuvum kandrum, fb

வண்டி இழுக்கும் நல்ல குதிரை – நெல்லு

வயலில் உழுதுவரும் மாடு

அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு – இவை

ஆதரிக்க வேணுமடி பாப்பா!

என்று பாடி, சின்னக் குழந்தைகளிடம் எடுத்த எடுப்பிலேயே அன்பை, அஹிம்சையைப் போதிக்கிறான். இப்படிச் சின்ன வயதில் கற்றுக் கொடுத்துவிட்டால் உலகம் முழுதும் அஹிம்சை, கொல்லாமை பரவும் என்பது அவ்னது கணிப்பு.

இயற்கையைப் பாடாத கவிஞன் இல்லை. நேரடியாக இயற்கையை ரசித்துப் பாடுவது ஒரு வகை. அந்த இயற்கை மூலம் மனிதன் கற்க வேண்டியது என்ன என்பதை உணர்த்தும்வகையில் பாடுவது இன்னொரு முறை. இந்த இரண்டு வகைப் பாடல்களையும் பாரதி பாடல்களில் காணலாம்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாப்பா பாட்டில் பிரணிகளிடத்தில் அன்பு செலுத்த வேண்டும் என்று போதிக்கும் பாரதி, காக்கைச் சிறகினிலே நந்த லாலா உந்தன் கரிய நிறம் தோன்றுதையா நந்தலாலா என்ற பாடலில் பெரிய தத்துவத்தின் உச்சிக்குப் போய்விடுகிறான்.

eagle-and-seagull

குயில் பாட்டு, குருவிப்பாட்டு, கிளிக்கண்ணி என்று அவன் பாடாதே பறவையே இல்லை. விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச் சிட்டுக்குருவியைப் போலே என்று பாடி ஆன்மீக விடுதலை, நாட்டு விடுதலை, அடிமைத்தனத்திலிருந்து விடுதலை என்ற எல்லா வகை விடுதலை உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறான்.

ஈயைக் கருட நிலைக்கு ஏற்றுவேன் என்ற குரு கோவிந்த சிம்ம்ன் பாடல் வரிகள் மூலம் எதையும் சாதிக்கும் குணத்தை, பாஸிட்டிவ் வைப்ரேஷனைப் பரப்புகிறான்.

திட்ட வேண்டிய இடங்களில் நரியின் சிறுமைக் குணத்தைப் பாடுகிறான். நாயை ஒப்பிடுகிறான்.

நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்று ஏசுகிறான். சகுந்தலை பெற்ற பிள்ளை ஓர் சிங்கத்தினை தட்டி விளையாடி என்ற வரிகள்மூலம் இந்தியாவுக்கு பாரதம் என்ற பெயரை ஈந்த பரதனைப் பாடுகிறான்.

காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் மலையும் கடலும் எங்கள் கூட்டம் என்று பாடி தாவர ஜங்கமப் பொருட்கள் அனைத்தும் நாமே—இறைவனின் வடிவமே – என்ற பகவத் கீதை விபூதி யோக கருத்துக்களை உரைக்கிறான்.

kakak close up

வேள்வித்தீ பாட்டில் காட்டில் மேயுங் காளை, வெங்கடேசு ரெட்டப்ப பூபதி பாட்டில் எல்லினைக் காணப் பாயும் இடபம் போல் முற்படாயோ? என்று இடபம் (ரிஷபம்=காளை), கிளிப்பாட்டில் துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியுமடீ – கிளியே – அன்புக்கு அழிவில்லை காண் என்ற உயர்ந்த கருத்துரை – இப்பை பட்டியல் நீளும்

குயில் பாட்டு என்று சிறிய கவிதை நூலே எழுதி குயிலுக்கு அழியாத இடம் தருகிறான்.

நரிவகுத்த வலையினிலே சிங்கம் நழுவி

விழும், சிற்றெறும்பால் யானை சாகும்;

Snakes-

வரிவகுத்த உடற்புலியைப் புழுவும் கொல்லும் – என்று பாஞ்சாலி சபதம் பாடி விதியின் வலிமையைக் காட்டுகிறான்.

பக்தி எனும் பாட்டில் பொய்ப் பாம்பு மடியும் என்று பாம்பையும் பாடுகிறான்.ஜயபேரிகை பாட்டிலும் பயம் எனும் பேய்தனை அடித்தோம் – பொய்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம் என்று முழக்கம் இடுகிறான்.

அன்பு என்று வந்துவிட்டால் சந்யாசியைப் போல தின்ன வரும் புலியிடத்திலும் அன்பைக் காட்டசொல்கிறான்:-

தின்னவரும் புலி தன்னையும் அன்பொடு

சிந்தயிற் போற்றிடுவாய் நன்னெஞ்சே என்பான்

கடலில் வாழும் முத்துச் சிப்பிகளும் , பவளமும் அவன் பாட்டில் இடம்பெறுகின்றன.

சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடும் செய்தி அறியாயோ – நன்னெஞ்சே – என்று பகைவனூகருள்வாய் பாட்டில் பாடுகிறான்

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால்………………….

வெள்ளை நிறத்தொரு பூனை- எங்கள்

வீட்டில் வளருது கண்டீர்;

பிள்ளைகள் பெற்றதப் பூனை – அவை

பேருக்கொரு நிறமாகும்

என்று பல வண்ணப் பூனைகளைச் சொல்லி

வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்

மானுடர் வேற்றுமை இல்லை

cats

என்ற அரிய- பெரிய நிற வேற்றுமை எதிர்ப்புக் கொள்கையை பிரசாரம் செய்கிறான். தென் ஆப்பிரிக்க மண்டேலாவுக்கும் முன்னதாக, ஐநா. சபைக்கும் முன்னதாக நிற வேற்றுமை எதிர்ப்புப் பிராசரத்தைப் பூணைகள் மூலம் விளக்கிவீட்டவன் பாரதி!

பாரதி பாடிய அளவுக்கு ஒரு கவிஞன் இத்தனை பறவைகள், மிருகங்களைப் பாடி ஒரு தத்துவத்தைக் கற்பித்து இருப்பானா என்பது சந்தேகமே. வால்மீகியும், காளிதாசனும் எத்தனையோ இயற்கை வருணனைகளில் எத்தனையோ பறவைகள், மிருகங்களைக் குறிப்பிடுகிறார்கள்; அவை எல்லாம் இயற்கை ரசனை. ஆனால் பாரதியோ ஒவ்வொன்றிலும் ஒரு குனத்தை, தத்துவத்தைக் காண்கிறான்!

முருகன் பாடல்களில் மான், மயில் ஆகியவற்றையும், விநாயகர் பால்களில் யானையையும் பாடத் தவறவில்லை.

mayil2yanai nama srirangam

பாரதி பாடிய எறும்பு முதல் யானை வரை, எலி முதல் – புலி வரை அத்தனை வைகலையும் ஆராய்ந்தால் அது பிஎச். டி. ஆய்வுரை போல ஆகிவிடும். பாரதியின் பரந்த மனப்பான்மையைத் தொட்டுக் காடுவதே இக்கட்டுரையின் நோக்கம். அது இனிதே நிறைவேறுக!

dog,monkey3

—சுபம்–

பாரதியார் கவசம் அணியுங்கள்!

IMG_3382

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

WRIITEN BY S.NAGARAJAN

Date : 10 September  2015

Post No. 2143

Time uploaded in London: –   8-03 am

 

செப்டம்பர் 11 பாரதியார் நினைவு தினம். பாரதியார் கவசம் அணிய உகந்த நாள். தினமும் பாரதியைப் படிப்போம். அந்த வழி நடப்போம்!

 

ச.நாகராஜன்

கவசம் ஒன்று வேண்டும்!

சார், கந்த ஷஷ்டி கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். சிவ கவசம் கேள்விப் பட்டிருக்கிறேன். மஹாபாரதத்தில் வரும் இந்திர கவசம் கூடக் கேள்விப் பட்டிருக்கிறேன். அது என்ன பாரதியார் கவசம்?பாரதியார் ஒரு கவசமும் பாடியதில்லையே!

தலைப்பைப் பார்த்து இப்படிக் கேட்பது நியாயம் தான்!

பாதுகாப்பைத் தருவது கவசம். விஷக் கிருமிகளிடமிருந்து பாதுகாக்க ஒரு க்ரீம், நீரின் தீய தன்மையைப் போக்க ஒரு ஃபில்டர் என இப்படி ஆரம்பித்தால் நம் வாழ்க்கையில் நோய் நொடி அண்டாமல் இருக்க எத்தனை பாதுகாப்பு மருந்துகள், சாதனங்களை உபயோகிக்கிறோம். பிறப்பிலிருந்து இறப்பது வரை….. எண்ணி மாளா.

ஆனால் இன்றைய சமுதாயத்தில் உளவியல் ரீதியாகவும் தீய சக்திகளின் மூளைச் சலவையிலிருந்தும் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள ஏதாவது கவசம் இருக்கிறதா? சரியான நோக்குடன் வீறு நடை போட்டு நம்மையும் தேசத்தையும் முன்னேற்ற வழி உண்டா?

மனம் போன படி எழுதும் பத்திரிகைகள் ஒன்று மற்றொன்றைப் பழிக்கும்.

டிவி நிகழ்ச்சிகளோ பார்க்கக் கூடாதவற்றை பார்க்கக் கூடாத வயதில் பார்க்க வைக்கும்.

பாடம் சொல்லிக் கொடுக்க வைக்கும் வாத்தியார்களை நியமிக்கும் பல்கலைக்கழகமே படு ஊழலின் பட்டறையாக இருப்பதைப் பார்த்து அதிர்கிறோம்.

போலீஸ் லஞ்சம், அரசு நிர்வாக லஞ்சம், போக்கு வரத்தில் லஞ்சம், நீதித்துறையில் லஞ்சம் என்று எந்தத் துறையில் உள்ளே புகுந்தாலும் கவசமில்லா சாமான்யனை ஏகப்பட்ட வியாதிகள் பீடிக்கிறது.

இதைப் போக்க ஏதாவது நவீன கவசம் இருக்கிறதா! இருக்கிறது.

bharati, bharatamata

பாரதியார் கவசம்

அது தான் பாரதியார் கவசம். அவர் கவசம் ஒன்றையும் தனியாகப் பாடவில்லை. அவரது பாடல்களே கவசம்!

நம்மை இன்று இருக்கும் தீய சக்திகளிடமிருந்து காக்கும் ஒரே அருமருந்து பாரதியார் பாடல்கள் தாம்!

எந்தத் துறையில் என்ன கேள்விகள் வேண்டுமானாலும் கேளுங்கள். பாரதியார் படைப்புகளில் சரியான பதில் இருக்கும்.

இதை சைவர்கள் அஞ்செழுத்தை ஓதுவது போல, வைணவர்கள் எட்டெழுத்தை ஓதுவது போல பாரதீயர்கள் தினமும் ஓதி வந்தால் பாடி வந்தால், படிப்பதை நடப்பில் கடைப்பிடித்தால் அப்படிப்பட்டவர்களுக்கு எந்த வித தீய சக்தியும் ஒன்றும் செய்ய முடியாது.

ஆத்திசூடியிலிருந்து ஆரம்பிக்கலாம். ஔவையாரின் ஆத்திசூடி இல்லை. புதிய ஆத்திசூடியிலிருந்து!

அச்சம் தவிர்; ஆண்மைந் தவறேல்; குன்றென நிமிர்ந்து நில்; தோல்வியிற் கலங்கேல்; தவத்தினை நிதம் புரி பணத்தினைப் பெருக்கு; பாட்டினில் அன்பு செய்!

ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திட வேண்டும் இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்?

எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர்

(சமுதாயத்தில் வாழும் வழியைக் கவசம் தருகிறதா?)

பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான் பலனை எண்ணாமல் உழைக்கச் சொன்னான் – (கீதை இரு வரிகளில் கற்று விட்டோமா?)

அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

சக்தி அருளால் உலகில் ஏறு – ஒரு

சங்கடம் வந்தால் இரண்டு கூறு

சக்திதனையே சரணம் கொள்ளு – என்றும்

சாவினுக்கோர் அச்சமில்லை தள்ளு

ஜயமுண்டு பயமில்லை மனமே…. பயனுண்டு பக்தியினாலே

ஜாதி மதங்களைப் பாரோம் உயர் ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே அன்றி வேறு குலத்தினராயினும் ஒன்றே வந்தே மாதரம் என்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

காதலொருவனைக் கைப்பிடித்தே யவன் காரியம் யாவிலும் கைகொடுத்து மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி. (புதுமைப் பெண்ணிவள் பேச்சுகள் கேட்டீரோ?!)

காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே!

வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக் கடை வைப்பவரேனும் பொய்யகலத் தொழில் செய்வோர் பூமியில் எங்கணும் மேலோர்!

பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளலாகாது!

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!

செய்தலுன் கடனே – அறம் செய்தலுன் கடனே அதில் எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே – (கீதையின் சுருக்கம் கற்று விட்டோமா?)

கவலைப் படுதலே கரு நரகம்மா!

உள்ளத்தில் உண்மை ஒளி யுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்!

மொய்க்கும் கவலைப் பகை போக்கி, முன்னோன் அருளைத் துணையாகி

எய்க்கும் நெஞ்சை வலியுறுத்தி உடம்பை இரும்புக் கிணையாக்கி

பொய்க்கும் கலியை நான் கொன்று பூலோகத்தார் கண்முன்னே

மெய்க்கும் கிருத யுகத்தினையே கொணர்வேன் தெய்வ விதி இஃதே

ஏராளமான பாரதியாரின் முத்திரை வரிகளில் சிலவற்றை மேலே பார்த்தோம்!

பாரத நாட்டின் முன்னேற்றம், தமிழ் மொழியின் முன்னேற்றம், லஞ்ச லாவண்யம் ஒழிய வழி, ஹிந்து-முஸ்லீம்-கிறிஸ்தவ ஒற்றுமை, பெண் முன்னேற்றம்,விஞ்ஞான முன்னேற்றம், பழைய அறங்களின் ஏற்றம் – எந்த விஷயமென்றாலும் அதற்கு தெளிவான வரையறுப்பும் வழிகாட்டுதலும் பாரதியார் கவசத்தில் உண்டு.

எத்தனை எத்தனை பாடல்கள்; அத்தனை பிரச்சினைகளுக்கும் அதில் வழி காட்டுதல் உண்டு!

பாரதியார் நினைவு நாளில் நித்தமும் பாரதிப் பாடல்களைப் பாட உறுதி பூண்டு பாரதியார் கவசம் அணிவோம்; பாரையே சுவர்க்கமாக்குவோம்.

^^^^^^^^