Ha Ha Ha Ha Ha!……Laughter is the Best Medicine!

M twain 2

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2142

Time uploaded in London: –  20-30

Mark Twain once encountered a friend at the races who said, “I am broke. I wish you would buy me a ticket back to town.”

Twain said, “Well, I am pretty broke myself but, I will tell you what to do. You hide under my seat and I will cover you with my legs.” It was agreed and Twain then went to the ticket office and bought two tickets. When the train was underway and the supposed stowaway was snug under the seat, the conductor came by and Twain gave him the two tickets.

“Where is the other passenger?” asked the conductor.

Twain tapped on his forehead and said in a loud voice, “That is my friend’s ticket. He is little eccentric and likes to ride under the seat.”

hogarth

Painting of the Red Sea!

A miserly old nobleman wanted Hogarth (Famous English painter) to paint on his staircase a picture of the destruction of Pharaoh’s hosts in the Red Sea. He did so much haggling over the price that Hogarth finally agreed to do the work for about half what it was worth. After two day’s work, to the surprise of the nobleman, Hogarth said the picture was ready. When the curtain was removed there was nothing to be seen but the canvas was painted red all over.

“Zounds!” cried the miser. “What have you here? I ordered a scene of the Red Sea!”

“The Red Sea you have”, replied the artist.

“But where are the Israelites?”

“They are all gone over.”

“And where are the Egyptians?”

“They are all drowned”.

Kipling1977CF

Kipling outwitted!

In the days of Kipling’s most popular vogue, his literary works yielded him great sums.

An American wit once wrote to him, “I hear that you are retailing literature for $1-00 a word. I enclose $1-00, for which please send me a sample.”

Keeping the dollar, Kipling wrote, “Thanks.”

Shortly afterward, he received another letter from his correspondent saying, “Sold the ‘Thanks’ anecdote for $2-00. Enclosed please find 45 cents in stamps, being half the profits on the transaction, less postage.”

books picture2

How to Dispose of Dull Books?

It is said that Dr Clyde Miller of Columbia University has his way of disposing of dull books occasionally sent to him by publishers. He sends them on to friends with a note, ostensibly from the author, saying, “I hope you will be pleased by the references made to you in this volume, and hope that you will not have any objection to this use of your name.” Dr.Miller takes pleasure in the vision of his friends searching vainly through the books for the allusions to them.

—————xxxxxxxxxxxxx——————

உங்களுக்குப் பிடித்த ‘ஐயோ’ பாடல் எது?

IMG_4887 (2)

பாரதி பழகுவோம்

உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது?

 

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by S NAGARAJAN

Date : 9 September  2015

Post No. 2141

Time uploaded in London: – காலை 10-10

 

By .நாகராஜன்

 

என்ன கேள்வி இது?

இது என்ன சார், கேள்வியே சற்று விபரீதமாய் இக்கிறது? யாருக்காவது ஐயோ பிடிக்குமா?

 

ஐயோ, ஐயோ. அந்தஐயோவைச் சொல்லவில்லை சார் இந்த ஐயோ கொஞ்சம் வேறு மாதிரி! ஆனாலும் கட்டுரையின் கடைசியில் நீங்கள் நினைக்கும் அந்தஐயோவும் வருகிறது.

 

உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? கீழே அறிஞர்களும் பக்தர்களும் ரசித்த பாடல்கள் பல உள்ளன! பாருங்கள், படியுங்கள், பின்னர் தேர்ந்தெடுங்கள்!

 

 

அழியா அழகுடையான்

முதலில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாடல். இதன் சிறப்பை எடுத்துக் கூற ஒரு பெரும் நூலே எழுத வேண்டும். சந்த அமைப்பு, பொருளின் ஆழம், நாடகக் காட்சி, சொல்லாட்சி, உவமைத் திறன், அடுக்கிக் கொண்டே போய் க்ளைமாக்ஸ் காண்பிப்பது என இப்படி இந்தப் பாடலைத் திறனாய்வு செய்வதற்கான அம்சங்களைக் கூறிக் கொண்டே போகலாம்! ரசிக்கும் வரை ரசியுங்கள்.

 

 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், தமிழ் இலக்கியத்தின் சிகரமான பாடல்களில் சத்தியமாக இதுவும் ஒன்றுஏன், உயர்வு நவிற்சி அணி இல்லாமல் தமிழ் இலக்கியத்தின் என்பதை உலக இலக்கியத்தின் என்று கூட சுலபமாக மாற்றிச் சொல்லி விடலாம். அப்படி ஒரு தகுதி கொண்ட பாடல் இது.

 

 

வெய்யோனொளி தன் மேனியின் விரிஜோதியின் மறையப் 

 பொய்யோவெனும் இடையாளொடும் இடையானொடும் போனான்    

 மையோ மரகதமோ மறிகடலோ மழைமுகிலோ                                 

ஐயோ இவன் வடிவென்பதொர் அழியா அழகுடையான்!

 

லட்சுமணன் சீதையுடன் ராமபிரான் சென்ற காட்சி! சூரியனின் ஒளியே வேத புருஷனான ராமனின் மேனி ஒளியில் மங்கியதாம். அவன் மை வண்ணனா, மரகத நிறத்தவனா? அவனுக்கு உவமையாகக் கடலைச் சொல்வதா, மழை முகிலைச் சொல்வதா, பொறுக்க முடியாத வர்ணனை நிலையில் ஐயோ என்று கம்பன் மயங்குகிறான். இதன் அருமையை எழுத சில வரிகள் போதாது; இடம் கருதி அடுத்த பாடலுக்குப் போவோம்.

 

 

சிந்தை கவர்ந்த செய்யவாய்

 

திருப்பாணாழ்வார் ஜாதியில் தாழ்ந்தவர் என்று மக்களால் ஒதுக்கப்பட்டாலும் கூட இறைவனின் நீதியால் உயர்ந்தவர். ஶ்ரீரங்கத்தில் லோகசாரங்கர் என்னும் கோவில் பட்டர் அவரை ஒதுக்கித் தள்ளுகிறார். பக்தர் என்பதால் அவர் மீது பட்ட அடியை இறைவன் தானே ஏற்க, லோகசாரங்க பட்டர் மனம் வருந்தி அவரை இறைவன் சந்நிதிக்கு அழைத்துச் செல்கிறார். இறைவனைத் தரிசித்த ஆழ்வார் உணர்ச்சிப் பெருக்கால் பாடல் மழை பொழிகிறார். அவற்றில் இரு பாடல்கள்!

 

கையினார் சுரிசங்கனலாழியர் நீள்வரைபோல்                              

மெய்யனார் துளப விரையார் கமழ் நீள்முடியெம்                                  

 ஐயனார் அணியரங்கனார் அரவினணை மிசை மேய மாயனார்                  

செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே!

 

vatapatra sayi

இன்னொரு பாடல்:-

ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்                            

ஞாலமேழும் உண்டான அரங்கத்தரவினணையான்                                  

கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்                        

நீலமேனி ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினையே

 

மாயனார் செய்யவாய் சிந்தை கவர்ந்ததையும் நீலமேனி நெஞ்சினில் நிறை கொண்டதையும் உணர்ந்த ஆழ்வார் அதைச் சொல்ல வார்த்தையின்றி ஐயோ என வர்ணனையின் உச்சிக்குச் செல்கிறார்.

 

கம்பனின் கவித்திறத்தின் முடிவும் ஒரு ஐயோ! ஆழ்வார் இறைவனை நெஞ்சில் ஏற்றிய உணர்ச்சிப் பெருக்கின் முடிவும் ஒரு ஐயோ!

 

கருட உற்சவமும் எலி மேல் அமர்ந்த யானையும்

 

இனி கவிமழை பொழியும் காளமேகப் புலவரின் பாடல்களுக்கு வருவோம்.

கருட உற்சவத்தைச் சேவித்து அவர் இகழ்வது போலப் பாடிய பாடல் இது:-

 

பெருமாளும் நல்ல பெருமாள்! அவர் தம்                                                  

திருநாளும் நல்ல திருநாள்! – பெருமாள்                                             

இருந்திடத்தில் சும்மா இராமையினால் ஐயோ!                                

பருந்து எடுத்துப் போகிறதே பார்!

 

அவரே காஞ்சிபுரம் விநாயகர் உற்சவத்தைப் பழிப்பது போலப் புகழ்ந்து பாடிய பாடல் இது:-

மூப்பான் மழுவும், முராரி திருச் சக்கரமும்                                        

பார்ப்பான் கதையும் பறிபோச்சோ? – மாப்பார்                                           

வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ!                                        

எலி இழுத்துப் போகின்றது, ஏன்?

 

பருந்து எடுத்துப் போன விதத்திற்கும் எலி இழுத்துப் போனதற்கும் ஒரு ஐயோ போடும் போது பாடலின் சுவை கூடி விட்டது, இல்லையா?

இப்படி ஐந்து ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

 

 IMG_5157 (2)

இன்னும் ஒரு ஐயோ பாடலை உலக நலத்தையே சிந்திக்கும் தாயுமானவர் பாடி இருக்கிறார். இதோ அது:-

காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, இன்புற்றிட நாம் இனி எடுத்த                         

தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேர வாரும் செகத்தீரே!

சிவ வெள்ளம் பொங்கித் ததும்புகையில் சவ வெள்ளமாகக் குவிகிறீர்களே! எடுத்த தேகம் விழும் முன் அகண்டாகார சிவ வெள்ளத்தில் சேர வாரும் ஜெகத்தீரே, பூரணமாய் ஏக உருவாய் கிடக்குது ஐயோ! என்று புலம்பி நம்மைக் கூவி அழைக்கிறார். இரக்கம் மேலிட்டு அவர் கூவும் கூவலைப் போன்று நலம் ததும்பும் கூவல் இன்னும் ஒன்று மாதிரிக்குக் கூட இல்லையே!

 

இப்படி ஆறு ஐயோ பாடல்களைப் பார்த்து விட்டோம்.

 

சூதும் பாவமும் பண்ணினால் ஐயோவென்று போவான்!

 

இன்னொரு பாடல். மகாகவி பாரதியாரின் புதிய கோணங்கிப் பாடல்.

பெரிய பாடல் முழுவதுமாக இங்கு தரப்படவில்லை. முக்கியமான சில வரிகளை மட்டும் இங்கு பார்ப்போம்:-

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு

நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது;                                       

சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது                                          

சொல்லடி சொல்லடி சக்தி மா காளி,                                        

வேதபுரத்தாருக்கு நல்லகுறி சொல்லு!                                                 

தரித்திரம் போகுது; செல்வம் வளருது;                                           

படிப்பு வளருது; பாவம் தொலையுது;                                                   

படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்                                         

போவான் போவான் ஐயோவென்று போவான்                                         

வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது

உங்கள் முன் ஏழு ஐயோ பாடல்கள் உள்ளன. ஒன்று கவிதா நயத்தின் சக்கரவர்த்தியான ராம பக்த கம்பன் பாடியது. இலக்கிய சிகரத்தின் ஏற்றத்தைக் காண்பிக்கும் ஐயோ அது

இன்னொரு உத்தம பக்தன் கண்ணாரத் தன் தெய்வத்தை தரிசித்து நெஞ்சு நெகிழ்ந்து உள்ளம் கசிந்து உணர்வூறச் சொன்ன இரண்டு ஐயோ. அது பக்தி பரவசத்தின் உச்ச உணர்வின் வெளிப்பாட்டைக் காண்பிக்கும் ஐயோ!

அடுத்து கவிஞனான சிலேடைப் புலவன் காலத்திற்கேற்ப இகழ்கிறார்போலப் புகழ்ந்து அனைவரையும் ரசிக்க வைத்து ரஸனையின் உச்சத்தில் இறை நினைப்பைத் தந்த இரண்டு ஐயோ! கவிதா மேதா விலாசமும் அனைவரையும் ஈர்க்கும் வேடிக்கை விநோதமும் கலந்த ஐயோ அது.

அடுத்து இரக்கக் கடலில் ஊறி இருக்கும் தாயுமானவர் கூறுவது. சிவ,                            

போகமெனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமா                  

ஏக உருவாய்க் கிடக்குதையோ, அதை அனுபவியுங்களேன் என்று

இரக்கம் ததும்பக் கூறும் ஐயோ அது.

அடுத்து தேசம் ஒன்றையே தன் தெய்வமாகப் பார்த்து பாவித்து தேசபக்தி ஒன்றையே உடலாக உயிராகக் கொண்ட கவிஞன், நாட்டின் தரித்திரத்திற்கும் இன்ன பிற தாழ்வுகளுக்கும் காரணத்தை ஆராய்ந்த ஆய்வின் முடிவுபடித்தவர் செய்யும் சூதிற்கு மன்னிப்பே இல்லை என்பது அவனது முடிவு. படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் எப்படிப் போவான் என்பதைச் சுட்டிக் காட்டும் ஐயோ அது. கவிதாசக்தி தெய்வீகம் கலந்த தேசபக்தியாக மாறி, கெட்ட கலியின் போக்கை மாற்ற, படிச்சவன் செய்யும் சூதிற்கு தரும் தண்டனை அந்த ஐயோ!

இதில் எமக்குப் பிடித்தது தேசத்தை முன்னேற்ற வழி சொன்ன கவிஞனின் ஐயோ! அந்த ஐயோ என்ற தீயினில் தீமைகள் தூசாகி அழியும்; புதிய கிருத யுகம் மலரும்; அப்போது அழியா அழகுடைய அண்ணலையும், நெஞ்சு நிறை கொண்ட நீலமேனியையும், கருட உற்சவ பெருமாளையும் எலி சுமந்த பிள்ளையாரையும் துதிப்பது எளிது; சிவானந்த வெள்ளத்தில் நீந்தித் திளைப்பதும் சுலபம் தான்!

தீய சக்திகள் ஐயோ என்று போகட்டும்; தெய்வத் திருநாடு செழிக்கட்டும்.

எமது தேர்வு ஒரு புறம் இருக்கட்டும்; உங்களுக்குப் பிடித்த ஐயோ பாடல் எது? ஏன்??

தேர்ந்தெடுத்து விட்டீர்களா!

ஒரு வரி எழுதிப் போடுங்களேன்விமரிசனப் பகுதியில்!

*********

 படங்களுக்கு நன்றி; முக நூல் மற்றும் மலர்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

கங்கையின் பாவம் எப்படிப் போகும்? கம்பன் தரும் அதிசயத் தகவல்

gaumukh

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Wriiten by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2140

Time uploaded in London: – காலை 9-01

மஹாபாவங்களைச் செய்தவர்கள் எல்லோரும் கங்கையில் போய் நீராடியவுடன் அந்தப் பாபங்கள் நீங்கி புண்ணிய ஆத்மாக்களாக வெளியே வருகின்றனர். இப்படிப் பல ஆயிரம் ஆண்டுகளாக கங்கையில் சேர்ந்த பாபங்களை எல்லாம் கங்கா தேவி என்ன செய்வாள்? அவளிடம் சேர்ந்த பாபம் எப்படிப் போகும்? இதற்கு கம்பன் விடை சொல்கிறான். ராமபிரான் போன்ற புண்யாத்மாக்கள், கங்கையில் நீராடினால், அந்தப் பாபங்கள் கங்கா தேவியிடமிருந்து அகன்றுவிடும்.

ganga-sacred-confluence

கன்னி நீக்க அருங் கங்கையும் கைதொழா

பன்னி நீக்க அரும் பாதகம் பாருளோர்

என்னின் நீக்குவர் யானும் இன்று என் தந்தை

உன்னின் நீகினென் உய்ந்தனென் யான் என்றாள்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–என்றும் அழியாத ஜீவநதியான கங்காதேவி ராமனை வணங்கி, “ இவ்வுலகத்தில் உள்ளவர்கள், தாம் செய்த – சொல்ல இயலாத பெரும் பாவங்களை என்னில் மூழ்கி நீக்கிக் கொள்வார்கள். என்னிடம் சேர்ந்த அந்தப் பாபங்களை எல்லாம், இன்று நீ நீராடியதன் மூலம் நான் போக்கிக் கொண்டேன்.

கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற் போல!

கங்கை என்னும் கடவுள் திருநதி

தங்கி வைகும் தபோதர் யாவரும்

எங்கள் செல்கதி வந்தது என்று ஏமுறா

அம் கண் நாயகற் காண வந்து அண்மினார்

–கங்கைப் படலம், அயோத்தியா காண்டம், கம்ப ராமாயணம்

பொருள்:–கங்கை என்னும் தெய்வத் திருநதிக் கரையில் வாழும் தவ சீலர்கள் அனைவரும், தவத்தின் மூலம் நாங்கள் சென்று அடைய வேண்டிய புகலிடமான தெய்வம் இங்கேயே வந்துவிட்டது என்று அழகிய விழிகளை உடைய ராமனைக் காண்பதற்காக அவனிருக்கும் இடத்திற்கு சென்றனர்.

river-ganges-map

‘கங்கை என்னும் கடவுள் திருநதி’, ‘கன்னி நீக்க அருங் கங்கை’, ‘தள்ளும் நீர்ப் பெருங் கங்கை’, ‘வெண் நிறக் கங்கை’, ‘கங்கை அரும் புனல்’, ‘விரி திரைப் புனல் கங்கை’, ‘நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால் நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி’ – என்றெல்லாம் கங்கையை வருணிக்கிறான் கவி சக்ரவர்த்தி கம்பன்!

நுரைக் கொழுந்து எழுந்து ஓங்கி நுடங்கலால்

நரைத்த கூந்தலின் நங்கை மந்தாகினி

–என்று சொல்வதன் காரணம் என்ன தெரியுமா?

கங்கையோ கன்னி இளம் பெண். அவளுக்கு நரைத்த கூந்தல் எப்படி வரும்? அலைகள் வீசி, நுரை பொங்குவதால், அது நரைத்த கூந்தலுடைய ஒரு பெண் போலத் தோன்றுகிறதாம்! இது கம்பனின் கற்பனை! பொதுவாக நதிகளைக் கன்னி இளம் பெண்ணாகவும், கட்டழகிகளாகவும் வருணிப்பது இந்திய மரபு. காவிரியையும் வையை என்னும் பொய்யாக் குலக்கொடியையும் இளங்கோ அடிகள், சிலப்பதிகாரத்தில் வருணிப்பதைப் படித்தோருக்கு இது நன்கு விளங்கும்.

கம்பன் கவிநயம் படிக்கப் படிக்கத் தெவிட்டாதது!!!

LEAD Technologies Inc. V1.01

LEAD Technologies Inc. V1.01

–சுபம்–

1915 இலங்கை கலகம்: கொழும்பு செட்டித்தெரு படக்கடை நெயினா முகமது பாடல்

IMG_5075

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 9 September  2015

Post No. 2139

Time uploaded in London: – 8-36

Here is the Muslim version of Sri Lankan communal riots in the year 1915.

நேற்று திருச்சினாப்பள்ளி ஷர்பத்து கடை கதிர்வேல் பிள்ளை எழுதிய சிலோன் கலகச் சிந்து வெளியிடப்பட்டது. இன்று அதே பௌத்தர்- முகமதியர் மோதல் குறித்து நெயினாமுகமது பாடியதைப் படியுங்கள்.

ஆண்டு 1915; நூல் இருப்பிடம்- பிரிட்டிஷ் லைப்ரரி, லண்டன்

IMG_7221

IMG_7222 (2)

IMG_7224 (2)

IMG_7225 (2)

IMG_5085

IMG_5086

IMG_5087

IMG_5088

IMG_5089

IMG_7226 (2)

IMG_7227 (2)

IMG_7228 (2)

Blind Rituals! The Cat and the Guru Story!

Cat-tied-to-a-pole

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2138

Time uploaded in London: – 19-26

In a hut lived a Guru and his disciple. The hut was situated outside the town limits in a forest. As they were troubled every night by rats, the Guru reared up a cat. Both the Guru and the disciple were very fond of the cat. But during the meditation early in the mornings, the cat would sit up on the lap of the Guru and disturb his meditation. So the Guru got a string and tied up the cat to the leg of his coir cot. This went on from day to day. Eventually both the Guru and the cat passed away through old age.

The disciple stepped into the shoes of his Guru and was the sole owner of the hut he carried on the practice of early morning meditation. When meditating he found that he had no cat which he could tie up to the leg of the cot as his Guru did. He was under the impression that tying up the cat was necessary for successful mediation. He also bought a cat and tied it before meditation.

When he passed away, his disciple faithfully followed cat tying ritual. It went on for generations. Lot of us practise such rituals blindly without understanding the meaning.

Some disciples blindly imitate their Gurus without understanding the meaning. Imitation is not the way – each one should develop on the spiritual path according to his or her individual nature and temperament. An all beneficent influence and guidance is, of course, necessary from an illumined sage.

—xxx—

1915 ஜூன் 2, கண்டி முதல் கொழும்பு வரை நடந்த, பௌத்தர்- முஸ்லீம் மோதல் பாட்டுப் புத்தகம்!

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2137

Time uploaded in London: – 9-56 am

Buddhist – Muslim Riot in Ceylon ,from Kandy to Colombo on 2nd June 1915.

Tamil Sindhu/Kummi song book on the riot (Source: British Library, London)

தமிழர்கள் தனி ரகம்! அவர்கள் அதிசயப் பிறவிகள்; உலகில் வேறு எவரும் செய்யாத செயல்களைச் செய்து வரலாறு உண்டாக்கிவிட்டனர். 1912 முதல் 1915 வரை பத்திரிக்கைகளில் எது எது தலைப்புச் செய்தியாக வந்ததோ அத்தனையையும் சிந்து, கும்மி பாடல்களாகப் பாடி, அவைகளைப் புத்தகங்களாக அச்சிட்டு, 6 பைசா முதல் 112 பைசா வரை விலை நிர்ணயித்து விற்றும் இருக்கின்றனர்.

இந்த வகையில் எனக்கு பிரிட்டிஷ் லைப்ரரியில் 20 புத்தககங்கள் கிடைத்தன. அததனையும் பழைய பழுப்பு நிற சாணித்தாள். ஆகையால் அவைகளை பிரிட்டிஷ் நூலகப் பாதுகாப்பாளர்கள் ‘’லாமினேட்’’ செய்துவிட்டனர். இது புத்தகத்தைப் பாதுகாத்தாலும் ‘காப்பி’ எடுக்கையில் மிகவும் சன்னமாக இருக்கிறது. வாசகர்கள் இதை ‘’என்லார்ஜ்’’ செய்து படிப்பது நலம்.

1915 ஆம் ஆண்டு கண்டி நகரில் சிங்கள புத்தர்கள் ஆண்டுதோறும் நடத்தும் ஊர்வலத்தை மேளதாளங்களுடன் நடத்தினர். அந்த ஊர்வலம் மசூதிக்கு அருகே வந்தவுடன், இந்தியாவில் முஸ்லீம்கள் செய்ததைப் போலவே, அங்கும் முஸ்லீம்கள் அந்த மேள தாளத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கலகம் வெடித்தது. அதை ஆங்கில ஆட்சி திறம்பட அடக்கியதாக பாடல் சொல்லுகிறது.

((இந்தியாவிலும் இப்படி ஊர்தோறும் கலகம் வெடித்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் முஸ்லீம்களின் வோட்டுக்களைப் பெறுவதற்காக வாளாவிருந்தனர். ஆர். எஸ்.எஸ். இயக்கம் நாடு முழுதும் இந்து உணர்ச்சியைத் தட்டி எழுப்பியவுடன் இந்த கலகங்கள் அடங்கின. நேற்று கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே க்ருஷ்ண ஜயந்தி ஊர்வலம் நடத்தும் அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்துவிட்டது!))

வேறு எந்த மொழியிலும் இப்படி சூடான பத்திரிக்கைச் செய்திகளைப் பாடலாகப் போட்டு, புத்தகமாக அச்சடித்து, விலைக்கும் விற்றிருப்பாளர்களா என்பது ஐயப்பாடுடையதே.

மைலாப்பூர் தேர்த் திருவிழாவில் சிறுவர்கள் அடிபட்டது முதல், மதுரை அருகே ரயில் மோதிய விபத்து உள்பட கொலை, கொள்ளை, வெள்ளம், கலகம் எல்லாவற்றையும் பற்றிப் பாட்டுப் புத்தகங்கள் உள்ளன. இன்று ஒரு புத்தகத்தைக் காண்போம்:–

IMG_7212 (2)

IMG_7213 (2)

IMG_7214 (2)

IMG_7215 (2)

IMG_7216 (2)

IMG_7217 (2)

IMG_7218 (2)

IMG_7219 (2)

அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பு!

IMG_3255

Written by Santanam Nagarajan

Date : 8 September  2015

Post No. 2136

Time uploaded in London: – 6-10 AM

 

Don’t Reblog it for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

தேவார சுகம்

.நாகராஜன்

 

 

சிரிப்பில் இருக்குது நூறு வகை!

மனித குலத்துக்கே சொந்தமானது சிரிப்பு. சிரிப்பை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்? ஒன்று, இரண்டு? அட பத்து விதமாகப் பிரிக்கலாமா?

ஹூம்!

தத்துவ என்சைக்ளோபீடியா ஒன்று நூறு வகையாகச் சிரிப்பு சம்பந்தமான கொள்கைகள் பிரிக்கப்படுகிறது என்கிறது. ஃப்ராய்ட் வகைப்படுத்திய சிரிப்பு ரிலீஃப் தியரி (Relief Theroy) எனச் சொல்லப்படுகிறது. இன்னும் பல்வேறு சிரிப்பு ஆராய்ச்சியாளர்கள் (Thomas Hobbes- இன்) சுபீரியாரிடி சிரிப்பு, (Robert Solomon—இன்)  இன்ஃபீரியாரிடி சிரிப்பு என்றெல்லாம் சிரிப்பை வகைப்படுத்துகிறார்கள்.

சிரிப்பதை விட்டு விட்டுச் சிரிப்பு பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினால் சிரிப்பு வருமா, என்ன!

பகலும் இருள் தான் சிரிக்காதவர்களுக்கு

தெய்வப் புலவர் திருவள்ளுவர் சிரிக்கத் தெரியாதவர்களுக்கு இந்தப் பெரிய உலகம் பகல் பொழுதிலும் கூட இருளில் மூழ்கிக் கிடப்பதாகவே தோன்றும் என்கிறார் இப்படி:-

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 

பகலும்பாற் பட்டன்று இருள் (குறள் 999)

யாரைப் பார்த்துச் சிரிக்க வேண்டும் என்பதை எபிக்டெடஸ் என்ற அறிஞர் இப்படிச் சொல்லி விட்டார் தெளிவாக:-

“He who laughs at himself never runs out of things to laugh at.”

தன்னைப் பார்த்துச் சிரிப்பவனுக்கு சிரிக்க ஏராளமான விஷயங்கள் இருக்குமாம்!தமிழ் வரலாற்றில் தன்னைப் பார்த்துப் பொருள் பொதிந்து சிரித்ததோடு அதை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்தவர் யாராவது இருக்கிறார்களா?இருக்கிறார்கள்!

IMG_3253

முதலாமவர் அப்பர்! இரண்டாமவர் ஒரு ஆழ்வார்!

அப்பரின் சிரிப்பு

அப்பர் ஒரே ஒரு வேலையைத் தான் முழு நேர வேலையாகக் கொண்டிருந்தார். அது தான் – இறைவனை அறிவது.

வால் அறிவனை அறிந்து விட்டால் மற்ற அறிவெல்லாம் வந்து விடாதா என்ன?

காட்டிலே, மேட்டிலே, கழனியிலே, கோவிலிலே என அங்கிங்கெனாதபடி கடவுளைத் தேடியவர் அவரைக் கண்டே விட்டார்.

எவ்வளவு உழைப்பு; எத்தனை காலம்!

கடவுளின் இருப்பிடத்தை அறிந்தவுடன் அவருக்கு சிரிப்புத் தான் வந்தது. அதை அப்படியே தமிழில் பாடலாகப் பதிவு செய்து விட்டார்.

பாடல் இது தான்:-

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித்

தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்

உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று

வெள்கினேன் வெள்கி நானும் விலா இறச் சிரித்திட்டேனே!

கள்ளத் தொண்டில் நெடுங்காலத்தை அங்கும் இங்குமாய் அதிலும் இதிலுமாய்ப் போக்கினார் அப்பர். கள்ளத் தன்மை போய் தெளிவுற்றவன் ஆனார். அந்த நல்ல நிலையில் அவர் நாடியதைக் கண்டே விட்டார்.

நினைப்பவர்களில் உள்ளே இருந்து அவர்கள் நினைப்பதை எல்லாம் (உடனுக்குடன்) நீ அறிவாய் என்பதை கண்டு கொண்டேன் என்கிறார் அப்பர். இதை நினைத்தவுடன் அவருக்குச் சிரிப்பு தான் வந்தது. ஹஹ்ஹஹ்ஹாவென்று விலாப் புடைக்கச் சிரித்தாராம்.

உள்ளே இருப்பவனை வெளியில் தேடியதற்கு ஒரு சிரிப்பு; உள்ளே இருந்து ஒவ்வொரு கணமும் எண்ணுவதை அறிந்தவனை கள்ள மனத்துடன் யாரும் இதை அறிய மாட்டார்கள் என்று அனைத்தையும் செய்ததற்கு ஒரு சிரிப்பு…..

பாடலைப் படித்து சற்று சிந்தனையுடன் ஆழ்ந்து யோசித்தால் நம் சிரிப்பின் கொள்கை வகைகள் நூறையும் தாண்டி விடும்.

கஸ்தூரி மான் ஒன்று கஸ்தூரி வாசனை தன்னிடமிருந்தே வருகிறது என்பதை அறியாது வாசனையைத் தேடி ஒரு அடி முன்னே வைக்கும். அதன் உடலில் இருக்கும் வாசனையும் ஒரு அடி முன்னேறும். இப்படி அடி அடியாய்ப் பாய்ச்சல் பாய்ச்சலாய் அது கஸ்தூரியைத் தேடுமாம் – வாழ்நாள் முழுதும்!

அப்படி கஸ்தூரி மான் போல நெடுங்காலம் உத்தமனைத் தேடிய அப்பர், இறுதியில் இறைவன் அருளால் உள்ளேயே கண்டு கொண்டார் உத்தமனை! அப்போது தான் ஹஹ்ஹஹ்ஹா என்ற விலா எலும்பு ஒடியும்படியான சிரிப்பு வந்தது!

haha-logo

உடம்பு என்னும் மனை அகத்து

உள்ளமே தகளி ஆக

மடம்படும் உணர் நெய் அட்டி

உயிர் எனும் திரி மயக்கி

இடம் படு ஞானத்தீயால்

எரிகொள இருந்து நோக்கில்

கடம்பு அமர் காளை தந்தை

கழல் அடி காணல் ஆமே

இதை விடத் தெளிவாக இறையைக் காணும் வழியை உரைக்க முடியுமா?

“உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையான

உள்கினேன் நானும் காண்பான் உருகினேன்”

என்று நமக்காகத் தம் அனுபவத்தை அப்பர் இப்படி பதிவு செய்கிறார்.

அப்பரின் ஹஹ்ஹஹ்ஹா சிரிப்பைப் போல அதே சிரிப்பைச் சிரித்தவர் ஒரு ஆழ்வாரும் கூட!

haha

ஆழ்வாரின் சிரிப்பு

அவர் தான் ‘திருமாலை’யைப் படைத்த  தொண்டரடிப்பொடி ஆழ்வார்.

அவர் அனுபவத்தை இப்படிக் கூறுகிறார்:-

உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்றில்லா

கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் தொண்டுக்கே கோலம் பூண்டு

உள்ளுவார் உள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறிதியென்று

வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே

அப்பரின் வார்த்தைகள் பல அப்படியே வருவதைப் பார்க்கலாம். அனுபவம் ஒன்று தானே!

அப்பர் கண்டது சிவனை; ஆழ்வார் கண்டது ஹரியை.

அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயிலே மண்ணு.

அனுபவம் ஒண்ணு; விளைந்த ஹஹ்ஹஹ்ஹாவும் ஒண்ணு தான்!

******************

அடியே! சொன்னதைச் செய்யடி!!

IMG_4372

Don’t Reblog it at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Compiled by London swaminathan

Date : 8 September  2015

Post No. 2135

Time uploaded in London: – 5-31 AM

இது ஒரு கிராமப்புற கதை! ஒரூ ஊரில் படிக்காத ஒரு பட்டிக்காட்டான் இருந்தான்; சரியான முரடன். தினமும் மனைவியைக் காரணமில்லாமல் அடிப்பான். அவளும் பொறுத்துப் பார்த்தாள். ஒரு நாள் சிந்தித்தாள்; “இந்த ஆளுக்கு எப்படி நல்ல புத்தி புகட்டுவது? சரி! அவரையே கேட்டுவிடுவோம். நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இப்படி தினமும் அடிக்கிறீர்கள்” என்று.

ஒரு நாள் நல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். “ஏங்க! நான் ஒரு தப்பும் செய்யாத போதும் ஏன் இப்படி என்னை தினமும் அடிக்கிறீங்க? என்று கேள்வி கேட்டாள்.

அவன் சொன்னான், “அடியே! நான் சொன்னதை நீ செய்வதில்லை. அதனால்தான் உன்னை அடிக்கிறேன். அடியாத மாடு படியாது” – என்றான்.

அவள் சொன்னாள்: “சரி, இனிமேல் நீங்கள் சொல்வதை அப்படியே செய்கிறேன். என்னைத் தொடக் கூடாது. சத்தியம் செய்யுங்கள்” என்றான். அவனும் அவள் தலை மேல் அடித்து சத்தியம் செய்துவிட்டான்.

அவளோ அடிபட்ட பாம்பு போலப் பழிவாங்கக் காத்திருந்தாள். அவன் வழக்கம்போல, “அடீ! நான் சாப்பிட வந்துவிட்டேன்” என்றான்.

அவள் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு, போட்டாள் ஒரு போடு, அவன் தலையில்!

“ஏய், ஏய், ஏன் என்னை அடித்தாய்?” என்றான்.

நீங்கள் ‘அடி’என்று சொன்னீர்களே என்றாள்.

மறுநாள் அவன் சாப்பிட வந்த போது தலையில் நிறைய ‘உமி’ யைத்தூவிக் கொண்டு வந்து சாப்பாடு போட்டாள். “அட, தலை எல்லாம் உமி!” என்றான்.

அவள் அவன் தலை முழுதும் ‘தூ தூ’ என்று துப்பித் தீர்த்தாள். “அடீ, ஏன் இப்படி துப்புகிறாய்?” – என்றான்.

கம்பால் போட்டாள் ஒரு போடு! அவன் காரணத்தைக் கேட்கும் முன்னர் அவளே சொல்லிவிடாள்: “முதலில் தலையில் உமி(ழ்) என்றீர்கள்; பின்னர் அடீ என்றீர்கள் – இரண்டையும் உடனே செய்துவிட்டேன்”.

அந்த சத்தியம் தவறாத ‘உத்தமன்’ பேசாமல் போய்விட்டான். மறு நாளைக்கு அவன் முதலாளியிடம் கூலி வாங்கிவந்தான். வழக்கத்தை விடக் கூடுதலாகப் பணம் கிடைத்த மகிழ்ச்சியில், “அடீ, இதைக் கொண்டு போய் வை”  – என்றான்.

போட்டால் ஒரு போடு அவன் மீது கம்பால்! “முட்டாள் பய கொண்டுவந்த பணம், மடப்பய கொண்டுவந்த பணம், எந்த நாய் இந்தப் பணத்தைக் கொடுத்ததோ” – என்று வையத் துவங்கினாள்.

“ஏய், ஏய், உனக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? ஏன் இப்படி வைகிறாய்?” – என்றான்.

“என்னங்க! முதலில் அடி என்றீர்கள் அடித்தேன். அப்புறம் பணத்தைக் கொண்ட்போய் “வை” என்றீர்கள். நன்றாக வைது தீர்த்துவிட்டேன். நீங்கள் சொன்னதை நான் மறுக்கலாமா?” என்றாள்.

பட்டிக்காட்டனுக்கு சங்கதி புரிந்தது. இவள் சரியான ஏட்டிக்குப் பூட்டியான பெண்; இனிமேல் நாம் ஒழுங்காக இல்லாவிட்டால் வண்டி ஓடாது என்று புரிந்து கொண்டான். மனைவியிடம் போய், இனிமேல் நான் உன்னை அடிக்கமாட்டேன். சரியான காரணமே இல்லாமல் உன்னைத் தண்டித்தேன். நீயும் என்னை அதே போல சரியான காரணமே இல்லாமல் தண்டித்து பாடம் புகட்டிவிட்டாய் – இனிமேல் அடிதடி இல்லாமல் வாழ்வோம்” என்றான். அவளுக்கும் மெத்த மகிழ்ச்சி!

கிராமப்புற மக்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாவிடாலும், வயல்காட்டிலும், மரத்தடியிலும், வீட்டுத் திண்ணையிலும் இப்படிப் பல கதைகள் சொல்லி, அரிய, பெரிய கருத்துக்களை கல்மேலிட்ட எழுத்துபோல மனதில் பதித்தனர்.

 —-xxxxx—–

Do as I say!

IMG_4372

Don’t Reblog it  at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

 

Compiled by London swaminathan

Date : 7 September  2015

Post No. 2134

Time uploaded in London: – 18-27

This is a folk tale based on Tamil words with two meanings (pun).

A silly illiterate villager was in the habit of beating his wife every day. She reflected, “I must bring good sense to this foolish man. He beats me without any rhyme or reason. I have committed nothing wrong.”

One day she boldly asked him why he was beating her even when she did not commit any mistake. He told her that she did not do what  she was told to do. That was the reason for him beating her. Then she told him that I would do whatever you say. But you should never beat me. Give me a promise”. He immediately made an oath that he would behave and never revile her.

Adi! Come here and look what I have brought for you. She came running with a big stick and beat him. He asked, “Why did you beat me?”

You said “Adi! “ ( Adi! Is used to address wives or any younger ladies who are close relatives or friends in Tamil. It has another meaning “Beat”). Then he realised that he should not have said that.

Another day he sat to eat and she started serving him food. She deliberately put some husk on her head while serving. When he saw husk on his wife’s head, he said “ Adi, Umi ! on  head!”

She took the opportunity to beat him and spit on his head. Adi ! means beat and Umi means ‘spit’ as well as ‘husk’!

This time also he had to bear with his wife’s behaviour because she did what he said to her. Another day he was very happy because he got lot of money and told his wife “Put this money in the house”. Put in Tamil is “Vai” which has another meaning “scold”. She started shouting at the money, “O Money of a Foolish man! Money of an Idiot! Money of a stupid man!”

He was wondering what happened to her. He asked her, “Are you mad? Why are you reviling like this?”

You said “Vai” this money in the house.

Afterwards, considering and understanding all these things he felt ashamed. He became a good man and never beat his wife. She also stopped criticising him.

Indian villagers use lot of riddles, puns, puzzles in their stories. Though they were illiterates they never lacked in common sense and great wisdom.

அசலாம்பிகையின் அற்புதக் கவிதை!

narsimehtha

Don’t Reblog it for at least for a week. Pictures are copyrighted by someone else. Don’t use them. When you use the matter, you must not remove the author’s name and blog name.

Compiled by லண்டன் சுவாமிநாதன்

Date : 7 September  2015

Post No. 2133

Time uploaded in London: – 15-40

1910, 1920 ஆம் ஆண்டுகளில் பல ஆன்மீக நூல்களையும், சொற்பொழிவுகளையும் செய்தவர் திருமதி பண்டிதை அசலாம்பிகை. அவரைப் புகழ்ந்து திரு.வி.க. போன்ற தமிழ் அறிஞர்களும் சித்தாந்த தீபிகை போன்ற பத்திரிக்கைகளும் எழுதியிருப்பதிலிருந்தே அவர் புகழ் குன்றின் மேலிட்ட விளக்கு போலப் பிரகாசிக்கிறது. அவர் காந்தி புராணம் என்று காந்தியின் வாழ்க்கை வரலாற்றை கவிதை வடிவில் எழுதி மூன்று பகுதிகளாக நூல்களாக வெளியிட்டுள்ளார். நல்ல கவி உள்ளம் படைத்தவர் என்று தெரிகிறது. முதல் முன்று பகுதிகள் காந்தியின் 1924 ஆம் ஆண்டுவரையுள்ள வாழ்க்கைச் சம்பவங்களை விவரிக்கிறது. அதற்குப் பின்னுள்ள காந்தியின் வரலாற்றை இவர் எழுதினாரா என்று தெரியவில்லை (பிரிட்டிஷ் லைப்ரரியிலுள்ள புத்தகங்களை அடிப்படையாக வைத்து இதை எழுதுகிறேன்).

காந்திஜிக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று குஜராத் மகான் நரசிம்ம மேத்தா எழுதிய “வைஷ்ணவன் யார்?” என்ற கவிதையாகும். இதை இந்து யார்? என்ற கேள்விக்கு விடையாகவும் கொள்ளலாம். இதைப் பிற்காலத்தில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மொழி பெயர்த்ததை நாம் அறிவோம். ஆனால் அதற்கு முன்னரே காந்தி புராணத்தில் அசலாம்பிகை அம்மையார் கவிதையாக மொழி பெயர்த்துள்ளார். அதில் இவருடைய செஞ்சொற் கவி நயத்தைக் காணலாம். இதோ இத்துடனுள்ள இணைப்பில் அதைக் காணுங்கள். அதைத் தொடர்ந்து நாமக்கல் கவிஞரின் மொழிபெயர்ப்பையும் கொடுத்துள்ளேன்

narsimehta1 (2)
IMG_3996 (2)

IMG_3995 (2)

IMG_3991 (2)

வைஷ்ணவன் யார்? (தமிழில் நாமக்கல் கவிஞர்)

வைஷ்ணவன் என்போன் யாரெனக் கேட்பின்
வகுப்பேன் அதனைக் கேட்பீரே! (வைஷ்)

பிறருடைத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம் ;
உறுதுயர் தீர்த்ததில் கர்வங் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும் ;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குவன் உடல்மனம் சொல்இவற்றால்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்
அவனைப் பெற்றவள் அருந்தவத்தாள். (வைஷ்)

விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கிட ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வோன் வைஷ்ணவன் தன்நாவால்
உரைப்பதிற் பொய்யிலன் ஒருபோதும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம். (வைஷ்)

மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்யன்
நாயக னாகிய சிறீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போயதில் பரவசம் அடைகிற அவனுடைப்
பொன்னுடல் புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய சேத்திரம்
ஆகும்அவனே வைஷ்ணவனாம். (வைஷ்)

கபடமும் லோபமும் இல்லாதவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்த்
தபசுடை அவனே வைஷ்ணவன் அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமுடை வார்கள் எழுபத் தோராம்
தலைமுறை வரையில் சுகமுறுவர்
அபமறப் புனிதம் அடைகுவர் பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரை சேர்வார். (வைஷ்)

நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

மூலம்: நரசிம்ம மேத்தா

1969gandhi

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே
பீட பராயே ஜானேரே
பரதுக்கே உபகார் கரே தோயே
மன் அபிமான் ந ஆனே ரே
(வைஷ்ணவ)

சகல லோக மான் சஹுனே வந்தே
நிந்தா ந கரே கேனீ ரே
வாச் கச்ச மன் நிஸ்சல ராகே
தன் தன் ஜனனீ தேனே ரே
(வைஷ்ணவ)

சம்திருஷ்டி நே த்ருஷ்ணா த்யாகீ
பரஸ்த்ரீ ஜேனே மாத ரே
ஜிஹ்வா தகி அஸத்ய ந போலே
பர தன் நவ் ஜாலே ஹாத் ரே
(வைஷ்ணவ)

மோஹ மாயா வ்யாபே நஹீ ஜேனே
த்ருட வைராக்ய ஜேனா மன்மாம் ரே
ராம் நாம் சூன் தாலீ லாகீ
சகல தீரத் தேனா தன்மாம் ரே
(வைஷ்ணவ)

வண லோபீ நே கபட-ரஹித சே
காம க்ரோத நிவார்யா ரே
பனே நரசய்யொ தேனுன் தர்ஷன் கர்தா
குல் ஏகோதேர் தார்யா ரே

நரசிம்ஹ மேதா
(கிபி. 1500)

1947 Gandhi Rs 10 Service

वैष्णव जन तो तेने कहिये जे पीड परायी जाणे रे।
पर दुःखे उपकार करे तो ये मन अभिमान न आणे रे॥
सकळ लोकमां सहुने वंदे, निंदा न करे केनी रे।
वाच काछ मन निश्चळ राखे, धन धन जननी तेनी रे॥
समदृष्टि ने तृष्णा त्यागी, परस्त्री जेने मात रे।
जिह्वा थकी असत्य न बोले, परधन नव झाले हाथ रे॥
मोह माया व्यापे नहि जेने, दृढ़ वैराग्य जेना मनमां रे।
रामनाम शुं ताळी रे लागी, सकळ तीरथ तेना तनमां रे॥
वणलोभी ने कपटरहित छे, काम क्रोध निवार्या रे।
भणे नरसैयॊ तेनुं दरसन करतां, कुळ एकोतेर तार्या रे॥